<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Agriculture Archives - தேசிய முரசு - Desiya Murasu</title>
	<atom:link href="https://desiyamurasu.com/tag/agriculture/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://desiyamurasu.com/tag/agriculture/</link>
	<description>DesiyaMurasu – Daily Opinions &#38; Analysis on Latest News  &#124; Tamil News</description>
	<lastBuildDate>Mon, 12 Apr 2021 11:54:04 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://desiyamurasu.com/wp-content/uploads/2020/07/cropped-FAV-copy-1-32x32.png</url>
	<title>Agriculture Archives - தேசிய முரசு - Desiya Murasu</title>
	<link>https://desiyamurasu.com/tag/agriculture/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>புதிய விவசாய சட்டங்கள்: பலனை அறுவடை செய்யப் போகும் அதானி-அம்பானி</title>
		<link>https://desiyamurasu.com/news-india/how-the-adani-group-is-poised-to-control-the-agricultural-market-following-the-farm-laws/</link>
					<comments>https://desiyamurasu.com/news-india/how-the-adani-group-is-poised-to-control-the-agricultural-market-following-the-farm-laws/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Admin]]></dc:creator>
		<pubDate>Mon, 12 Apr 2021 11:53:14 +0000</pubDate>
				<category><![CDATA[தேசிய அரசியல்]]></category>
		<category><![CDATA[Adani Group]]></category>
		<category><![CDATA[Agriculture]]></category>
		<category><![CDATA[Farm laws 2020]]></category>
		<guid isPermaLink="false">https://desiyamurasu.com/?p=4305</guid>

					<description><![CDATA[<p>இந்திய விவசாய பொருளாதாரத்தை பெருவாரியான தனியார் துறையினருக்கு தாரை வார்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள மத்திய அரசு, &#8216;மண்டி, மார்க்கெட், மோடி…&#8217; என்ற தாரக மந்திரத்தோடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த சட்டங்கள் கொண்டு வரப்படுவதற்கு முன்பே, விவசாய உற்பத்திப் பொருட்களைச் சேமித்து வைப்பதற்கான கட்டமைப்பை ஏற்கெனவே அதானி குழுமம் செய்துவிட்டது. விவசாயப் பொருட்களை தனியார் கொள்முதல் செய்வது தான் விவசாயப் பொருளாதாரத்தின் அர்த்தமா? என்பது குறித்த விவாதங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. இந்திய உணவுக்கழகம் நேரடியாக கொள்முதல் செய்வது போல், தனியார் [&#8230;]</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/how-the-adani-group-is-poised-to-control-the-agricultural-market-following-the-farm-laws/">புதிய விவசாய சட்டங்கள்: பலனை அறுவடை செய்யப் போகும் அதானி-அம்பானி</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>இந்திய விவசாய பொருளாதாரத்தை பெருவாரியான தனியார் துறையினருக்கு தாரை வார்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள மத்திய அரசு, &#8216;மண்டி, மார்க்கெட், மோடி…&#8217; என்ற தாரக மந்திரத்தோடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.</p>



<p>இந்த சட்டங்கள் கொண்டு வரப்படுவதற்கு முன்பே, விவசாய உற்பத்திப் பொருட்களைச் சேமித்து வைப்பதற்கான கட்டமைப்பை ஏற்கெனவே அதானி குழுமம் செய்துவிட்டது. விவசாயப் பொருட்களை தனியார் கொள்முதல் செய்வது தான் விவசாயப் பொருளாதாரத்தின் அர்த்தமா? என்பது குறித்த விவாதங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. இந்திய உணவுக்கழகம் நேரடியாக கொள்முதல் செய்வது போல், தனியார் நிறுவனங்களும் நேரடி கொள்முதல் செய்ய முடியும் என்பது,சில ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டது. விவசாயத் துறையில் நுழையும் தனியார் நிறுவனங்கள், நாடு முழுவதும் முதலீடு செய்வார்கள் என்று என்பது மத்திய அரசின் வாதம். இந்த ஒற்றைக் காரணத்தைச் சொல்லியே தனியாரை மத்திய அரசு ஊக்குவிக்கிறது.</p>



<p>அதானியும், அம்பானியும் விவசாயப் பொருட்களை கொள்முதல் செய்தால் தங்களுக்குப் பாதிப்பு ஏற்படும் என்று விவசாயிகள் வெளிப்படையாக அச்சப்படுவதற்கு இதுவே காரணம். விவசாயிகள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியபோது, 3 விவசாயச் சட்டங்களுக்கும் தங்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று அதானி மற்றும் அம்பானி குழுமங்கள் தெரிவித்தன. விவசாயிகளிடமிருந்து தாங்கள் உணவு தானியங்களை வாங்கப் போவதில்லை என்றும், உணவு தானியங்களுக்கு விலை நிர்ணயம் செய்வதற்கும் தங்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்றும் அவர்கள் விளக்கம் அளித்தனர்.</p>



<p>புதிய விவசாயச் சட்டங்களால் அதானி மற்றும் அம்பானி குழுமங்களுக்குத்தான் பலன் ஏற்படும், விவசாயிகளுக்கு எந்த பலனும் இல்லை என்ற வாதத்துக்கு அவர்களிடம் பதில் இல்லை. புதிய விவசாயச் சட்டம் அமல்படுத்தப்படும்போது, தானாக அதானி குழுமத்துக்கு பலன் கிடைக்கும் என்பது தான் உண்மை. இந்திய உணவுக்கழகம் கையாள முடியாத சூழலில், உணவு தானியங்களை அதானி குழுமம் தற்போது கையாண்டு வருகிறது. இந்திய உணவுக்கழகம் மூலம் டெண்டர் விடப்பட்டு, நாடு முழுவதும் தனியார் சேமிப்புக் கிடங்கு தொடங்கவும், சரக்குகளை கொண்டு செல்ல தனியார் ரயில் போக்குவரத்துக்கும் வழி ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது.</p>



<p>உணவு தானியங்களை கொண்டு செல்வதற்கும், சேமிக்கவும் அதானி குழுமத்துக்கு ஏற்கெனவே கட்டமைப்புகள் உள்ளன. கொரோனா பரவல் உச்சத்தில் இருந்தபோது, அதானி குழுமம் வெளியிட்ட பத்திரிக்கை செய்திக் குறிப்பில், &#8221;அதானி துறைமுகம் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டல லிமிடெட்டின் ஒரு பகுதியான &#8216;அதானி அக்ரி லாஜிஸ்டிக் லிமிட்டெட்&#8217;, பிரதமரின் ஏழைகளுக்கான அன்னதான திட்டத்தின் கீழ், 30 ஆயிரம் டன் உணவு தானியங்களை எங்களுக்குச் சொந்தமான 7 சரக்கு ரயில்கள் மூலம் அனுப்பி வைத்தோம். வட இந்தியாவில் உள்ள உற்பத்தி மையங்களிலிருந்து தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்ட்டிரா மற்றும் மேற்கு வங்காளத்துக்கு இந்த உணவு தானியங்கள் அனுப்பி வைக்கப்பட்டன&#8221; என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.</p>



<p>அதானியின் இந்த செய்திக் குறிப்பின்படி, அதானி துறைமுகத்தின் ஒரு பகுதி தான் &#8216;அக்ரிகல்சர் லாஜிஸ்டிக் கம்பெனி&#8217;. சேமிப்புக் கிடங்கிலிருந்து உணவு தானியங்களை எதிர்காலத்தில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதே இவர்கள் நோக்கம் என்பது இதன்மூலம் தெளிவாகத் தெரிகிறது. விவசாயப் பொருட்களுக்கான விலையை அக்ரிகல்சர் லாஜிஸ்டிக் கம்பெனி நிர்ணயிப்பதில்லை. அதானி குழுமத்தின் மற்றொரு நிறுவனம் தான் விலை நிர்ணயம் போன்ற விவசாய வணிகத்தில் ஈடுபடுகிறது.</p>



<p>விவசாய வணிகத்தில் ஆசியாவின் நம்பர் 1 ஆக திகழும், சிங்கப்பூரைச் சேர்ந்த &#8216;வில்மார் இன்டெர்னேஷனல் லிமிடெட்&#8217; உடன் இணைந்து கடந்த 1999 ஆம் ஆண்டு &#8216;அதானி வில்மார்&#8217; என்ற நிறுவனம் தொடங்கப்பட்டது. தெற்காசியாவில் மழைக்காடுகளை பாமாயில் வணிகத்துக்காக அழித்ததாக இந்த நிறுவனம் மீது குற்றம் சாட்டப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக, பாமாயில் வணிகத்திலிருந்து விவசாய விளைபொருட்கள் தொடர்பான வணிகத்துக்கு &#8216;அதானி வில்மார்&#8217; மாறியிருக்கிறது.</p>



