<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>bjp Archives - தேசிய முரசு - Desiya Murasu</title>
	<atom:link href="https://desiyamurasu.com/tag/bjp/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://desiyamurasu.com/tag/bjp/</link>
	<description>DesiyaMurasu – Daily Opinions &#38; Analysis on Latest News  &#124; Tamil News</description>
	<lastBuildDate>Sat, 01 May 2021 12:09:51 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9</generator>

<image>
	<url>https://desiyamurasu.com/wp-content/uploads/2020/07/cropped-FAV-copy-1-32x32.png</url>
	<title>bjp Archives - தேசிய முரசு - Desiya Murasu</title>
	<link>https://desiyamurasu.com/tag/bjp/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>கொரோனாவினால் 2 லட்சம் பேர் பலியானதிற்கு பொறுப்பேற்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்தன் உடனடியாக பதவி விலக வேண்டும்! தலைவர் கே.எஸ்.அழகிரி கோரிக்கை</title>
		<link>https://desiyamurasu.com/news-india/doctor-harsha-vardhan-should-resign-for-taking-responsibility-of-corona-deaths-ks-alagiri-demand/</link>
					<comments>https://desiyamurasu.com/news-india/doctor-harsha-vardhan-should-resign-for-taking-responsibility-of-corona-deaths-ks-alagiri-demand/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Admin]]></dc:creator>
		<pubDate>Sat, 01 May 2021 12:01:51 +0000</pubDate>
				<category><![CDATA[தேசிய அரசியல்]]></category>
		<category><![CDATA[bjp]]></category>
		<category><![CDATA[Covid-19]]></category>
		<category><![CDATA[Harsh Vardhan]]></category>
		<guid isPermaLink="false">https://desiyamurasu.com/?p=4393</guid>

					<description><![CDATA[<p>கொரோனா தொற்றின் இரண்டாவது அலையை முன்கூட்டியே கணிக்காமல் தவறான அணுகுமுறையை மேற்கொண்டதால் ஆயிரக்கணக்கான மனித உயிர்கள் பலியானதற்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்தன் உடனடியாக பதவி விலக இதோ காரணங்கள் : கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மே 1 ஆம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுக் கொள்ள மத்திய அரசின் கோவின் இணைய தளத்தில் முன்பதிவு செய்யுமாறு அறிவிக்கப்பட்டது. முதல் நாளிலேயே 1.33 கோடி பேர் பதிவு செய்துள்ளனர். பதிவு செய்துள்ளவர்களுக்குத் [&#8230;]</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/doctor-harsha-vardhan-should-resign-for-taking-responsibility-of-corona-deaths-ks-alagiri-demand/">கொரோனாவினால் 2 லட்சம் பேர் பலியானதிற்கு பொறுப்பேற்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்தன் உடனடியாக பதவி விலக வேண்டும்! தலைவர் கே.எஸ்.அழகிரி கோரிக்கை</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>கொரோனா தொற்றின் இரண்டாவது அலையை முன்கூட்டியே கணிக்காமல் தவறான அணுகுமுறையை மேற்கொண்டதால் ஆயிரக்கணக்கான மனித உயிர்கள் பலியானதற்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்தன் உடனடியாக பதவி விலக இதோ காரணங்கள் :</p>



<ol class="wp-block-list"><li>கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மே 1 ஆம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுக் கொள்ள மத்திய அரசின் கோவின் இணைய தளத்தில் முன்பதிவு செய்யுமாறு அறிவிக்கப்பட்டது. முதல் நாளிலேயே 1.33 கோடி பேர் பதிவு செய்துள்ளனர்.</li><li>பதிவு செய்துள்ளவர்களுக்குத் தடுப்பூசியை இலவசமாக மத்திய அரசு போடுமா ? மாநில அரசு போடுமா ? 45 வயதிற்கு மேற்பட்டோருக்குத் தான் மத்திய அரசு இலவசமாகத் தடுப்பூசி போடும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் மத்திய அரசு ஏன் முன்பதிவு செய்கிறது ?</li><li>முன்பதிவை மத்திய அரசு செய்தால் மாநில அரசு எந்த வகையில் தடுப்பூசி போட முடியும் ? கொரோனாவை எதிர்கொள்வதில் மத்திய அரசு குழப்பத்திற்கு மேல் குழப்பம் செய்து கொண்டிருக்கிறது. இதற்கு எப்போது விடிவு ஏற்படப் போகிறது ?</li><li>கொரோனா தொற்றின் ஒருநாள் எண்ணிக்கை 3.8 லட்சம். ஒருநாள் இறப்பு மூன்றாவது நாளாகத் தொடர்ந்து 3 ஆயிரத்தைக் கடந்திருக்கிறது. உலகத்தில் கொரோனாவினால் இறப்பவர்களில் நான்கில் ஒருவர் இந்தியர். உலக நாடுகளில் இந்தியா கொரோனா இறப்பில் முதன்மை இடத்தைப் பெற்றிருக்கிறது.</li><li>கொரோனாவிலிருந்து மக்கள் உயிரைக் காக்க பேராயுதமாக விளங்குவது தடுப்பூசி மட்டுமே. இந்தியாவில் 18 வயதிற்கு மேற்பட்ட 93 கோடி மக்களுக்குத் தடுப்பூசி போட 186 கோடி டோஸ்கள் தேவை.</li><li>தற்போது இரண்டு தனியார் நிறுவனங்கள் உற்பத்தி செய்வதோ மாதத்திற்கு 1.20 கோடி டோஸ்கள் மட்டுமே. 45 வயதிற்கு மேற்பட்டவர்களில் 35 கோடி மக்களுக்கு இன்னும் தடுப்பூசி போட வேண்டும். இதற்கு 70 கோடி தடுப்பூசிகள் தேவை.</li><li>தற்போது இந்தியாவில் 15 கோடி மக்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் 1 டோஸ் போட்டவர்கள் 12.12 கோடி. இரண்டு டோஸ் போட்டவர்கள் 2.36 கோடி மட்டுமே.</li><li>18 வயதிற்கு மேற்பட்ட 93 கோடி மக்களுக்கு இரண்டு டோஸ் போட தேவைப்படுகிற 186 கோடி தடுப்பூசிகளை மத்திய பா.ஜ.க. அரசு எப்போது கொள்முதல் செய்யப்போகிறது ? எப்போது போடப் போகிறது ? மக்களின் உயிரைக் காக்க ஒரே பாதுகாப்பு கவசமாக இருக்கிற தடுப்பூசி போடுவதற்கு இரண்டு தனியார் நிறுவனங்கள் அல்லாமல் வேறு திறமைமிக்க தனியார் நிறுவனங்களுக்கு ஏன் அனுமதி அளிக்கவில்லை ?</li><li>மக்கள் உயிருக்காகப் போராடுகிற நேரத்தில் இரண்டு தனியார் நிறுவனங்களுக்கு மட்டும் தடுப்பூசி தயாரிக்கிற ஏகபோக உரிமையை அனுமதித்தது ஏன் ? இந்திய மக்களின் மீது பிரதமர் மோடிக்கு அக்கறை இருந்தால் தடுப்பூசி உற்பத்தியைக் கடந்தகால அரசுகள் பொதுத்துறை நிறுவனங்களுக்கு வழங்கி அம்மை, போலியோ, காலரா ஆகியவற்றை ஒழித்ததைப் போல இப்போதும் தடுப்பூசி உற்பத்தியை வழங்கி கொரோனாவை ஒழிப்பதில் ஏன் அக்கறை செலுத்தவில்லை ?</li><li>இந்திய மக்கள் அனைத்து சுகங்களையும் துறந்து, வாழ்வாதாரத்தை இழந்து, எதிர்காலத்தைப் பற்றி கற்பனை கூட செய்ய முடியாமல், என்றைக்கு நமக்கு கொரோனா தொற்று வருமோ, எப்போது நமது உயிர் பறிக்கப்படுமோ? என்ற அச்சத்திலும், பீதியிலும் வாழ்ந்து வருகின்றனர்.</li><li>136 கோடி மக்களையும் ஒருசேர மரணப் பயத்தில் ஆழ்த்தியதற்குப் பிரதமர் மோடி பொறுப்பேற்றுக் கொண்டு குறைந்தபட்சம் மத்திய பா.ஜ.க. அரசின் சுகாதாரத்துறை அமைச்சர் உடனடியாக பதவி விலக இதைவிட வேறு என்ன காரணங்கள் வேண்டும் ?</li></ol>



<p></p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/doctor-harsha-vardhan-should-resign-for-taking-responsibility-of-corona-deaths-ks-alagiri-demand/">கொரோனாவினால் 2 லட்சம் பேர் பலியானதிற்கு பொறுப்பேற்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்தன் உடனடியாக பதவி விலக வேண்டும்! தலைவர் கே.எஸ்.அழகிரி கோரிக்கை</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://desiyamurasu.com/news-india/doctor-harsha-vardhan-should-resign-for-taking-responsibility-of-corona-deaths-ks-alagiri-demand/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>மக்கள் தேர்ந்தெடுத்த ஆட்சிக்கு எதிராக நியமன எம்எல்ஏக்கள் வாக்களிக்க முடியுமா? : சட்டம் சொல்லும் உண்மை</title>
		<link>https://desiyamurasu.com/news-india/can-nominated-mlas-vote-in-puducherry-house/</link>
					<comments>https://desiyamurasu.com/news-india/can-nominated-mlas-vote-in-puducherry-house/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Admin]]></dc:creator>
		<pubDate>Mon, 22 Feb 2021 08:03:38 +0000</pubDate>
				<category><![CDATA[தேசிய அரசியல்]]></category>
		<category><![CDATA[bjp]]></category>
		<category><![CDATA[congress]]></category>
		<category><![CDATA[Puducherry government]]></category>
		<category><![CDATA[V Narayanasamy]]></category>
		<guid isPermaLink="false">https://desiyamurasu.com/?p=4168</guid>

					<description><![CDATA[<p>புதுச்சேரி சட்டப்பேரவையில், ஆளும் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையை நிரூபிக்கும் நடக்க இருக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில், நியமன எம்எல்ஏக்கள் வாக்களிக்க முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. பிப்ரவரி 22 ஆம் தேதி (திங்கள் கிழமை) பெரும்பான்மையை நிரூபிக்குமாறு நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு, துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார். இந்த சூழலில் ஒவ்வொருவர் மனதிலும் எழுந்திருக்கும் கேள்வி இதுதான்… &#8221;பாஜகவைச் சேர்ந்த 3 நியமன எம்எல்ஏக்கள் வாக்களிக்க முடியுமா?&#8221; ஒருவேளை 3 நியமன எம்எல்ஏக்களை வாக்களிக்க அனுமதித்தால், [&#8230;]</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/can-nominated-mlas-vote-in-puducherry-house/">மக்கள் தேர்ந்தெடுத்த ஆட்சிக்கு எதிராக நியமன எம்எல்ஏக்கள் வாக்களிக்க முடியுமா? : சட்டம் சொல்லும் உண்மை</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>புதுச்சேரி சட்டப்பேரவையில், ஆளும் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையை நிரூபிக்கும் நடக்க இருக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில், நியமன எம்எல்ஏக்கள் வாக்களிக்க முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.</p>



