<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Farmers Protests Archives - தேசிய முரசு - Desiya Murasu</title>
	<atom:link href="https://desiyamurasu.com/tag/farmers-protests/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://desiyamurasu.com/tag/farmers-protests/</link>
	<description>DesiyaMurasu – Daily Opinions &#38; Analysis on Latest News  &#124; Tamil News</description>
	<lastBuildDate>Wed, 17 Feb 2021 17:10:12 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.1</generator>

<image>
	<url>https://desiyamurasu.com/wp-content/uploads/2020/07/cropped-FAV-copy-1-32x32.png</url>
	<title>Farmers Protests Archives - தேசிய முரசு - Desiya Murasu</title>
	<link>https://desiyamurasu.com/tag/farmers-protests/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக இயங்கிய கல்லூரி மாணவி திஷா ரவி கைது : டெல்லி காவல் துறை நடவடிக்கை</title>
		<link>https://desiyamurasu.com/news-india/who-is-disha-ravi-all-you-need-to-know-about-activist-arrested-by-delhi-police/</link>
					<comments>https://desiyamurasu.com/news-india/who-is-disha-ravi-all-you-need-to-know-about-activist-arrested-by-delhi-police/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Admin]]></dc:creator>
		<pubDate>Wed, 17 Feb 2021 17:10:10 +0000</pubDate>
				<category><![CDATA[தேசிய அரசியல்]]></category>
		<category><![CDATA[Delhi Police]]></category>
		<category><![CDATA[Disha Ravi]]></category>
		<category><![CDATA[Farmers Protests]]></category>
		<category><![CDATA[Toolkit case]]></category>
		<guid isPermaLink="false">https://desiyamurasu.com/?p=4134</guid>

					<description><![CDATA[<p>சமூக வலைத்தளங்களில் கிரெட்டா தன்பெர்க்கின் கருத்துகளைத் திருத்தி வெளியிட்ட சூழலியாளர் திஷா ரவி மீது தேசத்துரோகக் குற்றச்சாட்டுச் சுமத்தி, டெல்லி காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 விவசாயச் சட்டங்களை எதிர்த்துக் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக டெல்லி எல்லையில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா தன்பர்க் தனது ட்விட்டர் பக்கத்தில் டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவான கருத்துகளை வெளியிட்டிருந்தார். இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு, [&#8230;]</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/who-is-disha-ravi-all-you-need-to-know-about-activist-arrested-by-delhi-police/">விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக இயங்கிய கல்லூரி மாணவி திஷா ரவி கைது : டெல்லி காவல் துறை நடவடிக்கை</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>சமூக வலைத்தளங்களில் கிரெட்டா தன்பெர்க்கின் கருத்துகளைத் திருத்தி வெளியிட்ட சூழலியாளர் திஷா ரவி மீது தேசத்துரோகக் குற்றச்சாட்டுச் சுமத்தி, டெல்லி காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.</p>



<p>மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 விவசாயச் சட்டங்களை எதிர்த்துக் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக டெல்லி எல்லையில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.</p>



<p>இந்நிலையில், சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா தன்பர்க் தனது ட்விட்டர் பக்கத்தில் டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவான கருத்துகளை வெளியிட்டிருந்தார். இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு, பெங்களூருவைச் சேர்ந்த 21 வயது திஷா ரவி என்ற மாணவி, கிரெட்டா தன்பெர்க்கின் வாசகங்களை ஒரு போராட்டக் குழு சார்பில் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தார். இதையடுத்து, பெங்களூரு வந்த டெல்லி காவல் துறையினர் அவரை கைது செய்தனர்.</p>



<p>இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், திஷா ரவி பெங்களூருவில் உள்ள பிரபல கல்லூரியில் படித்துவருவதும், பகுதி நேரமாக தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்ப்பதும் தெரியவந்துள்ளது. அத்துடன், பிரைடே ஃபார் பியூச்சர் என்ற பெயரில் செயல்படும் போராட்டக் குழுவில் உறுப்பினராகவும் இருந்துள்ளார். வீட்டில் இருந்தபடியே வேலை பார்த்து வந்த இவர், சமூக வலைத்தளம் வாயிலாகப் பலரிடம் விவசாயிகள் போராட்டம் தொடர்பாகக் கிளர்ச்சியை ஏற்படுத்தியதாக டெல்லி காவல் துறையினர் குற்றம் சாட்டியுள்ளனர்.</p>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large"><img fetchpriority="high" decoding="async" width="770" height="433" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/02/disha_ravi1.jpg" alt="" class="wp-image-4138" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/02/disha_ravi1.jpg 770w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/02/disha_ravi1-300x169.jpg 300w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/02/disha_ravi1-768x432.jpg 768w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/02/disha_ravi1-750x422.jpg 750w" sizes="(max-width: 770px) 100vw, 770px" /></figure></div>



<p>கைது செய்யப்பட்டு டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட திஷா ரவியை, 5 நாட்கள் சிறப்புக் காவலில் வைத்து விசாரிக்க மாஜிஸ்திரேட் அனுமதி அளித்துள்ளார்.</p>



<h4 class="wp-block-heading"><strong>சர்ச்சையான டூல்கிட்</strong></h4>



<p>கிரெட்டா தன்பர்க் தன் ட்விட்டர் பக்கத்தில் டூல்கிட் ஒன்றைப் பகிர்ந்திருந்தார். அதில் இந்தியாவில் உள்ள மக்களால் இந்த டூல்கிட் புதுப்பிக்கப்பட்டு வருகிறது என்றும் குறிப்பிட்டிருந்தார். அதன்பிறகு, அதை ட்விட்டரில் இருந்து நீக்கிவிட்டார்.</p>



<p>பிப்ரவரி 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவான பதிவுகள் மூலம் ட்விட்டரில் டிரெண்டிங் ஆக்குவது, போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், புகைப்படம், காணொலிகளில் வெளியிடுவது ஆகியவை கிரெட்டாவின் டூல்கிட்டில் வலியுறுத்தப்பட்டிருந்தது.</p>



<p>அதானி, அம்பானி போன்ற பெரு முதலாளிகளுக்கு எதிராகச் செயல்படுவது, விவசாயிகள் போராட்டம் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு, அரசு அதிகாரிகள் மற்றும் அரசைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்களை தொலைப்பேசி அல்லது மின்னஞ்சல் மூலம் கோரிக்கை வைப்பது, பிப்ரவரி 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில், அவரவர் இருக்கும் இடத்துக்கு அருகில் இருக்கும் இந்திய தூதரகம், ஊடக நிறுவனம் அல்லது உள்ளூர் அரசு அலுவலகம் அருகே போராட்டம் நடத்துவது என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.</p>



<p>இந்த டூல்கிட் இந்திய அரசுக்கு எதிராகச் செயல்படும் காலிஸ்தான் பிரிவினைவாதிகளின் சதி என்றும், தன்னுடைய பதிவு மூலம் காலிஸ்தான் பிரிவினைவாதத்தைத் தூண்டும் சதித் திட்டத்தில் கிரேட்டா தன்பர்க் ஈடுபட்டார் என்று டெல்லி காவல் துறை ஏற்கெனவே வழக்குப் பதிவு செய்தது.</p>



<p>இதற்கிடையே திஷா ரவி கைது செய்யப்பட்டதைக் கொடுமையானது என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார். இது தேவையில்லாத கொடுமை. என் ஆதரவு திஷா ரவிக்குத்தான் என அவர் கூறியுள்ளார்.</p>



<p>சூழலியலாளர் திஷா ரவி கைது செய்யப்பட்டதற்கு அரசியல்வாதிகள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் உள்ளிட்ட பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/who-is-disha-ravi-all-you-need-to-know-about-activist-arrested-by-delhi-police/">விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக இயங்கிய கல்லூரி மாணவி திஷா ரவி கைது : டெல்லி காவல் துறை நடவடிக்கை</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://desiyamurasu.com/news-india/who-is-disha-ravi-all-you-need-to-know-about-activist-arrested-by-delhi-police/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>விவசாயிகள் குரல்வளையை நெறிப்பதா? : மோடி அரசுக்குப் பிரியங்கா காந்தி கண்டனம்</title>
		<link>https://desiyamurasu.com/news-india/pm-should-also-implement-one-nation-one-treatment-priyanka-on-farmers-protest/</link>
					<comments>https://desiyamurasu.com/news-india/pm-should-also-implement-one-nation-one-treatment-priyanka-on-farmers-protest/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Admin]]></dc:creator>
		<pubDate>Tue, 01 Dec 2020 12:09:59 +0000</pubDate>
				<category><![CDATA[தேசிய அரசியல்]]></category>
		<category><![CDATA[Farmers Protests]]></category>
		<category><![CDATA[PM Modi]]></category>
		<category><![CDATA[Priyanka Gandhi]]></category>
		<guid isPermaLink="false">https://desiyamurasu.com/?p=3410</guid>

