<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>indian national congress Archives - தேசிய முரசு - Desiya Murasu</title>
	<atom:link href="https://desiyamurasu.com/tag/indian-national-congress/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://desiyamurasu.com/tag/indian-national-congress/</link>
	<description>DesiyaMurasu – Daily Opinions &#38; Analysis on Latest News  &#124; Tamil News</description>
	<lastBuildDate>Thu, 24 Dec 2020 11:07:06 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9</generator>

<image>
	<url>https://desiyamurasu.com/wp-content/uploads/2020/07/cropped-FAV-copy-1-32x32.png</url>
	<title>indian national congress Archives - தேசிய முரசு - Desiya Murasu</title>
	<link>https://desiyamurasu.com/tag/indian-national-congress/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>டிசம்பர் 28: இந்திய தேசிய காங்கிரசின் 136 ஆவது ஆண்டு நிறுவனநாள் விழா ! தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கொடி ஊர்வலம் ! காந்தியடிகள் சிலை முன் உறுதிமொழி ஏற்பு: தலைவர் கே.எஸ். அழகிரி அறிவிப்பு</title>
		<link>https://desiyamurasu.com/tncc-statements/indian-national-congress-136th-foundation-day-flag-procession-throughout-tamil-nadu/</link>
					<comments>https://desiyamurasu.com/tncc-statements/indian-national-congress-136th-foundation-day-flag-procession-throughout-tamil-nadu/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Admin]]></dc:creator>
		<pubDate>Wed, 23 Dec 2020 10:47:11 +0000</pubDate>
				<category><![CDATA[ஏவுகணைகள்]]></category>
		<category><![CDATA[indian national congress]]></category>
		<category><![CDATA[KS Alagiri]]></category>
		<guid isPermaLink="false">https://desiyamurasu.com/?p=3741</guid>

					<description><![CDATA[<p>இந்திய தேசிய காங்கிரஸின் 136 வது ஆண்டு நிறுவன நாள் விழா நாடு முழுவதும் வருகிற டிசம்பர் 28 அன்று மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படவுள்ளது. 200 ஆண்டுக் கால ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்து அண்ணல் காந்தியடிகள் தலைமையில் அகிம்சை வழியில் போராடி, விடுதலை பெற்றுத் தந்த பெருமை இந்திய தேசிய காங்கிரசுக்கு உண்டு. அதேபோல, இந்திய விடுதலைக்குப் பிறகு பண்டித நேரு தலைமையில் நவஇந்தியாவை உருவாக்கிய பெருமையும் காங்கிரஸ் பேரியக்கத்திற்கு உண்டு. சுதந்திரம் பெற்று கடந்த 74 [&#8230;]</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/tncc-statements/indian-national-congress-136th-foundation-day-flag-procession-throughout-tamil-nadu/">டிசம்பர் 28: இந்திய தேசிய காங்கிரசின் 136 ஆவது ஆண்டு நிறுவனநாள் விழா ! தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கொடி ஊர்வலம் ! காந்தியடிகள் சிலை முன் உறுதிமொழி ஏற்பு: தலைவர் கே.எஸ். அழகிரி அறிவிப்பு</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>இந்திய தேசிய காங்கிரஸின் 136 வது ஆண்டு நிறுவன நாள் விழா நாடு முழுவதும் வருகிற டிசம்பர் 28 அன்று மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படவுள்ளது. 200 ஆண்டுக் கால ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்து அண்ணல் காந்தியடிகள் தலைமையில் அகிம்சை வழியில் போராடி, விடுதலை பெற்றுத் தந்த பெருமை இந்திய தேசிய காங்கிரசுக்கு உண்டு. அதேபோல, இந்திய விடுதலைக்குப் பிறகு பண்டித நேரு தலைமையில் நவஇந்தியாவை உருவாக்கிய பெருமையும் காங்கிரஸ் பேரியக்கத்திற்கு உண்டு. சுதந்திரம் பெற்று கடந்த 74 ஆண்டுகளில், 54 ஆண்டுகள் இந்தியாவை ஆட்சி செய்து வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் சென்ற வரலாற்றுப் பெருமை காங்கிரஸ் இயக்கத்திற்கு மட்டுமே உண்டு. இன்றைக்கு இந்தியாவில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியில் பெரும் பங்கு காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலேயே ஏற்பட்டது.</p>



