<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Narendra Modi Archives - தேசிய முரசு - Desiya Murasu</title>
	<atom:link href="https://desiyamurasu.com/tag/narendra-modi/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://desiyamurasu.com/tag/narendra-modi/</link>
	<description>DesiyaMurasu – Daily Opinions &#38; Analysis on Latest News  &#124; Tamil News</description>
	<lastBuildDate>Mon, 12 Apr 2021 12:21:39 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.1</generator>

<image>
	<url>https://desiyamurasu.com/wp-content/uploads/2020/07/cropped-FAV-copy-1-32x32.png</url>
	<title>Narendra Modi Archives - தேசிய முரசு - Desiya Murasu</title>
	<link>https://desiyamurasu.com/tag/narendra-modi/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>நிதானமற்ற பேச்சால் வகிக்கும் உயர்ந்த பதவியை குழிதோண்டிப் புதைத்த மோடி, அமித்ஷா</title>
		<link>https://desiyamurasu.com/news-india/isnt-it-time-prime-minister-to-exercise-some-restraint-when-you-speak/</link>
					<comments>https://desiyamurasu.com/news-india/isnt-it-time-prime-minister-to-exercise-some-restraint-when-you-speak/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Admin]]></dc:creator>
		<pubDate>Mon, 12 Apr 2021 12:21:35 +0000</pubDate>
				<category><![CDATA[தேசிய அரசியல்]]></category>
		<category><![CDATA[Amit Shah]]></category>
		<category><![CDATA[Assembly Election 2021]]></category>
		<category><![CDATA[Narendra Modi]]></category>
		<guid isPermaLink="false">https://desiyamurasu.com/?p=4309</guid>

					<description><![CDATA[<p>உயர்ந்த பொறுப்பிலிருந்து கொண்டு, பொறுமை இழந்து பேசாமல் பிரதமர் மோடியும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டிய நேரம் இது. இருவரும் பயன்படுத்தும் வார்த்தைகள் அவர்கள் வகிக்கும் உயர்ந்த பதவிக்கு ஏற்றதல்ல. தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளாவிட்டாலும், தவறான மற்றும் வகுப்புவாதக் கருத்துகளை அவர்கள் தவிர்க்க வேண்டும். தேர்தல் பிரச்சாரத்தின் போது, வாக்குகளைப் பெறுவதற்காக பெரும் எண்ணிக்கையிலான மக்களை இழிவுபடுத்துவதையும் அவமதிப்பதையும் பிரதமரும் உள்துறை அமைச்சரும் செய்யலாமா? அல்லது ஒவ்வொருவரும் மதிக்க, தாங்கள் தகுதியானவர்கள் என்பதை [&#8230;]</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/isnt-it-time-prime-minister-to-exercise-some-restraint-when-you-speak/">நிதானமற்ற பேச்சால் வகிக்கும் உயர்ந்த பதவியை குழிதோண்டிப் புதைத்த மோடி, அமித்ஷா</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>உயர்ந்த பொறுப்பிலிருந்து கொண்டு, பொறுமை இழந்து பேசாமல் பிரதமர் மோடியும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டிய நேரம் இது.</p>



<p>இருவரும் பயன்படுத்தும் வார்த்தைகள் அவர்கள் வகிக்கும் உயர்ந்த பதவிக்கு ஏற்றதல்ல. தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளாவிட்டாலும், தவறான மற்றும் வகுப்புவாதக் கருத்துகளை அவர்கள் தவிர்க்க வேண்டும்.</p>



<p>தேர்தல் பிரச்சாரத்தின் போது, வாக்குகளைப் பெறுவதற்காக பெரும் எண்ணிக்கையிலான மக்களை இழிவுபடுத்துவதையும் அவமதிப்பதையும் பிரதமரும் உள்துறை அமைச்சரும் செய்யலாமா? அல்லது ஒவ்வொருவரும் மதிக்க, தாங்கள் தகுதியானவர்கள் என்பதை நிலைநாட்ட, அவர்களது பேச்சு ஒழுக்கமானதாக இருக்க வேண்டாமா? அவர்கள் வகிக்கும் உயர் பதவிகளை தேர்தல் ஆதாயத்துக்காக சமரசம் செய்யலாமா?</p>



<p>தேர்தலின் போது அவர்கள் பேசும் பேச்சுக்கள் அண்டை நாடுகளுடனான இந்தியாவின் உறவை பாதிக்காதா? பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரின் கருத்துகளால் எல்லை தாண்டி இந்தியாவுக்கு எதிரான உணர்வுகள் ஏற்பட்டால், அது தேசிய நலனை பாதிக்காதா? அல்லது, உள்நாட்டு அரசியல் பலி பீடத்தில் கவனமாக வடிவமைக்கப்ட்ட வெளியுறவுக் கொள்கையை தியாகம் செய்வது சரியா? மோடியும் அமித்ஷாவும் இந்தியாவின் நலனை மீறி பா.ஜ.க.வுக்கு முன்னுரிமை தரப்போகிறார்களா?</p>



<p>மேற்கு வங்காளம், அசாம், கேரளா, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் நட்சத்திர பிரச்சாரகர்களாக இருந்தனர். தாங்கள் வகிக்கும் உயர் பதவிகளை இழிவுபடுத்தாமல் இருக்க, தங்கள் நாக்குகளை அவர்கள் அடக்கிக் கொண்டு இருந்திருக்க வேண்டும். அவர்கள் தங்களைத் தாங்களே கட்டுப்படுத்திக் கொண்டிருந்திருக்க வேண்டும். அதோடு, அவர்கள் வகிக்கும் உயர் பதவி, இழிவுபடுத்தப்படவோ, மதிப்பிழக்கவோ கூடாது என்றால், அசிங்கமான சிறு அரசியலிலிருந்து விலகி இருந்திருக்க வேண்டும். அதனையும் மீறி அவர்களது மோசமான பேச்சுகள் அமைந்தால், அவர்கள் வகிக்கும் பதவிகள் களங்கப்படுத்தப்படுவதைத் தவிர்க்க முடியாது. அவர்களது இழிபேச்சுகள் அரசாண்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தி அமைதியின்மையை ஏற்படுத்தும்.</p>



<p>மோடி மற்றும் அமித்ஷாவின் தேர்தல் உரைகள், வெறுக்கத்தக்கதாக இருந்தால், அது இந்தியாவின் நாடாளுமன்ற ஜனநாயகத்துக்குத் தீங்கு விளைவிக்கும். தேசிய ஒற்றுமைக்கு எதிரான அரசியலை முன்னெடுக்காமல், ஒவ்வொருவருக்கும் மரியாதை தர வேண்டியது பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரின் கடமை. நாம் ஒற்றுமையாக இருக்காவிட்டால், நம் எல்லைக்குள் ஊடுருவியுள்ள சீனாவின் மக்கள் விடுதலை ராணுவத்தை எப்படி வெளியேற்ற முடியும்? பாகிஸ்தானிடமிருந்து ஜம்மு காஷ்மீரை எப்படிக் காப்பாற்ற முடியும்? இடதுசாரி தீவிரவாத ராணுவ குழுக்களுடன் எப்படிப் போரிட முடியும்? கொரோனாவுடனான போராட்டத்தை எப்படி முடிவுக்குக் கொண்டு வர முடியும்? நலிந்துபோன நமது பொருளாதாரத்தை மீண்டும் ஆரோக்கியமான நிலைக்கு எப்படி கொண்டு வர முடியும்?</p>



<p>அசாம் தேர்தல் பரப்புரையின் போது திஸ்பூரில் பேசிய அமித்ஷா, &#8216;சுயச்சார்பு அசாம் வேண்டுமா? அல்லது மவுலானா சார்பு அசாம் வேண்டுமா?&#8217; என வாக்காளர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார். காங்கிரஸ் கட்சியுடன் அசாமில் கூட்டணி அமைத்திருக்கும் பத்ருதீன் அஜ்மலின் ஏஐயூடிஎஃப் கட்சியைத் தான் அவ்வாறு விமர்சித்துள்ளார். ஆகவே, சுயச்சார்பு அசாம் அல்லது அஜ்மல் சார்பு அசாம் ஆகியவற்றில் ஒன்றைத் தேர்வு செய்யுங்கள் என்று அவர் வாக்காளர்களிடம் கூறுகிறார். இது நியாயமா? அவர் மவுலானாவை ஏன் குறிப்பிட்டார் என்றால், அவர் முஸ்லீம்களால் மதிக்கப்படும் மத அறிஞர். சிறுபான்மை சமூகத்தைக் கேலி செய்வதாகவும், இந்து மற்றும் முஸ்லீம் வாக்காளர்களிடையே பிளவை ஏற்படுத்தும் வகையிலும் அமித்ஷாவின் இந்த பேச்சு அமைந்துள்ளது. அவரது பேச்சு பல ஊடகங்களில் வெளியாகியுள்ளது. தன்னை முஸ்லீம்களுக்கு எதிரான நபராகப் பார்க்குமாறு முஸ்லீம் மக்களை நிர்ப்பந்திக்கிறார். அனைவருக்கும் பொதுவானவராக இருக்க வேண்டிய உள்துறை அமைச்சர் மீதான நம்பிக்கையை இந்தியர்களின் ஒரு பிரிவினர் இழப்பதற்கு, அமித்ஷாவே காரணமாகிறார்.</p>



<p>மவுலானாவை முரண்பாடாக பயன்படுத்துவதை அமித்ஷா தவிர்த்திருக்க வேண்டும். பிரச்சாரம் முழுவதும் ஊடுருவல் காரர்களைப் பற்றி அவர் பேசியது, புதுடெல்லி-டாகா உறவை சிக்கலுக்கு உள்ளாக்கும்.</p>



