<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Priyanka Gandhi Archives - தேசிய முரசு - Desiya Murasu</title>
	<atom:link href="https://desiyamurasu.com/tag/priyanka-gandhi/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://desiyamurasu.com/tag/priyanka-gandhi/</link>
	<description>DesiyaMurasu – Daily Opinions &#38; Analysis on Latest News  &#124; Tamil News</description>
	<lastBuildDate>Fri, 23 Apr 2021 16:40:52 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.1</generator>

<image>
	<url>https://desiyamurasu.com/wp-content/uploads/2020/07/cropped-FAV-copy-1-32x32.png</url>
	<title>Priyanka Gandhi Archives - தேசிய முரசு - Desiya Murasu</title>
	<link>https://desiyamurasu.com/tag/priyanka-gandhi/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>மன்மோகன் சிங் ஆலோசனையை ஏற்று செயல்படுங்கள் : பிரதமர் மோடிக்கு பிரியங்கா காந்தி வேண்டுகோள்</title>
		<link>https://desiyamurasu.com/news-india/congresss-priyanka-gandhi-says-when-manmohan-singh-gives-advice-during-crises-listen/</link>
					<comments>https://desiyamurasu.com/news-india/congresss-priyanka-gandhi-says-when-manmohan-singh-gives-advice-during-crises-listen/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Admin]]></dc:creator>
		<pubDate>Fri, 23 Apr 2021 16:40:50 +0000</pubDate>
				<category><![CDATA[தேசிய அரசியல்]]></category>
		<category><![CDATA[Corona Vaccine]]></category>
		<category><![CDATA[Dr Manmohan Singh]]></category>
		<category><![CDATA[Priyanka Gandhi]]></category>
		<guid isPermaLink="false">https://desiyamurasu.com/?p=4358</guid>

					<description><![CDATA[<p>&#8221;முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆலோசனை கூறும்போது, அதனை ஏற்று செயல்படுங்கள்&#8221; என பிரதமர் மோடியை காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், &#8221; கொரோனா போன்ற முன் எப்போதும் இல்லாத சுகாதாரப் பிரச்சினையை நாடு எதிர்கொள்ளும் போது, எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையைப் பெற மோடி அரசு தவறிவிட்டது. இந்த பிரச்சினையை எதிர்கொள்ள ஒட்டுமொத்த நாடே ஓரணியில் நின்றபோது, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறிய [&#8230;]</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/congresss-priyanka-gandhi-says-when-manmohan-singh-gives-advice-during-crises-listen/">மன்மோகன் சிங் ஆலோசனையை ஏற்று செயல்படுங்கள் : பிரதமர் மோடிக்கு பிரியங்கா காந்தி வேண்டுகோள்</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>&#8221;முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆலோசனை கூறும்போது, அதனை ஏற்று செயல்படுங்கள்&#8221; என பிரதமர் மோடியை காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி கேட்டுக் கொண்டுள்ளார்.</p>



<p>இது குறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், &#8221; கொரோனா போன்ற முன் எப்போதும் இல்லாத சுகாதாரப் பிரச்சினையை நாடு எதிர்கொள்ளும் போது, எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையைப் பெற மோடி அரசு தவறிவிட்டது.</p>



<p>இந்த பிரச்சினையை எதிர்கொள்ள ஒட்டுமொத்த நாடே ஓரணியில் நின்றபோது, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறிய ஆலோசனைகளை பிரதமர் மோடி ஏளனம் செய்தார்.</p>



<p>இனிமேலாவது மக்கள் பிரச்சினையில் சோதித்துப் பார்ப்பதை நிறுத்திவிட்டு, மக்களோடும் எதிர்கட்சிகளோடும் அவர் இணைந்து செயல்படவேண்டும். பாகிஸ்தானின் உளவுத்துறையினருடன் கூட மத்திய பா.ஜ.க. அரசு பேச தயாராக இருக்கிறது. ஆனால், எதிர்க்கட்சிகளுடன் பேச அவர்கள் தயாராக இல்லை.</p>



<p>இன்றைக்கு எந்த எதிர்க்கட்சித் தலைவரும் நேர்மறையான, வலுவான ஆலோசனை தரமாட்டார் என்பதை நான் நம்பவில்லை. நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் என்று அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருமித்த குரலில் கூறுகின்றன.</p>



<p>மன்மோகன் சிங் 10 ஆண்டுகள் பிரதமராக இருந்தார். அவர் எந்த அளவுக்கு கண்ணியமான மனிதராக இருந்தார் என்பதை நாம் அறிவோம். அப்போது ஆலோசனைகளைக் கேட்டுப் பெற்ற அவர், அதே கண்ணியத்துடன் அவற்றைக் கருத்தில் கொண்டு செயல்பட்டார்.</p>



<p>முன்னாள் பிரதமர் எழுதும் கடிதத்துக்கு அமைச்சர் மூலம் பதில் அளிக்கச் செய்து, சிறுபிள்ளைத் தனமாக நடந்து கொண்டு நேரத்தை மத்திய அரசு வீணடிக்கிறது.</p>



<p>பிரதமருக்கு மன்மோகன் சிங் எழுதிய கடிதத்தில், &#8221;கொரோனா தடுப்பூசி போடுவதில் ஏற்படும் பதற்றத்தைத் தடுத்து, மக்கள் தொகைக்கு ஏற்ப தடுப்பூசிகளைப் போடுங்கள்&#8221; என்று குறிப்பிட்டிருந்தார்.</p>



