• About Us
  • Privacy Policy
  • Contact Us
தேசிய முரசு - Desiya Murasu
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
தேசிய முரசு - Desiya Murasu
No Result
View All Result
Home மதச்சார்பின்மை

7 மாதங்களுக்குப் பிறகு டாக்டர் கஃபீல் கான் விடுதலை: தே.பா.ச. தவறாகப் பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டு

by ஆ. கோபண்ணா
02/09/2020
in மதச்சார்பின்மை
0
7 மாதங்களுக்குப் பிறகு டாக்டர் கஃபீல் கான் விடுதலை: தே.பா.ச. தவறாகப் பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டு
Share on FacebookShare on TwitterShare on WhatsAppShare On Email

தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட டாக்டர் கஃபீல் கானை மதுரா சிறையில் இருந்து உடனே விடுதலை செய்ய, உத்தரப் பிரதேச அரசுக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு, குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் நடந்த பேராட்டத்தின் போது, ஆத்திரமூட்டும் வகையிலும், அவதூறாகவும் டாக்டர் கஃபீல் கான் பேசியதாகக் கூறி, கடந்த ஜனவரி 29 ஆம் தேதி கைது செய்யப்பட்டு, உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா சிறையில் அடைக்கப்பட்டார்.

7 மாதங்களுக்கும் மேலாக டாக்டர் கான் சிறையில் இருந்த நிலையில், மகனை மீட்டுத் தரக்கோரி அவரது தாயார் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் டாக்டர் கஃபீல் கானை கைது செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்தனர். அதோடு, மதுரா சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அவரை உடனே விடுதலை செய்யுமாறும் உத்தரப் பிரதேச அரசுக்கு உத்தரவிட்டனர்.

நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், ”கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அலிகார் பல்கலைக்கழகத்தில் நடந்த போராட்டத்தில், டாக்டர் கான் பேசிய பேச்சில் எந்த தவறும் இல்லை. வெறுப்பூட்டும் வகையிலோ, வன்முறையை தூண்டும் வகையிலோ அல்லது அலிகார் பகுதியில் அமைதியை சீர்குலைப்பதாகவோ அவரது பேச்சு இல்லை. இவற்றை எல்லாம் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் கவனத்தில் கொள்ளவில்லை. அவரது பேச்சின் உண்மையான உள்நோக்கத்தை கவனிக்க மாஜிஸ்திரேட் நீதிமன்றம் தவறிவிட்டது” என்றும் கூறியுள்ளனர்.

இது குறித்து கான் கூறும்போது, ” 2017 ஆம் ஆண்டு கோரக்பூர் அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக 70 குழந்தைகள் உயிரிழந்தது குறித்து கேள்வி எழுப்பியதற்காக, தம்மை தொடர்ந்து சிறையிலேயே வைத்திருக்க உத்தரப்பிரதேச அரசு திட்டமிட்டிருந்ததாகத் தெரிவித்தார். 70 குழந்தைகள் உயிரிழந்தது குறித்து கேள்வி எழுப்பியதற்காக, பெரும் விலையை கொடுத்துள்ளேன். அலிகார் பல்கலைக் கழகத்தில் ஒற்றுமை மற்றும் ஜனநாயக வழியிலான அமைதிப் போராட்டத்தை வலியுறுத்தியே பேசினேன்.

கொரோனா பரவல் குறித்து நான் பேசிவிடுவேன் என்ற காரணத்துக்காக என்னை 2022 ஆம் ஆண்டு வரை சிறையில் அடைக்க உத்தரப் பிரதேச அரசு முடிவு செய்திருந்தது. உத்தரப்பிரதேசத்தில் சுகாதாரத்துறை செயல் இழந்துவிட்டது. அதைப் பற்றி நான் பேசுவேன் என்பது அவர்களுக்குத் தெரியும். என் வாயை அடைப்பதற்காகவே அவர்கள் என்னை தொடர்ந்து சிறையில் வைக்க முடிவு செய்தனர்” என்று தெரிவித்தார்.

