<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Delhi Archives - தேசிய முரசு - Desiya Murasu</title>
	<atom:link href="https://desiyamurasu.com/tag/delhi/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://desiyamurasu.com/tag/delhi/</link>
	<description>DesiyaMurasu – Daily Opinions &#38; Analysis on Latest News  &#124; Tamil News</description>
	<lastBuildDate>Sun, 25 Apr 2021 10:03:44 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.1</generator>

<image>
	<url>https://desiyamurasu.com/wp-content/uploads/2020/07/cropped-FAV-copy-1-32x32.png</url>
	<title>Delhi Archives - தேசிய முரசு - Desiya Murasu</title>
	<link>https://desiyamurasu.com/tag/delhi/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>ஆக்சிஜன் தட்டுப்பாட்டினால் டெல்லியில் ஒரே நாளில் 45 பேர் பலி! பிரதமர் மோடி அவர்களே, மக்கள் உயிரை காப்பாற்ற தவறியது ஏன்? தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி</title>
		<link>https://desiyamurasu.com/tncc-statements/a-nightmare-on-repeat-india-is-running-out-of-oxygen-again/</link>
					<comments>https://desiyamurasu.com/tncc-statements/a-nightmare-on-repeat-india-is-running-out-of-oxygen-again/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Admin]]></dc:creator>
		<pubDate>Sun, 25 Apr 2021 09:57:28 +0000</pubDate>
				<category><![CDATA[ஏவுகணைகள்]]></category>
		<category><![CDATA[Coronavirus Vaccine]]></category>
		<category><![CDATA[Covid-19]]></category>
		<category><![CDATA[Delhi]]></category>
		<category><![CDATA[Oxygen]]></category>
		<category><![CDATA[TNCC President K S Alagiri]]></category>
		<guid isPermaLink="false">https://desiyamurasu.com/?p=4366</guid>

					<description><![CDATA[<p>முக்கிய அம்சங்கள்: ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக தலைநகர் டெல்லியில் கங்காராம் மருத்துவமனையில் 25 பேரும், ஜெய்ப்பூர் கோல்டன் மருத்துவமனையில் 20 பேரும் உயிரிழந்துள்ளனர். பலமுறை மத்திய சுகாதாரத்துறையை வலியுறுத்தியும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை. காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் அழுத்தத்துக்குப் பிறகு, அனைவருக்கும் இலவசமாகத் தடுப்பூசி போடப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்திருப்பது காலம் கடந்த நடவடிக்கை. காணொலிக் கூட்டத்தை நேரலையாக ஒளிபரப்பிய தில்லி முதலமைச்சரைக் கண்டித்ததில் காட்டிய வேகத்தை, ஆக்சிஜன் சிலிண்டர் [&#8230;]</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/tncc-statements/a-nightmare-on-repeat-india-is-running-out-of-oxygen-again/">ஆக்சிஜன் தட்டுப்பாட்டினால் டெல்லியில் ஒரே நாளில் 45 பேர் பலி! பிரதமர் மோடி அவர்களே, மக்கள் உயிரை காப்பாற்ற தவறியது ஏன்? தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<h4 class="wp-block-heading"><strong>முக்கிய அம்சங்கள்:</strong></h4>



<ul class="wp-block-list"><li><strong><span class="has-inline-color has-vivid-red-color">ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக தலைநகர் டெல்லியில் கங்காராம் மருத்துவமனையில் 25 பேரும், ஜெய்ப்பூர் கோல்டன் மருத்துவமனையில் 20 பேரும் உயிரிழந்துள்ளனர். பலமுறை மத்திய சுகாதாரத்துறையை வலியுறுத்தியும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை.</span></strong></li><li><strong><span class="has-inline-color has-vivid-red-color">காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் அழுத்தத்துக்குப் பிறகு, அனைவருக்கும் இலவசமாகத் தடுப்பூசி போடப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்திருப்பது காலம் கடந்த நடவடிக்கை.</span></strong></li><li><strong><span class="has-inline-color has-vivid-red-color">காணொலிக் கூட்டத்தை நேரலையாக ஒளிபரப்பிய தில்லி முதலமைச்சரைக் கண்டித்ததில் காட்டிய வேகத்தை, ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாட்டைப் போக்குவதில் பிரதமர் மோடி காட்டவில்லை.</span></strong></li><li><strong><span class="has-inline-color has-vivid-red-color">கொரோனா பிடியில் சிக்கியிருக்கும் மக்களைக் காப்பாற்ற, மத்திய, மாநில அரசுகள் பொறுப்புணர்வோடு இணைந்து செயல்பட வேண்டும்.</span></strong></li></ul>



