• About Us
  • Privacy Policy
  • Contact Us
தேசிய முரசு - Desiya Murasu
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
தேசிய முரசு - Desiya Murasu
No Result
View All Result
Home Uncategorized

காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

by ஆ. கோபண்ணா
21/11/2021
in தமிழக அரசியல்
0
காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.
Share on FacebookShare on TwitterShare on WhatsAppShare On Email

மக்கள் விரோத பா.ஜ.க. ஆட்சியில் விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் குறித்து நவமவர் 22 முதல் 29 வரை மாபெரும் பிரச்சாரப் பயணம்.

அன்னை சோனியா காந்தி, தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் ஆலோசனையின்படி தலைவர் கே.எஸ்.அழகிரி வழிகாட்டுதலோடு தமிழகம் முழுவதும் எழுச்சிப்பயணம் நடைபெறுகிறது. விடுதலை போராட்ட காலத்தை நினைவு கூறுகிற வகையில் தமிழகத்தின் மூலைமுடுக்கெல்லாம் காங்கிரஸ் கட்சியினர் கதர் குல்லா அணிந்து, கையில் மூவண்ண ராட்டை கொடியுடன் பொதுமக்களை சந்தித்து மத்திய பாஜக ஆட்சியின் அவலங்களை பட்டியலிடும் கீழ்கண்ட கருத்துக்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்குவார்கள். பா.ஜ.க. ஆட்சி அகற்றப்படுவதற்கு மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம் முன்னோட்டமாக அமையும்.

அனைவரும் கை கோர்ப்போம்! தேசத்தை காப்போம்!

கடும் விலைவாசி உயர்வால் தவியாய் தவிக்கும் குடும்பங்கள்:

