<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>jawaharlal nehru Archives - தேசிய முரசு - Desiya Murasu</title>
	<atom:link href="https://desiyamurasu.com/tag/jawaharlal-nehru/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://desiyamurasu.com/tag/jawaharlal-nehru/</link>
	<description>DesiyaMurasu – Daily Opinions &#38; Analysis on Latest News  &#124; Tamil News</description>
	<lastBuildDate>Fri, 05 Mar 2021 15:43:01 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.1</generator>

<image>
	<url>https://desiyamurasu.com/wp-content/uploads/2020/07/cropped-FAV-copy-1-32x32.png</url>
	<title>jawaharlal nehru Archives - தேசிய முரசு - Desiya Murasu</title>
	<link>https://desiyamurasu.com/tag/jawaharlal-nehru/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>அபுல் கலாம் ஆசாத் எனும் தீர்க்கதரிசி : இந்து-முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம்</title>
		<link>https://desiyamurasu.com/news-india/six-decades-after-his-death-abul-kalam-azads-message-of-hindu-muslim-unity-is-urgently-relevant/</link>
					<comments>https://desiyamurasu.com/news-india/six-decades-after-his-death-abul-kalam-azads-message-of-hindu-muslim-unity-is-urgently-relevant/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Admin]]></dc:creator>
		<pubDate>Fri, 05 Mar 2021 15:42:59 +0000</pubDate>
				<category><![CDATA[தேசிய அரசியல்]]></category>
		<category><![CDATA[Al Hilal]]></category>
		<category><![CDATA[jawaharlal nehru]]></category>
		<category><![CDATA[Maulana Abul Kalam Azad]]></category>
		<guid isPermaLink="false">https://desiyamurasu.com/?p=4200</guid>

					<description><![CDATA[<p>மவுலானா அபுல் கலாம் ஆசாத் இந்த உலகைவிட்டுப் பிரிந்து 60 ஆண்டுகள் நிறைவு பெற்றும், இந்து-முஸ்லீம் ஒற்றுமை குறித்த அவரது செய்தி, இந்த காலத்துக்கும் பொருத்தமானதாக இருக்கிறது. மவுலானா அபுல் கலாம் ஆசாத்தை முதல் முறை சந்தித்தபோது நான் சிறுமியாக இருந்தேன். ஈத் வாழ்த்துச் சொல்வதற்காக, டெல்லியில் கிங் எட்வர்ட் சாலையிலிருந்த ஆசாத் வீட்டுக்கு என் தந்தை அழைத்துச் சென்றார். சிகரெட் பெட்டியை பக்கத்தில் இருக்க, சோபாவில் அமர்ந்தவாறு அவரது உதிர்த்த புன்முறுவல் இன்னும் என் நினைவில் [&#8230;]</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/six-decades-after-his-death-abul-kalam-azads-message-of-hindu-muslim-unity-is-urgently-relevant/">அபுல் கலாம் ஆசாத் எனும் தீர்க்கதரிசி : இந்து-முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம்</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>மவுலானா அபுல் கலாம் ஆசாத் இந்த உலகைவிட்டுப் பிரிந்து 60 ஆண்டுகள் நிறைவு பெற்றும், இந்து-முஸ்லீம் ஒற்றுமை குறித்த அவரது செய்தி, இந்த காலத்துக்கும் பொருத்தமானதாக இருக்கிறது.</p>



<p>மவுலானா அபுல் கலாம் ஆசாத்தை முதல் முறை சந்தித்தபோது நான் சிறுமியாக இருந்தேன். ஈத் வாழ்த்துச் சொல்வதற்காக, டெல்லியில் கிங் எட்வர்ட் சாலையிலிருந்த ஆசாத் வீட்டுக்கு என் தந்தை அழைத்துச் சென்றார். சிகரெட் பெட்டியை பக்கத்தில் இருக்க, சோபாவில் அமர்ந்தவாறு அவரது உதிர்த்த புன்முறுவல் இன்னும் என் நினைவில் இருக்கிறது. அவரது வாழ்க்கை வரலாற்றை ஒரு நாள் எழுதப் போகிறோம் என்பதையும், அதற்காக வாழ்நாளில் பாதியை செலவழிக்கப் போகிறோம் என்பதையும் நான் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை.</p>



<p>அவரது 63 ஆவது நினைவு தினம் கடந்த வாரம் அனுஷ்டிக்கப்பட்டது. அப்போது, 21 ஆம் நூற்றாண்டின் அவரது தேவையைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்தேன். சுதந்திரப் போராட்டத்தின்போது உயர்ந்த தலைவராக இருந்தவர். மகாத்மா காந்திக்கு தோள் கொடுத்தவர். இந்தியாவின் முதல் பிரதமர் நேருவின் ஆசானாக இருந்தவர். தலைவர்களின் தலைவர் என்று நேருவால் வர்ணிக்கப்பட்டவர். இதெல்லாம் பெரிய விஷயமல்ல…</p>



