• About Us
  • Privacy Policy
  • Contact Us
தேசிய முரசு - Desiya Murasu
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
தேசிய முரசு - Desiya Murasu
No Result
View All Result
Home மதச்சார்பின்மை

இந்தியாவில் கிறிஸ்தவம் தோல்வியடைந்ததா?: ஊடக விமர்சனத்துக்கு ஆராய்ச்சியாளர் பதிலடி

by ஆ. கோபண்ணா
14/09/2020
in மதச்சார்பின்மை
0
இந்தியாவில் கிறிஸ்தவம் தோல்வியடைந்ததா?: ஊடக விமர்சனத்துக்கு  ஆராய்ச்சியாளர் பதிலடி
Share on FacebookShare on TwitterShare on WhatsAppShare On Email

‘இந்தியாவில் கிறிஸ்தவம் ஏன் தோல்வியடைந்தது?’ என்ற கேள்வியுடன் முக்கிய ஊடகங்களின் நிபுணர்கள் ஆராயத் தொடங்கியுள்ளனர். சமீபத்தில் மூத்த பத்திரிகையாளர் திலிப் மண்டல் கூறும்போது, ‘கிறிஸ்தவ மதத்துக்கு இந்தியாவில் எதிர்காலம் இல்லை’ என்ற விவாதத்தை முன்னெடுத்துள்ளார். ”கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்கள் மதமாற்றம் செய்வதாக ஆர்எஸ்எஸ் அமைப்போ அல்லது விஸ்வ இந்து பரிசத் அமைப்போ தவறான எச்சரிக்கை அல்லது பதற்றத்தை பரப்பியதை காரணமாக கூற முடியாது” என்றும் தெரிவித்துள்ளார். மேலும், இந்தியாவில் கிறிஸ்தவ மக்கள் தொகை குறைந்து வருவதாகவும் மண்டல் சுட்டிக்காட்டியுள்ளார்.

கல்வி, மருத்துவம், கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்களின் சமூகப் பணி மூலம் மதமாற்றம் பிரதானமாக நடைபெறுவது அல்ல என்பதை வெளிப்படையாக அங்கீகரிக்க மண்டல் மறுக்கிறார். அவர் குறிப்பிட்டுள்ள கிறிஸ்தவ அமைப்பான கம்பேஷன் இன்டர்நேஷனலின் ஒரே நோக்கம் இந்தியாவில் சமூகப் பணியில் ஈடுபடுவதுதான். கம்பேஷன் இன்டர்நேஷனல் போன்ற அமைப்புகள் மீது மதமாற்றம் செய்ததாக இதுவரை எந்த புகாரும் இல்லை.

இந்தியாவில் கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்களின் பணி, பிராமணர்களுக்கும் உயர் சாதியினருக்கும் ஒரு கருவியாக மாறியது என்ற திலீப் மண்டலின் கடுமையான விமர்சனம் ஆதாரமற்றது. கடந்த நூற்றாண்டில் கேரளாவில் கிறிஸ்தவம் தோல்வியுற்றதால், பலர் பிராமணர்களாக மாறிவிட்டதாக கூறுகிறார். அவர் சொல்லும் காலத்தில்  கேரளாவில்(செயின்ட் தாமஸ் கேரளாவுக்கு வந்ததாக நம்பப்படும் காலத்தில்) பிரமாணர்கள் இருந்தார்களா? என்பதில் வரலாற்று ஆய்வாளர்களிடையே மாறுபட்ட கருத்து நிலவுகிறது. 8 ஆவது நூற்றாண்டில் பிராமணர்களே இல்லை என்றும் சில வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அடுத்ததாக, கிறிஸ்தவப் பள்ளிகளில் கல்வியின் தரம் குறித்தும் மண்டல் கேள்வி எழுப்புகிறார். இந்த பள்ளிகளில் ஆங்கிலம் கற்பிக்கப்படுவதால், உயர் சாதியினர் மற்றும் சாதி அடிப்படையிலான கல்வியாக மாறியிருப்பதாகவும், தலித்கள் வடநாட்டு மொழியை கற்கவேண்டிய நிர்பந்தம் ஏற்படுவதாகவும் திலீப் மண்டல் தெரிவித்துள்ளார். எப்போதாவது அவர் தலித்துகளையோ அல்லது பழங்குடியின கிறிஸ்தவர்களையோ சந்தித்து இருக்கிறாரா?

அநேகமாக, அம்பேத்காரின்  ‘சாதி ஒழிப்பு’ என்ற புத்தகத்தை மண்டல் படித்திருப்பார் என்று கருதுகிறேன். அதில், ”பழங்குடியினர் காட்டுமிராண்டிகளாக இருந்தார்கள் என்பதை இந்துக்கள் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். ஏனென்றால், அவர்கள் நாகரிகம்,மருத்துவ உதவி, சீர்திருத்தம் மற்றும் அவர்கள் நல்ல குடிமக்களாக மாற எந்த முயற்சியும் செய்யவில்லை. பழங்குடியினத்தவருக்கு கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்கள் செய்ததைப் போல், இந்துக்கள் செய்ததுண்டா? சாதியை காப்பாற்றுவதற்காகவே இந்துக்கள் தங்கள் முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்துக் கொண்டுள்ளார்கள்” என்று அம்பேத்கார் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் கிறிஸ்தவர்களுக்கு நீண்ட நெடிய பாரம்பரியம் இருந்தால், கிறிஸ்தவ மக்கள் தொகை 3 சதவிகிதத்துக்குள் இருப்பது ஏன்? என்று திலீப் மண்டல் உள்ளிட்ட பலர் விமர்சிக்கின்றனர். நல்லவேளை, தாய் மதத்துக்கு திரும்புவதால் தான் கிறிஸ்தவ மக்கள் தொகை அதிகரிக்கவில்லை என்று அவர்கள் கூறவில்லை. அநேகமாக அவர்கள் எழுப்பும் கேள்வி, இந்தியாவில் பார்சி மக்கள் தொகை குறைந்ததற்கும் பொருந்தும். கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்காததற்கு, மதமாற்ற செய்ய தவறியதே காரணம் என்று சொல்ல முடியாது.

