<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>indira gandhi Archives - தேசிய முரசு - Desiya Murasu</title>
	<atom:link href="https://desiyamurasu.com/tag/indira-gandhi/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://desiyamurasu.com/tag/indira-gandhi/</link>
	<description>DesiyaMurasu – Daily Opinions &#38; Analysis on Latest News  &#124; Tamil News</description>
	<lastBuildDate>Mon, 17 Jan 2022 10:10:34 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.8.3</generator>

<image>
	<url>https://desiyamurasu.com/wp-content/uploads/2020/07/cropped-FAV-copy-1-32x32.png</url>
	<title>indira gandhi Archives - தேசிய முரசு - Desiya Murasu</title>
	<link>https://desiyamurasu.com/tag/indira-gandhi/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? &#8211; ஆ.கோபண்ணா</title>
		<link>https://desiyamurasu.com/news-tamilnadu/why-saidai-duraisamy-criticising-congress-when-praising-mgr/</link>
					<comments>https://desiyamurasu.com/news-tamilnadu/why-saidai-duraisamy-criticising-congress-when-praising-mgr/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Admin]]></dc:creator>
		<pubDate>Mon, 17 Jan 2022 10:10:32 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழக அரசியல்]]></category>
		<category><![CDATA[congress]]></category>
		<category><![CDATA[indira gandhi]]></category>
		<category><![CDATA[MGR]]></category>
		<category><![CDATA[rajiv gandhi]]></category>
		<guid isPermaLink="false">https://desiyamurasu.com/?p=4588</guid>

					<description><![CDATA[<p>தமிழகத்தில் 13 ஆண்டுகாலம் தொடர்ந்து முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். அவர்களின் பிறந்தநாள் இன்று. எம்.ஜி.ஆர். அவர்கள் அ.தி.மு.க. தொடங்குவதற்கும், ஆட்சியில் செயல்படுவதற்கும் உறுதுணையாக இருந்தவர்கள் பிரதமர்களாக இருந்த இந்திரா காந்தியும், ராஜிவ்காந்தி அவர்களும் என்பதை அனைவரும் அறிவார்கள். இவை அன்றைய அரசியலில் உருவான திருப்புமுனைகளால் ஏற்பட்டது. எம்.ஜி.ஆர். புகழைப் பரப்புகிற முயற்சியில் சைதை துரைசாமி அவர்கள் ஈடுபடுவதில் எந்த தவறும் இல்லை. அவரோடு அரசியலில் பயணித்தவருக்கு அத்தகைய உரிமை உண்டு. ஆனால், இன்று தினத்தந்தியில் அவர் எழுதி [&#8230;]</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-tamilnadu/why-saidai-duraisamy-criticising-congress-when-praising-mgr/">எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? &#8211; ஆ.கோபண்ணா</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>தமிழகத்தில் 13 ஆண்டுகாலம் தொடர்ந்து முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். அவர்களின் பிறந்தநாள் இன்று. எம்.ஜி.ஆர். அவர்கள் அ.தி.மு.க. தொடங்குவதற்கும், ஆட்சியில் செயல்படுவதற்கும் உறுதுணையாக இருந்தவர்கள் பிரதமர்களாக இருந்த இந்திரா காந்தியும், ராஜிவ்காந்தி அவர்களும் என்பதை அனைவரும் அறிவார்கள். இவை அன்றைய அரசியலில் உருவான திருப்புமுனைகளால் ஏற்பட்டது. எம்.ஜி.ஆர். புகழைப் பரப்புகிற முயற்சியில் சைதை துரைசாமி அவர்கள் ஈடுபடுவதில் எந்த தவறும் இல்லை. அவரோடு அரசியலில் பயணித்தவருக்கு அத்தகைய உரிமை உண்டு. ஆனால், இன்று தினத்தந்தியில் அவர் எழுதி வெளிவந்துள்ள கட்டுரையில் &#8216;திருப்பூர் குமரன் மனைவி இராமாயி அம்மாள் வறுமையில் வாடிய போது காங்கிரஸ் கட்சி உதவி செய்ய முன்வராமல் அவரை மறந்துவிட்டதாக&#8217; குற்றம்சாட்டி எழுதியிருக்கிறார். முதலமைச்சர் எம்.ஜி.ஆர்., திருப்பூர் குமரன் மனைவிக்கு நிதியுதவி செய்ததைப் பற்றிக் குறிப்பிடும் போது, தேவையில்லாமல் காங்கிரஸ் கட்சியை ஏன் சீண்டிப் பார்க்கிறார் என்று தெரியவில்லை. 1967இல் ஆட்சியை காங்கிரஸ் கட்சி இழந்த பிறகு முதலமைச்சர்களாக இருந்த கலைஞரும், எம்.ஜி.ஆரும் இதுபோன்ற உதவிகளை நிறையச் செய்திருக்கிறார்கள். அதைப் பற்றிக் குறிப்பிடும் போது காங்கிரஸ் கட்சியைப் பற்றி விமர்சிக்க வேண்டிய அவசியம் இல்லை.</p>



<p>மறைந்த எம்.ஜி.ஆருக்கு அன்றைய பிரதமர் இந்திரா காந்தி செய்த உதவிகளைக் கணக்கிடுகிற போது, எம்.ஜி.ஆர். செய்த இத்தகைய உதவிகள் பொருட்படுத்தக்கூடியது அல்ல. எம்.ஜி.ஆர். உடல்நலக்குறைவு ஏற்பட்டு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, அவரைப் பார்க்க பிரதமர் இந்திரா காந்தி தனி விமானத்தில் அவசர அவசரமாக சென்னை வந்தார். மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து அப்போலோ மருத்துவமனைக்கு இந்திரா காந்தி பயணித்த காரின் பின்னே அ.தி.மு.க. அமைச்சர்கள் சோகமே உருவாய் அவர்களது கார்களில் அணிவகுத்து வந்ததை நானே நேரில் பார்த்திருக்கிறேன். அப்போலோவில் எம்.ஜி.ஆரின் உடல்நலம் குறித்து மருத்துவர்களிடம் விசாரித்து விட்டு அவருக்கு உரிய சிகிச்சைகளை செய்வதோடு, தேவைப்பட்டால் வெளிநாட்டில் சிகிச்சை செய்யவும் ஏற்பாடு செய்வதாகக் கூறினார். பிறகு, எம்.ஜி.ஆருக்கு வெளிநாட்டுச் சிகிச்சை தேவைப்பட்டதால் விமானத்தையே மருத்துவமனையாக்கி, அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி அவரை அமெரிக்காவுக்கு பாதுகாப்பாகப் பயணிக்க வைத்து, மருத்துவமனையில் அனுமதித்து உரிய சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தவர் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி.</p>



<p>அதைப்போலவே இந்திரா காந்தி படுகொலைக்குப் பிறகு நடைபெற்ற 1984 தேர்தலில் அமெரிக்க மருத்துவமனையிலிருந்தே வேட்புமனு தாக்கலில் கையொப்பமிட்டுத் தேர்தலில் நிற்பதற்கு அனைத்து வசதிகளையும் செய்தவர் பிரதமராக இருந்த ராஜிவ்காந்தி. அத்தகைய நன்றிப் பெருக்கை வெளிப்படுத்துகிற வகையில் தான் சென்னை கத்திப்பாரா சந்திப்பில் பண்டித ஜவஹர்லால் நேரு சிலை திறப்பு விழாவில் அன்றைய பிரதமர் ராஜிவ்காந்தியை முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் கட்டித் தழுவி கண்ணீர் மல்க உரையாற்றியதை சைதை துரைசாமி மறந்திருக்க முடியாது. தமது உயிரைக் காப்பாற்றிய இந்திரா படுகொலை செய்யப்பட்டது மருத்துவமனையில் இருந்த போது எம்.ஜி.ஆருக்கு தெரிவிக்கப்படவில்லை. உடல்நலம் தேறிய சூழலில் ராஜிவ்காந்தி பிரதமராகப் பொறுப்பேற்று முதல் முறையாக சந்திக்கிற போது, எம்.ஜி.ஆர். எந்தளவிற்கு உணர்ச்சிப் பெருக்கோடு இருந்தார் என்பதை எல்லோரும் அறிவார்கள். தமது உயிரைக் காப்பாற்றிய இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்ட பிறகு, பிரதமராகப் பொறுப்பேற்ற ராஜிவ்காந்தியுடன் எம்.ஜி.ஆர். சந்தித்த காட்சி அங்கு கூட்டத்தில் திரண்ட மக்களின் நெஞ்சை உலுக்குவதாக இருந்தது. அத்தகைய நன்றி உணர்ச்சிமிக்க உறவுகளை வைத்திருந்ததை எல்லாம் மறந்துவிட்டு திருப்பூர் குமரன் மனைவிக்கு செய்த நிதியுதவியை குறிப்பிட்டு காங்கிரஸ் கட்சியை சிறுமைப்படுத்துவது எந்தவகையில் நியாயம் என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை.</p>



<p>அன்னை இந்திரா காந்தி, அமரர் ராஜிவ்காந்தி ஆகியோரின் ஆதரவு இல்லையென்றால் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் அரசியலில் பெற்ற வெற்றிகள் எந்தளவிற்கு சாத்தியமாகியிருக்கும் என்பதை மனசாட்சி உள்ளவர்கள் சிந்திக்க வேண்டும்.</p>



<p>எம்.ஜி.ஆர். புகழைப் பாடுங்கள். அதற்காக காங்கிரசை இழிவுபடுத்தாதீர்கள். அதைச் செய்வதற்கு உங்களுக்கு உரிமை இல்லை.</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-tamilnadu/why-saidai-duraisamy-criticising-congress-when-praising-mgr/">எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? &#8211; ஆ.கோபண்ணா</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://desiyamurasu.com/news-tamilnadu/why-saidai-duraisamy-criticising-congress-when-praising-mgr/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>அன்னை இந்திராவின் காலச்சுவடுகள்! &#8211; அரிய புகைப்படங்களின் தொகுப்பு</title>
		<link>https://desiyamurasu.com/news-india/rare-photos-of-indira-gandhi-2/</link>
					<comments>https://desiyamurasu.com/news-india/rare-photos-of-indira-gandhi-2/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[ஆ. கோபண்ணா]]></dc:creator>
		<pubDate>Sun, 31 Oct 2021 18:10:29 +0000</pubDate>
				<category><![CDATA[தேசிய அரசியல்]]></category>
		<category><![CDATA[indira gandhi]]></category>
		<guid isPermaLink="false">https://desiyamurasu.com/?p=4513</guid>

					<description><![CDATA[<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/rare-photos-of-indira-gandhi-2/">அன்னை இந்திராவின் காலச்சுவடுகள்! &#8211; அரிய புகைப்படங்களின் தொகுப்பு</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img fetchpriority="high" decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/INDIRA-3.jpg" alt="" class="wp-image-2877" width="552" height="735" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/INDIRA-3.jpg 525w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/INDIRA-3-225x300.jpg 225w" sizes="(max-width: 552px) 100vw, 552px" /><figcaption><strong>Born on November 19, 1917, Indira Gandhi is till date the only woman Prime Minister of India. She was elected as the PM of India in January 1966 and served till March 1977.</strong></figcaption></figure></div>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/10/nationalherald_2016-11_723fafe5-bb4d-49ae-836d-5144bacb8cc5_Young-Indira-Nehru-Gandhi-Anand-Bhawan-Allahabad-Congress.jpg" alt="" class="wp-image-4515" width="554" height="784" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/10/nationalherald_2016-11_723fafe5-bb4d-49ae-836d-5144bacb8cc5_Young-Indira-Nehru-Gandhi-Anand-Bhawan-Allahabad-Congress.jpg 700w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/10/nationalherald_2016-11_723fafe5-bb4d-49ae-836d-5144bacb8cc5_Young-Indira-Nehru-Gandhi-Anand-Bhawan-Allahabad-Congress-212x300.jpg 212w" sizes="(max-width: 554px) 100vw, 554px" /><figcaption><strong>Indira Nehru, a very young Congress activist, at Anand Bhawan, Allahabad, in the early 1920s</strong></figcaption></figure></div>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/indira_young.jpg" alt="" class="wp-image-2914" width="549" height="677" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/indira_young.jpg 520w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/indira_young-244x300.jpg 244w" sizes="(max-width: 549px) 100vw, 549px" /><figcaption>It was during her interview at Shantiniketan that Rabindra Nath Tagore named her Priyadarshini. Since then she has been known as Indira Priyadarshini Nehru or Indira Priyadarshini Gandhi.</figcaption></figure></div>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img loading="lazy" decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/Indira-Gandhi-riding-on-Yak-on-way-to-Bhutan..jpg" alt="" class="wp-image-2952" width="562" height="554" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/Indira-Gandhi-riding-on-Yak-on-way-to-Bhutan..jpg 602w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/Indira-Gandhi-riding-on-Yak-on-way-to-Bhutan.-300x296.jpg 300w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/Indira-Gandhi-riding-on-Yak-on-way-to-Bhutan.-75x75.jpg 75w" sizes="auto, (max-width: 562px) 100vw, 562px" /><figcaption><strong>Indira Gandhi riding on Yak on way to Bhutan.</strong></figcaption></figure></div>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img loading="lazy" decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/indira5_1.jpg" alt="" class="wp-image-2881" width="562" height="799" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/indira5_1.jpg 450w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/indira5_1-211x300.jpg 211w" sizes="auto, (max-width: 562px) 100vw, 562px" /></figure></div>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img loading="lazy" decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/i1.jpg" alt="" class="wp-image-2882" width="574" height="524" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/i1.jpg 540w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/i1-300x274.jpg 300w" sizes="auto, (max-width: 574px) 100vw, 574px" /><figcaption><strong>Mrs. Indira Gandhi photographed at Palam Aerodrome on Oct. 3, 1949 before her departure for London, from where she is expected to join the Hon&#8217;ble Pandit Jawaharlal Nehru Prime Minister in U.S.A. during his forth coming tour to that country.</strong></figcaption></figure></div>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img loading="lazy" decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/dsgsdgs.jpg" alt="" class="wp-image-2954" width="577" height="499" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/dsgsdgs.jpg 634w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/dsgsdgs-300x259.jpg 300w" sizes="auto, (max-width: 577px) 100vw, 577px" /></figure></div>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img loading="lazy" decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/ba5dfcfcebf3c8fa5ffec03a4ae81fcd.jpg" alt="" class="wp-image-2884" width="578" height="625" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/ba5dfcfcebf3c8fa5ffec03a4ae81fcd.jpg 564w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/ba5dfcfcebf3c8fa5ffec03a4ae81fcd-277x300.jpg 277w" sizes="auto, (max-width: 578px) 100vw, 578px" /></figure></div>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img loading="lazy" decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/Indira-Gandhi-Nehru_1.jpg" alt="" class="wp-image-2899" width="576" height="859" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/Indira-Gandhi-Nehru_1.jpg 429w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/Indira-Gandhi-Nehru_1-201x300.jpg 201w" sizes="auto, (max-width: 576px) 100vw, 576px" /><figcaption><strong>A picture of Indira Gandhi taken during her visit to an Indian store in Zurich, Switzerland.</strong></figcaption></figure></div>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img loading="lazy" decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/image-7.jpg" alt="" class="wp-image-2921" width="575" height="473" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/image-7.jpg 700w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/image-7-300x247.jpg 300w" sizes="auto, (max-width: 575px) 100vw, 575px" /></figure></div>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img loading="lazy" decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/indira.jpg" alt="" class="wp-image-2908" width="574" height="729" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/indira.jpg 403w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/indira-236x300.jpg 236w" sizes="auto, (max-width: 574px) 100vw, 574px" /><figcaption><strong>Indira Gandhi with her sons, Rajiv and Sanjay.</strong></figcaption></figure></div>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img loading="lazy" decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/indira4.jpg" alt="" class="wp-image-2892" width="577" height="720" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/indira4.jpg 651w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/indira4-240x300.jpg 240w" sizes="auto, (max-width: 577px) 100vw, 577px" /></figure></div>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img loading="lazy" decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/image-4.jpg" alt="" class="wp-image-2897" width="575" height="692" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/image-4.jpg 532w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/image-4-249x300.jpg 249w" sizes="auto, (max-width: 575px) 100vw, 575px" /></figure></div>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img loading="lazy" decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/indira2.jpg" alt="" class="wp-image-2895" width="574" height="424" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/indira2.jpg 993w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/indira2-300x222.jpg 300w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/indira2-768x568.jpg 768w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/indira2-750x555.jpg 750w" sizes="auto, (max-width: 574px) 100vw, 574px" /></figure></div>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img loading="lazy" decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/IMG_20190128_113430-871x1024.jpg" alt="" class="wp-image-2896" width="576" height="675"/></figure></div>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img loading="lazy" decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/Kamaraj-1024x639.jpg" alt="" class="wp-image-2893" width="575" height="358" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/Kamaraj-1024x639.jpg 1024w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/Kamaraj-300x187.jpg 300w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/Kamaraj-768x479.jpg 768w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/Kamaraj-750x468.jpg 750w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/Kamaraj-1140x712.jpg 1140w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/Kamaraj.jpg 1200w" sizes="auto, (max-width: 575px) 100vw, 575px" /><figcaption><strong>Indira Gandhi and K. Kamaraj greeting each other at the Congress Parliamentary Party meeting in New Delhi.</strong></figcaption></figure></div>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img loading="lazy" decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/Mother-Teresa-with-Indira-Gandhi.jpg" alt="" class="wp-image-2894" width="575" height="378" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/Mother-Teresa-with-Indira-Gandhi.jpg 875w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/Mother-Teresa-with-Indira-Gandhi-300x197.jpg 300w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/Mother-Teresa-with-Indira-Gandhi-768x505.jpg 768w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/Mother-Teresa-with-Indira-Gandhi-750x493.jpg 750w" sizes="auto, (max-width: 575px) 100vw, 575px" /><figcaption><strong>India&#8217;s Prime Minister Indira Gandhi with Roman Catholic nun Mother Teresa in New Delhi.</strong></figcaption></figure></div>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img loading="lazy" decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/DsVHH_JX4AAfWnP_1542621000__rend_4_3.jpg" alt="" class="wp-image-2923" width="577" height="433" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/DsVHH_JX4AAfWnP_1542621000__rend_4_3.jpg 600w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/DsVHH_JX4AAfWnP_1542621000__rend_4_3-300x225.jpg 300w" sizes="auto, (max-width: 577px) 100vw, 577px" /></figure></div>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img loading="lazy" decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/image9.jpg" alt="" class="wp-image-2906" width="577" height="1146" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/image9.jpg 420w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/image9-151x300.jpg 151w" sizes="auto, (max-width: 577px) 100vw, 577px" /></figure></div>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img loading="lazy" decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/Indira-Gandhi-Dr.-Albert-Einstein-Jawaharlal-Nehru-and-Vijaya-Lakshmi-Pandit_1.jpg" alt="" class="wp-image-2909" width="576" height="449" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/Indira-Gandhi-Dr.-Albert-Einstein-Jawaharlal-Nehru-and-Vijaya-Lakshmi-Pandit_1.jpg 621w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/Indira-Gandhi-Dr.-Albert-Einstein-Jawaharlal-Nehru-and-Vijaya-Lakshmi-Pandit_1-300x234.jpg 300w" sizes="auto, (max-width: 576px) 100vw, 576px" /><figcaption><strong>Indira Gandhi, Dr. Albert Einstein, Jawaharlal Nehru and Vijaya Lakshmi Pandit. </strong></figcaption></figure></div>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img loading="lazy" decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/image8_1.jpg" alt="" class="wp-image-2901" width="580" height="478" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/image8_1.jpg 576w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/image8_1-300x247.jpg 300w" sizes="auto, (max-width: 580px) 100vw, 580px" /></figure></div>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img loading="lazy" decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/19-Indira-over-looks-the-Tungabhadra-Dam_1-1.jpg" alt="" class="wp-image-2903" width="580" height="460" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/19-Indira-over-looks-the-Tungabhadra-Dam_1-1.jpg 960w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/19-Indira-over-looks-the-Tungabhadra-Dam_1-1-300x238.jpg 300w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/19-Indira-over-looks-the-Tungabhadra-Dam_1-1-768x610.jpg 768w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/19-Indira-over-looks-the-Tungabhadra-Dam_1-1-750x595.jpg 750w" sizes="auto, (max-width: 580px) 100vw, 580px" /><figcaption><strong>Indira Gandhi over looks the Tungabhadra Dam</strong></figcaption></figure></div>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img loading="lazy" decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/DsVZRmuWoAIpqJU_@DKShivakumar_1542621107__rend_16_9-1.jpg" alt="" class="wp-image-2905" width="573" height="321" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/DsVZRmuWoAIpqJU_@DKShivakumar_1542621107__rend_16_9-1.jpg 600w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/DsVZRmuWoAIpqJU_@DKShivakumar_1542621107__rend_16_9-1-300x169.jpg 300w" sizes="auto, (max-width: 573px) 100vw, 573px" /><figcaption><strong>Indira Gandhi went to war with Pakistan to liberate East Pakistan. India won the war and Bangladesh was created.</strong></figcaption></figure></div>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img loading="lazy" decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/EILYOt-X0AA5jN9.jpg" alt="" class="wp-image-2904" width="582" height="709" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/EILYOt-X0AA5jN9.jpg 623w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/EILYOt-X0AA5jN9-246x300.jpg 246w" sizes="auto, (max-width: 582px) 100vw, 582px" /></figure></div>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img loading="lazy" decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/Indira-Gandhi-smiles.jpg" alt="" class="wp-image-2898" width="581" height="823" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/Indira-Gandhi-smiles.jpg 452w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/Indira-Gandhi-smiles-212x300.jpg 212w" sizes="auto, (max-width: 581px) 100vw, 581px" /><figcaption><strong>Indira Gandhi is all smiles post her re-election as Prime Minister of India in 1971.</strong></figcaption></figure></div>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/rare-photos-of-indira-gandhi-2/">அன்னை இந்திராவின் காலச்சுவடுகள்! &#8211; அரிய புகைப்படங்களின் தொகுப்பு</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://desiyamurasu.com/news-india/rare-photos-of-indira-gandhi-2/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>என் ராஜிவ்! … சோனியா காந்தி எழுதிய தொடர் &#8211; 2</title>
		<link>https://desiyamurasu.com/news-india/my-rajiv-by-sonia-gandhi-2/</link>
					<comments>https://desiyamurasu.com/news-india/my-rajiv-by-sonia-gandhi-2/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Admin]]></dc:creator>
		<pubDate>Sat, 12 Dec 2020 17:42:14 +0000</pubDate>
				<category><![CDATA[தேசிய அரசியல்]]></category>
		<category><![CDATA[indira gandhi]]></category>
		<category><![CDATA[rajiv gandhi]]></category>
		<category><![CDATA[sonia gandhi]]></category>
		<guid isPermaLink="false">https://desiyamurasu.com/?p=3541</guid>