<p>இந்திய தேசிய காங்கிரஸ் நிறுவன நாள் விழா நடைபெறுகிற டிசம்பர் 28 ஆம் தேதியன்று, மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் சிறப்பான முறையில் நிகழ்ச்சிகளை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அன்று காலை மாவட்டத்தில் காந்தியடிகள் சிலை இருக்கும் முக்கிய பகுதிகளின் அருகில் உள்ள இடத்தில் புதிய கம்பத்தில் காங்கிரஸ் கொடியை ஏற்றி வைத்து, அதனைத் தொடர்ந்து 136 வது நிறுவன நாளை நினைவுகூறும் வகையில் காங்கிரஸ் கட்சியினர் 136 காங்கிரஸ் கொடிகளை கைகளில் ஏந்தி, தலையில் காந்தி குல்லா அணிந்து&nbsp; ஊர்வலமாக நடந்து சென்று காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ய வேண்டும். அங்கே புதிய வேளாண் சட்டங்கள், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு உள்ளிட்ட மக்கள் விரோத நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வரும் மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராகச் செயல்படவும், தமிழகத்தில் நடைபெற்று வரும் அராஜக ஊழல் ஆட்சியை அகற்றி நல்லாட்சி அமைந்திடவும் காங்கிரஸ் கட்சியினர் உரத்த குரலில் உறுதிமொழி ஏற்க வேண்டும்.</p>



<p>அதே நாளில் சென்னை, சத்தியமூர்த்தி பவனில் காலை 9.30 மணி அளவில் 150 அடி உயரக் கம்பத்தில் காங்கிரஸ் கொடியை ஏற்றி சிறப்புரை நிகழ்த்த இருக்கிறேன். சேவா தள அணிவகுப்பும் அங்கே நடைபெறும். அதனைத் தொடர்ந்து உறுதிமொழி எடுக்கப்படும். இந்திய விடுதலையிலும், வளர்ச்சியிலும் பெரும் பங்காற்றிய பெருமை மிக்க இந்திய தேசிய காங்கிரஸின் 136 வது ஆண்டு நிறுவன நாள் என்பது, இந்திய மக்களோடு இரண்டறக் கலந்து விட்ட ஒன்றாகும். அந்நாளில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் காங்கிரஸ் கொடி ஊர்வலத்தைச் சிறப்பாக நடத்திடுமாறு அனைத்து காங்கிரஸ் நண்பர்களையும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/tncc-statements/indian-national-congress-136th-foundation-day-flag-procession-throughout-tamil-nadu/">டிசம்பர் 28: இந்திய தேசிய காங்கிரசின் 136 ஆவது ஆண்டு நிறுவனநாள் விழா ! தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கொடி ஊர்வலம் ! காந்தியடிகள் சிலை முன் உறுதிமொழி ஏற்பு: தலைவர் கே.எஸ். அழகிரி அறிவிப்பு</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://desiyamurasu.com/tncc-statements/indian-national-congress-136th-foundation-day-flag-procession-throughout-tamil-nadu/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>சோனியா காந்தி : அடித்தட்டு மக்களின் நம்பிக்கை நட்சத்திரம்</title>
		<link>https://desiyamurasu.com/news-india/sonia-gandhi-hope-of-the-downtrodden-people/</link>
					<comments>https://desiyamurasu.com/news-india/sonia-gandhi-hope-of-the-downtrodden-people/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[ஆ. கோபண்ணா]]></dc:creator>
		<pubDate>Wed, 09 Dec 2020 11:37:10 +0000</pubDate>
				<category><![CDATA[தேசிய அரசியல்]]></category>
		<category><![CDATA[indian national congress]]></category>
		<category><![CDATA[sonia gandhi]]></category>
		<guid isPermaLink="false">https://desiyamurasu.com/?p=3516</guid>

