• About Us
  • Privacy Policy
  • Contact Us
தேசிய முரசு - Desiya Murasu
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
தேசிய முரசு - Desiya Murasu
No Result
View All Result
Home ஏவுகணைகள்

மத்திய பா.ஜ.க. அரசே! எல்.ஐ.சி.யின் பங்குகளை தனியாருக்கு விற்காதே! பண்டித நேரு வளர்த்த பொதுத்துறையை சீர்குலைக்காதே!கே.எஸ்.அழகிரி கடும் கண்டனம்!

by Admin
05/09/2020
in ஏவுகணைகள்
0
தமிழகத்தில் நீட் தேர்வை அனுமதிக்க மாட்டோம்: தலைவர் கே.எஸ். அழகிரி அறிக்கை  – 25-07-2020
Share on FacebookShare on TwitterShare on WhatsAppShare On Email

சுதந்திர இந்தியாவில் 1956 ஆம் ஆண்டு இந்தியாவில் இயங்கி வந்த அனைத்து ஆயுள் காப்பீட்டுத் தொழிலும் பிரதமர் நேரு எடுத்த பெருமுயற்சியால் நாட்டுடமை ஆக்கப்பட்டது. அந்நிய கம்பெனிகளின் வணிகம் இதில் அடக்கம். அதே ஆண்டு செப்டம்பர் மாதம் 1 ஆம் நாள் ஆயுள் காப்பீட்டுக் கழகம் செயல்பட தொடங்கியது. மக்களுக்கு பாதுகாப்பு எண்ணமும், சேமிப்பு பழக்கமும் வளர இந்த துறை பெரும் உதவியாக இருந்தது. மக்களின் சேமிப்பு பணம் நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்கு பயன்பட்டது. குறிப்பாக கிராமப்புற மக்களுக்கும், மத்திய தர வர்க்கத்தினருக்கும் பயன்படும் பல சேமிப்பு திட்டங்களை ஆயுள் காப்பீட்டுத் துறை சிறப்பாக செய்து வருகிறது. ஐந்தாண்டு திட்டங்களை வெற்றிகரமாக செய்வதற்கு காப்பீட்டுத் துறை கணிசமான அளவுக்கு நிதியுதவி செய்திருக்கிறது. மத்திய அரசின் நிதி பற்றாக்குறையை சமாளிக்க தற்காலிக கடன் கொடுத்து இந்த நிறுவனம் உதவியிருக்கிறது. தேசிய காப்பீட்டுக் கழகத்தை நாட்டுடமை ஆக்கியதன் பலனை கடந்த 65 ஆண்டுகளாக நமது நாடு அனுபவித்து வருகிறது.

இந்நிலையில், பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்பதில் மத்திய பா.ஜ.க. அரசு தீவிரம் காட்டி வருகிறது. அதேபோல, எல்.ஐ.சி பங்கு விற்பனையை அரசு முன் மொழிந்துள்ள சூழலில் எல்.ஐ.சி தொடங்கிய நாள் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டது. அரசின் முடிவு, தேச பொருளாதாரத்திற்கோ, இன்சூரன்ஸ் துறையின் எதிர்காலத்திற்கோ நல்லதல்ல.

200 ஆண்டு கால இன்சூரன்ஸ் துறை வரலாற்றை திரும்பிப் பார்க்கும் போது இந்த 64 ஆண்டுகள் மட்டுமே அது தேசம் – மக்கள் நலன் என்ற நோக்கோடு செயல்பட்டு வந்துள்ளது. விடுதலை இந்தியாவிலும் சில ஆண்டுகள் அன்னிய, தனியார் நிறுவனங்கள் இயங்கிக் கொண்டிருந்தன.

