• About Us
  • Privacy Policy
  • Contact Us
தேசிய முரசு - Desiya Murasu
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
தேசிய முரசு - Desiya Murasu
No Result
View All Result
Home தேசிய அரசியல்

கவலைப்படாத ‘பி எம் கேர்ஸ்’: என்ன ஆனது ரூ. 9 ஆயிரம் கோடி? துக்ளக் குருமூர்த்தி பதில் கூறுவாரா?

by ஆ. கோபண்ணா
20/07/2020
in தேசிய அரசியல்
0
கவலைப்படாத ‘பி எம் கேர்ஸ்’:  என்ன ஆனது ரூ. 9 ஆயிரம் கோடி?      துக்ளக் குருமூர்த்தி    பதில் கூறுவாரா?
Share on FacebookShare on TwitterShare on WhatsAppShare On Email

‘பிஎம் கேர்ஸ்’  எனப்படும் ‘பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசர கால நிவாண நிதி’ – க்கு இதுவரை கொரோனா நிவாரண நிதியாக ரூ.9 ஆயிரத்து 677 கோடியே 90 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது. ஆனால், இந்த தொகையில் இருந்து கொரோனாவை எதிர்த்துப் போராட செலவு செய்யப்பட்ட தொகை போதுமானதாக இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
 
கொரோனாவை எதிர்த்துப் போராட, ‘பிஎம் கேர்ஸ்’  நிதிக்கு  நன்கொடை அளிக்குமாறு கடந்த மார்ச் 28 ஆம் தேதி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது.  அறிவிப்பு வெளியான 52 நாட்களில் ரூ. 9 ஆயிரத்து 677 கோடியே 90 லட்சம் வசூலானது.

கடந்த மே 13 ஆம் தேதி பிரதமர் மோடி வெளியிட்ட அறிவிப்பில், கொரோனா தடுப்புப் பணிகளுக்காக ‘பிஎம் கேர்ஸ்’  நிதியிலிருந்து  ரூ. 3 ஆயிரத்து 100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.  ‘பிஎம் கேர்ஸ்’  நிதியிலிருந்து  செலவு செய்வதாக வெளியிடப்பட்ட முதல் மற்றும் ஒரே அறிவிப்பு இதுதான். மே 20 ஆம் தேதி வரை வசூலான ரூ. 9 ஆயிரத்து 677 கோடியே 90 லட்சத்தில், இது 32 சதவீதமாகும்.

‘பிஎம் கேர்ஸ்’   நிதிக்கு  வரும் நன்கொடை குறித்தோ, இந்த நிதியிலிருந்து செலவு செய்யப்படுவது குறித்தோ எந்த விவரமும் அரசு தரப்பு ஆவணங்களில் இருந்து கிடைக்கவில்லை. இந்த தொகை மக்களிடம் இருந்து நன்கொடையாக கிடைத்திருந்தால்,  தலைமை கணக்கு தணிக்கையாளரின் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டதா? என்ற விவரமும் வெளியிடப்படவில்லை.

ரூ. 9 ஆயிரத்து 677 கோடியே 90 லட்சத்தில்,  ரூ. 4 ஆயிரத்து 308 கோடியே 30 லட்சம் அரசு ஏஜென்ஸிகள் மற்றும் மத்திய அரசு ஊழியர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களின் ஒரு நாள் சம்பளத்தைப் பிடித்த வகையில் ரூ. 438 கோடியே 80 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது. குறைந்தது ரூ. 5 ஆயிரத்து 369 கோடியே 60 லட்சம் கார்பரேட் சமூக பொறுப்பு நிதி என்ற வகையில் தனியார் நிறுவனங்கள், தொழிற்துறையினர் மற்றும் சமூக அமைப்புகளிடம் இருந்து வசூலாகியுள்ளது.

மேலும்,  அரசு ஏஜென்ஸிகளின் உறுதிமொழிப் பத்திரம்  மூலம் ரூ.1,250 கோடி பெறப்பட்டுள்ளது. பல்வேறு தனியார் நிறுவனங்களும் ரூ. 772 கோடியே 40 லட்சம் வரை உறுதிமொழிப் பத்திரம் கொடுத்துள்ளன. பாலிவுட் திரைப்படத்துறையினர் ரூ. 53 கோடியே 80 லட்சம் வரை உறுதிமொழிப் பத்திரம் கொடுத்துள்ளனர்.  2 வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்தும் ‘பிஎம் கேர்ஸ்’   நிதிக்கு. ரூ. 22 கோடி வரை உறுதிமொழிப் பத்திரம் தரப்பட்டுள்ளது.