<p>குறிப்பாக வங்கதேச ஊடுருவல் காரர்களை வெளியேற்றுவோம் என்ற அமித்ஷாவின் பேச்சு, சீனாவுடன் முழுவதும் சார்ந்திருக்கும் நிலையை எடுக்கவும், பாகிஸ்தானுடன் உறவை ஏற்படுத்திக் கொள்ளவும் வங்கதேசத்தை இந்தியா தள்ளும் சூழல் ஏற்படும். ஊடுருவல் காரர்களும் அல்லது குஸ்பெத்தியாக்களும் தான் அமித்ஷாவின் குறியாக இருக்கிறது. அப்படியிருக்கும் போது, தமது கட்டுப்பாட்டின் கீழ் வரும் எல்லைப் பாதுகாப்புப் படை, வங்கதேச எல்லையில் கடமையிலிருந்து தவறிவிட்டதை அமித்ஷாவே ஒப்புக்கொள்கிறார். அமித்ஷாவின் குற்றச்சாட்டுகளின் படி பார்த்தால், இந்தியாவுக்குள் நுழையும் வங்கதேசத்தவரை, லஞ்சம் வாங்கிக் கொண்டு எல்லைப் பாதுகாப்புப்படையினர் அனுமதிக்கிறார்கள் என்று புரிந்து கொள்ள முடிகிறது.</p>



<p>அமித்ஷாவை விட தான் வகிக்கும் பிரதமர் பதவியை இழிவுபடுத்துபவர் மோடி தான். பிரதமரின் பேச்சு நாலாந்தர பேச்சாளர்களின் பேச்சு போல் இருப்பதாக திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மாஹுவா மொய்ட்ரா கூறியுள்ளளார். மோடியின் நடத்தை கீழ்த்தரமாக இருப்பதாகப் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் கூறுகிறார். இது போன்ற புகழ்மாலை வேறு எந்த பிரதமருக்கும் கிடைத்திருக்காது என்றே நினைக்கிறேன். மம்தாவை தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்ததை மொய்ட்ரா கடுமையாகவே கண்டித்துள்ளார். வேலையில்லா திண்டாட்டத்தை மறைப்பதற்கு, மம்தா மீதான தனிப்பட்ட தாக்குதலை தேர்தல் பரப்புரையில் மோடி நிகழ்த்தியதாக மொய்ட்ரா சுட்டிக்காட்டுகிறார். மம்தாவை கேலி செய்து மோடி பேசுவதை கண்டித்துள்ள மற்றொரு திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் சஷி பஞ்சா, &#8216;பெண்களை துன்புறுத்துபவர்&#8217; என பிரதமரை விமர்சித்துள்ளார்.</p>



<p>கடந்த மார்ச் 24 ஆம் தேதி பிரதமர் மோடி கோண்டாயில் தேர்தல் பரப்புரையில் பேசியதை &#8216;தி டெலிகிராப்&#8217; நாளிதழ் தெளிவாக வெளியிட்டுள்ளது. அதில், &#8216;தீதி ஓ தீதீ&#8217; என்று பலமுறை அழைத்து மம்தாவை கேலி செய்துள்ளார். மம்தா யார் பேச்சையும் கேட்பதில்லை என்பதற்காக இப்படி அழைப்பதாக விளக்கமும் கொடுத்துள்ளார். பிரதமர் மோடி மம்தா பற்றி வேடிக்கையாகப் பேசினாலும், ஒரு பெண்ணை பற்றி மோசமான கருத்தை அவர் வெளிப்படுத்தினார்.</p>



<p>இந்நிலையில், கடந்த மார்ச் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் வங்கதேசத்துக்கு பிரதமர் மோடி சென்றபோது, அனைத்து சாதனைகளையும் முறியடித்தார். வங்கதேசம் சென்ற எந்த இந்தியப் பிரதமருக்கும் கிடைக்காத மரியாதை மோடிக்கு கிடைத்தது. மோடி டாகாவில் இறங்கியதும், அவரை அவமதிக்கும் விதமாக ஆயிரக்கணக்கானோர் தங்கள் காலணிகளை கையில் பிடித்து அசைத்துக் கொண்டிருந்தனர். மோடிக்கு எதிராகவும் இந்தியாவுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினர். வங்கதேச 50 ஆவது சுதந்திர கொண்டாட்டத்தில் பங்கேற்ற மோடியை அழைத்த ஷேக் ஹசீனாவின் முடிவை எதிர்த்து அவர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் போது காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 17 பேர் கொல்லப்பட்டனர்.</p>



<p>மோடியின் வங்கதேச பயணத்தின் நோக்கமே, டாகாவுக்கு வெளியே அமைந்துள்ள கோயிலுக்கு செல்வதுதான். மேற்கு வங்க மாநிலத்தில் 7 சட்டப்பேரவை தொகுதிகளில் அதிக அளவில் இருக்கும் மத்துவா சமுதாயத்தினர் அங்கு வாழ்கின்றனர். அவர்களை சந்தித்து மேற்கு வங்கத்தில் வாக்குகளை அறுவடை செய்யலாம் என்பது தான் மோடியின் திட்டம். தன் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து காலணிகளை காட்டியதையும் மீறி, அங்கு சென்ற ஒரே பிரதமர் மோடி என்று வரலாற்றில் இடம்பெற்றுவிட்டார். அவரது வருகையால் வங்கதேசம் 17 உயிர்களை இழந்தது.</p>



<p>இந்த சம்பவம் உண்மையிலேயே இந்தியா மீது படிந்த கறை தான். மோடி மற்றும் அமித்ஷாவின் பொறுப்பற்ற பேச்சுகள் மற்றும் வெறித்தனமான பா.ஜ.க. நிலைப்பாட்டால், அவர்கள் வகிக்கும் உயர்ந்த பதவி சொற்களாலும் செயல்களாலும் இழிவுபடுத்தப்பட்டுள்ளது.</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/isnt-it-time-prime-minister-to-exercise-some-restraint-when-you-speak/">நிதானமற்ற பேச்சால் வகிக்கும் உயர்ந்த பதவியை குழிதோண்டிப் புதைத்த மோடி, அமித்ஷா</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://desiyamurasu.com/news-india/isnt-it-time-prime-minister-to-exercise-some-restraint-when-you-speak/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>கொரோனா இரண்டாவது அலையை தடுக்க யோசனைகள்: பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கடிதம்</title>
		<link>https://desiyamurasu.com/news-india/congress-rahul-gandhi-letter-pm-narendra-modi-export-covid-19-shots/</link>
					<comments>https://desiyamurasu.com/news-india/congress-rahul-gandhi-letter-pm-narendra-modi-export-covid-19-shots/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Admin]]></dc:creator>
		<pubDate>Mon, 12 Apr 2021 11:41:55 +0000</pubDate>
				<category><![CDATA[தேசிய அரசியல்]]></category>
		<category><![CDATA[Covid-19]]></category>
		<category><![CDATA[Narendra Modi]]></category>
		<category><![CDATA[rahul gandhi]]></category>
		<guid isPermaLink="false">https://desiyamurasu.com/?p=4299</guid>

					<description><![CDATA[<p>பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எழுதியுள்ள கடிதம் : அன்புள்ள பிரதமருக்கு, மீண்டும் கொரோனா வைரஸ் மையம் கொண்டிருப்பது குறித்த மிகுந்த கவலையுடன் இந்த கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன். கடந்த ஓராண்டாக நம் நாடு பேரிழப்பால் பாதிக்கப்பட்டுள்ளது. பெரும் தியாகங்களை மக்கள் செய்துள்ளனர். இந்த சூழலில், மீண்டும் வைரஸ் தாக்குதலுக்கு நாம் ஆளாகியுள்ளோம். கொரோனா வைரசுக்கு தீர்வு காண நமது விஞ்ஞானிகள் சமூகத்தினரும் மருந்து வினியோகஸ்தர்களும் உறக்கமின்றி உழைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், மத்திய அரசின் [&#8230;]</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/congress-rahul-gandhi-letter-pm-narendra-modi-export-covid-19-shots/">கொரோனா இரண்டாவது அலையை தடுக்க யோசனைகள்: பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கடிதம்</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p><em>பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எழுதியுள்ள கடிதம் :</em></p>



<p>அன்புள்ள பிரதமருக்கு,</p>



<p>மீண்டும் கொரோனா வைரஸ் மையம் கொண்டிருப்பது குறித்த மிகுந்த கவலையுடன் இந்த கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன். கடந்த ஓராண்டாக நம் நாடு பேரிழப்பால் பாதிக்கப்பட்டுள்ளது. பெரும் தியாகங்களை மக்கள் செய்துள்ளனர். இந்த சூழலில், மீண்டும் வைரஸ் தாக்குதலுக்கு நாம் ஆளாகியுள்ளோம்.</p>



<p>கொரோனா வைரசுக்கு தீர்வு காண நமது விஞ்ஞானிகள் சமூகத்தினரும் மருந்து வினியோகஸ்தர்களும் உறக்கமின்றி உழைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், மத்திய அரசின் மோசமான செயலாக்கம் மற்றும் மேலோட்டமான நடவடிக்கையால் அவர்களது பணி குறைத்து மதிப்பிடப்படுவது துரதிருஷ்டவசமானது.</p>