					<description><![CDATA[<p>காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் 74 ஆவது பிறந்தநாள் விழா இன்று காங்கிரஸ் கட்சியினரால் வெகுவாகக் கொண்டாடப்படுகிறது. கட்சியின் தலைவராக, ஆட்சியின் ஆலோசகராக இந்த நாட்டு மக்களின், குறிப்பாக அடித்தட்டு மக்களுக்காக அவர் ஆற்றிய சேவை இங்கு&#160;நினைவுகூரப்படுகிறது&#8230;இந்திய&#160;தேசிய காங்கிரஸின் நீண்ட காலம் தலைவராக இருந்த&#160;பெருமையை&#160;சோனியா காந்தி பெற்றுள்ளார். இந்திய வரலாற்றில் மிகப் பழமையான மற்றும் மிகுந்த செல்வாக்குள்ள அரசியல் கட்சி&#160;இந்திய&#160;தேசிய காங்கிரஸ்.&#160;ராஜிவ்&#160;காந்தி படுகொலை நடந்து 7 ஆண்டுகளுக்குப் பின்னர், கடந்த 1998 ஆம் ஆண்டு தான் சோனியாவின் [&#8230;]</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/sonia-gandhi-hope-of-the-downtrodden-people/">சோனியா காந்தி : அடித்தட்டு மக்களின் நம்பிக்கை நட்சத்திரம்</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் 74 ஆவது பிறந்தநாள் விழா இன்று காங்கிரஸ் கட்சியினரால் வெகுவாகக் கொண்டாடப்படுகிறது. கட்சியின் தலைவராக, ஆட்சியின் ஆலோசகராக இந்த நாட்டு மக்களின், குறிப்பாக அடித்தட்டு மக்களுக்காக அவர் ஆற்றிய சேவை இங்கு&nbsp;நினைவுகூரப்படுகிறது&#8230;<br>இந்திய&nbsp;தேசிய காங்கிரஸின் நீண்ட காலம் தலைவராக இருந்த&nbsp;பெருமையை&nbsp;சோனியா காந்தி பெற்றுள்ளார். இந்திய வரலாற்றில் மிகப் பழமையான மற்றும் மிகுந்த செல்வாக்குள்ள அரசியல் கட்சி&nbsp;இந்திய&nbsp;தேசிய காங்கிரஸ்.&nbsp;ராஜிவ்&nbsp;காந்தி படுகொலை நடந்து 7 ஆண்டுகளுக்குப் பின்னர், கடந்த 1998 ஆம் ஆண்டு தான் சோனியாவின் தோள்களில் தலைவர் என்று பொறுப்பு ஏற்றப்பட்டது. அவரது தலைமையின் கீழ், காங்கிரஸ் கட்சி புத்துயிர் பெற்றதோடு,&nbsp;இந்தியாவைக்&nbsp;கட்டமைப்பதற்கான நம் முன்னோர்கள் கண்ட கனவை நிறைவேற்றும் பயணமாகவும் அமைந்தது.</p>



<p>2004 முதல் 2014 ஆம் ஆண்டு வரை, ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவராகவும் சிறப்பாகப் பணியாற்றினார்.</p>



<p><strong>சோனியா காந்தி வாழ்க்கை வரலாறு:<br></strong>1946 ஆம் ஆண்டு டிசம்பர் 9 ஆம் தேதி சோனியா காந்தி பிறந்தார். பள்ளிப்படிப்பை முடித்ததும், ஆங்கிலம் படிக்க&nbsp;கேம்ப்ரிட்ஜ்&nbsp;பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அங்குள்ள&nbsp;ட்ரினிட்டி&nbsp;கல்லூரியில் பொறியியல் படிப்பு படித்துக் கொண்டிருந்த&nbsp;ராஜிவ்&nbsp;காந்தியை&nbsp;சோனியா காந்தி சந்தித்தார்.&nbsp;<br>மனதைப்&nbsp;பரிமாறிக் கொண்ட இவர்கள் 1968 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அப்போது பிரதமராக இருந்த மாமியார் இந்திரா காந்தி வீட்டில் மருமகள் என்ற&nbsp;பொறுப்பை&nbsp;சோனியா காந்தி ஏற்றுக் கொண்டார். தன் குடும்பத்தின் மீது தீவிர கவனம் செலுத்துவதிலேயே சோனியா காந்தி தன் முழு நேரத்தையும் செலவிட்டார். இருந்தாலும், அவ்வப்போது, அரிதாக அரசியலில் தலை காட்டி வந்தார்.&nbsp;</p>



<p>அதேசமயம், இந்திரா காந்தியின் அலுவலகப் பணியிலும் சோனியா காந்தி உதவியாக இருந்தார்.&nbsp;ராஜிவ்&nbsp;காந்தி பிரதமரானபோதும், பின்னர் எதிர்க்கட்சித் தலைவரான போதும் சோனியா காந்தி கூடுதல் பொறுப்புகளை ஏற்றுக் கொண்டார். </p>



<p>அப்போது,&nbsp;ராஜிவ்&nbsp;காந்தியுடன் நாடு முழுவதும் அவர் பயணம் மேற்கொண்டார்.&nbsp;ராஜிவ்&nbsp;காந்தி வெற்றி பெற்ற&nbsp;அமேதி&nbsp;தொகுதியில் சுகாதாரம் மற்றும் நலப்பணிகளை மேற்கொண்டார்.&nbsp; இவ்வளவு பணிகளுக்கு&nbsp;இடையேயும்&nbsp;தன் குடும்பத்தின் மீதும், குடும்பத்தை வலுப்படுத்துவதிலும் அவர் அதிக கவனம் செலுத்தினார்.&nbsp;</p>



<p><strong>சோனியா காந்தியின் கல்வி :<br></strong>13 வயதிலேயே பள்ளிப் படிப்பை முடித்த சோனியா காந்தியை, புத்திசாலி, விடாமுயற்சியுடையவர், அர்ப்பணிப்புடையவர் என அவரது ஆசிரியர்கள் பாராட்டியிருக்கின்றனர். அதன்பிறகு, வெளிநாட்டு மொழிகளைக் கற்பதற்காக, ரஷ்யன்,&nbsp;ப்ரெஞ்ச்&nbsp;மற்றும் ஆங்கிலம் கற்பிக்கும்&nbsp;பள்ளியில்&nbsp;சேர்ந்தார்.</p>



