<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Rights Archives - தேசிய முரசு - Desiya Murasu</title>
	<atom:link href="https://desiyamurasu.com/tag/rights/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://desiyamurasu.com/tag/rights/</link>
	<description>DesiyaMurasu – Daily Opinions &#38; Analysis on Latest News  &#124; Tamil News</description>
	<lastBuildDate>Tue, 16 Mar 2021 05:10:10 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9</generator>

<image>
	<url>https://desiyamurasu.com/wp-content/uploads/2020/07/cropped-FAV-copy-1-32x32.png</url>
	<title>Rights Archives - தேசிய முரசு - Desiya Murasu</title>
	<link>https://desiyamurasu.com/tag/rights/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>விவசாய சட்டங்களை திரும்பப் பெற பிரதமர் முடிவு செய்தபோது அம்பானியும் அதானியும் தடுத்தனர் : பாரதிய கிஸான் சங்க தலைவர் அதிர்ச்சி தகவல்</title>
		<link>https://desiyamurasu.com/news-india/joginder-singh-ugrahan-modi-ambani-adani-farm-laws-tomar/</link>
					<comments>https://desiyamurasu.com/news-india/joginder-singh-ugrahan-modi-ambani-adani-farm-laws-tomar/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Admin]]></dc:creator>
		<pubDate>Tue, 16 Mar 2021 05:10:07 +0000</pubDate>
				<category><![CDATA[தேசிய அரசியல்]]></category>
		<category><![CDATA[Agriculture]]></category>
		<category><![CDATA[Government]]></category>
		<category><![CDATA[Politics]]></category>
		<category><![CDATA[Rights]]></category>
		<guid isPermaLink="false">https://desiyamurasu.com/?p=4210</guid>

					<description><![CDATA[<p>3 விவசாயச் சட்டங்களைத் திரும்பப் பெற பிரதமர் மோடி முடிவு செய்தபோதும், அம்பானியும் அதானியும் கொடுக்கும் அழுத்தத்தால் அதனைச் செயல்படுத்த முடியவில்லை என்று பாரதிய கிஸான் சங்கத்தின் தலைவர் ஜோகீந்தர் சிங் உக்ராஹன் புதிய தகவலை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். பஞ்சாபில் ஜலந்தர் மாவட்டத்தில் நடந்த விவசாயிகள் ஒற்றுமை பேரணியில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது: நான் சொல்வதைக் கேட்டு நீங்கள் வியப்படைவீர்கள். மத்திய விவசாய அமைச்சர் டோமர் என்னிடம் தெரிவித்த விஷயத்தைக் கூறுகிறேன். 3 விவசாயச் [&#8230;]</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/joginder-singh-ugrahan-modi-ambani-adani-farm-laws-tomar/">விவசாய சட்டங்களை திரும்பப் பெற பிரதமர் முடிவு செய்தபோது அம்பானியும் அதானியும் தடுத்தனர் : பாரதிய கிஸான் சங்க தலைவர் அதிர்ச்சி தகவல்</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>3 விவசாயச் சட்டங்களைத் திரும்பப் பெற பிரதமர் மோடி முடிவு செய்தபோதும், அம்பானியும் அதானியும் கொடுக்கும் அழுத்தத்தால் அதனைச் செயல்படுத்த முடியவில்லை என்று பாரதிய கிஸான் சங்கத்தின் தலைவர் ஜோகீந்தர் சிங் உக்ராஹன் புதிய தகவலை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.</p>



<p>பஞ்சாபில் ஜலந்தர் மாவட்டத்தில் நடந்த விவசாயிகள் ஒற்றுமை பேரணியில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:</p>



