<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>national flag Archives - தேசிய முரசு - Desiya Murasu</title>
	<atom:link href="https://desiyamurasu.com/tag/national-flag/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://desiyamurasu.com/tag/national-flag/</link>
	<description>DesiyaMurasu – Daily Opinions &#38; Analysis on Latest News  &#124; Tamil News</description>
	<lastBuildDate>Wed, 10 Feb 2021 09:46:20 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.1</generator>

<image>
	<url>https://desiyamurasu.com/wp-content/uploads/2020/07/cropped-FAV-copy-1-32x32.png</url>
	<title>national flag Archives - தேசிய முரசு - Desiya Murasu</title>
	<link>https://desiyamurasu.com/tag/national-flag/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>தேசியக் கொடி அவமதிப்பு என மோடி வருத்தம் : உருக்கமா ? நடிப்பா?</title>
		<link>https://desiyamurasu.com/news-india/national-flag-deep-sidhu-rss-golwalkar-red-fort-narendra-modi/</link>
					<comments>https://desiyamurasu.com/news-india/national-flag-deep-sidhu-rss-golwalkar-red-fort-narendra-modi/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Admin]]></dc:creator>
		<pubDate>Wed, 10 Feb 2021 09:46:18 +0000</pubDate>
				<category><![CDATA[தேசிய அரசியல்]]></category>
		<category><![CDATA[Narendra Modi]]></category>
		<category><![CDATA[national flag]]></category>
		<guid isPermaLink="false">https://desiyamurasu.com/?p=4078</guid>

					<description><![CDATA[<p>குடியரசுத் தினத்தன்று தேசியக் கொடி அவமதிக்கப்பட்டதாகச் சொல்லி உருகியிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. அன்றைய தினம் நடந்த போராட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள், அவரது நண்பர்கள் மற்றும் எதிரிகளை நினைத்துத்தான் அவர் இவ்வாறு வேதனைப்படுகிறார். தேசியக் கொடி பட்டொளி வீசிக் கொண்டிருந்தபோது, அதன் அருகில் கொடி ஏதும் இன்றி நின்றிருந்த கம்பத்தில் தான் நிஷான் ஷாஹிப் மதக் கொடியை ஏற்றினார்கள். அது காலிஸ்தான் கொடியல்ல என்பதும் பின்னர் உறுதியானது. அந்த கம்பத்தில் கொடி ஏற்றியவர்கள் அதனை வீடியோவாக எடுத்து, [&#8230;]</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/national-flag-deep-sidhu-rss-golwalkar-red-fort-narendra-modi/">தேசியக் கொடி அவமதிப்பு என மோடி வருத்தம் : உருக்கமா ? நடிப்பா?</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>குடியரசுத் தினத்தன்று தேசியக் கொடி அவமதிக்கப்பட்டதாகச் சொல்லி உருகியிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.</p>



<p>அன்றைய தினம் நடந்த போராட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள், அவரது நண்பர்கள் மற்றும் எதிரிகளை நினைத்துத்தான் அவர் இவ்வாறு வேதனைப்படுகிறார்.</p>



<p>தேசியக் கொடி பட்டொளி வீசிக் கொண்டிருந்தபோது, அதன் அருகில் கொடி ஏதும் இன்றி நின்றிருந்த கம்பத்தில் தான் நிஷான் ஷாஹிப் மதக் கொடியை ஏற்றினார்கள். அது காலிஸ்தான் கொடியல்ல என்பதும் பின்னர் உறுதியானது. அந்த கம்பத்தில் கொடி ஏற்றியவர்கள் அதனை வீடியோவாக எடுத்து, சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தனர்.</p>



<p>அந்தக கொடியை ஏற்றிவிட்டு வீடியோ எடுத்துக் கொண்டவர் யார் என்பதும், அவர் ஆளும் கட்சிக்கு எவ்வளவு நெருக்கமானவர் என்பதும் இந்த உலகத்துக்கே தெரியும். அந்தக் கொடியை ஏற்ற தூண்டுதலாக இருந்தவரின் பிரதமருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் வெளியாகிக் கொண்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில், பிரதமர் மனது புண்படும் அளவுக்கு தேசியக் கொடியை அவமதித்தது யார் என்பதை அறிந்து கொள்வது நாட்டின் தேவையாகும்.</p>



