<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>rajiv tyagi Archives - தேசிய முரசு - Desiya Murasu</title>
	<atom:link href="https://desiyamurasu.com/tag/rajiv-tyagi/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://desiyamurasu.com/tag/rajiv-tyagi/</link>
	<description>DesiyaMurasu – Daily Opinions &#38; Analysis on Latest News  &#124; Tamil News</description>
	<lastBuildDate>Sat, 15 Aug 2020 16:59:25 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.1</generator>

<image>
	<url>https://desiyamurasu.com/wp-content/uploads/2020/07/cropped-FAV-copy-1-32x32.png</url>
	<title>rajiv tyagi Archives - தேசிய முரசு - Desiya Murasu</title>
	<link>https://desiyamurasu.com/tag/rajiv-tyagi/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>தமிழக தொலைக்காட்சி ஊடகங்கள் விழிப்புணர்வு பெறுமா?</title>
		<link>https://desiyamurasu.com/adigopanna-letters/will-rajiv-tyagis-death-awaken-tamil-visual-media/</link>
					<comments>https://desiyamurasu.com/adigopanna-letters/will-rajiv-tyagis-death-awaken-tamil-visual-media/#comments</comments>
		
		<dc:creator><![CDATA[ஆ. கோபண்ணா]]></dc:creator>
		<pubDate>Sat, 15 Aug 2020 09:53:52 +0000</pubDate>
				<category><![CDATA[ஆதியின் கடிதம்]]></category>
		<category><![CDATA[rajiv tyagi]]></category>
		<guid isPermaLink="false">https://desiyamurasu.com/?p=1454</guid>

