<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Politics Archives - தேசிய முரசு - Desiya Murasu</title>
	<atom:link href="https://desiyamurasu.com/tag/politics/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://desiyamurasu.com/tag/politics/</link>
	<description>DesiyaMurasu – Daily Opinions &#38; Analysis on Latest News  &#124; Tamil News</description>
	<lastBuildDate>Tue, 16 Mar 2021 05:10:10 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.1</generator>

<image>
	<url>https://desiyamurasu.com/wp-content/uploads/2020/07/cropped-FAV-copy-1-32x32.png</url>
	<title>Politics Archives - தேசிய முரசு - Desiya Murasu</title>
	<link>https://desiyamurasu.com/tag/politics/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>விவசாய சட்டங்களை திரும்பப் பெற பிரதமர் முடிவு செய்தபோது அம்பானியும் அதானியும் தடுத்தனர் : பாரதிய கிஸான் சங்க தலைவர் அதிர்ச்சி தகவல்</title>
		<link>https://desiyamurasu.com/news-india/joginder-singh-ugrahan-modi-ambani-adani-farm-laws-tomar/</link>
					<comments>https://desiyamurasu.com/news-india/joginder-singh-ugrahan-modi-ambani-adani-farm-laws-tomar/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Admin]]></dc:creator>
		<pubDate>Tue, 16 Mar 2021 05:10:07 +0000</pubDate>
				<category><![CDATA[தேசிய அரசியல்]]></category>
		<category><![CDATA[Agriculture]]></category>
		<category><![CDATA[Government]]></category>
		<category><![CDATA[Politics]]></category>
		<category><![CDATA[Rights]]></category>
		<guid isPermaLink="false">https://desiyamurasu.com/?p=4210</guid>

					<description><![CDATA[<p>3 விவசாயச் சட்டங்களைத் திரும்பப் பெற பிரதமர் மோடி முடிவு செய்தபோதும், அம்பானியும் அதானியும் கொடுக்கும் அழுத்தத்தால் அதனைச் செயல்படுத்த முடியவில்லை என்று பாரதிய கிஸான் சங்கத்தின் தலைவர் ஜோகீந்தர் சிங் உக்ராஹன் புதிய தகவலை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். பஞ்சாபில் ஜலந்தர் மாவட்டத்தில் நடந்த விவசாயிகள் ஒற்றுமை பேரணியில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது: நான் சொல்வதைக் கேட்டு நீங்கள் வியப்படைவீர்கள். மத்திய விவசாய அமைச்சர் டோமர் என்னிடம் தெரிவித்த விஷயத்தைக் கூறுகிறேன். 3 விவசாயச் [&#8230;]</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/joginder-singh-ugrahan-modi-ambani-adani-farm-laws-tomar/">விவசாய சட்டங்களை திரும்பப் பெற பிரதமர் முடிவு செய்தபோது அம்பானியும் அதானியும் தடுத்தனர் : பாரதிய கிஸான் சங்க தலைவர் அதிர்ச்சி தகவல்</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>3 விவசாயச் சட்டங்களைத் திரும்பப் பெற பிரதமர் மோடி முடிவு செய்தபோதும், அம்பானியும் அதானியும் கொடுக்கும் அழுத்தத்தால் அதனைச் செயல்படுத்த முடியவில்லை என்று பாரதிய கிஸான் சங்கத்தின் தலைவர் ஜோகீந்தர் சிங் உக்ராஹன் புதிய தகவலை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.</p>



<p>பஞ்சாபில் ஜலந்தர் மாவட்டத்தில் நடந்த விவசாயிகள் ஒற்றுமை பேரணியில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:</p>



<p>நான் சொல்வதைக் கேட்டு நீங்கள் வியப்படைவீர்கள். மத்திய விவசாய அமைச்சர் டோமர் என்னிடம் தெரிவித்த விஷயத்தைக் கூறுகிறேன். 3 விவசாயச் சட்டங்களைத் திரும்பப் பெற பிரதமர் மோடி தயாராக இருந்ததாகவும், மறுநாளே அம்பானியும் அதானியும் பிரதமரும் அழுத்தம் கொடுத்துத் திரும்பப் பெறவிடாமல் செய்துவிட்டதாகவும் தெரிவித்தார்.</p>



<p>நவீன இயந்திரங்களைப் புகுத்தியதால் விவசாயத் தொழிலாளர்கள் தங்கள் வேலைவாய்ப்பை இழந்தனர். இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட கடனால் தற்கொலை செய்து கொண்டார்கள். கடந்த 2014 ஆம் ஆண்டில் பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் 2 லட்சம் விவசாயிகள், விவசாயத்தை விட்டு வெளியேறி விட்டார்கள். இந்நிலையில், புதிய 3 விவசாயச் சட்டங்களைச் செயல்படுத்தினால், நினைத்துக்கூடப் பார்க்க முடியாத கஷ்டங்களை விவசாயிகள் அனுபவிக்க நேரிடும்.</p>



