<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>congress Archives - தேசிய முரசு - Desiya Murasu</title>
	<atom:link href="https://desiyamurasu.com/tag/congress/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://desiyamurasu.com/tag/congress/</link>
	<description>DesiyaMurasu – Daily Opinions &#38; Analysis on Latest News  &#124; Tamil News</description>
	<lastBuildDate>Mon, 17 Jan 2022 10:10:34 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.8.3</generator>

<image>
	<url>https://desiyamurasu.com/wp-content/uploads/2020/07/cropped-FAV-copy-1-32x32.png</url>
	<title>congress Archives - தேசிய முரசு - Desiya Murasu</title>
	<link>https://desiyamurasu.com/tag/congress/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? &#8211; ஆ.கோபண்ணா</title>
		<link>https://desiyamurasu.com/news-tamilnadu/why-saidai-duraisamy-criticising-congress-when-praising-mgr/</link>
					<comments>https://desiyamurasu.com/news-tamilnadu/why-saidai-duraisamy-criticising-congress-when-praising-mgr/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Admin]]></dc:creator>
		<pubDate>Mon, 17 Jan 2022 10:10:32 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழக அரசியல்]]></category>
		<category><![CDATA[congress]]></category>
		<category><![CDATA[indira gandhi]]></category>
		<category><![CDATA[MGR]]></category>
		<category><![CDATA[rajiv gandhi]]></category>
		<guid isPermaLink="false">https://desiyamurasu.com/?p=4588</guid>

					<description><![CDATA[<p>தமிழகத்தில் 13 ஆண்டுகாலம் தொடர்ந்து முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். அவர்களின் பிறந்தநாள் இன்று. எம்.ஜி.ஆர். அவர்கள் அ.தி.மு.க. தொடங்குவதற்கும், ஆட்சியில் செயல்படுவதற்கும் உறுதுணையாக இருந்தவர்கள் பிரதமர்களாக இருந்த இந்திரா காந்தியும், ராஜிவ்காந்தி அவர்களும் என்பதை அனைவரும் அறிவார்கள். இவை அன்றைய அரசியலில் உருவான திருப்புமுனைகளால் ஏற்பட்டது. எம்.ஜி.ஆர். புகழைப் பரப்புகிற முயற்சியில் சைதை துரைசாமி அவர்கள் ஈடுபடுவதில் எந்த தவறும் இல்லை. அவரோடு அரசியலில் பயணித்தவருக்கு அத்தகைய உரிமை உண்டு. ஆனால், இன்று தினத்தந்தியில் அவர் எழுதி [&#8230;]</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-tamilnadu/why-saidai-duraisamy-criticising-congress-when-praising-mgr/">எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? &#8211; ஆ.கோபண்ணா</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>தமிழகத்தில் 13 ஆண்டுகாலம் தொடர்ந்து முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். அவர்களின் பிறந்தநாள் இன்று. எம்.ஜி.ஆர். அவர்கள் அ.தி.மு.க. தொடங்குவதற்கும், ஆட்சியில் செயல்படுவதற்கும் உறுதுணையாக இருந்தவர்கள் பிரதமர்களாக இருந்த இந்திரா காந்தியும், ராஜிவ்காந்தி அவர்களும் என்பதை அனைவரும் அறிவார்கள். இவை அன்றைய அரசியலில் உருவான திருப்புமுனைகளால் ஏற்பட்டது. எம்.ஜி.ஆர். புகழைப் பரப்புகிற முயற்சியில் சைதை துரைசாமி அவர்கள் ஈடுபடுவதில் எந்த தவறும் இல்லை. அவரோடு அரசியலில் பயணித்தவருக்கு அத்தகைய உரிமை உண்டு. ஆனால், இன்று தினத்தந்தியில் அவர் எழுதி வெளிவந்துள்ள கட்டுரையில் &#8216;திருப்பூர் குமரன் மனைவி இராமாயி அம்மாள் வறுமையில் வாடிய போது காங்கிரஸ் கட்சி உதவி செய்ய முன்வராமல் அவரை மறந்துவிட்டதாக&#8217; குற்றம்சாட்டி எழுதியிருக்கிறார். முதலமைச்சர் எம்.ஜி.ஆர்., திருப்பூர் குமரன் மனைவிக்கு நிதியுதவி செய்ததைப் பற்றிக் குறிப்பிடும் போது, தேவையில்லாமல் காங்கிரஸ் கட்சியை ஏன் சீண்டிப் பார்க்கிறார் என்று தெரியவில்லை. 1967இல் ஆட்சியை காங்கிரஸ் கட்சி இழந்த பிறகு முதலமைச்சர்களாக இருந்த கலைஞரும், எம்.ஜி.ஆரும் இதுபோன்ற உதவிகளை நிறையச் செய்திருக்கிறார்கள். அதைப் பற்றிக் குறிப்பிடும் போது காங்கிரஸ் கட்சியைப் பற்றி விமர்சிக்க வேண்டிய அவசியம் இல்லை.</p>



<p>மறைந்த எம்.ஜி.ஆருக்கு அன்றைய பிரதமர் இந்திரா காந்தி செய்த உதவிகளைக் கணக்கிடுகிற போது, எம்.ஜி.ஆர். செய்த இத்தகைய உதவிகள் பொருட்படுத்தக்கூடியது அல்ல. எம்.ஜி.ஆர். உடல்நலக்குறைவு ஏற்பட்டு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, அவரைப் பார்க்க பிரதமர் இந்திரா காந்தி தனி விமானத்தில் அவசர அவசரமாக சென்னை வந்தார். மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து அப்போலோ மருத்துவமனைக்கு இந்திரா காந்தி பயணித்த காரின் பின்னே அ.தி.மு.க. அமைச்சர்கள் சோகமே உருவாய் அவர்களது கார்களில் அணிவகுத்து வந்ததை நானே நேரில் பார்த்திருக்கிறேன். அப்போலோவில் எம்.ஜி.ஆரின் உடல்நலம் குறித்து மருத்துவர்களிடம் விசாரித்து விட்டு அவருக்கு உரிய சிகிச்சைகளை செய்வதோடு, தேவைப்பட்டால் வெளிநாட்டில் சிகிச்சை செய்யவும் ஏற்பாடு செய்வதாகக் கூறினார். பிறகு, எம்.ஜி.ஆருக்கு வெளிநாட்டுச் சிகிச்சை தேவைப்பட்டதால் விமானத்தையே மருத்துவமனையாக்கி, அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி அவரை அமெரிக்காவுக்கு பாதுகாப்பாகப் பயணிக்க வைத்து, மருத்துவமனையில் அனுமதித்து உரிய சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தவர் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி.</p>



<p>அதைப்போலவே இந்திரா காந்தி படுகொலைக்குப் பிறகு நடைபெற்ற 1984 தேர்தலில் அமெரிக்க மருத்துவமனையிலிருந்தே வேட்புமனு தாக்கலில் கையொப்பமிட்டுத் தேர்தலில் நிற்பதற்கு அனைத்து வசதிகளையும் செய்தவர் பிரதமராக இருந்த ராஜிவ்காந்தி. அத்தகைய நன்றிப் பெருக்கை வெளிப்படுத்துகிற வகையில் தான் சென்னை கத்திப்பாரா சந்திப்பில் பண்டித ஜவஹர்லால் நேரு சிலை திறப்பு விழாவில் அன்றைய பிரதமர் ராஜிவ்காந்தியை முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் கட்டித் தழுவி கண்ணீர் மல்க உரையாற்றியதை சைதை துரைசாமி மறந்திருக்க முடியாது. தமது உயிரைக் காப்பாற்றிய இந்திரா படுகொலை செய்யப்பட்டது மருத்துவமனையில் இருந்த போது எம்.ஜி.ஆருக்கு தெரிவிக்கப்படவில்லை. உடல்நலம் தேறிய சூழலில் ராஜிவ்காந்தி பிரதமராகப் பொறுப்பேற்று முதல் முறையாக சந்திக்கிற போது, எம்.ஜி.ஆர். எந்தளவிற்கு உணர்ச்சிப் பெருக்கோடு இருந்தார் என்பதை எல்லோரும் அறிவார்கள். தமது உயிரைக் காப்பாற்றிய இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்ட பிறகு, பிரதமராகப் பொறுப்பேற்ற ராஜிவ்காந்தியுடன் எம்.ஜி.ஆர். சந்தித்த காட்சி அங்கு கூட்டத்தில் திரண்ட மக்களின் நெஞ்சை உலுக்குவதாக இருந்தது. அத்தகைய நன்றி உணர்ச்சிமிக்க உறவுகளை வைத்திருந்ததை எல்லாம் மறந்துவிட்டு திருப்பூர் குமரன் மனைவிக்கு செய்த நிதியுதவியை குறிப்பிட்டு காங்கிரஸ் கட்சியை சிறுமைப்படுத்துவது எந்தவகையில் நியாயம் என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை.</p>



<p>அன்னை இந்திரா காந்தி, அமரர் ராஜிவ்காந்தி ஆகியோரின் ஆதரவு இல்லையென்றால் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் அரசியலில் பெற்ற வெற்றிகள் எந்தளவிற்கு சாத்தியமாகியிருக்கும் என்பதை மனசாட்சி உள்ளவர்கள் சிந்திக்க வேண்டும்.</p>



<p>எம்.ஜி.ஆர். புகழைப் பாடுங்கள். அதற்காக காங்கிரசை இழிவுபடுத்தாதீர்கள். அதைச் செய்வதற்கு உங்களுக்கு உரிமை இல்லை.</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-tamilnadu/why-saidai-duraisamy-criticising-congress-when-praising-mgr/">எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? &#8211; ஆ.கோபண்ணா</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://desiyamurasu.com/news-tamilnadu/why-saidai-duraisamy-criticising-congress-when-praising-mgr/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>சாதனைகள் படைத்த சரித்திர நாயகர்! தலைவர் கே.எஸ்.அழகிரி 70 வது பிறந்த நாள் விழா &#8211; அக்டோபர் 22</title>
		<link>https://desiyamurasu.com/news-tamilnadu/tncc-president-ks-alagiri-70th-birthday/</link>
					<comments>https://desiyamurasu.com/news-tamilnadu/tncc-president-ks-alagiri-70th-birthday/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[ஆ. கோபண்ணா]]></dc:creator>
		<pubDate>Thu, 21 Oct 2021 18:57:56 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழக அரசியல்]]></category>
		<category><![CDATA[congress]]></category>
		<category><![CDATA[TNCC President K S Alagiri]]></category>
		<guid isPermaLink="false">https://desiyamurasu.com/?p=4474</guid>

					<description><![CDATA[<p>அன்னை சோனியா கண்டெடுத்த ஆற்றல்மிகு வீரரே ! தலைவர் ராகுல் காந்தியின் போர்ப்படைத் தளபதியே ! சத்தியமூர்த்தி பவனத்தின் சரித்திர நாயகரே ! தொடர் வெற்றிகளை குவித்திட்ட தொண்டர்களின் திசைகாட்டியே !! எட்டுத்திக்கும் உமது பெயர் எதிரொலிக்க&#8230; எக்காலமும் உமது பணி சிறந்தோங்க&#8230; வாஞ்சையுடன் வாழ்த்துகிறோம்&#8230; பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு வாழ்கவென்று !!! காங்கிரசின் தொண்டராக இளமைப்பருவத்திலேயே தம்மை இணைத்துக் கொண்டு, ஓயாது கட்சி பணியாற்றி, ஊராட்சி ஒன்றிய தலைவர், இருமுறை சட்டமன்ற உறுப்பினர், மக்களவை உறுப்பினர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் என [&#8230;]</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-tamilnadu/tncc-president-ks-alagiri-70th-birthday/">சாதனைகள் படைத்த சரித்திர நாயகர்! தலைவர் கே.எஸ்.அழகிரி 70 வது பிறந்த நாள் விழா &#8211; அக்டோபர் 22</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<blockquote class="wp-block-quote is-layout-flow wp-block-quote-is-layout-flow"><p><span class="has-inline-color has-vivid-red-color">அன்னை சோனியா கண்டெடுத்த</span></p><p><span class="has-inline-color has-vivid-red-color">ஆற்றல்மிகு வீரரே !</span></p><p><span class="has-inline-color has-vivid-red-color">தலைவர் ராகுல் காந்தியின்</span></p><p><span class="has-inline-color has-vivid-red-color">போர்ப்படைத் தளபதியே !</span></p><p><span class="has-inline-color has-vivid-red-color">சத்தியமூர்த்தி பவனத்தின்</span></p><p><span class="has-inline-color has-vivid-red-color">சரித்திர நாயகரே !</span></p><p><span class="has-inline-color has-vivid-red-color">தொடர் வெற்றிகளை குவித்திட்ட</span></p><p><span class="has-inline-color has-vivid-red-color">தொண்டர்களின் திசைகாட்டியே !!</span></p><p><span class="has-inline-color has-vivid-red-color">எட்டுத்திக்கும் உமது பெயர் எதிரொலிக்க&#8230;</span></p><p><span class="has-inline-color has-vivid-red-color">எக்காலமும் உமது பணி சிறந்தோங்க&#8230;</span></p><p><span class="has-inline-color has-vivid-red-color">வாஞ்சையுடன் வாழ்த்துகிறோம்&#8230;</span></p><p><span class="has-inline-color has-vivid-red-color">பல்லாண்டு பல்லாண்டு</span></p><p><span class="has-inline-color has-vivid-red-color">பல்லாண்டு வாழ்கவென்று !!!</span></p></blockquote>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img fetchpriority="high" decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/10/pdf-document.jpg" alt="" class="wp-image-4507" width="579" height="446" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/10/pdf-document.jpg 831w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/10/pdf-document-300x231.jpg 300w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/10/pdf-document-768x592.jpg 768w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/10/pdf-document-750x579.jpg 750w" sizes="(max-width: 579px) 100vw, 579px" /></figure></div>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/05/sa29-rahul.jpg" alt="" class="wp-image-4401" width="579" height="480" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/05/sa29-rahul.jpg 650w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/05/sa29-rahul-300x249.jpg 300w" sizes="(max-width: 579px) 100vw, 579px" /></figure></div>