					<description><![CDATA[<p>இனிய நண்பர்களே, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செய்தித் தொடர்பாளராக 58 வயது நிரம்பிய துடிப்புமிக்க அருமை நண்பர் ராஜீவ் தியாகி தமது வீட்டிலிருந்து தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்ற போது மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். இந்த செய்தி கேள்விபட்டதும் மிகுந்த மனஉளைச்சலுக்கும், வேதனைக்கும் ஆளாக வேண்டிய நிலை ஏற்பட்டது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் பலமுறை சிரித்த முகத்துடன் அவர் வலம் வந்ததை பார்த்திருக்கிறேன். காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளுக்காக தொலைக்காட்சி விவாதங்களில் பா.ஜ.க.வினரோடு போராடியிருக்கிறார். பா.ஜ.க.வினரை [&#8230;]</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/adigopanna-letters/will-rajiv-tyagis-death-awaken-tamil-visual-media/">தமிழக தொலைக்காட்சி ஊடகங்கள் விழிப்புணர்வு பெறுமா?</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>இனிய நண்பர்களே,<br><br>அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செய்தித் தொடர்பாளராக 58 வயது நிரம்பிய துடிப்புமிக்க அருமை நண்பர் ராஜீவ் தியாகி தமது வீட்டிலிருந்து தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்ற போது மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். இந்த செய்தி கேள்விபட்டதும் மிகுந்த மனஉளைச்சலுக்கும், வேதனைக்கும் ஆளாக வேண்டிய நிலை ஏற்பட்டது.<br><br>அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் பலமுறை சிரித்த முகத்துடன் அவர் வலம் வந்ததை பார்த்திருக்கிறேன். காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளுக்காக தொலைக்காட்சி விவாதங்களில் பா.ஜ.க.வினரோடு போராடியிருக்கிறார். பா.ஜ.க.வினரை கருத்து மோதலில் வீழ்த்துகிற ஆற்றல்மிக்கவராக அவர் விளங்கினார். ராஜிவ் தியாகி உயிரிழப்புக்கு பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் சம்பிட் பாட்ராவும் ஆஜ் தக் நெறியாளரும்தான் பொறுப்பாகும். மறைந்த ராஜிவ் தியாகிக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.<br><br>தலைநகர் தில்லியில் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ராஜீவ் தியாகிக்கு நேர்ந்த சோகத்தைக் கண்டு தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்பவர்கள் அனைவரும் மிகுந்த அச்சத்தோடு இருக்கின்றனர். தமிழகத்தில் தொலைக்காட்சி ஊடகங்களில் நடைபெறுகிற விவாதங்களில் தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்படுவது கடந்த சில வருடங்களாக அதிகரித்து வருகிறது. தொலைக்காட்சி விவாதங்களில் வரம்புமீறி அநாகரீகமாக பேசுபவர்களை நெறியாளர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. சில ஊடகங்களில் இத்தகைய சூடான விவாதங்களின் மூலம் டி.ஆர்.பி. ரேட்டிங் கூடுவதற்கு உதவுவதால் அதை கண்டும் காணாமல் இருந்து விடுகின்றனர். தொலைக்காட்சி விவாதங்களின் மூலம் ஊடக வெளிச்சம் பெற வேண்டும் என்பதற்காக அதில் பங்கேற்பவர்கள் எல்லாவிதமான அவமானங்களையும் தாங்கிக் கொள்வதற்கு ஒருசிலர் தயாராக உள்ளனர். சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் ஒருவரை ஒருவர் மிக தரக்குறைவான இழிவான வார்த்தைகளில் திட்டிக் கொண்டதை பார்த்த அனைவருமே முகம் சுளித்தனர். தமிழக தொலைக்காட்சி விவாதங்கள் படுபாதாளத்தை நோக்கி போய்க் கொண்டிருப்பது குறித்து எவரும் கவலைப்படாமல் இருக்க முடியாது.<br><br>அக்காலகட்டங்களில் தொலைக்காட்சி விவாதங்களில் நெறியாளர்களாக ஜென்ராம், மு. குணசேகரன், கார்த்திகைசெல்வன், கார்த்திகேயன், சிகாமணி, தியாகச்செம்மல், நெல்சன், விஜயன், செந்தில், ஹரிஹரன், அசோகவர்ஷினி போன்ற பலருடன் பங்கேற்று விவாதங்களை மிகச் சிறப்பாக நடத்தியுள்ளனர். இவர்களில் எவருமே ஒருதலைப்பட்சமாக நடந்து கொண்டதாக எப்பொழுதுமே நான் கருதியது கிடையாது. புதிய தலைமுறை தொலைக்காட்சி விவாதங்களில் நிறைய கலந்து கொண்டிருக்கிறேன். அந்த விவாதங்கள் ஆரோக்கியமாகவும், செழுமையாகவும் நடைபெற்றதைக் கண்டு மகிழ்ந்திருக்கிறேன். அதேபோல, சன் நியூஸ், நியூஸ் 18, தந்தி டிவி, நியூஸ் 7 ஆகிய தொலைக்காட்சி விவாதங்களில் ஆரோக்கியமான விவாதங்களை நான் பார்த்திருக்கிறேன்.<br><br>மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்ற போது 2004 முதல் 2014 வரை தொடர்ந்து பல்வேறு விவாதங்களில் பங்கேற்று வந்திருக்கிறேன். காங்கிரஸ் ஆட்சியின் மீது பா.ஜ.க. உள்ளிட்ட எவராவது குற்றச்சாட்டு எழுப்பினால் அதற்கு கோபப்படாமல் அமைதியாக, ஆதாரப்பூர்வமாக எனது வாதங்களின் மூலம் குற்றச்சாட்டுக்களை மறுத்து பேசியிருக்கிறேன். எந்த இடத்திலும் இந்தியாவை ஆளுகிற கட்சியைச் சேர்ந்தவன் என்கிற ஆணவத்தோடு ஒருநாள் கூட நான் விவாதத்தில் பேசியது கிடையாது.</p>



