<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Economy Archives - தேசிய முரசு - Desiya Murasu</title>
	<atom:link href="https://desiyamurasu.com/tag/economy/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://desiyamurasu.com/tag/economy/</link>
	<description>DesiyaMurasu – Daily Opinions &#38; Analysis on Latest News  &#124; Tamil News</description>
	<lastBuildDate>Wed, 30 Dec 2020 05:40:01 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.1</generator>

<image>
	<url>https://desiyamurasu.com/wp-content/uploads/2020/07/cropped-FAV-copy-1-32x32.png</url>
	<title>Economy Archives - தேசிய முரசு - Desiya Murasu</title>
	<link>https://desiyamurasu.com/tag/economy/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>2017-18 ஆம் ஆண்டில் 95 சதவீத தேர்தல் பத்திரம் மூலம் பாஜகவுக்கு நன்கொடை : ரூ. 1 கோடி பத்திரங்கள் அதிக அளவில் விற்பனை</title>
		<link>https://desiyamurasu.com/news-india/electoral-bonds-heres-what-the-numbers-say/</link>
					<comments>https://desiyamurasu.com/news-india/electoral-bonds-heres-what-the-numbers-say/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Admin]]></dc:creator>
		<pubDate>Wed, 30 Dec 2020 05:39:59 +0000</pubDate>
				<category><![CDATA[தேசிய அரசியல்]]></category>
		<category><![CDATA[Economy]]></category>
		<category><![CDATA[Political Economy]]></category>
		<category><![CDATA[Politics]]></category>
		<category><![CDATA[Rights]]></category>
		<guid isPermaLink="false">https://desiyamurasu.com/?p=3785</guid>

					<description><![CDATA[<p>இதுவரை 6 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு தேர்தல் நன்கொடைப் பத்திரங்கள் விற்பனையாகியுள்ளன. இதில், கடந்த 2019-20 ஆம் ஆண்டில் மட்டும் 55 சதவீத தேர்தல் பத்திரங்கள் விற்பனையாகியுள்ளன. அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் நன்கொடையாக பத்திரங்கள் மூலம் நன்கொடை அளிக்கும் திட்டத்தை கடந்த 2018 ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் தேதி மத்திய அரசு கொண்டு வந்தது. இதன்படி, அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிப்போர் பெயர்கள் வெளியிடப்பட்டாது. இதன்பின்னர், 2017-18 பட்ஜெட்டிலும் இது குறித்து அறிவிக்கப்பட்டது. [&#8230;]</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/electoral-bonds-heres-what-the-numbers-say/">2017-18 ஆம் ஆண்டில் 95 சதவீத தேர்தல் பத்திரம் மூலம் பாஜகவுக்கு நன்கொடை : ரூ. 1 கோடி பத்திரங்கள் அதிக அளவில் விற்பனை</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>இதுவரை 6 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு தேர்தல் நன்கொடைப் பத்திரங்கள் விற்பனையாகியுள்ளன. இதில், கடந்த 2019-20 ஆம் ஆண்டில் மட்டும் 55 சதவீத தேர்தல் பத்திரங்கள் விற்பனையாகியுள்ளன.</p>



<p>அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் நன்கொடையாக பத்திரங்கள் மூலம் நன்கொடை அளிக்கும் திட்டத்தை கடந்த 2018 ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் தேதி மத்திய அரசு கொண்டு வந்தது. இதன்படி, அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிப்போர் பெயர்கள் வெளியிடப்பட்டாது. இதன்பின்னர், 2017-18 பட்ஜெட்டிலும் இது குறித்து அறிவிக்கப்பட்டது.</p>



<p>அரசியல் கட்சிகளிடம் புழங்கும் கருப்புப் பணத்தைக் கட்டுப்படுத்தவும், வெளிப்படையான நிதி நிலையை மேம்படுத்தவும் தேர்தல் நன்கொடை பத்திர முறை கொண்டு வரப்பட்டதாகக் கூறப்பட்டது.</p>