<p>கொரோனா தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு தடுப்பூசி போடுகிற முதன்மை பொறுப்பு மத்திய அரசுக்குத் தான் இருக்கிறது என்பதைத் தொடர்ந்து காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் பலமுறை வலியுறுத்தி வந்தன. இந்த அழுத்தத்தின் காரணமாக அனைத்து மக்களுக்கும் இலவசமாக மாநில அரசுகளின் மூலம் தடுப்பூசி போடப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அறிவித்திருக்கிறது. இது காலம் தாழ்ந்த அறிவிப்பாகவே கருத வேண்டியிருக்கிறது.</p>



<p>அதேபோல, தலைநகர் டெல்லியில் கங்காராம் மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக 25 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த மருத்துவமனையில் 510 கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டிருந்தனர். பலமுறை மத்திய சுகாதாரத்துறையை வலியுறுத்தியும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்குவதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. இந்த நிலையில் தான் 25 பேர் பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்கள். அதேபோல, நேற்று இரவு தலைநகர் டெல்லியில் உள்ள ஜெய்ப்பூர் கோல்டன் மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு 20 பேர் பலியாகி இருக்கிற அதிர்ச்சி தகவலும் வெளிவந்துள்ளது.</p>



<p>தலைநகர் டெல்லியில் மத்திய பா.ஜ.க. ஆட்சியாளர்களின் நேரடி பார்வையில் இருக்கும்போதே இத்தகைய கொடூரமான சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. தில்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் அவர்கள் பிரதமர் மோடியிடம் காணொலி கூட்டத்தில் ஆக்சிஜன் கேட்டுக் கெஞ்சிப் பேசியதைப் பார்க்கும் போது மிகுந்த வேதனையாக இருக்கிறது. அந்த கோரிக்கையைப் பரிவுடன் பரிசீலிக்காமல் காணொலி கூட்டத்தை ஒளிபரப்பியது குறித்து அவர்மீது கடும் கண்டனத்தைப் பிரதமர் மோடி வெளிப்படுத்துவதில் தான் கவனம் செலுத்தினார். ஆனால், ஆக்சிஜன் பற்றாக்குறைக்குப் பரிகாரம் காண எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் கடந்த 24 மணி நேரத்தில் தலைநகர் தில்லியில் 45 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இதற்கு மத்திய பா.ஜ.க. அரசுதான் பொறுப்பாகும்.</p>



<p>கொரோனா தொற்று ஏற்பட்டு 15 மாத காலத்தில் பா.ஜ.க. அரசின் ஒவ்வொரு நடவடிக்கைகளும் நடைமுறை சாத்தியம் இல்லாத வகையிலேயே எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனாவை எதிர்கொள்ளச் சுகாதார கட்டமைப்பு வசதிகளை அதிகப்படுத்த சுகாதாரத்துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்படவில்லை. இந்திய மக்கள் அனைவரும் அச்சத்திலும், பீதியிலும் இருந்து விடுபட உரிய மருத்துவச் சிகிச்சைகளை வழங்க மத்திய பா.ஜ.க. அரசு தோல்வியடைந்து விட்டது.</p>



<p>தடுப்பூசி தட்டுப்பாடு, ஒரே தடுப்பூசிக்கு மூன்று விலை, விற்பனையைத் தனியார் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களிடமே ஒப்படைத்தது, தடுப்பூசியை வாங்குவதற்குச் சந்தையில் ஆரோக்கியமற்ற போட்டி, ஆக்சிஜன் பற்றாக்குறை இருக்கும்போது ஏற்றுமதி இவை எல்லாமே பா.ஜ.க. அரசு எடுத்த தவறான நடவடிக்கைகளின் விளைவாகும்.</p>



