<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>rajiv gandhi Archives - தேசிய முரசு - Desiya Murasu</title>
	<atom:link href="https://desiyamurasu.com/tag/rajiv-gandhi/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://desiyamurasu.com/tag/rajiv-gandhi/</link>
	<description>DesiyaMurasu – Daily Opinions &#38; Analysis on Latest News  &#124; Tamil News</description>
	<lastBuildDate>Mon, 17 Jan 2022 10:10:34 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.8.3</generator>

<image>
	<url>https://desiyamurasu.com/wp-content/uploads/2020/07/cropped-FAV-copy-1-32x32.png</url>
	<title>rajiv gandhi Archives - தேசிய முரசு - Desiya Murasu</title>
	<link>https://desiyamurasu.com/tag/rajiv-gandhi/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? &#8211; ஆ.கோபண்ணா</title>
		<link>https://desiyamurasu.com/news-tamilnadu/why-saidai-duraisamy-criticising-congress-when-praising-mgr/</link>
					<comments>https://desiyamurasu.com/news-tamilnadu/why-saidai-duraisamy-criticising-congress-when-praising-mgr/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Admin]]></dc:creator>
		<pubDate>Mon, 17 Jan 2022 10:10:32 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழக அரசியல்]]></category>
		<category><![CDATA[congress]]></category>
		<category><![CDATA[indira gandhi]]></category>
		<category><![CDATA[MGR]]></category>
		<category><![CDATA[rajiv gandhi]]></category>
		<guid isPermaLink="false">https://desiyamurasu.com/?p=4588</guid>

					<description><![CDATA[<p>தமிழகத்தில் 13 ஆண்டுகாலம் தொடர்ந்து முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். அவர்களின் பிறந்தநாள் இன்று. எம்.ஜி.ஆர். அவர்கள் அ.தி.மு.க. தொடங்குவதற்கும், ஆட்சியில் செயல்படுவதற்கும் உறுதுணையாக இருந்தவர்கள் பிரதமர்களாக இருந்த இந்திரா காந்தியும், ராஜிவ்காந்தி அவர்களும் என்பதை அனைவரும் அறிவார்கள். இவை அன்றைய அரசியலில் உருவான திருப்புமுனைகளால் ஏற்பட்டது. எம்.ஜி.ஆர். புகழைப் பரப்புகிற முயற்சியில் சைதை துரைசாமி அவர்கள் ஈடுபடுவதில் எந்த தவறும் இல்லை. அவரோடு அரசியலில் பயணித்தவருக்கு அத்தகைய உரிமை உண்டு. ஆனால், இன்று தினத்தந்தியில் அவர் எழுதி [&#8230;]</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-tamilnadu/why-saidai-duraisamy-criticising-congress-when-praising-mgr/">எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? &#8211; ஆ.கோபண்ணா</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>தமிழகத்தில் 13 ஆண்டுகாலம் தொடர்ந்து முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். அவர்களின் பிறந்தநாள் இன்று. எம்.ஜி.ஆர். அவர்கள் அ.தி.மு.க. தொடங்குவதற்கும், ஆட்சியில் செயல்படுவதற்கும் உறுதுணையாக இருந்தவர்கள் பிரதமர்களாக இருந்த இந்திரா காந்தியும், ராஜிவ்காந்தி அவர்களும் என்பதை அனைவரும் அறிவார்கள். இவை அன்றைய அரசியலில் உருவான திருப்புமுனைகளால் ஏற்பட்டது. எம்.ஜி.ஆர். புகழைப் பரப்புகிற முயற்சியில் சைதை துரைசாமி அவர்கள் ஈடுபடுவதில் எந்த தவறும் இல்லை. அவரோடு அரசியலில் பயணித்தவருக்கு அத்தகைய உரிமை உண்டு. ஆனால், இன்று தினத்தந்தியில் அவர் எழுதி வெளிவந்துள்ள கட்டுரையில் &#8216;திருப்பூர் குமரன் மனைவி இராமாயி அம்மாள் வறுமையில் வாடிய போது காங்கிரஸ் கட்சி உதவி செய்ய முன்வராமல் அவரை மறந்துவிட்டதாக&#8217; குற்றம்சாட்டி எழுதியிருக்கிறார். முதலமைச்சர் எம்.ஜி.ஆர்., திருப்பூர் குமரன் மனைவிக்கு நிதியுதவி செய்ததைப் பற்றிக் குறிப்பிடும் போது, தேவையில்லாமல் காங்கிரஸ் கட்சியை ஏன் சீண்டிப் பார்க்கிறார் என்று தெரியவில்லை. 1967இல் ஆட்சியை காங்கிரஸ் கட்சி இழந்த பிறகு முதலமைச்சர்களாக இருந்த கலைஞரும், எம்.ஜி.ஆரும் இதுபோன்ற உதவிகளை நிறையச் செய்திருக்கிறார்கள். அதைப் பற்றிக் குறிப்பிடும் போது காங்கிரஸ் கட்சியைப் பற்றி விமர்சிக்க வேண்டிய அவசியம் இல்லை.</p>



<p>மறைந்த எம்.ஜி.ஆருக்கு அன்றைய பிரதமர் இந்திரா காந்தி செய்த உதவிகளைக் கணக்கிடுகிற போது, எம்.ஜி.ஆர். செய்த இத்தகைய உதவிகள் பொருட்படுத்தக்கூடியது அல்ல. எம்.ஜி.ஆர். உடல்நலக்குறைவு ஏற்பட்டு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, அவரைப் பார்க்க பிரதமர் இந்திரா காந்தி தனி விமானத்தில் அவசர அவசரமாக சென்னை வந்தார். மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து அப்போலோ மருத்துவமனைக்கு இந்திரா காந்தி பயணித்த காரின் பின்னே அ.தி.மு.க. அமைச்சர்கள் சோகமே உருவாய் அவர்களது கார்களில் அணிவகுத்து வந்ததை நானே நேரில் பார்த்திருக்கிறேன். அப்போலோவில் எம்.ஜி.ஆரின் உடல்நலம் குறித்து மருத்துவர்களிடம் விசாரித்து விட்டு அவருக்கு உரிய சிகிச்சைகளை செய்வதோடு, தேவைப்பட்டால் வெளிநாட்டில் சிகிச்சை செய்யவும் ஏற்பாடு செய்வதாகக் கூறினார். பிறகு, எம்.ஜி.ஆருக்கு வெளிநாட்டுச் சிகிச்சை தேவைப்பட்டதால் விமானத்தையே மருத்துவமனையாக்கி, அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி அவரை அமெரிக்காவுக்கு பாதுகாப்பாகப் பயணிக்க வைத்து, மருத்துவமனையில் அனுமதித்து உரிய சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தவர் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி.</p>



<p>அதைப்போலவே இந்திரா காந்தி படுகொலைக்குப் பிறகு நடைபெற்ற 1984 தேர்தலில் அமெரிக்க மருத்துவமனையிலிருந்தே வேட்புமனு தாக்கலில் கையொப்பமிட்டுத் தேர்தலில் நிற்பதற்கு அனைத்து வசதிகளையும் செய்தவர் பிரதமராக இருந்த ராஜிவ்காந்தி. அத்தகைய நன்றிப் பெருக்கை வெளிப்படுத்துகிற வகையில் தான் சென்னை கத்திப்பாரா சந்திப்பில் பண்டித ஜவஹர்லால் நேரு சிலை திறப்பு விழாவில் அன்றைய பிரதமர் ராஜிவ்காந்தியை முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் கட்டித் தழுவி கண்ணீர் மல்க உரையாற்றியதை சைதை துரைசாமி மறந்திருக்க முடியாது. தமது உயிரைக் காப்பாற்றிய இந்திரா படுகொலை செய்யப்பட்டது மருத்துவமனையில் இருந்த போது எம்.ஜி.ஆருக்கு தெரிவிக்கப்படவில்லை. உடல்நலம் தேறிய சூழலில் ராஜிவ்காந்தி பிரதமராகப் பொறுப்பேற்று முதல் முறையாக சந்திக்கிற போது, எம்.ஜி.ஆர். எந்தளவிற்கு உணர்ச்சிப் பெருக்கோடு இருந்தார் என்பதை எல்லோரும் அறிவார்கள். தமது உயிரைக் காப்பாற்றிய இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்ட பிறகு, பிரதமராகப் பொறுப்பேற்ற ராஜிவ்காந்தியுடன் எம்.ஜி.ஆர். சந்தித்த காட்சி அங்கு கூட்டத்தில் திரண்ட மக்களின் நெஞ்சை உலுக்குவதாக இருந்தது. அத்தகைய நன்றி உணர்ச்சிமிக்க உறவுகளை வைத்திருந்ததை எல்லாம் மறந்துவிட்டு திருப்பூர் குமரன் மனைவிக்கு செய்த நிதியுதவியை குறிப்பிட்டு காங்கிரஸ் கட்சியை சிறுமைப்படுத்துவது எந்தவகையில் நியாயம் என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை.</p>



<p>அன்னை இந்திரா காந்தி, அமரர் ராஜிவ்காந்தி ஆகியோரின் ஆதரவு இல்லையென்றால் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் அரசியலில் பெற்ற வெற்றிகள் எந்தளவிற்கு சாத்தியமாகியிருக்கும் என்பதை மனசாட்சி உள்ளவர்கள் சிந்திக்க வேண்டும்.</p>



<p>எம்.ஜி.ஆர். புகழைப் பாடுங்கள். அதற்காக காங்கிரசை இழிவுபடுத்தாதீர்கள். அதைச் செய்வதற்கு உங்களுக்கு உரிமை இல்லை.</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-tamilnadu/why-saidai-duraisamy-criticising-congress-when-praising-mgr/">எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? &#8211; ஆ.கோபண்ணா</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://desiyamurasu.com/news-tamilnadu/why-saidai-duraisamy-criticising-congress-when-praising-mgr/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>எந்தவொரு குற்றவாளியையும் விடுதலை செய்வது, நீதிமன்றம் எடுக்கும் முடிவாக மட்டுமே இருக்க வேண்டும் &#8211; தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை (21.05.2021)</title>
		<link>https://desiyamurasu.com/tncc-statements/ks-alagiri-statement-on-release-of-rajiv-assasination-case-convicts/</link>
					<comments>https://desiyamurasu.com/tncc-statements/ks-alagiri-statement-on-release-of-rajiv-assasination-case-convicts/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Admin]]></dc:creator>
		<pubDate>Thu, 27 May 2021 12:01:29 +0000</pubDate>
				<category><![CDATA[ஏவுகணைகள்]]></category>
		<category><![CDATA[rajiv gandhi]]></category>
		<category><![CDATA[rajiv gandhi assassination]]></category>
		<category><![CDATA[TNCC President K S Alagiri]]></category>
		<guid isPermaLink="false">https://desiyamurasu.com/?p=4420</guid>

					<description><![CDATA[<p>குடியரசுத் தலைவருக்கு தமிழக முதலமைச்சர் எழுதியிருக்கும் கடிதத்தில் தமிழக காங்கிரஸ் கட்சிக்கு உடன்பாடு இல்லை. இது சமூகத்தில் தவறான பிரதிபலிப்பையும், முன்னுதாரணத்தையும் உருவாக்கி விடும். எந்தவொரு குற்றவாளியையும் விடுதலை செய்வது, நீதிமன்றம் எடுக்கும் முடிவாக மட்டுமே இருக்க வேண்டும். ராஜிவ் காந்தி கொலை வழக்கில் நூற்றுக்கணக்கானோர் விசாரிக்கப்பட்டு 26 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. பிறகு மேல் முறையீட்டில் 19 பேர் விடுதலை செய்யப்பட்டனர். 7 பேருக்கு மட்டுமே தண்டனை உறுதி செய்யப்பட்டது. இதனைக் காங்கிரஸ் கட்சி [&#8230;]</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/tncc-statements/ks-alagiri-statement-on-release-of-rajiv-assasination-case-convicts/">எந்தவொரு குற்றவாளியையும் விடுதலை செய்வது, நீதிமன்றம் எடுக்கும் முடிவாக மட்டுமே இருக்க வேண்டும் &#8211; தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை (21.05.2021)</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>குடியரசுத் தலைவருக்கு தமிழக முதலமைச்சர் எழுதியிருக்கும் கடிதத்தில் தமிழக காங்கிரஸ் கட்சிக்கு உடன்பாடு இல்லை. இது சமூகத்தில் தவறான பிரதிபலிப்பையும், முன்னுதாரணத்தையும் உருவாக்கி விடும். எந்தவொரு குற்றவாளியையும் விடுதலை செய்வது, நீதிமன்றம் எடுக்கும் முடிவாக மட்டுமே இருக்க வேண்டும்.</p>



<p>ராஜிவ் காந்தி கொலை வழக்கில் நூற்றுக்கணக்கானோர் விசாரிக்கப்பட்டு 26 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. பிறகு மேல் முறையீட்டில் 19 பேர் விடுதலை செய்யப்பட்டனர். 7 பேருக்கு மட்டுமே தண்டனை உறுதி செய்யப்பட்டது. இதனைக் காங்கிரஸ் கட்சி எதிர்க்கவில்லை. ஏனெனில் சட்டம் தனது கடமையைச் செய்யும் என்பதில் காங்கிரஸ் கட்சிக்கு நம்பிக்கை உண்டு. அந்த 19 பேரைப் போல இந்த 7 பேரையும் குற்றமற்றவர்கள் என்று உச்ச நீதிமன்றம் விடுதலை செய்திருந்தால் அதனை யாரும் எதிர்க்கப் போவதில்லை.</p>



<p>ஆனால், இந்த 7 பேரும் குற்றவாளிகள் என்பது தான் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு. அவர்கள் சட்ட ரீதியாகப் போராடி நீதிமன்ற தீர்ப்பு மூலம் விடுதலை பெற்றால் அதனைக் காங்கிரஸ் கட்சி எதிர்க்காது. ஆனால், 7 பேர் விடுதலைக்காக அரசியல் அழுத்தம் கொடுப்பதை ஏற்க முடியாது.</p>



<p>30 ஆண்டுகளுக்கும் மேலாக எத்தனையோ பேர் சிறைகளில் இருக்கும்போது, இந்த 7 பேருக்காக மட்டும் அமைச்சரவை தீர்மானம், ஆளுநரிடம் கோரிக்கை, போராட்டங்கள் என்று அரசியல் அழுத்தம் கொடுப்பது ஏன்? சிறையில் இருப்பவர்களில் இந்த 7 பேர் மட்டும்தான் தமிழர்களா?</p>



<p>தமிழக சிறைகளில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் அனைவரையும் விடுதலை செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டால், அதற்கு ஆதரவளிக்கக் காங்கிரஸ் தயாராக உள்ளது. இந்த 7 பேருக்கும் மட்டும் சிறப்புக் கருணை காட்டுவதை ஏற்க முடியாது.</p>



<p>நீதிமன்ற தீர்ப்புக்குப் புறம்பாக சில குற்றவாளிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுப்பது, வருங்காலங்களில் பல்வேறு குழுக்கள் அல்லது விரும்பத் தகாத சக்திகள், கொலைக் குற்றவாளிகளை விடுவிக்குமாறு கோரிக்கை விடுக்க வழி ஏற்படுத்தி விடும் அபாயம் உள்ளது. காவல் துறை போன்ற விசாரணை அமைப்புகளும், நீதிமன்றங்களும் தேவையில்லை என்ற எண்ணத்தையும் ஏற்படுத்தி விடும்.</p>



<p>சட்டப்படி குற்றவாளிகள் என்று எந்த நீதிமன்றம் தண்டித்ததோ, அதே நீதிமன்றம் விடுதலை செய்தால் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. எனவே, 7 பேர் விடுதலையைச் சட்ட ரீதியாக அணுக வேண்டுமே தவிர, அரசியல் ரீதியாக அணுகக் கூடாது என்பதே தமிழக காங்கிரஸ் கட்சியின் உறுதியான நிலைப்பாடு.</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/tncc-statements/ks-alagiri-statement-on-release-of-rajiv-assasination-case-convicts/">எந்தவொரு குற்றவாளியையும் விடுதலை செய்வது, நீதிமன்றம் எடுக்கும் முடிவாக மட்டுமே இருக்க வேண்டும் &#8211; தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை (21.05.2021)</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://desiyamurasu.com/tncc-statements/ks-alagiri-statement-on-release-of-rajiv-assasination-case-convicts/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>என் ராஜிவ்! … சோனியா காந்தி எழுதிய தொடர் – 4</title>
		<link>https://desiyamurasu.com/news-india/my-rajiv-by-sonia-gandhi-4/</link>
					<comments>https://desiyamurasu.com/news-india/my-rajiv-by-sonia-gandhi-4/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[ஆ. கோபண்ணா]]></dc:creator>
		<pubDate>Mon, 18 Jan 2021 15:29:20 +0000</pubDate>
				<category><![CDATA[தேசிய அரசியல்]]></category>
		<category><![CDATA[Indira Gandhi Assassination]]></category>
		<category><![CDATA[rajiv gandhi]]></category>
		<category><![CDATA[sonia gandhi]]></category>
		<guid isPermaLink="false">https://desiyamurasu.com/?p=3918</guid>

					<description><![CDATA[<p>பிரதமர் இந்திராவின் படுகொலை குறித்து அன்னை சோனியா! கடந்த சில ஆண்டு நானும் ராஜிவும் அரசியலை நெருங்கிய சூழ்நிலையில் பார்க்கிறோம். அரசியலின் தரம் தாழ்ந்த நிலைகளை நாங்கள் பார்த்திருக்கிறோம். என் மாமியாரோடு இணைந்து கொள்கைகளையும் திட்டங்களையும் வகுத்த சில மூத்த தோழர்கள், திடீரென அவரை எதிர்த்தனர். அவர் முழுமையாக நம்பிய அரசியல் நண்பர்கள், துரோகம் இழைத்தனர். அவரைக் கடுமையாக விமர்சித்தனர். அவரை எதிர்த்தவர்கள் பழிவாங்க மேற்கொண்ட பிரச்சாரம் கண்டு, சாதாரண மக்களும் திகைப்படைந்தனர். அரசியல்வாதியானால், வாழ்க்கை எவ்வாறு [&#8230;]</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/my-rajiv-by-sonia-gandhi-4/">என் ராஜிவ்! … சோனியா காந்தி எழுதிய தொடர் – 4</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<h4 class="wp-block-heading"><strong><span class="has-inline-color has-vivid-red-color">பிரதமர் இந்திராவின் படுகொலை குறித்து அன்னை சோனியா!</span></strong></h4>



<p>கடந்த சில ஆண்டு நானும் ராஜிவும் அரசியலை நெருங்கிய சூழ்நிலையில் பார்க்கிறோம். அரசியலின் தரம் தாழ்ந்த நிலைகளை நாங்கள் பார்த்திருக்கிறோம். என் மாமியாரோடு இணைந்து கொள்கைகளையும் திட்டங்களையும் வகுத்த சில மூத்த தோழர்கள், திடீரென அவரை எதிர்த்தனர். அவர் முழுமையாக நம்பிய அரசியல் நண்பர்கள், துரோகம் இழைத்தனர். அவரைக் கடுமையாக விமர்சித்தனர். அவரை எதிர்த்தவர்கள் பழிவாங்க மேற்கொண்ட பிரச்சாரம் கண்டு, சாதாரண மக்களும் திகைப்படைந்தனர். அரசியல்வாதியானால், வாழ்க்கை எவ்வாறு இருக்கும் என்பதை நானும் ராஜிவும் நன்கு அறிவோம்.</p>



<p>அன்றைய சிக்கலால் ராஜிவ் மன வேதனையுற்றார். என் மாமியார் தனியாக இம்சிக்கப்பட்டார். இப்படிப் பட்ட நிலையில், அவருக்கு இளைப்பாற மகனின் தோள்கள் தேவைப்படும்போது, ராஜிவ் எவ்வாறு சுகவாழ்க்கையைத் தேர்ந்தெடுக்க முடியும்? அவருடைய தாயரை நான், மிகவும் நேசித்ததால், மன உளைச்சல் அடைந்தேன். தம் தாய்க்குத் துணையாக நின்று ராஜிவ் பொறுப்புடன் செய்ய வேண்டிய கடமைகளை நான் உணர்ந்தேன்.</p>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img fetchpriority="high" decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/01/indira_funeral_11.jpg" alt="" class="wp-image-3930" width="629" height="500" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/01/indira_funeral_11.jpg 361w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/01/indira_funeral_11-300x239.jpg 300w" sizes="(max-width: 629px) 100vw, 629px" /></figure></div>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/01/indira_funeral1.jpg" alt="" class="wp-image-3926" width="630" height="420" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/01/indira_funeral1.jpg 997w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/01/indira_funeral1-300x200.jpg 300w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/01/indira_funeral1-768x513.jpg 768w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/01/indira_funeral1-750x501.jpg 750w" sizes="(max-width: 630px) 100vw, 630px" /></figure></div>



<p>அதே வேளையில், அவரைப் பலி ஆடாக ஆக்கும் சமுதாய முறை பற்றி நான் கோபமும், வெறுப்பும் அடைந்தேன். அது அவரை நசுக்கி அழித்துவிடும் என்பதை நான் முழுவதுமாக அறிவேன். அந்த நீண்ட நெடிய ஆண்டு, ஒவ்வொரு நிமிடமும், ஒரு அதல பாதாளத்தை நோக்கிச் சென்றது. எங்களுக்கு உதவி செய்ய எவருமில்லை! எல்லோரும் ஏற்கத்தக்க நியாயமான ஒரு தீர்வை &#8211; அற்புதத்தை நான் எதிர்பார்த்தேன்! ராஜிவ் சிதைவடைவதை என்னால் தாங்கிக்கொள்ள முடியாது. அவர் என்னுடைய ராஜிவ்! ஏனென்றால், அந்த அளவுக்கு நாங்கள் ஒருவரை ஒருவர் நேசித்தோம்! அவர் தம் தாயாருக்குக் கை கொடுத்து உதவ எண்ணினால், அதற்காக அவரோடு எங்குச் சென்றும் போரிடத் தயாரானேன்.</p>



<p>ராஜிவ் அரசியலில் நுழைந்த வினாடி முதல் எங்கள் வாழ்க்கை மாறியது. இதற்குமுன் அவர் வாழ்க்கை வேறு விதமானது ! கவனமான வேலை! அதன்பின் ஓய்வு! &#8211; எத்தகைய காலம் அது? முன்னதாக இருந்த எங்கள் வாழ்க்கை உலகம் மிகமிக நெருக்கமானது! புரிந்து கொள்ளத் தக்கது! இப்போது அவர் வாழ்க்கை மக்கள் கூட்டத்தின் மத்தியில்! தினமும் நூற்றுக்கணக்கானோர் &#8211; அரசியல்வாதிகள், கட்சி ஊழியர்கள் அமேதித் தொகுதி மக்கள் &#8211; தங்கள் பிரச்சினை களை தீர்க்க வேண்டுதல் போன்றவை. அவர் எங்களோடு இருக்கும் நேரம் விலைமதிக்க முடியாதது! அவரது பயணத்தின் போதும் இரவில் வெகுநேரம் விழித்திருந்த போதும் உடனிருக்க, நாங்கள் எங்களை மாற்றிக் கொண்டு, அதற்கேற்பப் பழக்கப்படுத்திக் கொண்டு விட்டோம்.</p>



<p>அந்தக் காலத்திய திடீர் எதிர்பார்ப்புகளைப் பற்றி அவர் பரபரப்பு அடையவில்லை. தமக்கு இருக்கும் அரசியல் சுமை, தனிமை, இழப்பு என எது பற்றியும், ஒருபோதும் அவர் புகார் கூறியதில்லை . எவ்விதப் பரப்பரப்புமின்றி, வேலையில் ஈடுபடுவது அவரது இயல்பு. ராகுலுக்கு எழுதிய கடிதங்களுள் ஒன்றிலும் இது வெளிப்படுகிறது!</p>



<p>“ஏதாவது ஒன்றைச் செய்தால், அதைச் செய்மையாகச் செய்யவேண்டும்! நல்லது எதையும் அரை குறையாகச் செய்யக் கடாது.! உன்னால் எவ்வளவு சிறப்பாகச் செய்ய முடியுமோ அவ்வளவு சிறப்பாகச் செய்ய, மேலும் கடினமாக உழை! வாழ்க்கை ஒரு பந்தயம் போன்றது. சற்று அதிகமாக உழைத்து முன்னேறு! முழுமை அடையும் வரை முயன்று உழை! சிறு சிற விஷயங்கள்தான் மாற்றங்களை உண்டாக்கும்” என்று ராகுலுக்கு ஒரு கடிதத்தில் எழுதியிருந்தார்.</p>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large"><img decoding="async" width="760" height="499" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/01/0-Copy.jpg" alt="" class="wp-image-3928" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/01/0-Copy.jpg 760w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/01/0-Copy-300x197.jpg 300w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/01/0-Copy-750x492.jpg 750w" sizes="(max-width: 760px) 100vw, 760px" /></figure></div>