<p>டெல்லியில் நடந்த விவசாய போராட்டம் மற்றும் மனித உரிமை மீறல் குறித்த விவாதத்தை இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் விவாதித்தது எங்களுக்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றி. இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளில் இந்திய தூதரகங்களுக்கு முன்பு விவசாயிகளை ஆதரித்துப் போராட்டம் நடத்தியுள்ளனர். இது எங்களுக்குப் பலமாக இருக்கிறது.</p>



<p>தேசிய பிரச்சினையாகத் தொடங்கிய விவசாயிகள் பிரச்சினை, தற்போது உலகப் பிரச்சினையாக மாறியிருக்கிறது. மக்களின் ஏகோபித்த ஆதரவை விவசாயிகள் போராட்டம் பெற்றுள்ளது&#8221;என்றார்.</p>



<p>சம்யுக் கிஸான் மோர்ச்சா தலைவர் ருல்டு சிங் மான்ஸா கூறும்போது, &#8221; ஏற்கெனவே 2 உலகப் போரைப் பார்த்திருக்கிறோம். இப்போது நடக்கும் போர் வேறுபட்டது. இங்கிலாந்து நாடாளுமன்றமோ, அல்லது வேறு உலகத் தலைவர்களோ நம் ஆதரிப்பது பெரிய வெற்றி அல்ல. மக்கள் ஆதரவைத் திரட்டுவதே உண்மையான வெற்றி. உலக நாட்டுத் தலைவர்கள் நம்மை ஆதரிக்கிறார்கள். ஆனால், தங்கள் நாட்டு மக்களை வீதிக்கு வந்து போராட அந்த தலைவர்கள் அனுமதிக்கவில்லை. உண்மையான போராட்டமே ஜனவரி 26 ஆம் தேதிக்குப் பிறகு தான் தொடங்கியது&#8221; என்றார்.</p>



<p>தொழிலாளர் நலச் செயற்பாட்டாளர் நோடீஸ் கவுர் கூறும்போது, &#8221; மோடி அரசின் தொழிலாளர் சட்ட மசோதாவை அறிமுகப்படுத்தியபோது எதிர்த்ததால் என்னைக் கைது செய்தனர். கொரோனா காலத்தில் ஏராளமான தொழிலாளர்கள் வேலை இழந்தனர். நிலுவையில் உள்ள சம்பளத்தையும் தொழிலாளர்களுக்குத் தர மறுத்தனர். விவசாயிகள் போராட்டத்திலும் நான் தொடர்ந்து பங்கேற்று வருகிறேன். அதேசமயம், தொழிலாளர் சட்டத்தை எதிர்த்தும் தொடர்ந்து போராடுவேன்&#8221; என்றார்.</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/joginder-singh-ugrahan-modi-ambani-adani-farm-laws-tomar/">விவசாய சட்டங்களை திரும்பப் பெற பிரதமர் முடிவு செய்தபோது அம்பானியும் அதானியும் தடுத்தனர் : பாரதிய கிஸான் சங்க தலைவர் அதிர்ச்சி தகவல்</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://desiyamurasu.com/news-india/joginder-singh-ugrahan-modi-ambani-adani-farm-laws-tomar/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>ரஜினியின் அறிவிப்பால் பா.ஜ.க. வின் சதித்திட்டம் தவிடு பொடியானது! பா.ஜ.க. விரித்த வலையில் விழாமல் ரஜினி தப்பித்துக் கொண்டார்: தலைவர் கே.எஸ். அழகிரி அறிக்கை</title>
		<link>https://desiyamurasu.com/news-tamilnadu/actor-rajinikanth-will-not-launch-his-political-party-as-scheduled-on-account-of-his-poor-health/</link>
					<comments>https://desiyamurasu.com/news-tamilnadu/actor-rajinikanth-will-not-launch-his-political-party-as-scheduled-on-account-of-his-poor-health/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Admin]]></dc:creator>
		<pubDate>Wed, 30 Dec 2020 06:10:31 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழக அரசியல்]]></category>
		<category><![CDATA[Actor Rajinikanth]]></category>
		<category><![CDATA[Politics]]></category>
		<guid isPermaLink="false">https://desiyamurasu.com/?p=3798</guid>