<p>நான் சொல்வதைக் கேட்டு நீங்கள் வியப்படைவீர்கள். மத்திய விவசாய அமைச்சர் டோமர் என்னிடம் தெரிவித்த விஷயத்தைக் கூறுகிறேன். 3 விவசாயச் சட்டங்களைத் திரும்பப் பெற பிரதமர் மோடி தயாராக இருந்ததாகவும், மறுநாளே அம்பானியும் அதானியும் பிரதமரும் அழுத்தம் கொடுத்துத் திரும்பப் பெறவிடாமல் செய்துவிட்டதாகவும் தெரிவித்தார்.</p>



<p>நவீன இயந்திரங்களைப் புகுத்தியதால் விவசாயத் தொழிலாளர்கள் தங்கள் வேலைவாய்ப்பை இழந்தனர். இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட கடனால் தற்கொலை செய்து கொண்டார்கள். கடந்த 2014 ஆம் ஆண்டில் பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் 2 லட்சம் விவசாயிகள், விவசாயத்தை விட்டு வெளியேறி விட்டார்கள். இந்நிலையில், புதிய 3 விவசாயச் சட்டங்களைச் செயல்படுத்தினால், நினைத்துக்கூடப் பார்க்க முடியாத கஷ்டங்களை விவசாயிகள் அனுபவிக்க நேரிடும்.</p>



<p>டெல்லியில் நடந்த விவசாய போராட்டம் மற்றும் மனித உரிமை மீறல் குறித்த விவாதத்தை இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் விவாதித்தது எங்களுக்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றி. இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளில் இந்திய தூதரகங்களுக்கு முன்பு விவசாயிகளை ஆதரித்துப் போராட்டம் நடத்தியுள்ளனர். இது எங்களுக்குப் பலமாக இருக்கிறது.</p>



<p>தேசிய பிரச்சினையாகத் தொடங்கிய விவசாயிகள் பிரச்சினை, தற்போது உலகப் பிரச்சினையாக மாறியிருக்கிறது. மக்களின் ஏகோபித்த ஆதரவை விவசாயிகள் போராட்டம் பெற்றுள்ளது&#8221;என்றார்.</p>



<p>சம்யுக் கிஸான் மோர்ச்சா தலைவர் ருல்டு சிங் மான்ஸா கூறும்போது, &#8221; ஏற்கெனவே 2 உலகப் போரைப் பார்த்திருக்கிறோம். இப்போது நடக்கும் போர் வேறுபட்டது. இங்கிலாந்து நாடாளுமன்றமோ, அல்லது வேறு உலகத் தலைவர்களோ நம் ஆதரிப்பது பெரிய வெற்றி அல்ல. மக்கள் ஆதரவைத் திரட்டுவதே உண்மையான வெற்றி. உலக நாட்டுத் தலைவர்கள் நம்மை ஆதரிக்கிறார்கள். ஆனால், தங்கள் நாட்டு மக்களை வீதிக்கு வந்து போராட அந்த தலைவர்கள் அனுமதிக்கவில்லை. உண்மையான போராட்டமே ஜனவரி 26 ஆம் தேதிக்குப் பிறகு தான் தொடங்கியது&#8221; என்றார்.</p>