<p>சீக்கிய சமுதாயத்திலிருந்து யாரோ ஒருவர் தேசியக் கொடியை அவமதித்துவிட்டார் என்பதால், ஒட்டுமொத்த சீக்கியர்களையும் தேசவிரோதிகள் என்று காட்ட முயற்சிப்பது எந்த வகையில் நியாயம்?. சீக்கிய சமுதாயத்திலிருந்து சிறந்த விவசாயிகளும், கடமை உணர்வு கொண்ட ராணுவ வீரர்களும் உள்ளனர். ராணுவத்தில் பணியாற்றுவோரில் சீக்கியர்களே அதிகமாக உள்ளனர்.</p>



<p>அவசரத்தில் இயற்றப்பட்ட சட்டங்களைச் சீக்கியர்கள் எதிர்ப்பதாலேயே, அவர்களது தேச பக்தியை இழிவுபடுத்த முடியாது.</p>



<p>எத்தனையோ தடைகள் இருந்தாலும், டெல்லி எல்லையில் விவசாயிகளின் நீண்ட மற்றும் அமைதியான போராட்டம் நீதி கேட்கும் போராட்டமாக மாறியுள்ளது. போராடும் சீக்கிய விவசாயிகளை, உறுதியான ஆதாரங்கள் இல்லாமல் தேசவிரோதப் பிரிவினைவாதிகள் என அழைப்பது மூர்க்கத்தனமானது. கடல் போன்ற விவசாயிகள் போராட்டத்தில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் ஊடுருவியிருக்கலாம். அதேசமயம், இந்த போராட்டத்தில் அந்நிய உளவாளிகள் இல்லை என்பதை உயரதிகாரிகளால் சொல்ல முடியுமா?</p>



<p>மதவெறியர்களை விட அரசியல் ரீதியாகப் பஞ்சாப் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இரண்டே அறிவிப்புகள் அனைத்து பிரச்சினைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிடும்.</p>



<p>ஒன்று, குறைந்தபட்ச ஆதரவு விலை தொடரும் என்ற சட்ட ரீதியான உறுதி. மற்றொன்று, அம்பானி, அதானி கைக்கு விவசாய உற்பத்தி போவது உண்மையில்லை என்பதை உறுதிப் படுத்த வேண்டிய அரசின் கடமை.</p>



<p>இந்த இரண்டு உறுதிமொழிகள் மட்டுமே, விவசாயிகள் போராட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.</p>



<p>ஓர் ஆட்சியாளர் தனது சொந்த மக்களிடமிருந்து தன்னைத் தடுத்து நிறுத்த ஆழமான அகழிகளைத் தோண்டி, கான்க்ரீட் தடுப்புகளைக் கட்ட வேண்டிய அவசியமில்லை. அவர்களைக் கொலையாளிகளைப் போல் நடத்தவேண்டிய அவசியமில்லை.</p>



<p>குடியரசுத் தினத்தன்று நாம் கண்ட கொந்தளிப்பான காட்சிகள் அதிகம் என்பதால், 2 மாதங்களுக்கும் மேலாக அமைதியாகப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய அமைப்புகளுக்கு நாம் நம்பகத்தன்மையை வழங்க வேண்டும்.</p>



<p>அமைதியான டிராக்டர் பேரணி நடைபெறுவதற்கு முன்பே, டெல்லிக்குள் நுழைந்து ஆத்திரமூட்டும் செயலில் ஈடுபட்டவர்களை அடையாளம் கண்டு நேர்மையை நிலைநாட்ட வேண்டியது காவல் துறையினரின் கடமை. இதற்கான வீடியோ ஆதாரங்கள் உள்ளன. சமீபகாலங்களில் எத்தனையோ கடுமையான எதிர்ப்புகளை இந்தியா கண்டுள்ளதைச் சமகால வரலாறு மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம். ஆனால், இதுபோன்ற வன்முறைச் சம்பவங்களை மக்கள் இதுவரை எதிர்கொண்டதில்லை.</p>



<p>அவமதிக்கப்படாத தேசியக் கொடிக்காக வருந்தும் நரேந்திர மோடி, தங்களது ஆசான் ஆர்எஸ்எஸ் இயக்கம் தேசியக் கொடியைக் கொடியை எவ்வாறு எல்லாம் அவமதித்தது என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். இந்த மூவர்ணக் கொடியின் வண்ணம், மோசமான உளவியல் விளைவை ஏற்படுத்துவதாக ஆர்எஸ்எஸ் இயக்கம் கூறியது. மூன்று என்ற சொல் தீமையின் அடையாளம் என்று விமர்சித்தனர்.</p>