<p>அரசியல் பணியில் ஈடுபட்டிருந்தாலும், ராஜிவுக்குக் குடும்பம் மிகவும் தேவையாக இருந்தது. அரசியலை அறிந்த ராஜிவ் தாம் நன்கறிந்த, நம்பத்தக்க, நேர்மையான, நிலையான உலகையே விரும்பினார். அரசியலுக்கு மாறுபட்ட, உண்மையான, அன்பு நிறைந்த புகலிடமாக அது அவருக்குத் தெரிந்தது.</p>



<p>அக்காலத்தில், அவர் எனக்கு இவ்வாறு எழுதிய கடிதம் ஒன்றில், “இந்து மரபின்படி, ஒரு ஆடவன் அரை மனிதன்தான். அவன் மனைவியே அவனை முழுமையாக்குகிறாள். இதுபோலவே நானும் எண்ணுகிறேன். நீ இல்லாவிட்டால், என் வாழ்க்கை மிகவும் கடினமானதாக இருக்கும். அரசியலில் நான் இருக்கும்போது இது மிகவும் உண்மையாக இருப்பதாக என்னுகிறேன்.”</p>



<p>ராஜிவின் அரசியல் பிரவேசத் தீர்மானத்தை நான் ஏற்றாலும், எங்கள் வாழ்க்கையில் அதனால் ஏற்பட்ட பின்விளைவுகளால், சிறிதுகாலம் கழித்தே எனக்கு மனதார ஈடுபாடு ஏற்பட்டது. குடும்பத்தை நடத்துவதோடு, நான் முன்பு தொடங்கி இடையில் விட்டுவிட்டிருந்த வண்ண ஓவியங்களை வரையும் பயிற்சியில் மீண்டும் ஈடுபடத் தொடங்கினேன். ராஜிவ், அவரது தாயார் ஆகியோரின் ஓய்வு நேரங்களுக்கேற்ப, என் பயிற்சி நேரத்தையும் வெளி உலக நிகழ்ச்சிகளையும் மாற்றி அமைத்துக்கொண்டேன். என் மாமியாரின் ஆழ்ந்த மனக் காயங்களை உணர்ந்து, நானும் ராஜிவும் அவருக்கு ஒரு பாதுகாப்பு அரணாக இருந்து செயல்பட்டோம்.</p>



<p>இக்காலகட்டத்தில், குடும்பத்திலும் மாற்றங்கள் ஏற்பட்டன. 1982இல் ராகுலுக்கு ராஜிவ் எழுதிய கடிதத்தில், “நான் அமேதி போகிறேன். அம்மாவும் செல்கிறார். தொடக்கத்தில் ஒவ்வொருவரும் அவரையே இமை கொட்டாது பார்ப்பார்கள். பழக்கப்படும் வரை இது ஒரு தர்மசங்கடமாக இருக்கும். அவள் மிகவும் தைரியசாலி!” என்று குறிப்பிட்டு நிலைமையை உணர்த்தினார்.</p>



<p>1982 இல் ராகுல் அங்கேயே தங்கிப் படிக்கும் விடுதி இணைந்த பள்ளி ஒன்றுக்கு அனுப்பப்பட்டான். 1983 இல் பிரியங்கா செல்ல வேண்டியிருந்தது. &#8216;அனுபவமே ஒருவரை வலுவுடையவராகவும் தற்சார்பு உடையவராகவும் மாற்றும்&#8217; என்பது ராஜிவின் உறுதியான நம்பிக்கை. ஆனால்,<br>குடும்பத்தின்மீது ஏற்பட்ட தாக்குதலால், தங்களைத் தாங்களே எவ்வாறு சமாளித்துக் கொள்ளப் போகிறார்கள் என ராஜிவ் கவலைப்பட்டார். டெல்லியில், பள்ளித் தோழர்கள் அவர்களைத் துன்புறுத்திய<br>பிரச்சினைகளை முன்பே எதிர்கொண்டுள்ளார்கள். அப்போது அவர்களுக்கு ஆதரவாக நாங்கள் இருந்தோம்.</p>



<p>எனவே, மனோதிடத்தை வளர்த்துக்கொள்ளுமாறு ராஜிவ் அடிக்கடி ராகுலுக்குக் கடிதம் எழுதினார். “சில சமயம் அப்பா, பாட்டி, அம்மா பற்றி டெல்லியில் பத்திரிகைகளில் செய்திகள் வரும். அதற்காகக் கவலைப்படாதே! அதுபற்றிச் சில பள்ளித் தோழர்கள்கூட உன்னை மனக் கவலையடையச் செய்யலாம். ஆனால், அச்செய்திகளில் பல, உண்மை அன்று! அத்தகைய புகைச்சல்களை எதிர்கொள்ளக் கற்றுக்கொள்! உன்னை எரிச்சலடையச் செய்யும் செய்திகளைப் பற்றிக் கவலை கொள்ளாதே!” என ராஜிவ், ராகுலுக்கு எழுதிய கடிதம் ஒன்றில் குறிப்பிட்டார்.</p>



<p>இதற்கிடையில், பஞ்சாபில் நிலவியிருக்க நிலை, தேச ஒற்றுமைக்குப் பேரபாயமாகத் தோன்றியது. பிரிவினை சக்திகள் பலம்பெற்றன. மிருகத்தனமான பயங்கரவாதக் கொலைகள், மேலும் மேலும் அதிகரித்தன. ராகுலையும் பிரியங்காவையும் பயங்கரவாதிகள் குறி வைத்திருப்பதாக எங்களுக்கு எச்சரிக்கை தரப்பட்டது. ஆபத்து அதிகரித்தபோது, அந்தப் பள்ளியில் வைத்து அவர்களைப் சமாளிப்பது மிகவும் கடினமாக இருந்தது. 1984இன் வசந்த காலத்தில் டெல்லி பள்ளிகளில் அவர்கள் சேர்க்கப்பட்டார்கள்.</p>



<p>அவர்களுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட பல இடைஞ்சல்களில் இது முதன்மையானது. ஆனால், இதற்கு ஈடான வேறு நிகழ்வுகளும் உண்டு. அவர்கள் பாட்டியின் வாழ்க்கையில் கடைசி ஆறு மாதங்களை அவர்களுடன் கழித்தார். அவர்களின் பாதுகாப்பு பற்றி அச்சப்பட்டாலும் அவர்களோடு இருக்கதில் பாட்டிக்கு அளவற்ற மகிழ்ச்சி.</p>



<p>அக்பர் சாலை அலுவலகத்தை எங்கள் வீட்டோடு இணைத்த வாயில் படியைத் தாண்டி, வெளியே விளையாடப் போகக் கூடாதெனப் பலமுறை என் மாமியார் ராகுலுக்கும் பிரிங்காவுக்கும் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த இடத்தில்தான், பின்னர் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.</p>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large"><img loading="lazy" decoding="async" width="673" height="864" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/01/rare-photos-of-former-pm-rajiv-gandhi_1590049201140.jpg" alt="" class="wp-image-3931" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/01/rare-photos-of-former-pm-rajiv-gandhi_1590049201140.jpg 673w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/01/rare-photos-of-former-pm-rajiv-gandhi_1590049201140-234x300.jpg 234w" sizes="auto, (max-width: 673px) 100vw, 673px" /></figure></div>



<p>சில மாதங்களுக்குப் பிறகு, ராஜிவ் குழந்தைகளுக்கு எழுதிய கடிதத்தில், “என் தாயார் தாம் இறக்கும் நாளை நன்கு அறிந்திருந்தார் என உறுதியாக நம்புகிறேன். அவ்வாறு அவர் ஏன் நினைத்தார் என எனக்குத் தெரியாது. ஆனால், அது உண்மை! அவர் செய்த பல செயல்கள், அவர் எங்களைப் பிரியத் தயாராக இருந்தார் என்பதையே உணர்த்தின. ஏனென்றால், அவர் அவ்வாறு செய்ய விரும்பாவிடினும், அவர் எடுத்த முடிவுகள், தலைவர் என்ற முறையில் அவர் செய்த கடின முடிவுகள், வாழ்க்கையைப் பற்றி அவரை அவ்வாறு எண்ணக் தூண்டின” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.</p>



<p>சீக்கிய பொற்கோயிலை ராணுவம் மீட்ட நிகழ்வுக்குப் பிறகு, எங்கள் வாழ்வில் ஒரு சோக நிழல் அலை பரவியது. தாம் இறந்தபின் தம்முடைய மரணச் சடங்குகள் எப்படி இருக்க வேண்டும் என்பன பற்றி ராஜிவிடமும் என்னிடமும் முன்பே பேசினார். தாம் கூற விரும்பிய அறிவுரைகளை எழுதினார். ராகுவிடம் தனியாகப் பேசினார். தைரியமாக இருக்குமாறு அவரிடம் கூறினார். தாம் வாழ்த்து முடித்துவிட்டதாகவும் தம்மால் இயன்ற பணிகளைச் செய்துள்ளதாகவும் தாய் இறந்தால் அழக்கடாது எனவும் கூறினார்.</p>



<p>வாழ்க்கையில் நாள்கள் கடந்து சென்றன. தீபாவளி வந்தது. எங்களோடு தீபாவளி நாள்களைக் கழிக்க ஒரிஸ்ஸாவிலிருந்து ராஜிவ் வந்தார். இதுபோன்ற நல்ல விழா நேரங்களில் அவர் வரத் தவறுவதில்லை, பழைமையான கணேச விக்ரகத்தின் முன்னால் என் மாமியார் தீபங்களை ஏற்றினார். வீட்டை ஒளி அலங்காரம் செய்வதில் தாங்கள் ஈடுபட்டோம். பட்டாசுகள் வெடித்தோம்!</p>



<p>தீபாவளி கொண்டாட்டம் முடிந்த மறுநாள் காலை, ராஜிவ் மேற்கு வங்கம் சென்றார். அன்று இரவு அதிகாலை 4 மணிக்கு நான் எழுந்திருந்தேன். எனக்கு ஆஸ்த்துமா மருந்து தேவைப்பட்டது. படுக்கை அறை விளக்கை ஏற்றி, மருந்துப் பெட்டிப் பக்கம் சென்றேன். அடுத்த அறையில் இருந்த என் மாமியாருக்குத் தொல்லைதரக் கூடாதென எண்ணினேன். ஆனால், என் அறைக்கதவு திறந்தது! எனக்கு ஒரே வியப்பு! அவர் கையில் டார்ச் விளக்கை வைத்துக்கொண்டு எனக்கு மாத்திரை தேடிக்கொடுத்து, ஒரு கோப்பைத் தண்ணீரையும் அளித்தார். மறுபடியும் உடல் நலக்குறைவு ஏற்பட்டால் தம்மைக் கூப்பிடச் சொன்னார். அனேகமாக அவர் தூங்காமல் விழித்திருந்திருப்பார் என எண்ணுகிறேன்.</p>



<p>அந்த வார இறுதியில், காஷ்மீர் செல்வது பற்றி மறுநாள் பேசத் தொடங்கினார். இலையுதிர் காலத்தில், சினார் மர வண்ண இலை பூக்களை அவர் பார்க்க மிகவும் விரும்பினார். அவற்றைக் கண் குளிரக் காண்பது என்பது அவருக்கு ஒரு முக்கிய சம்பவமாகத் தோன்றியது. காஷ்மீர் பற்றித் தம் உள்ளத்தில் அவர் கொண்டிருந்த எண்ண ஓட்டங்களுக்கு அது பிரியாவிடையோ என்னவோ? இருந்தும் என் உடல் நலக் குறைவு பற்றிய கவலை காரணமாக இரவில் அங்குத் தங்க அவர் தயங்கினார். நான் தனியாக வீட்டில் தங்க நேர்ந்தது பற்றிக் கவலை கொண்டார். இறுதியாகக் குழந்தைகளுடன் சென்றார்.</p>



<p>அக்டோபர் 28இல் அவர் காஷ்மீரிலிருந்து திரும்பினார். அன்றைய மாலைப் பொழுதை எங்கள் அறையில் அமைதியாகக் கழித்தார். வழக்கம்போல் தம் முராவினை (பிரம்பு நாற்காலி) எடுத்து வந்து அதில் அமர்ந்து அலுவலகப் பணிகளைக் கவனித்தார். இடையிடையே தொலைக்காட்சி பார்த்தலும் எங்களோடு அளவளாவுதலும் நடந்தன.</p>



<p>அடுத்த நாள் அதிகாலை ஒரிஸ்ஸா பயணம் முடித்துக்கொண்டு மாலையில் வீடு திரும்பினார். அன்று புவனேஸ்வரத்தில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில், “நான் வாழ்வேனா அல்லது சாவேனா என்பது பற்றி எனக்குக் கவலையில்லை. என் இறுதி மூச்சு உள்ளவரை தேசப்பணி ஆற்றுவேன், நான் இறந்தால்கூட, நான் சிந்தும் ஒவ்வொரு துளி இரத்தமும் ஒன்றுபட்ட சுதந்திர இந்தியாவைப் பலப்படுத்தி வலுப்படுத்தும்” என்று உரையாற்றினார்.</p>



<p>அக்டோபர் 31, அரசு விருந்தோடு முடிவடையும்படி ஒரு பரபரப்பான நாளாக வீடு இருக்கும். காலையில் பள்ளிக்குப் போக முத்தமிட்டு விடைபெற்றபோது, பிரியங்காவை அவர் இறுக்கமாகத் தழுவினார். ராகுலைக் கூப்பிட்டு, தாம் முன்பு கூறியவற்றை நினைவூட்டினார். அவர் அலுவலகம் புறப்படத் தயாராகும்போது, அறைக்குள் நான் நுழைத்தேன். மாலை விருந்து பற்றிச் சிறிது நேரம் பேசினார். காலதாமதமாகிவிட்டதால், மதிய உணவின்போது, இரவு விருந்து பற்றிப் பேச எண்ணினார்.</p>



<p>நான் குளிக்கச் சென்றேன். அப்போது வழக்கத்துக்கு மாறாகத் தீபாவளி பட்டாசு வெடிப்பது போன்ற ஒரு ஒலி கேட்டது. ஆனால், பட்டாசு வெடி போலல்லாமல், முற்றிலும் மாறான இசை அது! குழந்தைகளின் தாதியிடம் (ஆயா), என்ன என்று பார்க்க சொன்னேன். எனினும், ஏதோ பயங்கரம் நிகழ்ந்ததை நான் உணர்ந்தேன். வெளியே ஓடி வந்தேன். ஒரு அம்பாசிடர் கார் ஒன்றின் பின் இருக்கையில் என் மாமியார் கிடத்தப்பட்டிருந்தார். அவர் இறந்தவர் போன்று தோன்றினார். அவர் அருகில் நான் மண்டியிட்டு அமர்ந்தேன். பலத்த ஜனநெரிசல்களுக்கிடையே கார், மெதுவாக மருத்துவமனை நோக்கிச் சென்றது. எனக்குப் பேயறைந்த உணர்வு, ஏதேதோ எண்ணங்கள்! அவர் மூர்ச்சையாய் இருக்கிறாரா? அவர் காப்பாற்றப்படுவாரா? ராஜிவ் எங்கே? குழந்தைகள் எங்கே? படுபயங்கரம் ஒன்று நிகழ்ந்ததை என்னால் நம்ப முடியவில்லை. ஆனால், எல்லாமே முடிந்துவிட்டது!</p>



<p>மணித்துளிகள் உருண்டோடின. பெருந்திரளாக மக்கள், உற்றார் உறவினர் சென்றனர். குழந்தைகள் பள்ளியிலிருந்து அழைத்துவரப்பட்டு, சப்தர்ஜங் சாலையில் இருப்பதாக யாரோ கூறினார். ராஜிவ் மேற்கு வங்கத்தில் இருந்தார். தாயாருக்குக் காயமேற்பட்டதாக அவருக்குச் செய்தி அனுப்பப்பட்டது. டெல்லி திரும்பும் விமானத்தில் வானொலிச் செய்தியை அவர் கேட்டுள்ளார். மாலை 3.15 மணிக்கு மருத்துவமனையை அடைந்தார். மற்றவர்களோடு அவர் இருந்தார். ராஜிவுடன் ஒரே ஒரு வினாடி தனிமையில் இருக்க எனக்கு விருப்பம்! அவரைக் கட்சித் தலைமைப் பொறுப்பை ஏற்க அனைவரும் அழைப்பதாக ராஜிவ் என்னிடம் கூறினார். ராஜிவைப் பிரதமராக்க ஏற்பாடுகள் நடந்தன. அப்பதவி வேண்டாமென நான் மன்றாடினேன்; கெஞ்சினேன்! மாற்றார்கள் மத்தியில் இந்த வேண்டுகோளை விடுத்தேன். அவரும் கொல்லப்படுவார் என்றேன். அவர் என் கைகளை இறுகப் பிடித்துக்கொண்டு என்னைத் தழுவி அணைத்து, விரக்தியடையக்கூடாது’ என்றார். அவருக்குப் பிரதமர் பொறுப்பு ஏற்பதைத் தவிர வேறு வழியில்லை!</p>



<blockquote class="wp-block-quote is-layout-flow wp-block-quote-is-layout-flow"><p><strong><span class="has-inline-color has-vivid-red-color">“எப்படியும் ஒருநாள் நான் கொல்லப்படலாம்&#8221;</span></strong><span class="has-inline-color has-very-dark-gray-color"> என்றார்.</span></p></blockquote>



<p class="has-text-align-right"><em>… மீண்டும் அடுத்த ஞாயிறு தொடரும்</em></p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/my-rajiv-by-sonia-gandhi-4/">என் ராஜிவ்! … சோனியா காந்தி எழுதிய தொடர் – 4</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://desiyamurasu.com/news-india/my-rajiv-by-sonia-gandhi-4/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>என் ராஜிவ்! … சோனியா காந்தி எழுதிய தொடர் &#8211; 3</title>
		<link>https://desiyamurasu.com/news-india/my-rajiv-by-sonia-gandhi-3/</link>
					<comments>https://desiyamurasu.com/news-india/my-rajiv-by-sonia-gandhi-3/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Admin]]></dc:creator>
		<pubDate>Sun, 20 Dec 2020 07:11:32 +0000</pubDate>
				<category><![CDATA[தேசிய அரசியல்]]></category>
		<category><![CDATA[rajiv gandhi]]></category>
		<category><![CDATA[sonia gandhi]]></category>
		<guid isPermaLink="false">https://desiyamurasu.com/?p=3646</guid>

					<description><![CDATA[<p>ராஜிவ் கலாரசனையுள்ளவர் என்பதற்கு எத்தனையோ எடுத்துக்காட்டுகளைக் கூறலாம். அவற்றுள் ஒன்றை மட்டும் இங்கே குறிப்பிட வேண்டும். எங்கள் உறைவிடத் தோட்டத்திலிருந்த, சற்று வேறுபட்ட செடி கொடிகளை வைத்து வளர்த்ததிலிருந்து பிள்ளைகளது உயர்ந்த பார்வையையும் புலனுணர்வையும் வளர்க்கும் வழிவகைகளைப் பிரித்து உணர்த்தினார். புகைப்படம் எடுக்கும் அவர்களது கலை ஆர்வம் வளர்ந்ததும், அக்கலையின் தொழில் நுட்பம் குறித்த ஆலோசனைகளை வழங்கினார். ராகுல் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் அவனுக்கு எழுதிய கடிதம் ஒன்றில், ‘‘நீ புகைப்படங்களை எடுக்கிறாய் என நம்புகிறேன்&#8221; [&#8230;]</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/my-rajiv-by-sonia-gandhi-3/">என் ராஜிவ்! … சோனியா காந்தி எழுதிய தொடர் &#8211; 3</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>ராஜிவ் கலாரசனையுள்ளவர் என்பதற்கு எத்தனையோ எடுத்துக்காட்டுகளைக் கூறலாம். அவற்றுள் ஒன்றை மட்டும் இங்கே குறிப்பிட வேண்டும். எங்கள் உறைவிடத் தோட்டத்திலிருந்த, சற்று வேறுபட்ட செடி கொடிகளை வைத்து வளர்த்ததிலிருந்து பிள்ளைகளது உயர்ந்த பார்வையையும் புலனுணர்வையும் வளர்க்கும் வழிவகைகளைப் பிரித்து உணர்த்தினார். புகைப்படம் எடுக்கும் அவர்களது கலை ஆர்வம் வளர்ந்ததும், அக்கலையின் தொழில் நுட்பம் குறித்த ஆலோசனைகளை வழங்கினார். ராகுல் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் அவனுக்கு எழுதிய கடிதம் ஒன்றில், ‘‘நீ புகைப்படங்களை எடுக்கிறாய் என நம்புகிறேன்&#8221; எனக் குறிப்பிட்டார். அதில் ‘‘நீ புகைப்படம் எடுக்கும்போது, இருக்கிற வெளிச்சம், புகைப்படச் சுருளுக்கு நீ தரும் ஒளி ஆகியன பற்றி ஒரு குறிப்பு எழுத முயற்சி செய். அதன்மூலம் படம் காட்சியாக வெளியாகும்போது, அதில் நீ தவறு செய்திருந்தால், அந்தத் தவற்றை உணரலாம். நீ இதற்காக ஒரு குறிப்பேடோ, அல்லது ஒரு கையேடோ வைத்திருத்தல் வேண்டும். அதில் இதுபோன்ற செய்திகளைக் குறிக்கலாம். அதாவது, படம் &amp; 1 சூரிய ஒளி, வேகம் 250, எஃப் 16 என்றோ, அல்லது நீ கொடுத்த அளவையோ குறித்துக்கொள். இதன் மூலமாக உன் தவறுகளைத் திருத்திக் கொள்ளலாம்&#8221; என அறிவுரை வழங்கியிருந்தார்.</p>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img loading="lazy" decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/12/family_group_photo.jpg" alt="" class="wp-image-3648" width="536" height="681" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/12/family_group_photo.jpg 700w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/12/family_group_photo-236x300.jpg 236w" sizes="auto, (max-width: 536px) 100vw, 536px" /></figure></div>



<p>ராஜிவிடமிருந்த மற்றொரு அளவிடமுடியாத ஆர்வம், ஒருவகைப் பொழுதுபோக்கு, ‘ஹாம் வானொலி&#8217; நிலையத்தை இயக்குவது. இந்தியாவிலும் வெளிநாடுகளிலுமுள்ள ஹாம் வானொலி (Radio Ham) வைத்திருப்பவர்களோடு தொடர்புகொள்வதை, இரவில் வெகுநேரத்திற்குப்பின் அவரருகில் உட்கார்ந்து கவனித்திருக்கிறேன். 1974இல் ‘நீயே செய்து கற்றுக்கொள்&#8217; என்னும் அடிப்படையில் ‘ஹாம் வானொலிக் கருவிகள் கொண்ட பெட்டி&#8217; ஒன்றை வாங்கிப் பயன்படுத்தி, கடினமாக உழைத்து, முதன்முதலாக அவர் ஹாம் வானொலியைத் தாமே உருவாக்கிக் கொண்டார். என்னையும் குழந்தைகளையும் பொழுதுபோக்காக இந்த ஹாம் வானொலியை இயக்கிப் பழக வலியுறுத்தினார்.</p>



<p>தம் தாத்தாவுடன் வாழ்ந்த காலத்தில், பல்வேறு விலங்குகளை வளர்த்தார். பாண்டா கரடி, புலிக்குட்டிகள் போன்றன அவற்றில் சில. வேறு நாட்டு விலங்கினங்களும் அவற்றில் உண்டு. அவைகளுள் குறிப்பாகப் பொன்னிற வேட்டை நாய்களைப் பற்றிக் குறிப்பிட வேண்டும். அவற்றுள் ஒன்று ‘சோனா&#8217; என்ற கலப்பின நாயாகும். சிறுவனாக இருந்தபோது, பஹல்காம் சென்றபோது அதை அவர் தேர்ந்தெடுத்துக் கொண்டுவந்தார். குழந்தைப் பருவத்தில் அவர் எடுத்த புகைப்படங்கள் பலவும், நாய்கள் பற்றியனவாகவே இருந்தன.</p>