					<description><![CDATA[<p>ஒரே நாடு, ஓரே தேர்தல் என்று கூறும் பிரதமர் மோடி, மக்களை ஒரே மாதிரியாக நடத்தவும் வேண்டும் என்று கூறியுள்ளார். &#8216;டெல்லி சலோ&#8217; போராட்டத்தில் பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 அவசரச் சட்டங்களும் விவசாயிகளுக்கு எதிரானது என்றும், கார்பரேட் மற்றும் பெரும் தொழிலதிபர்களுக்குச் சாதகமானது என்றும் தங்கள் அச்சத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். 3 விவசாயச் சட்டங்களையும் எதிர்த்துக் கடந்த சில மாதங்களாகவே விவசாயிகள் போராடி [&#8230;]</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/pm-should-also-implement-one-nation-one-treatment-priyanka-on-farmers-protest/">விவசாயிகள் குரல்வளையை நெறிப்பதா? : மோடி அரசுக்குப் பிரியங்கா காந்தி கண்டனம்</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>ஒரே நாடு, ஓரே தேர்தல் என்று கூறும் பிரதமர் மோடி, மக்களை ஒரே மாதிரியாக நடத்தவும் வேண்டும் என்று கூறியுள்ளார்.</p>



<p>&#8216;டெல்லி சலோ&#8217; போராட்டத்தில் பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 அவசரச் சட்டங்களும் விவசாயிகளுக்கு எதிரானது என்றும், கார்பரேட் மற்றும் பெரும் தொழிலதிபர்களுக்குச் சாதகமானது என்றும் தங்கள் அச்சத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.</p>



<p>3 விவசாயச் சட்டங்களையும் எதிர்த்துக் கடந்த சில மாதங்களாகவே விவசாயிகள் போராடி வருகின்றனர். மண்டிகளை நீக்கிவிட்டு விவசாயிகள் நேரடியாக விளைபொருட்களை விற்கலாம் என்றும் சட்டத்தில் சொல்லப்படும் பிரிவு, கார்பரேட்களை களம் இறக்கும் செயல் என்று விவசாயிகள் அஞ்சுகின்றனர்.</p>



<p>கார்பரேட்களின் கட்டுப்பாட்டுக்குள் விவசாயிகள் கொண்டு சேர்க்கும் நடவடிக்கை என்றும் குற்றம் சாட்டுகின்றனர். அதோடு, விளைபொருட்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலையைப் பற்றி சட்டத்தில் குறிப்பிட வேண்டும் என்றும் விவசாயிகள் கோரி வருகின்றனர்.</p>



<p>இந்நிலையில் கடந்த 3 தினங்களாக டெல்லியில் உள்ள விளையாட்டு மைதானங்களில் அடைக்கப்பட்டுள்ள விவசாயிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகியிருக்கின்றனர்.</p>



<p>இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் உத்தரப்பிரதேச பொதுச் செயலாளர் பொறுப்பு வகிக்கும் பிரியங்கா காந்தி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும், சாலைகளில் குழியைத் தோண்டி தடுத்தும் விவசாயிகளின் குரல்வளையை நெரிக்கிறார்கள்.</p>



<p>ஆனால், குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டப்பூர்வமாக்குவோம் என்று சொல்ல அரசு தயாராக இல்லை. ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பதில் ஆர்வம் காட்டும் பிரதமர், ஒரே நாடு, மக்களை ஒரே மாதிரியாக நடத்தவும் வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/pm-should-also-implement-one-nation-one-treatment-priyanka-on-farmers-protest/">விவசாயிகள் குரல்வளையை நெறிப்பதா? : மோடி அரசுக்குப் பிரியங்கா காந்தி கண்டனம்</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://desiyamurasu.com/news-india/pm-should-also-implement-one-nation-one-treatment-priyanka-on-farmers-protest/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>விவசாயிகளின் எழுச்சிமிக்க &#8216;தில்லி சலோ&#8217; போராட்டம்! தில்லியை திணறவைத்த விவசாயிகள்!</title>
		<link>https://desiyamurasu.com/news-india/delhi-chalo-protest-farmers-stay-camped-on-delhi-border/</link>
					<comments>https://desiyamurasu.com/news-india/delhi-chalo-protest-farmers-stay-camped-on-delhi-border/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[ஆ. கோபண்ணா]]></dc:creator>
		<pubDate>Sat, 28 Nov 2020 08:08:47 +0000</pubDate>
				<category><![CDATA[தேசிய அரசியல்]]></category>
		<category><![CDATA[Farm Bills 2020]]></category>
		<category><![CDATA[Farmers Protests]]></category>
		<guid isPermaLink="false">https://desiyamurasu.com/?p=3327</guid>

					<description><![CDATA[<p>உலகத்தில் உள்ள எந்த அரசாலும் உண்மைக்காக போராடும் விவசாயிகளை ஒடுக்க முடியாது: ராகுல் காந்தி மத்திய பா.ஜ.க. அரசு விவசாயிகளுக்கு விரோதமாக நிறைவேற்றிய மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், அரியானா மாநிலங்களில் உள்ள ஆயிரக்கணக்கான விவசாயிகள் தலைநகர் தில்லியில் ராமலீலா மைதானத்தில் பேரணி நடத்துவதற்காக டிராக்டர்கள் மூலமாக பயணம் மேற்கொண்டுள்ளனர். இதில் விவசாயிகள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டவர்கள் பெருந்திரளாக பங்கேற்று பா.ஜ.க. அரசுக்கு எதிராக குரல் கொடுக்க முற்பட்டுள்ளனர். &#8216;தில்லி சலோ&#8217; என்ற முழக்கத்துடன் சென்ற [&#8230;]</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/delhi-chalo-protest-farmers-stay-camped-on-delhi-border/">விவசாயிகளின் எழுச்சிமிக்க &#8216;தில்லி சலோ&#8217; போராட்டம்! தில்லியை திணறவைத்த விவசாயிகள்!</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p><strong><span class="has-inline-color has-vivid-red-color">உலகத்தில் உள்ள எந்த அரசாலும் உண்மைக்காக போராடும் விவசாயிகளை ஒடுக்க முடியாது: ராகுல் காந்தி</span></strong></p>



<p>மத்திய பா.ஜ.க. அரசு விவசாயிகளுக்கு விரோதமாக நிறைவேற்றிய மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், அரியானா மாநிலங்களில் உள்ள ஆயிரக்கணக்கான விவசாயிகள் தலைநகர் தில்லியில் ராமலீலா மைதானத்தில் பேரணி நடத்துவதற்காக டிராக்டர்கள் மூலமாக பயணம் மேற்கொண்டுள்ளனர். இதில் விவசாயிகள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டவர்கள் பெருந்திரளாக பங்கேற்று பா.ஜ.க. அரசுக்கு எதிராக குரல் கொடுக்க முற்பட்டுள்ளனர்.</p>



<p>&#8216;தில்லி சலோ&#8217; என்ற முழக்கத்துடன் சென்ற பஞ்சாப் மாநில விவசாயிகளின் பேரணியை, அரியானா மாநிலத்தை ஆளும் பா.ஜ.க. அரசு காவல்துறையின் மூலம் தடுத்து வருகிறது. இவர்களை தில்லியை நோக்கி செல்ல விடாமல் தடுப்பதற்காக கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் தண்ணீரை பீச்சி அடித்தும் கலைந்து போகிற வகையில் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தடுப்பு வேலிகளை வைத்து சாலைகளை அடைத்துள்ளனர். பெருமளவில் காவல்துறையினரை குவித்து வைத்து விவசாயிகள் பஞ்சாப் மாநிலத்திலிருந்து அரியானா மாநிலம் வழியாக தலைநகர் தில்லிக்கு போக விடாமல் பலவழிமுறைகளை கையாண்டு தடுத்து வருகின்றனர்.</p>



<p>அரியானா காவல்துறையினரின் தடுப்பு வேலிகளை தூக்கியெறிந்துவிட்டு, தடைகளை மீறி விவசாயிகள் தில்லி சலோ என்ற முழக்கத்துடன் ஊர்வலமாக சென்றுள்ளனர். இதனால் விவசாயிகளுக்கும், காவல்துறையினருக்கும் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தடைகளை மீறி அரியானா எல்லைக்குள் புகுந்து தில்லியை நோக்கி தங்களது பேரணியை தொடர்ந்துள்னர். தலைநகர் தில்லியில் லட்சக்கணக்கான விவசாயிகளை திரட்டி, மத்திய பா.ஜ.க. அரசின் விவசாய விரோத சட்டத்தை திரும்பப் பெறுகிற வரை வீடு திரும்ப மாட்டோம் என்பதில் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் உறுதியாக உள்ளனர். இந்த நிலையில் அரியானா, தில்லி மாநில காவல்துறையினர் விவசாயிகள் போராட்டத்தை ஒடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் காட்டுமிராண்டித்தனமாக செயல்பட்டதை பார்க்க முடிந்தது. இதன்மூலம் ஒட்டுமொத்த விவசாயிகளின் எதிர்ப்பை பா.ஜ.க. பெற்றுள்ளது.</p>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large"><img decoding="async" width="743" height="413" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/11/EnuzqnMVkAEavr_.jpg" alt="" class="wp-image-3339" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/11/EnuzqnMVkAEavr_.jpg 743w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/11/EnuzqnMVkAEavr_-300x167.jpg 300w" sizes="(max-width: 743px) 100vw, 743px" /></figure></div>