<p>தேர்தல் பத்திர முறையை அறிமுகப்படுத்தி 2 ஆண்டுகள் ஆகிவிட்டன. தற்போது, தேர்தல் பத்திரங்களின் வெளிப்படைத்தன்மை மற்றும் தவறாகப் பயன்படுத்துவது குறித்து பல விவாதங்கள் நடைபெற்றுள்ளன.</p>



<p>2019 ஆம் ஆண்டு மார்ச் 1 ஆம் தேதி முதல் தேர்தல் பத்திரங்கள் பாரத ஸ்டேட் வங்கியில் 12 முறை விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த 2019 மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் மட்டும் 20 நாட்கள் தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 2019 ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 20 வரை (9 ஆவது கட்டம்) அதிகபட்சமாக ரூ.2,256.4 கோடி மதிப்புள்ள தேர்தல் பத்திரங்கள் விற்பனையாகியுள்ளன. 2019 மார்ச் 1 முதல் மார்ச் 15 வரை( 8 ஆவது கட்டம்) ரூ.1,365.7 கோடி மதிப்புள்ள் தேர்தல் பத்திரங்கள் விற்பனையாகியுள்ளன.</p>



<p>2019 ஆம் ஆண்டு மே 6 ஆம் தேதி முதல் மே 10 ம் தேதி வரை (10 ஆவது கட்டம்) ரூ.822.25 கோடி அளவுக்கு தேர்தல் பத்திரங்கள் விற்றுள்ளன.</p>



<p>இந்த 3 கட்ட தேர்தல் பத்திரங்கள் விற்பனை 2019 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை ஒட்டியே நடைபெற்றுள்ளது கவனிக்கத்தக்கது. பொதுத்தேர்தலின் போது, 3 கட்ட விற்பனையிலும் ரூ.4,444.32 கோடி அளவுக்கு தேர்தல் பத்திரங்கள் விற்பனையாகியுள்ளன. இந்த 3 கட்டங்களில் 73 சதவீத தேர்தல் பத்திரங்கள் விற்றுள்ளன.</p>



<p>2019-20 ஆம் நிதியாண்டில் ரூ. 3,355.93 கோடி அளவுக்கு தேர்தல் பத்திரங்கள் விற்றுள்ளன. கடந்த நிதியாண்டு முழுவதும் விற்கப்பட்ட தேர்தல் பத்திரங்களின் மதிப்பான ரூ.2,550.78 கோடியை விட இது அதிகமாகும். 2017-18 நிதியாண்டில் 2018 மார்ச் மாதத்தில் முதல் கட்ட தேர்தல் பத்திர விற்பனை ரூ.220 கோடியாகும்.</p>



<p>ரூ. 1,000, ரூ. 10,000, ரூ. 1 லட்சம் , ரூ. 10 லட்சம் மற்றும் ரூ. 1 கோடி வரிசையில் பத்திரங்கள் விற்கப்படுகின்றன. கடந்த 2019 ஆம் ஆண்டு அக்டோபர் வரை, பல்வேறு வரிசைகளில் 12,313 தேர்தல் பத்திரங்கள் விற்றுள்ளன. இதில் அதிகபட்சமாக ரூ. 1 கோடி மதிப்பிலான 5,624 தேர்தல் பத்திரங்கள் விற்றுள்ளன. விற்பனையான மொத்த தேர்தல் பத்திரங்களில் இது 45.68 சதவீதமாகும்.</p>