<p>பிப்ரவரி 22 ஆம் தேதி (திங்கள் கிழமை) பெரும்பான்மையை நிரூபிக்குமாறு நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு, துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார்.</p>



<p>இந்த சூழலில் ஒவ்வொருவர் மனதிலும் எழுந்திருக்கும் கேள்வி இதுதான்…</p>



<p>&#8221;பாஜகவைச் சேர்ந்த 3 நியமன எம்எல்ஏக்கள் வாக்களிக்க முடியுமா?&#8221;</p>



<p>ஒருவேளை 3 நியமன எம்எல்ஏக்களை வாக்களிக்க அனுமதித்தால், தேர்தல் அறிவித்ததும் காபந்து அரசாக செயல்படுவதை பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தடுத்து நிறுத்த முடியும். இதன்மூலம் தனது தோழமை கட்சி தலைமையிலோ அல்லது தமது தலைமையிலோ ஆட்சி அமைத்து, தேர்தலில் அராஜகத்தை நிகழ்த்துவது தான் இவர்களது திட்டம்.</p>



<p>ஆனால், நியமன எம்எல்ஏக்களின் வாக்குகளைப் பற்றி சட்டம் சொல்வது என்ன?</p>



<p>&#8221; 16 எம்எல்ஏக்களின் ஆதரவுடன் ஆளும் கட்சியால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் போனால், ஆட்சியை விட்டு வெளியேற வேண்டும். நியமன எம்எல்ஏக்கள் சட்டப்பேரவை அமைப்பின் ஓர் அங்கமல்ல. எனவே நம்பிக்கை வாக்கெடுப்பில் தார்மீக அடிப்படையில் அவர்களால் பங்குபெற முடியாது. எனினும், அவர்களை பாஜக எம்எல்ஏக்களாக மத்திய உள்துறை அமைச்சகம் நியமிக்கவில்லை. அதனால், நியமன எம்எல்ஏக்களை பாஜக எம்எல்ஏக்களாக கருதமுடியாது. எனவே, இந்த 3 நியமன எம்எல்ஏக்கள் ஒருசார்பு நிலையை எடுக்காமல் இருக்க வேண்டும்&#8221;.</p>



<p>நியமன எம்எல்ஏக்கள் பாஜக எம்எல்ஏக்கள் தான் என துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதற்கு, காங்கிரஸ் தரப்பில் கடும் தரப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு கொறடா ஆர்கேஆர் அனந்தராமன் கூறும்போது, &#8221; பாஜகவைச் சேர்ந்தவர்களாகவே இருந்தாலும், அவர்கள் சட்டப்பேரவையில் எந்த கட்சியின் உறுப்பினர்களும் இல்லை. அவர்கள் தங்களை பாஜக உறுப்பினர்கள் என்று கூறினால், தானாகவே தகுதி நீக்கத்துக்கு ஆளாவார்கள்&#8221;என்றார்.</p>



<p>இது குறித்து திமுகவின் தெற்கு ஒருங்கிணைப்பாளர் ஆர்.சிவா கூறும்போது, &#8221; மத்திய அரசு நியமித்த 3 எம்எல்ஏக்களும் பாஜகவைச் சேர்ந்தவர்கள் என்று குறிப்பிடவில்லை என,கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற இது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்ற அமர்வு தெரிவித்துள்ளது. கிரன் பேடியைப் போலவே, பாஜக பிரதிநிதியாகவே தமிழிசை சவுந்தரராஜன் செயல்படுகிறார். நியமன எம்எல்ஏக்களின் வாக்குகளை வைத்து, மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசின் தலையெழுத்தை முடிவு செய்வது ஜனநாயக விரோதமானது&#8221; என்றார்.</p>



<p>இதற்கிடையே, நியமன எம்எல்ஏக்கள் பாஜக எம்எல்ஏக்களாக கருதப்படுவார்கள் என்று கூறியதை தெளிவுபடுத்தக் கோரி, ஆளுநர் தமிழிசைக்கு புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கடிதம் எழுதியுள்ளார்.</p>



<p>சட்ட விதி சொல்வது என்ன?</p>



<p>&#8221;1963 ஆம் ஆண்டு யூனியன் பிரதேச சட்டத்தின் பிரிவு 3 (3)ல், 3 நபர்களுக்கு மேல் நியமன உறுப்பினர்களை மத்திய அரசு நியமிக்கலாம். அவ்வாறு நியமிக்கப்படுவர் அரசுப் பணியில் இருக்கக் கூடாது. அரசு ஊழியராக இல்லாதவர் மட்டுமே நியமன எம்எல்ஏக்களாக நியமிக்கப்பட வேண்டும் என்பதே இதன் அர்த்தம்.</p>



<p>ஆளும் கட்சி அல்லது தோழமை கட்சியினரை நியமன எம்எல்ஏக்களாக நியமிக்க அரசு பரிந்துரைக்கும். இதன் அடிப்படையில், நியமன எம்எல்ஏக்களை மத்திய அரசு நியமிக்கும். எனினும், வாக்களிப்பில் கலந்து கொள்ள இவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். நியமன எம்எல்ஏக்களுக்கு வாக்களிக்கும் உரிமை இருக்கிறது என யூனியன் பிரதேச சட்டத்தில் எங்கும் குறிப்பிடப்படவில்லை என்பதே சட்ட வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/can-nominated-mlas-vote-in-puducherry-house/">மக்கள் தேர்ந்தெடுத்த ஆட்சிக்கு எதிராக நியமன எம்எல்ஏக்கள் வாக்களிக்க முடியுமா? : சட்டம் சொல்லும் உண்மை</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://desiyamurasu.com/news-india/can-nominated-mlas-vote-in-puducherry-house/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>12,232 பேரின் மனநிலைதான் 130 கோடி தேச மக்களின் மனநிலையா?: அம்பலமாகும் இந்தியா டுடேவின் காமெடி சர்வே</title>
		<link>https://desiyamurasu.com/news-india/12232-people-voted-and-that-became-mood-of-the-nation-of-130-cr-people-twitterati-mock-india-today-survey/</link>
					<comments>https://desiyamurasu.com/news-india/12232-people-voted-and-that-became-mood-of-the-nation-of-130-cr-people-twitterati-mock-india-today-survey/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Admin]]></dc:creator>
		<pubDate>Wed, 27 Jan 2021 06:42:06 +0000</pubDate>
				<category><![CDATA[தேசிய அரசியல்]]></category>
		<category><![CDATA[bjp]]></category>
		<category><![CDATA[congress]]></category>
		<category><![CDATA[PM Modi]]></category>
		<guid isPermaLink="false">https://desiyamurasu.com/?p=3996</guid>

					<description><![CDATA[<p>இந்தியா டுடே கடந்த வியாழக்கிழமை வெளியிட்டுள்ள சர்வே, சமூக வலைத்தளங்களில் கேலியும் கிண்டலுக்கும் ஆளாகியுள்ளது. &#8221;நாட்டின் மனநிலை என்று பிரதமரின் மன் கீ பாத் சர்வே முடிவுகளை மட்டும் தான் வானொலியிலும் தூர்தர்ஷனிலும் பிரதமர் அறிவிக்கவில்லை&#8221; என்று ட்விட்டரில் விமர்சித்துள்ளனர். &#8221;கொரோனாவை பிரதமர் மோடி அணுகிய விதத்தை பெரும்பாலான மக்கள் பாராட்டுவதாகவும், இன்றைக்குத் தேர்தல் வைத்தாலும் பாஜக வெற்றி உறுதி&#8221; என்று கூறி, தன் எஜமானர்களுக்கு இந்தியா டுடே சேவகம் செய்திருக்கிறது. 19 மாநிலங்களில் 97 நாடாளுமன்றத் [&#8230;]</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/12232-people-voted-and-that-became-mood-of-the-nation-of-130-cr-people-twitterati-mock-india-today-survey/">12,232 பேரின் மனநிலைதான் 130 கோடி தேச மக்களின் மனநிலையா?: அம்பலமாகும் இந்தியா டுடேவின் காமெடி சர்வே</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>இந்தியா டுடே கடந்த வியாழக்கிழமை வெளியிட்டுள்ள சர்வே, சமூக வலைத்தளங்களில் கேலியும் கிண்டலுக்கும் ஆளாகியுள்ளது.</p>



<p>&#8221;நாட்டின் மனநிலை என்று பிரதமரின் மன் கீ பாத் சர்வே முடிவுகளை மட்டும் தான் வானொலியிலும் தூர்தர்ஷனிலும் பிரதமர் அறிவிக்கவில்லை&#8221; என்று ட்விட்டரில் விமர்சித்துள்ளனர்.</p>



<p>&#8221;கொரோனாவை பிரதமர் மோடி அணுகிய விதத்தை பெரும்பாலான மக்கள் பாராட்டுவதாகவும், இன்றைக்குத் தேர்தல் வைத்தாலும் பாஜக வெற்றி உறுதி&#8221; என்று கூறி, தன் எஜமானர்களுக்கு இந்தியா டுடே சேவகம் செய்திருக்கிறது.</p>



<p>19 மாநிலங்களில் 97 நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 194 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 12,232 பேரிடம் கருத்துக் கேட்டதில் பாஜகவுக்கே ஆதரவு அதிகரித்திருப்பதாகவும் இந்தியா டுடே தெரிவித்துள்ளது. 74 சதவிகிதம் பேர் மோடியின் செயல் திறனுக்கு ஆதரவு அளித்துள்ளனர். 66 சதவிகிதம் பேர் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மீது திருப்தி அடைந்துள்ளதாக சர்வேயின் முடிவுகள் தெரிவிக்கின்றன.</p>



<p>இந்தியா டுடேவின் சர்வே முடிவுகள் வெளியிடப்பட்டதும் ட்விட்டரில் பலரும் தங்கள் கருத்தை நகைச்சுவையாக வெளியிட்டு வருகின்றனர்.</p>



