<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>India Archives - தேசிய முரசு - Desiya Murasu</title>
	<atom:link href="https://desiyamurasu.com/tag/india/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://desiyamurasu.com/tag/india/</link>
	<description>DesiyaMurasu – Daily Opinions &#38; Analysis on Latest News  &#124; Tamil News</description>
	<lastBuildDate>Sat, 10 Oct 2020 08:38:09 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.8.3</generator>

<image>
	<url>https://desiyamurasu.com/wp-content/uploads/2020/07/cropped-FAV-copy-1-32x32.png</url>
	<title>India Archives - தேசிய முரசு - Desiya Murasu</title>
	<link>https://desiyamurasu.com/tag/india/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>இந்தியாவில் இதுவரை 15 கோடி பேர் வேலை இழப்பு: ட்விட்டரில் பொங்கி எழுந்த 40 லட்சம் இளைஞர்கள்</title>
		<link>https://desiyamurasu.com/news-india/the-army-of-the-unemployed-wait-for-secure-and-salaried-jobs-but-the-govt-is-in-denial/</link>
					<comments>https://desiyamurasu.com/news-india/the-army-of-the-unemployed-wait-for-secure-and-salaried-jobs-but-the-govt-is-in-denial/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[ஆ. கோபண்ணா]]></dc:creator>
		<pubDate>Sat, 10 Oct 2020 08:32:25 +0000</pubDate>
				<category><![CDATA[தேசிய அரசியல்]]></category>
		<category><![CDATA[India]]></category>
		<category><![CDATA[unemployment]]></category>
		<guid isPermaLink="false">https://desiyamurasu.com/?p=2588</guid>

					<description><![CDATA[<p>கொரோனா பரவல் காரணமாக பொது முடக்கம் அறிவிக்கப்பட்டு 6 மாதங்கள் முடிந்துள்ள நிலையில், இந்தியாவில் ஏற்பட்டுள்ள வேலை இழப்பு பிரச்சினை அபாயக் கட்டத்தை எட்டியுள்ளதாக, நிபுணர்கள் எச்சரித்துள்ளார்கள். இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. இந்த பாதிப்பு அடுத்த தலைமுறையையும் பாதிக்கும் என எச்சரிக்கிறார் இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையத்தின் தலைமை செயல் அதிகாரியும், பொருளாதார நிபுணருமான  மகேஷ் வ்யாஸ். இந்த சூழலில், பிரதமர் மோடியின் 70 ஆவது பிறந்தநாள் அன்று, ட்விட்டரில் புயலே வீசியது.  பிரதமரின் பிறந்தநாளைத் தேசிய &#8216;வேலையில்லா திண்டாட்ட  தினமாக&#8217; 40 லட்சம் ட்விட்டர் பதிவாளர்கள் கடைப்பிடித்தனர். 2 கோடி இளைஞர்களுக்கு [&#8230;]</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/the-army-of-the-unemployed-wait-for-secure-and-salaried-jobs-but-the-govt-is-in-denial/">இந்தியாவில் இதுவரை 15 கோடி பேர் வேலை இழப்பு: ட்விட்டரில் பொங்கி எழுந்த 40 லட்சம் இளைஞர்கள்</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>கொரோனா பரவல் காரணமாக பொது முடக்கம் அறிவிக்கப்பட்டு 6 மாதங்கள் முடிந்துள்ள நிலையில், இந்தியாவில் ஏற்பட்டுள்ள வேலை இழப்பு பிரச்சினை அபாயக் கட்டத்தை எட்டியுள்ளதாக, நிபுணர்கள் எச்சரித்துள்ளார்கள்.</p>



<p>இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. இந்த பாதிப்பு அடுத்த தலைமுறையையும் பாதிக்கும் என எச்சரிக்கிறார் இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையத்தின் தலைமை செயல் அதிகாரியும், பொருளாதார நிபுணருமான  மகேஷ் வ்யாஸ்.</p>



<p>இந்த சூழலில், பிரதமர் மோடியின் 70 ஆவது பிறந்தநாள் அன்று, ட்விட்டரில் புயலே வீசியது.  </p>