சட்ட நிபுணர்கள் கருத்து

டாக்டர் கஃபீல் கானை அலகாபாத் உயர் நீதிமன்றம் விடுதலை செய்தது குறித்து கருத்து தெரிவித்துள்ள மூத்த வழக்குரைஞர் ரிபெக்கா ஜான், ”எந்த கேள்வியும் இல்லாமல், ஒருவரை ஓராண்டுக்கு சிறையில் தள்ளும் தேசிய பாதுகாப்புச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. இதனை தவறாகப் பயன்படுத்தும் அதிகாரிகளை தண்டிக்கவும் சட்டம் இயற்ற வேண்டும். 90 சதவிகித வழக்குகள் நீதிமன்ற ஆய்வுக்கு உட்படுத்தப்படுவது இல்லை. கொரோனாவால் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்ட பிறகு, நீதிமன்ற பணிகளும் முடங்கியதால், தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பலர் நிவாரணம் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது” என்றார்.

உள்துறை முன்னாள் செயலர் ஜி.கே.பிள்ளை கூறும்போது, ”தேசிய பாதுகாப்புச் சட்டத்தை தவறாகப் பயன்படுத்தும் அதிகாரிகள் மீது, நீதிமன்றமே நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் தேசிய பாதுகாப்புச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவது குறையும்” என்றார்.

மூத்த வழக்குரைஞர் கொலின் கொன்சால்வே கூறும்போது, ”தவறான உத்தரவுகள் பெரும் அநீதிக்கு வழி வகுத்துவிடும். தேசிய பாதுகாப்புச் சட்டத்தைப் பொருத்தவரை, உச்ச நீதிமன்றமும் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிட்டது. தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் அரசு தரப்பு சமர்ப்பிக்கும் ஆவணங்களே விசாரணைக்கு சாட்சியம் என்றும், விசாரணையின் போது குற்றம் சுமத்தப்பட்டவர் ஜாமீன் கோரினால் இந்த ஆவணங்களின் அடிப்படையில் அதை நிராகரிக்க நீதிமன்றங்களுக்கு அதிகாரம் உண்டு என்றும் தீர்ப்பளித்துள்ளது. பொருந்தாத மற்றும் தவறான இந்த தீர்ப்பால், நாட்டில் பெரும் அநீதி இழைக்கப்பட்டு வருகிறது” என்றார்.

Tags: Allahabad HCKafeel KhanNSA
Previous Post

பி.எம்.கிசான் திட்டத்தில் பித்தலாட்டம்: லஞ்ச அதிகாரிகளால் விவசாயிகள் தவிப்பு

Next Post

மூத்த பத்திரிகையாளர், தகவல் களஞ்சியம் அ. துரைக்கண்ணு மறைந்தார்!

ஆ. கோபண்ணா

ஆ. கோபண்ணா

Next Post
மூத்த பத்திரிகையாளர், தகவல் களஞ்சியம் அ. துரைக்கண்ணு மறைந்தார்!

மூத்த பத்திரிகையாளர், தகவல் களஞ்சியம் அ. துரைக்கண்ணு மறைந்தார்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

22/07/2020
ஃபேஸ்புக் ஆதரவுடன் பா.ஜ.க. தேர்தல் தில்லுமுல்லு: அம்பலப்படுத்திய அமெரிக்க பத்திரிகை

ஃபேஸ்புக் ஆதரவுடன் பா.ஜ.க. தேர்தல் தில்லுமுல்லு: அம்பலப்படுத்திய அமெரிக்க பத்திரிகை

18/08/2020
ராஜஸ்தான் நகராட்சித் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி : 3 -வது இடத்துக்கு தள்ளப்பட்ட பா.ஜ.க.

ராஜஸ்தான் நகராட்சித் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி : 3 -வது இடத்துக்கு தள்ளப்பட்ட பா.ஜ.க.

16/12/2020
ரூ.150 கோடி மதிப்பு ஓட்டலை அடிமாட்டு விலைக்கு வாஜ்பாய் அரசு விற்ற வழக்கு: சிபிஐ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

ரூ.150 கோடி மதிப்பு ஓட்டலை அடிமாட்டு விலைக்கு வாஜ்பாய் அரசு விற்ற வழக்கு: சிபிஐ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

19/09/2020

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

13
ஆதியின் கடிதம்

ஆதியின் கடிதம்

11
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

10
மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

8
எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

21/11/2021
வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

21/11/2021

Recent News

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

21/11/2021
வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

21/11/2021
தேசிய முரசு – Desiya Murasu

Follow Us

  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

Recent News

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
  • About Us
  • Privacy Policy
  • Contact Us

© 2020 DesiyaMurasu.com

No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

© 2020 DesiyaMurasu.com