<p>அவற்றில் சில…</p>



<ul class="wp-block-list"><li>நாட்டின் மனநிலை மற்றும் சர்வே எல்லாம், டிஆர்பி ரேட்டிங் போன்றது தான். தாங்கள் நினைத்ததை சர்வே முடிவுகளாக வெளியிட வேண்டும் என்பதை பாஜக விரும்புவதைச் சுயமரியாதை உள்ள பத்திரிக்கை ஆசிரியர்கள் மறுக்க முடியாது.</li><li>130 கோடி மக்களின் மனநிலையை 12,232 பேர் பிரதிபலித்துவிட்டார்களா?</li><li>வண்ணமயமான பணமே நாட்டின் மனநிலையை முடிவு செய்கின்றது.</li><li>இந்த போலி சர்வே எடுக்க மோடியும் யோகியும் எவ்வளவு பணம் கொடுத்தார்கள்?</li><li>ஊடகங்கள் அனைத்தும் 24 மணிநேரமும் விலை போனதால், செல்வாக்கைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார் மோடி.</li><li>வேலையின்மை, இனவாதம், விவசாயிகள் போராட்டம்,புலம்பெயர்ந்தோர் பிரச்சினை, சிறு, குறு தொழிற்சாலைகள் மூடல், மொத்த உள்நாட்டு உற்பத்தி, எரிபொருள் விலை, பொருளாதாரம் மற்றும் வங்கிகள் மூடல், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து, மாட்டிறைச்சி விவகாரம், முஸ்லீம் கப்ராஸ்தான் ஆகியவை தான் நாட்டின் மனநிலையாக இருக்கின்றன.</li><li>இந்தியாவின் மக்கள் தொகை: 135 கோடிகள் + ஆக உள்ளது. நாட்டின் மனநிலையை வெறும் 13 ஆயிரம் பேர் முடிவு செய்ய முடியுமா?. இந்த எண்ணிக்கையில் சர்வே எடுத்தால் ஒரு நகரின் மனநிலையைக் கூட நீங்கள் முடிவு செய்ய முடியாது. இந்தியா டுடே-வை நினைத்து வெட்கப்படுகிறேன்.</li><li>ரிபப்ளிக் தொலைக்காட்சியும், ஜீ தொலைக்காட்சியும் அரசின் ஊதுகுழலாக இருக்கின்றன. இந்த சர்வே மூலம், நாங்களும் உங்களுக்கு விசுவாசமாக இருக்கிறோம் என்று இந்தியா டுடே காட்டியிருக்கிறது.</li><li>மக்களின் மனநிலை : 2 நிமிடங்கள் அமைதியாக இருப்போம்.</li><li>மக்கள் மனநிலை : இது போன்ற சர்வேக்கு இனி வாக்குப்பதிவு இயந்திரத்தைப் பயன்படுத்தலாம்.</li><li>மக்கள் மனநிலை : இந்த வாரத்தின் சிறந்த நகைச்சுவை</li><li>இந்த சர்வேயில் அர்னாப் கோஸ்வாமியின் சாயலே தெரிகிறது.</li><li>இதுவரை இல்லாத அளவுக்குப் பெருமளவில் பெட்ரோல் விலையை ஏற்றுவதே, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தோல்விக்குச் சிறந்த உதாரணம்.</li></ul>



<p>இப்படி…இந்தியா டுடேவின் போலி சர்வேக்கு லட்சக்கணக்கானோர் ட்விட்டர் மூலம் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.</p>



<p>&#8221;12,232 பேரிடம் கருத்துக் கேட்டுவிட்டு, பிரதமர் நரேந்திர மோடியை யாரும் அசைக்க முடியாது&#8221; என்று ஒரு நகைச்சுவை சர்வேயை வெளியிட்டுள்ளது இந்தியா டுடே. இதை 130 கோடி மக்களின் மனநிலை என்று வேறு சொல்கிறது.</p>



<p>அப்படி என்றால், இந்த சர்வேக்கு எதிராக லட்சக்கணக்கானோர் ட்வீட் செய்து கொண்டிருக்கிறார்களே? இதுவும் நாட்டின் மனநிலை தானே?. இதை என்ன சொல்வது?</p>



<p>ஆயிரங்கள் பெரிதா? லட்சங்கள் பெரிதா என்பதை, தங்கள் எஜமானர்களிடம் கேட்டு இந்தியா டுடே பதில் சொல்லட்டும்.</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/12232-people-voted-and-that-became-mood-of-the-nation-of-130-cr-people-twitterati-mock-india-today-survey/">12,232 பேரின் மனநிலைதான் 130 கோடி தேச மக்களின் மனநிலையா?: அம்பலமாகும் இந்தியா டுடேவின் காமெடி சர்வே</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://desiyamurasu.com/news-india/12232-people-voted-and-that-became-mood-of-the-nation-of-130-cr-people-twitterati-mock-india-today-survey/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>தமிழ் உணர்வையும், தமிழர் கலாச்சாரத்தையும் நசுக்க நினைப்பது நாட்டுக்குச் செய்யும் கேடு : பா.ஜ.க.வுக்கு ராகுல் காந்தி எச்சரிக்கை</title>
		<link>https://desiyamurasu.com/news-tamilnadu/tamil-spirit-cannot-be-suppressed-says-rahul-gandhi-at-jallikattu-event-in-madurai/</link>
					<comments>https://desiyamurasu.com/news-tamilnadu/tamil-spirit-cannot-be-suppressed-says-rahul-gandhi-at-jallikattu-event-in-madurai/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Admin]]></dc:creator>
		<pubDate>Fri, 15 Jan 2021 11:59:43 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழக அரசியல்]]></category>
		<category><![CDATA[bjp]]></category>
		<category><![CDATA[congress]]></category>
		<category><![CDATA[Jallikattu]]></category>
		<category><![CDATA[Madurai]]></category>
		<category><![CDATA[Pongal Festival 2021]]></category>
		<category><![CDATA[rahul gandhi]]></category>
		<guid isPermaLink="false">https://desiyamurasu.com/?p=3872</guid>

					<description><![CDATA[<p>ஜல்லிக்கட்டுப் போட்டி முடிந்ததும் டெல்லி திரும்ப மதுரை விமான நிலையத்துக்கு ராகுல் காந்தி வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: ஜல்லிக்கட்டைப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே இன்று வந்தேன். அனைவருக்கும் மகிழ்ச்சியான பொங்கல் வாழ்த்துகள். ஜல்லிக்கட்டுப் போட்டியைப் பார்த்தேன். ஜல்லிக்கட்டால் மாடுகளுக்கு ஆபத்து வரும் என்று நிறையப் பேர் சொன்னார்கள். இன்று நான் நேரில் பார்க்கும் போதுதான் தெரிந்தது. எந்த ஒரு மாட்டுக்கும் காயம் ஏற்படவில்லை. மாறாக, மாடு பிடி வீரர்களுக்குத் தான் காயம் ஏற்பட்டது. [&#8230;]</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-tamilnadu/tamil-spirit-cannot-be-suppressed-says-rahul-gandhi-at-jallikattu-event-in-madurai/">தமிழ் உணர்வையும், தமிழர் கலாச்சாரத்தையும் நசுக்க நினைப்பது நாட்டுக்குச் செய்யும் கேடு : பா.ஜ.க.வுக்கு ராகுல் காந்தி எச்சரிக்கை</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>ஜல்லிக்கட்டுப் போட்டி முடிந்ததும் டெல்லி திரும்ப மதுரை விமான நிலையத்துக்கு ராகுல் காந்தி வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:</p>



<p>ஜல்லிக்கட்டைப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே இன்று வந்தேன். அனைவருக்கும் மகிழ்ச்சியான பொங்கல் வாழ்த்துகள். ஜல்லிக்கட்டுப் போட்டியைப் பார்த்தேன். ஜல்லிக்கட்டால் மாடுகளுக்கு ஆபத்து வரும் என்று நிறையப் பேர் சொன்னார்கள். இன்று நான் நேரில் பார்க்கும் போதுதான் தெரிந்தது. எந்த ஒரு மாட்டுக்கும் காயம் ஏற்படவில்லை. மாறாக, மாடு பிடி வீரர்களுக்குத் தான் காயம் ஏற்பட்டது. யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில், இன்னும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.</p>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img fetchpriority="high" decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/01/14rahul1.jpg" alt="" class="wp-image-3876" width="560" height="440" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/01/14rahul1.jpg 670w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/01/14rahul1-300x236.jpg 300w" sizes="(max-width: 560px) 100vw, 560px" /></figure></div>



<p>நான் எதற்கு இங்கு வந்தேன் என்றால், இன்று டெல்லியில் ஆட்சியில் இருப்பவர்கள் நம் நாட்டின் கலாச்சாரங்களை அழிக்க முயன்று வருகிறார்கள். தமிழர்கள் உணர்வுகளைத் தடுக்க முடியும் என்று நம்புகிறார்கள். தமிழர்களின் தமிழ் மொழியை நசுக்கப் பார்க்கிறார்கள். அவர்களுக்கு ஒரு செய்தி சொல்லவே இங்கு வந்துள்ளேன். முதலாவது, தமிழ் உணர்வை யாராலும் தடுக்க முடியாது. இரண்டாவது, தமிழ் உணர்வைத் தடுக்க நீங்கள் முயன்றால், அது நம் நாட்டுக்கு நீங்கள் செய்யும் கேடு. தமிழ் என்பது கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் கொண்டது. அது நம் நாட்டுக்குத் தேவை.</p>



<p>இவர்களின் இது போன்ற எண்ணங்களுக்கு நான் எதிரானவன். குறிப்பிட்ட சிந்தனைகள், குறிப்பிட்ட மொழி, குறிப்பிட்ட கருத்து நம் நாட்டில் உள்ளது. ஏராளமான மொழிகளும், ஏராளமான சிந்தனைகளும் இருப்பதே நமது பலம்.</p>



<p>நான் பலமுறை தமிழகத்துக்கு வந்திருக்கிறேன். இன்னும் வருவேன். தமிழக மக்களிடம் நான் நிறைய கற்றுள்ளேன். கடந்த காலத்தில் நிறைய அவர்கள் எனக்கு கற்றுக் கொடுத்துள்ளார்கள். நாட்டை எப்படி வழி நடத்த வேண்டும் என்றும் அவர்கள் எனக்குக் காட்டியிருக்கிறார்கள். எனவே அவர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.</p>



<p>அரசாங்கம் விவசாயிகளைப் புறக்கணிக்க மட்டும் செய்யவில்லை. அவர்களை அழிக்கவும் பார்க்கிறது. இதில் வித்தியாசத்தைப் பார்க்க வேண்டும். விவசாயிகளைக் கண்டுகொண்டால் அவர்கள் மீது அக்கறை இருக்கிறது என்று அர்த்தம். அவர்களைப் புறக்கணித்தால் அழிக்க முயல்கிறார்கள் என்று அர்த்தம். விவசாயிகளை அழித்துவிட்டு அவர்களது 2 அல்லது 3 நண்பர்களுக்கு உதவ நினைக்கிறார்கள்.</p>



<p>விவசாயிகளிடம் இருப்பதை எல்லாம் பறித்து, அவர்கள் நண்பர்களிடம் கொடுக்கப் பார்க்கிறார்கள். விவசாயிகளின் நிலத்தை எடுக்கப் பார்க்கிறார்கள், விவசாயிகளின் உற்பத்தியை எடுக்கப் பார்க்கிறார்கள். விவசாயிகளை இந்த அரசு அலட்சியப்படுத்துகிறது என்பது சிறிய வார்த்தை. விவசாயிகளை அழிக்கப் பார்க்கிறார்கள் என்பது தான் சரியான வார்த்தை.</p>



