<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>india growth Archives - தேசிய முரசு - Desiya Murasu</title>
	<atom:link href="https://desiyamurasu.com/tag/india-growth/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://desiyamurasu.com/tag/india-growth/</link>
	<description>DesiyaMurasu – Daily Opinions &#38; Analysis on Latest News  &#124; Tamil News</description>
	<lastBuildDate>Sat, 15 Aug 2020 02:22:34 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.8.3</generator>

<image>
	<url>https://desiyamurasu.com/wp-content/uploads/2020/07/cropped-FAV-copy-1-32x32.png</url>
	<title>india growth Archives - தேசிய முரசு - Desiya Murasu</title>
	<link>https://desiyamurasu.com/tag/india-growth/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>வளர்ச்சி பாதையில் இந்தியா 1950 &#8211; 2012</title>
		<link>https://desiyamurasu.com/news-economics/growth-of-india-from-1950-to-2012/</link>
					<comments>https://desiyamurasu.com/news-economics/growth-of-india-from-1950-to-2012/#comments</comments>
		
		<dc:creator><![CDATA[ஆ. கோபண்ணா]]></dc:creator>
		<pubDate>Sat, 15 Aug 2020 02:21:37 +0000</pubDate>
				<category><![CDATA[பொருளாதாரம்]]></category>
		<category><![CDATA[india growth]]></category>
		<category><![CDATA[india in 1950]]></category>
		<guid isPermaLink="false">https://desiyamurasu.com/?p=1434</guid>

					<description><![CDATA[<p>இந்தியா விடுதலைக்கு பிறகு ஏறத்தாழ 60 ஆண்டுகள் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றது. முதல் பிரதமர் நேரு உள்ளிட்டவர்கள் இந்தியாவை வளர்ச்சி பாதையில் வெற்றிகரமாக அழைத்து சென்றதற்கு புள்ளிவிவரங்கள் இங்கே ஆதாரமாக தரப்பட்டு உள்ளன. இத்துடன் பிரதமர் மோடியின் 6 ஆண்டு ஆட்சியை ஒப்பிட்டு பார்த்தால், இந்தியாவின் வளர்ச்சிக்கு காங்கிரஸ் கட்சிதான் காரணம் என்று நெஞ்சை நிமிர்த்தி கூறலாம். தேசியமுரசு ஜூன் 2013 இதழில் வெளிவந்த கட்டுரை : ஆங்கில ஆட்சியாளர்களின் 200 ஆண்டுகால ஆதிக்கத்தை எதிர்த்து [&#8230;]</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-economics/growth-of-india-from-1950-to-2012/">வளர்ச்சி பாதையில் இந்தியா 1950 &#8211; 2012</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p><em><span class="has-inline-color has-vivid-red-color">இந்தியா விடுதலைக்கு பிறகு ஏறத்தாழ 60 ஆண்டுகள் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றது. முதல் பிரதமர் நேரு உள்ளிட்டவர்கள் இந்தியாவை வளர்ச்சி பாதையில் வெற்றிகரமாக அழைத்து சென்றதற்கு புள்ளிவிவரங்கள் இங்கே ஆதாரமாக தரப்பட்டு உள்ளன. இத்துடன் பிரதமர் மோடியின் 6 ஆண்டு ஆட்சியை ஒப்பிட்டு பார்த்தால், இந்தியாவின் வளர்ச்சிக்கு காங்கிரஸ் கட்சிதான் காரணம் என்று நெஞ்சை நிமிர்த்தி கூறலாம்.</span></em></p>



<h4 class="wp-block-heading"><strong>தேசியமுரசு ஜூன் 2013 இதழில் வெளிவந்த கட்டுரை :</strong></h4>



<p>ஆங்கில ஆட்சியாளர்களின் 200 ஆண்டுகால ஆதிக்கத்தை எதிர்த்து 1885 இல் தொடங்கப்பட்ட இந்திய தேசிய காங்கிரஸ் 60 ஆண்டு காலம் போராடி 1947 ஆகஸ்ட் 15 இல் இந்தியாவுக்குச் சுதந்திரம் பெற்றுத் தந்தது.</p>