					<description><![CDATA[<p>1965 பிப்ரவரி முதல் 1966 ஜூலை முடிய ராஜிவும் நானும் கேம்பிரிட்ஜிலும் லண்டனிலும் ஒன்றாக இருந்தோம். அதன்பிறகு நான் என் சொந்த வீட்டிற்குச் சென்றேன். ராஜிவ் லண்டனில் விமானப் பயிற்சியைத் தொடங்கினார். பிரிந்திருந்த நாள்களில், ஒவ்வொரு நாளும் நாங்கள் கடிதங்கள் எழுதிக்கொள்வோம். இத்தாலி வருவதற்காக அவர் பணம் சேமித்தார். ‘‘முன்பே நான் எழுதாததற்கு வருந்துகிறேன். நாங்கள் (ராஜிவும் அவர் நண்பரும்) கட்டடப் பணியாளர்களாகப் பணி செய்கிறோம். ஒருநாளைக்கு 10 மணி நேரம் பணி. பணிக்களத்திற்குப் போய் வர [&#8230;]</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/my-rajiv-by-sonia-gandhi-2/">என் ராஜிவ்! … சோனியா காந்தி எழுதிய தொடர் &#8211; 2</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>1965 பிப்ரவரி முதல் 1966 ஜூலை முடிய ராஜிவும் நானும் கேம்பிரிட்ஜிலும் லண்டனிலும் ஒன்றாக இருந்தோம். அதன்பிறகு நான் என் சொந்த வீட்டிற்குச் சென்றேன். ராஜிவ் லண்டனில் விமானப் பயிற்சியைத் தொடங்கினார். பிரிந்திருந்த நாள்களில், ஒவ்வொரு நாளும் நாங்கள் கடிதங்கள் எழுதிக்கொள்வோம். இத்தாலி வருவதற்காக அவர் பணம் சேமித்தார்.</p>



<p>‘‘முன்பே நான் எழுதாததற்கு வருந்துகிறேன். நாங்கள் (ராஜிவும் அவர் நண்பரும்) கட்டடப் பணியாளர்களாகப் பணி செய்கிறோம். ஒருநாளைக்கு 10 மணி நேரம் பணி. பணிக்களத்திற்குப் போய் வர 1.30 மணி நேரம் ஆகும். பணி முடிந்தபின், செத்த மாடுபோல் வீடு திரும்புவோம். என் கைகள் விரைப்பாக உள்ளன. என்னால் மெதுவாகவே எழுத முடிகிறது&#8221; என்று ராஜிவ் ஒருமுறை ஒரு கடிதத்தில் எழுதியிருந்தார்.</p>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img loading="lazy" decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/12/1.Feroze-and-Indira.jpg" alt="" class="wp-image-3545" width="546" height="365" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/12/1.Feroze-and-Indira.jpg 659w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/12/1.Feroze-and-Indira-300x201.jpg 300w" sizes="auto, (max-width: 546px) 100vw, 546px" /></figure></div>



<p>நவம்பர் மாத இறுதியில் விமானம் ஓட்டும் உரிமம் (லைசன்ஸ்) பெற்றவுடன், தம் திட்டங்கள் பற்றி என் தந்தையுடன் பேச ராஜிவ் இத்தாலிக்கு வந்தார். இந்தியா திரும்பி ஒரு வர்த்தக விமானி உரிமம் (லைசன்ஸ்) பெற்று, ஒரு விமானி வேலை பெற்று, என்னைத் திருமணம் செய்ய எண்ணினார்.</p>



<p>ராஜிவின் நேர்மையில் என் தந்தைக்கு எவ்வித ஐயப்பாடும் இல்லை. ‘‘ஒருவரை அவர் கண்களால் அறியலாம்&#8221; என்றார் என் தந்தை. ஆனால், என் தந்தைக்கு அவருடைய மகள் பற்றியே கவலை. ‘அவளுக்கு வயது மிகவும் குறைவு. இந்திய வாழ்க்கை முறையில் ஈடுபடுவது கடினம்! மாறுபட்ட மக்கள் &#8211; மாறுபட்ட பழக்க வழக்கங்கள்.&#8217;</p>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img loading="lazy" decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/12/Nehru_Frose_RajivChild.jpg" alt="" class="wp-image-3544" width="553" height="365" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/12/Nehru_Frose_RajivChild.jpg 721w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/12/Nehru_Frose_RajivChild-300x198.jpg 300w" sizes="auto, (max-width: 553px) 100vw, 553px" /></figure></div>



<p>நான் உரிய வயது பெறும்வரை &#8211; சிறிய விடுமுறைக்குக்கூட &#8211; என்னை அனுமதிக்க அவர் விரும்பவில்லை. இருப்பினும், ராஜிவும் நானும் ஓர் ஆண்டு பிரிந்திருந்து, அதன் பின்னர் அதேபோல் நான் அவரை விரும்பினால் &#8211; இந்தியா செல்ல என்னை என் தந்தை அனுமதிப்பார் என்பதுதான் நிலை.</p>



<p>அப்போதும் நான், என் தந்தையைப் பற்றி ‘அவர் என் வாழ்க்கையைக் குளறுபடி செய்வதாக&#8217; எண்ணவில்லை. ‘ஒரு சில மாதங்களில் எல்லாம் சரியாகிவிடும்&#8217; என என் தந்தை உறுதியாக எண்ணினார். ஆனால், அவர் எண்ணியது நடைபெறவில்லை. அவர் தம் வாக்கைக் காப்பாற்றினார். எனக்கு 21 வயது ஆனவுடன் இந்தியா செல்ல அனுமதித்தார்.</p>



<p>1968 ஆம் ஆண்டு ஜனவரி 13 ஆம் நாள், நான் டெல்லியை வந்தடைந்தேன். என்னைக் கூட்டிச் செல்ல தம் சகோதரர் சஞ்சய், நண்பர் அமித் ஆகியோருடன் விமான நிலையத்திற்கு ராஜிவ் வந்தார். அவரைப் பார்த்தவுடன் எனக்கு ஏதோ விடுதலை பெற்ற உணர்வு ஏற்பட்டது. இப்போது ராஜிவ் அருகில் நான் உள்ளேன். இனிமேல் எதுவும் யாரும் எங்களைப் பிரிக்க முடியாது!</p>



<p>எங்கள் திருமண நாளான பிப்ரவரி 25க்கு முந்திய நாள்வரை, அலகாபாத்தில் ராஜிவின் குடும்ப நண்பரான பச்சன் வீட்டில் நான் தங்கியிருந்தேன். என்னைச் சுற்றிலும் &#8211; நிறங்கள், சுவைகள், மணங்கள், மக்கள் &#8211; எல்லாம் புதியவை! மாறுபட்டவை! அங்குள்ளோர் என்னை ஆர்வத்துடன் பார்த்தனர்! என்னை எங்கும் பின்தொடர்ந்தனர். எனக்கு வியப்பளித்தாலும், அது ஒரு எரிச்சலூட்டும் அனுபவம்தான்! தனி ஒதுக்கிடம் இல்லை! என்னைக் கட்டுப்படுத்தி, என் உணர்வுகளை அடக்க வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது.</p>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img loading="lazy" decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/12/sanjay-embed_072117121824.jpg" alt="" class="wp-image-3546" width="555" height="402" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/12/sanjay-embed_072117121824.jpg 690w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/12/sanjay-embed_072117121824-300x217.jpg 300w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/12/sanjay-embed_072117121824-120x86.jpg 120w" sizes="auto, (max-width: 555px) 100vw, 555px" /></figure></div>



<p>எனக்குக் கோபம் ஏற்பட்டது. ‘அவர்களின் கண்கள் என்னையே ஏன் உற்றுக் கவனிக்கின்றன?&#8217; என எனக்கு நானே கேட்டுக்கொண்டேன். ‘நான் அந்நியமானவள் மட்டுமன்றி, வெளிநாட்டவளும்கூட என்பதுமட்டும் காரணம் அன்று! காலம் காலமாக இந்திய நாட்டு மக்கள் அனைவருக்கும் பழக்கமாகிவிட்ட ஒரு குடும்பத்தில், நான் ஒரு புதுவரவு என்பதுவும்கூட!&#8217; என்பதைக் காலப்போக்கில் தெளிவாகப் புரிந்துகொண்டேன். அவர்கள் செய்தது, செய்யாதது, சொன்னது, சொல்லாதது என ஒவ்வொன்றும் ஆராயப்பட்டு, அதன் பின்னரே அவை முடிவு செய்யப்பட்டன. இவ்வாறு வாழ்வது எப்படிச் சாத்தியமாகும்!</p>



<p>என்னுடைய பிறவிக் குணமாகப் பிரதிபலிப்பது, எங்கும் எப்போதும் பின்வாங்கி ஒதுங்குவதாகும். என்னுடைய கூச்ச சுபாவத்தை அறிந்த ராஜிவும் அவரது தாயாரும் என் உணர்வுகளைத் தெளிவாகப் புரிந்துகொண்டனர். ஆனால், சில பழக்க வழக்கங்களைப் புரிந்துகொள்வதும் ஏற்றுக்கொள்வதும் எனக்குக் கடினமாக இருந்தது. இந்திய உடைகளை அணிவது எனக்குப் பொருத்தமற்றதாகவும் வசதி குறைந்ததாயுமிருந்தது. இந்திய உணவு வகைகளின் காரச்சுவையை என் வாய் ஏற்றுக்கொள்ள மறுத்தது. ராஜிவோ, என் மாமியாரோ இவற்றை என்மீது வற்புறுத்தித் திணிக்கவில்லை. என் தயக்கமும் அவ்வப்போது என்னிடம் தோன்றும் விருப்பமின்மையும் என் மாமியாருக்கு மனத்துயரளித்தாலும், அவர் தம் உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொண்டார். இந்திய உணவு வகைகளை நான் ஏற்றுக்கொள்ள முயற்சி செய்வதற்கு ஊக்கம் அளித்தார். நான் நானாகவே இருக்கவும், ராஜிவின் உலகில் என்னை ஒன்றிணைத்துக்கொள்ள விரும்புவதையும் அனுமதித்தார்.<br><br>கொஞ்சம் கொஞ்சமாக அந்தக் குடும்ப நடவடிக்கைகளில் படிப்படியாக என்னை நான் ஈடுபடுத்திக் கொண்டேன். ஆரம்பத்தில் வீட்டிலும், பிறகு டெல்லியில் ஒரு நிறுவனத்திலும் இந்தி மொழியைக் கற்கத் தொடங்கினேன். குடும்பத்தோடும் குடும்ப நண்பர்களோடும் பேசிப் பழக, இந்தி கற்பது எளிதாகவும் உதவியாகவும் இருந்தது. எல்லாரும் உணவு மேஜையில் சூழ அமர்ந்து சாப்பிடும் போது, பொதுவாக நாங்கள் இந்தியில் உரையாடுவதுதான் வழக்கம்.</p>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img loading="lazy" decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/12/WhatsApp-Image-2020-12-12-at-23.05.22-674x1024.jpeg" alt="" class="wp-image-3549" width="517" height="785" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/12/WhatsApp-Image-2020-12-12-at-23.05.22-674x1024.jpeg 674w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/12/WhatsApp-Image-2020-12-12-at-23.05.22-197x300.jpeg 197w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/12/WhatsApp-Image-2020-12-12-at-23.05.22-768x1168.jpeg 768w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/12/WhatsApp-Image-2020-12-12-at-23.05.22-750x1140.jpeg 750w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/12/WhatsApp-Image-2020-12-12-at-23.05.22.jpeg 842w" sizes="auto, (max-width: 517px) 100vw, 517px" /></figure></div>



<p>தீன்மூர்த்தி இல்லத்தில் வாழ்ந்த காலந்தொட்டு, குடும்பத்தில் எல்லாரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவதுதான் வழக்கம். அலுவலகப் பணிகள் குறுக்கிட்டாலொழிய, எங்கிருந்தாலும் குடும்பத்தினர் ஒன்றுகூடி உணவு அருந்துவதையே வழக்கமாகக்கொண்டு பின்பற்றி வந்தோம். எப்படிப்பட்ட வேலை இருந்தாலும் சிறு பிராயம் முதலே, ராஜிவும் சஞ்சயும் வீட்டிற்குச் சென்று குடும்பதோடு சேர்ந்து உணவு உண்பது என்பதே வழக்கமாய் இருந்துள்ளது. ராஜிவ் தம் தாயாருடன் சேர்ந்து உணவு அருந்திய பின்னர்தான் பிற பணிகளைச் செய்வார். மாலை வேளைகளில் நண்பர்களைக் காண நானும் ராஜிவும் வெளியில் செல்வது உண்டு.</p>



<p>இப்படிக் குடும்பத்தில் அனைவரும் சேர்ந்து உணவு அருந்துவது என்பது ஒரு சுமையான வேலையன்று. உணவு அருந்தும்போது, சுவாரஸ்யமான உரையாடல்கள் இடம் பெறுவது உண்டு. சீரிய கருத்துப் பரிமாற்றங்களும் நகைச்சுவைப் பேச்சுகளும் அங்கே வெளிப்படுவது உண்டு. தம் கருத்துக்களைத் தெரிவித்து உரையாடுவதில் என் மாமியார் திறமைசாலி. வினாடி வினா விளையாட்டுக்கள், கதை சொல்லுதல் போன்றவற்றில், குறிப்பாகக் குழந்தைகளோடு குழந்தையாய் இருப்பதில் என் மாமியார் அதிகம் கவனம் செலுத்தினார். கடந்த காலத்தில் வாழ்ந்த தலைவர்களைப் பற்றியும் இந்திய சுதந்திரப் போராட்ட நிகழ்வுகள் பற்றியும் கூறி, பழைய வரலாற்று நிகழ்ச்சிகளை உயிரோட்டமுடையதாக்குவார். எங்களையும்கூட அவற்றில் ஈடுபாடு கொள்ளச் செய்து மகிழ்ச்சி அடைவார். அவர் பேசும் அனைத்திலும் பங்கு கொள்ளச் செய்வார்.</p>



<p>அந்தக் குடும்பத்தின் அச்சாகவே அவர் திகழ்ந்தார். இந்நிலை அவரது அதிகாரத்தால் ஏற்பட்டதன்று. அன்பாலும் அதைக் கொடுக்கும் தன்மையாலும் ஏற்பட்டது. எல்லாவற்றிற்கும் மேலாக, எங்களைப் பொறுத்தவரை, எங்கள்மீது அவர் ஆர்வம் காட்டினார்; அன்பு செலுத்தினார்; அக்கறை காட்டினார். பொதுவாகச் சொல்வதானால், பல்வேறு வகையில் குடும்பத்தில் மட்டுமல்லாமல், தம் தாய் நாட்டின்மீதும் ஈடுபாடு கொண்டவராக அவர் வாழ்ந்தார். அவர் ஆட்சிப் பொறுப்பு காரணமாக வெளிநாடுகளுக்குச் செல்லும்போதெல்லாம், அவரின் சந்திப்புக்கள் குறித்தும், அனுபவங்கள் பற்றியும் எங்களுக்கு எழுதுவார். தமக்குப் பல்வேறு பணிகள் இருக்கும் நாள்களிலும், வீட்டுப் பணிகள் குறித்து நாங்கள் ஒன்றாக இருக்கையில் எங்களுக்கு நினைவூட்டுவார். இங்கே ஒரு நிகழ்ச்சியைக் கட்டாயம் நான் குறிப்பிட்டாக வேண்டும்.</p>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large"><img loading="lazy" decoding="async" width="567" height="399" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/12/Untitled1.jpg" alt="" class="wp-image-3547" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/12/Untitled1.jpg 567w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/12/Untitled1-300x211.jpg 300w" sizes="auto, (max-width: 567px) 100vw, 567px" /></figure></div>



<p>என் திருமணம் முடிந்தபிறகு, என் தாயார் இத்தாலி செல்லுகையில், அந்த நாளில் &#8211; அத்தகைய முதல் குறிப்பு ஒன்றை, என் மாமியார் அலுவலகத்திலிருந்து பெற்றேன். அந்தக் குறிப்பு என்ன தெரியுமா? ‘‘சோனியா! உனக்கு ‘ஹலோ&#8217; கூறத்தான்! உன்னை நேசிக்கிறோம் என்பதைக் கூறத்தான்!&#8221; என்பதேயாகும் அது. இன்னொன்றையும் சொல்லலாம்! ராஜிவுக்கு அவர் அனுப்பிய ஒரு குறிப்பு, புகைப்படக் கலை பற்றியது. ‘‘ராஜிவ் ஒரு அழகிய படத்தை எடுக்கும் வாய்ப்பை நீ நழுவவிட்டுவிட்டாய்! இன்று காலையில், அக்பர் சாலையில் ஒரு மரக்கிளையில் வால் நீண்ட கிளிகள் இரண்டு நீண்ட நேரம் உட்கார்ந்திருந்தன. ஒரு ஜோடி அழகான மரங்கொத்திப் பறவைகளும் இருந்தன. அவை ஏதோ பரப்பரப்புடன் சிறகடித்தன&#8221; என்பதே அந்தக் குறிப்பாகும். எப்போதாவது எனக்கும் அவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டால், இதே வழிமுறையைக் கையாண்டு, ஒரு குறிப்புச் செய்தியை அனுப்பியே தீர்த்து வைத்து விடுவார். ‘‘நாளை நவ்ரோஸ். ஆனால் நாளை அதிகாலையே நான் பயணம் மேற்கொள்ள வேண்டியுள்ளது. ஆகவே இப்போதே வந்து அன்பு முத்தம் தரலாமா?&#8221;</p>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img loading="lazy" decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/12/Indira_Sonia.jpg" alt="" class="wp-image-3542" width="557" height="407" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/12/Indira_Sonia.jpg 760w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/12/Indira_Sonia-300x219.jpg 300w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/12/Indira_Sonia-750x549.jpg 750w" sizes="auto, (max-width: 557px) 100vw, 557px" /></figure></div>



<blockquote class="wp-block-quote is-layout-flow wp-block-quote-is-layout-flow"><p><span class="has-inline-color has-vivid-red-color"><strong>என் மாமியாரிடம் நான் அறிந்தமட்டில், போலி கௌரவமே கிடையாது. அவர் மிகவும் இயல்பானவர். புறத்தூண்டுதலுக்கு ஆட்படாதவர்.</strong> </span></p></blockquote>



<p>இந்திய நாட்டு வரலாற்றில் தம் குடும்பத்தின் பெருமைமிகு பணிப் பங்கை நன்கு அறிந்தவர். அந்த விழிப்புணர்வைத் தம் மகன்களுக்கும் உணர்த்தி, அவர்களையும் அந்தப் பொறுப்பில் ஈடுபாடு கொள்ளச் செய்தவர்.</p>



<p>பள்ளியில் படித்தபோது ராஜிவுக்கு எழுதிய கடிதங்களை நான் கண்டபோது, இந்த நம்பிக்கை என்னுள் உறுதிப்பட்டது. குடும்பத்தின் மற்றொரு உறுப்பினர் செய்த தவறைப் பற்றி 1958 இல் ராஜிவுக்கு எழுதிய கடிதத்தில், ‘‘ஒருவர் தம் நடை உடை பாவனை பற்றி அதிகக் கவனம் செலுத்த வேண்டும். இல்லையேல் அவர் தம் குடும்பத்திற்கு மட்டுமன்றி, நாட்டுக்கும் அவப்பெயர் பெற்றுத் தந்தவராகிவிடுவார்&#8221; என்று குறிப்பிட்டிருந்த செய்தி எவ்வளவு சிறந்த அறிவுரை, காலத்தால் அழிக்க முடியாத உண்மை என்பதை உணர்த்தியது.</p>



<p>என் மாமியாரின் திருமணம் மேடு பள்ளங்கள் நிறைந்தது. இருப்பினும், ஃபிரோஸைத் தவிர வேறு யாரையும் தம்மால் திருமணம் செய்திருக்க முடியாது என்று என்னிடம் ஒருமுறை கூறினார். அவர் நேசித்த ஒரே மனிதர் அவர்தான். பலமுறை அவரைப் பற்றி நேச பாவத்தோடு பேசியுள்ளார். அவரது மரணத்துக்குப்பின் நான் கண்ட ஒரு கடிதத்தில், ‘‘சோனியா, உனக்கு நான் ஏன் எழுதுகிறேன் என்றால், நீ இந்தக் குடும்பத்தில் பாசம் கொண்டுள்ளாய். மேலும் உன்னில் என்னைக் காண்கிறேன். உன் கணவரும் என் மகனுமாகிய ராஜிவிடம் என் கணவரின் பல பண்புகள் அப்படியே உள்ளன&#8221; எனக் குறிப்பிட்டிருந்ததை மீண்டும் படித்துச் சுவைத்தேன். தோற்றத்திலும் மனோபாவத்திலும் ராஜிவ், ஃபிரோஸை நினைவூட்டுவதை அடிக்கடி குறிப்பிடுவார்.</p>



<p>‘‘தந்தையைப் போலவே ராஜிவும் சாதுவானவன். அலட்டிக்கொள்ளாதவன். கோபப்படாதவன். ஒருவேளை கோபப்பட்டால், உடனே அதற்காக வருந்துபவன். ராஜிவ், சஞ்சய் ஆகிய இருவரும் இயற்கையிலும் இசையின்பாலும் நாட்டமுடையவர்கள். முழுவதும் பிரத்தியக்ஷ உலகில் வாழ்பவர்கள். கைவினை விற்பன்னர்கள்&#8221; என்றெல்லாம் கூறியதை எண்ணிப் பார்த்தேன்.</p>



<p>என் மாமியாருடைய கணவருக்குத் தோட்டக்கலையில் உள்ள ஆர்வம் குறித்து, சிறையிலிருந்தபோது, தம் தந்தைக்கு அவர் எழுதிய கடிதம் ஒன்றிற்கு, ‘‘டிசம்பர் மாத ரம்மியமான குளிரில் வீட்டில் இதமான சூரிய ஒளி நுழையும்போது, ஆனந்தபவன் எப்படி இருக்கும் என்பதை எண்ணுகிறேன். தோட்டத்தில் நீயும் ஃபிரோஸும் மகிழ்ச்சியாக இருப்பதையும் வீட்டினுள் மாற்றங்கள் செய்து வாழ்வை மகிழ்வோடு அனுபவிப்பதையும் எண்ணுகிறேன்&#8221; என்று பதில் எழுதியதில் ஜவஹர் தத்ரூபமாகக் குறிப்பிட்டிருந்தார்.</p>



<p>டெல்லியின் புறநகர்ப் பகுதியில் 1950 இன் பிற்பகுதியில் ஃபிரோஸ் வாங்கிக் கொண்டுவந்து நட்ட மரங்கள் பல மண் தரையில் நன்கு வளர்ந்துள்ளன. அழகிய தோட்டங்களில் தகப்பனாரோடு ராஜிவ் மகிழ்ச்சியைப் பங்கிட்டுக் கொண்டவர் என்பதை நான் அறிந்தேன். தமக்கு விருப்பமான மரங்களையும் செடி கொடிகளையும் நாங்கள் எங்கு வசித்தாலும் நட்டுப் பேணுவதில் இன்பம் கண்டவர். வீட்டின் முறைமையையும் தூய்மையையும் உயர்வையும் ராஜிவ் விரும்பினார். வீட்டின் புறத்தே இயற்கையாய் அமைந்த தன்மையைப் பெரிதும் விரும்பினார். அங்கெல்லாம் செயற்கைத் தோட்டங்களை, வெட்டிக் கத்தரித்து முறைப்படுத்தப்பட்ட செடிகளை அவர் விரும்பவில்லை. ராஜிவின் பேணிப் பாதுகாக்கப்பட்ட பொக்கிஷங்கள் சில. அவற்றில் அவருடைய தகப்பனாரின் திரைப்படக் கருவியும் குடும்பத் திரைப்படச் சுருள்களும் அடங்கும்.</p>



<p>ராஜிவ் தம்முடைய தகப்பனாரின் தொழில் பட்டறையைக் கவனமாகவும் முறையாகவும் பராமரித்தார். பொறிகளையும் எந்திரங்களையும் பழுது பார்ப்பதிலும் சுத்தம் செய்வதிலும் அதனைப் பொருத்துவதிலும் ராஜிவுக்கு ஆர்வம் மிகுதி. சில சமயங்களில் வீட்டுப் பொருள்களில் ஏதாவது ஒன்றை நான் தேடும்போது, அது அவருடைய ‘பணிமனை&#8217;யில் காணப்படும்.</p>