<p>பஞ்சாப் மாநில விவசாயிகள் போராட்டத்தை அந்த மாநில முதலமைச்சர் அமரிந்தர் சிங் தலைமையேற்று நடத்தியது விவசாயிகள் மத்தியில் பெருத்த நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. விவசாயிகளின் பாதுகாவலனாக அவர் விளங்கி வருவது போராட்டம் நடத்துகிற விவசாயிகளுக்கு மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பஞ்சாப் மாநில விவசாயிகள் தலைநகர் தில்லி பேரணியில் கலந்து கொள்ளாமல் தடுப்பதற்கு காவல்துறை மூலம் தடைகளை ஏற்படுத்தி வருகிற அரியானா மாநில முதலமைச்சர் மனோகர்லால் கட்டாருக்கு பஞ்சாப் மாநில முதலமைச்சர் அமரிந்தர் சிங் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். அதில், &#8220;வேளாண் சட்டங்களுக்கு எதிராக இரண்டு மாதங்களாக பஞ்சாப்பில் விவசாயிகள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்கள் மீது அரியானா அரசு படைகளை ஏவி ஆத்திரமூட்டும் செயலில் ஈடுபட்டது ஏன்? ஒரு பொது நெடுஞ்சாலை வழியாக விவசாயிகள் அமைதியாக கடந்து செல்ல அவர்களுக்கு உரிமை இல்லையா?</p>



<p>அரியானாவின் கட்டார் அரசு விவசாயிகள் டெல்லி செல்வதை ஏன் தடுக்கிறது? அமைதியாக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் மீது படைகளை பயன்படுத்தி கடுமையாக நடந்திருப்பது ஜனநாயக விரோதமானது மட்டுமின்றி அரசியல் சட்டத்துக்கு எதிரானதும் ஆகும். விவசாயிகளின் உரிமை இவ்வாறு சிதைக்கப்பட்டிருப்பது, அரசியல்சாசன தினத்தில் நடந்திருக்கும் மோசமான நிகழ்வாகும். டெல்லியில் அவர்கள் தங்கள் குரலை எழுப்புவதற்கு விட்டு விடுங்கள். பா.ஜனதாவின் மாநில அரசுகள் இத்தகைய கடுமையான போக்கை கடைப்பிடிப்பதை விட்டுவிடச்சொல்லி கட்சித்தலைமை வலியுறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.&#8221;</p>



<p>பஞ்சாப் விவசாயிகள் போராட்டம் குறித்து தலைவர் ராகுல்காந்தி வெளியிட்ட டிவிட்டர் பதிவில், &#8216;நாட்டில் விவசாயிகள் தங்களுக்கு எதிராக மோடி அரசு இழைக்கும் கொடுமைகளை எதிர்த்து உறுதியுடன் போராடுகின்றனர்&#8217; என்று கூறி விவசாயிகளின் போராட்ட வீடியோவை இணைத்து பதிவிட்டுள்ளார்.</p>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/11/2020_11largeimg_1797092296.jpg" alt="" class="wp-image-3338" width="547" height="410" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/11/2020_11largeimg_1797092296.jpg 1024w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/11/2020_11largeimg_1797092296-300x225.jpg 300w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/11/2020_11largeimg_1797092296-768x576.jpg 768w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/11/2020_11largeimg_1797092296-750x563.jpg 750w" sizes="(max-width: 547px) 100vw, 547px" /></figure></div>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img loading="lazy" decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/11/farmersjpg.jpg" alt="" class="wp-image-3331" width="548" height="243" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/11/farmersjpg.jpg 960w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/11/farmersjpg-300x133.jpg 300w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/11/farmersjpg-768x342.jpg 768w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/11/farmersjpg-750x334.jpg 750w" sizes="auto, (max-width: 548px) 100vw, 548px" /></figure></div>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img loading="lazy" decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/11/protest-1024x576.jpg" alt="" class="wp-image-3332" width="550" height="309" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/11/protest-1024x576.jpg 1024w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/11/protest-300x169.jpg 300w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/11/protest-768x432.jpg 768w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/11/protest-750x422.jpg 750w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/11/protest-1140x641.jpg 1140w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/11/protest.jpg 1200w" sizes="auto, (max-width: 550px) 100vw, 550px" /></figure></div>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img loading="lazy" decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/11/79448567.jpg" alt="" class="wp-image-3333" width="555" height="372" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/11/79448567.jpg 700w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/11/79448567-300x201.jpg 300w" sizes="auto, (max-width: 555px) 100vw, 555px" /></figure></div>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img loading="lazy" decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/11/En4rfwfVgAYCh3a.jpg" alt="" class="wp-image-3334" width="560" height="714" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/11/En4rfwfVgAYCh3a.jpg 802w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/11/En4rfwfVgAYCh3a-235x300.jpg 235w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/11/En4rfwfVgAYCh3a-768x981.jpg 768w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/11/En4rfwfVgAYCh3a-750x958.jpg 750w" sizes="auto, (max-width: 560px) 100vw, 560px" /></figure></div>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img loading="lazy" decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/11/farmers-8.jpg" alt="" class="wp-image-3335" width="560" height="373" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/11/farmers-8.jpg 700w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/11/farmers-8-300x200.jpg 300w" sizes="auto, (max-width: 560px) 100vw, 560px" /></figure></div>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img loading="lazy" decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/11/farmers-protest-pti-1606398902.jpg" alt="" class="wp-image-3336" width="564" height="375" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/11/farmers-protest-pti-1606398902.jpg 640w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/11/farmers-protest-pti-1606398902-300x200.jpg 300w" sizes="auto, (max-width: 564px) 100vw, 564px" /></figure></div>



<p>மத்தியில் பா.ஜ.க. அரசு ஆட்சி அமைந்தது முதற்கொண்டு விவசாயிகள் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 2014 முதல் 2016 வரை விவசாயிகள் போராட்டம் 628 ஆக இருந்தது, தற்போது 4837 ஆக உயர்ந்திருக்கிறது. ஏறத்தாழ 700 சதவிகிதம் விவசாயிகள் போராட்டம் பா.ஜ.க. ஆட்சியில் அதிகரித்துள்ளது. இதற்கு காரணம், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக கூட்டுவோம், டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரைப்படி விவசாயிகளின் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்குவோம் என்று வாக்குறுதி வழங்கிய நரேந்திர மோடி, கடந்த ஆறு ஆண்டுகளாக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, கொடுத்த வாக்குறுதிகளை புறக்கணிக்கிற வகையில் விவசாயிகள் பெற்று வந்த குறைந்தபட்ச ஆதரவு விலையை புதிய வேளாண் சட்டங்கள் மூலம் பறித்திருக்கிறார். விவசாயிகளின் விளை பொருட்களை மத்திய அரசே முடிவு செய்வதற்கு மாறாக, கார்ப்பரேட் நிறுவனங்கள் முடிவு செய்கிற உரிமையை நரேந்திர மோடி அரசு வழங்கியிருக்கிது. இதை எதிர்த்து தான் பஞ்சாப், அரியானா, கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள விவசாயிகள் மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராக போர்க்கோலம் பூண்டு கடுமையான போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.</p>



<p>விவசாயிகளின் தில்லி சலோ போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பஞ்சாப் விவசாயிகளுக்கு தில்லிக்குள் நுழைய மத்திய அரசு அனுமதி அளித்திருக்கிறது. இந்த போராட்டத்தை பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த முப்பதிற்கும் மேற்பட்ட விவசாயிகள் சங்கங்கள் நடத்துகின்றன. விவசாயிகளுக்கு எதிரான காவல்துறையினரின் தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு ஆகியவற்றை மீறி இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது. நேற்று இரண்டாவது நாளாக விவசாயிகளின் தில்லி சலோ பேரணி மீண்டும் தொடங்கப்பட்டது. பஞ்சாப் விவசாயிகளுடன், அரியானா விவசாயிகளும் இணைந்ததால் அவர்களை தடுத்து நிறுத்த காவல்துறையினரால் முடியவில்லை. நூற்றுக்கணக்கான டிராக்டர்கள் மற்றும் லாரிகளில் விவசாயிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டாலும் அவர்கள் தடுப்புகளை அகற்றிவிட்டு தில்லிக்குள் நுழைந்து விட்டனர்.</p>



