<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Randeep Singh Surjewala Archives - தேசிய முரசு - Desiya Murasu</title>
	<atom:link href="https://desiyamurasu.com/tag/randeep-singh-surjewala/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://desiyamurasu.com/tag/randeep-singh-surjewala/</link>
	<description>DesiyaMurasu – Daily Opinions &#38; Analysis on Latest News  &#124; Tamil News</description>
	<lastBuildDate>Wed, 30 Dec 2020 05:05:22 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.1</generator>

<image>
	<url>https://desiyamurasu.com/wp-content/uploads/2020/07/cropped-FAV-copy-1-32x32.png</url>
	<title>Randeep Singh Surjewala Archives - தேசிய முரசு - Desiya Murasu</title>
	<link>https://desiyamurasu.com/tag/randeep-singh-surjewala/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>3 புதிய சட்டங்களையும் ரத்து செய்து விவசாயிகளிடம் மோடி அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் : ரன்தீப் சிங் சுர்ஜேவாலா</title>
		<link>https://desiyamurasu.com/news-india/farmers-protesting-in-chilly-weather-modi-giving-clarifications-on-tv-congress/</link>
					<comments>https://desiyamurasu.com/news-india/farmers-protesting-in-chilly-weather-modi-giving-clarifications-on-tv-congress/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Admin]]></dc:creator>
		<pubDate>Wed, 30 Dec 2020 05:05:20 +0000</pubDate>
				<category><![CDATA[தேசிய அரசியல்]]></category>
		<category><![CDATA[bjp]]></category>
		<category><![CDATA[congress]]></category>
		<category><![CDATA[PM Modi]]></category>
		<category><![CDATA[Randeep Singh Surjewala]]></category>
		<guid isPermaLink="false">https://desiyamurasu.com/?p=3778</guid>

					<description><![CDATA[<p>3 புதிய சட்டங்களையும் ரத்து செய்து விவசாயிகளிடம் மோடி அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என, காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நீதி கேட்டுக் கடந்த 30 நாட்களாக நடுங்கிக் கொண்டே கடும் குளிரில் விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். 3 புதிய விவசாய சட்டங்களை எதிர்த்து நடந்த போராட்டத்தில் இதுவரை 44 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். ஒரு சில முதலாளிகளுக்குச் சேவகம் செய்வதிலேயே பிரதமர் மோடி ஆர்வம் [&#8230;]</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/farmers-protesting-in-chilly-weather-modi-giving-clarifications-on-tv-congress/">3 புதிய சட்டங்களையும் ரத்து செய்து விவசாயிகளிடம் மோடி அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் : ரன்தீப் சிங் சுர்ஜேவாலா</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>3 புதிய சட்டங்களையும் ரத்து செய்து விவசாயிகளிடம் மோடி அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என, காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா கூறியுள்ளார்.</p>



<p>அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:</p>



<p>நீதி கேட்டுக் கடந்த 30 நாட்களாக நடுங்கிக் கொண்டே கடும் குளிரில் விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். 3 புதிய விவசாய சட்டங்களை எதிர்த்து நடந்த போராட்டத்தில் இதுவரை 44 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். ஒரு சில முதலாளிகளுக்குச் சேவகம் செய்வதிலேயே பிரதமர் மோடி ஆர்வம் காட்டுகிறார். விவசாயிகள் மீது அவர் இரக்கப்படவே இல்லை.</p>



<p>போராடும் விவசாயிகள் சோர்வாகி அவர்களே ஓடிவிடுவார்கள் என்பது பாரதிய ஜனதா கட்சியின் எண்ணமாகவும் கொள்கையாகவும் இருக்கிறது. பிரதமர் தொலைக் காட்சியில் விளக்கங்களை அளித்து வருகிறார். அவருடைய அமைச்சர்கள் ஏதோ சாக்குப்போக்கு சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், தமது நெருக்கமான முதலாளிகளுக்குச் சேவகம் செய்து கொண்டிருக்கிறார் என்பதுதான் உண்மை.</p>



<p>அரசியல் நேர்மையின்மையுடன் நாடகம் ஆடுகிறார்கள். விவசாயிகளின் பிரச்சினையைத் தீர்க்க அவர்களுக்குச் சிறிதளவும் ஆர்வமில்லை என்பதுதான் கசப்பான உண்மை.</p>



<p>சாலைகளில் நின்று கொண்டிருந்த விவசாயிகள் மீது தண்ணீரைப் பீய்ச்சியும், தடியடி பிரயோகமும் நடத்தித் தாக்கிய பிரதமர் தான், விவசாயிகளுக்கு உதவித் தொகை வழங்குவதாகக் கூறுகிறார்.</p>