<p>&nbsp; <strong>சோனியாவின் அரசியல் பயணம் :<br></strong>ராஜிவ்&nbsp;காந்தியை&nbsp;திருமணம் செய்து கொண்ட புதிதில் சோனியா காந்திக்கு அரசியலில் அவ்வளவு ஈடுபாடு கிடையாது. குடும்பத்தைக் கவனிப்பதற்கே அவருக்கு நேரம் போதவில்லை. 1991 ஆம் ஆண்டு நடந்த&nbsp;ராஜிவ்&nbsp;காந்தி படுகொலைக்குப் பிறகு,ராஜிவ்&nbsp;காந்தி&nbsp;பவுண்டேஷனை&nbsp;தொடங்கினார். அதோடு தற்கால ஆய்வுகள் குறித்த படிப்பை&nbsp;ராஜிவ்&nbsp;காந்தி பெயரில் ஆரம்பித்தார்.&nbsp;இவற்றுக்குத்&nbsp;தலைமையேற்றுச்&nbsp;சிறப்பான நிர்வகித்தார். 1997 ஆம் ஆண்டு கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் அடிப்படை&nbsp;உறுப்பினராகச்&nbsp;சேர்ந்தார். அதன்பிறகு 1998 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் தலைவரான அவர், கட்சியின் வளர்ச்சிக்கு&nbsp;பெரும் பங்காற்றினார்.</p>



<p>1999 ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலம்&nbsp;அமேதி&nbsp;மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது,&nbsp;மக்களவையில்&nbsp;எதிர்க்கட்சித் தலைவராகவும் பொறுப்பேற்றார். 2004 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் அதிக இடங்களில் வென்ற கட்சியாக உருவெடுத்தது. இதனால், கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அப்போது,&nbsp;ரேபரலி&nbsp;தொகுதியிலிருந்து சோனியா வெற்றி பெற்றிருந்தார்.</p>



<p><strong>தலைவராக&nbsp;சோனியா காந்தி :<br></strong>&nbsp;காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்ற பின்,&nbsp;வாஜ்பாய்&nbsp;தலைமை வகித்த தேசிய ஜனநாயகக்&nbsp;கூட்டணியின், ஒளிரும் இந்தியா என்ற கோஷத்தை, சோனியா காந்தியின் சாமானிய மனிதர் என்ற கோஷம் வெற்றி கொண்டது. மதச்சார்பின்மை, பிரதிநிதித்துவம், சமத்துவம் மற்றும் நலத்திட்டங்களில் சோனியா ஆற்றிய சேவை காங்கிரஸ் கட்சிக்கு&nbsp;புத்துணர்வூட்டியது. சோனியா காந்தியின் சிறந்த தலைமையின் கீழ், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 2 முறை ஆட்சி&nbsp;பொறுப்பேற்றது.</p>



<p><strong>ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர்:<br></strong>2004 ஆம் ஆண்டு தேர்வுக்குப் பிறகு, கூட்டணி ஆட்சி அமைக்கும்போது ஐக்கிய முற்போக்கு கூட்டணி உருவானது. இதன் தலைமைப்&nbsp;பொறுப்பைச்&nbsp;சோனியா காந்தி ஏற்றார். அப்போது, சோனியா காந்தி பிரதமராகும் வாய்ப்பு இருந்தது. அவரது ஆதரவாளர்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக அவர் பிரதமர் பதவியை ஏற்கவில்லை. அவர் வெளிநாட்டவர் என்ற காரணம் முன் வைக்கப்பட்டதால், சோனியா காந்தியே பிரதமர் பதவியை உதறித் தள்ளினார்.</p>