  • கடந்த ஓராண்டில் சமையல் எண்ணெய் விலை இரு மடங்கு உயர்வு. சூரியகாந்தி மற்றும் கடுகு எண்ணெய் விலை லிட்டர் ரூ.200-க்கு விற்கப்படுகின்றன.
  • கடந்த ஓராண்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.300 உயர்ந்துள்ளது.
  • தொடர்ந்து சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தப்படும் நிலையில், அதற்கான மானியமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
  • ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் மானிய விலையில் சமையல் எரிவாயு சிலிண்டர் கிடைத்தது. இன்றைக்கு ஒவ்வொரு மாதமும் விலை ஏற்றப்படுகிறது.
  • சாதாரண மக்களைப் பற்றி எண்ணிப்பார்க்காமல் ரயில் கட்டணம் உயர்த்தப்படுகிறது. ரயில்வே நடைமேடை டிக்கெட் ரூ. 5 -லிருந்து ரூ. 50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
  • 2014 ஆம் ஆண்டு ஒரு லிட்டர் ரூ. 71- க்கு விற்கப்பட்ட பெட்ரோல், 2021 இல் 105- க்கு விற்கப்படுகிறது.
  • 2014 ஆம் ஆண்டு ரூ.57- க்கு விற்கப்பட்ட ஒரு லிட்டர் டீசல், 2021 இல் ரூ.96 -க்கு விற்கப்படுகிறது.
  • 2014 ஆம் ஆண்டு ஒரு லிட்டர் ரூ. 60- க்கு விற்கப்பட்ட சோயாபீன் எண்ணெய், 2021 இல் ரூ.225- க்கு விற்கப்படுகிறது.
  • 2014 ஆம் ஆண்டு ரூ.30 -க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ சர்க்கரை, 2021 ஆம் ஆண்டு ரூ. 50- க்கு விற்கப்படுகிறது.
  • 2014 ஆம் ஆண்டு ரூ. 46- க்கு விற்கப்பட்ட ஒரு லிட்டர் பால், 2021 இல் ரூ.57 -க்கு விற்கப்படுகிறது.
  • 2014 ஆம் ஆண்டு ரூ. 3- க்கு விற்கப்பட்ட ஒரு முட்டை, 2021 ஆம் ஆண்டு ரூ.8- க்கு விற்கப்படுகிறது.
  • 2014 ஆம் ஆண்டு ரூ. 350- க்கு விற்கப்பட்ட ஒரு லிட்டர் நெய், 2021 இல் ரூ. 650- க்கு விற்கப்படுகிறது.
  • 2014 ஆம் ஆண்டு ரூ.15- க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ மாவு, 2021 ஆம் ஆண்டு ரூ. 30- க்கு விற்கப்படுகிறது.
  • 2014 ஆம் ஆண்டு ரூ.70- க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ தானியங்கள், 2021 ஆம் ஆண்டு ரூ.190- க்கு விற்கப்படுகிறது.
  • ஒரு சில பெரும் தொழிலதிபர்களுக்கு ஆதரவான மோடி அரசின் போக்கால், பங்குச் சந்தையில் அவர்கள் பல ஆயிரம் கோடிகள் சம்பாதிக்க வழி ஏற்பட்டுள்ளது.
  • அதே சமயம், மக்களின் வைப்புத் தொகை, சேமிப்புக் கணக்கு, வருங்கால வைப்பு நிதி மற்றும் ஏனைய சேமிப்புகளின் வட்டி குறைக்கப்பட்டுள்ளது. வட்டி விகிதம் 9 சதவிகிதத்திலிருந்து 5 சதவிகிதமாக குறைக்கப்பட்டதால், வைப்புத் தொகை மூலம் வருவாய் ஈட்டும் லட்சக்கணக்கானோர், குறிப்பாக மூத்த குடிமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
  • முன்பு 8 ஆண்டுகளில் இரண்டு மடங்காக உயர்ந்த சேமிப்புத் தொகை, தற்போது 14 ஆண்டுகளில் இரண்டு மடங்காக உயரும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
  • சாதாரண மக்களிடம் இருந்தும், தொழிலாளர்களிடம் இருந்தும் சேமிப்பைப் பறித்து, ஒரு சில கார்பரேட் நிறுவனங்கள் பயனடைய மத்திய பா.ஜ.க அரசு உதவுகிறது.
  • மோடி அரசின் தவறான பொருளாதார நிர்வாகம் காரணமாக இந்தியாவின் சாதாரண நிலையில் உள்ள ஆண்களும் பெண்களும் இன்று கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர். வருவாய் இழப்பு ஏற்பட்டு சிறு வணிகங்கள் அழிந்து வருகின்றன.
  • ஏற்கெனவே வருவாயை இழந்து நிற்கும் மக்கள், விலைவாசி உயர்வு காரணமாக கூடுதல் செலவை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. பா.ஜ.க.வின் பணக்காரர்களுக்கு ஆதரவான போக்கும், மக்கள் விரோதக் கொள்கையுமே விலைவாசி உயர்வில் பிரதிபலிக்கின்றன.
  • எரிபொருள் விலை உயர்வு காரணமாக லாரி, டாக்சி, ஆட்டோ உள்ளிட்ட போக்குவரத்துத் துறையில் பணியாற்றுவோர் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • ஏற்கெனவே மோடி அரசால் பெரும் பாதிப்புக்குள்ளான விவசாயிகளை, எரிபொருள் விலை உயர்வும் மேலும் பாதிப்படையச் செய்துள்ளது.
  • போக்குவரத்து மற்றும் விவசாயத் துறையில் எரிபொருள் விலையேற்றம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உணவுப் பற்றாக்குறை ஏற்படும் சூழலை ஏற்படுத்தியுள்ளது.
  • கடந்த ஓராண்டாக காய்கறிகள், பழங்கள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களின் விலை இரு மடங்காக உயர்ந்துள்ளது.
  • கிராமப் புறங்களில் உணவுப் பஞ்சம் ஏற்பட்டுள்ளதாக அரசு அறிக்கை கூறுகிறது. பட்டினி மற்றும் ஊட்டச் சத்துக்குறைபாடு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
  • ஊட்டச்சத்து உணவுகளான பால், தானியங்கள், முட்டைகள் மற்றும் இறைச்சி ஆகியவை, கடும் விலை உயர்வால் குடும்பங்களின் உணவுப் பட்டியலிலிருந்து வெளியேறிவிட்டன.
  • இந்தியாவில் 20 கோடி பேர் பட்டினி கிடக்கிறார்கள். இது உலக அளவிலான பட்டினியில் நான்கில் ஒரு பங்காகும். 2021 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய பட்டினி பட்டியலில் மொத்தமுள்ள 116 நாடுகளில் இந்தியா 101 ஆவது இடத்தில் உள்ளது. 2014 ஆம் ஆண்டு உலகளாவிய பட்டினி பட்டியலில், இந்தியா 55 ஆவது இடத்தில் தான் இருந்தது. 2016 ஆம் ஆண்டிலிருந்தே அதே இடத்திலேயே இந்தியா தொடர்ந்து கொண்டிருக்கிறது. இது, மிகவும் மோசமான சூழல் என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளது.
  • பெட்ரோலியப் பொருட்களுக்காக அதிகம் செலவழிக்க வேண்டிய நிர்ப்பந்தம் இருப்பதால், சுகாதாரம் மற்றும் கல்வி தொடர்பான மற்ற அத்தியாவசிய தேவைகளுக்கு செலவழிக்க முடியாத நிலையில் மக்கள் உள்ளனர்.
  • எரிபொருள் விலை குறைக்கப்பட்டால், குடும்பத்தினர் கைகளில் அதிகமான அளவு பணம் புரளும். இந்த பணத்தை பல வகைகளில் அவர்கள் செலவழிக்கும் போது தான் பொருளாதாரம் வளர்ச்சியடையும்.
  • கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் பெட்ரோல் மீதான கலால் வரியை 250 சதவிகிதம் (ஒரு லிட்டருக்கு ரூ.9.48 -லிருந்து ரூ. ரூ.32.98 ஆக உயர்வு) வரை பா.ஜ.க. அரசு உயர்த்தியுள்ளது. டீசல் மீதான கலால் வரி 800 சதவிகிதம் (ஒரு லிட்டருக்கு ரூ.3.65 -லிருந்து ரூ. 31.83 ஆக உயர்வு) உயர்த்தப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இருந்ததைவிட, கடந்த 7 ஆண்டுகளில் பெட்ரோலுக்கான வரி 3 மடங்கு அதிகமாகவும், டீசலுக்கான வரி 9 மடங்கு அதிகமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
  • கொரோனா பரவல் காலத்தில் மக்களுக்கு உதவ வேண்டிய மத்திய அரசு, அந்த சமயத்தில் ஒரு லிட்டர் பெட்ரோலை ரூ. 10 -ம், ஒரு லிட்டர் டீசலை ரூ.13- ம் உயர்த்தியது.
  • இந்த அநியாய வரி உயர்வை மோடி அரசு திரும்பப் பெற்றால், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.22 குறைவாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 28 குறைவாகவும் கிடைக்கும்.
  • எரிபொருட்கள் விலையை ஏற்றி சாதாரண மக்களை வாட்டி வதைக்கும் மோடி அரசு, இந்தியாவின் பெரும் பணக்காரர்களின் கார்பரேட் நிறுவனங்களுக்கான வரியை 30 சதவிகிதத்திலிருந்து 22 சதவிகிதமாக குறைத்துள்ளது. இதன்மூலம் அரசுக்கு ரூ.1 லட்சத்து 45 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
  • கச்சா எண்ணெய்யின் விலை குறைந்தபோதிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஏற்றப்பட்டு வருகிறது.
  • ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது, சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை பேரலுக்கு ரூ.10 ஆயிரத்து 412 ஆக இருந்தபோதிலும், சாதாரண மக்கள் பாதிக்காத வகையில் விலை நிர்ணயிக்கப்பட்டது.
  • கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவது பா.ஜ.க.வுக்கு கிடைத்த நல்வாய்ப்பு. இதனைப் பயன்படுத்தி எரிபொருள் விலையைக் குறைத்து, அதன் பலனை மக்கள் அடையச் செய்யலாம். அதற்குப் பதிலாக வரி மற்றும் கலால் வரியை அதிகரித்து சாதாரண மக்களை வாட்டி வதைக்கிறது பா.ஜ.க. அரசு. எரிபொருட்களுக்கு அதிக விலையேற்றி சாதாரண மக்களுக்கு மத்தியில் ஆளும் மோடி அரசு தொடர்ந்து அநீதி இழைத்துக் கொண்டிருக்கிறது.