<p>கடந்த 2020 ஆம் ஆண்டு இது குறித்து அதானி வில்மார் நிறுவன துணை தலைமை செயல் அதிகாரி அங்க்ஷு மாலிக் கூறும்போது, &#8221; 7 ஆண்டுகளுக்குள் பெரும் உணவு நிறுவனமாக மாற நாங்கள் விரும்புகிறோம். அதற்காக, இந்தியாவின் முக்கிய 3 தானியங்களான அரிசி, பருப்பு மற்றும் சர்க்கரை ஆகியவற்றை குறிவைத்துள்ளோம். இந்த 3 உணவு தானிய வணிகத்தில் நாங்கள் முதல் இடத்துக்கு வந்தால், உணவுத் துறையில் நாங்கள் தான் ராஜா&#8221; என்றார்.</p>



<p>உலகின் அதிக லாபகரமான உணவு தானிய சந்தையான சீனாவுக்கு, அரிசியை ஏற்றுமதி செய்ய இந்த குழுமத்துக்கு ஏற்கெனவே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சம்மான் லால் சேத்தியா மற்றும் அதானி வில்மார் உள்ளிட்ட 5 அரிசி ஏற்றுமதியாளர்களை சீனா அனுமதித்துள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு சீனாவுக்கு மோடி பயணம் மேற்கொண்டபோது, சீனாவுக்கு அரிசியை ஏற்றுமதி செய்வதற்கான அனுமதி அளிக்கப்பட்டது. கடந்த 2020 ஆம் ஆண்டு, ஆயிரக்கணக்கான டன் அரிசியை மட்டுமே இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்ய சீனா அனுமதி அளித்தது. இன்றைக்கு இந்தியாவிலிருந்து 40 லட்சம் டன் அரிசி சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்தியாவிலிருந்து அரிசியை இறக்குமதி செய்யும் நாடுகளில், சீனாவே தற்போது முதலிடத்தில் உள்ளது. தெற்காசியாவில் உள்ள பாரம்பரிய வினியோகஸ்தர்களையும் குறிவைக்க சீனா தொடங்கிவிட்டது.</p>



<p>கடந்த 2014 ஆம் ஆண்டு தான் முதல்முறையாக அரிசி சந்தையில் &#8216;அதானி வில்மார்&#8217; நிறுவனம் காலடி வைத்தது. அப்போதிலிருந்து பாசுமதி அரிசியை இந்த நிறுவனம் நாடு முழுவதும் விற்பனை செய்து வருகிறது. பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் அதிக அளவில் பாசுமதி அரிசி விளைவிக்கப்படுகிறது. இங்கிருந்து பாசுமதி அரிசியை அதானி வில்மார் நிறுவனம் வாங்கியது. புதிய விவசாயச் சட்டத்தை சோதித்துப் பார்க்கும் வகையில் பாசுமதி கொள்முதலை அதானி வில்மார் நிறுவனம் செய்தது. விவசாய வர்த்தகத்தை தனியார் கைகளில் ஒப்படைப்பதற்கான முயற்சி இங்கிருந்து தான் தொடங்கியது.</p>



<p>பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் தண்ணீர் விநியோகமும், விவசாய செலவும் முக்கிய பிரச்சினையாக உள்ளது. மற்ற பயிர்களைப் போல், பாசுமதி பயிரிட அதிக தண்ணீர் செலவாகாது. எனினும், சரியான விலை கிடைக்காததால், பாசுமதியை பயிரிட இரு மாநில விவசாயிகளும் விரும்பவில்லை. இது குறித்து பதாங்கோட் மண்டல விவசாயத்துறை அதிகாரி அம்ரிக் சிங் கூறும்போது, &#8221; நெற்பயிரைப் போல் உறுதியான விலை விலை கிடைத்தால், பாசுமதியை பயிரிட பஞ்சாப் விவசாயிகள் தயாராக இருக்கின்றனர்&#8221; என்றார்.</p>



<p>அவர்களது கோரிக்கையிலும் நியாயம் இருக்கவே செய்கிறது. கடந்த ஆண்டு ஒரு குவிண்டால் பாசுமதி அரிசியை ரூ.2,700 க்கு விற்றனர். ஆனால், இந்த ஆண்டு ஒரு குவிண்டால் பாசுமதி அரிசியை ரூ. 600 க்கு குறைவாக விற்குமாறு விவசாயிகள் கட்டாயப்படுத்தப்படுகின்றனர். ஒவ்வொரு காலாண்டுக்கும் 15 லட்சம் டன் பாசுமதி அரிசி ஈரானுக்கு அனுப்பப்பட்டு வந்தது. அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் காரணமாக, முற்றிலும் நிறுத்தப்பட்டதால் விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக கொள்முதல் செய்பவர்கள் காரணம் கூறுகின்றனர். ஆனால், இந்தியாவின் நடுத்தரக் குடும்பத்தினரோ, கடந்த ஆண்டு பாசுமதி அரிசியை என்ன விலை கொடுத்து வாங்கினார்களோ, அதே விலையைத் தான் இப்போதும் கொடுக்கிறார்கள். கொள்முதல் விலை குறைந்தால், அவர்கள் வாங்கும் விலையும் குறைந்திருக்க வேண்டுமே என்ற கேள்விக்கு பதில் இல்லை. கொள்முதல் விலையை குறைப்பதற்கு தனியார் விவசாய நிறுவனங்கள் தான் காரணம் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை.</p>



<p>பஞ்சாப், ஹரியானாவைத் தொடர்ந்து பீகாரிலும் இந்த பிரச்சினை தொடங்கியுள்ளது. மண்டி முறை அங்கு ரத்து செய்யப்பட்டதால், பாசுமதியின் வருடாந்திர விலையும் வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சியால் பாசுமதி அரிசியை பெரிய அளவில் கொள்முதல் செய்யும் பெரும் தனியார் நிறுவனங்கள் தான் பயனடைகிறார்களே தவிர, விவசாயிகளுக்கோ அல்லது நுகர்வோருக்கோ எந்த பலனும் இல்லை என்பதையே இந்த நேரடி அனுபவங்கள் நமக்கு உணர்த்துகின்றன. 3 விவசாயச் சட்டங்களை முழுமையாக அமல்படுத்தும் முன்பே இந்த நிலை என்றால், செயல்பாட்டுக்கு வந்த பின் என்ன ஆகும்? என்பதை எளிதாக யூகிக்கலாம்.</p>



<p>&#8221;தனியார் நிறுவனங்களை விவசாய வணிகத்தில் ஈடுபடுத்தினால் பாதிக்கப்படுவோம்…&#8221; என்ற விவசாயிகள் அச்சத்தில் நூறு சதவிகிதம் நியாயம் இருக்கிறது.</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/how-the-adani-group-is-poised-to-control-the-agricultural-market-following-the-farm-laws/">புதிய விவசாய சட்டங்கள்: பலனை அறுவடை செய்யப் போகும் அதானி-அம்பானி</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://desiyamurasu.com/news-india/how-the-adani-group-is-poised-to-control-the-agricultural-market-following-the-farm-laws/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>விவசாய சட்டங்களை திரும்பப் பெற பிரதமர் முடிவு செய்தபோது அம்பானியும் அதானியும் தடுத்தனர் : பாரதிய கிஸான் சங்க தலைவர் அதிர்ச்சி தகவல்</title>
		<link>https://desiyamurasu.com/news-india/joginder-singh-ugrahan-modi-ambani-adani-farm-laws-tomar/</link>
					<comments>https://desiyamurasu.com/news-india/joginder-singh-ugrahan-modi-ambani-adani-farm-laws-tomar/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Admin]]></dc:creator>
		<pubDate>Tue, 16 Mar 2021 05:10:07 +0000</pubDate>
				<category><![CDATA[தேசிய அரசியல்]]></category>
		<category><![CDATA[Agriculture]]></category>
		<category><![CDATA[Government]]></category>
		<category><![CDATA[Politics]]></category>
		<category><![CDATA[Rights]]></category>
		<guid isPermaLink="false">https://desiyamurasu.com/?p=4210</guid>

