<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>rahul gandhi Archives - தேசிய முரசு - Desiya Murasu</title>
	<atom:link href="https://desiyamurasu.com/tag/rahul-gandhi/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://desiyamurasu.com/tag/rahul-gandhi/</link>
	<description>DesiyaMurasu – Daily Opinions &#38; Analysis on Latest News  &#124; Tamil News</description>
	<lastBuildDate>Mon, 12 Apr 2021 11:41:57 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.8.3</generator>

<image>
	<url>https://desiyamurasu.com/wp-content/uploads/2020/07/cropped-FAV-copy-1-32x32.png</url>
	<title>rahul gandhi Archives - தேசிய முரசு - Desiya Murasu</title>
	<link>https://desiyamurasu.com/tag/rahul-gandhi/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>கொரோனா இரண்டாவது அலையை தடுக்க யோசனைகள்: பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கடிதம்</title>
		<link>https://desiyamurasu.com/news-india/congress-rahul-gandhi-letter-pm-narendra-modi-export-covid-19-shots/</link>
					<comments>https://desiyamurasu.com/news-india/congress-rahul-gandhi-letter-pm-narendra-modi-export-covid-19-shots/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Admin]]></dc:creator>
		<pubDate>Mon, 12 Apr 2021 11:41:55 +0000</pubDate>
				<category><![CDATA[தேசிய அரசியல்]]></category>
		<category><![CDATA[Covid-19]]></category>
		<category><![CDATA[Narendra Modi]]></category>
		<category><![CDATA[rahul gandhi]]></category>
		<guid isPermaLink="false">https://desiyamurasu.com/?p=4299</guid>

					<description><![CDATA[<p>பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எழுதியுள்ள கடிதம் : அன்புள்ள பிரதமருக்கு, மீண்டும் கொரோனா வைரஸ் மையம் கொண்டிருப்பது குறித்த மிகுந்த கவலையுடன் இந்த கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன். கடந்த ஓராண்டாக நம் நாடு பேரிழப்பால் பாதிக்கப்பட்டுள்ளது. பெரும் தியாகங்களை மக்கள் செய்துள்ளனர். இந்த சூழலில், மீண்டும் வைரஸ் தாக்குதலுக்கு நாம் ஆளாகியுள்ளோம். கொரோனா வைரசுக்கு தீர்வு காண நமது விஞ்ஞானிகள் சமூகத்தினரும் மருந்து வினியோகஸ்தர்களும் உறக்கமின்றி உழைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், மத்திய அரசின் [&#8230;]</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/congress-rahul-gandhi-letter-pm-narendra-modi-export-covid-19-shots/">கொரோனா இரண்டாவது அலையை தடுக்க யோசனைகள்: பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கடிதம்</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p><em>பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எழுதியுள்ள கடிதம் :</em></p>



<p>அன்புள்ள பிரதமருக்கு,</p>



<p>மீண்டும் கொரோனா வைரஸ் மையம் கொண்டிருப்பது குறித்த மிகுந்த கவலையுடன் இந்த கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன். கடந்த ஓராண்டாக நம் நாடு பேரிழப்பால் பாதிக்கப்பட்டுள்ளது. பெரும் தியாகங்களை மக்கள் செய்துள்ளனர். இந்த சூழலில், மீண்டும் வைரஸ் தாக்குதலுக்கு நாம் ஆளாகியுள்ளோம்.</p>



<p>கொரோனா வைரசுக்கு தீர்வு காண நமது விஞ்ஞானிகள் சமூகத்தினரும் மருந்து வினியோகஸ்தர்களும் உறக்கமின்றி உழைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், மத்திய அரசின் மோசமான செயலாக்கம் மற்றும் மேலோட்டமான நடவடிக்கையால் அவர்களது பணி குறைத்து மதிப்பிடப்படுவது துரதிருஷ்டவசமானது.</p>



<p>நமது நாட்டின் தற்போதைய சூழல் குறித்த முக்கிய அம்சங்கள்:</p>



<ul class="wp-block-list"><li>கொரோனா தடுப்பு மருந்தை இந்தியா தான் முதலில் கண்டுபிடித்தது. ஆனால், தடுப்பூசி போடுவதில் நாம் நத்தை வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறோம். உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்தை வடிவமைத்து, அதனை அனுபவத்தின் மூலம் இந்தியா செயல்படுத்தியது. தற்போதைய சூழலில், கடந்த 3 மாதங்களில் 1 சதவிகிதத்துக்கும் குறைவான மக்களுக்கே தடுப்பூசி போட்டுள்ளோம். நம் நாட்டின் பெருவாரியான மக்களுக்கு தடுப்பூசி போட வேண்டியுள்ளது.</li><li>இதே விகிதாச்சாரத்தில் நாம் தடுப்பூசி போட்டால், நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 75 சதவிகிதம் பேருக்கு தடுப்பூசி போடுவதற்கு பல ஆண்டுகள் ஆகும். இதனால் பேரழிவு ஏற்படுவதோடு, இந்திய பொருளாதாரமும் பெரிதும் பாதிக்கப்படும். பெருமளவில் கொரோனா தடுப்பூசி மருந்தை வெளிநாடுகளுக்கு மத்திய அரசு ஏன் ஏற்றுமதி செய்தது என்பதற்கான தெளிவான விளக்கம் தரப்படவில்லை. நம் நாட்டில் தடுப்பூசி பற்றாக்குறை இருக்கும்போது, 6 கோடிக்கு அதிகமான தடுப்பூசி மருந்துகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குற்றம் சாட்டுவதால், தடுப்பூசி பற்றாக்குறை திரும்பத் திரும்ப அந்த மாநில அரசுகள் சுட்டிக்காட்டுகின்றன. கூட்டுறவு கூட்டாட்சி மிகவும் அவசியம் என்று நீங்கள் கூட சொல்வீர்களே, அதே கூட்டுறவு கூட்டாட்சியை வேரோடு வெட்டும் செயல் தான் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.</li><li>சொந்த நாட்டு மக்களைப் பாதிப்படையச் செய்து, விளம்பரத்துக்காக அரசு பல முடிவுகளை எடுத்ததே, அதைப் போன்று தான் தடுப்பூசி ஏற்றுமதியும் நடந்ததா?</li><li>மையப்படுத்துதல் மற்றும் தனிப்பட்ட பிரச்சாரம் மட்டுமே பதிலாகக் கிடைக்கிறது. பொதுச் சுகாதாரம் மாநில அரசுகளின் வரையறைக்குட்பட்ட. தடுப்பூசி மருந்துகளை மாநில அரசுகள் கொள்முதல் செய்வதற்குப் பதிவு செய்ய அனுமதிக்கப்படவில்லை. மத்திய அரசே அதனை நேரடியாகச் செய்கிறது. தடுப்பூசி போட்டுக்கொள்ள இணையம் வழியே பதிவு செய்ய வேண்டும் என்று கூறியதால், பெரும்பாலான ஏழைகள் அவ்வாறு செய்ய முடியாமல் போனது.</li></ul>



<p>கடந்த 70 ஆண்டுகளாக தடுப்பூசி மையங்களை அமைப்பதில் உலக அளவில் இந்தியா சிறந்து விளங்கியதற்காகக் காங்கிரஸ் கட்சி பெருமை கொள்கிறது. இதன்மூலம் நன்கு திட்டமிட்டு தடுப்பூசி திட்டத்துக்கு ஆதரவளித்து, விரைந்து தடுப்பூசிகளைப் போட்டோம்.</p>



<p>தனிப்பட்ட நபருக்கான தடுப்பூசியாக இல்லாமல், பெருவாரியான மக்களுக்கான தடுப்பூசியாகக் காங்கிரஸ் ஆட்சியில் மாற்றினோம்.</p>



<p>எனவே, நான் உங்களை வேண்டிக் கொள்வது இதுதான்:</p>



<ul class="wp-block-list"><li>உற்பத்தித் திறனை அதிகரிக்க, தடுப்பூசி வினியோகஸ்தர்களுக்குத் தேவையான நிதி ஆதாரங்களை வழங்க வேண்டும்.</li><li>கொரோனா தடுப்பூசிகள் ஏற்றுமதிக்கு உடனே தடை விதிக்க வேண்டும்.</li><li>நெறிமுறைகள் மற்றும் வழிகாட்டுதலின்படி, மற்ற தடுப்பூசிகளுக்கும் விரைந்து ஒப்புதல் தரவேண்டும்.</li><li>ஒவ்வொருவருக்கும் தடுப்பூசி கிடைக்கச் செய்ய வேண்டும்.</li><li>தற்போது ரூ. 35 ஆயிரம் கோடி அளவுக்கு தடுப்பூசிகள் கொள்முதல் செய்வதை மத்திய அரசு இரட்டிப்பாக்க வேண்டும்.</li><li>தடுப்பூசியைக் கொள்முதல் செய்வதையும் விநியோகிப்பதையும் மாநில அரசுகளுக்குத் தருவதே சரியானது.</li><li>இரண்டாவது கொரோனா அலையில் பாதிக்கப்படுவோருக்கு நேரடியாக வருவாய் ஆதாரத்தை அளிக்க வேண்டும்.</li></ul>



<p>கொரோனா தடுப்பூசி திட்டத்தில் எங்களது ஏகோபித்த ஆதரவு உண்டு என்பதை மீண்டும் வலியுறுத்திக் கூறிக்கொள்கிறேன். இந்த யோசனைகளை விரைந்து பரிசீலிப்பீர்கள் என்று நம்புகிறேன்.</p>



<p>இவ்வாறு பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் ராகுல் காந்தி கூறியுள்ளார்.</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/congress-rahul-gandhi-letter-pm-narendra-modi-export-covid-19-shots/">கொரோனா இரண்டாவது அலையை தடுக்க யோசனைகள்: பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கடிதம்</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://desiyamurasu.com/news-india/congress-rahul-gandhi-letter-pm-narendra-modi-export-covid-19-shots/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>தேர்தலில் பா.ஜ.க.- அ.தி.மு.க. கூட்டணி வேர் அறுக்கப்படும்! தலைவர் ராகுல் காந்தியின் ஆவேசப் பேச்சு!</title>
		<link>https://desiyamurasu.com/news-tamilnadu/aiadmk-bjp-combine-will-be-decimated-in-the-assembly-polls-says-rahul-gandhi/</link>
					<comments>https://desiyamurasu.com/news-tamilnadu/aiadmk-bjp-combine-will-be-decimated-in-the-assembly-polls-says-rahul-gandhi/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Admin]]></dc:creator>
		<pubDate>Mon, 29 Mar 2021 17:29:05 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழக அரசியல்]]></category>
		<category><![CDATA[2021 Election Campaign]]></category>
		<category><![CDATA[congress]]></category>
		<category><![CDATA[rahul gandhi]]></category>
		<category><![CDATA[Velachery Chennai]]></category>
		<guid isPermaLink="false">https://desiyamurasu.com/?p=4234</guid>

					<description><![CDATA[<p>நண்பர்களே! இந்த தேர்தல் எதைப் பற்றியது என்பதை நான் எளிமையாகச் சொல்ல விரும்புகிறேன். இதில் என்னுடைய சொந்த அனுபவத்தைச் சேர்த்து இங்கு சொல்ல விரும்புகிறேன். அதன்பிறகு உங்களுக்கே புரியும். பாஜக, அதிமுகவை ஏன் எதிர்க்கிறேன், என் முழு வலிமையையும் அதற்கான ஏன் செலவிடுகிறேன் என்பது உங்களுக்குப் புரியும். நான் அமேதி மக்களவை உறுப்பினராக இருந்தபோது, ஓர் இளம் காங்கிரஸ் நிர்வாகி, பாஜகவில் சேர்ந்தார். அவர் பாஜகவில் சேர்ந்தவுடன் பாஜகவின் மூத்த உறுப்பினர்களுக்கு இணையாக அவரைச் சேர்த்துக் கொண்டார்கள். [&#8230;]</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-tamilnadu/aiadmk-bjp-combine-will-be-decimated-in-the-assembly-polls-says-rahul-gandhi/">தேர்தலில் பா.ஜ.க.- அ.தி.மு.க. கூட்டணி வேர் அறுக்கப்படும்! தலைவர் ராகுல் காந்தியின் ஆவேசப் பேச்சு!</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p><em>நண்பர்களே!</em></p>



<p>இந்த தேர்தல் எதைப் பற்றியது என்பதை நான் எளிமையாகச் சொல்ல விரும்புகிறேன். இதில் என்னுடைய சொந்த அனுபவத்தைச் சேர்த்து இங்கு சொல்ல விரும்புகிறேன். அதன்பிறகு உங்களுக்கே புரியும். பாஜக, அதிமுகவை ஏன் எதிர்க்கிறேன், என் முழு வலிமையையும் அதற்கான ஏன் செலவிடுகிறேன் என்பது உங்களுக்குப் புரியும்.</p>