<p>பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது, ராகுலுக்கு ராஜிவ் ஒரு கடிதம் எழுதினார். அது தம் மகனை எதிர்காலத்தில் எப்படி வாழவேண்டும் என ஆயத்தப்படுத்தும் அறிவுரைக் கடிதமாக இருந்தது எனக் கூறலாம். அதன் உள்ளடக்கத்தைச் சற்றே கவனியுங்கள். ‘‘1969இல் எங்களிடம் ஒரு நாய்க்குட்டி தரப்பட்டது. அதனை ‘ரெஷ்மா&#8217; என நாங்கள் அழைத்தோம். அந்தப் பெண் நாய், எனக்கு மிகவும் விருப்பமான வளர்ப்பு நாயாக மாறியது. ஆனால், 1982இல் அது இறந்தபோது, நான் மிகவும் பாதிக்கப்பட்டேன். ராகுல், நீ இந்தக் கடிதத்தைத் திறக்கும்போது, உனக்குத் தெரிந்திருக்கும். இன்று பிற்பகல் 12.25க்கு ரெஷ்மா இறந்துவிட்டது. நீண்ட காலமாக, புற்றுநோயால் அது பாதிக்கப்பட்டிருந்தது. நாங்கள் அதனால் மிகவும் மனச்சோர்வு அடைந்தோம். ஆனால் இதுபோன்ற நேரத்தில், ரெஷ்மாவோடு நாங்கள் கழித்த மகிழ்ச்சியான நேரத்தை நினைவுகூர்தல் வேண்டும். அதை வெளியே அழைத்துச் சென்றபோது, அதனுடன் நீ எப்படி விளையாடினாய், அது எப்படி எல்லாம் வேடிக்கை செய்தது என்பதை எண்ணிப் பார்! முதல் தடவை அது நோயுற்றது, இப்போது எனக்கு நினைவுக்கு வருகிறது! அன்று இரவு முழுவதும் அதனுடன் உட்கார்ந்து இருந்தோம். சொட்டுக் குழாய் மூலம் அதற்கு உணவு அளித்தோம். அது வளர்ந்த காலத்தில், சிறு குட்டியானாலும், ஒரு எஜமான விசுவாசமுடையதாக மாறியது. நாமெல்லாரும்கூட ஒருநாள் இறந்துதான் ஆகவேண்டும் என்பதை உணர்ந்து வாழவேண்டும். உயிரோடிருப்பவர்களுக்கு நான் கூறுவது கசப்பாக இருக்கலாம். இதுபோன்ற சமயத்தில், கடந்த காலத்தை நினைவுகூரும்போது, அவைகளிடம் ஒருவர் எவ்வாறு நடந்துகொண்டார் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். உண்மையாகவே கடந்த காலம்பற்றி வருத்தம் இல்லையானால், நீங்களே உங்களைப் பாராட்டிக் கொள்ளலாம். அதற்கு மாறாக இருந்ததாக நீங்கள் எண்ணினால், உங்களைத் திருத்திக்கொள்ள முயற்சி எடுக்க வேண்டும். இதன்மூலம் எதிர்காலத்தில் அத்தகைய துயரம் உங்களுக்கு வராது&#8221; என்று அந்தக் கடித்தில் எழுதியிருந்தார்.</p>



<p>சப்தர்ஜங் சாலை வீட்டின் ஜன்னல்மூலம், ராஜிவ் ‘புல்புல்&#8217; என்னும் பறவை ஒன்றின் கூட்டைக் கவனிப்பது வழக்கம். புதிதாகச் சிறகு முளைத்ததுபோன்ற அந்தப் பறவை எப்போதாவது வந்தால், அதை விருப்பத்தோடு பேணிப் போற்றுவார். அது காயமடைந்திருந்தால், சாந்தினி சவுக்கில் உள்ள பறவைகள் மருந்தகத்துக்கு அனுப்புவார். ‘ரேஸ் கோர்ஸ்&#8217; சாலையில் ஒருமுறை ஒரு மரப்பொந்தில் ஒரு நாகப்பாம்பைக் கண்டபோது, அதற்குத் தீங்கிழைக்க எவரையும் அனுமதிக்கவில்லை. தோட்டத்தில் பறவைகளுக்கு ஒரு மண் கலத்தில் சாமை, தினை போன்றவற்றை அவை சாப்பிடப்போட்டு வைத்திருப்பார்.</p>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img loading="lazy" decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/12/rajiv_indira.jpg" alt="" class="wp-image-3650" width="517" height="512" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/12/rajiv_indira.jpg 645w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/12/rajiv_indira-300x298.jpg 300w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/12/rajiv_indira-150x150.jpg 150w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/12/rajiv_indira-75x75.jpg 75w" sizes="auto, (max-width: 517px) 100vw, 517px" /></figure></div>



<p>ஜன்பத் இல்லத்திற்குக் குடிபெயர்ந்தபோது, எங்கள் வீட்டு அறைகளில் சிட்டுக் குருவிகள் கட்டிய கூடுகளைக் கலைக்கக் கூடாதென்று கட்டளையிட்டார். எங்கள் படுக்கை அறைக் கதவைத் திறந்து வைக்க வேண்டும் என்பதற்காகவே அதிகாலையிலேயே எழுந்திருப்பார். அப்போது பறவைகள் குஞ்சுகளுக்கு இரைதேட வெளியே பறந்து செல்லும். அப்போதெல்லாம் மின் விசிறியைச் சுழலவிட மாட்டார். சுற்றுச்சூழல் வெப்பமாக இருந்தாலும் அவற்றிக்கு மின் விசிறியால் காயம் ஏற்படுமாகையால் அவை வெளியே பறந்துபோகும்வரை மின் விசிறியை இயக்க மாட்டார்.</p>



<p>பயணம் செய்யும்போது வழியில் சாலை விபத்து ஏதேனும் ஏற்பட்டிருந்தால், விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவி தேவைதானா எனக் கேட்காமல் மேலே செல்ல மாட்டார். தேவைப்பட்டால் அவர்களை மருந்தகத்திற்கு அழைத்துச் சென்று தனிக் கவனமும் செலுத்துவார். இத்தகைய சிறந்த குணமுடையவர் ராஜிவ். ராஜிவின் வெளிப்படையான அன்பு, இயல்பான பரிவு, நகைச்சுவை உணர்வு, படாடோபமான பகட்டுத்தனம் இல்லாமை ஆகியவை பலரை அவரிடம் ஈர்த்தன. தூரத்து உறவினர்கள், நண்பர்கள், பழக்கப்பட்டவர்கள் எனப் பரந்துவிரிந்த குழாத்தோடு அவர் அன்போடும் அக்கறையோடும் கலந்து உறவாடினார். அவருக்குள்ளே அடங்கியிருந்த மனநிறைவின்மூலம், அவரது கனிவு, பரிவு, அன்புடைமை, கருணை முதலிய பண்புகள் வெளிப்பட்டமையை இப்போதும் என்னால் எண்ணிப் பார்க்கத்தான் முடிகிறது. அதை விவரிக்க முடியாத அமைதியான தன்னிறைவு என்பேன். நட்பு வட்டத்தின் ஆழ்ந்த தன்மையின் தேவையைத் தாம் மட்டும் அனுபவித்தார் எனலாம். தம் குடும்பத்தாரைத் தவிர, அவருக்கிருந்த மகிழ்ச்சி யுணர்வையோ, துக்கத்தையோ, பரபரப்பையோ அவர் மற்றவர்களிடம் பகிர்ந்துகொண்டது கிடையாது.</p>



<p>தூரத்து உறவினர்களில் தம் தாயோடு நெருங்கிய அன்புடையவர்களிடம் அவர் சற்று அணுக்கமாகவே இருந்தார். தம் தாயார் போலவே காந்தி குடும்பம், கவுல் குடும்பம், நேரு குடும்பம் ஆகியவற்றோடு மிகவும் நெருக்கமாகப் பழகினார் எனலாம்.</p>



<p>இனக் கூட்டங்களில் கலந்துகொள்வதை அவர் விசேஷமாகக் கருதவில்லை. ஆரம்ப காலத்தில், வீட்டைவிட்டு வெளியில் சென்று, ஒத்த வயதுடையோருடன் பொழுதைக் கழித்த ராஜிவ், தம் காலத்துப் பிற இளைஞர்களைப் போன்றே காணப்பட்டார்.</p>



<p>பள்ளியில் படித்த காலத்திலோ, கல்லூரியில் கற்ற காலத்திலோ, அல்லது தொழிலில் ஈடுபட்ட காலத்திலோ ராஜிவுடன் பழகியவர்களே ராஜிவின் நண்பர்களாக இருந்தார்கள். 1982இல் ராகுலுக்கு எழுதிய கடிதங்களுக்குள் ஒன்றில், நட்பு பற்றிய தீர்க்க தரிசனமான கருத்தை அவர் கூறி இருக்கிறார். ‘‘நல்ல நண்பர்கள் கிடைப்பது கடினம் என்பதை நீ உணர்வாய்! உனக்கு அதிர்ஷ்டம் இருக்குமானால், நீ ஓரிரு நல்ல, நம்பத்தக்க நண்பர்களைப் பெறுவாய்! அவர்கள் உன் சுகதுக்கங்களில் உன்னோடு இருப்பார்கள்! அப்படி இல்லையெனில், மனம் கலங்காதே! நீ வயது முதிர்ந்தபின், உன்னுடைய நண்பர்கள் என்று நினைத்தவர்கள், அப்படி இல்லையே என்பதை உணர்வாய். நீ நல்ல நண்பர்களை அடைய விரும்பினால், நீ அப்படியிருக்கக் கற்றுக்கொள்! எதையும் கொடுத்து மகிழ்வடையக் கற்றுக்கொள்!&#8221; என்று ராஜிவ் அக்கடித்தில் குறிப்பிட்டிருக்கிறார்.</p>



<p><strong>ராஜிவ் மிகவும் ஆழ்ந்து உணர்ந்து நம்பிய ஓர் அரிய வாசகம் இது!</strong></p>



<blockquote class="wp-block-quote is-layout-flow wp-block-quote-is-layout-flow"><p><strong><span class="has-inline-color has-vivid-red-color">‘‘ஒன்றைத் திரும்பப் பெறவேண்டும் என்ற எண்ணத்துடன் நீ மற்றொருவருக்கு ஒன்றைக் கொடுத்தால், அது பயனற்றதாகும். சுயநலமின்றி, எதிர்பார்ப்பின்றி ஒன்றைக் கொடுப்பதிலேதான் மனநிறைவை ஒருவன் அடையலாம்&#8221;.</span></strong></p></blockquote>



<p>இப்படி எண்ணியதன் விளைவாகத்தான் தம்மை ஏமாற்றிய நண்பரிடம்கூட ராஜிவ் வெறுப்புணர்வு கொண்டதில்லை. தாம் ஏமாற்றி வஞ்சிக்கப்பட்டதாக ராஜிவ் மனத்தளவில் காயப்பட்டார். ஆனால், அதற்குத் தாமே காரணம் என்று எண்ணிக் கொள்வார். தம்மை வஞ்சித்த நண்பரைக் குறைகூறுவதற்குப் பதில், தம்மிடம் உள்ள தீர்மானிக்கும் திறனை நொந்து கொள்வார். பிற்காலத்தில் அரசியல் உலகில் கருத்து வேறுபாடுகள் காரணத்தால் மிகமோசமான விளைவுகளைச் சந்திக்க நேர்ந்தபோதுகூட, ராஜிவ் இவ்வாறே எண்ணித் திருப்தி அடைந்துகொண்டார். இதுவே அவருடைய இயல்பு. ஒருவேளை ராஜிவ் இத்தகைய மனச் சமநிலையைப் பெற்றிருந்த காரணத்தால்தான், தம்மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை அவர் சமாளிக்க முடிந்திருக்குமோ என இப்போதும் நினைக்கிறேன்.</p>



<p>ராஜிவுடன் விமானம் ஓட்டிய சகதோழர்கள், அவரின் திட்டமிடுதல், அட்டவணைப் படுத்துதல், விமானத் தொழில் நுட்பப் பிரச்சினைகளை எதிர்கொள்வதில் காட்டும் நுணுக்கமான கவனம் ஆகியவற்றை விரும்பாமல் எதிர்ப்புத் தெரிவித்தாலும், ஆத்மார்த்தமான தொழில் ஈடுபாடு கொண்டவர் எனப் போற்றி மதித்தார்கள். அரைகுறையாகச் செய்யப்படும் பணி ராஜிவுக்குப் பிடிக்காது. அவருடன் பணிபுரிந்த சக விமானிகள், ஏதாவது அசௌகரியம் காரணமாக முன்வைக்கும் அவர்களின் வேண்டுகோள்களை ஏற்றுக்கொள்வார். பதவி உயர்&amp;தாழ்வு முறைமை பற்றிச் சிறிதும் கவலைப்பட மாட்டார். தொழிலை மதிப்பதை அவர் தம் தந்தையிடம் கற்றார். சில நேரங்களில் ‘‘தொழில் செய்யும்போது கையில் எண்ணெய் அழுக்குப்படிவதை எண்ணி, பணி செய்யத் தயங்காதே&#8221; என்று அறிவுரை கூறுவார். வேலை நேரத்தில், சட்டையை மடித்து விட்டுக்கொண்டு, தொழிலின் தவற்றைத் திருத்த, பொறிகளைப் பொறுத்தப் பொறியாளர்களுக்கு மகிழ்ச்சியுடன் உதவி செய்வார். செய்யும் தொழில்மீது அவர் கொண்டிருந்த மதிப்பு காரணமாக வேலையில் கவனமின்மையை ஏற்றுக்கொள்ள மறுத்தார்.</p>



<p>எதிர்பாராத விமான விபத்தொன்றில், 33 வயது சஞ்சய் இறந்த சோக சம்பவத்தின்போது, ராஜிவும் நானும் என் பெற்றோரைக் காணக் குழந்தைகளுடன் இத்தாலி சென்றிருந்தோம். குடும்பத்திலிருந்த ஒவ்வொருவரையும் பெரிதும் பாதித்த இந்த நிகழ்வு, ஒரு ஈடுசெய்ய முடியாத, கொடுமையான சோக நிகழ்வாகவே அமைந்தது. குறிப்பாக, ராஜிவின் தாயார், தைரியமும் நிதானமுமுடைய என் மாமியார் மனம் நொறுங்கிப் போனார். அவர் இனி உதவி என்று நாடுவதற்கு ஒரே ஒரு மனிதர்தான் உலகில் உண்டு!</p>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large"><img loading="lazy" decoding="async" width="620" height="426" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/12/AP_09102703951.jpg" alt="" class="wp-image-3649" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/12/AP_09102703951.jpg 620w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/12/AP_09102703951-300x206.jpg 300w" sizes="auto, (max-width: 620px) 100vw, 620px" /></figure></div>



<p>பதினைந்து ஆண்டு காலம் தெளிவாக, ஒருவரையொருவர் நன்கு அறிந்துகொண்டிருந்த எனக்கும் ராஜிவுக்கும் இப்போது ஒரு மன இருக்கம்! அவருக்காக, எங்களுக்காக, குழந்தைகளுக்காக, நாங்கள் ஒருவரையொருவர் விரும்பும் வாழ்க்கைக்காக, அவர் நேசிக்கும் தொழில் விமானம் ஓட்டுதல்! நாங்கள் கட்டிக்காத்த நட்புக்காகவும் மனித உரிமை காப்பாற்றப்படவும் அச்சிக்கலான தொழிலை நான் எதிர்த்தேன்; புலி போலச் சீற்றத்தோடு எதிர்த்தேன்.</p>



<p>இதுவரை, தூரத்திலிருந்தே உலக அரசியலை நாங்கள் பார்த்திருக்கிறோம். ஆசைக்கும் நோக்கத்திற்கும் இடையே இடப்பட்ட ஓர் இக்கட்டான கோட்டை, இப்போது புரிந்துகொள்ளத் தொடங்கினோம். அரசியல், பண்பாடு பற்றிய பாரம்பரியம் காப்பாற்றப்படவும், வாழும் சமுதாயம் முன்னேறவும் சிலருக்கு அதிகாரம் ஒரு முக்கியக் கருவி! லட்சியம் நிறைவேற மிகவும் தேவையான ஒன்று அதிகாரம்! சிலருக்குத் தனிப்பட்ட, அல்லது குழு ஆதிக்கத்திற்கு இது தேவையான ஆயுதம். முதல் வகையில் கிட்டும் பலன் தன்னிறைவு தரும்! இரண்டாம் வகையில், ஆதிக்க வலை &amp; வெளியுலக மாயை, முகஸ்துதி, டம்பம், ஆடம்பரமே மிஞ்சும்!</p>



<p>ராஜிவுக்கு அதிகாரத்தின் சுமை நன்கு தெரியும். வேண்டுமென்றே திரித்துப் பேசி ஏற்பட்டதால் உண்டான கருத்து வேறுபாட்டால் உருவாகும் தனிமனிதனின் இயலாநிலையை அவர் நன்கு அறிவார். எனவே, அமைதியாக இருக்கத் தேவையான மனோபலத்தைப் பெற ராஜிவ் வேண்டினார். முடியாத ஒன்றை எதிர்த்துத் தேச முன்னேற்றத்திற்காக நாள்தோறும்-, ஆண்டாண்டாகவும் தம் தாய் நடத்திய போராட்டத்தை அவர் அருகிலிருந்து கண்கூடாக் கண்டுள்ளார். என் மாமியார், அவரைப் பதவிப் பித்தர்போல எண்ணியோரை எதிர்த்துத் துணிந்து நின்றதை ராஜிவ் நேரில் கண்டவர் அல்லவா?</p>



<p class="has-text-align-right"><em>… மீண்டும் அடுத்த ஞாயிறு தொடரும்</em></p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/my-rajiv-by-sonia-gandhi-3/">என் ராஜிவ்! … சோனியா காந்தி எழுதிய தொடர் &#8211; 3</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://desiyamurasu.com/news-india/my-rajiv-by-sonia-gandhi-3/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>என் ராஜிவ்! … சோனியா காந்தி எழுதிய தொடர் &#8211; 2</title>
		<link>https://desiyamurasu.com/news-india/my-rajiv-by-sonia-gandhi-2/</link>
					<comments>https://desiyamurasu.com/news-india/my-rajiv-by-sonia-gandhi-2/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Admin]]></dc:creator>
		<pubDate>Sat, 12 Dec 2020 17:42:14 +0000</pubDate>
				<category><![CDATA[தேசிய அரசியல்]]></category>
		<category><![CDATA[indira gandhi]]></category>
		<category><![CDATA[rajiv gandhi]]></category>
		<category><![CDATA[sonia gandhi]]></category>
		<guid isPermaLink="false">https://desiyamurasu.com/?p=3541</guid>

					<description><![CDATA[<p>1965 பிப்ரவரி முதல் 1966 ஜூலை முடிய ராஜிவும் நானும் கேம்பிரிட்ஜிலும் லண்டனிலும் ஒன்றாக இருந்தோம். அதன்பிறகு நான் என் சொந்த வீட்டிற்குச் சென்றேன். ராஜிவ் லண்டனில் விமானப் பயிற்சியைத் தொடங்கினார். பிரிந்திருந்த நாள்களில், ஒவ்வொரு நாளும் நாங்கள் கடிதங்கள் எழுதிக்கொள்வோம். இத்தாலி வருவதற்காக அவர் பணம் சேமித்தார். ‘‘முன்பே நான் எழுதாததற்கு வருந்துகிறேன். நாங்கள் (ராஜிவும் அவர் நண்பரும்) கட்டடப் பணியாளர்களாகப் பணி செய்கிறோம். ஒருநாளைக்கு 10 மணி நேரம் பணி. பணிக்களத்திற்குப் போய் வர [&#8230;]</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/my-rajiv-by-sonia-gandhi-2/">என் ராஜிவ்! … சோனியா காந்தி எழுதிய தொடர் &#8211; 2</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>1965 பிப்ரவரி முதல் 1966 ஜூலை முடிய ராஜிவும் நானும் கேம்பிரிட்ஜிலும் லண்டனிலும் ஒன்றாக இருந்தோம். அதன்பிறகு நான் என் சொந்த வீட்டிற்குச் சென்றேன். ராஜிவ் லண்டனில் விமானப் பயிற்சியைத் தொடங்கினார். பிரிந்திருந்த நாள்களில், ஒவ்வொரு நாளும் நாங்கள் கடிதங்கள் எழுதிக்கொள்வோம். இத்தாலி வருவதற்காக அவர் பணம் சேமித்தார்.</p>



<p>‘‘முன்பே நான் எழுதாததற்கு வருந்துகிறேன். நாங்கள் (ராஜிவும் அவர் நண்பரும்) கட்டடப் பணியாளர்களாகப் பணி செய்கிறோம். ஒருநாளைக்கு 10 மணி நேரம் பணி. பணிக்களத்திற்குப் போய் வர 1.30 மணி நேரம் ஆகும். பணி முடிந்தபின், செத்த மாடுபோல் வீடு திரும்புவோம். என் கைகள் விரைப்பாக உள்ளன. என்னால் மெதுவாகவே எழுத முடிகிறது&#8221; என்று ராஜிவ் ஒருமுறை ஒரு கடிதத்தில் எழுதியிருந்தார்.</p>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img loading="lazy" decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/12/1.Feroze-and-Indira.jpg" alt="" class="wp-image-3545" width="546" height="365" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/12/1.Feroze-and-Indira.jpg 659w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/12/1.Feroze-and-Indira-300x201.jpg 300w" sizes="auto, (max-width: 546px) 100vw, 546px" /></figure></div>



<p>நவம்பர் மாத இறுதியில் விமானம் ஓட்டும் உரிமம் (லைசன்ஸ்) பெற்றவுடன், தம் திட்டங்கள் பற்றி என் தந்தையுடன் பேச ராஜிவ் இத்தாலிக்கு வந்தார். இந்தியா திரும்பி ஒரு வர்த்தக விமானி உரிமம் (லைசன்ஸ்) பெற்று, ஒரு விமானி வேலை பெற்று, என்னைத் திருமணம் செய்ய எண்ணினார்.</p>



<p>ராஜிவின் நேர்மையில் என் தந்தைக்கு எவ்வித ஐயப்பாடும் இல்லை. ‘‘ஒருவரை அவர் கண்களால் அறியலாம்&#8221; என்றார் என் தந்தை. ஆனால், என் தந்தைக்கு அவருடைய மகள் பற்றியே கவலை. ‘அவளுக்கு வயது மிகவும் குறைவு. இந்திய வாழ்க்கை முறையில் ஈடுபடுவது கடினம்! மாறுபட்ட மக்கள் &#8211; மாறுபட்ட பழக்க வழக்கங்கள்.&#8217;</p>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img loading="lazy" decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/12/Nehru_Frose_RajivChild.jpg" alt="" class="wp-image-3544" width="553" height="365" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/12/Nehru_Frose_RajivChild.jpg 721w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/12/Nehru_Frose_RajivChild-300x198.jpg 300w" sizes="auto, (max-width: 553px) 100vw, 553px" /></figure></div>



<p>நான் உரிய வயது பெறும்வரை &#8211; சிறிய விடுமுறைக்குக்கூட &#8211; என்னை அனுமதிக்க அவர் விரும்பவில்லை. இருப்பினும், ராஜிவும் நானும் ஓர் ஆண்டு பிரிந்திருந்து, அதன் பின்னர் அதேபோல் நான் அவரை விரும்பினால் &#8211; இந்தியா செல்ல என்னை என் தந்தை அனுமதிப்பார் என்பதுதான் நிலை.</p>



<p>அப்போதும் நான், என் தந்தையைப் பற்றி ‘அவர் என் வாழ்க்கையைக் குளறுபடி செய்வதாக&#8217; எண்ணவில்லை. ‘ஒரு சில மாதங்களில் எல்லாம் சரியாகிவிடும்&#8217; என என் தந்தை உறுதியாக எண்ணினார். ஆனால், அவர் எண்ணியது நடைபெறவில்லை. அவர் தம் வாக்கைக் காப்பாற்றினார். எனக்கு 21 வயது ஆனவுடன் இந்தியா செல்ல அனுமதித்தார்.</p>



<p>1968 ஆம் ஆண்டு ஜனவரி 13 ஆம் நாள், நான் டெல்லியை வந்தடைந்தேன். என்னைக் கூட்டிச் செல்ல தம் சகோதரர் சஞ்சய், நண்பர் அமித் ஆகியோருடன் விமான நிலையத்திற்கு ராஜிவ் வந்தார். அவரைப் பார்த்தவுடன் எனக்கு ஏதோ விடுதலை பெற்ற உணர்வு ஏற்பட்டது. இப்போது ராஜிவ் அருகில் நான் உள்ளேன். இனிமேல் எதுவும் யாரும் எங்களைப் பிரிக்க முடியாது!</p>



<p>எங்கள் திருமண நாளான பிப்ரவரி 25க்கு முந்திய நாள்வரை, அலகாபாத்தில் ராஜிவின் குடும்ப நண்பரான பச்சன் வீட்டில் நான் தங்கியிருந்தேன். என்னைச் சுற்றிலும் &#8211; நிறங்கள், சுவைகள், மணங்கள், மக்கள் &#8211; எல்லாம் புதியவை! மாறுபட்டவை! அங்குள்ளோர் என்னை ஆர்வத்துடன் பார்த்தனர்! என்னை எங்கும் பின்தொடர்ந்தனர். எனக்கு வியப்பளித்தாலும், அது ஒரு எரிச்சலூட்டும் அனுபவம்தான்! தனி ஒதுக்கிடம் இல்லை! என்னைக் கட்டுப்படுத்தி, என் உணர்வுகளை அடக்க வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது.</p>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img loading="lazy" decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/12/sanjay-embed_072117121824.jpg" alt="" class="wp-image-3546" width="555" height="402" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/12/sanjay-embed_072117121824.jpg 690w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/12/sanjay-embed_072117121824-300x217.jpg 300w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/12/sanjay-embed_072117121824-120x86.jpg 120w" sizes="auto, (max-width: 555px) 100vw, 555px" /></figure></div>



