<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Farm Laws Archives - தேசிய முரசு - Desiya Murasu</title>
	<atom:link href="https://desiyamurasu.com/tag/farm-laws/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://desiyamurasu.com/tag/farm-laws/</link>
	<description>DesiyaMurasu – Daily Opinions &#38; Analysis on Latest News  &#124; Tamil News</description>
	<lastBuildDate>Tue, 20 Oct 2020 11:05:54 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9</generator>

<image>
	<url>https://desiyamurasu.com/wp-content/uploads/2020/07/cropped-FAV-copy-1-32x32.png</url>
	<title>Farm Laws Archives - தேசிய முரசு - Desiya Murasu</title>
	<link>https://desiyamurasu.com/tag/farm-laws/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>அக்டோபர் 19 ஆம் தேதி சிறப்பு சட்டப்பேரவை கூட்டம்: விவசாய சட்டங்களுக்கு எதிராக நடவடிக்கை?</title>
		<link>https://desiyamurasu.com/news-india/can-punjab-assembly-actually-negate-centres-farm-laws/</link>
					<comments>https://desiyamurasu.com/news-india/can-punjab-assembly-actually-negate-centres-farm-laws/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Admin]]></dc:creator>
		<pubDate>Tue, 20 Oct 2020 11:05:53 +0000</pubDate>
				<category><![CDATA[தேசிய அரசியல்]]></category>
		<category><![CDATA[Amarinder Singh]]></category>
		<category><![CDATA[Farm Laws]]></category>
		<category><![CDATA[Farm Laws issue]]></category>
		<category><![CDATA[Punjab Assembly special session]]></category>
		<category><![CDATA[Punjab Government]]></category>
		<guid isPermaLink="false">https://desiyamurasu.com/?p=2711</guid>

					<description><![CDATA[<p>மத்திய அரசு கொண்டு வந்துள்ள, ஆபத்தான விவசாயிகளுக்கு எதிரான 3 சட்டங்களுக்குப் பதிலடி தரும் வகையில், அக்டோபர் 19 ஆம் தேதி சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தைக் கூட்ட பஞ்சாப் அரசு முடிவு செய்துள்ளது. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்ற 3 விவசாயச் சட்டங்களுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. புதிய விவசாயச் சட்டங்களை எதிர்த்து தமது அரசு போராடும் என காங்கிரஸ் ஆளும் பஞ்சாப் மாநிலத்தின் முதலமைச்சர் அமரீந்தர் சிங் ஏற்கனவே தெரிவித்துள்ளார். கூட்டாட்சிக்கு எதிரானது [&#8230;]</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/can-punjab-assembly-actually-negate-centres-farm-laws/">அக்டோபர் 19 ஆம் தேதி சிறப்பு சட்டப்பேரவை கூட்டம்: விவசாய சட்டங்களுக்கு எதிராக நடவடிக்கை?</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>மத்திய அரசு கொண்டு வந்துள்ள, ஆபத்தான விவசாயிகளுக்கு எதிரான 3 சட்டங்களுக்குப் பதிலடி தரும் வகையில், அக்டோபர் 19 ஆம் தேதி சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தைக் கூட்ட பஞ்சாப் அரசு முடிவு செய்துள்ளது.</p>



<p>நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்ற 3 விவசாயச் சட்டங்களுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. புதிய விவசாயச் சட்டங்களை எதிர்த்து தமது அரசு போராடும் என காங்கிரஸ் ஆளும் பஞ்சாப் மாநிலத்தின் முதலமைச்சர் அமரீந்தர் சிங் ஏற்கனவே தெரிவித்துள்ளார். கூட்டாட்சிக்கு எதிரானது என்றும் அவர் விமர்சித்துள்ளார். ஆணிவேர் வரை சென்று சட்டரீதியாகவும். சட்டப்பேரவை வழியாகவும் போராடுவோம் என்று குறிப்பிட்டிருந்தார்.</p>



<p>சட்ட வழியாக என்றால், அரசியல் சாசனத்தின் 131 ஆவது பிரிவின் கீழ், 3 விவசாயச் சட்டங்களையும் எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம். இதுபோன்ற சட்டங்களைக் கொண்டு வர மத்திய அரசுக்கு அதிகாரம் உண்டா? அல்லது மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டா என்பது குறித்து உச்ச நீதிமன்றத்தில் விவாதம் நடைபெறலாம்.</p>