<p>இந்த விஷயத்தில் முழு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில், சில ஆலோசனைகளையும் மன்மோகன் சிங் தெரிவித்திருந்தார். இதற்குப் பதில் அளித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன், &#8221;அவர் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியினர் மன்மோகன் சிங்கின் ஆலோசனை கேட்டாலே அது வரலாறு&#8221; என்று குறிப்பிட்டிருந்தார்.</p>



<p>இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை பரவுவது குறித்துத் தான், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அந்த கடிதத்தை எழுதியிருந்தார். கடந்த ஆண்டு கொரோனா பரவலின் போது ஏற்பட்ட பாதிப்பை விட தற்போது அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் கிட்டத்தட்ட 3 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.</p>



<p>2021 ஜனவரி முதல் மார்ச் வரை 6 கோடி கொரோனா தடுப்பூசி மருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது, மக்களுக்கு இழைத்த துரோகம். அதே காலகட்டத்தில், இந்திய மக்களுக்கு 3 முதல் 4 கோடி வரை தடுப்பூசிகள் மட்டுமே போடப்பட்டன.</p>



<p>இந்தியர்களுக்கு மத்திய அரசு ஏன் முன்னுரிமை அளிக்கவில்லை? இந்த நாட்டைப் பயன்படுத்தி பிரதமர் மோடி சுயவிளம்பரம் தேடுவது ஏன்? 22 கோடி மக்கள் தொகை கொண்ட உத்தரப்பிரதேசத்தில், ஒரு கோடி தடுப்பூசிகள் மட்டுமே அனுப்பப்பட்டுள்ளன. இன்றைக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறைக்கு மாநில அரசுகளே காரணம் என, பிரதமர் மோடியும் மத்திய அமைச்சர்களும் குற்றம் சாட்டிக் கொண்டிருக்கிறார்கள். மருந்துகள் தேவை மற்றும் வினியோக விஷயத்தில், அவர்கள் மனித உயிர்களுடன் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். தொடர்ந்து அரசியல் பேரணியை நடத்திக் கொண்டிருக்கும் ஒரு பிரதமரிடம் ஒருவர் எதை எதிர்பார்க்க முடியும். கொரோனா பரவலைத் தடுப்பதில் ஆர்வம் காட்டுவதை விட, மேற்கு வங்க தேர்தல் பிரச்சாரத்தில் தான் ஆளும் பா.ஜ.கவினர் ஆர்வம் காட்டினார்கள்.</p>



<p>இன்றைக்கும் அவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் கதறுகிறார்கள். உதவி கேட்டு அழுகிறார்கள். ஆக்ஸிஜன், படுக்கைகள், மருந்துகள் கேட்கிறார்கள். நீங்களோ, பெரிய பேரணிகளை நடத்திக் கொண்டு சிரித்துக் கொண்டிருக்கிறீர்கள். எப்படி உங்களால் முடிகிறது?</p>



<p>இந்த விஷயத்தில் நான் அரசியல் செய்வதாக பா.ஜ.க. கூறுகிறது. இந்த விஷயத்தை நாங்கள் அரசியலாக்க விரும்பவில்லை. கொரோனாவின் இரண்டாவது அலையோடு நாடு போராடிக் கொண்டிருக்கிறது. ஆனால், பிரதமரோ மக்கள் மீது அக்கறை இல்லாமல் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். இதைச் சுட்டிக்காட்டினால் அரசியலா?&#8221; என்றார்.</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/congresss-priyanka-gandhi-says-when-manmohan-singh-gives-advice-during-crises-listen/">மன்மோகன் சிங் ஆலோசனையை ஏற்று செயல்படுங்கள் : பிரதமர் மோடிக்கு பிரியங்கா காந்தி வேண்டுகோள்</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://desiyamurasu.com/news-india/congresss-priyanka-gandhi-says-when-manmohan-singh-gives-advice-during-crises-listen/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>வெளிநாட்டுக்குச் செல்ல நேரம் இருக்கு, விவசாயிகளை பார்க்க நேரம் இல்லையா?: மோடிக்கு பிரியங்கா கேள்வி</title>
		<link>https://desiyamurasu.com/news-india/farm-laws-pm-modi-had-time-to-visit-china-pakistan-but-not-farmers-says-priyanka-gandhi-in-up/</link>
					<comments>https://desiyamurasu.com/news-india/farm-laws-pm-modi-had-time-to-visit-china-pakistan-but-not-farmers-says-priyanka-gandhi-in-up/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Admin]]></dc:creator>
		<pubDate>Sat, 13 Feb 2021 07:43:32 +0000</pubDate>
				<category><![CDATA[தேசிய அரசியல்]]></category>
		<category><![CDATA[Narendra Modi]]></category>
		<category><![CDATA[Priyanka Gandhi]]></category>
		<guid isPermaLink="false">https://desiyamurasu.com/?p=4101</guid>