<p>எனக்குக் கோபம் ஏற்பட்டது. ‘அவர்களின் கண்கள் என்னையே ஏன் உற்றுக் கவனிக்கின்றன?&#8217; என எனக்கு நானே கேட்டுக்கொண்டேன். ‘நான் அந்நியமானவள் மட்டுமன்றி, வெளிநாட்டவளும்கூட என்பதுமட்டும் காரணம் அன்று! காலம் காலமாக இந்திய நாட்டு மக்கள் அனைவருக்கும் பழக்கமாகிவிட்ட ஒரு குடும்பத்தில், நான் ஒரு புதுவரவு என்பதுவும்கூட!&#8217; என்பதைக் காலப்போக்கில் தெளிவாகப் புரிந்துகொண்டேன். அவர்கள் செய்தது, செய்யாதது, சொன்னது, சொல்லாதது என ஒவ்வொன்றும் ஆராயப்பட்டு, அதன் பின்னரே அவை முடிவு செய்யப்பட்டன. இவ்வாறு வாழ்வது எப்படிச் சாத்தியமாகும்!</p>



<p>என்னுடைய பிறவிக் குணமாகப் பிரதிபலிப்பது, எங்கும் எப்போதும் பின்வாங்கி ஒதுங்குவதாகும். என்னுடைய கூச்ச சுபாவத்தை அறிந்த ராஜிவும் அவரது தாயாரும் என் உணர்வுகளைத் தெளிவாகப் புரிந்துகொண்டனர். ஆனால், சில பழக்க வழக்கங்களைப் புரிந்துகொள்வதும் ஏற்றுக்கொள்வதும் எனக்குக் கடினமாக இருந்தது. இந்திய உடைகளை அணிவது எனக்குப் பொருத்தமற்றதாகவும் வசதி குறைந்ததாயுமிருந்தது. இந்திய உணவு வகைகளின் காரச்சுவையை என் வாய் ஏற்றுக்கொள்ள மறுத்தது. ராஜிவோ, என் மாமியாரோ இவற்றை என்மீது வற்புறுத்தித் திணிக்கவில்லை. என் தயக்கமும் அவ்வப்போது என்னிடம் தோன்றும் விருப்பமின்மையும் என் மாமியாருக்கு மனத்துயரளித்தாலும், அவர் தம் உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொண்டார். இந்திய உணவு வகைகளை நான் ஏற்றுக்கொள்ள முயற்சி செய்வதற்கு ஊக்கம் அளித்தார். நான் நானாகவே இருக்கவும், ராஜிவின் உலகில் என்னை ஒன்றிணைத்துக்கொள்ள விரும்புவதையும் அனுமதித்தார்.<br><br>கொஞ்சம் கொஞ்சமாக அந்தக் குடும்ப நடவடிக்கைகளில் படிப்படியாக என்னை நான் ஈடுபடுத்திக் கொண்டேன். ஆரம்பத்தில் வீட்டிலும், பிறகு டெல்லியில் ஒரு நிறுவனத்திலும் இந்தி மொழியைக் கற்கத் தொடங்கினேன். குடும்பத்தோடும் குடும்ப நண்பர்களோடும் பேசிப் பழக, இந்தி கற்பது எளிதாகவும் உதவியாகவும் இருந்தது. எல்லாரும் உணவு மேஜையில் சூழ அமர்ந்து சாப்பிடும் போது, பொதுவாக நாங்கள் இந்தியில் உரையாடுவதுதான் வழக்கம்.</p>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img loading="lazy" decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/12/WhatsApp-Image-2020-12-12-at-23.05.22-674x1024.jpeg" alt="" class="wp-image-3549" width="517" height="785" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/12/WhatsApp-Image-2020-12-12-at-23.05.22-674x1024.jpeg 674w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/12/WhatsApp-Image-2020-12-12-at-23.05.22-197x300.jpeg 197w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/12/WhatsApp-Image-2020-12-12-at-23.05.22-768x1168.jpeg 768w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/12/WhatsApp-Image-2020-12-12-at-23.05.22-750x1140.jpeg 750w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/12/WhatsApp-Image-2020-12-12-at-23.05.22.jpeg 842w" sizes="auto, (max-width: 517px) 100vw, 517px" /></figure></div>



<p>தீன்மூர்த்தி இல்லத்தில் வாழ்ந்த காலந்தொட்டு, குடும்பத்தில் எல்லாரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவதுதான் வழக்கம். அலுவலகப் பணிகள் குறுக்கிட்டாலொழிய, எங்கிருந்தாலும் குடும்பத்தினர் ஒன்றுகூடி உணவு அருந்துவதையே வழக்கமாகக்கொண்டு பின்பற்றி வந்தோம். எப்படிப்பட்ட வேலை இருந்தாலும் சிறு பிராயம் முதலே, ராஜிவும் சஞ்சயும் வீட்டிற்குச் சென்று குடும்பதோடு சேர்ந்து உணவு உண்பது என்பதே வழக்கமாய் இருந்துள்ளது. ராஜிவ் தம் தாயாருடன் சேர்ந்து உணவு அருந்திய பின்னர்தான் பிற பணிகளைச் செய்வார். மாலை வேளைகளில் நண்பர்களைக் காண நானும் ராஜிவும் வெளியில் செல்வது உண்டு.</p>



<p>இப்படிக் குடும்பத்தில் அனைவரும் சேர்ந்து உணவு அருந்துவது என்பது ஒரு சுமையான வேலையன்று. உணவு அருந்தும்போது, சுவாரஸ்யமான உரையாடல்கள் இடம் பெறுவது உண்டு. சீரிய கருத்துப் பரிமாற்றங்களும் நகைச்சுவைப் பேச்சுகளும் அங்கே வெளிப்படுவது உண்டு. தம் கருத்துக்களைத் தெரிவித்து உரையாடுவதில் என் மாமியார் திறமைசாலி. வினாடி வினா விளையாட்டுக்கள், கதை சொல்லுதல் போன்றவற்றில், குறிப்பாகக் குழந்தைகளோடு குழந்தையாய் இருப்பதில் என் மாமியார் அதிகம் கவனம் செலுத்தினார். கடந்த காலத்தில் வாழ்ந்த தலைவர்களைப் பற்றியும் இந்திய சுதந்திரப் போராட்ட நிகழ்வுகள் பற்றியும் கூறி, பழைய வரலாற்று நிகழ்ச்சிகளை உயிரோட்டமுடையதாக்குவார். எங்களையும்கூட அவற்றில் ஈடுபாடு கொள்ளச் செய்து மகிழ்ச்சி அடைவார். அவர் பேசும் அனைத்திலும் பங்கு கொள்ளச் செய்வார்.</p>



<p>அந்தக் குடும்பத்தின் அச்சாகவே அவர் திகழ்ந்தார். இந்நிலை அவரது அதிகாரத்தால் ஏற்பட்டதன்று. அன்பாலும் அதைக் கொடுக்கும் தன்மையாலும் ஏற்பட்டது. எல்லாவற்றிற்கும் மேலாக, எங்களைப் பொறுத்தவரை, எங்கள்மீது அவர் ஆர்வம் காட்டினார்; அன்பு செலுத்தினார்; அக்கறை காட்டினார். பொதுவாகச் சொல்வதானால், பல்வேறு வகையில் குடும்பத்தில் மட்டுமல்லாமல், தம் தாய் நாட்டின்மீதும் ஈடுபாடு கொண்டவராக அவர் வாழ்ந்தார். அவர் ஆட்சிப் பொறுப்பு காரணமாக வெளிநாடுகளுக்குச் செல்லும்போதெல்லாம், அவரின் சந்திப்புக்கள் குறித்தும், அனுபவங்கள் பற்றியும் எங்களுக்கு எழுதுவார். தமக்குப் பல்வேறு பணிகள் இருக்கும் நாள்களிலும், வீட்டுப் பணிகள் குறித்து நாங்கள் ஒன்றாக இருக்கையில் எங்களுக்கு நினைவூட்டுவார். இங்கே ஒரு நிகழ்ச்சியைக் கட்டாயம் நான் குறிப்பிட்டாக வேண்டும்.</p>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large"><img loading="lazy" decoding="async" width="567" height="399" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/12/Untitled1.jpg" alt="" class="wp-image-3547" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/12/Untitled1.jpg 567w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/12/Untitled1-300x211.jpg 300w" sizes="auto, (max-width: 567px) 100vw, 567px" /></figure></div>



<p>என் திருமணம் முடிந்தபிறகு, என் தாயார் இத்தாலி செல்லுகையில், அந்த நாளில் &#8211; அத்தகைய முதல் குறிப்பு ஒன்றை, என் மாமியார் அலுவலகத்திலிருந்து பெற்றேன். அந்தக் குறிப்பு என்ன தெரியுமா? ‘‘சோனியா! உனக்கு ‘ஹலோ&#8217; கூறத்தான்! உன்னை நேசிக்கிறோம் என்பதைக் கூறத்தான்!&#8221; என்பதேயாகும் அது. இன்னொன்றையும் சொல்லலாம்! ராஜிவுக்கு அவர் அனுப்பிய ஒரு குறிப்பு, புகைப்படக் கலை பற்றியது. ‘‘ராஜிவ் ஒரு அழகிய படத்தை எடுக்கும் வாய்ப்பை நீ நழுவவிட்டுவிட்டாய்! இன்று காலையில், அக்பர் சாலையில் ஒரு மரக்கிளையில் வால் நீண்ட கிளிகள் இரண்டு நீண்ட நேரம் உட்கார்ந்திருந்தன. ஒரு ஜோடி அழகான மரங்கொத்திப் பறவைகளும் இருந்தன. அவை ஏதோ பரப்பரப்புடன் சிறகடித்தன&#8221; என்பதே அந்தக் குறிப்பாகும். எப்போதாவது எனக்கும் அவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டால், இதே வழிமுறையைக் கையாண்டு, ஒரு குறிப்புச் செய்தியை அனுப்பியே தீர்த்து வைத்து விடுவார். ‘‘நாளை நவ்ரோஸ். ஆனால் நாளை அதிகாலையே நான் பயணம் மேற்கொள்ள வேண்டியுள்ளது. ஆகவே இப்போதே வந்து அன்பு முத்தம் தரலாமா?&#8221;</p>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img loading="lazy" decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/12/Indira_Sonia.jpg" alt="" class="wp-image-3542" width="557" height="407" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/12/Indira_Sonia.jpg 760w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/12/Indira_Sonia-300x219.jpg 300w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/12/Indira_Sonia-750x549.jpg 750w" sizes="auto, (max-width: 557px) 100vw, 557px" /></figure></div>



<blockquote class="wp-block-quote is-layout-flow wp-block-quote-is-layout-flow"><p><span class="has-inline-color has-vivid-red-color"><strong>என் மாமியாரிடம் நான் அறிந்தமட்டில், போலி கௌரவமே கிடையாது. அவர் மிகவும் இயல்பானவர். புறத்தூண்டுதலுக்கு ஆட்படாதவர்.</strong> </span></p></blockquote>



<p>இந்திய நாட்டு வரலாற்றில் தம் குடும்பத்தின் பெருமைமிகு பணிப் பங்கை நன்கு அறிந்தவர். அந்த விழிப்புணர்வைத் தம் மகன்களுக்கும் உணர்த்தி, அவர்களையும் அந்தப் பொறுப்பில் ஈடுபாடு கொள்ளச் செய்தவர்.</p>



<p>பள்ளியில் படித்தபோது ராஜிவுக்கு எழுதிய கடிதங்களை நான் கண்டபோது, இந்த நம்பிக்கை என்னுள் உறுதிப்பட்டது. குடும்பத்தின் மற்றொரு உறுப்பினர் செய்த தவறைப் பற்றி 1958 இல் ராஜிவுக்கு எழுதிய கடிதத்தில், ‘‘ஒருவர் தம் நடை உடை பாவனை பற்றி அதிகக் கவனம் செலுத்த வேண்டும். இல்லையேல் அவர் தம் குடும்பத்திற்கு மட்டுமன்றி, நாட்டுக்கும் அவப்பெயர் பெற்றுத் தந்தவராகிவிடுவார்&#8221; என்று குறிப்பிட்டிருந்த செய்தி எவ்வளவு சிறந்த அறிவுரை, காலத்தால் அழிக்க முடியாத உண்மை என்பதை உணர்த்தியது.</p>



<p>என் மாமியாரின் திருமணம் மேடு பள்ளங்கள் நிறைந்தது. இருப்பினும், ஃபிரோஸைத் தவிர வேறு யாரையும் தம்மால் திருமணம் செய்திருக்க முடியாது என்று என்னிடம் ஒருமுறை கூறினார். அவர் நேசித்த ஒரே மனிதர் அவர்தான். பலமுறை அவரைப் பற்றி நேச பாவத்தோடு பேசியுள்ளார். அவரது மரணத்துக்குப்பின் நான் கண்ட ஒரு கடிதத்தில், ‘‘சோனியா, உனக்கு நான் ஏன் எழுதுகிறேன் என்றால், நீ இந்தக் குடும்பத்தில் பாசம் கொண்டுள்ளாய். மேலும் உன்னில் என்னைக் காண்கிறேன். உன் கணவரும் என் மகனுமாகிய ராஜிவிடம் என் கணவரின் பல பண்புகள் அப்படியே உள்ளன&#8221; எனக் குறிப்பிட்டிருந்ததை மீண்டும் படித்துச் சுவைத்தேன். தோற்றத்திலும் மனோபாவத்திலும் ராஜிவ், ஃபிரோஸை நினைவூட்டுவதை அடிக்கடி குறிப்பிடுவார்.</p>



<p>‘‘தந்தையைப் போலவே ராஜிவும் சாதுவானவன். அலட்டிக்கொள்ளாதவன். கோபப்படாதவன். ஒருவேளை கோபப்பட்டால், உடனே அதற்காக வருந்துபவன். ராஜிவ், சஞ்சய் ஆகிய இருவரும் இயற்கையிலும் இசையின்பாலும் நாட்டமுடையவர்கள். முழுவதும் பிரத்தியக்ஷ உலகில் வாழ்பவர்கள். கைவினை விற்பன்னர்கள்&#8221; என்றெல்லாம் கூறியதை எண்ணிப் பார்த்தேன்.</p>



<p>என் மாமியாருடைய கணவருக்குத் தோட்டக்கலையில் உள்ள ஆர்வம் குறித்து, சிறையிலிருந்தபோது, தம் தந்தைக்கு அவர் எழுதிய கடிதம் ஒன்றிற்கு, ‘‘டிசம்பர் மாத ரம்மியமான குளிரில் வீட்டில் இதமான சூரிய ஒளி நுழையும்போது, ஆனந்தபவன் எப்படி இருக்கும் என்பதை எண்ணுகிறேன். தோட்டத்தில் நீயும் ஃபிரோஸும் மகிழ்ச்சியாக இருப்பதையும் வீட்டினுள் மாற்றங்கள் செய்து வாழ்வை மகிழ்வோடு அனுபவிப்பதையும் எண்ணுகிறேன்&#8221; என்று பதில் எழுதியதில் ஜவஹர் தத்ரூபமாகக் குறிப்பிட்டிருந்தார்.</p>



<p>டெல்லியின் புறநகர்ப் பகுதியில் 1950 இன் பிற்பகுதியில் ஃபிரோஸ் வாங்கிக் கொண்டுவந்து நட்ட மரங்கள் பல மண் தரையில் நன்கு வளர்ந்துள்ளன. அழகிய தோட்டங்களில் தகப்பனாரோடு ராஜிவ் மகிழ்ச்சியைப் பங்கிட்டுக் கொண்டவர் என்பதை நான் அறிந்தேன். தமக்கு விருப்பமான மரங்களையும் செடி கொடிகளையும் நாங்கள் எங்கு வசித்தாலும் நட்டுப் பேணுவதில் இன்பம் கண்டவர். வீட்டின் முறைமையையும் தூய்மையையும் உயர்வையும் ராஜிவ் விரும்பினார். வீட்டின் புறத்தே இயற்கையாய் அமைந்த தன்மையைப் பெரிதும் விரும்பினார். அங்கெல்லாம் செயற்கைத் தோட்டங்களை, வெட்டிக் கத்தரித்து முறைப்படுத்தப்பட்ட செடிகளை அவர் விரும்பவில்லை. ராஜிவின் பேணிப் பாதுகாக்கப்பட்ட பொக்கிஷங்கள் சில. அவற்றில் அவருடைய தகப்பனாரின் திரைப்படக் கருவியும் குடும்பத் திரைப்படச் சுருள்களும் அடங்கும்.</p>



<p>ராஜிவ் தம்முடைய தகப்பனாரின் தொழில் பட்டறையைக் கவனமாகவும் முறையாகவும் பராமரித்தார். பொறிகளையும் எந்திரங்களையும் பழுது பார்ப்பதிலும் சுத்தம் செய்வதிலும் அதனைப் பொருத்துவதிலும் ராஜிவுக்கு ஆர்வம் மிகுதி. சில சமயங்களில் வீட்டுப் பொருள்களில் ஏதாவது ஒன்றை நான் தேடும்போது, அது அவருடைய ‘பணிமனை&#8217;யில் காணப்படும்.</p>



<p>எங்கள் மணவாழ்க்கையின் தொடக்க நாள்கள் முதலே, இசையும் புகைப்படக் கலையும் முக்கியப் பங்கு வகித்தன. கீழ்த் திசை மற்றும் மேற்கத்திய இசை ஆகிய இரண்டிலுமே எங்களுக்கு மிகுந்த ஈடுபாடு இருந்தது. தரமான ஒலி, இந்திய இசை ஆகியவற்றில் சீரிய ஆர்வம் காரணமாக ராஜிவ் தாமே பல சிறந்த இசைக் கலைஞர்களின் பாடல்களை ஒலிப்பதிவு செய்வார். சிறப்பாக, ஜாஸ் எனப்படும் ஒருவகை இசையை அவர் விரும்பிக் கேட்பார். சில சமயங்களில் ‘பாப்&#8217; இசையையும் ரசிப்பார். பல ஆண்டுகளாக அவர் தமக்கு விருப்பமான இசைப் பாடல்களைச் சேர்த்து வைத்தார். அந்தப் பாடல் தொகுப்பை எல்லாம் கவனத்துடன் பாதுகாத்தார். தம்மைப் போலவே பிறரும் அவற்றைக் கவனமாகக் கையாள்வார்கள் என்ற நம்பிக்கை ஏற்பட்டாலொழிய, யாரையும் தம் இசைக் கருவியையோ அல்லது இசைத்தட்டுக்களையோ தொட அனுமதிக்க மாட்டார்.</p>



<p>தம்மிடம் உள்ள புகைப்படங்களிலும் இசைத் தகடுகளிலும் அவருக்கு அளவற்ற ஈடுபாடு காணப்பட்டது. பாரம்பரிய ஒழுங்குமுறையில் அவற்றைப் பட்டியலிட்டுப் பேணிக் காத்து வந்தார். தம் குழந்தைகளையும் புகைப்படம் எடுக்கும் கலைத்துறையில் ஈடுபாடுகொள்ள ஊக்குவித்தார்.</p>



<p class="has-text-align-right"><em>… மீண்டும் அடுத்த ஞாயிறு தொடரும்</em></p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/my-rajiv-by-sonia-gandhi-2/">என் ராஜிவ்! … சோனியா காந்தி எழுதிய தொடர் &#8211; 2</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://desiyamurasu.com/news-india/my-rajiv-by-sonia-gandhi-2/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>19 ஆண்டு அரசியல் பயணம் : ஆணாதிக்க சமுதாயத்தில் சாதனை படைத்த சோனியா காந்தி</title>
		<link>https://desiyamurasu.com/news-india/how-sonia-gandhi-got-the-better-of-the-system/</link>
					<comments>https://desiyamurasu.com/news-india/how-sonia-gandhi-got-the-better-of-the-system/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Admin]]></dc:creator>
		<pubDate>Sat, 12 Dec 2020 14:14:37 +0000</pubDate>
				<category><![CDATA[தேசிய அரசியல்]]></category>
		<category><![CDATA[rahul gandhi]]></category>
		<category><![CDATA[rajiv gandhi]]></category>
		<category><![CDATA[sonia gandhi]]></category>
		<guid isPermaLink="false">https://desiyamurasu.com/?p=3524</guid>

					<description><![CDATA[<p>சோனியா காந்தி பிரதமர் ஆவதற்கு முலாயம் சிங் யாதவ் மற்றும் சரத்பவார் போன்றவர்கள் ஒவ்வொரு கட்டத்திலும் முட்டுக்கட்டை போட்டுள்ளனர். இருப்பினும், இத்தகைய சக்திகளால் அவரை கட்டிப் போட்டுவிட முடியவில்லை. இத்தகையோர் அவரை வெறுத்தாலும், 2004 முதல் 2014 ஆம் ஆண்டுவரை இந்தியாவின் பெரும் சக்தி வாய்ந்த பெண்மணியாகவே சோனியா காந்தி திகழ்ந்தார். இந்திரா காந்தியின் இத்தாலி மருமகளும், ராஜிவ் காந்தியின் மனைவியான சோனியா மைனோ காந்தி இந்த அமைப்பின் ஒவ்வொரு கட்டமைப்புக்குள்ளும் பொருந்தி, பல கோடி இந்தியர்களின் [&#8230;]</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/how-sonia-gandhi-got-the-better-of-the-system/">19 ஆண்டு அரசியல் பயணம் : ஆணாதிக்க சமுதாயத்தில் சாதனை படைத்த சோனியா காந்தி</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>சோனியா காந்தி பிரதமர் ஆவதற்கு முலாயம் சிங் யாதவ் மற்றும் சரத்பவார் போன்றவர்கள் ஒவ்வொரு கட்டத்திலும் முட்டுக்கட்டை போட்டுள்ளனர். இருப்பினும், இத்தகைய சக்திகளால் அவரை கட்டிப் போட்டுவிட முடியவில்லை. இத்தகையோர் அவரை வெறுத்தாலும், 2004 முதல் 2014 ஆம் ஆண்டுவரை இந்தியாவின் பெரும் சக்தி வாய்ந்த பெண்மணியாகவே சோனியா காந்தி திகழ்ந்தார்.</p>



<p>இந்திரா காந்தியின் இத்தாலி மருமகளும், ராஜிவ் காந்தியின் மனைவியான சோனியா மைனோ காந்தி இந்த அமைப்பின் ஒவ்வொரு கட்டமைப்புக்குள்ளும் பொருந்தி, பல கோடி இந்தியர்களின் தலைவிதியை நிர்ணயிக்கும் அளவுக்கு உயர்ந்தார். இந்த ஒட்டுமொத்த அமைப்பு அவரை வெளிநாட்டவர் என்றது. கடந்த 1999 ஆம் ஆண்டு அவர் பிரதமராவது, முலாயம் சிங் மற்றும் இடதுசாரிகள் மூலம் தடுக்கப்பட்டது. வெளியே உள்ளவர்களை மட்டுமல்ல, தன் கட்சிக்குள்ளேயும் சரத்பவார் போன்றவர்களின் எதிர்ப்பைச் சந்திக்க வேண்டியிருந்தது. எனினும், 1990களில் தேக்கத்தைச் சந்தித்த காங்கிரஸ் கட்சியைத் தூக்கி நிறுத்தியதில் ஆகட்டும், கடந்த 10 ஆண்டுகளாக மதச்சார்பற்ற சக்திகளுடன் இணைந்து இந்திய அரசியலில் வகுப்புவாதத்தைத் தடுத்ததில் ஆகட்டும் சோனியா காந்தியின் பங்கெடுப்பு மகத்தானது.</p>



<p>அவரை வெளிநாட்டவர் என்று சொன்னது நகைச்சுவையாக இருந்தது. தனது கணவர் அரசியலுக்கு வருவதையே அவர் விரும்பியதில்லை. இந்திரா காந்திக்குப் பிறகு அவர் வழியில் ராஜிவ் காந்தி அரசியலுக்கு வருவதை சோனியா காந்தி தடுத்து நிறுத்த முயன்றார். இந்திரா காந்தியைப் போல் தன் கணவரின் உயிருக்கும் ஆபத்து நேரிடுமோ என்ற அச்சம் அவருக்கு இருந்தது. கடந்த 1991 ஆம் ஆண்டு மே 21 ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் ராஜிவ் காந்தி படுகொலை செய்யப்பட்டபோது, அவரது பயம் உண்மையானது.</p>



