<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>MSP Archives - தேசிய முரசு - Desiya Murasu</title>
	<atom:link href="https://desiyamurasu.com/tag/msp/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://desiyamurasu.com/tag/msp/</link>
	<description>DesiyaMurasu – Daily Opinions &#38; Analysis on Latest News  &#124; Tamil News</description>
	<lastBuildDate>Sat, 26 Dec 2020 06:09:07 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.1</generator>

<image>
	<url>https://desiyamurasu.com/wp-content/uploads/2020/07/cropped-FAV-copy-1-32x32.png</url>
	<title>MSP Archives - தேசிய முரசு - Desiya Murasu</title>
	<link>https://desiyamurasu.com/tag/msp/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>ஒரே நாடு, ஒரே சந்தை ஏன் ?: ஒரே நாடு, ஒரே குறைந்தபட்ச ஆதரவு விலையே தீர்வு</title>
		<link>https://desiyamurasu.com/news-india/farmers-will-prosper-only-if-centres-one-nation-one-market-agenda-is-replaced-by-one-nation-one-msp/</link>
					<comments>https://desiyamurasu.com/news-india/farmers-will-prosper-only-if-centres-one-nation-one-market-agenda-is-replaced-by-one-nation-one-msp/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[ஆ. கோபண்ணா]]></dc:creator>
		<pubDate>Sat, 26 Dec 2020 06:08:14 +0000</pubDate>
				<category><![CDATA[தேசிய அரசியல்]]></category>
		<category><![CDATA[Corporates]]></category>
		<category><![CDATA[Farmers]]></category>
		<category><![CDATA[MSP]]></category>
		<category><![CDATA[NDA Government]]></category>
		<guid isPermaLink="false">https://desiyamurasu.com/?p=3762</guid>

					<description><![CDATA[<p>விவசாயச் சட்டங்கள் போன்ற கடுமையான சட்டங்கள் மூலம், ஒடுக்கப்பட்ட, பலவீனமான மக்களை உலகெங்கிலும் உள்ள கார்பரேட்கள் சுரண்டுகின்றனர். சமீப காலங்களில் விவசாய நில ஒப்பந்தங்கள் அரசியல் ரீதியாகவே உள்ளன. சில சமயங்களில் இத்தகைய இயக்கங்கள் ஆளும் அரசுகளைக் கவிழ்ப்பதிலும் வெற்றி பெற்றுள்ளன. விவசாயிகளின் போராட்டத்தைப் பொறுத்தவரை, இந்தியாவுக்கு நீண்ட வரலாறு உண்டு. 1917 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தலைமையில் நடந்த விவசாயிகள் போராட்டம் சுதந்திரத்தை முன்னெடுத்தது. விவசாயிகளின் பிரச்சினைகளை செவிமடுக்காத அரசுகள் தூக்கிய எறியப்பட்டதையே வரலாறு [&#8230;]</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/farmers-will-prosper-only-if-centres-one-nation-one-market-agenda-is-replaced-by-one-nation-one-msp/">ஒரே நாடு, ஒரே சந்தை ஏன் ?: ஒரே நாடு, ஒரே குறைந்தபட்ச ஆதரவு விலையே தீர்வு</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>விவசாயச் சட்டங்கள் போன்ற கடுமையான சட்டங்கள் மூலம், ஒடுக்கப்பட்ட, பலவீனமான மக்களை உலகெங்கிலும் உள்ள கார்பரேட்கள் சுரண்டுகின்றனர்.</p>



<p>சமீப காலங்களில் விவசாய நில ஒப்பந்தங்கள் அரசியல் ரீதியாகவே உள்ளன. சில சமயங்களில் இத்தகைய இயக்கங்கள் ஆளும் அரசுகளைக் கவிழ்ப்பதிலும் வெற்றி பெற்றுள்ளன.</p>



<p>விவசாயிகளின் போராட்டத்தைப் பொறுத்தவரை, இந்தியாவுக்கு நீண்ட வரலாறு உண்டு. 1917 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தலைமையில் நடந்த விவசாயிகள் போராட்டம் சுதந்திரத்தை முன்னெடுத்தது. விவசாயிகளின் பிரச்சினைகளை செவிமடுக்காத அரசுகள் தூக்கிய எறியப்பட்டதையே வரலாறு நமக்கு உணர்த்துகிறது.</p>



<p>2005 ஆம் ஆண்டு ஜூன் 22 ஆம் தேதி, ஒடிசாவில் உலகின் 5 ஆவது பெரிய இரும்பு ஆலை நிறுவனத்தின் இந்திய கிளையை தொடங்க அம்மாநில அரசுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. 12 மில்லியன் டன் இரும்பு தயாரிக்கும் ஆலைக்கு 4 ஆயிரம் ஹெக்டேர் நிலத்தை ஒதுக்கவும் முடிவு செய்யப்பட்டது. இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு 12 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்ய போஸ்கோ நிறுவனம் முடிவு செய்தது. இதன்மூலம், இரும்பு உற்பத்தியில் இந்தியா சூப்பர் பவர் ஆகும் என்று சொல்லப்பட்டது.</p>



<p>அங்குள்ள கிராம மக்களின் போராட்டத்தின் காரணமாக, போஸ்கோவுக்கு வழங்கப்படும் நிலம் 2700 ஆகக் குறைக்கப்பட்டு, ஆண்டுக்கு உற்பத்தி அளவு 8 மில்லியன் டன்னாகக் குறைக்கப்பட்டது.</p>



<p>கடந்த 2006 ஆம் ஆண்டு, மேற்கு வங்க மாநிலம் சிங்கூர் மாவட்டத்தில் 997 ஏக்கர் பரப்பளவில் விலை குறைவான காரை தயாரிக்க டாடா நிறுவனம் முடிவு செய்தது. இந்த கார் தொழிற்சாலைக்காக தங்கள் நிலத்தை அரசு வலுக்கட்டாயமாகப் பறிப்பதாகக் கூறி, விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p>



<p>30 ஆண்டுக் காலம் மேற்கு வங்கத்தை ஆண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான கூட்டணி அரசு ஆட்சியை இழப்பதற்கு இந்த போராட்டம் முக்கிய காரணமாக அமைந்தது.</p>



<p>கடந்த 2015 ஆம் ஆண்டு தனியார் நில ஆர்ஜிதம் செய்து கொள்ள அனுமதித்துக் கொண்டு வரப்பட்ட சட்டத் திருத்தத்தை, ராகுல் தலைமையிலான காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்த்தது. 2013 ஆம் ஆண்டு சட்டத்தின்படி, சில திருத்தங்களைச் செய்ய மத்திய அரசை ராகுல் காந்தி நிர்ப்பந்தித்தார்.</p>



<p>2020 ஆம் ஆண்டில் விவசாயத்துறையில் சீர்திருத்தத்தைக் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்தது. ஜூன் 2 ஆம் தேதி அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு, கடும் எதிர்ப்பையும் மீறி கடந்த செப்டம்பர் 2 ஆம் தேதி 3 விவசாயச் சட்டங்களும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன.</p>



<p>3 விவசாயச் சட்டங்களையும் கொண்டு வரும் முன்பு,விவசாயிகளின் நம்பிக்கையைப் பெறாதது ஏன்? என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. இதுபோன்று சம்பவங்கள் நிகழ்வது இது முதல் முறையல்ல. சம்பந்தப்பட்டவர்களைக் கலந்தாலோசிக்காமலேயே இது போன்ற சட்டங்களை அவசரமாக் கொண்டு வருவது பாஜக அரசுக்கு வாடிக்கையாகியிருக்கிறது.</p>