					<description><![CDATA[<p>வெளிநாடுகளுக்குச் செல்ல நேரம் இருக்கும் பிரதமர் மோடிக்கு, விவசாயிகளைச் சந்திக்க நேரமில்லையா? என காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். உத்தரப்பிரதேசத்தில் உள்ள 27 மாவட்டங்களில் &#8216;ஜெய் ஜவான், ஜெய் கிஸான்&#8217; என்ற பிரச்சாரத்தைக் காங்கிரஸ் கட்சி நடத்துகிறது. இதன்படி, ஷஹரான்பூரில் விவசாயச் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் நடைபெற்றது. இதனையொட்டி நடந்த விவசாயிகள் மாநாட்டில் பிரியங்கா காந்தி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் செல்ல பிரதமருக்கு நேரமிருக்கிறது. ஆனால், அவரது [&#8230;]</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/farm-laws-pm-modi-had-time-to-visit-china-pakistan-but-not-farmers-says-priyanka-gandhi-in-up/">வெளிநாட்டுக்குச் செல்ல நேரம் இருக்கு, விவசாயிகளை பார்க்க நேரம் இல்லையா?: மோடிக்கு பிரியங்கா கேள்வி</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>வெளிநாடுகளுக்குச் செல்ல நேரம் இருக்கும் பிரதமர் மோடிக்கு, விவசாயிகளைச் சந்திக்க நேரமில்லையா? என காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.</p>



<p>உத்தரப்பிரதேசத்தில் உள்ள 27 மாவட்டங்களில் &#8216;ஜெய் ஜவான், ஜெய் கிஸான்&#8217; என்ற பிரச்சாரத்தைக் காங்கிரஸ் கட்சி நடத்துகிறது. இதன்படி, ஷஹரான்பூரில் விவசாயச் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் நடைபெற்றது. இதனையொட்டி நடந்த விவசாயிகள் மாநாட்டில் பிரியங்கா காந்தி கலந்து கொண்டார்.</p>



<p>அப்போது அவர் பேசியதாவது:</p>



<p>பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் செல்ல பிரதமருக்கு நேரமிருக்கிறது. ஆனால், அவரது சொந்தத் தொகுதியில் போராடும் விவசாயிகளைச் சந்திக்க அவருக்கு நேரமில்லை. இந்த விவசாயிகள் தான் வாரணாசி தொகுதியில் அவருக்கு வாக்களித்தவர்கள். புதிய விவசாயச் சட்டங்கள் தொடர்பாக விவசாயிகளின் நிலையை மத்திய அரசு புரிந்து கொள்ளவில்லை.</p>



<p>விவசாயிகளைத் தேச விரோதிகள் என பாரதிய ஜனதா கட்சியினர் கூறுகின்றனர். ஆனால், அரசாங்கமே தேசவிரோதமாக இருக்கிறது. போராடும் விவசாயிகளைத் தீவிரவாதிகள் மற்றும் பயங்கரவாதிகள் என்று அழைக்கிறார்கள். அவர்கள் விவசாயிகளைச் சந்தேகிக்கிறார்கள். ஆனால், விவசாயிகளின் இதயம் இந்த நாட்டுக்கு எதிராகச் செயல்பட்டதில்லை. நிலத்தில் உழைப்பதிலேயே விவசாயிகளின் இதயம் ஒன்றிப் போயிருக்கும். இரவு, பகலாக நிலத்தில் வியர்வை சிந்த உழைக்கும் விவசாயிகள், இந்த நாட்டை எப்படிக் காட்டிக் கொடுப்பார்கள்?</p>



<p>மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 விவசாயச் சட்டங்களும் பேய்கள். மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், 3 விவசாயச் சட்டங்களையும் ரத்து செய்வோம். எனினும், அதுவரை இந்த 3 சட்டங்களையும் ரத்து செய்யக் கோரி காங்கிரஸ் கட்சி தொடர்ந்து போராடும். எதிர்ப்புகளை வளர்ப்பவர்கள் என்று நாடாளுமன்றத்தில் பேசும்போது ஒரு வார்த்தையைப் பிரதமர் மோடி குறிப்பிட்டார். எதிர்ப்புகளை வளர்ப்பவர்கள் என்று கூறி, நாடாளுமன்றத்திலேயே விவசாயிகளைப் பிரதமர் மோடி அவமதிக்கிறார். வழக்குரைஞர்களோ, மாணவர்களோ அல்லது தொழிலாளர்களோ, யார் போராடினாலும் அவர்கள் பின்னால் செல்பவர்கள் ஆர்ப்பாட்டங்களுக்கு உணவளிக்கும் ஒட்டுண்ணிகள் போன்றவர்கள் என்று பிரதமர் மோடி பேசுகிறார். போராடுபவர்களை அவமதிப்பதைப் பிரதமர் மோடி வழக்கமாகக் கொண்டிருக்கிறார் என்றார்.</p>



<p>உத்தரப்பிரதேச காவல் துறையினர் விதித்த தடையுத்தரவையும் மீறி, விவசாயிகள் மாநாட்டில் பிரியங்கா காந்தி பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/farm-laws-pm-modi-had-time-to-visit-china-pakistan-but-not-farmers-says-priyanka-gandhi-in-up/">வெளிநாட்டுக்குச் செல்ல நேரம் இருக்கு, விவசாயிகளை பார்க்க நேரம் இல்லையா?: மோடிக்கு பிரியங்கா கேள்வி</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://desiyamurasu.com/news-india/farm-laws-pm-modi-had-time-to-visit-china-pakistan-but-not-farmers-says-priyanka-gandhi-in-up/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>குடியரசுத் தலைவரிடம் 2 கோடி கையெழுத்து மகஜரை சமர்ப்பித்தார் ராகுல் காந்தி: பிரியங்கா கைது</title>
		<link>https://desiyamurasu.com/news-india/rahul-gandhi-led-congress-march-to-meet-president-ram-nath-kovind-over-farm-laws-stopped/</link>
					<comments>https://desiyamurasu.com/news-india/rahul-gandhi-led-congress-march-to-meet-president-ram-nath-kovind-over-farm-laws-stopped/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[ஆ. கோபண்ணா]]></dc:creator>
		<pubDate>Thu, 24 Dec 2020 11:12:42 +0000</pubDate>
				<category><![CDATA[தேசிய அரசியல்]]></category>
		<category><![CDATA[Farm Bills]]></category>
		<category><![CDATA[Farmers]]></category>
		<category><![CDATA[Priyanka Gandhi]]></category>
		<category><![CDATA[rahul gandhi]]></category>
		<guid isPermaLink="false">https://desiyamurasu.com/?p=3753</guid>