<p>3 என்பதில் இந்துயிசத்தின் கோட்பாடுகளும் அடங்கியிருக்கின்றன. திரிசூலம், மும்மூர்த்திகள் பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன் ஆகியோரும் இந்த மூன்றில் அடங்கியுள்ளனர். இதையெல்லாம் தீமை என்று ஆர்எஸ்எஸ் இயக்கம் சொல்லுமா?</p>



<p>மோடியின் குருநாதரும். ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் இரண்டாவது தலைவருமான எம்.எஸ். கோல்வல்கர், &#8221; சுதந்திர இந்தியாவின் புதிய கொடியைத் தலைவர்களாகிய நாங்கள் உருவாக்குவோம் என்றார். பழமையான நம் நாட்டுக்கு சொந்தக் கொடி இல்லையா? தேசிய சின்னம் இல்லையா?. சந்தேகமின்றி நிச்சயம் இருந்தது என்று கோல்வல்கர் குறிப்பிட்டுள்ளார். இந்துக்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு, காவிக் கொடியை தேசியக் கொடியாக உருவாக்க வேண்டும் என்பதே கோல்வல்கரின் எண்ணமாக இருந்தது.</p>



<p>நிலைமை இப்படியிருக்க, விவசாயிகள் போராட்டத்தில் தேசியக் கொடி அவமதிக்கப்பட்டதாக மோடி பதறுகிறார்.</p>



<p>தேசியக் கொடிக்கு எதிரான எதிர்ப்பைக் கைவிட கோல்வல்கரை சர்தார் வல்லபாய் படேல் வலியுறுத்தினார். அதற்குப் பரிகாரமாக ஆர்எஸ்எஸ் மீதான 18 மாத தடையை நீக்குவதற்கும், அதன் தலைவர்களைச் சிறையிலிருந்து விடுவிக்கவும் இந்த கோரிக்கையை வைத்தார். இந்த விஷயம் மோடிக்குத் தெரியாதா?</p>



<p>எனவே, தேசியக் கொடியை அவமதிப்பது காயப்படுத்துகிறது என்பதை இந்தியாவும் இந்தியர்களும் தீர்மானிப்பது தான் புத்திசாலித்தனம். இங்கு நீலிக்கண்ணீருக்கு இடமில்லை என்பதைப் பிரதமர் மோடி புரிந்து கொள்ள வேண்டும்.</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/national-flag-deep-sidhu-rss-golwalkar-red-fort-narendra-modi/">தேசியக் கொடி அவமதிப்பு என மோடி வருத்தம் : உருக்கமா ? நடிப்பா?</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://desiyamurasu.com/news-india/national-flag-deep-sidhu-rss-golwalkar-red-fort-narendra-modi/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>தேசியக் கொடி உருவாக்கம் − 1947</title>
		<link>https://desiyamurasu.com/freedom-sacrifice/making-of-national-flag-1947/</link>
					<comments>https://desiyamurasu.com/freedom-sacrifice/making-of-national-flag-1947/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[ஆ. கோபண்ணா]]></dc:creator>
		<pubDate>Sat, 15 Aug 2020 02:18:18 +0000</pubDate>
				<category><![CDATA[விடுதலை வேள்வியில்]]></category>
		<category><![CDATA[national flag]]></category>
		<category><![CDATA[nehru]]></category>
		<guid isPermaLink="false">https://desiyamurasu.com/?p=1427</guid>