<p>காங்கிரசின் தொண்டராக இளமைப்பருவத்திலேயே தம்மை இணைத்துக் கொண்டு, ஓயாது கட்சி பணியாற்றி, ஊராட்சி ஒன்றிய தலைவர், இருமுறை சட்டமன்ற உறுப்பினர், மக்களவை உறுப்பினர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் என படிப்படியாக தமது கடும் உழைப்பால் களம்பல கண்டு, உயர்நிலைக்கு வந்த தேசியம் தந்த கொள்கை குன்று, தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்களின் சரித்திரம் படைத்த சாதனைகளின் பட்டியலிலிருந்து சிலவற்றை அவரது 70-வது பிறந்தநாளில் மக்களின் பார்வைக்கு இங்கே படைக்கிறோம்&#8230;</p>



<p>அன்னை சோனியா காந்தி, தலைவர் ராகுல் காந்தி ஆகியோரின் வாழ்த்துகளுடன், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக கே.எஸ்.அழகிரி நியமிக்கப்பட்டார். மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சூறாவளி சுற்றுப்பயணம். தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் ஒருங்கிணைந்து பணியாற்றி, நாடாளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சித் தேர்தல்களில் மகத்தான வெற்றி.</p>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large"><img decoding="async" width="759" height="459" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/03/INC5336.jpg" alt="" class="wp-image-4193" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/03/INC5336.jpg 759w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/03/INC5336-300x181.jpg 300w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/03/INC5336-750x454.jpg 750w" sizes="(max-width: 759px) 100vw, 759px" /></figure></div>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large"><img loading="lazy" decoding="async" width="988" height="983" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/01/137361112_1791500311016297_4064151381348181000_o.jpg" alt="" class="wp-image-3887" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/01/137361112_1791500311016297_4064151381348181000_o.jpg 988w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/01/137361112_1791500311016297_4064151381348181000_o-300x298.jpg 300w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/01/137361112_1791500311016297_4064151381348181000_o-150x150.jpg 150w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/01/137361112_1791500311016297_4064151381348181000_o-768x764.jpg 768w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/01/137361112_1791500311016297_4064151381348181000_o-75x75.jpg 75w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/01/137361112_1791500311016297_4064151381348181000_o-750x746.jpg 750w" sizes="auto, (max-width: 988px) 100vw, 988px" /></figure></div>



<figure class="wp-block-image size-large"><img loading="lazy" decoding="async" width="756" height="567" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/10/163-1.jpg" alt="" class="wp-image-4496" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/10/163-1.jpg 756w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/10/163-1-300x225.jpg 300w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/10/163-1-750x563.jpg 750w" sizes="auto, (max-width: 756px) 100vw, 756px" /></figure>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large"><img loading="lazy" decoding="async" width="1024" height="681" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/10/198-1-1024x681.jpg" alt="" class="wp-image-4502" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/10/198-1-1024x681.jpg 1024w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/10/198-1-300x199.jpg 300w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/10/198-1-768x511.jpg 768w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/10/198-1-750x499.jpg 750w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/10/198-1.jpg 1092w" sizes="auto, (max-width: 1024px) 100vw, 1024px" /></figure></div>



<ul class="wp-block-list"><li>தலைவர் ராகுல்காந்தி அவர்களின் தமிழகச் சுற்றுப்பயணத்தை சிறப்பாக திட்டமிட்டு, ஒருங்கிணைத்து மகத்தான தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்ளுதல்.</li><li>தலைவர் ராகுல் காந்தி அவர்களின் சுற்றுப்பயணத்தில் மாணவர்கள், மகளிர், தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள், நெசவாளர்கள், சிறுகுறு நடுத்தர தொழில்கள் மற்றும் வரலாற்றில் முதல்முறையாக உப்பளத் தொழிலாளர்கள் என அனைத்துதரப்பினரையும் சந்தித்து, பிரச்சனைகளை அறிய கலந்துரையாடல்.</li><li>அகில இந்திய காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி நீடிக்க வேண்டி மாபெரும் பாதயாத்திரை.</li><li>மகாத்மா காந்தி அவர்களின் 150-வது பிறந்தநாள் விழா கோலாகலமாக கொண்டாடப் பட்டது. சத்தியமூர்த்தி பவனில் 150அடி உயர கொடிக்கம்பத்தில் காங்கிரஸ் கொடியை ஏற்றி கின்னஸ் சாதனை படைத்தல்.</li><li>கிராமசபை கூட்டங்களில் பங்கேற்று உள்ளாட்சி அமைப்புகளில் உரிமைக்குரல் எழுப்புதல்.</li><li>ஏரிகளில் தூர்வாரும் திட்டத்தை காங்கிரஸ் சார்பாக தொடங்கி வைத்து புதிய சாதனை படைத்தல்.</li><li>பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள் விழாவில், அவரின் பொற்கால ஆட்சி குறித்து கருத்தரங்கம் நடத்தி பரப்புரை செய்தல்.</li><li>சேலம் உருக்காலை தனியார்மயமாவதைக் கண்டித்து தொழிலாளர்களுடன் உண்ணாவிரத போராட்டம். தொழிலாளர்களின் உரிமைகளை காத்திட மே தின பொதுக்கூட்டங்கள்.</li><li>அரசமைப்பு சட்டத்தில் காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்புரிமையை பறித்த பா.ஜ.க. அரசை கண்டித்து முன்னணி காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்ற மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டங்கள்.</li><li>கன்னியாகுமரியில் பல்கலைக்கழகம் அமைக்க வலியுறுத்தி நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தில் பங்கேற்றல்.</li><li>பா.ஜ.க.வின் தவறான பொருளாதார கொள்கை, குடியுரிமை சட்டத்திருத்தம், விவசாயிகள் விரோத வேளாண் கருப்பு சட்டங்களை கண்டித்து பரப்புரை மேற்கொள்ளல். விவசாயிகளுக்கு விதைநெல், மரக்கன்றுகள் வழங்குதல்.</li><li>வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி புதிய சரித்திரம் படைத்தல்.</li><li>கடந்த ஓராண்டு காலமாக தமிழகம் முழுவதும் கொரோனா நிவாரணப் பணிகளை முழுவீச்சில் மேற்கொள்ளுதல். சத்தியமூர்த்தி பவனில் கொரோனா மருத்துவ உதவி மையம் திறப்பு.</li><li>பொதுத்துறை நிறுவனப் பங்குகளை தனியாருக்கு குத்தகை வழங்கி, தாரை வார்க்கும் பா.ஜ.க.வை கண்டித்து ஆர்ப்பாட்டங்கள்.</li><li>தமிழகத்தில் பத்தாண்டுகாலம் நடைபெற்ற அராஜக அ.தி.மு.க. ஊழல் ஆட்சியை அகற்ற, பலமுனைப் போராட்டங்களை நடத்தி மக்கள் ஆதரவை திரட்டுதல்.</li><li>மத்திய பா.ஜ.க. அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து கருத்தரங்குகள், ஆர்ப்பாட்டங்கள் நடத்துதல்.</li><li>இந்தி, சமஸ்கிருத மொழிகளை பலவழிகளில் திணித்துவரும் பா.ஜ.க. அரசை எதிர்த்து தொடர்ந்து குரல் எழுப்புதல்.</li><li>பா.ஜ.க. ஆட்சியில் தலித் மற்றும் சிறுபான்மை மக்கள் தாக்கப்படுவதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டங்கள்.</li><li>பத்திரிகையாளர் சந்திப்புகள், அறிக்கைகள், தொலைக்காட்சி ஊடகங்கள் வாயிலாக மக்கள் பிரச்சனைகளுக்காக தொடர்ந்து உரிமைக்குரல் எழுப்புதல்.</li><li>நீட் தேர்வை எதிர்த்து தொடர்ந்து குரலெழுப்பி பலமுனை போராட்டங்களை முன்னெடுத்தல்.</li><li>மத்திய பா.ஜ.க. அரசின் ரஃபேல் ஊழல் மற்றும் பெகாசஸ் ஒட்டுக்கேட்பை கண்டித்து ஆர்ப்பாட்டங்கள்.</li></ul>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large"><img loading="lazy" decoding="async" width="1024" height="681" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/11/WhatsApp-Image-2020-11-23-at-3.10.28-PM-1024x681.jpeg" alt="" class="wp-image-3214" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/11/WhatsApp-Image-2020-11-23-at-3.10.28-PM-1024x681.jpeg 1024w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/11/WhatsApp-Image-2020-11-23-at-3.10.28-PM-300x200.jpeg 300w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/11/WhatsApp-Image-2020-11-23-at-3.10.28-PM-768x511.jpeg 768w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/11/WhatsApp-Image-2020-11-23-at-3.10.28-PM-750x499.jpeg 750w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/11/WhatsApp-Image-2020-11-23-at-3.10.28-PM.jpeg 1040w" sizes="auto, (max-width: 1024px) 100vw, 1024px" /></figure></div>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large"><img loading="lazy" decoding="async" width="1024" height="681" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/WhatsApp-Image-2020-10-14-at-15.14.36-3-1024x681.jpeg" alt="" class="wp-image-2656" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/WhatsApp-Image-2020-10-14-at-15.14.36-3-1024x681.jpeg 1024w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/WhatsApp-Image-2020-10-14-at-15.14.36-3-300x200.jpeg 300w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/WhatsApp-Image-2020-10-14-at-15.14.36-3-768x511.jpeg 768w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/WhatsApp-Image-2020-10-14-at-15.14.36-3-750x499.jpeg 750w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/WhatsApp-Image-2020-10-14-at-15.14.36-3.jpeg 1040w" sizes="auto, (max-width: 1024px) 100vw, 1024px" /></figure></div>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large"><img loading="lazy" decoding="async" width="1024" height="681" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/WhatsApp-Image-2020-10-14-at-17.46.13-1024x681.jpeg" alt="" class="wp-image-2659" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/WhatsApp-Image-2020-10-14-at-17.46.13-1024x681.jpeg 1024w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/WhatsApp-Image-2020-10-14-at-17.46.13-300x199.jpeg 300w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/WhatsApp-Image-2020-10-14-at-17.46.13-768x511.jpeg 768w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/WhatsApp-Image-2020-10-14-at-17.46.13-750x499.jpeg 750w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/WhatsApp-Image-2020-10-14-at-17.46.13-1140x758.jpeg 1140w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/WhatsApp-Image-2020-10-14-at-17.46.13.jpeg 1280w" sizes="auto, (max-width: 1024px) 100vw, 1024px" /></figure></div>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large"><img loading="lazy" decoding="async" width="896" height="597" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/10/113-1-1.jpg" alt="" class="wp-image-4494" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/10/113-1-1.jpg 896w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/10/113-1-1-300x200.jpg 300w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/10/113-1-1-768x512.jpg 768w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/10/113-1-1-750x500.jpg 750w" sizes="auto, (max-width: 896px) 100vw, 896px" /></figure></div>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large"><img loading="lazy" decoding="async" width="896" height="597" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/10/111-1.jpg" alt="" class="wp-image-4493" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/10/111-1.jpg 896w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/10/111-1-300x200.jpg 300w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/10/111-1-768x512.jpg 768w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/10/111-1-750x500.jpg 750w" sizes="auto, (max-width: 896px) 100vw, 896px" /></figure></div>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large"><img loading="lazy" decoding="async" width="1024" height="681" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/10/320-1-1024x681.jpg" alt="" class="wp-image-4499" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/10/320-1-1024x681.jpg 1024w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/10/320-1-300x200.jpg 300w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/10/320-1-768x511.jpg 768w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/10/320-1-750x499.jpg 750w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/10/320-1-1140x758.jpg 1140w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/10/320-1.jpg 1433w" sizes="auto, (max-width: 1024px) 100vw, 1024px" /></figure></div>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large"><img loading="lazy" decoding="async" width="896" height="413" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/10/306-1.jpg" alt="" class="wp-image-4498" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/10/306-1.jpg 896w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/10/306-1-300x138.jpg 300w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/10/306-1-768x354.jpg 768w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/10/306-1-750x346.jpg 750w" sizes="auto, (max-width: 896px) 100vw, 896px" /></figure></div>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large"><img loading="lazy" decoding="async" width="1024" height="480" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/10/263-1-1024x480.jpg" alt="" class="wp-image-4501" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/10/263-1-1024x480.jpg 1024w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/10/263-1-300x141.jpg 300w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/10/263-1-768x360.jpg 768w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/10/263-1-1536x720.jpg 1536w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/10/263-1-750x351.jpg 750w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/10/263-1-1140x534.jpg 1140w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/10/263-1.jpg 1575w" sizes="auto, (max-width: 1024px) 100vw, 1024px" /></figure></div>



<figure class="wp-block-image size-large"><img loading="lazy" decoding="async" width="1024" height="682" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/10/22-1-1024x682.jpg" alt="" class="wp-image-4491" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/10/22-1-1024x682.jpg 1024w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/10/22-1-300x200.jpg 300w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/10/22-1-768x512.jpg 768w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/10/22-1-750x500.jpg 750w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/10/22-1-1140x760.jpg 1140w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/10/22-1.jpg 1433w" sizes="auto, (max-width: 1024px) 100vw, 1024px" /></figure>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large"><img loading="lazy" decoding="async" width="896" height="597" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/10/293-1.jpg" alt="" class="wp-image-4500" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/10/293-1.jpg 896w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/10/293-1-300x200.jpg 300w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/10/293-1-768x512.jpg 768w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/10/293-1-750x500.jpg 750w" sizes="auto, (max-width: 896px) 100vw, 896px" /></figure></div>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large"><img loading="lazy" decoding="async" width="760" height="438" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/01/WhatsApp-Image-2021-01-13-at-7.01.09-PM.jpeg" alt="" class="wp-image-3871" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/01/WhatsApp-Image-2021-01-13-at-7.01.09-PM.jpeg 760w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/01/WhatsApp-Image-2021-01-13-at-7.01.09-PM-300x173.jpeg 300w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/01/WhatsApp-Image-2021-01-13-at-7.01.09-PM-750x432.jpeg 750w" sizes="auto, (max-width: 760px) 100vw, 760px" /></figure></div>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large"><img loading="lazy" decoding="async" width="728" height="484" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/10/342-1.jpg" alt="" class="wp-image-4503" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/10/342-1.jpg 728w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/10/342-1-300x199.jpg 300w" sizes="auto, (max-width: 728px) 100vw, 728px" /></figure></div>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large"><img loading="lazy" decoding="async" width="896" height="597" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/10/62-1.jpg" alt="" class="wp-image-4492" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/10/62-1.jpg 896w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/10/62-1-300x200.jpg 300w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/10/62-1-768x512.jpg 768w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/10/62-1-750x500.jpg 750w" sizes="auto, (max-width: 896px) 100vw, 896px" /></figure></div>