<p>மண்டி முறையை நீக்குவதன் மூலம் விவசாயச் சட்டங்களால் சிறு விவசாயிகள் மற்றும் வணிகர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. இந்த சட்டங்கள் விவசாயிகளை வலுவிழக்கச் செய்வதோடு, மொத்த வியாபாரிகள் மற்றும் ஏற்றுமதியாளர்களின் கருணைப் பார்வையிலேயே வாழ வேண்டிய நிலை விவசாயிகளுக்கு ஏற்படும். சந்தைப்படுத்துதலில் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படாமல் இருக்கவே, கார்பரேட் நிறுவனங்களிடம் சந்தையை மாற்றியதாக அரசு சொல்வது பொய்.</p>



<p>அளவுக்கு அதிகமாகச் சேமித்துக் கொள்ளவும், செய்கையாக விலை ஏற்றத்தைச் செய்யவும் இத்தகைய சட்டங்கள் கார்பரேட்களுக்கு உதவுகின்றன என்பதில் சந்தேகமில்லை.</p>



<p>அறுவடைக்குப் பிறகு விவசாயிகளுக்கு ஏற்ற, இறக்கங்களுடன் குறைவான விலையே கிடைக்கும். இந்த சட்டம் அரசியல் சாசனத்தைத் தோல்வியுறச் செய்வதோடு,விவசாயிகளுக்கு எதிரானதாகப் பார்க்கப்படுகிறது.</p>



<p>இந்த சட்டங்களைப் பயன்படுத்த அரசியல் சாசனத்தின் 33 ஆவது பிரிவை மத்திய அரசு பயன்படுத்துவது விவேகமற்றது. மாநில அரசு வரம்புக்குள் இருக்கும் விவசாயத்தை இந்த பிரிவின் கீழ் மத்திய அரசு பயன்படுத்துவது கூட்டுறவு கூட்டாட்சி உணர்வைப் பலவீனப்படுத்துவதாகும்.</p>



<p>ஒப்பந்த விவசாயம் உற்பத்தியை அதிகரிக்கவும், விவசாயிகளுக்கு வருவாயை அதிகரிக்கவும் உதவும் என்று அரசு சொல்கிறது. ஆனால், அவர்கள் இயற்றியுள்ள சட்டத்தின்படி ஒப்பந்ததாரரை விட விவசாயிகள் குறைவான வருவாயை மட்டுமே பெறும் சூழலை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் விவசாயிகளைப் பெரிய கார்பரேட் நிறுவனங்கள் ஆட்டுவிக்கும் நிலையே ஏற்படும்.</p>



<p>விலை நிர்ணயத்தில் நிலவும் சமச்சீரற்ற தன்மை, விவசாயிகளுக்கு மேலும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தும்.</p>



<p>கடந்த 2019 ஆம் ஆண்டு குஜராத் விவசாயிகளை எதிர்த்து அமெரிக்காவின் முன்னணி உணவு நிறுவனமான பெப்ஸிகோ வழக்கு தொடர்ந்தது. விவசாயிகளிடம் செய்து கொண்ட ஒப்பந்தம் மீறப்பட்டதாக இந்த வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த பிரச்சினையில் தலையிடுமாறு மத்திய அரசை விவசாயிகள் கேட்டுக் கொண்டனர். இது இப்போது நிகழ்ந்தது.</p>



<p>புதிய சட்டங்களாலும் விவசாயிகளுக்கு இத்தகைய பிரச்சினைகள் ஏற்படும் என்பதில் சந்தேகம் இல்லை. அதேபோன்று, கடந்த 2006 ஆம் ஆண்டு பீகாரில் விவசாய உற்பத்தி சந்தைக் குழு ரத்து செய்யப்பட்டபோது, விளைபொருட்கள் 15 சதவிகிதத்துக்கும் குறைவாகவே விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அரசின் இத்தகைய நடவடிக்கையால், முதலீடு செய்ததில் பாதியைக் கூட விவசாயிகளால் மீட்டெடுக்க முடியவில்லை. இத்தகைய பரீட்சார்த்த நடவடிக்கைகள் எல்லாம் நல்ல உதாரணமாக நம் முன்னே நிற்கின்றன. புதிய சட்டங்களும் இதே போன்று விவசாயிகளை இக்கட்டான சூழலுக்குத் தள்ளிவிடும் என்பதில் சந்தேகிப்பது நியாயம்தானே.</p>



<p>விவசாயச் சட்டங்கள் விவசாயிகளுக்கு வரப்பிரசாதம் என்று மத்திய அரசு சொல்லிக் கொண்டிருக்கிறது. ஆனால், அவர்கள் இயற்றியுள்ள சட்டத்தில் அப்படி ஏதும் இல்லை. இந்த சட்டம் மண்டி முறையைப் பலவீனப்படுத்துவதோடு, பெரிய வர்த்தகர்களுக்கு அதிக அதிகாரத்தை அளித்து, கறுப்புச் சந்தையை ஊக்கப்படுத்தும்.</p>



<p>மத்திய அரசின் ஒரே நாடு,ஒரே சந்தை என்ற திட்டத்தை மாற்றிவிட்டு, ஒரே நாடு, ஒரே குறைந்தபட்ச ஆதார விலை என்று மாற்றினால் மட்டுமே விவசாயிகள் முகத்தில் புன்னகையைப் பார்க்க முடியும்.</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/farmers-will-prosper-only-if-centres-one-nation-one-market-agenda-is-replaced-by-one-nation-one-msp/">ஒரே நாடு, ஒரே சந்தை ஏன் ?: ஒரே நாடு, ஒரே குறைந்தபட்ச ஆதரவு விலையே தீர்வு</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://desiyamurasu.com/news-india/farmers-will-prosper-only-if-centres-one-nation-one-market-agenda-is-replaced-by-one-nation-one-msp/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>யார் கொடுப்பார் விலை? : விவசாயிகளைப் பொய் சொல்லி ஏமாற்றும் மோடி அரசு</title>
		<link>https://desiyamurasu.com/news-india/msp-who-will-pay-the-price/</link>
					<comments>https://desiyamurasu.com/news-india/msp-who-will-pay-the-price/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[ஆ. கோபண்ணா]]></dc:creator>
		<pubDate>Tue, 15 Dec 2020 10:55:31 +0000</pubDate>
				<category><![CDATA[தேசிய அரசியல்]]></category>
		<category><![CDATA[MSP]]></category>
		<guid isPermaLink="false">https://desiyamurasu.com/?p=3589</guid>

					<description><![CDATA[<p>சமீபத்தில் 3 விவசாய சந்தை சீர்திருத்த மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏராளமான விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். கடந்த செப்டம்பர் 25 ஆம் தேதி தேசிய அளவிலான போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, தெலங்கானா,கர்நாடகா, கேரளா, ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்திலிருந்து ஏராளமான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொழிற்சங்கங்கள், எதிர்க்கட்சிகள் மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள கட்சிகள்கூட விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு [&#8230;]</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/msp-who-will-pay-the-price/">யார் கொடுப்பார் விலை? : விவசாயிகளைப் பொய் சொல்லி ஏமாற்றும் மோடி அரசு</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>சமீபத்தில் 3 விவசாய சந்தை சீர்திருத்த மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏராளமான விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். கடந்த செப்டம்பர் 25 ஆம் தேதி தேசிய அளவிலான போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, தெலங்கானா,கர்நாடகா, கேரளா, ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்திலிருந்து ஏராளமான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொழிற்சங்கங்கள், எதிர்க்கட்சிகள் மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள கட்சிகள்கூட விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. விவசாயச் சந்தைகளில் உள்ள நீண்ட காலப் பிரச்சினைகளை மையமாக வைத்துப் பரவலாக விவசாயிகள் போராடி வருகின்றனர்.</p>