<p>நமது நாட்டின் தற்போதைய சூழல் குறித்த முக்கிய அம்சங்கள்:</p>



<ul class="wp-block-list"><li>கொரோனா தடுப்பு மருந்தை இந்தியா தான் முதலில் கண்டுபிடித்தது. ஆனால், தடுப்பூசி போடுவதில் நாம் நத்தை வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறோம். உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்தை வடிவமைத்து, அதனை அனுபவத்தின் மூலம் இந்தியா செயல்படுத்தியது. தற்போதைய சூழலில், கடந்த 3 மாதங்களில் 1 சதவிகிதத்துக்கும் குறைவான மக்களுக்கே தடுப்பூசி போட்டுள்ளோம். நம் நாட்டின் பெருவாரியான மக்களுக்கு தடுப்பூசி போட வேண்டியுள்ளது.</li><li>இதே விகிதாச்சாரத்தில் நாம் தடுப்பூசி போட்டால், நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 75 சதவிகிதம் பேருக்கு தடுப்பூசி போடுவதற்கு பல ஆண்டுகள் ஆகும். இதனால் பேரழிவு ஏற்படுவதோடு, இந்திய பொருளாதாரமும் பெரிதும் பாதிக்கப்படும். பெருமளவில் கொரோனா தடுப்பூசி மருந்தை வெளிநாடுகளுக்கு மத்திய அரசு ஏன் ஏற்றுமதி செய்தது என்பதற்கான தெளிவான விளக்கம் தரப்படவில்லை. நம் நாட்டில் தடுப்பூசி பற்றாக்குறை இருக்கும்போது, 6 கோடிக்கு அதிகமான தடுப்பூசி மருந்துகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குற்றம் சாட்டுவதால், தடுப்பூசி பற்றாக்குறை திரும்பத் திரும்ப அந்த மாநில அரசுகள் சுட்டிக்காட்டுகின்றன. கூட்டுறவு கூட்டாட்சி மிகவும் அவசியம் என்று நீங்கள் கூட சொல்வீர்களே, அதே கூட்டுறவு கூட்டாட்சியை வேரோடு வெட்டும் செயல் தான் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.</li><li>சொந்த நாட்டு மக்களைப் பாதிப்படையச் செய்து, விளம்பரத்துக்காக அரசு பல முடிவுகளை எடுத்ததே, அதைப் போன்று தான் தடுப்பூசி ஏற்றுமதியும் நடந்ததா?</li><li>மையப்படுத்துதல் மற்றும் தனிப்பட்ட பிரச்சாரம் மட்டுமே பதிலாகக் கிடைக்கிறது. பொதுச் சுகாதாரம் மாநில அரசுகளின் வரையறைக்குட்பட்ட. தடுப்பூசி மருந்துகளை மாநில அரசுகள் கொள்முதல் செய்வதற்குப் பதிவு செய்ய அனுமதிக்கப்படவில்லை. மத்திய அரசே அதனை நேரடியாகச் செய்கிறது. தடுப்பூசி போட்டுக்கொள்ள இணையம் வழியே பதிவு செய்ய வேண்டும் என்று கூறியதால், பெரும்பாலான ஏழைகள் அவ்வாறு செய்ய முடியாமல் போனது.</li></ul>



<p>கடந்த 70 ஆண்டுகளாக தடுப்பூசி மையங்களை அமைப்பதில் உலக அளவில் இந்தியா சிறந்து விளங்கியதற்காகக் காங்கிரஸ் கட்சி பெருமை கொள்கிறது. இதன்மூலம் நன்கு திட்டமிட்டு தடுப்பூசி திட்டத்துக்கு ஆதரவளித்து, விரைந்து தடுப்பூசிகளைப் போட்டோம்.</p>



<p>தனிப்பட்ட நபருக்கான தடுப்பூசியாக இல்லாமல், பெருவாரியான மக்களுக்கான தடுப்பூசியாகக் காங்கிரஸ் ஆட்சியில் மாற்றினோம்.</p>



<p>எனவே, நான் உங்களை வேண்டிக் கொள்வது இதுதான்:</p>



<ul class="wp-block-list"><li>உற்பத்தித் திறனை அதிகரிக்க, தடுப்பூசி வினியோகஸ்தர்களுக்குத் தேவையான நிதி ஆதாரங்களை வழங்க வேண்டும்.</li><li>கொரோனா தடுப்பூசிகள் ஏற்றுமதிக்கு உடனே தடை விதிக்க வேண்டும்.</li><li>நெறிமுறைகள் மற்றும் வழிகாட்டுதலின்படி, மற்ற தடுப்பூசிகளுக்கும் விரைந்து ஒப்புதல் தரவேண்டும்.</li><li>ஒவ்வொருவருக்கும் தடுப்பூசி கிடைக்கச் செய்ய வேண்டும்.</li><li>தற்போது ரூ. 35 ஆயிரம் கோடி அளவுக்கு தடுப்பூசிகள் கொள்முதல் செய்வதை மத்திய அரசு இரட்டிப்பாக்க வேண்டும்.</li><li>தடுப்பூசியைக் கொள்முதல் செய்வதையும் விநியோகிப்பதையும் மாநில அரசுகளுக்குத் தருவதே சரியானது.</li><li>இரண்டாவது கொரோனா அலையில் பாதிக்கப்படுவோருக்கு நேரடியாக வருவாய் ஆதாரத்தை அளிக்க வேண்டும்.</li></ul>



<p>கொரோனா தடுப்பூசி திட்டத்தில் எங்களது ஏகோபித்த ஆதரவு உண்டு என்பதை மீண்டும் வலியுறுத்திக் கூறிக்கொள்கிறேன். இந்த யோசனைகளை விரைந்து பரிசீலிப்பீர்கள் என்று நம்புகிறேன்.</p>



<p>இவ்வாறு பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் ராகுல் காந்தி கூறியுள்ளார்.</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/congress-rahul-gandhi-letter-pm-narendra-modi-export-covid-19-shots/">கொரோனா இரண்டாவது அலையை தடுக்க யோசனைகள்: பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கடிதம்</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://desiyamurasu.com/news-india/congress-rahul-gandhi-letter-pm-narendra-modi-export-covid-19-shots/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>வெளிநாட்டுக்குச் செல்ல நேரம் இருக்கு, விவசாயிகளை பார்க்க நேரம் இல்லையா?: மோடிக்கு பிரியங்கா கேள்வி</title>
		<link>https://desiyamurasu.com/news-india/farm-laws-pm-modi-had-time-to-visit-china-pakistan-but-not-farmers-says-priyanka-gandhi-in-up/</link>
					<comments>https://desiyamurasu.com/news-india/farm-laws-pm-modi-had-time-to-visit-china-pakistan-but-not-farmers-says-priyanka-gandhi-in-up/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Admin]]></dc:creator>
		<pubDate>Sat, 13 Feb 2021 07:43:32 +0000</pubDate>
				<category><![CDATA[தேசிய அரசியல்]]></category>
		<category><![CDATA[Narendra Modi]]></category>
		<category><![CDATA[Priyanka Gandhi]]></category>
		<guid isPermaLink="false">https://desiyamurasu.com/?p=4101</guid>

					<description><![CDATA[<p>வெளிநாடுகளுக்குச் செல்ல நேரம் இருக்கும் பிரதமர் மோடிக்கு, விவசாயிகளைச் சந்திக்க நேரமில்லையா? என காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். உத்தரப்பிரதேசத்தில் உள்ள 27 மாவட்டங்களில் &#8216;ஜெய் ஜவான், ஜெய் கிஸான்&#8217; என்ற பிரச்சாரத்தைக் காங்கிரஸ் கட்சி நடத்துகிறது. இதன்படி, ஷஹரான்பூரில் விவசாயச் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் நடைபெற்றது. இதனையொட்டி நடந்த விவசாயிகள் மாநாட்டில் பிரியங்கா காந்தி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் செல்ல பிரதமருக்கு நேரமிருக்கிறது. ஆனால், அவரது [&#8230;]</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/farm-laws-pm-modi-had-time-to-visit-china-pakistan-but-not-farmers-says-priyanka-gandhi-in-up/">வெளிநாட்டுக்குச் செல்ல நேரம் இருக்கு, விவசாயிகளை பார்க்க நேரம் இல்லையா?: மோடிக்கு பிரியங்கா கேள்வி</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>வெளிநாடுகளுக்குச் செல்ல நேரம் இருக்கும் பிரதமர் மோடிக்கு, விவசாயிகளைச் சந்திக்க நேரமில்லையா? என காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.</p>



<p>உத்தரப்பிரதேசத்தில் உள்ள 27 மாவட்டங்களில் &#8216;ஜெய் ஜவான், ஜெய் கிஸான்&#8217; என்ற பிரச்சாரத்தைக் காங்கிரஸ் கட்சி நடத்துகிறது. இதன்படி, ஷஹரான்பூரில் விவசாயச் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் நடைபெற்றது. இதனையொட்டி நடந்த விவசாயிகள் மாநாட்டில் பிரியங்கா காந்தி கலந்து கொண்டார்.</p>



<p>அப்போது அவர் பேசியதாவது:</p>



<p>பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் செல்ல பிரதமருக்கு நேரமிருக்கிறது. ஆனால், அவரது சொந்தத் தொகுதியில் போராடும் விவசாயிகளைச் சந்திக்க அவருக்கு நேரமில்லை. இந்த விவசாயிகள் தான் வாரணாசி தொகுதியில் அவருக்கு வாக்களித்தவர்கள். புதிய விவசாயச் சட்டங்கள் தொடர்பாக விவசாயிகளின் நிலையை மத்திய அரசு புரிந்து கொள்ளவில்லை.</p>



<p>விவசாயிகளைத் தேச விரோதிகள் என பாரதிய ஜனதா கட்சியினர் கூறுகின்றனர். ஆனால், அரசாங்கமே தேசவிரோதமாக இருக்கிறது. போராடும் விவசாயிகளைத் தீவிரவாதிகள் மற்றும் பயங்கரவாதிகள் என்று அழைக்கிறார்கள். அவர்கள் விவசாயிகளைச் சந்தேகிக்கிறார்கள். ஆனால், விவசாயிகளின் இதயம் இந்த நாட்டுக்கு எதிராகச் செயல்பட்டதில்லை. நிலத்தில் உழைப்பதிலேயே விவசாயிகளின் இதயம் ஒன்றிப் போயிருக்கும். இரவு, பகலாக நிலத்தில் வியர்வை சிந்த உழைக்கும் விவசாயிகள், இந்த நாட்டை எப்படிக் காட்டிக் கொடுப்பார்கள்?</p>



<p>மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 விவசாயச் சட்டங்களும் பேய்கள். மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், 3 விவசாயச் சட்டங்களையும் ரத்து செய்வோம். எனினும், அதுவரை இந்த 3 சட்டங்களையும் ரத்து செய்யக் கோரி காங்கிரஸ் கட்சி தொடர்ந்து போராடும். எதிர்ப்புகளை வளர்ப்பவர்கள் என்று நாடாளுமன்றத்தில் பேசும்போது ஒரு வார்த்தையைப் பிரதமர் மோடி குறிப்பிட்டார். எதிர்ப்புகளை வளர்ப்பவர்கள் என்று கூறி, நாடாளுமன்றத்திலேயே விவசாயிகளைப் பிரதமர் மோடி அவமதிக்கிறார். வழக்குரைஞர்களோ, மாணவர்களோ அல்லது தொழிலாளர்களோ, யார் போராடினாலும் அவர்கள் பின்னால் செல்பவர்கள் ஆர்ப்பாட்டங்களுக்கு உணவளிக்கும் ஒட்டுண்ணிகள் போன்றவர்கள் என்று பிரதமர் மோடி பேசுகிறார். போராடுபவர்களை அவமதிப்பதைப் பிரதமர் மோடி வழக்கமாகக் கொண்டிருக்கிறார் என்றார்.</p>