<p>நான் அமேதி மக்களவை உறுப்பினராக இருந்தபோது, ஓர் இளம் காங்கிரஸ் நிர்வாகி, பாஜகவில் சேர்ந்தார். அவர் பாஜகவில் சேர்ந்தவுடன் பாஜகவின் மூத்த உறுப்பினர்களுக்கு இணையாக அவரைச் சேர்த்துக் கொண்டார்கள். இந்த தலைவர்கள் அமித் ஷாவைச் சந்திக்கும் ஒரு புகைப்படத்தை நான் பார்த்தேன். அவர் ஜனநாயக முறையில் தேர்வு செய்யப்பட்ட ஒரு தலைவர்.</p>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img fetchpriority="high" decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/03/WhatsApp-Image-2021-03-29-at-10.48.22-PM.jpg" alt="" class="wp-image-4240" width="597" height="396" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/03/WhatsApp-Image-2021-03-29-at-10.48.22-PM.jpg 760w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/03/WhatsApp-Image-2021-03-29-at-10.48.22-PM-300x199.jpg 300w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/03/WhatsApp-Image-2021-03-29-at-10.48.22-PM-750x498.jpg 750w" sizes="(max-width: 597px) 100vw, 597px" /></figure></div>



<p>அந்தப் புகைப்படத்தில் அமித் ஷா சோபாவில் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்தார். அந்த தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் அவர் முன் கூனிக்குறுதி கைகட்டி நின்று கொண்டிருந்தார். அமித் ஷாவின் காலைத் தொட்டுக் கும்பிட்டபடியே இருந்தார். தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தலைவர் இன்னொரு தலைவர் முன் கையெடுத்துக் கும்பிட்ட கூனிக்குறுகி நிற்பதையும், காலில் விழுவதையும் ஓர் அவமானகரமான நிகழ்வாகத்தான் நான் பார்த்தேன்.</p>



<p>இந்த ஒரே ஒரு உறவுதான் பாஜகவில் இருக்கும். வேறு எதையும் அங்கு பார்க்க முடியாது. நீங்கள் பாஜகவில் இருந்தாலோ, கூட்டணிக் கட்சியாக இருந்தாலோ நீங்கள் அவமரியாதையை மட்டும் தான் சந்திப்பீர்கள். நீங்கள் கையெடுத்துக் கும்பிட்டு, கூறைக் கும்பிடு போட்டுத்தான் அவர்களிடம் நிற்கவேண்டும். அமித் ஷா, மோடி ஆகியோரின் காலை தொட்டுக் கும்பிட வேண்டும் என்பதுதான் அவர்களின் நடைமுறை.</p>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/03/04db94f7-05e8-42a3-8179-02b83958ab01.jpg" alt="" class="wp-image-4238" width="599" height="398" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/03/04db94f7-05e8-42a3-8179-02b83958ab01.jpg 760w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/03/04db94f7-05e8-42a3-8179-02b83958ab01-300x199.jpg 300w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/03/04db94f7-05e8-42a3-8179-02b83958ab01-750x498.jpg 750w" sizes="(max-width: 599px) 100vw, 599px" /></figure></div>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/03/WhatsApp-Image-2021-03-29-at-10.48.21-PM-1.jpeg" alt="" class="wp-image-4239" width="600" height="398" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/03/WhatsApp-Image-2021-03-29-at-10.48.21-PM-1.jpeg 760w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/03/WhatsApp-Image-2021-03-29-at-10.48.21-PM-1-300x199.jpeg 300w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/03/WhatsApp-Image-2021-03-29-at-10.48.21-PM-1-750x498.jpeg 750w" sizes="(max-width: 600px) 100vw, 600px" /></figure></div>



<p>எங்களுக்கு வேறு வகை சித்தாந்தம், எண்ணம் உள்ளது.எந்த உறவில் ஏற்றத்தாழ்வு உள்ளதோ அது உறவே இல்லை என்று நினைக்கிறோம். எங்கள் பார்வையில் தமிழக மக்கள் அனைவரும் சகோதர, சகோதரிகள். அதைத்தான் நம்புகிறோம். நாங்கள் விரும்புவது ஒன்றை மட்டும்தான். அன்பு, சகோதரத்துவத்தைத்தான் நாங்கள் விரும்புகிறோம்.</p>



<p>இந்தியாவில் இரண்டு சித்தாந்தங்கள் உள்ளன. ஒரு சித்தாந்தம் எல்லோரும் எனக்கு கீழே என்கிறது. அதுதான் ஆர்எஸ்எஸ், மோடி, அமித் ஷாவின் சித்தாந்தம். இன்னொரு சித்தாந்தம் சகோதரத்துவம், பாசம், மரியாதை என்கிறது. அதைத்தான் நாங்கள் நம்புகிறோம். என்னுடைய பிரச்சினை என்னவென்றால், இவ்வளவு தொன்மையான பண்பாட்டு, பாரம்பரியம் கொண்ட மக்களின் பிரதிநிதியான தலைவர்கள், அமித் ஷா, மோடி ஆகியோரின் கால்களில் விழுந்து கிடக்கிறார்களே என்கிற கோபம் எனக்கு வருகிறது. வரலாற்றுப் பாரம்பரியமிக்க தமிழக மக்களின் தலைவர்கள் இவர்கள் இருவர் காலில் வீழ்ந்து கிடப்பதா என்கிற கோபம் வருகிறது. அதற்காகத்தான் இங்கு வந்துள்ளேன்.</p>



<p>பரஸ்பரம் மரியாதை அளிக்கும் உறவை விரும்புகின்றேன். தமிழகத்திலிருந்து ஆளுகின்ற தமிழகம் தான் வேண்டும். டெல்லியிலிருந்து ஆளுகின்ற அரசு அல்ல. ஒரு வித்தியாசம் உள்ளது. தமிழகம்தான் இந்தியா என்று சொல்லும்போது இந்தியாவும் தமிழகம்தான் என்று சொல்ல வேண்டும்.</p>



<p>இந்தியாவுக்கு கீழ் பணிந்த தமிழகம் இருக்க வேண்டும் என்றால் அது இந்தியாவே அல்ல. நான் விரும்புவது சக மனிதருக்கு அளிக்கப்படும் மரியாதை. அனைவரின் பாரம்பரியத்தையும் மதிக்கும் மரியாதை. ஒரு மொழிதான் உயர்ந்தது என்பதல்ல இந்தியா. ஒரு பாரம்பரியம் தான் உயர்ந்தது என்பது நான் விரும்பும் இந்தியா அல்ல.</p>



<p>தமிழ் எவ்வளவு முக்கியமோ அதேபோல் வங்க மொழியும் முக்கியம். அதேபோல் அனைத்து மொழிகளும் முக்கியம் என்று மதிக்கும் இந்தியா தான் முக்கியம். தமிழக முதலமைச்சரைப் பிரதமர் கட்டுப்படுத்துவதும், அவரை தன் காலில் விழ வைத்திருப்பதையும் நான் ஏற்றுக் கொள்ளமாட்டேன். இது நான் விரும்பும் இந்தியா அல்ல. உத்தரப்பிரதேச முதலமைச்சர், அமித் ஷா காலில் விழ கட்டாயப்படுத்தப்படுகிறார். அவர் நேர்மையற்றவராக இருந்ததால் தான் அமித் ஷா காலில் விழுந்தார். அதே விஷயம் தமிழகத்திலும் நடந்துள்ளது. ஒரே மாதிரியான சம்பவம் தான். கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், ஒரு மாநில முதலமைச்சரைக் காலில் விழ வைப்பது தான்.</p>



<p>தமிழக முதலமைச்சர் அவ்வாறு பணிந்து போவதற்குக் காரணம் அவர் நேர்மையற்றவராக மக்கள் வரிப் பணத்தை சுரண்டியேதே காரணம். எந்த மானமுள்ள தமிழனும் அதை விரும்பமாட்டான். 3 ஆயிரம் ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட தமிழன் யார் காலிலும் விழமாட்டான். அதனால் தான், ஆர்எஸ்ஸ், பாஜக தமிழகத்துக்குள் நுழையக்கூடாது என்பதற்காகத்தான் இங்கு நிற்கிறேன். தமிழகத்தில் பெரிய மாற்றம் தேவைப்படுகிறது. மிகப் பெரிய சவாலை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.</p>



<p>பாஜகவை அகற்றும் வரை நானும் ஸ்டாலினும் எந்தவித சமரசமும் செய்து கொள்ளமாட்டோம். இந்த தேர்தலில் பாஜக- ஆர்எஸ்எஸ் வேர் அறுக்கப்படும். ஸ்டாலின் முதலமைச்சராவார்.</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-tamilnadu/aiadmk-bjp-combine-will-be-decimated-in-the-assembly-polls-says-rahul-gandhi/">தேர்தலில் பா.ஜ.க.- அ.தி.மு.க. கூட்டணி வேர் அறுக்கப்படும்! தலைவர் ராகுல் காந்தியின் ஆவேசப் பேச்சு!</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://desiyamurasu.com/news-tamilnadu/aiadmk-bjp-combine-will-be-decimated-in-the-assembly-polls-says-rahul-gandhi/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>நடனம், உடற்பயிற்சி, தன்னம்பிக்கை, அரசியல் உரையாடல் : நம்பிக்கையை விதைத்த ராகுல் காந்தி</title>
		<link>https://desiyamurasu.com/news-india/rahul-gandhi-dances-with-tamil-nadu-school-students-shows-his-aikido-skills-and-reveals-secret-of-his-fitness/</link>
					<comments>https://desiyamurasu.com/news-india/rahul-gandhi-dances-with-tamil-nadu-school-students-shows-his-aikido-skills-and-reveals-secret-of-his-fitness/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Admin]]></dc:creator>
		<pubDate>Fri, 05 Mar 2021 15:28:04 +0000</pubDate>
				<category><![CDATA[தேசிய அரசியல்]]></category>
		<category><![CDATA[rahul gandhi]]></category>
		<category><![CDATA[Tamilnadu]]></category>
		<guid isPermaLink="false">https://desiyamurasu.com/?p=4192</guid>

					<description><![CDATA[<p>&#8221;தலைவர்கள் மக்களிடமிருந்து தான் உருவாகிறார்கள். அவர்கள் வானத்திலிருந்து குதித்தவர்கள் அல்ல…&#8221;என்பதைப் பொட்டில் அடித்துச் சொல்லியிருக்கிறது ராகுல் காந்தியின் தமிழகப் பயணம். இது ஒரு தலைமுறையின் வழக்கம் அல்ல. ஜவஹர்லால் நேரு,இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி ஆகியோரும் மக்களோடு மக்களாகக் கலந்து அவர்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவர்கள். மக்களிடம் நெருங்கினால் தான் அவர்களது வலியைப் புரிந்து கொள்ள முடியும் என்பதை உள்வாங்கியவர்கள். இதில் ராகுல் மட்டும் மாறுபடுவாரா என்ன? தொழிற்துறையினர் மற்றும் அனைத்துத் தரப்பு மக்களிடம் நெருங்கி, [&#8230;]</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/rahul-gandhi-dances-with-tamil-nadu-school-students-shows-his-aikido-skills-and-reveals-secret-of-his-fitness/">நடனம், உடற்பயிற்சி, தன்னம்பிக்கை, அரசியல் உரையாடல் : நம்பிக்கையை விதைத்த ராகுல் காந்தி</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>&#8221;தலைவர்கள் மக்களிடமிருந்து தான் உருவாகிறார்கள். அவர்கள் வானத்திலிருந்து குதித்தவர்கள் அல்ல…&#8221;என்பதைப் பொட்டில் அடித்துச் சொல்லியிருக்கிறது ராகுல் காந்தியின் தமிழகப் பயணம்.</p>



<p>இது ஒரு தலைமுறையின் வழக்கம் அல்ல. ஜவஹர்லால் நேரு,இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி ஆகியோரும் மக்களோடு மக்களாகக் கலந்து அவர்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவர்கள். மக்களிடம் நெருங்கினால் தான் அவர்களது வலியைப் புரிந்து கொள்ள முடியும் என்பதை உள்வாங்கியவர்கள். இதில் ராகுல் மட்டும் மாறுபடுவாரா என்ன?</p>



<p>தொழிற்துறையினர் மற்றும் அனைத்துத் தரப்பு மக்களிடம் நெருங்கி, அவர்களுடன் பேசிய விதம் அவருக்கு இயற்கையாகவே அமைந்த பாசப் பிணைப்பைக் காட்டியது. பல ஆண்டுகளாகப் பிரச்சினைகளைச் சுமந்து கொண்டு அழவும் முடியாமல், சிரிக்கவும் முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்த தமிழக மக்களுக்கு, கலங்கரை விளக்கமாக ராகுல் காந்தி தெரிகிறார்.</p>



<p>தமிழகத்தின் கலாச்சாரம்,தமிழர்களின் வாழ்வுரிமை,தமிழர்களின் பண்பாட்டை இந்த அளவுக்கு சமீபகாலமாக உரக்கச் சொல்லியவர்கள் யாரும் இல்லை என்றே கூறலாம். அந்த அளவுக்கு அவரது குரல் இந்தியா முழுவதும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.</p>