<p>மத்திய அரசு கொண்டு வந்த சட்டத்தை மாநில அரசு திரும்பப் பெற இயலாது. அந்த சட்டத்தைக் கண்டுகொள்ளாமல் கடந்து செல்லவும் முடியாது. நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டு, அதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்த சட்டம் நாடு முழுவதற்கும் பொருந்தும். எனவே, இந்த சட்டத்தை மாநில அரசால் நீக்க முடியாது. நாடாளுமன்றம் மட்டுமே அந்த சட்டங்களை நீக்க முடியும்.</p>



<p>அரசியல் சாசனத்தின் 7 ஆவது அட்டவணையின்படி, மத்திய அரசின் வரையறைக்குள்ளோ, மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்த வரையறைக்குள்ளோ வந்தால் மட்டுமே, நாடாளுமன்றம் சட்டம் இயற்ற முடியும்.</p>



<p>மாநில அரசின் அதிகார வரம்புக்குட்பட்ட விசயத்தில், மத்திய அரசு சட்டமியற்றினால், அது செல்லாது என மாநில அரசுகள் வாதாட முடியும். எனினும், மத்திய, மாநில அரசுகளின் கூட்டு வரையறைக்குள் குறிப்பிட்ட விசயம் வந்தால், சட்டம் இயற்ற முடியும் என மத்திய அரசும் வாதிட முடியும்.</p>



<p>மத்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாய சட்டம் (பிரிவு 14) மாநில வரையறைக்குள் வரும் என மாநில அரசுகளும், விவசாய உற்பத்தியின் வர்த்தகம் மற்றும் வணிகம் தொடர்பான விசயமாக இருப்பதால் (பிரிவு 33) இத்தகைய சட்டங்களை இயற்ற மத்திய அரசுக்கு அதிகாரம் உண்டு என்றும் வாதாட முடியும்.</p>



<p>மத்திய, மாநில அரசுகளின் இணைந்த வரையறைக்குள் வந்தால் மட்டுமே, மாநில அரசு அதே சட்டத்தில் திருத்தம் கொண்டு வர முடியும். மத்திய அரசின் வரையறைக்குள் வரும் விசயம் என்றால், பஞ்சாப் அரசால் மத்திய அரசின் விவசாயச் சட்டங்களை மாற்றியமைக்க முடியாது.</p>



<p>உதாரணத்துக்கு, குற்றவியல் சட்டம் மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் ஆகிவை மத்திய மற்றும் மாநில அரசுகளின் இணைந்த வரையறைக்குள் வருகிறது. குற்றவியல் நடைமுறைச் சட்டம் என்பது மத்திய அரசின் சட்டம். மாநில அரசும் அதிகார வரையறைக்குள் இருப்பதால், இந்தியத் தண்டனைச் சட்டத்தின் கீழ் தண்டனையில் திருத்தம் கொண்டு வரமுடியும்.</p>



<p>இந்த விவகாரத்தில் பஞ்சாப் அரசு தனியாகச் சட்டத்தை இயற்ற முடியுமா?</p>



<p>மத்திய, மாநில அரசுகளின் இணைந்த அதிகார வரையறைக்குள் 3 விவசாய சட்டங்களும் வருகின்றன என்ற மத்திய அரசின் வாதத்தின்படி, பஞ்சாப் மாநில அரசு தனியாக சட்டமியற்ற முடியாது. எனினும், புதிய சட்டம் இயற்றப் போவதில்லை என்று பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளார். இந்துஸ்தான் டைம்ஸ் ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்த அவர், விவசாயிகளுக்கு எதிரான 3 சட்டங்களுக்கும் ராம் நாத் கோவிந்த் எப்படி ஒப்புதல் அளித்தார் என தெரியவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.</p>



<p>ஒருவேளை பஞ்சாப் சட்டப்பேரவையில் விவசாயச் சட்டம் கொண்டு வரப்பட்டால், அதற்குப் பஞ்சாப் ஆளுநர் ஒப்புதல் அளிப்பார் என்பது சந்தேகமே. அரசியல் சாசனத்தில் வலியுறுத்தப்பட்டுள்ள கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராக மத்திய அரசு செயல்படுவதாகக் கூறி, உச்ச நீதிமன்றத்தைப் பஞ்சாப் அரசு அணுகுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.</p>