அன்றைய பிரதமர் ஜவகர்லால் நேரு, நிதியமைச்சர் சிந்தாமணி தேஷ்முக் ஆகியோர் எல்.ஐ.சியின் இலக்குகளை அறிவித்தனர். அவற்றில் முக்கியமான மூன்று. காப்பீட்டு பாதுகாப்பு மூலை முடுக்குக்கெல்லாம் எடுத்துச் செல்லப்பட வேண்டும்,இன்சூரன்ஸ் துறையின் மிக முக்கியமான நோக்கமான நுகர்வோருக்கான வாக்குறுதியை தவறாது நிறைவேற்றுவது, மக்கள் சேமிப்பு மக்கள் நலனுக்கே என தேச நிர்மாணப் பணிகளுக்கு பயன்படுத்துவது ஆகியவை ஆகும்.

64 ஆண்டு பயணம் முடிவடையும் தருவாய் இது. எந்த இலக்குகளுக்காக எல்.ஐ.சி உருவாக்கப்பட்டதோ அதை இக் காலத்தில் சிறப்பாக ஈடேற்றியுள்ளது. இருந்தாலும் 1999 ல் இருந்து மீண்டும் அன்னியர், தனியார் நிறுவனங்கள் இன்சூரன்ஸ் துறையில் அனுமதிக்கப்பட்டன. இப்போது களத்தில் 24 தனியார் ஆயுள் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் உள்ளன. ஆனாலும் எல்.ஐ.சியின் செயல்பாடுகள் எந்த வகையிலும் தனியார் நிறுவனங்களுக்கு மேம்பட்டதாகவே உள்ளன. இதோ அதன் செயல்பாட்டிற்கான ஆதாரங்கள்.

எல்.ஐ.சி 42 கோடி பாலிசிகளைக் கொண்டிருக்கிற உலகத்தின் தனிப் பெரும் நிறுவனமாக உள்ளது. இந்தியா தவிர்த்து சீனா மக்கள் தொகை மட்டுமே இந்த பாலிசிகளின் எண்ணிக்கையை விட அதிகம்.

1956 ல் அரசின் ரூ.5 கோடி முதலீட்டோடு துவங்கப்பட்ட எல்.ஐ.சிக்கு அதன் பின் கூடுதல் முதலீடே தேவைப்படவில்லை. 2011 ல் சட்ட நியதிகளுக்காக ரூ.100 கோடிகளாக உயர்த்தப்பட்டது. ஆனால் இந்த ரூ.100 கோடி முதலீட்டிற்கு அரசுக்கு கடந்த ஆண்டு கிடைத்துள்ள டிவிடெண்ட் மட்டுமே ரூ.2600 கோடிகள். வரிகளாக சுமார் ரூ.10,000 கோடிகள். ஒவ்வோர் ஐந்தாண்டுத் திட்டத்திற்கும் பல லட்சம் கோடி ரூபாய்கள். நடப்பு 13 வது திட்ட காலத்தின் முதலாண்டில் மட்டும் ரூபாய் 7 லட்சம் கோடிகளுக்கு மேல் வழங்கப்பட்டுள்ளது. எல்.ஐ.சியின் சொத்து மதிப்பு ரூ.32 லட்சம் கோடிகள் ஆகும். ரயில்வே, நெடுஞ்சாலை, குடிநீர், மின்சாரம் போன்ற ஆதாரத் தொழில்களுக்காக பல்லாயிரம் கோடிகளை எல்.ஐ.சி நிதியாதாரங்களாக வழங்கி வருகிறது.

வழக்கமாக 25 ஆண்டுகளாக அரசு நிறுவனங்களின் தனியார் மயத்திற்கு முன் வைக்கப்பட்டு வரும் நட்டம், திறமையின்மை, நுகர்வோர் தெரிவு, வணிகப் பரவல் ஆகிய நான்கு காரணங்களுமே பொருந்தாது. ஆகவே பங்குச் சந்தையின் சில்லரை முதலீட்டாளர்களின் நலன், பங்குச் சந்தையின் செபி போன்ற அமைப்புகளின் கண்காணிப்பால் வெளிப்படைத் தன்மை போன்ற காரணங்கள் முன் வைக்கப்படுகின்றன.