					<description><![CDATA[<p>கடந்த 2017 டிசம்பர் 31 இல் தான் நிச்சயம் அரசியலுக்கு வரப்போவதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்தார். தொடர்ந்து கட்சி தொடங்குவதற்கான அனைத்து பணிகளும் தீவிரமாக நடைபெற்றன. அதைத் தொடர்ந்து மார்ச் மாதம் செய்தியாளர்களிடம் பேசும் போது, அரசியலுக்கு வந்து தேர்தலில் வெற்றி பெற்றாலும் நான் முதல்வராக மாட்டேன். நல்லவர் ஒருவரை முதல்வராக அமர்த்தி ஆட்சியை வழிநடத்துவேன் என்று கூறியது அவரது ஆதரவாளர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது அறிவிப்புகள் அனைத்துமே ஏதோவொரு அழுத்தத்தின் காரணமாகவே வெளிவந்ததால் தனது [&#8230;]</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-tamilnadu/actor-rajinikanth-will-not-launch-his-political-party-as-scheduled-on-account-of-his-poor-health/">ரஜினியின் அறிவிப்பால் பா.ஜ.க. வின் சதித்திட்டம் தவிடு பொடியானது! பா.ஜ.க. விரித்த வலையில் விழாமல் ரஜினி தப்பித்துக் கொண்டார்: தலைவர் கே.எஸ். அழகிரி அறிக்கை</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>கடந்த 2017 டிசம்பர் 31 இல் தான் நிச்சயம் அரசியலுக்கு வரப்போவதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்தார். தொடர்ந்து கட்சி தொடங்குவதற்கான அனைத்து பணிகளும் தீவிரமாக நடைபெற்றன. அதைத் தொடர்ந்து மார்ச் மாதம் செய்தியாளர்களிடம் பேசும் போது, அரசியலுக்கு வந்து தேர்தலில் வெற்றி பெற்றாலும் நான் முதல்வராக மாட்டேன். நல்லவர் ஒருவரை முதல்வராக அமர்த்தி ஆட்சியை வழிநடத்துவேன் என்று கூறியது அவரது ஆதரவாளர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது அறிவிப்புகள் அனைத்துமே ஏதோவொரு அழுத்தத்தின் காரணமாகவே வெளிவந்ததால் தனது நிலையை மனப்போக்கின்படி அடிக்கடி மாற்றிக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. பிறகு ஒரு கட்டத்தில் மக்களிடையே எழுச்சி உருவாக வேண்டும். அதை ரசிகர்கள் உருவாக்க வேண்டும் என்று கூறினார்.</p>



<p>இந்நிலையில், சென்னையில் சமீபத்தில் ரஜினி மக்கள் மன்ற ஆலோசனை கூட்டத்தில், 2021 ஆம் ஆண்டு ஜனவரியில் கட்சி தொடங்கப்படும். அது தொடர்பாக டிசம்பர் 31 ஆம் தேதியன்று அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார். இதையொட்டி, அண்ணாத்தே படப்பிடிப்பில் ஈடுபட்ட போது உடல்நலக் குறைவு ஏற்பட்டு, ஹைதராபத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சென்னை திரும்பிய அவர், உடல்நலனை கருத்தில் கொண்டு கட்சி தொடங்கப்போவதில்லை என்று இறுதியாக அறிவித்துவிட்டார். இது ரஜினியை வைத்து அரசியல் நடத்தி ஆதாயம் பெறலாம் என்ற உள்நோக்கத்தில் ஈடுபட்ட சில சுயநலமிகளுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.</p>



<p>ஆனால், அரசியல் நடவடிக்கைகளிலிருந்து முற்றிலும் விலகுவதாக ரஜினி கூறவில்லை என்று பத்திரிகையாளர் குருமூர்த்தி சப்பைக் கட்டு கட்டுவது மிகுந்த வேடிக்கையாக இருக்கிறது. முடிவெடுக்க வேண்டியவர் முடிவெடுத்துவிட்டார். தமிழகத்தில் எந்த நிலையிலும் வேறூன்ற முடியாத அளவிற்கு மக்கள் விரோத கட்சியாக இருக்கிற பா.ஜ.க. விற்கு உயிர் கொடுப்பதற்கு முனைந்த குருமூர்த்திகளின் முயற்சி, கடும் தோல்வியை சந்தித்துள்ளது. திரைக்குப்பின்னாலே சதித்திட்டம் தீட்டி தி.மு.க. &#8211; காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியை வீழ்த்த வேண்டுமென்ற அரசியல் காழ்ப்புணர்ச்சியும், பகைமையும் கொண்ட குதர்க்கவாதிகளான குருமூர்த்தி போன்றவர்கள் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் திக்குமுக்காடி போயிருக்கிறார்கள். ரஜினி என்கிற சுவற்றில் சுலபமாக சித்திரம் வரைய முற்பட்டவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்கள்.</p>



<p>நடிகர் ரஜினிகாந்த் உடல்நலனைக் கருத்தில் கொண்டும் அரசியல் சூழ்ச்சிகளை அறிந்த காரணத்தாலும் அவரது மனசாட்சியின் குரல் இன்று ஒலித்திருக்கிறது. பா.ஜ.க. விரித்த வலையில் விழாமல் அவர் தம்மைப் பாதுகாப்போடு காப்பாற்றிக் கொண்டிருக்கிறார். இத்தகைய துணிச்சலான முடிவெடுத்ததன் மூலம் தமிழ்நாட்டில் அரசியலில் வகுப்புவாத சக்திகளின் ராஜதந்திரம் படுதோல்வி அடைந்திருக்கிறது.</p>