					<description><![CDATA[<p>1947 ஆகஸ்டில் இந்தியா சுதந்திரம் பெறுவதற்குச் சில தினங்களுக்கு முன்பு, அரசியல் நிர்ணய சபை அமைக்கப்பட்டது. அரசியல் நிர்ணய சபை 1947 ஜூன் 23 இல் டாக்டர் ராஜேந்திர பிரசாத் தலைமையில், மெளலானா அபுல்கலாம் ஆஸாத், சரோஜினி நாயுடு, சி.ராஜகோபாலாச்சாரியார், கே.எம்.முன்ஷி, டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்ட தனிக் குழு ஒன்றைச் சுதந்திர இந்தியாவிற்கான கொடியைத் தேர்ந்தெடுப்பதற்காக அமைத்தது. அரசியல் நிர்ணய சபை 1947 ஜூலை 22 இல் இந்தியாவிற்கான புதிய மூவண்ணக்கொடியாகக் கொடியின் வெள்ளைப்பகுதியின் [&#8230;]</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/freedom-sacrifice/making-of-national-flag-1947/">தேசியக் கொடி உருவாக்கம் − 1947</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>1947 ஆகஸ்டில் இந்தியா சுதந்திரம் பெறுவதற்குச் சில தினங்களுக்கு முன்பு, அரசியல் நிர்ணய சபை அமைக்கப்பட்டது. அரசியல் நிர்ணய சபை 1947 ஜூன் 23 இல் டாக்டர் ராஜேந்திர பிரசாத் தலைமையில், மெளலானா அபுல்கலாம் ஆஸாத், சரோஜினி நாயுடு, சி.ராஜகோபாலாச்சாரியார், கே.எம்.முன்ஷி, டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்ட தனிக் குழு ஒன்றைச் சுதந்திர இந்தியாவிற்கான கொடியைத் தேர்ந்தெடுப்பதற்காக அமைத்தது. அரசியல் நிர்ணய சபை 1947 ஜூலை 22 இல் இந்தியாவிற்கான புதிய மூவண்ணக்கொடியாகக் கொடியின் வெள்ளைப்பகுதியின் மத்தியில் ராட்டை சின்னத்திற்குப் பதிலாக, தர்மசக்கரத்துடன் கூடிய (அசோகப் பேரரசின் சட்டம், நீதிக்கான சக்கரச் சின்னம்) கொடியை ஏற்றுக்கொண்டது. ஜவஹர்லால் நேரு புதிய கொடியை முறைப்படி ஏற்றுக் கொள்வதற்கான தீர்மானத்தை அரசியல் நிர்ணய சபையில் கொண்டுவந்தார். அப்போது சுதந்திர இந்தியாவின் மூவண்ணக் கொடியின் முக்கியத்துவம் பற்றி, என்றும் நினைவில் இருக்கக் கூடிய வகையில் உரை ஒன்றை வழங்கினார்.</p>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large"><img fetchpriority="high" decoding="async" width="487" height="616" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/08/Jawaharlal-Nehru-hoists-the-tricolor-National-Flag-as-the-first-Prime-Minister-of-free-India-at-the-Red-Fort-Delhi-on-Independence-Day-15-August-1947.jpg" alt="" class="wp-image-1428" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/08/Jawaharlal-Nehru-hoists-the-tricolor-National-Flag-as-the-first-Prime-Minister-of-free-India-at-the-Red-Fort-Delhi-on-Independence-Day-15-August-1947.jpg 487w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/08/Jawaharlal-Nehru-hoists-the-tricolor-National-Flag-as-the-first-Prime-Minister-of-free-India-at-the-Red-Fort-Delhi-on-Independence-Day-15-August-1947-237x300.jpg 237w" sizes="(max-width: 487px) 100vw, 487px" /></figure></div>



<h4 class="wp-block-heading"><strong>நேரு </strong><strong>ஆற்றிய </strong><strong>உரை</strong><strong>:</strong></h4>



<p>“இந்தத் தீர்மானத்தைக் கொண்டுவருமாறு என்னை பணித்திருப்பது பெருமிதம் தரும் தனிச் சிறப்பு என்று நான் குறிப்பிட விரும்புகிறேன். இப்போது இந்தக் கொடியைப் பற்றி நான் சில வார்த்தைகள் கூறலாமா?</p>



<p>“கடந்த காலங்களில் நம்மில் பலரும் பயன்படுத்தி வந்த கொடியிலிருந்து இந்தக் கொடி சிறிது மாறுபாட்டு இருப்பது நமக்குத் தெரிகிறது. இதில் உள்ள வண்ணங்களில் மாற்றமில்லை − அடர்குங்குமப்பூ நிறம், வெள்ளை, கரும்பச்சை. முன்பு கொடியின் வெள்ளை நிறப்பகுதியில் இந்தியாவின் சராசரி குடிமகனைக் குறிக்கும் விதத்திலும், மக்களின் பெருங்கூட்டத்தைக் குறிக்கும் வகையிலும் அவர்களின் தொழில்களைக் குறிக்கும் விதத்திலும் மகாத்மா காந்தி வழங்கிய போதனையிலிருந்து கிடைத்த ராட்டைச் சின்னம் இருந்தது. தற்போது, இந்த ராட்டைச் சின்னம நீக்கப்படாமல், இந்தக் கொடியில் சிறிது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஏன் இந்த மாற்றம்? சாதாரணமாகப் பார்க்கும்போது, கொடியின் ஒருபக்கம் இருக்கும் சின்னம் மறுபக்கத்திலும் அதேவிதமாகத் தெரியவேண்டும். அப்படி இல்லாவிடில் அது நடைமுறை விதிகளுக்குப் புறம்பானதாகப் போய்விடும்.</p>