<p>உத்தரப்பிரதேச காவல் துறையினர் விதித்த தடையுத்தரவையும் மீறி, விவசாயிகள் மாநாட்டில் பிரியங்கா காந்தி பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/farm-laws-pm-modi-had-time-to-visit-china-pakistan-but-not-farmers-says-priyanka-gandhi-in-up/">வெளிநாட்டுக்குச் செல்ல நேரம் இருக்கு, விவசாயிகளை பார்க்க நேரம் இல்லையா?: மோடிக்கு பிரியங்கா கேள்வி</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://desiyamurasu.com/news-india/farm-laws-pm-modi-had-time-to-visit-china-pakistan-but-not-farmers-says-priyanka-gandhi-in-up/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>தேசியக் கொடி அவமதிப்பு என மோடி வருத்தம் : உருக்கமா ? நடிப்பா?</title>
		<link>https://desiyamurasu.com/news-india/national-flag-deep-sidhu-rss-golwalkar-red-fort-narendra-modi/</link>
					<comments>https://desiyamurasu.com/news-india/national-flag-deep-sidhu-rss-golwalkar-red-fort-narendra-modi/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Admin]]></dc:creator>
		<pubDate>Wed, 10 Feb 2021 09:46:18 +0000</pubDate>
				<category><![CDATA[தேசிய அரசியல்]]></category>
		<category><![CDATA[Narendra Modi]]></category>
		<category><![CDATA[national flag]]></category>
		<guid isPermaLink="false">https://desiyamurasu.com/?p=4078</guid>

					<description><![CDATA[<p>குடியரசுத் தினத்தன்று தேசியக் கொடி அவமதிக்கப்பட்டதாகச் சொல்லி உருகியிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. அன்றைய தினம் நடந்த போராட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள், அவரது நண்பர்கள் மற்றும் எதிரிகளை நினைத்துத்தான் அவர் இவ்வாறு வேதனைப்படுகிறார். தேசியக் கொடி பட்டொளி வீசிக் கொண்டிருந்தபோது, அதன் அருகில் கொடி ஏதும் இன்றி நின்றிருந்த கம்பத்தில் தான் நிஷான் ஷாஹிப் மதக் கொடியை ஏற்றினார்கள். அது காலிஸ்தான் கொடியல்ல என்பதும் பின்னர் உறுதியானது. அந்த கம்பத்தில் கொடி ஏற்றியவர்கள் அதனை வீடியோவாக எடுத்து, [&#8230;]</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/national-flag-deep-sidhu-rss-golwalkar-red-fort-narendra-modi/">தேசியக் கொடி அவமதிப்பு என மோடி வருத்தம் : உருக்கமா ? நடிப்பா?</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>குடியரசுத் தினத்தன்று தேசியக் கொடி அவமதிக்கப்பட்டதாகச் சொல்லி உருகியிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.</p>



<p>அன்றைய தினம் நடந்த போராட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள், அவரது நண்பர்கள் மற்றும் எதிரிகளை நினைத்துத்தான் அவர் இவ்வாறு வேதனைப்படுகிறார்.</p>



<p>தேசியக் கொடி பட்டொளி வீசிக் கொண்டிருந்தபோது, அதன் அருகில் கொடி ஏதும் இன்றி நின்றிருந்த கம்பத்தில் தான் நிஷான் ஷாஹிப் மதக் கொடியை ஏற்றினார்கள். அது காலிஸ்தான் கொடியல்ல என்பதும் பின்னர் உறுதியானது. அந்த கம்பத்தில் கொடி ஏற்றியவர்கள் அதனை வீடியோவாக எடுத்து, சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தனர்.</p>



<p>அந்தக கொடியை ஏற்றிவிட்டு வீடியோ எடுத்துக் கொண்டவர் யார் என்பதும், அவர் ஆளும் கட்சிக்கு எவ்வளவு நெருக்கமானவர் என்பதும் இந்த உலகத்துக்கே தெரியும். அந்தக் கொடியை ஏற்ற தூண்டுதலாக இருந்தவரின் பிரதமருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் வெளியாகிக் கொண்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில், பிரதமர் மனது புண்படும் அளவுக்கு தேசியக் கொடியை அவமதித்தது யார் என்பதை அறிந்து கொள்வது நாட்டின் தேவையாகும்.</p>



<p>சீக்கிய சமுதாயத்திலிருந்து யாரோ ஒருவர் தேசியக் கொடியை அவமதித்துவிட்டார் என்பதால், ஒட்டுமொத்த சீக்கியர்களையும் தேசவிரோதிகள் என்று காட்ட முயற்சிப்பது எந்த வகையில் நியாயம்?. சீக்கிய சமுதாயத்திலிருந்து சிறந்த விவசாயிகளும், கடமை உணர்வு கொண்ட ராணுவ வீரர்களும் உள்ளனர். ராணுவத்தில் பணியாற்றுவோரில் சீக்கியர்களே அதிகமாக உள்ளனர்.</p>



<p>அவசரத்தில் இயற்றப்பட்ட சட்டங்களைச் சீக்கியர்கள் எதிர்ப்பதாலேயே, அவர்களது தேச பக்தியை இழிவுபடுத்த முடியாது.</p>



<p>எத்தனையோ தடைகள் இருந்தாலும், டெல்லி எல்லையில் விவசாயிகளின் நீண்ட மற்றும் அமைதியான போராட்டம் நீதி கேட்கும் போராட்டமாக மாறியுள்ளது. போராடும் சீக்கிய விவசாயிகளை, உறுதியான ஆதாரங்கள் இல்லாமல் தேசவிரோதப் பிரிவினைவாதிகள் என அழைப்பது மூர்க்கத்தனமானது. கடல் போன்ற விவசாயிகள் போராட்டத்தில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் ஊடுருவியிருக்கலாம். அதேசமயம், இந்த போராட்டத்தில் அந்நிய உளவாளிகள் இல்லை என்பதை உயரதிகாரிகளால் சொல்ல முடியுமா?</p>



<p>மதவெறியர்களை விட அரசியல் ரீதியாகப் பஞ்சாப் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இரண்டே அறிவிப்புகள் அனைத்து பிரச்சினைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிடும்.</p>



<p>ஒன்று, குறைந்தபட்ச ஆதரவு விலை தொடரும் என்ற சட்ட ரீதியான உறுதி. மற்றொன்று, அம்பானி, அதானி கைக்கு விவசாய உற்பத்தி போவது உண்மையில்லை என்பதை உறுதிப் படுத்த வேண்டிய அரசின் கடமை.</p>



<p>இந்த இரண்டு உறுதிமொழிகள் மட்டுமே, விவசாயிகள் போராட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.</p>



<p>ஓர் ஆட்சியாளர் தனது சொந்த மக்களிடமிருந்து தன்னைத் தடுத்து நிறுத்த ஆழமான அகழிகளைத் தோண்டி, கான்க்ரீட் தடுப்புகளைக் கட்ட வேண்டிய அவசியமில்லை. அவர்களைக் கொலையாளிகளைப் போல் நடத்தவேண்டிய அவசியமில்லை.</p>



<p>குடியரசுத் தினத்தன்று நாம் கண்ட கொந்தளிப்பான காட்சிகள் அதிகம் என்பதால், 2 மாதங்களுக்கும் மேலாக அமைதியாகப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய அமைப்புகளுக்கு நாம் நம்பகத்தன்மையை வழங்க வேண்டும்.</p>



<p>அமைதியான டிராக்டர் பேரணி நடைபெறுவதற்கு முன்பே, டெல்லிக்குள் நுழைந்து ஆத்திரமூட்டும் செயலில் ஈடுபட்டவர்களை அடையாளம் கண்டு நேர்மையை நிலைநாட்ட வேண்டியது காவல் துறையினரின் கடமை. இதற்கான வீடியோ ஆதாரங்கள் உள்ளன. சமீபகாலங்களில் எத்தனையோ கடுமையான எதிர்ப்புகளை இந்தியா கண்டுள்ளதைச் சமகால வரலாறு மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம். ஆனால், இதுபோன்ற வன்முறைச் சம்பவங்களை மக்கள் இதுவரை எதிர்கொண்டதில்லை.</p>



<p>அவமதிக்கப்படாத தேசியக் கொடிக்காக வருந்தும் நரேந்திர மோடி, தங்களது ஆசான் ஆர்எஸ்எஸ் இயக்கம் தேசியக் கொடியைக் கொடியை எவ்வாறு எல்லாம் அவமதித்தது என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். இந்த மூவர்ணக் கொடியின் வண்ணம், மோசமான உளவியல் விளைவை ஏற்படுத்துவதாக ஆர்எஸ்எஸ் இயக்கம் கூறியது. மூன்று என்ற சொல் தீமையின் அடையாளம் என்று விமர்சித்தனர்.</p>



<p>3 என்பதில் இந்துயிசத்தின் கோட்பாடுகளும் அடங்கியிருக்கின்றன. திரிசூலம், மும்மூர்த்திகள் பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன் ஆகியோரும் இந்த மூன்றில் அடங்கியுள்ளனர். இதையெல்லாம் தீமை என்று ஆர்எஸ்எஸ் இயக்கம் சொல்லுமா?</p>



<p>மோடியின் குருநாதரும். ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் இரண்டாவது தலைவருமான எம்.எஸ். கோல்வல்கர், &#8221; சுதந்திர இந்தியாவின் புதிய கொடியைத் தலைவர்களாகிய நாங்கள் உருவாக்குவோம் என்றார். பழமையான நம் நாட்டுக்கு சொந்தக் கொடி இல்லையா? தேசிய சின்னம் இல்லையா?. சந்தேகமின்றி நிச்சயம் இருந்தது என்று கோல்வல்கர் குறிப்பிட்டுள்ளார். இந்துக்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு, காவிக் கொடியை தேசியக் கொடியாக உருவாக்க வேண்டும் என்பதே கோல்வல்கரின் எண்ணமாக இருந்தது.</p>