<p>தமிழக காங்கிரசின் தலைமை பொறுப்பேற்று கொள்கை சார்ந்த அரசியலை முன்னெடுத்து இயக்கத்திற்கு வலிமை கூட்டிய தலைவர் கே.எஸ். அழகிரி, சாதனைகளை புரிந்து சரித்திரம் படைத்து வருகிறார். தமிழக காங்கிரஸ் வரலாற்றில் தலைவர் அழகிரி படைத்த சாதனைகள் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டு என்றும் மின்னிக்கொண்டிருக்கும். தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்களின் 70-வது பிறந்தநாளில் சாதனைகள் பல புரிந்து, புதிய சகாப்தம் படைக்க உளமாற வாழ்த்துகிறோம் !</p>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large"><img loading="lazy" decoding="async" width="624" height="416" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/10/207.jpg" alt="" class="wp-image-4486" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/10/207.jpg 624w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/10/207-300x200.jpg 300w" sizes="auto, (max-width: 624px) 100vw, 624px" /></figure></div>



<p></p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-tamilnadu/tncc-president-ks-alagiri-70th-birthday/">சாதனைகள் படைத்த சரித்திர நாயகர்! தலைவர் கே.எஸ்.அழகிரி 70 வது பிறந்த நாள் விழா &#8211; அக்டோபர் 22</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://desiyamurasu.com/news-tamilnadu/tncc-president-ks-alagiri-70th-birthday/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>பெருந்தகையாளர் பேராசிரியர் பா.ரா.!</title>
		<link>https://desiyamurasu.com/news-tamilnadu/centenary-celebration-of-p-ramachandran/</link>
					<comments>https://desiyamurasu.com/news-tamilnadu/centenary-celebration-of-p-ramachandran/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[ஆ. கோபண்ணா]]></dc:creator>
		<pubDate>Sat, 10 Jul 2021 18:07:10 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழக அரசியல்]]></category>
		<category><![CDATA[congress]]></category>
		<category><![CDATA[P Ramachandran]]></category>
		<guid isPermaLink="false">https://desiyamurasu.com/?p=4444</guid>

					<description><![CDATA[<p>தமிழக காங்கிரஸ் வரலாற்றில் பல தலைவர்கள் பல்வேறு சமயங்களில் முக்கியப் பங்கு வசித்திருக்கிறார்கள். பிற்காலத்தில் பேராசிரியர் பா. ரா என்று அழைக்கப்பட்ட திரு பா.ராமச்சந்திரன் மாணவர் காங்கிரஸ், இளைஞர் காங்கிரஸ் ஆகியவற்றில் இளமைப் பருவத்திலேயேத் தம்மை இணைத்துக் கொண்டவர். இளைஞர் காங்கிரசில் துடிப்புடன் செயல்பட்ட இவர், பெருந்திரளான இளைஞர்களை திரட்டி காங்கிரஸ் இயக்கத்தை வலிமைப்படுத்தியவர். தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவராகவும் பொறுப்பு வகித்தவர். அதன்மூலம் பெருந்தலைவர் காமராஜரால் பெரிதும் ஈர்க்கப்பட்டார். இன்றைய திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தாலுகாவை [&#8230;]</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-tamilnadu/centenary-celebration-of-p-ramachandran/">பெருந்தகையாளர் பேராசிரியர் பா.ரா.!</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>தமிழக காங்கிரஸ் வரலாற்றில் பல தலைவர்கள் பல்வேறு சமயங்களில் முக்கியப் பங்கு வசித்திருக்கிறார்கள். பிற்காலத்தில் பேராசிரியர் பா. ரா என்று அழைக்கப்பட்ட திரு பா.ராமச்சந்திரன் மாணவர் காங்கிரஸ், இளைஞர் காங்கிரஸ் ஆகியவற்றில் இளமைப் பருவத்திலேயேத் தம்மை இணைத்துக் கொண்டவர். இளைஞர் காங்கிரசில் துடிப்புடன் செயல்பட்ட இவர், பெருந்திரளான இளைஞர்களை திரட்டி காங்கிரஸ் இயக்கத்தை வலிமைப்படுத்தியவர். தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவராகவும் பொறுப்பு வகித்தவர். அதன்மூலம் பெருந்தலைவர் காமராஜரால் பெரிதும் ஈர்க்கப்பட்டார்.</p>



<p>இன்றைய திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தாலுகாவை சேர்ந்த கொருக்கை கிராமத்தில் 11 ஜூலை 1921 இல் பிறந்தவர் பா. ராமச்சந்திரன். தமது சகோதரர் திரு துரைசாமி நாயுடு வேலூர் ஜில்லா போர்டில் பணியாற்றிய போது பள்ளிப் படிப்பை அங்கு தொடர்ந்தார். பிறகு, சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பி.ஏ. (ஹானர்ஸ்) படித்து முடித்த பிறகு கோவை பி. எஸ். ஜி. கல்லூரியில் பேராசிரியராகப் பணியில் அமர்ந்தார். அரசியலில் மிகுந்த ஈடுபாடு காரணமாக அந்த பணியை உதறிவிட்டு காங்கிரஸ் இயக்கத்தில் தம்மை முழுமையாக இணைத்துக் கொண்டவர் பா. ராமச்சந்திரன்.</p>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large"><img loading="lazy" decoding="async" width="695" height="490" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/07/2-1.jpg" alt="" class="wp-image-4448" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/07/2-1.jpg 695w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/07/2-1-300x212.jpg 300w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/07/2-1-120x86.jpg 120w" sizes="auto, (max-width: 695px) 100vw, 695px" /></figure></div>



<p>1952 செய்யாறு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த பா. ராமச்சந்திரன், 1957 இல் மீண்டும் போட்டியிட்டு அதே தொகுதியில் வெற்றி பெற்றார்.</p>



<p>1962 இல் பெரணமல்லூர் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சியின் கொறடாவாக 1967 வரை பணியாற்றினார். 1967 இல் பெரணமல்லூர் சட்டமன்றத் தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தாலும், தொடர்ந்து காங்கிரஸ் இயக்கத்தில் ஸ்தாபன பணிகளில் தீவிரமாக ஈடுபட்டார்.</p>



<p>1969 இல் காங்கிரசில் பிளவு ஏற்பட்டபோது, பெருந்தலைவர் காமராஜரோடு தம்மை இணைத்துக் கொண்டார். 1971 திருத்தணி மக்களவை தொகுதியில் போட்டியிட்டுத் வெற்றிவாய்ப்பை இழந்தாலும், 1972 ஜனவரியில் தமிழ்நாடு ஸ்தாபன காங்கிரஸ் தலைவராக பா. ராமச்சந்திரன் தேர்வு செய்யப்பட்டு பெருந்தலைவர் காமராஜர் மறைகிற வரை அந்த பொறுப்பில் செயல்பட்டார்.</p>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large"><img loading="lazy" decoding="async" width="691" height="447" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/07/1.jpg" alt="" class="wp-image-4451" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/07/1.jpg 691w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/07/1-300x194.jpg 300w" sizes="auto, (max-width: 691px) 100vw, 691px" /></figure></div>



<p>பெருந்தலைவர் காமராஜர் வழிகாட்டுதலோடு செயல்பட்ட திரு பா. ராமச்சந்திரன் அவர்களின் அரசியல் செயல்பாட்டிற்கு சிகரம் வைத்தாற்போல் அமைந்தது அக்டோபர் 1973 இல் தமிழகம் முழுவதும் வெற்றிகரமாக நடைபெற்ற அறப்போராட்டமாகும். அன்று நடைபெற்ற மறியலுக்கு அணிவகுத்துச் செல்லும் அறப்போர் வீரர்கள் சுதராடையும், தலையில் காந்த குல்லாவும் அணிந்து காங்கிரஸ் பேட்ஜ்களை அணிந்து கம்பீரமாகப் போராட்டத்தில் கைகளில் காங்கிரஸ் கொடியோடு முழக்கங்களை எழுப்பி கைதான காட்சியை எவரும் மறக்க முடியாது. ஒரு போராட்டம் காந்திய வழியில் எப்படி நடக்க வேண்டுமோ, அப்படிக் கட்டுக்கோப்பாக நடத்திய பெருமை பா. ராமச்சந்திரன் அவர்களுக்கு உண்டு. இதை தினமணி நாளேடு மனதாரப் பாராட்டி செய்தி வெளியிட்டது இங்கு நினைவு கூறத்தக்கது.</p>



<p>1976 இல் இரு காங்கிரஸ் இணைப்பில் சேராமல் பா. ராமச்சந்திரன் தலைமையில் ஸ்தாபன காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் தனித்துச் செயல்பட்டது. இந்திய உணவு கழகத்தின் தலைவராகவும் பணியாற்றினார். 1980 இல் ஜனதா கட்சி மத்தியில் ஆட்சியை இழந்த பிறகு அக்கட்சியில் நீடிக்க பா. ராமச்சந்திரன் விரும்பவில்லை.</p>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large"><img loading="lazy" decoding="async" width="744" height="1024" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/07/240-744x1024.jpg" alt="" class="wp-image-4454" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/07/240-744x1024.jpg 744w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/07/240-218x300.jpg 218w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/07/240-768x1057.jpg 768w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/07/240-750x1032.jpg 750w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/07/240.jpg 959w" sizes="auto, (max-width: 744px) 100vw, 744px" /></figure></div>



<p>இந்நிலையில், தேசிய அளவில் அன்னை இந்திரா காந்தியின் தலைமையை வலிமைப்படுத்த வேண்டுமென்ற நோக்கத்தில் அவரது அழைப்பை ஏற்று மக்கள் தலைவர் ஜி.கே. மூப்பனார் மேற்கொண்ட தீவிர முயற்சியின் காரணமாக 30.9.1980 இல் சென்னை காமராஜர் அரங்கம் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் இந்திரா காந்த கலந்து கொண்டார். அதையொட்டி தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்ட இணைப்பு விழாவில் பேராசிரியர் பா. ராமச்சந்திரன் அவர்கள் காங்கிரஸ் இயக்கத்தில் தம்மை இணைத்துக் கொண்டார்.</p>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large"><img loading="lazy" decoding="async" width="757" height="580" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/07/211.jpg" alt="" class="wp-image-4452" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/07/211.jpg 757w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/07/211-300x230.jpg 300w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/07/211-750x575.jpg 750w" sizes="auto, (max-width: 757px) 100vw, 757px" /></figure></div>



<p>1982 இல் கேரள மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டு, 1988 வரை அந்த பொறுப்பில் இருந்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலராக திரு. பா. ராமச்சந்திரன் அவர்கள் தமது இறுதிக் காலம் வரை செயல்பட்டார்.</p>



<p>1969 இல் காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட பிளவு, தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளையையும் கடுமையாக பாதித்தது. இதையொட்டி சென்னை உயர்ந்த மன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. செப்டம்பர் 1980 இல்.</p>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img loading="lazy" decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/07/scan0056-aa.jpg" alt="" class="wp-image-4453" width="566" height="505" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/07/scan0056-aa.jpg 538w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/07/scan0056-aa-300x268.jpg 300w" sizes="auto, (max-width: 566px) 100vw, 566px" /></figure></div>



<p>பா. ராமச்சந்திரன் அவர்கள் காங்கிரசில் இணைந்த பிறகு அறக்கட்டளை வழக்குகள் முடிவுக்கு வந்து இன்றைக்கு காங்கிரஸ் கட்சியின் முழுக் கட்டுப்பாட்டில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது. இதற்குக் காரணமாக இருந்தவர் தலைவர் பா. ராமச்சந்திரன் அவர்கள் என்பதை நன்றியோடு நினைவு கூற வேண்டியது நமது கடமையாகும்.</p>



<p>காங்கிரஸ் கட்சியை வலிமைப்படுத்துகிற வகையில் பல்வேறு நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருந்த பேராசிரியர் பா. ராமச்சந்திரன் அவர்களுக்கு நன்றி பெருக்கோடு நூற்றாண்டு விழா எடுப்பது காங்கிரஸ் கட்சியினரின் தலையாய கடமையாகும்.</p>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large"><img loading="lazy" decoding="async" width="723" height="545" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/07/scan0114.jpg" alt="" class="wp-image-4450" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/07/scan0114.jpg 723w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/07/scan0114-300x226.jpg 300w" sizes="auto, (max-width: 723px) 100vw, 723px" /></figure></div>



<p>போற்றுதலுக்குரிய பொது வாழ்க்கையை நிகழ்த்தியவர் பேராசிரியர் பா. ரா. அவர் உடுத்துகிற நேர்த்தியான உடையே ஓர் அழகாகும். குறிப்பாக, கஞ்சி போட்டு சலவை செய்யப்பட்ட பொன்னிறமான முழுக்கை சுதர் ஜிப்பா அணிந்து மடிப்பு கலையாமல் அவர் நடந்து வருகிற காட்சியை ரசிக்காதவர்களே இருக்க முடியாது. கதர் ஜிப்பாவோ பொன்னிறம்; அவரது முகமும் பொன்னிறம். பழகுவதற்கு இனிமையானவர். மென்மையானவர். கடுஞ்சொல் கூறாதவர். அடக்கமும், நிதானமும் மிக்க அற்புதத் தலைவராக வாழ்ந்த பேராசிரியர் திரு பா. ராமச்சந்திரன் அவர்கள் தமது 79 ஆவது வயதில் 23, மே 2001 இல் நம்மை விட்டுப் பிரிந்தார்.</p>



<p>87 வயது நிரம்பிய, பேராசிரியர் பா. ராமச்சந்திரன் அவர்களது துணைவியார் திருமதி. வெங்கடலட்சுமி. அவரது மகன் டாக்டர் ரவிராம் ராமச்சந்திரன் இவ்விழாவில் நன்றியுரை ஆற்றுவது மிக மிகப் பொருத்தமானதாகும். அவரது சகோதரிகள் சசிகலா, சித்ரகலா ஆகியோருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். பேராசிரியர் பெருந்தகையைப் போல அவரது குடும்பம் பெரும் புகழுடன் அனைத்து வளங்களையும் பெற்று வாழ வேண்டும் என்பதே ஒவ்வொரு காங்கிரஸ் கட்சியினரின் விருப்பமாகும்.</p>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large"><img loading="lazy" decoding="async" width="760" height="422" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/07/02.jpg" alt="" class="wp-image-4449" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/07/02.jpg 760w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/07/02-300x167.jpg 300w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/07/02-750x416.jpg 750w" sizes="auto, (max-width: 760px) 100vw, 760px" /></figure></div>