<p>விவசாயிகள் நாட்டின் முதுகெலும்பு. விவசாயிகளை நசுக்கிக் கொண்டே இருந்தால், நாடு வளர்ச்சி அடையுமா? இதை எங்காவது வரலாற்றில் பார்த்திருப்போமா? எப்போது இந்திய விவசாயிகள் பலவீனப்படுகிறார்களோ, இந்தியாவும் பலவீனப்படும்.</p>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/01/nationwide_2021-01_f451b9ed-8897-4c2f-afd2-652e573406f8_Rahul_gandhi_Jallikattu-1024x681.jpg" alt="" class="wp-image-3879" width="557" height="370" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/01/nationwide_2021-01_f451b9ed-8897-4c2f-afd2-652e573406f8_Rahul_gandhi_Jallikattu-1024x681.jpg 1024w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/01/nationwide_2021-01_f451b9ed-8897-4c2f-afd2-652e573406f8_Rahul_gandhi_Jallikattu-300x200.jpg 300w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/01/nationwide_2021-01_f451b9ed-8897-4c2f-afd2-652e573406f8_Rahul_gandhi_Jallikattu-768x511.jpg 768w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/01/nationwide_2021-01_f451b9ed-8897-4c2f-afd2-652e573406f8_Rahul_gandhi_Jallikattu-750x499.jpg 750w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/01/nationwide_2021-01_f451b9ed-8897-4c2f-afd2-652e573406f8_Rahul_gandhi_Jallikattu.jpg 1040w" sizes="(max-width: 557px) 100vw, 557px" /></figure></div>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/01/Rahul-Gandhi-hails-Tamil-tradition-of-‘jallikattu-in-Madurai.jpeg" alt="" class="wp-image-3878" width="556" height="347" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/01/Rahul-Gandhi-hails-Tamil-tradition-of-‘jallikattu-in-Madurai.jpeg 615w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/01/Rahul-Gandhi-hails-Tamil-tradition-of-‘jallikattu-in-Madurai-300x187.jpeg 300w" sizes="(max-width: 556px) 100vw, 556px" /></figure></div>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img loading="lazy" decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/01/14rahul-gandhi.jpg" alt="" class="wp-image-3877" width="556" height="400" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/01/14rahul-gandhi.jpg 670w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/01/14rahul-gandhi-300x216.jpg 300w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/01/14rahul-gandhi-120x86.jpg 120w" sizes="auto, (max-width: 556px) 100vw, 556px" /></figure></div>



<p>கொரோனா காலத்தில் சாதாரண மக்களுக்கு நீங்கள் உதவவில்லை. நீங்கள் யாருக்கான பிரதமர்? நீங்கள் இந்திய மக்களுக்குப் பிரதமரா? அல்லது குறிப்பிட்ட 2 அல்லது 3 தொழிலதிபர்களுக்கு மட்டும் பிரதமரா?</p>



<p>கடைசியாக ஒரு கேள்வி. நம் எல்லையில் சீனா என்ன செய்து கொண்டிருக்கிறது? நம் நாட்டை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் சீனாவைப் பற்றி ஏன் இதுவரைக்கும் பிரதமர் வாய் திறக்காமல் இருக்கிறார்.</p>



<p>போராடும் விவசாயிகளை நினைத்துப் பெருமைப்படுகிறோம். நாங்கள் முழு ஆதரவைக் கொடுத்து வருகிறோம். பஞ்சாபில் யாத்திரை மேற்கொண்ட போது, இந்த பிரச்சினையை எழுப்பினேன். தொடர்ந்து போராடி வருகிறோம். நான் சொல்வதைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். 3 வேளாண் சட்டங்களையும் இந்த அரசு திரும்பப் பெற வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகும்.</p>



<p>இவ்வாறு ராகுல் காந்தி பேட்டியளித்தார்.</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-tamilnadu/tamil-spirit-cannot-be-suppressed-says-rahul-gandhi-at-jallikattu-event-in-madurai/">தமிழ் உணர்வையும், தமிழர் கலாச்சாரத்தையும் நசுக்க நினைப்பது நாட்டுக்குச் செய்யும் கேடு : பா.ஜ.க.வுக்கு ராகுல் காந்தி எச்சரிக்கை</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://desiyamurasu.com/news-tamilnadu/tamil-spirit-cannot-be-suppressed-says-rahul-gandhi-at-jallikattu-event-in-madurai/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>3 புதிய சட்டங்களையும் ரத்து செய்து விவசாயிகளிடம் மோடி அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் : ரன்தீப் சிங் சுர்ஜேவாலா</title>
		<link>https://desiyamurasu.com/news-india/farmers-protesting-in-chilly-weather-modi-giving-clarifications-on-tv-congress/</link>
					<comments>https://desiyamurasu.com/news-india/farmers-protesting-in-chilly-weather-modi-giving-clarifications-on-tv-congress/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Admin]]></dc:creator>
		<pubDate>Wed, 30 Dec 2020 05:05:20 +0000</pubDate>
				<category><![CDATA[தேசிய அரசியல்]]></category>
		<category><![CDATA[bjp]]></category>
		<category><![CDATA[congress]]></category>
		<category><![CDATA[PM Modi]]></category>
		<category><![CDATA[Randeep Singh Surjewala]]></category>
		<guid isPermaLink="false">https://desiyamurasu.com/?p=3778</guid>

					<description><![CDATA[<p>3 புதிய சட்டங்களையும் ரத்து செய்து விவசாயிகளிடம் மோடி அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என, காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நீதி கேட்டுக் கடந்த 30 நாட்களாக நடுங்கிக் கொண்டே கடும் குளிரில் விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். 3 புதிய விவசாய சட்டங்களை எதிர்த்து நடந்த போராட்டத்தில் இதுவரை 44 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். ஒரு சில முதலாளிகளுக்குச் சேவகம் செய்வதிலேயே பிரதமர் மோடி ஆர்வம் [&#8230;]</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/farmers-protesting-in-chilly-weather-modi-giving-clarifications-on-tv-congress/">3 புதிய சட்டங்களையும் ரத்து செய்து விவசாயிகளிடம் மோடி அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் : ரன்தீப் சிங் சுர்ஜேவாலா</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>3 புதிய சட்டங்களையும் ரத்து செய்து விவசாயிகளிடம் மோடி அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என, காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா கூறியுள்ளார்.</p>



<p>அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:</p>



<p>நீதி கேட்டுக் கடந்த 30 நாட்களாக நடுங்கிக் கொண்டே கடும் குளிரில் விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். 3 புதிய விவசாய சட்டங்களை எதிர்த்து நடந்த போராட்டத்தில் இதுவரை 44 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். ஒரு சில முதலாளிகளுக்குச் சேவகம் செய்வதிலேயே பிரதமர் மோடி ஆர்வம் காட்டுகிறார். விவசாயிகள் மீது அவர் இரக்கப்படவே இல்லை.</p>



<p>போராடும் விவசாயிகள் சோர்வாகி அவர்களே ஓடிவிடுவார்கள் என்பது பாரதிய ஜனதா கட்சியின் எண்ணமாகவும் கொள்கையாகவும் இருக்கிறது. பிரதமர் தொலைக் காட்சியில் விளக்கங்களை அளித்து வருகிறார். அவருடைய அமைச்சர்கள் ஏதோ சாக்குப்போக்கு சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், தமது நெருக்கமான முதலாளிகளுக்குச் சேவகம் செய்து கொண்டிருக்கிறார் என்பதுதான் உண்மை.</p>



<p>அரசியல் நேர்மையின்மையுடன் நாடகம் ஆடுகிறார்கள். விவசாயிகளின் பிரச்சினையைத் தீர்க்க அவர்களுக்குச் சிறிதளவும் ஆர்வமில்லை என்பதுதான் கசப்பான உண்மை.</p>



<p>சாலைகளில் நின்று கொண்டிருந்த விவசாயிகள் மீது தண்ணீரைப் பீய்ச்சியும், தடியடி பிரயோகமும் நடத்தித் தாக்கிய பிரதமர் தான், விவசாயிகளுக்கு உதவித் தொகை வழங்குவதாகக் கூறுகிறார்.</p>



<p>கடந்த 2015-6 விவசாய கணக்கெடுப்பின்படி, 14 கோடியே 64 லட்சம் விவசாயிகள், 15,78 கோடி ஹெக்டேர் நிலத்தில் விவசாயம் செய்வதாகக் கூறப்பட்டுள்ளது.</p>



<p>கடந்த 2018 ஆம் ஆண்டு விவசாயிகளுக்கான ரூ.6 ஆயிரம் உதவித் தொகை திட்டத்தை மோடி அரசு தொடங்கியது. 3 தவணைகளாக இந்தியாவில் உள்ள விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தின்படி, 2018-19 ஆம் ஆண்டில் 88 ஆயிரம் கோடி ரூபாய் வங்கிக் கணக்குகளில் செலுத்தியிருக்க வேண்டும். ஆனால், இதுவரை வெறும் 6 ஆயிரத்து 5 கோடி ரூபாய் மட்டுமே விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.</p>



<p>மக்களவை தேர்தலுக்கு முன்பு, விவசாயிகள் கணக்கில் 49 ஆயிரத்து 196 கோடி ரூபாய் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டது. 2020-21 ஆம் ஆண்டில் இதுவரை 38 ஆயிரத்து 872 கோடி ரூபாய் செலுத்தப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் வங்கிக் கணக்குகளின் செலுத்த வேண்டிய 88 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு முழுமையாக இதுவரை வழங்கவில்லை.</p>



<p>தற்போது விவசாயிகளின் கணக்குகளில் 18 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய செலுத்தியபோதும், 3 சட்டங்களை நியாயப்படுத்தியே பிரதமர் மோடி பேசுகிறார்.</p>



<p>5 கோடியே 40 லட்சம் விவசாயிகளுக்கு உதவித் தொகையைத் தராதது ஏன்? இந்த திட்டத்தின் கீழ், மொத்தமுள்ள 14 கோடியே 64 லட்சம் விவசாயிகளில் 9 கோடியே 24 லட்சம் விவசாயிகளுக்கு மட்டும் அவர்களது வங்கிக் கணக்குகளில் பணம் செலுத்துவது ஏன்?</p>



<p>மோடி அவர்களே, உங்களை சிம்மாசனத்தின் மீது அமர வைத்த மக்களை நீங்கள் கொடுமையுடனும், அக்கறையின்றியும் நடத்திக் கொண்டிருக்கிறீர்கள்.</p>