<p>கடந்த 66 ஆண்டுகளில் 15 நாடாளுமன்றத் தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. இதில் 12 தேர்தல்களில் வெற்றி பெற்று 56 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவை ஆட்சி செய்த பெருமை காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமே உண்டு.</p>



<p>ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்தில் முடங்கி கிடந்த பொருளாதாரத்தைப் பின்தங்கிய பொருளாதாரம் என்றும், வளர்ச்சி அடையாத பொருளாதாரம் என்றும், பிறகு ஐந்தாண்டுத் திட்ட பலன் காரணமாக வளரும் பொருளாதாரம் என்றும் கூறினார்கள்.</p>



<p>1750 முதல் இந்தியப் பொருளாதாரம் ஆங்கிலேயேரின் நலன்களுக்கு உட்பட்டதாகவே இருந்தது.</p>



<p>1943 இல் ஏற்பட்ட வங்காளப் பஞ்சத்தின் காரணமாக 30 லட்சம் மக்கள் மடிகிற நிலையில்தான் இந்தியப் பொருளாதாரம் இருந்தது.</p>



<h4 class="wp-block-heading"><strong>முக்கிய</strong><strong> </strong><strong>குறியீடுகள்</strong><strong> &#8211; 1950-2012 </strong><strong>ஓர்</strong><strong> </strong><strong>ஒப்புநோக்கு</strong><strong>!</strong></h4>



<p><em>(2012 குறியீடுகள் அடைப்புகளில் தரப்பட்டுள்ளன)</em></p>



<p>1950 இல் உணவு தானிய உற்பத்தி 50.8 மில்லியன் டன் (257.4 மில்லியன் டன்). இருப்பு உற்பத்தி 1 மில்லியன் டன் (82.8 மி.டன்), சிமெண்ட் 2.7 மி.டன் (230.5 மி.டன்). நிலக்கரி உற்பத்தி 32.3 மி.டன் (583.1 மி.டன்), கச்சா எண்ணெய் 0.3 மி.டன் (38.1 மி.டன்). மின் உற்பத்தி 5 பில்லியன் கிலோ வாட் (877 மில்லியன் சி. வாட்). திட்ட ஒதுக்கீடு ரூ.260 கோடி (ரூ.10,30,461 கோடி).</p>



<p>வெளிநாட்டு வர்த்தக ஏற்றுமதி ரூ.606 கோடி (ரூ.14,65,959 கோடி), இறக்குமதி ரூ.608 கோடி (ரூ.23,45,463 கோடி). அந்நியச் செலாவணி கையிருப்பு ரூ.911 கோடி (ரூ.13,33,954 கோடி), மக்கள் தொகை 36 கோடியே 10 லட்சம் (121 கோடி), மனித ஆயுள் காலம் 32.1 வருடங்கள் (66.1 வருடங்கள்), கல்வியறிவு 18.3 சதவிகிதம் (74.04 சதவிகிதம்).</p>



<p>மருத்துவர்கள் 61,000 (9,22,000), மொத்த உள்நாட்டு உற்பத்தி 1951-52 இல் ரூ.2,79,618 கோடி, 1991-92இல் ரூ.13,67,171 கோடி, 2012-13 இல் ரூ.55,03,476 கோடி.</p>



<h4 class="wp-block-heading"><strong>தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள்</strong>:</h4>



<p>அன்னை இந்திரா காந்தியின் பெரு முயற்சியால் 1969 இல் 14 வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டன. அப்போதைய மொத்த வங்கிகளின் எண்ணிக்கை 8,262. இது 2012இல் 70,314 ஆக பன்மடங்கு உயர்ந்திருக்கிறது. தற்போது வங்கிகளிலிருக்கும் மொத்த டெபாசிட் தொகை ரூ.50.02 லட்சம் கோடி. இதில் ரூ.38.78 லட்சம் கோடி கடனாக வழங்கப்பட்டுள்ளது. நாட்டின் மொத்தம் 58,193 ஏ.டி. எம். வங்கிகள் உள்ளன. 2013-14 இல் விவசாயிகளுக்கு வங்கிக் கடனாக 7 லட்சம் கோடி ரூபாய் வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளனர்.</p>