<p>அத்தியாவசியப் பொருட்கள் சட்டத் திருத்தம், விவசாயப் பொருட்கள் வினியோகம் மற்றும் சேமிப்பு முறையை ஒழுங்குபடுத்துகிறது. அத்தியாவசிய உணவுப் பொருட்களைத் தனியார் நிறுவனங்கள் அதிக அளவில் சேமித்து வைக்க வழிவகை செய்கிறது. விலை உத்தரவாதம் மற்றும் விவசாயி பணிகள் சட்டத்தின் விவசாயிகள் (அதிகாரம் மற்றும் பாதுகாப்பு) ஒப்பந்தம், விவசாயம் செய்வதற்கான ஒப்பந்தத்துக்கு வழி ஏற்படுத்துகிறது. அரசு ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களைத் தவிர்த்து, விவசாயிகளிடம் நேரடி கொள்முதல் செய்யத் தனியார் நிறுவனங்களை விவசாயிகள் உற்பத்தி வர்த்தகம் மற்றும் வணிகச் சட்டம் அனுமதிக்கிறது.</p>



<h4 class="wp-block-heading"><span class="has-inline-color has-vivid-red-color">சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் நிலைமை:</span></h4>



<p>இந்த விவசாயச் சட்டங்கள் விவசாயச் சந்தையில் போட்டியை ஏற்படுத்தி உங்களுக்கு அதிக லாபத்தை ஏற்படுத்தித் தரும் என்று கூறி, விவசாயிகளைச் சமாதானப்படுத்த மத்திய அரசு முயல்கிறது. எனினும், புதிய விவசாயச் சட்டங்களால் தங்கள் பொருளாதார நிலைமையைச் சீர்குலைத்துவிடும் என்று விவசாயிகள் நினைக்கிறார்கள். இவர்களது அச்சம் எதார்த்தமானது தான். இந்தியாவில் கிராமப்புற வாழ்க்கை நிலை தொடர்பான பிரச்சினையில், குறிப்பாக விவசாயத்தில் (1 ஹெக்டேர் அல்லது 2.47 ஏக்கருக்குக் குறைவாக நிலம் வைத்துள்ள) ஈடுபட்டுள்ள சிறு மற்றும் நடுத்தர விவசாயிகளின் அச்சத்தில் உண்மை இருக்கிறது. கடந்த 2015-16 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட விவசாயக் கணக்கெடுப்பின்படி, நாட்டில் உள்ள மொத்த விவசாயிகளில், 86 சதவிகிதம் பேர் சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் தான். இவர்கள் ஏற்கனவே கடன் சுமை, விளைபொருட்களுக்கு குறைந்த விலை, நீர்ப்பாசன வசதியின்மை மற்றும் விவசாய உற்பத்திச் செலவு அதிகரிப்பு மற்றும் பயிர்ச் சேதம் போன்ற பிரச்சினைகளில் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள்.</p>



<p>இந்நிலையில், மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய விவசாயச் சட்டங்கள், தங்கள் அடிப்படைப் பிரச்சினைகளை அர்த்தமுள்ள வழிகளில் தீர்த்து வைக்காது என்று நம்புகிறார்கள். அதோடு, தங்களைச் சூழ்ந்துள்ள நீண்டகாலப் பிரச்சினைகள் மேலும் மோசமாகும் என்று அஞ்சுகிறார்கள். இருந்தாலும், இந்தச் சட்டங்கள் சிறு மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கான இரண்டாவது சுதந்திரம் என்று நரேந்திர மோடி அரசு கூறுகிறது. இந்த வாதத்தின் மீது தான் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்குச் சந்தேகம் எழுந்துள்ளது.</p>



<p>3 விவசாயச் சட்டங்களையும் திரும்பப் பெற்று, கொள்முதலில் உறுதியளிக்கும் வகையில் குறைந்தபட்ச ஆதரவு விலையைச் சட்டமாக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் பிரதான கோரிக்கையாக இருக்கிறது. குறைந்தபட்ச ஆதரவு விலை தொடரும் என பிரதமர் நரேந்திர மோடி கூறினாலும், பிரதமர் மீது விவசாயிகள் நம்பிக்கை இழந்துவிட்டார்கள். விவசாயிகளின் நம்பிக்கை இழப்பைப் புரிந்து கொள்வது கடினம் ஒன்றும் கிடையாது. கடந்த 2019 ஆம் ஆண்டு அளித்த பெரும்பாலான வாக்குறுதிகளை மோடி அரசு நிறைவேற்றவில்லை. மாநில அரசுகளே கொள்முதல் செய்யும் வகையில், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்ட அங்கீகாரம் வேண்டும் என்று, 3 விவசாயச் சட்டங்களைக் கொண்டு வரும் முன்பே, விவசாயச் சங்கங்கள் வேண்டுகோள் விடுத்தன. விவசாய உற்பத்திப் பொருட்களுக்கு ஆகும் மொத்த செலவிலிருந்து ஒன்றரை மடங்கு அதிகம் குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற எம்.எஸ். சுவாமிநாதனின் பரிந்துரையை அரசு அமல்படுத்த வேண்டும் என்பதும், விவசாயிகளின் முக்கிய கோரிக்கையாக இருந்தது.</p>



<p>ஆனால், குறைந்தபட்ச ஆதரவு விலை குறித்தோ, கொள்முதல் குறித்தோ 3 விவசாயச் சட்டங்களிலும் குறிப்பிடப்படாதது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. விவசாயிகளுக்கு நல்ல வருவாயை ஏற்படுத்தித் தருவதாகக் கூறிக்கொண்டே, இந்த சட்டங்களின் மூலம் தனியார் சந்தையைத் திறப்பதுதான் அரசின் நோக்கம். தனியார் வர்த்தகம் மற்றும் விவசாய உற்பத்தியை விதிமுறைகளை நீக்கி, ஒப்பந்த விவசாயத்தின்படி தனியார் கார்பரேட் நிறுவனங்களை உள்ளே அனுமதிக்க இந்த சட்டங்கள் வழிவகுக்குமோ? என்ற அச்சம் விவசாயிகள் மத்தியில் உள்ளது. இது, பொது கொள்முதல் முறையை முற்றிலும் அழிக்கும் செயல் என்பதையே விவசாயிகளின் பயம் வெளிப்படுத்துகிறது.</p>



<p>வர்த்தகர்களிடம் போட்டி ஏற்படும்போது, விவசாயிகளுக்கு அதிகபட்ச லாபம் கிடைக்கும் என்பதே, இந்த சட்டங்களை ஆதரிப்போரின் கருத்தாக உள்ளது. இத்தகைய கருத்து அர்த்தமற்றது. இப்போது, விவசாயப் பொருள் வர்த்தகத்தில் தனியார் நிறுவனங்கள் இல்லாதது போல் இவர்கள் பேசுவது நகைப்புக்குரியதாக இருக்கிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு இந்தியாவில் 95 சதவிகித விவசாயப் பொருட்கள் வர்த்தகத்தைத் தனியார் நிறுவனங்களே கையாண்டன. வெறும் 5 சதவிகித விவசாய உற்பத்திப் பொருட்களை மட்டுமே, அரசு கொள்முதல் செய்தது. ஏற்கனவே, 95 சதவிகித சந்தையை ஆக்கிரமித்துள்ள தனியாரால், விவசாயிகளுக்கு நல்ல விலையைத் தரமுடியாதபோது, அரசின் 5 சதவீத கொள்முதல் விவசாயிகளுக்கு எப்படி பயனுள்ளதாக இருக்கும்?</p>