<p>ஊருக்கு ஒரு பேச்சு பேசும் அரசியல் வியாபாரி அல்ல அவர். தமிழகத்தில் திருக்குறளையும், மேற்கு வங்கத்தில் மார்க்ஸியத்தையும், நாக்பூரில் மதவாதத்தையும் பேசும் அரசியல்வாதிகள் மத்தியில் உண்மை பேசும் ஒரே தலைவராக ராகுல் காந்தி மிளிர்கிறார்.</p>



<p>&#8216;பஞ்சாபியர்களும் தமிழர்களும் சுயமரியாதை மிக்கவர்கள்&#8217; என்று சொன்னார். மற்ற மாநிலத்தவர் வாக்குகள் போய்விடுமே என்று நினைக்கவில்லை. ஊருக்கு ஒரு வேடம் போட அவருக்குத் தெரியாது. தமிழகத்தில் ஜல்லிக்கட்டில் தொடங்கிய அவரது பயணம் தமிழகம் முழுவதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.</p>



<p>ஒவ்வொரு இடத்திலும் ஒரு சுவையான சம்பவம். இவ்வளவு எளிமையான தலைவரை, அதுவும் மிக அருகில், தங்களுக்காகக் குரல் கொடுத்துக் கட்டி அணைக்கும் தலைவரைத் தமிழக மக்கள் மிகவும் நேசிக்கத் தொடங்கியிருக்கிறார்.</p>



<p>&#8216;ராகுல் என்று அழையுங்கள், சார் வேண்டாம்…&#8217; என்ற சொன்ன போது, &#8216;எங்கள் ஊரில் பெரியவர்களைப் பெயர் சொல்லி அழைப்பதில்லை…&#8217; என்று ஒரு மாணவி கூறுகிறார். அதற்கு,&#8217; ராகுல் அண்ணா என்று அழையுங்கள்&#8217; என்கிறார். அங்கே மாணவிகள் எழுப்பிய கரவொலி அடங்க வெகுநேரமானது.</p>



<p>சமீபத்தில் கன்னியாகுமரி மாவட்டம் முலகுமூடு கிராமத்தில் உள்ள செயின்ட் ஜோசப் உயர்நிலைப் பள்ளிக்குச் சென்ற ராகுல் காந்தி, 12 ஆம் வகுப்பு படிக்கும் கிளாடிஸ் ருபெல்லாவுடன் மேடையிலேயே நடனம் ஆடினார். கேள்வி கேட்க ருபெல்லா தயாரானபோது, நீங்கள் என்னுடன் சேர்ந்து பாட விரும்ப மாட்டீர்கள் என்று நம்புகிறேன் என்று சிரித்துக் கொண்டே. உடனே பதில் அளித்த ருபெல்லா, &#8221;நண்பர்களே! ராகுலுக்காக நான் பாட்டு எழுதியுள்ளேன். நான் பாடும்போது நீங்கள் நடனம் ஆடுகிறீர்களா?என்று கேட்டார். அதனை ராகுலும் ஏற்றுக் கொண்டார். ருபெல்லாவின் 3 தோழிகள் நடனம் ஆட மேடைக்கு வந்தனர். அப்போது ராகுல், &#8221;ஒரு நொடி பொறுங்கள்&#8221;என்றார். மேடையைச் சுற்றிப் பார்த்தவர், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியையும், அகில இந்திய காங்கிரஸின் தமிழக பொறுப்பாளருமான தினேஷ் குண்டு ராவையும் மேடைக்கு அழைத்தார்.</p>



<p>நான் மட்டும் தனியாக நடனம் ஆடினால் மோசமாக இருக்கும் என்று தெரிவித்த ராகுல், வலது பக்கம் ருபெல்லா தோழிகளின் கைகளைக் கோர்த்தும் வலதுபுறம் தினேஷ் குண்டு ராவ் உள்ளிட்டவர்களின் கையைப் பிடித்தவாறு காலை அசைத்தவாறு நடனம் ஆடினார். ராகுல் குறித்து ருபெல்லா பாடி முடிந்ததும், அங்கிருந்த மாணவ, மாணவிகள், ராகுல், ராகுல் என்று உற்சாகமாகக் குரல் எழுப்பினர்.</p>



<p>நன்றாகப் பாடினார் என்று ருபெல்லாவை பாராட்டிய ராகுல், &#8216;என் நடத்தை விட அவரது பாடியது சிறப்பாக இருந்தது&#8217; என்றார். ருபெல்லா பாட்டுப் பாடுவதில் மாநில விருதைப் பெற்றவர் என்று கூறிய பாதிரியார் டோமினிக், நீங்களும் அருமையாக நடனம் ஆடினீர்கள் என்று ராகுலைப் பாராட்டினார்.</p>



<p>முன்னதாக, கருத்துச் சுதந்திரத்துக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது குறித்து ராகுல் காந்தியிடம் ருபெல்ல கேள்வி எழுப்பினார். மற்றொரு சுதந்திரப் போராட்டத்துக்கு அவசியம் ஏற்பட்டுள்ளதா? என்றும் கேட்டார்.</p>



<p>அதற்குப் பதில் அளித்த ராகுல், &#8221; ஆம். இந்தியாவுக்கு மற்றொரு சுதந்திரப் போராட்டம் தேவைப்படுகிறது. அத்தகைய போராட்டம் வன்முறை அல்லாத நேசத்துடனான போராட்டமாக இருக்க வேண்டும் .நாடு முழுவதும் கோபமும் அச்சமும் விரிவுபடுத்தப்படுகிறது. அச்சம், கோபம், பிளவுபடுத்தும் சக்திகளை எதிர்த்து நாம் போராட வேண்டும். அப்போது தான் மகிழ்ச்சியான, அச்சமில்லாத, ஒன்றுபட்ட இந்தியாவைக் காண முடியும்&#8221;என்றார்.</p>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img loading="lazy" decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/03/WhatsApp-Image-2021-03-05-at-1.38.18-PM-1024x682.jpeg" alt="" class="wp-image-4197" width="577" height="384" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/03/WhatsApp-Image-2021-03-05-at-1.38.18-PM-1024x682.jpeg 1024w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/03/WhatsApp-Image-2021-03-05-at-1.38.18-PM-300x200.jpeg 300w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/03/WhatsApp-Image-2021-03-05-at-1.38.18-PM-768x512.jpeg 768w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/03/WhatsApp-Image-2021-03-05-at-1.38.18-PM-750x500.jpeg 750w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/03/WhatsApp-Image-2021-03-05-at-1.38.18-PM.jpeg 1027w" sizes="auto, (max-width: 577px) 100vw, 577px" /></figure></div>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img loading="lazy" decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/03/WhatsApp-Image-2021-03-05-at-1.38.19-PM-1024x576.jpeg" alt="" class="wp-image-4195" width="580" height="326" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/03/WhatsApp-Image-2021-03-05-at-1.38.19-PM-1024x576.jpeg 1024w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/03/WhatsApp-Image-2021-03-05-at-1.38.19-PM-300x169.jpeg 300w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/03/WhatsApp-Image-2021-03-05-at-1.38.19-PM-768x432.jpeg 768w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/03/WhatsApp-Image-2021-03-05-at-1.38.19-PM-750x422.jpeg 750w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/03/WhatsApp-Image-2021-03-05-at-1.38.19-PM-1140x641.jpeg 1140w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/03/WhatsApp-Image-2021-03-05-at-1.38.19-PM.jpeg 1276w" sizes="auto, (max-width: 580px) 100vw, 580px" /></figure></div>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img loading="lazy" decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/03/WhatsApp-Image-2021-03-05-at-1.38.17-PM.jpeg" alt="" class="wp-image-4194" width="581" height="387" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/03/WhatsApp-Image-2021-03-05-at-1.38.17-PM.jpeg 1020w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/03/WhatsApp-Image-2021-03-05-at-1.38.17-PM-300x200.jpeg 300w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/03/WhatsApp-Image-2021-03-05-at-1.38.17-PM-768x512.jpeg 768w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/03/WhatsApp-Image-2021-03-05-at-1.38.17-PM-750x500.jpeg 750w" sizes="auto, (max-width: 581px) 100vw, 581px" /></figure></div>



<p>கடலில் குதித்தார் ராகுல், நடனம் ஆடினார் ராகுல். இந்த நிலையில், மெரோலின் என்ற மாணவி, நீங்கள் &#8216;புஷ் அப்&#8217; எடுப்பீர்களா என்று கேட்டார். அந்த மாணவியையும் அழைத்து தன்னோடு சேர்ந்து &#8216;புஷ் அப்&#8217; செய்யச் சொன்னார்.</p>



<p>அந்த மாணவியைவிட வேகமாக புஷ் அப் செய்தார் ராகுல். அதோடு ஒரு கையை தாங்கியவாறும் &#8216;புஷ் அப்&#8217; செய்தார். இதனைப் பார்த்த அனைவரும் கரகோஷம் எழுப்பினர். பாதிரியார் டோமினிக் கட்டிப்பிடித்து ராகுலுக்கு வாழ்த்து தெரிவித்தார். ராகுல் ப்ரூஸ்லீயைப் போல் செய்ததாகப் பாதிரியார் டோமினிக் கூறினார். மெரோலினை அழைத்து தன்னுடன் நிற்கவைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.</p>



<p>ராகுலுடன் புகைப்படம் எடுக்கும் முன்பு, வறுமை ஒழிப்பு குறித்து சைஷானியா என்ற மாணவி கேள்வி எழுப்பினார். கடந்த மக்களவை தேர்தலில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பத்துக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் உதவி வழங்கும் நியான் திட்டத்தைத் தேர்தல் வாக்குறுதியாகக் காங்கிரஸ் அறிவித்தது. நாங்கள் ஆட்சிக்கு வந்திருந்தால், இந்த திட்டத்தைச் செயல்படுத்தியிருப்போம். அடுத்த 5 ஆண்டுகளில் வறுமையை ஒழித்திருப்போம்&#8221; என்றார்.</p>



<p>&#8216;புதுக்கோட்டையில் உள்ள குறிப்பிட்ட சமையல் குழுவினருடன் இணைந்து சமையல் செய்ததில் முக்கிய காரணம் ஏதும் உண்டா?&#8217; என ஒரு மாணவி கேள்வி எழுப்பினார். அதற்குப் பதில் அளித்த ராகுல், &#8221;அந்த சமையல் குழுவினர் சுவாரஸ்யமானவர்கள். இவர்களைப் போல மற்ற குழுவினரின் உணவு, மொழி மற்றும் மாநிலத்தின் கலாச்சாரத்தை அறிந்து கொள்ள விரும்புகின்றேன்&#8221; என்றார்.</p>



<p>ஓவியர் அசோக்கிடம் பயிற்சி பெற்ற 7 ஆம் வகுப்பு மாணவர் சன்னி வரைந்த நேரு, இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி, ராகுல் காந்தி ஆகியோரின் ஓவியத்தை, ராகுலிடம் பாதிரியார் டோமினிக் நினைவுப் பரிசாக வழங்கினார். அப்போது ராகுல் கண்களில் இருந்து கண்ணீர் துளிகள் வெளியேறியபோது, அந்த சூழல் இறுக்கமாக மாறியது.</p>



<p>மக்களோடு மக்களாகக் கலந்து அவர்கள் இதய சிம்மாசனத்திலும் ராகுல் இடம்பிடித்துவிட்டார். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அவர் நடத்தும் உரையாடல்கள் மாற்றத்துக்கான விதைகளை தூவிக் கொண்டிருக்கின்றன. நல்லதை மக்கள் அறுவடை செய்யும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பது மட்டும் உறுதி.</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/rahul-gandhi-dances-with-tamil-nadu-school-students-shows-his-aikido-skills-and-reveals-secret-of-his-fitness/">நடனம், உடற்பயிற்சி, தன்னம்பிக்கை, அரசியல் உரையாடல் : நம்பிக்கையை விதைத்த ராகுல் காந்தி</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://desiyamurasu.com/news-india/rahul-gandhi-dances-with-tamil-nadu-school-students-shows-his-aikido-skills-and-reveals-secret-of-his-fitness/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>ஜவுளித்துறையின் நூல் பற்றாக்குறைக்குத் தீர்வு காணுங்கள் : மத்திய அமைச்சர் ஸ்ம்ருதி இராணிக்கு ராகுல் காந்தி கடிதம்</title>
		<link>https://desiyamurasu.com/news-india/rahul-gandhis-letter-to-smriti-irani/</link>
					<comments>https://desiyamurasu.com/news-india/rahul-gandhis-letter-to-smriti-irani/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Admin]]></dc:creator>
		<pubDate>Mon, 22 Feb 2021 08:19:12 +0000</pubDate>
				<category><![CDATA[தேசிய அரசியல்]]></category>
		<category><![CDATA[rahul gandhi]]></category>
		<guid isPermaLink="false">https://desiyamurasu.com/?p=4172</guid>