<p>தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கே எஸ். அழகிரி அவர்கள் நன்றிப் பெருக்கோடு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவராக இருந்த திரு பா. ராமச்சந்தரன் அவர்களுக்கு நூற்றாண்டு விழா எடுத்திருக்கிறார். இவ்விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர்களும் பங்கேற்கிறார்கள். தமிழக காங்கிரஸ் கட்சியினரால் மறக்க முடியாத, மறக்கக் கூடாத நன்றியோடு நினைவு கூறப்பட வேண்டிய மாமனிதர் பேராசிரியர் பா.ரா. அவர்களை போற்றுகிற வகையில் இந்த நூற்றாண்டு விழா இங்கே சிறப்பாக நடைபெறுவது குறித்து ஒவ்வொரு காங்கிரஸ் கட்சியினரும் பெருமையடைய வேண்டும்.</p>



<p class="has-text-align-right"><em> &#8211; வெளியீடு : தேசிய முரசு</em></p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-tamilnadu/centenary-celebration-of-p-ramachandran/">பெருந்தகையாளர் பேராசிரியர் பா.ரா.!</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://desiyamurasu.com/news-tamilnadu/centenary-celebration-of-p-ramachandran/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>வாக்காளப் பெருமக்களே! அ.தி.மு.க.வின் அராஜக ஊழல் ஆட்சியை அகற்றுவோம்! மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை ஆதரிப்போம்! வெற்றிபெறச் செய்வோம்!</title>
		<link>https://desiyamurasu.com/news-tamilnadu/we-should-remove-corrupt-aiadmk-government/</link>
					<comments>https://desiyamurasu.com/news-tamilnadu/we-should-remove-corrupt-aiadmk-government/#comments</comments>
		
		<dc:creator><![CDATA[ஆ. கோபண்ணா]]></dc:creator>
		<pubDate>Sat, 03 Apr 2021 18:44:15 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழக அரசியல்]]></category>
		<category><![CDATA[2021 Assembly Election]]></category>
		<category><![CDATA[congress]]></category>
		<category><![CDATA[DMK]]></category>
		<guid isPermaLink="false">https://desiyamurasu.com/?p=4288</guid>

					<description><![CDATA[<p>ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தது யார்? ஜல்லிக்கட்டுக்கு தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் தடை விதிக்கப்பட்டதாக பிரதமர் மோடி கூறுகிறார். மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்ற 2004 முதல் 2014 வரை தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடந்ததை எவராவது மறுக்க முடியுமா ? பா.ஜ.க. ஆட்சி அமைந்த 2014-க்கு பிறகு 2015, 2016 இல் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த தடை விதித்தது யார் ? உச்சநீதிமன்றம் விதித்த தடையை நீக்குவதற்கு மிருகவதை தடைச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர [&#8230;]</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-tamilnadu/we-should-remove-corrupt-aiadmk-government/">வாக்காளப் பெருமக்களே! அ.தி.மு.க.வின் அராஜக ஊழல் ஆட்சியை அகற்றுவோம்! மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை ஆதரிப்போம்! வெற்றிபெறச் செய்வோம்!</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<h4 class="wp-block-heading"><strong><span class="has-inline-color has-vivid-red-color">ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தது யார்?</span></strong></h4>



<ul class="wp-block-list"><li>ஜல்லிக்கட்டுக்கு தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் தடை விதிக்கப்பட்டதாக பிரதமர் மோடி கூறுகிறார். மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்ற 2004 முதல் 2014 வரை தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடந்ததை எவராவது மறுக்க முடியுமா ?</li><li>பா.ஜ.க. ஆட்சி அமைந்த 2014-க்கு பிறகு 2015, 2016 இல் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த தடை விதித்தது யார் ? உச்சநீதிமன்றம் விதித்த தடையை நீக்குவதற்கு மிருகவதை தடைச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர பா.ஜ.க. மறுத்தது ஏன் ?</li><li>ஜனவரி 2017இல் மெரினாவில் நடந்த எழுச்சிப் போராட்டத்திற்குப் பிறகுதான் அ.தி.மு.க. அவசர சட்டம் கொண்டு வந்து தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற்றதே தவிர, மத்திய பா.ஜ.க. ஆட்சியினால் அல்ல. எனவே, மோடி அவர்களே, தமிழக மக்களிடம் உங்களது கோயபல்ஸ் பிரச்சாரம் எடுபடாது.</li></ul>



<h4 class="wp-block-heading"><strong><span class="has-inline-color has-vivid-red-color">தமிழகத்தில் தலைவிரித்தாடும் வேலையில்லா திண்டாட்டம்</span></strong></h4>



<ul class="wp-block-list"><li>தமிழகத்தில் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறுகிறார். தற்போது, வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்போர் எண்ணிக்கை 66.37 லட்சம். தமிழகத்தில் நிலவும் வேலையில்லா திண்டாட்டத்திற்கு இதைவிட வேறு சான்று தேவையா ?</li><li>தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் 9,251 பணியிடங்களுக்கு 20 லட்சம் மனுக்கள் குவிந்தன. ஒரு வேலைக்கு 231 பேர் விண்ணப்பித்தனர். 66 டி.எஸ்.பி. பதவிகளுக்கு 1 லட்சத்து 31 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். இதுதான் அ.தி.மு.க. அரசின் வேலை வாய்ப்பு வழங்கும் லட்சணம்.</li><li>தலைமைச் செயலகத்தில் 14 துப்புரவு பணியிடங்களுக்கு 4 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். இதில், பல பொறியியல், எம்.பி.ஏ. பட்டதாரிகள் அடங்குவர். எடப்பாடி அவர்களே, இதைவிட ஒரு அவமானம் தமிழகத்திற்கு இழைக்க முடியுமா ?</li></ul>



<h4 class="wp-block-heading"><strong><span class="has-inline-color has-vivid-red-color">உலக முதலீட்டாளர்கள் மாநாட்டினால் தொழில் தொடங்கப்பட்டதா? வேலைவாய்ப்பு பெருகியதா?</span></strong></h4>



<ul class="wp-block-list"><li>தமிழகத்தில் ஆண்டுதோறும் 5 லட்சம் பட்டதாரிகள், 2 லட்சம் பொறியியல் பட்டதாரிகள் படித்து விட்டு வெளியே வருகின்றனர். இவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க எங்கே தொழில் தொடங்கினீர்கள் ? எங்கே வேலை வழங்கினீர்கள் ? எடப்பாடி அவர்களே, பதில் கூறுவீர்களா ?</li><li>உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூன்றுமுறை கோடிக்கணக்கான ரூபாய் செலவில் அ.தி.மு.க. அரசு நடத்தியது. புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. தொழில்கள் தொடங்கப்பட்டு, லட்சக்கணக்கானவர்களுக்கு வேலை வழங்கப்பட்டதாக எடப்பாடி கூறுகிறார். எந்த தொழிற்சாலையில் எத்தனை பேருக்கு வேலை வழங்கப்பட்டது ? எடப்பாடி வெள்ளை அறிக்கை வெளியிடுவாரா ?</li></ul>



<h4 class="wp-block-heading"><strong><span class="has-inline-color has-vivid-red-color">நீட் தேர்வினால் புறக்கணிக்கப்பட்ட அரசுப்பள்ளி மாணவர்கள்.</span></strong></h4>



<ul class="wp-block-list"><li>தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 3.41 லட்சம் மாணவர்கள் படிக்கிறார்கள். இதில் கடந்த மூன்றாண்டுகளில் 13 மாணவர்கள் மட்டுமே மருத்துவ கல்லூரியில் சேருகிற கொடுமை நிகழ்ந்தது. உள்ஒதுக்கீடு 7.5 சதவிகிதம் வந்தபிறகு, 405 மாணவர்களுக்குதான் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதுதான் சமூகநீதியா ?</li><li>அரசு பள்ளிகளில் படித்த 3 லட்சத்து 41 ஆயிரம் மாணவர்களில் 405 பேருக்கு தான் உள்ஒதுக்கீட்டின் மூலம் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்தது. தமிழகத்தில் மொத்தமுள்ள 3400 இடங்களில் அரசு பள்ளிகளில் படித்த 405 மாணவர்களுக்கு தான் இடம் கிடைத்தது. மீதி இடங்களை அபகரித்தது யார் ? எடப்பாடி பதில் கூறுவாரா ?</li><li>மாநில பாடத் திட்டத்தில் படித்து, அதிக மதிப்பெண்கள் பெற்று நீட் தேர்வில் வாய்ப்பு கிடைக்காமல் அனிதா உள்ளிட்ட 16 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதற்கு யார் காரணம் ? யார் பொறுப்பு ? நீட் தேர்வை தமிழகத்தில் திணித்த பா.ஜ.க.வுக்கு பாடம் புகட்ட வேண்டாமா ?</li></ul>



<h4 class="wp-block-heading"><strong><span class="has-inline-color has-vivid-red-color">குடியுரிமை சட்டத்திருத்தம் நிறைவேற யார் காரணம்?</span></strong></h4>



<ul class="wp-block-list"><li>குடியுரிமை சட்டத் திருத்தம் 11 உறுப்பினர்கள் கொண்ட அ.தி.மு.க.வும், அன்புமணி ராமதாசும் ஆதரித்ததால் சட்டமாக்கப்பட்டது. ஆனால், அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில், குடியுரிமை சட்டத் திருத்தத்தை திரும்ப பெற பா.ஜ.க.வை வலியுறுத்துவோம் என்று கூறுவதை விட இரட்டை வேடம் வேறு என்ன இருக்க முடியும் ?</li></ul>



<h4 class="wp-block-heading"><strong><span class="has-inline-color has-vivid-red-color">பா.ஜ.க. அரசின் பொதுமுடக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள்</span></strong></h4>



<ul class="wp-block-list"><li>பா.ஜ.க. அரசின் பொது முடக்கத்தினால் மாத ஊதியம் பெறுகிற 12 கோடி பேர் வேலை இழந்தனர். 7.5 கோடி பேர் வறுமையின் பிடியில் சிக்கிக் கொண்டனர். வளர்ச்சி மைனஸ் 23 சதவிகிதம். 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையில்லா திண்டாட்டத்தை அதிகரிக்கிற பிரதமர் மோடியே, தமிழக மக்களிடம் வாக்கு கேட்க உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது ?</li><li>கடந்த 73 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்தியாவின் வளர்ச்சி அதல பாதாளத்தில் விழுந்து கிடக்கிறது. பணமதிப்பு இழப்பு, ஜி.எஸ்.டி., பொது முடக்கம், தவறான பொருளாதார கொள்கை தான் இதற்கு காரணம் என்பதை பிரதமர் மோடியால் மறுக்க முடியுமா ?</li></ul>



<h4 class="wp-block-heading"><strong><span class="has-inline-color has-vivid-red-color">பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திய பா.ஜ.க. அரசு.</span></strong></h4>



<ul class="wp-block-list"><li>2014 இல் கச்சா எண்ணெய் விலை 65 டாலர். ஒரு லிட்டர் பெட்ரோல் ரூபாய் 71. இதில் கலால் வரி ரூ.9.20. ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.53. கலால் வரி ரூ.3.36. மார்ச் 2021 இல் கச்சா எண்ணெய் விலை 65 டாலர். ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.93. இதில் கலால் வரி ரூ.32.90. ஒரு லிட்டர் டீசலின் விலை ரூ.86. கலால் வரி ரூ.31.90. காங்கிரஸ், பா.ஜ.க. ஆட்சிகளின் பெட்ரோல், டீசல் விலையை ஒப்பிட்டு பாருங்கள், அநீதிக்கு பாடம் புகட்டுங்கள்.</li><li>பா.ஜ.க. அரசு 2014 ஆம் ஆண்டு முதல் 17 முறை கலால் வரி விதித்து ரூ.21 லட்சம் கோடி வருமானத்தை பெருக்கிக் கொண்டது. பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி மக்கள் மீது சுமையை ஏற்றியது. பா.ஜ.க. ஒரு மக்கள் விரோத அரசு என்று கூறுவதற்கு இதைவிட வேறு சான்றுகள் தேவையா ?</li><li>இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.93. ஆனால், சின்னஞ்சிறிய அண்டை நாடுகளான நேபாளத்தில் ரூ.76, இலங்கையில் ரூ.60, பாகிஸ்தானில் ரூ.51, பூடானில் ரூ.59. பிரதமர் மோடியே இதுதான் உங்கள் ஆட்சியின் லட்சணமா ?</li><li>2014 இல் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.410. தற்போது ரூ.875. இதன்மூலம் 25 கோடி தாய்மார்கள் தலைமீது சுமையை ஏற்றிய பிரதமர் மோடிக்கு பாடம் புகட்ட வேண்டாமா ?</li></ul>



<h4 class="wp-block-heading"><strong><span class="has-inline-color has-vivid-red-color">மோடி ஆட்சியா? அம்பானி &#8211; அதானி ஆட்சியா?</span></strong></h4>



<ul class="wp-block-list"><li>மோடி ஆட்சியில் 100 கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு 2020 ஆம் ஆண்டில் மட்டும் 13 லட்சம் கோடியாக உயர்ந்திருக்கிறது. முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு மூன்று மடங்காகவும், அதானியின் சொத்து மதிப்பு 6 மடங்காகவும் உயர்ந்திருக்கிறது. பிரதமர் மோடியின் ஆட்சி ஒரு கார்ப்பரேட் ஆதரவு ஆட்சி என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும் ?</li><li>இந்தியாவில் உள்ள காப்பரேட்டுகள் தேர்தல் பத்திரங்கள் மூலமாக 2020 இல் மொத்தம் வழங்கிய நன்கொடை ரூ.2773 கோடி. இதில் ரூ.1660 கோடி பா.ஜ.க.வுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. கார்ப்பரேட்டுகள் பா.ஜ.க.வுக்கு நன்கொடை வாரி வழங்குவது ஏன் ? மோடி பதில் கூறுவாரா ?</li></ul>