<h4 class="wp-block-heading"><span class="has-inline-color has-vivid-red-color">குறைந்தபட்ச ஆதரவு விலையும் கொள்முதலும் :</span></h4>



<p>விலை நிர்ணயக் கொள்கையைப் பொறுத்தவரை, விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு, விவசாயத்தில் அதிக முதலீடு செய்ய விவசாயிகளுக்கு ஊக்கம் அளிப்பதாக உள்ளது. அதேசமயம், நுகர்வோரின் நலனைப் பாதுகாக்கும் வகையில் பொது வினியோக முறையின் மூலம் அவர்களுக்கு நியாய விலையில் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகிறது. ஒவ்வொரு விதைப்பு பருவத்தின்போதும், விவசாய உற்பத்திப் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை அரசு நிர்ணயிக்கிறது. அரசு ஏஜென்சிகள், கூட்டுறவு அமைப்புகள் மற்றும் அரசு நிர்ணயித்த ஏஜென்சிகள் மூலம் கொள்முதல் செய்யும் போது, குறிப்பிட்ட விளைபொருட்கள் குறைந்தபட்ச ஆதரவு விலைக் கீழே போகாது.</p>



<p>விவசாயச் செலவு மற்றும் விலை நிர்ணய ஆணையத்தின் (சிஏசிபி) பரிந்துரையின்படியே குறைந்தபட்ச ஆதரவு விலை பரிந்துரைக்கப்படுகிறது. ஒவ்வொரு பயிருக்கும் கற்பனையான செலவையே சிஏசிபி கணக்கில் கொள்கிறது. குறைந்தபட்ச ஆதரவு விலையை மாநில அரசு நிர்ணயிக்காமல், கற்பனை விலையை சிஏசிபி நிர்ணயிப்பதே உண்மை. மாநில அரசுகளே அதிக அளவு கொள்முதல் செய்வதால், கோதுமை மற்றும் நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை மாநில அரசு நிர்ணயிப்பதே சரியாக இருக்கும் என்று விவசாயிகள் கூறுகிறார்கள். குறைந்தபட்ச ஆதரவு தொடராது என்று புதிய சட்டங்களில் சொல்லப்படவில்லை என்றாலும், விவசாய உற்பத்தி சந்தைக்குழுக்கள் மூலம் நடைபெறும் கொள்முதல் ரத்து செய்யப்படும் போது, குறைந்தபட்ச ஆதரவு விலை முறையும் தானாக ரத்தாகி விடும் என்பதே விவசாயிகளின் அச்சம்.</p>



<p>நெல் மற்றும் கோதுமையைத் தவிர, மற்ற பயிர்களுக்கான பொது கொள்முதல் கொள்கை வலுவற்ற நிலையில் தான் உள்ளது. கோதுமை மற்றும் நெல் 40 சதவீதம் அரசால் கொள்முதல் செய்யப்படும் போது, தானியங்கள் 5 சதவிகிதம் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகின்றன. தானியங்கள் மட்டுமில்லாமல், பெரும்பாலான பயிர்கள் குறைவாகக் கொள்முதல் செய்யப்படுவதால், அவற்றைக் குறைந்த விலைக்கு விற்பனை செய்ய வேண்டிய நிலை விவசாயிகளுக்கு ஏற்படுகிறது. அக்மார்க்நெட் தரவுகளின்படி, 2018-19 ஆம் ஆண்டு கரிப் பருவத்தில் குறைந்தபட்ச ஆதரவு விலைக்குக் குறைவாகவே பருப்பு வகைகளை விற்றுள்ளனர். வலுவான கொள்முதல் கொள்கை இல்லாமல், குறைந்தபட்ச ஆதரவு விலையை சம்பிரதாயம் போல் அறிவிப்பது, அனைத்துப் பயிர்களின் விலையை அதிகரிக்க நிச்சயம் உதவாது.</p>



<p>3 புதிய விவசாயச் சட்டங்களைக் கொண்டு வரும் முன், கடந்த 2015 ஆம் ஆண்டு விவசாய உற்பத்தி சந்தைக் குழுக்களின் கட்டுப்பாடுகளை நீக்கவும், அரசின் கொள்முதலைக் குறைக்கவும் சாந்த குமார் குழு மத்திய அரசுக்குப் பரிந்துரைத்தது. விவசாய உற்பத்திச் சந்தைக் குழுவின் அடிப்படைக் கட்டமைப்புக்கு முதலீடு செய்யாததும், அரசின் கொள்முதல் குறைந்ததாலும், ஏற்கனவே குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது. அரசு கொள்முதலில் இருந்த வெற்றிடம் தனியாரைக் கொண்டு நிரப்ப அடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக விவசாய உற்பத்தி சந்தைக் குழுக்களால் விவசாயிகளுக்குப் பிரச்சினை இருப்பதையோ அல்லது இடைத்தரகர்களின் ஆதிக்கத்தையோ மறுப்பதற்கில்லை. அதேசமயம், விவசாய உற்பத்தி சந்தைக் குழுவில் சீர்திருத்தம் கொண்டு வருவது வேறு; அதனை முற்றிலும் அழிப்பது வேறு. இத்தகைய நடவடிக்கையால், தங்கள் விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்குமோ என்ற அச்சம் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், விவசாயப் பொருட்களை வாங்க விவசாய உற்பத்திச் சந்தைக் குழுக்களுக்கு வெளியே அனுமதி கொடுத்தால், விவசாயிகளுக்குத் தேவையான நல்ல விலை கிடைக்கும் என்ற உத்தரவாதம் இல்லை.</p>



<h4 class="wp-block-heading"><span class="has-inline-color has-vivid-red-color">குறைந்தபட்ச ஆதார விலை மற்றும் கொள்முதலை விவசாயிகள் ஏன் கோருகிறார்கள்? :</span></h4>



<p>குறைந்தபட்ச ஆதரவு விலைக்குக் குறைவாகவே விவசாயப் பொருட்கள் விற்கப்படுவதுதான் எதார்த்தமான உண்மை. பயிர் உற்பத்திச் செலவை விடக் குறைந்த விலைக்கே, விளைபொருட்களை விவசாயிகள் விற்கின்றனர். இதுவே வெளிச்சந்தையில் விலை, ஏற்ற இறக்கத்தால் ஆரம்பத்தில் குறைந்த விலைக்கு விற்க வேண்டிய சூழல் உருவானது. விளைபொருட்களுக்கு அரசே கொள்முதல் விலையை நிர்ணயிக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கை. மேலும், அறுவடையின் போது செலவை விட விலை குறைவாக இருந்தால், குறைந்தபட்ச ஆதரவு விலையின் அடிப்படையில் அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என்பதே விவசாயிகளின் விருப்பமாக உள்ளது. பெரும்பாலான விவசாயிகளுக்கு விளைபொருட்களைச் சேமித்து வைக்கும் வசதி இல்லை. அதோடு, விவசாயிகளுக்கு உடனே பணம் கிடைத்தால்தான், மீண்டும் அடுத்த சாகுபடி செய்யவும், வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தவும் முடியும். குறைந்தபட்ச ஆதரவு விலையின் கீழ் கொள்முதல் செய்ய அரசிடம் நிதி ஆதாரம் இல்லை என்பதையே, இத்தகைய சட்டங்கள் முன்கூட்டியே தெரிவிக்கின்றன. குறைந்தபட்ச ஆதரவு விலையின்படி விவசாயிகளிடமிருந்து விளைபொருட்களை வாங்கி, பொது வினியோகத் திட்டத்தின் மூலம் மக்களுக்குக் குறைந்த விலையில் கொடுப்பதுதான் அரசுக்கு இப்போது பிரச்சினை.</p>