					<description><![CDATA[<p>3 விவசாயச் சட்டங்களைத் திரும்பப் பெற பிரதமர் மோடி முடிவு செய்தபோதும், அம்பானியும் அதானியும் கொடுக்கும் அழுத்தத்தால் அதனைச் செயல்படுத்த முடியவில்லை என்று பாரதிய கிஸான் சங்கத்தின் தலைவர் ஜோகீந்தர் சிங் உக்ராஹன் புதிய தகவலை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். பஞ்சாபில் ஜலந்தர் மாவட்டத்தில் நடந்த விவசாயிகள் ஒற்றுமை பேரணியில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது: நான் சொல்வதைக் கேட்டு நீங்கள் வியப்படைவீர்கள். மத்திய விவசாய அமைச்சர் டோமர் என்னிடம் தெரிவித்த விஷயத்தைக் கூறுகிறேன். 3 விவசாயச் [&#8230;]</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/joginder-singh-ugrahan-modi-ambani-adani-farm-laws-tomar/">விவசாய சட்டங்களை திரும்பப் பெற பிரதமர் முடிவு செய்தபோது அம்பானியும் அதானியும் தடுத்தனர் : பாரதிய கிஸான் சங்க தலைவர் அதிர்ச்சி தகவல்</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>3 விவசாயச் சட்டங்களைத் திரும்பப் பெற பிரதமர் மோடி முடிவு செய்தபோதும், அம்பானியும் அதானியும் கொடுக்கும் அழுத்தத்தால் அதனைச் செயல்படுத்த முடியவில்லை என்று பாரதிய கிஸான் சங்கத்தின் தலைவர் ஜோகீந்தர் சிங் உக்ராஹன் புதிய தகவலை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.</p>



<p>பஞ்சாபில் ஜலந்தர் மாவட்டத்தில் நடந்த விவசாயிகள் ஒற்றுமை பேரணியில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:</p>



<p>நான் சொல்வதைக் கேட்டு நீங்கள் வியப்படைவீர்கள். மத்திய விவசாய அமைச்சர் டோமர் என்னிடம் தெரிவித்த விஷயத்தைக் கூறுகிறேன். 3 விவசாயச் சட்டங்களைத் திரும்பப் பெற பிரதமர் மோடி தயாராக இருந்ததாகவும், மறுநாளே அம்பானியும் அதானியும் பிரதமரும் அழுத்தம் கொடுத்துத் திரும்பப் பெறவிடாமல் செய்துவிட்டதாகவும் தெரிவித்தார்.</p>



<p>நவீன இயந்திரங்களைப் புகுத்தியதால் விவசாயத் தொழிலாளர்கள் தங்கள் வேலைவாய்ப்பை இழந்தனர். இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட கடனால் தற்கொலை செய்து கொண்டார்கள். கடந்த 2014 ஆம் ஆண்டில் பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் 2 லட்சம் விவசாயிகள், விவசாயத்தை விட்டு வெளியேறி விட்டார்கள். இந்நிலையில், புதிய 3 விவசாயச் சட்டங்களைச் செயல்படுத்தினால், நினைத்துக்கூடப் பார்க்க முடியாத கஷ்டங்களை விவசாயிகள் அனுபவிக்க நேரிடும்.</p>



<p>டெல்லியில் நடந்த விவசாய போராட்டம் மற்றும் மனித உரிமை மீறல் குறித்த விவாதத்தை இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் விவாதித்தது எங்களுக்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றி. இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளில் இந்திய தூதரகங்களுக்கு முன்பு விவசாயிகளை ஆதரித்துப் போராட்டம் நடத்தியுள்ளனர். இது எங்களுக்குப் பலமாக இருக்கிறது.</p>



<p>தேசிய பிரச்சினையாகத் தொடங்கிய விவசாயிகள் பிரச்சினை, தற்போது உலகப் பிரச்சினையாக மாறியிருக்கிறது. மக்களின் ஏகோபித்த ஆதரவை விவசாயிகள் போராட்டம் பெற்றுள்ளது&#8221;என்றார்.</p>



<p>சம்யுக் கிஸான் மோர்ச்சா தலைவர் ருல்டு சிங் மான்ஸா கூறும்போது, &#8221; ஏற்கெனவே 2 உலகப் போரைப் பார்த்திருக்கிறோம். இப்போது நடக்கும் போர் வேறுபட்டது. இங்கிலாந்து நாடாளுமன்றமோ, அல்லது வேறு உலகத் தலைவர்களோ நம் ஆதரிப்பது பெரிய வெற்றி அல்ல. மக்கள் ஆதரவைத் திரட்டுவதே உண்மையான வெற்றி. உலக நாட்டுத் தலைவர்கள் நம்மை ஆதரிக்கிறார்கள். ஆனால், தங்கள் நாட்டு மக்களை வீதிக்கு வந்து போராட அந்த தலைவர்கள் அனுமதிக்கவில்லை. உண்மையான போராட்டமே ஜனவரி 26 ஆம் தேதிக்குப் பிறகு தான் தொடங்கியது&#8221; என்றார்.</p>



<p>தொழிலாளர் நலச் செயற்பாட்டாளர் நோடீஸ் கவுர் கூறும்போது, &#8221; மோடி அரசின் தொழிலாளர் சட்ட மசோதாவை அறிமுகப்படுத்தியபோது எதிர்த்ததால் என்னைக் கைது செய்தனர். கொரோனா காலத்தில் ஏராளமான தொழிலாளர்கள் வேலை இழந்தனர். நிலுவையில் உள்ள சம்பளத்தையும் தொழிலாளர்களுக்குத் தர மறுத்தனர். விவசாயிகள் போராட்டத்திலும் நான் தொடர்ந்து பங்கேற்று வருகிறேன். அதேசமயம், தொழிலாளர் சட்டத்தை எதிர்த்தும் தொடர்ந்து போராடுவேன்&#8221; என்றார்.</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/joginder-singh-ugrahan-modi-ambani-adani-farm-laws-tomar/">விவசாய சட்டங்களை திரும்பப் பெற பிரதமர் முடிவு செய்தபோது அம்பானியும் அதானியும் தடுத்தனர் : பாரதிய கிஸான் சங்க தலைவர் அதிர்ச்சி தகவல்</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://desiyamurasu.com/news-india/joginder-singh-ugrahan-modi-ambani-adani-farm-laws-tomar/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>விவசாயச் சட்டங்கள் குறித்த பிரச்சாரத்துக்கு மட்டும் ரூ. 8 கோடி செலவு : மத்திய அரசு தகவல்</title>
		<link>https://desiyamurasu.com/news-india/centre-rs-8-crore-publicity-campaign-farm-laws-agri-minister-tomar/</link>
					<comments>https://desiyamurasu.com/news-india/centre-rs-8-crore-publicity-campaign-farm-laws-agri-minister-tomar/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Admin]]></dc:creator>
		<pubDate>Mon, 15 Feb 2021 11:12:53 +0000</pubDate>
				<category><![CDATA[தேசிய அரசியல்]]></category>
		<category><![CDATA[Agriculture]]></category>
		<category><![CDATA[Government]]></category>
		<guid isPermaLink="false">https://desiyamurasu.com/?p=4122</guid>

					<description><![CDATA[<p>விவசாயச் சட்டங்கள் குறித்த பிரச்சாரத்துக்காக இதுவரை ரூ.8 கோடி செலவு செய்துள்ளதாக மத்திய விவாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் டோமர் தெரிவித்துள்ளார். பயிர்க் கடன்களைக் கட்ட முடியாமல் நாடு முழுவதும் விவசாயிகள் தற்கொலை எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. விவசாயம் பொய்த்துப் போவதால், கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் இத்தகைய பரிதாப முடிவை விவசாயிகள் எடுக்கின்றனர். விவசாயிகளின் தற்கொலையைத் தடுக்க மத்திய அரசு இதுவரை நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. இதனைத் தொடர்ந்து, விவசாயச் சட்டங்களைக் கொண்டு வந்து பெரும் [&#8230;]</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/centre-rs-8-crore-publicity-campaign-farm-laws-agri-minister-tomar/">விவசாயச் சட்டங்கள் குறித்த பிரச்சாரத்துக்கு மட்டும் ரூ. 8 கோடி செலவு : மத்திய அரசு தகவல்</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>விவசாயச் சட்டங்கள் குறித்த பிரச்சாரத்துக்காக இதுவரை ரூ.8 கோடி செலவு செய்துள்ளதாக மத்திய விவாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் டோமர் தெரிவித்துள்ளார்.</p>



<p>பயிர்க் கடன்களைக் கட்ட முடியாமல் நாடு முழுவதும் விவசாயிகள் தற்கொலை எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. விவசாயம் பொய்த்துப் போவதால், கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் இத்தகைய பரிதாப முடிவை விவசாயிகள் எடுக்கின்றனர்.</p>