<p>பிரதமரின் பிறந்தநாளைத் தேசிய &#8216;வேலையில்லா திண்டாட்ட  தினமாக&#8217; 40 லட்சம் ட்விட்டர் பதிவாளர்கள் கடைப்பிடித்தனர். 2 கோடி இளைஞர்களுக்கு ஆண்டுதோறும் வேலை வாய்ப்பு அளிக்கப்படும் என, கடந்த 2014 ஆம் ஆண்டு மோடி அளித்த வாக்குறுதியைக் கேலி செய்து பதிவிட்டிருந்தனர்.</p>



<p>அரசு ஊழியர்கள் பொது முடக்கத்துக்குப் பிறகும் முழுச் சம்பளம் பெறுகின்றனர். அவர்களுக்கு வேலைப் பாதுகாப்பு உள்ளது. அதனால் படித்துவிட்டு வேலை இல்லாமல் இருப்பவர்கள் அரசு வேலையை எதிர்பார்க்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அமைப்பு சாரா மற்றும் தனியார் துறையில் திடீரென வேலை இழப்பு ஏற்பட்டதால், ஏராளமானோர் வருவாயை இழந்துள்ளனர்.</p>



<p>பொது முடக்கத் தளர்வுகளை அறிவித்து வேலைக்குப் போகச் சொன்னார்கள். ஆனால், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல துறைகளில் வேலை இல்லாமல் போனது. வருவாய் இழப்பால் குடும்பத்தை  எப்படி சமாளிப்பது என்று புரியாமல் லட்சக்கணக்கானோர் தவிக்கின்றனர்.</p>



<p>தனியார் வேலைக்கு உத்தரவாதம் இல்லாததால், பல  இளைஞர்களுக்குத் திருமணம் நடப்பதுகூட கேள்விக்குறியாகியுள்ளது. அரசுப் பணி இருந்தால் மட்டுமே அவர்களுக்குப் பெண் கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. காலியாக உள்ள அரசுப் பணியிடங்களை மத்திய அரசு நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கை இளைஞர் மத்தியில் எழுந்துள்ளது.</p>



<p>அரசுத் துறைகள் தனியார்மயமாவதையும், பொதுத்துறை நிறுவனங்கள் விற்கப்படுவதையும் தடுத்து நிறுத்த வேண்டும் என்று ட்விட்டரில் பொங்கி எழுந்துள்ளனர் இளைஞர்கள்.<br>கடந்த 3 ஆண்டுகளாக வேலை இல்லா திண்டாட்டம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட பொது முடக்கத்துக்குப் பிறகு, வேலை இல்லா திண்டாட்டம் இன்னும் அதிகரித்து இளைஞர்கள் வாழ்க்கை இருளில் மூழ்கியுள்ளது. இத்தகைய நிலை, கிரிமினல் குற்றங்கள் அதிகரிக்க வழிவகுக்கும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.</p>



<p>கடந்த 1932-33 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் பொருளாதார மந்தநிலை உச்சத்திலிருந்தபோது, ஒன்றரை கோடி பேர் வேலை இழந்தனர். இது குறித்து யோகேந்திர யாதவ் எழுதிய கட்டுரை ஒன்றில், &#8216;வேலைவாய்ப்பின்றி இருப்போர் எண்ணிக்கை 5 கோடியைத் தாண்டக் கூடாது&#8217; என்று குறிப்பிட்டிருந்தார்.</p>



<p>ஆனால், இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையத்தின் மதிப்பீட்டில், கடந்த ஏப்ரல்-ஆகஸ்ட் மாதங்களில் இந்தியாவில் 12 கோடி பேர் (மாத ஊதியம் பெற்று வந்தவர்கள்) வேலை இழந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக இந்தியாவில் வேலை இழந்தவர்களின் எண்ணிக்கை 15 கோடியைத் தாண்டும் என்றும் அந்த மதிப்பீட்டில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. </p>