ஆனால், இவையும் உண்மையான காரணங்கள் இல்லை. சில்லரை முதலீட்டாளர்கள் கைகளில் உள்ள பங்குகள் விரைவில் நிறுவன முதலீட்டாளர்கள் கைகளுக்கு போய் விடும் என்பதே ஏற்கெனவே பங்கு விற்பனைக்கு ஆளான அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களின் அனுபவம். ‘செபி’ கண்காணிப்பை மீறி அடுத்தடுத்து எவ்வளவு மோசடிகள் பங்குச் சந்தையில் நடந்திருக்கிறது என்பதற்கும் நிறைய அனுபவங்கள் உள்ளன.

எனவே, மத்திய பா.ஜ.க. அரசு இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்களின் முதுகெலும்பாக விளங்குகிற ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் பங்குகளை விற்பனை செய்கிற முடிவை உடனடியாக கைவிட வேண்டும். இந்த முடிவு மக்கள் மத்தியில் அச்சத்தை உருவாக்கி, ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் மீது இருக்கிற நம்பகத்தன்மையை சீர்குலைத்து விடும். மக்கள் சேவையில் மகத்தான பணி செய்து வரும் ஆயுள் காப்பீட்டுக் கழகத்தை காப்பாற்றுவதற்கு அனைவரும் அணிதிரண்டு குரல் கொடுக்க வேண்டும். மத்திய அரசின் முயற்சியை முறியடித்து ஆயுள் காப்பீட்டுக் கழகத்தை காப்பாற்ற அனைத்து அரசியல் கட்சிகளும் முன்வர வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

Tags: BJP Govt.LIC
Previous Post

பூனைக்கு யார் மணி கட்டுவது?: தே.பா.ச-வுக்கு எதிராக குவியும் எதிர்ப்புகள்

Next Post

கப்பலோட்டிய தமிழரின் கடைசிக் காலம் - சின்னக்குத்தூசி

Admin

Admin

Next Post
கப்பலோட்டிய தமிழரின் கடைசிக் காலம் – சின்னக்குத்தூசி

கப்பலோட்டிய தமிழரின் கடைசிக் காலம் - சின்னக்குத்தூசி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

22/07/2020
ஃபேஸ்புக் ஆதரவுடன் பா.ஜ.க. தேர்தல் தில்லுமுல்லு: அம்பலப்படுத்திய அமெரிக்க பத்திரிகை

ஃபேஸ்புக் ஆதரவுடன் பா.ஜ.க. தேர்தல் தில்லுமுல்லு: அம்பலப்படுத்திய அமெரிக்க பத்திரிகை

18/08/2020
ராஜஸ்தான் நகராட்சித் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி : 3 -வது இடத்துக்கு தள்ளப்பட்ட பா.ஜ.க.

ராஜஸ்தான் நகராட்சித் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி : 3 -வது இடத்துக்கு தள்ளப்பட்ட பா.ஜ.க.

16/12/2020
ரூ.150 கோடி மதிப்பு ஓட்டலை அடிமாட்டு விலைக்கு வாஜ்பாய் அரசு விற்ற வழக்கு: சிபிஐ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

ரூ.150 கோடி மதிப்பு ஓட்டலை அடிமாட்டு விலைக்கு வாஜ்பாய் அரசு விற்ற வழக்கு: சிபிஐ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

19/09/2020

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

13
ஆதியின் கடிதம்

ஆதியின் கடிதம்

11
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

10
மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

8
எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

21/11/2021
வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

21/11/2021

Recent News

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

21/11/2021
வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

21/11/2021
தேசிய முரசு – Desiya Murasu

Follow Us

  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

Recent News

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
  • About Us
  • Privacy Policy
  • Contact Us

© 2020 DesiyaMurasu.com

No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

© 2020 DesiyaMurasu.com