<p>விவசாயிகளின் தற்கொலையைத் தடுக்க மத்திய அரசு இதுவரை நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.</p>



<p>இதனைத் தொடர்ந்து, விவசாயச் சட்டங்களைக் கொண்டு வந்து பெரும் தொழிலதிபர்களுக்குச் சாதகமாக நடந்து கொள்ளும் மத்திய அரசைக் கண்டித்து 3 மாதங்களுக்கு மேலாக கடும் குளிரிலும் டெல்லியில் விவசாயிகள் போராடி வருகின்றனர். அவர்களது போராட்டத்தை நசுக்குவதிலேயே மத்திய அரசு குறியாக இருக்கிறதேயொழிய, அவர்களது கோரிக்கையை செவிமடுக்கத் தயாராக இருக்கவில்லை.</p>



<p>இந்த சூழ்நிலையில் தான், விவசாயச் சட்டங்கள் குறித்த பிரச்சாரத்தை முன்னெடுக்க இதுவரை ரூ.8 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் நரேந்திர சிங் டோமர் தெரிவித்துள்ளார்.</p>



<p>காங்கிரஸ் எம்பி சையது ஹுசைன் எழுத்துப்பூர்வமாக எழுப்பிய கேள்வியில், &#8221; விவசாயச் சட்டங்களைக் கொண்டுவந்த பின், 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 2021 ஜனவரி மாதம் வரை இது குறித்த பிரச்சாரத்துக்கு எவ்வளவு செலவானது? என்று கேட்டிருந்தார்.</p>



<p>இதற்குப் பதில் அளித்த மத்திய அமைச்சர் நரேந்திர சிங் டோமர், &#8221; விவசாயச் சட்டங்கள் குறித்த கட்டுக்கதைகளை முறியடிக்கவும், உண்மை நிலவரத்தைத் தெரிவிக்கவும் இந்தி, ஆங்கிலம் மற்றும் பிராந்திய மொழி நாளிதழ்களில் விவசாயிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இத்தகைய விளம்பரங்கள் வெளியிடப்பட்டன. இதுதவிர, 3 விவசாயச் சட்டங்களையும் மக்கள் மத்தியில் கொண்டு செல்ல, 2 குறும்படங்கள் எடுக்கப்பட்டு காட்சி ஊடகங்களில் விளம்பரப்படுத்தப்பட்டது. இதற்கு விவசாய, கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நலத்துறையிலிருந்து ரூ. 67 லட்சத்து 99 ஆயிரத்து 750 செலவு செய்யப்பட்டது. பத்திரிக்கைகளுக்கான விளம்பரத்தை உருவாக்குவதற்காக மட்டும் ரூ. 1 லட்சத்து 50 ஆயிரத்து 568 செலவானது. இதோடு சேர்த்து. மொத்தம் ரூ.8 கோடி அளவுக்கு விளம்பரங்களுக்காகச் செலவு செய்யப்பட்டது&#8221; என்றார்.</p>



<p>இந்த விளம்பரச் செலவை ஈடுகட்ட அனைத்து அரசுத் துறைகள், ஏஜென்ஸிகள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள இந்தியத் தூதரகத்தை நாடப்பட்டதா? என்று காங்கிரஸ் எம்பி சையது ஹுசைன் எழுப்பிய மற்றொரு கேள்விக்குப் பதில் அளித்த அமைச்சர் டோமர், &#8221; மற்ற துறைகள் ஏதும் அந்த விளம்பரச் செலவைச் செய்யவில்லை&#8221; என்று பதில் அளித்தார். எனினும், அவை தங்கள் சமூக வலைத்தளங்களில் விவசாயச் சட்டங்களின் பயன் குறித்த தகவல்களை வெளியிட்டதாக மேலும் குறிப்பிட்டார்.</p>



<p>இதனையடுத்து, ஆம் ஆத்மி கட்சி எம்பி சஞ்சய் சிங் மற்றும் காங்கிரஸ் எம்பி கேசி. வேணுகோபால் எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதில் அளித்த அமைச்சர் டோமர், &#8221; கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் முதல் 2021 ஆம் ஆண்டு ஜனவரி வரை, விவசாயச் சட்டங்களை எதிர்த்துப் போராடியபோது எத்தனை விவசாயிகள் இறந்தார்கள் என்பது குறித்தோ, எத்தனை விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டார்கள் என்பது குறித்தோ மத்திய அரசிடம் ஆவணங்கள் ஏதும் இல்லை&#8221; என்று பதில் அளித்தார். அமைச்சர் மேலும் கூறும்போது, &#8221; இது குறித்து எந்த தகவலும் இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாகவும், போராட்டத்தின் போது 2 விவசாயிகள் இறந்ததாகவும், ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் டெல்லி காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். போராட்டத்தின் போது கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியதில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை &#8221; என்று குறிப்பிட்டார்.</p>



<p>விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்க, விவசாயிகளின் நல நிதியிலிருந்தே விளம்பரங்களுக்குச் செலவழிக்கப்பட்டுள்ளதை மத்திய விவசாய அமைச்சர் நரேந்திர சிங் டோமரே மக்களவையில் கூறுகிறார். ஊடகங்களைப் பயன்படுத்திப் போராட்டத்தை ஒடுக்க முயற்சிக்கும் இந்த அரசிடம், விவசாயிகள் எந்த அடிப்படையில் நீதியை எதிர்பார்க்க முடியும்?</p>



<p>ஒருபுறம் போராட்டத்தை நசுக்கிக் கொண்டு, மறுபுறம் பேச்சுவார்த்தையை நடத்திக் கொண்டிருப்பதை என்னவென்று சொல்வது?</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/centre-rs-8-crore-publicity-campaign-farm-laws-agri-minister-tomar/">விவசாயச் சட்டங்கள் குறித்த பிரச்சாரத்துக்கு மட்டும் ரூ. 8 கோடி செலவு : மத்திய அரசு தகவல்</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://desiyamurasu.com/news-india/centre-rs-8-crore-publicity-campaign-farm-laws-agri-minister-tomar/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>வென்றது தேசிய ஜனநாயகக் கூட்டணி ; தோற்றது பீகார் மக்கள் : &#8216;யூ டூ ப்ரூட்டஸ்&#8217; ஓவாய்சி?</title>
		<link>https://desiyamurasu.com/news-india/did-bihar-vote-for-real-issues-have-biharis-won-or-lost/</link>
					<comments>https://desiyamurasu.com/news-india/did-bihar-vote-for-real-issues-have-biharis-won-or-lost/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[ஆ. கோபண்ணா]]></dc:creator>
		<pubDate>Thu, 12 Nov 2020 11:07:16 +0000</pubDate>
				<category><![CDATA[தேசிய அரசியல்]]></category>
		<category><![CDATA[Agriculture]]></category>
		<category><![CDATA[Bihar]]></category>
		<category><![CDATA[Bihar Election 2020]]></category>
		<category><![CDATA[Covid-19]]></category>
		<category><![CDATA[Employment]]></category>
		<category><![CDATA[LOCKDOWN]]></category>
		<guid isPermaLink="false">https://desiyamurasu.com/?p=3021</guid>