<p>“முன்பு, இந்தக் கொடியின் ஒரு முனையில் ராட்டையின் சக்கரமும், மறுமுனையில் நூல் நூற்கும் பகுதியும் இருக்கும். இதைப் பார்க்கும்போது கொடியில் ஒருபக்கத்தில் இருப்பதைப்போன்றே மறுபக்கத்திலும் தெரிவதில்லை. இதில் நடைமுறைச் சிக்கல் இருந்தது. ஆகவே, தீவிரமான சிந்தனைக்குப் பிறகு, மக்களுக்கு உற்சாகம் அளித்து வந்த ராட்டைச்சின்னம் தொடர்ந்து சற்று மாறுபட்ட வடிவத்தில் இடம்பெற்றாக வேண்டும். ராட்டையின் நூல் நூற்கும் பகுதிகளைத் தவிர்த்துவிட்டு முக்கியமான சக்கரத்தை மட்டும் இடம்பெறச் செய்வதற்கு ஒப்புக்கொண்டோம். இவ்வகையில், ராட்டை, சக்கரம் ஆகியவற்றோடான நமது பழமையான பாரம்பரியம் தொடரும்.</p>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large"><img decoding="async" width="695" height="451" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/08/Prime-Minister-Nehru-unfurls-the-National-Flag-on-the-ramparts-of-the-historic-Red-Fort-Delhi.jpg" alt="" class="wp-image-1431" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/08/Prime-Minister-Nehru-unfurls-the-National-Flag-on-the-ramparts-of-the-historic-Red-Fort-Delhi.jpg 695w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/08/Prime-Minister-Nehru-unfurls-the-National-Flag-on-the-ramparts-of-the-historic-Red-Fort-Delhi-300x195.jpg 300w" sizes="(max-width: 695px) 100vw, 695px" /></figure></div>



<p>“ஆனால், எந்த விதமான சக்கரம் நமக்கு இருக்கவேண்டும்? எங்களது சிந்தனை பலவிதமான சக்கரங்களை நாடியது. ஆனால், குறிப்பாகப் பல பகுதிகளிலும் காணப்படும், நாம் அனைவருமே பார்த்திருக்கும், அசோக ஸ்தூபியில் உள்ள புகழ்வாய்ந்த சக்கரத்தின்மீது எங்கள் அனைவரின் சிந்தனையும் மையம் கொண்டது. இந்தச் சக்கரம் இந்தியாவின் பழம்பெரும் பண்பாட்டின் சின்னம்; இந்தியா காலம்காலமாக எவற்றுக்காகவெல்லாம்  பாடுபட்டதோ அவற்றையெல்லாம் சித்தரிக்கும் சின்னம். ஆகவே, இந்த அசோகச் சக்கரம், கொடியில் இடம்பெறவேண்டும் என்று நாங்கள் எண்ணினோம். அவ்வாறே சக்கரம் இடம் பெற்றிருக்கிறது.</p>



<p>“என்னைப் பொருத்தவரை நான் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருக்கிறேன். நம்முடைய கொடியின் உருவாக்கத்தில் இந்தச் சின்னத்தை நாம் இணைத்துள்ளோம். இந்தச் சின்னத்தை மட்டுமல்லாமல், இந்திய வரலாற்றின் மிக அற்புதமான பெயர்களுள் ஒன்றாகிய அசோகரின் பெயரையும் ஒரு விதத்தில் மறைமுகமாக இணைத்திருக்கிறோம்.</p>



<p>சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு, செங்கோட்டையில் 1947 ஆகஸ்ட் 16 அன்று தேசியக்கொடியை முதல்முறையாக ஏற்றி பட்டொளி வீசிப் பறக்க வைத்தார். அன்று தொடங்கி, தேசியக்கொடியை நேரு செங்கோட்டையில் 17 முறை ஏற்றினார். இதுவரை இந்தியாவின் எந்தப் பிரதமரும் ஏற்றி இராத அதிகபட்சமான எண்ணிக்கையாகும் இது.</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/freedom-sacrifice/making-of-national-flag-1947/">தேசியக் கொடி உருவாக்கம் − 1947</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://desiyamurasu.com/freedom-sacrifice/making-of-national-flag-1947/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
	</channel>
</rss>