<p>நிலைமை இப்படியிருக்க, விவசாயிகள் போராட்டத்தில் தேசியக் கொடி அவமதிக்கப்பட்டதாக மோடி பதறுகிறார்.</p>



<p>தேசியக் கொடிக்கு எதிரான எதிர்ப்பைக் கைவிட கோல்வல்கரை சர்தார் வல்லபாய் படேல் வலியுறுத்தினார். அதற்குப் பரிகாரமாக ஆர்எஸ்எஸ் மீதான 18 மாத தடையை நீக்குவதற்கும், அதன் தலைவர்களைச் சிறையிலிருந்து விடுவிக்கவும் இந்த கோரிக்கையை வைத்தார். இந்த விஷயம் மோடிக்குத் தெரியாதா?</p>



<p>எனவே, தேசியக் கொடியை அவமதிப்பது காயப்படுத்துகிறது என்பதை இந்தியாவும் இந்தியர்களும் தீர்மானிப்பது தான் புத்திசாலித்தனம். இங்கு நீலிக்கண்ணீருக்கு இடமில்லை என்பதைப் பிரதமர் மோடி புரிந்து கொள்ள வேண்டும்.</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/national-flag-deep-sidhu-rss-golwalkar-red-fort-narendra-modi/">தேசியக் கொடி அவமதிப்பு என மோடி வருத்தம் : உருக்கமா ? நடிப்பா?</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://desiyamurasu.com/news-india/national-flag-deep-sidhu-rss-golwalkar-red-fort-narendra-modi/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>நீரோ மன்னனை மிஞ்சிய மோடி : கொரோனாவால் மக்கள் சாகும்போது ரூ.20,000 கோடியில் புதிய நாடாளுமன்றக் கட்டிடமா?</title>
		<link>https://desiyamurasu.com/news-india/central-vista-why-modis-new-new-delhi-isnt-a-shining-city/</link>
					<comments>https://desiyamurasu.com/news-india/central-vista-why-modis-new-new-delhi-isnt-a-shining-city/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[ஆ. கோபண்ணா]]></dc:creator>
		<pubDate>Mon, 14 Dec 2020 10:45:59 +0000</pubDate>
				<category><![CDATA[தேசிய அரசியல்]]></category>
		<category><![CDATA[Central Vista]]></category>
		<category><![CDATA[Narendra Modi]]></category>
		<category><![CDATA[Parliament]]></category>
		<guid isPermaLink="false">https://desiyamurasu.com/?p=3564</guid>

					<description><![CDATA[<p>கொரோனா தொற்று பரவல் காரணமாக பொது முடக்கத்தை நரேந்திர மோடி அமல்படுத்துவதற்கு 4 நாட்களுக்கு முன்பு, தலைநகர் டெல்லியின் முகத்தையே மாற்றி அமைக்கும் மத்திய விஸ்டா மறுசீரமைப்புத் திட்டத்தின்கீழ், டெல்லியின் மையப்பகுதியில் உள் 90 ஏக்கர் நிலத்தைப் பயன்படுத்துவது தொடர்பாகப் பாரதிய ஜனதா அரசு சட்டத்தையே மாற்றி அமைத்தது. அந்த நிலத்தில் பிரதமருக்கான வீடு உட்பட புதிய நாடாளுமன்றம் கட்ட ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் திட்டம் வகுக்கப்பட்டது. இதுவரை இல்லாத அளவுக்கு சுகாதாரம் மற்றும் சமூகப் [&#8230;]</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/central-vista-why-modis-new-new-delhi-isnt-a-shining-city/">நீரோ மன்னனை மிஞ்சிய மோடி : கொரோனாவால் மக்கள் சாகும்போது ரூ.20,000 கோடியில் புதிய நாடாளுமன்றக் கட்டிடமா?</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>கொரோனா தொற்று பரவல் காரணமாக பொது முடக்கத்தை நரேந்திர மோடி அமல்படுத்துவதற்கு 4 நாட்களுக்கு முன்பு, தலைநகர் டெல்லியின் முகத்தையே மாற்றி அமைக்கும் மத்திய விஸ்டா மறுசீரமைப்புத் திட்டத்தின்கீழ், டெல்லியின் மையப்பகுதியில் உள் 90 ஏக்கர் நிலத்தைப் பயன்படுத்துவது தொடர்பாகப் பாரதிய ஜனதா அரசு சட்டத்தையே மாற்றி அமைத்தது.</p>



<p>அந்த நிலத்தில் பிரதமருக்கான வீடு உட்பட புதிய நாடாளுமன்றம் கட்ட ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் திட்டம் வகுக்கப்பட்டது. இதுவரை இல்லாத அளவுக்கு சுகாதாரம் மற்றும் சமூகப் பொருளாதாரப் பிரச்சினைகளில் நாடே போராடிக் கொண்டிருக்கும் போது, இவ்வளவு செலவு செய்து நாடாளுமன்றக் கட்டிடம் கட்ட வேண்டியது அவசியமா? என்பது குறித்து சர்ச்சை எழுந்தது.</p>



<p>கொரோனா தொற்றுப் பரவலால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு அந்தப் பணத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர்.</p>



<p>பொதுச் சுகாதாரத்தை வலுப்படுத்தக் கூடுதல் பணம் தேவைப்படும் நிலையில், ரூ.20 ஆயிரம் கோடியில் நாடாளுமன்றக் கட்டிடம் அவசியமா? எனக் கேள்வி எழுப்பி, பிரதமர் மோடி மற்றும் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான அமைச்சர் ஹர்தீப் புரி ஆகியோருக்கு சில நாட்களுக்கு முன்பு முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள் 60 பேர் கடிதம் எழுதினர். இந்த நேரத்தில் மத்திய அரசின் மறுசீரமைப்புத் திட்டம் தேவையற்றது என்று குறிப்பிட்டிருந்தனர். அந்த கடிதத்தை முடிக்கும் போது, ரோம் நகரம் தீப்பற்றி எரிந்த போது, நீரோ மன்னன் பிடில் வாசித்த கதையாக இருக்கிறது என்று சுட்டிக்காட்டியிருந்தனர்.</p>



<h4 class="wp-block-heading"><span class="has-inline-color has-vivid-red-color">அலங்கோல மோடி ஆட்சியின் அவலங்களை பாரீர்!</span></h4>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img fetchpriority="high" decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/12/file78yd0jbb9951hqidfdvn-884101-1599510389.jpg" alt="" class="wp-image-3568" width="563" height="297" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/12/file78yd0jbb9951hqidfdvn-884101-1599510389.jpg 760w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/12/file78yd0jbb9951hqidfdvn-884101-1599510389-300x159.jpg 300w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/12/file78yd0jbb9951hqidfdvn-884101-1599510389-750x397.jpg 750w" sizes="(max-width: 563px) 100vw, 563px" /></figure></div>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/12/Untitled-2.jpg" alt="" class="wp-image-3572" width="566" height="317" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/12/Untitled-2.jpg 668w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/12/Untitled-2-300x168.jpg 300w" sizes="(max-width: 566px) 100vw, 566px" /></figure></div>



<p>கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த திட்டம் தொடங்கியதிலிருந்தே சர்ச்சைகள் கொடி கட்டிப் பறக்க ஆரம்பித்துவிட்டன. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட கட்டிடத்தில் இந்திய அரசின் நாடாளுமன்றம் செயல்படுவதை, மாற்றியமைப்பது அவசரமும் அவசியமும் ஆகும் என்று மத்திய அரசு விளக்கம் அளித்தது.</p>



<p>பரவலாகப் பார்க்கும் போது, இந்த மத்திய நகர்ப்புற சீரமைப்புத் திட்டத்தின் அவசியம் என்ன? நகரின் முக்கிய அடையாளமாக விளங்கும் இடங்களை இந்த திட்டம் எவ்வாறு மாற்றும்? இந்த திட்டத்தைச் செயல்படுத்த முறையான ஒப்புதல் பெறப்பட்டுள்ளதா? போன்ற கேள்விகள் எழுகின்றன.</p>



<p>பிரதமர் மோடிக்கு விருப்பமான இந்த திட்டத்துக்கு, நகர்ப்புற வளர்ச்சி நிபுணர்களும், அரசு அதிகாரிகளும், கட்டிடக்கலை நிபுணர்களும் வடிவம் கொடுத்துள்ளனர்.</p>



<p>தலைநகர் டெல்லியை அழகுபடுத்தும் வகையில், குடியரசுத் தலைவர் மாளிகையிலிருந்து இந்தியா கேட் வரை 4 கி.மீ தொலைவுக்கு மறுசீரமைப்புப் பணி நடைபெறவுள்ளது. 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் இப்போதைய குடியரசுத் தலைவர் மாளிகை கட்டப்பட்டது. திறந்த வெளியாகவும், சுற்றி பசுமை வெளியாகவும், பல்வேறு அரசு அலுவலகங்கள், நாடாளுமன்ற கட்டிடம், நினைவிடங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் ஆகியவற்றையும் குடியரசுத் தலைவர் மாளிகை பகுதி உள்ளடக்கியுள்ளது.</p>



<h4 class="wp-block-heading"><span class="has-inline-color has-vivid-red-color">மறுசீரமைப்புத் திட்டம்</span></h4>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/12/newslaundry_2020-05_e7634689-5df8-4cf8-a32b-e691db7f0f0f_Delhi_MP_Iso_Day_anno_Inline.jpg" alt="" class="wp-image-3569" width="525" height="373" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/12/newslaundry_2020-05_e7634689-5df8-4cf8-a32b-e691db7f0f0f_Delhi_MP_Iso_Day_anno_Inline.jpg 700w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/12/newslaundry_2020-05_e7634689-5df8-4cf8-a32b-e691db7f0f0f_Delhi_MP_Iso_Day_anno_Inline-300x213.jpg 300w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/12/newslaundry_2020-05_e7634689-5df8-4cf8-a32b-e691db7f0f0f_Delhi_MP_Iso_Day_anno_Inline-120x86.jpg 120w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/12/newslaundry_2020-05_e7634689-5df8-4cf8-a32b-e691db7f0f0f_Delhi_MP_Iso_Day_anno_Inline-350x250.jpg 350w" sizes="(max-width: 525px) 100vw, 525px" /></figure></div>