<p>இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண, பொது வினியோகத்துக்குத் தேவையான உணவு தானியங்களைத் தனியார் வர்த்தகர்களிடம் நேரடியாக வாங்கவேண்டும். நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய, உணவு தானியங்களைச் சேமிக்க வேண்டிய தேவை இருக்காது. அத்தியாவசிய பொருட்கள் திருத்தச் சட்டத்தின்படி, விவசாயப் பொருட்களை எவ்வளவு வேண்டுமானாலும் சேமித்து வைத்துக் கொள்ளலாம். அவர்களிடம் அரசு நேரடியாகக் கொள்முதல் செய்து, ரேஷன் கடைகளுக்கு வினியோகிக்கலாம். தேசிய உணவு பாதுகாப்புக்காக உணவு தானியங்களைச் சேமிக்கவோ, அதனைப் பராமரிக்கவோ வேண்டிய அவசியமும், செலவும் அரசுக்கு ஏற்படாது.</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/msp-who-will-pay-the-price/">யார் கொடுப்பார் விலை? : விவசாயிகளைப் பொய் சொல்லி ஏமாற்றும் மோடி அரசு</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://desiyamurasu.com/news-india/msp-who-will-pay-the-price/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>டெல்லி : பிரதமர் மோடியின் ஆழ்ந்த உறக்கத்தைக் கலைத்த விவசாயிகள் போராட்டம்</title>
		<link>https://desiyamurasu.com/news-india/punjab-and-haryana-farmers-have-given-a-wakeup-call-to-modi-govt/</link>
					<comments>https://desiyamurasu.com/news-india/punjab-and-haryana-farmers-have-given-a-wakeup-call-to-modi-govt/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[ஆ. கோபண்ணா]]></dc:creator>
		<pubDate>Tue, 01 Dec 2020 10:42:30 +0000</pubDate>
				<category><![CDATA[தேசிய அரசியல்]]></category>
		<category><![CDATA[APMC]]></category>
		<category><![CDATA[Farmers]]></category>
		<category><![CDATA[Government]]></category>
		<category><![CDATA[MSP]]></category>
		<category><![CDATA[protest]]></category>
		<guid isPermaLink="false">https://desiyamurasu.com/?p=3398</guid>

					<description><![CDATA[<p>பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் நாட்டின் பல பகுதிகளிலிருந்து டெல்லியில் திரண்டு, கடந்த நவம்பர் 27 ஆம் தேதி விவசாயிகள் நடத்திய போராட்டம், பிரதமர் மோடியின் ஆழ்ந்த உறக்கத்தைக் கலைத்துள்ளது. இந்த போராட்டத்தில் பங்கேற்ற விவசாயிகளைக் கால்நடைகளை அடைத்து வைப்பதைப் போல், 36 மணி நேரம் அடைத்து வைத்திருக்கிறது டெல்லி காவல் துறை. விவசாயிகளுக்கு எதிரான நடவடிக்கைக்கு டெல்லி அரசு ஒத்துழைப்புக் கொடுத்தாலும், அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இதில் உடன்பாடு இல்லை என்றே தெரிகிறது. [&#8230;]</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/punjab-and-haryana-farmers-have-given-a-wakeup-call-to-modi-govt/">டெல்லி : பிரதமர் மோடியின் ஆழ்ந்த உறக்கத்தைக் கலைத்த விவசாயிகள் போராட்டம்</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் நாட்டின் பல பகுதிகளிலிருந்து டெல்லியில் திரண்டு, கடந்த நவம்பர் 27 ஆம் தேதி விவசாயிகள் நடத்திய போராட்டம், பிரதமர் மோடியின் ஆழ்ந்த உறக்கத்தைக் கலைத்துள்ளது.</p>



<p>இந்த போராட்டத்தில் பங்கேற்ற விவசாயிகளைக் கால்நடைகளை அடைத்து வைப்பதைப் போல், 36 மணி நேரம் அடைத்து வைத்திருக்கிறது டெல்லி காவல் துறை.</p>



<p>விவசாயிகளுக்கு எதிரான நடவடிக்கைக்கு டெல்லி அரசு ஒத்துழைப்புக் கொடுத்தாலும், அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இதில் உடன்பாடு இல்லை என்றே தெரிகிறது. டெல்லி காவல் துறை உள்துறை அமைச்சகத்துக்குக் கீழ் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.</p>



<p>டெல்லியில் உள்ள 9 மைதானங்களில் விவசாயிகளை அடைத்து வைக்க டெல்லி மாநில அரசு அனுமதிக்கவில்லை. எனினும், உள்துறை அமைச்சகத்தின் உத்தரவைப் பெற்று, டெல்லி துணை நிலை ஆளுநர் மூலம் உத்தரவு பெற்று, விவசாயிகளை மைதானங்களில் அடைத்து வைத்தனர்.</p>



<p>மேலும், பஞ்சாப் மற்றும் ஹரியானா விவசாயிகளுக்கு ஆம் ஆத்மி கட்சி ஆதரவாக இருந்ததும், விவசாயிகள் போராட்டத்தை முன்னின்று நடத்தும் ஸ்வராஜ் மஞ்ச் கிஷான் அமைப்பின் செயற்பாட்டாளரும், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நெருக்கமான ஆம் ஆத்மி கட்சியின் யோகேந்திர யாதவும், டெல்லி அரசின் தயக்கத்துக்குக் காரணம்.</p>



<p>கடந்த செப்டம்பர் மாதம் 3 விவசாயச் சட்டத் திருத்தங்களையும் கொண்டுவந்ததிலிருந்து, ஆம் ஆத்மி கட்சியும், ஸ்வராஜ் மஞ்ச் இயக்கமும் இணைந்து பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றது. இவர்கள் நடத்தும் போராட்டங்களில் அதிகமான நிலங்களை வைத்திருக்கும் விவசாயிகள் பெரும்பாலும் பங்கேற்று வருகின்றனர்.</p>



<p>5 ஏக்கருக்குக் குறைவான நிலங்களை வைத்திருக்கும் விவசாயிகள் குறைந்த அளவில் போராட்டத்தில் பங்கெடுத்து வருகின்றனர். விவசாய உற்பத்தி சந்தைக் குழுக்களில், தங்கள் விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கவிடாமல் செய்யும் இடைத்தரகர்களின் தலையீடு அவர்களைப் பாதிப்படையச் செய்துள்ளதே இதற்குக் காரணம். சந்தைக்குழுக்களுக்கு வெளியே நல்ல விலைக்கு விளைபொருட்களை விற்று வருகிறார்கள். அதனால், புதிய விவசாய சட்டத்தில் சந்தைக் குழுக்களுக்கு வெளியே விவசாயிகள் நேரடி விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டதை அவர்கள் வரவேற்கிறார்கள்.</p>



<p>டெல்லி போராட்டத்தில், பஞ்சாப், ஹரியானா மற்றும் மேற்கு உத்தரப்பிரதேச மாநிலங்களை உள்ளடக்கிய பாரதிய கிஷான் சங்கம் தலைமையிலான விவசாய அமைப்புகளை மத்திய அரசு எதிர்கொள்ள வேண்டியிருந்தது.</p>



