<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>NEET Death Archives - தேசிய முரசு - Desiya Murasu</title>
	<atom:link href="https://desiyamurasu.com/tag/neet-death/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://desiyamurasu.com/tag/neet-death/</link>
	<description>DesiyaMurasu – Daily Opinions &#38; Analysis on Latest News  &#124; Tamil News</description>
	<lastBuildDate>Fri, 18 Sep 2020 13:26:05 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.1</generator>

<image>
	<url>https://desiyamurasu.com/wp-content/uploads/2020/07/cropped-FAV-copy-1-32x32.png</url>
	<title>NEET Death Archives - தேசிய முரசு - Desiya Murasu</title>
	<link>https://desiyamurasu.com/tag/neet-death/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>தமிழகத்தில் மட்டும் நீட் தற்கொலைகள் ஏன்?: கல்வியாளர்கள் விளக்கம்</title>
		<link>https://desiyamurasu.com/social-justice/what-is-behind-student-suicide-in-tamil-nadu/</link>
					<comments>https://desiyamurasu.com/social-justice/what-is-behind-student-suicide-in-tamil-nadu/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Admin]]></dc:creator>
		<pubDate>Fri, 18 Sep 2020 12:37:30 +0000</pubDate>
				<category><![CDATA[சமூகநீதி]]></category>
		<category><![CDATA[NEET Death]]></category>
		<guid isPermaLink="false">https://desiyamurasu.com/?p=2342</guid>

					<description><![CDATA[<p>&#8221;நான் நன்றாகப் படிக்கிறேன். ஆனால், நான் தேர்ச்சி பெறாமல் போய்விடுவேனா என்று பயமாக இருக்கிறது. மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காமல் போனால் என்ன ஆகும்?&#8221; தமிழகத்தில் நீட் தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களின் மன உளைச்சலை ஏற்படுத்தும் இந்த எண்ணம் தான், இதுவரை 13 மாணவர்களின் உயிர்களைப் பறித்திருக்கிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 5 மாணவர்கள் உயிரிழந்திருக்கின்றனர். ஒரே மாதத்தில் 5 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டபின், நீட் பிரச்சினை தமிழகம் முழுவதும் உணர்வுப் பிரச்சினையாக மாறியிருக்கிறது. [&#8230;]</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/social-justice/what-is-behind-student-suicide-in-tamil-nadu/">தமிழகத்தில் மட்டும் நீட் தற்கொலைகள் ஏன்?: கல்வியாளர்கள் விளக்கம்</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>&#8221;நான் நன்றாகப் படிக்கிறேன். ஆனால், நான் தேர்ச்சி பெறாமல் போய்விடுவேனா என்று பயமாக இருக்கிறது. மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காமல் போனால் என்ன ஆகும்?&#8221;<br><br>தமிழகத்தில் நீட் தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களின் மன உளைச்சலை ஏற்படுத்தும் இந்த எண்ணம் தான், இதுவரை 13 மாணவர்களின் உயிர்களைப் பறித்திருக்கிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 5 மாணவர்கள் உயிரிழந்திருக்கின்றனர்.<br><br>ஒரே மாதத்தில் 5 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டபின், நீட் பிரச்சினை தமிழகம் முழுவதும் உணர்வுப் பிரச்சினையாக மாறியிருக்கிறது.<br><br>மாணவர்கள் டாக்டராகி பல உயிர்களைக் காப்பாற்ற விரும்புகிறார்கள். நீட் தேர்வை நிறுத்தி அவர்கள் உயிரைக் காப்பாற்றுங்கள் என்று வேதனையுடன் கோரிக்கை வைக்கிறார், சமீபத்தில் நாமக்கல்லில் தற்கொலை செய்து கொண்ட மாணவரின் உறவினர்.<br><br>&#8221;கடுமையாக உழைத்து படித்து,இருமுறை நீட் தேர்வு எழுதியும் போதிய மதிப்பெண் கிடைக்கவில்லை. தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு அவன் கோழையல்ல. நம்பிக்கை அதிகம் உள்ளவன். நீட் தேர்வால் ஏற்பட்ட மன அழுத்தத்தை அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை&#8221; என்றும் அவர் தெரிவிக்கிறார்.<br><br>தற்கொலை செய்து கொண்ட மதுரை மாணவி அரசுப் பள்ளியில் படித்துவிட்டு, கடந்த ஆண்டுதான் வேலம்மாள் பள்ளியில் சேர்ந்தார். பிளஸ் டூ தேர்வில் 600க்கு 550 மதிப்பெண்கள் பெற்ற அவர், நீட் தேர்வு பயத்திலேயே இருந்துள்ளார்.</p>