<p>என்னைப் பொறுத்தவரை தொலைக்காட்சி விவாதங்கள் என்பது ஜனநாயகத்தில் அனுமதிக்கப்பட்ட ஒரு கருத்து மோதலே தவிர, தனிப்பட்ட தாக்குதலுக்கு அங்கே இடமில்லை. அக்காலங்களில் தொலைக்காட்சி விவாதங்கள் முடிந்ததும் பங்கேற்ற பா.ஜ.க. உள்ளிட்ட நண்பர்களோடு சுமூகமாகவே நான் விடை பெற்றிருக்கிறேன். எவரிடத்திலும் பகை பாராட்டியது கிடையாது.<br><br>ஆனால், சமீபகாலமாக தொலைக்காட்சி விவாதங்கள் தரம் தாழ்ந்து தனிப்பட்ட தாக்குதல்கள் அதிகரித்த காரணத்தினாலும், விவாதத்தில் பங்கேற்க தரம் குறைந்தவர்கள் அழைக்கப்படுவதாலும் காங்கிரஸ் கட்சியின் ஊடகத்துறை தலைவர் என்ற பொறுப்பில் இருந்தாலும், கடந்த ஓராண்டு காலமாக தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்பதை நான் தவிர்த்து வருகிறேன். ஒரு தொலைக்காட்சி விவாதம் என்று நான் அழைக்கப்பட்டால் அதற்காக குறிப்புகள் தயாரிக்க ஒருமணி நேரத்திற்கு மேலாக நான் செலவிடுவேன். அதற்கு பிறகு தொலைக்காட்சி விவாதங்களில் ஒரு மணி நேரம், பயண நேரம் ஒரு மணி நேரம் என ஏறத்தாழ மூன்று மணி நேரத்தை செலவழிக்க வேண்டிய நிலை இருந்தது.</p>



<p>காங்கிரஸ் கட்சியின் சார்பாக நமது கருத்துக்களை தொலைக்காட்சி ஊடகங்கள் மூலமாக பொதுமக்களுக்கு பிரச்சாரம் செய்ய வேண்டும், காங்கிரஸ் கொள்கைகளை நிலை நிறுத்த வேண்டும், விமர்சனங்களுக்கு எதிராக கேடயமாகவும், வாளாகவும் பணியாற்றி தமிழக மக்களின் பரவலான பாராட்டையும், அன்பையும் நான் பெற்றிருக்கிறேன். தமிழக தொலைக்காட்சி ஊடகங்களில் ஆளுங்கட்சியான பா.ஜ.க.வை சேர்ந்த சிலர் ஆணவத்தோடு பேசுவதை பார்த்து வருகிறேன். அத்தகைய சூழலின் காரணமாக விவாதங்களில் கடும் மோதல் ஏற்படுகிறது. தனிப்பட்ட முறையில் தாக்குதல் நடைபெறுகிறது. இதைப் போன்ற தாக்குதலின் உச்சகட்டத்தினால் தான் இன்றைக்கு ராஜீவ் தியாகியை காங்கிரஸ் கட்சி இழந்திருக்கிறது. அதைப் போன்ற நிலை எவருக்கும் ஏற்படக் கூடாது.<br><br>எனவே, தொலைக்காட்சி விவாதங்களை சில நெறிமுறைகள், கட்டுப்பாடுகளோடு நடத்துவதற்கு தொலைக்காட்சி நெறியாளர்கள் பாரபட்சமின்றி செயல்பட வேண்டும். இதன்மூலமே தொலைக்காட்சி விவாதங்கள் ஆரோக்கியமாகவும், மக்கள் முகம் சுளிக்காத வகையிலும் நடைபெறுவதற்கு வாய்ப்பு ஏற்படும். தொலைக்காட்சி விவாதங்களில் அதிகளவில் பங்கேற்றவன் என்ற முறையில் இதை உரிமையோடு கூற விரும்புகிறேன். ராஜீவ் தியாகியின் மரணத்தின் மூலம் அபாய சங்கு ஊதப்பட்டிருக்கிறது. இதன்மூலம் தொலைக்காட்சி ஊடகங்கள் விழிப்புணர்வு பெறுமா ? பொறுத்திருந்து பார்ப்போம்.<br><br>அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள்!</p>