<p>அதன்பின்னர், மன்மோகன் சிங்கை பிரதமராக்கினார். அதேசமயம், நாட்டின் சமூக பொருளாதார மேம்பாடு குறித்து அரசுக்குப் பரிந்துரைக்கும் தேசிய ஆலோசனை குழுவின்&nbsp;தலைவராகப்&nbsp;பொறுப்பேற்றுச்&nbsp;சிறப்பாகப் பணியாற்றினார். அப்போது தான் கிராமப்புற&nbsp;வளர்ச்சிக்காகத்&nbsp;தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டம், தேசிய கிராமப்புற சுகாதாரத் திட்டம், ஜவஹர்லால் நேரு நகர மறுசீரமைப்புத் திட்டம்,தகவல் அறியும் உரிமைச் சட்டம் ஆகியவை கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தக்கது.<br>ஒரு அரசுப் பதவியில் மட்டுமே வகிக்க வேண்டும் என்ற சட்டம் கொண்டுவரப்பட்ட போது, தேசிய ஆலோசனை&nbsp;கவுன்சில்&nbsp;தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, எம்பியாக தொடர்ந்து, அனைவருக்கும்&nbsp;முன்மாதிரியாகத்&nbsp;திகழ்ந்தார். 2007 ஆம் ஆண்டு மகாத்மா காந்தியின் பிறந்தநாள் அன்று ஐக்கிய நாடுகள் சபையில் சோனியா காந்தி உரையாற்றினார்.&nbsp; இதனையடுத்து, அக்டோபர் 2 ஆம் தேதியை வன்முறை இல்லாத சர்வதேச தினமாக அறிவித்து ஐ.நா சபை தீர்மானம் நிறைவேற்றியது.</p>



<p>2009 ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மீண்டும் ஆட்சிக்கு வருவதில் சோனியா காந்தி முக்கிய பங்காற்றினார். அந்த தேர்தலில் காங்கிரஸ் மட்டும் 206 தொகுதிகளில் வெற்றி பெற்றது. மீண்டும் தேசிய ஆலோசனைக் குழுவின் தலைவரான சோனியா காந்தி, வறுமைக்&nbsp;கோட்டுக்குக்&nbsp;கீழ் வாழும் பெண்கள், குழந்தைகள் நலனுக்காக&nbsp;பெரும் பங்காற்றினார். அதோடு, சமூக நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுவதற்கும் அவர் முக்கிய காரணமாக இருந்தார்.</p>



<p><strong>&nbsp;சோனியா காந்தி பெற்ற விருதுகள்:<br></strong>*&nbsp; 2004 ஆம்&nbsp;ஆண்டு&nbsp;உலகத்திலேயே 3 ஆவது சக்திவாய்ந்த பெண்மணி என்று&nbsp;ஃபோர்ப்ஸ்&nbsp;இதழின் அங்கீகாரம்* 2006 ஆம் ஆண்டு&nbsp;புருஷெல்&nbsp;பல்கலைக்கழக கவுரவ&nbsp;டாக்டர்&nbsp;பட்டம்*2007 ஆம் ஆண்டு சோனியாவை உலகின் ஆறாவது சக்திவாய்ந்த பெண்மணி என&nbsp;ஃபோர்ப்ஸ்&nbsp;அங்கீகரித்தது.</p>



<p>* 2007. 2008 ம் ஆண்டுகளில்&nbsp; மக்களிடம் செல்வாக்கு பெற்ற உலகின் 100 பேரில்&nbsp;ஒருவராக&nbsp;சோனியா காந்தியை&nbsp;டைம்&nbsp;இதழ் தேர்வு செய்தது.</p>



<p>* 2008 ஆம் ஆண்டு சென்னை பல்கலைக்கழகம் கவுரவ&nbsp;டாக்டர்&nbsp;பட்டம் வழங்கியது.</p>



<p>* பிரிட்டிஷ்&nbsp;நியூ&nbsp;ஸ்டேட்ஸ்மேன்&nbsp;இதழ், 2010 ஆம் ஆண்டின் உலகில் மிகவும் மக்கள் செல்வாக்குள்ள 50 பேரில்&nbsp;ஒருவராக&nbsp;சோனியாவை&nbsp;தேர்வு செய்தது.</p>



<p>* சோனியா காந்தி 2 புத்தகங்கள் எழுதியுள்ளார்.&nbsp;ராஜீவும்&nbsp;ராஜீவின்&nbsp;உலகமும் என்ற தலைப்பிட்டு ஒரு புத்தகமும், சுதந்திரத்தின் மகள் என்ற தலைப்பிட்டு, நேரு மற்றும் இந்திராவுக்கு இடையான தந்தை, மகள் உறவை அழகாக வெளிப்படுத்தி மற்றொரு புத்தகமும் எழுதியுள்ளார்.</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/sonia-gandhi-hope-of-the-downtrodden-people/">சோனியா காந்தி : அடித்தட்டு மக்களின் நம்பிக்கை நட்சத்திரம்</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://desiyamurasu.com/news-india/sonia-gandhi-hope-of-the-downtrodden-people/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>நீதிமன்ற தலையீடு: காங்கிரஸ் தலைவர் கபில் சிபல் கடும் எதிர்ப்பு</title>
		<link>https://desiyamurasu.com/news-india/kapil-sibal-condemns-court-interference/</link>
					<comments>https://desiyamurasu.com/news-india/kapil-sibal-condemns-court-interference/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[எம்.மலைமோகன்]]></dc:creator>
		<pubDate>Sat, 25 Jul 2020 13:00:47 +0000</pubDate>
				<category><![CDATA[தேசிய அரசியல்]]></category>
		<category><![CDATA[indian national congress]]></category>
		<category><![CDATA[kapil sibal]]></category>
		<category><![CDATA[supreme court]]></category>
		<guid isPermaLink="false">https://desiyamurasu.com/?p=683</guid>