<p>இதற்கான டெண்டரை மத்திய பொதுப் பணித்துறை கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியிட்டது. 2022 ஆம் ஆண்டுக்குள் நாடாளுமன்றக் கட்டிடத்தைக் கட்டி முடிக்க வேண்டும் என்று திட்டமிடப்பட்டது.</p>



<p>இடப்பற்றாக்குறை காரணமாக புதிய நாடாளுமன்றக் கட்டிடமும், மத்திய தலைமைச் செயலகமும் கட்ட வேண்டி அவசியம் ஏற்பட்டுள்ளதாக டெண்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p>



<p>இந்த திட்டத்துக்கான ஒப்புதலை மத்திய விஸ்டா குழு கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி அளித்தது. அப்போது நடந்த கூட்டத்தில், குழுவின் அரசு சாரா உறுப்பினர்களாக இருக்கும் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஆர்க்கிடெக்ட்ஸ் மற்றும் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டவுன் பிளானர்ஸ் பங்கேற்கவில்லை. வெளியில் உள்ள நிபுணர்கள் இல்லாமல் இந்த திட்டத்துக்கு அவசர, அவசரமாக ஒப்புதலைப் பெறவேண்டிய அவசியம் என்ன?</p>



<p>தேசிய நலன் கருதி இந்த திட்டம் செயல்படுத்துவதாக மத்திய விஸ்டா கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்த திட்டம் குறித்து விவாதம் விஸ்டா குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதற்கான ஆதாரம் ஏதும் இல்லை.</p>



<h4 class="wp-block-heading"><span class="has-inline-color has-vivid-red-color">திட்ட மதிப்பீடு</span></h4>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img loading="lazy" decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/12/newslaundry_2020-05_c2644a7d-3c76-43fb-b686-86c3b8dab913_Delhi_MP_Day_anno2_Inline.jpg" alt="" class="wp-image-3571" width="528" height="366" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/12/newslaundry_2020-05_c2644a7d-3c76-43fb-b686-86c3b8dab913_Delhi_MP_Day_anno2_Inline.jpg 700w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/12/newslaundry_2020-05_c2644a7d-3c76-43fb-b686-86c3b8dab913_Delhi_MP_Day_anno2_Inline-300x208.jpg 300w" sizes="auto, (max-width: 528px) 100vw, 528px" /></figure></div>



<p>புதிய நாடாளுமன்றம் மற்றும் மத்திய தலைமைச் செயலகம் கட்ட ரூ. 20 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய அரசு பதில் அளித்துள்ளது. கொரோனாவை எதிர்த்துப் போராட கேரள அரசு ஒதுக்கியிருக்கும் தொகைக்கு இணையானது இந்த தொகை. இந்த திட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணத்தைவிட, 3 மடங்கு அதிகம் மட்டுமே (ரூ.67,111 கோடி) சுகாதாரத்துக்காக மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.</p>



<p>பட்ஜெட் ஒதுக்கீட்டிலிருந்து 3 கட்டமாக நிதி ஒதுக்கப்படும் என்று அறிவித்து, முதல்கட்டமாக, இந்த ஆண்டுக்கு ரூ.3,033 ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், மறுசீரமைப்புக்கான ஒதுக்கீடு குறித்து பட்ஜெட்டில் கூறப்படவில்லை.</p>



<p>மேலும், இந்த திட்டத்துக்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் ஒப்புதலைத் திரும்பப் பெறுமாறு, கடந்த மே மாதம் 20 ஆம் தேதி மக்கள் இயக்கங்களின் தேசிய கூட்டணி மத்திய அரசுக்குக் கடிதம் அனுப்பியுள்ளது.</p>



<p>90 ஏக்கர் இடத்தில் புதிய நாடாளுமன்றக் கட்டிடம் கட்டுவது குறித்து ஆட்சேபனைகள் வரவேற்கப்படுவதாக, கடந்த 2019 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக 1,292 ஆட்சேபனைகள் தெரிவிக்கப்பட்டன. சுற்றுச்சூழல் மோசமாகப் பாதிக்கப்படுவதோடு, பழமையான கட்டிடங்களை இடிப்பது தேவையற்றது என அந்த ஆட்சேபனைகளின் தெரிவிக்கப்பட்டிருந்தது.</p>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img loading="lazy" decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/12/newslaundry_2020-05_ab33210e-699a-424b-a347-82cba1f1fb30_Cental_Vista_Inline_Graphic_Revised.jpg" alt="" class="wp-image-3570" width="475" height="541" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/12/newslaundry_2020-05_ab33210e-699a-424b-a347-82cba1f1fb30_Cental_Vista_Inline_Graphic_Revised.jpg 700w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/12/newslaundry_2020-05_ab33210e-699a-424b-a347-82cba1f1fb30_Cental_Vista_Inline_Graphic_Revised-263x300.jpg 263w" sizes="auto, (max-width: 475px) 100vw, 475px" /></figure></div>



<p>இந்த திட்டத்துக்கு எதிராக பொது நலன் கருதித் தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தும் டெல்லி உயர் நீதிமன்றத்திலும், பின்னர் உச்ச நீதிமன்றத்திலும் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டன.</p>



<p>கடந்த 2016 ஆம் ஆண்டு டெல்லியில் 7 காலனிகளை ரூ.32 ஆயிரத்து 885 கோடியில் மறுசீரமைப்பு செய்ய முடிவு செய்யப்பட்டது. அப்போது, பொதுமக்களின் கருத்தைக் கோரவில்லை. இந்த திட்டத்தைச் செயல்படுத்த, 14,031 மரங்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டன. விதிமுறைகளை மீறி இதற்கான சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்டது. இதேபோன்று, ரூ.5 ஆயிரம் கோடி மதிப்பிலான கிழக்கு கிட்வாய் நகர் திட்டத்திலும் ஏராளமான மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டன. இந்த இரு திட்டங்களிலும் விதிமீறல் இருப்பதாக வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.</p>



<p>அதேபோன்று மத்திய விஸ்டா திட்டத்திலும் விதிமீறல்கள் நடந்துள்ளன. பிரிட்டிஷ் ஆட்சியைவிட மோடி அரசு மிகவும் மோசம் எனப் பல தரப்பினர் குற்றம் சாட்டுகின்றனர். மக்கள் பயன்பாட்டுக்காகத் திறந்த வெளியைப் பிரிட்டிஷ் ஆட்சியாளர் எட்வின் லுட்டியென்ஸ் போன்றோர் உருவாக்கினர். இப்போது அந்த திறந்தவெளி முழுவதும் அரசு அலுவலகங்களால் நிரப்பப்படவுள்ளது.</p>



<h4 class="wp-block-heading"><span class="has-inline-color has-vivid-red-color">சுமையை ஏற்றும் மத்திய அரசு</span></h4>



<p>கொரோனா பரவல் காரணமாக நாடே முடங்கியது. இதனால் அனைத்து தொழில்களும் முடங்கின. பொருளாதார நிலைமை அதலபாதாளத்துக்குச் சென்றது. ஏராளமானோர் வேலையிழந்தனர். இந்நிலையில்,ரூ.20 லட்சம் தொகுப்பு நிதியை மத்திய அரசு அறிவித்தது. இந்த தொகை பல்வேறு பிரிவினர் மீண்டு எழுந்து வர உதவியாக இருக்கும் என்று கூறப்பட்டது.</p>



<p>ஆனால், இதுவரை வெறும் ரூ. 3 லட்சம் கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. ஒதுக்கப்பட்ட நிதியில், ரூ.1.20 லட்சம் கோடி வரை மாநில அரசுகளுக்குக் கடனாகப் பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், கோடி இந்தியர்கள் வாழும் நம் நாட்டில், ஒவ்வொருவக்கும் ரூ.8 வரை கடன் சுமை ஏற்றப்பட்டுள்ளது.</p>



<p>மீதமுள்ள ரூ.17 லட்சம் கோடி இதுவரை வழங்கப்படவில்லை. இதன்மூலம், இந்திய மக்களை மோடி அரசு ஏமாற்றியிருக்கிறது. இந்த சூழ்நிலையில், ரூ.20 ஆயிரம் கோடி செலவில் புதிய நாடாளுமன்றக் கட்டிடம் அவசியம்தானா? என்ற கேள்விக்கு மத்திய அரசிடமிருந்து இதுவரை பதில் இல்லை. மோடி அரசு மக்கள் நலன் மீது அக்கறை இல்லாத அரசு என்பதற்கு, இதைவிடப் பெரிய சான்று தேவையில்லை.</p>



<ul class="wp-block-list"><li>மத்திய விஸ்டா திட்டத்தின் மூலம் பொதுமக்கள் பயன்பாட்டிலிருந்த 80 சதவீத நிலம் பறிக்கப்பட்டுள்ளது.</li><li>தேசிய அருங்காட்சியகம், கலை மற்றும் தேசிய காப்பகங்களுக்கான இந்திரா காந்தி தேசிய மையம் இடிக்கப்படும்.</li><li>இந்த திட்டம் குறித்து நாடாளுமன்றத்திலோ, பொதுவெளியிலோ விவாதிக்கப்படவில்லை.</li><li>மரங்களை வெட்ட அனுமதி கொடுக்கும் முன்பு, அங்கு இருந்த மரங்களின் எண்ணிக்கையைக் கணக்கெடுக்கவில்லை.</li><li>இந்த திட்டத்தின் மூலம் நாடாளுமன்றம் அருங்காட்சியகமாகவும், தேசிய அருங்காட்சியகம் அரசு கட்டிடமாகவும் மாற்றப்படும். தேசிய அருங்காட்சியகத்தின் கலைப்பொருட்களைப் பாதுகாக்க வேண்டியது அவசியமாகிறது என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.</li><li>வடக்கு மற்றும் தெற்கு பிளாக்குகளில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாகச் சொல்லி, அங்குள்ள கட்டிடங்களை இடிக்கப் போகிறார்கள். இதே போன்ற அச்சுறுத்தல் குடியரசுத் தலைவர் மாளிகை, சன்ஸாட் பவன், தேசிய கலைப்பொருட்கள் மற்றும் இந்தியா கேட்டுக்கு இல்லையா? என்ற கேள்விக்கு மத்திய அரசு மவுனம் சாதிக்கிறது.</li></ul>