<p>இன்றைக்கு இந்தியா சந்தித்துக் கொண்டிருக்கும் பெரும் நோயான வகுப்புவாத வைரசை குணப்படுத்தும் மருந்து அவரிடமிருந்தது. என் நாட்டின் நாட்டின் உடல் உறுப்புகளுக்குள் வகுப்புவாத வைரஸ் பரவிவிட்டதாகவும் அதனைக் குணப்படுத்த வேண்டும் என்றும் அப்போதே தெரிவித்தார். கடந்த 2020 ஆம் ஆண்டு நம்மைத் தாக்கிய கொரோனா வைரசை விட, வகுப்புவாத விஷம் கொடியதாக இருந்திருக்கிறது.</p>



<h4 class="wp-block-heading"><strong>இந்து-முஸ்லீம் ஒற்றுமை :</strong></h4>



<p>1923 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவராக இருந்த ஆசாத் பேசிய வார்த்தைகளைக் கேட்டால், தேசவிரோதிகள் என்று சொல்லி பயமுறுத்தும் தைரியம் யாருக்கும் வராது.</p>



<p>அவரது வார்த்தைகள் இங்கே…</p>



<blockquote class="wp-block-quote is-layout-flow wp-block-quote-is-layout-flow"><p>&#8221; பரலோகத்திலிருந்து குதித்து வந்த தேவதை, குதுப்மினாரின் உச்சியில் அமர்ந்து கொண்டு, இந்து-முஸ்லீம் ஒற்றுமை கொள்கையைக் காங்கிரஸ் கைவிட்டதாக அறிவித்தால், 24 மணி நேரத்தில் சுதந்திரம் கிடைத்தாலும், அதனை ஏற்க மாட்டேன். சுதந்திரத்துக்கு விலையாக நமது ஒற்றுமையைக் கைவிடுவது எல்லோருக்கும் ஆபத்தானதாகும்&#8221; என்று எச்சரித்தார்.</p></blockquote>



<p>ஆசாத்தின் இந்து-முஸ்லீம் ஒற்றுமை இயக்கம் சிறு வயதிலேயே தொடங்கிவிட்டது. கொல்கத்தாவில் தந்தையின் கண்டிப்பில் வளர்ந்தார். தன் தந்தையைப் பின்பற்றாமல், 17 வயதிலேயே கொரில்லா இயக்கத்தினருடன் ரகசியமாகப் பங்கெடுத்தார். ராஷ் பெஹாரி கோஷ் மற்றும் ஷ்யாம் சுந்தர் சக்கரவர்த்தி போன்ற புரட்சியாளர்களுடன் கை கோர்த்தார்.</p>



<p>1912 ஆம் ஆண்டில் தமது 24 வயதில், அல் ஹிலால் என்ற வாராந்திர பத்திரிக்கையைத் தொடங்கினார். இந்த பத்திரிக்கை கொல்கத்தாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்துக்களுடன் இணைந்து சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று, முஸ்லீம்களை அவர் பத்திரிக்கை வாயிலாகக் கேட்டுக் கொண்டார். ஆங்கிலேயர்களை வெளியேற்றுவதற்காக இந்துக்களுடன் கைகோர்க்க வேண்டும் என்று கூறிய அவர், அதற்காக குரானிலிருந்த சில வாசகங்களைச் சுட்டிக்காட்டினார்.</p>



<p>ஆனால், ஆசாத்தை முஸ்லீம் தலைவர் என்றே அழைத்தனர். அவர் ஒரு சமுதாயத்துக்கான தலைவர் அல்ல. அவர் அனைத்து இந்தியர்களுக்கான தலைவர். ஆயிரக்கணக்கான இந்துக்கள் முன்பு நின்று கொண்டு, தமது கொள்கைகளாலும், பேச்சுத் திறமையாலும் அவர்களை வசீகரிக்கக் கூடியவராக இருந்தவர்.</p>



<h4 class="wp-block-heading"><strong>பொதுவான தேசியம்:</strong></h4>



<p>1946 ஆம் ஆண்டு, மீண்டும் காங்கிரஸ் தலைவராக ராம்கர் மாநாட்டில் ஆசாத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது அவர் ஆற்றிய உரை, பல கலாச்சார கலவைகளிலிருந்து இந்தியா என்ற வண்ணமயமான கட்டமைப்பை உருவாகியுள்ளதாகச் சிறந்த உதாரணத்தைக் குறிப்பிட்டார்.</p>



<blockquote class="wp-block-quote is-layout-flow wp-block-quote-is-layout-flow"><p>&#8221; இந்து என்ற முறையில் ஒருவர், &#8216;தான் இந்தியன் என்றும் இந்து என்றும் பெருமையுடன் சொல்லலாம். அதேபோன்று சரிசமமாக, &#8216;நாங்கள் இந்தியர்கள் என்றும் இஸ்லாமை பின்பற்றுகிறோம்&#8217; என்றும் முஸ்லீம்கள் பெருமையுடன் கூறலாம். கிறிஸ்துவ மதத்தை பின்பற்றுபவர்களும் தாங்கள் இந்தியர்கள் என்று பெருமையுடன் சொல்ல முடியும்&#8221; என்று குறிப்பிட்டார். வெவ்வேறு கோட்பாடுகளைக் கொண்டிருந்தாலும், ஒரே தேசத்தைச் சேர்ந்தவர்களின் ஆயிரம் ஆண்டுகளுக்கான கூட்டு வாழ்க்கையைப் பற்றி அவர் பேசினார். &#8221;கற்பனையாகவோ, செயற்கையாகவோ எங்கள் ஒற்றுமையை பிளவுபடுத்தவோ, வேறுபடுத்தவோ முடியாது&#8221; என்பதை உரக்கச் சொன்னார்.</p></blockquote>