<p>எங்கள் மணவாழ்க்கையின் தொடக்க நாள்கள் முதலே, இசையும் புகைப்படக் கலையும் முக்கியப் பங்கு வகித்தன. கீழ்த் திசை மற்றும் மேற்கத்திய இசை ஆகிய இரண்டிலுமே எங்களுக்கு மிகுந்த ஈடுபாடு இருந்தது. தரமான ஒலி, இந்திய இசை ஆகியவற்றில் சீரிய ஆர்வம் காரணமாக ராஜிவ் தாமே பல சிறந்த இசைக் கலைஞர்களின் பாடல்களை ஒலிப்பதிவு செய்வார். சிறப்பாக, ஜாஸ் எனப்படும் ஒருவகை இசையை அவர் விரும்பிக் கேட்பார். சில சமயங்களில் ‘பாப்&#8217; இசையையும் ரசிப்பார். பல ஆண்டுகளாக அவர் தமக்கு விருப்பமான இசைப் பாடல்களைச் சேர்த்து வைத்தார். அந்தப் பாடல் தொகுப்பை எல்லாம் கவனத்துடன் பாதுகாத்தார். தம்மைப் போலவே பிறரும் அவற்றைக் கவனமாகக் கையாள்வார்கள் என்ற நம்பிக்கை ஏற்பட்டாலொழிய, யாரையும் தம் இசைக் கருவியையோ அல்லது இசைத்தட்டுக்களையோ தொட அனுமதிக்க மாட்டார்.</p>



<p>தம்மிடம் உள்ள புகைப்படங்களிலும் இசைத் தகடுகளிலும் அவருக்கு அளவற்ற ஈடுபாடு காணப்பட்டது. பாரம்பரிய ஒழுங்குமுறையில் அவற்றைப் பட்டியலிட்டுப் பேணிக் காத்து வந்தார். தம் குழந்தைகளையும் புகைப்படம் எடுக்கும் கலைத்துறையில் ஈடுபாடுகொள்ள ஊக்குவித்தார்.</p>



<p class="has-text-align-right"><em>… மீண்டும் அடுத்த ஞாயிறு தொடரும்</em></p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/my-rajiv-by-sonia-gandhi-2/">என் ராஜிவ்! … சோனியா காந்தி எழுதிய தொடர் &#8211; 2</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://desiyamurasu.com/news-india/my-rajiv-by-sonia-gandhi-2/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>&#8221;இந்திராதான் இந்தியா; இந்தியாதான் இந்திரா&#8221;: இரும்புப் பெண்ணின் வரலாற்றுச் சாதனை</title>
		<link>https://desiyamurasu.com/news-india/achievements-of-indira-gandhi/</link>
					<comments>https://desiyamurasu.com/news-india/achievements-of-indira-gandhi/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[ஆ. கோபண்ணா]]></dc:creator>
		<pubDate>Wed, 18 Nov 2020 19:00:32 +0000</pubDate>
				<category><![CDATA[தேசிய அரசியல்]]></category>
		<category><![CDATA[Achievements of Indira Gandhi]]></category>
		<category><![CDATA[indira gandhi]]></category>
		<guid isPermaLink="false">https://desiyamurasu.com/?p=3099</guid>

					<description><![CDATA[<p>நவம்பர் 19: அன்னை இந்திரா காந்தி அவர்களின் 103வது பிறந்த நாள் சிறப்பு கட்டுரை &#8211; படித்து பகிர்விர் ! ராஜதந்திரி, அரசியல்வாதி மற்றும் பண்டித ஜவஹர்லால் நேருவின் மகள் என பன்முகத்தன்மை கொண்டவர் இந்திரா காந்தி. லால் பகதூர் சாஸ்திரி மறைவுக்குப்பின் இந்தியாவின் பிரதமரானவர். 1967-1971, 1971-1977 மற்றும் 1980-1984 ஆண்டு அவர் படுகொலை செய்யப்படும் வரை 3 முறை பிரதமராகப் பதவி வகித்தவர். இன்று வரை இந்தியாவின் முதல் மற்றும் ஒரே பெண் பிரதமர் [&#8230;]</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/achievements-of-indira-gandhi/">&#8221;இந்திராதான் இந்தியா; இந்தியாதான் இந்திரா&#8221;: இரும்புப் பெண்ணின் வரலாற்றுச் சாதனை</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p><em><span class="has-inline-color has-vivid-red-color"><strong>நவம்பர் 19: அன்னை இந்திரா காந்தி அவர்களின் 103வது பிறந்த நாள் சிறப்பு கட்டுரை &#8211; படித்து பகிர்விர் !</strong></span></em></p>



<p>ராஜதந்திரி, அரசியல்வாதி மற்றும் பண்டித ஜவஹர்லால் நேருவின் மகள் என பன்முகத்தன்மை கொண்டவர் இந்திரா காந்தி. லால் பகதூர் சாஸ்திரி மறைவுக்குப்பின் இந்தியாவின் பிரதமரானவர். 1967-1971, 1971-1977 மற்றும் 1980-1984 ஆண்டு அவர் படுகொலை செய்யப்படும் வரை 3 முறை பிரதமராகப் பதவி வகித்தவர். இன்று வரை இந்தியாவின் முதல் மற்றும் ஒரே பெண் பிரதமர் என்ற பெருமையைப் பெற்றவர். நேருவுக்குப் பிறகு இந்தியாவின் பிரதமராக 17 ஆண்டுகள் பணியாற்றியவர்.</p>



<p>1975-77 ஆம் ஆண்டில் அவசரநிலை பிரகடனத்தை அமல்படுத்தியதன் மூலம் இரும்புப் பெண்மணியாக உருவெடுத்தார்.</p>



<p>காந்தி என்ற பெயர் அவரது குடும்பத்துடன் நெருக்கமாக இருந்த மகாத்மா காந்தியால் வந்ததல்ல. தெற்கு குஜராத் பாருச் நகரைச் சேர்ந்த பெரோஸ் காந்தியைத் திருமணம் செய்து கொண்டபின் இந்திராவுடன் காந்தி என்ற பெயரும் சேர்ந்து கொண்டது.</p>



<p>அவரது அதிகாரப் பகிர்வு உள்ளிட்ட அவரது கொள்கைகள் பல நேரங்களில் கடுமையாக இருந்திருக்கின்றன.</p>



<p>எனினும், இந்தியாவின் வளர்ச்சிக்காக இந்திரா காந்தி ஆற்றிய பங்கெடுப்பு இன்றும் நினைவுகூரப்படுகிறது. உள்நாடு மற்றும் வெளிநாட்டுக் கொள்கைகளிலும் அவரது சிறந்த செயல்பாடுகள் வெளிப்பட்டிருக்கின்றன. இந்திய அரசியல் வரலாறு மற்றும் அரசியலில் இந்திரா காந்தியின் பெயர் தொடர்ந்து நிலைத்திருக்கும் வகையில் பணியாற்றியிருக்கிறார்.</p>



<p>இந்தியாவின் பிரதமராக இந்திரா காந்தியின் சாதனைகள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன…</p>



<h4 class="wp-block-heading"><span class="has-inline-color has-vivid-red-color"><strong>பசுமைப் புரட்சி</strong></span></h4>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large"><img loading="lazy" decoding="async" width="400" height="393" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/11/Green-Revolution-when-dwarfs-stood-tall-2019-Nov-21-19-29-03-general.jpeg" alt="" class="wp-image-3131" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/11/Green-Revolution-when-dwarfs-stood-tall-2019-Nov-21-19-29-03-general.jpeg 400w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/11/Green-Revolution-when-dwarfs-stood-tall-2019-Nov-21-19-29-03-general-300x295.jpeg 300w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/11/Green-Revolution-when-dwarfs-stood-tall-2019-Nov-21-19-29-03-general-75x75.jpeg 75w" sizes="auto, (max-width: 400px) 100vw, 400px" /></figure></div>



<p>இந்தியா தொன்று தொட்டே விவசாயப் பொருளாதாரம் சார்ந்த நாடாகும். கிராமங்களில் வாழும் பெரும்பாலான மக்கள் விவசாயத்தைச் சார்ந்தே உள்ளனர். பசி, பட்டினி, வறுமை, வேலையில்லா திண்டாட்டப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண, உணவு தானிய உற்பத்தியை அதிகரிக்கச் செய்வதே சுதந்திர இந்தியாவின் பிரதமர்களின் முக்கிய நோக்கமாக இருந்தது.</p>



<p>5 ஆண்டுத் திட்டங்கள் மூலம் நேரு மற்றும் சாஸ்திரி அரசுகள் கொள்கைகளை வகுத்து உணவு தானிய உற்பத்தியை அதிகரித்தன.</p>



<p>அப்போது இந்தியாவின் முக்கிய நட்பு நாடாக அமெரிக்கா இருந்தது. இந்தியத் தலைவர்களுக்கும், அவர்களது கொள்கைகளுக்கும் அப்போதை அமெரிக்க அதிபர் கென்னடி ஆதரவாக இருந்தார். கென்னடி மறைவுக்குப் பிறகு, 1969 ஆம் ஆண்டு நிக்சன் அதிபரான பிறகு இந்திய-அமெரிக்க உறவுகளில் சரிவு ஏற்பட்டது.</p>



<p>இதன்பின்னர், லிங்கன் பி. ஜான்சன் அதிபரானதும், அமெரிக்காவுக்கு இந்திரா காந்தி பயணம் மேற்கொண்டார். அப்போது, ஜான்சனை இந்திரா காந்தி பெரிதும் கவர்ந்தார். அமெரிக்காவிடம் இருந்து மேலும் உணவு மற்றும் வளர்ச்சிக்கான உதவியை அமெரிக்காவிடமிருந்து பெற இந்திரா காந்தியின் பயணம் வழி ஏற்படுத்தியது. எனினும், அதன்பிறகு, இரு நாடுகளுக்கிடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. உபரி உணவு தானியங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் மாற்றம் செய்து அதிபர் ஜான்சன் கொண்டு வந்த பொதுச் சட்டம் 480, இந்த விரிசலுக்குக் காரணமானது. அதன்பிறகு, வியட்நாமுடன் நடந்த போரில் ஆதரவு அளிக்க மறுத்த இந்தியாவின் நிலையும் அமெரிக்காவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.</p>



<p>இதன் விளைவாக, அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு வந்து கொண்டிருந்த முக்கிய உணவு தானியங்கள் நிறுத்தப்பட்டன. இதனால், நாட்டில் உணவு பற்றாக்குறை ஏற்பட்டது. இந்த சமயத்தில்தான், நார்மன் போர்லாக்கின் பசுமைப் புரட்சிக் கொள்கையை இந்திரா காந்தி அரசு கையில் எடுத்தது.</p>



<p>விவசாயத்தை தொழிற்துறைக்கு மாற்றி, அதிக மகசூல் தரும் விதைகள் போன்ற நவீன முறைகள் கையாளப்பட்டன. பூச்சிக் கொல்லி மருந்துகள், உரம் மற்றும் ட்ராக்டர்கள், நீர்ப்பாசன வசதிக்கான கருவிகள் என நவீனத் தொழில்நுட்பங்கள் பயன்படுத்திக் கொள்ளப்பட்டன.</p>



<h4 class="wp-block-heading"><span class="has-inline-color has-vivid-red-color"><strong>வங்கிகள் தேசியமயம்</strong></span></h4>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large"><img loading="lazy" decoding="async" width="800" height="510" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/11/70284970.jpg" alt="" class="wp-image-3132" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/11/70284970.jpg 800w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/11/70284970-300x191.jpg 300w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/11/70284970-768x490.jpg 768w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/11/70284970-750x478.jpg 750w" sizes="auto, (max-width: 800px) 100vw, 800px" /></figure></div>



<p>கடந்த 1969 ஆம் ஆண்டு ஜூலை 19 ஆம் தேதி அவசரச் சட்டம் மூலம் 14 தனியார் வங்கிகளை தேசியமயமாக்கினார். வங்கி நிறுவனங்களின் அவசரச்சட்டம் (கையகப்படுத்துதல் மற்றும் மத்திய அரசின் கீழ் மாற்றுவது)என்ற பெயரிடப்பட்டது.</p>



<p>இதன்மூலம், 14 பெரும் வர்த்தக தனியார் வங்கிகளிடம் இருந்த நாட்டின் 70 சதவீத முதலீடு மத்திய அரசுக்குத் திருப்பிவிடப்பட்டது.</p>



<p>கடந்த 1947 முதல் 1955 வரை தொடங்கப்பட்ட 361 வங்கிகள் தோல்வியடைந்த நிலையில், கணிக்க முடியாத நிலையில் இந்த வங்கிகள் செயல்பட்டதுதான் தேசிய மயமாக்கப்பட்டதற்கு முதல் காரணம். எந்த உத்தரவாதமும் இல்லாததால், பணம் போட்டவர்கள் இழப்பைச் சந்திக்கும் சூழல் ஏற்பட்டதால், இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.</p>



<p>தொழிற்துறை மற்றும் வியாபாரிகளின் மீது மட்டும் கவனம் செலுத்தி, விவசாயத் துறையை இந்த வங்கிகள் கண்டுகொள்ளாதது மற்றொரு காரணம். 1950 முதல் 1967 வரை விவசாயிகளுக்கு அளிக்கப்பட்ட கடன் விகிதம் 2.3 சதவீதத்திலிருந்து 2.2 சதவீதமாகக் குறைந்ததும் மற்றொரு காரணம்.</p>



<p>வங்கிகளை தேசியமயமாக்கிய இந்த அவசரச் சட்டம், முதன்மை துறைகள், விவசாயம், சிறு தொழில்கள், சிறு வர்த்தகர்கள் மற்றும் தொழில் முனைவோர் எளிதாகக் கடன் பெற உதவியது. அதைவிட, இந்த அவசரச் சட்டத்தின் மூலம் கிராமப் புறங்களிலும் பின்தங்கிய பகுதிகளிலும் புதிதாக வங்கிகளை அமைக்க வழிவகுத்தது.</p>



<h4 class="wp-block-heading"><span class="has-inline-color has-vivid-red-color"><strong>1971 இந்திய-பாக் போர்</strong></span></h4>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large"><img loading="lazy" decoding="async" width="1024" height="639" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/11/TH22RDINDIRA1-1024x639.jpg" alt="" class="wp-image-3133" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/11/TH22RDINDIRA1-1024x639.jpg 1024w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/11/TH22RDINDIRA1-300x187.jpg 300w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/11/TH22RDINDIRA1-768x479.jpg 768w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/11/TH22RDINDIRA1-750x468.jpg 750w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/11/TH22RDINDIRA1-1140x712.jpg 1140w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/11/TH22RDINDIRA1.jpg 1200w" sizes="auto, (max-width: 1024px) 100vw, 1024px" /></figure></div>



<p>1971 ஆம் ஆண்டு மார்ச் 25 ஆம் தேதி இரவு பாகிஸ்தான் (அப்போது மேற்கு பாகிஸ்தான்) கிழக்கு பாகிஸ்தான் (இன்றைய வங்கதேசம்) மீது ஆபரேஷன் சர்ச்லைட் என்ற பெயரில் தாக்குதலை நடத்தியது. அதன்மூலம் வங்காள மக்கள், மாணவர்கள், சிறுபான்மை மதத்தினர் மற்றும் ஆயுதப் படையினரை வெளியேற வைத்தது. பாகிஸ்தான் ராணுவக் குழு 1970 தேர்தல் முடிவுகளை ரத்து செய்து, பிரதமர் ஷேக் முஜிபுர் ரஹ்மானை கைது செய்தது.</p>



<p>1970 தேர்தலுக்குப் பிறகு ஏற்பட்ட உள்நாட்டு ஒத்துழையாமையை அடக்கக் கிழக்கு பாகிஸ்தானின் கிராமப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் விரிவான ராணுவ நடவடிக்கைகள் மற்றும் வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.</p>



<p>உள்ளூர் மக்களைச் சோதனை செய்ய பாகிஸ்தான் ராணுவத்துக்குத் தீவிரவாதிகள் உதவினர். வெகுஜனக் கொலைகள், நாடு கடத்தல், இனப் படுகொலை மற்றும் பாலியல் வன்கொடுமைகள் அரங்கேறின.</p>



<p>அதனால், கிழக்கு பாகிஸ்தானிலிருந்து தப்பித்த 1 கோடி பேர் அகதிகளாக இந்தியாவுக்கு வந்தனர். 3 கோடி பேர் இடம்பெயர்ந்தனர். முஜிப்நகரில் வங்கதேச மாகாண அரசு உருவாக்கப்பட்டு, கல்கத்தாவுக்கு நாடு கடத்தப்பட்ட அரசாங்கமாகச் சென்றபோது, இந்தியா தற்காலிகமாகத் தஞ்சம் அளித்தது.</p>



<p>1971 ஆம் ஆண்டு டிசம்பர் 3 ம் தேதி வட இந்தியாவில் பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல் நடத்தியபோது, இந்தியா போரில் இறங்கியது. கிழக்குப் பாகிஸ்தானுக்குப் பிரதமர் இந்திரா காந்தி முழு ஆதரவு அளித்தார். அனைவரையும் அகதிகளாக ஏற்கும் போது ஏற்படும் செலவைவிட, மேற்கு பாகிஸ்தான் மீது போர் தொடுப்பது பொருளாதார ரீதியாகச் செலவைக் குறைக்கும் என்று இந்திரா காந்தி மதிப்பிட்டார். வங்கதேச படைகளுடன் இணைந்து இந்தியப் படைகள் நடத்திய தாக்குதலில் தாக்குப் பிடிக்க முடியாமல், 1971 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் தேதி டாகாவில் பாகிஸ்தான் சரணடைந்தது. இதனையடுத்து, 13 நாட்கள் நடந்த போர் முடிவடைந்தது.</p>



<p>1971 ஆம் ஆண்டு மார்ச் 26 ஆம் தேதி வங்கதேசத்துக்கு அதிகாரப்பூர்வ விடுதலை அளிக்கப்பட்டது. இதனையடுத்து, வங்கதேசத்தை அங்கீகரிக்க ஐ.நா. சபையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனா வாக்களித்தது. மற்ற நாடுகள் அனைத்தும் வங்கதேசத்துக்கு ஆதரவாக வாக்களித்தன.</p>



<h4 class="wp-block-heading"><span class="has-inline-color has-vivid-red-color"><strong>சிம்லா ஒப்பந்தம்</strong></span></h4>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img loading="lazy" decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/11/19d715412a29a6f3ffbcd6ce79a6a3a5_1.jpg" alt="" class="wp-image-3134" width="545" height="545" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/11/19d715412a29a6f3ffbcd6ce79a6a3a5_1.jpg 640w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/11/19d715412a29a6f3ffbcd6ce79a6a3a5_1-300x300.jpg 300w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/11/19d715412a29a6f3ffbcd6ce79a6a3a5_1-150x150.jpg 150w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/11/19d715412a29a6f3ffbcd6ce79a6a3a5_1-75x75.jpg 75w" sizes="auto, (max-width: 545px) 100vw, 545px" /></figure></div>



<p>1971 ஆம் ஆண்டு இந்திய-பாகிஸ்தான் போருக்குப் பின், வங்கதேச விடுதலைக்குப் பிறகு, இமாச்சலப்பிரதேசம் சிம்லாவில் இந்திய-பாகிஸ்தான் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. அந்த ஒப்பந்தத்தில் அன்றைய பாகிஸ்தான் பிரதமர் ஜுல்பிகர் அலி பூட்டோ மற்றும் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி ஆகியோர் கையெழுத்திட்டனர். வங்கதேசத்துக்கு ராஜ்ய ரீதியிலான அங்கீகாரத்தைப் பாகிஸ்தான் அளிக்க இந்த ஒப்பந்தம் வழி ஏற்படுத்தியது.</p>



<p>இந்த ஒப்பந்தத்தின் மூலம், இரு தரப்பினரும் அமைதியான முறையில் மற்றும் ராஜ்ய ரீதியிலான முறையில் கருத்துவேறுபாடுகளைக் களைந்து கொள்வதென, இரு தரப்பிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. 1972 ஆம் ஆண்டு சிம்லா ஒப்பந்தத்தின் அடிப்படையில், காஷ்மீர் பிரச்சினை ராஜ்ய ரீதியில் தீர்வு காண்பது என்று முடிவு செய்யப்பட்டது. மேலும், காஷ்மீர் விவகாரத்தில் ஐ.நா தவிர மூன்றாவது நாடு ஏதும் குறுக்கிட இந்தியா அனுமதிக்க மறுத்துவிட்டது.</p>



<p>இந்த ஒப்பந்தத்தின்படி, 1971 ஆம் ஆண்டு டிசம்பர் 17 ம் தேதி, போர் நிறுத்தக் கோடு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான கட்டுப்பாட்டுக் கோடாக (எல்ஓசி) மாற்றப்பட்டது. பரஸ்பர வேறுபாடுகள் மற்றும் சட்ட விளக்கங்களைப் பொருட்படுத்தாமல், ஒருதலைபட்சமாக அதை மாற்ற இரு தரப்பினரும் ஒத்துக் கொள்ள மாட்டார்கள் என ஒப்புக்கொள்ளப்பட்டது.</p>



<h4 class="wp-block-heading"><span class="has-inline-color has-vivid-red-color"><strong>மன்னர் மானியம் ஒழிப்பு</strong></span></h4>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large"><img loading="lazy" decoding="async" width="459" height="640" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/11/2011_628_628_raghu_1_1.jpg" alt="" class="wp-image-3135" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/11/2011_628_628_raghu_1_1.jpg 459w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/11/2011_628_628_raghu_1_1-215x300.jpg 215w" sizes="auto, (max-width: 459px) 100vw, 459px" /></figure></div>



<p>அரசியல் சாசனத்தில் 26 ஆவது சட்டத்திருத்தம் கொண்டு வந்து மன்னர் மானியம் ஒழிக்கப்பட்டது. அரசுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் 1947 ஆம் ஆண்டு முதல் மன்னர்களுக்கு மானியம் வழங்கப்பட்டு வந்தது. அதன்பிறகு, 1949 ஆம் ஆண்டு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு, மன்னர் ராஜ்யங்கள் மாநிலங்களுடன் இணைக்கப்பட்டன. கடந்த 1969 ஆம் ஆண்டு இது தொடர்பான சட்டம் மக்களவையில் நிறைவேறியது. ஆனால், மாநிலங்களவையில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் இந்த மசோதா தோற்றுப் போனது. இதன்பிறகு, 1971 ஆம் ஆண்டு 26 ஆவது சட்டத்திருத்தம் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு, மன்னர் மானியம் ரத்து செய்யப்பட்டது. எல்லா குடிமக்களுக்கான சரிசமமான உரிமைகள் அடிப்படையிலும், அரசின் வருவாய் பற்றாக்குறையைக் குறைக்கும் வகையிலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.</p>



<h4 class="wp-block-heading"><span class="has-inline-color has-vivid-red-color"><strong>ஆபரேஷன் புத்தர் புன்னகை </strong></span></h4>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large"><img loading="lazy" decoding="async" width="660" height="500" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/11/Pokhran-I-Indira-Gandhi-Site-Visit.jpg" alt="" class="wp-image-3136" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/11/Pokhran-I-Indira-Gandhi-Site-Visit.jpg 660w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/11/Pokhran-I-Indira-Gandhi-Site-Visit-300x227.jpg 300w" sizes="auto, (max-width: 660px) 100vw, 660px" /></figure></div>



<p>ஆபரேஷன் புத்தர் புன்னகை என்ற பெயரில் கடந்த 1974 ஆம் மே 18 ஆம் தேதி இந்தியாவின் முதல் அணுகுண்டு சோதனை நிகழ்த்தப்பட்டது. கடந்த 1972 ஆம் ஆண்டு மும்பை பாபா அணு ஆராய்ச்சி நிலையத்துக்கு வந்த பிரதமர் இந்திரா காந்தி, அணுகுண்டு சோதனைக்கான பணியைத் தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.</p>