<p>எனவே, கொரோனாவின் கோரப் பிடியில் சிக்கியிருக்கும் மக்களைப் பாதுகாப்பதை தலையாய நோக்கமாகக் கொண்டு, பொறுப்புணர்வோடு இப்பிரச்சினையைக் கையாள மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/tncc-statements/a-nightmare-on-repeat-india-is-running-out-of-oxygen-again/">ஆக்சிஜன் தட்டுப்பாட்டினால் டெல்லியில் ஒரே நாளில் 45 பேர் பலி! பிரதமர் மோடி அவர்களே, மக்கள் உயிரை காப்பாற்ற தவறியது ஏன்? தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://desiyamurasu.com/tncc-statements/a-nightmare-on-repeat-india-is-running-out-of-oxygen-again/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>மோடியின் திடீர் பொது முடக்க அறிவிப்பு; டெல்லியிலிருந்து 7 மாதங்கள் நடந்தே ஜார்கண்ட் திரும்பிய தொழிலாளர்</title>
		<link>https://desiyamurasu.com/news-india/migrant-worker-jharkhand-seven-months-walk/</link>
					<comments>https://desiyamurasu.com/news-india/migrant-worker-jharkhand-seven-months-walk/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Admin]]></dc:creator>
		<pubDate>Tue, 16 Mar 2021 05:00:01 +0000</pubDate>
				<category><![CDATA[தேசிய அரசியல்]]></category>
		<category><![CDATA[Delhi]]></category>
		<category><![CDATA[Jharkhand]]></category>
		<category><![CDATA[migrant labourer]]></category>
		<category><![CDATA[National Lockdown]]></category>
		<guid isPermaLink="false">https://desiyamurasu.com/?p=4205</guid>

					<description><![CDATA[<p>கொரோனா பரவலையடுத்து, முன்னறிவிப்பு ஏதுமின்றி பிரதமர் மோடி அறிவித்த பொது முடக்கத்தால் அம்பானி, அதானி தவிர அனைத்துத் தரப்பினரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். லட்சக்கணக்கானோர் வேலையை இழந்தனர். வெளிமாநிலங்களில் பணியாற்றிய புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நிலை தான் கொடுமை. பல நூறு கிலோ மீட்டர் தொலைவுக்கு நடந்தே சென்று தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பினார்கள். இதில் விபத்துகளில் சிக்கியும், உடல் நலிவுற்றும் ஏராளமானோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில், 54 வயது பெர்ஜோம் பாம்டா பஹாடியா என்ற புலம்பெயர்ந்த தொழிலாளர் டெல்லியிலிருந்து [&#8230;]</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/migrant-worker-jharkhand-seven-months-walk/">மோடியின் திடீர் பொது முடக்க அறிவிப்பு; டெல்லியிலிருந்து 7 மாதங்கள் நடந்தே ஜார்கண்ட் திரும்பிய தொழிலாளர்</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>கொரோனா பரவலையடுத்து, முன்னறிவிப்பு ஏதுமின்றி பிரதமர் மோடி அறிவித்த பொது முடக்கத்தால் அம்பானி, அதானி தவிர அனைத்துத் தரப்பினரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.</p>



<p>லட்சக்கணக்கானோர் வேலையை இழந்தனர். வெளிமாநிலங்களில் பணியாற்றிய புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நிலை தான் கொடுமை. பல நூறு கிலோ மீட்டர் தொலைவுக்கு நடந்தே சென்று தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பினார்கள். இதில் விபத்துகளில் சிக்கியும், உடல் நலிவுற்றும் ஏராளமானோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.</p>



<p>இந்நிலையில், 54 வயது பெர்ஜோம் பாம்டா பஹாடியா என்ற புலம்பெயர்ந்த தொழிலாளர் டெல்லியிலிருந்து கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் புறப்பட்டு, கடந்த 13 ஆம் தேதி ஜார்கண்டில் உள்ள தன் சொந்த ஊருக்குத் திரும்பினார்.</p>