					<description><![CDATA[<p>திடீரென பிரதமர் மோடி அறிவித்த பொது முடக்கத்தால் பீகாரைச் சேர்ந்த தொழிலாளர்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்காத மத்திய, மாநில அரசுகள்&#8230; இப்படிப் பல பிரச்சினைகளால் பீகார் மக்கள் தவித்துக் கொண்டிருந்த நிலையில் தான், சட்டப்பேரவை தேர்தல் வந்தது. மத்தியில் ஆளும் பாஜக கட்சியும், மாநிலத்தில் ஆளும் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியும் தேசிய ஜனநாயக கூட்டணியாகக் களம் கண்டன. தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் [&#8230;]</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/did-bihar-vote-for-real-issues-have-biharis-won-or-lost/">வென்றது தேசிய ஜனநாயகக் கூட்டணி ; தோற்றது பீகார் மக்கள் : &#8216;யூ டூ ப்ரூட்டஸ்&#8217; ஓவாய்சி?</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>திடீரென பிரதமர் மோடி அறிவித்த பொது முடக்கத்தால் பீகாரைச் சேர்ந்த தொழிலாளர்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்காத மத்திய, மாநில அரசுகள்&#8230;<br><br>இப்படிப் பல பிரச்சினைகளால் பீகார் மக்கள் தவித்துக் கொண்டிருந்த நிலையில் தான், சட்டப்பேரவை தேர்தல் வந்தது. மத்தியில் ஆளும் பாஜக கட்சியும், மாநிலத்தில் ஆளும் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியும் தேசிய ஜனநாயக கூட்டணியாகக் களம் கண்டன. தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகள் மகா கூட்டணியாகக் களம் கண்டன.<br><br>தேசிய ஜனநாயகக் கூட்டணி தோற்பதற்கான காரணங்கள் ஆயிரம் உண்டு. ஆனால், வெற்றி பெறுவதற்கான காரணம் ஒன்றுகூட இல்லை. இருப்பினும், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் இந்த வெற்றி எப்படிச் சாத்தியமாயிற்று ?<br><br>கடந்த 2006 ஆம் ஆண்டு நெல் மற்றும் கோதுமையைப் பீகார் மாநிலம் பெருமளவு கொள்முதல் செய்தது. இத்தகைய கொள்முதல் செய்யப்படும் விளைபொருட்களுக்கான விலை தருவதில் தாமதம் செய்யப்பட்டது. இதனால், நெல், கோதுமை, சோளம் மற்றும் வாழைப்பழம் போன்ற பழங்களை இடைத்தரகர்கள் மூலம் விவசாயிகள் விற்க ஆரம்பித்தனர். விவசாயிகளின் இத்தகைய அவலநிலை ஏன் தேர்தலில் முக்கியப் பிரச்சினையாக எதிரொலிக்கவில்லை என்ற கேள்வி இன்று தானாகவே எழுகிறது.</p>



<p>பீகார் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் செயல்படும் ராஷ்ட்ரீய கிஷான் சபாவின் தலைவர் ராமஷிஷ் ராய் கூறும்போது, பீகார் தேர்தல் சாதி அடிப்படையில் நடந்ததாகக் குறிப்பிட்டார். பீகார் சிறு விவசாயிகள் சங்கத் தலைவர் பி.என்.சிங் கூறும்போது, &#8221;ஒரு குவிண்டால் அரிசியை ரூ.800 முதல் ரூ.1,100 க்கு வர்த்தகர்கள் மற்றும் இடைத்தரகர்களுக்கு விற்குமாறு பீகார் விவசாயிகள் கட்டாயப்படுத்தப்பட்டனர். கொள்முதல் முறையை கடைப்பிடிக்கவில்லை&#8221; என்றார்.</p>



<figure class="wp-block-image size-large"><img fetchpriority="high" decoding="async" width="760" height="507" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/11/Whisperer1-1.jpg" alt="" class="wp-image-3029" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/11/Whisperer1-1.jpg 760w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/11/Whisperer1-1-300x200.jpg 300w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/11/Whisperer1-1-750x500.jpg 750w" sizes="(max-width: 760px) 100vw, 760px" /></figure>



<h4 class="wp-block-heading"><strong>வீழ்ந்துபோன பீகார் :</strong></h4>



<ul class="wp-block-list"><li>பீகாரில் கோதுமை கொள்முதல் இந்த ஆண்டு 7 லட்சம் டன் என நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், உண்மையான கொள்முதல் 1 சதவீதத்துக்கும் குறைவாகவே இருந்தது. அதாவது 5 ஆயிரம் டன் மட்டுமே கொள்முதல் இருந்தது. 2015-2016 ஆம் ஆண்டில் 9 ஆயிரம் கோதுமை கொள்முதல் மையங்கள் இருந்தன. ஆனால், 2019-20 ஆம் ஆண்டில் 1,619 ஆக குறைந்தது.</li><li>மகாத்மா காந்தி கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தின் கீழ், 10 லட்சம் பேருக்கு பணி உறுதி அட்டை வழங்கப்பட்டது. ஆனால், 2,132 பேருக்கு மட்டுமே வேலை வழங்கப்பட்டுள்ளது. 100 நாட்கள் வேலை தருவதற்குப் பதிலாக, 7 நாட்கள் மட்டுமே வேலை தரப்பட்டது.</li><li>பீகார் மாநிலத்தில் 36 சதவீத குழந்தைகள் பள்ளிக்குச் செல்லவில்லை. 62 சதவீதம் குழந்தைகள் ஆரம்பப் பள்ளி படிக்கும்போதே, படிப்பை தொடராமல் வெளியேறிவிட்டனர். கற்றோர் மிக குறைவாக 61.8 சதவீதம் மட்டுமே உள்ளது.</li><li>பீகார் மாநிலத்தில் 43 ஆயிரத்து 777 பேருக்கு ஒரு மருத்துவர் மட்டுமே உள்ளார். ஆயிரம் மருத்துவர்கள் இருக்க வேண்டும் என்பது விதி.</li><li>பீகார் மாநிலத்தில் 2 லட்சத்து 78 ஆயிரத்து 602 ஆசிரியர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன.</li><li>பீகாரில் உள்ள எந்த பல்கலைக்கழகமோ, கல்லூரிகளோ நாட்டில் முதல் இடத்தைப் பிடித்தது இல்லை.</li><li>கடந்த 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை, பீகாரில் வேலையில்லாத் திண்டாட்டம் 46.6 சதவீதமாக இருந்தது. படித்துவிட்டு வேலையில்லாமல் 17.5 சதவீதம் பேர் உள்ளனர்.</li></ul>



