<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Bombay High Court Archives - தேசிய முரசு - Desiya Murasu</title>
	<atom:link href="https://desiyamurasu.com/tag/bombay-high-court/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://desiyamurasu.com/tag/bombay-high-court/</link>
	<description>DesiyaMurasu – Daily Opinions &#38; Analysis on Latest News  &#124; Tamil News</description>
	<lastBuildDate>Fri, 28 Aug 2020 08:02:24 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.1</generator>

<image>
	<url>https://desiyamurasu.com/wp-content/uploads/2020/07/cropped-FAV-copy-1-32x32.png</url>
	<title>Bombay High Court Archives - தேசிய முரசு - Desiya Murasu</title>
	<link>https://desiyamurasu.com/tag/bombay-high-court/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>விருந்தோம்பலை போற்றும் இந்தியாவில் வெளிநாட்டு முஸ்லீம்களை மோசமாக நடத்துவதா?  மும்பை உயர் நீதிமன்றம் கண்டனம்</title>
		<link>https://desiyamurasu.com/secularism/bombay-high-court-quashes-fir-against-tablighi-jamaat-members/</link>
					<comments>https://desiyamurasu.com/secularism/bombay-high-court-quashes-fir-against-tablighi-jamaat-members/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[ஆ. கோபண்ணா]]></dc:creator>
		<pubDate>Fri, 28 Aug 2020 08:02:22 +0000</pubDate>
				<category><![CDATA[மதச்சார்பின்மை]]></category>
		<category><![CDATA[Bombay High Court]]></category>
		<category><![CDATA[Tablighi Jamaat]]></category>
		<guid isPermaLink="false">https://desiyamurasu.com/?p=1910</guid>

					<description><![CDATA[<p>தப்லிக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்ற 29 வெளிநாட்டு முஸ்லீம்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக் கோரி மும்பை உயர் நீதிமனறத்தின் அவுரங்காபாத் கிளையில் &#160;மனு தாக்கல் செய்தனர்.தாக்கல் செய்யப்பட்டது. &#160;மனு மீதான விசாரணை நீதிபதிகள் டிவி நளவாடே மற்றும் எம்ஜி ஷெவ்லிகர் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்து முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்து தீர்ப்பளித்த நீதிபதிகள், கொரோனா பரவலுக்கு வெளிநாட்டு முஸ்லீம்கள் &#160;பலிகடா ஆக்கப்பட்டுள்ளதாக [&#8230;]</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/secularism/bombay-high-court-quashes-fir-against-tablighi-jamaat-members/">விருந்தோம்பலை போற்றும் இந்தியாவில் வெளிநாட்டு முஸ்லீம்களை மோசமாக நடத்துவதா?  மும்பை உயர் நீதிமன்றம் கண்டனம்</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>தப்லிக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்ற 29 வெளிநாட்டு முஸ்லீம்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக் கோரி மும்பை உயர் நீதிமனறத்தின் அவுரங்காபாத் கிளையில் &nbsp;மனு தாக்கல் செய்தனர்.தாக்கல் செய்யப்பட்டது. &nbsp;மனு மீதான விசாரணை நீதிபதிகள் டிவி நளவாடே மற்றும் எம்ஜி ஷெவ்லிகர் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.<br><br>வழக்கை விசாரித்து முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்து தீர்ப்பளித்த நீதிபதிகள், கொரோனா பரவலுக்கு வெளிநாட்டு முஸ்லீம்கள் &nbsp;பலிகடா ஆக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். மேலும், இந்த விசயத்தில் இயந்திரத்தனமாகவும் அரசியல் நிர்பந்தத்துடனும் மகாராஷ்ட்ர மாநில அரசு செயல்பட்டுள்ளதாகவும் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.<br><br>டெல்லி நிஜாமுதீனில் நடந்த தப்லிக் ஜமாத் கூட்டத்தில் பங்கேற்ற 29 பேர் மீது சுற்றுலா விசா நிபந்தனைகளை மீறியதாக வெளிநாட்டுச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டம், நோய் தொற்று தடுப்புச் சட்டம், பேரழிவு மேலாண்மை சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.