<p>அப்போது சோனியா முன்பு 2 சோதனைகள் இருந்தன. ஒன்று, நேரு-காந்திய அரசியல் குடும்பத்தைப் பாதுகாத்து வளர்க்க வேண்டிய பொறுப்பு. மற்றொன்று, காங்கிரஸ் ஒரு கடந்த கால வரலாறாக மாறுவதைத் தடுக்க வேண்டும். இந்த இரண்டு சோதனைகளிலும் சோனியா நன்றாகவே செயல்பட்டதை வரலாறு நிச்சயம் பதிவு செய்யும்.</p>



<p>இந்தியாவை மற்றொரு பாகிஸ்தானாக மாற்றிக் கொண்டிருக்கும் நரேந்திர மோடிக்குச் சவாலாக இருக்கும் இந்தியர்களில் ஒருவராக அவரது மகன் ராகுல் காந்தி படிப்படியாக மாறிக் கொண்டிருக்கிறார். கடந்த 2004 மற்றும் 2009 ஆகிய இரு மக்களவைத் தேர்தல்களிலும் இந்திய அரசியலில் பாஜகவின் வளர்ச்சியை சோனியா காந்தி தடுத்து நிறுத்தியுள்ளார்.</p>



<p>19 ஆண்டுக் கால அரசியல் வாழ்க்கையில் இதற்கு மேல் சோனியாவால் என்ன தான் செய்ய முடியும்? மக்கள் செல்வாக்கு இல்லாத சீதாராம் கேசரி காங்கிரஸ் தலைவராக இருந்தபோது, அழிவின் விளிம்பில் கட்சி இருந்தது. அந்த சூழலில், கடந்த 1998 ஆம் ஆண்டு சோனியா காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பேற்ற முதல் சுற்று, அவ்வளவு எளிதானது அல்ல. சோனியா காந்தி கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றபோது, தேர்தலுக்கு நாடு தயாராக இருந்தது.</p>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large"><img loading="lazy" decoding="async" width="634" height="449" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/12/dhdht.jpg" alt="" class="wp-image-3531" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/12/dhdht.jpg 634w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/12/dhdht-300x212.jpg 300w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/12/dhdht-120x86.jpg 120w" sizes="auto, (max-width: 634px) 100vw, 634px" /></figure></div>



<p>இந்த சூழ்நிலையில் தான் காங்கிரஸ் கட்சிக்குப் புத்துயிரூட்ட வேண்டிய சூழல் சோனியா காந்திக்கு ஏற்பட்டது. சோனியா வெளிநாட்டவர் என்பதால், காங்கிரஸ் தலைவராகக் கூடாது என்று காங்கிரஸ் மூத்த தலைவராக இருந்த சரத்பவார் வெளிப்படையாக எதிர்ப்புத் தெரிவித்தார். 1998 ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில், மதச்சார்பற்ற சக்திகள் தனித்தனியே போட்டியிட்டதால், காங்கிரஸ் கட்சியால் பெரும்பான்மையைப் பெற முடியவில்லை. எனினும், ஒரு சில மாதங்களிலேயே வாஜ்பாய் அரசை சோனியா கவிழ்த்தார். 1999 ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில், வெளிநாட்டவர் என்ற காரணத்தைச் சொல்லி, சோனியா காந்தி பிரதமராவதை முலாயம் சிங் யாதவ் தடுத்துவிட்டார்.</p>



<p>ஆனால், அப்போது அரசியலுக்கு ஏற்றவராக சோனியா மாறியிருந்தார். வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியைத் தனித்து நின்று எதிர்த்தால், அது காங்கிரஸைப் பலவீனப்படுத்தும் என்று சோனியா உணர்ந்திருந்தார். 2004 ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக முகாமை எதிர்க்க மதச்சார்பற்ற சக்திகளைக் கூட்டணியில் சேர்த்துக் கொண்டார்.</p>



<p>வழக்கமாக ஆட்சி அதிகாரத்தை மற்றவர்களுடன் பகிராத காங்கிரஸ்,கூட்டணி ஆட்சி அமைக்க முயன்றது நல்ல முடிவாக இருந்தது. யாருடனும் கூட்டணி வைப்பதற்கு பிரணாப் முகர்ஜி போன்ற தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த எதிர்ப்புகளை எல்லாம் சரி செய்து, மதச்சார்பற்ற சக்திகளுடன் இணைந்து 2004 ஆம் ஆண்டு தேர்தலை சோனியா காந்தி சந்தித்தார்.</p>



<p>அப்போது யாதவ் மற்றும் பஸ்வானின் கட்சிகள் காங்கிரஸ் குடையின் கீழ் வர மறுத்துவிட்டன. கடைசிவரை இந்த கட்சியினர் காங்கிரசுக்கு எதிரான அரசியலையே செய்தனர். இருப்பினும், வாஜ்பாய் ஆட்சியை அகற்ற, மறைந்த ஜோதிபாசுவும், வி.பி.சிங்கும் சோனியாவுக்குப் பின்னே இருந்து உதவினர்.</p>



<p>2004 ஆம் ஆண்டு தேர்தல், பழம்பெரும் தலைவர் வாஜ்பாய்க்கு எதிரான சோனியாவின் முதல் வெற்றியாக இருந்தது. இதன்மூலம் அவரை வெளிநாட்டவர் என்று கூறி வந்த இந்த அமைப்பை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். வெற்றி பெற்றதும், காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சித் தலைவராக சோனியா தேர்வு செய்யப்பட்டதும், சோனியாவுக்கு எதிராக வெளிநாட்டவர் என்ற பிரச்சாரம் தலைதூக்கியது. இதனைக் கண்டு சோனியா அதிர்ந்தார். மன்மோகன் சிங்கை பிரதமராக்கிவிட்டு, ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவரானார்.</p>



<p>பிரதமர் பதவியை ஏற்க வேண்டும் என்று நட்வர்சிங் வேண்டிக் கேட்டுக் கொண்டும், பிரதமர் பதவியை ஏற்க சோனியா காந்தி மறுத்துவிட்டார். இன்னும் சொல்ல வேண்டுமானால், அந்த நேரத்தில் பிரதமராகப் பதவிப்பிரமாணம் செய்து கொண்டிருந்தால், சோனியாவை யாராலும் தடுத்திருக்க முடியாது. இன்றைக்கு அவர் மீது எத்தனையோ விமர்சனங்கள் எழுந்தாலும், பிரதமர் பதவியை அவர் நிராகரித்ததை வரலாறு பதிவு செய்துள்ளது.</p>



<p>இப்போது சோனியாவின் போக்கு ஏழை மக்களுக்காகவே அமைந்தது. நாட்டை வழிநடத்துவது குறித்த குழப்பம் ஏதும் அவரிடம் இல்லை. அவரது மாமியார் இந்திரா காந்தியைப் போலவே, இந்தியாவின் ஏழை மக்களுக்கான ஆதரவு நிலையை எடுத்தார். ஏழைகளின் மீதான கரிசனத்துக்கு முதலில் பாதை அமைத்துக் கொடுத்தவர் நேரு என்பதை மறக்க முடியாது.</p>



<p>உலகமயமாக்கல் மற்றும் சந்தைப் பொருளாதாரத்தை மக்களை விடப் பெரிதாக நினைத்தாரா? இல்லை. தேசிய ஆலோசனை கவுன்சில் தலைவராகி, அருணா ராய் மற்றும் ஜீன் ட்ரென் போன்ற பொருளாதார நிபுணர்களின் ஆலோசனையின்படி, ஏழைகளுக்கு ஆதரவான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.</p>



<p>இதன் முதல் படி தான், வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் மக்களுக்கான 100 நாள் வேலை உறுதித்திட்டம். சந்தைச் சக்திகள் இதனைக் கடுமையாக எதிர்த்தன. தமது சொந்த அரசாங்கத்திலேயே இதற்கு முட்டுக்கட்டை ஏற்பட்டபோதும், அதையும் மீறி மக்களுக்குக் கொண்டு சென்றவர் சோனியா காந்தி.</p>



<p>சோனியா காந்தியின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டம் (100 நாள் வேலை உறுதித் திட்டம்) ஏழைகள் மக்கள் மத்தியிலும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலும் மாயாஜாலத்தை ஏற்படுத்தியது. இந்த திட்டத்தின் மூலம் 10 சதவீத இந்தியர்கள் வறுமைக் கோட்டுக்கு மேலே வந்துவிட்டதாக உலக வங்கி அறிக்கை வெளியிட்டது. சோனியாவின் ஏழைகளுக்கு ஆதரவான பொருளாதார நடவடிக்கை, சுதந்திரத்துக்குப் பிறகு இதுவரை இல்லாத அளவுக்கு இந்தியக் கிராமப்புற பொருளாதாரத்தில் பெரும் வளர்ச்சியைக் கண்டது.</p>



<p>இது அடுத்து வந்த 2009 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வெற்றியைச் சுவைக்கக் காரணமாக இருந்தது. இதற்கு சோனியா காந்திக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும். 2014 ஆம் ஆண்டு தேர்தலுக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு உணவு பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்டது. எனினும், 2015 ஆம் ஆண்டு தேர்தல் முடிவு ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்குத் தோல்வியை ஏற்படுத்தியதன்மூலம், இந்திய அரசியல் வரலாறு மாறுபட்டது என்பது உணர்த்தப்பட்டது.</p>



<p>19 ஆண்டுகள் அவரை பிரதமராக விடாமல் தடுக்கப்பட்டு, 2014 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் நரேந்திர மோடிக்கும் பெரும் வெற்றியைப் பெற்றுத் தந்தது. அதன்பிறகு சோனியா காந்தி உடல் நலிவுற்றார். தன் மகன் ராகுல் காந்தியை கட்சிக்குத் தலைமையேற்க வைத்தார்.</p>



<p>தமது 71 ஆவது வயதிலேயே அரசியலிலிருந்து ஓய்வு பெற சோனியா காந்தி நினைத்தார். கட்சிக்குத் தலைமை பொறுப்பேற்கும் முன், அவர் முன்னே இருந்த 2 சோதனைகளிலும் வெற்றி பெற்றார்.வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருந்த காங்கிரஸ் கட்சிக்குப் புத்துயிரூட்டினார்.</p>



<p>கட்சியை வழி நடத்த ராகுல்காந்திக்கு வழிவிட்டுள்ளார். இன்னும் ஒரு வார காலத்துக்குள் கட்சியை வழிநடத்த ராகுல் காந்தி தயாராக உள்ளார்.</p>



<p>சோனியாவின் அரசியல் ஆளுமை குறித்து இனி வரலாறு தீர்ப்பளிக்கும். ஏழைகளைப் பற்றிச் சிந்தித்து கோடிக்கணக்கான மக்களை வறுமைப் பிடியிலிருந்து அவர் மீட்டார். இது எந்த அரசியல்வாதியும் செய்யாதது. இந்த ஆணாதிக்க சமுதாயத்தில், அரசியல் தரகர்கள் இருக்கும் நாட்டில் ஒரு பெண் நிகழ்த்திய சாதனை என்றென்றும் நினைவுகூரப்படும் என்பதில் சந்தேகமில்லை.</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/how-sonia-gandhi-got-the-better-of-the-system/">19 ஆண்டு அரசியல் பயணம் : ஆணாதிக்க சமுதாயத்தில் சாதனை படைத்த சோனியா காந்தி</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://desiyamurasu.com/news-india/how-sonia-gandhi-got-the-better-of-the-system/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>அன்னை இந்திராவுக்கு உறுதுணையாக ராஜிவ் &#8211; சோனியா!</title>
		<link>https://desiyamurasu.com/news-india/excerpts-from-sonia-gandhis-book-my-rajiv/</link>
					<comments>https://desiyamurasu.com/news-india/excerpts-from-sonia-gandhis-book-my-rajiv/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Admin]]></dc:creator>
		<pubDate>Sat, 31 Oct 2020 06:37:38 +0000</pubDate>
				<category><![CDATA[தேசிய அரசியல்]]></category>
		<category><![CDATA[indira gandhi]]></category>
		<category><![CDATA[rajiv gandhi]]></category>
		<category><![CDATA[sonia gandhi]]></category>
		<guid isPermaLink="false">https://desiyamurasu.com/?p=2852</guid>

					<description><![CDATA[<p>‘My Rajiv’ என்கிற நூலில் அன்னை சோனியா எழுதிய சில பகுதிகளின் தமிழாக்கம் அன்னை இந்திரா நினைவு நாளையொட்டி (அக்டோபர் &#8211; 31) வெளியிடுகிறோம்: கடந்த சில ஆண்டுகளாக நானும் ராஜிவும், அரசியலை நெருங்கிய நிலையில் பார்க்கிறோம். அரசியலின் தரம் தாழ்ந்த நிலைகளை நாங்கள் பார்த்திருக்கிறோம். என் மாமியாரோடு இணைந்து கொள்கைகளையும் திட்டங்களையும் வகுத்த சில மூத்த தோழர்கள், திடீரென அவரை எதிர்த்தனர். அவர் முழுமையாக நம்பிய அரசியல் நண்பர்கள், துரோகம் இழைத்தனர். அவரைக் கடுமையாக விமர்சித்தனர். [&#8230;]</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/excerpts-from-sonia-gandhis-book-my-rajiv/">அன்னை இந்திராவுக்கு உறுதுணையாக ராஜிவ் &#8211; சோனியா!</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p><span class="has-inline-color has-very-dark-gray-color"><em><strong>‘My Rajiv’ </strong>என்கிற நூலில் அன்னை சோனியா எழுதிய சில பகுதிகளின் தமிழாக்கம் அன்னை இந்திரா நினைவு நாளையொட்டி (அக்டோபர் &#8211; 31)</em> <em>வெளியிடுகிறோம்:</em></span></p>



<p>கடந்த சில ஆண்டுகளாக நானும் ராஜிவும், அரசியலை நெருங்கிய நிலையில் பார்க்கிறோம். அரசியலின் தரம் தாழ்ந்த நிலைகளை நாங்கள் பார்த்திருக்கிறோம். என் மாமியாரோடு இணைந்து கொள்கைகளையும் திட்டங்களையும் வகுத்த சில மூத்த தோழர்கள், திடீரென அவரை எதிர்த்தனர். அவர் முழுமையாக நம்பிய அரசியல் நண்பர்கள், துரோகம் இழைத்தனர். அவரைக் கடுமையாக விமர்சித்தனர். அவரை எதிர்த்தவர்கள் பழிவாங்க மேற்கொண்ட பிரச்சாரம் கண்டு, சாதாரண மக்களும் திகைப்படைந் தனர். அரசியல்வாதியானால், வாழ்க்கை எவ்வாறு இருக்கும் என்பதை நானும் ராஜிவும் நன்கு அறிவோம். </p>



<div class="wp-block-image"><figure class="alignleft size-large is-resized"><img loading="lazy" decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/i1_2.jpg" alt="" class="wp-image-2854" width="280" height="434" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/i1_2.jpg 398w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/i1_2-194x300.jpg 194w" sizes="auto, (max-width: 280px) 100vw, 280px" /></figure></div>



<p>அன்றைய அரசியல் சிக்கலால், ராஜிவ் மன வேதனையுற்றார். என் மாமியார் தனியாக இம்சிக்கப் பட்டார். இப்படிப்பட்ட நிலையில், அவருக்கு இளைப்பாற மகனின் தோள்கள் தேவைப்படும்போது, ராஜிவ் எவ்வாறு சுக வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்க முடியும்? அவருடைய தாயாரை நான் மிகவும் நேசித்ததால், மன உளைச்சல் அடைந்தேன். ராஜிவ், தம் தாய்க்குத் துணையாக நின்று, பொறுப்புடன் செய்யவேண்டிய கடமைகளை நான் உணர்ந்தேன். அதேவேளையில், அவரைப் பலி ஆடாக ஆக்கும் சமுதாயமுறை பற்றி நான் கோபமும் வெறுப்பும் அடைந்தேன். அது அவரை நசுக்கி அழித்துவிடும் என்பதை நான் முழுவதுமாக அறிவேன்.</p>



<h4 class="wp-block-heading"><strong>அவர் என்னுடைய ராஜிவ்!</strong></h4>



<p>அந்த நீண்ட நெடிய ஆண்டு, ஒவ்வொரு நிமிடமும், ஓர் அதள பாதாளத்தை நோக்கிச் சென்றது. எங்களுக்கு உதவி செய்ய எவருமில்லை! எல்லாரும் ஏற்கத்தக்க நியாயமான ஒரு தீர்வை &#8211; அற்புதத்தை நான் எதிர்பார்த்தேன்! ராஜிவ் சிதைவடைவதை என்னால் தாங்கிக்கொள்ள முடியாது. அவர் என்னுடைய ராஜிவ்! ஏனென்றால், அந்த அளவுக்கு நாங்கள் ஒருவரை ஒருவர் நேசித்தோம்! அவர் தம் தாயாருக்குக் கைகொடுத்து உதவ எண்ணினால், அதற்காக அவரோடு எங்குச் சென்றும் போரிடத் தயாரானேன்!</p>



<p>ராஜிவ் அரசியலில் நுழைந்த விநாடிமுதல் எங்கள் வாழ்க்கை மாறியது. இதற்குமுன் அவர் வாழ்ந்த வாழ்க்கை வேறு விதமானது! கவனமான வேலை! அதன்பின் ஒய்வு! &#8211; எத்தகைய காலம் அது? முன்னதாக இருந்த எங்கள் வாழ்க்கை உலகம் மிகமிக நெருக்கமானது! புரிந்து கொள்ளத் தக்கது! இப்போது அவர் வாழ்க்கை , மக்கள் கூட்டத்தின் மத்தியில்! தினமும் நூற்றுக்கணக்கானோர் &#8211; அரசியல்வாதிகள், கட்சி ஊழியர்கள், அமேதி தொகுதி மக்கள் &#8211; தங்கள் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டுதல் போன்றவற்றை முன்வைக்கின்றனர்! அவர் எங்களோடு இருக்கும் நேரம் விலை மதிக்க முடியாதது! அவரது பயணத்தின்போதும் இரவில் வெகுநேரம் விழித்திருந்தபோதும், உடனிருக்க, நாங்கள் எங்களை மாற்றிக்கொண்டு, அதற்கேற்பப் பழக்கப்படுத்திக்கொண்டு விட்டோம்.</p>



<h4 class="wp-block-heading"><strong>ராகுலுக்கு ராஜிவ் எழுதிய கடிதம்</strong></h4>



<p>அந்தக் காலத்திய திடீர் எதிர்பார்ப்புகளைப் பற்றி அவர் பரப்பரப்பு அடையவில்லை. தமக்கு இருக்கும் அரசியல் சுமை, தனிமை, இழப்பு என எது பற்றியும், ஒருபோதும் அவர் புகார் கூறியதில்லை . எவ்விதப் பரப்பரப்புமின்றி, வேலையில் ஈடுபடுவது அவரது இயல்பு. ராகுலுக்கு அவர் எழுதிய கடிதங்களுள் ஒன்றில் இது வெளிப்படுத்துகிறது.</p>



<p>&#8220;ஏதாவது ஒன்றைச் செய்தால், அதைச் செம்மையாகச் செய்ய வேண்டும். நல்லது எதையும் அரைகுறையாகச் செய்யக்கூடாது. உன்னால் எவ்வளவு சிறப்பாகச் செய்ய முடியுமோ, அவ்வளவு சிறப்பாகச் செய்ய, மேலும் கடினமாக உழை! வாழ்க்கை ஒரு பந்தயம் போன்றது. சற்று அதிகமாக உழைத்து முன்னேறு! முழுமை அடையும்வரை முயன்று உழை! சிறுசிறு விஷயங்கள்தான் மாற்றங்களை உண்டாக்கும்” என்று ராகுலுக்கு ஒரு கடிதத்தில் எழுதியிருந்தார்.</p>



<p>அரசியல் பணியில் ஈடுபட்டிருந்தாலும், ராஜிவுக்குக் குடும்பம் மிகவும் தேவையாக இருந்தது. அரசியலை அறிந்த ராஜிவ், தாம் நன்கறிந்த, நம்பத்தக்க, நேர்மையான, நிலையான உலகையே விரும்பினார். அரசியலுக்கு மாறுபட்ட, உண்மையான, அன்பு நிறைந்த புகலிடமாக அது அவருக்குத் தெரிந்தது.</p>



<p>அக்காலத்தில், அவர் எனக்கு எழுதிய கடிதம் ஒன்றில் இவ்வாறு இருந்தது, “இந்து மரபின்படி, ஆடவன் ஒருவன் அரை மனிதன்தான். அவன் மனைவியே அவனை முழுமையாக்குகிறாள். இதுபோலவே நானும் எண்ணுகிறேன்.</p>



<p>நீ இல்லாவிட்டால், என் வாழ்க்கை மிகவும் கடினமானதாக இருக்கும். அரசியலில் நான் இருக்கும் போது, இது மிகவும் உண்மையாக இருப்பதாக எண்ணுகிறேன்.”</p>



<h4 class="wp-block-heading"><strong>ராஜிவின் அரசியல் பிரவேசம்</strong></h4>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large"><img loading="lazy" decoding="async" width="600" height="406" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/2018_5image_11_50_442208000indira-rajiv-ll.jpg" alt="" class="wp-image-2941" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/2018_5image_11_50_442208000indira-rajiv-ll.jpg 600w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/2018_5image_11_50_442208000indira-rajiv-ll-300x203.jpg 300w" sizes="auto, (max-width: 600px) 100vw, 600px" /></figure></div>



<p>ராஜிவின் அரசியல் பிரவேசத் தீர்மானத்தை நான் ஏற்றாலும், எங்கள் வாழ்க்கையில் அதனால் ஏற்பட்ட பின்விளைவுகளால், சிறிது காலம் கழித்தே எனக்கு மனதார ஈடுபாடு ஏற்பட்டது. குடும்பத்தை நடத்து வதோடு, நான் முன்பு தொடங்கி இடையில் விட்டிருந்த வண்ண ஓவியங்களை வரையும் பயிற்சியில் மீண்டும் ஈடுபடத் தொடங்கினேன். ராஜிவ், அவரது தாயார் ஆகியோரின் ஓய்வு நேரங்களுக்கேற்ப, என் பயிற்சி நேரத்தையும், வெளி உலக நிகழ்ச்சிகளையும் மாற்றி அமைத்துக்கொண்டேன். என் மாமியாரின் ஆழ்ந்த மனக்காயங்களை உணர்ந்து, நானும் ராஜிவும் அவருக்கு ஒரு பாதுகாப்பு அரணாக இருந்து செயல்பட்டோம். இக்கால கட்டத்தில், குடும்பத்திலும் மாற்றங்கள் ஏற்பட்டன.</p>



<p>1982 இல் ராகுலுக்கு ராஜிவ் எழுதிய கடிதத்தில், “நான் அமேதி போகிறேன். அம்மாவும் உடன் வருகிறாள். தொடக்கத்தில் ஒவ்வொருவரும் அவளையே இமை கொட்டாது பார்ப்பார்கள். பழக்கப்படும்வரை இது ஒரு தர்மசங்கடமாக இருக்கும். அவள் மிகவும் தைரியசாலி!” என்று குறிப்பிட்டு நிலைமையை உணர்த்தியிருந்தார்.</p>



<h4 class="wp-block-heading"><strong>ராகுலுக்கு மன உறுதி அளித்த ராஜிவ்</strong></h4>



<p>1982இல் அங்கேயே தங்கிப் படிக்கும் விடுதி இணைந்த பள்ளி ஒன்றுக்கு ராகுல் அனுப்பப்பட்டான். 1983இல் பிரியங்காவும் அங்குச் செல்ல வேண்டியிருந்தது. &#8216;அனுபவமே ஒருவரை வலுவுடையவராகவும், தற்சார்பு உடையவராகவும் மாற்றும்&#8217; என்பது ராஜிவின் உறுதியான நம்பிக்கை. ஆனால், குடும்பத்தின்மீது ஏற்பட்ட தாக்குதலால், தங்களைத் தாங்களே எவ்வாறு சமாளித்துக்கொள்ளப் போகிறார்கள் என ராஜிவ் கவலைப்பட்டார். டெல்லியில், பள்ளித் தோழர்கள் அவர்களைத் துன்புறுத்திய பிரச்சினைகளை முன்பே எதிர் கொண்டுள்ளார்கள். அப்போது அவர்களுக்கு ஆதரவாக நாங்கள் இருந்தோம். எனவே, மனோதிடத்தை வளர்த்துக்கொள்ளுமாறு ராஜிவ் அடிக்கடி ராகுலுக்குக் கடிதம் எழுதினார்.</p>



<p>&#8220;சில சமயம், அப்பா, பாட்டி, அம்மா பற்றி டெல்லியில் பத்திரிகைகளில் செய்திகள் வரும். அதற்காகக் கவலைப்படாதே! அதுபற்றிச் சில பள்ளித் தோழர்கள்கூட உன்னை மனக்கவலை அடையச் செய்யலாம். ஆனால், அச்செய்திகளில் பல, உண்மை அன்று ! அத்தகைய புகைச்சல்களை எதிர்கொள்ளக் கற்றுக்கொள்! உன்னை எரிச்சலடையச் செய்யும் செய்திகளைப் பற்றிக் கவலை கொள்ளாதே!&#8221; என ராஜிவ், ராகுலுக்கு எழுதிய கடிதம் ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்.</p>