<p>வரும் 19 ஆம் தேதி பஞ்சாப் சட்டப்பேரவையில் என்ன நடக்கும்?</p>



<p>மத்திய அரசின் விவசாயச் சட்டங்களைத் திரும்பப் பெறவோ அல்லது அந்த சட்டங்களுக்கு முரணான சட்டங்களை இயற்றவோ பஞ்சாப் அரசால் முடியாது. சட்ட ரீதியாக போராடுவதற்குப் பேரவையில் முடிவுகள் எட்டப்படக்கூடும் என்றே தெரிகிறது.</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/can-punjab-assembly-actually-negate-centres-farm-laws/">அக்டோபர் 19 ஆம் தேதி சிறப்பு சட்டப்பேரவை கூட்டம்: விவசாய சட்டங்களுக்கு எதிராக நடவடிக்கை?</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://desiyamurasu.com/news-india/can-punjab-assembly-actually-negate-centres-farm-laws/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>தனியார் நிறுவனங்கள் கொள்ளையடிக்கவே விவசாயச் சட்டங்கள் உதவும்: கொந்தளிக்கும் விவசாயிகள்</title>
		<link>https://desiyamurasu.com/news-india/why-did-the-bjp-feel-empowered-to-push-through-farm-laws-widely-seen-as-anti-farmer/</link>
					<comments>https://desiyamurasu.com/news-india/why-did-the-bjp-feel-empowered-to-push-through-farm-laws-widely-seen-as-anti-farmer/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[ஆ. கோபண்ணா]]></dc:creator>
		<pubDate>Sat, 10 Oct 2020 08:22:31 +0000</pubDate>
				<category><![CDATA[தேசிய அரசியல்]]></category>
		<category><![CDATA[Agriculture]]></category>
		<category><![CDATA[bjp]]></category>
		<category><![CDATA[Farm Laws]]></category>
		<category><![CDATA[Farmers Protests]]></category>
		<guid isPermaLink="false">https://desiyamurasu.com/?p=2584</guid>

					<description><![CDATA[<p>&#8221;கொள்ளையடிக்கவே அதிகாரம்&#8221;. &#8211; கடந்த செப்டம்பர் மாதம் 3 விவசாயச் சட்டங்களை&#160; நாடாளுமன்றத்தில் பாஜக அரசு நிறைவேற்றியபோது, விவசாயிகளின் தலைவர் அம்ரா ராம் நறுக்கென்று கூறிய வார்த்தைதான் இது. விவசாயிகளுக்கு எதிராகவே சட்டங்களை இயற்றவே அதிகாரம் கிடைத்துள்ளதாக பாஜக நினைக்கிறது. விவசாயச் சட்டங்களால் ஏற்படும் பாதிப்பு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க அவகாசம் அளிக்காமல், கடும் எதிர்ப்புகளை மீறி சட்டங்களை நிறைவேற்றியிருக்கிறது மத்திய பாஜக அரசு. விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்பை இப்படி வெளிப்படுத்தினார் அம்ரா ராம். உழவர் உற்பத்தி [&#8230;]</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/why-did-the-bjp-feel-empowered-to-push-through-farm-laws-widely-seen-as-anti-farmer/">தனியார் நிறுவனங்கள் கொள்ளையடிக்கவே விவசாயச் சட்டங்கள் உதவும்: கொந்தளிக்கும் விவசாயிகள்</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>&#8221;கொள்ளையடிக்கவே அதிகாரம்&#8221;.</p>



<p>&#8211; கடந்த செப்டம்பர் மாதம் 3 விவசாயச் சட்டங்களை&nbsp; நாடாளுமன்றத்தில் பாஜக அரசு நிறைவேற்றியபோது, விவசாயிகளின் தலைவர் அம்ரா ராம் நறுக்கென்று கூறிய வார்த்தைதான் இது.</p>



<p>விவசாயிகளுக்கு எதிராகவே சட்டங்களை இயற்றவே அதிகாரம் கிடைத்துள்ளதாக பாஜக நினைக்கிறது. விவசாயச் சட்டங்களால் ஏற்படும் பாதிப்பு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க அவகாசம் அளிக்காமல், கடும் எதிர்ப்புகளை மீறி சட்டங்களை நிறைவேற்றியிருக்கிறது மத்திய பாஜக அரசு. விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்பை இப்படி வெளிப்படுத்தினார் அம்ரா ராம்.</p>



<p>உழவர் உற்பத்தி வர்த்தகம் மற்றும் வர்த்தக (ஊக்குவிப்பு மற்றும் வசதி) அவசரச் சட்டம்:</p>



<p>இந்தச் சட்டத்தின்படி, பயிர் அறுவடை முடிந்ததும் தானியங்களை எங்கு வேண்டுமானாலும், எந்த வியாபாரிக்கும் விவசாயி விற்கலாம். அவர்கள் பகுதியில் உள்ள விவசாய உற்பத்தி மற்றும் சந்தை குழுவில்தான் விற்கவேண்டும் என்ற நிர்ப்பந்தம் இல்லை. &#8216;ஒரு நாடு, ஒரு சந்தை&#8217; என்ற வகையில், இதனை அரசு முன்னெடுத்துச் செல்கிறது.</p>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large"><img fetchpriority="high" decoding="async" width="753" height="565" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/eznagsgwdc-1601733918.jpg" alt="" class="wp-image-2586" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/eznagsgwdc-1601733918.jpg 753w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/eznagsgwdc-1601733918-300x225.jpg 300w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/eznagsgwdc-1601733918-750x563.jpg 750w" sizes="(max-width: 753px) 100vw, 753px" /><figcaption><strong>Farmers on strike in Nasik in 2017 destroy their onion crop. Credit: IANS</strong><br></figcaption></figure></div>