<h4 class="wp-block-heading"><strong>உடைந்த தேசத்துக்கு சிகிச்சை:</strong></h4>



<p>ஆசாத் இன்றைக்கு இருந்திருந்தால், எடுக்கப்படும் பல அரசியல் நிலைப்பாடுகள் அவருக்கு வெறுப்பை ஏற்படுத்தியிருக்கும். இன்றைய அரசியல் விளையாட்டுக்கு அதிகார வெறி என்று பெயர். ஆனால், அன்றைய காலகட்ட அரசியல், நிச்சயம் விளையாட்டாக இருந்ததில்லை. சுதந்திரத்துக்குப் பிறகு அமைக்கப்பட்ட முதல் அமைச்சரவையில், அவர் நினைத்திருந்தால், விரும்பிய துறையைக் கேட்டுப் பெற்றிருக்க முடியும். ஆனால் அவர் கல்வித் துறையைத் தேர்வு செய்தார். ஏனென்றால், உடைந்த தேசத்தின் வளர்ச்சிக்குக் கல்வி முக்கியமானது என்பதை அறிந்ததால் அவர் கல்வி அமைச்சரானார்.</p>



<p>இசை நாடகக் கலை, லலித் கலா காட்சிக் கலை மற்றும் இலக்கியத்துக்கான சாகித்யா என்ற 3 கல்விக்கூடங்களை உருவாக்க ஆசாத் உதவினார். உலகெங்கிலும் உள்ள பரஸ்பர கலாச்சாரத்திற்கான இந்தியக் கவுன்சிலை உருவாக்கவும் அவர் உதவினார். அதுமட்டுமின்றி, பல்கலைக்கழக மானிய ஆணையம், அறிவியல் மற்றும் தொழிற்துறை ஆராய்ச்சிக் கவுன்சில், ஐஐடி எனப்படும் இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள், பொது நூலகங்கள் உள்ளிட்ட பல கல்வி நிறுவனங்களை கல்வி அமைச்சராக இருந்தபோது உருவாக்கினார்.</p>



<p>வகுப்புவாத வெறுப்புகளால் இன்று இந்தியா பாதிக்கப்படுவதை உலகம் பார்த்துக் கொண்டிருக்கையில், விவசாயிகள் போராட்டம், அமைதியில்லாத மாணவர் சமுதாயம், தங்கள் ஜனநாயக உரிமைகளைக் குடிமக்கள் பயன்படுத்த முடியாத நிலைமை என தொடர்ந்து கொண்டே இருக்கிறது. காலனித்துவ வரலாற்றை நாம் புதுப்பித்துக் கொண்டிருக்கிறோம். இந்த ஆட்டத்தில் வீரர்கள் தான் மாறியிருக்கிறார்கள். காலனி ஆதிக்கம் புதிய அவதாரம் எடுத்துள்ளது அவ்வளவுதான்.</p>



<p>டெல்லியில் உள்ள ஜாமியா நகரில் உள்ள எனது வீட்டில் அமர்ந்தவாறு இந்த பகுதியை நான் எழுதும்போது, இத்தகைய பிளவு சக்திகளை எல்லா இடங்களிலும் காண்கிறேன். இந்தியர்களின் ஒரு பகுதியினரின் குடியுரிமைப் பறிக்கும் சட்டத்தை எதிர்த்து மாணவர்கள் போராடியதால், ஜாமியா மில்லியா இஸ்லாமியா கல்வி நிறுவனம் இன்று பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. காந்தியின் கனவை நிறைவேற்றும் வகையில் கட்டப்பட்டுள்ள ஒரு கல்வி நிறுவனத்தின் வாயில்களில் பாதுகாப்புப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். ஆசாத் தீர்க்கதரிசி என்று அழைக்கப்பட்டார். அவரை கடுமையாக விமர்சிப்பவர்கள் கூட அவரது தீர்க்கதரிசனத்தை மறுத்ததில்லை. அவர் நமக்குச் சொல்லிவிட்டுச் சென்ற அறிவுரைகள் எந்த காலத்துக்கும் பொருந்தும்.</p>



<p>கட்டுரையாளர் : சயீதா (இந்திய திட்ட ஆணையத்தின் முன்னாள் உறுப்பினர். &#8216;இந்தியாவின் மவுலானா அபுல் கலாம் ஆசாத்&#8217; என்ற புத்தகத்தையும், இந்திய சுதந்திரப் போராட்டத்தில் இஸ்லாமியர்களின் முத்திரை உள்ளிட்ட பல புத்தகங்களையும் எழுதியவர்.)</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/six-decades-after-his-death-abul-kalam-azads-message-of-hindu-muslim-unity-is-urgently-relevant/">அபுல் கலாம் ஆசாத் எனும் தீர்க்கதரிசி : இந்து-முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம்</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://desiyamurasu.com/news-india/six-decades-after-his-death-abul-kalam-azads-message-of-hindu-muslim-unity-is-urgently-relevant/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>&#8221;இந்து உயர் சாதியும் இஸ்லாமும்&#8221; : சுவாமி விவேகானந்தர் கருத்தை நினைவுகூர்ந்த ஜவஹர்லால் நேரு</title>
		<link>https://desiyamurasu.com/news-india/nehrus-word-vivekananda-on-islam-and-upper-classes/</link>
					<comments>https://desiyamurasu.com/news-india/nehrus-word-vivekananda-on-islam-and-upper-classes/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Admin]]></dc:creator>
		<pubDate>Tue, 01 Dec 2020 12:36:09 +0000</pubDate>
				<category><![CDATA[தேசிய அரசியல்]]></category>
		<category><![CDATA[Hinduism]]></category>
		<category><![CDATA[Islam]]></category>
		<category><![CDATA[jawaharlal nehru]]></category>
		<category><![CDATA[Muslim]]></category>
		<category><![CDATA[Swami Vivekananda]]></category>
		<guid isPermaLink="false">https://desiyamurasu.com/?p=3418</guid>

