• About Us
  • Privacy Policy
  • Contact Us
தேசிய முரசு - Desiya Murasu
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
தேசிய முரசு - Desiya Murasu
No Result
View All Result
Home தேசிய அரசியல்

விவசாயிகளை அழித்து, கார்பரேட்டுகளை ஆதரிக்கவே மோடி அரசின் ஒப்பந்த விவசாயம்!

by ஆ. கோபண்ணா
15/12/2020
in தேசிய அரசியல்
0
விவசாயிகளை அழித்து, கார்பரேட்டுகளை ஆதரிக்கவே மோடி அரசின் ஒப்பந்த விவசாயம்!
Share on FacebookShare on TwitterShare on WhatsAppShare On Email

விவசாய உத்தரவாதம் மற்றும் விவசாயப் பணிகள் சட்டத்தின் விவசாய ஒப்பந்தம், தனியார் நிறுவனங்களுக்குச் சாதமாகவே இருக்கும். குறிப்பிட்ட பயிர்களை மட்டும் விளைவிக்க, விவசாயிகளுடன் தனியார் நிறுவனங்கள் ஒப்பந்தம் போடுவார்கள். விலையையும் அவர்களே நிர்ணயிப்பார்கள். ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விலைக்கே தனியார் நிறுவனங்களுக்கு விளைபொருட்களை விவசாயிகள் விற்க வேண்டும். வேறு யாருக்கும் அதிக விலைக்கு விற்க முடியாது. இது குறைந்தபட்ச ஆதரவு விலை முறைக்கு முற்றிலும் மாறுபட்டதாகும். குறைந்தபட்ச ஆதரவு விலையைவிடத் தனியார் வர்த்தகர்கள் அதிக விலை கொடுத்தால், விளைபொருட்களை அவர்களுக்கு விவசாயிகள் விற்க முடியும். இனி அதுபோல் செய்ய முடியாது.

விவசாயிகளின் வருவாய்க்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை மூலம் செய்யப்படும் கொள்முதல் உத்தரவாதம் அளித்தது. ஒப்பந்த முறையைவிட இது விவசாயிகளுக்குப் பயனுள்ளதாக இருந்தது. பெரிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளும் போது, ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால், அவர்களை எதிர்த்து சட்டப்போராட்டம் நடத்தும் அளவுக்கு விவசாயிகளுக்கு வலிமை இல்லை. அதனால் தான் குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர வேண்டும் என்றும், கொள்முதல் கொள்கைகளை அரசு நல்ல முறையில் அமல்படுத்த வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.

சந்தைகளை ஒழுங்குபடுத்துவதன் மூலம், வெளிச்சந்தையில் தனியார் நிறுவனங்களை அனுமதித்தால், இடைத்தரகர்களின் ஆதிக்கத்தை ஊக்கப்படுத்துவதாக அமையும்.

குறைந்தபட்ச ஆதரவு விலை முறை உடனே முடிவுக்கு வரவில்லை என்றாலும், அரசே கொள்முதல் செய்யாவிட்டால் குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் என்பது வெறும் சம்பிரதாயமாகவே இருக்கும். இதுவரை, குறைந்தபட்ச ஆதரவு விலை மற்றும் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் மூலம் நிர்ணயிக்கப்படும் விளைபொருட்கள் விலை, வெளிச்சந்தையில் நிர்ணயிக்க வேண்டிய விலையின் சமிக்ஞையாக இருந்தது. இனி, வெளிச்சந்தையில் எவ்வளவு விலை வேண்டுமானாலும் நிர்ணயிக்கும் நிலை ஏற்படும். மேலும், சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் தங்கள் விளைபொருட்களைத் தொடர்ந்து குறைந்த விலைக்கே விற்கும் நிலையும் ஏற்படும்.

உதாரணமாக, கடந்த 2012-13 ஆம் ஆண்டு என்எஸ்எஸ்ஓ எனப்படும் தேசிய மாதிரி கணக்கெடுப்பு அலுவலகம் மேற்கொண்ட கணக்கெடுப்பில், 2012 ஆம் ஆண்டு கரிப் பருவத்தில் சிறு மற்றும் நடுத்தர விவசாயிகளிடம் இருந்து 50 சதவீதம் நெல் உள்ளூர் வர்த்தகர்களுக்கு விற்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி பார்த்தால், நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 1,150 என்ற வீதத்தில் உள்ளூர் வர்த்தகர்களுக்குச் சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் விற்றுள்ளனர். அதேசமயம், 2 ஹெக்டேர் நிலத்துக்கு அதிகமாக வைத்திருக்கும் பெரிய விவசாயிகள், குவிண்டால் நெல் ரூ. 1,300 -க்கு விற்றுள்ளனர். 2012&13 ஆம் ஆண்டில் நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.1,250 நிர்ணயிக்கப்பட்டிருந்தது. சராசரியாகப் பார்த்தால், குறைந்தபட்ச ஆதரவு விலையைவிட குறைவான விலைக்கே நடுத்தர விவசாயிகள் விற்றுள்ளனர். அதேசமயம், பஞ்சாப் நடுத்தர விவசாயிகளோ, கடந்த 2012 ஆம் ஆண்டு, தாங்கள் அறுவடை செய்த நெல்லில் பாதியை மண்டிகளில் விற்றனர். 33 சதவீத நெல்லை உள்ளூர் வர்த்தகர்களிடம் விற்றனர். அதன்படி, பஞ்சாப் விவசாயிகளுக்கு நெல் குவிண்டாலுக்கு ரூ.1,500 கிடைத்தது. இது, அப்போது மாநில அரசால் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதரவு விலையைவிட 20 சதவிகிதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