<br><br>இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், மாநாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த வெளிநாட்டு முஸ்லீம்களுக்கு எதிராக பெரிய அளவில் பிரச்சாரம் செய்யப்பட்டுள்ளது என்றும், &nbsp;உலக அளவில் &nbsp;கொரோனா பரவல் இருக்கும்போது, வெளிநாட்டு முஸ்லீம்களை மகாராஷ்ட்ரா அரசு பலிகடா ஆக்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.<br><br>கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக, ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் தப்லிக் ஜமாத் மாநாட்டின் மத நடவடிக்கைகளில் அவர்கள் கலந்து கொண்டு வருகின்றனர். அவர்களுக்கு எதிரான பிரச்சாரம் தேவையற்றது என்று கூறியுள்ள நீதிபதிகள், இந்தியாவில் கொரோனா தொற்றின் சமீபத்திய எண்ணிக்கையைப் பார்க்கும்போது, வெளிநாட்டு முஸ்லீம்கள் மீது இதுபோன்ற நடவடிக்கைகள் எடுத்திருக்கக் கூடாது.<br><br>இதுபோன்ற தவறான நடவடிக்கைகளால் ஏற்பட்டுள்ள கெட்ட பெயரைப் போக்க நேர்மறையான நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ள நீதிபதிகள், தப்லிக் ஜமாத்தின் சீர்திருத்த இயக்கத்தால் கவரப்பட்டு உலகம் முழுவதும் இருந்து &nbsp;முஸ்லீம்கள் வருவதாகவும் தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளனர்.<br><br>வெளிநாட்டு முஸ்லீம்கள் இந்தியாவின் பல மாநிலங்களில் உள்ள மசூதிகளுக்குச் செல்ல எந்த தடையும் இல்லை. இவ்வாறு செல்ல நிரந்தரமாக அரசு தடை விதித்திருப்பதாக எந்த ஆவணத்திலும் இல்லை. பொது முடக்கம் அறிவிக்கப்படுவதற்கு முந்தைய நாள் வரை, தப்லிக் ஜமாத்தின் மாநாட்டு நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டுதான் இருந்தன என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.<br><br>விருந்தோம்பலை மாபெரும் கலாச்சாரமாகவும் பண்பாடாகவும் இந்திய மக்கள் பின்பற்றி வரும் நிலையில், இத்தகைய நடவடிக்கை ஆச்சரியமளிப்பதாக கூறியுள்ள நீதிபதிகள், கொரோனா பரவிய போது, நமது வெளிநாட்டு விருந்தினர்கள் மீது சகிப்புத்தன்மையையும், உணர்வையும் நாம் வெளிப்படுத்தியிருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.<br><br>அவர்களுக்கு உதவி செய்வதற்குப் பதிலாக, பயண ஆவணங்களில் விதிமீறியதாகவும், கொரோனா தொற்றை &nbsp; பரப்பியதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி, அவர்களை சிறையில் அடைத்துள்ளோம் என்றும் நீதிபதிகள் தங்கள் கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்.<br><br>வேறு மதத்தினரையோ அல்லது வேறு நாட்டவரையோ நடத்தும் விதத்தில் அரசு வேறுபாட்டைக் காண்பிக்கக் கூடாது என்று கூறியுள்ள நீதிபதிகள், வெளிநாட்டு முஸ்லீம்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாக, மசூதிகளின் நிர்வாகிகள் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த 6 முஸ்லீம்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளதையும் தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளனர்.<br><br>சொந்த நாடுகளுக்கு திரும்ப விமான நிலையங்களுக்கு சென்றவர்களை, கொரோனா சோதனை அறிக்கை இன்றி அனுமதிக்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டதால் தான், அவர்கள் பல மாநிலங்களில் உள்ள மசூதிகளுக்கு சென்றுள்ளனர். பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதும் விடுதிகள் மூடப்பட்டதால் அவர்கள் மசூதிகளில் தங்க வைக்கப்பட்டனர் என்று தெரிவித்த நீதிபதிகள், வெளிநாட்டு முஸ்லீம்கள் இந்தியாவில் உள்ள மசூதிகளுக்கு செல்லக் கூடாது என்று ஏதும் தடை இருக்கிறதா? என அரசு தரப்பைப் பார்த்து கேள்வி எழுப்பினர்.<br><br>சில கருத்துகளில் ஒரு நீதிபதி மாறுபட்டிருந்தாலும், 29 வெளிநாட்டவர்கள் மீதான வழக்கை நீதிபதிகள் இணைந்தே ரத்து செய்து தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/secularism/bombay-high-court-quashes-fir-against-tablighi-jamaat-members/">விருந்தோம்பலை போற்றும் இந்தியாவில் வெளிநாட்டு முஸ்லீம்களை மோசமாக நடத்துவதா?  மும்பை உயர் நீதிமன்றம் கண்டனம்</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://desiyamurasu.com/secularism/bombay-high-court-quashes-fir-against-tablighi-jamaat-members/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
	</channel>
</rss>