<p>இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் விவசாயிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்திருக்கிறது. பேச்சுவார்த்தையில் பங்கேற்பது குறித்து விவசாய சங்கங்கள் ஆலோசித்து வருகின்றன. வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுகிற வகையில் உறுதிமொழி அளித்தாலொழிய விவசாயிகள் தங்கள் போராட்டத்தை கைவிடுவதாக இல்லை. விவசாயிகளுடைய வலிமை எத்தகையது என்பதை மத்திய பா.ஜ.க. அரசுக்கு உணர்த்துவதில் பஞ்சாப், அரியானா மாநில விவசாயிகள் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளனர். இதற்காக நாடு முழுவதுதிலும் உள்ள விவசாயிகள் எழுச்சி பெற்று பஞ்சாப் விவசாயிகளை பாராட்டி வருகின்றனர்.</p>



<p>2017 மார்ச் மாதம் 41 நாட்கள் விவசாயிகள் சங்க தலைவர் அய்யாகண்ணு தலைமையில்&nbsp; தலைநகர் தில்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் பல்வேறு நூதன போராட்டங்களைநடத்தி வந்தனர். அவர்களது கோரிக்கை விவசாயிகளின் கடனை ரத்து செய்ய வேண்டும் என்பது தான். நரேந்திர மோடி ஆட்சி செய்யும் அலுவலகத்திற்கு மிகமிக அருகாமையில் இரவு, பகல் பாராமல் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தொடர் போராட்டம் நடத்திய விவசாயிகளை நேரில் சந்தித்து அவர்களது கோரிக்கையை கேட்க மனமில்லாத கொடிய இரக்க குணம் படைத்த பிரதமராக நரேந்திர மோடி விளங்கி வருவதை அறிந்து விவசாயிகள் அடைந்த வேதனைக்கு அளவே இல்லை. இந்த நடவடிக்கையின் மூலமாக விவசாயிகள் மத்தியில் நரேந்திர மோடி கடுமையான கோபத்திற்கு ஆளாகி இருப்பதை எவரும் மறுக்க இயலாது.</p>



<p>விவசாயிகளின் வாழ்வாதாரத்தோடு விளையாடுகிற பா.ஜ.க. அரசுக்கு பாடம் புகட்டுகிற வகையில் இத்தகைய போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மத்திய பா.ஜ.க. அரசு வேளாண் சட்டங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு உறுதுணையாக இருந்த அ.தி.மு.க.அரசு&nbsp; மீதும் தமிழக விவசாயிகள் கடும் கோபத்துடன் இருப்பதை காண முடிகிறது. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி அவர்கள் எடுத்த தீவிர முயற்சியின் காரணமாக தமிழகம் முழுவதும் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் முதற்கட்டமாக போராட்டம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து திருவண்ணாமலையில் விவசாயிகள் மாநாடு, தேனியில் ஏர் கலப்பை பேரணி, கோயம்புத்தூரில் விவசாயிகள் பாதுகாப்பு எழுச்சி மாநாடு மற்றும் மாபெரும் ஏர் கலப்பை பேரணி நடைபெற்றது. தமிழக விவசாயிகளின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும் மத்திய, மாநில அரசுகளுக்கு உணர்த்துகிற வகையில் நடைபெற்று வருகின்றன.</p>



<p>அடுத்தகட்டமாக, இத்தகைய போராட்டங்கள் டிசம்பர் 2 ஆம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் சார்பாக ஏர் கலப்பை பேரணி நடைபெற உள்ளது. தமிழக மக்களின் நலன் சார்ந்தும், அவர்களது உரிமைகளை பாதுகாக்கவும் எந்த வகையிலும் செயல்படாத தமிழக பா.ஜ.க., மதவெறி அரசியலை நடத்தி, மக்களை பிளவுபடுத்துவதற்காக வேல் யாத்திரை நடத்தி வருகிறது. தமிழக பா.ஜ.க.வின் மக்கள் நலனில் அக்கறையில்லாத நடவடிக்கைகளுக்கு எதிராக விவசாயிகளின் உரிமைகளை பாதுகாக்கிற இயக்கமாக தமிழக காங்கிரஸ் கட்சி விளங்கி வருகிறது.</p>



<p>தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி அவர்களின் கடுமையான போராட்ட வியூகத்தின் அடிப்படையில் பஞ்சாப், அரியானா மாநிலங்களுக்கு இணையாக தமிழக விவசாயிகளின் எதிர்ப்பு குரல் தலைநகர் தில்லியில் ஒலிக்கிற வகையில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. விவசாயிகளுக்காக போராட்ட வியூகத்தை தமிழக காங்கிரஸ் கட்சி வகுத்து செயல்பட்டு வருவதற்கு மக்களிடையே மிகப்பெரிய ஆதரவு ஏற்பட்டிருப்பதை காண முடிகிறது. இது விவசாயிகளின் உரிமைகளை பாதுகாக்கிற நடவடிக்கையாக கருதப்படுகிறது.</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/delhi-chalo-protest-farmers-stay-camped-on-delhi-border/">விவசாயிகளின் எழுச்சிமிக்க &#8216;தில்லி சலோ&#8217; போராட்டம்! தில்லியை திணறவைத்த விவசாயிகள்!</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://desiyamurasu.com/news-india/delhi-chalo-protest-farmers-stay-camped-on-delhi-border/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>குறைந்தபட்ச ஆதரவு விலை ஏன் தேவை? விவசாயிகள் போராடுவது ஏன்? : விரிவான அலசல்</title>
		<link>https://desiyamurasu.com/news-india/what-is-msp-which-states-benefit-from-procurement-legal-basis-and-protests/</link>
					<comments>https://desiyamurasu.com/news-india/what-is-msp-which-states-benefit-from-procurement-legal-basis-and-protests/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[ஆ. கோபண்ணா]]></dc:creator>
		<pubDate>Tue, 20 Oct 2020 10:29:10 +0000</pubDate>
				<category><![CDATA[தேசிய அரசியல்]]></category>
		<category><![CDATA[Farm Bill]]></category>
		<category><![CDATA[Farmers Protests]]></category>
		<category><![CDATA[MSP]]></category>
		<guid isPermaLink="false">https://desiyamurasu.com/?p=2701</guid>

					<description><![CDATA[<p>நரேந்திர மோடி அரசால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட விவசாயச் சட்டங்களை எதிர்த்து நாட்டின் பல பகுதிகளில் விவசாயிகள் நடத்தும் போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது பஞ்சாப் மற்றும் ஹரியானா விவசாயிகள் இந்த சட்டங்களை எதிர்ப்பதற்கு முக்கிய காரணம், குறைந்தபட்ச ஆதரவு விலை முடிவுக்கு வந்துவிடும் என்பதால் தான். விவசாயச் சட்டங்களில் இதைப் பற்றிக் குறிப்பிடாததே விவசாயிகளின் சந்தேகத்துக்குக் காரணமாக அமைந்துள்ளது. குறைந்தபட்ச ஆதரவு விலை என்றால் என்ன? இது விவசாயிகளுக்கு எந்தளவுக்குப் பயன் தரும்? இந்தியாவில் உள்ள விவசாயிகளுக்குக் குறைந்தபட்ச [&#8230;]</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/what-is-msp-which-states-benefit-from-procurement-legal-basis-and-protests/">குறைந்தபட்ச ஆதரவு விலை ஏன் தேவை? விவசாயிகள் போராடுவது ஏன்? : விரிவான அலசல்</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>நரேந்திர மோடி அரசால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட விவசாயச் சட்டங்களை எதிர்த்து நாட்டின் பல பகுதிகளில் விவசாயிகள் நடத்தும் போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது<br><br>பஞ்சாப் மற்றும் ஹரியானா விவசாயிகள் இந்த சட்டங்களை எதிர்ப்பதற்கு முக்கிய காரணம், குறைந்தபட்ச ஆதரவு விலை முடிவுக்கு வந்துவிடும் என்பதால் தான். விவசாயச் சட்டங்களில் இதைப் பற்றிக் குறிப்பிடாததே விவசாயிகளின் சந்தேகத்துக்குக் காரணமாக அமைந்துள்ளது.<br><br>குறைந்தபட்ச ஆதரவு விலை என்றால் என்ன? இது விவசாயிகளுக்கு எந்தளவுக்குப் பயன் தரும்? இந்தியாவில் உள்ள விவசாயிகளுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை உண்மையிலேயே முதன்மையானதா? இதனைச் சட்ட வரையறைக்குள் கொண்டு வருவதற்கு உண்மையிலேயே ஏதாவது இருக்கிறதா?</p>