<p>டெல்லியிலிருந்து ஜார்கண்டில் உள்ள அமர்பிதா என்ற அவரது கிராமத்துக்கு 1,200 கி.மீ நடந்தே வந்துள்ளார். இது குறித்து பஹாடியா கூறும்போது, &#8221; இடைத்தரகர்கள் சிலர் எங்கள் கிராமத்துக்கு வந்து, நல்ல சம்பளம் வாங்கித் தருகிறோம் என்று டெல்லிக்கு அழைத்துச் சென்றனர். நான் உட்பட 10 பேர் அவர்களை நம்பிச் சென்றோம். 20 நாட்கள் தான் வேலை பார்த்தேன். தங்குவதற்கு இடமும் 2 வேளை சாப்பாடும் போட்டார். ஆனால், சம்பளம் தரவில்லை. மார்ச் மாதம் பொது முடக்கம் அறிவித்ததும், நான் வீட்டிலிருந்து கொண்டு வந்த ரூ.7 ஆயிரம் பணத்தையும் ஆதார் அட்டையையும் பறித்துக் கொண்டு என்னை வெளியே துரத்திவிட்டார். ஆகஸ்ட் மாதம் வரை தெருவிலேயே படுத்து உறங்கினேன். ரயிலில் செல்லக்கூடக் கையில் பணம் இல்லாததால் நடக்க ஆரம்பித்தேன். வழிநெடுகிலும் பிச்சை எடுத்துக் கொண்டே வந்தேன். ஒரு நாள் உணவு இல்லாமல் பசியால் தவித்தேன். ரயில் பாதை வழியாகவே தொடர்ந்து நடந்தேன்.</p>



<p>கடந்த மார்ச் 11 ஆம் தேதி தன்பாத் மாவட்டம் மஹுதா ரயில் நிலையம் அருகே பசி மயக்கத்தில் விழுந்து கிடந்த என்னைச் சிலர் மீட்டனர். அவர்கள் எனக்கு உடையும் உணவும் வாங்கிக் கொடுத்ததோடு, சொந்த ஊருக்குத் திரும்ப அவருக்குப் பணமும் கொடுத்து உதவினர். அவர்கள் உதவியுடன் ஒருவழியாகக் கடந்த மார்ச் 13 ஆம் தேதி சொந்த கிராமத்துக்கு வந்து சேர்ந்தார்.</p>



<p>பஹாடியா என்ற ஒருவர் மட்டுமல்ல…லட்சக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்குச் செல்ல சந்தித்த இன்னல்கள் சொல்லி மாளாது. எடுத்தோம், கவிழ்த்தோம் என்று செயல்பட்ட ஒரு பிரதமரால் சொந்த நாட்டு மக்கள் எவ்வளவு சித்ரவதைக்கு ஆளாகியிருக்கிறார்கள் என்பதை இந்த நிகழ்வுகள் படம்பிடித்துக் காட்டுகின்றன.</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/migrant-worker-jharkhand-seven-months-walk/">மோடியின் திடீர் பொது முடக்க அறிவிப்பு; டெல்லியிலிருந்து 7 மாதங்கள் நடந்தே ஜார்கண்ட் திரும்பிய தொழிலாளர்</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://desiyamurasu.com/news-india/migrant-worker-jharkhand-seven-months-walk/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>பா.ஜ.க. ஆதரவுடன் விவசாயிகள் போராட்டத்தை வன்முறையாக மாற்றிய நடிகர் சித்து : அம்பலமாகும் பொய் குற்றச்சாட்டுகள்</title>
		<link>https://desiyamurasu.com/news-india/khalistan-flag-hoisted-stop-red-fort-farmers-protest-fact-check/</link>
					<comments>https://desiyamurasu.com/news-india/khalistan-flag-hoisted-stop-red-fort-farmers-protest-fact-check/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Admin]]></dc:creator>
		<pubDate>Fri, 29 Jan 2021 17:23:02 +0000</pubDate>
				<category><![CDATA[தேசிய அரசியல்]]></category>
		<category><![CDATA[Delhi]]></category>
		<category><![CDATA[Farmers protest]]></category>
		<category><![CDATA[Tractor rally]]></category>
		<guid isPermaLink="false">https://desiyamurasu.com/?p=4005</guid>