<p>இன்று விவசாயிகளைத் தீவிரவாதிகள் என்றும், ஒட்டுண்ணிகள் என்றும், துண்டாடும் கும்பல் என்று காலிஸ்தானியர்கள் என்றும் பாரதிய ஜனதா கட்சி முத்திரை குத்துகிறது. 3 புதிய சட்டங்களையும் திரும்பப் பெற்று, விவசாயிகளிடம் மோடி அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார்.</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/farmers-protesting-in-chilly-weather-modi-giving-clarifications-on-tv-congress/">3 புதிய சட்டங்களையும் ரத்து செய்து விவசாயிகளிடம் மோடி அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் : ரன்தீப் சிங் சுர்ஜேவாலா</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://desiyamurasu.com/news-india/farmers-protesting-in-chilly-weather-modi-giving-clarifications-on-tv-congress/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>ராக்கெட் வேகத்தில் ஏறும் எரிபொருட்கள் விலை: 15 முறை கலால் வரியை உயர்த்தி மக்களை வதைத்த மோடி அரசு</title>
		<link>https://desiyamurasu.com/news-india/high-fuel-prices-blame-it-on-high-central-excise-which-has-increased-manifold-since-2014/</link>
					<comments>https://desiyamurasu.com/news-india/high-fuel-prices-blame-it-on-high-central-excise-which-has-increased-manifold-since-2014/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Admin]]></dc:creator>
		<pubDate>Mon, 21 Dec 2020 05:16:44 +0000</pubDate>
				<category><![CDATA[தேசிய அரசியல்]]></category>
		<category><![CDATA[bjp]]></category>
		<category><![CDATA[Fuel Price]]></category>
		<category><![CDATA[Government]]></category>
		<category><![CDATA[LPG]]></category>
		<guid isPermaLink="false">https://desiyamurasu.com/?p=3700</guid>

					<description><![CDATA[<p>இந்தியா முழுவதும் எரிபொருள் விலை டிசம்பர் மாதத்தில் ராக்கெட் வேகத்தில் எகிறியுள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டை விட, எரிபொருட்களுக்கான மத்திய கலால் வரி 5 மடங்கு அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது. மக்களின் நலன் கருதி எரிபொருள் விலையைக் குறைக்க மத்திய அரசு மறுத்து வருகிறது. கொரோனா பரவல் மற்றும் அதனைத் தொடர்ந்து வந்த பொது முடக்கத்தால் நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்துள்ளது. வேலை இழப்பும் அதிகரித்துள்ளது. பாஜக எதிர்க்கட்சியாக இருந்தபோது, பெட்ரோல் மற்றும் டீசலுக்கு மத்திய கலால் வரியை [&#8230;]</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/high-fuel-prices-blame-it-on-high-central-excise-which-has-increased-manifold-since-2014/">ராக்கெட் வேகத்தில் ஏறும் எரிபொருட்கள் விலை: 15 முறை கலால் வரியை உயர்த்தி மக்களை வதைத்த மோடி அரசு</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>இந்தியா முழுவதும் எரிபொருள் விலை டிசம்பர் மாதத்தில் ராக்கெட் வேகத்தில் எகிறியுள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டை விட, எரிபொருட்களுக்கான மத்திய கலால் வரி 5 மடங்கு அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது. மக்களின் நலன் கருதி எரிபொருள் விலையைக் குறைக்க மத்திய அரசு மறுத்து வருகிறது.</p>



<p>கொரோனா பரவல் மற்றும் அதனைத் தொடர்ந்து வந்த பொது முடக்கத்தால் நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்துள்ளது. வேலை இழப்பும் அதிகரித்துள்ளது.</p>



<p>பாஜக எதிர்க்கட்சியாக இருந்தபோது, பெட்ரோல் மற்றும் டீசலுக்கு மத்திய கலால் வரியை சிறிய அளவில் ஏற்றியபோது, அதனை அக்கட்சி கடுமையாக எதிர்த்தது. அப்போது, சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணை விலை அதிகரித்ததால், பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டது. எனினும், டீசல் மற்றும் வீட்டு உபயோகத்துக்குப் பயன்படும் மண்ணெண்ணெய், கேஸ் சிலிண்டர் ஆகியவற்றுக்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் மானியம் அளிக்கப்பட்டது.</p>



<p>ஆனால், மத்தியில் ஆளும் பாஜக அரசோ, மானியத்தைக் குறைப்பதில் அல்லது முழுமையாகத் திரும்பப் பெறுவதில் ஆர்வம் காட்டி வருகிறது. சர்வதேசச் சந்தையில் எரிபொருள்கள் விலை கடந்த 6 ஆண்டுகளாகக் குறைவாக இருந்தபோதிலும், இந்திய நுகர்வோர் அதிக விலை கொடுத்து எரிபொருட்களை வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.</p>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img loading="lazy" decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/12/WhatsApp-Image-2020-12-21-at-11.10.14-AM.jpeg" alt="" class="wp-image-3709" width="535" height="407" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/12/WhatsApp-Image-2020-12-21-at-11.10.14-AM.jpeg 710w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/12/WhatsApp-Image-2020-12-21-at-11.10.14-AM-300x228.jpeg 300w" sizes="auto, (max-width: 535px) 100vw, 535px" /></figure></div>



<h4 class="wp-block-heading"><strong>பரமபத ஆட்டம்</strong></h4>



<p>• தற்போது பெட்ரோலுக்கான கலால் வரி ரூ.32.98. கடந்த 2014 மே மாதம் கலால் வரி ரூ.9.48 ஆக இருந்தது.</p>



<p>• தற்போது டீசலுக்கான கலால் வரி ரூ. 31.83. கடந்த 2014 மே மாதத்தில் ரூ. 3.56.</p>



<p>• கடந்த 2014 ஆம் ஆண்டைவிட, பெட்ரோலுக்கான கலால் வரி 348 சதவிகிதம் அதிகம்.</p>



<p>• ஐக்கிய முற்போக்குக் கூட்டணி இரண்டாவது முறை ஆட்சி நடத்தியபோது, டீசலுக்கு ரூ.3.56 கலால் வரி விதிக்கப்பட்டது. ஆனால், தற்போது டீசலுக்கு அதைவிட கூடுதலாக 894 சதவிகிதம் கலால் வரி விதிக்கப்பட்டுள்ளது.</p>



<p>• கடந்த 2014 ஆம் ஆண்டு பெட்ரோலுக்கு விதிக்கப்பட்ட ரூ.9.48 வரி வருவாயிலிருந்து ரூ. 6.35 ஒட்டுமொத்த வரி வருவாய்க்குச் சென்றது.</p>



<p>• 2020 &#8211; ல் பெட்ரோலுக்கு விதிக்கப்பட்ட ரூ.32.98 -லிருந்து ரூ.2.98 மட்டுமே ஒட்டுமொத்த வரி வருவாய்க்கு சென்றுள்ளது.</p>



<p>2011-2013 ஆம் ஆண்டுக்கு இடையில் சர்வதேச கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 110 டாலருக்கு மேல் ஏற்ற, இறக்கமாக இருந்தது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. மத்திய அரசின் நிதி இருப்பு மற்றும் பற்றாக்குறைக்கு எண்ணெய் இறக்குமதிச் செலவு அச்சுறுத்தலாக இருந்தது.</p>



<p>சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் அதிக அளவில் அதிகரித்ததால், மானியமும் அதிகரித்து அரசுக்கு நிதிப் பற்றாக்குறையை ஏற்படுத்தியது. எனினும், 25-06-2010 அன்று பெட்ரோல் விலையையும், 19-10-2014 அன்று டீசல் விலையையும் அரசு கட்டுப்படுத்தியது. ஆனால், சில ஆண்டுகளாக எரிபொருள் மட்டுமே மத்திய அரசின் பெரும் வருவாயாக மாறியிருக்கிறது. எரிபொருளுக்கான கலால் வரியைப் பொறுத்தவரை, எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களிலிருந்து நேரடியாக வருகிறது. இது மற்ற வரிகளைப் போல் அல்லாமல், விரைவாக வருகிறது. பிபிஏசி எனப்படும் பெட்ரோலிய திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வுத் துறையின் தரவுகளின்படி, கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 107.14 டாலராக (ரூ. 6,655.54) இருந்தது. அதேசமயம், 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு 41.53 டாலராக(ரூ.3,050) குறைந்தது. (இன்றைய கச்சா எண்ணை விலை விவரம் பிபிஏசியின் இணையத்தில் உள்ளது.)</p>



<p>கடந்த 15-03-2014 அன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.73.20 ஆகவும், டீசல் விலை ரூ.55.48 ஆகவும் இருந்தது. ஆனால், இன்றைக்கு வரலாறு காணாத வகையில், பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 90.34 ஆகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 80.51 ஆகவும் உயர்ந்துள்ளது.</p>



<p>டெல்லியில் கடந்த டிசம்பர் 16 ஆம் தேதி, பெட்ரோல் லிட்டருக்கு ரூ.83.71 ஆகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 73.87 ஆகவும் இருந்தது. எனினும், பெட்ரோல் அடிப்படை விலை லிட்டருக்கு ரூ.27.74 ஆகவும், சில்லரை விற்பனை விலை 33.1 சதவிகிதமாகவும் உள்ளது. இதன்படி, டெல்லியில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.83.71 -க்கும் விற்கப்படுகிறது. டீசலைப் பொறுத்தவரை, அடிப்படை விலை ரூ.28.66 ஆகவும், சில்லரை விற்பனை 38.8 சதவிகிதமாகவும் நிர்ணயிக்கப்பட்டு ரூ.73.87-க்கு விற்கப்படுகிறது.</p>



<p>உதாரணமாக, டெல்லியில் விற்கப்படும் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு மத்திய அரசு ரூ.32.98 கலால் வரியாக வசூலிக்கிறது. இது, அடிப்படை விலையிலிருந்து 119 சதவிகிதம் அதிகமாகும். மேலும், மாநில அரசுகள் விதிக்கும் மதிப்புக் கூட்டு வரி,அடிப்படை விலையைவிட 70 சதவீதம் அதிகமாகும்.</p>



<p>அதேசமயம், டீசலுக்கு மத்திய அரசு விதிக்கும் கலால் வரி, அடிப்படை விலையிலிருந்து 111 சதவிகிதம் அதிகமாகும். டீசலுக்கு மாநில அரசு விதிக்கும் ரூ.10.85 சதவிகித வரி என்பது, அதன் அடிப்படை விலையிலிருந்து 37.9 சதவிகிதம் அதிகமாகும்.</p>



<p>பெட்ரோலிய அமைச்சகத்தின் திட்டம் மற்றும் பகுப்பாய்வு துறையின் தரவுகளின்படி, கடந்த 2019-20 ஆம் ஆண்டில் எரிபொருட்களுக்கு விதிக்கப்பட்ட கலால் வரியின் மூலம் மத்திய அரசு ரூ. 2.25 லட்சம் கோடி வசூலித்துள்ளது. 2020-21 பட்ஜெட்டில் எரிபொருட்கள் மூலம் ரூ. 2.67 லட்சம் கோடி வசூலிப்பதற்கான அறிவிப்புகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசின் வருவாய் திட்டமிடலான ரூ.16,539 லட்சம் கோடிகளில், இது 16.3 சதவிகிதமாகும்.</p>



<p>கலால் வரியை மட்டும் உயர்த்தியதோடு நிற்காமல், மாநில அரசுகளுடன் பகிர்ந்து கொள்ளும் ஒட்டுமொத்த வரி வருவாயையும் மத்திய அரசு மாற்றியமைத்தது. மத்திய அரசுக்குச் செல்லும் செஸ் வரியும் அதிகரித்தது. பல்வேறு திட்டங்களுக்காக மாநில அரசுடன் செஸ் வரியைப் பகிர்ந்து கொள்வதற்கான கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன.</p>