<h4 class="wp-block-heading">குறைந்தபட்ச ஆதரவு விலை என்றால் என்ன?</h4>



<p>குறிப்பிட்ட பயிர்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலையை அரசு நிர்ணயிப்பது விவசாயிகளுக்கு முக்கியமான பாதுகாப்பு வளையமாக அமைகிறது. அதாவது, அரசே பாதுகாப்பு வழங்குகிறது.<br><br>குறைந்தபட்ச ஆதரவு விலை என்பது, விவசாயிகளை விலை வீழ்ச்சியிலிருந்து காப்பாற்றுவதோடு, விலை வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் விளைபொருட்களையும் உற்பத்தி செய்ய ஊக்கமளிக்கிறது. மேலும் அதன் இருப்பையும் பராமரிக்க உறுதி செய்கிறது.<br><br>பயிர்களுக்கான சந்தை விலை குறைந்தபட்ச ஆதரவு விலையைவிட வீழ்ச்சியடையும்போது, விவசாயிகள் கோரும் விலைக்கு அரசே பயிரைக் கொள்முதல் செய்யும். குறைந்த விலைக்கு விற்பதால் ஏற்படும் இழப்பிலிருந்து விவசாயிகள் காப்பாற்றப்படுவர்.<br><br>இந்தியாவில் உற்பத்தியாகும் 30 சதவீத கோதுமை மற்றும் அரிசியை மத்திய அரசு கொள்முதல் செய்கிறது. மற்ற பயிர்கள் 6 முதல் 7 சதவீதம் வரை கொள்முதல் செய்யப்படுகின்றன. இவை, குறைந்தபட்ச ஆதரவு விலை முறையிலேயே கொள்முதல் செய்யப்படுகிறது.</p>



<h4 class="wp-block-heading">குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிப்பது யார்?</h4>



<p>சிஏசிபி எனப்படும் விவசாய செலவுகள் மற்றும் விலைகளுக்கான ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று, ஒவ்வொரு அறுவடையின்போதும், குறிப்பிட்ட பயிர்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலையை மத்திய அரசு நிர்ணயிக்கிறது.<br><br>அரசு அமைத்த சாமிநாதன் குழு வரையறுத்ததின் அடிப்படையில், குறைந்தபட்ச ஆதரவு விலையை சிஏசிபி தான் முடிவு செய்கிறது. விவசாயிகளின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பாக சாமிநாதன் குழு 2004 ஆம் ஆண்டு டிசம்பர் முதல் 2006 ஆம் ஆண்டு அக்டோபர் வரை பல அறிக்கைகளை மத்திய அரசுக்கும் சமர்ப்பித்தது குறிப்பிடத்தக்கது.<br><br>3 வகையான செலவுகளை மதிப்பீடு செய்ய சூத்திரம் தேவைப்படுகிறது:<br><br><strong>ஏ2 :</strong>  விதைகள், உரம், பூச்சிக் கொல்லிகள், ஊதியம் மற்றும் நீர்ப்பாசனத்துக்கு விவசாயிகள் செலவு செய்யும் உண்மையான தொகை.<br><br><strong>ஏ2+எஃப்எல் :</strong> ஏ2 செலவுகள் கூலியே வாங்காமல் விவசாயம் செய்யும் குடும்பத்தினருக்கு ஈடுகட்டுவது. (இந்தியாவில் குடும்பம் குடும்பமாக விவசாயத்தில் ஈடுபடுவது தொன்றுதொட்டு நடைபெற்று வருகிறது)<br><br><strong>சி2:</strong> ஏ2+சி 2 உடன் உற்பத்திச் செலவுகள், கடன், நிலம் மற்றும் பிற நிலையான மூலதன சொத்துகள் கணக்கிடப்படும். இதனை விரிவான உற்பத்திச் செலவு என்பர்.<br><br>ஒவ்வொரு பயிருக்கும் சி 2 அளவுக்கு அதிகமாகவே குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கப்படும். இது நாடு முழுவதுக்கும் பொருந்தும். நடப்பு சி 2 அளவையும் சேர்த்து சிஏசிபி கணக்கில் எடுத்து தேவை மற்றும் விநியோகம், உள்ளூர் மற்றும் சர்வதேச விலை நிலவரம், பயிர்களுக்கு இடையேயான சமநிலை ஆகியவற்றின் அடிப்படையில் குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கப்படுகிறது. இதன்படி, சி2 அளவைவிட 50 சதவீதத்துக்கு அதிகமாகக் குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கப்படுகிறது.</p>



<h4 class="wp-block-heading">எல்லா பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு வலை நிர்ணயிக்கப்படுகிறதா?</h4>



<p>இல்லை. சிஏசிபி பரிந்துரையின்படி, தற்போது 23 பயிர்களுக்கு மட்டுமே மத்திய அரசு  குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிக்கிறது.<br><br><strong>7 தானியங்கள்:</strong> நெல், கோதுமை, மக்காச்சோளம், முத்து தினை, பார்லி மற்றும் ராகி.<br><br><strong>5 பருப்புகள் : </strong>கொண்டைக்கடலை, துவரம்பருப்பு, பச்சைப்பயறு, உளுத்தம்பருப்பு மற்றும் பயறு<br><br><strong>7 எண்ணெய் வித்துகள்:</strong> வேர்க்கடலை, கடுகு, சோயாபீன், எள்ளு, சன் ப்ளவர், குங்குமப்பூ மற்றும் நைஜர் விதை<br><br><strong>4 வணிகப் பயிர்கள் : </strong>கொப்பரை, கரும்பு, பருத்தி மற்றும் சணல்</p>



<h4 class="wp-block-heading">குறைந்தபட்ச ஆதரவு விலை ஏன் அறிமுகப்படுத்தப்பட்டது?</h4>



<p>1960 &#8211; களில் பசுமைப் புரட்சி ஆரம்பமானபோது, பற்றாக்குறையைத் தடுக்க இந்தியா தனது உணவு இருப்புகளை உயர்த்த முயன்றது. 1966-67 ல், முதல் முறையாகக் கோதுமைக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கப்பட்டது. இவ்வாறு விவசாயிகளிடம் வாங்கிய விளைபொருட்கள், பொது விநியோகம் மூலம் ஏழைகளுக்கு மானியத்துடன் வழங்கப்பட்டன. இதனால் விவசாயிகளுக்கும் உதவியாக இருந்தது.</p>



<h4 class="wp-block-heading">சட்ட அல்லது சட்டரீதியான கட்டமைப்புக்குள் குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் வருகிறதா?</h4>



<p>பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்தபோதிலும், நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட எந்த சட்டத்திற்குட்பட்டும் குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் வரவில்லை.<br><br>சிஏசிபி-யின் முன்னாள் தலைவர் அபிஜித் சென் கூறும்போது, &#8221;நிர்வாக முடிவின்படி அரசு எடுத்த கொள்கை முடிவுதான் குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம். பயிர்களுக்கான குறைந்தபட்ச விலையை அரசு அறிவிக்கும்போது, அதனைச் செயல்படுத்துவதற்கான சட்டம் ஏதும் இல்லை&#8221; என்றார்.<br><br>சிஏசிபி ஒரு சட்டரீதியான அமைப்ப அல்ல. மாறாக, விவசாய மற்றும் விவசாயிகளின் நல அமைச்சகத்தின் கீழ் இணைக்கப்பட்ட துறையாகும். குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிக்க சட்ட நிர்ப்பந்தம் ஏதும் இல்லை என்பதே இதன் அர்த்தம். இந்த அமைப்பு தனியார் வர்த்தகர்களையும் கட்டுப்படுத்த முடியாது.<br><br>குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயத்துக்குச் சட்ட ரீதியான ஆதரவை வழங்க சிஏசிபி முயன்றது. விவசாயிகள் தங்கள் பயிர்களை, குறைந்தபட்ச விலையில் விற்க சட்டம் கொண்டு வர, கடந்த 2018 ஆம் ஆண்டு மத்திய அரசுக்கு சிஏசிபி பரிந்துரைத்தது. எனினும், இந்த பரிந்துரையை மத்திய அரசு நிராகரித்துவிட்டது.<br><br>அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின் கீழ், பிறப்பிக்கப்பட்ட நிர்வாக உத்தரவின்படி, கரும்பு விவசாயிகளுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிப்பதில் சட்ட உரிமை உள்ளது. இதன்படி தான் கரும்புக்கு நியாயமான மற்றும் ஊதிய விலையை நிர்ணயிக்க வேண்டும். இது சிஏசிபி பரிந்துரைப்படி தீர்மானிக்கப்படுகிறது.</p>



<h4 class="wp-block-heading">புதிய விவசாயச் சட்டங்களில் குறைந்தபட்ச ஆதரவு விலை குறித்துத் தெரிவிக்காதது ஏன்?</h4>



<p>விவசாயச் சட்டங்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயத்துக்கும் சம்பந்தமே இல்லை. சட்ட வரையறைக்குள் வராதபோது, இந்த மசோதாக்களில் குறைந்தபட்ச ஆதரவு விலையைக் காணமுடியாது.<br><br>ஒரு சட்டம் விவசாய உற்பத்தி மற்று சந்தைக்குழுவுக்கு வெளியே, தங்கள் விளைபொருட்களை எந்த கூடுதல் செலவும் இன்றி விவசாயிகள் விற்கலாம் என்கிறது. மற்றொரு சட்டம் விவசாய ஒப்பந்தம் மற்றும் கார்பரேட் நிறுவனங்களுக்கு நேரடியாக விவசாயிகளே விளைபொருட்களை விற்கலாம் என்கிறது. தானியங்கள், பருப்புகள், உருளைக்கிழங்கு, வெங்காயம், எண்ணெய் வித்துகள் மற்றும் எண்ணெய் ஆகியவற்றை அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலிலிருந்து அகற்றிவிட்டது. அசாதாரண சூழ்நிலைகளில் மட்டும் விதிவிலக்கு உண்டு என்றும் கூறுகிறது. இந்த சட்டங்களில் அடிப்படையில் பார்க்கும்போது, குறைந்தபட்ச ஆதரவு விலை குறித்த உத்தரவாதம் தரப்படவில்லை.</p>