<p>அணுகுண்டு தயாரிப்பில் பொறியியல் மற்றும் பரிசோதனை குறித்த வளர்ச்சி நடவடிக்கையும் முடிவு எடுக்கும் நடவடிக்கையும் உள்ளடக்கியிருக்கிறது. இந்த அணுகுண்டு ராஜஸ்தானில் உள்ள பொக்ரான் ராணுவ தளத்தில் பரிசோதிக்கப்பட்டது. இதில் முக்கிய ராணுவ தளபதிகள் பங்கேற்றனர். பொக்ரான் 1 என்று அழைக்கப்பட்ட முதல் அணுகுண்டு சோதனைக்குப் புத்தரின் புன்னகை என்று பெயரிடப்பட்டது. இந்த சோதனையை ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் 5 நிரந்தர உறுப்பினர்களும் உறுதி செய்தனர். இந்த அணுகுண்டு சோதனையை அமைதியான அணுகுண்டு வெடிப்பு என்று குறிப்பிட்ட இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்,அணுத் திட்டங்களுக்கு இது உண்மையிலேயே உந்துதலாக இருக்கும் என்று அறிவித்தது.</p>



<h4 class="wp-block-heading"><span class="has-inline-color has-vivid-red-color"><strong>முதல் விண்வெளிப் பயணம் </strong></span></h4>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large"><img loading="lazy" decoding="async" width="970" height="545" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/11/218939-rakesh-sharma485.jpg" alt="" class="wp-image-3137" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/11/218939-rakesh-sharma485.jpg 970w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/11/218939-rakesh-sharma485-300x169.jpg 300w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/11/218939-rakesh-sharma485-768x432.jpg 768w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/11/218939-rakesh-sharma485-750x421.jpg 750w" sizes="auto, (max-width: 970px) 100vw, 970px" /></figure></div>



<p>இந்திரா காந்தி ஆட்சியில் முதன் முறையாக விண்வெளிக்கு மனிதர்கள் அனுப்பப்பட்டனர். இந்திய விமானப் படையின் முன்னாள் பைலட் ராகேஷ் சர்மா கடந்த 1984 ஆம் ஆண்டு ஏப்ரல் 2 ஆம் தேதி இன்டெர்கோஷ்மாஸ் திட்டத்தின் ஒரு பகுதியாக, சோயுஸ் டி-11 விண்கலத்தில் விண்வெளிக்குப் பறந்த முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்.</p>



<p>இன்டெர்கோஸ்மாஸ் என்பது சோவியத் விண்வெளித் திட்டமாகும். சோவியத் ஒன்றியத்தின் ஒத்துழைப்புடன் இந்தியா விண்வெளிப் பயணத்தை மேற்கொண்டது. விண்வெளியில் சர்மா 7 நாட்கள் 40 நிமிடங்களைக் கழித்தார். அவருடன் சோவியத் ஒன்றியத்தின் 2 வீரர்களும் சென்றனர். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வுகள் உள்ளிட்ட 43 ஆய்வுகளை இந்த குழுவினர் விண்வெளியில் நடத்தினர்.</p>



<p>விண்வெளியிலிருந்து திரும்பியதும், சோவியத் ஒன்றியத்தின் கதாநாயகன் என்ற விருதை வழங்கி ராகேஸ் சர்மா கவுரவிக்கப்பட்டார். அவருக்கும் உடன் சென்ற 2 சோவியத் ஒன்றிய வீரர்களுக்கும் நாட்டின் உயர்ந்த விருதான அசோக் சக்ரா விருதை வழங்கி இந்தியா கவுரவித்தது.</p>



<h4 class="wp-block-heading"><span class="has-inline-color has-vivid-red-color"><strong>ஆபரேஷன் ப்ளூ ஸ்டார்</strong></span></h4>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large"><img loading="lazy" decoding="async" width="1024" height="768" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/11/operation-blue-star1-1527817048-1024x768.jpg" alt="" class="wp-image-3138" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/11/operation-blue-star1-1527817048-1024x768.jpg 1024w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/11/operation-blue-star1-1527817048-300x225.jpg 300w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/11/operation-blue-star1-1527817048-768x576.jpg 768w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/11/operation-blue-star1-1527817048-750x563.jpg 750w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/11/operation-blue-star1-1527817048-1140x855.jpg 1140w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/11/operation-blue-star1-1527817048.jpg 1200w" sizes="auto, (max-width: 1024px) 100vw, 1024px" /></figure></div>



<p>கடந்த 1984 ஆம் ஆண்டு ஜூன் 1 மற்றும் 8 ஆம் தேதிகளில், பஞ்சாப் அமிர்தசரஸில் பொற்கோயில் அமைந்துள்ள ஹர்மந்திர் சாஹிப் காம்ப்ளக்ஸில் சீக்கிய தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையைப் பிரதமர் இந்திரா காந்தி முடுக்கிவிட்டார். ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் என்று பெயரிடப்பட்ட இந்த ராணுவ நடவடிக்கை பெரிய நடவடிக்கையாகப் பார்க்கப்பட்டது.</p>



<p>சீக்கியர்களுக்குத் தனி நாடு கேட்டு காலிஸ்தான் இயக்கம் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தது. 1940 களில் தொடங்கப்பட்ட இந்த இயக்கம், 70 &#8211; களிலும் 80 &#8211; களிலும் வளர்ச்சியடைந்தது.</p>



<p>ஆப்பரேஷன் ப்ளூ ஸ்டார் நடவடிக்கைக்கு தமதாமி தக்சால் தலைவர் ஜர்னாய்ல் சிங் பிந்தரன்வாலே முக்கிய காரணமாக இருந்தார். இளைஞர்கள் மத்தியில் பிரசித்தி பெற்றவராக விளங்கிய பிந்தரன்வாலே, தனி நாடு போராட்டத்துக்கு மக்களைத் திரட்டிக் கொண்டிருந்தார். பொற்கோயில் வளாகத்தில் தஞ்சம் அடைந்த அவர்களை அப்புறப்படுத்தும் வகையிலேயே இந்த ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில் ஏற்பட்ட மோதலில் 83 ராணுவ வீரர்கள், 493 மக்கள் உள்ளிட்ட 575 பேர் கொல்லப்பட்டனர் என அரசு தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. தீவிரவாதத்துக்கு எதிரான இந்திரா காந்தியின் இந்த அதிரடி நடவடிக்கையே, 1984 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதி தமது பாதுகாவலர்கள் சத்வந்த் சிங் மற்றும் பியாந்த் சிங் ஆகியோராலேயே பிரதமர் இந்திரா காந்தி படுகொலை செய்யப்படுவதற்குக் காரணமாகிப் போனது.</p>



<h4 class="wp-block-heading"><span class="has-inline-color has-vivid-red-color"><strong>வெளிநாட்டுக் கொள்கை </strong></span></h4>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large"><img loading="lazy" decoding="async" width="425" height="640" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/11/1200px-President_Ronald_Reagan_walking_with_Prime_Minister_Indira_Gandhi_of_India_1.jpg" alt="" class="wp-image-3140" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/11/1200px-President_Ronald_Reagan_walking_with_Prime_Minister_Indira_Gandhi_of_India_1.jpg 425w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/11/1200px-President_Ronald_Reagan_walking_with_Prime_Minister_Indira_Gandhi_of_India_1-199x300.jpg 199w" sizes="auto, (max-width: 425px) 100vw, 425px" /><figcaption><strong>President Ronald Reagan walking with Prime Minister Indira Gandhi of India</strong></figcaption></figure></div>



<p>இந்திரா காந்தியின் ஆட்சியின் வெளிநாட்டுக் கொள்கை, தெற்காசியாவில் இந்தியாவை அதிகாரமிக்க நாடாக உயர்த்தியது.</p>



<p>இந்திய-வங்கதேச போருக்குப் பிந்தைய வெற்றி, தெற்காசியாவில் இந்தியாவின் ஆதிக்கத்தை அதிகப்படுத்தியது. அதேசமயம், போருக்குப் பின் செய்து கொண்ட ஒப்பந்தமும், பாகிஸ்தானுடனான உறவை இயல்பு நிலைக்குக் கொண்டு வர உதவியது.</p>



<p>வியட்நாம் மீது அமெரிக்கா போர் தொடுத்ததை எதிர்த்த இந்தியா, சோவியத் ஒன்றியத்துடன் நட்புறவு கொண்டது சிறந்த வெளிநாட்டுக் கொள்கையாக இன்றும் பார்க்கப்படுகிறது. பாலஸ்தீனத்துடனான இஸ்ரேல் மோதலில், இஸ்ரேலுக்கு எதிராக இந்திரா இருந்தார். பின்னர் இஸ்ரேலின் ஆதரவாளராக மாறினார்.</p>



<h4 class="wp-block-heading"><span class="has-inline-color has-vivid-red-color"><strong>துர்கா தேவி என்று அழைத்த வாஜ்பாய்</strong></span></h4>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large"><img loading="lazy" decoding="async" width="641" height="640" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/11/N78778_1.jpg" alt="" class="wp-image-3141" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/11/N78778_1.jpg 641w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/11/N78778_1-300x300.jpg 300w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/11/N78778_1-150x150.jpg 150w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/11/N78778_1-75x75.jpg 75w" sizes="auto, (max-width: 641px) 100vw, 641px" /></figure></div>



<p>உலகிலேயே மிகவும் பிரபலமான இந்தியத் தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் இந்திரா காந்தி. அவரது வலுவான நடவடிக்கைகள் சர்வதேச அளவில் இந்தியாவை அதிகாரமிக்க நாடு என்ற நிலைக்கு உயர்த்த வழி ஏற்படுத்தியது. பல அதிரடி நடவடிக்கைகளால் இந்திரா காந்தியை இரும்புப் பெண்மணி என்று அழைத்தனர். பாகிஸ்தானுக்கு எதிரான போரில் வெற்றி பெற்ற பின், இந்திரா காந்தியைக் கடவுளுக்கு இணையாகப் பல அரசியல் கட்சியினர் ஒப்பிட்டனர். அடல் பிஹாரி வாஜ்பாய் ஒருபடி மேலே போய், இந்திரா காந்தியை துர்கா தேவி என்று அழைத்தார்.<br>தன் மீது சர்ச்சைகள் இருந்தாலும், இந்தியா தான் இந்திரா, இந்திரா தான் இந்தியா என்பதை மக்கள் மனதில் ஆணித்தரமாக விதைத்துப் போயிருக்கிறார் இரும்புப் பெண்மணி இந்திரா காந்தி.</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/achievements-of-indira-gandhi/">&#8221;இந்திராதான் இந்தியா; இந்தியாதான் இந்திரா&#8221;: இரும்புப் பெண்ணின் வரலாற்றுச் சாதனை</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://desiyamurasu.com/news-india/achievements-of-indira-gandhi/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>நெருக்கடி நிலையும் இந்திரா காந்தியும்</title>
		<link>https://desiyamurasu.com/news-india/indira-gandhi-was-courage-personified/</link>
					<comments>https://desiyamurasu.com/news-india/indira-gandhi-was-courage-personified/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[ஆ. கோபண்ணா]]></dc:creator>
		<pubDate>Wed, 18 Nov 2020 17:27:08 +0000</pubDate>
				<category><![CDATA[தேசிய அரசியல்]]></category>
		<category><![CDATA[indira gandhi]]></category>
		<guid isPermaLink="false">https://desiyamurasu.com/?p=3118</guid>

					<description><![CDATA[<p>நவம்பர் 19: அன்னை இந்திரா காந்தி அவர்களின் 103வது பிறந்த நாள் சிறப்பு கட்டுரை &#8211; படித்து பகிர்விர் ! 1971ஆம் ஆண்டு தேர்தல் முடிந்தவுடன் இந்தியாவுக்குப் பெரிய சோதனையாக வங்கதேசக் குழப்பம் அமைந்தது. அதனால் இந்திரா காந்தி தன் முழு கவனத்தையும் செலுத்தி வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்ள முடியவில்லை. ஒரு கோடிக்கும் மேற்பட்ட அகதிகளைச் சமாளிக்கவேண்டிய பொறுப்பும், ஒரு லட்சம் பாகிஸ்தானிய போர்க் கைதிகளைத் திருப்பி அனுப்பும் வரை பராமரிக்கும் பொறுப்பும் ஏற்பட்டது. இந்தியா மேற்கொண்ட [&#8230;]</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/indira-gandhi-was-courage-personified/">நெருக்கடி நிலையும் இந்திரா காந்தியும்</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p><strong><em><span class="has-inline-color has-vivid-red-color">நவம்பர் 19: அன்னை இந்திரா காந்தி அவர்களின் 103வது பிறந்த நாள் சிறப்பு கட்டுரை &#8211; படித்து பகிர்விர் !</span></em></strong></p>



<p>1971ஆம் ஆண்டு தேர்தல் முடிந்தவுடன் இந்தியாவுக்குப் பெரிய சோதனையாக வங்கதேசக் குழப்பம் அமைந்தது. அதனால் இந்திரா காந்தி தன் முழு கவனத்தையும் செலுத்தி வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்ள முடியவில்லை. ஒரு கோடிக்கும் மேற்பட்ட அகதிகளைச் சமாளிக்கவேண்டிய பொறுப்பும், ஒரு லட்சம் பாகிஸ்தானிய போர்க் கைதிகளைத் திருப்பி அனுப்பும் வரை பராமரிக்கும் பொறுப்பும் ஏற்பட்டது. இந்தியா மேற்கொண்ட போர் நடவடிக்கைகளால் ரானுவச் செலவு அதிகரித்தது. அந்நியச் செலாவணி கையிருப்பு வேகமாகக் கரைந்தது. நாட்டின் பல பகுதிகளில் விலைவாசி உயர்வும் அதிருப்தியும் வளர்ந்தது. பல நகரங்களில் உணவுக்காகக் கலகம் தொடங்கியது. மாணவர்கள் கிளர்ந்தெழுந்து போராடத் தொடங்கினார்கள்.</p>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large"><img loading="lazy" decoding="async" width="621" height="414" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/11/indira_radhakrishnan.jpg" alt="" class="wp-image-3128" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/11/indira_radhakrishnan.jpg 621w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/11/indira_radhakrishnan-300x200.jpg 300w" sizes="auto, (max-width: 621px) 100vw, 621px" /></figure></div>



<p>1973ஆம் ஆண்டு மத்திய கிழக்கு நாடுகள் பெட்ரோல் விலையைக் கடுமையாக உயர்த்தியதால், இந்தியப் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. ஒருசில மாதங்களில் இருபது சதவிகிதத்துக்கும் மேலாகச் சகல உணவுப் பொருட்களின் விலையும் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் ஏறியது. நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் பெரும் தோல்வியைச் சந்தித்த எதிர்க்கட்சிகள் இந்தச் சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள முயன்றன. எல்லா வலதுசாரி கட்சிகளும் ஒன்றுசேர்ந்து போராட்டத்தில் இறங்கின. விலைவாசி ஏற்றத்தால் தொழில் அமைதி கெட்டது. பல தொழிற்சாலைகளில் நீண்ட நாட்கள் வேலை நிறுத்தம் நடந்தது. 1974ஆம் ஆண்டில் மிகப் பெரிய ரயில்வே வேலை நிறுத்தம் நடைபெற்றது.</p>



<p>காங்கிரஸ் கட்சி ஸ்தாபன ரீதியாகப் பலமிழந்து கிடந்ததால், மக்களின் அதிருப்தியைச் சமாளிக்க முடியவில்லை. வங்கதேசப் பிரச்சினையில் பெற்ற வெற்றியைக்கொண்டு அரசாங்கத்தின் பெருமையைக் காப்பாற்ற முடியாத சூழல் ஏற்பட்டது.</p>



<p>ஏழை எளிய மக்கள் ஆதரவளித்தபோதும், மத்தியதர வர்க்கம் படிப்படியாகக் கட்சியைவிட்டு விலகத் தொடங்கியது. வகுப்புவாத மற்றும் சாதீய கருத்துக்களின் அடிப்படையில் வளர்ந்த மாநிலக் கட்சிகளும் பல மாநிலங்களில் வளரத் தொடங்கின.</p>



<p>இந்த நிலையில்தான், 1974ஆம் ஆண்டு ஜனவரியில் குஜராத் மாநிலத்தில் விலைவாசி உயர்வை எதிர்த்து நடைபெற்ற இயக்கம் தீவிரமாக வளர்ந்து நாடெங்கும் பரவும்நிலை ஏற்பட்டது. கோரிக்கைகள் புதிய உருவம் பெறத் தொடங்கின. மாநில சட்டசபையைக் கலைக்கக் கோரி மக்கள் கோஷம் போட்டனர். கிளர்ச்சியின் கடுமை காரணமாக மாநில அரசாங்கம் பதவி விலகியது. சட்டசபையைக் கலைத்துவிட்டு மறுதேர்தல் நடத்தக் கோரி உண்ணாவிரதம் தொடங்கியது. வன்முறை வளரும் அபாயம் இருந்ததால், சட்டமன்றம் கலைக்கப்பட்டு மறுதேர்தலுக்கு உத்தரவிடப்பட்டது.</p>



<p>தவறான முன்னுதாரணமாக அமைந்த குஜராத் சம்பவம் கொடுத்த நம்பிக்கை காரணமாக பீகார் மாநிலத்திலும் கிளர்ச்சி தொடங்கியது. மாணவர்கள் பெருமளவில் கலந்துகொண்ட பீகார் இயக்கம் தொடக்கத்தில் அமைதியாக இருந்தாலும், படிப்படியாக வன்முறையில் ஈடுபட்டது. பல்வேறு அரசியல் நோக்கம் கொண்டவர்கள் அதில் கலக்கத் தொடங்கினர். சோஷலிஸ்ட்களும் வகுப்புவாத இயக்கமான ஆர்.எஸ்.எஸ்ஸும் கைகோர்த்துக்கொண்டு செயல்பட்டன. சில முஸ்லிம் தீவிரவாதிகளும் அவர்களுடன் சேர்ந்தனர். மாணவர்களும் இளைஞர்களும் பல்வேறு கோரிக்கைகளுடன் களம் இறங்கியதால், தெளிவான பார்வை இல்லாமல் பல நல்ல உள்ளம் படைத்தவர்களும் இந்த இயக்கத்தை அனுதாபத்துடன் பார்க்கத் தொடங்கினார்கள்.</p>



<p>அரசியலைவிட்டு ஒதுங்கிவிட்டதாக அறிவித்துவிட்டு, பூதான இயக்கத்தில் ஈடுபட்டிருந்த ஜெயப்பிரகாஷ் நாராயண் பீகார் இயக்கத்துக்குத் தலைமை தாங்கத் தொடங்கியதும், நிலைமை மேலும் சீர்கெட்டது. நாட்டில் வளர்ந்துவிட்ட குழப்பான நிலைக்கு எதிராக முழுப்புரட்சி தொடங்க ஜெயப்பிரகாஷ் அறைகூவல் விட்டார். அவருக்கு இருந்த செல்வாக்கு காரணமாகவும், பொதுவாக<br>நாட்டில் நிலவிய அதிருப்தி நிறைந்த சூழல் காரணமாகவும் இயக்கம் வேகமாக வளரத் தொடங்கியது. அரசு இயந்திரத்தை முடக்கிப்போடும் வகையில் இயக்கம் செயல்படத் தொடங்கியது. ஜெயப்பிரகாஷ் நாராயண் இராணுவத்தையும் அரசாங்க ஊழியர்களையும் காவல்துறையினரையும் அரசாங்கத்தோடு ஒத்துழைக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.</p>



<p>தொடர்ந்து மோசமாகிக் கொண்டிருக்கும் நிலைமையைச் சமாளிக்க பிரதமர் கூறிய மாற்றுத் திட்டங்களையும் இயக்கத் தலைவர்கள் நிராகரித்தனர். இந்திரா காந்தியை பதவியிலிருந்து இறக்குவதுதான் ஒரே நோக்கம் என்பதை வெளிப்படையாகவே தலைவர்கள் பேசத் தொடங்கினார்கள். 1976ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் வரை பொறுத்திருக்கவும் ஜெயப்பிரகாஷ் நாராயண் தயாராக இல்லை.</p>



<p>1975ஆம் ஆண்டு ஜூன் மாதம், அலகாபாத் உயர்நீதி மன்றம், 1971ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இந்திரா காந்தி வெற்றிபெற்றது செல்லாது என்ற ஒரு தீர்ப்பைக் கொடுத்தது. இதனை மேல்முறையீடு செய்ய முயன்ற இந்திரா காந்தி, பதவி விலக நிர்ப்பந்தப்படுத்தப்பட்டார். இதை மறுத்த பிரதமர், நிலைமையைச் சமாளிக்க அதிரடியாக நாட்டில் நெருக்கடி நிலையைப் பிரகடனம் செய்தார்.</p>



<p>அரசியல் சட்ட விதிமுறைகளுக்குப் புறம்பாக, ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்தைக் கலைக்கக் கோரி வன்முறையில் இறங்கிய இயக்கத்தைக் கட்டுப்படுத்தவும் ஜனநாயக விதிமுறைகளைக் காக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டியதாயிற்று. அதனால் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் அரசியல் சட்ட விதிமுறையின்படி நெருக்கடிநிலை கொண்டுவரப்பட்டது.</p>



<p>ஜெயப்பிரகாஷ் நாராயண் உட்பட பல அரசியல் தலைவர்கள் கைதுசெய்யப்பட்டனர். பல சமூக விரோதிகளும் ஆனந்த மார்க்கத்தினரும் முஸ்லிம் தீவிரவாதிகளும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர் பலரும் கைது செய்யப்பட்டனர். ஜெயப்பிரகாஷ் நாராயணுடைய அரசியல் பின்னணி காரணமாகத் தொடக்கத்தில் பலர் பீகார் இயக்கத்தை ஆர்வத்துடன் கவனித்தபோதும், உண்மையில் அந்த இயக்கத்தில் அவருடைய தலைமையை முழுவதுமாக ஏற்றுக்கொண்டவர்கள் மட்டுமில்லை. பல அரசியல் நோக்கம் கொண்டவர்கள் சேர்ந்தனர்.</p>



<p>சென்ற 1971ஆம் ஆண்டு தேர்தலில் மோசமாகத் தோல்வியைச் சந்தித்த பல கட்சிகள் ஒருங்கினைந்தன. அவர்களுடைய கட்சிகளின் ஸ்தாபன பலம் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அளவுக்கு இல்லை. அவர்களுக்கு மத்தியில் நாடெங்கும் கிளைகள் கொண்டதும், ஸ்தாபன பலத்துடன் செயல்படும் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் சேர்ந்தது. வகுப்புவாத நோக்கம் கொண்ட அந்த இயக்கம், நாட்டின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் சிறுபான்மையினருக்கும் கேடுசெய்யும் தன்மைகொண்டதாலும், நாட்டைச் சீர்குலைக்கும் பாஸிச கொள்கை கொண்டதாலும் சில தீவிர நடவடிக்கைகள் தேவைப்பட்டன.</p>



<p>ஜெயப்பிரகாஷ் நாராயண் கொள்கைகளான முழுப்புரட்சி, கட்சிகளற்ற ஜனநாயகம் போன்ற கோஷங்கள் தெளிவற்றதாகவும் பலவகையில் குழப்பம் செய்யக்கூடியதாகவும் இருந்தது.</p>



<p>பெரும்பாலான தலைவர்கள் ஒருசில மாதங்களிலேயே விடுதலை செய்யப்பட்டனர். பல நகரங்களில் கருப்புப் பண வேட்டையும், பதுக்கலுக்கு எதிரான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. கள்ளச்சந்தைக்கு எதிரான தீவிர நடவடிக்கை தொடர்ந்தது. அலுவலகங்களில் அரசு ஊழியர்கள் மக்கள் குறையைக் கவனித்து நிவாரணம் செய்வது கவனித்துக்கொள்வது கடுமையானது. பல அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை தொடர்ந்தது. பலர் கட்டாய ஓய்வுகொடுத்து அனுப்பப்பட்டனர்.</p>