					<description><![CDATA[<p>களத்தில் இறங்கி போராடவும், நாட்டில் என்ன நடக்கிறது என்பதை மக்களுக்கு தெரிவிக்கவும் நேரம் வந்துவிட்டதாக, காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் கூறியுள்ளார். உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வின் தீர்ப்புகளை மீறி, உயர்நீதிமன்றங்கள் அரசியல் சாசனம் மற்றும் ஜனநாயக மதிப்பீடுகளை தகர்த்து எறிவதாகவும் அவர் அறிக்கை ஒன்றில் ஆவேசமாக குறிப்பிட்டுள்ளார். ராஜஸ்தான் முன்னாள் துணை முதலமைச்சர் சச்சின் பைலட் உள்ளிட்ட 19 காங்கிரஸ் எம்எல்ஏக்கள், காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை கூட்டத்தில் இரு முறை பங்கேற்கவில்லை. இதனையடுத்து, 19 [&#8230;]</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/kapil-sibal-condemns-court-interference/">நீதிமன்ற தலையீடு: காங்கிரஸ் தலைவர் கபில் சிபல் கடும் எதிர்ப்பு</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>களத்தில் இறங்கி போராடவும், நாட்டில் என்ன நடக்கிறது என்பதை மக்களுக்கு தெரிவிக்கவும் நேரம் வந்துவிட்டதாக, காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் கூறியுள்ளார்.</p>



<p>உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வின் தீர்ப்புகளை மீறி, உயர்நீதிமன்றங்கள் அரசியல் சாசனம் மற்றும் ஜனநாயக மதிப்பீடுகளை தகர்த்து எறிவதாகவும் அவர் அறிக்கை ஒன்றில் ஆவேசமாக குறிப்பிட்டுள்ளார்.</p>



<p>ராஜஸ்தான் முன்னாள் துணை முதலமைச்சர் சச்சின் பைலட் உள்ளிட்ட 19 காங்கிரஸ் எம்எல்ஏக்கள், காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை கூட்டத்தில் இரு முறை பங்கேற்கவில்லை.</p>



<p>இதனையடுத்து, 19 பேரையும் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்ய சபாநாயகருக்கு காங்கிரஸ் கட்சியின் கொறடா பரிந்துரை செய்திருந்தார். இதனையடுத்து, இது குறித்து விளக்கம் கேட்டு, 19 எம்எல்ஏக்களுக்கும் சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.</p>



<p>இதனை எதிர்த்து 19 எம்எல்ஏக்களும் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இந்த வழக்கு &nbsp;விசாரணைக்கு உகந்தது என்றும், உச்ச நீதிமன்ற பரிசீலனைக்குட்பட்டது என்றும் தீர்ப்பளித்தது. இதில் நீதிமன்றம் முடிவு எடுக்கும் வரை நோட்டீஸ் மீது நடவடிக்கை எடுக்க சபாநாயகருக்கு தடை விதிக்கப்பட்டது.</p>



<p>இந்நிலையில், முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான கபில் சிபல் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் வருமாறு:</p>



<p>மகாராஷ்ட்ராவில் என்ன நடந்தது என்று நமக்கு தெரியும். கடைசி நேரத்தில் முதலமைச்சருக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். அப்போதே குடியரசுத் தலைவர் ஆட்சி அகற்றிக்கொள்ளப்பட்டது.</p>



<p>கர்நாடகா மற்றும் மத்தியப் பிரதேசத்தில் எம்எல்ஏக், கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தபோதும் இதேதான் நடந்தது. பின்னர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கவிழ்க்கப்பட்டது.</p>



<p>பொம்மை வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், பேரவையில் மட்டுமே பெரும்பான்மை நிரூபிக்கப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்தது. அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த நபம் துகி வழக்கில் கேபினட் விருப்பப்பட்டால், &nbsp;பேரவையை ஆளுநர் கூட்டலாம் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது.</p>



<p>இவற்றை எல்லாம் கருத்தில் கொள்ளாமல், உச்சநீதிமன்ற அரசியல் சாசன பெஞ்ச் மற்றும் ஜனநாயகத்தை தகர்த்தெறியும் வகையில் உயர்நீதிமன்றங்கள் செயல்படுகின்றன.</p>