<p>கடந்த 2015-6 விவசாய கணக்கெடுப்பின்படி, 14 கோடியே 64 லட்சம் விவசாயிகள், 15,78 கோடி ஹெக்டேர் நிலத்தில் விவசாயம் செய்வதாகக் கூறப்பட்டுள்ளது.</p>



<p>கடந்த 2018 ஆம் ஆண்டு விவசாயிகளுக்கான ரூ.6 ஆயிரம் உதவித் தொகை திட்டத்தை மோடி அரசு தொடங்கியது. 3 தவணைகளாக இந்தியாவில் உள்ள விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தின்படி, 2018-19 ஆம் ஆண்டில் 88 ஆயிரம் கோடி ரூபாய் வங்கிக் கணக்குகளில் செலுத்தியிருக்க வேண்டும். ஆனால், இதுவரை வெறும் 6 ஆயிரத்து 5 கோடி ரூபாய் மட்டுமே விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.</p>



<p>மக்களவை தேர்தலுக்கு முன்பு, விவசாயிகள் கணக்கில் 49 ஆயிரத்து 196 கோடி ரூபாய் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டது. 2020-21 ஆம் ஆண்டில் இதுவரை 38 ஆயிரத்து 872 கோடி ரூபாய் செலுத்தப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் வங்கிக் கணக்குகளின் செலுத்த வேண்டிய 88 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு முழுமையாக இதுவரை வழங்கவில்லை.</p>



<p>தற்போது விவசாயிகளின் கணக்குகளில் 18 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய செலுத்தியபோதும், 3 சட்டங்களை நியாயப்படுத்தியே பிரதமர் மோடி பேசுகிறார்.</p>



<p>5 கோடியே 40 லட்சம் விவசாயிகளுக்கு உதவித் தொகையைத் தராதது ஏன்? இந்த திட்டத்தின் கீழ், மொத்தமுள்ள 14 கோடியே 64 லட்சம் விவசாயிகளில் 9 கோடியே 24 லட்சம் விவசாயிகளுக்கு மட்டும் அவர்களது வங்கிக் கணக்குகளில் பணம் செலுத்துவது ஏன்?</p>



<p>மோடி அவர்களே, உங்களை சிம்மாசனத்தின் மீது அமர வைத்த மக்களை நீங்கள் கொடுமையுடனும், அக்கறையின்றியும் நடத்திக் கொண்டிருக்கிறீர்கள்.</p>



<p>இன்று விவசாயிகளைத் தீவிரவாதிகள் என்றும், ஒட்டுண்ணிகள் என்றும், துண்டாடும் கும்பல் என்று காலிஸ்தானியர்கள் என்றும் பாரதிய ஜனதா கட்சி முத்திரை குத்துகிறது. 3 புதிய சட்டங்களையும் திரும்பப் பெற்று, விவசாயிகளிடம் மோடி அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார்.</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/farmers-protesting-in-chilly-weather-modi-giving-clarifications-on-tv-congress/">3 புதிய சட்டங்களையும் ரத்து செய்து விவசாயிகளிடம் மோடி அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் : ரன்தீப் சிங் சுர்ஜேவாலா</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://desiyamurasu.com/news-india/farmers-protesting-in-chilly-weather-modi-giving-clarifications-on-tv-congress/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>ரோம் தீப்பிடித்தபோது நீரோ மன்னன் பிடில் வாசித்த கதையாக மோடி அரசு: காங். செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா</title>
		<link>https://desiyamurasu.com/news-economics/modi-is-busy-feeding-peacocks-when-economy-is-affected-by-corona/</link>
					<comments>https://desiyamurasu.com/news-economics/modi-is-busy-feeding-peacocks-when-economy-is-affected-by-corona/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Admin]]></dc:creator>
		<pubDate>Wed, 09 Sep 2020 11:19:55 +0000</pubDate>
				<category><![CDATA[பொருளாதாரம்]]></category>
		<category><![CDATA[BJP Govt.]]></category>
		<category><![CDATA[Economy Collapse]]></category>
		<category><![CDATA[Randeep Singh Surjewala]]></category>
		<guid isPermaLink="false">https://desiyamurasu.com/?p=2166</guid>