<h4 class="wp-block-heading"><strong><span class="has-inline-color has-vivid-red-color">சமஸ்கிருதத்திற்கு ஆதரவு! தமிழுக்கு புறக்கணிப்பு!!</span></strong></h4>



<ul class="wp-block-list"><li>அனைத்து மொழிகளையும் சமமாக கருத வேண்டிய பா.ஜ.க. ஆட்சியில் சமஸ்கிருத மொழியை வளர்ப்பதற்கு கடந்த 3 ஆண்டுகளில் ஒதுக்கிய தொகை ரூ.644 கோடி. ஆனால், தமிழ், தெலுங்கு,கன்னடம், மலையாளம், ஒடியா ஆகிய 5 மொழிகளுக்கும் சேர்த்து ஒதுக்கிய தொகை வெறும் ரூ.29 கோடி. சமஸ்கிருதத்திற்கு 22 மடங்கு கூடுதலாக நிதி ஒதுக்கிய பிரதமர் மோடி அவர்களே, உங்களை தமிழர் விரோதி என்று அழைப்பதில் என்ன தவறு ?</li><li>இந்தியாவில் சமஸ்கிருதம் பேசுபவர்கள் 28,821. ஆனால், சமஸ்கிருதத்திற்கு ரூ.644 கோடி. 7 கோடி மக்கள் பேசுகிற தமிழுக்கு நீங்கள் ஒதுக்கிய தொகை ரூ.4 கோடி. தமிழக தேர்தல் பிரச்சாரத்தில் நீலிக் கண்ணீர் வடிக்கும் மோடி அவர்களே, தமிழ் மொழியை வஞ்சிப்பது நியாயமா ?</li></ul>



<h4 class="wp-block-heading"><strong><span class="has-inline-color has-vivid-red-color">தமிழக அரசுக்கு நிதி வழங்க மறுத்த பாஜக அரசு.!</span></strong></h4>



<ul class="wp-block-list"><li>கடந்த 10 ஆண்டுகளில் நிவாரண நிதியாக பிரதமர் மோடியிடம் கேட்ட மொத்த தொகை ரூபாய் 1 லட்சத்து 20 ஆயிரத்து 500 கோடி. ஆனால், பிரதமர் மோடி வழங்கியதோ ரூ.5778 கோடி. கேட்ட தொகையில் 5 சதவிகிதத்தை மட்டுமே வழங்கிய பிரதமர் மோடி அவர்களே, தமிழக மக்களிடம் வாக்கு கேட்க உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது ?</li></ul>



<h4 class="wp-block-heading"><strong><span class="has-inline-color has-vivid-red-color">சிபிஐ விசாரணையில் சிக்கியிருக்கும் முதலமைச்சர்!</span></strong></h4>



<ul class="wp-block-list"><li>நெடுஞ்சாலைத்துறை முறைகேடு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் முதலமைச்சர் எடப்பாடி மீது, சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது. ஆனால், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, சி.பி.ஐ. விசாரணைக்கு தடை உத்தரவை பெற்று, ஆட்சியில் நீடிப்பவர் எடப்பாடி பழனிச்சாமி. தடை உத்தரவை நீக்காமல் உங்களை பாதுகாப்பவர் பிரதமர் மோடி. ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் எடப்பாடி சி.பி.ஐ. விசாரணையிலிருந்து தப்ப முடியுமா ?</li></ul>



<h4 class="wp-block-heading"><strong><span class="has-inline-color has-vivid-red-color">திவாலா நிலையில் தமிழக அரசு !</span></strong></h4>



<ul class="wp-block-list"><li>அ.தி.மு.க. அரசின் மொத்த கடன் ரூபாய் 5 லட்சம் கோடி. பொதுத்துறை நிறுவனங்களின் கடன் ரூபாய் 3 லட்சம் கோடி. ஆக, 8 லட்சம் கோடி கடனில் திவாலான நிலையில் இருக்கும் போது, இலவச அறிவிப்புகளை எடப்பாடி பழனிசாமி வாரி வழங்கலாமா ?</li><li>எடப்பாடி முதலமைச்சராகும் போது அறிவிப்புகளை வெளியிடலாம். ஆனால், ஆட்சியிலிருந்து வெளியேறுகிற போது அறிவிப்புகளை வெளியிட என்ன உரிமை இருக்கிறது ? ஆட்சியில் இருக்கும் போது செய்யாததை மூடிமறைக்க இத்தகைய அறிவிப்புகளை வெளியிடலாமா ?</li></ul>



<h4 class="wp-block-heading"><strong><span class="has-inline-color has-vivid-red-color">வன்னியர்களை நம்பவைத்து மோசம் செய்த எடப்பாடி.</span></strong></h4>



<ul class="wp-block-list"><li>பா.ம.க.வை கூட்டணியில் சேர்ப்பதற்காக வன்னியர்களுக்கு 10.5 சதவிகித உள்ஒதுக்கீட்டை அ.தி.மு.க. அரசு வழங்கியது. ஆனால், துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ்., இது தற்காலிகமானதுதான். நிரந்தரமானது அல்ல என்கிறார். ஆனால், சட்ட அமைச்சரோ இது நிரந்தரம் என்கிறார். இதில் எதை நம்புவது ? வன்னியர்களை நம்ப வைத்து மோசம் செய்யலாமா ?</li></ul>



<h4 class="wp-block-heading"><span class="has-inline-color has-vivid-red-color"><strong>ஸ்டாலின் தான் வர்றாரு! நல்லாட்சி தர போறாரு</strong>!</span></h4>



<ul class="wp-block-list"><li>10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சி தொடர்வதற்கு நியாயமான காரணங்கள் ஏதாவது இருக்கிறதா ? வாக்காளர்கள் எடப்பாடியையும், தளபதி மு.க. ஸ்டாலினையும் ஒப்பிட்டு பார்க்கும் போது, அடுத்த முதலமைச்சராக யாரை தேர்வு செய்வார்கள் என்பதைத் தான் அனைத்து கருத்து கணிப்புகளும் தெளிவாக கூறுகின்றன.</li><li>ஐம்பதாண்டு கால அரசியல், நிர்வாக அனுபவம் பெற்ற மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் முதலமைச்சர் ஆவது இயற்கையின் விதி. இதற்கு மக்களிடையே அமோக ஆதரவு பெருகி வருவதை தொலைக்காட்சிகளில் காண முடிகிறது. ஆட்சி மாற்றம் உறுதி என்பது நாளுக்கு நாள் தெளிவாகி வருகிறது.</li><li>மத்திய பா.ஜ.க. அரசின் பிடியிலிருந்து தமிழகத்தை விடுவிக்க, அராஜக ஊழல் ஆட்சி நடத்துகிற அ.தி.மு.க. ஆட்சியை அகற்ற மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு தமிழக மக்கள் வாக்களிக்க வேண்டும். ஆட்சி மாற்றத்தின் மூலமே தமிழகத்திற்கு விடிவு காலம்.</li></ul>



<h4 class="has-text-align-right wp-block-heading"><em>வெளியீடு: ஆ. கோபண்ணா, ஆசிரியர், தேசியமுரசு, இணைய இதழ்</em></h4>



<p></p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-tamilnadu/we-should-remove-corrupt-aiadmk-government/">வாக்காளப் பெருமக்களே! அ.தி.மு.க.வின் அராஜக ஊழல் ஆட்சியை அகற்றுவோம்! மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை ஆதரிப்போம்! வெற்றிபெறச் செய்வோம்!</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://desiyamurasu.com/news-tamilnadu/we-should-remove-corrupt-aiadmk-government/feed/</wfw:commentRss>
			<slash:comments>2</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>தேர்தலில் பா.ஜ.க.- அ.தி.மு.க. கூட்டணி வேர் அறுக்கப்படும்! தலைவர் ராகுல் காந்தியின் ஆவேசப் பேச்சு!</title>
		<link>https://desiyamurasu.com/news-tamilnadu/aiadmk-bjp-combine-will-be-decimated-in-the-assembly-polls-says-rahul-gandhi/</link>
					<comments>https://desiyamurasu.com/news-tamilnadu/aiadmk-bjp-combine-will-be-decimated-in-the-assembly-polls-says-rahul-gandhi/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Admin]]></dc:creator>
		<pubDate>Mon, 29 Mar 2021 17:29:05 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழக அரசியல்]]></category>
		<category><![CDATA[2021 Election Campaign]]></category>
		<category><![CDATA[congress]]></category>
		<category><![CDATA[rahul gandhi]]></category>
		<category><![CDATA[Velachery Chennai]]></category>
		<guid isPermaLink="false">https://desiyamurasu.com/?p=4234</guid>

					<description><![CDATA[<p>நண்பர்களே! இந்த தேர்தல் எதைப் பற்றியது என்பதை நான் எளிமையாகச் சொல்ல விரும்புகிறேன். இதில் என்னுடைய சொந்த அனுபவத்தைச் சேர்த்து இங்கு சொல்ல விரும்புகிறேன். அதன்பிறகு உங்களுக்கே புரியும். பாஜக, அதிமுகவை ஏன் எதிர்க்கிறேன், என் முழு வலிமையையும் அதற்கான ஏன் செலவிடுகிறேன் என்பது உங்களுக்குப் புரியும். நான் அமேதி மக்களவை உறுப்பினராக இருந்தபோது, ஓர் இளம் காங்கிரஸ் நிர்வாகி, பாஜகவில் சேர்ந்தார். அவர் பாஜகவில் சேர்ந்தவுடன் பாஜகவின் மூத்த உறுப்பினர்களுக்கு இணையாக அவரைச் சேர்த்துக் கொண்டார்கள். [&#8230;]</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-tamilnadu/aiadmk-bjp-combine-will-be-decimated-in-the-assembly-polls-says-rahul-gandhi/">தேர்தலில் பா.ஜ.க.- அ.தி.மு.க. கூட்டணி வேர் அறுக்கப்படும்! தலைவர் ராகுல் காந்தியின் ஆவேசப் பேச்சு!</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p><em>நண்பர்களே!</em></p>



<p>இந்த தேர்தல் எதைப் பற்றியது என்பதை நான் எளிமையாகச் சொல்ல விரும்புகிறேன். இதில் என்னுடைய சொந்த அனுபவத்தைச் சேர்த்து இங்கு சொல்ல விரும்புகிறேன். அதன்பிறகு உங்களுக்கே புரியும். பாஜக, அதிமுகவை ஏன் எதிர்க்கிறேன், என் முழு வலிமையையும் அதற்கான ஏன் செலவிடுகிறேன் என்பது உங்களுக்குப் புரியும்.</p>



<p>நான் அமேதி மக்களவை உறுப்பினராக இருந்தபோது, ஓர் இளம் காங்கிரஸ் நிர்வாகி, பாஜகவில் சேர்ந்தார். அவர் பாஜகவில் சேர்ந்தவுடன் பாஜகவின் மூத்த உறுப்பினர்களுக்கு இணையாக அவரைச் சேர்த்துக் கொண்டார்கள். இந்த தலைவர்கள் அமித் ஷாவைச் சந்திக்கும் ஒரு புகைப்படத்தை நான் பார்த்தேன். அவர் ஜனநாயக முறையில் தேர்வு செய்யப்பட்ட ஒரு தலைவர்.</p>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img loading="lazy" decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/03/WhatsApp-Image-2021-03-29-at-10.48.22-PM.jpg" alt="" class="wp-image-4240" width="597" height="396" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/03/WhatsApp-Image-2021-03-29-at-10.48.22-PM.jpg 760w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/03/WhatsApp-Image-2021-03-29-at-10.48.22-PM-300x199.jpg 300w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/03/WhatsApp-Image-2021-03-29-at-10.48.22-PM-750x498.jpg 750w" sizes="auto, (max-width: 597px) 100vw, 597px" /></figure></div>



<p>அந்தப் புகைப்படத்தில் அமித் ஷா சோபாவில் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்தார். அந்த தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் அவர் முன் கூனிக்குறுதி கைகட்டி நின்று கொண்டிருந்தார். அமித் ஷாவின் காலைத் தொட்டுக் கும்பிட்டபடியே இருந்தார். தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தலைவர் இன்னொரு தலைவர் முன் கையெடுத்துக் கும்பிட்ட கூனிக்குறுகி நிற்பதையும், காலில் விழுவதையும் ஓர் அவமானகரமான நிகழ்வாகத்தான் நான் பார்த்தேன்.</p>



<p>இந்த ஒரே ஒரு உறவுதான் பாஜகவில் இருக்கும். வேறு எதையும் அங்கு பார்க்க முடியாது. நீங்கள் பாஜகவில் இருந்தாலோ, கூட்டணிக் கட்சியாக இருந்தாலோ நீங்கள் அவமரியாதையை மட்டும் தான் சந்திப்பீர்கள். நீங்கள் கையெடுத்துக் கும்பிட்டு, கூறைக் கும்பிடு போட்டுத்தான் அவர்களிடம் நிற்கவேண்டும். அமித் ஷா, மோடி ஆகியோரின் காலை தொட்டுக் கும்பிட வேண்டும் என்பதுதான் அவர்களின் நடைமுறை.</p>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img loading="lazy" decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/03/04db94f7-05e8-42a3-8179-02b83958ab01.jpg" alt="" class="wp-image-4238" width="599" height="398" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/03/04db94f7-05e8-42a3-8179-02b83958ab01.jpg 760w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/03/04db94f7-05e8-42a3-8179-02b83958ab01-300x199.jpg 300w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/03/04db94f7-05e8-42a3-8179-02b83958ab01-750x498.jpg 750w" sizes="auto, (max-width: 599px) 100vw, 599px" /></figure></div>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img loading="lazy" decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/03/WhatsApp-Image-2021-03-29-at-10.48.21-PM-1.jpeg" alt="" class="wp-image-4239" width="600" height="398" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/03/WhatsApp-Image-2021-03-29-at-10.48.21-PM-1.jpeg 760w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/03/WhatsApp-Image-2021-03-29-at-10.48.21-PM-1-300x199.jpeg 300w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/03/WhatsApp-Image-2021-03-29-at-10.48.21-PM-1-750x498.jpeg 750w" sizes="auto, (max-width: 600px) 100vw, 600px" /></figure></div>