<h4 class="wp-block-heading">குறைந்தபட்ச ஆதரவு விலை முறை ரத்தாகாது என்று அர்த்தம் கொள்ளலாமா?</h4>



<p>விவசாய சட்டங்களில் குறிப்பிடாவிட்டாலும், இன்றைய சூழலில் குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயத்திலிருந்து விலகிச் செல்ல அரசுக்கு உத்தேசம் இல்லை. இந்த பிரச்சினையைத்தான் போராடும் விவசாயிகளும், அரசியல் கட்சியினரும் எழுப்புகிறார்கள். ஆனால், குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயத்தை ரத்து செய்யமாட்டோம் என்ற உத்தரவாதத்தைத் தர மோடி அரசு மறுக்கிறது. குறைந்தபட்ச ஆதரவு விலை முறையை விவசாயச் சட்டங்கள் முடிவுக்குக் கொண்டு வந்துவிடும் என்பதே அவர்களது கவலையாக உள்ளது. மேலும் விவசாயிகளை கார்பரேட் நிறுவனங்கள் சுரண்டுவதற்கும் இந்த சட்டங்கள் வழிவகுக்கும் என்ற அச்சத்தையும் இவர்கள் வெளிப்படுத்துகின்றனர். குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணய முறையால் யாருக்குப் பயன் என்ற விவாதமும் தொடர்ந்துகொண்டிருக்கிறது.</p>



<h4 class="wp-block-heading">குறைந்தபட்ச ஆதரவு விலையால் எல்லா மாநில விவசாயிகளும் பலன் அடைகிறார்களா?</h4>



<p>6 சதவீத விவசாயிகள் மட்டுமே குறைந்தபட்ச ஆதரவு விலையின்கீழ் விளைபொருட்களை விற்பதாக, 2015 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட சாந்தகுமார் குழு தெரிவித்துள்ளது.  குறைந்தபட்ச ஆதரவு விலையின்படி, அரசின் கொள்முதல் சீராக இல்லாததால், இந்தியா முழுவதும் அனைத்து விவசாயிகளும் ஒரே மாதிரியான பலனைப் பெற முடியவில்லை என்றும் சுட்டிக்காட்டியிருந்தது.<br><br>குறிப்பாக, சி2 -க்குள் வரும் நெல் விலை கடந்த 2004- 2005 முதல் 2014-15 வரை, பீகாரில் 11.2 சதவீதம் அதிகரித்தது. மேற்கு வங்கத்தில் 11.9 சதவீதமும் அதிகரித்தது. குறைந்தபட்ச ஆதரவு விலையை விட சி 2 முறை 10.6  சதவீதம்  அதிகமாக இருந்தது.<br><br>குறைந்தபட்ச ஆதரவு விலையின்படி, கோதுமை மற்றும் நெல்லை பெருமளவு அரசு கொள்முதல் செய்கிறது. இவ்வாறு கொள்முதல் செய்யப்படுவதை, பொது விநியோக முறையில் விநியோகிக்க முக்கியத்துவம் தருகின்றனர். 2013 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், பொது விநியோகம் மூலம் தானியங்களை மானிய விலையில் வழங்க வழிவகுத்தது.<br><br>விவசாயச் சட்டங்களுக்கு எதிராகப் பஞ்சாப் மற்று ஹரியானாவில் போராட்டம் வலுப்பதற்கான காரணத்தை இது விளக்குகிறது. பஞ்சாபிலிருந்து 85 சதவீத கோதுமையும் நெல்லும் உற்பத்தியாகின்றன. ஹரியானாவில் 75 சதவீதம் கோதுமையும் நெல்லும் உற்பத்தியாகின்றன. அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஆதரவு விலையின் அடிப்படையிலேயே இவற்றைக் கொள்முதல் செய்வதாக, விவசாய அமைச்சகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.<br><br>குறைந்தபட்ச ஆதார விலையின் அடிப்படையில், பஞ்சாப், ஹரியானா மற்றும் ஆந்திராவிலிருந்து 50 சதவீதம் அரிசி கொள்முதல் செய்யப்படுகிறது. மேற்கு வங்கம் போன்ற மற்ற மாநிலங்களைச் சேர்ந்த நெற்பயிர் விவசாயிகளுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலையால் பயன் இல்லை. கோதுமையைப் பொறுத்தவரை, பஞ்சாப், ஹரியானா, மத்தியப் பிரதேச மாநிலங்களிலிருந்து குறைந்தபட்ச ஆதரவு விலையின்படி பெருமளவு கொள்முதல் செய்யப்படுகிறது.<br><br>2012-13 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேசிய மாதிரி சர்வேயில், குறைந்தபட்ச ஆதரவு விலையால் 13.5 சதவீதம் நெற்பயிர் விவசாயிகள் பயன் பெறுவதாகக் கூறப்பட்டுள்ளது. குறைந்தபட்ச ஆதரவு விலையைப் பற்றி 32.2 சதவீத நெற்பயிர் விவசாயிகளும், 39.2 கோதுமை விவசாயிகளும் அறிந்திருந்ததாக சர்வேயில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/what-is-msp-which-states-benefit-from-procurement-legal-basis-and-protests/">குறைந்தபட்ச ஆதரவு விலை ஏன் தேவை? விவசாயிகள் போராடுவது ஏன்? : விரிவான அலசல்</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://desiyamurasu.com/news-india/what-is-msp-which-states-benefit-from-procurement-legal-basis-and-protests/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>மத்திய பா.ஜ.க. அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகளின் எழுச்சி மாநாடு</title>
		<link>https://desiyamurasu.com/news-tamilnadu/tncc-massive-rally-against-bjps-farm-bills/</link>
					<comments>https://desiyamurasu.com/news-tamilnadu/tncc-massive-rally-against-bjps-farm-bills/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[ஆ. கோபண்ணா]]></dc:creator>
		<pubDate>Wed, 14 Oct 2020 12:19:35 +0000</pubDate>
				<category><![CDATA[இயக்கச் செய்திகள்]]></category>
		<category><![CDATA[தமிழக அரசியல்]]></category>
		<category><![CDATA[a gopanna]]></category>
		<category><![CDATA[Farm Bills]]></category>
		<category><![CDATA[Farmers Protests]]></category>
		<category><![CDATA[tncc]]></category>
		<category><![CDATA[TNCC President]]></category>
		<guid isPermaLink="false">https://desiyamurasu.com/?p=2653</guid>

					<description><![CDATA[<p>.மத்திய பா.ஜ.க. அரசின் விவசாய விரோத சட்டங்களை எதிர்த்து அக்டோபர் 11 ஞாயிறு காலை 10 மணியளவில் திருவண்ணாமலை, செங்கம் மெயின் ரோடு, அத்;தியந்தல் பேருந்து நிறுத்தம் அருகில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி அவர்கள் தலைமையில் மாபெரும் விவசாயிகள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு மூவாயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர். விவசாயிகள் மாநாட்டிற்கென பிரம்மாண்டமான மேடையும், பந்தலும் அமைக்கப்பட்டு சமூக விலகலை கடைப்பிடிக்கிற வகையில் மேடையிலும், பங்கேற்பவர்கள் பகுதியிலும் இருக்கைகள் [&#8230;]</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-tamilnadu/tncc-massive-rally-against-bjps-farm-bills/">மத்திய பா.ஜ.க. அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகளின் எழுச்சி மாநாடு</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>.மத்திய பா.ஜ.க. அரசின் விவசாய விரோத சட்டங்களை எதிர்த்து அக்டோபர் 11 ஞாயிறு காலை 10 மணியளவில் திருவண்ணாமலை, செங்கம் மெயின் ரோடு, அத்;தியந்தல் பேருந்து நிறுத்தம் அருகில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி அவர்கள் தலைமையில் மாபெரும் விவசாயிகள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு மூவாயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர். விவசாயிகள் மாநாட்டிற்கென பிரம்மாண்டமான மேடையும், பந்தலும் அமைக்கப்பட்டு சமூக விலகலை கடைப்பிடிக்கிற வகையில் மேடையிலும், பங்கேற்பவர்கள் பகுதியிலும் இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. மிகுந்த கட்டுப்பாடோடும், எழுச்சியோடும் விவசாயிகள் மாநாடு நடைபெற்றதை பார்த்தவர்கள் அனைவருமே பாராட்டி மகிழ்ந்தார்கள். மாநாட்டையொட்டி பந்தலுக்கு அருகில் டிராக்டர்கள் அணிவகுக்கும் வகையில் நிறுத்தப்பட்டிருந்தன.</p>