					<description><![CDATA[<p>ரோம் நகர் தீப்பற்றி எரிந்த போது, நீரோ மன்னன் பிடில் வாசித்த கதையாக, கொரோனாவில் இந்தியா சிக்கித் தவிக்கும்போது மயில்களுக்கு உணவு அளித்துக் கொண்டிருக்கிறார் பிரதமர் மோடி என, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைமை செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா குற்றம் சாட்டியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த மார்ச் 24 ஆம் தேதி பிரதமர் மோடி வெளியிட்ட பொது முடக்க அறிவிப்பின் போது, மகாபாரத போர் 18 நாட்கள் நடந்தது. கொரோனாவுக்கு [&#8230;]</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-economics/modi-is-busy-feeding-peacocks-when-economy-is-affected-by-corona/">ரோம் தீப்பிடித்தபோது நீரோ மன்னன் பிடில் வாசித்த கதையாக மோடி அரசு: காங். செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>ரோம் நகர் தீப்பற்றி எரிந்த போது, நீரோ மன்னன் பிடில் வாசித்த கதையாக, கொரோனாவில் இந்தியா சிக்கித் தவிக்கும்போது மயில்களுக்கு உணவு அளித்துக் கொண்டிருக்கிறார் பிரதமர் மோடி என, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைமை செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா குற்றம் சாட்டியுள்ளார்.<br><br>அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:<br><br>கடந்த மார்ச் 24 ஆம் தேதி பிரதமர் மோடி வெளியிட்ட பொது முடக்க அறிவிப்பின் போது, மகாபாரத போர் 18 நாட்கள் நடந்தது. கொரோனாவுக்கு எதிரான போரில் 21 நாட்களில் வெற்றி பெறுவோம் என குறிப்பிட்டார். 166 நாட்களுக்குப் பிறகு, ஒட்டுமொத்த நாடும் கொரோனாவுக்கு எதிராக மகாபாரத போரை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். கொரோனாவால் மக்கள் உயிரிழந்து கொண்டிருக்கும் நிலையில், மயில்களுக்கு உணவு கொடுப்பது போல புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்துக் கொண்டிருக்கிறார் பிரதமர் மோடி.<br><br>கொரோனாவுடன் போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால், நடவடிக்கைதான் காணாமல் போய்விட்டது. கொரோனாவை தோற்கடிக்கும் போராட்டத்தில், செயலிழந்து விட்டதையும், முற்றிலும் திறமையற்ற அரசு என்பதையும் மோடி அரசு நிரூபித்துள்ளது. மிக மோசமான தொற்றுப் பரவலுக்கு மத்தியில், மக்களைக் காக்கவும், அவர்களை தற்காத்துக் கொள்ள அனுமதிக்கவும் பாஜக அரசு தவறிவிட்டது.<br><br>உலக அளவில் கொரோனாவின் தலைநகரமாக இந்தியா தற்போது மாறியுள்ளது.  உலகிலேயே கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 90 ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், அமெரிக்கா மற்றும் பிரேசிலில் இதில் பாதி எண்ணிக்கையில் கூட யாரும் பாதிக்கப்படவில்லை. மற்ற நாடுகளில் கடந்த 24 மணி நேரத்தில் 10 ஆயிரம் பேருக்கு மேல் பாதிக்கப்படவில்லை.</p>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large"><img fetchpriority="high" decoding="async" width="760" height="428" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/09/Randeep_singh_surjewala.jpg" alt="" class="wp-image-2167" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/09/Randeep_singh_surjewala.jpg 760w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/09/Randeep_singh_surjewala-300x169.jpg 300w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/09/Randeep_singh_surjewala-750x422.jpg 750w" sizes="(max-width: 760px) 100vw, 760px" /></figure></div>



<p><strong>இந்தியாவில் கொரோனா தொற்று பரவியதற்கான 6 உண்மைகளை ஆராய்வோம்:</strong><br><br>1. தினமும் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் &#8211; உலகிலேயே இந்தியா முதலிடம்(90,802)<br><br>2. தினசரி கொரோனா உயிரிழப்புகள் &#8211; உலகிலேயே இந்தியா முதலிடம் (தினமும் 1,016 பேர் உயிரிழப்பு)<br><br>3. கொரோனா பாதிப்பு இரட்டிப்பு-உலகிலேயே இந்தியா முதலிடம் (29 நாட்கள்)<br><br>4. மொத்த கொரோனா பாதிப்புகள்-உலகிலேயே இந்தியா இரண்டாவது இடம் (42 லட்சத்து 4 ஆயிரத்து 614 பேர் பாதிப்பு)<br><br>5. மொத்தமாக கொரோனாவால் தீவிர பாதிப்பு &#8211; உலகிலேயே இந்தியா இரண்டாவது இடம் &#8211; (8 லட்சத்து 82 ஆயிரத்து 542)<br><br>6. மொத்த கொரோனா உயிரிழப்பு &#8211; உலகிலேயே இந்தியா 3 ஆவது  இடம் (71 ஆயிரத்து 642 பேர்)<br><br><strong>கொரோனா பாதிப்பில் அப்பட்டமான உண்மை:</strong></p>



<ul class="wp-block-list"><li> 0 முதல் 1 லட்சம் கொரோனா பாதிப்பு = 110 நாட்களில்.</li><li>1 முதல் 10 லட்சம் கொரோனா பாதிப்பு = 59 நாட்களில்.</li><li>10 முதல் 20 லட்சம் கொரோனா பாதிப்பு = 21 நாட்களில்.</li><li>20 முதல் 30 லட்சம் கொரோனா பாதிப்புகள் = 16 நாட்களில்.</li><li>30 முதல் 40 லட்சம் கொரோனா பாதிப்பு = 13 நாட்களில்</li></ul>



