1992 ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டதையும், அதற்கு முந்தைய நாள் நடந்த ஒத்திகையையும் தி பிரிண்ட் இணைய தளத்தின் தேசிய புகைப்பட ஆசிரியர் பிரவீன் ஜெயின் ஆவணப்படுத்தியுள்ளார்.
(நன்றி: ‘தி பிரிண்ட்’)
உச்சநீதிமன்றத்தில் கரசேவை நடத்தும்போது பாபர் மசூதி அருகில் நெருங்ககூடமாட்டோம் என பிராமண பாத்திரம் தாக்கல் செய்த பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். வகுப்புவாத சக்திகள் நிகழ்த்திய வன்முறை செயல்களை பாரீர்!
பாபர் மசூதி இடித்த இடத்தில் ராமர் கோயில் கட்ட உச்சநீதிமன்றம் ஆணையிட்டது. ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டு விழா நடத்தப்பட்டு விட்டது. ஏதோ ஒரு வகையில் ராம பிரானுக்கு கோயில் கட்டுவது அனைவருக்கும் மகிழ்ச்சியே. ஆனால், ராமர் கோயில் கட்டுவதற்கு உச்சநீதிமன்றம் ஆணையிட்டதைப் போல பாபர் மசூதியை இடிப்பதற்கு காரணமாக இருந்த பா.ஜ.க. தலைவர்கள் எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ்., வி.எச்.பி, பஜ்ரங்தள் அமைப்பினர் மீது தொடுக்கப்பட்ட வழக்கில் எப்போது நீதிமன்றம் தண்டனை வழங்கப் போகிறது ? நாட்டு மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.