<p>மத்திய அரசங்கம் இருபது அம்சக் கொள்கையை அறிவித்தது. கிராமப் பொருளாதாரத்தை மேம்படுத்துவது, ஏழை மக்களுக்குக் குடியிருப்பு மனை பட்டா வழங்குவது போன்ற பல செயல் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. கீழ்த்தட்டு மக்களுடைய நீண்டநாள் பிரச்சினைகள் முதன்முதலாகத் தீவிரமாகக் கவனத்தில்கொண்ட பல நடவடிக்கைகள் தொடர்ந்தன.</p>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large"><img loading="lazy" decoding="async" width="599" height="579" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/11/D19y5oTWsAA-Dyw.jpg" alt="" class="wp-image-3127" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/11/D19y5oTWsAA-Dyw.jpg 599w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/11/D19y5oTWsAA-Dyw-300x290.jpg 300w" sizes="auto, (max-width: 599px) 100vw, 599px" /></figure></div>



<p>நெருக்கடிநிலை தேவையில்லாமல் நீடிக்கப்படுவதாக ஒரு எண்ணம் வளர்ந்தது. முக்கிய சமூக மாற்றங்களுக்கு வகைசெய்யும் நோக்கத்தோடு பல அரசியல் சட்டத் திருத்தங்கள் செய்யப்பட்டன. அறிவுஜீவிகளும் மத்தியதர வர்க்கமும் இதுபோன்ற அரசியல் மாற்றங்களைக் கண்டு அதிருப்தி அடையத் தொடங்கியது. பல அதிகாரிகள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தனர். அந்தத் தவறுகள் மேலிடத்துக்குச் சரியான முறையில் தெரிவிக்கப்படவில்லை. ஆகையால், மத்திய அரசாங்கத்தின் மேல்மட்டத்துக்குச் சரியான நிலைப்பாடு தெரிய வாய்ப்பில்லாமல் போய்விட்டது.</p>



<p>1976ஆம் ஆண்டு இறுதியில் பிரதமர் இந்திரா நெருக்கடிநிலையை விலக்கிக்கொண்டார்.</p>



<p>1977ஆம் ஆண்டு ஜனவரியில் பாராளுமன்றத்தைக் கலைத்துவிட்டு மறுதேர்தலுக்கு உத்தரவிட்டார். அதே ஆண்டு பிப்ரவரி, மார்ச் மாதத்தில் பாராளுமன்றத்துக்கு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் பெரும் தோல்வியைச் சந்தித்தது. தேர்தல் முடிவை மக்கள் தீர்ப்பாக ஏற்றுக்கொள்வதாகக் கூறி இந்திரா பதவி விலகினார்.</p>



<p>எதிர்க்கட்சிகளால் &#8220;சர்வாதிகாரி&#8217; என்று வர்ணிக்கப் பட்ட பிரதமர் இந்திரா காந்தி, பொதுத்தேர்தலை அறிவித்து, மக்களைச் சந்தித்து தேர்தலில் தோல்வியை ஏற்றுக்கொண்டார். சர்வாதிகாரியாக இருப்பவர்கள் தேர்தலில் தோற்றதாகச் சரித்திரம் இல்லை. ஆனால், ஜனநாயக உணர்வுமிக்க இந்திரா காந்தி, தேர்தலை அறிவித்து ஜனநாயகத்தை மதித்தார்.</p>



<h4 class="wp-block-heading"><strong>ஜனதா ஆட்சியும் கூட்டணியின் நிலையும்</strong></h4>



<p>இந்திரா காந்தியைத் தோற்கடித்து, பதவியிலிருந்து அவரை இறக்க முழுமூச்சோடு ஒத்துழைத்த எல்லாக் கட்சிகளும் &#8220;ஜனதா&#8217; என்ற ஒரே கட்சியாக இணைந்தன. அத்தகைய ஒற்றுமை நீண்டநாள் நிலைக்கவில்லை. பிரதம மந்திரியாக யாரைத் தேர்வுசெய்வது என்பதிலேயே கருத்துவேற்றுமை முளைத்தது. ஜெயப்பிரகாஷ் நாராயணுடைய தலையீட்டால் ஒரு வழியாக மொரார்ஜி தேசாய் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.</p>



<p>ஜனதா கட்சி பதவி ஏற்றவுடன், முன்னதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் தலைமையிலான எல்லா மாநில அரசாங்கங்களும் கலைக்கப்பட்டன. 1977ஆம் ஆண்டு புதிய ஜனாதிபதியாக சஞ்சீவிரெட்டி தேர்ந்தெடுக்கப்பட்டார்.</p>



<p>நெருக்கடி காலத்தில் நிறைவேற்றப்பட்ட சில அரசியல் சட்டத்திருத்தங்கள் திரும்பப் பெறப்பட்டன. அதன்மூலம் உச்சநீதிமன்றத்தின் அதிகாரம் மாற்றி அமைக்கப்பட்டது. ஆனால், ஜனதா கட்சியின் ஓராண்டு கால ஆட்சிக்குப்பின், கட்சியில் பல பிரிவுகளுக்கிடையே ஒற்றுமையைக் கட்டிக்காப்பது இயலாமல் போய்விட்டது. வகுப்புவாத இயக்கமான ஆர்.எஸ்.எஸ்., பாரதீய ஜன சங்கம் சார்ந்தவர்களைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதில் முனைப்பு காட்டியது. சோஷலிஸ்ட்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதில் பல தடைகள் ஏற்பட்டன. ஓராண்டு முடிவதற்குள் மொரார்ஜி தேசாய் பதவி விலகினார். சோஷலிஸ்ட்களின் உதவியோடு சரண்சிங் பிரதமராகப் பதவியேற்றார்.</p>



<p>நம்பிக்கை வாக்கெடுப்பு பெறுவதற்குமுன் சரண்சிங் தம் பதவியை ராஜினாமா செய்தார். புதிய பாராளுமனறத்தைத் தேர்ந்தெடுக்கத் தேர்தல் நடத்த ஜனாதிபதி உத்தரவிட்டார்.</p>



<p>இடைப்பட்ட காலத்தில், ஜனதா கட்சி அரசாங்கம், இந்திரா காந்தியை பழி தீர்ப்பதில் காட்டிய உறுதியை ஆட்சியை நடத்துவதில் காட்டவில்லை.</p>



<p>இதற்கிடையில் கர்நாடகாவிலிருந்து பாராளுமன்றத்துக்கு நடைபெற்ற உப தேர்தலில் இந்திரா காந்தி வெற்றிபெற்றார். அவரைப் பதவி ஏற்கவிடாமல் கைதுசெய்து, பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கியது. அதன்பின் அவருடைய ஆட்சிக் காலத்தில் அதிகார அத்துமீறல்கள் நடைபெற்றதாகக் கூறி அதை விசாரிக்க கமிஷன் அமைத்தது.</p>



<p>பொதுவாகப் பெரிய தினசரிப் பத்திரிகைகள் இந்திரா காந்திக்கு விரோதமாக இருந்ததால், மக்களிடம் அவருக்குப் பெருகிவரும் செல்வாக்கு பற்றி அரசாங்கம் உணரவில்லை. இந்திரா காந்திமீது பழிவாங்கும் போக்கை பொதுமக்கள் ஏற்கவில்லை. அதற்கு மாறாக, அவருடைய செல்வாக்கு திரும்பவும் வளர்ந்தது. மக்கள் எதிர்பார்த்த நிலையான அரசாங்கத்தைக் கொடுக்கமுடியாத ஜனதா ஆட்சி கவிழ்ந்ததைப் பற்றி மக்கள் கவலைப்படவில்லை. அதற்கு மாறாக, இந்திரா காந்தியைத் திரும்பவும் வரவேற்று ஆட்சியில் அமர்த்த மக்கள் தயாராயினர்.</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/indira-gandhi-was-courage-personified/">நெருக்கடி நிலையும் இந்திரா காந்தியும்</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://desiyamurasu.com/news-india/indira-gandhi-was-courage-personified/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>இந்திய அரசியலில் இந்திரா!</title>
		<link>https://desiyamurasu.com/news-india/indira-gandhi-in-indian-politics/</link>
					<comments>https://desiyamurasu.com/news-india/indira-gandhi-in-indian-politics/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[ஆ. கோபண்ணா]]></dc:creator>
		<pubDate>Wed, 18 Nov 2020 16:46:58 +0000</pubDate>
				<category><![CDATA[தேசிய அரசியல்]]></category>
		<category><![CDATA[Indian Politics]]></category>
		<category><![CDATA[indira gandhi]]></category>
		<guid isPermaLink="false">https://desiyamurasu.com/?p=3108</guid>

					<description><![CDATA[<p>நவம்பர் 19: அன்னை இந்திரா காந்தி அவர்களின் 103வது பிறந்த நாள் சிறப்பு கட்டுரை &#8211; படித்து பகிர்விர் ! இந்திராவின் ஆரம்ப கால ஆட்சி 1966ஆம் ஆண்டு, இந்திரா காந்தி பதவி ஏற்றபோது பல பிரச்சினைகள் தீர்வுக்குக்காகக் காத்திருந்தன, மேலும் பல பிரச்சினைகள் உருவாகின. பஞ்சாப் அஸ்ஸாம் போன்ற சில மாநிலங்களின் அரசியல் பிரச்சினைகளைத் தவிர, நாட்டின் பல பகுதிகளில் கடுமையான வறட்சி நிலவியது. உணவுப் பொருட்களின் விலையேற்றம்,பொது அமைதியை அச்சுறுத்தியது. நாட்டில் பொதுவாகப் பொருளாதார [&#8230;]</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/indira-gandhi-in-indian-politics/">இந்திய அரசியலில் இந்திரா!</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p><em><span class="has-inline-color has-vivid-red-color"><strong>நவம்பர் 19: அன்னை இந்திரா காந்தி அவர்களின் 103வது பிறந்த நாள் சிறப்பு கட்டுரை &#8211; படித்து பகிர்விர் !</strong></span></em></p>



<h4 class="wp-block-heading"><strong>இந்திராவின் </strong><strong>ஆரம்ப </strong><strong>கால </strong><strong>ஆட்சி</strong></h4>



<p>1966ஆம் ஆண்டு, இந்திரா காந்தி பதவி ஏற்றபோது பல பிரச்சினைகள் தீர்வுக்குக்காகக் காத்திருந்தன, மேலும் பல பிரச்சினைகள் உருவாகின. பஞ்சாப் அஸ்ஸாம் போன்ற சில மாநிலங்களின் அரசியல் பிரச்சினைகளைத் தவிர, நாட்டின் பல பகுதிகளில் கடுமையான வறட்சி நிலவியது. உணவுப் பொருட்களின் விலையேற்றம்,பொது அமைதியை அச்சுறுத்தியது. நாட்டில் பொதுவாகப் பொருளாதார மந்தநிலை தொடர்ந்தது. தொழில் துறை உற்பத்தி தொடர்ந்து குறைந்தது.</p>



<p>நாட்டின் பல பகுதிகளில் பருவ மழை தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் பொய்த்ததால், விவசாய உற்பத்தியிலும் பெரும் சரிவு ஏற்பட்டது. எல்லா பொருட்களின் விலையேற்றத்தால் பணவீக்கம் உயர்ந்தது. உத்தரப்பிரதேசம், பிஹார் போன்ற மாநிலங்களில் பஞ்சம் பயமுறுத்திக் கொண்டிருந்தது.பாகிஸ்தானும் சீனாவும் தொடர்ந்து உறவாடிக் கொண்டிருந்ததால், இந்தியா தன்னுடைய ராணுவச் செலவைக் குறைக்க முடியாமல், பெரும் தொகையைப் பாதுகாப்புக்காகச் செலவிட நேர்ந்தது. ஐந்தாண்டுத் திட்டச் செலவினங்களாலும், பற்றாக்குறை பட்ஜெட் காரணமாகவும் நாடு நிதி நெருக்கடியில் இருந்தது.</p>



<p>உணவுப் பொருளை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.சர்வதேசச் சந்தையில் இந்திய நாணயத்தின் மதிப்பு குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அளவில் இல்லை. ஆகையால், உலக வங்கி மற்றும் சர்வதேச நிதி நிறுவனத்தின் ஆலோசனையை ஏற்று இந்திய நாணய மதிப்பை 30 சதவிகிதம் குறைக்க இந்திரா காந்தி ஒப்புக்கொள்ள நேர்ந்தது. நாட்டின் எல்லா எதிர்க் கட்சிகளும் ஆளும் கட்சியின் ஒரு பகுதியும் இந்த நடவடிக்கையை கடுமையாகக் குறை கூறின.</p>



<p>அமெரிக்காவின் பி.எல். 480 திட்டத்தின்கீழ் இந்தியா உணவுப் பொருட்களை இறக்குமதி செய்ததால் அந்த நாட்டின் தயவை எதிர்நோக்கியிருக்க வேண்டியதாயிற்று. இதைப் பயன்படுத்திக்கொண்டு அமெரிக்கா தன்னுடைய வெளிநாட்டுக் கொள்கையை இந்தியா ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்த்தது. இந்த நிலையில், இந்தியாவின் நடுநிலைக் கொள்கைக்கு அச்சுறுத்தல் வரும் என்று உள்நாட்டில் பல எதிர்க்கட்சிகள் குரல் கொடுக்கத் தொடங்கின.</p>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img loading="lazy" decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/11/MA_I504337_TePapa_Life-Indira-Gandhi-and_preview.jpg" alt="" class="wp-image-3110" width="553" height="867" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/11/MA_I504337_TePapa_Life-Indira-Gandhi-and_preview.jpg 638w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/11/MA_I504337_TePapa_Life-Indira-Gandhi-and_preview-191x300.jpg 191w" sizes="auto, (max-width: 553px) 100vw, 553px" /></figure></div>



<p>இதுபோன்ற பல அரசியல் பொருளாதாரப் பிரச்சினைகளின் பயமுறுத்தல்களுக்கிடையேதான் இந்திரா காந்தி தன்னுடைய பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டார். பொதுத்தேர்தல் நெருங்கிக் கொண்டிருந்ததால் எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப் பிரச்சாரத்தையும் அவர் எதிர்கொள்ள வேண்டியதாயிற்று.</p>



<p>இந்த நிலையில், இந்திரா காந்தி பஞ்சாப் பிரச்சினைக்குச் சுமுகமான ஒரு தீர்வு கண்டார். நாகாலாந்துக்கு சுயாட்சி அதிகாரம் கொடுத்தார். அந்நிய நாடுகளின் உதவியுடன் உடனடி உணவுப் பிரச்சினைக்குத் தீர்வு கண்டார். அதேநேரத்தில், உணவுப் பற்றாக்குறையை நிரந்தரமாகத் தீர்க்கும் வகையில் பசுமைப்புரட்சித் திட்டங்களை நிறைவேற்றுவதில் முனைப்பு காட்டினார். உணவு உற்பத்தியில் நாடு தன்நிறைவு பெறுவதில்தான் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியும் அரசியல் சுதந்திரமும் அர்த்தமுள்ளதாக இருக்கும் என்ற உண்மையை வற்புறுத்தினார்.</p>



<p>கடுமையான வறட்சி நிலவிய காலத்திலும் பட்டினிச் சாவு இல்லை என்று சொல்லும் வகையில் உணவுப் பொருட்கள் தேவையான பகுதிகளுக்கு உடனடியாகச் சென்றடைவதில் அக்கறை காட்டினார். மாநிலங்களில் பொதுவிநியோக முறையைச் சீராக்கினார். உணவுப் பொருளை விநியோகிப்பதில் எல்லா மாநிலங்களின் தேவையைக் கவனத்தில் கொண்டுசெயல்பட்டார்.</p>



<p>பதவிக்கு வந்த சில நாட்களில் இந்திய நாட்டின் அயல்நாட்டுக் கொள்கை தொடர்பான பல முக்கிய முடிவுகளை எடுத்தார். நேரு உருவாக்கிய அணிசேராக் கொள்கையைப் பழுதுபடாமல் பாதுகாப்பதில் அக்கறை காட்டினார். அயல்நாட்டுக் கொள்கை தொடர்பாக அமெரிக்கா மறைமுகமாக ஏற்படுத்திய நெருக்குதலுக்குப் பணிய மறுத்தார். அமெரிக்கா, வியட்நாம் மீது குண்டு வீசியதை இந்திரா காந்தி கடுமையாகக் கண்டித்தார். எல்லா நாடுகளுடனும் நட்புறவை வளர்ப்பதில் அவர் முனைப்போடு<br>செயல்பட்டார்.</p>



<p>எகிப்து நாட்டின் நாஸருடனும், யுகோஸ்லேவியாவின் மார்ஷல் டிட்டோவுடனும் நல்லுறவை வளர்த்தார். சோவியத் நாட்டுடன் உறுதியான நல்லுறவை வளர்த்தார். சீனாவுடனும் உறவைப் புதுப்பிக்க இந்திரா காந்தி முயற்சி செய்தார். பாகிஸ்தானுடன் உறவு மேம்படுவது இரு நாட்டுக்கும் நன்மை பயக்கும் என்று நம்பினார்.</p>



<p>தவிர்க்க முடியாதநிலையில் சர்வதேசச் சந்தையில் இந்திய நாணய மதிப்பைக் குறைக்க இந்திரா காந்தி ஒப்புக்கொண்டதை எதிர்க்கட்சிகள் பயன்படுத்திக் கொண்டன. இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகம் உயரும் என்ற நம்பிக்கையில் அவர் ஒப்புக்கொண்டார். ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு ஏற்றுமதி உயரவில்லை. இறக்குமதியையும் குறைக்க முடியவில்லை.</p>



<p>வகுப்புவாத இயக்கமான பாரதீய ஜன சங்கம், பசுவதைத் தடுப்புச் சட்டம் என்ற கோரிக்கையுடன் பெரிய இயக்கத்தை நடத்தியது. வரவிருக்கும் 1967ஆம் ஆண்டு தேர்தலை கவனத்தில்கொண்டு தொடங்கப்பட்ட அந்த இயக்கம், வன்முறையில் ஈடுபட்டது. அவ்வியக்கம் தில்லி நகரத்தில் பல ஆயிரக்கணக்கான சாமியார்களைக் கொண்டுவந்து ஊர்வலம் நடத்தியது. அந்த ஊர்வலத்தில் திட்டமிட்ட முறையில் வன்முறை வெடித்தது. அமைதியை நிலைநாட்ட காவல்துறை எடுத்த நடவடிக்கையில் சில உயிர்கள் பலியாயின. தேர்தலுக்குப்பின் அந்த இயக்கம் பிசுபிசுத்துப் போய்விட்டது.</p>



<p>ஆனால், இந்திர காந்திக்குப் பாராளுமன்ற காங்கிரஸ் கட்சிக்குள் தேவையான ஆதரவு இல்லை. பல உறுப்பினர்கள் கட்சியின் மூத்த தலைவர்களின் கட்டுப்பாட்டில் இருந்தனர். அமைச்சரவையிலும் அவருக்கு முழுமையான செல்வாக்கு இருப்பதாகச் சொல்லமுடியாத நிலை தொடர்ந்தது.</p>



<p>கட்சி தொடர்ந்து பல மாநிலங்களில் உள்ள பழைய தலைவர்களின் செல்வாக்கில் இருந்தது. &#8220;சிண்டிகேட்&#8217; என்று பத்திரிகைகளால் குறிப்பிடப்பட்ட சில தலைவர்களின் கூட்டமைப்பு, தன்னுடைய செல்வாக்கை நிலைநிறுத்திக்கொள்ள இந்திரா காந்திமீது நெருக்குதல் கொடுத்துவந்தது. அதனால் அவரால் சுதந்திரமாகச் செயல்பட முடியாதநிலை தொடர்ந்தது.</p>



<p>பொதுவாக, இந்தக் காலகட்டத்தில்தான் பாராளுமன்றத்தில் விவாதங்களின் தரம் குறையத் தொடங்கியது. தனிநபர் விமர்சனங்கள் தலைதூக்கியதோடு, குறிப்பாக இந்திரா காந்தி கடுமையான, தரம் இல்லாத தனிநபர் விமர்சனங்களைச் சந்திக்க வேண்டியதாயிற்று. சோஷலிஸ்ட்களும் வகுப்புவாத பிற்போக்கு கட்சிகளும் அவரை பெண் என்றும் பாராமல் கீழ்த்தரமாக விமர்சனம் செய்யத் தொடங்கின. இத்தகைய கடுமையான விமர்சனங்களை இந்திரா காந்தி தமக்கே உரிய துணிவோடு சந்திக்கத் தயாரானார்.</p>



<p>இந்த நிலையில், 1967ஆம் ஆண்டு தேர்தல் வந்தது. கட்சியில் நேரு போன்ற தேசிய தலைவர் இல்லாத நிலையில், சந்திக்கும் தேர்தலாக அது அமைந்தது. 1964க்குப்பிறகு தொடர்ந்து கட்சி பலவீனப்பட்டுக் கொண்டிருந்தது. சிண்டிகேட்டின் தலையீட்டால் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத பலர் கட்சியைவிட்டு வெளியேறினர். பல மாநிலங்களில் அதிருப்தியாளர்கள் தனிக்கட்சி தொடங்கினார்கள். பல மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்து காங்கிரசுக்குப் பெரிய அளவில் சவாலாகத் தேர்தலில் போட்டியிட்டன.</p>



<h4 class="wp-block-heading"><strong>1967</strong><strong>ஆம் </strong><strong>ஆண்டு </strong><strong>தேர்தலும் </strong><strong>காங்கிரஸ் </strong><strong>கட்சியும்</strong></h4>



<p>1967ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி குறைந்த பெரும்பான்மையுடன்தான் ஆட்சியைப் பிடிக்க முடிந்தது. கட்சியின் ஒவ்வொரு பாராளுமன்ற நடவடிக்கைக்கும் இதர கட்சிகளிடம் ஆதரவு கேட்கவேண்டிய சூழல் ஏற்பட்டது. இடதுசாரிகள், தொழிலாளர்கள் மற்றும் விலைவாசி ஏற்றம் ஆகிய பிரச்சினைகளில் அரசாங்கத்தின்மீது பலவகை நெருக்குதல்களை கொண்டுவந்தனர். கிராமப் புறங்களில் விவசாயிகள் தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்டங்களைத் தொடர்ந்தனர்.</p>



<p>நாட்டில் பொருளாதார வளர்ச்சி குறையத் தொடங்கியது. திட்டச் செலவை சமாளிப்பதில் நெருக்கடி ஏற்பட்டது. அமெரிக்காவின் உதவி பாதியாகக் குறைந்தது. நகர மக்கள், குறிப்பாகத் தொழிலாளர்கள் புதிய புதிய வழிமுறைகளில் தங்கள் அதிருப்தியை வெளியிடத் தொடங்கினர். அரசியல் சட்டத்திற்கு விரோதமான வழிமுறைகளில் சில தீவிரவாதிகள் கிராமப்புறங்களில் அணி திரண்டு செயல்படத் தொடங்கினார்கள். &#8220;நக்ஸலைட்&#8217; என்ற அந்த அமைப்பு பல மாநிலங்களில் இளைஞர்களை தன் பக்கம் கவர்ந்திழுக்கத் தொடங்கியது.</p>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large"><img loading="lazy" decoding="async" width="989" height="659" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/11/659-prime-minister-of-india-indira-gandhi-addressing-a-congress-rally-in-image-88005500_20190911_082.jpg" alt="" class="wp-image-3116" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/11/659-prime-minister-of-india-indira-gandhi-addressing-a-congress-rally-in-image-88005500_20190911_082.jpg 989w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/11/659-prime-minister-of-india-indira-gandhi-addressing-a-congress-rally-in-image-88005500_20190911_082-300x200.jpg 300w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/11/659-prime-minister-of-india-indira-gandhi-addressing-a-congress-rally-in-image-88005500_20190911_082-768x512.jpg 768w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/11/659-prime-minister-of-india-indira-gandhi-addressing-a-congress-rally-in-image-88005500_20190911_082-750x500.jpg 750w" sizes="auto, (max-width: 989px) 100vw, 989px" /></figure></div>