<p>மோடி தலைமையிலான பாஜக அரசு கடந்த 2014 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தபிறகு, எரிபொருட்களுக்கான கலால் வரியை 15 முறை ஏற்றியுள்ளது. இந்நிலையில்,பெட்ரோலியப் பொருட்களையும் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என தொடர்ந்து கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வருகின்றன.</p>



<p>பெட்ரோலுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் விதிக்கும் வரி, அடிப்படை விலையிலிருந்து 189 சதவிகிதம் அதிகமாக உள்ளது. பெட்ரோலியப் பொருட்களை ஜிஎஸ்டி வரையறைக்குள் கொண்டு வந்தால் மட்டுமே இந்த பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும்.</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/high-fuel-prices-blame-it-on-high-central-excise-which-has-increased-manifold-since-2014/">ராக்கெட் வேகத்தில் ஏறும் எரிபொருட்கள் விலை: 15 முறை கலால் வரியை உயர்த்தி மக்களை வதைத்த மோடி அரசு</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://desiyamurasu.com/news-india/high-fuel-prices-blame-it-on-high-central-excise-which-has-increased-manifold-since-2014/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>நாட்டைத் துண்டாடுவதும், ஒற்றுமையை சீர்குலைப்பதும் பாஜக தான் : சுக்பீர் சிங் பாதல் கடும் குற்றச்சாட்டு</title>
		<link>https://desiyamurasu.com/news-india/sukhbir-badal-says-bjp-is-real-tukde-tukde-gang-has-smashed-national-unity/</link>
					<comments>https://desiyamurasu.com/news-india/sukhbir-badal-says-bjp-is-real-tukde-tukde-gang-has-smashed-national-unity/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Admin]]></dc:creator>
		<pubDate>Wed, 16 Dec 2020 11:00:24 +0000</pubDate>
				<category><![CDATA[தேசிய அரசியல்]]></category>
		<category><![CDATA[bjp]]></category>
		<category><![CDATA[Farm Bills]]></category>
		<category><![CDATA[Sukbir Singh Badal]]></category>
		<guid isPermaLink="false">https://desiyamurasu.com/?p=3604</guid>

					<description><![CDATA[<p>நாட்டைத் துண்டாடுவதும், ஒற்றுமையை சீர்குலைப்பதும் பாஜக கும்பல் தான் என்று சிரோன்மனி அகாலிதளம் கட்சியின் தலைவர் சுக்பீர் சிங் பாதல் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்து, அமைச்சரவையிலும் இடம் பெற்றிருந்தது சிரோன்மனி அகாலிதளம் கட்சி. மத்திய அரசு கொண்டு வந்த 3 விவசாயச் சட்டங்களை எதிர்த்து, இக்கட்சியைச் சேர்ந்த ஹரீஸ்ம்ராட் கவுர் பாதல் ராஜினாமா செய்தார். இந்நிலையில், சிரோன்மனி அகாலிதளம் தலைவர் சுக்பீர் சிங் பாதல் தமது ட்விட்டர் பதிவில், &#8221;விவசாயிகள் [&#8230;]</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/sukhbir-badal-says-bjp-is-real-tukde-tukde-gang-has-smashed-national-unity/">நாட்டைத் துண்டாடுவதும், ஒற்றுமையை சீர்குலைப்பதும் பாஜக தான் : சுக்பீர் சிங் பாதல் கடும் குற்றச்சாட்டு</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>நாட்டைத் துண்டாடுவதும், ஒற்றுமையை சீர்குலைப்பதும் பாஜக கும்பல் தான் என்று சிரோன்மனி அகாலிதளம் கட்சியின் தலைவர் சுக்பீர் சிங் பாதல் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார்.</p>



<p>தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்து, அமைச்சரவையிலும் இடம் பெற்றிருந்தது சிரோன்மனி அகாலிதளம் கட்சி. மத்திய அரசு கொண்டு வந்த 3 விவசாயச் சட்டங்களை எதிர்த்து, இக்கட்சியைச் சேர்ந்த ஹரீஸ்ம்ராட் கவுர் பாதல் ராஜினாமா செய்தார்.</p>



<p>இந்நிலையில், சிரோன்மனி அகாலிதளம் தலைவர் சுக்பீர் சிங் பாதல் தமது ட்விட்டர் பதிவில், &#8221;விவசாயிகள் என்ன கேட்கிறார்களோ, அதைத் தராமல் பிடிவாதப் போக்கோடு மோடி அரசு நடந்துகொள்கிறது. அதோடு, சீக்கியர்களுக்கு எதிராக இந்துக்களைத் திசை திருப்ப முயல்கிறது. அப்படிச் செய்தால் கடும் விளைவுகள் ஏற்படும் என எச்சரிக்கிறேன்.</p>



<p>மத்திய அரசுக்கு ஆதரவாகப் பேசுபவர்கள் தேசபக்தி உடையவர்கள் என்றும், எதிராகப் பேசுகிறவர்களை நாட்டைத் துண்டாடுபவர்கள் என்றும் பாஜகவினர் பேசி வருகின்றனர். நாட்டை உண்மையிலேயே துண்டாடும் கட்சி பாஜகதான்.</p>



<p>நாட்டின் ஒற்றுமையை அந்த கட்சி துண்டாடுகிறது. இந்துக்களை முஸ்லீம்களுக்கு எதிராகத் திருப்பி வெட்கக்கேடான செயலைச் செய்த பாஜக, இப்போது, சீக்கியர்களுக்கு எதிராக இந்துக்களை மோத விடப்பார்க்கிறது. அமைதியாகப் போராடும் தேசபக்தியுடைய பஞ்சாப் விவசாயிகளை, வகுப்புவாத தீக்குள் தள்ளிவிட பாஜக முயல்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/sukhbir-badal-says-bjp-is-real-tukde-tukde-gang-has-smashed-national-unity/">நாட்டைத் துண்டாடுவதும், ஒற்றுமையை சீர்குலைப்பதும் பாஜக தான் : சுக்பீர் சிங் பாதல் கடும் குற்றச்சாட்டு</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://desiyamurasu.com/news-india/sukhbir-badal-says-bjp-is-real-tukde-tukde-gang-has-smashed-national-unity/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>ராஜஸ்தான் நகராட்சித் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி : 3 -வது இடத்துக்கு தள்ளப்பட்ட பா.ஜ.க.</title>
		<link>https://desiyamurasu.com/news-india/bjp-finishes-third-in-rajasthan-urban-local-body-polls-congress-bounces-back/</link>
					<comments>https://desiyamurasu.com/news-india/bjp-finishes-third-in-rajasthan-urban-local-body-polls-congress-bounces-back/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Admin]]></dc:creator>
		<pubDate>Wed, 16 Dec 2020 10:52:39 +0000</pubDate>
				<category><![CDATA[தேசிய அரசியல்]]></category>
		<category><![CDATA[bjp]]></category>
		<category><![CDATA[congress]]></category>
		<category><![CDATA[Rajasthan UBL]]></category>
		<guid isPermaLink="false">https://desiyamurasu.com/?p=3600</guid>

					<description><![CDATA[<p>ராஜஸ்தானில் நடைபெற்ற நகராட்சித் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. சுயேச்சைகள் இரண்டாவது இடத்தையும்,பாரதிய ஜனதா கட்சி மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். ராஜஸ்தானில் 50 நகராட்சிகளுக்கான தேர்தல் நடந்தது. மொத்தம் 1,775 வார்டுகளுக்கு நடந்த தேர்தலில் 620 இடங்களைப் பெற்று ஆளும் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. பாரதிய ஜனதா கட்சியை மக்கள் மூன்றாவது இடத்துக்குத் தள்ளினர். 596 இடங்களில் வென்ற சுயேச்சைகள் இரண்டாவது இடத்தையும், 548 வார்டுகளில் வென்று பாரதிய ஜனதா கட்சி மூன்றாவது இடத்தையும் [&#8230;]</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/bjp-finishes-third-in-rajasthan-urban-local-body-polls-congress-bounces-back/">ராஜஸ்தான் நகராட்சித் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி : 3 -வது இடத்துக்கு தள்ளப்பட்ட பா.ஜ.க.</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>ராஜஸ்தானில் நடைபெற்ற நகராட்சித் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. சுயேச்சைகள் இரண்டாவது இடத்தையும்,பாரதிய ஜனதா கட்சி மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.</p>



<p>ராஜஸ்தானில் 50 நகராட்சிகளுக்கான தேர்தல் நடந்தது. மொத்தம் 1,775 வார்டுகளுக்கு நடந்த தேர்தலில் 620 இடங்களைப் பெற்று ஆளும் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. பாரதிய ஜனதா கட்சியை மக்கள் மூன்றாவது இடத்துக்குத் தள்ளினர். 596 இடங்களில் வென்ற சுயேச்சைகள் இரண்டாவது இடத்தையும், 548 வார்டுகளில் வென்று பாரதிய ஜனதா கட்சி மூன்றாவது இடத்தையும் பிடித்தன.</p>



<p>பாஜக கோட்டை என கருதப்பட்ட பல நகராட்சிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. ஜெய்ப்பூரில் 10 வார்டுகளில், 6 வார்டுகளை காங்கிரஸ் கைப்பற்றியது.</p>



<p>நகராட்சி தேர்தலில் அமோக வெற்றி பெற்றது குறித்து அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் ட்விட் செய்துள்ளார். அதில், காங்கிரஸ் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த அனைவருக்கும்,கட்சியின் வெற்றிக்குக் கடினமாக உழைத்த காங்கிரஸ் தொண்டர்களுக்கும் நன்றி தெரிவிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/bjp-finishes-third-in-rajasthan-urban-local-body-polls-congress-bounces-back/">ராஜஸ்தான் நகராட்சித் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி : 3 -வது இடத்துக்கு தள்ளப்பட்ட பா.ஜ.க.</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://desiyamurasu.com/news-india/bjp-finishes-third-in-rajasthan-urban-local-body-polls-congress-bounces-back/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>வெறுப்பின் உச்சத்தில் இந்திய ஜனநாயகம் : காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடும் விமர்சனம்</title>
		<link>https://desiyamurasu.com/news-india/indian-democracy-is-being-hollowed-out/</link>
					<comments>https://desiyamurasu.com/news-india/indian-democracy-is-being-hollowed-out/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Admin]]></dc:creator>
		<pubDate>Fri, 30 Oct 2020 05:38:43 +0000</pubDate>
				<category><![CDATA[தேசிய அரசியல்]]></category>
		<category><![CDATA[bjp]]></category>
		<category><![CDATA[congress]]></category>
		<category><![CDATA[sonia gandhi]]></category>
		<guid isPermaLink="false">https://desiyamurasu.com/?p=2846</guid>