<p><br>29 நாட்களில் கொரோனா பாதிப்பு இரட்டிப்பாகியுள்ளது &#8211; 20 லட்சத்திலிருந்து 40 லட்சம் ஆக உயர்வு.<br><br>கொரோனா பரவல் குறித்து நிபுணர்களின் அபாய எச்சரிக்கை:</p>



<ol class="wp-block-list"><li>கொரோனா பரவல் தொடர்ந்து அதே வேகத்தில் அதிகரிக்கும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.</li><li>நவம்பர் 30 ஆம் தேதிக்குள் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 கோடியை தாண்டும்.</li><li>டிசம்பர் 30 ஆம் தேதிக்குள் மொத்த கொரோனா பாதிப்பு 1 கோடியே 40 லட்சத்தை எட்டும்.</li></ol>



<p>உயிரிழப்புகள் 1 லட்சத்து 75 ஆயிரத்தை எட்டும் என்று அஞ்சப்படுகிறது.</p>



<p><strong>கொரோனா தடுப்புகளில் மொத்த இயலாமை மற்றும் மோசமான தோல்வி:</strong><br><br>கடந்த பிப்ரவரி 12 ஆம் தேதியிலிருந்தே, காங்கிரஸ் கட்சியும் ராகுல் காந்தி அவர்களும் கொரோனா பாதிப்பு குறித்து அரசை எச்சரித்து வந்துள்ளனர். ஆனால், மோடி அரசு இதனை கேலி செய்ததோடு, கண்டுகொள்ளாமலும் விட்டுவிட்டது.<br><br><strong>கொரோனா கால வரிசையில் 8 அம்சங்களை ஆராய்வோம்:</strong></p>



<ol class="wp-block-list"><li>2020 பிப்ரவரி 12 =  கவலைப்படும் அளவுக்கு நம் நாட்டில் கொரோனா பாதிப்பு இல்லை என்று மோடி அரசு கூறியது. ராகுல் காந்தியின் எச்சரிக்கையை அரசு ஒட்டுமொத்தமாக புறக்கணித்தது.</li><li>2020 பிப்ரவரி 24 = 1 லட்சம் பேரை திரட்டி அகமதாபாத்தில் &#8216;நமஸ்தே ட்ரம்ப்&#8217; நிகழ்ச்சி நடத்தப்பட்டது.</li><li>2020 பிப்ரவரி 2 முதல் 5 ஆம் தேதி வரை = ராகுல் காந்தி தொடர்ந்து எச்சரித்ததை, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் நிராகரித்தார். கொரோனா குறித்து கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்தார்.</li><li>2020 மார்ச் 24 = தேசிய அளவில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டபோது, மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்க்கப்பட்டது.</li><li>2020 ஏப்ரல் 25 = நிதி ஆயோக் உறுப்பினர் மற்றும் அரசின் கொரோனா நிர்வாகக் குழுவின் தலைவர் டாக்டர் வி.கே. பவுல் அளித்த அறிக்கையில், 2020 மே 15 ஆம் தேதியில் புதிதாக கொரோனா பாதிப்புகள் இல்லை என்று தெரிவித்திருந்தார்.</li><li>2020 மே 4 = கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இனி அதிகரிக்காது என்றும்  சுகாதாரத்துறை செய்தி தொடர்பாளரும் இணைச் செயலாளருமான லாவ் அகர்வால் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.</li><li>2020 ஜுன் 27 = நாட்டு மக்கள் மத்திய உரையாற்றிய பிரதமர் மோடி, கொரோனா பரவல் குறித்த எச்சரிக்கையில் உண்மை இல்லை என்றும், மற்ற நாடுகளை விட இந்தியா நல்ல நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.</li><li>2020 செப்டம்பர் 6 = கொரோனா பாதிப்பில் உலகிலேயே இரண்டாவது இடத்தைப் பிடித்தது இந்தியா. தினமும் கொரோனா பாதிப்பு ஏற்படுவதிலும், கொரோனா உயிரிழப்பிலும் உலக அளவில் இந்தியா முதலிடத்தைப் பிடித்தது.</li></ol>



<p><br>பொது முடக்கம் அறிவித்து தோல்வி கண்ட மோடி தலைமையும் துக்ளக் ராஜ்யமும்:<br><br>திட்டமிடாமலும், ஆலோசிக்காமலும் 3 மணி நேரத்துக்கு முன்பு பிரதமர் அறிவித்த பொது முடக்கத்தால், கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தோல்வியே ஏற்பட்டுள்ளது. அதோடு, நாட்டின் பொருளாதாரமும் அழிந்துபோனது. மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டது. இந்திய வரலாற்றில் இதுபோன்று துக்ளக் ஆட்சி நடத்தியது யாருமில்லை என்ற அளவுக்கு, மோடி தலைமை தோல்வியடைந்துள்ளது.<br><br><br>பொதுமுடக்கத்தாலும், துக்ளக் ராஜ்யத்தாலும் ஏற்பட்ட ஒரு டஜன் பாதிப்புகள்</p>