<p>தொழிலாளர் நலச் செயற்பாட்டாளர் நோடீஸ் கவுர் கூறும்போது, &#8221; மோடி அரசின் தொழிலாளர் சட்ட மசோதாவை அறிமுகப்படுத்தியபோது எதிர்த்ததால் என்னைக் கைது செய்தனர். கொரோனா காலத்தில் ஏராளமான தொழிலாளர்கள் வேலை இழந்தனர். நிலுவையில் உள்ள சம்பளத்தையும் தொழிலாளர்களுக்குத் தர மறுத்தனர். விவசாயிகள் போராட்டத்திலும் நான் தொடர்ந்து பங்கேற்று வருகிறேன். அதேசமயம், தொழிலாளர் சட்டத்தை எதிர்த்தும் தொடர்ந்து போராடுவேன்&#8221; என்றார்.</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/joginder-singh-ugrahan-modi-ambani-adani-farm-laws-tomar/">விவசாய சட்டங்களை திரும்பப் பெற பிரதமர் முடிவு செய்தபோது அம்பானியும் அதானியும் தடுத்தனர் : பாரதிய கிஸான் சங்க தலைவர் அதிர்ச்சி தகவல்</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://desiyamurasu.com/news-india/joginder-singh-ugrahan-modi-ambani-adani-farm-laws-tomar/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>2017-18 ஆம் ஆண்டில் 95 சதவீத தேர்தல் பத்திரம் மூலம் பாஜகவுக்கு நன்கொடை : ரூ. 1 கோடி பத்திரங்கள் அதிக அளவில் விற்பனை</title>
		<link>https://desiyamurasu.com/news-india/electoral-bonds-heres-what-the-numbers-say/</link>
					<comments>https://desiyamurasu.com/news-india/electoral-bonds-heres-what-the-numbers-say/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Admin]]></dc:creator>
		<pubDate>Wed, 30 Dec 2020 05:39:59 +0000</pubDate>
				<category><![CDATA[தேசிய அரசியல்]]></category>
		<category><![CDATA[Economy]]></category>
		<category><![CDATA[Political Economy]]></category>
		<category><![CDATA[Politics]]></category>
		<category><![CDATA[Rights]]></category>
		<guid isPermaLink="false">https://desiyamurasu.com/?p=3785</guid>

					<description><![CDATA[<p>இதுவரை 6 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு தேர்தல் நன்கொடைப் பத்திரங்கள் விற்பனையாகியுள்ளன. இதில், கடந்த 2019-20 ஆம் ஆண்டில் மட்டும் 55 சதவீத தேர்தல் பத்திரங்கள் விற்பனையாகியுள்ளன. அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் நன்கொடையாக பத்திரங்கள் மூலம் நன்கொடை அளிக்கும் திட்டத்தை கடந்த 2018 ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் தேதி மத்திய அரசு கொண்டு வந்தது. இதன்படி, அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிப்போர் பெயர்கள் வெளியிடப்பட்டாது. இதன்பின்னர், 2017-18 பட்ஜெட்டிலும் இது குறித்து அறிவிக்கப்பட்டது. [&#8230;]</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/electoral-bonds-heres-what-the-numbers-say/">2017-18 ஆம் ஆண்டில் 95 சதவீத தேர்தல் பத்திரம் மூலம் பாஜகவுக்கு நன்கொடை : ரூ. 1 கோடி பத்திரங்கள் அதிக அளவில் விற்பனை</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>இதுவரை 6 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு தேர்தல் நன்கொடைப் பத்திரங்கள் விற்பனையாகியுள்ளன. இதில், கடந்த 2019-20 ஆம் ஆண்டில் மட்டும் 55 சதவீத தேர்தல் பத்திரங்கள் விற்பனையாகியுள்ளன.</p>



<p>அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் நன்கொடையாக பத்திரங்கள் மூலம் நன்கொடை அளிக்கும் திட்டத்தை கடந்த 2018 ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் தேதி மத்திய அரசு கொண்டு வந்தது. இதன்படி, அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிப்போர் பெயர்கள் வெளியிடப்பட்டாது. இதன்பின்னர், 2017-18 பட்ஜெட்டிலும் இது குறித்து அறிவிக்கப்பட்டது.</p>



<p>அரசியல் கட்சிகளிடம் புழங்கும் கருப்புப் பணத்தைக் கட்டுப்படுத்தவும், வெளிப்படையான நிதி நிலையை மேம்படுத்தவும் தேர்தல் நன்கொடை பத்திர முறை கொண்டு வரப்பட்டதாகக் கூறப்பட்டது.</p>



<p>தேர்தல் பத்திர முறையை அறிமுகப்படுத்தி 2 ஆண்டுகள் ஆகிவிட்டன. தற்போது, தேர்தல் பத்திரங்களின் வெளிப்படைத்தன்மை மற்றும் தவறாகப் பயன்படுத்துவது குறித்து பல விவாதங்கள் நடைபெற்றுள்ளன.</p>