					<description><![CDATA[<p>இன்றைய அரசியல் நிலைமையின் போக்கு மற்றும் அதன் ஆபத்தை எச்சரித்து, இந்துஸ்தான் டைம்ஸில் வெளியான காங்கிரஸ்  தலைவர் சோனியா காந்தியின் கட்டுரை: உலகின் மிகப் பெரிய ஜனநாயகம் இன்று கூனிக் குறுகிப் போயிருக்கிறது. பொருளாதாரமும் கடும் நெருக்கடியில் உள்ளது தெளிவாகத் தெரிகிறது.&#160;ஜனநாயக&#160;&#160;ஆட்சியின் அனைத்து தூண்களும் தாக்குதலுக்கு உள்ளாகின்றன. கருத்துச் சுதந்திரத்தின் அடிப்படை உரிமை, அடக்குமுறை மற்றும் அச்சுறுத்தல் மூலம் தடுக்கப்படுகிறது. கருத்துவேறுபாடுகள் வேண்டுமென்றே பயங்கரவாதம் என்றும், தேச விரோத நடவடிக்கை என்றும் முத்திரை குத்தப்படுகின்றன. குடிமக்கள் மற்றும் சமுதாயத்தின் உரிமைகளை&#160;நிலைநிறுத்துவதாக&#160;கருதப்படும் பல [&#8230;]</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/indian-democracy-is-being-hollowed-out/">வெறுப்பின் உச்சத்தில் இந்திய ஜனநாயகம் : காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடும் விமர்சனம்</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>இன்றைய அரசியல் நிலைமையின் போக்கு மற்றும் அதன் ஆபத்தை எச்சரித்து, இந்துஸ்தான் டைம்ஸில் வெளியான காங்கிரஸ்  தலைவர் சோனியா காந்தியின் கட்டுரை:</p>



<p>உலகின் மிகப் பெரிய ஜனநாயகம் இன்று கூனிக் குறுகிப் போயிருக்கிறது. பொருளாதாரமும் கடும் நெருக்கடியில் உள்ளது தெளிவாகத் தெரிகிறது.&nbsp;ஜனநாயக&nbsp;&nbsp;ஆட்சியின் அனைத்து தூண்களும் தாக்குதலுக்கு உள்ளாகின்றன. கருத்துச் சுதந்திரத்தின் அடிப்படை உரிமை, அடக்குமுறை மற்றும் அச்சுறுத்தல் மூலம் தடுக்கப்படுகிறது.</p>



<p>கருத்துவேறுபாடுகள் வேண்டுமென்றே பயங்கரவாதம் என்றும், தேச விரோத நடவடிக்கை என்றும் முத்திரை குத்தப்படுகின்றன. குடிமக்கள் மற்றும் சமுதாயத்தின் உரிமைகளை&nbsp;நிலைநிறுத்துவதாக&nbsp;கருதப்படும் பல நிறுவனங்கள் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளன.</p>



<p>தேசியப் பாதுகாப்பு என்ற போலியான அச்சுறுத்தல்கள் மூலம், மக்களின் உண்மையான&nbsp;பிரச்சினைகளிலிருந்து&nbsp;கவனம் திசைதிருப்பப்படுகிறது.</p>



<p>உண்மையிலேயே நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருந்தால், சமரசம் செய்து கொள்ளாமல் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால், பிரதமர் நரேந்திர மோடி அரசும், பாரதிய ஜனதா கட்சியும் ஒவ்வொரு போராட்டத்துக்குப் பின்னே சதி இருப்பதாகப் பார்க்கிறார்கள். அவர்களின் ஒவ்வொரு பார்வையும் எதிரானதாகவே இருக்கிறது.</p>



<p>எதிர்ப்பாளர்கள் மீது புலனாய்வு அமைப்புகளைக் கட்டவிழ்த்துவிடுவது, ஊடகங்கள் மற்றும் இணையத்தின் வழியே பொய் பிரச்சாரம் செய்வது மூலம் இந்திய ஜனநாயகம் வெறுக்கப்படுகிறது. காவல்துறை, அமலாக்கப் பிரிவு,&nbsp;சிபிஐ,&nbsp; தேசிய புலனாய்வு&nbsp;ஏஜென்சி&nbsp;மற்றும் போதைப் பொருள் தடுப்புத் துறை அரசியல் எதிரிகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுகிறது. இனியும் அதிகார துஷ்பிரயோகம் செய்வதற்கு மோடி அரசுக்கு ஒன்றும் இல்லை. இந்த அமைப்புகள் எல்லாம் இப்போது பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சகம் போடும் ஆட்டத்துக்கு ஆடிக் கொண்டிருக்கின்றன.</p>



<p>அரசியல் அமைப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டே அரசு அதிகாரத்தைப் பயன்படுத்தவேண்டும். நிறுவப்பட்ட ஜனநாயக மரபுகளை மதிக்கவேண்டும். எவ்வித பாகுபாடு இன்றி அனைத்து குடிமக்களின் நலனுக்காக அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டும். அடுத்ததாக, அரசியல் எதிரிகளுக்கு எதிராக அரசு இயந்திரத்தைப் பயன்படுத்தக் கூடாது. சுதந்திரத்துக்குப் பிறகு இதுவரை எந்த அரசாங்கமும் செய்யாத அடிப்படை விதி மீறலை மோடி அரசு தொடர்ந்து செய்து வருகிறது.</p>



<p>முதல் 5 ஆண்டு ஆட்சியில் இந்தியாவில் உள்ள&nbsp;எதிர்க்கட்சிகளை&nbsp;எல்லாம்&nbsp;எதிரிகளாகச்&nbsp;சித்தரித்தனர். போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது வழக்குப் போடுவது பாஜக&nbsp; அரசியலாக இருந்தது.&nbsp; கடந்த 2016 ஆம் ஆண்டு டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் இளம் மாணவர்கள் மீது தேசத்துரோக&nbsp;வழக்குகளைத்&nbsp;தொடுத்ததிலிருந்து ஆரம்பமானது. இதனைத் தொடர்ந்து பிரபல சமூக செயற்பாட்டாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் அறிவுஜீவிகள் மீது கடுமையான&nbsp;வழக்குகளை&nbsp;தொடர்ந்தனர். முந்தைய ஆட்சிகளில் இது போன்று நிகழ்ந்ததில்லை.&nbsp;</p>



<p>பாஜகவுக்கு எதிரான போராட்டங்களை எல்லாம் இந்தியாவுக்கு எதிரான சதி என முத்திரை குத்துவது மோடி அரசின் வாடிக்கையாகிப் போனது. குடியுரிமை திருத்தச் சட்டம், உத்தேசிக்கப்பட்டுள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு போன்ற பெரிய அளவிலான போராட்டங்களை மோடி அரசு சதி என்றே கட்டமைத்தது.&nbsp;</p>



<p>இத்தகைய போராட்டங்களை ஆரம்பத்தில் பெண்களே முன்னெடுத்தனர். அதன்பின்,&nbsp;ஷாஹீன்பாக்&nbsp;மற்றும் எண்ணற்ற போராட்டங்களிலும் ஆண்கள் ஆதரவு கொடுப்பவர்களாகவே இருந்தனர். இந்தப் போராட்டங்களில் அரசியலமைப்பு, தேசியக் கொடி உள்ளிட்ட நமது தேசிய&nbsp;சின்னங்களைப்&nbsp; பயன்படுத்தியது பெருமைக்குரியதாகும்.</p>



<p>இந்தப் போராட்டத்துக்கு, அரசியல் கட்சிகளைத் தாண்டி சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் அமைப்புகள் ஆதரவு தெரிவித்தனர். ஆனால், இந்த மாபெரும் போராட்டத்தை மோடி அரசு கண்டுகொள்ளவே இல்லை. மாறாக, டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில்&nbsp;இதனைப்&nbsp;பிரச்சினையாக்கினார்கள். போராட்டம் நடத்துவோர் மீது தாக்குதல் நடத்துமாறு மத்திய நிதித்துறை இணை அமைச்சரும், மத்திய&nbsp;உள்துறை&nbsp;இணை அமைச்சரும் உத்தரவிட்டனர்.</p>



<p>மற்ற டெல்லி பாஜகவினர், போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்துமாறு வெளிப்படையாக அச்சுறுத்தினர். வடகிழக்கு டெல்லியில் கலவரம் ஏற்படுவதற்கு ஆளும் கட்சியே காரணமாக இருந்தது. பிப்ரவரியில் நடந்த இந்த கலவரத்தை அடக்க மத்திய அரசு ஆர்வம் காட்டவில்லை.</p>



<p>சில மாதங்கள் கழித்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எல்லாம் நாட்டுக்கு&nbsp;எதிராகச்&nbsp;சதி செய்ததாக மோடி அரசு எல்லை மீறி அபாண்டமாகக் குற்றம் சாட்டியது. இதனையடுத்து, விசாரணையே இன்றி 700 வழக்குகள் பதியப்பட்டன. நூற்றுக்கணக்கானோர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். சட்டவிரோத நடவடிக்கை தடுப்புச் சட்டத்தின் கீழ் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். உலகம் முழுவதும் அறியப்பட்ட பிரபல சமுதாய தலைவர்கள் தான் இந்த போராட்டம் கலவரமாக மாற&nbsp;மூளையாகச்&nbsp;செயல்பட்டதாக பாஜக அரசு குற்றம் சாட்டியது. இதே தலைவர்கள் காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராகவும் போராடியவர்கள் தான். ஆனால், அவர்கள் மீது வகுப்புவாத கலவரத்தை ஏற்படுத்தி தேசத்துக்கு&nbsp;எதிராகச்&nbsp;சதி செய்ததாக&nbsp;வழக்குத்&nbsp;தொடுக்கிறார்கள். இது ஜனநாயகத்துக்கு பெரும் ஆபத்தாகும்.</p>



<p>ஹத்ராஸில்&nbsp;இளம்பெண் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டபின், உடலை உத்தரப்பிரதேச காவல்துறையினரே எரித்தனர். அந்த பெண்ணின் குடும்பத்தினர் நீதி&nbsp;கேட்டுக்&nbsp;கதறி அழுகின்றனர். எதற்கும் உத்தரப்பிரதேச அரசு செவிசாய்க்கவில்லை. ஆனால்,&nbsp; &nbsp;நிர்பயா&nbsp;சம்பவத்தில் நீதி கிடைக்க அப்போதைய காங்கிரஸ் ஆட்சி அரும்பாடுபட்டதும், நேர்மையாக நடந்து கொண்டதும் நாட்டு&nbsp;மக்களுக்குத்&nbsp;தெரியும்.</p>



<p>சுதந்திரம் மற்றும் பேச்சுரிமையின் அடிப்படை தத்துவத்தைக் குறைத்து மதிப்பிடுவது அரசியலிலும் சமுதாயத்திலும் நஞ்சை விதைப்பதற்குச் சமம். பாஜக மட்டுமல்ல, எந்தவொரு அரசியல் கட்சியும் இந்திய அரசியல் சாசனத்துக்குட்பட்டு கொள்கையை வகுத்துக் கொள்ள உரிமை உண்டு. ஒவ்வொருவருக்கும் வாக்குரிமையையும், பேச்சு சுதந்திரத்தையும் இந்தியனின் அடிப்படை உரிமை என அரசியல் சாசனம் வலியுறுத்துகிறது. பொதுமக்களுக்கு இடையூறின்றி அமைதியாகப் போராடவும் அரசியல் சாசனம் அனுமதிக்கிறது. அப்படியிருக்கும் போது, மக்களுக்காக முன் நிற்கும் சமுதாயத் தலைவர்கள் மீது&nbsp;சதியாளர்கள்&nbsp;என்றும், தீவிரவாதிகள் என்றும் சாயம் பூசுவது முறையல்ல.</p>