					<description><![CDATA[<p>மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்ம்ருதி ஜுபின் இராணிக்கு ராகுல் காந்தி எம்பி அனுப்பிய கடிதத்தின் விவரம்: நூல் விலை உயர்வு மற்றும் இந்திய தொழில்துறையில் ஏற்பட்டுள்ள எதிர்விளைவுகள் தொடர்பாக இந்த கடிதத்தை எழுதுகிறேன். கொரோனோ பரவல் ஜவுளி விநியோகச் சங்கிலியைப் பெரிதும் பாதித்துள்ளது. கொரோனா பொது முடக்கத் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போதிலும், குறைந்த அளவிலான உற்பத்தி காரணமாக காட்டன் நூல் உற்பத்தி குறைந்துள்ளது. படிப்படியாக உற்பத்தி அதிகரித்து வரும் நிலையில், நூல் விலை உயர்வும், விநியோக வீழ்ச்சியும் [&#8230;]</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/rahul-gandhis-letter-to-smriti-irani/">ஜவுளித்துறையின் நூல் பற்றாக்குறைக்குத் தீர்வு காணுங்கள் : மத்திய அமைச்சர் ஸ்ம்ருதி இராணிக்கு ராகுல் காந்தி கடிதம்</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்ம்ருதி ஜுபின் இராணிக்கு ராகுல் காந்தி எம்பி அனுப்பிய கடிதத்தின் விவரம்:</p>



<p>நூல் விலை உயர்வு மற்றும் இந்திய தொழில்துறையில் ஏற்பட்டுள்ள எதிர்விளைவுகள் தொடர்பாக இந்த கடிதத்தை எழுதுகிறேன்.</p>



<p>கொரோனோ பரவல் ஜவுளி விநியோகச் சங்கிலியைப் பெரிதும் பாதித்துள்ளது. கொரோனா பொது முடக்கத் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போதிலும், குறைந்த அளவிலான உற்பத்தி காரணமாக காட்டன் நூல் உற்பத்தி குறைந்துள்ளது. படிப்படியாக உற்பத்தி அதிகரித்து வரும் நிலையில், நூல் விலை உயர்வும், விநியோக வீழ்ச்சியும் சேர்ந்து குறு, சிறு,நடுத்தர தொழில்துறையைப் பாதிப்படையச் செய்துள்ளது. இந்தியாவில் நூல் தட்டுப்பாடு இருந்தபோதிலும், வியட்நாம், வங்காள தேசம் மற்றும் பெரு ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் நூல், பொது முடக்கத்துக்குப் பிறகு அதிகரித்துள்ளது.</p>



<p>குறைந்த விலையில் உற்பத்தி செய்யும் வியட்நாம்,வங்காளதேசம் உள்ளிட்ட பிற நாடுகளின் ஏற்றுமதியாளர்களுடனான இந்தி தொழில் நிறுவனங்களின் போட்டி அதிகரித்துக் கொண்டே போகிறது. பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி காரணமாகப் பாதிக்கப்பட்ட இந்த தொழில்துறை, இன்னும் அதிலிருந்து மீளவில்லை.</p>



<p>இதன் காரணமாக, நமது ஏற்றுமதி தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் நான் திருப்பூருக்குச் சென்றபோது, தங்கள் ஆர்டர்களை செய்து முடிப்பதற்குப் போராட வேண்டியிருப்பதாக ஏற்றுமதியாளர்கள் தெரிவித்தனர்.</p>



<p>உள்ளூரில் நிலையான விலையில் கிடைப்பதற்காக நூல் ஏற்றுமதியை ரத்து செய்யுமாறு அவர்கள் கேட்டுக் கொண்டனர். திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் அமைப்பு என்னிடம் கொடுத்த கடிதத்தின் பிரதியை இத்துடன் இணைத்துள்ளேன்.</p>



<p>இந்தச் சூழலில், தொழில்துறையில் உள்ள நமது சகோதர, சகோதரிகளுக்கு ஆதரவுக் கரம் நீட்டி, உலகச் சந்தையில் அவர்கள் வலுவாக இருப்பதற்குத் தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.</p>



<p>இவ்வாறு அந்த கடிதத்தில் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/rahul-gandhis-letter-to-smriti-irani/">ஜவுளித்துறையின் நூல் பற்றாக்குறைக்குத் தீர்வு காணுங்கள் : மத்திய அமைச்சர் ஸ்ம்ருதி இராணிக்கு ராகுல் காந்தி கடிதம்</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://desiyamurasu.com/news-india/rahul-gandhis-letter-to-smriti-irani/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>&#8221;என் தந்தையைக் கொன்றவர்களை மன்னித்துவிட்டேன்&#8221; : வலியுடன் பகிர்ந்து கொண்ட ராகுல் காந்தி</title>
		<link>https://desiyamurasu.com/news-india/dont-feel-anger-hatred-rahul-gandhi-forgave-father-rajiv-killers/</link>
					<comments>https://desiyamurasu.com/news-india/dont-feel-anger-hatred-rahul-gandhi-forgave-father-rajiv-killers/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Admin]]></dc:creator>
		<pubDate>Mon, 22 Feb 2021 07:51:24 +0000</pubDate>
				<category><![CDATA[தேசிய அரசியல்]]></category>
		<category><![CDATA[rahul gandhi]]></category>
		<category><![CDATA[rajiv gandhi assassination]]></category>
		<category><![CDATA[Rajiv Gandhi Killers]]></category>
		<guid isPermaLink="false">https://desiyamurasu.com/?p=4164</guid>

					<description><![CDATA[<p>&#8216;என் தந்தையைக் கொன்றவர்களை மன்னித்துவிட்டேன். அவர்கள் மீது எனக்குக் கோபமில்லை&#8217; என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உருக்கமாகப் பேசினார். கடந்த 27 ஆம் தேதி ஒருநாள் பயணமாகப் புதுச்சேரி வந்த ராகுல் காந்திக்கு, சென்னை விமான நிலையத்தில் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளும் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அதன்பின்னர், அவர் புதுச்சேரிக்குப் புறப்பட்டுச் சென்றார். புதுச்சேரி பாரதிதாசன் அரசு கல்லூரிக்குச் சென்ற ராகுல் காந்தி, மாணவிகளின் கேள்விக்குப் பதில் அளித்தார். மாணவிகள் ராகுல் காந்தியை &#8216;சார்&#8217; என்று [&#8230;]</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/dont-feel-anger-hatred-rahul-gandhi-forgave-father-rajiv-killers/">&#8221;என் தந்தையைக் கொன்றவர்களை மன்னித்துவிட்டேன்&#8221; : வலியுடன் பகிர்ந்து கொண்ட ராகுல் காந்தி</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>&#8216;என் தந்தையைக் கொன்றவர்களை மன்னித்துவிட்டேன். அவர்கள் மீது எனக்குக் கோபமில்லை&#8217; என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உருக்கமாகப் பேசினார்.</p>



<p>கடந்த 27 ஆம் தேதி ஒருநாள் பயணமாகப் புதுச்சேரி வந்த ராகுல் காந்திக்கு, சென்னை விமான நிலையத்தில் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளும் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அதன்பின்னர், அவர் புதுச்சேரிக்குப் புறப்பட்டுச் சென்றார்.</p>



<p>புதுச்சேரி பாரதிதாசன் அரசு கல்லூரிக்குச் சென்ற ராகுல் காந்தி, மாணவிகளின் கேள்விக்குப் பதில் அளித்தார். மாணவிகள் ராகுல் காந்தியை &#8216;சார்&#8217; என்று அழைத்தனர். குறுக்கிட்ட அவர், &#8216;என்னை சார் என்று அழைக்காதீர்கள், அண்ணா என்று வேண்டுமானால் குறிப்பிடுங்கள்&#8217; என்றார். இதனையடுத்து, அவரை, &#8216;ராகுல் அண்ணா&#8217; என்று அழைத்து கல்லூரி மாணவிகள் உற்சாகமாக உரையாடினார்கள்.</p>



<p>அப்போது ஒரு மாணவி, ராகுல் காந்தியின் தந்தை ராஜிவ் காந்தி கொலை செய்யப்பட்டது குறித்து கேள்வி எழுப்பினார்.</p>



<p>அதற்குப் பதில் அளித்த ராகுல் காந்தி, &#8221; என் தந்தையை இழந்த போது என் இதயத்தைப் பிளந்தது போல் இருந்தது. உங்களில் யாரேனும் தந்தையை இழந்திருந்தால், எனது வலி உங்களுக்குப் புரிந்திருக்கும். என் தந்தையைக் கொன்றவர்களை நான் மன்னித்துவிட்டேன். அவர்கள் மீது கோபமில்லை&#8221; என்றார்.</p>



<p>&#8221;பாட்டி இந்திரா காந்தியையும், தந்தை ராஜிவ் காந்தியையும் இழந்த போதிலும் உங்கள் அரசியல் செயல்பாடு எப்படி உள்ளது?&#8221; என்று ஒரு மாணவி கேள்வி எழுப்பினார்.</p>



<p>அதற்குப் பதில் அளித்த ராகுல் காந்தி, &#8221; வன்முறையால் உங்களிடமிருந்த அனைத்தையும் பறித்துச் சென்று விடமுடியாது. என் தந்தை என்னுள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்…என் வழியே உங்களிடம் பேசிக் கொண்டிருக்கிறார்…&#8221; என்றார்.</p>



<p>&#8221;ஒருவரைக் காதலிப்பதால் இன்ஜினியரிங் படிக்கும் தனக்குப் படிப்பில் நாட்டமில்லை&#8221; என்று ஒரு மாணவி தெரிவித்தார்.</p>



<p>அதற்குப் பதில் அளித்த ராகுல் காந்தி, &#8221; உங்கள் கனவு நிறைவேற, அதன்பின்னே தொடர்ந்து செல்லுங்கள். அதன்பின் பெற்றோரிடம் பேசி, அவர்கள் ஆதரவுடன் நீங்கள் விரும்பியதைச் செய்யுங்கள்&#8221; என்று அறிவுரை வழங்கினார்.</p>



<p>&#8216;ராஜிவ் காந்தியைக் கொன்றவர்களை மன்னித்துவிட்டேன்&#8217; என்று ராகுல் காந்தி கூறியிருப்பது, தமிழ் மக்கள் மத்தியில் அவர் மீதான மரியாதையை உயர்த்தியிருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.</p>



<p>7 பேர் விடுதலை விவகாரம் தமிழகத்தில் பேசுபொருளாகத் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், ராகுலின் இந்த கருத்து, அவரது அரசியல் முதிர்ச்சியைக் காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.</p>



<p>தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி சில மாதங்களுக்கு முன்பு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும்போது,&#8221; 7 பேரை விடுதலை செய்துவிட்டால், கொலை வழக்கில் 25 ஆண்டுகளுக்கு மேலாகச் சிறைத்தண்டனை அனுபவிக்கும் அனைவரையும் விடுதலை செய்துவிடுவீர்களா?&#8221; என்று கேள்வி எழுப்பியிருந்தார். அவர் மேலும் கூறும்போது, &#8221; ராஜிவ் கொலையாளிகள் 7 பேரும் அரசியல் ரீதியாக விடுதலை செய்யப்படுவதைத் தான் எதிர்க்கிறோமே தவிர, நீதிமன்றம் மூலம் அவர்கள் விடுதலை செய்யப்பட்டால் வரவேற்போம்&#8221; என்று தொண்டர்களின் மனநிலையை வெளிப்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/dont-feel-anger-hatred-rahul-gandhi-forgave-father-rajiv-killers/">&#8221;என் தந்தையைக் கொன்றவர்களை மன்னித்துவிட்டேன்&#8221; : வலியுடன் பகிர்ந்து கொண்ட ராகுல் காந்தி</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://desiyamurasu.com/news-india/dont-feel-anger-hatred-rahul-gandhi-forgave-father-rajiv-killers/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>புதுச்சேரி மக்களின் எதிர்காலத்தை துணை நிலை ஆளுநர் முடிவு செய்ய முடியாது : ராகுல் காந்தி</title>
		<link>https://desiyamurasu.com/news-india/rahul-gandhi-puducheri-speech/</link>
					<comments>https://desiyamurasu.com/news-india/rahul-gandhi-puducheri-speech/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Admin]]></dc:creator>
		<pubDate>Fri, 19 Feb 2021 10:13:36 +0000</pubDate>
				<category><![CDATA[தேசிய அரசியல்]]></category>
		<category><![CDATA[puducherry]]></category>
		<category><![CDATA[rahul gandhi]]></category>
		<guid isPermaLink="false">https://desiyamurasu.com/?p=4157</guid>