<p>காங்கிரஸ் கட்சி புதிய அரசியல் சூழலுக்குத் தக்கவகையில் மாற்றுத் திட்டங்களை விவாதிக்கத் தொடங்கியது. காமராஜருக்குப் பிறகு கட்சியின் அகில இந்தியத் தலைவராக நிஜலிங்கப்பா தேர்ந்தெடுக்கபட்டார். கட்சியின் ஸ்தாபன அமைப்புகளின் மீது சிண்டிகேட்டின் பிடி மேலும் இறுகியது. இந்திரா காந்திக்குக் கட்சியின் ஸ்தாபன அமைப்பில் செல்வாக்கு மிகக் குறைவாகவே இருந்தது.கட்சியில் பிளவு ஏற்படாமல் தன் செல்வாக்கை நிலைநிறுத்திக்கொள்ள தொடர்ந்து முயற்சி செய்தார்.</p>



<p>ஆனால், பிரதமர் என்ற முறையில் தனக்கு உள்ள அதிகாரத்தில் எந்த வகையான சமரசத்துக்கும் அவர் தயாராக இல்லை. இந்த நிலையில், மொரார்ஜி தேசாய் நிதியமைச்சராக இருந்தார்.</p>



<p>நாட்டில் உள்ள அரசியல் பொருளாதாரப் பிரச்சினைகளைக் கவனத்தில்கொண்டு நீண்ட விவாதத்துக்குப்பின், காங்கிரஸ் கட்சியின் செயற்குழு பத்து அம்ச வேலைத் திட்டத்தைத் தயாரித்தது. 1967ஆம் ஆண்டு மே மாதத்தில் தயாரிக்கப்பட்டு மக்கள் மத்தியில் விவாததுக்கு வைக்கப்பட்ட அந்த வேலைத் திட்டம், பொதுவாக நாட்டுமக்களுடைய பல கோரிக்கைகளைச் சரியான முறையில் கவனத்தில் கொண்டிருந்தது என்று கூறவேண்டும்.</p>



<p>நாட்டில் உள்ள வங்கிகள்மீது ஒரு வகையான சமூகக் கட்டுப்பாடு, பொது இன்ஷ்யூரன்ஸ் துறையை நாட்டுடைமையாக்குவது, ஏற்றுமதி இறக்குமதி, வர்த்தகத்தை அரசாங்கக் கட்டுப்பாட்டில் கொண்டு வருவது, நகர மக்கள் வருமானத்துக்கு உச்சவரம்பு கொண்டு வருவது, ஏகபோகக் கம்பெனிகள்மீது அரசாங்கத்தின் கட்டுப்பாடு ஆகிய பல திட்டங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால், காங்கிரஸ் கட்சியில் உள்ள வலதுசாரிகள், குறிப்பாக காமராஜ் தவிர்த்த சிண்டிகேட் குழுவினர் இந்தத் திட்டத்தை மறைமுகமாக எதிர்க்கத் தொடங்கினார்கள். இதற்கு மாறாகத் திட்டச் செலவை குறைப்பது, தனியார் துறைக்கு ஊக்கம் கொடுத்தல், பொதுத்துறை முதலீட்டைக் கைவிடுதல், கிளர்ச்சி செய்யும் மக்கள் மற்றும் தொழிலாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை ஆகிய பல கருத்துக்களை முன்வைத்தார்கள்.</p>



<p>&#8220;இளம் துருக்கியர்&#8217; என்று கூறப்பட்ட காங்கிரசின் இடதுசாரியினர், இந்தக் கருத்துகளுக்கு எதிராகவும் பத்து அம்சத் திட்டத்துக்கு ஆதரவாகவும் தீவிரமாகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். மொரார்ஜி தேசாயை நாட்டில் உள்ள முதலாளிகளின் கைப்பாவை என்று அவர்கள் குற்றம் சாட்டினார்கள். கட்சி எந்த நேரமும் பிளவைச் சந்திக்க நேரும் என்ற அரசியல் வட்டாரப் பேச்சு, மற்றும் பத்திரிகைச் செய்திகள், மாற்றுக் கட்சியினரின் விமர்சனங்கள் நிலைமையை மேலும் மோசமாக்கியது.</p>



<p>இந்தக் கட்டத்தில்தான் ஜனாதிபதி ஜாகீர் உசேன் 1969ஆம் ஆண்டு மே மாதம் காலமானார். புதிய ஜனாதிபதியை உடனடியாகத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு, பாராளுமன்ற காங்கிரஸ் கட்சிக்கு வந்தது. கட்சி பிளவைச் சந்திக்க இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சு இருந்த இந்த நேரத்தில் பல வகையான அரசியல் ஆருடம் கணிக்கபட்டது.</p>



<p>ஜனாதிபதியின் அதிகாரம் இந்திய அரசியல் சட்டத்தில் தெளிவாக வரையறுக்கப்பட்டபோதிலும், பாராளுமன்றத்தில் ஆளும் கட்சி பிளவுபடும் கட்டத்தில், அவருடைய அதிகாரமும் தீர்மானமும் பெரும் முக்கியத்துவம் பெறும். அதனால் அன்றைய நிலையில், புதிய ஜனாதிபதியைக்கொண்டு பிரதம மந்திரியைப் பதவி இறக்கம் செய்யமுடியும் என்ற சூழல் ஏற்பட்டது. நிலைமையை நன்கு உணர்ந்திருந்த இந்திரா காந்தி தனக்கு ஆதரவான ஒருவரைப் புதிய ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்க முயன்றார்.</p>



<p>1969ஆம் ஆண்டு ஜூலை மாதம், பெங்களூரில் கூடிய காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டக் குழு, இந்திரா காந்தியின் விருப்பத்துக்கு மாறாகப் புதிய ஜனாதிபதி பதவிக்கு வேட்பாளராக சஞ்சீவிரெட்டியை நியமனம் செய்தது. சஞ்சீவிரெட்டி, சிண்டிகேட் குழுவின்முக்கிய உறுப்பினர். அதனால் இந்திரா காந்தி தன் நிலைமையை உறுதிசெய்து கொள்ளத் தொடங்கினார்.<br>தில்லி திரும்பியதும், நிதி அமைச்சர் பொறுப்பை மொரார்ஜி தேசாயிடமிருந்து தானே எடுத்துக்கொண்டார். வங்கிகள் மீதான சமூகக் கட்டுப்பாட்டுக்கு அவர் ஆதரவாக இல்லை என்ற குற்றச்சாட்டு அவர்மீது ஏற்கெனவே இருந்தது. அடுத்த சில நாட்களில் குடியரசுத் தலைவர் உத்தரவுடன் அவசரச் சட்டத்தின்மூலம் 14 வங்கிகளை நாட்டுடைமையாக்கினார். அடுத்த கட்டமாக மன்னர்களின் மான்யத்தையும் ஒழிக்கப் போவதாக அறிவித்தார்.</p>



<p>பிரதமருடைய இந்த நடவடிக்கைக்கு மக்களிடமிருந்து ஆதரவு பெருகியது. வங்கிகளின் நாட்டுடைமை என்ற கோரிக்கை பல ஆண்டுகளாகத் தொழிற் சங்கங்களும் இடதுசாரி இயக்கங்களும் வலியுறுத்தி வந்த கோரிக்கைகள். கடந்த காலத்தில் பல கட்சிகள் இந்த கோரிக்கையுடன் நீண்ட போராட்டங்களை நடத்தியிருக்கின்றன. பல மாநிலக் கட்சிகளும் பெரும்பாலான எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. இதுபோன்ற சில திட்டங்களை அறிவித்த பிறகு, இந்திரா காந்தியின் செல்வாக்கு பல மடங்கு உயர்ந்தது. அதே நேரத்தில், நாடு புதிய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்கத் தயாரானது.</p>



<p>இதற்கிடையில், காங்கிரஸ் தலைவர் நிஜலிங்கப்பா வலதுசாரி கட்சிகளின் தலைவர்களையும் வகுப்புவாதக் கட்சியான ஜன சங்கத்தின் தலைவர்களையும் சந்தித்துப் பேசினார். தம்மைப் பதவியிலிருந்து இறக்க மற்ற கட்சிகளுடன் கூட்டுச்சதி நடப்பதாகக் குற்றம் சாட்டிய இந்திரா காந்தி, எதிர் நடவடிக்கைக்குத் தயாரானார். தன்னுடைய ஆதரவாளர்களுக்கு மனச்சாட்சி அடிப்படையில் வாக்கு அளிக்கவேண்டுமென்று சுற்றறிக்கை அனுப்பினார்.</p>



<p>பாராளுமன்றத்தில் உள்ள சில எதிர்க்கட்சிகளும், பல மாநிலக் கட்சிகளும் துணை ஜனாதிபதியாக இருந்த வி.வி.கிரியை ஆதரித்தன. இந்திரா காந்தியின் ஆதரவாளர்களும் அவரை ஆதரித்து பகிரங்கமாகப் பிரச்சாரம் செய்தார்கள். இறுதியாகக் கடுமையான போட்டியில் வி.வி.கிரி நாட்டின் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கட்சியில் பிளவு உறுதியானது.</p>



<p>பிரதமர் இந்திரா காந்தி கட்சியில் நடக்கும் போராட்டம், தனிநபர் மோதல் இல்லை என்றும், இருவேறு கருத்துபோக்குகளுக்கு இடையில் நடக்கும் போராட்டம் என்றார். கட்சி சமூக மாற்றத்துக்கான கருவியாக இருக்கவேண்டும். ஏழை எளிய மக்களின் வாழ்வில் வளம்செய்யும் செயல் திட்டங்களை அமல்படுத்த வேண்டும். இடையூறாக இருக்கும் சக்திகளைக் களைந்தெறிய வேண்டும் என்று அறைகூவல் விடுத்தார். மாறாக, இந்திரா காந்தி சர்வாதிகாரப் பாணியில் நாட்டை வழிநடத்த முயற்சி செய்வதாகவும், சோவியத் நாட்டு வழிமுறைகளின் அடிப்படையில் நாட்டை மாற்ற முயற்சிப்பது இந்திய ஜனநாயக மரபுகளுக்கு முரணானது என்றும் பிரச்சாரம் செய்தனர்.</p>



<p>1969ஆம் ஆண்டு நவம்பர் மாதம் காங்கிரஸ் உயர்மட்டக் குழு கட்சியின் கட்டுப்பாடுகளை மீறி செயல்படுவதாகக் குற்றம் சாட்டி இந்திரா காந்தியைக் கட்சியைவிட்டு வெளியேற்றியது.</p>



<p>பாராளுமன்ற காங்கிரஸ் கட்சி இரண்டாகப் பிரிந்தது. பிரதமரை ஆதரிக்கும் உறுப்பினர்கள் 220 பேராகவும், கட்சியின் மூத்த தலைவர்களின் குழுவை ஆதரிக்கும் உறுப்பினர்கள் 68 பேராகவும் இருந்தது. பாராளுமன்றத்தில் தன் பெரும்பான்மையைக் காப்பாற்றிக்கொண்ட பிரதமர், ஒரு மாற்று காங்கிரசை அறிவித்தார். அவர் தலைமையிலான காங்கிரஸ் கட்சி, காங்கிரஸ் (ஆர்) என்றும், மூத்த தலைவர்களின் தலைமையில் தொடர்ந்த குழு காங்கிரஸ் (ஓ) என்றும் அறிவிக்கப்பட்டது. 700 உறுப்பினர்கள் கொண்ட அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியில் பிரதமர் தலைமையை 446 பேர் ஒப்புக்கொண்டனர்.</p>



<p>கட்சிக்குள் நடைபெற்ற போராட்டத்தில் இந்திரா காந்தி வெற்றிபெற்று, தன் நிலையை உறுதிசெய்து கொண்டபோதும், பாராளுமன்றத்தில் அவருடைய நிலை, மற்ற கட்சிகளின் நெருக்குதலுக்கு மத்தியில் செயல்பட வேண்டியநிலை தொடர்ந்தது. இருந்தபோதிலும், அவர் பல தீவிர செயல் திட்டங்களை அமல்படுத்தினார். 1970 பிப்ரவரி மாதம், வங்கிகள் தேசியமயமாக்கிய திட்டத்தைச் சட்டவிரோதமானது என்று உச்சநீதிமன்றம் அறிவித்தது. கொடுக்கப்பட்ட நஷ்டஈடு குறைவானது என்று குறிப்பிட்டுத் திட்டத்தைத் தள்ளுபடி செய்தது.</p>



<p>கம்பெனி நிர்வாகத்தில் சில முதலாளிகளுக்கு இருந்த உரிமைகளை நீக்கும் வகையில், மானேஜிங் ஏஜென்ஸி முறையை ரத்துசெய்து இந்திரா காந்தி உத்தரவு பிறப்பித்தார். ஏகபோகக் கம்பெனிகளைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகளைக்கொண்டு சில குடும்பங்கள் நிர்வாகத்தைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் முறையைக் கடினமாக்கினார். காங்கிரஸ் அதிகாரத்தில் உள்ள மாநிலங்களின் முதல் அமைச்சர்களுக்கு நிலச்சீர்த்திருத்த நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த வற்புறுத்தினார். தாமதப்படுத்தப்பட்ட நான்காவது ஐந்தாண்டுத் திட்டத்தை நிறைவேற்றத் தொடங்கினார், மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்தைவிட இருமடங்கு தொகை அதற்காக ஒதுக்கப்பட்டது.</p>



<p>கிராமப்புற மக்களும் நகர்ப்புறத்துத் தொழிலாளர்களும், பொதுவாக எளிய மக்கள் பிரிவினரும் உற்சாகத்துடன் பிரதமருக்கு ஆதரவு கொடுத்தபோதும், பாராளுமன்றத்தில் சிறுபான்மை அரசாகவே தொடர்ந்தது. மற்ற சிறு கட்சிகளின் ஆதரவைப் பெற்றால்மட்டுமே சட்டங்களை நிறைவேற்ற முடிந்தது.</p>



<p>மன்னர் மான்ய ஒழிப்பு தொடர்பாக அரசாங்கத்துக்கு எதிராக உச்சநீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு வெளிவந்தது. இக்கடினமான சூழலில் பதவியில் நீடிப்பதால் எந்தப் பலனும் ஏற்பாடாது என்பதைக் கருத்தில்கொண்டு பிரதமர் இந்திரா காந்தி பாராளுமன்றத்தைக் கலைத்துவிட்டு புதிய தேர்தலுக்கு உத்தரவிட்டார்.</p>



<p>ஆகையால், பாராளுமன்றத்துக்கு ஒரு ஆண்டு முன்னதாகத் தேர்தல் நடக்க வேண்டியதாயிற்று. 1971ஆம் ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலில், காங்கிரஸ் கட்சியின் இரு பிரிவினரும் மற்ற கட்சிகளுடன் அணிசேர்ந்து போட்டியிட்டனர். மூத்த தலைவர்களைக்கொண்ட காங்கிரஸ் (ஒ), சுதந்திரா கட்சி, பாரதீய ஜன சங்கம், எஸ்.எஸ்.பி. ஆகிய கட்சிகள் கொண்ட கூட்டணியில் போட்டியிட்டன. பிரதமர் தலைமையிலான காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன.</p>



<p>பிரதமர் பதவியிலிருந்து இந்திராவை இறக்குவதை மட்டுமே கொள்கையாகக்கொண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டவர்கள், &#8220;இந்திராவை விரட்டுவோம்&#8217; என்ற கோஷத்துடன் அவர்மீது கடுமையான தனிநபர் விமர்சனத்துடன் தேர்தலைச் சந்தித்தனர். இந்திரா காந்தி, &#8220;வறுமையை விரட்டுவோம்&#8217; என்ற கோஷத்துடனும் அதற்கான வேலைத் திட்டத்துடன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். குறிப்பாக, பிரதமர், பொதுத்துறையைப் பலப்படுத்துவது, நிலச்சீர்திருத்தம், நகர்ப்புற வருமானத்துக்கு உச்சவரம்பு, பெருகி வரும் ஏற்றத்தாழ்வைக் குறைக்கத் திட்டங்கள் ஆகிய பல கருத்துக்களை மக்கள் முன்வைத்தார்.</p>



<p>சமூக மாற்றத்துக்கான கருவியாக அரசியலைப் பயன்படுத்தி, சமூகத்தின்மீது ஆதிக்கம் செய்யும் சக்திகளுக்கு எதிராக மக்களைத் திரட்டும் வகையில் தேர்தல் பிரச்சாரம் அமைந்தது. நகர்ப்புரத்து மத்தியதர வர்க்கமும், ஏழை மக்களும், கிராமப்புற விவசாயத் தொழிலாளர்களும், பழங்குடி மக்களும், தாழ்த்தப்பட்ட மக்களும் இந்திரா காந்திக்கு ஆதரவாகக் கிளர்ந்தெழுந்தனர்.</p>



<p>ஆகையால், பிப்ரவரி 1971 தேர்தல், இந்திரா காந்திக்கு மகத்தான வெற்றியைத் தேடி தந்தது. 352 தொகுதிகளில், காங்கிரஸ் (ஆர்) வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தது. கூட்டணிக் கட்சிகளும் பெரும் அளவில் வெற்றிபெற்றன. மீண்டும் இந்திரா பிரதமராகப் பொறுப்பேற்று ஆட்சியைத் தொடர்ந்தார்.</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/indira-gandhi-in-indian-politics/">இந்திய அரசியலில் இந்திரா!</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://desiyamurasu.com/news-india/indira-gandhi-in-indian-politics/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>அன்னை இந்திராவின் காலச்சுவடுகள்!</title>
		<link>https://desiyamurasu.com/news-india/rare-photos-of-indira-gandhi/</link>
					<comments>https://desiyamurasu.com/news-india/rare-photos-of-indira-gandhi/#comments</comments>
		
		<dc:creator><![CDATA[ஆ. கோபண்ணா]]></dc:creator>
		<pubDate>Sat, 31 Oct 2020 07:07:13 +0000</pubDate>
				<category><![CDATA[தேசிய அரசியல்]]></category>
		<category><![CDATA[indira gandhi]]></category>
		<guid isPermaLink="false">https://desiyamurasu.com/?p=2864</guid>