<ol class="wp-block-list"><li>திடீர் பொது முடக்கத்தால் கோடிக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பசியோடும், குடிக்க தண்ணீர் இன்றி தாகத்தோடும் சொந்த ஊர்களுக்கு நடந்தே சென்றனர். நடந்து சென்றவர்களில் 150 க்கும் மேற்பட்டவர்கள், விபத்து உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உயிரிழந்தனர்.</li><li>எந்த மாநிலத்திடமும், முதலமைச்சரிடமும் ஆலோசிக்காமல் பொது முடக்கத்தை அமல்படுத்தியதன் மூலம், கூட்டாட்சிக்கு கொள்ளி வைத்துள்ளார் மோடி.</li><li>நிபுணர்களும், காங்கிரஸ் கட்சியும் தொடர்ந்து எச்சரித்தும், கொரோனா பரிசோதனைகள் மற்றும் சிகிச்சை அளித்து கட்டுப்படுத்த மோடி அரசு தவறிவிட்டது. பரிசோதனைகள் அதிகரிக்கப்பட வேண்டிய நேரத்தில், அது குறித்து கண்டுகொள்ளாமல் கிரிமினல் தனத்தோடு செயல்பட்டனர். பொது முடக்கம் இருந்தும், கொரோனா தொடர்புகளை  தேடவும் தவறிவிட்டனர்.</li><li>வெற்றிகரமாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்ட போதும், உலகிலேயே இந்தியா மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த தவறிய நாடாக உள்ளது. பொது முடக்க தளர்வுகளுக்குப் பிறகு, நோய் தொற்றும், உயிரிழப்புகளும் அதிகரித்தன.</li><li>தொலைக்காட்சி விவாதங்கள், கை தட்டுவது, விளக்கு ஏற்றுவது போன்றவற்றில் தான் மோடி அரசு கவனம் செலுத்தியது. ஆனால், கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதிலும், பொருளாதாரத்தை காப்பதிலும் மோடி அரசு எடுத்துள்ள நடவடிக்கை வெறும் பூஜ்யம்தான்.</li><li>கொரோனாவுக்கு எதிராக மாநில அரசுகள் இன்னும் போராடிக் கொண்டிருக்கின்றன. ஜிஎஸ்டி இழப்பீட்டை மத்திய அரசு வழங்காத நிலையிலும், கொரோனா தடுப்புக்கு உதவாத நிலையிலும், மாநில அரசுகள் தனியாக நின்று போராடுகின்றன.</li><li>முதல்முறை பொது முடக்கம் அறிவித்த போதும், அதன்பின்  3 முறை பொது முடக்கத்தை நீட்டித்தபோதும், மாநில அரசுகளுடன் மோடி அரசு கலந்தாலோசிக்கவில்லை. அதன்பிறகு 4 முறை தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போதும், தொற்றைக் கட்டுப்படுத்தவோ, உயிரிழப்புகளைத் தடுக்கவோ, வேலை இழப்பு அல்லது மூழ்கிக் கொண்டிருக்கும் பொருளாதாரத்தை காப்பாற்றவோ, அரசிடம் எந்த கொள்கையும் இல்லை.</li><li>பொருளாதாரத்தை இழந்தும், வியாபாரத்தை இழந்தும், தவணைகளை கட்ட முடியாமலும், வேலை இழந்தும், வாழ்வாதாரத்தை இழந்தும் தவிக்கும் மக்களை கேலி செய்யும் வகையில், இது &#8216;கடவுளின் செயல்&#8217; என்று மோடி அரசு சொல்கிறது.</li><li>மோடி அரசின் அலட்சியப் போக்கால் சிறு நகரங்கள், கிராமங்கள் வரை கொரோனா தொற்று பரவிவிட்டது. எனினும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இந்தியாவில் உள்ள மொத்த மக்கள் தொகையில், 65 சதவிகிதம் பேர் கிராமங்களில் வசிக்கின்றனர். ஆனால், மொத்தமாக 35 சதவிகித படுக்கைகளும் 20 சதவிகித மருத்துவர்களும் மட்டுமே உள்ளனர். இந்த நேரத்தில் தொற்று பரவல் அதிகமானால் பெரும் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்திவிடும்.</li><li>இந்தியாவில் இரண்டாவது கொரோனா தொற்று பரவல் தொடங்கிவிட்டதாக பெரும்பாலான நிபுணர்கள் கணித்துள்ளனர். சமூகப்  பரவல் தொடங்கிவிட்டதாக சில நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதைப் பற்றி எல்லாம் தெரிந்து கொள்ளாமலோ அல்லது தெரிந்தும் நடவடிக்கை எடுக்காமலோ மோடி அரசு தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.</li></ol>