					<description><![CDATA[<p>புதுச்சேரி முத்தியால்பேட்டையில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி ஆற்றிய உரை: புதுச்சேரிக்கு மிகவும் குறிப்பிடத்தக்க மற்றும் தனித்துவமான கலாச்சாரமும் உண்டு. இந்த நாட்டில் பல வேறுபட்ட கலாச்சாரங்களும், மொழிகளும் மற்றும் பாரம்பரியங்களும் உள்ளன. இந்த வேறுபட்ட கலாச்சாரங்கள், மொழிகள் மற்றும் பாரம்பரியங்கள் நம் நாட்டை மேலும் பலப்படுத்தவும் தனித்துவமாக்கவும் செய்கின்றன என்பது தான் உண்மை. பல நாடுகளில் ஒரே மொழி, ஒரே பாரம்பரியம், ஒரே மதம் உள்ளன. ஆனால், இந்தியாவில் மட்டுமே பல மொழிகள், பல வரலாறுகள், [&#8230;]</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/rahul-gandhi-puducheri-speech/">புதுச்சேரி மக்களின் எதிர்காலத்தை துணை நிலை ஆளுநர் முடிவு செய்ய முடியாது : ராகுல் காந்தி</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>புதுச்சேரி முத்தியால்பேட்டையில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி ஆற்றிய உரை:</p>



<p>புதுச்சேரிக்கு மிகவும் குறிப்பிடத்தக்க மற்றும் தனித்துவமான கலாச்சாரமும் உண்டு. இந்த நாட்டில் பல வேறுபட்ட கலாச்சாரங்களும், மொழிகளும் மற்றும் பாரம்பரியங்களும் உள்ளன. இந்த வேறுபட்ட கலாச்சாரங்கள், மொழிகள் மற்றும் பாரம்பரியங்கள் நம் நாட்டை மேலும் பலப்படுத்தவும் தனித்துவமாக்கவும் செய்கின்றன என்பது தான் உண்மை. பல நாடுகளில் ஒரே மொழி, ஒரே பாரம்பரியம், ஒரே மதம் உள்ளன. ஆனால், இந்தியாவில் மட்டுமே பல மொழிகள், பல வரலாறுகள், பல பாரம்பரியங்கள் உள்ளன. ஒரு வெளிநாட்டினரிடம் இந்தியாவின் பலம் என்னவென்று கேட்டால். &#8221; உங்களது பல மொழிகளும், பாரம்பரியங்களும், கொள்கைகளும்,அமைதியாக, மதநல்லிணக்கத்தோடு, நேசத்துடன் வாழ்வதும் தான் பலம்&#8221; என்பார். அதேபோன்று காங்கிரஸில் நம்மைப் பொறுத்தவரை, ஒரு மொழியை எத்தனை பேர் பேசுகிறார்கள் என்பதோ, எத்தனை பேர் தங்கள் பாரம்பரியத்தைப் பகிர்ந்து கொள்கிறார்கள் என்பதோ ஒரு விஷயம் இல்லை. புதுச்சேரி சிறியதாக இருக்கலாம், ஆனால், முக்கியத்துவத்தில் நாட்டிலேயே பெரிய மாநிலம். அந்த காரணத்தால் தான் நாம் அவ்வாறு சிந்திக்கிறோம். இந்தியாவில் உள்ள வேறுபட்ட கலாச்சாரங்கள் தான் இந்த நாட்டை அற்புதமாக மாற்றுகின்றன என்று நாங்கள் ஆணித்தரமாக நம்புகிறோம்.</p>



<p>அதனால், இன்றைக்கு உங்களுக்கு என் முதல் செய்தி என்னவென்றால், என்ன நடக்கிறது என்பது பற்றி கவலை இல்லை. ஆனால், உங்கள் பாரம்பரியம், உங்கள் கலாச்சாரம், உங்கள் மொழி மற்றும் உங்கள் தனித்துவமான வரலாறு ஆகியவற்றை நாங்கள் பாதுகாப்போம். புதுச்சேரி மக்களை நாங்கள் நேசிப்பதால், அவற்றை நாங்கள் பாதுகாப்போம். இந்திய மக்களை நாங்கள் நேசிப்பதாலும் நாங்கள் பாதுகாப்பாக இருப்போம். அதனால், புதுச்சேரி இந்தியாவில் இருக்கிறது என்று நீங்கள் சொன்னால், இந்தியாவில் தான் புதுச்சேரி இருக்கிறது என்பதையும் நீங்கள் சொல்ல வேண்டும். எதுவாக இருந்தாலும், அது உறவின் அடிப்படையிலான மரியாதையாகும். ஏனென்றால், நாம் நாட்டின் ஓர் அங்கம்; அதே நாட்டின் துண்டுகள் நாம். புதுச்சேரி ஒன்றும் வேறு நாட்டுக்குச் சொந்தமானது அல்ல. இது யாருடைய சொந்த சொத்தும் அல்ல. புதுச்சேரியை தங்கள் சொந்த சொத்து என்று யாராவது நினைத்தால், அது வியப்பையே ஏற்படுத்தும். புதுச்சேரி சிறிய பகுதி என்று அவர்கள் நினைக்கிறார்கள். இந்த அழகிய நகரில் பலதரப்பட்ட மக்கள் இல்லை என்று அவர்கள் நினைக்கிறார்கள். அதோடு, இந்திய மக்களின் வேட்கையையும் அவர்கள் புரிந்துகொள்ளவில்லை.</p>



<p>கடந்த 5 ஆண்டுகளாகப் புதுச்சேரியில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசாங்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 5 ஆண்டுகளுக்கு தங்களுக்குக் குறிப்பிடத்தக்க எதிர்காலம் இருக்க வேண்டும் என்று விரும்பித்தான் புதுச்சேரி மக்கள் காங்கிரஸைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.</p>



<p>இந்த நாட்டின் பிரதமர் புதுச்சேரி அரசை பணியாற்ற அனுமதிக்கவில்லை. வாக்களித்த புதுச்சேரி மக்களைத் தனிப்பட்ட முறையில் பிரதமர் அவமதிக்கிறார். உங்கள் வாக்குகள் ஒரு பொருட்டே இல்லை என்பதை, துணைநிலை ஆளுநரின் வழியாக உங்களுக்குத் தகவல் சொல்லப்படுகிறது. அவர் உங்கள் கனவுகளைக் கலைத்துவிட்டார், உங்கள் அபிலாஷைகளைப் புறக்கணித்துவிட்டார். அதோடு, கனவுகளுக்கும், அபிலாஷைகளுக்கும் எதிராகச் செயல்பட்டார்கள். நாட்டின் மற்ற அமைப்புகளை அழிப்பது போல், துணைநிலை ஆளுநர் என்ற அமைப்பை அவர் முற்றிலும் அழித்தார்.</p>



<p>தங்களுக்கு என்ன நேருமோ என்று பயப்படாமல், இன்றைக்கு இந்தியர் ஒருவர் நீதித்துறையிலிருந்து நீதியைப் பெற்றுவிட முடியாது. உயிருக்குப் பயந்து கொண்டே பத்திரிக்கையாளர்கள் கட்டுரை எழுதுகிறார்கள். மக்களவையிலும், மாநிலங்களவையிலும் விவாதமே இல்லாமல் சட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன. என்னைப் போன்ற மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மக்களவையில் பேச அனுமதிக்கப்படுவதில்லை. &#8216;தான் பிரதமர் இல்லை, இந்த நாட்டின் மன்னர்&#8217; என்று ஒருவர் நினைப்பது தான் இதற்குக் காரணம். புதுச்சேரி மக்களின் விருப்பத்துக்கு இந்திய பிரதமர் மதிப்பளிக்க வேண்டும். புதுச்சேரி மக்களுக்கு உரிமையான வளங்களை அவர் வழங்கவேண்டும். இவற்றில் எதையுமே பிரதமர் செய்யவில்லை. அதனால், நீங்கள் வாக்களிக்கச் செல்லும் போது, கடைசியாக நீங்கள் வாக்களிக்கச் சென்றதை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் வாக்குகளுக்கு பிரதமர் சவால் விடுகிறார். உங்கள் பாரம்பரியத்தை அவர் அவமரியாதை செய்கிறார். உங்கள் வரலாற்றை அவர் அவமரியாதை செய்கிறார். உங்கள் கடந்த காலத்தை அவர் அவமரியாதை செய்கிறார். யாராவது உங்கள் கடந்த காலத்தை அவமரியாதை செய்தால், அவர்கள் உங்கள் எதிர்காலத்தையும் அவமரியாதை செய்வார்கள்.</p>



<p>உங்கள் வாக்குகள் உங்கள் எதிர்காலமாக மாறவேண்டும் என்பதைத் தான் விரும்புகிறோம். எங்களைப் பொறுத்தவரை, இது தேர்தல் போர் அல்ல, புதுச்சேரி மக்களின் வேட்கைப் போர். நீங்கள் விரும்பிய படி வாழ அனுமதிப்பதற்கான போர். நீங்கள் தேர்ந்தெடுக்கும் எதிர்காலத்தை இந்த அழகிய மண்ணில் அரங்கேற்றுவதற்கான போர்.</p>



<p>புதுச்சேரியின் துணைநிலை ஆளுநர் புதுச்சேரியில் பிறந்து வளர்ந்தவரா? என்று கேட்க விரும்புகிறேன். புதுச்சேரியின் பாரம்பரியத்தைப் பற்றி அவருக்குத் தெரியுமா?. எந்த அடிப்படையில் இந்த இடத்தில் செயல்பட்டார்?. புதுச்சேரி மக்களின் எதிர்காலத்தை முடிவு செய்யும் அதிகாரத்தை அவருக்கு யார் கொடுத்தது? எவ்வளவு தைரியம் இருந்தால், இவற்றை எல்லாம் செய்திருப்பீர்கள். ஏனென்றால், அவர்கள் சக்திவாய்ந்தவர்கள் என்று நினைக்கிறார்கள், ஏனென்றால், இந்தியாவையே கட்டுப்படுத்த முடியும் என்று நினைக்கிறார்கள், ஏனென்றால், சிபிஐயை கட்டுப்படுத்த முடியும் என்று நினைக்கிறார்கள், ஏனென்றால், அமலாக்கல் துறையைக் கட்டுப்படுத்த முடியும் என்று நினைக்கிறார்கள். இதனை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம். அவர்கள் மீண்டும் இங்கு வந்தால், அது புதுச்சேரி மக்களுக்கு ஏற்பட்ட அவமானமாக இருக்கும் என்பது தான் உண்மை.</p>



<p>நாடு முழுவதும் இதே சக்திகள் செய்து கொண்டிருக்கும் சிறு விஷயத்தை இப்போது நான் சொல்ல விரும்புகிறேன். புதுச்சேரியில் செய்வதைத் தான் நாட்டின் பிற பகுதிகளுக்கும் செய்ய அவர்கள் விரும்புகிறார்கள். தமிழ்நாட்டில் நீங்கள் தமிழ் பேசக்கூடாது என்கிறார்கள். மேற்கு வங்காளத்தில் வங்காளிகள் சரியில்லை என்கிறார்கள். பஞ்சாபியர்களைத் தீவிரவாதிகள் என்கிறார்கள். அவர்களை யார் எதிர்த்து நின்றாலும், அவர்கள் குற்றவாளி, தேச விரோதி, தீவிரவாதி. ஏனென்றால், இந்தியாவைப் பொறுத்தவரை ஒரே ஒரு கொள்கை மட்டுமே இருப்பதாக அவர்கள் நினைக்கிறார்கள். நரேந்திர மோடி நினைப்பதையே இந்த நாடும் நினைக்க வேண்டும். நரேந்திர மோடி என்ன சிந்திக்கிறாரோ, அதைத்தான் இந்தியாவும் சிந்திக்க வேண்டும். நரேந்திர மோடி என்ன அணிகிறாரோ, அதையே இந்தியாவும் அணிய வேண்டும். நரேந்திர மோடி என்ன சாப்பிட விரும்புகிறோரோ, அதையே இந்தியாவும் சாப்பிட வேண்டும். மன் கீ பாத்தில் நரேந்திர மோடி என்ன சொல்கிறாரோ, அதை இந்தியா கேட்க வேண்டும்.</p>



<p>கடந்த 6 ஆண்டுகளில் ஒரே ஒரு விஷயம் பிரதமர் செய்திருக்கிறார் என்றால், இந்த நாட்டில் உள்ள பணக்காரர்களுக்கு மட்டும்தான். தற்போது நாட்டில் ஏராளமான பணக்காரர்கள் உருவாகியிருக்கிறார்கள். ஆனால், இதிலும் 3 அல்லது 4 பணக்காரர்களுக்குத் தான் நரேந்திர மோடி பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அதிகபட்சமாக இந்த எண்ணிக்கை 5 அல்லது 6 ஆக இருக்கும். இவர்கள் விரும்புவதை எல்லாம் செய்து கொடுத்துக் கொண்டிருக்கிறார். ஏன்? அவர்கள் ஊடகங்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள். அவர்கள் என்ன சொன்னாலும் அதை ஊடகம் சொல்லும்.</p>