<p>2017-18 ஆம் ஆண்டில் தேர்தல் ஆணையத்திடம் பாஜக சமர்ப்பித்த ஆவணத்தின்படி, பாரத ஸ்டேட் வங்கி மூலம் விற்பனையான தேர்தல் பத்திரங்களில். 95 சதவீத தேர்தல் பத்திரங்கள் பாஜகவுக்கு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/electoral-bonds-heres-what-the-numbers-say/">2017-18 ஆம் ஆண்டில் 95 சதவீத தேர்தல் பத்திரம் மூலம் பாஜகவுக்கு நன்கொடை : ரூ. 1 கோடி பத்திரங்கள் அதிக அளவில் விற்பனை</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://desiyamurasu.com/news-india/electoral-bonds-heres-what-the-numbers-say/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>பொது முடக்கத்தை சிந்திக்காமல் அறிவித்தார் பிரதமர் மோடி: பொருளாதார வல்லுனர்கள் குற்றச்சாட்டு</title>
		<link>https://desiyamurasu.com/news-economics/indias-gdp-shrinks-more-than-other-major-economies-decline-set-in-before-pandemic/</link>
					<comments>https://desiyamurasu.com/news-economics/indias-gdp-shrinks-more-than-other-major-economies-decline-set-in-before-pandemic/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[ஆ. கோபண்ணா]]></dc:creator>
		<pubDate>Fri, 04 Sep 2020 12:24:10 +0000</pubDate>
				<category><![CDATA[பொருளாதாரம்]]></category>
		<category><![CDATA[Covid-19]]></category>
		<category><![CDATA[Economy]]></category>
		<category><![CDATA[GDP]]></category>
		<guid isPermaLink="false">https://desiyamurasu.com/?p=2086</guid>

					<description><![CDATA[<p>மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை அமைச்சகம் கடந்த திங்கள்கிழமை வெளியிட்ட தரவுகளில், கடந்த ஏப்ரல் முதல் ஜுன் வரையிலான இந்தியாவின் &#160;மொத்த உள்நாட்டு உற்பத்தி 23.9 சதவிகிதமாக இருந்தது. ஒட்டுமொத்த கூடுதல் மதிப்பீட்டின் அடிப்படையில், பொருளாதாரம் 22.8 சதவிகிதமாக இருந்தது. இது இந்திய பொருளாதாரத்தின் மந்தநிலையையே வெளிப்படுத்துகிறது. தரவுகளின் உண்மை நிலவரம் இறுதியாக வெளியாகும்போது, நிலைமை இன்னும் மோசமாகும் என்று தெரிகிறது. இந்திய வரலாற்றில் பொருளாதார சூழல் இதுபோல் மோசமான நிலையில் இருந்ததில்லை. இதுபோன்று பொருளாதாரம் [&#8230;]</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-economics/indias-gdp-shrinks-more-than-other-major-economies-decline-set-in-before-pandemic/">பொது முடக்கத்தை சிந்திக்காமல் அறிவித்தார் பிரதமர் மோடி: பொருளாதார வல்லுனர்கள் குற்றச்சாட்டு</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை அமைச்சகம் கடந்த திங்கள்கிழமை வெளியிட்ட தரவுகளில், கடந்த ஏப்ரல் முதல் ஜுன் வரையிலான இந்தியாவின் &nbsp;மொத்த உள்நாட்டு உற்பத்தி 23.9 சதவிகிதமாக இருந்தது. ஒட்டுமொத்த கூடுதல் மதிப்பீட்டின் அடிப்படையில், பொருளாதாரம் 22.8 சதவிகிதமாக இருந்தது. இது இந்திய பொருளாதாரத்தின் மந்தநிலையையே வெளிப்படுத்துகிறது.</p>



<p>தரவுகளின் உண்மை நிலவரம் இறுதியாக வெளியாகும்போது, நிலைமை இன்னும் மோசமாகும் என்று தெரிகிறது. இந்திய வரலாற்றில் பொருளாதார சூழல் இதுபோல் மோசமான நிலையில் இருந்ததில்லை.</p>



<p>இதுபோன்று பொருளாதாரம் சுருங்கியதை கடந்த 40 ஆண்டுகளில் இந்தியா சந்தித்ததில்லை. கடந்த 1996 ஆம் ஆண்டு முதல் காலாண்டுக்கான ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தித் தரவுகளை வெளியிட்டு வரும் நிலையில், மோசமான வீழ்ச்சி ஏற்படுவது இதுதான் முதல்முறை.</p>



<p>ஆனால், இது ஒன்றரை நூற்றாண்டுக்கு ஒருமுறை நிகழும் அசாதாரணமான சூழல் என்று அரசு கூறுகிறது. ஆனால், அரசின் தலைமை பொருளாதார ஆலோசகரோ, கொரோனா மற்றும் அதனைத் தொடர்ந்து அமல்படுத்தப்பட்ட பொது முடக்கமே இதற்கு காரணம் என்கிறார்.</p>