<p>நடிகர் ரஜினிகாந்தை வைத்துக் கொண்டு அவரோடு கூட்டணி அமைத்து வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, மத்திய புலனாய்வுத்துறையை ஏவி விட்டு அ.தி.மு.க. வை உடைப்பதற்குக் குருமூர்த்திகளின் ஆலோசனையின் பேரில் அமித்ஷாக்கள் சதித்திட்டம் தீட்டினார்கள். அதனால் தான் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஆகியோர், அரசு விழா என்றும் பாராமல் பா.ஜ.க. வுடன் கூட்டணி அமைக்கத் தயார் என்று பகிரங்கமாக அறிவித்தார்கள். அதைத் தொடர்ந்து பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அதுகுறித்து பேசுவதைத் தவிர்த்தார். அ.தி.மு.க. வின் சுயமரியாதையை இழந்த, சரணாகதி அரசியலுக்கு இதுவரை பா.ஜ.க. தலைமை பதில் கூறவில்லை. இதற்குப் பின்னாலே மிகப்பெரிய சதித்திட்டம் இருப்பதை எவரும் மறுக்கமுடியாது. ரஜினிகாந்த் என்கிற மையப்புள்ளியில் அடிப்படையில் அந்த சதித்திட்டம் தீட்டப்பட்டது. ஆனால், ரஜினியின் அறிவிப்பால் பா.ஜ.க. வின் சதித்திட்டம் தவிடுபொடியாகி இருக்கிறது.</p>



<p>எனவே, ரஜினியை அரசியலில் நுழைத்து தமிழக பா.ஜ.க. வை தமிழ் மக்களிடம் விற்பனை செய்து விடலாம் என்கிற அணுகுமுறைக்குக் கடுமையான மரண அடி கிடைத்திருக்கிறது. கொள்கையைச் சொல்லி கட்சியை வளர்க்காமல் மதவாத அரசியல் மூலம் வாக்கு வங்கியை விரிவு படுத்தலாம் என்று தமிழக பா.ஜ.க கனவு கண்டது. ஆனால், தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர் பிறந்த மண்ணில் பா.ஜ.க. அரசியல் விலை போகவில்லை. இந்த பின்னணியில் தான் ரஜினியின் முதுகுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டு தமிழகத்தில் அரசியல் நடத்தலாம் என்ற கனவு, பகற்கனவாக முடிந்து விட்டது.</p>



<p>எனவே தமிழகத்தில் தி.மு.க. &#8211; காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்டுக்கோப்பாக, கொள்கை சார்ந்த, மக்கள் நலனில் அக்கறை கொண்ட கூட்டணியாகக் கம்பீரமாக பீடு நடைபோட்டு வருகிறது. நாளுக்கு நாள் மக்கள் பேராதரவு குவிந்து வருகிறது. 2021 சட்டமன்ற தேர்தலில் அ.திமு.க. வின் அராஜக ஊழல் ஆட்சியை அகற்றுவதற்கான பிரகாசமான அறிகுறிகள் உறுதி செய்யப்பட்டு வருகின்றன. அ.தி.மு.க தலைமையில் கூட்டணி அமைந்தாலும், வகுப்புவாத பா.ஜ.க. வோடு இணைந்து வந்தாலும் அந்த சந்தர்ப்பவாத கொள்கையற்ற சுயநலக் கூட்டணியை முறியடித்து வெற்றிக் கொடி நாட்டுவதற்கு மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் தயாராக செயல்பட்டு வருகின்றன. எனவே, தை பிறந்தால் வழி பிறக்கும். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு நல்லாட்சி அமைவது உறுதி.</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-tamilnadu/actor-rajinikanth-will-not-launch-his-political-party-as-scheduled-on-account-of-his-poor-health/">ரஜினியின் அறிவிப்பால் பா.ஜ.க. வின் சதித்திட்டம் தவிடு பொடியானது! பா.ஜ.க. விரித்த வலையில் விழாமல் ரஜினி தப்பித்துக் கொண்டார்: தலைவர் கே.எஸ். அழகிரி அறிக்கை</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://desiyamurasu.com/news-tamilnadu/actor-rajinikanth-will-not-launch-his-political-party-as-scheduled-on-account-of-his-poor-health/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>2017-18 ஆம் ஆண்டில் 95 சதவீத தேர்தல் பத்திரம் மூலம் பாஜகவுக்கு நன்கொடை : ரூ. 1 கோடி பத்திரங்கள் அதிக அளவில் விற்பனை</title>
		<link>https://desiyamurasu.com/news-india/electoral-bonds-heres-what-the-numbers-say/</link>
					<comments>https://desiyamurasu.com/news-india/electoral-bonds-heres-what-the-numbers-say/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Admin]]></dc:creator>
		<pubDate>Wed, 30 Dec 2020 05:39:59 +0000</pubDate>
				<category><![CDATA[தேசிய அரசியல்]]></category>
		<category><![CDATA[Economy]]></category>
		<category><![CDATA[Political Economy]]></category>
		<category><![CDATA[Politics]]></category>
		<category><![CDATA[Rights]]></category>
		<guid isPermaLink="false">https://desiyamurasu.com/?p=3785</guid>