<p>பணமதிப்பிழப்பு நடவடிக்கையை நரேந்திர மோடி மேற்கொண்டார். இதனால், எத்தனை பேருக்கு அது உதவியது என்று உங்களிடம் கேட்க விரும்புகிறேன். எவ்வளவு பேர் வங்கியில் பணத்தைப் போட்டார்கள்? அந்த பணம் எங்கே போனது? அதே 5 அல்லது 6 பேரிடம் தான் இந்த பணம் போனது. பல லட்சம் கோடி ரூபாய் அவர்களுக்குக் கடனாக வழங்கப்பட்டது. இப்போது சிறு, நடுத்தர வர்த்தகர்கள் இந்த கூட்டத்தில் இருப்பீர்கள், பல தொழில் முனைவோர் மற்றும் கடைக்காரர்கள் இந்த கூட்டத்தில் இருப்பீர்கள். ஏராளமான விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் இந்த கூட்டத்தில் இருப்பீர்கள். உங்களிடம் கேட்க விரும்புகிறேன்… ஜிஎஸ்டி உங்களுக்கு உதவியதா? யாருக்கு ஜிஎஸ்டி உதவியது? அதே 5 அல்லது 6 பேருக்குத்தான்.</p>



<p>கொரோனாவின் போது, அந்த கொடிய நோயை எதிர்த்துப் போராட புதிய வழியை கையாண்டுள்ளதாகப் பிரதமர் தெரிவித்தார். இந்த 21 ஆம் ஆண்டில் &#8216;கை தட்டுவது&#8217; தான் நோயை எதிர்த்துப் போராடும் முறையா? உங்களை கை தட்டச் சொல்லிவிட்டு, உங்கள் பணத்தை அவரது நண்பர்களிடம் கொடுத்துவிட்டார். கொரோனாவால் தொழிலாளர்கள் எல்லாம் நகரிலிருந்து திரும்பினார்கள். அவர்களுக்கு ரயில் டிக்கெட் கூட எடுத்துத் தரவில்லை. மாறாக, இந்த நாட்டின் பெரும் தொழிலதிபர்களுக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் கோடியைத் தூக்கிக் கொடுத்தார்.</p>



<p>கொரோனாவின் போது, 3 விவசாயச் சட்டங்களைக் கொண்டு வந்து நம் விவசாயிகள் மீது பிரதமர் தாக்குதல் நடத்தினார். விவசாயிகளிடமிருந்து அவர்களது எதிர்காலத்தைப் பறித்து, அவர்களது முழுப் பணத்தையும் இந்த மண்ணில் உள்ள பெரும் பணக்காரர்களிடம் கொடுப்பது தான் இவர்கள் திட்டம். இந்த 3 விவசாயச் சட்டங்களும் அமலுக்கு வரும்போது, தொழிலாளர்கள்,சிறு வியாபார மக்கள், விவசாயிகள், மக்கள், மண்டியில் பணியாற்றுவோர், காய்கறி மற்றும் பழங்களைத் தெருக்களில் விற்பவர்கள் எல்லாம் வேலை இழந்துவிடுவார்கள். இந்திய விவசாயத்தில் பலனைச் சிலர் மட்டுமே அனுபவிப்பர். பழங்களுக்கும் காய்கறிகளுக்கும் நடுத்தர மக்கள் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும். அதேசமயம், தங்கள் விளைபொருட்களுக்கு விவசாயிகள் மிகக் குறைந்த பணத்தையே பெற முடியும். இந்த எதிர்காலம் நமக்கு வேண்டாம்.</p>



<p>நான் உங்களுக்குச் சொல்லும் முக்கியமான செய்தி என்னவென்றால், உங்கள் வாக்குகள் உங்கள் எதிர்காலத்தை முடிவு செய்ய வேண்டும். அதை நீங்கள் தின் முடிவு செய்ய வேண்டும். இந்த நாட்டில் உள்ள சில துணைநிலை ஆளுநர்களால் உங்கள் எதிர்காலத்தை முடிவு செய்ய உரிமை இல்லை. புதுச்சேரி மக்கள் தேர்ந்தெடுக்கும் தலைவரைப் பொறுத்தே, புதுச்சேரியின் எதிர்காலம் அமையும். இந்த அற்புதமான மண்ணில் மோசமான எதிர்காலத்தை உருவாக்க முயல்வதை மத்திய அரசு நிறுத்த வேண்டும்.</p>



<p>இங்கே வந்து இனிய மாலைப் பொழுதில் எனது பேச்சைக் கேட்ட அனைவருக்கும் நன்றியைத் தெரிவிக்க விரும்புகிறேன். நீங்கள் இங்கே வந்தது எனக்குப் பெருமை. உங்கள் கலாச்சாரம், உங்கள் மொழி, உங்கள் பாரம்பரியம் ஆகியவற்றைப் பாதுகாப்பது எனக்குக் கிடைத்த மிகப் பெரிய பெருமை. மத்தியில் நாங்கள் ஆட்சிக்கு வரும்போது, புதுச்சேரியைச் சேர்ந்தவரைத் தவிர, வேறு யாரும் புதுச்சேரியின் எதிர்காலத்தை முடிவு செய்ய விடமாட்டோம் என்று உத்தரவாதம் அளிக்கிறேன். உங்கள் எதிர்காலத்தைத் துணைநிலை ஆளுநர் முடிவு செய்ய முடியாது.</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/rahul-gandhi-puducheri-speech/">புதுச்சேரி மக்களின் எதிர்காலத்தை துணை நிலை ஆளுநர் முடிவு செய்ய முடியாது : ராகுல் காந்தி</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://desiyamurasu.com/news-india/rahul-gandhi-puducheri-speech/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>சர்ச்சிலும் ராகுலும்; ட்ரம்பும் மோடியும் : வார்த்தைகளில் வெளிப்படும் உண்மை முகம்</title>
		<link>https://desiyamurasu.com/news-india/in-rg-namo-standoff-whose-wit-is-churchillian-and-whose-trumpian/</link>
					<comments>https://desiyamurasu.com/news-india/in-rg-namo-standoff-whose-wit-is-churchillian-and-whose-trumpian/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[ஆ. கோபண்ணா]]></dc:creator>
		<pubDate>Wed, 17 Feb 2021 16:58:46 +0000</pubDate>
				<category><![CDATA[தேசிய அரசியல்]]></category>
		<category><![CDATA[British Parliament]]></category>
		<category><![CDATA[Modi Government]]></category>
		<category><![CDATA[PM Modi]]></category>
		<category><![CDATA[rahul gandhi]]></category>
		<guid isPermaLink="false">https://desiyamurasu.com/?p=4131</guid>

					<description><![CDATA[<p>மோடி அரசை &#8216;சூட் பூட் கி சர்க்கார்&#8217; (விலை உயர்ந்த கோட் மற்றும் பூட்ஸை மோடி போடுவது வழக்கம்) என்று முத்திரை குத்தினார் ராகுல் காந்தி. சமீபத்தில் &#8216;நாம் இருவர் நமக்கு இருவர் அரசு&#8217; என்று விமர்சித்தார். ராகுல் காந்தியின் இத்தகைய விமர்சனங்கள் இங்கிலாந்து பிரதமராக இருந்த வின்ஸ்டன் சர்ச்சிலை நினைவுபடுத்துகிறது. இரக்கக் குணம் மற்றும் கருத்தியலில் புகழ்பெற்ற வின்ஸ்டன் சர்ச்சிலுடன் ஒப்பிடும் அளவுக்கு ராகுல் காந்தி இருக்கிறார். அரசியல் ரீதியாகவும், தனிப்பட்ட முறையில் அவமானப்படுத்தப்பட்ட போதும், [&#8230;]</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/in-rg-namo-standoff-whose-wit-is-churchillian-and-whose-trumpian/">சர்ச்சிலும் ராகுலும்; ட்ரம்பும் மோடியும் : வார்த்தைகளில் வெளிப்படும் உண்மை முகம்</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>மோடி அரசை &#8216;சூட் பூட் கி சர்க்கார்&#8217; (விலை உயர்ந்த கோட் மற்றும் பூட்ஸை மோடி போடுவது வழக்கம்) என்று முத்திரை குத்தினார் ராகுல் காந்தி. சமீபத்தில் &#8216;நாம் இருவர் நமக்கு இருவர் அரசு&#8217; என்று விமர்சித்தார்.</p>



<p>ராகுல் காந்தியின் இத்தகைய விமர்சனங்கள் இங்கிலாந்து பிரதமராக இருந்த வின்ஸ்டன் சர்ச்சிலை நினைவுபடுத்துகிறது.</p>



<p>இரக்கக் குணம் மற்றும் கருத்தியலில் புகழ்பெற்ற வின்ஸ்டன் சர்ச்சிலுடன் ஒப்பிடும் அளவுக்கு ராகுல் காந்தி இருக்கிறார். அரசியல் ரீதியாகவும், தனிப்பட்ட முறையில் அவமானப்படுத்தப்பட்ட போதும், அவரது நகைச்சுவை மேலோங்கியிருக்கும்.</p>



<p>மோடியைப் போல் தனிப்பட்ட தாக்குதலை ராகுல் காந்தி நடத்துவதில்லை. தன் அரசியல் எதிரிகளைத் தனிப்பட்ட முறையில் யாரையும் சர்ச்சில் தாக்கியதில்லை. இந்த குணம் ராகுல் காந்தியிடமும் பிரதிபலித்தது.</p>



<p>பிரிட்டிஷ் முதல் பெண் எம்பியான நான்ஸி ஆஸ்டர் ஒருமுறை நாடாளுமன்றத்தில் பேசும்போது,&#8221; சர்ச்சிலை நான் திருமணம் செய்து கொண்டிருந்தால், விஷம் வைத்துக் கொன்றிருப்பேன்&#8221; என்றார். அதற்கு உடனே பதில் அளித்த சர்ச்சில், &#8221; நான்ஸி எனக்கு மனைவியாகியிருந்தால் நானே விஷம் குடித்து செத்துருப்பேன்&#8221; என்றார்.</p>



<p>மற்றொரு பெண் எம்பி பெஸ்ஸி பிராடோக் பேசும்போது, சர்ச்சிலை குடிகாரன் என்றார். அதற்குப் பதில் அளித்த சர்ச்சில், நான் நாளைக்கே செத்துவிடுவேன், நீங்கள் மட்டும் இன்றைக்கு இருப்பது போலவே அப்போதும் இருப்பீர்கள் என்றார். பெஸ்ஸி அசிங்கமாக இருப்பார். அவரை உடல் ரீதியாகவோ அல்லது தனிப்பட்ட முறையிலோ விமர்சிக்காமல், எவ்வளவு நாசூக்காக விமர்சித்துள்ளார்.</p>



<p>சர்ச்சில் அளவுக்கு தன்னை அவமானப்படுத்தியவர்களுக்கு ராகுல்காந்தி பதிலடி தரவில்லை. எனினும், மோடி அரசாங்கத்தை &#8216;சூட் பூட் கி சர்க்கார் என்று முத்திரை குத்தினார். தற்போது நாம் இருவர் நமக்கு இருவர் சர்க்கார் என்று விமர்சிக்கிறார். வின்ஸ்டன் சர்ச்சிலின் வார்த்தைகளையே ராகுல் காந்தியின் வார்த்தைகள் பிரதிபலிக்கின்றன.</p>



<p>ராகுல் காந்தியை விமர்சித்த பத்திரிகை ஆசிரியர்கூட, ராகுல் காந்தியை சர்ச்சிலுடன் ஒப்பிடுகிறார்.</p>



<p>ராகுல் காந்தி ஏன் சர்ச்சிலை நினைவுபடுத்துகிறார். சர்ச்சிலைப் போல், எதிரிகளின் அவதூறுகளைத் தவிர்த்து விடுகிறார். ஆனால், பொருத்தமான நேரத்தில் பதிலடி கொடுக்கிறார். அந்த நகைச்சுவை எல்லோர் மனதிலும் நிலைத்து நிற்கிறது.</p>



<p>தேசிய அரசியலுக்கு வரும் முன்பே சோனியா காந்தியை வெளிநாட்டுக்காரர் என்பதைச் சுட்டிக்காட்டித் தனிப்பட்ட முறையில் விமர்சித்தார். சசிதரூருக்கும் பெரும் பணக்காரரான சுனந்தாவுக்கும் திருமணமானபோது, சுனந்தாவை சசிதரூரின் 50 கோடி ரூபாய் நண்பர் என்று குறிப்பிட்டார். இத்தனைக்கும் சுனந்தா அப்போது மக்கள் மத்தியில் அறிமுகம் ஆகவில்லை.</p>



<p>டொனால்டு ட்ரம்ப் அதிபராகும் முன்பே கெல்லியை தனிப்பட்ட முறையில் விமர்சித்தார். அதேபோல், தேசிய அரசியலுக்கு வரும் முன்பு, சோனியா காந்தியையும், சுனந்தாவையும் தனிப்பட்ட முறையில் மோடி விமர்சித்தார். பெண்கள் அல்லது ஆண்கள் மீதான தனிப்பட்ட தாக்குதலை ராகுல் காந்தி தொடுத்ததே கிடையாது.</p>