<p>இப்படி, அனைத்து தரப்பு மக்களும் பிரச்சினைகளில் இருந்து மீள முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் மாநிலமாக பீகார் திகழ்கிறது. இப்படியிருக்கும் போது எந்த அடிப்படையில் பீகார் மக்கள் வாக்களித்தார்கள்?<br><br>பீகார் மக்களைக் குறைசொல்ல முடியாது. பாஜகவின் &#8216;பி&#8217; டீமாக செயல்பட்ட அகில இந்திய மஜ்லீஸ் இ இட்டேஹாட் உல் முஸ்லீமின் தலைவர் அசாதுதீன் ஓவாய்சியே தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்துள்ளார். &#8216;யூ டூ ப்ரூட்டஸ்?&#8217;   என்ற ஜுலியஸ் ஜீஸரின் கடைசி வார்த்தைகளைத் தான், அவரை நோக்கிக் கேள்வியாக எழுப்ப வேண்டியுள்ளது.<br><br>ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் தலைவர் சிவானந்த் திவாரி கூறும்போது, &#8221;பாஜக- ஆர்எஸ்எஸ் அமைப்பின் பி டீமாக ஓவாய்சி மாறவிட்டார். பீகாரில் மகா கூட்டணியைத் தோற்கடிக்க பாஜக பின்னே இருந்து கொண்டு செயல்பட்டுள்ளார். என்றைக்காவது ஓவாய்சியை சர்வாதிகாரி என்றோ, சமூக விரோதி என்றோ பாஜக-ஆர்எஸ்எஸ் கட்சியினர் என்றைக்காவது அழைத்திருக்கிறார்களா?  பாஜக-ஆர்எஸ்எஸ் அமைப்பைத் தோற்கடிக்க முடியாது என்றும், ஆட்சி அமைக்க முடியாது என்றும் தெரிந்தும், பாஜகவை வெற்றி பெற வைக்கவே முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளில் வேட்பாளர்களை ஓவாய்சி நிறுத்தினார்&#8221; என்றார்.<br><br>காங்கிரஸ் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி கூறும்போது, ஓவாய்சியை பாஜக பயன்படுத்திக் கொண்டது. வாக்கைப் பிரிக்கும் ஓவாய்சியிடமிருந்து வாக்காளர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனத் தெரிவித்தார். இவர்கள் இருவரது கருத்தும் நூற்றுக்கு நூறு சதவீதம் உண்மையே.<br><br>ஓவாய்சி வேட்பாளர்களை நிறுத்தாமல் இருந்திருந்தால், மகா கூட்டணி எளிதாக வெற்றி பெற்றிருக்கும் என்பதே அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக உள்ளது.<br><br><strong>பீகார் தேர்தல் முடிவுகள் மாறியதற்கு இவையும் காரணம்:</strong><br><br><strong>1. குறைந்த வாக்கு வித்தியாச வெற்றி :</strong><br><br>28 தொகுதிகளில் ஆயிரம் வாக்குகளுக்குக் குறைவான வித்தியாசத்தில் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். 62 தொகுதிகளில் 2 ஆயிரம் வாக்குகளுக்குக் குறைவான வித்தியாசத்தில் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். 113 தொகுதிகளில் 3 ஆயிரம் வாக்குகளுக்குக் குறைவான வித்தியாசத்தில் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.<br><br><strong>2. நிதிஷுக்கு பெண்கள் ஆதரவு ? :</strong><br><br>சட்டப்பேரவைத் தேர்தலில் ஆண்களைவிட பெண்களே அதிக அளவில் வாக்களித்துள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. அமைதியாக இருந்த வாக்காளர்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் நிதிஷ்குமாருக்கு வாக்களித்து விட்டதாக ஒரு தரப்பினர் கூறுகின்றனர். இதன் உண்மைத் தன்மையை  அறிய சரியான ஆய்வு தேவை.<br><br><strong>3. யோகி-நிதிஷ்குமார் மோதல் நாடகம் :</strong><br><br>முஸ்லீம்களை ஊடுருவல்காரர்கள் என்று 3 ஆம் கட்டத் தேர்தல் பிரச்சாரத்தில் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பேசினார். இதற்கு நிதிஷ்குமார் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.  &#8221;நீ அடிக்கிறது போல் அடி&#8230;நான் அழுவது போல் அழுகிறேன்&#8230;&#8221; என்ற இவர்களது நாடகம் அவர்களது தொண்டர்களைத் திருப்திப்படுத்தியிருக்கிறது.<br><br><strong>4. இடதுசாரிகளில் எழுச்சி :<br></strong><br>2015 ஆம் ஆண்டு சிபிஎம் (எம்எல்) 3 தொகுதிகளில் வென்றது. இந்தத் தேர்தலில் போட்டியிட்ட 19 தொகுதிகளில் 12 தொகுதிகளில் இந்த கட்சி வெற்றி பெற்றுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் 10 தொகுதிகளில் இணைந்து போட்டியிட்டு, 4 தொகுதிகளில் வெற்றி பெற்றனர். நக்சல்கள், மாவோயிஸ்ட்கள், நகர நக்சலைட்கள் என தேசிய ஜனநாயகக் கூட்டணியினர் கடுமையாக விமர்சித்தும் இடதுசாரிகள் எழுச்சியைப் பெற்றுள்ளனர். 25 ஆண்டுகளுக்குப் பின் அவர்களுக்குப் புது வாழ்வு கிடைத்துள்ளது.<br><br><strong>5. நாலாபுறம் சிதறிய வாக்குகள் :</strong><br><br>தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் மகா கூட்டணிக்கு 37 சதவீதம் வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளன. மற்ற கட்சிகளுக்கும் சுயேச்சைகளுக்கும் 25 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. எந்த ஓர் அரசியல் கட்சியும் 25 சதவீதத்துக்கு அதிகமான வாக்குகளைப் பெறவில்லை.<br><br><strong>6. சாதியே இன்னும் ராஜா :</strong><br><br>தேர்தல் முடிவுகளைப் பார்க்கும்போது, சாதி வாக்குகளே வெற்றியை நிர்ணயிப்பது புரிகிறது. பின்தங்கிய வகுப்பினர் மற்றும் குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள சிறுபான்மையினர் வாக்குகளை நிதிஷ்குமாரும், உயர் சாதியினர் வாக்குகளை பாஜகவினரும் கவர்ந்துள்ளனர். ராஷ்ட்ரீய ஜனதாவுக்கு முஸ்லீம் மற்றும் யாதவ் வாக்குகள் அதிக அளவில் கிடைத்துள்ளன.<br><br><strong>7. ஐக்கிய ஜனதா தளத்தின் எதிர்காலம் :</strong><br><br>இந்த தேர்தல் தமக்குக் கடைசி தேர்தல் என்று தேர்தல் பிரச்சாரத்தில் நிதிஷ்குமார் அறிவித்திருந்தார். இதுவரை இரண்டாம் கட்டத் தலைவர்கள் யாரும் தென்படவில்லை. கட்சியின் எதிர்காலம் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. நிதிஷ்குமார் இல்லாமல் ஐக்கிய ஜனதா தளம் கட்சி தாக்குப் பிடிக்குமா? என்பது சந்தேகமே.</p>



<h4 class="wp-block-heading"><strong>புது அவதாரம் எடுத்த தேஜஸ்வி யாதவ்</strong></h4>



<p>தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியைப் பிடித்தாலும், 75 தொகுதிகளில் வெற்றி பெற்றுத் தனிப் பெரும்பான்மை கட்சியாக ராஷ்ட்ரீய ஜனதா தளம் உருவெடுத்துள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு பெற்ற வாக்குகளை விட,  அதிகமான வாக்குகளைத் தேஜஸ்வி தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதா தளம் பெற்றுள்ளது.<br><br>தங்களது வாக்கு வங்கியான முஸ்லீம்கள் மற்றும் யாதவர்கள் வாக்குகளை மட்டுமின்றி, பல தரப்பிலிருந்தும் தேஜஸ்வி தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதா தளம் வாக்குகளைப் பெற்றிருப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்திய அரசியலில் புதிய ஹீரோவாக தேஜஸ்வி அவதாரம் எடுத்துள்ளார்.<br><br>தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதா தளம் தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்தபோதும் எதிர்க்கட்சியாக அமரப் போகிறது. இரண்டாவது தனிப் பெரும் கட்சியான பாஜக, மூன்றாவது தனிப்பெரும் கட்சியான ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆட்சி அமைக்க ஆதரவு தரப்போகிறது. இதுபோன்ற அரசியல் கூத்துகள் நமக்கு ஒன்றும் புதிதல்ல.<br><br>பீகாரில் விவசாயிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களும் செத்துப் பிழைத்துக் கொண்டிருக்கும் நிலையில், ஓவாய்சி போன்றவர்கள் கைக்கூலியாக மாறிய நிலையில், ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாரதிய ஜனதா கட்சி அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.<br><br>இல்லையில்லை&#8230;பீகார் மக்களைத் தோற்கடித்துள்ளது.</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/did-bihar-vote-for-real-issues-have-biharis-won-or-lost/">வென்றது தேசிய ஜனநாயகக் கூட்டணி ; தோற்றது பீகார் மக்கள் : &#8216;யூ டூ ப்ரூட்டஸ்&#8217; ஓவாய்சி?</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://desiyamurasu.com/news-india/did-bihar-vote-for-real-issues-have-biharis-won-or-lost/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>தனியார் நிறுவனங்கள் கொள்ளையடிக்கவே விவசாயச் சட்டங்கள் உதவும்: கொந்தளிக்கும் விவசாயிகள்</title>
		<link>https://desiyamurasu.com/news-india/why-did-the-bjp-feel-empowered-to-push-through-farm-laws-widely-seen-as-anti-farmer/</link>
					<comments>https://desiyamurasu.com/news-india/why-did-the-bjp-feel-empowered-to-push-through-farm-laws-widely-seen-as-anti-farmer/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[ஆ. கோபண்ணா]]></dc:creator>
		<pubDate>Sat, 10 Oct 2020 08:22:31 +0000</pubDate>
				<category><![CDATA[தேசிய அரசியல்]]></category>
		<category><![CDATA[Agriculture]]></category>
		<category><![CDATA[bjp]]></category>
		<category><![CDATA[Farm Laws]]></category>
		<category><![CDATA[Farmers Protests]]></category>
		<guid isPermaLink="false">https://desiyamurasu.com/?p=2584</guid>

					<description><![CDATA[<p>&#8221;கொள்ளையடிக்கவே அதிகாரம்&#8221;. &#8211; கடந்த செப்டம்பர் மாதம் 3 விவசாயச் சட்டங்களை&#160; நாடாளுமன்றத்தில் பாஜக அரசு நிறைவேற்றியபோது, விவசாயிகளின் தலைவர் அம்ரா ராம் நறுக்கென்று கூறிய வார்த்தைதான் இது. விவசாயிகளுக்கு எதிராகவே சட்டங்களை இயற்றவே அதிகாரம் கிடைத்துள்ளதாக பாஜக நினைக்கிறது. விவசாயச் சட்டங்களால் ஏற்படும் பாதிப்பு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க அவகாசம் அளிக்காமல், கடும் எதிர்ப்புகளை மீறி சட்டங்களை நிறைவேற்றியிருக்கிறது மத்திய பாஜக அரசு. விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்பை இப்படி வெளிப்படுத்தினார் அம்ரா ராம். உழவர் உற்பத்தி [&#8230;]</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/why-did-the-bjp-feel-empowered-to-push-through-farm-laws-widely-seen-as-anti-farmer/">தனியார் நிறுவனங்கள் கொள்ளையடிக்கவே விவசாயச் சட்டங்கள் உதவும்: கொந்தளிக்கும் விவசாயிகள்</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>&#8221;கொள்ளையடிக்கவே அதிகாரம்&#8221;.</p>