					<description><![CDATA[<p>இதுவரை 6 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு தேர்தல் நன்கொடைப் பத்திரங்கள் விற்பனையாகியுள்ளன. இதில், கடந்த 2019-20 ஆம் ஆண்டில் மட்டும் 55 சதவீத தேர்தல் பத்திரங்கள் விற்பனையாகியுள்ளன. அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் நன்கொடையாக பத்திரங்கள் மூலம் நன்கொடை அளிக்கும் திட்டத்தை கடந்த 2018 ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் தேதி மத்திய அரசு கொண்டு வந்தது. இதன்படி, அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிப்போர் பெயர்கள் வெளியிடப்பட்டாது. இதன்பின்னர், 2017-18 பட்ஜெட்டிலும் இது குறித்து அறிவிக்கப்பட்டது. [&#8230;]</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/electoral-bonds-heres-what-the-numbers-say/">2017-18 ஆம் ஆண்டில் 95 சதவீத தேர்தல் பத்திரம் மூலம் பாஜகவுக்கு நன்கொடை : ரூ. 1 கோடி பத்திரங்கள் அதிக அளவில் விற்பனை</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>இதுவரை 6 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு தேர்தல் நன்கொடைப் பத்திரங்கள் விற்பனையாகியுள்ளன. இதில், கடந்த 2019-20 ஆம் ஆண்டில் மட்டும் 55 சதவீத தேர்தல் பத்திரங்கள் விற்பனையாகியுள்ளன.</p>



<p>அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் நன்கொடையாக பத்திரங்கள் மூலம் நன்கொடை அளிக்கும் திட்டத்தை கடந்த 2018 ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் தேதி மத்திய அரசு கொண்டு வந்தது. இதன்படி, அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிப்போர் பெயர்கள் வெளியிடப்பட்டாது. இதன்பின்னர், 2017-18 பட்ஜெட்டிலும் இது குறித்து அறிவிக்கப்பட்டது.</p>



<p>அரசியல் கட்சிகளிடம் புழங்கும் கருப்புப் பணத்தைக் கட்டுப்படுத்தவும், வெளிப்படையான நிதி நிலையை மேம்படுத்தவும் தேர்தல் நன்கொடை பத்திர முறை கொண்டு வரப்பட்டதாகக் கூறப்பட்டது.</p>



<p>தேர்தல் பத்திர முறையை அறிமுகப்படுத்தி 2 ஆண்டுகள் ஆகிவிட்டன. தற்போது, தேர்தல் பத்திரங்களின் வெளிப்படைத்தன்மை மற்றும் தவறாகப் பயன்படுத்துவது குறித்து பல விவாதங்கள் நடைபெற்றுள்ளன.</p>



<p>2019 ஆம் ஆண்டு மார்ச் 1 ஆம் தேதி முதல் தேர்தல் பத்திரங்கள் பாரத ஸ்டேட் வங்கியில் 12 முறை விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த 2019 மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் மட்டும் 20 நாட்கள் தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 2019 ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 20 வரை (9 ஆவது கட்டம்) அதிகபட்சமாக ரூ.2,256.4 கோடி மதிப்புள்ள தேர்தல் பத்திரங்கள் விற்பனையாகியுள்ளன. 2019 மார்ச் 1 முதல் மார்ச் 15 வரை( 8 ஆவது கட்டம்) ரூ.1,365.7 கோடி மதிப்புள்ள் தேர்தல் பத்திரங்கள் விற்பனையாகியுள்ளன.</p>



<p>2019 ஆம் ஆண்டு மே 6 ஆம் தேதி முதல் மே 10 ம் தேதி வரை (10 ஆவது கட்டம்) ரூ.822.25 கோடி அளவுக்கு தேர்தல் பத்திரங்கள் விற்றுள்ளன.</p>



<p>இந்த 3 கட்ட தேர்தல் பத்திரங்கள் விற்பனை 2019 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை ஒட்டியே நடைபெற்றுள்ளது கவனிக்கத்தக்கது. பொதுத்தேர்தலின் போது, 3 கட்ட விற்பனையிலும் ரூ.4,444.32 கோடி அளவுக்கு தேர்தல் பத்திரங்கள் விற்பனையாகியுள்ளன. இந்த 3 கட்டங்களில் 73 சதவீத தேர்தல் பத்திரங்கள் விற்றுள்ளன.</p>