மக்கள் விரோத பா.ஜ.க. ஆட்சியின் அவலங்களை பாரீர்!

மத்திய பாஜக ஆட்சியை அகற்ற ஆதரவு தாரீர்!


Previous Post

வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

Next Post

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் - ஆ.கோபண்ணா

ஆ. கோபண்ணா

ஆ. கோபண்ணா

Next Post
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் - ஆ.கோபண்ணா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

22/07/2020
ஃபேஸ்புக் ஆதரவுடன் பா.ஜ.க. தேர்தல் தில்லுமுல்லு: அம்பலப்படுத்திய அமெரிக்க பத்திரிகை

ஃபேஸ்புக் ஆதரவுடன் பா.ஜ.க. தேர்தல் தில்லுமுல்லு: அம்பலப்படுத்திய அமெரிக்க பத்திரிகை

18/08/2020
ராஜஸ்தான் நகராட்சித் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி : 3 -வது இடத்துக்கு தள்ளப்பட்ட பா.ஜ.க.

ராஜஸ்தான் நகராட்சித் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி : 3 -வது இடத்துக்கு தள்ளப்பட்ட பா.ஜ.க.

16/12/2020
ரூ.150 கோடி மதிப்பு ஓட்டலை அடிமாட்டு விலைக்கு வாஜ்பாய் அரசு விற்ற வழக்கு: சிபிஐ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

ரூ.150 கோடி மதிப்பு ஓட்டலை அடிமாட்டு விலைக்கு வாஜ்பாய் அரசு விற்ற வழக்கு: சிபிஐ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

19/09/2020

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

13
ஆதியின் கடிதம்

ஆதியின் கடிதம்

11
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

10
மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

8
எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

21/11/2021
வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

21/11/2021

Recent News

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

21/11/2021
வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

21/11/2021
தேசிய முரசு – Desiya Murasu

Follow Us

  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

Recent News

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
  • About Us
  • Privacy Policy
  • Contact Us

© 2020 DesiyaMurasu.com

No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

© 2020 DesiyaMurasu.com