<figure class="wp-block-image size-large"><img loading="lazy" decoding="async" width="1024" height="681" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/WhatsApp-Image-2020-10-14-at-15.14.36-1024x681.jpeg" alt="" class="wp-image-2657" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/WhatsApp-Image-2020-10-14-at-15.14.36-1024x681.jpeg 1024w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/WhatsApp-Image-2020-10-14-at-15.14.36-300x199.jpeg 300w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/WhatsApp-Image-2020-10-14-at-15.14.36-768x511.jpeg 768w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/WhatsApp-Image-2020-10-14-at-15.14.36-750x499.jpeg 750w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/WhatsApp-Image-2020-10-14-at-15.14.36-1140x758.jpeg 1140w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/WhatsApp-Image-2020-10-14-at-15.14.36.jpeg 1280w" sizes="auto, (max-width: 1024px) 100vw, 1024px" /></figure>



<p>மத்திய பா.ஜ.க. அரசின் அவசர சட்டங்களை எதிர்த்து தமிழக விவசாயிகளின் உள்ளக் குழுறலை வெளிப்படுத்துகிற வகையில் விவசாயிகள் மாநாடு மிகச் சிறப்பாக நடைபெற்றது. திருவண்ணாமலை மாநாடு தமிழக அரசியலில் திருப்பத்தை ஏற்படுத்துகிற வகையில் அனைவரும் பாராட்டும் விதத்தில் சிறப்பான ஏற்பாடுகளை திருவண்ணாமலை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவரும், ராஜீவ்காந்தி பஞ்சாயத்துராஜ் சங்கதன் அமைப்பின் தமிழக தலைவருமான செங்கம் ஜி. குமார் ஏற்பாடுகளை செய்திருந்தார்.</p>



<p>விவசாயிகள் மாநாட்டில் தமிழ்நாடு காங்கிரஸ் செயல் தலைவர் டாக்டர் கே. ஜெயக்குமார், எம்.பி. துவக்கவுரை நிகழ்த்தினார். பா.ஜ.க. அரசின் விவசாய விரோதச் சட்டங்களை ஏன் எதிர்க்கிறோம் என்ற பிரச்சார நூலை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் டாக்டர் சிரிவெல்ல பிரசாத் வெளியிட, தமிழ்நாடு காங்கிரஸ் ஊடகத்துறை தலைவர் ஆ. கோபண்ணா முதல் நூலை பெற்றுக் கொண்டார். மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் டி.என். முருகானந்தம், தமிழ்நாடு காங்கிரஸ் பொதுச்செயலாளர்கள் டி. செல்வம், கீழானூர் ராஜேந்திரன் ஆகியோர் முன்மொழிந்தனர்.</p>



<figure class="wp-block-image size-large"><img loading="lazy" decoding="async" width="1024" height="681" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/WhatsApp-Image-2020-10-14-at-15.14.36-3-1024x681.jpeg" alt="" class="wp-image-2656" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/WhatsApp-Image-2020-10-14-at-15.14.36-3-1024x681.jpeg 1024w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/WhatsApp-Image-2020-10-14-at-15.14.36-3-300x200.jpeg 300w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/WhatsApp-Image-2020-10-14-at-15.14.36-3-768x511.jpeg 768w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/WhatsApp-Image-2020-10-14-at-15.14.36-3-750x499.jpeg 750w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/WhatsApp-Image-2020-10-14-at-15.14.36-3.jpeg 1040w" sizes="auto, (max-width: 1024px) 100vw, 1024px" /></figure>



<p>விவசாயிகளின் சங்கமமாக நிகழ்ந்த இந்த மாநாட்டில் தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வெ.கி.ச. இளங்கோவன் சிறப்புரையாற்றினார். பகல் 1 மணியளவில் தலைவர் கே.எஸ். அழகிரி அவர்கள் வேளாண் சட்டங்களை கடுமையாக விமர்சனம் செய்து மிகச் சிறப்பான உரை என்று சொல்வதை விட காங்கிரசின் ஜெயபேரிகையாக அவர் முழங்கியதை மாநாடே உன்னிப்பாக கவனித்து கரவொலி எழுப்பி வரவேற்றது.</p>



<p>இந்த மாநாட்டில் தமிழ்நாடு காங்கிரஸ் செயல் தலைவர்கள் மயூரா எஸ். ஜெயக்குமார், மோகன் குமாரமங்கலம், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள் டாக்டர் ஏ. செல்லக்குமார், எம்.பி., சி.டி. மெய்யப்பன், கிறிஸ்டோபர் திலக், முன்னாள் மத்திய அமைச்சர் ஆர். தனுஷ்கோடி ஆதித்தன், மக்களவை உறுப்பினர் செல்வி எஸ். ஜோதிமணி, சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ். விஜயதரணி, எஸ். ராஜேஷ்குமார், ஜே.ஜி. பிரின்ஸ், வி.எஸ். காளிமுத்து, ஆர். கணேஷ் மற்றும் கே. கோபிநாத், உ. பலராமன், கு. செல்வப்பெருந்தகை, பொன். கிருஷ்ணமூர்த்தி, அருள் அன்பரசு, டாக்டர் கே.ஐ. மணிரத்தினம், இராம. சுகந்தன், எம்.பி. ரஞ்சன்குமார், எஸ்.பி. வரதராஜன், விவசாய அணி தலைவர் எஸ். பவன்குமார், திருச்சி ஜி.கே. முரளிதரன், விவசாய சங்கத் தலைவர் இளங்கீரன், வழக்கறிஞர் சுதா ராமகிருஷ்ணன், ஹசன் மௌலானா, குங்பூ விஜயன், அஸ்லம் பாஷா, சுதர்சன் ஜெயசிம்மா, ஜி.கே. தாஸ், கே.டி. லஷ;மிகாந்தன் மற்றும் பெருந்திரளானவர்கள் பங்கேற்று சிறப்பித்தார்கள். திருவண்ணாமலை மாவட்ட விவசாய பிரிவு தலைவர் டி. சீனிவாசன் மற்றும் டாக்டர் என். வெற்றிச்செல்வன் ஆகியோர் நன்றியுரை நிகழ்த்தினார்கள்.</p>



<figure class="wp-block-image size-large"><img loading="lazy" decoding="async" width="1024" height="681" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/WhatsApp-Image-2020-10-14-at-17.46.13-1024x681.jpeg" alt="" class="wp-image-2659" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/WhatsApp-Image-2020-10-14-at-17.46.13-1024x681.jpeg 1024w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/WhatsApp-Image-2020-10-14-at-17.46.13-300x199.jpeg 300w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/WhatsApp-Image-2020-10-14-at-17.46.13-768x511.jpeg 768w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/WhatsApp-Image-2020-10-14-at-17.46.13-750x499.jpeg 750w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/WhatsApp-Image-2020-10-14-at-17.46.13-1140x758.jpeg 1140w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/WhatsApp-Image-2020-10-14-at-17.46.13.jpeg 1280w" sizes="auto, (max-width: 1024px) 100vw, 1024px" /></figure>



<p>ஐம்பது வருடங்களாக தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இல்லை என்றாலும், தமது சொந்த முயற்சியின் மூலம் மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமான முறையில், பார்ப்போர் வியக்கும் வகையில் ஆளுங்கட்சி நடத்துவதைப் போல மாநாட்டு ஏற்பாடுகளை செய்த செங்கம் ஜி. குமாரை தலைவர் கே.எஸ். அழகிரி அவர்கள் மனதார பாராட்டினார். அந்த பாராட்டிற்கு தகுதியுள்ளவராக அவர் விளங்கியதை மாநாட்டை பார்ப்பவர்கள் அனைவரும் உறுதி செய்ததை பார்க்க முடிந்தது. மாநாட்டிற்கு வந்த அனைவருக்கும் உயர்தர மதிய உணவு வழங்கப்பட்டது.</p>



<p>தமிழக காங்கிரசை பொறுத்தவரை இந்த மாநாட்டை நடத்துகிற பொறுப்பை தலைவர் கே.எஸ். அழகிரி வழங்கிய நாள் முதல் இரவு, பகல் பாராமல், கண் துஞ்சாமல், அயராமல், சிறிதும் ஓய்வின்றி உழைத்த செங்கம் ஜி. குமார் அவர்களது உழைப்பை பாராட்டாதவர்களே இருக்க முடியாது. இவருக்கு உறுதுணையாக இருந்த செயல்வீரர் செந்தமிழ் அரசும் பாராட்டிற்கு உரியவராக அவரது செயல்பாடுகள் இருந்தது.</p>