					<description><![CDATA[<p>டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 12 ஆம் தேதி விவேகானந்தர் சிலையைப் பிரதமர் மோடி திறந்து வைத்துள்ளார். ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் இடதுசாரிகளின் கூடாரமாகிவிட்டது என, ஆர்.எஸ்.எஸ், பாஜக உள்ளிட்ட இந்து மத அமைப்புகள் தொடர்ந்து கூறிவரும் நிலையில், விவேகானந்தர் சிலையைப் பிரதமர் திறந்து வைத்துள்ளார். பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட நேரு சிலையிலிருந்து 100 மீட்டர் தொலைவில் விவேகானந்தர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை நிறுவியதன் மூலம், இந்தப் பல்கலைக்கழகம் விவேகானந்தரின் கொள்கைகளை [&#8230;]</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/nehrus-word-vivekananda-on-islam-and-upper-classes/">&#8221;இந்து உயர் சாதியும் இஸ்லாமும்&#8221; : சுவாமி விவேகானந்தர் கருத்தை நினைவுகூர்ந்த ஜவஹர்லால் நேரு</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 12 ஆம் தேதி விவேகானந்தர் சிலையைப் பிரதமர் மோடி திறந்து வைத்துள்ளார்.</p>



<p>ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் இடதுசாரிகளின் கூடாரமாகிவிட்டது என, ஆர்.எஸ்.எஸ், பாஜக உள்ளிட்ட இந்து மத அமைப்புகள் தொடர்ந்து கூறிவரும் நிலையில், விவேகானந்தர் சிலையைப் பிரதமர் திறந்து வைத்துள்ளார்.</p>



<p>பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட நேரு சிலையிலிருந்து 100 மீட்டர் தொலைவில் விவேகானந்தர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை நிறுவியதன் மூலம், இந்தப் பல்கலைக்கழகம் விவேகானந்தரின் கொள்கைகளை நிலைநிறுத்தும் என்பதைச் சொல்லியிருக்கிறார்கள். இது நேருவின் கொள்கைகளுக்கு முரணானதாக இருக்கும் என்பது அவர்களது எண்ணம்.</p>



<p>சுவாமி விவேகானந்தா மற்றும் அவரது குரு ராமகிருஷ்ண பரமஹம்சர் பற்றிய, நேருவின் சொந்த அபிமான மற்றும் நுண்ணறிவு எழுத்துகளிலிருந்து இந்த அனுமானம் எவ்வளவு தவறு என்று புரியும்.</p>



<p>முஸ்லிம் நண்பருக்கு விவேகானந்தர் எழுதிய கடிதத்தை, &#8216;டிஸ்கவரி ஆஃப் இந்தியா&#8217; என்ற புத்தகத்தில் கோடிட்டுக் காட்டும் நேரு, நமது தாய் நாடு இந்துயிசம் மற்றும் இஸ்லாம் என்ற 2 மாபெரும் அமைப்புகளின் சங்கமம் என்றும், வேதாந்தம் என்ற மூளையும், இஸ்லாம் என்ற உடலும் மட்டுமே நம் ஒரே நம்பிக்கை என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p>



<p>அதே காலத்தில் வாழ்ந்த சுவாமி தயானந்தாவைப் பற்றிக் கூறும்போது, வங்காளத்தில் அப்போது பலதரப்பட்ட நபர்கள் வாழ்ந்தார்கள் என்றும், அவர்களது வாழ்க்கை ஆங்கிலம் கற்றுத் தரப்பட்ட புதிய பள்ளிகளில் செல்வாக்கு செலுத்தியதாகவும் கூறியுள்ளார்.</p>



<p>ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் எளிமையானவராக இருந்தார். அவர் கல்விமான் இல்லை. ஆனால், நம்பிக்கையுள்ள மனிதன். இதுபோன்ற சமூக சீர்திருத்தங்களில் ஆர்வம் இல்லாதவர். சைதன்யா மற்றும் ஏனைய இந்திய முனிவர்களுடன் நேரடி தொடர்பு கொண்டவர். மதத்தைப் பொருத்தவரை, இன்னும் பெருந்தன்மை ஏற்படவில்லை. அவரோ, சுயமயமாக்கலைத் தேடினார். முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவர்களுடன் பல ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறார். அனைத்து குறுங்குழுவாதத்தையும் எதிர்த்து, அனைத்து வழிகளும் உண்மையை நோக்கியே அழைத்துச் செல்கின்றன என்பதை வலியுறுத்தினார்.</p>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img fetchpriority="high" decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/12/sv001bw-247x347-1.jpg" alt="" class="wp-image-3424" width="412" height="579" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/12/sv001bw-247x347-1.jpg 247w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/12/sv001bw-247x347-1-214x300.jpg 214w" sizes="(max-width: 412px) 100vw, 412px" /></figure></div>