					<description><![CDATA[<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/rare-photos-of-indira-gandhi/">அன்னை இந்திராவின் காலச்சுவடுகள்!</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img loading="lazy" decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/INDIRA-3.jpg" alt="" class="wp-image-2877" width="552" height="735" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/INDIRA-3.jpg 525w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/INDIRA-3-225x300.jpg 225w" sizes="auto, (max-width: 552px) 100vw, 552px" /><figcaption><strong>Born on November 19, 1917, Indira Gandhi is till date the only woman Prime Minister of India. She was elected as the PM of India in January 1966 and served till March 1977.</strong></figcaption></figure></div>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img loading="lazy" decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/indira_young.jpg" alt="" class="wp-image-2914" width="549" height="677" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/indira_young.jpg 520w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/indira_young-244x300.jpg 244w" sizes="auto, (max-width: 549px) 100vw, 549px" /><figcaption>It was during her interview at Shantiniketan that Rabindra Nath Tagore named her Priyadarshini. Since then she has been known as Indira Priyadarshini Nehru or Indira Priyadarshini Gandhi.</figcaption></figure></div>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img loading="lazy" decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/Indira-Gandhi-riding-on-Yak-on-way-to-Bhutan..jpg" alt="" class="wp-image-2952" width="562" height="554" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/Indira-Gandhi-riding-on-Yak-on-way-to-Bhutan..jpg 602w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/Indira-Gandhi-riding-on-Yak-on-way-to-Bhutan.-300x296.jpg 300w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/Indira-Gandhi-riding-on-Yak-on-way-to-Bhutan.-75x75.jpg 75w" sizes="auto, (max-width: 562px) 100vw, 562px" /><figcaption><strong>Indira Gandhi riding on Yak on way to Bhutan.</strong></figcaption></figure></div>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img loading="lazy" decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/indira5_1.jpg" alt="" class="wp-image-2881" width="562" height="799" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/indira5_1.jpg 450w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/indira5_1-211x300.jpg 211w" sizes="auto, (max-width: 562px) 100vw, 562px" /></figure></div>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img loading="lazy" decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/i1.jpg" alt="" class="wp-image-2882" width="574" height="524" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/i1.jpg 540w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/i1-300x274.jpg 300w" sizes="auto, (max-width: 574px) 100vw, 574px" /><figcaption><strong>Mrs. Indira Gandhi photographed at Palam Aerodrome on Oct. 3, 1949 before her departure for London, from where she is expected to join the Hon&#8217;ble Pandit Jawaharlal Nehru Prime Minister in U.S.A. during his forth coming tour to that country.</strong></figcaption></figure></div>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img loading="lazy" decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/dsgsdgs.jpg" alt="" class="wp-image-2954" width="577" height="499" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/dsgsdgs.jpg 634w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/dsgsdgs-300x259.jpg 300w" sizes="auto, (max-width: 577px) 100vw, 577px" /></figure></div>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img loading="lazy" decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/ba5dfcfcebf3c8fa5ffec03a4ae81fcd.jpg" alt="" class="wp-image-2884" width="578" height="625" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/ba5dfcfcebf3c8fa5ffec03a4ae81fcd.jpg 564w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/ba5dfcfcebf3c8fa5ffec03a4ae81fcd-277x300.jpg 277w" sizes="auto, (max-width: 578px) 100vw, 578px" /></figure></div>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img loading="lazy" decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/Indira-Gandhi-Nehru_1.jpg" alt="" class="wp-image-2899" width="576" height="859" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/Indira-Gandhi-Nehru_1.jpg 429w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/Indira-Gandhi-Nehru_1-201x300.jpg 201w" sizes="auto, (max-width: 576px) 100vw, 576px" /><figcaption><strong>A picture of Indira Gandhi taken during her visit to an Indian store in Zurich, Switzerland.</strong></figcaption></figure></div>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img loading="lazy" decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/image-7.jpg" alt="" class="wp-image-2921" width="575" height="473" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/image-7.jpg 700w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/image-7-300x247.jpg 300w" sizes="auto, (max-width: 575px) 100vw, 575px" /></figure></div>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img loading="lazy" decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/indira.jpg" alt="" class="wp-image-2908" width="574" height="729" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/indira.jpg 403w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/indira-236x300.jpg 236w" sizes="auto, (max-width: 574px) 100vw, 574px" /><figcaption><strong>Indira Gandhi with her sons, Rajiv and Sanjay.</strong></figcaption></figure></div>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img loading="lazy" decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/indira4.jpg" alt="" class="wp-image-2892" width="577" height="720" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/indira4.jpg 651w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/indira4-240x300.jpg 240w" sizes="auto, (max-width: 577px) 100vw, 577px" /></figure></div>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img loading="lazy" decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/image-4.jpg" alt="" class="wp-image-2897" width="575" height="692" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/image-4.jpg 532w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/image-4-249x300.jpg 249w" sizes="auto, (max-width: 575px) 100vw, 575px" /></figure></div>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img loading="lazy" decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/indira2.jpg" alt="" class="wp-image-2895" width="574" height="424" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/indira2.jpg 993w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/indira2-300x222.jpg 300w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/indira2-768x568.jpg 768w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/indira2-750x555.jpg 750w" sizes="auto, (max-width: 574px) 100vw, 574px" /></figure></div>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img loading="lazy" decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/IMG_20190128_113430-871x1024.jpg" alt="" class="wp-image-2896" width="576" height="675"/></figure></div>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img loading="lazy" decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/Kamaraj-1024x639.jpg" alt="" class="wp-image-2893" width="575" height="358" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/Kamaraj-1024x639.jpg 1024w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/Kamaraj-300x187.jpg 300w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/Kamaraj-768x479.jpg 768w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/Kamaraj-750x468.jpg 750w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/Kamaraj-1140x712.jpg 1140w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/Kamaraj.jpg 1200w" sizes="auto, (max-width: 575px) 100vw, 575px" /><figcaption><strong>Indira Gandhi and K. Kamaraj greeting each other at the Congress Parliamentary Party meeting in New Delhi.</strong></figcaption></figure></div>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img loading="lazy" decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/Mother-Teresa-with-Indira-Gandhi.jpg" alt="" class="wp-image-2894" width="575" height="378" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/Mother-Teresa-with-Indira-Gandhi.jpg 875w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/Mother-Teresa-with-Indira-Gandhi-300x197.jpg 300w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/Mother-Teresa-with-Indira-Gandhi-768x505.jpg 768w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/Mother-Teresa-with-Indira-Gandhi-750x493.jpg 750w" sizes="auto, (max-width: 575px) 100vw, 575px" /><figcaption><strong>India&#8217;s Prime Minister Indira Gandhi with Roman Catholic nun Mother Teresa in New Delhi.</strong></figcaption></figure></div>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img loading="lazy" decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/DsVHH_JX4AAfWnP_1542621000__rend_4_3.jpg" alt="" class="wp-image-2923" width="577" height="433" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/DsVHH_JX4AAfWnP_1542621000__rend_4_3.jpg 600w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/DsVHH_JX4AAfWnP_1542621000__rend_4_3-300x225.jpg 300w" sizes="auto, (max-width: 577px) 100vw, 577px" /></figure></div>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img loading="lazy" decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/image9.jpg" alt="" class="wp-image-2906" width="577" height="1146" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/image9.jpg 420w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/image9-151x300.jpg 151w" sizes="auto, (max-width: 577px) 100vw, 577px" /></figure></div>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img loading="lazy" decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/Indira-Gandhi-Dr.-Albert-Einstein-Jawaharlal-Nehru-and-Vijaya-Lakshmi-Pandit_1.jpg" alt="" class="wp-image-2909" width="576" height="449" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/Indira-Gandhi-Dr.-Albert-Einstein-Jawaharlal-Nehru-and-Vijaya-Lakshmi-Pandit_1.jpg 621w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/Indira-Gandhi-Dr.-Albert-Einstein-Jawaharlal-Nehru-and-Vijaya-Lakshmi-Pandit_1-300x234.jpg 300w" sizes="auto, (max-width: 576px) 100vw, 576px" /><figcaption><strong>Indira Gandhi, Dr. Albert Einstein, Jawaharlal Nehru and Vijaya Lakshmi Pandit. </strong></figcaption></figure></div>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img loading="lazy" decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/image8_1.jpg" alt="" class="wp-image-2901" width="580" height="478" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/image8_1.jpg 576w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/image8_1-300x247.jpg 300w" sizes="auto, (max-width: 580px) 100vw, 580px" /></figure></div>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img loading="lazy" decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/19-Indira-over-looks-the-Tungabhadra-Dam_1-1.jpg" alt="" class="wp-image-2903" width="580" height="460" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/19-Indira-over-looks-the-Tungabhadra-Dam_1-1.jpg 960w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/19-Indira-over-looks-the-Tungabhadra-Dam_1-1-300x238.jpg 300w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/19-Indira-over-looks-the-Tungabhadra-Dam_1-1-768x610.jpg 768w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/19-Indira-over-looks-the-Tungabhadra-Dam_1-1-750x595.jpg 750w" sizes="auto, (max-width: 580px) 100vw, 580px" /><figcaption><strong>Indira Gandhi over looks the Tungabhadra Dam</strong></figcaption></figure></div>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img loading="lazy" decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/DsVZRmuWoAIpqJU_@DKShivakumar_1542621107__rend_16_9-1.jpg" alt="" class="wp-image-2905" width="573" height="321" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/DsVZRmuWoAIpqJU_@DKShivakumar_1542621107__rend_16_9-1.jpg 600w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/DsVZRmuWoAIpqJU_@DKShivakumar_1542621107__rend_16_9-1-300x169.jpg 300w" sizes="auto, (max-width: 573px) 100vw, 573px" /><figcaption><strong>Indira Gandhi went to war with Pakistan to liberate East Pakistan. India won the war and Bangladesh was created.</strong></figcaption></figure></div>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img loading="lazy" decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/EILYOt-X0AA5jN9.jpg" alt="" class="wp-image-2904" width="582" height="709" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/EILYOt-X0AA5jN9.jpg 623w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/EILYOt-X0AA5jN9-246x300.jpg 246w" sizes="auto, (max-width: 582px) 100vw, 582px" /></figure></div>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img loading="lazy" decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/Indira-Gandhi-smiles.jpg" alt="" class="wp-image-2898" width="581" height="823" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/Indira-Gandhi-smiles.jpg 452w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/Indira-Gandhi-smiles-212x300.jpg 212w" sizes="auto, (max-width: 581px) 100vw, 581px" /><figcaption><strong>Indira Gandhi is all smiles post her re-election as Prime Minister of India in 1971.</strong></figcaption></figure></div>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/rare-photos-of-indira-gandhi/">அன்னை இந்திராவின் காலச்சுவடுகள்!</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://desiyamurasu.com/news-india/rare-photos-of-indira-gandhi/feed/</wfw:commentRss>
			<slash:comments>1</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>அன்னை இந்திராவுக்கு உறுதுணையாக ராஜிவ் &#8211; சோனியா!</title>
		<link>https://desiyamurasu.com/news-india/excerpts-from-sonia-gandhis-book-my-rajiv/</link>
					<comments>https://desiyamurasu.com/news-india/excerpts-from-sonia-gandhis-book-my-rajiv/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Admin]]></dc:creator>
		<pubDate>Sat, 31 Oct 2020 06:37:38 +0000</pubDate>
				<category><![CDATA[தேசிய அரசியல்]]></category>
		<category><![CDATA[indira gandhi]]></category>
		<category><![CDATA[rajiv gandhi]]></category>
		<category><![CDATA[sonia gandhi]]></category>
		<guid isPermaLink="false">https://desiyamurasu.com/?p=2852</guid>

					<description><![CDATA[<p>‘My Rajiv’ என்கிற நூலில் அன்னை சோனியா எழுதிய சில பகுதிகளின் தமிழாக்கம் அன்னை இந்திரா நினைவு நாளையொட்டி (அக்டோபர் &#8211; 31) வெளியிடுகிறோம்: கடந்த சில ஆண்டுகளாக நானும் ராஜிவும், அரசியலை நெருங்கிய நிலையில் பார்க்கிறோம். அரசியலின் தரம் தாழ்ந்த நிலைகளை நாங்கள் பார்த்திருக்கிறோம். என் மாமியாரோடு இணைந்து கொள்கைகளையும் திட்டங்களையும் வகுத்த சில மூத்த தோழர்கள், திடீரென அவரை எதிர்த்தனர். அவர் முழுமையாக நம்பிய அரசியல் நண்பர்கள், துரோகம் இழைத்தனர். அவரைக் கடுமையாக விமர்சித்தனர். [&#8230;]</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/excerpts-from-sonia-gandhis-book-my-rajiv/">அன்னை இந்திராவுக்கு உறுதுணையாக ராஜிவ் &#8211; சோனியா!</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p><span class="has-inline-color has-very-dark-gray-color"><em><strong>‘My Rajiv’ </strong>என்கிற நூலில் அன்னை சோனியா எழுதிய சில பகுதிகளின் தமிழாக்கம் அன்னை இந்திரா நினைவு நாளையொட்டி (அக்டோபர் &#8211; 31)</em> <em>வெளியிடுகிறோம்:</em></span></p>



<p>கடந்த சில ஆண்டுகளாக நானும் ராஜிவும், அரசியலை நெருங்கிய நிலையில் பார்க்கிறோம். அரசியலின் தரம் தாழ்ந்த நிலைகளை நாங்கள் பார்த்திருக்கிறோம். என் மாமியாரோடு இணைந்து கொள்கைகளையும் திட்டங்களையும் வகுத்த சில மூத்த தோழர்கள், திடீரென அவரை எதிர்த்தனர். அவர் முழுமையாக நம்பிய அரசியல் நண்பர்கள், துரோகம் இழைத்தனர். அவரைக் கடுமையாக விமர்சித்தனர். அவரை எதிர்த்தவர்கள் பழிவாங்க மேற்கொண்ட பிரச்சாரம் கண்டு, சாதாரண மக்களும் திகைப்படைந் தனர். அரசியல்வாதியானால், வாழ்க்கை எவ்வாறு இருக்கும் என்பதை நானும் ராஜிவும் நன்கு அறிவோம். </p>



<div class="wp-block-image"><figure class="alignleft size-large is-resized"><img loading="lazy" decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/i1_2.jpg" alt="" class="wp-image-2854" width="280" height="434" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/i1_2.jpg 398w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/i1_2-194x300.jpg 194w" sizes="auto, (max-width: 280px) 100vw, 280px" /></figure></div>



<p>அன்றைய அரசியல் சிக்கலால், ராஜிவ் மன வேதனையுற்றார். என் மாமியார் தனியாக இம்சிக்கப் பட்டார். இப்படிப்பட்ட நிலையில், அவருக்கு இளைப்பாற மகனின் தோள்கள் தேவைப்படும்போது, ராஜிவ் எவ்வாறு சுக வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்க முடியும்? அவருடைய தாயாரை நான் மிகவும் நேசித்ததால், மன உளைச்சல் அடைந்தேன். ராஜிவ், தம் தாய்க்குத் துணையாக நின்று, பொறுப்புடன் செய்யவேண்டிய கடமைகளை நான் உணர்ந்தேன். அதேவேளையில், அவரைப் பலி ஆடாக ஆக்கும் சமுதாயமுறை பற்றி நான் கோபமும் வெறுப்பும் அடைந்தேன். அது அவரை நசுக்கி அழித்துவிடும் என்பதை நான் முழுவதுமாக அறிவேன்.</p>



<h4 class="wp-block-heading"><strong>அவர் என்னுடைய ராஜிவ்!</strong></h4>



<p>அந்த நீண்ட நெடிய ஆண்டு, ஒவ்வொரு நிமிடமும், ஓர் அதள பாதாளத்தை நோக்கிச் சென்றது. எங்களுக்கு உதவி செய்ய எவருமில்லை! எல்லாரும் ஏற்கத்தக்க நியாயமான ஒரு தீர்வை &#8211; அற்புதத்தை நான் எதிர்பார்த்தேன்! ராஜிவ் சிதைவடைவதை என்னால் தாங்கிக்கொள்ள முடியாது. அவர் என்னுடைய ராஜிவ்! ஏனென்றால், அந்த அளவுக்கு நாங்கள் ஒருவரை ஒருவர் நேசித்தோம்! அவர் தம் தாயாருக்குக் கைகொடுத்து உதவ எண்ணினால், அதற்காக அவரோடு எங்குச் சென்றும் போரிடத் தயாரானேன்!</p>



<p>ராஜிவ் அரசியலில் நுழைந்த விநாடிமுதல் எங்கள் வாழ்க்கை மாறியது. இதற்குமுன் அவர் வாழ்ந்த வாழ்க்கை வேறு விதமானது! கவனமான வேலை! அதன்பின் ஒய்வு! &#8211; எத்தகைய காலம் அது? முன்னதாக இருந்த எங்கள் வாழ்க்கை உலகம் மிகமிக நெருக்கமானது! புரிந்து கொள்ளத் தக்கது! இப்போது அவர் வாழ்க்கை , மக்கள் கூட்டத்தின் மத்தியில்! தினமும் நூற்றுக்கணக்கானோர் &#8211; அரசியல்வாதிகள், கட்சி ஊழியர்கள், அமேதி தொகுதி மக்கள் &#8211; தங்கள் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டுதல் போன்றவற்றை முன்வைக்கின்றனர்! அவர் எங்களோடு இருக்கும் நேரம் விலை மதிக்க முடியாதது! அவரது பயணத்தின்போதும் இரவில் வெகுநேரம் விழித்திருந்தபோதும், உடனிருக்க, நாங்கள் எங்களை மாற்றிக்கொண்டு, அதற்கேற்பப் பழக்கப்படுத்திக்கொண்டு விட்டோம்.</p>



<h4 class="wp-block-heading"><strong>ராகுலுக்கு ராஜிவ் எழுதிய கடிதம்</strong></h4>



<p>அந்தக் காலத்திய திடீர் எதிர்பார்ப்புகளைப் பற்றி அவர் பரப்பரப்பு அடையவில்லை. தமக்கு இருக்கும் அரசியல் சுமை, தனிமை, இழப்பு என எது பற்றியும், ஒருபோதும் அவர் புகார் கூறியதில்லை . எவ்விதப் பரப்பரப்புமின்றி, வேலையில் ஈடுபடுவது அவரது இயல்பு. ராகுலுக்கு அவர் எழுதிய கடிதங்களுள் ஒன்றில் இது வெளிப்படுத்துகிறது.</p>



<p>&#8220;ஏதாவது ஒன்றைச் செய்தால், அதைச் செம்மையாகச் செய்ய வேண்டும். நல்லது எதையும் அரைகுறையாகச் செய்யக்கூடாது. உன்னால் எவ்வளவு சிறப்பாகச் செய்ய முடியுமோ, அவ்வளவு சிறப்பாகச் செய்ய, மேலும் கடினமாக உழை! வாழ்க்கை ஒரு பந்தயம் போன்றது. சற்று அதிகமாக உழைத்து முன்னேறு! முழுமை அடையும்வரை முயன்று உழை! சிறுசிறு விஷயங்கள்தான் மாற்றங்களை உண்டாக்கும்” என்று ராகுலுக்கு ஒரு கடிதத்தில் எழுதியிருந்தார்.</p>



<p>அரசியல் பணியில் ஈடுபட்டிருந்தாலும், ராஜிவுக்குக் குடும்பம் மிகவும் தேவையாக இருந்தது. அரசியலை அறிந்த ராஜிவ், தாம் நன்கறிந்த, நம்பத்தக்க, நேர்மையான, நிலையான உலகையே விரும்பினார். அரசியலுக்கு மாறுபட்ட, உண்மையான, அன்பு நிறைந்த புகலிடமாக அது அவருக்குத் தெரிந்தது.</p>



<p>அக்காலத்தில், அவர் எனக்கு எழுதிய கடிதம் ஒன்றில் இவ்வாறு இருந்தது, “இந்து மரபின்படி, ஆடவன் ஒருவன் அரை மனிதன்தான். அவன் மனைவியே அவனை முழுமையாக்குகிறாள். இதுபோலவே நானும் எண்ணுகிறேன்.</p>



<p>நீ இல்லாவிட்டால், என் வாழ்க்கை மிகவும் கடினமானதாக இருக்கும். அரசியலில் நான் இருக்கும் போது, இது மிகவும் உண்மையாக இருப்பதாக எண்ணுகிறேன்.”</p>



<h4 class="wp-block-heading"><strong>ராஜிவின் அரசியல் பிரவேசம்</strong></h4>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large"><img loading="lazy" decoding="async" width="600" height="406" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/2018_5image_11_50_442208000indira-rajiv-ll.jpg" alt="" class="wp-image-2941" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/2018_5image_11_50_442208000indira-rajiv-ll.jpg 600w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/2018_5image_11_50_442208000indira-rajiv-ll-300x203.jpg 300w" sizes="auto, (max-width: 600px) 100vw, 600px" /></figure></div>



<p>ராஜிவின் அரசியல் பிரவேசத் தீர்மானத்தை நான் ஏற்றாலும், எங்கள் வாழ்க்கையில் அதனால் ஏற்பட்ட பின்விளைவுகளால், சிறிது காலம் கழித்தே எனக்கு மனதார ஈடுபாடு ஏற்பட்டது. குடும்பத்தை நடத்து வதோடு, நான் முன்பு தொடங்கி இடையில் விட்டிருந்த வண்ண ஓவியங்களை வரையும் பயிற்சியில் மீண்டும் ஈடுபடத் தொடங்கினேன். ராஜிவ், அவரது தாயார் ஆகியோரின் ஓய்வு நேரங்களுக்கேற்ப, என் பயிற்சி நேரத்தையும், வெளி உலக நிகழ்ச்சிகளையும் மாற்றி அமைத்துக்கொண்டேன். என் மாமியாரின் ஆழ்ந்த மனக்காயங்களை உணர்ந்து, நானும் ராஜிவும் அவருக்கு ஒரு பாதுகாப்பு அரணாக இருந்து செயல்பட்டோம். இக்கால கட்டத்தில், குடும்பத்திலும் மாற்றங்கள் ஏற்பட்டன.</p>



<p>1982 இல் ராகுலுக்கு ராஜிவ் எழுதிய கடிதத்தில், “நான் அமேதி போகிறேன். அம்மாவும் உடன் வருகிறாள். தொடக்கத்தில் ஒவ்வொருவரும் அவளையே இமை கொட்டாது பார்ப்பார்கள். பழக்கப்படும்வரை இது ஒரு தர்மசங்கடமாக இருக்கும். அவள் மிகவும் தைரியசாலி!” என்று குறிப்பிட்டு நிலைமையை உணர்த்தியிருந்தார்.</p>



<h4 class="wp-block-heading"><strong>ராகுலுக்கு மன உறுதி அளித்த ராஜிவ்</strong></h4>



<p>1982இல் அங்கேயே தங்கிப் படிக்கும் விடுதி இணைந்த பள்ளி ஒன்றுக்கு ராகுல் அனுப்பப்பட்டான். 1983இல் பிரியங்காவும் அங்குச் செல்ல வேண்டியிருந்தது. &#8216;அனுபவமே ஒருவரை வலுவுடையவராகவும், தற்சார்பு உடையவராகவும் மாற்றும்&#8217; என்பது ராஜிவின் உறுதியான நம்பிக்கை. ஆனால், குடும்பத்தின்மீது ஏற்பட்ட தாக்குதலால், தங்களைத் தாங்களே எவ்வாறு சமாளித்துக்கொள்ளப் போகிறார்கள் என ராஜிவ் கவலைப்பட்டார். டெல்லியில், பள்ளித் தோழர்கள் அவர்களைத் துன்புறுத்திய பிரச்சினைகளை முன்பே எதிர் கொண்டுள்ளார்கள். அப்போது அவர்களுக்கு ஆதரவாக நாங்கள் இருந்தோம். எனவே, மனோதிடத்தை வளர்த்துக்கொள்ளுமாறு ராஜிவ் அடிக்கடி ராகுலுக்குக் கடிதம் எழுதினார்.</p>



<p>&#8220;சில சமயம், அப்பா, பாட்டி, அம்மா பற்றி டெல்லியில் பத்திரிகைகளில் செய்திகள் வரும். அதற்காகக் கவலைப்படாதே! அதுபற்றிச் சில பள்ளித் தோழர்கள்கூட உன்னை மனக்கவலை அடையச் செய்யலாம். ஆனால், அச்செய்திகளில் பல, உண்மை அன்று ! அத்தகைய புகைச்சல்களை எதிர்கொள்ளக் கற்றுக்கொள்! உன்னை எரிச்சலடையச் செய்யும் செய்திகளைப் பற்றிக் கவலை கொள்ளாதே!&#8221; என ராஜிவ், ராகுலுக்கு எழுதிய கடிதம் ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்.</p>



<p>இதற்கிடையில், பஞ்சாபில் நிலவியிருந்த நிலை, தேச ஒற்றுமைக்குப் பேரபாயமாகத் தோன்றியது. பிரிவினை சக்திகள் வலிமை பெற்றன. மிருகத்தனமான பயங்கரவாதக் கொலைகள், மேலும் மேலும் அதிகரித்தன. ராகுலையும் பிரியங்காவையும் பயங்கரவாதிகள் குறிவைத்திருப்பதாக எங்களுக்கு எச்சரிக்கை தரப்பட்டது. ஆபத்து அதிகரித்தபோது, அந்தப் பள்ளியில் வைத்து அவர்களைச் சமாளிப்பது மிகவும் கடினமாக இருந்தது.</p>



<h4 class="wp-block-heading"><strong>ராகுல், பிரியங்கா பாதுகாப்பு குறித்து இந்திரா கவலை!</strong></h4>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img loading="lazy" decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/873e86bd-dfc9-431e-95e7-e0352d9bf97f-690x1024.jpg" alt="" class="wp-image-2945" width="548" height="812" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/873e86bd-dfc9-431e-95e7-e0352d9bf97f-690x1024.jpg 690w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/873e86bd-dfc9-431e-95e7-e0352d9bf97f-202x300.jpg 202w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/873e86bd-dfc9-431e-95e7-e0352d9bf97f-768x1140.jpg 768w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/873e86bd-dfc9-431e-95e7-e0352d9bf97f-750x1113.jpg 750w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/873e86bd-dfc9-431e-95e7-e0352d9bf97f.jpg 990w" sizes="auto, (max-width: 548px) 100vw, 548px" /></figure></div>



<p>1984இன் வசந்த காலத்தில், டெல்லி பள்ளிகளில் ராகுலும் பிரியங்காவும் சேர்க்கப்பட்டார்கள். அவர்களுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட பல இடைஞ்சல்களில் இது முதன்மையானது. ஆனால், அதற்கு ஈடான வேறு நிகழ்வுகளும் உண்டு. அவர்களது பாட்டியின் கடைசி ஆறுமாத வாழ்க்கையை அவர்களுடன் கழித்தார். அவர்களின் பாதுகாப்பு பற்றி அச்சப்பட்டாலும், அவர்களோடு இருந்ததில் பாட்டிக்கு அளவற்ற மகிழ்ச்சி!</p>



<p>அக்பர் சாலை அலுவலகத்தை, எங்கள் வீட்டோடு இணைத்த வாயில் படியைத் தாண்டி, வெளியே விளையாடப் போகக் கூடாதென ராகுலுக்கும் பிரிங்காவுக்கும் என் மாமியார் பலமுறை எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த இடத்தில்தான், பின்னர் அவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.</p>



<h4 class="wp-block-heading"><strong>மரணத்தை எதிர்பார்த்த இந்திரா!</strong></h4>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large"><img loading="lazy" decoding="async" width="445" height="640" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/Indira_Gandhi_in_1967_1.jpg" alt="" class="wp-image-2948" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/Indira_Gandhi_in_1967_1.jpg 445w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/Indira_Gandhi_in_1967_1-209x300.jpg 209w" sizes="auto, (max-width: 445px) 100vw, 445px" /></figure></div>



<p>சில மாதங்களுக்குப் பிறகு, குழந்தைகளுக்கு ராஜிவ் எழுதிய கடிதத்தில், &#8220;என் தாயார் தாம் இறக்கும் நாளை நன்கு அறிந்திருந்தார் என உறுதியாக நம்புகிறேன். அவ்வாறு அவர் ஏன் நினைத்தார் என எனக்குத் தெரியாது. ஆனால், அது உண்மை ! அவர் செய்த பல செயல்கள், அவர் எங்களைப் பிரியத் தயாராக இருந்தார் என்பதையே உணர்த்தின. ஏனென்றால், அவர் அவ்வாறு செய்ய விரும்பாவிடினும், அவர் எடுத்த முடிவுகள், தலைவர் என்ற முறையில் அவர் செய்த கடின முடிவுகள், வாழ்க்கையைப் பற்றி அவரை அவ்வாறு எண்ணத் தூண்டின” எனக் குறிப்பிட்டிருந்தார்.</p>