<p>இதற்கிடையில், பஞ்சாபில் நிலவியிருந்த நிலை, தேச ஒற்றுமைக்குப் பேரபாயமாகத் தோன்றியது. பிரிவினை சக்திகள் வலிமை பெற்றன. மிருகத்தனமான பயங்கரவாதக் கொலைகள், மேலும் மேலும் அதிகரித்தன. ராகுலையும் பிரியங்காவையும் பயங்கரவாதிகள் குறிவைத்திருப்பதாக எங்களுக்கு எச்சரிக்கை தரப்பட்டது. ஆபத்து அதிகரித்தபோது, அந்தப் பள்ளியில் வைத்து அவர்களைச் சமாளிப்பது மிகவும் கடினமாக இருந்தது.</p>



<h4 class="wp-block-heading"><strong>ராகுல், பிரியங்கா பாதுகாப்பு குறித்து இந்திரா கவலை!</strong></h4>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img loading="lazy" decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/873e86bd-dfc9-431e-95e7-e0352d9bf97f-690x1024.jpg" alt="" class="wp-image-2945" width="548" height="812" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/873e86bd-dfc9-431e-95e7-e0352d9bf97f-690x1024.jpg 690w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/873e86bd-dfc9-431e-95e7-e0352d9bf97f-202x300.jpg 202w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/873e86bd-dfc9-431e-95e7-e0352d9bf97f-768x1140.jpg 768w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/873e86bd-dfc9-431e-95e7-e0352d9bf97f-750x1113.jpg 750w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/873e86bd-dfc9-431e-95e7-e0352d9bf97f.jpg 990w" sizes="auto, (max-width: 548px) 100vw, 548px" /></figure></div>



<p>1984இன் வசந்த காலத்தில், டெல்லி பள்ளிகளில் ராகுலும் பிரியங்காவும் சேர்க்கப்பட்டார்கள். அவர்களுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட பல இடைஞ்சல்களில் இது முதன்மையானது. ஆனால், அதற்கு ஈடான வேறு நிகழ்வுகளும் உண்டு. அவர்களது பாட்டியின் கடைசி ஆறுமாத வாழ்க்கையை அவர்களுடன் கழித்தார். அவர்களின் பாதுகாப்பு பற்றி அச்சப்பட்டாலும், அவர்களோடு இருந்ததில் பாட்டிக்கு அளவற்ற மகிழ்ச்சி!</p>



<p>அக்பர் சாலை அலுவலகத்தை, எங்கள் வீட்டோடு இணைத்த வாயில் படியைத் தாண்டி, வெளியே விளையாடப் போகக் கூடாதென ராகுலுக்கும் பிரிங்காவுக்கும் என் மாமியார் பலமுறை எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த இடத்தில்தான், பின்னர் அவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.</p>



<h4 class="wp-block-heading"><strong>மரணத்தை எதிர்பார்த்த இந்திரா!</strong></h4>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large"><img loading="lazy" decoding="async" width="445" height="640" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/Indira_Gandhi_in_1967_1.jpg" alt="" class="wp-image-2948" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/Indira_Gandhi_in_1967_1.jpg 445w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/Indira_Gandhi_in_1967_1-209x300.jpg 209w" sizes="auto, (max-width: 445px) 100vw, 445px" /></figure></div>



<p>சில மாதங்களுக்குப் பிறகு, குழந்தைகளுக்கு ராஜிவ் எழுதிய கடிதத்தில், &#8220;என் தாயார் தாம் இறக்கும் நாளை நன்கு அறிந்திருந்தார் என உறுதியாக நம்புகிறேன். அவ்வாறு அவர் ஏன் நினைத்தார் என எனக்குத் தெரியாது. ஆனால், அது உண்மை ! அவர் செய்த பல செயல்கள், அவர் எங்களைப் பிரியத் தயாராக இருந்தார் என்பதையே உணர்த்தின. ஏனென்றால், அவர் அவ்வாறு செய்ய விரும்பாவிடினும், அவர் எடுத்த முடிவுகள், தலைவர் என்ற முறையில் அவர் செய்த கடின முடிவுகள், வாழ்க்கையைப் பற்றி அவரை அவ்வாறு எண்ணத் தூண்டின” எனக் குறிப்பிட்டிருந்தார்.</p>



<p>சீக்கிய பொற்கோயிலை ராணுவம் மீட்ட நிகழ்வுக்குப் பிறகு, எங்கள் வாழ்வில் ஒரு சோக நிழல் அலை பரவியது. என் மாமியார் தாம் இறந்தபின் தம்முடைய மரணச் சடங்குகள் எப்படி இருக்கவேண்டும் என்பன பற்றி ராஜிவிடமும் என்னிடமும் முன்பே பேசினார். தாம் கூற விரும்பிய அறிவுரைகளை எழுதினார். ராகுலிடம் தனியாகப் பேசினார். தைரியமாக இருக்குமாறு அவனிடம் கூறினார். தாம் வாழ்ந்து முடித்துவிட்டதாகவும், தம்மால் இயன்ற பணிகளைச் செய்துள்ளதாகவும், தாம் இறந்தால் அழக்கூடாது எனவும் கூறினார்.</p>



<p>நாள்கள் கடந்து சென்றன. தீபாவளி வந்தது! எங்களோடு தீபாவளி நாள்களைக் கழிக்க ஒரிசாவிலிருந்து ராஜிவ் வந்தார். இதுபோன்ற நல்ல விழா நேரங்களில் அவர் வரத் தவறுவதில்லை . பழைமையான கணேச விக்ரகத்தின் முன்னால் என் மாமியார் தீபங்களை ஏற்றினார். வீட்டை ஒளி அலங்காரம் செய்வதில் நாங்கள் ஈடுபட்டோம். பட்டாசுகள் வெடித்தோம்!</p>



<h4 class="wp-block-heading"><strong>மருமகளை அரவணைத்த மாமியார்!</strong></h4>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large"><img loading="lazy" decoding="async" width="860" height="572" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/MRS-INDIRA-GANDHI-WITH-SONIA-PRIYANKA-AND-RAHUL-1982_1.jpg" alt="" class="wp-image-2950" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/MRS-INDIRA-GANDHI-WITH-SONIA-PRIYANKA-AND-RAHUL-1982_1.jpg 860w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/MRS-INDIRA-GANDHI-WITH-SONIA-PRIYANKA-AND-RAHUL-1982_1-300x200.jpg 300w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/MRS-INDIRA-GANDHI-WITH-SONIA-PRIYANKA-AND-RAHUL-1982_1-768x511.jpg 768w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/MRS-INDIRA-GANDHI-WITH-SONIA-PRIYANKA-AND-RAHUL-1982_1-750x499.jpg 750w" sizes="auto, (max-width: 860px) 100vw, 860px" /></figure></div>



<p>தீபாவளி கொண்டாட்டம் முடிந்த மறுநாள் காலை, ராஜிவ் மேற்கு வங்கம் சென்றார். அன்று இரவு அதிகாலை நான்கு மணிக்கு நான் எழுந்தேன். எனக்கு ஆஸ்த்துமா மருந்து தேவைப்பட்டது. படுக்கை அறை விளக்கை ஏற்றி, மருந்துப் பெட்டிப் பக்கம் சென்றேன். அடுத்த அறையில் இருந்த என் மாமியாருக்குத் தொல்லைதரக் கூடாதென எண்ணினேன். ஆனால், என் அறைக்கதவு திறந்தது! எனக்கு ஒரே வியப்பு! அவர் கையில் டார்ச் விளக்கை வைத்துக்கொண்டு எனக்கு மாத்திரை தேடிக் கொடுத்து, ஒரு கோப்பைத் தண்ணீ ரையும் அளித்தார். மறுபடியும் உடல் நலக்குறைவு ஏற்பட்டால் தம்மைக் கூப்பிடச் சொன்னார். அநேகமாக அவர் தூங்காமல் விழித்திருந்திருப்பார் என எண்ணுகிறேன்.</p>



<p>அந்த வார இறுதியில், காஷ்மீர் செல்வது பற்றி மறுநாள் பேசத் தொடங்கினார். இலையுதிர் காலத்தில், சினார் மர வண்ண இலைப் பூக்களை அவர் பார்க்க மிகவும் விரும்பினார். அவற்றைக் கண் குளிரக் காண்பது என்பது அவருக்கு ஒரு முக்கிய சம்பவமாகத் தோன்றியது. காஷ்மீர் பற்றித் தம் உள்ளத்தில் அவர் கொண்டிருந்த எண்ண ஓட்டங்களுக்கு அது பிரியாவிடையோ என்னவோ? இருந்தும், என் உடல் நலக்குறைவு பற்றிய கவலை காரணமாக இரவில் அங்குத் தங்க அவர் தயங்கினார். நான் தனியாக வீட்டில் தங்க நேர்ந்தது பற்றிக் கவலை கொண்டார். இறுதியாகக் குழந்தைகளுடன் சென்றார்.</p>



<p>அக்டோபர் 28இல் காஷ்மீரிலிருந்து அவர் திரும்பினார். அன்றைய மாலைப்பொழுதை எங்கள் அறையில் அமைதியாகக் கழித்தார். வழக்கம்போல் தம் முராவினை (பிரம்பு நாற்காலி) எடுத்து வந்து அதில் அமர்ந்து அலுவலகப் பணிகளைக் கவனித்தார். இடையிடையே தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே எங்களோடு அளவளாவினார்.</p>



<p>அடுத்த நாள் அதிகாலை ஒரிசா பயணம்; அதை முடித்துக்கொண்டு மாலையில் வீடு திரும்பினார். அன்று புவனேஸ்வரத்தில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில், “நான் வாழ்வேனா, அல்லது சாவேனா என்பது பற்றி எனக்குக் கவலையில்லை. இறுதி மூச்சு உள்ளவரை தேசப்பணி ஆற்றுவேன். நான் இறந்தால்கூட, நான் சிந்தும் ஒவ்வொரு துளி இரத்தமும், ஒன்றுபட்ட சுதந்திர இந்தியாவைப் பலப்படுத்தி, வலுப்படுத்தும்” என்று உரையாற்றினார்.</p>



<p>அக்டோபர் 31, அரசு விருந்தோடு முடிவடையும்படி ஒரு பரப்பரப்பான நாளாக வீடு இருக்கும். காலையில் பள்ளிக்குப்போக விடைபெற்ற பிரியங்காவை முத்தமிட்டு, இறுக்கமாகத் தழுவினார்; ராகுலைக் கூப்பிட்டு, தாம் முன்பு கூறியவற்றை நினைவூட்டினார். அவர் அலுவலகம் புறப்படத் தயாராகும்போது, அவரது அறைக்குள் நான் நுழைந்தேன். மாலை விருந்து பற்றிச் சிறிது நேரம் பேசினார். கால தாமதமாகிவிட்டதால், மதிய உணவின்போது, இரவு விருந்து ஏற்பாடுபற்றிப் பேச எண்ணினார்.</p>



<h4 class="wp-block-heading"><strong>அன்னை இந்திரா படுகொலை!</strong></h4>



<p>நான் குளிக்கச் சென்றேன். அப்போது, வழக்கத்துக்கு மாறாகத் தீபாவளி பட்டாசு வெடிப்பது போன்ற ஒரு ஒலி கேட்டது. ஆனால், பட்டாசு வெடிபோலல்லாமல், முற்றிலும் மாறான ஓசை அது! குழந்தைகளின் தாதியிடம் (ஆயா), என்ன என்று பார்க்கச் சொன்னேன். எனினும், ஏதோ பயங்கரம் நிகழ்ந்ததை நான் உணர்ந்தேன். வெளியே ஓடி வந்தேன். அம்பாசிடர் கார் ஒன்றின் பின் இருக்கையில் என் மாமியார் கிடத்தப்பட்டிருந்தார். அவர் இறந்தவர்போன்று தோன்றினார். அவர் அருகில் நான் மண்டியிட்டு அமர்ந்தேன். பலத்த ஜனநெரிசல்களுக்கிடையே கார், மெதுவாக மருத்துவமனை நோக்கிச் சென்றது. எனக்குப் பேயறைந்த உணர்வு. ஏதேதோ எண்ணங்கள்! அவர் மூர்ச்சையாய் இருக்கிறாரா? அவர் காப்பாற்றப்படுவாரா? ராஜிவ் எங்கே? குழந்தைகள் எங்கே? படுபயங்கரம் ஒன்று நிகழ்ந்ததை என்னால் நம்ப முடியவில்லை;</p>



<h4 class="wp-block-heading"><strong>எல்லாமே முடிந்துவிட்டது!</strong></h4>



<p>ஆனால், எல்லாமே முடிந்துவிட்டது! மணித்துளிகள் உருண்டோடின. பெருந்திரளாக மக்கள், உற்றார் உறவினர் வந்து சென்றனர். குழந்தைகள் பள்ளியிலிருந்து அழைத்துவரப்பட்டு, சப்தர் ஜங் சாலையில் இருப்பதாக யாரோ கூறினார்.</p>



<p>ராஜிவ் மேற்கு வங்கத்தில் இருந்தார். தாயாருக்குக் காயமேற்பட்டதாக அவருக்குச் செய்தி அனுப்பப் பட்டது. டெல்லி திரும்பும் விமானத்தில் வானொலிச் செய்தியை அவர் கேட்டுள்ளார். மாலை 3.15 மணிக்கு மருத்துவமனையை அடைந்தார். மற்றவர்களோடு அவர் இருந்தார். ராஜிவுடன் ஒரே ஒரு விநாடி தனிமையில் இருக்க எனக்கு விருப்பம்! அவரைக் கட்சித் தலைமைப் பொறுப்பை ஏற்க அனைவரும் அழைப்பதாக ராஜிவ் என்னிடம் கூறினார். ராஜிவைப் பிரதமராக்க ஏற்பாடுகள் நடந்தன. அப் பதவி வேண்டாமென நான் அவரிடம் மன்றாடினேன்; கெஞ்சினேன்! மாற்றார்கள் மத்தியில் இந்த வேண்டுகோளை நான் விடுத்தேன். அவரும் கொல்லப்படுவார் என்றேன். அவர் என் கைகளை இறுகப் பிடித்துக்கொண்டு என்னைத் தழுவி அணைத்து, &#8216;விரக்தியடையக்கூடாது&#8217; என்றார். அவருக்குப் பிரதமர் பொறுப்பு ஏற்பதைத் தவிர வேறு வழியில்லை !</p>



<p>&#8220;எப்படியும் ஒருநாள் நான் கொல்லப்படலாம்” என்றார். அவர் எதிர்பார்த்தபடி கொல்லப்பட்டார்.</p>



<h3 class="wp-block-heading"><strong><span class="has-inline-color has-vivid-red-color">அன்னை இந்திரா மறைவிற்குப் பிறகு…</span></strong></h3>



<p><span class="has-inline-color has-very-dark-gray-color"><em>அன்று நவம்பர் மாதம் 19ஆம் நாள்!<br>என் மாமியார், இந்திய மண்ணில் முதன்முதலாய்ப் பாதம் பதித்த நாள்! ஆம், பிறந்த நாள்!</em></span></p>



<h4 class="wp-block-heading"><strong>இறுதிச் சடங்குகள் குறித்த இந்திரா!</strong></h4>



<p>எங்கள் குழந்தைகளுக்கு நாங்கள் இருவரும் ஒரே மாதிரியான, ஆயினும் தனித்தனியாகச் சில அறிவுரைகளை வழங்கினோம். &#8220;சோனியாவும் நானும் ஒரே நேரத்திலோ, ஒரே இடத்திலோ, வேறுவேறு இடங்களிலோ, இந்தியாவிலோ, அன்றி வெளியிலேயோ, எப்படி &#8211; எங்கே இறக்க நேர்ந்தாலும், எங்கள் உடல்கள் டெல்லிக்குக்கொண்டு வரப்படவேண்டும்! அங்கு இந்துசமயச் சடங்குகள் அனைத்தும் செம்மையாகச் செய்யப்பட்டுத் திறந்தவெளியிலே தகனம் செய்யப்பட வேண்டும்! எரிமின் நிலையத்தில் எங்கள் உடல்கள் எரிக்கப்படக் கூடாது! எங்கள் வழக்கப்படி, மூத்த குழந்தை ராகுல், தகனம் செய்யத் தீவைக்க வேண்டும். பின்னர், அலகாபாத் திரிவேணியில் கங்கையில் எங்கள் அஸ்தி கரைக்கப்பட வேண்டும்! அங்குதான் என் மூதாதையர்களின் அஸ்தி கரைக்கப்பட்டது&#8221; என்று ராஜிவ் கூறினார்.</p>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large"><img loading="lazy" decoding="async" width="538" height="187" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/rhgresh.jpg" alt="" class="wp-image-2861" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/rhgresh.jpg 538w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/rhgresh-300x104.jpg 300w" sizes="auto, (max-width: 538px) 100vw, 538px" /></figure></div>



<h4 class="wp-block-heading"><strong>எங்களுக்கு எல்லாமே அன்னை இந்திராதான்!</strong></h4>



<p>எங்கள் உலகத்தின் மையமாகத் திகழ்ந்தவர் என் மாமியார்தான்! நான் சிறுபெண்ணாக, அவர்களுக்கு மருமகளாக, இந்த எங்கள் வீட்டில் நுழைந்தபோது, கஷ்ட நஷ்டங்கள், இன்ப துன்பங்கள் ஆகியவற்றிலும் அவர்தான் முக்கியப் பங்கு வகித்தார். எங்கள் வாழ்க்கைச் சக்கரத்தின் மையம் அவர்தான்! எந்தப் பிரச்சினையாக இருந்தாலும், சச்சரவாக இருந்தாலும், சிறப்பு நிகழ்ச்சியானாலும் எதிலும் அவரையே நாங்கள் எதிர்கொண்டோம்! எங்களுக்கு நல்ல வழிகாட்ட, தவறு செய்தால் திட்டித் திருத்த, ஒரு செயலைச் செய்ய, ஊக்கமளிக்க, அன்பு காட்ட இதுவரை அவர் இருந்தார்!</p>



<p>ராஜிவைப் பொறுத்தவரை, அவருடைய குடும்பமே அவரது அன்னைதான்! குறிப்பிட்டுச் சொல்வதானால், ராஜிவினுடைய தாயார், அவருடைய வாழ்நாளின் கடைசி நான்கு ஆண்டுகளில் ஒரு கனிவான தாயாக, நல்ல நண்பனாக, இவற்றிற்கெல்லாம் மேலானவராகத் தோன்றினார்.</p>



<p>ராஜிவுக்கு என் மாமியார்தான் ஆசான், தலைவர் என எல்லாமுமே! ஆயினும், தாயாரின் எதிர்பாராத மரணம் குறித்து ராஜிவால் துக்கம்கொள்ள முடியவில்லை! தாங்கமுடியாத தமது துயரத்தையோ, மனக்காயத்தையோ ராஜிவால் வெளியில் காட்டிக்கொள்ள நேரமே இல்லை!</p>



<h4 class="wp-block-heading"><strong>மீளமுடியாத துயரம்!</strong></h4>



<p>தம் தாயாரின் அகால மரணமாகிய துயர நிகழ்வுக்குப் பின்னர் நடந்த ஒரு சம்பவம் என் நினைவில் இப்போதும் நிழலாடுகிறது. ராஜிவை நான் ஒரு நாள் வீடு முழுவதும் தேடினேன்! யாருக்கும் அவர் இருக்கும் இடம் தெரியவில்லை. அவர் தம் தாயாரின் அறையில் இருந்தார்! தாயாரோடு தொடர்புடைய பொருள்களை ஒவ்வொன்றாக அவரது அறையில் தனியே அமைதியாகப் பார்த்துக்கொண்டிருந்தார். ராஜிவுக்கு அந்தத் தனிமை அப்போது தேவைப்பட்டிருக்கிறது. எனவே, தனிமையில் மூழ்கியிருந்தார்.</p>



<p>தாயார் உயிருடன் இல்லாததை எண்ணிப் பலமுறை ராஜிவ் உணர்ந்து உருகியது உண்டு. பொதுவாழ்வில் ஈடுபட்டுப் பல பிரச்சினைகளை உறுதியுடன் எதிர்கொள்ள நேர்ந்த சூழ்நிலைகளிலெல்லாம் ராஜிவ் தம் தாயை நினைத்துக்கொண்டதுண்டு, இவ்வகையில், அவரிடமிருந்து ஆன்ம பலத்தையும் தைரியத்தையும் பெற்றார் எனலாம். பழமையும் பண்பாட்டுச் சிறப்பும் நிறைந்த ஒரு தேசத்தை வழிநடத்திச் செல்லும் பொறுப்பு இப்போது ராஜிவின் இளம் தோள்களில் சுமத்தப்பட்டிருந்தது!</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/excerpts-from-sonia-gandhis-book-my-rajiv/">அன்னை இந்திராவுக்கு உறுதுணையாக ராஜிவ் &#8211; சோனியா!</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://desiyamurasu.com/news-india/excerpts-from-sonia-gandhis-book-my-rajiv/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>இந்தியாவின் போக்கை திசை மாற்றியவர் &#8211; க. பழனித்துரை</title>
		<link>https://desiyamurasu.com/news-india/power-to-the-people-through-panchayat-raj-is-rajiv-dream/</link>
					<comments>https://desiyamurasu.com/news-india/power-to-the-people-through-panchayat-raj-is-rajiv-dream/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Admin]]></dc:creator>
		<pubDate>Thu, 17 Sep 2020 11:58:14 +0000</pubDate>
				<category><![CDATA[தேசிய அரசியல்]]></category>
		<category><![CDATA[Panchayat Raj]]></category>
		<category><![CDATA[rajiv gandhi]]></category>
		<guid isPermaLink="false">https://desiyamurasu.com/?p=2315</guid>

					<description><![CDATA[<p>ஒருவரை நினைவு கூர்தல் என்பது, அவர் செய்த நற்காரியங்களுக்காக என்ற வாழ்க்கையின் விழுமியமாக இருந்தாலும், அவர் விட்டுச் சென்ற நல்ல பணிகளைத் தொடர்வதற்கு நாம் முயலும்போது வழிகாட்டிடும் என்ற அடிப்படையில்தான் என்று உணர்ந்து நாம் தலைவர்களை நினைவு கூர்கின்றோம். அந்த வகையில்,   ராஜிவ் காந்தி இந்திய நாட்டுக்கு ஒரு முறைதான் பிரதமராக இருந்தார். அந்த ஐந்து ஆண்டுகளில் அவர் செய்த ஆளுகைச் செயல்பாடுகள் என்பது இன்றைய 21ஆம் நூற்றாண்டின் இந்தியாவிற்கு அடிப்படையாய் அமைந்திருக்கிறது என்பதை எண்ணிப் [&#8230;]</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/power-to-the-people-through-panchayat-raj-is-rajiv-dream/">இந்தியாவின் போக்கை திசை மாற்றியவர் &#8211; க. பழனித்துரை</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>ஒருவரை நினைவு கூர்தல் என்பது, அவர் செய்த நற்காரியங்களுக்காக என்ற வாழ்க்கையின் விழுமியமாக இருந்தாலும், அவர் விட்டுச் சென்ற நல்ல பணிகளைத் தொடர்வதற்கு நாம் முயலும்போது வழிகாட்டிடும் என்ற அடிப்படையில்தான் என்று உணர்ந்து நாம் தலைவர்களை நினைவு கூர்கின்றோம். அந்த வகையில்,   ராஜிவ் காந்தி இந்திய நாட்டுக்கு ஒரு முறைதான் பிரதமராக இருந்தார். அந்த ஐந்து ஆண்டுகளில் அவர் செய்த ஆளுகைச் செயல்பாடுகள் என்பது இன்றைய 21ஆம் நூற்றாண்டின் இந்தியாவிற்கு அடிப்படையாய் அமைந்திருக்கிறது என்பதை எண்ணிப் பார்க்கும்போது மிக ஆச்சரியமாக இருக்கிறது. </p>