<p>அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையே 33 கோடி தான். அதில் பாதி அளவுக்கு இந்தியாவில் வேலை இழப்பு ஏற்பட்டுள்ளதை நினைக்கும் போது, ட்விட்டரில் கொதித்து எழுந்த இளைஞர்களின் பக்கம் நியாயம் இருப்பது புரிகிறது.</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/the-army-of-the-unemployed-wait-for-secure-and-salaried-jobs-but-the-govt-is-in-denial/">இந்தியாவில் இதுவரை 15 கோடி பேர் வேலை இழப்பு: ட்விட்டரில் பொங்கி எழுந்த 40 லட்சம் இளைஞர்கள்</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://desiyamurasu.com/news-india/the-army-of-the-unemployed-wait-for-secure-and-salaried-jobs-but-the-govt-is-in-denial/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>இந்தியாவில் கிறிஸ்தவம் தோல்வியடைந்ததா?: ஊடக விமர்சனத்துக்கு  ஆராய்ச்சியாளர் பதிலடி</title>
		<link>https://desiyamurasu.com/secularism/christianity-hasnt-failed-in-india-conversion-not-goal/</link>
					<comments>https://desiyamurasu.com/secularism/christianity-hasnt-failed-in-india-conversion-not-goal/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[ஆ. கோபண்ணா]]></dc:creator>
		<pubDate>Mon, 14 Sep 2020 08:18:41 +0000</pubDate>
				<category><![CDATA[மதச்சார்பின்மை]]></category>
		<category><![CDATA[Christianity]]></category>
		<category><![CDATA[Conversion]]></category>
		<category><![CDATA[India]]></category>
		<category><![CDATA[Religion]]></category>
		<guid isPermaLink="false">https://desiyamurasu.com/?p=2275</guid>