					<description><![CDATA[<p>குடியரசு தினத்தன்று டெல்லியில் நடந்த விவசாயிகள் டிராக்டர் பேரணியில் ஏற்பட்ட கலவரத்துக்குப் பாரதிய ஜனதாவுக்கு நெருக்கமான பஞ்சாபி நடிகர் தீப் சித்துவே காரணம் என விவசாயச் சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளன. போராட்டத்தின் அடையாளமாக செங்கோட்டையில் கொடி ஏற்றுங்கள் என்று அங்கிருந்து இளைஞர்களைச் சித்து தூண்டியதாக அவர்கள் கூறியுள்ளனர். மேலும், போராட்டத்தைத் தவறாகத் திசைதிருப்பும் சித்துவை கண்டித்து விவசாயிகள் வாக்குவாதம் செய்வதும், அவர் டிராக்டரிலிருந்து இறங்கி மோட்டார் பைக்கில் தப்பிச் செல்லும் வீடியோ காட்சிகளும் விவசாயச் சங்கங்களுக்குக் கிடைத்துள்ளன. [&#8230;]</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/khalistan-flag-hoisted-stop-red-fort-farmers-protest-fact-check/">பா.ஜ.க. ஆதரவுடன் விவசாயிகள் போராட்டத்தை வன்முறையாக மாற்றிய நடிகர் சித்து : அம்பலமாகும் பொய் குற்றச்சாட்டுகள்</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>குடியரசு தினத்தன்று டெல்லியில் நடந்த விவசாயிகள் டிராக்டர் பேரணியில் ஏற்பட்ட கலவரத்துக்குப் பாரதிய ஜனதாவுக்கு நெருக்கமான பஞ்சாபி நடிகர் தீப் சித்துவே காரணம் என விவசாயச் சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளன.</p>



<p>போராட்டத்தின் அடையாளமாக செங்கோட்டையில் கொடி ஏற்றுங்கள் என்று அங்கிருந்து இளைஞர்களைச் சித்து தூண்டியதாக அவர்கள் கூறியுள்ளனர்.</p>



<p>மேலும், போராட்டத்தைத் தவறாகத் திசைதிருப்பும் சித்துவை கண்டித்து விவசாயிகள் வாக்குவாதம் செய்வதும், அவர் டிராக்டரிலிருந்து இறங்கி மோட்டார் பைக்கில் தப்பிச் செல்லும் வீடியோ காட்சிகளும் விவசாயச் சங்கங்களுக்குக் கிடைத்துள்ளன.</p>



<p>தற்போதைய பாஜக மக்களவை உறுப்பினர் நடிகர் சன்னி தியோலுக்கு ஆதரவாக கடந்த தேர்தலில் பிரச்சாரம் செய்தவர் தான் பஞ்சாபி நடிகர் சித்து.</p>



<p>இதற்கிடையே, சித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், தனக்கும் தன் குடும்பத்தாருக்கும் நடிகர் சித்துவுடன் எவ்வித தொடர்பும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். செங்கோட்டையில் நடந்த நிகழ்வு வருத்தத்தை அளிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p>



<p>இந்நிலையில், தனது செயலை நடிகர் சித்து நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறார். விவசாயச் சட்டங்களை எதிர்த்துப் போராடியதன் அடையாளமாக விவசாயச் சங்க கொடிகளை செங்கோட்டையில் ஏற்றுமாறு நான் கூறியதில் என்ன தவறு? அங்கிருந்து தேசியக் கொடி அகற்றப்படவோ அல்லது தேசியக் கொடி அவமதிக்கப்படவோ இல்லை என்றார்.</p>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img fetchpriority="high" decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/01/thequint_2021-01_eed65735-3b68-4010-80f2-dff893de63d4_IMAGE_FROM_RED_FORT__3_.gif" alt="" class="wp-image-4008" width="584" height="328"/></figure></div>



<p>இதற்கிடையே, நடிகர் சித்துக்குக் கண்டனம் தெரிவித்துள்ள விவசாயச் சங்கங்கள், மத்திய அரசின் கைக்கூலியாக நடிகர் சித்து செயல்படுவதாகக் குற்றம் சாட்டினர்.</p>