<p>“எனக்கொரு கனவு” என்ற வாசகம் உலகை ஈர்த்த ஒன்று. அது நிறத்தால் பாகுபடுத்திப் பார்க்கப்பட்டு, கருப்பின மக்கள் அடிமைத்தளையில் சிக்குண்டிருந்தபோது அந்த அமெரிக்க மக்களின் விடுதலைக்காக குரல் கொடுத்த மார்ட்டின் லுதூ் கிங் கூறிய வாசகம். அந்த வாசகம் உலகெங்கும் ஒலித்தது. அதேபோல் “நான் ஓர் இளைஞன் எனக்கொரு கனவு இருக்கிறது” என்று முழக்கமிட்டு 21 ஆம் நூற்றாண்டுக்குள் ஒரு பலமிக்க நாடாக இந்தியாவை உருவாக்க மக்களை அழைத்துச் செல்வேன் என்று கூறியது இந்திய இளைஞர்களுக்கு அது ஒரு தாரக மந்திரம். சுதந்திரம் அடைந்ததிலிருந்து, ராஜிவ் காந்தி பிரதமராக வந்ததுவரை இந்தியா ஒரு கட்டுமானப் பணியில் இருந்தது என்றுதான் கூறவேண்டும். </p>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large"><img loading="lazy" decoding="async" width="400" height="598" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/09/rajiv_gandhi1.jpg" alt="" class="wp-image-2323" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/09/rajiv_gandhi1.jpg 400w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/09/rajiv_gandhi1-201x300.jpg 201w" sizes="auto, (max-width: 400px) 100vw, 400px" /></figure></div>



<p>இந்திய பொருளாதார வளர்ச்சியும் மிகக்குறைந்த அளவிலேதான் இருந்து வந்தது. இந்தியா புதிய திசை நோக்கிச் சென்றிட புதுப்பாதை தேட ஆரம்பித்தார் ராஜிவ் காந்தி. அந்தத் தேடல் பல தளங்களில் நடைபெற்றது. அரசியலில், பொருளாதாரத்தில், ஆளுகையில், நிர்வாகத்தில், உற்பத்தியில் என அனைத்துத் துறைகளிலும் நடைபெற்றன. அதன் அடிப்படையில் முதலில் அவர் ஆரம்பித்தது பொறுப்புமிக்க பதிலளிக்கக் கடப்பாடுடைய நிர்வாகம் இந்த நாட்டுக்குத் தேவை என்ற வாதத்தினை முன் வைத்துத்தான் அவருடைய சீர்திருத்தங்களை ஆரம்பித்தார். அதில் அவர் வைத்த முதல் விவாதம் மத்திய அரசின் திட்டங்கள் யாரைச் சென்றடைய வேண்டுமோ அவர்களைச் சென்றடையவில்லை என்ற குற்றச்சாட்டை முன் வைத்து, அடித்தளத்தில் மக்களுக்குப் பக்கத்தில் பொறுப்புமிக்க பதிலளிக்கக்கூடிய ஒரு நிர்வாகம் வேண்டும் என்று கூறி, அதற்கு மக்கள் பங்கேற்புடன் ஓர் அரசாங்கம்தான் தீர்வு என்பதை வலியுறுத்தினார். இதற்கு ஓர் உதாரணத்தை கதையாகக் கூறினார். யானையை நாம் டெல்லியிலிருந்து கிராமங்களுக்கு அனுப்புகிறோம். அது கிராமத்தை அடையும்போது யானையின் வால்தான் கிராமத்து மக்களுக்குத் தெரிகிறது என்று நகைப்புக்குரியதாக இந்த உண்மையைச் சொல்வார். </p>



<p>இந்த மக்கள் மேம்பாட்டுப் பாதையில் இருக்கும் தடைகளை உடைத்தெறிய வழிகாண முயன்றார். அந்த முயற்சிதான் மாவட்ட ஆட்சித் தலைவர்களின் மாநாட்டில், மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடினார். அதேபோல், மாநில முதல்வர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். பஞ்சாயத்துத் தலைவர்களுடன் கலந்துரையாடினார். அத்துடன் வல்லுனர்களுடனும் கலந்துரையாடினார். அனைவரிடமிருந்தும் ஒரு கருத்து மேலோங்கி நின்றது. இந்த நாட்டில் மக்களுக்கு அருகாமையில் அவர்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள, கடமைப்படுத்தப்பட்ட மனிதர் என்று கிராமங்களில் யாரும் கிடையாது. அப்படி ஒருவர் அல்லது அமைப்புக் கிடைத்து விட்டால் இன்றைய பல பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைத்துவிடும் என்பது தான் அந்த மையக் கருத்து. அந்தக் கருத்தை உள்வாங்கிக் கொண்டு அதற்குக் கொடுத்த வடிவம்தான் புதிய உள்ளாட்சி அரசாங்கம் அல்லது அதிகாரப் பரவல். இதை மக்களுக்கு அதிகாரம் அல்லது மக்களை அதிகாரப்படுத்துதல் என்றே அமரர் ராஜிவ் குறிப்பிட்டு வந்தார். இந்த கருத்தைப் புரிந்து கொள்ள நாம் மகாத்மா காந்தி கூறிய கருத்துக்குச் செல்ல வேண்டும். </p>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large"><img loading="lazy" decoding="async" width="628" height="433" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/09/rajiv_panchayat_raj.jpg" alt="" class="wp-image-2319" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/09/rajiv_panchayat_raj.jpg 628w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/09/rajiv_panchayat_raj-300x207.jpg 300w" sizes="auto, (max-width: 628px) 100vw, 628px" /></figure></div>



<p>இந்தியா எப்போது பூரண சுதந்திரம் பெற்ற நாடு என்று சொல்லுவேனென்றால், எப்பொழுது, கடைகோடி மனிதனின் குரல் ஆட்சியாளர்கள் காதில் விழுந்து, அதற்குச் செவி மடுத்து, அந்த கடைகோடி மனிதன் என் குரலுக்கும் மதிப்பிருக்கிறது என்று எண்ணுகிறானோ அன்றுதான் என்று குறிப்பிட்டார். இந்த உள்ளாட்சி அரசாங்கத்தில் அனைத்துத் தரப்பு மக்களும் உள்வாங்கப்பட்டவர்களாக வடிவமைத்து, பிரதிநிதித்துவம் கொடுத்து, அனைவரின் குரலுக்கும் ஆட்சியாளரை கிராமசபை மூலம் செவி சாய்க்க கனவு கண்டார்.</p>



<p>மக்களின் அன்றாடத் தேவைகளில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு இந்த அமைப்பு முறை மூலம் நல்ல தீர்வு  கிடைத்துவிடும் என்று திடமாக நம்பினார். இந்த அமைப்பைத் தோற்றுவிப்பதன் மூலம் இந்தியாவை ஒர் உண்மையான பிரதிநிதித்துவ மற்றும் பங்கேற்பு மக்களாட்சியாக மாற்றி விடலாம் என்றும் கனவு கண்டார். அத்துடன் இந்த புதிய உள்ளாட்சிகள் மூலம் மக்களை இணைப்பதன் மூலம் அரசுக்கும் மக்களுக்கும் உள்ள உறவு பலப்படும் என்றும், மக்கள் அரசை கண்காணிக்க ஆரம்பித்து விடுவார்கள் என்றும் திடமாக நம்பினார். தன் தாக்கத்தை நம் சமூகத்தில் பார்க்க குறைந்தது 25 ஆண்டு காலம் பிடிக்கும் என்றார். அது மட்டுமல்ல, இதற்காக ஒரு மாபெரும் மக்கள் தயாரிப்பும் திரட்சியும் வேண்டும் என்பதை உணர்ந்திருந்தார். அதற்கான முன்னெடுப்பையும் ஊடகங்கள் மூலம் எடுத்தார். அந்த முயற்சியில் கடைசியில் தோற்றுப்போனார். அந்தத் தோல்விக்கான காரணமானவர்கள் தமிழ்நாட்டு பிரதிநிதிகள் என்பதுதான் தமிழர்களாகிய நமக்கு ஒரு துன்பியல் செய்தி. எந்த நல்ல சிந்தனையும் தோற்பது கிடையாது. இது வரலாறு நமக்குத் தரும் செய்தி.</p>



<p>அமரர் ராஜிவ் கண்ட கனவை 1991-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பி.வி.நரசிம்மராவ் நினைவாக்கினார், 73வது மற்றும் 74வது அரசியல் சாசனத் திருத்தச் சட்டங்களை பாராளுமன்றத்தில் நிறைவேற்றி, இந்த இரண்டு சட்டங்களும் நிறைவேற்றிய பிறகு உலகம் இந்தியாவின் மீது கவனத்தைச் செலுத்தியது. ஏனென்றால் இந்திய ஜனநாயகத்தின் மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கை 6,000லிருந்து 30 லட்சத்து ஆறாயிரமாக மாறியது. இந்த புதிய உள்ளாட்சி அரசியல் சாசனச் சட்டங்களின் மூலம் உருவாக்கிய உள்ளாட்சி அரசாங்கம் நடைமுறைக்கு வந்த பிறகு இந்தியாவில் மூன்று நிலை அரசாங்கங்கள் உருவாக்கப்பட்டுவிட்டன. இந்த இரண்டு சட்டத்திருத்தங்களின் மூலம் இந்திய மக்களாட்சி அனைத்து தரப்பு மக்களையும் உள்வாங்கி தன்னகத்தே கொண்டு செயல்படக்கூடியதாக மாறியது. அது மட்டுமல்ல, கடைக்கோடி மனிதனின் வேண்டுகோள் என்பது மக்கள் பாராளுமன்றமாகிய கிராமசபையில் ஒலிக்க ஆரம்பித்து விட்டது. </p>



<p>அது மட்டுமல்ல இந்த மன்றத்தில் எடுத்த முடிவுகள் இறுதியானது மாற்ற இயலாத உறுதியானது என்பதை உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பின் மூலம் நிலைநாட்டப் பட்டுள்ளது. கிராமங்களில் உள்ள ஏற்றத்தாழ்வுகள், தீண்டாமை மற்றும் ஆதிக்கங்களை உடைக்க வல்ல சக்தியைப் பெற்றதாக இந்த கிராம சபை இன்று விளங்குகின்றது. மேல்சாதிக்காரர் கீழ்சாதிக்காரர் என்ற நிலை மறந்து, அனைவரும் சமம் என்பதை கிராம சபையில் அனைவரும் சமமாக உட்கார்ந்து விவாதிப்பதன் மூலம் உறுதிப்படுத்தியுள்ளது. அது மட்டுமல்ல கிராமத்தில் உள்ள கடைக்கோடி மனிதன் தன் தேவைகளை தன் கேள்விகளின் மூலம் கேட்டு, அதை நிறைவேற்ற அந்தப் பஞ்சாயத்தை கடமைப்படுத்தும் நிலையைக் கொண்டு வந்துள்ளது புதிய அரசாங்கம். அது மட்டுமல்ல. நூற்றுக்கணக்கான பஞ்சாயத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளாக வந்த தலைவர்கள் எண்ணற்ற சாதனைகள் படைத்து பஞ்சாயத்துக்களை குட்டி ராஜ்யமாக இல்லாமல் குட்டிக் குடியரசாக மாற்றிய வரலாறும் இந்தியாவில் நடந்து கொண்டுள்ளது.</p>



<p>குமரப்பா கண்ட தற்சார்பு கிராமமாக மாற்ற பாடுபட்ட குத்தம்பாக்கம் இளங்கோ, தனக்கு வாக்களித்த இந்து மக்களின் கோயில்  தேவைகளை தானே முன்னின்று செய்து மக்களின் பாராட்டைப் பெற்ற ஜம்ருத்பீவி, தன் புதிய திட்டமாகிய மழைநீர் சேகரிப்பால் அரசாங்கத்துக்கும் ஆலோசனை கூறி உலக வங்கி மாநாட்டில் பங்குபெற்ற அமரர் ஜேசுமேரி போன்ற நூற்றுக்கணக்கான பஞ்சாயத்துத் தலைவர்கள் குட்டி மகாத்மாக்களாகவே தங்களை உருவாக்கிக் கொண்டனர். அதேபோல் பல பஞ்சாயத்துத் தலைவர்கள் ஆதிக்க சக்தியாலும், இயற்கை வளங்களை, மாபியாக்களிடமிருந்து பாதுகாக்க தங்கள் உயிரையே தியாகம் செய்திருக்கிறார்கள்.</p>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large"><img loading="lazy" decoding="async" width="560" height="373" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/09/unnamed.jpg" alt="" class="wp-image-2325" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/09/unnamed.jpg 560w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/09/unnamed-300x200.jpg 300w" sizes="auto, (max-width: 560px) 100vw, 560px" /></figure></div>



<p>இந்தியா முழுவதும் இந்த புதிய பஞ்சாயத்து அரசாங்கத்தால் பல நல்ல பணிகள் மற்றும் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. ஒன்று, தாழ்த்தப்பட்ட மக்களின் பிரச்சினைகள் பொது வெளியில் விவாதத்திற்கு கொண்டு வந்துவிட்டனர் கிராமசபை மூலம். இரண்டு, இதேபோல் பெண்கள் பிரச்சினைகளும் பொது விவாதத்தில் மையப்படுத்தப்பட்டு விட்டன. </p>



<p>மூன்றாவதாக, எங்கெல்லாம் நல்ல தலைமை கிடைத்ததோ அந்தப் பஞ்சாயத்துக்களிலெல்லாம் அரசுத் துறைகள் செய்யும் பணிகள் கண்காணிக்கப்பட்டு, முழுப் பயனும் பயனாளிகளைச் சென்றடைந்துள்ளது. தாழ்த்தப்பட்டவர்கள் வாழும் பகுதிகளுக்கு இதுவரை சென்று சேராத வசதிகள் தலித்துக்கள் பஞ்சாயத்துத் தலைவர்களாக வந்ததால் கிடைக்க வேண்டிய வசதிகள் சென்று சேர ஆரம்பித்து விட்டன. </p>



<p>இவ்வளவு சாதனைகளும் அரைகுறையாக அதிகாரங்கள் பஞ்சாயத்துக்களுக்கு வழங்கப்பட்ட நிலையில் என்றால், இன்னும் அதிகமாக பஞ்சாயத்துக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டால் எப்படிப்பட்ட மாற்றங்கள் நடந்திருக்கும் என்று நம்மால் யூகித்துப் பார்க்கவே முடியவில்லை. அந்த அளவுக்கு வாய்ப்புகள் உள்ளன. எனவே மக்களுக்குச் சேவை செய்ய எண்ணுவோர் கிராமத்திற்காக சேவை செய்யும் 37 துறைகளையும் கண்காணிக்க முயன்று செயல்பட்டால் மக்களுக்கு மத்திய, மாநில அரசுகளின் 400க்கு மேற்பட்ட திட்டங்களில் ஒரு பைசாகூட இழப்பில்லாமல் சென்று சேர வைத்துவிடலாம். இதற்கு தலைவர் பதவியோ, உபதலைவர் பதவியோ, வார்டு உறுப்பினர் பதவியோ தேவை இல்லை.</p>



<p>நீங்கள் ஒரு கிராமசபை உறுப்பினராக இருந்தாலே, கிராம சபை மூலம் ஒரு வெளிப்படைத்தன்மை கொண்ட நிர்வாகமாக நம் அரசுத்துறைகளை மாற்றியமைத்து விடலாம். இதற்குத் தேவை தன்னார்வலர்களுக்கு ஒரு கடப்பாடு மற்றும் புரிதல். இவை இருந்தால் களத்தில் இறங்கி ஒரு மேம்பாட்டுக்கான அரசியலை முன்னெடுக்கலாம். அதற்கு நம் இளைஞர்கள் தயாரா? என்பது தான் இன்று நமது கேள்வி.</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/power-to-the-people-through-panchayat-raj-is-rajiv-dream/">இந்தியாவின் போக்கை திசை மாற்றியவர் &#8211; க. பழனித்துரை</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://desiyamurasu.com/news-india/power-to-the-people-through-panchayat-raj-is-rajiv-dream/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>தெருவிளக்கு வெளிச்சத்தில் ராஜீவை பார்த்த நேரு!</title>
		<link>https://desiyamurasu.com/news-india/nehru-glimpses-baby-rajiv-gandhi-under-streetlight/</link>
					<comments>https://desiyamurasu.com/news-india/nehru-glimpses-baby-rajiv-gandhi-under-streetlight/#comments</comments>
		
		<dc:creator><![CDATA[ஆ. கோபண்ணா]]></dc:creator>
		<pubDate>Thu, 20 Aug 2020 13:30:29 +0000</pubDate>
				<category><![CDATA[தேசிய அரசியல்]]></category>
		<category><![CDATA[indira gandhi]]></category>
		<category><![CDATA[jawaharlal nehru]]></category>
		<category><![CDATA[rajiv gandhi]]></category>
		<guid isPermaLink="false">https://desiyamurasu.com/?p=1598</guid>

					<description><![CDATA[<p>1944 ஆம் ஆண்டு ! ஆகஸ்டு திங்கள் 20 ஆம் நாள்! இந்திரா காந்தி ஃபெரோஸ் காந்தி தம்பதியருக்கு ராஜிவ் காந்தி தலைமகனாகப் பிறந்தார். ராஜிவின் பாட்டனாரான பண்டித ஜவஹர்லால் நேரு, விடுதலைப் போராட்டத்தின் காரணமாக அப்பொழுது கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பேரனைப் பார்க்கும் ஆவல் தாத்தாவுக்கு! மகனைத் தந்தைக்குக் காட்டும் ஆவல் அன்னை இந்திராவுக்கு ஒருநாள் அதிகாலை, ஜவஹர்லால் நேரு, கோவிந்து வல்லபபந்த் ஆகியோரைச் சிறையிலிருந்து போலீஸ்காரர்கள் ஒரு வேனில் ஏற்றிச் செல்லும்போது, தொலைவில் [&#8230;]</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/nehru-glimpses-baby-rajiv-gandhi-under-streetlight/">தெருவிளக்கு வெளிச்சத்தில் ராஜீவை பார்த்த நேரு!</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>1944 ஆம் ஆண்டு ! ஆகஸ்டு திங்கள் 20 ஆம் நாள்! இந்திரா காந்தி ஃபெரோஸ் காந்தி தம்பதியருக்கு ராஜிவ் காந்தி தலைமகனாகப் பிறந்தார். ராஜிவின் பாட்டனாரான பண்டித ஜவஹர்லால் நேரு, விடுதலைப் போராட்டத்தின் காரணமாக அப்பொழுது கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பேரனைப் பார்க்கும் ஆவல் தாத்தாவுக்கு! மகனைத் தந்தைக்குக் காட்டும் ஆவல் அன்னை இந்திராவுக்கு ஒருநாள் அதிகாலை, ஜவஹர்லால் நேரு, கோவிந்து வல்லபபந்த் ஆகியோரைச் சிறையிலிருந்து போலீஸ்காரர்கள் ஒரு வேனில் ஏற்றிச் செல்லும்போது, தொலைவில் ஒரு தெருவிளக்கு கம்பத்தின் அடியில் இந்திரா காந்தியும் ஃபெரோஸ் காந்தியும் தங்கள் பச்சிளம் குழந்தை ராஜிவை வெளிச்சத்தில் சற்றே தூக்கிக் காட்டினார்கள். வேன் நின்ற ஒருசில நிமிடங்களில் பேரனை அருகில் சென்று பார்க்க முடியவில்லையே என்ற வருத்தம் ஒருபுறம் தொலைவிலேனும் பார்த்தோமே என்ற மகிழ்ச்சி மறுபுறம்.</p>



<p>சிறைக்குத் திரும்பியவுடன் நேரு நெகிழ்ச்சியுடன் எழுதினார். ‘என் பிரியமுள்ள இந்து, உன் மகனைப் பார்த்தேன் நம் குடும்பத்திற்குரிய அந்த ரோஜா நிறத்தையும், ஒளிவீசும் கண்களையும் கண்டேன்! அருகில் வந்து பார்க்க இயலவில்லை என்றாலும், அந்தப் பிஞ்சு முகத்தின் அழகில் நம் குடும்பத்தின் சாயலை முழுமையாகக் கண்டேன்” என்று கவிதை நயத்தோடு எழுதியிருந்தார்.</p>



<p>ராஜிவ், இந்தியாவுக்காகவே பிறந்தார், வாழ்ந்தார், மடிந்தார்.</p>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large"><img loading="lazy" decoding="async" width="425" height="600" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/08/childhood_1.jpg" alt="" class="wp-image-1601" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/08/childhood_1.jpg 425w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/08/childhood_1-213x300.jpg 213w" sizes="auto, (max-width: 425px) 100vw, 425px" /></figure></div>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large"><img loading="lazy" decoding="async" width="505" height="640" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/08/childhood_3.jpg" alt="" class="wp-image-1602" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/08/childhood_3.jpg 505w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/08/childhood_3-237x300.jpg 237w" sizes="auto, (max-width: 505px) 100vw, 505px" /></figure></div>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large"><img loading="lazy" decoding="async" width="460" height="289" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/08/Nehru_Frose_RajivChild.jpg" alt="" class="wp-image-1603" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/08/Nehru_Frose_RajivChild.jpg 460w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/08/Nehru_Frose_RajivChild-300x188.jpg 300w" sizes="auto, (max-width: 460px) 100vw, 460px" /></figure></div>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large"><img loading="lazy" decoding="async" width="615" height="480" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/08/Jawaharlal_Nehru_and_Rajiv_Gandhi_on_horseback.jpg" alt="" class="wp-image-1606" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/08/Jawaharlal_Nehru_and_Rajiv_Gandhi_on_horseback.jpg 615w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/08/Jawaharlal_Nehru_and_Rajiv_Gandhi_on_horseback-300x234.jpg 300w" sizes="auto, (max-width: 615px) 100vw, 615px" /></figure></div>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large"><img loading="lazy" decoding="async" width="640" height="480" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/08/11.jpg" alt="" class="wp-image-1607" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/08/11.jpg 640w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/08/11-300x225.jpg 300w" sizes="auto, (max-width: 640px) 100vw, 640px" /></figure></div>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large"><img loading="lazy" decoding="async" width="650" height="540" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/08/19_08_2019-20_05_2019-rajiv-gandhi2_19239221_1247744_19499862_151514649.jpg" alt="" class="wp-image-1612" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/08/19_08_2019-20_05_2019-rajiv-gandhi2_19239221_1247744_19499862_151514649.jpg 650w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/08/19_08_2019-20_05_2019-rajiv-gandhi2_19239221_1247744_19499862_151514649-300x249.jpg 300w" sizes="auto, (max-width: 650px) 100vw, 650px" /></figure></div>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/nehru-glimpses-baby-rajiv-gandhi-under-streetlight/">தெருவிளக்கு வெளிச்சத்தில் ராஜீவை பார்த்த நேரு!</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://desiyamurasu.com/news-india/nehru-glimpses-baby-rajiv-gandhi-under-streetlight/feed/</wfw:commentRss>
			<slash:comments>2</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>ராஜிவ் கண்ட இந்தியா</title>
		<link>https://desiyamurasu.com/news-india/rajivs-dream-of-india/</link>
					<comments>https://desiyamurasu.com/news-india/rajivs-dream-of-india/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[ஆ. கோபண்ணா]]></dc:creator>
		<pubDate>Thu, 20 Aug 2020 09:18:31 +0000</pubDate>
				<category><![CDATA[தேசிய அரசியல்]]></category>
		<category><![CDATA[dream of india]]></category>
		<category><![CDATA[rajiv gandhi]]></category>
		<guid isPermaLink="false">https://desiyamurasu.com/?p=1564</guid>

					<description><![CDATA[<p>முன்னாள் பாரத பிரதமர், பாரத ரத்னா ராஜிவ் காந்தியுடன் பழக்கம் ஏற்படுத்திக் கொள்ளும் அனைவருமே, அவரது புன்சிரிப்பாலும் நாகரீகமான அணுகுமுறையாலும் கவரப்படுவார்கள். ராஜிவ் காந்தியின் பதினோரு ஆண்டுகால அரசியல் வாழ்க்கையை ஆய்வு செய்தால், அதை நான்கு கட்டங்களாகப் பிரிக்கலாம். ராஜிவ் காந்தியின் அரசியல் வாழ்க்கையில் முதல் கட்டம்: 1980ஆம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கி, (சஞ்சய் காந்தி இறந்ததால் காலியான) அமேதி தொகுதிக்கான மக்களவை வேட்பாளராக 1981ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது வரையிலான நாட்களை, ராஜிவ் காந்தியின் அரசியல் [&#8230;]</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/rajivs-dream-of-india/">ராஜிவ் கண்ட இந்தியா</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>முன்னாள் பாரத பிரதமர், பாரத ரத்னா ராஜிவ் காந்தியுடன் பழக்கம் ஏற்படுத்திக் கொள்ளும் அனைவருமே, அவரது புன்சிரிப்பாலும் நாகரீகமான அணுகுமுறையாலும் கவரப்படுவார்கள். ராஜிவ் காந்தியின் பதினோரு ஆண்டுகால அரசியல் வாழ்க்கையை ஆய்வு செய்தால், அதை நான்கு கட்டங்களாகப் பிரிக்கலாம்.</p>



<h4 class="wp-block-heading"><strong>ராஜிவ் </strong><strong>காந்தியின் </strong><strong>அரசியல் </strong><strong>வாழ்க்கையில் </strong><strong>முதல் </strong><strong>கட்டம்:</strong></h4>