<p>போர்க்களத்துக்குப் புறப்பட்ட வீரர்களைப் போல் திரண்டு வந்த விவசாயிகளைப் பார்த்து டெல்லி காவல் துறை திகைத்துப் போனது. டெல்லி எல்லைக்குள் வந்து கொண்டிருந்த விவசாயிகளைத் தடுக்க காவல் துறை மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்தது. இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள், ஒரு விஷயத்தில் மட்டும் தெளிவாக இருந்தார்கள். குறைந்தபட்ச ஆதரவு விலை என்ற அம்சம் சட்டத்தில் இடம் பெறாதது, தங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்திருந்தார்கள்.</p>



<p>இருந்தாலும், குறைந்தபட்ச ஆதரவு விலை தொடரும் என்று வெறும் வாயில் சொல்லிக் கொண்டிருக்கும் பிரதமர் மோடியின் பேச்சை நம்ப விவசாயிகள் தயாராக இல்லை. 3 விவசாயச் சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும் என்பதே அவர்களது ஒட்டுமொத்த குரலாக இருக்கிறது.</p>



<p>மத்தியில் ஆட்சி மாற்றம் வந்தால் தான் இந்த விவசாயிகள் விரோதச் சட்டங்களை ரத்து செய்ய முடியும் என்பதும் விவசாயிகளுக்குப் புரிந்திருக்கிறது. ஆனால், 2024 ஆம் ஆண்டு வரை அதற்குச் சாத்தியமில்லை. குறிப்பாக, பெரிய அளவிலான விளைவுகள் ஏற்படும் வரை, இந்த 3 சட்டங்களையும் பாஜக அரசு ரத்து செய்வது சாத்தியமில்லை.</p>



<p>விவசாய உற்பத்தி சந்தைக் குழுக்கள் மற்றும் குறைந்தபட்ச ஆதரவு விலை இல்லையென்றால், அரசின் கொள்முதல் முறையைப் பெரிய கார்பரேட் நிறுவனங்கள் பலவீனப்படுத்திவிடும் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் அஞ்சுகிறார்கள். கோதுமை மற்றும் அரிசியைக் குறைந்தபட்ச ஆதரவு விலை மூலமே அரசு தொடர்ந்து வாங்க வேண்டும் என்றும் அவர்கள் விரும்புகிறார்கள். அமேசான் மற்றும் ரிலையன்ஸ் மூலம் தங்கள் விளைபொருட்களை விற்க அவர்கள் விரும்பவில்லை.</p>



<p>பெரும் தொழிலதிபர்களுடன் மட்டுமே மோடி அரசு நட்புடன் இருப்பதாகவும், பெரிய அல்லது சிறு விவசாயிகள் பற்றி அவருக்கு அக்கறையில்லை என்றும் விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். விவசாய சட்டங்களை பெரும்பாலான மாநிலங்கள் எதிர்க்கின்றன. இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொண்ட பீகார் பின்னர் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.</p>



<p>உள்ளூர் விவசாயிகளையும், வர்த்தகர்களையும் மீறி. விவசாயச் சந்தைகளைப் பெரிய நிறுவனங்கள் ஆக்கிரமிக்கவே இந்தச் சட்டங்கள் வழிவகுக்கின்றன என்பதில் விவசாயிகள் உறுதியாக இருக்கின்றனர்.</p>



<p>டெல்லியில் திரண்ட விவசாயிகளின் மனோதிடம், போர்க் குணம், அடக்குமுறையை எதிர்கொண்ட விதம், பிரதமர் மோடியின் ஆழ்ந்த உறக்கத்தைக் கலைத்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/punjab-and-haryana-farmers-have-given-a-wakeup-call-to-modi-govt/">டெல்லி : பிரதமர் மோடியின் ஆழ்ந்த உறக்கத்தைக் கலைத்த விவசாயிகள் போராட்டம்</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://desiyamurasu.com/news-india/punjab-and-haryana-farmers-have-given-a-wakeup-call-to-modi-govt/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>குறைந்தபட்ச ஆதரவு விலை ஏன் தேவை? விவசாயிகள் போராடுவது ஏன்? : விரிவான அலசல்</title>
		<link>https://desiyamurasu.com/news-india/what-is-msp-which-states-benefit-from-procurement-legal-basis-and-protests/</link>
					<comments>https://desiyamurasu.com/news-india/what-is-msp-which-states-benefit-from-procurement-legal-basis-and-protests/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[ஆ. கோபண்ணா]]></dc:creator>
		<pubDate>Tue, 20 Oct 2020 10:29:10 +0000</pubDate>
				<category><![CDATA[தேசிய அரசியல்]]></category>
		<category><![CDATA[Farm Bill]]></category>
		<category><![CDATA[Farmers Protests]]></category>
		<category><![CDATA[MSP]]></category>
		<guid isPermaLink="false">https://desiyamurasu.com/?p=2701</guid>

					<description><![CDATA[<p>நரேந்திர மோடி அரசால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட விவசாயச் சட்டங்களை எதிர்த்து நாட்டின் பல பகுதிகளில் விவசாயிகள் நடத்தும் போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது பஞ்சாப் மற்றும் ஹரியானா விவசாயிகள் இந்த சட்டங்களை எதிர்ப்பதற்கு முக்கிய காரணம், குறைந்தபட்ச ஆதரவு விலை முடிவுக்கு வந்துவிடும் என்பதால் தான். விவசாயச் சட்டங்களில் இதைப் பற்றிக் குறிப்பிடாததே விவசாயிகளின் சந்தேகத்துக்குக் காரணமாக அமைந்துள்ளது. குறைந்தபட்ச ஆதரவு விலை என்றால் என்ன? இது விவசாயிகளுக்கு எந்தளவுக்குப் பயன் தரும்? இந்தியாவில் உள்ள விவசாயிகளுக்குக் குறைந்தபட்ச [&#8230;]</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/what-is-msp-which-states-benefit-from-procurement-legal-basis-and-protests/">குறைந்தபட்ச ஆதரவு விலை ஏன் தேவை? விவசாயிகள் போராடுவது ஏன்? : விரிவான அலசல்</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>நரேந்திர மோடி அரசால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட விவசாயச் சட்டங்களை எதிர்த்து நாட்டின் பல பகுதிகளில் விவசாயிகள் நடத்தும் போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது<br><br>பஞ்சாப் மற்றும் ஹரியானா விவசாயிகள் இந்த சட்டங்களை எதிர்ப்பதற்கு முக்கிய காரணம், குறைந்தபட்ச ஆதரவு விலை முடிவுக்கு வந்துவிடும் என்பதால் தான். விவசாயச் சட்டங்களில் இதைப் பற்றிக் குறிப்பிடாததே விவசாயிகளின் சந்தேகத்துக்குக் காரணமாக அமைந்துள்ளது.<br><br>குறைந்தபட்ச ஆதரவு விலை என்றால் என்ன? இது விவசாயிகளுக்கு எந்தளவுக்குப் பயன் தரும்? இந்தியாவில் உள்ள விவசாயிகளுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை உண்மையிலேயே முதன்மையானதா? இதனைச் சட்ட வரையறைக்குள் கொண்டு வருவதற்கு உண்மையிலேயே ஏதாவது இருக்கிறதா?</p>