<p class="has-text-align-right"><em>அன்பன்,<br>ஆ. கோபண்ணா</em></p>
<p>The post <a href="https://desiyamurasu.com/adigopanna-letters/will-rajiv-tyagis-death-awaken-tamil-visual-media/">தமிழக தொலைக்காட்சி ஊடகங்கள் விழிப்புணர்வு பெறுமா?</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://desiyamurasu.com/adigopanna-letters/will-rajiv-tyagis-death-awaken-tamil-visual-media/feed/</wfw:commentRss>
			<slash:comments>2</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>ராஜீவ் தியாகியை காவு வாங்கிய &#8216;விஷம்&#8217; கலந்த ஊடக விவாதம்: காங்கிரஸ் தலைவர்கள் ஆவேசம்</title>
		<link>https://desiyamurasu.com/opinion-analysis/congress-slams-toxic-tv-debates-for-rajiv-tyagis-death/</link>
					<comments>https://desiyamurasu.com/opinion-analysis/congress-slams-toxic-tv-debates-for-rajiv-tyagis-death/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[ஆ. கோபண்ணா]]></dc:creator>
		<pubDate>Fri, 14 Aug 2020 11:14:23 +0000</pubDate>
				<category><![CDATA[கருத்தாய்வு]]></category>
		<category><![CDATA[rajiv tyagi]]></category>
		<category><![CDATA[tv debates]]></category>
		<guid isPermaLink="false">https://desiyamurasu.com/?p=1392</guid>

					<description><![CDATA[<p>கடந்த புதன்கிழமை தொலைக்காட்சியின் விவாத நேரடி ஒளிபரப்பில் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ராஜீவ் தியாகி கலந்து கொண்டார். அப்போது விவாதத்தின் போது உணர்ச்சிவயப்பட்ட அவர்,   ஆயிரக்கணக்கானோர் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, உடல்நலம் குன்றி மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதுபோன்ற காட்சி ஊடகங்களின் விவாதங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்றும், இது அபாயகரமான செயல்பாடு என்றும் அகமது பட்டேல் உள்ளிட்ட பல கட்சிகளின் தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.விவாதத்தின்போது, ராஜீவ் தியாகிக்கு எதிராக மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்திய பாஜக செய்தி [&#8230;]</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/opinion-analysis/congress-slams-toxic-tv-debates-for-rajiv-tyagis-death/">ராஜீவ் தியாகியை காவு வாங்கிய &#8216;விஷம்&#8217; கலந்த ஊடக விவாதம்: காங்கிரஸ் தலைவர்கள் ஆவேசம்</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>கடந்த புதன்கிழமை தொலைக்காட்சியின் விவாத நேரடி ஒளிபரப்பில் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ராஜீவ் தியாகி கலந்து கொண்டார். அப்போது விவாதத்தின் போது உணர்ச்சிவயப்பட்ட அவர்,   ஆயிரக்கணக்கானோர் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, உடல்நலம் குன்றி மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதுபோன்ற காட்சி ஊடகங்களின் விவாதங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்றும், இது அபாயகரமான செயல்பாடு என்றும் அகமது பட்டேல் உள்ளிட்ட பல கட்சிகளின் தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.<br>விவாதத்தின்போது, ராஜீவ் தியாகிக்கு எதிராக மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்திய பாஜக செய்தி தொடர்பாளர் சம்பிட் பத்ராவை கைது செய்யுமாறு சில கட்சித் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>



<p><strong>நடந்தது என்ன?</strong><br><br>பெங்களூரு கலவரம் குறித்து  &#8216;ஆஜ் தக்&#8217; தொலைக்காட்சியில் கடந்த புதன்கிழமை மாலை 5 மணிக்கு ராஜீவ் தியாகி வீட்டிலிருந்தபடி பங்கேற்ற காணொலி விவாதம் தான் அவரது கடைசி நிகழ்ச்சியாக முடிந்தது. தொலைக்காட்சி விவாதத்தின்போது, மாரடைப்பு ஏற்பட்டதால், ராஜீவ் தியாகியை அவரது குடும்பத்தினர் கெய்ஜாபாத்தில் உள்ள மருத்துவனைக்கு அழைத்துச் சென்றனர். தீவிர சிகிச்சைக்குப் பின்பும், அவரைக் காப்பாற்ற முடியவில்லை.<br><br>இது குறித்து ட்வீட் செய்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அகமது பட்டேல், &#8221;இத்தகைய விவாதங்களின் அர்த்தமற்ற, நச்சுத் தன்மையுடைய அபாயகரமான செயல்பாட்டை எவ்வாறு குறைப்பது என்பது பற்றி  தொலைக்காட்சி ஆசிரியர்களும், நெறியாளர்களும் யோசிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். சில சமயங்களில் பயன்படுத்தப்படும் வார்த்தை, துப்பாக்கிக் குண்டுக்கு இணையானதாக இருக்கும்&#8221; என்றும் அவர் எச்சரித்துள்ளார்.</p>