<p>சுதந்திர அறிவிப்பை வெளியிட்ட நள்ளிரவில், தற்போதைய நாடாளுமன்றக் கட்டிடத்தின் மத்திய மண்டபத்திலிருந்து பண்டிதர் ஜவஹர்லால் நேரு ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க உரையை மறக்க முடியுமா? போராடிப் பெற்ற சுதந்திரத்தை அவர் வார்த்தைகளால் வரவேற்ற விதம், உற்சாகத்தையும் நம்பிக்கையையும் வெளிப்படுத்தின. பிரிட்டிஷாரிடம் போராடி நாம் பெற்ற சுதந்திரத்தை நினைவுபடுத்திக் கொண்டிருக்கின்றன டெல்லியின் இதுபோன்ற பழமையான கட்டிடங்கள். பழைய கட்டிடங்களை இடித்துத்தான் புதிய வரலாறு படைக்க வேண்டுமா?</p>



<p>அடிக்கடி மாற்றுவதற்கு, வரலாறு என்பது காலில் போடும் செருப்பு அல்ல!</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/central-vista-why-modis-new-new-delhi-isnt-a-shining-city/">நீரோ மன்னனை மிஞ்சிய மோடி : கொரோனாவால் மக்கள் சாகும்போது ரூ.20,000 கோடியில் புதிய நாடாளுமன்றக் கட்டிடமா?</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://desiyamurasu.com/news-india/central-vista-why-modis-new-new-delhi-isnt-a-shining-city/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>கொரோனா காலம் : முகேஷ் அம்பானி, அதானி , 85 புதிய பணக்காரர்களின் பொற்காலம்</title>
		<link>https://desiyamurasu.com/news-india/boom-time-for-billionaires/</link>
					<comments>https://desiyamurasu.com/news-india/boom-time-for-billionaires/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Admin]]></dc:creator>
		<pubDate>Mon, 07 Dec 2020 17:02:00 +0000</pubDate>
				<category><![CDATA[தேசிய அரசியல்]]></category>
		<category><![CDATA[Adani]]></category>
		<category><![CDATA[Mukesh Ambani]]></category>
		<category><![CDATA[Narendra Modi]]></category>
		<guid isPermaLink="false">https://desiyamurasu.com/?p=3485</guid>

					<description><![CDATA[<p>கொரோனா தொற்றால் நாட்டின் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. இந்த நிலையிலும், கடந்த ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் இந்தியாவின் 85 புதிய பணக்காரர்களின் சொத்து (50 மில்லியன் டாலர்) மதிப்பு 3 மடங்கு அதிகரித்துள்ளது. இந்த விஷயத்தில் அமெரிக்கா மற்றும் சீனாவை விட ஒப்பிடும்போது இந்தியா முன்னணியில் இருக்கிறது. பொருளாதார மந்தநிலை: கடந்த 1996 ஆம் ஆண்டுக்குப் பின், 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான கடந்த 2 காலாண்டுகளில் ஜிடிபி [&#8230;]</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/boom-time-for-billionaires/">கொரோனா காலம் : முகேஷ் அம்பானி, அதானி , 85 புதிய பணக்காரர்களின் பொற்காலம்</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>கொரோனா தொற்றால் நாட்டின் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. இந்த நிலையிலும், கடந்த ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் இந்தியாவின் 85 புதிய பணக்காரர்களின் சொத்து (50 மில்லியன் டாலர்) மதிப்பு 3 மடங்கு அதிகரித்துள்ளது. இந்த விஷயத்தில் அமெரிக்கா மற்றும் சீனாவை விட ஒப்பிடும்போது இந்தியா முன்னணியில் இருக்கிறது.</p>



<h4 class="wp-block-heading"><strong>பொருளாதார மந்தநிலை:</strong></h4>



<p>கடந்த 1996 ஆம் ஆண்டுக்குப் பின், 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான கடந்த 2 காலாண்டுகளில் ஜிடிபி எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி கடும் வீழ்ச்சியடைந்துள்ளது.</p>



<h4 class="wp-block-heading"><strong>பணக்காரர்களின் எழுச்சி :</strong></h4>



<p>நாட்டின் பொருளாதாரம் மந்தமாக இருந்தாலும், தொழிலதிபர்கள் கவுதம் அதானி மற்றும் முகேஷ் அம்பானி ஆகியோரின் சொத்து மதிப்பு இந்த இக்கட்டான கொரோனா காலத்திலும் ராக்கெட் வேகத்தில் ஏறுமுகமாக இருந்துள்ளது. 2017 ஆம் ஆண்டு மார்ச் முதல், 2020 ஆம் ஆண்டு டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் அதானியின் சொத்து மதிப்பு 6 மடங்கு உயர்ந்துள்ளது. அதாவது, 5.37 பில்லியன் டாலரிலிருந்து 34 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் படிப்படியாக 3.5 முறை சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது. இதனை இதனை ஒப்பிடும்போது, அம்பானியின் சொத்து மதிப்பு கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 2020 டிசம்பர் மாதம் வரை 2.8 மடங்கு அதிகரித்துள்ளது. அதாவது, 26.6 பில்லியன் டாலரிலிருந்து, 74.4 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. 2020 ஜூன் முதல் அம்பானியின் சொத்து மதிப்பு 1.3 மடங்கு அதிகரித்துள்ளது.</p>



<h4 class="wp-block-heading">அப்பட்டமான சமத்துவமின்மை :</h4>



<p>இந்தியாவில் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 39 சதவீத சொத்துக்கள் 1 சதவீத பணக்காரர்களிடம் உள்ளன. சீனா மற்றும் அமெரிக்காவை ஒப்பிடும்போது இது பல மடங்கு அதிகம். ஒட்டுமொத்த மக்கள் தொகையில் அதிக சதவீதம் சொத்துக்கள் வைத்திருக்கும் பணக்காரர்களின் பட்டியலில், உலக அளவில் முதல் இடத்தில் ரஷ்யாவும், இரண்டாம் இடத்தில் பிரேசிலும், மூன்றாம் இடத்தில் இந்தியாவும், நான்காம் இடத்தில் அமெரிக்காவும், ஐந்தாம் இடத்தில் சீனாவும் உள்ளன.</p>



<h4 class="wp-block-heading">தனிப்பட்ட நபரின் அதிகபட்ச மொத்த சொத்து :</h4>



<p>2019 ஆம் ஆண்டு இறுதிவரை, இந்தியாவில் 4,593 பணக்காரர்களின் சொத்து மதிப்பு 50 மில்லியன் டாலருக்கு அதிகமாக உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு ஜூன் வரை இந்தப் பட்டியலில் 85 புதிய பணக்காரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதே காலகட்டத்தில், 1,330 புதிய பணக்காரர்கள் உருவாகியிருக்கிறார்கள்.</p>



<p>2019 ஆம் ஆண்டு இறுதியில் 50 மில்லியன் டாலர் சொத்துகள் வைத்திருக்கும் பணக்காரர்கள் பட்டியலில் 21,087 பேர் இடம்பெற்று உலக அளவில் சீனா முதலிடத்தில் உள்ளது.<br>89,509 பணக்காரர்களைப் பெற்ற அமெரிக்கா இரண்டாவது இடத்திலும், 4,593 பணக்காரர்களைப் பெற்று இந்தியா மூன்றாவது இடத்தையும், 3,712 பணக்காரர்களைப் பெற்று பிரான்ஸ் நான்காவது இடத்திலும்,2,775 பணக்காரர்களைப் பெற்று இத்தாலி ஐந்தாவது இடத்திலும், 794 பணக்காரர்களைப் பெற்று தாய்லாந்து ஆறாவது இடத்திலும் உள்ளன.</p>



<p>2020 ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் சீனாவில் 1,330 புதிய பணக்காரர்கள் உருவாகியிருக்கிறார்கள். அமெரிக்காவில் 121 புதிய பணக்காரர்களும், இந்தியாவில் 85 புதிய பணக்காரர்களும், பிரான்ஸின் 41 புதிய பணக்காரர்களும் உருவாகியிருக்கிறார்கள். அதேசமயம், இத்தாலியில் மைனஸ் 5 மற்றும் தாய்லாந்தில் மைனஸ் 20, கொரியாவில் மைனஸ் 30, ஜப்பானில் மைனஸ் 45, ஸ்பெயினில் மைனஸ் 78, இங்கிலாந்தில் மைனஸ் 398 மற்றும் பிரேசிலில் மைனஸ் 609 ஆக புதிய பணக்காரர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/boom-time-for-billionaires/">கொரோனா காலம் : முகேஷ் அம்பானி, அதானி , 85 புதிய பணக்காரர்களின் பொற்காலம்</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://desiyamurasu.com/news-india/boom-time-for-billionaires/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>கல்வானில் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட போது மோடி என்ன செய்து கொண்டிருந்தார்? : ராகுல் காந்தி கேள்வி</title>
		<link>https://desiyamurasu.com/news-india/what-was-pm-doing-when-bihar-soldiers-died-rahul-gandhi-raises-galwan-issue-at-rally/</link>
					<comments>https://desiyamurasu.com/news-india/what-was-pm-doing-when-bihar-soldiers-died-rahul-gandhi-raises-galwan-issue-at-rally/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Admin]]></dc:creator>
		<pubDate>Wed, 28 Oct 2020 12:59:09 +0000</pubDate>
				<category><![CDATA[தேசிய அரசியல்]]></category>
		<category><![CDATA[Bihar Assembly 2020]]></category>
		<category><![CDATA[congress]]></category>
		<category><![CDATA[Galwan]]></category>
		<category><![CDATA[Narendra Modi]]></category>
		<category><![CDATA[rahul gandhi]]></category>
		<category><![CDATA[RJD]]></category>
		<guid isPermaLink="false">https://desiyamurasu.com/?p=2803</guid>

