• About Us
  • Privacy Policy
  • Contact Us
தேசிய முரசு - Desiya Murasu
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
தேசிய முரசு - Desiya Murasu
No Result
View All Result
Home ஏவுகணைகள்

பிரதமர் நேரு வளர்த்த பொதுத்துறை சொத்துக்களை தனியாருக்கு தாரைவார்க்கும் பா.ஜ.க. அரசு! பிரதமர் மோடியே! மக்கள் சொத்தை கார்ப்பரேட் நண்பர்களுக்கு விற்காதே! தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம்

by Admin
01/02/2021
in ஏவுகணைகள்
0
தமிழகத்தை சுடுகாடாக்கும் புதிய சூழலியல் சட்டம்! தலைவர் கே.எஸ். அழகிரி கடும் கண்டனம்!
Share on FacebookShare on TwitterShare on WhatsAppShare On Email

பிரதமர் நேரு ஆட்சி காலத்தில் பொதுத்துறை நிறுவனங்கள் இந்தியாவின் கோயில்கள் என்று கருதி வளர்த்தெடுக்கப்பட்டது. ஆனால், பிரதமர் மோடி ஆட்சிக் காலத்தில் பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துக்களை தனியாருக்கு தாரை வார்க்கிற முயற்சி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பொதுத்துறை நிறுவனங்களின் சொத்து, மக்களின் சொத்து. இதை தனியாருக்கு அடிமாட்டு விலைக்கு விற்பதை அனுமதிக்க முடியாது.

நிதிநிலை அறிக்கையில் ரூபாய் 1 லட்சத்து 75 ஆயிரம் கோடி பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை 2022 ஆம் ஆண்டிற்குள் விற்பதென இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.. பாரத் பெட்ரோலியம், ஏர் இந்தியா, கப்பல்துறை, ரயில்வே, இந்திய காப்பீட்டுக் கழகம் ஆகியவற்றின் சொத்துக்களை விற்று, இலக்கை அடைய இந்த நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீட்டின் பங்கை 49 சதவிகிதத்திலிருந்து 74 சதவிகிதமாக நிதிநிலை அறிக்கையில் உயர்த்தப்பட்டிருக்கிறது. இதைவிட இந்திய காப்பீட்டு கழகத்தை அழிக்கிற முயற்சி வேறு எதுவும் இருக்க முடியாது.

மத்திய அரசின் நிதி பற்றாக்குறை வரலாறு காணாத வகையில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கான 3.5 சதவிகிதத்தை விட 8 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது. இந்திய பொருளாதாரம் அதள பாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதை தடுப்பதற்காக ரூபாய் 12 லட்சம் கோடி கடன் திரட்டுவதென முடிவெடுக்கப்பட்டுள்ளது. சிறு, குறு, நடுத்தர தொழில்களை பாதுகாக்கவோ, விவசாயத்துறையை வளர்த்தெடுக்கவோ, நேரடி பயன்மாற்றத்தின் மூலம் ஏழை, எளியவர்களுக்கு நிவாரண உதவி வழங்கி, வாங்கும் சக்தியை அதிகரிக்கவோ நிதிநிலை அறிக்கையில் எந்த அறிவிப்பும் இல்லை.

கடந்த நிதிநிலை அறிக்கை உரையில், உர மானியம் ரூபாய் 71 ஆயிரத்து 309 கோடி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து ரூபாய் 65 ஆயிரம் கோடி உர மானியம் கூடுதலாக வழங்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால், இந்த அறிவிப்புகள் எதையும் செயல்படுத்தாத காரணத்தால் உர உற்பத்தி நிறுவனங்களுக்கு ஏப்ரல் 1, 2020 நிலவரப்படி வழங்க வேண்டிய ரூபாய் 48 ஆயிரம் கோடி உர மானியம் நிலுவையில் இருக்கிறது. இதனால் உர நிறுவனங்கள் விவசாயிகளுக்கு உரங்களை வழங்குவதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

அதேபோல, இந்திய உணவு கழகத்திற்கு வழங்க வேண்டிய உணவு மானியத்தை மத்திய அரசு வழங்காமல் இருக்கிறது. மார்ச் 31, 2018 அன்று உணவு மானியம் ரூபாய் 1 லட்சத்து 35 ஆயிரம் கோடியாக இருந்தது. அது மார்ச் 31, 2020 இல் ரூபாய் 2 லட்சத்து 42 ஆயிரம் கோடியாக உயர்ந்திருக்கிறது. இதனால் பொது விநியோகத்துறை மூலம் வழங்க வேண்டிய உணவு தானியங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. மேலும், மார்ச் 31, 2021 இல் இந்திய உணவு கழகத்திற்கு மத்திய அரசு வழங்க வேண்டிய உணவு மானியம் ரூபாய் 3 லட்சத்து 48 ஆயிரம் கோடியாக உயரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு காரணம் மத்திய அரசின் நிதி பற்றாக்குறை தான்.