					<description><![CDATA[<p>3 விவசாய சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தும் வகையில், குடியரசுத் தலைவர் ராம் நாத் கோயங்காவை சந்திக்க சென்ற பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களை டெல்லி காவல் துறையினர் கைது செய்தனர். 3 விவசாயச் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், இதற்கு எதிராகப் பெறப்பட்ட 2 கோடி கையெழுத்துகளைக் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்திடம் சமர்ப்பிக்க, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் குடியரசுத் தலைவர் மாளிகையை நோக்கி ஊர்வலமாகச் சென்றனர். [&#8230;]</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/rahul-gandhi-led-congress-march-to-meet-president-ram-nath-kovind-over-farm-laws-stopped/">குடியரசுத் தலைவரிடம் 2 கோடி கையெழுத்து மகஜரை சமர்ப்பித்தார் ராகுல் காந்தி: பிரியங்கா கைது</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>3 விவசாய சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தும் வகையில், குடியரசுத் தலைவர் ராம் நாத் கோயங்காவை சந்திக்க சென்ற பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களை டெல்லி காவல் துறையினர் கைது செய்தனர்.</p>



<p>3 விவசாயச் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், இதற்கு எதிராகப் பெறப்பட்ட 2 கோடி கையெழுத்துகளைக் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்திடம் சமர்ப்பிக்க, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் குடியரசுத் தலைவர் மாளிகையை நோக்கி ஊர்வலமாகச் சென்றனர். அப்போது அவர்களை டெல்லி காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். பின்னர், 2 கோடி கையெழுத்துடன் கூடிய மகஜரை சமர்ப்பிக்க ராகுல் காந்தி தலைமையிலான சிறு குழுவைக் காவல் துறை அனுமதித்தது. குடியரசுத் தலைவர் தலையிட்டு, விவசாயிகளுக்கு எதிரான 3 சட்டங்களையும் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மகஜரில் வலியுறுத்தப்பட்டிருந்தது.</p>



<p>இதற்கிடையே, இந்த ஊர்வலத்தில் பங்கேற்ற பிரியங்கா காந்தி உள்ளிட்ட தலைவர்களைக் கைது செய்த காவல் துறை, அவர்களைப் பேருந்துகளில் ஏற்றி அழைத்துச் சென்றது.</p>



<p>2 கோடி பேரிடம் கையெழுத்துப் பெற்ற மகஜரை சமர்ப்பித்துவிட்டு வெளியே வந்த ராகுல் காந்தி செய்தியாளர்களைச் சந்தித்தார்.</p>



<p>அப்போது அவர் கூறும்போது, &#8221;3 விவசாயச் சட்டங்களைத் திரும்பப் பெறும் வரை, போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகள் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப மாட்டார்கள் என்பதைப் பிரதமருக்குத் தெரிவிக்க விரும்புகின்றேன். விரைவில் நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தைக் கூட்டி, 3 சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப் பெறவேண்டும். விவசாயிகளுக்கும் விவசாயத் தொழிலாளர்களுக்கும் எதிர்க்கட்சிகள் ஆதவராக நிற்போம். இந்தியாவில் ஜனநாயகம் இல்லை. பிரதமரை எதிர்த்துப் பேசுபவர்கள் எல்லாம் தீவிரவாதிகளாகச் சித்தரிக்கப்படுகிறார்கள். பிரதமரை மட்டுமல்ல, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகாவத்தை விமர்சித்தால் கூட தீவிரவாதிகள் என்று முத்திரை குத்துகிறார்கள்&#8221; என்றார்.</p>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large"><img fetchpriority="high" decoding="async" width="1024" height="576" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/12/priyanka_detained-1024x576.jpeg" alt="" class="wp-image-3757" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/12/priyanka_detained-1024x576.jpeg 1024w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/12/priyanka_detained-300x169.jpeg 300w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/12/priyanka_detained-768x432.jpeg 768w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/12/priyanka_detained-750x422.jpeg 750w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/12/priyanka_detained-1140x641.jpeg 1140w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/12/priyanka_detained.jpeg 1200w" sizes="(max-width: 1024px) 100vw, 1024px" /></figure></div>