<p>விலை உத்தரவாதம் மற்றும் பண்ணை சேவைகள் குறித்த விவசாயிகள் ( அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) ஒப்பந்தம்:</p>



<p>இந்த சட்டத்தின்படி, தனது பயிரின் தரத்துக்கேற்ப பயிர்களை விற்பனை செய்வதற்கான ஒப்பந்தத்தில் விவசாயி கையெழுத்திட வேண்டும். விவசாயிகளின் இழப்பை இது குறைக்கும் என்று நம்பப்படுகிறது.</p>



<p>1955 ஆம் ஆண்டு அத்தியாவசியப் பொருட்கள் சட்டத் திருத்தம்:</p>



<p>பணக்காரர்களும் வணிகர்களும் முன்பு பயிர்களை மலிவு விலையில் வாங்கி, அவற்றை அதிக அளவு சேமித்து, கள்ளச் சந்தையில் விற்று வந்தனர். இதனைத் தடுக்க 1955 ஆம் ஆண்டு அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படுகிறது. ஆனால், புதிய திருத்தத்தின்படி, தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், சமையல் எண்ணெய் மற்றும் உருளைக்கிழங்கு ஆகியவை அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளன.</p>



<p>எனினும், இந்த அவசரச் சட்டம் தேசியப் பேரிடர் அல்லது அவசரக் காலத்தில் பொருந்தாது என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.</p>



<p>இந்த 3 அவசரச் சட்டங்களையும் எதிர்த்து நாடு முழுவதும் விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.</p>



<p>விவசாய உற்பத்தி சந்தைக்குழு குறிப்பிடும் வெளிமார்க்கெட்டுகளில் தங்கள் விளைபொருட்களை விவசாயிகள் விற்க இந்த சட்டம் வழிவகுக்கிறது. தனியார் நிறுவனங்கள் மூலம் ஒப்பந்த அடிப்படையிலான விவசாயத்தைச் செயல்படுத்த முயல்கிறார்கள்.</p>



<p>அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலிலிருந்து தானியங்கள் மற்றும்&nbsp; பருப்பு வகைகள் நீக்கப்பட்டுள்ளதோடு, இருப்பு வைக்க விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளும் அகற்றப்பட்டுள்ளன.</p>



<p>வெளிச்சந்தையில் விளைபொருட்களை விற்க விவசாயிகளை</p>



<p>அனுமதிப்பதால், நிலைமை அப்படியே தலைகீழாக மாறிவிடும் என்பதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்த அரசு முயல்கிறது. இதனை விவசாயிகள் ஏற்கவில்லை.</p>



<p>விவசாயப் பொருட்களை அரசே கொள்முதல் செய்து குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிக்கும் முறை வலுவிழந்து போகும் என்கிறார்கள் விவசாயிகள். அதோடு, தனியார்த் துறையினரின் கருணைப் பார்வையில் வாழ வேண்டியிருக்கும் என்பதும், சிறு விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவதோடு, உணவு பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் வரும் என்பதும் விவசாயிகள் தரப்பு வாதமாக இருக்கிறது.</p>



<p>இது குறித்து விவசாயிகள் தலைவர் அம்ரா ராம் கூறும்போது, &#8221;சாதாரண மக்களின் நலனைப் பற்றி பாஜக அரசுக்குக் கவலையில்லை. தேசிய மற்றும் சர்வதேச அளவிலான தனியார் நிறுவனங்கள் கொள்ளையடிக்கவே இந்த விவசாயச் சட்டங்கள் வழிவகுக்கும்&#8221; என்றார்.</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/why-did-the-bjp-feel-empowered-to-push-through-farm-laws-widely-seen-as-anti-farmer/">தனியார் நிறுவனங்கள் கொள்ளையடிக்கவே விவசாயச் சட்டங்கள் உதவும்: கொந்தளிக்கும் விவசாயிகள்</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://desiyamurasu.com/news-india/why-did-the-bjp-feel-empowered-to-push-through-farm-laws-widely-seen-as-anti-farmer/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
	</channel>
</rss>