<p>1950 இல் மொத்த மக்கள் தொகையான 36 கோடியில் 20 லட்சம் பேர்தான் தொழிற்சாலைகளில் வேலை செய்கிற நிலை இருந்தது. அன்று மொத்த மக்கள் தொகையில் 82.3 சதவிகிதத்தினர் கிராமப்புறங்களில் வாழ்ந்தனர்.</p>



<p>1947 இல் 7 பொறியியல் கல்லூரிகளில் 2,217 மாணவர்கள்தான் படித்துக் கொண்டிருந்தனர்.</p>



<p>1950களில் மொத்தம் 10 மருத்துவக் கல்லூரிகள்தான் இருந்தன. ஆண்டு தோறும் 700 பேர் படிக்கிற வாய்ப்புதான் இருந்தது. 1951 இல் மொத்தம் 18,000 மருத்துவ பட்டதாரிகள் நகரங்களில் மட்டுமே சேவை செய்து வந்தனர்.</p>



<p>1947 இல் மொத்தமுள்ள மக்கள் தொகையில் 84 சதவிகிதம் ஆண்களும், 92 சதவிகிதம் பெண்களும் கல்வியறிவு பெறாதவர்களாக இருந்தனர். மொத்த உயர்நிலைப்பள்ளிகள் 7,258, மொத்த மாணவர் சேர்க்கை 23.05 மில்லியன்.</p>



<p><strong>மொத்த உள்நாட்டு சராசரி வளர்ச்சி விகிதம் :</strong> 1950-51 முதல் 1980-81 வரை 3.52 சதவிகிதம், 1980-81 முதல் 1989-90 வரை 5.18 சதவிகிதம். 1998-2004 வரை 5.7 சதவிகிதம் ; 2004-2013 வரை 8 சதவிகிதம்.</p>



<p><strong>அந்நியச் செலாவணி கையிருப்பு :</strong> 1989 இல் ரூ.5.277 கோடி 1990 இல் ரூ.2,152 கோடி 1991 இல் ரூ.9,256 கோடி 2012-13 இல் ரூ.16 லட்சம் கோடி.</p>



<p><strong>உரம், உணவு, பெட்ரோலியப் பொருள்களுக்கான மானியங்கள் :</strong> 1990-91இல் ரூ.9,581 கோடி, 2012-13 ரூ.1,79,554 கோடி</p>



<p><strong>பட்ஜெட் தொகை :</strong> 1947-48 இல் ரூ.230.42 கோடி, 1990-91 இல் ரூ.98,272 கோடி, 2013-14 இல் ரூ.16,65,297 கோடி தனிநபர் வருமானம் 2012 இல் நகரங்களில் ரூ.44,000, கிராமங்க ளில் ரூ.16,000.</p>



<p><strong>பொருளாதார நிபுணர் டெண்டுல்கர் குழு மதிப்பீட் டின்படி வறுமைக்கோட்டிற்குக் கீழே வாழ்பவர்கள் :</strong> 1970-71 இல் 59 சதவிகிதம், 1977-78 இல் 51.3 சதவிகிதம், 1983-84 இல் 44.5 சதவிகிதம், 1993-94 இல் 36 சதவிகிதம், 1999-2000 இல் 26.1 சதவிகிதம், 2004-05 இல் 22.1 சதவிகிதம். 1952 இல் இந்தியா இருந்த நிலைமையை 2012 இல் உள்ள நிலையோடு ஒப்பிட்டால் ஏற்பட்டுள்ள வளர்ச்சியை எவராலும் மறுக்க முடியாது.</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-economics/growth-of-india-from-1950-to-2012/">வளர்ச்சி பாதையில் இந்தியா 1950 &#8211; 2012</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://desiyamurasu.com/news-economics/growth-of-india-from-1950-to-2012/feed/</wfw:commentRss>
			<slash:comments>2</slash:comments>
		
		
			</item>
	</channel>
</rss>