<p>2019 ஆம் ஆண்டு மார்ச் 1 ஆம் தேதி முதல் தேர்தல் பத்திரங்கள் பாரத ஸ்டேட் வங்கியில் 12 முறை விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த 2019 மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் மட்டும் 20 நாட்கள் தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 2019 ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 20 வரை (9 ஆவது கட்டம்) அதிகபட்சமாக ரூ.2,256.4 கோடி மதிப்புள்ள தேர்தல் பத்திரங்கள் விற்பனையாகியுள்ளன. 2019 மார்ச் 1 முதல் மார்ச் 15 வரை( 8 ஆவது கட்டம்) ரூ.1,365.7 கோடி மதிப்புள்ள் தேர்தல் பத்திரங்கள் விற்பனையாகியுள்ளன.</p>



<p>2019 ஆம் ஆண்டு மே 6 ஆம் தேதி முதல் மே 10 ம் தேதி வரை (10 ஆவது கட்டம்) ரூ.822.25 கோடி அளவுக்கு தேர்தல் பத்திரங்கள் விற்றுள்ளன.</p>



<p>இந்த 3 கட்ட தேர்தல் பத்திரங்கள் விற்பனை 2019 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை ஒட்டியே நடைபெற்றுள்ளது கவனிக்கத்தக்கது. பொதுத்தேர்தலின் போது, 3 கட்ட விற்பனையிலும் ரூ.4,444.32 கோடி அளவுக்கு தேர்தல் பத்திரங்கள் விற்பனையாகியுள்ளன. இந்த 3 கட்டங்களில் 73 சதவீத தேர்தல் பத்திரங்கள் விற்றுள்ளன.</p>



<p>2019-20 ஆம் நிதியாண்டில் ரூ. 3,355.93 கோடி அளவுக்கு தேர்தல் பத்திரங்கள் விற்றுள்ளன. கடந்த நிதியாண்டு முழுவதும் விற்கப்பட்ட தேர்தல் பத்திரங்களின் மதிப்பான ரூ.2,550.78 கோடியை விட இது அதிகமாகும். 2017-18 நிதியாண்டில் 2018 மார்ச் மாதத்தில் முதல் கட்ட தேர்தல் பத்திர விற்பனை ரூ.220 கோடியாகும்.</p>



<p>ரூ. 1,000, ரூ. 10,000, ரூ. 1 லட்சம் , ரூ. 10 லட்சம் மற்றும் ரூ. 1 கோடி வரிசையில் பத்திரங்கள் விற்கப்படுகின்றன. கடந்த 2019 ஆம் ஆண்டு அக்டோபர் வரை, பல்வேறு வரிசைகளில் 12,313 தேர்தல் பத்திரங்கள் விற்றுள்ளன. இதில் அதிகபட்சமாக ரூ. 1 கோடி மதிப்பிலான 5,624 தேர்தல் பத்திரங்கள் விற்றுள்ளன. விற்பனையான மொத்த தேர்தல் பத்திரங்களில் இது 45.68 சதவீதமாகும்.</p>



<p>2017-18 ஆம் ஆண்டில் தேர்தல் ஆணையத்திடம் பாஜக சமர்ப்பித்த ஆவணத்தின்படி, பாரத ஸ்டேட் வங்கி மூலம் விற்பனையான தேர்தல் பத்திரங்களில். 95 சதவீத தேர்தல் பத்திரங்கள் பாஜகவுக்கு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/electoral-bonds-heres-what-the-numbers-say/">2017-18 ஆம் ஆண்டில் 95 சதவீத தேர்தல் பத்திரம் மூலம் பாஜகவுக்கு நன்கொடை : ரூ. 1 கோடி பத்திரங்கள் அதிக அளவில் விற்பனை</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://desiyamurasu.com/news-india/electoral-bonds-heres-what-the-numbers-say/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
	</channel>
</rss>