<p><strong>நாட்டுக்கு பிரதமர் மோடி அவசியம் பதில் அளிக்க வேண்டும்:</strong><br><br>தமது தலைமை தோல்வியடைந்துவிட்டதற்கு மோடி பதில் அளிப்பாரா? கொரோனா தொற்றை எப்படி கட்டுப்படுத்தப் போகிறீர்கள்? வேகமாக பரவுவதை எப்படி தடுத்து நிறுத்தப் போகிறீர்கள்? கோடிக்கணக்கான மக்களுக்கு பரவுவதை அரசு எவ்வாறு தடுக்கப் போகிறது? கொரோனாவினால் ஏற்படும் உயிரிழப்புகளை எப்படி தடுக்கப் போகிறீர்கள்? மூழ்கிக் கொண்டிருக்கும் பொருளாதாரத்தை எப்படி கரை சேர்க்கப் போகிறீர்கள்?<br><br>இவற்றுக்கெல்லாம் மோடி அரசிடம் தீர்வு உள்ளதா? அல்லது கடவுள் மீது குற்றம் சாட்டப் போகிறீர்களா?</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-economics/modi-is-busy-feeding-peacocks-when-economy-is-affected-by-corona/">ரோம் தீப்பிடித்தபோது நீரோ மன்னன் பிடில் வாசித்த கதையாக மோடி அரசு: காங். செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://desiyamurasu.com/news-economics/modi-is-busy-feeding-peacocks-when-economy-is-affected-by-corona/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>தனி நபர் வருமான இழப்பு, பணவீக்கம், 40 கோடி இந்தியர்கள் வறுமை கோட்டிற்கு கீழே தள்ளப்பட்டுள்ளனர்! இதுதான் பா.ஜ.க.வின் சாதனையா?: ரன்தீப் சிங் சுர்ஜேவாலா</title>
		<link>https://desiyamurasu.com/news-economics/economy-destroyed-randeep-singh-surjewala/</link>
					<comments>https://desiyamurasu.com/news-economics/economy-destroyed-randeep-singh-surjewala/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Admin]]></dc:creator>
		<pubDate>Mon, 07 Sep 2020 10:40:16 +0000</pubDate>
				<category><![CDATA[பொருளாதாரம்]]></category>
		<category><![CDATA[BJP Govt.]]></category>
		<category><![CDATA[GDP]]></category>
		<category><![CDATA[Indian Economy]]></category>
		<category><![CDATA[Randeep Singh Surjewala]]></category>
		<guid isPermaLink="false">https://desiyamurasu.com/?p=2122</guid>

					<description><![CDATA[<p>அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைமை செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, காணொலி காட்சி வாயிலாக நடத்திய&#160; செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது: கடந்த 73 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. பொருளாதாரம் அழிக்கப்பட்டுள்ளது. சாதாரண மனிதனின் வாழ்க்கை நிலைகுலைந்து போயிருக்கிறது. பொருளாதார சீரழிவு நிலையை நோக்கி இந்தியாவை பிரதமர் மோடி நகர்த்திக் கொண்டிருக்கிறார். பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி, பொதுமுடக்கம் ஆகியவை பெரிய அடி மட்டுமல்ல, பேரழிவு தாக்குதலும் கூட. பொருளாதார இருள் நம்மை சூழ்ந்துள்ளது. வாழ்க்கை [&#8230;]</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-economics/economy-destroyed-randeep-singh-surjewala/">தனி நபர் வருமான இழப்பு, பணவீக்கம், 40 கோடி இந்தியர்கள் வறுமை கோட்டிற்கு கீழே தள்ளப்பட்டுள்ளனர்! இதுதான் பா.ஜ.க.வின் சாதனையா?: ரன்தீப் சிங் சுர்ஜேவாலா</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைமை செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, காணொலி காட்சி வாயிலாக நடத்திய&nbsp; செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது:</p>



<p>கடந்த 73 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. பொருளாதாரம் அழிக்கப்பட்டுள்ளது. சாதாரண மனிதனின் வாழ்க்கை நிலைகுலைந்து போயிருக்கிறது. பொருளாதார சீரழிவு நிலையை நோக்கி இந்தியாவை பிரதமர் மோடி நகர்த்திக் கொண்டிருக்கிறார். பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி, பொதுமுடக்கம் ஆகியவை பெரிய அடி மட்டுமல்ல, பேரழிவு தாக்குதலும் கூட.</p>