<p>1980ஆம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கி, (சஞ்சய் காந்தி இறந்ததால் காலியான) அமேதி தொகுதிக்கான மக்களவை வேட்பாளராக 1981ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது வரையிலான நாட்களை, ராஜிவ் காந்தியின் அரசியல் வாழ்க்கையின் முதல் காலகட்டமாகக் கொள்ளலாம். இந்தக் காலகட்டத்தில், ராஜிவ் காந்தி ஒரே நேரத்தில் இரண்டு பணிகளை மேற்கொண்டிருந்தார். அதாவது, 1980ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திலிருந்தே பிரதமர் இந்திரா காந்திக்கு அரசியல் ரீதியாகச் சில உதவிகளை ராஜிவ் காந்தி செய்யத் தொடங்கினார். அத்துடன், 1981ஆம் ஆண்டு மே மாதம்வரை இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானியாகவும் பணியாற்றி வந்தார்.</p>



<h4 class="wp-block-heading"><strong>இரண்டாவது </strong><strong>கட்டம்:</strong></h4>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large"><img loading="lazy" decoding="async" width="433" height="640" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/08/Rajiv_Indira_1.jpg" alt="" class="wp-image-1567" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/08/Rajiv_Indira_1.jpg 433w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/08/Rajiv_Indira_1-203x300.jpg 203w" sizes="auto, (max-width: 433px) 100vw, 433px" /></figure></div>



<p>1981ஆம் ஆண்டு மே மாதம் தொடங்கி, 1984ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வரையிலான காலத்தை இரண்டாவது காலகட்டமாகக் கொள்ளலாம். இந்தக் காலகட்டத்தில்தான், அரசியல் ஈடுபாட்டை ராஜிவ் காந்தி அதிகமாக வளர்த்துக்கொண்டார் எனலாம். அத்துடன், அமேதி தொகுதியின் மக்களவை உறுப்பினர் என்ற நிலையிலிருந்து, காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் என்ற நிலைக்கு அவர் உயர்ந்தார். அதுமட்டுமன்றி, தமது நம்பிக்கைக்குரிய நண்பர்கள் பலரை அரசியல் களத்துக்குள் அழைத்து வந்தார்.</p>



<h4 class="wp-block-heading"><strong>மூன்றாவது </strong><strong>கட்டம்:</strong></h4>



<p>1984 ஆம் ஆண்டு அக்டோபரிலிருந்து 1989ஆம் ஆண்டு நவம்பர் வரையிலான காலத்தை ராஜிவ் காந்தியின் அரசியல் வாழ்க்கையில் மூன்றாவது காலகட்டமாகக் குறிப்பிடலாம். இந்தக் காலகட்டத்தில்தான், இந்தியாவின் பிரதமராகவும், உலக அளவில் மிகச்சிறந்த ராஜதந்திரியாகவும் அவர் உயர்ந்தார்.</p>



<h4 class="wp-block-heading"><strong>நான்காவது </strong><strong>கட்டம்!</strong></h4>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large"><img loading="lazy" decoding="async" width="576" height="378" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/08/NA57464_1.jpg" alt="" class="wp-image-1568" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/08/NA57464_1.jpg 576w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/08/NA57464_1-300x197.jpg 300w" sizes="auto, (max-width: 576px) 100vw, 576px" /></figure></div>



<p>1989ஆம் ஆண்டு நவம்பர் மாதத் தொடக்கம்முதல் 1991ஆம் ஆண்டு மே மாதம் வரையிலான காலத்தை ராஜிவ் காந்தியின் அரசியல் வாழ்வில் நான்காவதாக அமைந்த இறுதிக் கட்டமாகும். 1984-85ஆம் ஆண்டுகளில் இருந்த நிலைக்கே ராஜிவ் காந்தி மாறினார் எனலாம். ராஜிவ் காந்தியைப் பொதுமக்களும் பத்திரிகையாளர்களும் மிக எளிதாக அணுக முடிந்தது. அதற்குமுன் கடுமையாக இருந்த சில விஷயங்கள், மென்மையானதாக மாறின. போபர்ஸ் விவகாரம் படிப்படியாக மங்கத் தொடங்கியது. மக்கள் மத்தியில் மரியாதை மிக்க, நாகரீகமான, அன்பான ராஜிவ் காந்தி தலைதூக்கத் தொடங்கினார்.</p>



<p>அனுபவங்களின் காரணமாக ராஜிவுக்கு அரசியல் முதிர்ச்சியும் ஏற்பட்டிருந்தது. இதனால், 1984-85ஆம் ஆண்டுகளில் ராஜிவ் காந்தியை இந்தியா அரவணைத்தபோது, எப்படி இருந்தாரோ, அதேபோன்று அன்பானவராகவும், உயர்ந்தவராகவும் அவர் மாறியிருந்தார்.</p>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large"><img loading="lazy" decoding="async" width="576" height="395" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/08/NA66697_1.jpg" alt="" class="wp-image-1570" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/08/NA66697_1.jpg 576w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/08/NA66697_1-300x206.jpg 300w" sizes="auto, (max-width: 576px) 100vw, 576px" /></figure></div>



<p>1991ஆம் ஆண்டு மே, ஜூன் மாதங்களில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்தது. அப்போது ராஜிவ் காந்தி உயிருடன் இருந்திருந்தால், அது அவரது அரசியல் வாழ்க்கையின் ஐந்தாவது கட்டமாக இருந்திருக்கும். அப்போது ராஜிவ் காந்தி இரண்டாவது முறையாகப் பிரதமர் பதவி ஏற்றிருந்திருப்பார். 1984-89ஆம் ஆண்டு காலத்தில் நிறைவேற்றப்படாமல் விடுபட்டிருந்த திட்டங்களையெல்லாம் நிறைவேற்றியிருப்பார். அவரது கனவை நிறைவேற்ற முடியாமல் சதிகாரர்கள் பயங்கரவாத செயல் மூலம் நம்மிடமிருந்து அவரை பறித்து விட்டார்கள்.</p>



<p>அமெரிக்க முன்னாள் அதிபர் ஜான் கென்னடி போன்ற தலைவர்கள் மிகக்குறுகிய காலமே அரசியலில் இருந்தாலும், தங்களுக்கெனத் தனி இடத்தைப் பிடித்திருந்தனர். எனினும், இந்திய அரசியல் வரலாற்றில், ஓர் அரசியல் தலைவர் முத்திரை பதிக்க எடுத்துக்கொண்ட காலம் பதினொரு ஆண்டுகள் என்பது மிகவும் குறுகிய காலம்தான்!</p>



<p>ராஜிவ் காந்தி, ஐந்து ஆண்டுகாலம் இந்தியாவின் பிரதமராகவும், ஒன்றரை ஆண்டுகள் எதிர்க்கட்சித் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். இக்காலங்களில், இந்தியாவுக்கு ராஜிவ் ஆற்றிய மிகச்சிறந்த பணி, பங்களிப்பு இந்தியாவின் பொருளாதாரத்தையும் அரசியல் சிந்தனையையும் நவினமாக்கியது எனலாம்!</p>



<p>ராஜிவ் காந்தியின் அரசியல் பயணத்தில் பல முட்டுக்கட்டைகள் இருந்ததால், இந்திய அரசியலில் வெற்றியும் தோல்வியும் கலந்தே இருந்தன. ராஜிவ் காந்தியே இந்திய அரசியலில் பல்வேறு துறை வல்லுநர்களைக் கொண்டுவந்தார். முக்கிய அமைச்சகங்களின் அலுவலகங்கள் அமைந்த சவுத் பிளாக்கில் புத்துணர்வை ஏற்படுத்திப் பொருளாதாரத் தாராளமயமாக்கலை அறிமுகப்படுத்தியது, இந்தியாவை முற்போக்கு எண்ணம் கொண்ட நாடாக மாற்றத் திட்டமிட்டது ஆகியவை ராஜிவ் காந்தியின் சாதனைகளாகும்.</p>



<p>பொருளாதாரத்தில் புதுமைகளைப் புகுத்திய ராஜிவ் காந்தி, மக்களின் வாங்கும் திறனை அதிகரிக்கச் செய்தார். பங்குச்சந்தை பூத்துக் குலுங்கியது. ஐந்தாண்டுகளில் பங்குச்சந்தையின் விற்பனைக் குறியீடு 400 சதவிகிதம் அதிகரித்தது. இந்தியப் பொருள்கள் உலக அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றன. அதேசமயம், இந்தியாவின் எதிர்காலம் குறித்து ராஜிவ் காந்தி கண்ட கனவுகள் இன்னும் கனவுகளாகவே உள்ளன.</p>



<p>இந்திரா காந்தி காலத்திய வறட்சியும், பனிப்போரும் நிறைந்த இந்தியாவிற்கும் இப்போதைய நவீன இந்தியாவிற்கும் இடையே ஓர் இணைப்புப் பாலமாக ராஜிவ் காந்தி திகழ்ந்தார். நிறைவாகக் கூறுவதானால், அரசியலை முழுமையாக வெறுத்த ராஜிவ் காந்தி, விதியின் சதி காரணமாக அரசியலுக்குள் ஈர்க்கப்பட்டார்.</p>



<p>இந்திரா காந்தி கொல்லப்பட்டபோது, அவரது செயலாளராக இருந்த பி.சி.அலெக்சாண்டர் எழுதிய ‘இந்திராவுடனான எனது ஆண்டுகள்” என்ற நூலில், இந்திராவுக்குப் பிறகு ராஜிவ் காந்தி பிரதமராவதை எண்ணி அச்சமடைந்ததையும், இந்த அச்சம், சோனியாவை ராஜிவ் காந்தியுடனான கடைசி ஆறரை ஆண்டுகால வாழ்க்கையில் ஆட்டிப்படைத்தது என்பதையும் உறுதி செய்திருக்கிறார்.</p>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large"><img loading="lazy" decoding="async" width="672" height="420" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/08/NA56544_1.jpg" alt="" class="wp-image-1571" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/08/NA56544_1.jpg 672w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/08/NA56544_1-300x188.jpg 300w" sizes="auto, (max-width: 672px) 100vw, 672px" /></figure></div>



<p>1984ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி, இந்திரா காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட அன்று பிற்பகலில், ராஜிவ் காந்தி பிரதமராகப் பொறுப்பேற்பதற்கு முன்பு நடந்த நிகழ்வுகள் பற்றி பி.சி.அலெக்சாண்டர் தமது நூலில், &#8220;ராஜிவ் காந்தியைச் சந்திப்பதற்காக நான் அவரை நெருங்கிய போது, நான் கண்ட காட்சி மிகவும் உருக்கமானது. ஓர் அறையின் மூலையில், சோனியாவின் இரு கைகளையும் ராஜிவ் இறுக்கமாகப் பற்றிக் கொண்டிருந்தார்; சோனியா, ராஜிவின் கைகளைப் பற்றிக் கொண்டிருந்தார். சோனியாவின் கண்களிலிருந்து கசிந்த கண்ணீ ர் அவரது கன்னத்தில் வழிந்தது. பிரதமர் பொறுப்பை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள வேண்டாம்&#8217; என்று ராஜிவ் காந்தியிடம் சோனியா கெஞ்சிக் கொண்டிருந்தார். அதைக் கேட்ட ராஜிவ் காந்தி, சோனியாவின் நெற்றியில் முத்தமிட்டு, மிகவும் நெருக்கடியான காலகட்டத்தில் இந்தியாவின் பிரதமராகப் பொறுப்பேற்றே தீரவேண்டும் என்றும், இது தமது கடமை என்றும் கூறிச் சமாதானப்படுத்த முயன்று கொண்டிருந்தார். அப்போது, அவசரமாகப் பேச நான் துடித்துக்கொண்டிருப்பதையும் அவர் உணர்ந்து கொண்டார்.</p>



<p>நேரம் வேகமாக நகர்ந்துக் கொண்டிருந்தது. ராஜிவ் காந்தியின் முடிவைத் தெரிந்து கொண்டபின், செய்து முடிக்கப் படவேண்டிய பணிகள் நூற்றுக்கும் மேல் இருந்தன. எனவே, ராஜிவ் காந்தியைச் சோனியா விடமிருந்து பிரித்து அழைத்துவர முடிவு செய்தேன். ராஜிவின் காதருகே சென்று, மிகவும் அவசரமான சில விஷயங்களைப் பேசவேண்டும் என்றும், அதற்காக இனிமேலும் காத்திருக்க முடியாது என்றும் கூறினேன்.</p>



<p>அதன்பின், சோனியாவிடமிருந்து திரும்பிய ராஜிவ், &#8216;பிரதமர் பதவியேற்க நீ ஒப்புதல் தந்துவிட்டதாகக் கருதுகிறேன்&#8217; என்பது போல் சோனியாவிடம் சைகை காட்டிவிட்டு என்னுடன் புறப்பட்டார்&#8221; என்று குறிப்பிட்டிருக்கிறார்.</p>



<p>அரசியலில் இல்லாவிட்டாலும், மற்ற தனிப்பட்ட விஷயங்களில் ராஜிவ் குறித்த முடிவுகளை இறுதியில் தீர்மானித்தவர் சோனியாதான் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை . அதேநேரத்தில், ராஜிவ் பிரதமராக இருந்தபோது, அரசு விவகாரங்களில் சோனியா தலையிட்டார் என்பதெல்லாம், ராஜிவை நெருங்க முடியாத அரசியல்வாதிகளும் பத்திரிகையாளர்களும் பரப்பிவிட்ட கட்டுக்கதைகள்!</p>



<p>சோனியா காந்தியைப் பொருத்தவரை, கூச்சத்தன்மை நிறைந்த, தம் கணவர், இரு குழந்தைகள் மீது அளவற்ற அக்கறை கொண்ட பெண்மணி. அவர் மிகவும் மென்மையானவர்;</p>



<p>1987-89இல் எதிர்க்கட்சிகளால் போபர்ஸ் சர்ச்சை கிளப்பப்பட்டபோது, ராஜிவ் காந்தியின் ஆட்சி நிர்வாக விஷயங்களில் சோனியா தலையிட்டதாக வெளியான செய்திகள் அனைத்தும் தவறானவை ஆகும். ராஜிவ் காந்தியின் அமேதி தொகுதியைச் சிறப்பாகக் கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதைத் தவிர, சோனியாவுக்கு அப்போது அரசியலில் ஆர்வமே கிடையாது. ராஜிவுடனும் சோனியாவுடனும் நெருக்கமாக இருப்பதைப் போலக் காட்டிக்கொண்டு. சமூக அரங்கில் முன்னேறத் துடிப்பவர்களுக்கோ , அரசியல் ஆதாயம் தேடும் நோக்குடன் சுற்றிவந்த அரசியல் துதிபாடிகளுக்கோ சோனியா ஒருபோதும் நேரம் ஒதுக்கியதில்லை .</p>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large"><img loading="lazy" decoding="async" width="672" height="445" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/08/NA66061_1.jpg" alt="" class="wp-image-1572" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/08/NA66061_1.jpg 672w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/08/NA66061_1-300x199.jpg 300w" sizes="auto, (max-width: 672px) 100vw, 672px" /></figure></div>



<p>உண்மையான சோனியாவை அமேதி தொகுதியில்தான் காணமுடியும். அமேதி தொகுதி மக்களிடையே மிகுந்த அன்பும் அக்கறையும் கொண்டவராகச் சோனியா செயல்பட்டார். ராஜிவ் காந்தி காலத்தில், அவரது அமேதி தொகுதிக்குச் சென்ற சோனியாவும் பிரியங்காவும் அங்குள்ள ஏழை மக்களுடனும் குழந்தைகளுடனும் ஒன்றாக அமர்ந்து பேசுவார்கள், அவர்களின் குறைகளைக் கேட்பார்கள். அவர்களுக்கு மருத்துவ உதவி உள்ளிட்ட பல்வேறு உதவிகளைச் செய்வார்கள்.</p>



<p>ராஜிவ் காந்தி காலத்தில், அரசியல் மற்றும் அரசு விவகாரங்களில் சோனியா தலையிட ஏராளமான வாய்ப்புகள் இருந்தபோதிலும், ஒருமுறைகூட அவர் குறுக்கிட்டதில்லை. ராஜிவ் காந்தியின் மரணத்திற்குப் பிறகு, காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ஏற்றுக்கொள்ளும்படி காங்கிரஸ் காரியக் கமிட்டி கோரிக்கை விடுத்த போதும் அதை ஏற்க மறுத்துவிட்டது. அவரது அரசியல் ஆர்வமற்ற தன்மைக்கு எடுத்துக்காட்டாகும்.</p>



<p>சோனியா காந்தியைப் பொருத்தவரை, பிரதமரின் மனைவியாக இருப்பதைவிட மாதம் ரூ.8,000 சம்பளம் வாங்கும் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானியின் மனைவியாக இருப்பதையே விரும்பினார்.</p>



<p>ராஜிவ் காந்தி, சோனியாவை முதன்முதலில் சந்தித்துக் காதல் கொண்டது. கேம்பிரிட்ஜ் நகரில்தான். அப்போது ராஜிவ் அங்குத் தங்கிப் படித்துக் கொண்டிருந்தார். ராஜிவுக்கும் சோனியாவுக்கு இடையிலான உறவு பற்றி, கிரேக்க உணவு விடுதியின் உரிமையாளர் சார்லஸ் அந்தோனி குறிப்பிடும்போது, &#8220;ராஜிவ் காந்தி, சோனியா போன்று ஒருவர்மீது ஒருவர் அன்பு வைத்ததை போல் வேறு எவரையும் இதுவரை நான் பார்த்ததில்லை. காதல் புத்தங்களில் வருவதைப் போல் அவர்கள் இருந்தார்கள்&#8221; என்று கூறியுள்ளார்.</p>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large"><img loading="lazy" decoding="async" width="690" height="457" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/08/rajiv-sonia1.jpg" alt="" class="wp-image-1573" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/08/rajiv-sonia1.jpg 690w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/08/rajiv-sonia1-300x199.jpg 300w" sizes="auto, (max-width: 690px) 100vw, 690px" /></figure></div>



<p>ராஜிவ் &#8211; சோனியாவின் காதல் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்தது. இறுதிவரை ராஜிவும் சோனியாவும் பிரியவே இல்லை. வெளியில் நடைபெறும் விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது, இருவரும் கைகோர்த்துக் கொள்வது வழக்கம். அதுமட்டுமன்றி, &#8220;நான் பார்த்ததிலேயே சோனியாதான் மிகவும் அழகான பெண்&#8221; என்று வெளிப்படையாகவே பாராட்டுவது ராஜிவின் வழக்கம்.</p>



<p>ராஜிவ் &#8211; சோனியா இவர்களின் அன்பு, பாசம் அப்படியே அவர்களின் குழந்தைகளுக்கும் தொற்றிக் கொண்டுவிட்டன! ராகுலும் பிரியங்காவும் அன்பும் பாசமும் நிறைந்த குழந்தைகளாகத் திகழ்கின்றனர்.</p>



<p>இவர்களுள் ராகுல் காந்தி, தந்தையின் அமைதி உள்ளிட்ட குணங்களைப் பெற்றிருந்தார். ஹாவர்ட் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற இவர், துப்பாக்கிச் சுடுவதில் வல்லவர். எனினும், அரசியலில் ஆர்வம் கொண்டிருக்கவில்லை.</p>



<p>ராஜிவ் காந்தி படுகொலை செய்யப்பட்டபோது, 19வயது பெண்ணாக இருந்த பிரியங்காதான் அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ராகுல் அரசியலில் ஈடுபட்டு, நாடாளுமன்ற உறுப்பினராகவும் கட்சியின் பொதுச்செயலாளராகவும், இப்போது துணைத்தலைவராகவும் உயர்ந்துள்ளார்.</p>



<p>ராஜிவ் காந்தியின் படுகொலைக்குப் பிறகு, &#8216;சோனியா தமது குழந்தைகளின் நலன்கருதி, அவர்களை அழைத்துக்கொண்டு இத்தாலிக்குச் சென்றுவிடுவார்&#8217; என்று பலரும் பேசினார்கள். ஆனால், சோனியாவை நன்றாக அறிந்தவர்கள் அந்தக் கருத்தைத் திட்டவட்டமாக மறுத்தனர்.</p>



<p>&#8216;சோனியாவைப் பொருத்தவரை, இப்போதைக்கு அவர் இந்தியர். வேறெந்த நாட்டிலும் அவரால் வாழ இயலாது. சோனியா மற்றும் அவரது குடும்பத்தினரின் எதிர்காலம் இந்தியாவுடன் பிணைக்கப்பட்டிருக்கிறது&#8217; என்று அவர்கள் கூறினார்கள்.</p>



<p>பல வழிகளிலும் ராஜிவ் காந்திக்குப் பக்கபலமாக விளங்கியவர் சோனியா. எப்போதாவதுதான் செய்தியாளர்களிடம் அவர் பேசுவார். சோனியாவைப் பொருத்தவரை, தமது கணவரைப் பாதுகாக்கவேண்டும் என்பதில் ஆவேசம் காட்டக்கூடியவர்.</p>



<p>சோனியாவின் தேசப்பற்று குறித்து அவரது நண்பர்கள் கூறும்போது, “இந்தியாவிலுள்ள பெரும்பாலான இந்தியர்களைவிட சோனியா மிகச்சிறந்த இந்தியர்&#8221; என்று குறிப்பிடுவார்கள்.</p>



<p>சோனியா காந்தி தெளிவான உச்சரிப்புடன் ஹிந்தி பேசுவார். இந்தியர்களின் பாரம்பரிய உடையான சேலையை, வெளிநாட்டவர் கட்டும் போது காணப்படும் வழக்கமான குறைகளின்றிச் சிறப்பாகக் கட்டுவார். சோனியாவின் எளிமையும் சாதாரணத் தன்மையும் பலரையும் கவரும்.</p>



<p>ராஜிவ் காந்தி அரசியலில் ஈடுபடுவது பற்றித் தொடக்கத்தில் சோனியா அதிருப்தி தெரிவித்திருந்தாலும், அமேதி தொகுதியில் ராஜிவ் போட்டியிட்டபோது, அவருக்கு ஆதரவாகத் தீவிரப் பிரச்சரம் செய்தார். ராஜிவ் பங்கேற்ற பெரிய அரசியல் கூட்டங்கள் அனைத்திலும் சோனியாவும் கலந்து கொண்டார். அமேதி தொகுதியில் ராஜிவ் காந்தி வெற்றி பெற்ற பிறகு, அந்தத் தொகுதிக்குச் சோனியா அடிக்கடி சுற்றுப்பயணம் செய்து, மக்களைச் சந்தித்தார். ஆனால், ராஜிவைப்போலவே சோனியாவும் கூச்சசுபாவம் உடையவர் என்பதால், யாரிடமும் அதிகமாகப் பேச மாட்டார்.</p>



<p>அரசியலில் ஈடுபடுவதற்கு முன்பு, வார இறுதி நாட்களை ராஜிவ் காந்தி குடும்பத்தினருடன் கழிப்பதுதான் வழக்கம். அமேதி தொகுதி மக்களவை உறுப்பினரான பிறகும், குடும்பத்தினருடன் ராஜிவ் அதிக நேரத்தைச் செலவிட்டார். ஆனால், அவர் பிரதமரான பிறகு, குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிடுவது அடியோடு நின்றுவிட்டது. பிரதமர் என்ற வகையில் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டியிருந்ததாலும், கட்சித் தலைவர், பிரதமர் என்ற இரட்டைப் பணிகளைச் செய்யவேண்டி யிருந்ததாலும் அவரால் குடும்பத்திற்கு நேரம் ஒதுக்க முடியவில்லை .</p>



<p>உலகத் தலைவர்களாலும் எழுத்தாளர்களாலும் போற்றிப் புகழப்பட்ட அற்புதத் தலைவர் ராஜிவ்! அவர்மட்டும் உயிரோடு இருந்திருந்தால் இன்னும் 50 ஆண்டுகளுக்கு இந்தியாவின் மாபெரும் தலைவராகப் பிரகாசித்து, நாட்டை வழிநடத்தியிருப்பார். ஆனால், பயங்கரவாதத்திற்கு அந்த மாபெரும் தலைவர் பலியாக்கப்பட்டதுதான் இருபதாம் நூற்றாண்டின் இணையற்றக் கொடுமை! இந்த உணர்வுகளோடு அவரது பிறந்தநாளை இந்திய மக்கள் நினைவுகூர்வார்கள்.</p>



<p>ராஜிவ் கண்ட கனவை நனவாக்க, அன்னை சோனியா காந்தியும் இளந்தலைவர் ராகுல் காந்தியும் அவரது லட்சியப் பதாகையை இன்றைக்கு உயர்த்திப் பிடித்து, இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் கம்பீரமாக அழைத்துச் செல்கிறார்கள். அந்த வகையில், அமரர் ராஜிவின் கனவு நிறைவேற்றப்பட்டு வருகிறது.</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/rajivs-dream-of-india/">ராஜிவ் கண்ட இந்தியா</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://desiyamurasu.com/news-india/rajivs-dream-of-india/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
	</channel>
</rss>