<p>2019-20 ஆம் நிதியாண்டில் ரூ. 3,355.93 கோடி அளவுக்கு தேர்தல் பத்திரங்கள் விற்றுள்ளன. கடந்த நிதியாண்டு முழுவதும் விற்கப்பட்ட தேர்தல் பத்திரங்களின் மதிப்பான ரூ.2,550.78 கோடியை விட இது அதிகமாகும். 2017-18 நிதியாண்டில் 2018 மார்ச் மாதத்தில் முதல் கட்ட தேர்தல் பத்திர விற்பனை ரூ.220 கோடியாகும்.</p>



<p>ரூ. 1,000, ரூ. 10,000, ரூ. 1 லட்சம் , ரூ. 10 லட்சம் மற்றும் ரூ. 1 கோடி வரிசையில் பத்திரங்கள் விற்கப்படுகின்றன. கடந்த 2019 ஆம் ஆண்டு அக்டோபர் வரை, பல்வேறு வரிசைகளில் 12,313 தேர்தல் பத்திரங்கள் விற்றுள்ளன. இதில் அதிகபட்சமாக ரூ. 1 கோடி மதிப்பிலான 5,624 தேர்தல் பத்திரங்கள் விற்றுள்ளன. விற்பனையான மொத்த தேர்தல் பத்திரங்களில் இது 45.68 சதவீதமாகும்.</p>



<p>2017-18 ஆம் ஆண்டில் தேர்தல் ஆணையத்திடம் பாஜக சமர்ப்பித்த ஆவணத்தின்படி, பாரத ஸ்டேட் வங்கி மூலம் விற்பனையான தேர்தல் பத்திரங்களில். 95 சதவீத தேர்தல் பத்திரங்கள் பாஜகவுக்கு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/electoral-bonds-heres-what-the-numbers-say/">2017-18 ஆம் ஆண்டில் 95 சதவீத தேர்தல் பத்திரம் மூலம் பாஜகவுக்கு நன்கொடை : ரூ. 1 கோடி பத்திரங்கள் அதிக அளவில் விற்பனை</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://desiyamurasu.com/news-india/electoral-bonds-heres-what-the-numbers-say/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>இந்த நூற்றாண்டின் அதிசய அரசியல்வாதி மன்மோகன் சிங்!</title>
		<link>https://desiyamurasu.com/news-india/manmohan-singh-congress-politics/</link>
					<comments>https://desiyamurasu.com/news-india/manmohan-singh-congress-politics/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[சாவித்திரி கண்ணன்]]></dc:creator>
		<pubDate>Mon, 28 Sep 2020 19:05:58 +0000</pubDate>
				<category><![CDATA[தேசிய அரசியல்]]></category>
		<category><![CDATA[congress]]></category>
		<category><![CDATA[Dr Manmohan Singh]]></category>
		<category><![CDATA[Politics]]></category>
		<category><![CDATA[rahul gandhi]]></category>
		<category><![CDATA[sonia gandhi]]></category>
		<guid isPermaLink="false">https://desiyamurasu.com/?p=2456</guid>

					<description><![CDATA[<p>உலக பொருளாதார அறிஞர்களில் முக்கியமானவரும்,இந்தியாவின் முன்னாள் பிரதமரும்,காங்கிரசின் முதுபெரும் தலைவர்களில் ஒருவருமான மன்மோகன்&#160;சிங்&#160;தனது&#160;88வது&#160;பிறந்த நாளை மிக அமைதியாக எதிர்கொண்டார்! இந்த நாட்டில் ஒரு வார்டு கவுன்சிலராக இருப்பவர் கூட தன் பிறந்த நாளில் போஸ்டர்கள், பேனர்கள், விழாக்கள் என ஆர்ப்பாட்டமாக  எதிர்கொள்வதை நாம் பார்க்கிறோம். மன்மோகன் சிங் எளிமையானவராக இருப்பதால் ஊடகங்களும் அவரது பிறந்த நாளுக்கு உரிய முக்கியத்துவம் தரவில்லை! ஆனால், அவர் நாம் ஆழமாகப் புரிந்து கொள்ள வேண்டிய, பின்பற்ற வேண்டிய ஒரு அற்புதமான முன்னோடி என நான் கருதுகிறேன்! அவரது பிறந்த&#160;நாளன்று&#160;பிரதமர் மோடி ஒரு [&#8230;]</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/manmohan-singh-congress-politics/">இந்த நூற்றாண்டின் அதிசய அரசியல்வாதி மன்மோகன் சிங்!</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>உலக பொருளாதார அறிஞர்களில் முக்கியமானவரும்,இந்தியாவின் முன்னாள் பிரதமரும்,காங்கிரசின் முதுபெரும் தலைவர்களில் ஒருவருமான மன்மோகன்&nbsp;சிங்&nbsp;தனது&nbsp;88வது&nbsp;பிறந்த நாளை மிக அமைதியாக எதிர்கொண்டார்!</p>