<p>கைது செய்யப்பட்டு பேருந்தில் ஏற்றப்பட்டபின் பிரியங்கா காந்தி செய்தியாளர்களிடம் கூறும்போது, &#8221;இந்த அரசுக்கு எதிரான கருத்துகள் தீவிரவாதமாகப் பார்க்கப்படுகிறது. விவசாயிகளுக்கு ஆதரவாக நமது குரலை ஒலிக்கவே இந்த ஊர்வலத்தை நடத்துகிறோம். மத்திய அரசு பாவிகளின் அரசாக இருக்கிறது. இந்த பாவிகள் தான் விவசாயிகளை வெவ்வேறு பெயர்களைச் சொல்லி அழைக்கின்றனர். போராடும் விவசாயிகள் தேச விரோத சக்திகள் என்று சொன்னால், அரசு ஒரு பாவி தான். நாங்கள் எதிர்க்கட்சிக்கு லாயக்கற்றவர்கள் என்றும் பலவீனப்பட்டுவிட்டதாகவும் கூறும் அவர்களே, கடந்த ஒரு மாதத்தில் லட்சக்கணக்கான விவசாயிகளை எல்லையில் திரட்டும் அளவுக்கு சக்தி வாய்ந்தவர்கள் என்றும் நம்மைப் பார்த்துக் கூறுகிறார்கள். அவர்கள் யார் என்பதை முதலில் முடிவு செய்துகொள்ள வேண்டும்&#8221; என்றார்.</p>



<p>நாடாளுமன்றத்தில் 3 விவசாயச் சட்டங்களையும் மோடியின் அரசு நிறைவேற்றிய பின், அந்த சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டாம் என, குடியரசுத் தலைவரை எதிர்க்கட்சிகள் கேட்டுக் கொண்டன. மாநிலங்களவையில் ஜனநாயகத்துக்கு விரோதமாக இந்த 3 சட்டங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குறிப்பிட்டன. எனினும், 3 விவசாயச் சட்டங்களுக்கும் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார்.</p>



<p>இந்த நிலையில் தான், தங்களுக்கு எதிரான 3 விவசாயச் சட்டங்களையும் எதிர்த்து டெல்லி எல்லையில் விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கின்றனர். தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும், கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியும் பயந்து ஓடாமல் நெஞ்சை நிமிர்த்தி போராடிக் கொண்டிருக்கிறார்கள்.</p>



<p>பேச்சுவார்த்தை நடத்த வருமாறு விவசாயச் சங்கப் பிரதிநிதிகளை மத்திய அரசு அழைத்துள்ளது. எனினும், திறந்த மனதுடன், தங்கள் கோரிக்கையின் அடிப்படையில் நடத்தும் பேச்சுவார்த்தையில் பங்கேற்கத் தயார் என விவசாயச் சங்கங்கள் அறிவித்துள்ளன.</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/rahul-gandhi-led-congress-march-to-meet-president-ram-nath-kovind-over-farm-laws-stopped/">குடியரசுத் தலைவரிடம் 2 கோடி கையெழுத்து மகஜரை சமர்ப்பித்தார் ராகுல் காந்தி: பிரியங்கா கைது</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://desiyamurasu.com/news-india/rahul-gandhi-led-congress-march-to-meet-president-ram-nath-kovind-over-farm-laws-stopped/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>விவசாயிகள் குரல்வளையை நெறிப்பதா? : மோடி அரசுக்குப் பிரியங்கா காந்தி கண்டனம்</title>
		<link>https://desiyamurasu.com/news-india/pm-should-also-implement-one-nation-one-treatment-priyanka-on-farmers-protest/</link>
					<comments>https://desiyamurasu.com/news-india/pm-should-also-implement-one-nation-one-treatment-priyanka-on-farmers-protest/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Admin]]></dc:creator>
		<pubDate>Tue, 01 Dec 2020 12:09:59 +0000</pubDate>
				<category><![CDATA[தேசிய அரசியல்]]></category>
		<category><![CDATA[Farmers Protests]]></category>
		<category><![CDATA[PM Modi]]></category>
		<category><![CDATA[Priyanka Gandhi]]></category>
		<guid isPermaLink="false">https://desiyamurasu.com/?p=3410</guid>

					<description><![CDATA[<p>ஒரே நாடு, ஓரே தேர்தல் என்று கூறும் பிரதமர் மோடி, மக்களை ஒரே மாதிரியாக நடத்தவும் வேண்டும் என்று கூறியுள்ளார். &#8216;டெல்லி சலோ&#8217; போராட்டத்தில் பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 அவசரச் சட்டங்களும் விவசாயிகளுக்கு எதிரானது என்றும், கார்பரேட் மற்றும் பெரும் தொழிலதிபர்களுக்குச் சாதகமானது என்றும் தங்கள் அச்சத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். 3 விவசாயச் சட்டங்களையும் எதிர்த்துக் கடந்த சில மாதங்களாகவே விவசாயிகள் போராடி [&#8230;]</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/pm-should-also-implement-one-nation-one-treatment-priyanka-on-farmers-protest/">விவசாயிகள் குரல்வளையை நெறிப்பதா? : மோடி அரசுக்குப் பிரியங்கா காந்தி கண்டனம்</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>ஒரே நாடு, ஓரே தேர்தல் என்று கூறும் பிரதமர் மோடி, மக்களை ஒரே மாதிரியாக நடத்தவும் வேண்டும் என்று கூறியுள்ளார்.</p>



<p>&#8216;டெல்லி சலோ&#8217; போராட்டத்தில் பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 அவசரச் சட்டங்களும் விவசாயிகளுக்கு எதிரானது என்றும், கார்பரேட் மற்றும் பெரும் தொழிலதிபர்களுக்குச் சாதகமானது என்றும் தங்கள் அச்சத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.</p>