					<description><![CDATA[<p>&#8216;இந்தியாவில் கிறிஸ்தவம் ஏன் தோல்வியடைந்தது?&#8217; என்ற கேள்வியுடன் முக்கிய ஊடகங்களின் நிபுணர்கள் ஆராயத் தொடங்கியுள்ளனர். சமீபத்தில் மூத்த பத்திரிகையாளர் திலிப் மண்டல் கூறும்போது, &#8216;கிறிஸ்தவ மதத்துக்கு இந்தியாவில் எதிர்காலம் இல்லை&#8217; என்ற விவாதத்தை முன்னெடுத்துள்ளார். &#8221;கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்கள் மதமாற்றம் செய்வதாக ஆர்எஸ்எஸ் அமைப்போ அல்லது விஸ்வ இந்து பரிசத் அமைப்போ தவறான எச்சரிக்கை அல்லது பதற்றத்தை பரப்பியதை காரணமாக கூற முடியாது&#8221; என்றும் தெரிவித்துள்ளார். மேலும், இந்தியாவில் கிறிஸ்தவ மக்கள் தொகை குறைந்து வருவதாகவும் மண்டல் [&#8230;]</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/secularism/christianity-hasnt-failed-in-india-conversion-not-goal/">இந்தியாவில் கிறிஸ்தவம் தோல்வியடைந்ததா?: ஊடக விமர்சனத்துக்கு  ஆராய்ச்சியாளர் பதிலடி</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>&#8216;இந்தியாவில் கிறிஸ்தவம் ஏன் தோல்வியடைந்தது?&#8217; என்ற கேள்வியுடன் முக்கிய ஊடகங்களின் நிபுணர்கள் ஆராயத் தொடங்கியுள்ளனர். சமீபத்தில் மூத்த பத்திரிகையாளர் திலிப் மண்டல் கூறும்போது, &#8216;கிறிஸ்தவ மதத்துக்கு இந்தியாவில் எதிர்காலம் இல்லை&#8217; என்ற விவாதத்தை முன்னெடுத்துள்ளார். &#8221;கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்கள் மதமாற்றம் செய்வதாக ஆர்எஸ்எஸ் அமைப்போ அல்லது விஸ்வ இந்து பரிசத் அமைப்போ தவறான எச்சரிக்கை அல்லது பதற்றத்தை பரப்பியதை காரணமாக கூற முடியாது&#8221; என்றும் தெரிவித்துள்ளார். மேலும், இந்தியாவில் கிறிஸ்தவ மக்கள் தொகை குறைந்து வருவதாகவும் மண்டல் சுட்டிக்காட்டியுள்ளார்.<br><br>கல்வி, மருத்துவம், கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்களின் சமூகப் பணி மூலம் மதமாற்றம் பிரதானமாக நடைபெறுவது அல்ல என்பதை வெளிப்படையாக அங்கீகரிக்க மண்டல் மறுக்கிறார். அவர் குறிப்பிட்டுள்ள கிறிஸ்தவ அமைப்பான கம்பேஷன் இன்டர்நேஷனலின் ஒரே நோக்கம் இந்தியாவில் சமூகப் பணியில் ஈடுபடுவதுதான். கம்பேஷன் இன்டர்நேஷனல் போன்ற அமைப்புகள் மீது மதமாற்றம் செய்ததாக இதுவரை எந்த புகாரும் இல்லை.<br><br>இந்தியாவில் கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்களின் பணி, பிராமணர்களுக்கும் உயர் சாதியினருக்கும் ஒரு கருவியாக மாறியது என்ற திலீப் மண்டலின் கடுமையான விமர்சனம் ஆதாரமற்றது. கடந்த நூற்றாண்டில் கேரளாவில் கிறிஸ்தவம் தோல்வியுற்றதால், பலர் பிராமணர்களாக மாறிவிட்டதாக கூறுகிறார். அவர் சொல்லும் காலத்தில்  கேரளாவில்(செயின்ட் தாமஸ் கேரளாவுக்கு வந்ததாக நம்பப்படும் காலத்தில்) பிரமாணர்கள் இருந்தார்களா? என்பதில் வரலாற்று ஆய்வாளர்களிடையே மாறுபட்ட கருத்து நிலவுகிறது. 8 ஆவது நூற்றாண்டில் பிராமணர்களே இல்லை என்றும் சில வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.<br><br>அடுத்ததாக, கிறிஸ்தவப் பள்ளிகளில் கல்வியின் தரம் குறித்தும் மண்டல் கேள்வி எழுப்புகிறார். இந்த பள்ளிகளில் ஆங்கிலம் கற்பிக்கப்படுவதால், உயர் சாதியினர் மற்றும் சாதி அடிப்படையிலான கல்வியாக மாறியிருப்பதாகவும், தலித்கள் வடநாட்டு மொழியை கற்கவேண்டிய நிர்பந்தம் ஏற்படுவதாகவும் திலீப் மண்டல் தெரிவித்துள்ளார். எப்போதாவது அவர் தலித்துகளையோ அல்லது பழங்குடியின கிறிஸ்தவர்களையோ சந்தித்து இருக்கிறாரா?