<p>அவரைப் பார்த்தவர்கள், அவரது ஆளுமையால் கவரப்பட்டிருந்தார்கள். அவரை நேரில் பார்க்காதவர்கள், அவரது கதைகள் மூலம் கவரப்பட்டிருந்தார்கள். இவ்வாறு கவரப்பட்டவர்களில், ராமகிருஷ்ண பரமஹம்சரின் வாழ்க்கை மற்றும் இவரது தலைமை சீடர் சுவாமி விவேகானந்தர் ஆகியோரின் கதையை எழுதிய ரோமெய்ன் ரோலண்ட் என்பவரும் ஒருவர்.</p>



<p>தனது சகோதர சீடர்களுடன் இணைந்து &#8221;ராமகிருஷ்ணா மிஷன் ஆஃப் சர்வீஸ்&#8221; என்ற அமைப்பை விவேகானந்தர் உருவாக்கினார். கடந்த காலத்தில் வேரூன்றிய, இந்தியாவின் பாரம்பரியத்தின் பெருமை நிறைந்த விவேகானந்தர், வாழ்க்கையின் சிக்கல்களைப் பற்றிய அணுகுமுறையில் இன்னும் நவீனமானவர். இது இந்தியாவின் கடந்த காலத்துக்கும் அவரது நிகழ்காலத்துக்கும் இடையிலான ஒரு வகையான பாலமாக இருந்தது. அவர் ஒரு சிறந்த மனிதராக இருந்தார். கண்ணியம் நிறைந்தவர். தன்னைப் பற்றியும் தன் பணி குறித்தும் உறுதியாக இருந்தார். அதேநேரத்தில், ஒரு மாறும் மற்றும் உமிழும் ஆற்றலும், இந்தியாவை முன்னோக்கித் தள்ளும் ஆர்வமும் நிறைந்தவராக இருந்தார்.</p>



<p>உணர்ச்சிவயப்படுதல், சடங்குகள் பற்றிய அர்த்தமற்ற விவாதங்கள், குறிப்பாக உயர் சாதியினரைத் தொட்டால் தீட்டு என்ற நிலையைக் கண்டித்தார். நம் மதம் அடுக்களையில் இருக்கிறது. சமைக்கும் பாத்திரம் தான் நம் கடவுள். ஆனால், நமது மதம் மட்டும், நான் பரிசுத்தம், என்னைத் தொடாதே என்கிறது என்று சாடுகிறார் விவேகானந்தர்.</p>



<p>ஆனால், அவர் மீண்டும், மீண்டும் சுதந்திரம் மற்றும் சமத்துவம் ஆகியவற்றின் தேவை மற்றும் மக்களை உயர்த்துவது குறித்து வலியுறுத்தினார். செயலின் சுதந்திரம் மற்றும் சிந்தனை என்பது வாழ்க்கையின் ஒரே நிலை, வளர்ச்சி மற்றும் நல்வாழ்வு என்றார். அவை இல்லாத இடத்தில் மனிதன், இனம், தேசம் ஏதும் இல்லை என்றும்,இந்தியாவின் ஒரே நம்பிக்கை மக்களிடமிருந்துதான் என்றும், உயர் வகுப்புகள் உடல் ரீதியாகவும் ஒழுக்க ரீதியாகவும் இறந்துவிட்டன என்றும் குறிப்பிட்டிருந்தார்.</p>



<p>விவேகானந்தர் ஒரு முறை எழுதும்போது, நான் ஒரு சோசலிஸ்ட். ஏனெனில் இது ஒரு சரியான அமைப்பு என்று நான் நினைக்கிறேன். ஒன்றும் இல்லாததற்கு அரை ரொட்டி எவ்வளவோ பரவாயில்லை. மற்ற முறைகள் எல்லாம் லட்சியத்தை அடையத்தான் முயற்சி செய்கின்றன. புதுமைக்காக இந்த முயற்சியைச் செய்யட்டும் என்று கூறுகிறார்.</p>



<p>பல விசயங்களை விவேகானந்தர் பேசியிருக்கிறார். அவரது உறுதியான பேச்சில் பயமிருக்காது, வலுவானதாக இருக்கும்.</p>



<p>சுவாமி விவேகானந்தர் எழுதிய கடிதங்களிலேயே முக்கியமானது, 1898 ஆம் ஆண்டு ஜூன் 10 ம் தேதி தனது முஸ்லிம் நண்பருக்கு எழுதியதுதான். அதில்…உண்மை என்பது அத்வைதம். மதம் மற்றும் சிந்தனையின் கடைசி வார்த்தையாகும். மேலும், அனைத்து மதங்களையும், பிரிவுகளையும் அன்போடு பார்க்கக் கூடிய ஒரே நிலை. இது அறிவொளி பெற்ற எதிர்கால மனிதக் குலத்தின் மதம் என்று நாங்கள் நம்புகிறோம்…மறுபுறம் எங்களது அனுபவம் என்னவென்றால், எந்தவொரு மதத்தைப் பின்பற்றுபவர்கள் சமத்துவத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். இத்தகைய போக்கு இஸ்லாம் மற்றும் இஸ்லாத்தில் மட்டும் இருப்பது பாராட்டத்தக்கது. வேதாந்த மூளை மற்றும் இஸ்லாம் உடலுடன் வெல்ல முடியாத எதிர்கால பரிபூரண இந்தியா என் மனதில் தெரிகிறது என்று குறிப்பிட்டுள்ளார். இந்த கடிதம் &#8221;நேருவின் தி டஸ்கவரி ஆஃப் இந்தியா&#8221; புத்தகத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p>