<p>&#8211; கடந்த செப்டம்பர் மாதம் 3 விவசாயச் சட்டங்களை&nbsp; நாடாளுமன்றத்தில் பாஜக அரசு நிறைவேற்றியபோது, விவசாயிகளின் தலைவர் அம்ரா ராம் நறுக்கென்று கூறிய வார்த்தைதான் இது.</p>



<p>விவசாயிகளுக்கு எதிராகவே சட்டங்களை இயற்றவே அதிகாரம் கிடைத்துள்ளதாக பாஜக நினைக்கிறது. விவசாயச் சட்டங்களால் ஏற்படும் பாதிப்பு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க அவகாசம் அளிக்காமல், கடும் எதிர்ப்புகளை மீறி சட்டங்களை நிறைவேற்றியிருக்கிறது மத்திய பாஜக அரசு. விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்பை இப்படி வெளிப்படுத்தினார் அம்ரா ராம்.</p>



<p>உழவர் உற்பத்தி வர்த்தகம் மற்றும் வர்த்தக (ஊக்குவிப்பு மற்றும் வசதி) அவசரச் சட்டம்:</p>



<p>இந்தச் சட்டத்தின்படி, பயிர் அறுவடை முடிந்ததும் தானியங்களை எங்கு வேண்டுமானாலும், எந்த வியாபாரிக்கும் விவசாயி விற்கலாம். அவர்கள் பகுதியில் உள்ள விவசாய உற்பத்தி மற்றும் சந்தை குழுவில்தான் விற்கவேண்டும் என்ற நிர்ப்பந்தம் இல்லை. &#8216;ஒரு நாடு, ஒரு சந்தை&#8217; என்ற வகையில், இதனை அரசு முன்னெடுத்துச் செல்கிறது.</p>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large"><img decoding="async" width="753" height="565" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/eznagsgwdc-1601733918.jpg" alt="" class="wp-image-2586" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/eznagsgwdc-1601733918.jpg 753w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/eznagsgwdc-1601733918-300x225.jpg 300w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/eznagsgwdc-1601733918-750x563.jpg 750w" sizes="(max-width: 753px) 100vw, 753px" /><figcaption><strong>Farmers on strike in Nasik in 2017 destroy their onion crop. Credit: IANS</strong><br></figcaption></figure></div>



<p>விலை உத்தரவாதம் மற்றும் பண்ணை சேவைகள் குறித்த விவசாயிகள் ( அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) ஒப்பந்தம்:</p>



<p>இந்த சட்டத்தின்படி, தனது பயிரின் தரத்துக்கேற்ப பயிர்களை விற்பனை செய்வதற்கான ஒப்பந்தத்தில் விவசாயி கையெழுத்திட வேண்டும். விவசாயிகளின் இழப்பை இது குறைக்கும் என்று நம்பப்படுகிறது.</p>



<p>1955 ஆம் ஆண்டு அத்தியாவசியப் பொருட்கள் சட்டத் திருத்தம்:</p>



<p>பணக்காரர்களும் வணிகர்களும் முன்பு பயிர்களை மலிவு விலையில் வாங்கி, அவற்றை அதிக அளவு சேமித்து, கள்ளச் சந்தையில் விற்று வந்தனர். இதனைத் தடுக்க 1955 ஆம் ஆண்டு அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படுகிறது. ஆனால், புதிய திருத்தத்தின்படி, தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், சமையல் எண்ணெய் மற்றும் உருளைக்கிழங்கு ஆகியவை அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளன.</p>



<p>எனினும், இந்த அவசரச் சட்டம் தேசியப் பேரிடர் அல்லது அவசரக் காலத்தில் பொருந்தாது என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.</p>



<p>இந்த 3 அவசரச் சட்டங்களையும் எதிர்த்து நாடு முழுவதும் விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.</p>



<p>விவசாய உற்பத்தி சந்தைக்குழு குறிப்பிடும் வெளிமார்க்கெட்டுகளில் தங்கள் விளைபொருட்களை விவசாயிகள் விற்க இந்த சட்டம் வழிவகுக்கிறது. தனியார் நிறுவனங்கள் மூலம் ஒப்பந்த அடிப்படையிலான விவசாயத்தைச் செயல்படுத்த முயல்கிறார்கள்.</p>



<p>அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலிலிருந்து தானியங்கள் மற்றும்&nbsp; பருப்பு வகைகள் நீக்கப்பட்டுள்ளதோடு, இருப்பு வைக்க விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளும் அகற்றப்பட்டுள்ளன.</p>



<p>வெளிச்சந்தையில் விளைபொருட்களை விற்க விவசாயிகளை</p>



<p>அனுமதிப்பதால், நிலைமை அப்படியே தலைகீழாக மாறிவிடும் என்பதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்த அரசு முயல்கிறது. இதனை விவசாயிகள் ஏற்கவில்லை.</p>



<p>விவசாயப் பொருட்களை அரசே கொள்முதல் செய்து குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிக்கும் முறை வலுவிழந்து போகும் என்கிறார்கள் விவசாயிகள். அதோடு, தனியார்த் துறையினரின் கருணைப் பார்வையில் வாழ வேண்டியிருக்கும் என்பதும், சிறு விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவதோடு, உணவு பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் வரும் என்பதும் விவசாயிகள் தரப்பு வாதமாக இருக்கிறது.</p>



<p>இது குறித்து விவசாயிகள் தலைவர் அம்ரா ராம் கூறும்போது, &#8221;சாதாரண மக்களின் நலனைப் பற்றி பாஜக அரசுக்குக் கவலையில்லை. தேசிய மற்றும் சர்வதேச அளவிலான தனியார் நிறுவனங்கள் கொள்ளையடிக்கவே இந்த விவசாயச் சட்டங்கள் வழிவகுக்கும்&#8221; என்றார்.</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/why-did-the-bjp-feel-empowered-to-push-through-farm-laws-widely-seen-as-anti-farmer/">தனியார் நிறுவனங்கள் கொள்ளையடிக்கவே விவசாயச் சட்டங்கள் உதவும்: கொந்தளிக்கும் விவசாயிகள்</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://desiyamurasu.com/news-india/why-did-the-bjp-feel-empowered-to-push-through-farm-laws-widely-seen-as-anti-farmer/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>விவசாயிகளை பாதுகாக்க ராஜஸ்தான் மாநிலத்தில் இயற்றிய சட்டத்தைப் போல தமிழகத்திலும் நிறைவேற்றிடுக! முதலமைச்சருக்கு தலைவர் கே.எஸ்.அழகிரி கோரிக்கை!</title>
		<link>https://desiyamurasu.com/tncc-statements/enact-legislation-to-protect-farmers-from-central-act/</link>
					<comments>https://desiyamurasu.com/tncc-statements/enact-legislation-to-protect-farmers-from-central-act/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Admin]]></dc:creator>
		<pubDate>Tue, 29 Sep 2020 18:29:32 +0000</pubDate>
				<category><![CDATA[ஏவுகணைகள்]]></category>
		<category><![CDATA[Agriculture]]></category>
		<category><![CDATA[Farm Bills]]></category>
		<category><![CDATA[Farmers]]></category>
		<guid isPermaLink="false">https://desiyamurasu.com/?p=2481</guid>

					<description><![CDATA[<p>பாஜக அரசு கொண்டு வந்த விவசாயிகள் விரோத மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் கொடுத்துள்ளார். காங்கிரஸ் நேரிடையாக சென்று குடியரசுத் தலைவரிடம் முறையிட்டு, இந்த சட்டத்துக்கு ஒப்புதல் தர வேண்டாம் என்று கேட்டுக் கொண்டது. எனினும், இதற்கான ஒப்புதலைக் குடியரசுத் தலைவர் வழங்கியுள்ளார். விவசாயச் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் விவசாயிகள் போராட்டம் வெடித்துள்ளது. கர்நாடக மாநிலத்திலும் விவசாயிகள் தங்கள் எதிர்ப்புகளைத் தெரிவித்துப் போராடி வருகின்றனர். தமிழகத்தில் 70 மாவட்டங்களில் 3500 இடங்களில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் [&#8230;]</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/tncc-statements/enact-legislation-to-protect-farmers-from-central-act/">விவசாயிகளை பாதுகாக்க ராஜஸ்தான் மாநிலத்தில் இயற்றிய சட்டத்தைப் போல தமிழகத்திலும் நிறைவேற்றிடுக! முதலமைச்சருக்கு தலைவர் கே.எஸ்.அழகிரி கோரிக்கை!</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>பாஜக அரசு கொண்டு வந்த விவசாயிகள் விரோத மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் கொடுத்துள்ளார். காங்கிரஸ் நேரிடையாக சென்று குடியரசுத் தலைவரிடம் முறையிட்டு, இந்த சட்டத்துக்கு ஒப்புதல் தர வேண்டாம் என்று கேட்டுக் கொண்டது. எனினும், இதற்கான ஒப்புதலைக் குடியரசுத் தலைவர் வழங்கியுள்ளார்.</p>