<h4 class="wp-block-heading">குறைந்தபட்ச ஆதரவு விலை என்றால் என்ன?</h4>



<p>குறிப்பிட்ட பயிர்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலையை அரசு நிர்ணயிப்பது விவசாயிகளுக்கு முக்கியமான பாதுகாப்பு வளையமாக அமைகிறது. அதாவது, அரசே பாதுகாப்பு வழங்குகிறது.<br><br>குறைந்தபட்ச ஆதரவு விலை என்பது, விவசாயிகளை விலை வீழ்ச்சியிலிருந்து காப்பாற்றுவதோடு, விலை வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் விளைபொருட்களையும் உற்பத்தி செய்ய ஊக்கமளிக்கிறது. மேலும் அதன் இருப்பையும் பராமரிக்க உறுதி செய்கிறது.<br><br>பயிர்களுக்கான சந்தை விலை குறைந்தபட்ச ஆதரவு விலையைவிட வீழ்ச்சியடையும்போது, விவசாயிகள் கோரும் விலைக்கு அரசே பயிரைக் கொள்முதல் செய்யும். குறைந்த விலைக்கு விற்பதால் ஏற்படும் இழப்பிலிருந்து விவசாயிகள் காப்பாற்றப்படுவர்.<br><br>இந்தியாவில் உற்பத்தியாகும் 30 சதவீத கோதுமை மற்றும் அரிசியை மத்திய அரசு கொள்முதல் செய்கிறது. மற்ற பயிர்கள் 6 முதல் 7 சதவீதம் வரை கொள்முதல் செய்யப்படுகின்றன. இவை, குறைந்தபட்ச ஆதரவு விலை முறையிலேயே கொள்முதல் செய்யப்படுகிறது.</p>



<h4 class="wp-block-heading">குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிப்பது யார்?</h4>



<p>சிஏசிபி எனப்படும் விவசாய செலவுகள் மற்றும் விலைகளுக்கான ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று, ஒவ்வொரு அறுவடையின்போதும், குறிப்பிட்ட பயிர்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலையை மத்திய அரசு நிர்ணயிக்கிறது.<br><br>அரசு அமைத்த சாமிநாதன் குழு வரையறுத்ததின் அடிப்படையில், குறைந்தபட்ச ஆதரவு விலையை சிஏசிபி தான் முடிவு செய்கிறது. விவசாயிகளின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பாக சாமிநாதன் குழு 2004 ஆம் ஆண்டு டிசம்பர் முதல் 2006 ஆம் ஆண்டு அக்டோபர் வரை பல அறிக்கைகளை மத்திய அரசுக்கும் சமர்ப்பித்தது குறிப்பிடத்தக்கது.<br><br>3 வகையான செலவுகளை மதிப்பீடு செய்ய சூத்திரம் தேவைப்படுகிறது:<br><br><strong>ஏ2 :</strong>  விதைகள், உரம், பூச்சிக் கொல்லிகள், ஊதியம் மற்றும் நீர்ப்பாசனத்துக்கு விவசாயிகள் செலவு செய்யும் உண்மையான தொகை.<br><br><strong>ஏ2+எஃப்எல் :</strong> ஏ2 செலவுகள் கூலியே வாங்காமல் விவசாயம் செய்யும் குடும்பத்தினருக்கு ஈடுகட்டுவது. (இந்தியாவில் குடும்பம் குடும்பமாக விவசாயத்தில் ஈடுபடுவது தொன்றுதொட்டு நடைபெற்று வருகிறது)<br><br><strong>சி2:</strong> ஏ2+சி 2 உடன் உற்பத்திச் செலவுகள், கடன், நிலம் மற்றும் பிற நிலையான மூலதன சொத்துகள் கணக்கிடப்படும். இதனை விரிவான உற்பத்திச் செலவு என்பர்.<br><br>ஒவ்வொரு பயிருக்கும் சி 2 அளவுக்கு அதிகமாகவே குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கப்படும். இது நாடு முழுவதுக்கும் பொருந்தும். நடப்பு சி 2 அளவையும் சேர்த்து சிஏசிபி கணக்கில் எடுத்து தேவை மற்றும் விநியோகம், உள்ளூர் மற்றும் சர்வதேச விலை நிலவரம், பயிர்களுக்கு இடையேயான சமநிலை ஆகியவற்றின் அடிப்படையில் குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கப்படுகிறது. இதன்படி, சி2 அளவைவிட 50 சதவீதத்துக்கு அதிகமாகக் குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கப்படுகிறது.</p>



<h4 class="wp-block-heading">எல்லா பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு வலை நிர்ணயிக்கப்படுகிறதா?</h4>



<p>இல்லை. சிஏசிபி பரிந்துரையின்படி, தற்போது 23 பயிர்களுக்கு மட்டுமே மத்திய அரசு  குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிக்கிறது.<br><br><strong>7 தானியங்கள்:</strong> நெல், கோதுமை, மக்காச்சோளம், முத்து தினை, பார்லி மற்றும் ராகி.<br><br><strong>5 பருப்புகள் : </strong>கொண்டைக்கடலை, துவரம்பருப்பு, பச்சைப்பயறு, உளுத்தம்பருப்பு மற்றும் பயறு<br><br><strong>7 எண்ணெய் வித்துகள்:</strong> வேர்க்கடலை, கடுகு, சோயாபீன், எள்ளு, சன் ப்ளவர், குங்குமப்பூ மற்றும் நைஜர் விதை<br><br><strong>4 வணிகப் பயிர்கள் : </strong>கொப்பரை, கரும்பு, பருத்தி மற்றும் சணல்</p>



<h4 class="wp-block-heading">குறைந்தபட்ச ஆதரவு விலை ஏன் அறிமுகப்படுத்தப்பட்டது?</h4>



<p>1960 &#8211; களில் பசுமைப் புரட்சி ஆரம்பமானபோது, பற்றாக்குறையைத் தடுக்க இந்தியா தனது உணவு இருப்புகளை உயர்த்த முயன்றது. 1966-67 ல், முதல் முறையாகக் கோதுமைக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கப்பட்டது. இவ்வாறு விவசாயிகளிடம் வாங்கிய விளைபொருட்கள், பொது விநியோகம் மூலம் ஏழைகளுக்கு மானியத்துடன் வழங்கப்பட்டன. இதனால் விவசாயிகளுக்கும் உதவியாக இருந்தது.</p>



<h4 class="wp-block-heading">சட்ட அல்லது சட்டரீதியான கட்டமைப்புக்குள் குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் வருகிறதா?</h4>



<p>பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்தபோதிலும், நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட எந்த சட்டத்திற்குட்பட்டும் குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் வரவில்லை.<br><br>சிஏசிபி-யின் முன்னாள் தலைவர் அபிஜித் சென் கூறும்போது, &#8221;நிர்வாக முடிவின்படி அரசு எடுத்த கொள்கை முடிவுதான் குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம். பயிர்களுக்கான குறைந்தபட்ச விலையை அரசு அறிவிக்கும்போது, அதனைச் செயல்படுத்துவதற்கான சட்டம் ஏதும் இல்லை&#8221; என்றார்.<br><br>சிஏசிபி ஒரு சட்டரீதியான அமைப்ப அல்ல. மாறாக, விவசாய மற்றும் விவசாயிகளின் நல அமைச்சகத்தின் கீழ் இணைக்கப்பட்ட துறையாகும். குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிக்க சட்ட நிர்ப்பந்தம் ஏதும் இல்லை என்பதே இதன் அர்த்தம். இந்த அமைப்பு தனியார் வர்த்தகர்களையும் கட்டுப்படுத்த முடியாது.<br><br>குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயத்துக்குச் சட்ட ரீதியான ஆதரவை வழங்க சிஏசிபி முயன்றது. விவசாயிகள் தங்கள் பயிர்களை, குறைந்தபட்ச விலையில் விற்க சட்டம் கொண்டு வர, கடந்த 2018 ஆம் ஆண்டு மத்திய அரசுக்கு சிஏசிபி பரிந்துரைத்தது. எனினும், இந்த பரிந்துரையை மத்திய அரசு நிராகரித்துவிட்டது.<br><br>அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின் கீழ், பிறப்பிக்கப்பட்ட நிர்வாக உத்தரவின்படி, கரும்பு விவசாயிகளுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிப்பதில் சட்ட உரிமை உள்ளது. இதன்படி தான் கரும்புக்கு நியாயமான மற்றும் ஊதிய விலையை நிர்ணயிக்க வேண்டும். இது சிஏசிபி பரிந்துரைப்படி தீர்மானிக்கப்படுகிறது.</p>