<p><em><span class="has-inline-color has-vivid-red-color">கட்டுரையாளர் : ம்ருதுலா முகர்ஜி. (ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக முன்னாள் வரலாற்றுப் பேராசிரியர் மற்றும் நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தின் முன்னாள் இயக்குநர்.)</span></em></p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/nehrus-word-vivekananda-on-islam-and-upper-classes/">&#8221;இந்து உயர் சாதியும் இஸ்லாமும்&#8221; : சுவாமி விவேகானந்தர் கருத்தை நினைவுகூர்ந்த ஜவஹர்லால் நேரு</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://desiyamurasu.com/news-india/nehrus-word-vivekananda-on-islam-and-upper-classes/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>படேலுடன் கைகோத்த நேரு : ஆ. கோபண்ணா</title>
		<link>https://desiyamurasu.com/news-india/nehru-hand-in-hand-with-patel/</link>
					<comments>https://desiyamurasu.com/news-india/nehru-hand-in-hand-with-patel/#comments</comments>
		
		<dc:creator><![CDATA[ஆ. கோபண்ணா]]></dc:creator>
		<pubDate>Fri, 13 Nov 2020 19:28:16 +0000</pubDate>
				<category><![CDATA[தேசிய அரசியல்]]></category>
		<category><![CDATA[jawaharlal nehru]]></category>
		<category><![CDATA[Sardar Patel]]></category>
		<guid isPermaLink="false">https://desiyamurasu.com/?p=3047</guid>

					<description><![CDATA[<p>நவம்பர் 14 : பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் 132வது பிறந்த நாள் பண்டித நேருவுடன் சர்தார் வல்லபாய் படேலுக்கு இருந்த உறவு எல்லோரும் நன்கறிந்த ஒன்றாகும். பிரிட்டிஷாரால் சிதைத்து சின்னாபின்னமாக்கப்பட்ட இந்தியா என்ற தேசத்தை இருவரும் கைகோத்து ஒரு தேசமாக உருவாக்கவேண்டும் என்பது அவர்கள் இருவருக்கும் விதிக்கப்பட்ட வரலாற்றுக் கடமையாக இருந்தது. இந்திய கலாச்சாரத்திலும், அதன் பல அடையாளங்களிலும் படேல் ஆழ்ந்த ஞானம் உள்ளவர். நேரு குறுகிய எல்லைகளுக்குள் தம்மை அடைத்துக்கொள்ளாமல் உலக நோக்கத்துடன் செயல்படும் [&#8230;]</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/nehru-hand-in-hand-with-patel/">படேலுடன் கைகோத்த நேரு : ஆ. கோபண்ணா</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p><span class="has-inline-color has-vivid-red-color"><em>நவம்பர் 14 : பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் 132வது பிறந்த நாள்</em></span></p>



<p>பண்டித நேருவுடன் சர்தார் வல்லபாய் படேலுக்கு இருந்த உறவு எல்லோரும் நன்கறிந்த ஒன்றாகும். பிரிட்டிஷாரால் சிதைத்து சின்னாபின்னமாக்கப்பட்ட இந்தியா என்ற தேசத்தை இருவரும் கைகோத்து ஒரு தேசமாக உருவாக்கவேண்டும் என்பது அவர்கள் இருவருக்கும் விதிக்கப்பட்ட வரலாற்றுக் கடமையாக இருந்தது. இந்திய கலாச்சாரத்திலும், அதன் பல அடையாளங்களிலும் படேல் ஆழ்ந்த ஞானம் உள்ளவர். நேரு குறுகிய எல்லைகளுக்குள் தம்மை அடைத்துக்கொள்ளாமல் உலக நோக்கத்துடன் செயல்படும் ஒரு தீர்க்கதரிசி.</p>



<p>இதனால், இயல்பாகவே இருவருடைய கருத்துகளும் அடிக்கடி மோதல் ஏற்பட்டது. மாறுபட்டது உண்டு. பல விவகாரங்களில் அவர்களிடம் கருத்து மாறுபாடு இருந்தது. ஆனால், தேச நலனுக்காக அவர்கள் இணைந்து ஒருவரையொருவர் மதித்துக் கடைசி வரை செயலாற்றினார்கள். இந்தியாவின் மீது அவர்கள் கொண்ட அன்பும், மகாத்மா காந்தியிடம் அவர்கள் கொண்ட மரியாதையும் இருவரையும் ஒருங்கிணைத்தன.</p>