<p>விவசாயிகள் போராட்டத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில், அரசின் ஏஜெண்டாக சித்து செயல்பட்டுள்ளார் என்று பார்தி கிஸான் சங்க பொதுச் செயலாளர் சுக்தேவ் சிங் கொக்ரிகாலன் கடுமையாகக் குற்றம் சாட்டினார். இளைஞர்களை செங்கோட்டையை நோக்கி அழைத்துச் சென்று சித்து தவறாக வழிநடத்தியதாகவும், சித்து போன்றவர்களைப் போராட்டக் களத்தில் நாங்கள் அனுமதித்ததில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.</p>



<p>பார்திய கிஸான் சங்கத்தின் குர்னாம் சிங் கூறும்போது, நடிகர் சித்துவின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. செங்கோட்டையில் என்ன நடக்கப் போகிறது என்பது குறித்து எங்களுக்குத் தெரியாது. தீப் சித்துவின் செயல் கண்டிக்கத்தக்கது. அவர் அரசின் ஏஜெண்ட் என்றே நாங்கள் நம்புகிறோம். கடந்த சில நாட்களாகவே அவர் விவசாயச் சங்கத் தலைவர்களுக்கு எதிராகப் பேசி வந்ததோடு, குழப்பத்தையும் ஏற்படுத்தி வந்ததாகக் குற்றம் சாட்டினார்.</p>



<figure class="wp-block-embed-twitter aligncenter wp-block-embed is-type-rich is-provider-twitter"><div class="wp-block-embed__wrapper">
<blockquote class="twitter-tweet" data-width="500" data-dnt="true"><p lang="en" dir="ltr">As per NDTV’s <a href="https://twitter.com/ghazalimohammad?ref_src=twsrc%5Etfw">@ghazalimohammad</a>, the flag hoisted by protestors at the Red Fort is sacred to Sikhs, seen outside gurudwaras where it is called the Nishan Saheb. It did not (mercifully) replace the tricolour, which remains aloft at the Red Fort at an elevation.</p>&mdash; Sreenivasan Jain (@SreenivasanJain) <a href="https://twitter.com/SreenivasanJain/status/1353992242751361025?ref_src=twsrc%5Etfw">January 26, 2021</a></blockquote><script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
</div></figure>



<p>பாஜக பொய் குற்றச்சாட்டு அம்பலம்:</p>



<p>விவசாயிகள் கலவரத்தில் ஈடுபட்டதாகவும், காலிஸ்தான் தீவிரவாதிகளும் இதில் உள்ளே புகுந்துவிட்டதாகவும் பாஜக கூறி வருவதைத் தோலுரிக்கும் வகையில், பல வீடியோ காட்சிகள் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன.</p>



<p>முதல் கட்டமாக, செங்கோட்டையில் கொடி ஏற்றியது காலிஸ்தான் தீவிரவாதிகள் என்று அவர்கள் கூறிய குற்றச்சாட்டு பொய்யாகியிருக்கிறது.</p>



<p>பாஜகவின் ஆதரவோடு சமூக வலைத்தளங்களில் இயங்குவோர், செங்கோட்டையில் கொடி ஏற்றியது காலிஸ்தான் தீவிரவாதிகள் என்று பதிவிட்டனர். அதோடு, தேசியக் கொடி இறக்கப்பட்டதாகக் அபாண்ட பொய்யைக் கூறியிருந்தனர். இத்தகைய பொய்யைக் கூறியவர்களின் மூத்த பத்திரிக்கையாளர்களும் அடங்குவர்.</p>



<p>கம்பத்தில் ஏற்றப்பட்ட கொடிகளில் ஒன்று சீக்கிய மதங்களின் ஒன்றான நிஷான் சாஹிப் கொடி என்று வீடியோ காட்சிகள் மூலம் தெரியவந்துள்ளது. மற்றொரு விவசாயிகள் கொடி.</p>



<p>தேசியக் கொடியை இறக்கிவிட்டு காலிஸ்தான் கொடியை ஏற்றியதாகப் பொய்யான தகவல்களை 1 லட்சம் பேர் பின்பற்றும் அங்கிட் ஜெயின் வெளியிட்டிருந்தார்.</p>



<p>பாகிஸ்தான் ஃபர்ஸ்ட் என் பெயரில் உள்ள ட்விட்டர் கணக்கிலும், இதையே பகிர்ந்திருந்தனர்.</p>