<p>எங்களுக்கு வேறு வகை சித்தாந்தம், எண்ணம் உள்ளது.எந்த உறவில் ஏற்றத்தாழ்வு உள்ளதோ அது உறவே இல்லை என்று நினைக்கிறோம். எங்கள் பார்வையில் தமிழக மக்கள் அனைவரும் சகோதர, சகோதரிகள். அதைத்தான் நம்புகிறோம். நாங்கள் விரும்புவது ஒன்றை மட்டும்தான். அன்பு, சகோதரத்துவத்தைத்தான் நாங்கள் விரும்புகிறோம்.</p>



<p>இந்தியாவில் இரண்டு சித்தாந்தங்கள் உள்ளன. ஒரு சித்தாந்தம் எல்லோரும் எனக்கு கீழே என்கிறது. அதுதான் ஆர்எஸ்எஸ், மோடி, அமித் ஷாவின் சித்தாந்தம். இன்னொரு சித்தாந்தம் சகோதரத்துவம், பாசம், மரியாதை என்கிறது. அதைத்தான் நாங்கள் நம்புகிறோம். என்னுடைய பிரச்சினை என்னவென்றால், இவ்வளவு தொன்மையான பண்பாட்டு, பாரம்பரியம் கொண்ட மக்களின் பிரதிநிதியான தலைவர்கள், அமித் ஷா, மோடி ஆகியோரின் கால்களில் விழுந்து கிடக்கிறார்களே என்கிற கோபம் எனக்கு வருகிறது. வரலாற்றுப் பாரம்பரியமிக்க தமிழக மக்களின் தலைவர்கள் இவர்கள் இருவர் காலில் வீழ்ந்து கிடப்பதா என்கிற கோபம் வருகிறது. அதற்காகத்தான் இங்கு வந்துள்ளேன்.</p>



<p>பரஸ்பரம் மரியாதை அளிக்கும் உறவை விரும்புகின்றேன். தமிழகத்திலிருந்து ஆளுகின்ற தமிழகம் தான் வேண்டும். டெல்லியிலிருந்து ஆளுகின்ற அரசு அல்ல. ஒரு வித்தியாசம் உள்ளது. தமிழகம்தான் இந்தியா என்று சொல்லும்போது இந்தியாவும் தமிழகம்தான் என்று சொல்ல வேண்டும்.</p>



<p>இந்தியாவுக்கு கீழ் பணிந்த தமிழகம் இருக்க வேண்டும் என்றால் அது இந்தியாவே அல்ல. நான் விரும்புவது சக மனிதருக்கு அளிக்கப்படும் மரியாதை. அனைவரின் பாரம்பரியத்தையும் மதிக்கும் மரியாதை. ஒரு மொழிதான் உயர்ந்தது என்பதல்ல இந்தியா. ஒரு பாரம்பரியம் தான் உயர்ந்தது என்பது நான் விரும்பும் இந்தியா அல்ல.</p>



<p>தமிழ் எவ்வளவு முக்கியமோ அதேபோல் வங்க மொழியும் முக்கியம். அதேபோல் அனைத்து மொழிகளும் முக்கியம் என்று மதிக்கும் இந்தியா தான் முக்கியம். தமிழக முதலமைச்சரைப் பிரதமர் கட்டுப்படுத்துவதும், அவரை தன் காலில் விழ வைத்திருப்பதையும் நான் ஏற்றுக் கொள்ளமாட்டேன். இது நான் விரும்பும் இந்தியா அல்ல. உத்தரப்பிரதேச முதலமைச்சர், அமித் ஷா காலில் விழ கட்டாயப்படுத்தப்படுகிறார். அவர் நேர்மையற்றவராக இருந்ததால் தான் அமித் ஷா காலில் விழுந்தார். அதே விஷயம் தமிழகத்திலும் நடந்துள்ளது. ஒரே மாதிரியான சம்பவம் தான். கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், ஒரு மாநில முதலமைச்சரைக் காலில் விழ வைப்பது தான்.</p>



<p>தமிழக முதலமைச்சர் அவ்வாறு பணிந்து போவதற்குக் காரணம் அவர் நேர்மையற்றவராக மக்கள் வரிப் பணத்தை சுரண்டியேதே காரணம். எந்த மானமுள்ள தமிழனும் அதை விரும்பமாட்டான். 3 ஆயிரம் ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட தமிழன் யார் காலிலும் விழமாட்டான். அதனால் தான், ஆர்எஸ்ஸ், பாஜக தமிழகத்துக்குள் நுழையக்கூடாது என்பதற்காகத்தான் இங்கு நிற்கிறேன். தமிழகத்தில் பெரிய மாற்றம் தேவைப்படுகிறது. மிகப் பெரிய சவாலை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.</p>



<p>பாஜகவை அகற்றும் வரை நானும் ஸ்டாலினும் எந்தவித சமரசமும் செய்து கொள்ளமாட்டோம். இந்த தேர்தலில் பாஜக- ஆர்எஸ்எஸ் வேர் அறுக்கப்படும். ஸ்டாலின் முதலமைச்சராவார்.</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-tamilnadu/aiadmk-bjp-combine-will-be-decimated-in-the-assembly-polls-says-rahul-gandhi/">தேர்தலில் பா.ஜ.க.- அ.தி.மு.க. கூட்டணி வேர் அறுக்கப்படும்! தலைவர் ராகுல் காந்தியின் ஆவேசப் பேச்சு!</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://desiyamurasu.com/news-tamilnadu/aiadmk-bjp-combine-will-be-decimated-in-the-assembly-polls-says-rahul-gandhi/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>மக்கள் தேர்ந்தெடுத்த ஆட்சிக்கு எதிராக நியமன எம்எல்ஏக்கள் வாக்களிக்க முடியுமா? : சட்டம் சொல்லும் உண்மை</title>
		<link>https://desiyamurasu.com/news-india/can-nominated-mlas-vote-in-puducherry-house/</link>
					<comments>https://desiyamurasu.com/news-india/can-nominated-mlas-vote-in-puducherry-house/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Admin]]></dc:creator>
		<pubDate>Mon, 22 Feb 2021 08:03:38 +0000</pubDate>
				<category><![CDATA[தேசிய அரசியல்]]></category>
		<category><![CDATA[bjp]]></category>
		<category><![CDATA[congress]]></category>
		<category><![CDATA[Puducherry government]]></category>
		<category><![CDATA[V Narayanasamy]]></category>
		<guid isPermaLink="false">https://desiyamurasu.com/?p=4168</guid>

					<description><![CDATA[<p>புதுச்சேரி சட்டப்பேரவையில், ஆளும் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையை நிரூபிக்கும் நடக்க இருக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில், நியமன எம்எல்ஏக்கள் வாக்களிக்க முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. பிப்ரவரி 22 ஆம் தேதி (திங்கள் கிழமை) பெரும்பான்மையை நிரூபிக்குமாறு நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு, துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார். இந்த சூழலில் ஒவ்வொருவர் மனதிலும் எழுந்திருக்கும் கேள்வி இதுதான்… &#8221;பாஜகவைச் சேர்ந்த 3 நியமன எம்எல்ஏக்கள் வாக்களிக்க முடியுமா?&#8221; ஒருவேளை 3 நியமன எம்எல்ஏக்களை வாக்களிக்க அனுமதித்தால், [&#8230;]</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/can-nominated-mlas-vote-in-puducherry-house/">மக்கள் தேர்ந்தெடுத்த ஆட்சிக்கு எதிராக நியமன எம்எல்ஏக்கள் வாக்களிக்க முடியுமா? : சட்டம் சொல்லும் உண்மை</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>புதுச்சேரி சட்டப்பேரவையில், ஆளும் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையை நிரூபிக்கும் நடக்க இருக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில், நியமன எம்எல்ஏக்கள் வாக்களிக்க முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.</p>



<p>பிப்ரவரி 22 ஆம் தேதி (திங்கள் கிழமை) பெரும்பான்மையை நிரூபிக்குமாறு நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு, துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார்.</p>



<p>இந்த சூழலில் ஒவ்வொருவர் மனதிலும் எழுந்திருக்கும் கேள்வி இதுதான்…</p>



<p>&#8221;பாஜகவைச் சேர்ந்த 3 நியமன எம்எல்ஏக்கள் வாக்களிக்க முடியுமா?&#8221;</p>



<p>ஒருவேளை 3 நியமன எம்எல்ஏக்களை வாக்களிக்க அனுமதித்தால், தேர்தல் அறிவித்ததும் காபந்து அரசாக செயல்படுவதை பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தடுத்து நிறுத்த முடியும். இதன்மூலம் தனது தோழமை கட்சி தலைமையிலோ அல்லது தமது தலைமையிலோ ஆட்சி அமைத்து, தேர்தலில் அராஜகத்தை நிகழ்த்துவது தான் இவர்களது திட்டம்.</p>



<p>ஆனால், நியமன எம்எல்ஏக்களின் வாக்குகளைப் பற்றி சட்டம் சொல்வது என்ன?</p>



<p>&#8221; 16 எம்எல்ஏக்களின் ஆதரவுடன் ஆளும் கட்சியால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் போனால், ஆட்சியை விட்டு வெளியேற வேண்டும். நியமன எம்எல்ஏக்கள் சட்டப்பேரவை அமைப்பின் ஓர் அங்கமல்ல. எனவே நம்பிக்கை வாக்கெடுப்பில் தார்மீக அடிப்படையில் அவர்களால் பங்குபெற முடியாது. எனினும், அவர்களை பாஜக எம்எல்ஏக்களாக மத்திய உள்துறை அமைச்சகம் நியமிக்கவில்லை. அதனால், நியமன எம்எல்ஏக்களை பாஜக எம்எல்ஏக்களாக கருதமுடியாது. எனவே, இந்த 3 நியமன எம்எல்ஏக்கள் ஒருசார்பு நிலையை எடுக்காமல் இருக்க வேண்டும்&#8221;.</p>



<p>நியமன எம்எல்ஏக்கள் பாஜக எம்எல்ஏக்கள் தான் என துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதற்கு, காங்கிரஸ் தரப்பில் கடும் தரப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு கொறடா ஆர்கேஆர் அனந்தராமன் கூறும்போது, &#8221; பாஜகவைச் சேர்ந்தவர்களாகவே இருந்தாலும், அவர்கள் சட்டப்பேரவையில் எந்த கட்சியின் உறுப்பினர்களும் இல்லை. அவர்கள் தங்களை பாஜக உறுப்பினர்கள் என்று கூறினால், தானாகவே தகுதி நீக்கத்துக்கு ஆளாவார்கள்&#8221;என்றார்.</p>



<p>இது குறித்து திமுகவின் தெற்கு ஒருங்கிணைப்பாளர் ஆர்.சிவா கூறும்போது, &#8221; மத்திய அரசு நியமித்த 3 எம்எல்ஏக்களும் பாஜகவைச் சேர்ந்தவர்கள் என்று குறிப்பிடவில்லை என,கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற இது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்ற அமர்வு தெரிவித்துள்ளது. கிரன் பேடியைப் போலவே, பாஜக பிரதிநிதியாகவே தமிழிசை சவுந்தரராஜன் செயல்படுகிறார். நியமன எம்எல்ஏக்களின் வாக்குகளை வைத்து, மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசின் தலையெழுத்தை முடிவு செய்வது ஜனநாயக விரோதமானது&#8221; என்றார்.</p>



<p>இதற்கிடையே, நியமன எம்எல்ஏக்கள் பாஜக எம்எல்ஏக்களாக கருதப்படுவார்கள் என்று கூறியதை தெளிவுபடுத்தக் கோரி, ஆளுநர் தமிழிசைக்கு புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கடிதம் எழுதியுள்ளார்.</p>



<p>சட்ட விதி சொல்வது என்ன?</p>



<p>&#8221;1963 ஆம் ஆண்டு யூனியன் பிரதேச சட்டத்தின் பிரிவு 3 (3)ல், 3 நபர்களுக்கு மேல் நியமன உறுப்பினர்களை மத்திய அரசு நியமிக்கலாம். அவ்வாறு நியமிக்கப்படுவர் அரசுப் பணியில் இருக்கக் கூடாது. அரசு ஊழியராக இல்லாதவர் மட்டுமே நியமன எம்எல்ஏக்களாக நியமிக்கப்பட வேண்டும் என்பதே இதன் அர்த்தம்.</p>



<p>ஆளும் கட்சி அல்லது தோழமை கட்சியினரை நியமன எம்எல்ஏக்களாக நியமிக்க அரசு பரிந்துரைக்கும். இதன் அடிப்படையில், நியமன எம்எல்ஏக்களை மத்திய அரசு நியமிக்கும். எனினும், வாக்களிப்பில் கலந்து கொள்ள இவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். நியமன எம்எல்ஏக்களுக்கு வாக்களிக்கும் உரிமை இருக்கிறது என யூனியன் பிரதேச சட்டத்தில் எங்கும் குறிப்பிடப்படவில்லை என்பதே சட்ட வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/can-nominated-mlas-vote-in-puducherry-house/">மக்கள் தேர்ந்தெடுத்த ஆட்சிக்கு எதிராக நியமன எம்எல்ஏக்கள் வாக்களிக்க முடியுமா? : சட்டம் சொல்லும் உண்மை</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://desiyamurasu.com/news-india/can-nominated-mlas-vote-in-puducherry-house/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக தொலைக்காட்சி விவாதங்களில் அதிகாரப்பூர்வமாக பங்கேற்போர் பட்டியல்: தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவிப்பு</title>
		<link>https://desiyamurasu.com/tncc-statements/media-panel-list-of-tncc-announced-by-ks-alagiri/</link>
					<comments>https://desiyamurasu.com/tncc-statements/media-panel-list-of-tncc-announced-by-ks-alagiri/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Admin]]></dc:creator>
		<pubDate>Sat, 13 Feb 2021 08:03:30 +0000</pubDate>
				<category><![CDATA[ஏவுகணைகள்]]></category>
		<category><![CDATA[congress]]></category>
		<category><![CDATA[TNCC President K S Alagiri]]></category>
		<guid isPermaLink="false">https://desiyamurasu.com/?p=4113</guid>