<p>மகாத்மா கொல்லப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னால் அவர் சர்தார் படேலுக்கு அறிவுரை கூறிக்கொண்டிருந்தார் என்ற செய்தி பலருக்கு வியப்பு அளிக்கும். ‘நேருவிடம் கருத்து வேறுபாடு கொண்டு, அமைச்சரவையிலிருந்து ராஜினாமா செய்யவேண்டாம். அவருடன் இணைந்து பணியாற்றுங்கள்’ என்பதுதான் அந்த அறிவுரை.</p>



<p>நேருவுக்கும் தமக்கும் இடையில் பிளவு ஏற்படுத்த சிலர் முயற்சி செய்வார்கள் என்று எதிர்பார்த்த படேல், தாம் இறப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு 1950 அக்டோபர் 2ஆம் நாள் இந்தூரில் இப்படித் தெரிவித்தார்: “பண்டித ஜவஹர்லால் நேரு நம்முடைய தலைவர். நேருவை தமது வாரிசாக காந்தியடிகள் நியமித்தார். இந்த ஆணையை ஏற்றுக்கொள்ள வேண்டியது அவரது தொண்டர்களின் கடமை. இதனை மனப்பூர்வமாக ஏற்கத் தயங்குபவர்கள், கடவுளின் முன்பு பாவம் செய்தவர்களாவர். விசுவாசமற்ற சிப்பாய் அல்ல நான். எந்த இடம் கிடைக்கும் என்பது எனக்கு முக்கியமல்ல. காந்தியடிகள் எந்த இடத்தில் நிற்கச் சொன்னாரோ அந்த இடத்தில் நிற்கிறேன் என்பதை மட்டுமே நான் அறிந்திருக்கிறேன்.(பியாரிலால், பூர்ணஹுதி, சதுர்த் கந்த், நவ்ஜீவன் பிரகாஷன் − அகமதாபாத், பக்கம் 465)</p>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/11/Nehru_1.jpg" alt="" class="wp-image-3051" width="546" height="435" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/11/Nehru_1.jpg 703w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/11/Nehru_1-300x239.jpg 300w" sizes="(max-width: 546px) 100vw, 546px" /></figure></div>



<p>1950ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்15ஆம் நாள் படேல் இறந்தபோது, நாடாளுமன்றத்தில் நேரு கூறினார்: “படேல் நம்முடைய விடுதலை இயக்கப்படையின் தளகர்த்தராகச் சோதனைக் காலத்தில் பயனுள்ள அறிவுரைகளைக் கொடுத்தார். வெற்றிபெற்ற நிலையில் நண்பராகவும், உற்ற தோழராகவும் நம்பிக்கையுடன் ஏற்றுக்கொள்ளத் தக்கவராகவும் இருந்தார். அவருடைய தலைமையும், அவர் காட்டும் வழிமுறைகளும் நெருக்கடி காலத்தில் பலவீனப்பட்ட மனிதர்களுக்கு உறுதியான துணையாக இருக்கும்.”</p>



<p>இரு தலைவர்களின் மகத்தான சாதனைகளையும் ஆக்கபூர்வமான நல்லுறவையும் நமது ஒருதலைபட்சமான அணுகுமுறை காரணமாக விமர்சிப்பது, வெட்கக்கேடான செயலாகும்.</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/nehru-hand-in-hand-with-patel/">படேலுடன் கைகோத்த நேரு : ஆ. கோபண்ணா</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://desiyamurasu.com/news-india/nehru-hand-in-hand-with-patel/feed/</wfw:commentRss>
			<slash:comments>1</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>தெருவிளக்கு வெளிச்சத்தில் ராஜீவை பார்த்த நேரு!</title>
		<link>https://desiyamurasu.com/news-india/nehru-glimpses-baby-rajiv-gandhi-under-streetlight/</link>
					<comments>https://desiyamurasu.com/news-india/nehru-glimpses-baby-rajiv-gandhi-under-streetlight/#comments</comments>
		
		<dc:creator><![CDATA[ஆ. கோபண்ணா]]></dc:creator>
		<pubDate>Thu, 20 Aug 2020 13:30:29 +0000</pubDate>
				<category><![CDATA[தேசிய அரசியல்]]></category>
		<category><![CDATA[indira gandhi]]></category>
		<category><![CDATA[jawaharlal nehru]]></category>
		<category><![CDATA[rajiv gandhi]]></category>
		<guid isPermaLink="false">https://desiyamurasu.com/?p=1598</guid>