<p>எங்களுக்கு காலிஸ்தான் வேண்டும் என்று காகிதத்தில் எழுதப்பட்ட வாசகத்துடன் ஒருவர் நிற்கும் பழைய படத்தையும், தற்போது செங்கோட்டையில் கொடி ஏற்றுவதையும் இணைந்து ஒருவர் பகிர்ந்திருந்தார். டெல்லி தாக்குதலுக்கு ஆளாகிறதா? என்று கேள்வியும் எழுப்பியிருந்தார்.</p>



<p>ஆனால், செங்கோட்டையில் இருந்து கிடைத்த வீடியோ ஆதாரங்களில் இரண்டுமே காலிஸ்தான் கொடிகள் அல்ல என்பது உறுதியாகியுள்ளது. செங்கோட்டையில் இருந்த பத்திரிக்கையாளர்களும் இதையே உறுதி செய்தனர்.</p>



<p>மேலும், தேசியக் கொடியை இறக்கிவிட்டு இந்த இரு கொடிகளை ஏற்றியதாகச் சொல்வதையும் நேரில் பார்த்த அவர்கள் மறுக்கிறார்கள். வெறும் கம்பத்தில் தான் அவர்கள் கொடி ஏற்றினார்கள் என்று ஆதாரத்துடன் கூறுகின்றனர். இதனைப் பல பத்திரிக்கையாளர்கள் ட்விட்டரிலும் உறுதி செய்து கொண்டே இருந்தனர்.</p>



<p>விவசாயிகளின் போராட்டத்தைச் சீர்குலைக்க சித்து என்ற நடிகரையும் களம் இறக்கிவிட்டு, அவர் மூலம் இளைஞர்களைத் தூண்டிவிட்டு செங்கோட்டையில் கொடி ஏற்றச் சொல்லிவிட்டு, இப்போது காலிஸ்தான் கொடி ஏற்றப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பாஜக ஆதரவாளர்கள் கொதிப்பது எவ்வளவு கபட நாடகம்.</p>



<p>பிள்ளையையும் கிள்ளி விட்டுக் கொண்டு, தொட்டிலையும் ஆட்டுவதைப் போல் அல்லவா உள்ளது இந்த இழிச் செயல்.</p>



<p>உள்ளூரில் ஊடகங்கள் இருக்கிறது தப்பித்துக் கொள்வீர்கள். உலகக் கண்கள் உங்கள் கேலிக் கூத்தைப் படம்பிடித்துக் கொண்டிருப்பதை அறிவீர்களா?</p>



<p>நியாயமாக நடந்த விவசாயிகள் போராட்டத்தை, நடிகர் சித்து போன்ற கைக்கூலிகளை வைத்து வன்முறையாக மாற்றிய இந்த கொடுங்கோலர்களுக்குக் காலம் ஒருநாள் பதில் தரும்.</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/khalistan-flag-hoisted-stop-red-fort-farmers-protest-fact-check/">பா.ஜ.க. ஆதரவுடன் விவசாயிகள் போராட்டத்தை வன்முறையாக மாற்றிய நடிகர் சித்து : அம்பலமாகும் பொய் குற்றச்சாட்டுகள்</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://desiyamurasu.com/news-india/khalistan-flag-hoisted-stop-red-fort-farmers-protest-fact-check/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>தலைநகர் டெல்லியில் விவசாயிகள் மீது பா.ஜ.க. அரசின் காவல்துறை காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்! தலைவர் கே.எஸ்.அழகிரி கடும் கண்டனம்!</title>
		<link>https://desiyamurasu.com/tncc-statements/delhi-police-attacked-farmers-tractor-rally/</link>
					<comments>https://desiyamurasu.com/tncc-statements/delhi-police-attacked-farmers-tractor-rally/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Admin]]></dc:creator>
		<pubDate>Wed, 27 Jan 2021 06:06:16 +0000</pubDate>
				<category><![CDATA[ஏவுகணைகள்]]></category>
		<category><![CDATA[BJP Govt.]]></category>
		<category><![CDATA[Delhi]]></category>
		<category><![CDATA[Farmers]]></category>
		<category><![CDATA[TNCC President K S Alagiri]]></category>
		<guid isPermaLink="false">https://desiyamurasu.com/?p=3990</guid>