<br><br>அநேகமாக, அம்பேத்காரின்  &#8216;சாதி ஒழிப்பு&#8217; என்ற புத்தகத்தை மண்டல் படித்திருப்பார் என்று கருதுகிறேன். அதில், &#8221;பழங்குடியினர் காட்டுமிராண்டிகளாக இருந்தார்கள் என்பதை இந்துக்கள் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். ஏனென்றால், அவர்கள் நாகரிகம்,மருத்துவ உதவி, சீர்திருத்தம் மற்றும் அவர்கள் நல்ல குடிமக்களாக மாற எந்த முயற்சியும் செய்யவில்லை. பழங்குடியினத்தவருக்கு கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்கள் செய்ததைப் போல், இந்துக்கள் செய்ததுண்டா? சாதியை காப்பாற்றுவதற்காகவே இந்துக்கள் தங்கள் முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்துக் கொண்டுள்ளார்கள்&#8221; என்று அம்பேத்கார் குறிப்பிட்டுள்ளார்.<br><br>இந்தியாவில் கிறிஸ்தவர்களுக்கு நீண்ட நெடிய பாரம்பரியம் இருந்தால், கிறிஸ்தவ மக்கள் தொகை 3 சதவிகிதத்துக்குள் இருப்பது ஏன்? என்று திலீப் மண்டல் உள்ளிட்ட பலர் விமர்சிக்கின்றனர். நல்லவேளை, தாய் மதத்துக்கு திரும்புவதால் தான் கிறிஸ்தவ மக்கள் தொகை அதிகரிக்கவில்லை என்று அவர்கள் கூறவில்லை. அநேகமாக அவர்கள் எழுப்பும் கேள்வி, இந்தியாவில் பார்சி மக்கள் தொகை குறைந்ததற்கும் பொருந்தும். கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்காததற்கு, மதமாற்ற செய்ய தவறியதே காரணம் என்று சொல்ல முடியாது.<br><br>இந்தியாவில் எடுக்கப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து கேள்வி எழுப்புகிறார் பிலிப் ஜென்கின்ஸ். இந்த கணக்கெடுப்பு உலகிலேயே &#8216;சிறந்த கற்பனை&#8217; என்கிறார். இந்தியாவில் கிறிஸ்தவர்கள் குறித்த அதிகாரப்பூர்வ மக்கள் தொகை கணக்கெடுப்பு ஏதும் இல்லை என்றும், இந்த எண்ணிக்கை என்பது ஆய்வாளர்கள் கணிப்பின் அடிப்படையிலேயே அமைந்துள்ளதாகவும் அவர் கூறுகிறார்.<br><br>கிறிஸ்தவர்கள் எண்ணிக்கை குறைத்து மதிப்பிடப்படுவதற்கு தீவிர இந்து அமைப்புகளே காரணம் என்று பிலிப் ஜென்கின்ஸ் சுட்டிக்காட்டுகிறார். கிறிஸ்தவர்களின் வலுவான எண்ணிக்கையை குறைத்து மதிப்பிடுவதற்கு, உள்ளூர் அரசு அதிகாரிகளும் காவல் துறையினரும் உடந்தையாக இருக்கிறார்கள்.<br><br>சுதந்திர இந்தியாவில் அல்பேனியாவிலிருந்து வந்த அன்னை தெரஸா செய்த சேவை மறக்க இயலாது. உடல்நலம் பேணுதல் மூலம் ஏழை மக்களுக்காக தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர். மதமாற்றம் குறித்த விவாதங்களில் இருந்து விலகியே நின்றவர். &#8221;உங்களை நல்ல இந்துவாக, நல்ல கிறிஸ்தவராக, நல்ல முஸ்லீமாக மாற்றம் செய்கிறேன்&#8221; என்று கூறி மதமாற்றத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தவர்.<br><br>1970 ஆம் ஆண்டிலிருந்தே இந்தியாவில் வெளிநாட்டு தொண்டு நிறுவனங்கள் ஏதும் செயல்படவில்லை. இந்தியாவில் உள்ள கிறிஸ்தவ உயரதிகாரிகளின் உத்தரவுப்படியே இந்திய தேவாலயங்களும், கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களும் இயங்கின. அதோடு, இந்தியாவில் உள்ள கிறிஸ்தவ தலைவர்கள் விடுதலைப் போராட்டத்திலும், சமூக சீர்திருத்த நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளதை வரலாறு சொல்லிக் கொண்டே தான் இருக்கிறது.<br><br>கட்டுரையாளர்: ஜேசுதாஸ் மாத்யூ அத்யால்<br><br>(பாஸ்டன் பல்லைக்கழக உலக கிறிஸ்தவர்கள் மையத்தின் சிறப்பு ஆராய்ச்சியாளராகப் பணியாற்றுகிறார். கேம்பிரிட்ஜ் ஹார்டுவர்ட்ஸ் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளராகப் பணியாற்றியவர்.)</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/secularism/christianity-hasnt-failed-in-india-conversion-not-goal/">இந்தியாவில் கிறிஸ்தவம் தோல்வியடைந்ததா?: ஊடக விமர்சனத்துக்கு  ஆராய்ச்சியாளர் பதிலடி</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://desiyamurasu.com/secularism/christianity-hasnt-failed-in-india-conversion-not-goal/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
	</channel>
</rss>