<p>சர்ச்சிலுக்கும் ட்ரம்புக்கும் இருந்த வித்தியாசம் தான், மோடிக்கும் ராகுல் காந்திக்கும் இருக்கிறது என்பதே, அவரவர் வாயிலிருந்து வெளிப்படும் வார்த்தைகள் உணர்த்துகின்றன</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/in-rg-namo-standoff-whose-wit-is-churchillian-and-whose-trumpian/">சர்ச்சிலும் ராகுலும்; ட்ரம்பும் மோடியும் : வார்த்தைகளில் வெளிப்படும் உண்மை முகம்</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://desiyamurasu.com/news-india/in-rg-namo-standoff-whose-wit-is-churchillian-and-whose-trumpian/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>நாம் இருவர் நமக்கு இருவர் பாணியில் நாட்டை வழிநடத்தும் 4 பேர் : மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்</title>
		<link>https://desiyamurasu.com/news-india/rahul-gandhi-cites-old-family-planning-slogan-hum-do-hamare-do-to-attack-govt-says-4-people-are-running-the-country/</link>
					<comments>https://desiyamurasu.com/news-india/rahul-gandhi-cites-old-family-planning-slogan-hum-do-hamare-do-to-attack-govt-says-4-people-are-running-the-country/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Admin]]></dc:creator>
		<pubDate>Sat, 13 Feb 2021 07:33:59 +0000</pubDate>
				<category><![CDATA[தேசிய அரசியல்]]></category>
		<category><![CDATA[rahul gandhi]]></category>
		<guid isPermaLink="false">https://desiyamurasu.com/?p=4097</guid>

					<description><![CDATA[<p>நாம் இருவர் நமக்கு இருவர் பாணியில் இந்தியாவை 4 பேர் வழி நடத்துகின்றனர் என மக்களவையில் ராகுல் காந்தி பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். மக்களவையில் நடைபெற்ற பட்ஜெட் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு ராகுல் காந்தி பேசினார். அப்போது, விவசாயச் சட்டங்களின் பாதகங்களைத் தோலுரித்துக் காட்டினார். ராகுல் காந்தி : போராட்டத்தைப் பற்றி மட்டுமே எதிர்க்கட்சிகள் பேசுகிறார்கள், விவசாயச் சட்டங்களின் உள்ளடக்கத்தையும் நோக்கத்தையும் பற்றி யாரும் பேசுவதில் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார். அவரை மகிழ்ச்சிப் படுத்தும் [&#8230;]</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/rahul-gandhi-cites-old-family-planning-slogan-hum-do-hamare-do-to-attack-govt-says-4-people-are-running-the-country/">நாம் இருவர் நமக்கு இருவர் பாணியில் நாட்டை வழிநடத்தும் 4 பேர் : மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>நாம் இருவர் நமக்கு இருவர் பாணியில் இந்தியாவை 4 பேர் வழி நடத்துகின்றனர் என மக்களவையில் ராகுல் காந்தி பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.</p>



<p>மக்களவையில் நடைபெற்ற பட்ஜெட் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு ராகுல் காந்தி பேசினார். அப்போது, விவசாயச் சட்டங்களின் பாதகங்களைத் தோலுரித்துக் காட்டினார்.</p>



<p>ராகுல் காந்தி : போராட்டத்தைப் பற்றி மட்டுமே எதிர்க்கட்சிகள் பேசுகிறார்கள், விவசாயச் சட்டங்களின் உள்ளடக்கத்தையும் நோக்கத்தையும் பற்றி யாரும் பேசுவதில் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார். அவரை மகிழ்ச்சிப் படுத்தும் நோக்கில், விவசாயச் சட்டத்தின் உள்ளடக்கம் மற்றும் நோக்கத்தைப் பற்றிப் பேசப் போகிறேன். முதல் விவசாயச் சட்டத்தின் உள்ளடக்கத்தைப் பற்றி பேசுகிறேன். இந்தியாவில் விளையும் அனைத்து விளைபொருட்களையும் வாங்கும் உரிமையைத் தனது (பிரதமரின்) நண்பர் ஒருவருக்கு அளிப்பது. இதனால் பாதிக்கப்படப்போவது யார்? மண்டிகளை நம்பியுள்ள சிறு வணிகர்கள் தான். மண்டிகளில் பணியாற்றும் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்படப் போகிறார்கள். இந்தச் சட்டம் நாட்டில் உள்ள அனைத்து உள்ளூர் மண்டிகளையும் அழித்துவிடும்.</p>



<p>(பாஜக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து கோஷம்.)</p>



<p>சபாநாயகர் ஓம் பிர்லா : பட்ஜெட் தொடர்பாகப் பேசுங்கள்.</p>



<p>ராகுல் காந்தி: பிரதமர் விருப்பப்படி, இரண்டாவது விவசாயச் சட்டத்தின் உள்ளடக்கத்தைப் பேசுகிறேன். விவசாயிகளுக்கு 2 வாய்ப்புகளை அளித்ததாகப் பிரதமர் பேசினார், ஆம். அதில் ஒன்று பட்டினி. மற்றொன்று வேலை இழப்பு. ரூ.40 லட்சம் கோடி வருவாய் ஈட்டுகிறது விவசாயத்துறை. இதற்கு வேட்டு வைப்பது தான் இந்த இரண்டாவது சட்டத்தின் நோக்கம். பெரும் தொழிலதிபர்கள் உணவு, தானியங்கள், பழங்கள், காய்கறிகள் என எதை வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் இருப்பு வைக்கலாம். எவ்வளவு வேண்டுமானாலும் பதுக்கலாம் என்பது தான் இந்த சட்டத்தின் நோக்கம்.</p>



<p>பிரல்ஹாத் ஜோஷி (நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர்): விதிமுறைகளின் படி பட்ஜெட் விவாதத்தின் போது, பட்ஜெட் பற்றித்தான் பேச வேண்டும்.</p>



<p>ஆதிர் ரஞ்சன் சவுத்ரி : விதி 214 ன் படி, பொது விஷயங்களையும் பேசலாம். விவசாயமும் பட்ஜெட் தொடர்புடையது தான்.</p>



<p>சவ்காட்டோ ராய் (திரிணாமுல் காங்கிரஸ்) : ஓர் உறுப்பினர் பேசும்போது குறுக்கிடக்கூடாது என்று விதிகள் கூறுகின்றன. அப்படியிருக்கும் போது ராகுல் காந்தியின் உரையில் ஏன் குறுக்கிடுகிறீர்கள்?</p>



<p>ராகுல் காந்தி : 3 ஆவது சட்டத்தின் நோக்கத்தையும் சொல்கிறேன். அரசின் முதல் நண்பர்களான பெரும் முதலாளிகளிடம் சென்று தங்கள் விளைபொருட்களுக்கு நியாயமான விலையைக் கேட்கவேண்டும். அவர்கள் தராவிட்டால், விவசாயிகள் நீதிமன்றத்துக்குப் போக முடியாது. விவசாயிகள், தொழிலாளர்கள், சிறுகடை உரிமையாளர்கள், இடைத்தரகர்களை ஒழித்து, அதாவது நாட்டின் முதுகெலும்பை முறித்து தங்கள் முன்னணி தொழிலதிபர் நண்பர்களுக்கு (அம்பானி, அதானி) உதவ முயல்வது தான் 3 ஆவது விவசாயச் சட்டத்தின் நோக்கம்.</p>



<p>&#8216;நாம் இருவர் நமக்கு இருவர்&#8217; என்பது, அரசின் குடும்பக் கட்டுப்பாடு பிரச்சாரமாக இருந்தது நினைவில் இருக்கலாம். அதேபோல், 4 பேர் சேர்ந்து, &#8216;நாம் இருவர், நமக்கு இருவர்&#8217; என இந்த நாட்டை வழிநடத்துகின்றனர். இவர்கள் யார் என்பது ஒவ்வொருவருக்கும் தெரியும். இந்த சட்டத்தைக் கொண்டு வந்த பிறகு என்ன ஆகும்? விவசாயிகளின் நிலம் பறிபோகும். சிறு வர்த்தகர்கள் பாதிக்கப்படுவார்கள். இந்தியாவின் உணவு பாதுகாப்பு சீர்குலையும். நாட்டின் முதுகெலும்பை முறித்துவிட்டு உங்களால் வளர்ச்சி, வேலைவாய்ப்பு என எதையும் உருவாக்க முடியாது. டெல்லியில் நடப்பதை விவசாயிகள் போராட்டம் என நீங்கள் நினைப்பது தவறு. இது இந்தியாவின் போராட்டம். விவசாயிகளும், தொழிலாளர்களும் உங்களை அழித்துவிடுவார்கள். அவர்களை உங்களால் வெல்ல முடியாது. நீங்கள் விவசாயச் சட்டங்களை ரத்து செய்தே ஆகவேண்டும். உங்களுக்குத் தோல்வியே மிஞ்சும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். ஏழைகளிடமிருந்து பணத்தைப் பறித்து, 2 நண்பர்களின் பாக்கெட்களை நிரப்புவது பிரதமருக்குப் புதிதல்ல. இப்போது மீண்டும் ஏழைகள் மீது தாக்குதல் நடத்துகிறீர்கள். கொரோனா பொது முடக்கத்தின் போது, புலம்பெயர்ந்த தொழிலாளர்களை நடக்கவிட்டு, பிச்சை எடுக்க வைத்தீர்கள்.</p>



<p>சபாநாயகர் ஓம் பிர்லா : இது பட்ஜெட் குறித்த விவாதம். அதைப் பற்றி மட்டும் பேசுங்கள்.</p>



<p>ராகுல் காந்தி : பட்ஜெட் விவாதத்துக்கு நான் வருகிறேன். அதற்கு முன்பு என் விவாதத்துக்கு அடித்தளத்தை அமைத்துக் கொள்கிறேன். முதலில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை, அதன்பிறகு ஜிஎஸ்டி, தொடர்ந்து பொது முடக்கத்தின்போது புலம்பெயர் தொழிலாளர்களைத் துன்பத்தில் தள்ளியது தான் நீங்கள் செய்த சாதனை. இவை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோரையும், விவசாயிகளையும், சிறு கடைக்காரர்களையும் பாதிப்படையச் செய்துவிட்டது. வேலை வாய்ப்பை உருவாக்கும் திறனையும் அழிந்துவிட்டது. நாம் இருவர் நமக்கு இருவருக்கு எதிராக ஒட்டுமொத்த நாடே எதிர்த்து நிற்கிறது. விவசாயிகள் பின்வாங்கிவிடுவார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள், அது நடக்காது. இப்போது பட்ஜெட்டுக்கு வருகிறேன். குடியரசுத் தலைவர் உரையின் போது, விவசாயிகள் பிரச்சினை குறித்த தனி விவாதம் நடத்த அனுமதி கேட்டோம். அது மறுக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நான் மட்டுமே விவசாயிகள் பிரச்சினையைப் பற்றி பேசுவேன். பட்ஜெட் பற்றி பேசமாட்டேன். உயிர்நீத்த விவசாயிகளுக்கு இவர்கள் இரங்கல் கூட தெரிவிக்கவில்லை. அவர்களுக்காக மவுன அஞ்சலி செலுத்துகிறேன். என்னுடன் இணைந்துகொள்ளுங்கள்.</p>



<p>(காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கள் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர்.)</p>



<p>சபாநாயகர் ஓம் பிர்லா : இந்த அவையை நடத்த வேண்டியது என் பொறுப்பு. எந்த சோக நிகழ்விலும் உயிரிழந்தவர்களுக்காக அஞ்சலி செலுத்தச் செய்வது எனது பொறுப்பு. ஆனால், மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்களான நீங்கள் தவறாகச் செயல்படுகிறீர்கள். நீங்கள் (ராகுல் காந்தி) எழுத்து மூலமாகத் தாருங்கள், அதற்கான அனுமதியைத் தர வேண்டிய பொறுப்பை நான் ஏற்றுக் கொள்கிறேன்.</p>



<p>ராகுல் காந்தி : பிரதமர் நேற்று பேசும்போது, போராடுவதற்காகவே வாழ்பவர்கள் என்று எங்களைப் பார்த்துச் சொன்னார். பட்ஜெட்டுக்கான உள்ளடக்கம் மற்றும் நோக்கத்தைப் பேச வேண்டும் என்றார். அவர் சொன்னபடியே பேசிவிட்டேன். இப்போது பிரதமர் மகிழ்ச்சியடைவார் என்று நினைக்கிறேன்.</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/rahul-gandhi-cites-old-family-planning-slogan-hum-do-hamare-do-to-attack-govt-says-4-people-are-running-the-country/">நாம் இருவர் நமக்கு இருவர் பாணியில் நாட்டை வழிநடத்தும் 4 பேர் : மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://desiyamurasu.com/news-india/rahul-gandhi-cites-old-family-planning-slogan-hum-do-hamare-do-to-attack-govt-says-4-people-are-running-the-country/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>&#8216;சமூக ஊடகத்தில் இணையுங்கள்&#8217; பிரச்சாரம் தொடக்கம் : வெறுப்பு அரசியலை எதிர்த்துப் போராட ராகுல் காந்தி அழைப்பு</title>
		<link>https://desiyamurasu.com/news-india/congress-launches-join-social-media-campaign-rahul-says-online-warriors-will-counter-hate/</link>
					<comments>https://desiyamurasu.com/news-india/congress-launches-join-social-media-campaign-rahul-says-online-warriors-will-counter-hate/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Admin]]></dc:creator>
		<pubDate>Wed, 10 Feb 2021 09:37:17 +0000</pubDate>
				<category><![CDATA[தேசிய அரசியல்]]></category>
		<category><![CDATA[congress]]></category>
		<category><![CDATA[rahul gandhi]]></category>
		<guid isPermaLink="false">https://desiyamurasu.com/?p=4075</guid>