<h4 class="wp-block-heading"><strong>தமிழகத்தில் நீட் தேர்வு ஏன் பிரச்சினையாக இருக்கிறது?</strong></h4>



<p><strong>1. மற்ற பாடத் திட்டங்களோடு, தமிழ்நாடு பாடத்திட்டத்தை ஒப்பிட முடியாதா?</strong><br><br>&#8221;பாடத்திட்டம் சம்பந்தப்பட்ட விசயம் இல்லை. எல்லோருக்குமான சமமான கற்றல் அணுகுமுறை இல்லாததே காரணம். சிபிஎஸ்இ அல்லது ஐசிஎஸ்இ பாடத் திட்டங்களில் படிக்கும் மாணவர்கள் நீட் பயிற்சி மையங்களில் படிக்கவில்லையா?&#8221; என்று கேள்வி எழுப்புகிறார் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு.<br><br>ஆரோ கல்விச் சேவைகள் நிறுவனர் டாக்டர் கே.ஆர். மாலதி கூறும்போது, &#8221;பிரச்சினை பாடத் திட்டத்தில் இல்லை. நம் மாணவர்கள் திறனறிவை வளர்த்துக் கொள்ளவில்லை. இன்னும் மனப்பாட முறையையே பின்பற்றுகிறார்கள்&#8221; என்றார்.<br><br><strong>2. நீட் தேர்வில் வெளிப்படைத்தன்மை இருக்கிறதா?</strong><br><br>&#8221;நீட் தேர்வால் சந்தைப்படுத்துதல் முடிவுக்கு வரவில்லை. தமிழ்நாடு பாடத்திட்டத்தின் அடிப்படையில் நீட் தேர்வுக்காக தயார்படுத்த முடியும் என்ற நம்பிக்கையை தமிழக அரசு எவ்வாறு இழந்தது?&#8221; என்று பிரின்ஸ் கஜேந்திர பாபு கேள்வி எழுப்புகிறார்.<br><br>&#8221;நீட் தேர்வு நடைபெறுவதற்கு முன்பு, ஒவ்வொரு தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் 150 இடங்கள் இருந்தன. இதில், 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கும், 42.5 சதவீதம் மாநில அரசு ஒதுக்கீட்டுக்கும், மீதமுள்ள 42.5 சதவீத இடங்களுக்கு அந்த கல்லூரிகள் நன்கொடை வசூலித்தன. நீட் தேர்வு அமல்படுத்தப்பட்ட பிறகு, 15 சதவீத அகில இந்திய ஒதுக்கீடு அப்படியே இருக்கிறது. ஆனால், நீட் தேர்வு தகுதியின் அடிப்படையில் 85 சதவீத இடங்கள் நிரப்பப்படுகின்றன&#8221; என்று சுட்டிக் காட்டுகிறார் மாலதி.<br><br><strong>3. சமமான அணுகுதல் குறைபாட்டால் மாணவர்கள் தற்கொலை செய்கிறார்களா? அல்லது அரசியலாகிவிட்டதா?</strong><br><br>&#8221;தேர்வு பயம் மட்டுமல்ல. சரியான அணுகுதல் குறித்து எடுத்துரைக்க முறையான நீட் பயிற்சி மையங்கள் இல்லாததும், தரமான கல்வி முறை இல்லாததும் ஒரு காரணம்&#8221; என்கிறார்கள் சில கல்வியாளர்கள்.<br><br>கஜேந்திர பாபு கூறும்போது, &#8221;வசதிபடைத்தவர்களாக இருந்தால், தனியார் கல்லூரிக்கு சென்றுவிடுவார்கள். அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் தான் மாணவர்களுக்கு உதவ வேண்டும். அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பின்தங்கியவர்களாக இருக்கிறார்கள்&#8221; என்றார்.<br><br>மாலதி கூறும்போது, &#8221;நீட் தேர்வு அரசியலாக்கப்பட்டுள்ளது. இதனை வாக்கு வங்கியாக மாற்ற முயற்சிக்கிறார்கள். குழந்தைகளின் மன நிலையோடு அவர்கள் விளையாடுகிறார்கள்&#8221; என்றார்.</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/social-justice/what-is-behind-student-suicide-in-tamil-nadu/">தமிழகத்தில் மட்டும் நீட் தற்கொலைகள் ஏன்?: கல்வியாளர்கள் விளக்கம்</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://desiyamurasu.com/social-justice/what-is-behind-student-suicide-in-tamil-nadu/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
	</channel>
</rss>