<p>தன்னை 130 கோடி மக்களின்&nbsp;பிரதிநிதியாக&nbsp;பிரதமர் மோடி அடிக்கடி கூறிக்கொள்கிறார். ஆனால்,&nbsp;எதிர்க்கட்சிகளையும், எதிர் கருத்துள்ளவர்களையும், தங்களுக்கு வாக்களிக்காதவர்களையும் ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்ட இரண்டாம்&nbsp;தரக்&nbsp;குடிமக்களாக நடத்துகிறார். அவர்கள் மட்டும் தான் நாடு என்று நினைக்கிறார்கள். இவர்களுக்கும் சேவை செய்யவே அரசாங்கங்கள் உள்ளன. அவர்களை இழிவுபடுத்துவதற்கு அல்ல.</p>



<p>நமது அரசியலமைப்பு மற்றும் சுதந்திர இயக்கத்தால் உருவாக்கப்பட்ட&nbsp;ஜனநாயகத்தை&nbsp;பின்பற்றினால் மட்டுமே இந்த நாடு செழிக்கும். இவ்வாறு சோனியா காந்தி கூறியுள்ளார்.</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/indian-democracy-is-being-hollowed-out/">வெறுப்பின் உச்சத்தில் இந்திய ஜனநாயகம் : காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடும் விமர்சனம்</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://desiyamurasu.com/news-india/indian-democracy-is-being-hollowed-out/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>சுதந்திரத்துக்குப் போராடிய குடும்பத்தைச் சேர்ந்த எனக்கு குடியுரிமை மறுப்பா? : பொங்கும் பேராசிரியர் மாஜ் பின் பிலால்</title>
		<link>https://desiyamurasu.com/news-india/1st-person-i-an-indian-muslim-refuse-to-be-certified-as-a-citizen/</link>
					<comments>https://desiyamurasu.com/news-india/1st-person-i-an-indian-muslim-refuse-to-be-certified-as-a-citizen/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Admin]]></dc:creator>
		<pubDate>Wed, 21 Oct 2020 07:54:45 +0000</pubDate>
				<category><![CDATA[தேசிய அரசியல்]]></category>
		<category><![CDATA[bjp]]></category>
		<category><![CDATA[Citizenship Amendment Act]]></category>
		<category><![CDATA[Majlis-I-Ahrar]]></category>
		<guid isPermaLink="false">https://desiyamurasu.com/?p=2725</guid>

					<description><![CDATA[<p>கடுமையான குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்துப் போராடியதால் ஆர்எஸ்எஸ் பின்புலத்தில் செயல்படும் அரசு என்னை இந்தியக் குடிமகனாக அங்கீகரிக்க மறுக்கிறது என பேராசிரியரும், கட்டுரையாளருமான மாஜ் பின் பிலால் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் ஸ்க்ரோல் இணையத்தில் எழுதிய கட்டுரை: பிரிவினையின்போது, பாகிஸ்தானை விட இந்தியாவையே தேர்ந்தெடுக்க முஸ்லிம்கள் விரும்பியதாக சமூக செயற்பாட்டாளர் ஹர்ஸ் மந்தர் கூறியிருக்கிறார். என் குடும்பத்தைப் பொறுத்தவரை இது நிகழவில்லை. பிரிவினையின்போது, எங்கள் குடும்பம் லூதியானாவில் இருந்தது. அப்போது கலவரம் மூண்டபோது, [&#8230;]</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/1st-person-i-an-indian-muslim-refuse-to-be-certified-as-a-citizen/">சுதந்திரத்துக்குப் போராடிய குடும்பத்தைச் சேர்ந்த எனக்கு குடியுரிமை மறுப்பா? : பொங்கும் பேராசிரியர் மாஜ் பின் பிலால்</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>கடுமையான குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்துப் போராடியதால் ஆர்எஸ்எஸ் பின்புலத்தில் செயல்படும் அரசு என்னை இந்தியக் குடிமகனாக அங்கீகரிக்க மறுக்கிறது என பேராசிரியரும், கட்டுரையாளருமான மாஜ் பின் பிலால் குற்றம் சாட்டியுள்ளார்.</p>



<p>இது தொடர்பாக அவர் ஸ்க்ரோல் இணையத்தில் எழுதிய கட்டுரை:</p>



<p>பிரிவினையின்போது, பாகிஸ்தானை விட இந்தியாவையே தேர்ந்தெடுக்க முஸ்லிம்கள் விரும்பியதாக சமூக செயற்பாட்டாளர் ஹர்ஸ் மந்தர் கூறியிருக்கிறார். என் குடும்பத்தைப் பொறுத்தவரை இது நிகழவில்லை. பிரிவினையின்போது, எங்கள் குடும்பம் லூதியானாவில் இருந்தது. அப்போது கலவரம் மூண்டபோது, முஸ்லீம் பாகிஸ்தானை விட்டுவிட்டு மதச்சார்பற்ற இந்தியாவை எங்கள் குடும்பம் தேர்வு செய்தது.</p>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img loading="lazy" decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/uniontcrkd-1576939642.jpg" alt="" class="wp-image-2728" width="547" height="393" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/uniontcrkd-1576939642.jpg 599w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/uniontcrkd-1576939642-300x215.jpg 300w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/uniontcrkd-1576939642-120x86.jpg 120w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/uniontcrkd-1576939642-350x250.jpg 350w" sizes="auto, (max-width: 547px) 100vw, 547px" /><figcaption><strong>Habib-ur-Rehman Ludhianvi and his son Saeed-ur-Rehman Ludhianvi with Jawaharlal Nehru.</strong></figcaption></figure></div>



<p>மஜ்லிஸ் இ அஹ்ரார் கட்சியின் 3 -வது தலைவராக என் தாத்தா மவுலானா ஹபிப் உர் ரஹ்மான் இருந்துள்ளார். 1937 ஆம் ஆண்டு நடந்த மாகாண தேர்தலில் மஜ்லிஸ் இ அஹ்ரார் கட்சி பஞ்சாபில் வெற்றி பெற்றது. காஷ்மீர் மக்களுக்கு எதிராக மன்னர் டோக்ரா கொண்டு வந்த சட்டங்களுக்கு எதிராக என் தாத்தா போராடினார். அவருடன் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பிரிட்டிஷ் அரசு என் தாத்தாவைக் கைது செய்து ஓராண்டு சிறையில் அடைத்தது.</p>



<p>மக்கள் விரோதச் சட்டங்கள் வரும்போதெல்லாம். அதனை எதிர்த்து என் தாத்தா சிறை சென்றார். 14 வருடங்களை அவர் சிறையிலேயே கழித்திருக்கிறார். அவரது வாரிசுகளும் மக்கள் பிரச்சினைகளுக்காக சிறையில் இருந்துள்ளனர்.</p>



<p>என் குடும்பத்தைப் போலவே நானும் இந்தியாவிலேயே இருக்க விரும்புகின்றேன். இளைஞர்களுக்குக் கல்வி கற்பிக்கும் பணியையும் செய்து வருகின்றேன். நான் இந்த நாட்டின் குடிமகன் என்று நிரூபிக்க வேண்டும் என்பதை நிராகரித்துவிட்டேன். பாஜகவின் பின்புலத்தில் இருந்து கொண்டு ஆர்எஸ்எஸ் அமைப்பு செய்யும் வேலை இது. ஆர்எஸ்எஸ் தலைவர்களைப் பற்றி எல்லாம் எங்களுக்குத் தெரியும். சுதந்திரப் போராட்டத்துக்காகச் சிறு துரும்பைக் கூட அவர்கள் எடுத்துப் போட்டதில்லை. இரு நாட்டு முறையைக் கொண்டு வர அவர்கள் முயல்கிறார்கள். மற்ற இந்தியர்களுக்குக் குடியுரிமை வழங்குவது குறித்தும் கேள்வி எழுப்புகிறார்கள்.</p>



<p>என் குடும்பமும், இந்த நாட்டின் எண்ணற்ற முஸ்லீம்களும் நாட்டுக்காக பல தியாகங்களைச் செய்துள்ளனர். ஆனால், வீர் சாவர்கர் அந்தமான் சிறையில் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு வெளியே வந்தார். என் குடும்பத்தினர் இந்தியர்கள் எல்லோரும் ஒருவரே என்று சொல்லி, சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு பல ஆண்டுகள் சிறையில் வாடியிருக்கின்றனர்.</p>



<p>மதச்சார்பற்ற இந்தியாவில் பாரபட்சமான குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவதை எதிர்த்துப் போராடினேன். இந்த சட்டம் மியான்மர் ரோங்கியாக்களையும், இலங்கைத் தமிழர்களையும் கவனத்தில் கொள்ளவில்லை. (உலகம் முழுவதும் உள்ள சிறுபான்மையினரை ஐ.நா சபை அங்கீகரித்துள்ளது).</p>



<p>எங்கள் அடையாளத்தையும், குடிமக்கள் என்பதற்கான ஆதாரத்தையும் கேட்பதால், தேசிய குடிமக்கள் பதிவேட்டை எதிர்க்கிறேன். என் முன்னோர்கள் தேர்வு செய்த மதச்சார்பற்ற பூமியில் இது போன்ற சட்டங்கள் கொண்டு வருவதை ஏற்கமாட்டேன். இதுபோன்ற பாரபட்சமான சட்டங்கள் கொண்டு வருவதை விட்டுவிட்டு, போதுமான வேலை வாய்ப்பு, நல்ல கல்வி மற்றும் சுகாதார வசதியை செய்து கொடுங்கள்.</p>



<p>இவற்றை மனதில் வைத்துத்தான் நான் அமைதியாகப் போராடினேன். இந்த சட்டங்களை முஸ்லீம்கள், இந்துக்கள், சீக்கியர்கள், தலித்துகள் என யாருமே விரும்பவில்லை. மனநிலை அச்சமின்றி இருக்க வேண்டும் என தாகூர் கூறுவார். இதைத்தான் நான் பின்பற்றிக் கொண்டிருக்கிறேன்.</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/1st-person-i-an-indian-muslim-refuse-to-be-certified-as-a-citizen/">சுதந்திரத்துக்குப் போராடிய குடும்பத்தைச் சேர்ந்த எனக்கு குடியுரிமை மறுப்பா? : பொங்கும் பேராசிரியர் மாஜ் பின் பிலால்</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://desiyamurasu.com/news-india/1st-person-i-an-indian-muslim-refuse-to-be-certified-as-a-citizen/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
	</channel>
</rss>