					<description><![CDATA[<p>The post <a href="https://desiyamurasu.com/tncc-statements/media-panel-list-of-tncc-announced-by-ks-alagiri/">தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக தொலைக்காட்சி விவாதங்களில் அதிகாரப்பூர்வமாக பங்கேற்போர் பட்டியல்: தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவிப்பு</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<div class="wp-block-image"><figure class="aligncenter size-large"><img loading="lazy" decoding="async" width="723" height="1024" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/02/WhatsApp-Image-2021-02-13-at-1.21.36-PM-723x1024.jpeg" alt="" class="wp-image-4114" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/02/WhatsApp-Image-2021-02-13-at-1.21.36-PM-723x1024.jpeg 723w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/02/WhatsApp-Image-2021-02-13-at-1.21.36-PM-212x300.jpeg 212w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/02/WhatsApp-Image-2021-02-13-at-1.21.36-PM-768x1087.jpeg 768w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/02/WhatsApp-Image-2021-02-13-at-1.21.36-PM-750x1062.jpeg 750w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/02/WhatsApp-Image-2021-02-13-at-1.21.36-PM.jpeg 904w" sizes="auto, (max-width: 723px) 100vw, 723px" /></figure></div>
<p>The post <a href="https://desiyamurasu.com/tncc-statements/media-panel-list-of-tncc-announced-by-ks-alagiri/">தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக தொலைக்காட்சி விவாதங்களில் அதிகாரப்பூர்வமாக பங்கேற்போர் பட்டியல்: தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவிப்பு</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://desiyamurasu.com/tncc-statements/media-panel-list-of-tncc-announced-by-ks-alagiri/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>&#8216;சமூக ஊடகத்தில் இணையுங்கள்&#8217; பிரச்சாரம் தொடக்கம் : வெறுப்பு அரசியலை எதிர்த்துப் போராட ராகுல் காந்தி அழைப்பு</title>
		<link>https://desiyamurasu.com/news-india/congress-launches-join-social-media-campaign-rahul-says-online-warriors-will-counter-hate/</link>
					<comments>https://desiyamurasu.com/news-india/congress-launches-join-social-media-campaign-rahul-says-online-warriors-will-counter-hate/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Admin]]></dc:creator>
		<pubDate>Wed, 10 Feb 2021 09:37:17 +0000</pubDate>
				<category><![CDATA[தேசிய அரசியல்]]></category>
		<category><![CDATA[congress]]></category>
		<category><![CDATA[rahul gandhi]]></category>
		<guid isPermaLink="false">https://desiyamurasu.com/?p=4075</guid>

					<description><![CDATA[<p>காங்கிரஸ் தொடங்கியுள்ள &#8216;சமூக ஊடகத்தில் இணையுங்கள்&#8217; பிரச்சாரத்தில் இணைந்து, வெறுப்பு அரசியலுக்கு இணையப் போராளிகள் பதில் அளிப்பார்கள் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 5 லட்சம் இணைய தள போராளிகளை இணைக்கும் வகையில், &#8216;காங்கிரஸ் சமூக ஊடகத்தில் இணையுங்கள்&#8217; என்ற பிரச்சாரத்தைக் கடந்த திங்களன்று காங்கிரஸ் கட்சி தொடங்கியது. இது குறித்து கருத்து தெரிவித்த ராகுல் காந்தி, வெறுப்பு அரசியலுக்குப் பதில் தரவும், இந்தியாவின் கொள்கையைப் பாதுகாக்கவும் இது உதவும் என்று கூறியுள்ளார். இது [&#8230;]</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/congress-launches-join-social-media-campaign-rahul-says-online-warriors-will-counter-hate/">&#8216;சமூக ஊடகத்தில் இணையுங்கள்&#8217; பிரச்சாரம் தொடக்கம் : வெறுப்பு அரசியலை எதிர்த்துப் போராட ராகுல் காந்தி அழைப்பு</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>காங்கிரஸ் தொடங்கியுள்ள &#8216;சமூக ஊடகத்தில் இணையுங்கள்&#8217; பிரச்சாரத்தில் இணைந்து, வெறுப்பு அரசியலுக்கு இணையப் போராளிகள் பதில் அளிப்பார்கள் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.</p>



<p>5 லட்சம் இணைய தள போராளிகளை இணைக்கும் வகையில், &#8216;காங்கிரஸ் சமூக ஊடகத்தில் இணையுங்கள்&#8217; என்ற பிரச்சாரத்தைக் கடந்த திங்களன்று காங்கிரஸ் கட்சி தொடங்கியது.</p>



<p>இது குறித்து கருத்து தெரிவித்த ராகுல் காந்தி, வெறுப்பு அரசியலுக்குப் பதில் தரவும், இந்தியாவின் கொள்கையைப் பாதுகாக்கவும் இது உதவும் என்று கூறியுள்ளார்.</p>



<p>இது தொடர்பாக வெளியிடப்பட்ட வீடியோவில் அவர் மேலும் கூறும்போது, &#8221; உண்மையை எதிர்த்துப் போராடக்கூடிய, இரக்கமுள்ள, நல்லிணக்கமுள்ள வன்முறையற்ற போராளிகள்தான் நாட்டுக்குத் தேவை. என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது ஓர் இளைஞராக உங்களுக்குத் தெரியும். உங்களிடமிருந்து, உங்கள் பள்ளியிலிருந்து, கல்லூரியிலிருந்து, பல்கலைக்கழகத்திலிருந்து எதையும் மறைக்க முடியாது. அடக்குமுறையை உங்களால் பார்க்க முடியும்,இந்தியாவின் கொள்கை மீது நடத்தப்படும் தாக்குதல்களையும் உங்களால் பார்க்க முடியும்.</p>



<p>டெல்லிக்கு வெளியே பாருங்கள். விவசாயிகளுக்கு என்ன நடக்கிறது என்பதைக் காண முடியும். தேசத்தின் மீதான இந்த போரின் முதுகெலும்பு பூதாகரமான ராணுவம் போல் உள்ளது. ஆயிரக்கணக்கானோர் வெறுப்பையும் கோபத்தையும் ஏற்படுத்துகிறார்கள். சுதந்திரத்தின் மதிப்பு, இரக்கம், அமைதி, மதநல்லிணக்கம் மற்றும் அன்பைப் பாதுகாப்பதற்கான போராளிகள் தான் நமக்குத் தேவை.</p>



<p>அத்தகைய ராணுவத்தில் வந்து சேருங்கள். இது வெறுப்பை உமிழும் ராணுவம் அல்ல. இது வன்முறையை ஏற்படுத்தும் ராணுவம் அல்ல. உண்மை மற்றும் இந்தியாவின் கொள்கையைக் காப்பாற்றும் ராணுவம். இந்த போரை எதிர்கொண்டு வெல்வதற்கு, உங்களிடம் இணையதளம் எனும் ஆயுதத்தைக் கொடுத்துள்ளோம்&#8221; என்றார்.</p>



<p>இந்த பிரச்சாரத்தை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் சமூக ஊடக தலைவர் ரோஹன் குப்தா, செய்தி தொடர்பாளர் பவன் கேரா, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் நிர்வாக பொறுப்பாளர் பவன் குமார் பன்சால் ஆகியோர் தொடங்கி வைத்தனர். அப்போது, &#8221;5 லட்சம் சமூக ஊடக போராளிகளை இணைப்பதே இந்த பிரச்சாரத்தின் நோக்கம்&#8221; என்றனர்.</p>



<p>இது குறித்து குப்தா தொடர்ந்து பேசும்போது, &#8221; இந்த பிரச்சாரத்தை ஒரு மாத காலத்துக்குக் காங்கிரஸ் கட்சி நடத்தும்&#8221; என்றார். இது குறித்து கேரா கூறும்போது,&#8221; 2014 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பாஜக, சமூக ஊடகங்களில் காங்கிரஸ் ஆர்வம் காட்டாதது குறித்து விமர்சனங்கள் எழுந்தன. இன்று சமூக ஊடகங்களில் கட்சி தீவிரமாகச் செயல்படுத்துவதைப்பார்த்து, களத்தில் மட்டுமல்ல இணையத்திலும் கட்சி வலுப்பெற்றுள்ளதாகக் கூறுகிறார்கள்&#8221; என்றார்.</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/congress-launches-join-social-media-campaign-rahul-says-online-warriors-will-counter-hate/">&#8216;சமூக ஊடகத்தில் இணையுங்கள்&#8217; பிரச்சாரம் தொடக்கம் : வெறுப்பு அரசியலை எதிர்த்துப் போராட ராகுல் காந்தி அழைப்பு</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://desiyamurasu.com/news-india/congress-launches-join-social-media-campaign-rahul-says-online-warriors-will-counter-hate/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>12,232 பேரின் மனநிலைதான் 130 கோடி தேச மக்களின் மனநிலையா?: அம்பலமாகும் இந்தியா டுடேவின் காமெடி சர்வே</title>
		<link>https://desiyamurasu.com/news-india/12232-people-voted-and-that-became-mood-of-the-nation-of-130-cr-people-twitterati-mock-india-today-survey/</link>
					<comments>https://desiyamurasu.com/news-india/12232-people-voted-and-that-became-mood-of-the-nation-of-130-cr-people-twitterati-mock-india-today-survey/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Admin]]></dc:creator>
		<pubDate>Wed, 27 Jan 2021 06:42:06 +0000</pubDate>
				<category><![CDATA[தேசிய அரசியல்]]></category>
		<category><![CDATA[bjp]]></category>
		<category><![CDATA[congress]]></category>
		<category><![CDATA[PM Modi]]></category>
		<guid isPermaLink="false">https://desiyamurasu.com/?p=3996</guid>

					<description><![CDATA[<p>இந்தியா டுடே கடந்த வியாழக்கிழமை வெளியிட்டுள்ள சர்வே, சமூக வலைத்தளங்களில் கேலியும் கிண்டலுக்கும் ஆளாகியுள்ளது. &#8221;நாட்டின் மனநிலை என்று பிரதமரின் மன் கீ பாத் சர்வே முடிவுகளை மட்டும் தான் வானொலியிலும் தூர்தர்ஷனிலும் பிரதமர் அறிவிக்கவில்லை&#8221; என்று ட்விட்டரில் விமர்சித்துள்ளனர். &#8221;கொரோனாவை பிரதமர் மோடி அணுகிய விதத்தை பெரும்பாலான மக்கள் பாராட்டுவதாகவும், இன்றைக்குத் தேர்தல் வைத்தாலும் பாஜக வெற்றி உறுதி&#8221; என்று கூறி, தன் எஜமானர்களுக்கு இந்தியா டுடே சேவகம் செய்திருக்கிறது. 19 மாநிலங்களில் 97 நாடாளுமன்றத் [&#8230;]</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/12232-people-voted-and-that-became-mood-of-the-nation-of-130-cr-people-twitterati-mock-india-today-survey/">12,232 பேரின் மனநிலைதான் 130 கோடி தேச மக்களின் மனநிலையா?: அம்பலமாகும் இந்தியா டுடேவின் காமெடி சர்வே</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>இந்தியா டுடே கடந்த வியாழக்கிழமை வெளியிட்டுள்ள சர்வே, சமூக வலைத்தளங்களில் கேலியும் கிண்டலுக்கும் ஆளாகியுள்ளது.</p>



<p>&#8221;நாட்டின் மனநிலை என்று பிரதமரின் மன் கீ பாத் சர்வே முடிவுகளை மட்டும் தான் வானொலியிலும் தூர்தர்ஷனிலும் பிரதமர் அறிவிக்கவில்லை&#8221; என்று ட்விட்டரில் விமர்சித்துள்ளனர்.</p>



<p>&#8221;கொரோனாவை பிரதமர் மோடி அணுகிய விதத்தை பெரும்பாலான மக்கள் பாராட்டுவதாகவும், இன்றைக்குத் தேர்தல் வைத்தாலும் பாஜக வெற்றி உறுதி&#8221; என்று கூறி, தன் எஜமானர்களுக்கு இந்தியா டுடே சேவகம் செய்திருக்கிறது.</p>



<p>19 மாநிலங்களில் 97 நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 194 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 12,232 பேரிடம் கருத்துக் கேட்டதில் பாஜகவுக்கே ஆதரவு அதிகரித்திருப்பதாகவும் இந்தியா டுடே தெரிவித்துள்ளது. 74 சதவிகிதம் பேர் மோடியின் செயல் திறனுக்கு ஆதரவு அளித்துள்ளனர். 66 சதவிகிதம் பேர் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மீது திருப்தி அடைந்துள்ளதாக சர்வேயின் முடிவுகள் தெரிவிக்கின்றன.</p>



<p>இந்தியா டுடேவின் சர்வே முடிவுகள் வெளியிடப்பட்டதும் ட்விட்டரில் பலரும் தங்கள் கருத்தை நகைச்சுவையாக வெளியிட்டு வருகின்றனர்.</p>



<p>அவற்றில் சில…</p>



<ul class="wp-block-list"><li>நாட்டின் மனநிலை மற்றும் சர்வே எல்லாம், டிஆர்பி ரேட்டிங் போன்றது தான். தாங்கள் நினைத்ததை சர்வே முடிவுகளாக வெளியிட வேண்டும் என்பதை பாஜக விரும்புவதைச் சுயமரியாதை உள்ள பத்திரிக்கை ஆசிரியர்கள் மறுக்க முடியாது.</li><li>130 கோடி மக்களின் மனநிலையை 12,232 பேர் பிரதிபலித்துவிட்டார்களா?</li><li>வண்ணமயமான பணமே நாட்டின் மனநிலையை முடிவு செய்கின்றது.</li><li>இந்த போலி சர்வே எடுக்க மோடியும் யோகியும் எவ்வளவு பணம் கொடுத்தார்கள்?</li><li>ஊடகங்கள் அனைத்தும் 24 மணிநேரமும் விலை போனதால், செல்வாக்கைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார் மோடி.</li><li>வேலையின்மை, இனவாதம், விவசாயிகள் போராட்டம்,புலம்பெயர்ந்தோர் பிரச்சினை, சிறு, குறு தொழிற்சாலைகள் மூடல், மொத்த உள்நாட்டு உற்பத்தி, எரிபொருள் விலை, பொருளாதாரம் மற்றும் வங்கிகள் மூடல், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து, மாட்டிறைச்சி விவகாரம், முஸ்லீம் கப்ராஸ்தான் ஆகியவை தான் நாட்டின் மனநிலையாக இருக்கின்றன.</li><li>இந்தியாவின் மக்கள் தொகை: 135 கோடிகள் + ஆக உள்ளது. நாட்டின் மனநிலையை வெறும் 13 ஆயிரம் பேர் முடிவு செய்ய முடியுமா?. இந்த எண்ணிக்கையில் சர்வே எடுத்தால் ஒரு நகரின் மனநிலையைக் கூட நீங்கள் முடிவு செய்ய முடியாது. இந்தியா டுடே-வை நினைத்து வெட்கப்படுகிறேன்.</li><li>ரிபப்ளிக் தொலைக்காட்சியும், ஜீ தொலைக்காட்சியும் அரசின் ஊதுகுழலாக இருக்கின்றன. இந்த சர்வே மூலம், நாங்களும் உங்களுக்கு விசுவாசமாக இருக்கிறோம் என்று இந்தியா டுடே காட்டியிருக்கிறது.</li><li>மக்களின் மனநிலை : 2 நிமிடங்கள் அமைதியாக இருப்போம்.</li><li>மக்கள் மனநிலை : இது போன்ற சர்வேக்கு இனி வாக்குப்பதிவு இயந்திரத்தைப் பயன்படுத்தலாம்.</li><li>மக்கள் மனநிலை : இந்த வாரத்தின் சிறந்த நகைச்சுவை</li><li>இந்த சர்வேயில் அர்னாப் கோஸ்வாமியின் சாயலே தெரிகிறது.</li><li>இதுவரை இல்லாத அளவுக்குப் பெருமளவில் பெட்ரோல் விலையை ஏற்றுவதே, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தோல்விக்குச் சிறந்த உதாரணம்.</li></ul>