<p>3 விவசாயச் சட்டங்களையும் எதிர்த்துக் கடந்த சில மாதங்களாகவே விவசாயிகள் போராடி வருகின்றனர். மண்டிகளை நீக்கிவிட்டு விவசாயிகள் நேரடியாக விளைபொருட்களை விற்கலாம் என்றும் சட்டத்தில் சொல்லப்படும் பிரிவு, கார்பரேட்களை களம் இறக்கும் செயல் என்று விவசாயிகள் அஞ்சுகின்றனர்.</p>



<p>கார்பரேட்களின் கட்டுப்பாட்டுக்குள் விவசாயிகள் கொண்டு சேர்க்கும் நடவடிக்கை என்றும் குற்றம் சாட்டுகின்றனர். அதோடு, விளைபொருட்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலையைப் பற்றி சட்டத்தில் குறிப்பிட வேண்டும் என்றும் விவசாயிகள் கோரி வருகின்றனர்.</p>



<p>இந்நிலையில் கடந்த 3 தினங்களாக டெல்லியில் உள்ள விளையாட்டு மைதானங்களில் அடைக்கப்பட்டுள்ள விவசாயிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகியிருக்கின்றனர்.</p>



<p>இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் உத்தரப்பிரதேச பொதுச் செயலாளர் பொறுப்பு வகிக்கும் பிரியங்கா காந்தி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும், சாலைகளில் குழியைத் தோண்டி தடுத்தும் விவசாயிகளின் குரல்வளையை நெரிக்கிறார்கள்.</p>



<p>ஆனால், குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டப்பூர்வமாக்குவோம் என்று சொல்ல அரசு தயாராக இல்லை. ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பதில் ஆர்வம் காட்டும் பிரதமர், ஒரே நாடு, மக்களை ஒரே மாதிரியாக நடத்தவும் வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/pm-should-also-implement-one-nation-one-treatment-priyanka-on-farmers-protest/">விவசாயிகள் குரல்வளையை நெறிப்பதா? : மோடி அரசுக்குப் பிரியங்கா காந்தி கண்டனம்</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://desiyamurasu.com/news-india/pm-should-also-implement-one-nation-one-treatment-priyanka-on-farmers-protest/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>&#8221;உங்கள் மகளின் வலியையும் துன்பத்தையும் உணர்ந்தேன்&#8221;: ஹத்ராஸில் பெற்றோருக்குப் பிரியங்கா ஆறுதல்</title>
		<link>https://desiyamurasu.com/news-india/priyanka-consoles-hathras-gang-rape-victims-mother-says-i-felt-her-pain-and-suffering/</link>
					<comments>https://desiyamurasu.com/news-india/priyanka-consoles-hathras-gang-rape-victims-mother-says-i-felt-her-pain-and-suffering/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[ஆ. கோபண்ணா]]></dc:creator>
		<pubDate>Sun, 04 Oct 2020 10:19:50 +0000</pubDate>
				<category><![CDATA[தேசிய அரசியல்]]></category>
		<category><![CDATA[congress]]></category>
		<category><![CDATA[Hathras rape]]></category>
		<category><![CDATA[Priyanka Gandhi]]></category>
		<category><![CDATA[rahul gandhi]]></category>
		<guid isPermaLink="false">https://desiyamurasu.com/?p=2549</guid>

					<description><![CDATA[<p>உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் கிராமத்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, சித்திரவதை செய்து கொல்லப்பட்ட தலித் பெண்ணின் தாயாரை சந்தித்து ஆறுதல் கூற பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி மற்றும் 3 காங்கிரஸ் தலைவர்கள் புதுடெல்லியிலிருந்து புறப்பட்டனர். அவர்களை உத்தரப்பிரதேச எல்லையான நொய்டாவின் டிஎன்டி மேம்பாலத்தில் நின்றுகொண்டிருந்த உத்தரப்பிரதேசக் காவல் துறையினர், சோதனை செய்து அனுமதித்தனர். ஹத்ராஸ் கிராமத்துக்குச் சென்ற பிரியங்கா காந்தியும், ராகுல் காந்தியும் பெண்ணின் தாயாரைச் சந்தித்து ஆறுதல் கூறினர். அப்போது, கதறி அழுத [&#8230;]</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/priyanka-consoles-hathras-gang-rape-victims-mother-says-i-felt-her-pain-and-suffering/">&#8221;உங்கள் மகளின் வலியையும் துன்பத்தையும் உணர்ந்தேன்&#8221;: ஹத்ராஸில் பெற்றோருக்குப் பிரியங்கா ஆறுதல்</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் கிராமத்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, சித்திரவதை செய்து கொல்லப்பட்ட தலித் பெண்ணின் தாயாரை சந்தித்து ஆறுதல் கூற பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி மற்றும் 3 காங்கிரஸ் தலைவர்கள் புதுடெல்லியிலிருந்து புறப்பட்டனர்.</p>



<p>அவர்களை உத்தரப்பிரதேச எல்லையான நொய்டாவின் டிஎன்டி மேம்பாலத்தில் நின்றுகொண்டிருந்த உத்தரப்பிரதேசக் காவல் துறையினர், சோதனை செய்து அனுமதித்தனர்.</p>



<p>ஹத்ராஸ் கிராமத்துக்குச் சென்ற பிரியங்கா காந்தியும், ராகுல் காந்தியும் பெண்ணின் தாயாரைச் சந்தித்து ஆறுதல் கூறினர்.</p>



<p>அப்போது, கதறி அழுத பெண்ணின் தாயாரை, ஆரத்தழுவி ஆறுதல் கூறினார் பிரியங்கா காந்தி.</p>