<p>இந்த சூழ்நிலையில் சாலைகளில் இறங்கி போராடவும், நாட்டில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை தெரிவிக்கும் கடமையும் காங்கிரஸ் கட்சிக்கும், வழக்குரைஞர்களுக்கும் உள்ளது என அவர் கூறியுள்ளார்.</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/kapil-sibal-condemns-court-interference/">நீதிமன்ற தலையீடு: காங்கிரஸ் தலைவர் கபில் சிபல் கடும் எதிர்ப்பு</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://desiyamurasu.com/news-india/kapil-sibal-condemns-court-interference/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>ராஜஸ்தானுக்கு ஒரு நீதி? தமிழகத்துக்கு ஒரு நீதியா?</title>
		<link>https://desiyamurasu.com/news-india/rajasthan-crisis-should-court-interfere-with-speakers-decisions-on-defection/</link>
					<comments>https://desiyamurasu.com/news-india/rajasthan-crisis-should-court-interfere-with-speakers-decisions-on-defection/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[எம்.மலைமோகன்]]></dc:creator>
		<pubDate>Fri, 24 Jul 2020 13:27:41 +0000</pubDate>
				<category><![CDATA[தேசிய அரசியல்]]></category>
		<category><![CDATA[ashok gehlot]]></category>
		<category><![CDATA[highcourt]]></category>
		<category><![CDATA[indian national congress]]></category>
		<category><![CDATA[rajasthan]]></category>
		<category><![CDATA[sachin pilot]]></category>
		<guid isPermaLink="false">https://desiyamurasu.com/?p=655</guid>

					<description><![CDATA[<p>ராஜஸ்தானில் காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் மீது கட்சி தாவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கும் சபாநாயகர் முடிவின் மீது நீதிமன்றம் குறுக்கிட முடியுமா? என்ற சட்ட ரீதியான கேள்வி எழுந்துள்ளது. ராஜஸ்தானில் துணை முதலமைச்சர் சச்சின் பைலட் தலைமையிலான காங்கிரஸ் எம்எல்ஏக்கள், முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினர். இதனையடுத்து, அதிருப்தி எம்எல்ஏக்கள் அனைவரும் ஹரியானா மாநிலத்தில் ரகசியமான இடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். (ஹரியானா மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சி நடைபெறுகிறது). கடந்த 13 ஆம் தேதி &#160;காங்கிரஸ் [&#8230;]</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/rajasthan-crisis-should-court-interfere-with-speakers-decisions-on-defection/">ராஜஸ்தானுக்கு ஒரு நீதி? தமிழகத்துக்கு ஒரு நீதியா?</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>ராஜஸ்தானில் காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் மீது கட்சி தாவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கும் சபாநாயகர் முடிவின் மீது நீதிமன்றம் குறுக்கிட முடியுமா? என்ற சட்ட ரீதியான கேள்வி எழுந்துள்ளது.</p>



<p>ராஜஸ்தானில் துணை முதலமைச்சர் சச்சின் பைலட் தலைமையிலான காங்கிரஸ் எம்எல்ஏக்கள், முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினர். இதனையடுத்து, அதிருப்தி எம்எல்ஏக்கள் அனைவரும் ஹரியானா மாநிலத்தில் ரகசியமான இடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். (ஹரியானா மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சி நடைபெறுகிறது).</p>



<p>கடந்த 13 ஆம் தேதி &nbsp;காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்துக்கு முதலமைச்சர் அசோக் கெலாட் அழைப்பு விடுத்திருந்தார். இதில் சச்சின் பைலட்டின் ஆதரவு எம்எல்ஏக்கள் கலந்து கொள்ளவில்லை.</p>



<p>இதனையடுத்து, கூட்டத்தில் கலந்து கொள்ளாத சச்சின் பைலட் ஆதரவு எம்எல்ஏ க்களை கட்சி தாவல் சட்டத்தின் கீழ் பதவி நீக்கம் செய்யுமாறு, சபாநாயகருக்கு &nbsp;காங்கிரஸ் கட்சியின் தலைமை கொறடா பரிந்துரைத்தார். அதனடிப்படையில், இது குறித்து விளக்கம் கேட்டு, சச்சின் பைலட் ஆதரவு எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார்.</p>



<p>சபாநாயகரின் நோட்டீஸை எதிர்த்து சச்சின் பைலட் ஆதரவு எம்எல்ஏக்கள் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கும் வரை, எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யும் நடவடிக்கையை நிறுத்தி வைக்குமாறு சபாநாயகரை உயர்நீதிமன்றம் கேட்டுக் கொண்டது. ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தின் இந்த வேண்டுகோளை உச்ச நீதிமன்றமும் ஏற்றது.</p>