இந்தியாவில் எடுக்கப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து கேள்வி எழுப்புகிறார் பிலிப் ஜென்கின்ஸ். இந்த கணக்கெடுப்பு உலகிலேயே ‘சிறந்த கற்பனை’ என்கிறார். இந்தியாவில் கிறிஸ்தவர்கள் குறித்த அதிகாரப்பூர்வ மக்கள் தொகை கணக்கெடுப்பு ஏதும் இல்லை என்றும், இந்த எண்ணிக்கை என்பது ஆய்வாளர்கள் கணிப்பின் அடிப்படையிலேயே அமைந்துள்ளதாகவும் அவர் கூறுகிறார்.

கிறிஸ்தவர்கள் எண்ணிக்கை குறைத்து மதிப்பிடப்படுவதற்கு தீவிர இந்து அமைப்புகளே காரணம் என்று பிலிப் ஜென்கின்ஸ் சுட்டிக்காட்டுகிறார். கிறிஸ்தவர்களின் வலுவான எண்ணிக்கையை குறைத்து மதிப்பிடுவதற்கு, உள்ளூர் அரசு அதிகாரிகளும் காவல் துறையினரும் உடந்தையாக இருக்கிறார்கள்.

சுதந்திர இந்தியாவில் அல்பேனியாவிலிருந்து வந்த அன்னை தெரஸா செய்த சேவை மறக்க இயலாது. உடல்நலம் பேணுதல் மூலம் ஏழை மக்களுக்காக தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர். மதமாற்றம் குறித்த விவாதங்களில் இருந்து விலகியே நின்றவர். ”உங்களை நல்ல இந்துவாக, நல்ல கிறிஸ்தவராக, நல்ல முஸ்லீமாக மாற்றம் செய்கிறேன்” என்று கூறி மதமாற்றத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தவர்.

1970 ஆம் ஆண்டிலிருந்தே இந்தியாவில் வெளிநாட்டு தொண்டு நிறுவனங்கள் ஏதும் செயல்படவில்லை. இந்தியாவில் உள்ள கிறிஸ்தவ உயரதிகாரிகளின் உத்தரவுப்படியே இந்திய தேவாலயங்களும், கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களும் இயங்கின. அதோடு, இந்தியாவில் உள்ள கிறிஸ்தவ தலைவர்கள் விடுதலைப் போராட்டத்திலும், சமூக சீர்திருத்த நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளதை வரலாறு சொல்லிக் கொண்டே தான் இருக்கிறது.

கட்டுரையாளர்: ஜேசுதாஸ் மாத்யூ அத்யால்

(பாஸ்டன் பல்லைக்கழக உலக கிறிஸ்தவர்கள் மையத்தின் சிறப்பு ஆராய்ச்சியாளராகப் பணியாற்றுகிறார். கேம்பிரிட்ஜ் ஹார்டுவர்ட்ஸ் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளராகப் பணியாற்றியவர்.)

Tags: ChristianityConversionIndiaReligion
Previous Post

முஸ்லீம்களின் தியாகத்தை ராமர் கோயில் வெளிப்படுத்தும்: இந்தோஇஸ்லாமிக் கலாச்சார அறக்கட்டளை

Next Post

தமிழகத்தில் நீட் தேர்வை திணித்தது யார் ? தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம்!

ஆ. கோபண்ணா

ஆ. கோபண்ணா

Next Post
பாடத்திட்டங்களில் வகுப்புவாத கொள்கைகளை புகுத்தாதே – தலைவர் கே.எஸ். அழகிரி

தமிழகத்தில் நீட் தேர்வை திணித்தது யார் ? தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

22/07/2020
ஃபேஸ்புக் ஆதரவுடன் பா.ஜ.க. தேர்தல் தில்லுமுல்லு: அம்பலப்படுத்திய அமெரிக்க பத்திரிகை

ஃபேஸ்புக் ஆதரவுடன் பா.ஜ.க. தேர்தல் தில்லுமுல்லு: அம்பலப்படுத்திய அமெரிக்க பத்திரிகை

18/08/2020
ராஜஸ்தான் நகராட்சித் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி : 3 -வது இடத்துக்கு தள்ளப்பட்ட பா.ஜ.க.

ராஜஸ்தான் நகராட்சித் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி : 3 -வது இடத்துக்கு தள்ளப்பட்ட பா.ஜ.க.

16/12/2020
ரூ.150 கோடி மதிப்பு ஓட்டலை அடிமாட்டு விலைக்கு வாஜ்பாய் அரசு விற்ற வழக்கு: சிபிஐ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

ரூ.150 கோடி மதிப்பு ஓட்டலை அடிமாட்டு விலைக்கு வாஜ்பாய் அரசு விற்ற வழக்கு: சிபிஐ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

19/09/2020

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

13
ஆதியின் கடிதம்

ஆதியின் கடிதம்

11
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

10
மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

8
எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

21/11/2021
வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

21/11/2021

Recent News

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

21/11/2021
வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

21/11/2021
தேசிய முரசு – Desiya Murasu

Follow Us

  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

Recent News

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
  • About Us
  • Privacy Policy
  • Contact Us

© 2020 DesiyaMurasu.com

No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

© 2020 DesiyaMurasu.com

  • facebook
  • twitter
  • whatsapp