<p>&#8221;உங்கள் மகளின் வலியையும் துன்பத்தையும் நான் உணர்கின்றேன்&#8221; என்று தெரிவித்த பிரியங்கா காந்தி, &#8221;உங்கள் மகளுக்கு நீதி கிடைக்கக் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து பாடுபடும்&#8221; என்று கூறினார்.</p>



<p>ஏற்கனவே ஹத்ராஸ் செல்ல முயன்ற ராகுல் காந்தியைத் தடுத்து நிறுத்திய காவல் துறையினர், அவரைப் பிடித்துக் கீழே தள்ளினர். இதனால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உத்தரப் பிரதேச காவல் துறையை எதிர்க்கட்சிகள் கண்டித்தன.</p>



<p>மேலும் காங்கிரஸ் கட்சியினரும் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், ஹத்ராஸ் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெற்றோரைச் சந்திக்க 5 பேருக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும் என்று உத்தரப் பிரதேச காவல் துறை அறிவித்திருந்தது.&nbsp;</p>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/priyanka_rahul.jpg" alt="" class="wp-image-2553" width="570" height="853" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/priyanka_rahul.jpg 468w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/priyanka_rahul-200x300.jpg 200w" sizes="(max-width: 570px) 100vw, 570px" /></figure></div>



<h4 class="wp-block-heading">ஹத்ராஸ் கூட்டுப் பாலியல் வன்கொடுமை: முதலமைச்சர் யோகி மீது பிரியங்கா கடும் தாக்கு</h4>



<p>ஹத்ராஸ் கிராமத்தில் தலித் பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டதையடுத்து, உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக அம்மாநிலத்தில் பல தரப்பினரும் கொதித்து எழுந்துள்ளனர்.</p>



<p>இந்த கொடுமையை எதிர்த்து, கடந்த புதன்கிழமை நாடு முழுவதும் போராட்டம் நடத்தி, முதலமைச்சர் பதவியிலிருந்து விலகுமாறு யோகி ஆதித்யநாத்துக்கு காங்கிரஸ் கட்சி அழுத்தம் கொடுத்தது. காங்கிரஸ் கட்சியைத் தொடர்ந்து, இடதுசாரிகளும் மற்ற எதிர்க்கட்சிகளும், யோகியைப் பதவி விலகக் கோரியுள்ளனர்.</p>



<p>கூட்டுப் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டவர்கள் முதலமைச்சர் சார்ந்த சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால், யோகி அரசு மென்மையான போக்கைக் கடைப்பிடிப்பதாகக் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.</p>



<p>யோகியை நேரடியாகக் கடுமையாகத் தாக்கிப் பேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, &#8221;அந்தப் பெண்ணின் உடலை எடுத்துச் சென்று எரிக்க, காவல் துறைக்கு உத்தரவிட்டது யார்? சம்பவம் நடந்து 14 நாட்களாக நீங்கள் ஏன் உறங்கிக் கொண்டிருந்தீர்கள்? எவ்வளவு நாட்களுக்கு இந்த கொடுமை தொடரும்?. நீங்கள் எந்த மாதிரியான ஒரு முதலமைச்சர்&#8221; என சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார்.</p>



<p>இந்த சம்பவத்தில் நீதி கிடைக்கும் வரை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து போராடும் என்று தெரிவித்த பிரியங்கா காந்தி, &#8221;கூட்டுப் பாலியல் வன்கொடுமைச் சம்பவத்தில் நீதி கேட்போருக்கு எதிராக உத்தரப் பிரதேச அரசு செயல்படுவதாகவும்&#8221; மேலும் குற்றம் சாட்டினார்.</p>



<p>இதற்கிடையே, யோகியைப் பதவி விலகுமாறு உத்தரப் பிரதேச காங்கிரஸ் தலைவர் அஜய் குமார் லல்லு கோரிக்கை விடுத்துள்ளார். &#8221;இனியும் ஆட்சியில் தொடர பாஜக தலைமையிலான அரசுக்குத் தார்மீக உரிமை இல்லை என்று கூறிய அவர், இந்த சம்பவத்தில் பிரதமரும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் மவுனம் காப்பது ஏன்?&#8221; என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.</p>



<p>யோகியைப் பதவி விலகக் கோரி ஊர்வலம் செல்ல முயன்ற காங்கிரஸ் தொண்டர்கள் உத்தரப்பிரேத காவல் துறையினரால் தாக்கப்பட்டதாகக் கூறிய லல்லு, காங்கிரஸ் கட்சியினர் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட சமூக செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டதாகத் தெரிவித்தார்.</p>