<p>முன்னதாக, இந்தியாவில் இதுவரை இல்லாத பொருளாதார வீழ்ச்சியை, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் &#8216;கடவுளின் செயல்&#8217; என்று குற்றம் சாட்டியிருந்தார். வைரஸ் அனைத்து நாடுகளிலும் குறைந்துவிட்டது என்பதும், இந்தியாவின் பொருளாதார மந்தநிலையால் ஆபத்து இல்லை என்பது மத்திய அரசின் கருத்தாக உள்ளது.</p>



<p>ஆனால், சமூக ஊடகங்களில் இயங்கும் பா.ஜ.க.வினரோ, ஒரு படி மேலே போய், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளைவிட, இந்தியாவின் பொருளாதார மந்தநிலை குறைவாக இருப்பதாகவும், இது குறித்து போலி செய்திகள் பரப்பப்படுவதாகவும் பதிவிடுகின்றனர். &nbsp;உலகின் பல நாடுகளிலும் கொரோனா பரவல் குறைந்துவிட்டது உண்மைதான். ஆனால், சுருங்கிப் போன பொருளாதாரத்தை ஒப்பிடும் போது, மற்ற நாடுகளை விட இந்தியா மோசமான நிலையிலேயே உள்ளது.</p>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large"><img fetchpriority="high" decoding="async" width="618" height="484" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/09/graph_3.png" alt="" class="wp-image-2092" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/09/graph_3.png 618w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/09/graph_3-300x235.png 300w" sizes="(max-width: 618px) 100vw, 618px" /></figure></div>



<p>இது குறித்து பொருளாதாரம் மற்றும் நிதி தொடர்பான கட்டுரையாளர் விவேக் கவுல் கூறும்போது, &#8221;பெரிய நாடு, சிறிய நாடு என்ற பாகுபாடு இன்றி, கொரோனா வைரஸ் பரவியுள்ளது. இந்தியாவில் அமல்படுத்தப்படும் பொது முடக்கம் உலகிலேயே மிகக் கடுமையானது. இது பொருளாதார நடவடிக்கைகளை முடக்கிவிட்டது. விளைவுகளைப் பற்றி சிந்திக்காமல் பிரதமர் நரேந்திர மோடி பொது முடக்கத்தை அறிவித்துவிட்டார்&#8221; என்றார்.</p>



<p>&#8221;பொருளாதார வீழ்ச்சிக்கு கொரோனா பரவல் முக்கிய காரணம் என்பதை மறுக்கவில்லை. ஆனால், அதற்கு முன்பே, பொருளாதார சரிவு இருந்தது என்று மத்திய அரசின் தரவுகளே தெரிவிக்கின்றன. இதன் தாக்கம் அனைத்துத் துறைகளிலும் பரவியது&#8221; என்று பொருளாதார நிபுணர்கள் குமார் தாஸ் மற்றும் ஜாய்தீப் பருவா ஆகியோர் சுட்டிக்காட்டுகின்றனர்.</p>



<p>ஜாய்தீப் பருவா கூறும்போது, &#8221;கொரோனா தாக்குதலுக்கு முன்பு, இந்திய பொருளாதாரம் தொடர்ச்சியாக 2 ஆண்டுகள் மந்தநிலையில் இருந்தது. பொருளாதாரம் ஏற்கனவே தோல்வியுற்ற நிலையில், கொரோனாவினால் ஏற்பட்ட கூடுதல் தாக்குதலை தாங்க முடியவில்லை&#8221; என்றார்.</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-economics/indias-gdp-shrinks-more-than-other-major-economies-decline-set-in-before-pandemic/">பொது முடக்கத்தை சிந்திக்காமல் அறிவித்தார் பிரதமர் மோடி: பொருளாதார வல்லுனர்கள் குற்றச்சாட்டு</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://desiyamurasu.com/news-economics/indias-gdp-shrinks-more-than-other-major-economies-decline-set-in-before-pandemic/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
	</channel>
</rss>