					<description><![CDATA[<p>கல்வான் எல்லையில் சீனப் படையினரால் பீகார் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டபோது, பிரதமர் மோடி என்ன செய்து கொண்டிருந்தார் என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 28 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 7 ஆம் தேதி வரை நடக்கிறது. ராகுல் காந்தியும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவும் இணைந்து பங்கேற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நவடாவில் நடைபெற்றது. இதில் பேசிய&#160; ராகுல் காந்தி, &#8221; கல்வான் மோதலில் [&#8230;]</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/what-was-pm-doing-when-bihar-soldiers-died-rahul-gandhi-raises-galwan-issue-at-rally/">கல்வானில் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட போது மோடி என்ன செய்து கொண்டிருந்தார்? : ராகுல் காந்தி கேள்வி</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>கல்வான் எல்லையில் சீனப் படையினரால் பீகார் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டபோது, பிரதமர் மோடி என்ன செய்து கொண்டிருந்தார் என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.</p>



<p>பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 28 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 7 ஆம் தேதி வரை நடக்கிறது. ராகுல் காந்தியும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவும் இணைந்து பங்கேற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நவடாவில் நடைபெற்றது.</p>



<p>இதில் பேசிய&nbsp; ராகுல் காந்தி, &#8221; கல்வான் மோதலில் உயிர்நீத்த ராணுவ வீரர்களுக்கு தலைவணங்குவதாக பிரதமர் கூறியிருக்கிறார். பிரதமர் மட்டுமல்ல, நாடே அவர்களது தியாகத்துக்காக தலைவணங்குகிறது. ஆனால்,கேள்வி என்னவென்றால், ராணுவ வீரர்கள் உயிரிழந்த போது மோடி என்ன செய்துகொண்டிருந்தார் என்பதுதான். நம் எல்லைக்குள் சீனப் படையினர் நுழையவில்லை என்று அப்பட்டமாகப் பிரதமர் மோடி பொய் பேசினார்.</p>



<p>இந்திய நிலத்தில் 1,200 சதுர அடி நிலத்தை எடுத்துக் கொண்ட சீனப் படைகளை விரட்டி அடித்தாரா? என்பது குறித்து மக்களுக்குப் பிரதமர் மோடி தெரிவிக்க வேண்டும். அதைவிட்டு, இங்கே வந்து தலைவணங்குவதாகச் சொல்லாதீர்கள்&#8221; என்றார்.</p>



<p>பீகார் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்ற மோடி, சீன மோதலில் இன்னுயிர் நீத்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார். தேசியக் கொடிக்காகவும், பாரத மாதாவைத் தலை நிமிரச் செய்யவும் ராணுவ வீரர்கள் கல்வான் பள்ளத்தாக்கில் உயிர் நீத்தனர்.&nbsp; அவர்கள் காலடியில்&nbsp;&nbsp; தலையை வைத்து மரியாதை செலுத்துகிறேன் என்று பேசியிருந்தார்.</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/what-was-pm-doing-when-bihar-soldiers-died-rahul-gandhi-raises-galwan-issue-at-rally/">கல்வானில் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட போது மோடி என்ன செய்து கொண்டிருந்தார்? : ராகுல் காந்தி கேள்வி</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://desiyamurasu.com/news-india/what-was-pm-doing-when-bihar-soldiers-died-rahul-gandhi-raises-galwan-issue-at-rally/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>மோடிக்கு 8,400 கோடியில் விமானம்:; ராணுவ வீரர்களுக்குச் சாதாரண வாகனமா? : ராகுல் காந்தி கேள்வி</title>
		<link>https://desiyamurasu.com/news-india/vvip-aircraft-worth-rs-8400-crore-for-modi-but-non-bullet-proof-vehicles-for-soldiers-rahul-gandhi/</link>
					<comments>https://desiyamurasu.com/news-india/vvip-aircraft-worth-rs-8400-crore-for-modi-but-non-bullet-proof-vehicles-for-soldiers-rahul-gandhi/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[ஆ. கோபண்ணா]]></dc:creator>
		<pubDate>Mon, 12 Oct 2020 12:19:20 +0000</pubDate>
				<category><![CDATA[தேசிய அரசியல்]]></category>
		<category><![CDATA[Boeing 777]]></category>
		<category><![CDATA[congress]]></category>
		<category><![CDATA[Narendra Modi]]></category>
		<category><![CDATA[rahul gandhi]]></category>
		<category><![CDATA[VVIP Planes]]></category>
		<guid isPermaLink="false">https://desiyamurasu.com/?p=2604</guid>

					<description><![CDATA[<p>மோடிக்கு ரூ.8,400 கோடியில் விமானம் வாங்கும்போது, ராணுவ வீரர்களுக்கு மட்டும் சாதாரண வாகனங்களை அனுப்புவதா? என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் ராணுவ வீரர்களின் உரையாடல் தொடர்பான காணொளி காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அந்த காணொளியில்,&#160; குண்டு துளைக்காத வாகனங்கள் இருக்கும் போதே நமது உயிருக்கு உத்தரவாதம் இல்லை. இப்படியிருக்கும்போது, ஆபத்தான பணிக்கு சாதாரண வாகனத்தில் அனுப்புகின்றனர். அதிகாரிகள் நம் குடும்பங்களோடும் நம் உயிரோடும் விளையாடுகிறார்கள் [&#8230;]</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/vvip-aircraft-worth-rs-8400-crore-for-modi-but-non-bullet-proof-vehicles-for-soldiers-rahul-gandhi/">மோடிக்கு 8,400 கோடியில் விமானம்:; ராணுவ வீரர்களுக்குச் சாதாரண வாகனமா? : ராகுல் காந்தி கேள்வி</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>மோடிக்கு ரூ.8,400 கோடியில் விமானம் வாங்கும்போது, ராணுவ வீரர்களுக்கு மட்டும் சாதாரண வாகனங்களை அனுப்புவதா? என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.</p>



<p>வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் ராணுவ வீரர்களின் உரையாடல் தொடர்பான காணொளி காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அந்த காணொளியில்,&nbsp; குண்டு துளைக்காத வாகனங்கள் இருக்கும் போதே நமது உயிருக்கு உத்தரவாதம் இல்லை. இப்படியிருக்கும்போது, ஆபத்தான பணிக்கு சாதாரண வாகனத்தில் அனுப்புகின்றனர். அதிகாரிகள் நம் குடும்பங்களோடும் நம் உயிரோடும் விளையாடுகிறார்கள் என்று அவர்கள் உரையாடல் இருந்தது.</p>



<figure class="wp-block-image size-large"><img loading="lazy" decoding="async" width="760" height="274" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/air_india_one_jawans.jpg" alt="" class="wp-image-2607" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/air_india_one_jawans.jpg 760w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/air_india_one_jawans-300x108.jpg 300w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/air_india_one_jawans-750x270.jpg 750w" sizes="auto, (max-width: 760px) 100vw, 760px" /></figure>



<p>இந்த காணொளியைப் பகிர்ந்துள்ள ராகுல்காந்தி, மோடி அரசுக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளார். ராணுவ வீரர்களுக்குக் குண்டு துளைக்காத வாகனம் ஏன் தரப்படவில்லை? என கேள்வி எழுப்பியுள்ளார்.</p>



<p>தியாகம் செய்யும் எங்கள் வீரர்களைச் சாதாரண வாகனங்களில் அனுப்புகிறீர்கள். ஆனால், பிரதமருக்கு மட்டும் ரூ. 8,400 கோடியில் சிறப்பு விமானமா?என்று சுட்டிக்காட்டி ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.</p>



<p>இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே மத்திய அரசை ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். விவசாயச் சட்டங்களை எதிர்த்து பஞ்சாபில் &#8216;ட்ராக்டர்&#8217; பேரணி நடத்தியபோது, புதிய விவிஐபி விமானத்தை வாங்கி பல கோடி ரூபாய்களைப் பிரதமர் மோடி வீணாக்குவதாகக் குற்றம் சாட்டியிருந்தார்.</p>



<p>இந்த அளவுக்குப் பணத்தை லடாக்கில் உள்ள சீனப் படைகளுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கும் நம் ராணுவ வீரர்களுக்குச் செலவழிக்காதது ஏன்? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.</p>



<p>ஒரு பக்கம் 8,400 ஆயிரம் கோடி ரூபாயில் 2 விமானங்களைப் பிரதமர் மோடி வாங்குகிறார். மறுபக்கம், நமது எல்லையில் இருக்கும் சீனப் படைகளிடமிருந்து நம் எல்லையைக் காக்க நமது ராணுவ வீரர்கள் கடுமையாகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். விமானங்களுக்குச் செலவிட்டதைவிட, எல்லையில் போராடிக் கொண்டிருக்கும் நம் வீரர்களுக்கு எவ்வளவோ செய்திருக்கலாம்.</p>



<p>2 விமானங்களைக் கொள்முதல் செய்வதற்கான நடைமுறை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் தொடங்கியதாகக் கூறி, விமானங்களை&nbsp; வாங்குவதை நியாயப்படுத்துகின்றனர். மாற்றியமைக்கப்பட்ட போயிங் 777 ரக விமானம் கடந்த 1 ஆம் தேதி&nbsp; வந்தடைந்தது. இதுவரை இந்தியாவில் எந்த ஒரு விவிஐபி-க்கும் இவ்வளவு செலவு செய்து விமானம் வாங்கப்பட்டதில்லை. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, இந்தியாவுக்கு இந்த விமானம் வருவதில் 2 முறை தாமதமானது.</p>



<p>முன்னதாக, விவிஐபி-களுக்காக போயிங் 747 ரக விமானங்களை ஏர் இந்தியா வாங்கியுள்ளது. எனினும், அந்த விமானத்தில் சரியான தொலைத்தொடர்பு கருவியோ, உணர் கருவிகளோ, பறந்து கொண்டிருக்கும் போது ஏவுகணை தாக்குதலிலிருந்து தப்பிக்கும் வசதியோ கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/vvip-aircraft-worth-rs-8400-crore-for-modi-but-non-bullet-proof-vehicles-for-soldiers-rahul-gandhi/">மோடிக்கு 8,400 கோடியில் விமானம்:; ராணுவ வீரர்களுக்குச் சாதாரண வாகனமா? : ராகுல் காந்தி கேள்வி</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://desiyamurasu.com/news-india/vvip-aircraft-worth-rs-8400-crore-for-modi-but-non-bullet-proof-vehicles-for-soldiers-rahul-gandhi/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
	</channel>
</rss>