<p>&#8216;தலித் பெண் விவகாரத்தில் நீதி கிடைக்கும் வரை, தொடர்ந்து போராடுவோம்&#8217; என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் அனைத்து அமைப்புகளும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், மாநிலமே ஸ்தம்பித்துள்ளது.</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/priyanka-consoles-hathras-gang-rape-victims-mother-says-i-felt-her-pain-and-suffering/">&#8221;உங்கள் மகளின் வலியையும் துன்பத்தையும் உணர்ந்தேன்&#8221;: ஹத்ராஸில் பெற்றோருக்குப் பிரியங்கா ஆறுதல்</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://desiyamurasu.com/news-india/priyanka-consoles-hathras-gang-rape-victims-mother-says-i-felt-her-pain-and-suffering/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>பா.ஜ.க. அரசின் அடக்குமுறையை துணிவுடன் எதிர்த்த ராகுல் காந்தி!</title>
		<link>https://desiyamurasu.com/news-india/how-rahul-gandhi-was-manhandled-by-up-police/</link>
					<comments>https://desiyamurasu.com/news-india/how-rahul-gandhi-was-manhandled-by-up-police/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[ஆ. கோபண்ணா]]></dc:creator>
		<pubDate>Fri, 02 Oct 2020 13:05:04 +0000</pubDate>
				<category><![CDATA[தேசிய அரசியல்]]></category>
		<category><![CDATA[Hathras]]></category>
		<category><![CDATA[Priyanka Gandhi]]></category>
		<category><![CDATA[rahul gandhi]]></category>
		<category><![CDATA[UP Police]]></category>
		<guid isPermaLink="false">https://desiyamurasu.com/?p=2535</guid>

					<description><![CDATA[<p>உத்திரபிரதேச மாநிலம், ஹத்ராஸ் மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது பட்டியலினத்தைச் சேர்ந்த இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு,&#160; கொல்லப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதற்காக முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் நேற்று சென்றனர். ஆனால், அவர்களது வாகனத்தை யமுனா விரைவுச் சாலையில் போலீஸார் தடுத்து நிறுத்தினார்கள். அதனால் இருவரும் கீழே இறங்கி நடந்து சென்றார்கள். ஒரு கட்டத்தில் இதற்கு மேல் நீங்கள் செல்லக்கூடாது என்று ராகுல்காந்தியை தடுத்து காவல்துறையினர் பலாத்காரமாக பிடித்து கீழே [&#8230;]</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/how-rahul-gandhi-was-manhandled-by-up-police/">பா.ஜ.க. அரசின் அடக்குமுறையை துணிவுடன் எதிர்த்த ராகுல் காந்தி!</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>உத்திரபிரதேச மாநிலம், ஹத்ராஸ் மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது பட்டியலினத்தைச் சேர்ந்த இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு,&nbsp; கொல்லப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதற்காக முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் நேற்று சென்றனர். ஆனால், அவர்களது வாகனத்தை யமுனா விரைவுச் சாலையில் போலீஸார் தடுத்து நிறுத்தினார்கள். அதனால் இருவரும் கீழே இறங்கி நடந்து சென்றார்கள். ஒரு கட்டத்தில் இதற்கு மேல் நீங்கள் செல்லக்கூடாது என்று ராகுல்காந்தியை தடுத்து காவல்துறையினர் பலாத்காரமாக பிடித்து கீழே தள்ளிய காட்சிகள் நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆக்கியுள்ளது.&nbsp; அதனுடைய புகைப்படக் காட்சிகள் கீழே வெளியிடப்பட்டுள்ளன.</p>



<p>உத்திரபிரதேச மாநிலத்தில் சட்டத்தின் ஆட்சி நடைபெறவில்லை. சர்வாதிகார முறையில் தலித்கள், சிறுபான்மையினருக்கு எதிராக அடக்குமுறைகளை ஏவி விடுகிற, காட்டாட்சி தான் நடைபெறுகிறது என்பதற்கு தலைவர் ராகுல்காந்தி தாக்கப்படுகிற காட்சிகளே சான்றுகளாகவுள்ளன. சர்வாதிகார ஆட்சி நடத்துகிற நரேந்திரமோடியை, பேராண்மையுடன் எதிர்கொள்கிற துணிவு மிக்க தலைவராக ராகுல்காந்தி செயல்பட்டதை நாட்டு மக்கள் பாராட்டுகிறார்கள்; போற்றுகிறார்கள்.</p>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/2.jpg" alt="" class="wp-image-2538" width="537" height="357" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/2.jpg 750w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/2-300x200.jpg 300w" sizes="(max-width: 537px) 100vw, 537px" /></figure></div>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img loading="lazy" decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/3.jpg" alt="" class="wp-image-2539" width="537" height="357" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/3.jpg 700w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/3-300x200.jpg 300w" sizes="auto, (max-width: 537px) 100vw, 537px" /></figure></div>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img loading="lazy" decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/4.jpg" alt="" class="wp-image-2540" width="536" height="356" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/4.jpg 700w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/4-300x200.jpg 300w" sizes="auto, (max-width: 536px) 100vw, 536px" /></figure></div>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img loading="lazy" decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/5.jpg" alt="" class="wp-image-2541" width="537" height="357" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/5.jpg 700w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/5-300x200.jpg 300w" sizes="auto, (max-width: 537px) 100vw, 537px" /></figure></div>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img loading="lazy" decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/6.jpg" alt="" class="wp-image-2542" width="538" height="358" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/6.jpg 700w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/6-300x200.jpg 300w" sizes="auto, (max-width: 538px) 100vw, 538px" /></figure></div>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img loading="lazy" decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/7.jpg" alt="" class="wp-image-2543" width="546" height="363" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/7.jpg 700w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/7-300x200.jpg 300w" sizes="auto, (max-width: 546px) 100vw, 546px" /></figure></div>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/how-rahul-gandhi-was-manhandled-by-up-police/">பா.ஜ.க. அரசின் அடக்குமுறையை துணிவுடன் எதிர்த்த ராகுல் காந்தி!</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://desiyamurasu.com/news-india/how-rahul-gandhi-was-manhandled-by-up-police/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
	</channel>
</rss>