<p>இந்த நாட்டில் ஒரு வார்டு கவுன்சிலராக இருப்பவர் கூட தன் பிறந்த நாளில் போஸ்டர்கள், பேனர்கள், விழாக்கள் என ஆர்ப்பாட்டமாக  எதிர்கொள்வதை நாம் பார்க்கிறோம்.</p>



<p>மன்மோகன் சிங் எளிமையானவராக இருப்பதால் ஊடகங்களும் அவரது பிறந்த நாளுக்கு உரிய முக்கியத்துவம் தரவில்லை! ஆனால், அவர் நாம் ஆழமாகப் புரிந்து கொள்ள வேண்டிய, பின்பற்ற வேண்டிய ஒரு அற்புதமான முன்னோடி என நான் கருதுகிறேன்!</p>



<p>அவரது பிறந்த&nbsp;நாளன்று&nbsp;பிரதமர் மோடி ஒரு சம்பிரதாய வாழ்த்தை டிவிட்டரில் தெரிவித்தார்!</p>



<p>சிதம்பரமோ, ’’மன்மோகன் சிங்கிற்கு பாரதரத்னா விருது தந்து கௌரவிக்க வேண்டும்’’ என தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். மேலும் மம்தா பானர்ஜி, அரவிந்த் கேஜ்ரிவால் உள்ளிட்ட முதல்வர்கள் வாழ்த்தினர். ஆனால், இவர்களைவரைக் காட்டிலும் ராகுல்காந்தியின் வாழ்த்து மனதைத் தொடுவதாக இருந்தது!</p>



<p>’’மன்மோகன்சிங் போன்ற பிரதமர் இல்லாததை நாடு ஆழமாக உணர்கிறது. அவர் நேர்மை, கண்ணியம், அர்ப்பணிப்பு ஆகியவற்றின் உதாரணமானவர்! ’’ என ராகுல்காந்தி கூறியுள்ளார். இது வெற்றுப் புகழ்ச்சியில்லை!</p>



<p>இந்தியாவின் சக்தி வாய்ந்த நிதி அமைச்சராக ஐந்தாண்டுகள் பணியாற்றிப் பல அதிரடி பொருளாதார மாற்றத்திற்கு வித்திட்டவர், பத்தாண்டுக் காலம் பிரதமராக இருந்தவர் என்ற வகையில் அவர் மீது இது வரை ஒரு சின்ன ஊழல் குற்றச்சாட்டு கூட எழுந்ததில்லை! அப்பழுக்கற்ற நேர்மையாளராகத் தன்னை உறுதியாகக் கட்டமைத்துக் கொண்டவர் மன்மோகன் சிங்! பல ஆயிரம் கோடிகளைச் சுலபமாகச் சம்பாதிக்கக் கூடிய இடத்தில் அவர் இருந்தார்! அவர் கேட்காமலே அவருக்குக் கொட்டித்தரப் பல பெருந்தொழில் அதிபர்கள் காத்திருந்தனர். ஆனால், அந்த எண்ணத்தில் அம்பானிகளோ, அதானிகளோ, டாட்டாக்களோ, பிர்லாக்களோ அவரை நெருங்கக் கூட முடியாத ஒரு நெருப்பு வளையத்தைக் கண்ணுக்குத் தெரியாமல் அவர் கட்டமைத்திருந்தார். அதனால் தான் பழம் தின்று கொட்டை போட்ட அரசியல்வாதியான நரசிம்மராவ் அவர்களே மன்மோகன்சிங்கை பூரணமாக நம்பி அவரது புதிய பொருளாதாரத் திட்டங்கள், அணுகுமுறைகள் அத்தனையையும் ஆதரித்தார்.</p>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large"><img fetchpriority="high" decoding="async" width="760" height="443" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/09/full.jpg" alt="" class="wp-image-2460" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/09/full.jpg 760w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/09/full-300x175.jpg 300w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/09/full-750x437.jpg 750w" sizes="(max-width: 760px) 100vw, 760px" /></figure></div>



<p>அதே போல நரசிம்மராவ் அவர்களையடுத்து காங்கிரஸின் பிரதமராகும் வாய்ப்பு  சோனியாகாந்திக்கு இருந்தும், அதை ஏற்காமல் தவிர்த்து, ’’இதற்கு இன்னார் தான் பொருத்தமானவர்’’ என சோனியா புத்திசாலித்தனமாக ஒரு முடிவு எடுத்து மன்மோகன் சிங்கை பிரதமராக்கினார்! இந்தியாவில் சிறுபான்மை மதத்தைச் சேர்ந்த ஒருவர் பிரதமரானது அதுவே முதல் நிகழ்வாகும்.</p>



<p>அப்போதும் பலர், ’’சும்மா பேருக்குத் தான் சிங் பிரதமர்! ஆனால், அதிகாரமெல்லாம் சோனியா தான்! கூடிய விரைவில் மன்மோகனை தகுதி இறக்கம் செய்துவிட்டு சோனியா பிரதமராகலாம் எனப் பேசினர். ஆனால், கடைசி வரை அது நடக்காதது மட்டுமல்ல, அடுத்த முறையும் முழு ஐந்தாண்டுகள் டாக்டர். சிங் தான்  பிரதமராகச் செயல்பட்டார்!</p>