<p>தமிழக காங்கிரசை பொறுத்தவரை செங்கம் குமாரைப் போல ஆற்றல்மிக்க மாவட்ட காங்கிரஸ் தலைவர்களாக செயல்படுவார்களேயானால் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி வலிமைப் பெற்று முன்னணியில் இருக்கும் வகையில் மிகப் பெரிய வாய்ப்பு ஏற்படும் என்பதை எவரும் மறுக்க இயலாது.</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-tamilnadu/tncc-massive-rally-against-bjps-farm-bills/">மத்திய பா.ஜ.க. அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகளின் எழுச்சி மாநாடு</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://desiyamurasu.com/news-tamilnadu/tncc-massive-rally-against-bjps-farm-bills/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>தனியார் நிறுவனங்கள் கொள்ளையடிக்கவே விவசாயச் சட்டங்கள் உதவும்: கொந்தளிக்கும் விவசாயிகள்</title>
		<link>https://desiyamurasu.com/news-india/why-did-the-bjp-feel-empowered-to-push-through-farm-laws-widely-seen-as-anti-farmer/</link>
					<comments>https://desiyamurasu.com/news-india/why-did-the-bjp-feel-empowered-to-push-through-farm-laws-widely-seen-as-anti-farmer/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[ஆ. கோபண்ணா]]></dc:creator>
		<pubDate>Sat, 10 Oct 2020 08:22:31 +0000</pubDate>
				<category><![CDATA[தேசிய அரசியல்]]></category>
		<category><![CDATA[Agriculture]]></category>
		<category><![CDATA[bjp]]></category>
		<category><![CDATA[Farm Laws]]></category>
		<category><![CDATA[Farmers Protests]]></category>
		<guid isPermaLink="false">https://desiyamurasu.com/?p=2584</guid>

					<description><![CDATA[<p>&#8221;கொள்ளையடிக்கவே அதிகாரம்&#8221;. &#8211; கடந்த செப்டம்பர் மாதம் 3 விவசாயச் சட்டங்களை&#160; நாடாளுமன்றத்தில் பாஜக அரசு நிறைவேற்றியபோது, விவசாயிகளின் தலைவர் அம்ரா ராம் நறுக்கென்று கூறிய வார்த்தைதான் இது. விவசாயிகளுக்கு எதிராகவே சட்டங்களை இயற்றவே அதிகாரம் கிடைத்துள்ளதாக பாஜக நினைக்கிறது. விவசாயச் சட்டங்களால் ஏற்படும் பாதிப்பு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க அவகாசம் அளிக்காமல், கடும் எதிர்ப்புகளை மீறி சட்டங்களை நிறைவேற்றியிருக்கிறது மத்திய பாஜக அரசு. விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்பை இப்படி வெளிப்படுத்தினார் அம்ரா ராம். உழவர் உற்பத்தி [&#8230;]</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/why-did-the-bjp-feel-empowered-to-push-through-farm-laws-widely-seen-as-anti-farmer/">தனியார் நிறுவனங்கள் கொள்ளையடிக்கவே விவசாயச் சட்டங்கள் உதவும்: கொந்தளிக்கும் விவசாயிகள்</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>&#8221;கொள்ளையடிக்கவே அதிகாரம்&#8221;.</p>



<p>&#8211; கடந்த செப்டம்பர் மாதம் 3 விவசாயச் சட்டங்களை&nbsp; நாடாளுமன்றத்தில் பாஜக அரசு நிறைவேற்றியபோது, விவசாயிகளின் தலைவர் அம்ரா ராம் நறுக்கென்று கூறிய வார்த்தைதான் இது.</p>



<p>விவசாயிகளுக்கு எதிராகவே சட்டங்களை இயற்றவே அதிகாரம் கிடைத்துள்ளதாக பாஜக நினைக்கிறது. விவசாயச் சட்டங்களால் ஏற்படும் பாதிப்பு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க அவகாசம் அளிக்காமல், கடும் எதிர்ப்புகளை மீறி சட்டங்களை நிறைவேற்றியிருக்கிறது மத்திய பாஜக அரசு. விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்பை இப்படி வெளிப்படுத்தினார் அம்ரா ராம்.</p>



<p>உழவர் உற்பத்தி வர்த்தகம் மற்றும் வர்த்தக (ஊக்குவிப்பு மற்றும் வசதி) அவசரச் சட்டம்:</p>



<p>இந்தச் சட்டத்தின்படி, பயிர் அறுவடை முடிந்ததும் தானியங்களை எங்கு வேண்டுமானாலும், எந்த வியாபாரிக்கும் விவசாயி விற்கலாம். அவர்கள் பகுதியில் உள்ள விவசாய உற்பத்தி மற்றும் சந்தை குழுவில்தான் விற்கவேண்டும் என்ற நிர்ப்பந்தம் இல்லை. &#8216;ஒரு நாடு, ஒரு சந்தை&#8217; என்ற வகையில், இதனை அரசு முன்னெடுத்துச் செல்கிறது.</p>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large"><img loading="lazy" decoding="async" width="753" height="565" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/eznagsgwdc-1601733918.jpg" alt="" class="wp-image-2586" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/eznagsgwdc-1601733918.jpg 753w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/eznagsgwdc-1601733918-300x225.jpg 300w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/eznagsgwdc-1601733918-750x563.jpg 750w" sizes="auto, (max-width: 753px) 100vw, 753px" /><figcaption><strong>Farmers on strike in Nasik in 2017 destroy their onion crop. Credit: IANS</strong><br></figcaption></figure></div>



<p>விலை உத்தரவாதம் மற்றும் பண்ணை சேவைகள் குறித்த விவசாயிகள் ( அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) ஒப்பந்தம்:</p>



<p>இந்த சட்டத்தின்படி, தனது பயிரின் தரத்துக்கேற்ப பயிர்களை விற்பனை செய்வதற்கான ஒப்பந்தத்தில் விவசாயி கையெழுத்திட வேண்டும். விவசாயிகளின் இழப்பை இது குறைக்கும் என்று நம்பப்படுகிறது.</p>



<p>1955 ஆம் ஆண்டு அத்தியாவசியப் பொருட்கள் சட்டத் திருத்தம்:</p>



<p>பணக்காரர்களும் வணிகர்களும் முன்பு பயிர்களை மலிவு விலையில் வாங்கி, அவற்றை அதிக அளவு சேமித்து, கள்ளச் சந்தையில் விற்று வந்தனர். இதனைத் தடுக்க 1955 ஆம் ஆண்டு அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படுகிறது. ஆனால், புதிய திருத்தத்தின்படி, தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், சமையல் எண்ணெய் மற்றும் உருளைக்கிழங்கு ஆகியவை அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளன.</p>



<p>எனினும், இந்த அவசரச் சட்டம் தேசியப் பேரிடர் அல்லது அவசரக் காலத்தில் பொருந்தாது என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.</p>



<p>இந்த 3 அவசரச் சட்டங்களையும் எதிர்த்து நாடு முழுவதும் விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.</p>



<p>விவசாய உற்பத்தி சந்தைக்குழு குறிப்பிடும் வெளிமார்க்கெட்டுகளில் தங்கள் விளைபொருட்களை விவசாயிகள் விற்க இந்த சட்டம் வழிவகுக்கிறது. தனியார் நிறுவனங்கள் மூலம் ஒப்பந்த அடிப்படையிலான விவசாயத்தைச் செயல்படுத்த முயல்கிறார்கள்.</p>



<p>அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலிலிருந்து தானியங்கள் மற்றும்&nbsp; பருப்பு வகைகள் நீக்கப்பட்டுள்ளதோடு, இருப்பு வைக்க விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளும் அகற்றப்பட்டுள்ளன.</p>



<p>வெளிச்சந்தையில் விளைபொருட்களை விற்க விவசாயிகளை</p>



<p>அனுமதிப்பதால், நிலைமை அப்படியே தலைகீழாக மாறிவிடும் என்பதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்த அரசு முயல்கிறது. இதனை விவசாயிகள் ஏற்கவில்லை.</p>



<p>விவசாயப் பொருட்களை அரசே கொள்முதல் செய்து குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிக்கும் முறை வலுவிழந்து போகும் என்கிறார்கள் விவசாயிகள். அதோடு, தனியார்த் துறையினரின் கருணைப் பார்வையில் வாழ வேண்டியிருக்கும் என்பதும், சிறு விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவதோடு, உணவு பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் வரும் என்பதும் விவசாயிகள் தரப்பு வாதமாக இருக்கிறது.</p>



<p>இது குறித்து விவசாயிகள் தலைவர் அம்ரா ராம் கூறும்போது, &#8221;சாதாரண மக்களின் நலனைப் பற்றி பாஜக அரசுக்குக் கவலையில்லை. தேசிய மற்றும் சர்வதேச அளவிலான தனியார் நிறுவனங்கள் கொள்ளையடிக்கவே இந்த விவசாயச் சட்டங்கள் வழிவகுக்கும்&#8221; என்றார்.</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/why-did-the-bjp-feel-empowered-to-push-through-farm-laws-widely-seen-as-anti-farmer/">தனியார் நிறுவனங்கள் கொள்ளையடிக்கவே விவசாயச் சட்டங்கள் உதவும்: கொந்தளிக்கும் விவசாயிகள்</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://desiyamurasu.com/news-india/why-did-the-bjp-feel-empowered-to-push-through-farm-laws-widely-seen-as-anti-farmer/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
	</channel>
</rss>