இந்தியாவில் மோடி ஆட்சியில் 100 கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டில் மட்டும் ரூபாய் 13 லட்சம் கோடியாக அதிர்ச்சி தரும் வகையில் பலமடங்கு உயர்ந்திருக்கிறது. இந்த தொகையில் 1 சதவிகிதத்தை ஒதுக்கினால் ஒவ்வொரு ஏழைக்கும் ரூபாய் 1 லட்சம் நிதியுதவி வழங்க முடியும். ஆனால், ஏழைஎளியவர்களுக்காக நீலிக் கண்ணீர் வடிக்கிற பிரதமர் மோடி, அதானி – அம்பானியின் சொத்துக்களை பெருக்குவதற்கு தான் முனைப்பு காட்டுகிறார். எனவே, தலைவர் ராகுல்காந்தி கூறியபடி, மோடி ஆட்சி ஐந்தாறு தொழிலதிபர்களுக்கு ஆதாயமாகத் தான் செயல்படுகிறதே தவிர, 130 கோடி மக்களுக்காக செயல்படவில்லை என்பதை பா.ஜ.க.வின் நிதிநிலை அறிக்கையின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. இதன்மூலம் சமுதாயத்தில் பொருளாதார ஏற்றத்தாழ்வு பலமடங்கு கூடியிருக்கிறது.

பா.ஜ.க.வின் நிதிநிலை அறிக்கை ஏழை,எளியவர்களுக்கு எதிரானது. குறிப்பாக, இரண்டு மாதங்களாக கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி போராடுகிற விவசாய பெருங்குடி மக்களுக்கு ஆதரவாக நிதிநிலை அறிக்கையில் ஒரு வார்த்தை கூட கூறப்படாதது மோடி அரசின் விவசாய விரோதப் போக்கையே காட்டுகிறது. குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்யப்படுகிற வகையில் எந்த அறிவிப்பையும் நிதிநிலை அறிக்கையில் வெளியிட இந்த அரசு தயாராக இல்லை. பா.ஜ.க. ஒரு விவசாய விரோத அரசு மட்டுமல்ல, ஒட்டுமொத்த மக்களின் விரோத அரசாக இருப்பதையே இந்த நிதிநிலை அறிக்கை மேலும் உறுதிபடுத்துகிறது.

Tags: TNCC President K S Alagiri
Previous Post

மோடி ஆட்சியில் 100 கோடிஸ்வரர்கள் கடந்த ஆண்டில் மட்டும் குவித்த சொத்து மதிப்பு ரூ.13 லட்சம் கோடி! சமமற்ற வருவாய் மற்றும் சொத்து : பானைக்குள் யானையை அடைத்த மத்திய பட்ஜெட்

Next Post

உத்தமர் ஓமந்தூரார்

Admin

Admin

Next Post
உத்தமர் ஓமந்தூரார்

உத்தமர் ஓமந்தூரார்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

22/07/2020
ஃபேஸ்புக் ஆதரவுடன் பா.ஜ.க. தேர்தல் தில்லுமுல்லு: அம்பலப்படுத்திய அமெரிக்க பத்திரிகை

ஃபேஸ்புக் ஆதரவுடன் பா.ஜ.க. தேர்தல் தில்லுமுல்லு: அம்பலப்படுத்திய அமெரிக்க பத்திரிகை

18/08/2020
ராஜஸ்தான் நகராட்சித் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி : 3 -வது இடத்துக்கு தள்ளப்பட்ட பா.ஜ.க.

ராஜஸ்தான் நகராட்சித் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி : 3 -வது இடத்துக்கு தள்ளப்பட்ட பா.ஜ.க.

16/12/2020
ரூ.150 கோடி மதிப்பு ஓட்டலை அடிமாட்டு விலைக்கு வாஜ்பாய் அரசு விற்ற வழக்கு: சிபிஐ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

ரூ.150 கோடி மதிப்பு ஓட்டலை அடிமாட்டு விலைக்கு வாஜ்பாய் அரசு விற்ற வழக்கு: சிபிஐ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

19/09/2020

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

13
ஆதியின் கடிதம்

ஆதியின் கடிதம்

11
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

10
மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

8
எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

21/11/2021
வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

21/11/2021

Recent News

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

21/11/2021
வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

21/11/2021
தேசிய முரசு – Desiya Murasu

Follow Us

  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

Recent News

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
  • About Us
  • Privacy Policy
  • Contact Us

© 2020 DesiyaMurasu.com

No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

© 2020 DesiyaMurasu.com