<p>அப்போது பாஜகவும், அவர்களின் ஆதரவாளர்களும், ’’சிங் அதிகாரமற்றப் பிரதமர். சோனியாவால் ஆட்டுவிக்கப்படுகிறார்’’ என்ற பிரச்சாரத்தைப் பரப்பினர்! ஆனால், அது முற்றிலும் பொய் என்பது மட்டுமல்ல, மன்மோகன்சிங், தன்நிகரற்ற சுதந்திர மனிதராக இயங்கினார் என்பது அன்றைய அமைச்சர்கள், அதிகாரிகள் அனைவருக்கும் நன்கு தெரியும்!</p>



<p>கட்சி அரசியலிலிருந்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு, அரசு நிர்வாகத்தில் மட்டுமே முழுமையான கவனத்தைச் செலுத்தியதால் மன்மோகன் மீது அப்படியொரு தோற்றம் உருவானது. அரசியல் தொடர்பான சிக்கல்களோ, கவலைகளோ மன்மோகனுக்கு தராமல் சோனியா காந்தியும் அவரை பாதுகாத்தார். இதன் மூலம் நாட்டுக்கும், மக்களுக்கும் டாக்டர். சிங்கின் தொண்டு முழுமையாகப் பயன்பட வேண்டும் என்று காங்கிரஸ் தலைமை கருதியது. எனவே, அரசியல் சூதுவாது இல்லாதவராக அவரும் தன் இயல்பு படியே செயல்படமுடிந்தது.</p>



<p>மன்மோகன்சிங் பற்றி மேலதிகமாக நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், அவர் இன்றைய பாகிஸ்தானில் இருக்கின்ற மேற்கு பஞ்சாபில் ஒரு எளிய குடும்பத்தில் பிறந்தவர். பல மைல்கள் நடந்து சென்று பள்ளிக் கல்வியை கற்றவர்! சிம்னி விளக்கு ஒளியில் படித்து அறிவை வளர்த்தவர்! சிறந்த மாணவனாகத் திகழ்ந்த அவர் உலக புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலையில் பொருளாதாரம் படித்தார்!</p>



<p>பிரபல ஆக்ஸ்போர்ட் பல்கலையில் டாக்டரேட் முடித்தார்! பஞ்சாப் பல்கலையிலும், தில்லி ஜவகர்லால் நேரு பல்கலையிலும் பேராசிரியராக வேலை பார்த்தவர். அதன் பிறகு நிதி அமைச்சகம், வெளி நாட்டு அமைச்சகம் ஆகியவற்றின் ஆலோசகராக இருந்தவர்! ரிசர்வ் வங்கியின் இயக்குநர், ஆளுனர் உள்ளிட்ட பொறுப்புகளையும் வகித்துள்ளார்.</p>



<p>மன்மோகன் சிங் அடம்ஸ்மித், ஆசியமணி… உள்ளிட்ட பல முக்கிய உலக விருதுகளைப் பெற்றவர்.</p>



<p>மன்மோகன் சிங்கின் காங்கிரஸ் ஆட்சியின் முக்கிய சாதனையாக தகவல் பெறும் உரிமைச் சட்டம், வன உரிமைகள் அங்கீகரிப்பு சட்டம், கல்வி உரிமைச் சட்டம், உணவு உரிமைச் சட்டம்,எட்டு ஐ.ஐ.டிக்கள், ஏழு ஐ.ஐ.எம்கள் முப்பது மத்திய பல்கலைகள் என உயர்கல்வி நிறுவனங்களை உருவாக்கியது, ரயில்வே துறையை லாபகரமாக்கியது, தனி நபர் வருமானத்தை 250% அதிகரித்தது உள்ளிட்டவற்றைக் கூறலாம்!</p>



<p>தற்போதைய அரசின் தவறான பொருளாதார போக்குகளை, தவறுகளை உடனுக்குடன் சிங் சுட்டிகாட்டி விமர்சிக்கிறார்!  இந்த 88 வயதிலும் தன்னை சுறுசுறுப்பாக, தெளிவாக வைத்துக் கொண்டிருக்கிறார் என்றால், அவர் பற்றற்றவராக வாழ்வதும் ஒரு காரணமாயிருக்கலாம்!</p>



<p class="has-text-align-right">(<em>பத்திரிகையாளர்</em> <em>சாவித்ரி கண்ணன்  அறம்</em> <em>ஆன்லைனில்</em> <em>பதிவு செய்தது.</em>)</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/manmohan-singh-congress-politics/">இந்த நூற்றாண்டின் அதிசய அரசியல்வாதி மன்மோகன் சிங்!</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://desiyamurasu.com/news-india/manmohan-singh-congress-politics/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
	</channel>
</rss>