					<description><![CDATA[<p>காங்கிரஸ் தொடங்கியுள்ள &#8216;சமூக ஊடகத்தில் இணையுங்கள்&#8217; பிரச்சாரத்தில் இணைந்து, வெறுப்பு அரசியலுக்கு இணையப் போராளிகள் பதில் அளிப்பார்கள் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 5 லட்சம் இணைய தள போராளிகளை இணைக்கும் வகையில், &#8216;காங்கிரஸ் சமூக ஊடகத்தில் இணையுங்கள்&#8217; என்ற பிரச்சாரத்தைக் கடந்த திங்களன்று காங்கிரஸ் கட்சி தொடங்கியது. இது குறித்து கருத்து தெரிவித்த ராகுல் காந்தி, வெறுப்பு அரசியலுக்குப் பதில் தரவும், இந்தியாவின் கொள்கையைப் பாதுகாக்கவும் இது உதவும் என்று கூறியுள்ளார். இது [&#8230;]</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/congress-launches-join-social-media-campaign-rahul-says-online-warriors-will-counter-hate/">&#8216;சமூக ஊடகத்தில் இணையுங்கள்&#8217; பிரச்சாரம் தொடக்கம் : வெறுப்பு அரசியலை எதிர்த்துப் போராட ராகுல் காந்தி அழைப்பு</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>காங்கிரஸ் தொடங்கியுள்ள &#8216;சமூக ஊடகத்தில் இணையுங்கள்&#8217; பிரச்சாரத்தில் இணைந்து, வெறுப்பு அரசியலுக்கு இணையப் போராளிகள் பதில் அளிப்பார்கள் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.</p>



<p>5 லட்சம் இணைய தள போராளிகளை இணைக்கும் வகையில், &#8216;காங்கிரஸ் சமூக ஊடகத்தில் இணையுங்கள்&#8217; என்ற பிரச்சாரத்தைக் கடந்த திங்களன்று காங்கிரஸ் கட்சி தொடங்கியது.</p>



<p>இது குறித்து கருத்து தெரிவித்த ராகுல் காந்தி, வெறுப்பு அரசியலுக்குப் பதில் தரவும், இந்தியாவின் கொள்கையைப் பாதுகாக்கவும் இது உதவும் என்று கூறியுள்ளார்.</p>



<p>இது தொடர்பாக வெளியிடப்பட்ட வீடியோவில் அவர் மேலும் கூறும்போது, &#8221; உண்மையை எதிர்த்துப் போராடக்கூடிய, இரக்கமுள்ள, நல்லிணக்கமுள்ள வன்முறையற்ற போராளிகள்தான் நாட்டுக்குத் தேவை. என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது ஓர் இளைஞராக உங்களுக்குத் தெரியும். உங்களிடமிருந்து, உங்கள் பள்ளியிலிருந்து, கல்லூரியிலிருந்து, பல்கலைக்கழகத்திலிருந்து எதையும் மறைக்க முடியாது. அடக்குமுறையை உங்களால் பார்க்க முடியும்,இந்தியாவின் கொள்கை மீது நடத்தப்படும் தாக்குதல்களையும் உங்களால் பார்க்க முடியும்.</p>



<p>டெல்லிக்கு வெளியே பாருங்கள். விவசாயிகளுக்கு என்ன நடக்கிறது என்பதைக் காண முடியும். தேசத்தின் மீதான இந்த போரின் முதுகெலும்பு பூதாகரமான ராணுவம் போல் உள்ளது. ஆயிரக்கணக்கானோர் வெறுப்பையும் கோபத்தையும் ஏற்படுத்துகிறார்கள். சுதந்திரத்தின் மதிப்பு, இரக்கம், அமைதி, மதநல்லிணக்கம் மற்றும் அன்பைப் பாதுகாப்பதற்கான போராளிகள் தான் நமக்குத் தேவை.</p>



<p>அத்தகைய ராணுவத்தில் வந்து சேருங்கள். இது வெறுப்பை உமிழும் ராணுவம் அல்ல. இது வன்முறையை ஏற்படுத்தும் ராணுவம் அல்ல. உண்மை மற்றும் இந்தியாவின் கொள்கையைக் காப்பாற்றும் ராணுவம். இந்த போரை எதிர்கொண்டு வெல்வதற்கு, உங்களிடம் இணையதளம் எனும் ஆயுதத்தைக் கொடுத்துள்ளோம்&#8221; என்றார்.</p>



<p>இந்த பிரச்சாரத்தை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் சமூக ஊடக தலைவர் ரோஹன் குப்தா, செய்தி தொடர்பாளர் பவன் கேரா, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் நிர்வாக பொறுப்பாளர் பவன் குமார் பன்சால் ஆகியோர் தொடங்கி வைத்தனர். அப்போது, &#8221;5 லட்சம் சமூக ஊடக போராளிகளை இணைப்பதே இந்த பிரச்சாரத்தின் நோக்கம்&#8221; என்றனர்.</p>



<p>இது குறித்து குப்தா தொடர்ந்து பேசும்போது, &#8221; இந்த பிரச்சாரத்தை ஒரு மாத காலத்துக்குக் காங்கிரஸ் கட்சி நடத்தும்&#8221; என்றார். இது குறித்து கேரா கூறும்போது,&#8221; 2014 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பாஜக, சமூக ஊடகங்களில் காங்கிரஸ் ஆர்வம் காட்டாதது குறித்து விமர்சனங்கள் எழுந்தன. இன்று சமூக ஊடகங்களில் கட்சி தீவிரமாகச் செயல்படுத்துவதைப்பார்த்து, களத்தில் மட்டுமல்ல இணையத்திலும் கட்சி வலுப்பெற்றுள்ளதாகக் கூறுகிறார்கள்&#8221; என்றார்.</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/congress-launches-join-social-media-campaign-rahul-says-online-warriors-will-counter-hate/">&#8216;சமூக ஊடகத்தில் இணையுங்கள்&#8217; பிரச்சாரம் தொடக்கம் : வெறுப்பு அரசியலை எதிர்த்துப் போராட ராகுல் காந்தி அழைப்பு</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://desiyamurasu.com/news-india/congress-launches-join-social-media-campaign-rahul-says-online-warriors-will-counter-hate/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>தலைவர் ராகுலின் தமிழ் வணக்கம்! விழாக்கோலம் பூண்ட மதுரை! ஜல்லிக்கட்டு வரலாறு படைத்தது!</title>
		<link>https://desiyamurasu.com/news-tamilnadu/rousing-reception-to-rahul-gandhi-at-madurai/</link>
					<comments>https://desiyamurasu.com/news-tamilnadu/rousing-reception-to-rahul-gandhi-at-madurai/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Admin]]></dc:creator>
		<pubDate>Fri, 15 Jan 2021 12:11:10 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழக அரசியல்]]></category>
		<category><![CDATA[Jallikattu]]></category>
		<category><![CDATA[Madurai]]></category>
		<category><![CDATA[rahul gandhi]]></category>
		<guid isPermaLink="false">https://desiyamurasu.com/?p=3884</guid>

					<description><![CDATA[<p>மதுரை அவனியாபுரத்தில் இன்று நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டியைக் காண டெல்லியிலிருந்து தனி விமானத்தில் இன்று(14.1.2021) ராகுல் காந்தி மதுரைக்கு வருகை புரிந்தார். உள்ளே நுழைந்ததும் அங்கிருந்த பார்வையாளர்கள் ராகுல் காந்தியைப் பார்த்து உற்சாகமாகக் கரவொலி எழுப்பி வரவேற்றனர். ஜல்லிக்கட்டுப் போட்டியை அவர் ஆர்வமுடன் கண்டு ரசித்தார். காளைகள் சீறி வருதையும், அதை காளையர்கள் அடக்குவதையும் கண்டு உற்சாகமடைந்தார். அதேபோல், காளை வெற்றி பெற்றதையும் பார்த்து மகிழ்ந்தார். வாடிவாசலில் இருந்து காளைகள் சீறி வருவதைப் பார்த்த அவர், அருகிலிருந்த [&#8230;]</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-tamilnadu/rousing-reception-to-rahul-gandhi-at-madurai/">தலைவர் ராகுலின் தமிழ் வணக்கம்! விழாக்கோலம் பூண்ட மதுரை! ஜல்லிக்கட்டு வரலாறு படைத்தது!</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>மதுரை அவனியாபுரத்தில் இன்று நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டியைக் காண டெல்லியிலிருந்து தனி விமானத்தில் இன்று(14.1.2021) ராகுல் காந்தி மதுரைக்கு வருகை புரிந்தார். உள்ளே நுழைந்ததும் அங்கிருந்த பார்வையாளர்கள் ராகுல் காந்தியைப் பார்த்து உற்சாகமாகக் கரவொலி எழுப்பி வரவேற்றனர்.</p>



<p>ஜல்லிக்கட்டுப் போட்டியை அவர் ஆர்வமுடன் கண்டு ரசித்தார். காளைகள் சீறி வருதையும், அதை காளையர்கள் அடக்குவதையும் கண்டு உற்சாகமடைந்தார். அதேபோல், காளை வெற்றி பெற்றதையும் பார்த்து மகிழ்ந்தார்.</p>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img loading="lazy" decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/01/137361112_1791500311016297_4064151381348181000_o.jpg" alt="" class="wp-image-3887" width="534" height="531" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/01/137361112_1791500311016297_4064151381348181000_o.jpg 988w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/01/137361112_1791500311016297_4064151381348181000_o-300x298.jpg 300w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/01/137361112_1791500311016297_4064151381348181000_o-150x150.jpg 150w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/01/137361112_1791500311016297_4064151381348181000_o-768x764.jpg 768w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/01/137361112_1791500311016297_4064151381348181000_o-75x75.jpg 75w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/01/137361112_1791500311016297_4064151381348181000_o-750x746.jpg 750w" sizes="auto, (max-width: 534px) 100vw, 534px" /></figure></div>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img loading="lazy" decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/01/139180894_1790829117750083_7228426289723705011_n.jpg" alt="" class="wp-image-3888" width="536" height="357" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/01/139180894_1790829117750083_7228426289723705011_n.jpg 960w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/01/139180894_1790829117750083_7228426289723705011_n-300x201.jpg 300w" sizes="auto, (max-width: 536px) 100vw, 536px" /></figure></div>



<p>வாடிவாசலில் இருந்து காளைகள் சீறி வருவதைப் பார்த்த அவர், அருகிலிருந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியிடம் சில தகவல்களை அவ்வப்போது கேட்டுத் தெரிந்து கொண்டிருந்தார்.</p>



<p>ஏற்கனவே, ஜல்லிக்கட்டு போட்டியை காண வருகை தந்திருந்த திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைவர் ராகுல் காந்தி அமர்ந்திருந்த பகுதிக்கு வருகை புரிந்து வணக்கம் தெரிவித்து அருகில் அமர்ந்து உரையாடினார். ஜல்லிக்கட்டு விளையாட்டு போட்டி குறித்து இருவரும் கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர்.</p>



<p>ஜல்லிக்கட்டுப் போட்டியை கண்டு ரசித்த ராகுல் காந்தி, அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் பேசினார்.</p>



<p>இந்நிகழ்வில் தலைவர் ராகுல் காந்தியுடன் அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் திரு கே.சி.வேணுகோபால், புதுச்சேரி மாநில முதலமைச்சர் திரு வி.நாராயணசாமி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கே.எஸ்.அழகிரி, சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் திரு கே.ஆர்.ராமசாமி, மக்களவை காங்கிரஸ் உறுப்பினர் திரு பி.மாணிக்கம் தாகூர், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் திரு சஞ்சய் தத் ஆகியோர் உடன் வருகை புரிந்து ஜல்லிக்கட்டு போட்டியை கண்டு களித்தனர்.</p>



<p>முன்னதாக, மதுரை விமான நிலையத்தில் காங்கிரஸ் தலைவர்களும் தொண்டர்களும் ஏராளமானோர் திரண்டு ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-tamilnadu/rousing-reception-to-rahul-gandhi-at-madurai/">தலைவர் ராகுலின் தமிழ் வணக்கம்! விழாக்கோலம் பூண்ட மதுரை! ஜல்லிக்கட்டு வரலாறு படைத்தது!</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://desiyamurasu.com/news-tamilnadu/rousing-reception-to-rahul-gandhi-at-madurai/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
	</channel>
</rss>