<p>பொருளாதார இருள் நம்மை சூழ்ந்துள்ளது. வாழ்க்கை நிலை மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவை முற்றிலும் அழிக்கப்பட்டு விட்டன. வியாபாரம், சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் பாழாகிவிட்டன. பொருளாதாரத்தை ஜி.டி.பி அழித்துவிட்டது. கடந்த 6 ஆண்டுகளாக ஏமாற்று வேலைகளை செய்துவிட்டு நிதி அவசர நெருக்கடி நிலைக்கு நாட்டை தள்ளிவிட்டு, தற்போது கடவுளின் செயல் என்கிறார்கள். கடந்த 73 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, தாங்கள் செய்த மோசடிகளை மறைக்க கடவுள் மீது பழியைப் போடுகிறார்கள்.</p>



<h4 class="wp-block-heading"><strong>ஜி.டி.பி.யால் ஏற்பட்ட பாதிப்பு:</strong></h4>



<p>2021 ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் ஜி.டி.பி எனப்படும் உள்நாட்டு மொத்த உற்பத்தி குறையக்கூடும் என்பதால் ( சுதந்திரத்துக்குப் பிறகு முதல்முறையாக) ஒவ்வொரு இந்தியரின் சராசரி வருமானத்தில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தும். கடந்த 2019-20 ஆம் நிதியாண்டில் தனிநபர் வருமானம் ரூ. 1 லட்சத்து 35 ஆயிரத்து 50 ஆக இருந்தது. 2020-21 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில்  மொத்த உள்நாட்டு உற்பத்தி 24 சதவிகிதம் வீழ்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டாவது காலாண்டும் மிக மோசமாக இருக்கும். 2020-21 ஆம் ஆண்டு முழுவதும் ஜி.டி.பி. 11 சதவிகிதமாக குறைந்தால், ஒவ்வொரு இந்தியரின் வருமானத்தில் ரூ. 14 ஆயிரத்து 900 வரை இழப்பை ஏற்படுத்தும். ஒரு பக்கம் பணவீக்கம் சாதாரண மனிதனை பெரும் பாதிப்படையச் செய்துள்ளது. மற்றொரு பக்கம் வரிகளும் பொருளாதார வீழ்ச்சியும் சுமையை தாங்க முடியாமல் மக்களின் முதுகெலும்பை ஒடிக்கின்றன.</p>



<h4 class="wp-block-heading"><strong>நம்பிக்கையான பற்றாக்குறை அல்லது அரசு மீதான நம்பிக்கை இழப்பு:</strong></h4>



<p>மோடி அரசின் நம்பிக்கை பற்றாக்குறையால் இந்தியா பாதிக்கப்பட்டுள்ளது. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை கேட்டுப் பாருங்கள். நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதைப் போல், வங்கிக் கடனோ அல்லது மற்ற நிதியுதவியோ கிடைக்கவில்லை என்று சொல்வார்கள். வங்கிகளுக்கு அரசின் மீது நம்பிக்கை இல்லை. அரசுக்கோ ரிசர்வ் வங்கி மீது நம்பிக்கை இல்லை. மாநில அரசுகளுக்கு மத்திய அரசின் மீது நம்பிக்கை இல்லை. மத்திய அரசின் ரூ. 20 லட்சம் கோடி தொகுப்பு நிதியுதவித் திட்டம் பொய் என உறுதியாகியுள்ளது. இது நம்பிக்கையின் பற்றாக்குறை மட்டுமல்ல. ஒட்டுமொத்த நம்பிக்கை தகர்ந்துபோனதையும் காட்டுகிறது.</p>



<h4 class="wp-block-heading"><strong>பொருளாதார அழிவின் சுனாமி:</strong></h4>



<p>உண்மையை எதிர்கொள்ள மறுத்து, பொய்யை&nbsp; விளம்பரப்படுத்திக் கொள்வதை&nbsp; அரசு வழக்கமாகக் கொண்டுள்ளது. பொருளாதார சீரழிவால்&nbsp; 40 கோடிக்கும் மேற்பட்ட இந்தியர்கள் வறுமைக் கோட்டுக்கு கீழே தள்ளப்பட்டுள்ளார்கள். பொருளாதாரம் தேய்ந்து போனதால், வருங்கால வைப்பு நிதியிலிருந்து 80 லட்சம் மக்கள் தங்கள் பணமான ரூ. 30 ஆயிரம் கோடியை எடுத்துவிட்டனர். 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் ஜுலை மாதம் வரை மாதச் சம்பளம் பெறும் 2 கோடி பேர் வேலையிழந்துள்ளனர். பொதுமுடக்கம் காரணமாக, அமைப்புச்சாரா துறையில் 10 கோடி பேர் வேலையிழந்துள்ளனர். நாட்டில் உள்ள 6 கோடியே 30 லட்சம் குறு,சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில், நான்கில் ஒரு பங்கு நிறுவனங்கள் மட்டுமே, 50 சதவிகிதம் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன. இதில், பெரும்பாலான நிறுவனங்கள் நிரந்தரமாக மூடப்பட்டுள்ளன. கட்டுமானத் துறையில் 2020-21 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் ஜி.டி.பி. மைனஸ் 50.3 சதவிகிதமும், வர்த்தகம், ஓட்டல், போக்குவரத்து துறைகளில் மைனஸ் 26 சதவிகிதமும் குறைந்துள்ளது. உற்பத்தித் துறையில் ஜி.டி.பி. மைனஸ் 39.3 சதவிகிதமும், சேவைத்துறைகளில் மைனஸ் 26 சதவிகிதமும் குறைந்துள்ளது. பல கோடி பேர் வேலை இழந்துள்ளனர் என்பதே இதற்கு அர்த்தம். ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் அறிக்கையின்படி, 2020 செப்டம்பரில் ஜி.டி.பி மைனஸ் 10.9 சதவிகிதமாக குறையும் என தெரிவித்துள்ளது.</p>