<p>இப்படி…இந்தியா டுடேவின் போலி சர்வேக்கு லட்சக்கணக்கானோர் ட்விட்டர் மூலம் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.</p>



<p>&#8221;12,232 பேரிடம் கருத்துக் கேட்டுவிட்டு, பிரதமர் நரேந்திர மோடியை யாரும் அசைக்க முடியாது&#8221; என்று ஒரு நகைச்சுவை சர்வேயை வெளியிட்டுள்ளது இந்தியா டுடே. இதை 130 கோடி மக்களின் மனநிலை என்று வேறு சொல்கிறது.</p>



<p>அப்படி என்றால், இந்த சர்வேக்கு எதிராக லட்சக்கணக்கானோர் ட்வீட் செய்து கொண்டிருக்கிறார்களே? இதுவும் நாட்டின் மனநிலை தானே?. இதை என்ன சொல்வது?</p>



<p>ஆயிரங்கள் பெரிதா? லட்சங்கள் பெரிதா என்பதை, தங்கள் எஜமானர்களிடம் கேட்டு இந்தியா டுடே பதில் சொல்லட்டும்.</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/12232-people-voted-and-that-became-mood-of-the-nation-of-130-cr-people-twitterati-mock-india-today-survey/">12,232 பேரின் மனநிலைதான் 130 கோடி தேச மக்களின் மனநிலையா?: அம்பலமாகும் இந்தியா டுடேவின் காமெடி சர்வே</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://desiyamurasu.com/news-india/12232-people-voted-and-that-became-mood-of-the-nation-of-130-cr-people-twitterati-mock-india-today-survey/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>தமிழ் உணர்வையும், தமிழர் கலாச்சாரத்தையும் நசுக்க நினைப்பது நாட்டுக்குச் செய்யும் கேடு : பா.ஜ.க.வுக்கு ராகுல் காந்தி எச்சரிக்கை</title>
		<link>https://desiyamurasu.com/news-tamilnadu/tamil-spirit-cannot-be-suppressed-says-rahul-gandhi-at-jallikattu-event-in-madurai/</link>
					<comments>https://desiyamurasu.com/news-tamilnadu/tamil-spirit-cannot-be-suppressed-says-rahul-gandhi-at-jallikattu-event-in-madurai/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Admin]]></dc:creator>
		<pubDate>Fri, 15 Jan 2021 11:59:43 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழக அரசியல்]]></category>
		<category><![CDATA[bjp]]></category>
		<category><![CDATA[congress]]></category>
		<category><![CDATA[Jallikattu]]></category>
		<category><![CDATA[Madurai]]></category>
		<category><![CDATA[Pongal Festival 2021]]></category>
		<category><![CDATA[rahul gandhi]]></category>
		<guid isPermaLink="false">https://desiyamurasu.com/?p=3872</guid>

					<description><![CDATA[<p>ஜல்லிக்கட்டுப் போட்டி முடிந்ததும் டெல்லி திரும்ப மதுரை விமான நிலையத்துக்கு ராகுல் காந்தி வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: ஜல்லிக்கட்டைப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே இன்று வந்தேன். அனைவருக்கும் மகிழ்ச்சியான பொங்கல் வாழ்த்துகள். ஜல்லிக்கட்டுப் போட்டியைப் பார்த்தேன். ஜல்லிக்கட்டால் மாடுகளுக்கு ஆபத்து வரும் என்று நிறையப் பேர் சொன்னார்கள். இன்று நான் நேரில் பார்க்கும் போதுதான் தெரிந்தது. எந்த ஒரு மாட்டுக்கும் காயம் ஏற்படவில்லை. மாறாக, மாடு பிடி வீரர்களுக்குத் தான் காயம் ஏற்பட்டது. [&#8230;]</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-tamilnadu/tamil-spirit-cannot-be-suppressed-says-rahul-gandhi-at-jallikattu-event-in-madurai/">தமிழ் உணர்வையும், தமிழர் கலாச்சாரத்தையும் நசுக்க நினைப்பது நாட்டுக்குச் செய்யும் கேடு : பா.ஜ.க.வுக்கு ராகுல் காந்தி எச்சரிக்கை</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>ஜல்லிக்கட்டுப் போட்டி முடிந்ததும் டெல்லி திரும்ப மதுரை விமான நிலையத்துக்கு ராகுல் காந்தி வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:</p>



<p>ஜல்லிக்கட்டைப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே இன்று வந்தேன். அனைவருக்கும் மகிழ்ச்சியான பொங்கல் வாழ்த்துகள். ஜல்லிக்கட்டுப் போட்டியைப் பார்த்தேன். ஜல்லிக்கட்டால் மாடுகளுக்கு ஆபத்து வரும் என்று நிறையப் பேர் சொன்னார்கள். இன்று நான் நேரில் பார்க்கும் போதுதான் தெரிந்தது. எந்த ஒரு மாட்டுக்கும் காயம் ஏற்படவில்லை. மாறாக, மாடு பிடி வீரர்களுக்குத் தான் காயம் ஏற்பட்டது. யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில், இன்னும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.</p>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img loading="lazy" decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/01/14rahul1.jpg" alt="" class="wp-image-3876" width="560" height="440" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/01/14rahul1.jpg 670w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/01/14rahul1-300x236.jpg 300w" sizes="auto, (max-width: 560px) 100vw, 560px" /></figure></div>



<p>நான் எதற்கு இங்கு வந்தேன் என்றால், இன்று டெல்லியில் ஆட்சியில் இருப்பவர்கள் நம் நாட்டின் கலாச்சாரங்களை அழிக்க முயன்று வருகிறார்கள். தமிழர்கள் உணர்வுகளைத் தடுக்க முடியும் என்று நம்புகிறார்கள். தமிழர்களின் தமிழ் மொழியை நசுக்கப் பார்க்கிறார்கள். அவர்களுக்கு ஒரு செய்தி சொல்லவே இங்கு வந்துள்ளேன். முதலாவது, தமிழ் உணர்வை யாராலும் தடுக்க முடியாது. இரண்டாவது, தமிழ் உணர்வைத் தடுக்க நீங்கள் முயன்றால், அது நம் நாட்டுக்கு நீங்கள் செய்யும் கேடு. தமிழ் என்பது கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் கொண்டது. அது நம் நாட்டுக்குத் தேவை.</p>



<p>இவர்களின் இது போன்ற எண்ணங்களுக்கு நான் எதிரானவன். குறிப்பிட்ட சிந்தனைகள், குறிப்பிட்ட மொழி, குறிப்பிட்ட கருத்து நம் நாட்டில் உள்ளது. ஏராளமான மொழிகளும், ஏராளமான சிந்தனைகளும் இருப்பதே நமது பலம்.</p>



<p>நான் பலமுறை தமிழகத்துக்கு வந்திருக்கிறேன். இன்னும் வருவேன். தமிழக மக்களிடம் நான் நிறைய கற்றுள்ளேன். கடந்த காலத்தில் நிறைய அவர்கள் எனக்கு கற்றுக் கொடுத்துள்ளார்கள். நாட்டை எப்படி வழி நடத்த வேண்டும் என்றும் அவர்கள் எனக்குக் காட்டியிருக்கிறார்கள். எனவே அவர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.</p>



<p>அரசாங்கம் விவசாயிகளைப் புறக்கணிக்க மட்டும் செய்யவில்லை. அவர்களை அழிக்கவும் பார்க்கிறது. இதில் வித்தியாசத்தைப் பார்க்க வேண்டும். விவசாயிகளைக் கண்டுகொண்டால் அவர்கள் மீது அக்கறை இருக்கிறது என்று அர்த்தம். அவர்களைப் புறக்கணித்தால் அழிக்க முயல்கிறார்கள் என்று அர்த்தம். விவசாயிகளை அழித்துவிட்டு அவர்களது 2 அல்லது 3 நண்பர்களுக்கு உதவ நினைக்கிறார்கள்.</p>



<p>விவசாயிகளிடம் இருப்பதை எல்லாம் பறித்து, அவர்கள் நண்பர்களிடம் கொடுக்கப் பார்க்கிறார்கள். விவசாயிகளின் நிலத்தை எடுக்கப் பார்க்கிறார்கள், விவசாயிகளின் உற்பத்தியை எடுக்கப் பார்க்கிறார்கள். விவசாயிகளை இந்த அரசு அலட்சியப்படுத்துகிறது என்பது சிறிய வார்த்தை. விவசாயிகளை அழிக்கப் பார்க்கிறார்கள் என்பது தான் சரியான வார்த்தை.</p>



<p>விவசாயிகள் நாட்டின் முதுகெலும்பு. விவசாயிகளை நசுக்கிக் கொண்டே இருந்தால், நாடு வளர்ச்சி அடையுமா? இதை எங்காவது வரலாற்றில் பார்த்திருப்போமா? எப்போது இந்திய விவசாயிகள் பலவீனப்படுகிறார்களோ, இந்தியாவும் பலவீனப்படும்.</p>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img loading="lazy" decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/01/nationwide_2021-01_f451b9ed-8897-4c2f-afd2-652e573406f8_Rahul_gandhi_Jallikattu-1024x681.jpg" alt="" class="wp-image-3879" width="557" height="370" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/01/nationwide_2021-01_f451b9ed-8897-4c2f-afd2-652e573406f8_Rahul_gandhi_Jallikattu-1024x681.jpg 1024w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/01/nationwide_2021-01_f451b9ed-8897-4c2f-afd2-652e573406f8_Rahul_gandhi_Jallikattu-300x200.jpg 300w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/01/nationwide_2021-01_f451b9ed-8897-4c2f-afd2-652e573406f8_Rahul_gandhi_Jallikattu-768x511.jpg 768w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/01/nationwide_2021-01_f451b9ed-8897-4c2f-afd2-652e573406f8_Rahul_gandhi_Jallikattu-750x499.jpg 750w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/01/nationwide_2021-01_f451b9ed-8897-4c2f-afd2-652e573406f8_Rahul_gandhi_Jallikattu.jpg 1040w" sizes="auto, (max-width: 557px) 100vw, 557px" /></figure></div>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img loading="lazy" decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/01/Rahul-Gandhi-hails-Tamil-tradition-of-‘jallikattu-in-Madurai.jpeg" alt="" class="wp-image-3878" width="556" height="347" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/01/Rahul-Gandhi-hails-Tamil-tradition-of-‘jallikattu-in-Madurai.jpeg 615w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/01/Rahul-Gandhi-hails-Tamil-tradition-of-‘jallikattu-in-Madurai-300x187.jpeg 300w" sizes="auto, (max-width: 556px) 100vw, 556px" /></figure></div>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img loading="lazy" decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/01/14rahul-gandhi.jpg" alt="" class="wp-image-3877" width="556" height="400" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/01/14rahul-gandhi.jpg 670w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/01/14rahul-gandhi-300x216.jpg 300w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/01/14rahul-gandhi-120x86.jpg 120w" sizes="auto, (max-width: 556px) 100vw, 556px" /></figure></div>



<p>கொரோனா காலத்தில் சாதாரண மக்களுக்கு நீங்கள் உதவவில்லை. நீங்கள் யாருக்கான பிரதமர்? நீங்கள் இந்திய மக்களுக்குப் பிரதமரா? அல்லது குறிப்பிட்ட 2 அல்லது 3 தொழிலதிபர்களுக்கு மட்டும் பிரதமரா?</p>



<p>கடைசியாக ஒரு கேள்வி. நம் எல்லையில் சீனா என்ன செய்து கொண்டிருக்கிறது? நம் நாட்டை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் சீனாவைப் பற்றி ஏன் இதுவரைக்கும் பிரதமர் வாய் திறக்காமல் இருக்கிறார்.</p>



<p>போராடும் விவசாயிகளை நினைத்துப் பெருமைப்படுகிறோம். நாங்கள் முழு ஆதரவைக் கொடுத்து வருகிறோம். பஞ்சாபில் யாத்திரை மேற்கொண்ட போது, இந்த பிரச்சினையை எழுப்பினேன். தொடர்ந்து போராடி வருகிறோம். நான் சொல்வதைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். 3 வேளாண் சட்டங்களையும் இந்த அரசு திரும்பப் பெற வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகும்.</p>



<p>இவ்வாறு ராகுல் காந்தி பேட்டியளித்தார்.</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-tamilnadu/tamil-spirit-cannot-be-suppressed-says-rahul-gandhi-at-jallikattu-event-in-madurai/">தமிழ் உணர்வையும், தமிழர் கலாச்சாரத்தையும் நசுக்க நினைப்பது நாட்டுக்குச் செய்யும் கேடு : பா.ஜ.க.வுக்கு ராகுல் காந்தி எச்சரிக்கை</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://desiyamurasu.com/news-tamilnadu/tamil-spirit-cannot-be-suppressed-says-rahul-gandhi-at-jallikattu-event-in-madurai/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
	</channel>
</rss>