<p>விவசாயச் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் விவசாயிகள் போராட்டம் வெடித்துள்ளது. கர்நாடக மாநிலத்திலும் விவசாயிகள் தங்கள் எதிர்ப்புகளைத் தெரிவித்துப் போராடி வருகின்றனர். தமிழகத்தில் 70 மாவட்டங்களில் 3500 இடங்களில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மூன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக பங்கேற்று மாபெரும் போராட்டத்தை நடத்தி முடித்திருக்கிறார்கள்.</p>



<p>விவசாயச் சட்டங்களை வரலாற்றுச் சிறப்புமிக்க சீர்திருத்தம் என்று பாஜக கூறுகிறது. அதேசமயம், 3 விவசாயச் சட்டங்களைப் பல மாநிலங்கள் எதிர்த்து வருகின்றன.&nbsp; விவசாயிகளுக்கு எதிரான இந்த சட்டங்களை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தை அணுகப்போவதாக, பஞ்சாப் மாநில முதலமைச்சர் அமரீந்தர் சிங் அறிவித்துள்ளார்.</p>



<p>இத்தகைய சட்டங்கள் கூட்டாட்சியின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.&nbsp; விவசாயம் என்பது அரசமைப்புச் சட்டத்தில் மாநில பட்டியலுக்குள் வரும் போது, மாநில அரசுகளை கலக்காமல் மத்திய பா.ஜ.க. அரசு மூன்று சட்டங்களை கொண்டு வருவதன் உள்நோக்கம் எல்லோருக்கும் எளிதாக புரியும். இந்த சட்டங்களால் கார்பரேட்கள் மட்டுமே பலனடைவர். விவசாயிகளுக்கு எந்த பலனும் இல்லை என்பதை விவசாயத்துறை வல்லுநர்கள் ஆதாரத்துடன் எடுத்துரைத்துள்ளனர்.</p>



<p>அரசியல் கட்சிகள் சொல்வதையோ, வல்லுநர்கள் சொல்வதையோ கேட்காமல், விடாப்பிடியாக&nbsp; 3 சட்டங்களையும் மாநிலங்களவையில் குரல் ஓட்டு மூலம் மோடி அரசு நிறைவேற்றியிருக்கிறது. இந்த சூழ்நிலையில், விவசாயிகளின் நலனைக் காக்க ராஜஸ்தான் காங்கிரஸ் அரசு முதல் அடியை எடுத்து வைத்துள்ளது.</p>



<p>அரசமைப்புச் சட்டத்தில் ஒன்றியத்தின் பட்டியல், மாநில பட்டியல், பொதுப் பட்டியல் என அதிகாரங்கள் தெளிவாக பிரிக்கப்பட்டிருந்தாலும், சில உறுப்புகளின் அடிப்படையில் மத்திய அரசு தனது எச்ச அதிகாரத்தை தன்னிச்சையாக பயன்படுத்துகிறது. இதன்மூலம் மாநில அதிகாரத்திற்குட்பட்ட விவசாயம் உள்ளிட்ட சிலவற்றின் மீது மத்திய அரசு சட்டம் இயற்றியிருக்கிறது. இது கூட்டாட்சி தத்துவத்தை குழிதோண்டி புதைக்கிற செயலாகும்.</p>



<p>மத்திய அரசின் சட்ட வரம்புக்குள் தலையிடாமல், மாநில வரம்புக்குட்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தியுள்ளது. அவசரச் சட்டங்களாகவே இருக்கும் மத்திய சட்டப் பிரிவுகள் சிலவற்றை ரத்து செய்தும் ராஜஸ்தான் மாநில அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதன்படி, சட்டம்&nbsp; அல்லது துணைச் சட்டம் மூலம் விவசாயிகளுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.</p>



<p>உதாரணத்துக்கு, மாநில அரசுகளின் வரம்பு மற்றும் கட்டணத்துக்குட்படாமல் மத்திய சட்டம் உருவாக்கும் புதிய சந்தைகளை, இதன்மூலம் ராஜஸ்தான் அரசு தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும்.</p>



<p>மத்திய சட்டத்தில் மாற்றம் செய்யாத வகையில் மாநில அரசின் சட்டம் அமையும். மத்திய சட்டத்துக்குப் பதில் அளிக்கும் வகையிலும் மாநில அரசின் சட்டத்தின் கீழ், நிர்வாக உத்தரவு பயன்படுத்தப்படும்.</p>



<p>ராஜஸ்தான் மாநில அரசு நிறைவேற்றிய சட்டத்தின் 6-வது பிரிவின்படி, சந்தைக் கட்டணத்தையோ அல்லது வரியையோ மாநில அரசுகளின் கீழ் உள்ள விவசாய உற்பத்தி மற்றும் சந்தைக் குழுக்கள் சட்டத்தின் கீழ் வசூலிக்க முடியாது. பண்ணை வாயில்கள்,&nbsp; கிடங்குகள் மற்றும் குளிர் சேமிப்பு கிடங்குகள் மத்திய அரசின் கீழ் வரும்.</p>



<p>எனினும், சந்தை விவசாயம் மற்றும் துணை விவசாயம் ஆகியவை மாநில விவசாய உற்பத்தி சந்தைச் சட்டத்தின் கீழ் ராஜஸ்தானில் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி, தனியார் சந்தைகளும் துணை சந்தைகளும் மாநில சட்டங்களின் கீழ் தானாக வந்துவிடும்.</p>



<p>இந்த நிர்வாக அதிகாரத்தைத் தான் காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் மாநில அரசு பயன்படுத்தியுள்ளது. இதன்மூலம் இந்திய உணவுக்கழகம், மத்திய சேமிப்புக் கிடங்கு கழகம் மற்றும் ராஜஸ்தான் சேமிப்புக் கிடங்கு கழகம் ஆகியவை குறைந்தபட்ச ஆதரவு விலையின் அடிப்படையிலேயே கொள்முதல் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.</p>



<p>1961 ஆம் ஆண்டு ராஜஸ்தான் விவசாய உற்பத்தி சந்தைச் சட்டத்தின் 6-வது பிரிவின் கீழ், தமக்குள்ள அதிகாரத்தை ராஜஸ்தான் அரசு பயன்படுத்தியுள்ளது. இதன்மூலம், மத்திய அரசின் சேமிப்புக் கிடங்குகள் மாநில அரசுக்குச் சந்தைக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். இத்தகைய ஆக்கப்பூர்வ நடவடிக்கையின் மூலம் விவசாயிகளின் வயிற்றில் பாலை வார்த்துள்ள ராஜஸ்தான் மாநில அரசைப் பாராட்டுகின்றேன்.</p>



<p>&#8216;இதுபோன்ற சட்டத்தைக் காங்கிரஸ் ஆளும் இதர மாநில அரசுகள் பயன்படுத்தினால், மத்திய அரசின் பாதகமான சட்டங்களிலிருந்து விவசாயிகளைப் பாதுகாக்க முடியும்&#8217; எனக் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆலோசனை வழங்கியுள்ளார்.</p>



<p>இந்த ஆலோசனையைத் தமிழகத்தில் ஆளும் அதிமுக அரசும் ஏற்று, ராஜஸ்தானைப் போல், மாநில அரசின் அதிகாரத்துக்குட்பட்ட நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இதன்மூலம், விவசாயச்&nbsp; சட்டங்களை கண்மூடித்தனமாக ஆதரித்து தமிழக விவசாயிகளுக்கு துரோகம் இழைத்ததற்கு, பிராயச்சித்தம் தேடியதாகவும் இருக்கும் என்பதை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நினைவுபடுத்த விரும்புகின்றேன்.</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/tncc-statements/enact-legislation-to-protect-farmers-from-central-act/">விவசாயிகளை பாதுகாக்க ராஜஸ்தான் மாநிலத்தில் இயற்றிய சட்டத்தைப் போல தமிழகத்திலும் நிறைவேற்றிடுக! முதலமைச்சருக்கு தலைவர் கே.எஸ்.அழகிரி கோரிக்கை!</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://desiyamurasu.com/tncc-statements/enact-legislation-to-protect-farmers-from-central-act/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
	</channel>
</rss>