<p>சபாநாயகர் முடிவு எடுப்பதை ஒரு வாரம் தள்ளிப் போடுவது பற்றி பிரச்சினை இல்லை. ஆனால், கட்சி தாவல் சட்டத்தின் கீழ் சபாநாயகர் எடுக்கும் முடிவில் தலையிடும் அதிகாரம் நீதிமன்றத்துக்கு உண்டா? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.</p>



<p>சபாநாயகரே அதிகாரமிக்கவர். கட்சி தாவல் சட்டத்தின் கீழ் சபாநாயகரின் நடவடிக்கையோ அல்லது முடிவுகளோ நீதிமன்ற ஆய்வுக்குட்பட்டது அல்ல என்று கட்சி தாவல் தடை சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.</p>



<p>ஆனால், சபாநாயகரின் முடிவு நீதிமன்ற ஆய்வுக்குட்பட்டதே என கடந்த 1992 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதன்மூலம் கட்சி தாவல் தடை சட்டத்தின் அடிப்படையே ஒன்றும் இல்லாமல் போனது.</p>



<p>சபாநாயகரின் முடிவுகள் ஆய்வுக்குட்பட்டது என்றால், சபாநாயகர் கட்சி சாராதவராகத்தான் இருக்க வேண்டும். ஆனால், எதார்த்தத்தில் நிலைமை அப்படி இல்லையே. சபாநாயகர்கள் அனைவரும் கட்சி சார்புடையவர்களாகவே இருக்கிறார்கள்.</p>



<p>ராஜஸ்தான் விவகாரம் குறித்து மக்களவையின் முன்னாள் பொதுச் செயலர் டிடி. ஆச்சார்யா கூறும்போது, &nbsp;&#8221;சபாநாயகர் முடிவு எடுக்கும் முன்பு, அதில் நீதிமன்றம் குறுக்கிட முடியாது. சபாநாயகரின் முடிவை வேண்டுமானால் நீதிமன்றம் மறுஆய்வு செய்யலாம். கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பது பற்றி முடிவு செய்யும் அதிகாரம் சபாநாயகருக்கு மட்டுமே உள்ளது.</p>



<p>ராஜஸ்தான் விவகாரத்தில் சபாநாயகர் முடிவு செய்யும் நடவடிக்கைக்கு உயர்நீதிமன்றம் முட்டுக்கட்டை போட்டுள்ளது. &nbsp;இது கட்சி தாவல் நடவடிக்கைக்கு தடை விதிப்பதை போன்றது. இது உச்சநீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்புகளுக்கு எதிரானது. இந்த கட்டத்தில் நீதிமன்ற தலையீடு முற்றிலும் தடுக்கப்படவேண்டும். இந்த வழக்கை ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்க வேண்டும். மேலும், தான் அனுப்பிய நோட்டீசுக்கு, நீதிமன்றத்திடம் சபாநாயகர் விளக்கம் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை&#8221; என்றார்.</p>



<p>இது குறித்து சட்ட வல்லுனர்கள் கூறும்போது, &#8221;கடந்த 2017 ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவையில், கட்சி கொறடாவின் உத்தரவை மீறி, அதிமுகவின் 11 எம்எல்ஏக்கள் வாக்களித்தனர். இது அப்பட்டமாக கட்சிதாவல் சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டிய வழக்காகும்.</p>



<p>இந்த வழக்கில் நோட்டீஸ் அனுப்பிய தமிழ்நாடு சபாநாயகர், 11 எம்எல்ஏக்கள் பதில் அளித்த பிறகு, சட்டத்தின் ஓட்டையைப் பயன்படுத்தி அதன் மீது நடவடிக்கை எடுக்காமல் உள்ளார். இது தொடர்பாக வழக்கு தொடர்ந்த போது, சபாநாயகருக்கு காலக்கெடு விதிக்க முடியாது என உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் தெரிவித்தன.</p>



<p>ஆனால், இதே போன்ற வேறு வழக்குகளில் நீதிமன்றங்கள் தலையிட்டுள்ளன என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. 11 எம்எல்ஏக்கள் விசயத்தில் சபாநாயகர் முடிவு எடுப்பதற்குள், தமிழக சட்டப்பேரவையின் காலமும் நிறைவு பெற்றுவிடும். இதுபோன்ற நிகழ்வுகளில் நீதிமன்றம் குறுக்கிடாமல் இருப்பது , கட்சி தாவல் தடை சட்டத்தின் நோக்கம் நிறைவேறாமல் போக வழிவகுக்கும்&#8221; &nbsp;என்றனர்.</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/rajasthan-crisis-should-court-interfere-with-speakers-decisions-on-defection/">ராஜஸ்தானுக்கு ஒரு நீதி? தமிழகத்துக்கு ஒரு நீதியா?</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://desiyamurasu.com/news-india/rajasthan-crisis-should-court-interfere-with-speakers-decisions-on-defection/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
	</channel>
</rss>