					<description><![CDATA[<p>தலைநகர் தில்லியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் போராடி வரும் விவசாயிகள், குடியரசு தினத்தன்று மாபெரும் டிராக்டர் பேரணி நடத்த திட்டமிட்டிருந்தனர். விவசாயிகள் நடத்த இருந்த டிராக்டர் பேரணியை முடக்குவதற்கும், சீர்குலைப்பதற்கும் காவல்துறையினர் சதித் திட்டம் தீட்டி விவசாயிகள் மீது அடக்குமுறையை ஏவிவிட்டனர். காவல்துறையினரின் அனுமதியுடன் அமைதியாக சென்ற பேரணியில் பங்கேற்ற விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் பேரணியை கலைக்க முற்பட்டனர். இதனால் கடும் வன்முறை வெடித்துள்ளது.&#160; [&#8230;]</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/tncc-statements/delhi-police-attacked-farmers-tractor-rally/">தலைநகர் டெல்லியில் விவசாயிகள் மீது பா.ஜ.க. அரசின் காவல்துறை காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்! தலைவர் கே.எஸ்.அழகிரி கடும் கண்டனம்!</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>தலைநகர் தில்லியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் போராடி வரும் விவசாயிகள், குடியரசு தினத்தன்று மாபெரும் டிராக்டர் பேரணி நடத்த திட்டமிட்டிருந்தனர். விவசாயிகள் நடத்த இருந்த டிராக்டர் பேரணியை முடக்குவதற்கும், சீர்குலைப்பதற்கும் காவல்துறையினர் சதித் திட்டம் தீட்டி விவசாயிகள் மீது அடக்குமுறையை ஏவிவிட்டனர். காவல்துறையினரின் அனுமதியுடன் அமைதியாக சென்ற பேரணியில் பங்கேற்ற விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் பேரணியை கலைக்க முற்பட்டனர். இதனால் கடும் வன்முறை வெடித்துள்ளது.&nbsp;</p>



<p>தங்களது கோரிக்கைகளை முன்வைத்து டிராக்டர் பேரணி நடத்தி போராடுகிற விவசாயிகள் மீது வரலாறு காணாத வகையில் காவல்துறையினர் கடுமையாக தாக்கியதில் 46 வயது நிரம்பிய நவ்ஜித் என்ற விவசாயி உயிரிழக்கிற நிலை ஏற்பட்டிருக்கிறது. தலைநகரில் போராடுகிற விவசாயிகள் மீது காவல்துறையினர் நடத்திய தாக்குதலுக்கு பா.ஜ.க. ஆட்சியாளர்கள்தான் பொறுப்பாகும்.</p>



<p>தலைநகர் தில்லியில் போராடுகிற விவசாயிகள் மீது விழுந்த அடி, இந்தியாவில் உள்ள அனைத்து விவசாயிகளின் மீதும் விழுந்த அடியாகும். காவல்துறையினர் நடத்திய தாக்குதல், பா.ஜ.க. ஆட்சியாளர்களின் காட்டுமிராண்டித்தனமான போக்கையே காட்டுகிறது. கடந்த இரண்டு மாதங்களாக போராடுகிற விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து பரிவுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் காவல்துறையினரை ஏவிவிட்டு நடத்தப்பட்ட அராஜக தாக்குதலை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன். கடந்த இரண்டு மாதங்களாக கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் காந்திய வழியில் அமைதியான முறையில் போராடிய விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா&nbsp; முழுப் பொறுப்பேற்க வேண்டுமென கேட்டுக் கேட்டுக் கொள்கிறேன்.</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/tncc-statements/delhi-police-attacked-farmers-tractor-rally/">தலைநகர் டெல்லியில் விவசாயிகள் மீது பா.ஜ.க. அரசின் காவல்துறை காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்! தலைவர் கே.எஸ்.அழகிரி கடும் கண்டனம்!</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://desiyamurasu.com/tncc-statements/delhi-police-attacked-farmers-tractor-rally/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
	</channel>
</rss>