<h4 class="wp-block-heading">புதிய விவசாயச் சட்டங்களில் குறைந்தபட்ச ஆதரவு விலை குறித்துத் தெரிவிக்காதது ஏன்?</h4>



<p>விவசாயச் சட்டங்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயத்துக்கும் சம்பந்தமே இல்லை. சட்ட வரையறைக்குள் வராதபோது, இந்த மசோதாக்களில் குறைந்தபட்ச ஆதரவு விலையைக் காணமுடியாது.<br><br>ஒரு சட்டம் விவசாய உற்பத்தி மற்று சந்தைக்குழுவுக்கு வெளியே, தங்கள் விளைபொருட்களை எந்த கூடுதல் செலவும் இன்றி விவசாயிகள் விற்கலாம் என்கிறது. மற்றொரு சட்டம் விவசாய ஒப்பந்தம் மற்றும் கார்பரேட் நிறுவனங்களுக்கு நேரடியாக விவசாயிகளே விளைபொருட்களை விற்கலாம் என்கிறது. தானியங்கள், பருப்புகள், உருளைக்கிழங்கு, வெங்காயம், எண்ணெய் வித்துகள் மற்றும் எண்ணெய் ஆகியவற்றை அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலிலிருந்து அகற்றிவிட்டது. அசாதாரண சூழ்நிலைகளில் மட்டும் விதிவிலக்கு உண்டு என்றும் கூறுகிறது. இந்த சட்டங்களில் அடிப்படையில் பார்க்கும்போது, குறைந்தபட்ச ஆதரவு விலை குறித்த உத்தரவாதம் தரப்படவில்லை.</p>



<h4 class="wp-block-heading">குறைந்தபட்ச ஆதரவு விலை முறை ரத்தாகாது என்று அர்த்தம் கொள்ளலாமா?</h4>



<p>விவசாய சட்டங்களில் குறிப்பிடாவிட்டாலும், இன்றைய சூழலில் குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயத்திலிருந்து விலகிச் செல்ல அரசுக்கு உத்தேசம் இல்லை. இந்த பிரச்சினையைத்தான் போராடும் விவசாயிகளும், அரசியல் கட்சியினரும் எழுப்புகிறார்கள். ஆனால், குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயத்தை ரத்து செய்யமாட்டோம் என்ற உத்தரவாதத்தைத் தர மோடி அரசு மறுக்கிறது. குறைந்தபட்ச ஆதரவு விலை முறையை விவசாயச் சட்டங்கள் முடிவுக்குக் கொண்டு வந்துவிடும் என்பதே அவர்களது கவலையாக உள்ளது. மேலும் விவசாயிகளை கார்பரேட் நிறுவனங்கள் சுரண்டுவதற்கும் இந்த சட்டங்கள் வழிவகுக்கும் என்ற அச்சத்தையும் இவர்கள் வெளிப்படுத்துகின்றனர். குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணய முறையால் யாருக்குப் பயன் என்ற விவாதமும் தொடர்ந்துகொண்டிருக்கிறது.</p>



<h4 class="wp-block-heading">குறைந்தபட்ச ஆதரவு விலையால் எல்லா மாநில விவசாயிகளும் பலன் அடைகிறார்களா?</h4>



<p>6 சதவீத விவசாயிகள் மட்டுமே குறைந்தபட்ச ஆதரவு விலையின்கீழ் விளைபொருட்களை விற்பதாக, 2015 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட சாந்தகுமார் குழு தெரிவித்துள்ளது.  குறைந்தபட்ச ஆதரவு விலையின்படி, அரசின் கொள்முதல் சீராக இல்லாததால், இந்தியா முழுவதும் அனைத்து விவசாயிகளும் ஒரே மாதிரியான பலனைப் பெற முடியவில்லை என்றும் சுட்டிக்காட்டியிருந்தது.<br><br>குறிப்பாக, சி2 -க்குள் வரும் நெல் விலை கடந்த 2004- 2005 முதல் 2014-15 வரை, பீகாரில் 11.2 சதவீதம் அதிகரித்தது. மேற்கு வங்கத்தில் 11.9 சதவீதமும் அதிகரித்தது. குறைந்தபட்ச ஆதரவு விலையை விட சி 2 முறை 10.6  சதவீதம்  அதிகமாக இருந்தது.<br><br>குறைந்தபட்ச ஆதரவு விலையின்படி, கோதுமை மற்றும் நெல்லை பெருமளவு அரசு கொள்முதல் செய்கிறது. இவ்வாறு கொள்முதல் செய்யப்படுவதை, பொது விநியோக முறையில் விநியோகிக்க முக்கியத்துவம் தருகின்றனர். 2013 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், பொது விநியோகம் மூலம் தானியங்களை மானிய விலையில் வழங்க வழிவகுத்தது.<br><br>விவசாயச் சட்டங்களுக்கு எதிராகப் பஞ்சாப் மற்று ஹரியானாவில் போராட்டம் வலுப்பதற்கான காரணத்தை இது விளக்குகிறது. பஞ்சாபிலிருந்து 85 சதவீத கோதுமையும் நெல்லும் உற்பத்தியாகின்றன. ஹரியானாவில் 75 சதவீதம் கோதுமையும் நெல்லும் உற்பத்தியாகின்றன. அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஆதரவு விலையின் அடிப்படையிலேயே இவற்றைக் கொள்முதல் செய்வதாக, விவசாய அமைச்சகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.<br><br>குறைந்தபட்ச ஆதார விலையின் அடிப்படையில், பஞ்சாப், ஹரியானா மற்றும் ஆந்திராவிலிருந்து 50 சதவீதம் அரிசி கொள்முதல் செய்யப்படுகிறது. மேற்கு வங்கம் போன்ற மற்ற மாநிலங்களைச் சேர்ந்த நெற்பயிர் விவசாயிகளுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலையால் பயன் இல்லை. கோதுமையைப் பொறுத்தவரை, பஞ்சாப், ஹரியானா, மத்தியப் பிரதேச மாநிலங்களிலிருந்து குறைந்தபட்ச ஆதரவு விலையின்படி பெருமளவு கொள்முதல் செய்யப்படுகிறது.<br><br>2012-13 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேசிய மாதிரி சர்வேயில், குறைந்தபட்ச ஆதரவு விலையால் 13.5 சதவீதம் நெற்பயிர் விவசாயிகள் பயன் பெறுவதாகக் கூறப்பட்டுள்ளது. குறைந்தபட்ச ஆதரவு விலையைப் பற்றி 32.2 சதவீத நெற்பயிர் விவசாயிகளும், 39.2 கோதுமை விவசாயிகளும் அறிந்திருந்ததாக சர்வேயில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/what-is-msp-which-states-benefit-from-procurement-legal-basis-and-protests/">குறைந்தபட்ச ஆதரவு விலை ஏன் தேவை? விவசாயிகள் போராடுவது ஏன்? : விரிவான அலசல்</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://desiyamurasu.com/news-india/what-is-msp-which-states-benefit-from-procurement-legal-basis-and-protests/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
	</channel>
</rss>