<p>சீக்கிய பொற்கோயிலை ராணுவம் மீட்ட நிகழ்வுக்குப் பிறகு, எங்கள் வாழ்வில் ஒரு சோக நிழல் அலை பரவியது. என் மாமியார் தாம் இறந்தபின் தம்முடைய மரணச் சடங்குகள் எப்படி இருக்கவேண்டும் என்பன பற்றி ராஜிவிடமும் என்னிடமும் முன்பே பேசினார். தாம் கூற விரும்பிய அறிவுரைகளை எழுதினார். ராகுலிடம் தனியாகப் பேசினார். தைரியமாக இருக்குமாறு அவனிடம் கூறினார். தாம் வாழ்ந்து முடித்துவிட்டதாகவும், தம்மால் இயன்ற பணிகளைச் செய்துள்ளதாகவும், தாம் இறந்தால் அழக்கூடாது எனவும் கூறினார்.</p>



<p>நாள்கள் கடந்து சென்றன. தீபாவளி வந்தது! எங்களோடு தீபாவளி நாள்களைக் கழிக்க ஒரிசாவிலிருந்து ராஜிவ் வந்தார். இதுபோன்ற நல்ல விழா நேரங்களில் அவர் வரத் தவறுவதில்லை . பழைமையான கணேச விக்ரகத்தின் முன்னால் என் மாமியார் தீபங்களை ஏற்றினார். வீட்டை ஒளி அலங்காரம் செய்வதில் நாங்கள் ஈடுபட்டோம். பட்டாசுகள் வெடித்தோம்!</p>



<h4 class="wp-block-heading"><strong>மருமகளை அரவணைத்த மாமியார்!</strong></h4>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large"><img loading="lazy" decoding="async" width="860" height="572" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/MRS-INDIRA-GANDHI-WITH-SONIA-PRIYANKA-AND-RAHUL-1982_1.jpg" alt="" class="wp-image-2950" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/MRS-INDIRA-GANDHI-WITH-SONIA-PRIYANKA-AND-RAHUL-1982_1.jpg 860w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/MRS-INDIRA-GANDHI-WITH-SONIA-PRIYANKA-AND-RAHUL-1982_1-300x200.jpg 300w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/MRS-INDIRA-GANDHI-WITH-SONIA-PRIYANKA-AND-RAHUL-1982_1-768x511.jpg 768w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/MRS-INDIRA-GANDHI-WITH-SONIA-PRIYANKA-AND-RAHUL-1982_1-750x499.jpg 750w" sizes="auto, (max-width: 860px) 100vw, 860px" /></figure></div>



<p>தீபாவளி கொண்டாட்டம் முடிந்த மறுநாள் காலை, ராஜிவ் மேற்கு வங்கம் சென்றார். அன்று இரவு அதிகாலை நான்கு மணிக்கு நான் எழுந்தேன். எனக்கு ஆஸ்த்துமா மருந்து தேவைப்பட்டது. படுக்கை அறை விளக்கை ஏற்றி, மருந்துப் பெட்டிப் பக்கம் சென்றேன். அடுத்த அறையில் இருந்த என் மாமியாருக்குத் தொல்லைதரக் கூடாதென எண்ணினேன். ஆனால், என் அறைக்கதவு திறந்தது! எனக்கு ஒரே வியப்பு! அவர் கையில் டார்ச் விளக்கை வைத்துக்கொண்டு எனக்கு மாத்திரை தேடிக் கொடுத்து, ஒரு கோப்பைத் தண்ணீ ரையும் அளித்தார். மறுபடியும் உடல் நலக்குறைவு ஏற்பட்டால் தம்மைக் கூப்பிடச் சொன்னார். அநேகமாக அவர் தூங்காமல் விழித்திருந்திருப்பார் என எண்ணுகிறேன்.</p>



<p>அந்த வார இறுதியில், காஷ்மீர் செல்வது பற்றி மறுநாள் பேசத் தொடங்கினார். இலையுதிர் காலத்தில், சினார் மர வண்ண இலைப் பூக்களை அவர் பார்க்க மிகவும் விரும்பினார். அவற்றைக் கண் குளிரக் காண்பது என்பது அவருக்கு ஒரு முக்கிய சம்பவமாகத் தோன்றியது. காஷ்மீர் பற்றித் தம் உள்ளத்தில் அவர் கொண்டிருந்த எண்ண ஓட்டங்களுக்கு அது பிரியாவிடையோ என்னவோ? இருந்தும், என் உடல் நலக்குறைவு பற்றிய கவலை காரணமாக இரவில் அங்குத் தங்க அவர் தயங்கினார். நான் தனியாக வீட்டில் தங்க நேர்ந்தது பற்றிக் கவலை கொண்டார். இறுதியாகக் குழந்தைகளுடன் சென்றார்.</p>



<p>அக்டோபர் 28இல் காஷ்மீரிலிருந்து அவர் திரும்பினார். அன்றைய மாலைப்பொழுதை எங்கள் அறையில் அமைதியாகக் கழித்தார். வழக்கம்போல் தம் முராவினை (பிரம்பு நாற்காலி) எடுத்து வந்து அதில் அமர்ந்து அலுவலகப் பணிகளைக் கவனித்தார். இடையிடையே தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே எங்களோடு அளவளாவினார்.</p>



<p>அடுத்த நாள் அதிகாலை ஒரிசா பயணம்; அதை முடித்துக்கொண்டு மாலையில் வீடு திரும்பினார். அன்று புவனேஸ்வரத்தில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில், “நான் வாழ்வேனா, அல்லது சாவேனா என்பது பற்றி எனக்குக் கவலையில்லை. இறுதி மூச்சு உள்ளவரை தேசப்பணி ஆற்றுவேன். நான் இறந்தால்கூட, நான் சிந்தும் ஒவ்வொரு துளி இரத்தமும், ஒன்றுபட்ட சுதந்திர இந்தியாவைப் பலப்படுத்தி, வலுப்படுத்தும்” என்று உரையாற்றினார்.</p>



<p>அக்டோபர் 31, அரசு விருந்தோடு முடிவடையும்படி ஒரு பரப்பரப்பான நாளாக வீடு இருக்கும். காலையில் பள்ளிக்குப்போக விடைபெற்ற பிரியங்காவை முத்தமிட்டு, இறுக்கமாகத் தழுவினார்; ராகுலைக் கூப்பிட்டு, தாம் முன்பு கூறியவற்றை நினைவூட்டினார். அவர் அலுவலகம் புறப்படத் தயாராகும்போது, அவரது அறைக்குள் நான் நுழைந்தேன். மாலை விருந்து பற்றிச் சிறிது நேரம் பேசினார். கால தாமதமாகிவிட்டதால், மதிய உணவின்போது, இரவு விருந்து ஏற்பாடுபற்றிப் பேச எண்ணினார்.</p>



<h4 class="wp-block-heading"><strong>அன்னை இந்திரா படுகொலை!</strong></h4>



<p>நான் குளிக்கச் சென்றேன். அப்போது, வழக்கத்துக்கு மாறாகத் தீபாவளி பட்டாசு வெடிப்பது போன்ற ஒரு ஒலி கேட்டது. ஆனால், பட்டாசு வெடிபோலல்லாமல், முற்றிலும் மாறான ஓசை அது! குழந்தைகளின் தாதியிடம் (ஆயா), என்ன என்று பார்க்கச் சொன்னேன். எனினும், ஏதோ பயங்கரம் நிகழ்ந்ததை நான் உணர்ந்தேன். வெளியே ஓடி வந்தேன். அம்பாசிடர் கார் ஒன்றின் பின் இருக்கையில் என் மாமியார் கிடத்தப்பட்டிருந்தார். அவர் இறந்தவர்போன்று தோன்றினார். அவர் அருகில் நான் மண்டியிட்டு அமர்ந்தேன். பலத்த ஜனநெரிசல்களுக்கிடையே கார், மெதுவாக மருத்துவமனை நோக்கிச் சென்றது. எனக்குப் பேயறைந்த உணர்வு. ஏதேதோ எண்ணங்கள்! அவர் மூர்ச்சையாய் இருக்கிறாரா? அவர் காப்பாற்றப்படுவாரா? ராஜிவ் எங்கே? குழந்தைகள் எங்கே? படுபயங்கரம் ஒன்று நிகழ்ந்ததை என்னால் நம்ப முடியவில்லை;</p>



<h4 class="wp-block-heading"><strong>எல்லாமே முடிந்துவிட்டது!</strong></h4>



<p>ஆனால், எல்லாமே முடிந்துவிட்டது! மணித்துளிகள் உருண்டோடின. பெருந்திரளாக மக்கள், உற்றார் உறவினர் வந்து சென்றனர். குழந்தைகள் பள்ளியிலிருந்து அழைத்துவரப்பட்டு, சப்தர் ஜங் சாலையில் இருப்பதாக யாரோ கூறினார்.</p>



<p>ராஜிவ் மேற்கு வங்கத்தில் இருந்தார். தாயாருக்குக் காயமேற்பட்டதாக அவருக்குச் செய்தி அனுப்பப் பட்டது. டெல்லி திரும்பும் விமானத்தில் வானொலிச் செய்தியை அவர் கேட்டுள்ளார். மாலை 3.15 மணிக்கு மருத்துவமனையை அடைந்தார். மற்றவர்களோடு அவர் இருந்தார். ராஜிவுடன் ஒரே ஒரு விநாடி தனிமையில் இருக்க எனக்கு விருப்பம்! அவரைக் கட்சித் தலைமைப் பொறுப்பை ஏற்க அனைவரும் அழைப்பதாக ராஜிவ் என்னிடம் கூறினார். ராஜிவைப் பிரதமராக்க ஏற்பாடுகள் நடந்தன. அப் பதவி வேண்டாமென நான் அவரிடம் மன்றாடினேன்; கெஞ்சினேன்! மாற்றார்கள் மத்தியில் இந்த வேண்டுகோளை நான் விடுத்தேன். அவரும் கொல்லப்படுவார் என்றேன். அவர் என் கைகளை இறுகப் பிடித்துக்கொண்டு என்னைத் தழுவி அணைத்து, &#8216;விரக்தியடையக்கூடாது&#8217; என்றார். அவருக்குப் பிரதமர் பொறுப்பு ஏற்பதைத் தவிர வேறு வழியில்லை !</p>



<p>&#8220;எப்படியும் ஒருநாள் நான் கொல்லப்படலாம்” என்றார். அவர் எதிர்பார்த்தபடி கொல்லப்பட்டார்.</p>



<h3 class="wp-block-heading"><strong><span class="has-inline-color has-vivid-red-color">அன்னை இந்திரா மறைவிற்குப் பிறகு…</span></strong></h3>



<p><span class="has-inline-color has-very-dark-gray-color"><em>அன்று நவம்பர் மாதம் 19ஆம் நாள்!<br>என் மாமியார், இந்திய மண்ணில் முதன்முதலாய்ப் பாதம் பதித்த நாள்! ஆம், பிறந்த நாள்!</em></span></p>



<h4 class="wp-block-heading"><strong>இறுதிச் சடங்குகள் குறித்த இந்திரா!</strong></h4>



<p>எங்கள் குழந்தைகளுக்கு நாங்கள் இருவரும் ஒரே மாதிரியான, ஆயினும் தனித்தனியாகச் சில அறிவுரைகளை வழங்கினோம். &#8220;சோனியாவும் நானும் ஒரே நேரத்திலோ, ஒரே இடத்திலோ, வேறுவேறு இடங்களிலோ, இந்தியாவிலோ, அன்றி வெளியிலேயோ, எப்படி &#8211; எங்கே இறக்க நேர்ந்தாலும், எங்கள் உடல்கள் டெல்லிக்குக்கொண்டு வரப்படவேண்டும்! அங்கு இந்துசமயச் சடங்குகள் அனைத்தும் செம்மையாகச் செய்யப்பட்டுத் திறந்தவெளியிலே தகனம் செய்யப்பட வேண்டும்! எரிமின் நிலையத்தில் எங்கள் உடல்கள் எரிக்கப்படக் கூடாது! எங்கள் வழக்கப்படி, மூத்த குழந்தை ராகுல், தகனம் செய்யத் தீவைக்க வேண்டும். பின்னர், அலகாபாத் திரிவேணியில் கங்கையில் எங்கள் அஸ்தி கரைக்கப்பட வேண்டும்! அங்குதான் என் மூதாதையர்களின் அஸ்தி கரைக்கப்பட்டது&#8221; என்று ராஜிவ் கூறினார்.</p>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large"><img loading="lazy" decoding="async" width="538" height="187" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/rhgresh.jpg" alt="" class="wp-image-2861" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/rhgresh.jpg 538w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/rhgresh-300x104.jpg 300w" sizes="auto, (max-width: 538px) 100vw, 538px" /></figure></div>



<h4 class="wp-block-heading"><strong>எங்களுக்கு எல்லாமே அன்னை இந்திராதான்!</strong></h4>



<p>எங்கள் உலகத்தின் மையமாகத் திகழ்ந்தவர் என் மாமியார்தான்! நான் சிறுபெண்ணாக, அவர்களுக்கு மருமகளாக, இந்த எங்கள் வீட்டில் நுழைந்தபோது, கஷ்ட நஷ்டங்கள், இன்ப துன்பங்கள் ஆகியவற்றிலும் அவர்தான் முக்கியப் பங்கு வகித்தார். எங்கள் வாழ்க்கைச் சக்கரத்தின் மையம் அவர்தான்! எந்தப் பிரச்சினையாக இருந்தாலும், சச்சரவாக இருந்தாலும், சிறப்பு நிகழ்ச்சியானாலும் எதிலும் அவரையே நாங்கள் எதிர்கொண்டோம்! எங்களுக்கு நல்ல வழிகாட்ட, தவறு செய்தால் திட்டித் திருத்த, ஒரு செயலைச் செய்ய, ஊக்கமளிக்க, அன்பு காட்ட இதுவரை அவர் இருந்தார்!</p>



<p>ராஜிவைப் பொறுத்தவரை, அவருடைய குடும்பமே அவரது அன்னைதான்! குறிப்பிட்டுச் சொல்வதானால், ராஜிவினுடைய தாயார், அவருடைய வாழ்நாளின் கடைசி நான்கு ஆண்டுகளில் ஒரு கனிவான தாயாக, நல்ல நண்பனாக, இவற்றிற்கெல்லாம் மேலானவராகத் தோன்றினார்.</p>



<p>ராஜிவுக்கு என் மாமியார்தான் ஆசான், தலைவர் என எல்லாமுமே! ஆயினும், தாயாரின் எதிர்பாராத மரணம் குறித்து ராஜிவால் துக்கம்கொள்ள முடியவில்லை! தாங்கமுடியாத தமது துயரத்தையோ, மனக்காயத்தையோ ராஜிவால் வெளியில் காட்டிக்கொள்ள நேரமே இல்லை!</p>



<h4 class="wp-block-heading"><strong>மீளமுடியாத துயரம்!</strong></h4>



<p>தம் தாயாரின் அகால மரணமாகிய துயர நிகழ்வுக்குப் பின்னர் நடந்த ஒரு சம்பவம் என் நினைவில் இப்போதும் நிழலாடுகிறது. ராஜிவை நான் ஒரு நாள் வீடு முழுவதும் தேடினேன்! யாருக்கும் அவர் இருக்கும் இடம் தெரியவில்லை. அவர் தம் தாயாரின் அறையில் இருந்தார்! தாயாரோடு தொடர்புடைய பொருள்களை ஒவ்வொன்றாக அவரது அறையில் தனியே அமைதியாகப் பார்த்துக்கொண்டிருந்தார். ராஜிவுக்கு அந்தத் தனிமை அப்போது தேவைப்பட்டிருக்கிறது. எனவே, தனிமையில் மூழ்கியிருந்தார்.</p>



<p>தாயார் உயிருடன் இல்லாததை எண்ணிப் பலமுறை ராஜிவ் உணர்ந்து உருகியது உண்டு. பொதுவாழ்வில் ஈடுபட்டுப் பல பிரச்சினைகளை உறுதியுடன் எதிர்கொள்ள நேர்ந்த சூழ்நிலைகளிலெல்லாம் ராஜிவ் தம் தாயை நினைத்துக்கொண்டதுண்டு, இவ்வகையில், அவரிடமிருந்து ஆன்ம பலத்தையும் தைரியத்தையும் பெற்றார் எனலாம். பழமையும் பண்பாட்டுச் சிறப்பும் நிறைந்த ஒரு தேசத்தை வழிநடத்திச் செல்லும் பொறுப்பு இப்போது ராஜிவின் இளம் தோள்களில் சுமத்தப்பட்டிருந்தது!</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/excerpts-from-sonia-gandhis-book-my-rajiv/">அன்னை இந்திராவுக்கு உறுதுணையாக ராஜிவ் &#8211; சோனியா!</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://desiyamurasu.com/news-india/excerpts-from-sonia-gandhis-book-my-rajiv/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>தெருவிளக்கு வெளிச்சத்தில் ராஜீவை பார்த்த நேரு!</title>
		<link>https://desiyamurasu.com/news-india/nehru-glimpses-baby-rajiv-gandhi-under-streetlight/</link>
					<comments>https://desiyamurasu.com/news-india/nehru-glimpses-baby-rajiv-gandhi-under-streetlight/#comments</comments>
		
		<dc:creator><![CDATA[ஆ. கோபண்ணா]]></dc:creator>
		<pubDate>Thu, 20 Aug 2020 13:30:29 +0000</pubDate>
				<category><![CDATA[தேசிய அரசியல்]]></category>
		<category><![CDATA[indira gandhi]]></category>
		<category><![CDATA[jawaharlal nehru]]></category>
		<category><![CDATA[rajiv gandhi]]></category>
		<guid isPermaLink="false">https://desiyamurasu.com/?p=1598</guid>

					<description><![CDATA[<p>1944 ஆம் ஆண்டு ! ஆகஸ்டு திங்கள் 20 ஆம் நாள்! இந்திரா காந்தி ஃபெரோஸ் காந்தி தம்பதியருக்கு ராஜிவ் காந்தி தலைமகனாகப் பிறந்தார். ராஜிவின் பாட்டனாரான பண்டித ஜவஹர்லால் நேரு, விடுதலைப் போராட்டத்தின் காரணமாக அப்பொழுது கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பேரனைப் பார்க்கும் ஆவல் தாத்தாவுக்கு! மகனைத் தந்தைக்குக் காட்டும் ஆவல் அன்னை இந்திராவுக்கு ஒருநாள் அதிகாலை, ஜவஹர்லால் நேரு, கோவிந்து வல்லபபந்த் ஆகியோரைச் சிறையிலிருந்து போலீஸ்காரர்கள் ஒரு வேனில் ஏற்றிச் செல்லும்போது, தொலைவில் [&#8230;]</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/nehru-glimpses-baby-rajiv-gandhi-under-streetlight/">தெருவிளக்கு வெளிச்சத்தில் ராஜீவை பார்த்த நேரு!</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>1944 ஆம் ஆண்டு ! ஆகஸ்டு திங்கள் 20 ஆம் நாள்! இந்திரா காந்தி ஃபெரோஸ் காந்தி தம்பதியருக்கு ராஜிவ் காந்தி தலைமகனாகப் பிறந்தார். ராஜிவின் பாட்டனாரான பண்டித ஜவஹர்லால் நேரு, விடுதலைப் போராட்டத்தின் காரணமாக அப்பொழுது கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பேரனைப் பார்க்கும் ஆவல் தாத்தாவுக்கு! மகனைத் தந்தைக்குக் காட்டும் ஆவல் அன்னை இந்திராவுக்கு ஒருநாள் அதிகாலை, ஜவஹர்லால் நேரு, கோவிந்து வல்லபபந்த் ஆகியோரைச் சிறையிலிருந்து போலீஸ்காரர்கள் ஒரு வேனில் ஏற்றிச் செல்லும்போது, தொலைவில் ஒரு தெருவிளக்கு கம்பத்தின் அடியில் இந்திரா காந்தியும் ஃபெரோஸ் காந்தியும் தங்கள் பச்சிளம் குழந்தை ராஜிவை வெளிச்சத்தில் சற்றே தூக்கிக் காட்டினார்கள். வேன் நின்ற ஒருசில நிமிடங்களில் பேரனை அருகில் சென்று பார்க்க முடியவில்லையே என்ற வருத்தம் ஒருபுறம் தொலைவிலேனும் பார்த்தோமே என்ற மகிழ்ச்சி மறுபுறம்.</p>



<p>சிறைக்குத் திரும்பியவுடன் நேரு நெகிழ்ச்சியுடன் எழுதினார். ‘என் பிரியமுள்ள இந்து, உன் மகனைப் பார்த்தேன் நம் குடும்பத்திற்குரிய அந்த ரோஜா நிறத்தையும், ஒளிவீசும் கண்களையும் கண்டேன்! அருகில் வந்து பார்க்க இயலவில்லை என்றாலும், அந்தப் பிஞ்சு முகத்தின் அழகில் நம் குடும்பத்தின் சாயலை முழுமையாகக் கண்டேன்” என்று கவிதை நயத்தோடு எழுதியிருந்தார்.</p>



<p>ராஜிவ், இந்தியாவுக்காகவே பிறந்தார், வாழ்ந்தார், மடிந்தார்.</p>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large"><img loading="lazy" decoding="async" width="425" height="600" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/08/childhood_1.jpg" alt="" class="wp-image-1601" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/08/childhood_1.jpg 425w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/08/childhood_1-213x300.jpg 213w" sizes="auto, (max-width: 425px) 100vw, 425px" /></figure></div>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large"><img loading="lazy" decoding="async" width="505" height="640" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/08/childhood_3.jpg" alt="" class="wp-image-1602" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/08/childhood_3.jpg 505w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/08/childhood_3-237x300.jpg 237w" sizes="auto, (max-width: 505px) 100vw, 505px" /></figure></div>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large"><img loading="lazy" decoding="async" width="460" height="289" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/08/Nehru_Frose_RajivChild.jpg" alt="" class="wp-image-1603" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/08/Nehru_Frose_RajivChild.jpg 460w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/08/Nehru_Frose_RajivChild-300x188.jpg 300w" sizes="auto, (max-width: 460px) 100vw, 460px" /></figure></div>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large"><img loading="lazy" decoding="async" width="615" height="480" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/08/Jawaharlal_Nehru_and_Rajiv_Gandhi_on_horseback.jpg" alt="" class="wp-image-1606" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/08/Jawaharlal_Nehru_and_Rajiv_Gandhi_on_horseback.jpg 615w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/08/Jawaharlal_Nehru_and_Rajiv_Gandhi_on_horseback-300x234.jpg 300w" sizes="auto, (max-width: 615px) 100vw, 615px" /></figure></div>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large"><img loading="lazy" decoding="async" width="640" height="480" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/08/11.jpg" alt="" class="wp-image-1607" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/08/11.jpg 640w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/08/11-300x225.jpg 300w" sizes="auto, (max-width: 640px) 100vw, 640px" /></figure></div>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large"><img loading="lazy" decoding="async" width="650" height="540" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/08/19_08_2019-20_05_2019-rajiv-gandhi2_19239221_1247744_19499862_151514649.jpg" alt="" class="wp-image-1612" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/08/19_08_2019-20_05_2019-rajiv-gandhi2_19239221_1247744_19499862_151514649.jpg 650w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/08/19_08_2019-20_05_2019-rajiv-gandhi2_19239221_1247744_19499862_151514649-300x249.jpg 300w" sizes="auto, (max-width: 650px) 100vw, 650px" /></figure></div>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/nehru-glimpses-baby-rajiv-gandhi-under-streetlight/">தெருவிளக்கு வெளிச்சத்தில் ராஜீவை பார்த்த நேரு!</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://desiyamurasu.com/news-india/nehru-glimpses-baby-rajiv-gandhi-under-streetlight/feed/</wfw:commentRss>
			<slash:comments>2</slash:comments>
		
		
			</item>
	</channel>
</rss>