<p>காங்கிரஸ் கட்சியின் டிஜிட்டல் &nbsp;தொடர்பு ஒருங்கிணைப்பாளர் கவுரவ் பந்தி தமது ட்விட்டர் பதிவில், &#8221;விவாதத்தில் தியாகியைப் பார்த்து பத்ரா பேசிய வார்த்தைகளை காங்கிரஸ் தொண்டர்கள் எப்போதும் மறக்கமாட்டார்கள். விவாதத்தின்போது, ராஜீவ் தியாகியைப் பார்த்து &nbsp;பத்ரா &nbsp;பேசும் மோசமான வார்த்தைகளைப் பாருங்கள்&#8221; என்று குறிப்பிட்டுள்ளார்.<br><br>&#8221;நெற்றியில் பொட்டு வைப்பதால் ஒருவர் உண்மையான இந்துவாக மாறிவிடமாட்டார். நீங்கள் நெற்றியில் பொட்டு வைக்க விரும்பினால், இதயப்பூர்வமாக வைக்க வேண்டும்&#8221; என்று பாஜகவின் பத்ரா &nbsp;பேசினார். பெங்களூருவில் வீடு எரிப்புக்கு யார் காரணம் என்று கூற உங்களுக்கு தைரியம் உள்ளதா? என கேட்டார்.<br><br>இந்த சம்பவம் குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா செய்தியாளர்களிடம் கூறும்போது, நோயாளிகள் மற்றும் மிதமான குரலில் உரையாடுவோரின் உயிர்களை, எவ்வளவு காலத்துக்கு நச்சுத் தன்மைவாய்ந்த விவாதங்களும், விஷத்தை கக்கும் நெறியாளர்களும் பறிக்கப்போகிறார்களோ? என்று கேள்வி எழுப்பினார்.<br><br>இதற்கிடையே, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகருக்கு காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்வீர் ஷெர்கில் எழுதியுள்ள கடிதத்தில், அவதூறு, பரபரப்பு மற்றும் நச்சு கலந்த தொலைக்காட்சி விவாதங்களை கட்டுப்படுத்த ஊடகங்களுக்கு நடத்தை விதிகளை அமல்படுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.<br><br>&#8221;பார்ப்போரின் காதுகளின் ஜவ்வு கிழியும் அளவுக்கு விவாதங்களில் பங்கேற்போரை சூடாக்கி கத்தவிடும் விளையாட்டை காட்சி ஊடகங்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும், குறிப்பாக, பாஜகவின் பத்ரா போன்றவர்களை ஊக்குவிப்பதையும் தவிர்க்க வேண்டும்&#8221; என்று இளைஞர் காங்கிரஸின் தேசிய பிரச்சாரக் குழு பொறுப்பாளர் ஒய்.பி. ஸ்ரீவத்சவா கோரிக்கை விடுத்துள்ளார்.<br><br>அத்துமீறி போய்க் கொண்டிருக்கும் தொலைக்காட்சிகளின் விவாதங்களுக்கு, ராஜீவ் தியாகியின் மரணமாவது முற்றுப்புள்ளி வைக்குமா?</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/opinion-analysis/congress-slams-toxic-tv-debates-for-rajiv-tyagis-death/">ராஜீவ் தியாகியை காவு வாங்கிய &#8216;விஷம்&#8217; கலந்த ஊடக விவாதம்: காங்கிரஸ் தலைவர்கள் ஆவேசம்</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://desiyamurasu.com/opinion-analysis/congress-slams-toxic-tv-debates-for-rajiv-tyagis-death/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
	</channel>
</rss>