<h4 class="wp-block-heading"><strong>மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி நிலுவை:</strong></h4>



<p>மாநில அரசுகளுக்கான ஜி.எஸ்.டியை குறைத்தது கூட்டாட்சி தத்துவத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலாகும். மாநில அரசுகளுக்கு தர வேண்டி ஜி.எஸ்.டி பங்கை, தரும் நிலையில் மத்திய அரசு இல்லை என, நிதித்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு முன்பு மத்திய நிதித்துறை செயலாளர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.&nbsp; மாநிலங்களுக்கு ரூ. 3 லட்சம் கோடி வரை ஜி.எஸ்.டி. வருவாய் இழப்பு ஏற்படும் என்று ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது. தங்கள் செலவினங்களை மாநில அரசுகள் எப்படி சந்திக்கும்? இது பொருளாதார அராஜகம் அல்லவா?</p>



<h4 class="wp-block-heading">விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் நடுத்தர வர்க்கம் மீது தாக்குதல்:</h4>



<p>மாதச் சம்பளம் பெறுவோர் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு, வங்கித் தவணைகளை கட்டுவதற்கு ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குப் பிறகு கால அவகாசம் நீட்டிக்கப்படாது என, உச்ச நீதிமன்றத்தில் மோடி அரசு மனு தாக்கல் செய்துள்ளது. அவர்களுக்கு வட்டியை தள்ளுபடி செய்யவும் மோடி அரசு மறுத்துவிட்டது. நடுத்தர வர்க்கத்தினர் நம்பிக்கையை இழந்துவிட்டனர். விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் பொருளாதாரச் சூழலால் தற்கொலை செய்து கொள்வதின் பின்னணியில் மத்திய அரசு உள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு மட்டும், 42 ஆயிரத்து 480 விவசாயிகள் மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக என்சிஆர்பி அறிக்கை தெரிவிக்கிறது. அதாவது, தினமும் 116 விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். வேலை இழப்பும் தற்கொலைக்கு தூண்டியுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு மட்டும் வேலை இழப்பால் 14 ஆயிரத்து 19 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதாவது, தினசரி 38 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.</p>



<p>இந்தியாவின் பொருளாதாரத்தை அழிக்க வேண்டும் என்ற அதிகார போதை தலைக்கேறி ஆணவத்துடன் செயல்படும் ஓர் அரசு, விவசாயிகளின் உழைப்பு மற்றும் இளைஞர்களின் எதிர்பார்ப்பை கவனிக்கத் தவறிவிட்டது.</p>



<p>மயில்களுக்கு உணவு அளிப்பது, புகைப்படங்கள் எடுத்துக் கொள்வது,&nbsp; உடைகளை அணிவது, தொலைக்காட்சியை ஆக்கிரமித்துக் கொள்வது மட்டுமே பிரதமரின் பணியாக இருக்கிறது.</p>



<p>அழிவுப்பாதையில் நாட்டை அழைத்துச் செல்லும் மோடி அரசிடம் இருந்தும் நாட்டை மீட்டு, இந்தியாவின் விருப்பங்கள் மற்றும் எதிர்பார்ப்பை செயல்படுத்தும் நேரம் வந்துவிட்டது.</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-economics/economy-destroyed-randeep-singh-surjewala/">தனி நபர் வருமான இழப்பு, பணவீக்கம், 40 கோடி இந்தியர்கள் வறுமை கோட்டிற்கு கீழே தள்ளப்பட்டுள்ளனர்! இதுதான் பா.ஜ.க.வின் சாதனையா?: ரன்தீப் சிங் சுர்ஜேவாலா</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://desiyamurasu.com/news-economics/economy-destroyed-randeep-singh-surjewala/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
	</channel>
</rss>