					<description><![CDATA[<p>1944 ஆம் ஆண்டு ! ஆகஸ்டு திங்கள் 20 ஆம் நாள்! இந்திரா காந்தி ஃபெரோஸ் காந்தி தம்பதியருக்கு ராஜிவ் காந்தி தலைமகனாகப் பிறந்தார். ராஜிவின் பாட்டனாரான பண்டித ஜவஹர்லால் நேரு, விடுதலைப் போராட்டத்தின் காரணமாக அப்பொழுது கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பேரனைப் பார்க்கும் ஆவல் தாத்தாவுக்கு! மகனைத் தந்தைக்குக் காட்டும் ஆவல் அன்னை இந்திராவுக்கு ஒருநாள் அதிகாலை, ஜவஹர்லால் நேரு, கோவிந்து வல்லபபந்த் ஆகியோரைச் சிறையிலிருந்து போலீஸ்காரர்கள் ஒரு வேனில் ஏற்றிச் செல்லும்போது, தொலைவில் [&#8230;]</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/nehru-glimpses-baby-rajiv-gandhi-under-streetlight/">தெருவிளக்கு வெளிச்சத்தில் ராஜீவை பார்த்த நேரு!</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>1944 ஆம் ஆண்டு ! ஆகஸ்டு திங்கள் 20 ஆம் நாள்! இந்திரா காந்தி ஃபெரோஸ் காந்தி தம்பதியருக்கு ராஜிவ் காந்தி தலைமகனாகப் பிறந்தார். ராஜிவின் பாட்டனாரான பண்டித ஜவஹர்லால் நேரு, விடுதலைப் போராட்டத்தின் காரணமாக அப்பொழுது கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பேரனைப் பார்க்கும் ஆவல் தாத்தாவுக்கு! மகனைத் தந்தைக்குக் காட்டும் ஆவல் அன்னை இந்திராவுக்கு ஒருநாள் அதிகாலை, ஜவஹர்லால் நேரு, கோவிந்து வல்லபபந்த் ஆகியோரைச் சிறையிலிருந்து போலீஸ்காரர்கள் ஒரு வேனில் ஏற்றிச் செல்லும்போது, தொலைவில் ஒரு தெருவிளக்கு கம்பத்தின் அடியில் இந்திரா காந்தியும் ஃபெரோஸ் காந்தியும் தங்கள் பச்சிளம் குழந்தை ராஜிவை வெளிச்சத்தில் சற்றே தூக்கிக் காட்டினார்கள். வேன் நின்ற ஒருசில நிமிடங்களில் பேரனை அருகில் சென்று பார்க்க முடியவில்லையே என்ற வருத்தம் ஒருபுறம் தொலைவிலேனும் பார்த்தோமே என்ற மகிழ்ச்சி மறுபுறம்.</p>



<p>சிறைக்குத் திரும்பியவுடன் நேரு நெகிழ்ச்சியுடன் எழுதினார். ‘என் பிரியமுள்ள இந்து, உன் மகனைப் பார்த்தேன் நம் குடும்பத்திற்குரிய அந்த ரோஜா நிறத்தையும், ஒளிவீசும் கண்களையும் கண்டேன்! அருகில் வந்து பார்க்க இயலவில்லை என்றாலும், அந்தப் பிஞ்சு முகத்தின் அழகில் நம் குடும்பத்தின் சாயலை முழுமையாகக் கண்டேன்” என்று கவிதை நயத்தோடு எழுதியிருந்தார்.</p>



<p>ராஜிவ், இந்தியாவுக்காகவே பிறந்தார், வாழ்ந்தார், மடிந்தார்.</p>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large"><img decoding="async" width="425" height="600" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/08/childhood_1.jpg" alt="" class="wp-image-1601" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/08/childhood_1.jpg 425w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/08/childhood_1-213x300.jpg 213w" sizes="(max-width: 425px) 100vw, 425px" /></figure></div>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large"><img loading="lazy" decoding="async" width="505" height="640" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/08/childhood_3.jpg" alt="" class="wp-image-1602" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/08/childhood_3.jpg 505w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/08/childhood_3-237x300.jpg 237w" sizes="auto, (max-width: 505px) 100vw, 505px" /></figure></div>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large"><img loading="lazy" decoding="async" width="460" height="289" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/08/Nehru_Frose_RajivChild.jpg" alt="" class="wp-image-1603" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/08/Nehru_Frose_RajivChild.jpg 460w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/08/Nehru_Frose_RajivChild-300x188.jpg 300w" sizes="auto, (max-width: 460px) 100vw, 460px" /></figure></div>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large"><img loading="lazy" decoding="async" width="615" height="480" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/08/Jawaharlal_Nehru_and_Rajiv_Gandhi_on_horseback.jpg" alt="" class="wp-image-1606" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/08/Jawaharlal_Nehru_and_Rajiv_Gandhi_on_horseback.jpg 615w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/08/Jawaharlal_Nehru_and_Rajiv_Gandhi_on_horseback-300x234.jpg 300w" sizes="auto, (max-width: 615px) 100vw, 615px" /></figure></div>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large"><img loading="lazy" decoding="async" width="640" height="480" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/08/11.jpg" alt="" class="wp-image-1607" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/08/11.jpg 640w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/08/11-300x225.jpg 300w" sizes="auto, (max-width: 640px) 100vw, 640px" /></figure></div>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large"><img loading="lazy" decoding="async" width="650" height="540" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/08/19_08_2019-20_05_2019-rajiv-gandhi2_19239221_1247744_19499862_151514649.jpg" alt="" class="wp-image-1612" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/08/19_08_2019-20_05_2019-rajiv-gandhi2_19239221_1247744_19499862_151514649.jpg 650w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/08/19_08_2019-20_05_2019-rajiv-gandhi2_19239221_1247744_19499862_151514649-300x249.jpg 300w" sizes="auto, (max-width: 650px) 100vw, 650px" /></figure></div>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/nehru-glimpses-baby-rajiv-gandhi-under-streetlight/">தெருவிளக்கு வெளிச்சத்தில் ராஜீவை பார்த்த நேரு!</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://desiyamurasu.com/news-india/nehru-glimpses-baby-rajiv-gandhi-under-streetlight/feed/</wfw:commentRss>
			<slash:comments>2</slash:comments>
		
		
			</item>
	</channel>
</rss>