விவசாய உற்பத்தி சந்தைக் குழுவின் விலை சமிக்ஞை இல்லாமல், சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் இந்த அளவு பேரம் பேசி விற்கும் நிலையைப் பெற்றிருக்க முடியாது. அதேசமயம், அதே ஆண்டில் உத்தரப்பிரதேச விவசாயிகளின் நிலை மாறுபட்டிருந்தது. உத்தரப்பிரதேச விவசாயிகள் 16 சதவிகிதம் மட்டுமே நெல் உற்பத்தி செய்திருந்தனர். இவற்றை 30 சதவிகிதம் மண்டிகள் மூலமும்,70 சதவிகிதம் உள்ளூர் வர்த்தகர்கள் மூலமும் விற்றனர். ஆனால், நெல் குவிண்டாலுக்கு ரூ.1,010 மட்டுமே கிடைத்தது. உத்தரப்பிரதேசத்தில் குறைந்த நெல் உற்பத்தி, பஞ்சாபைப் போல் விலை பாதுகாப்பை அளிக்கத் தவறிவிட்டது.

எவ்வாறு விலை நிர்ணயம் செய்வது?

பெரும் தொழில் அதிபர்களோடு கைகோர்த்து, பொதுத் துறை நிறுவனங்களைத் தனியாருக்கு விற்க மோடி அரசு தயாராகி வருகிறது. இதனைக் கருத்தில் கொண்டு, இந்த புதிய சட்டங்களைப் பார்த்தால் வியப்பு ஏதும் அளிக்காது. இதுபோன்ற ஜனநாயகத்துக்கு எதிரான சட்டங்களை இயற்ற கொரோனா காலம் அரசுக்கு வாய்ப்பளித்திருக்கிறது. விவசாயம் மாநில அரசின் வரையறைக்குள் வந்தாலும், முட்டுக்கட்டை ஏற்படுமோ என்ற அச்சத்தில் இது போன்ற சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. விவசாயிகளை தெருவில் இறங்கிப் போராட வைத்தது இந்த ஒரு கேள்விதான்:
விவசாயிகளின் பாதுகாப்புக் கருதி இந்த சட்டங்கள் திரும்பப் பெறப்படுமா? என்பதுதான்.

கோதுமை மற்றும் நெல் கொள்முதல் 40 சதவீதம் செய்யப்படும்போது, அனைத்து விவசாயிகளுக்கும் நல்ல விலை கிடைக்கும் என்ற உத்தரவாதம் தரப்படுகிறது. குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிப்பதன் மூலம், அரசின் கொள்முதலும் தானாகச் சிறந்த முறையில் அமலாகும். விவசாய உற்பத்தி சந்தைக் குழு முறையை ஒழித்துவிட்டு, தனியார் நிறுவனங்களுக்கு வாய்ப்புக் கொடுத்தால் பெரும்பாலான விவசாயிகளுக்கு இழப்பையே ஏற்படுத்தும். இது இந்தியாவின் முறைப்படுத்தப்பட்ட பயிர் சாகுபடி திட்டத்தைப் பாதிக்கும். மண்டிகளுக்கு வெளியே விளைபொருட்களை விற்க அனுமதிப்பதால் மட்டும் எளிதாகக் கையாண்டுவிட முடியாது.

இந்த சட்டங்கள் பொருளாதார ரீதியாக நலிவடைந்துள்ள விவசாயிகளைப் பாதிக்கக்கூடிய வகையில் உள்ளன. விவசாயிகளின் நண்பன் என்று சொல்லிக் கொண்டே, மில்லியன் கணக்கான பொய்களைச் சொல்லி ஏழை விவசாயிகளை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர்.

Tags: FarmersModi Government
Previous Post

யார் கொடுப்பார் விலை? : விவசாயிகளைப் பொய் சொல்லி ஏமாற்றும் மோடி அரசு

Next Post

ராஜஸ்தான் நகராட்சித் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி : 3 -வது இடத்துக்கு தள்ளப்பட்ட பா.ஜ.க.

ஆ. கோபண்ணா

ஆ. கோபண்ணா

Next Post
ராஜஸ்தான் நகராட்சித் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி : 3 -வது இடத்துக்கு தள்ளப்பட்ட பா.ஜ.க.

ராஜஸ்தான் நகராட்சித் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி : 3 -வது இடத்துக்கு தள்ளப்பட்ட பா.ஜ.க.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
பெருந்தலைவர் காமராஜரின் பொற்கால ஆட்சி சரித்திரம் படைத்த சாதனைகள்!

பெருந்தலைவர் காமராஜரின் பொற்கால ஆட்சி சரித்திரம் படைத்த சாதனைகள்!

15/07/2020
நாட்டுப்பற்றையும், மொழிப்பற்றையும் தமது இரு விழிகளாகக் கொண்ட மகாகவி சுப்பிரமணிய பாரதி!

நாட்டுப்பற்றையும், மொழிப்பற்றையும் தமது இரு விழிகளாகக் கொண்ட மகாகவி சுப்பிரமணிய பாரதி!

11/09/2020

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

22/07/2020
காமராஜர் தாலாட்டு!

காமராஜர் தாலாட்டு!

15/07/2020

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

13
ஆதியின் கடிதம்

ஆதியின் கடிதம்

11
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

10
மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

8
எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

21/11/2021
வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

21/11/2021

Recent News

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

21/11/2021
வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

21/11/2021
தேசிய முரசு – Desiya Murasu

Follow Us

  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

Recent News

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
  • About Us
  • Privacy Policy
  • Contact Us

© 2020 DesiyaMurasu.com

No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

© 2020 DesiyaMurasu.com

  • facebook
  • twitter
  • whatsapp