இதுதவிர, கொரோனா நிவாரண நிதிக்காக பிரதமரின் தேசிய நிவாரண நிதி, முதலமைச்சர் நிவாரண நிதி, மாநில பேரிடர் நிர்வாக நிதி மற்றும் எம்பிக்களின் தொகுதி மேம்பாட்டு நிதியாக  ரூ. 7 ஆயிரத்து 855 கோடியும் வசூலானது.

‘பிஎம் கேர்ஸ்’ நிதிக்கு மட்டும் வந்த ரூ. 9 ஆயிரத்து 677 கோடியே 90 லட்சத்தை கொண்டு எவ்வளவோ வாங்கியிருக்க முடியும். உதாரணத்துக்கு, கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு வரும் சுகாதாரப் பணியாளர்களுக்கு 14 கோடியே 50 லட்சம் பாதுகாப்பு உடைகளை, தலா ரூ. 666.75 என்ற விலையில் வாங்கியிருக்க முடியும். அல்லது இந்த தொகையில், 200 கோடிக்கும் மேற்பட்ட  என் 95 முகக் கவசங்களை வாங்கியிருக்க முடியும். ரூ. 42 மற்றும் ரூ.141.60 செலவில் 68 கோடி பாதுகாப்பு கண்ணாடிகள் வாங்கியிருக்க முடியும். இந்த பெரும் தொகையை பயன்படுத்தி மருத்துவ ஊழியர்கள் பற்றாக்குறை இருக்கும் இடங்களில் புதிதாக நியமனம் செய்திருக்கலாம்

தனியார் ஆய்வகங்களில் கொரோனாவை கண்டறிய செய்யப்படும் ஆர்டி-பிசிஆர் பரிசோதனைக்கு ரூ. 4 ஆயிரத்து 500 க்கு மேல் வசூலிக்கக் கூடாது என்று கூறியிருக்கலாம். ரூ. 4 ஆயிரத்து 500 கட்டணத்தில், 2 கோடி பேருக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்திருக்கலாம். ஆனால், மே 19 ஆம் தேதி வரை, 20 லட்சத்து 40 ஆயிரம் கொரோனா பரிசோதனைகள் மட்டுமே இந்தியாவில் செய்யப்பட்டுள்ளன.

இந்த தொகையிலிருந்து, தங்கள் சொந்த ஊருக்கு திரும்புவதற்கு தவித்துக் கொண்டிருந்த புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரயில் கட்டணத்துக்கு கொடுத்திருக்கலாம்.

கொரோனா போன்ற அவசர கால சூழலை சமாளிக்கவே ‘பிஎம் கேர்ஸ்’  நிதி உருவாக்கப்பட்டது.  இதே காரணத்துக்காக இதே போன்ற பிரதமரின் தேசிய நிவாரண நிதி கடந்த 1948 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.  2019 ஆம் டிசம்பர் வரை, பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து செலவழிக்கப்படாமல் ரூ.3 ஆயிரத்து 800 கோடி உள்ளது. ஏற்கனவே பிரதமரின் தேசிய நிவாரண நிதி இருக்கும்போது, புதிதாக ‘பிஎம் கேர்ஸ்’   நிதி ஏன் உருவாக்கப்பட்டது என்பது குறித்து மத்திய அரசிடம் இருந்து இதுவரை விளக்கம் இல்லை.

‘பிஎம் கேர்ஸ்’   நிதிக்கு லார்சன் ட்யூப்ரோ நிறுவனம் ரூ. 150 கோடி நன்கொடையாக வழங்கியது. ஆனால்,  ஏப்ரல் மாதம் ஊதியம் கிடைக்காததால், இந்த நிறுவனத்தின் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர்.  ஊழியர்களின் ஊதியத்தை குறைத்த ரிலையன் இன்டஸ்ட்ரீஸ், பிஎம் கேர்ஸ் நிதிக்கு ரூ.500 கோடி கொடுத்தது. கொரோனா நிவாரணத்துக்கு மருத்துவர்களிடமும் நன்கொடையை அரசு பெற்றது. அதேசமயம், தங்களுக்கு பாதுகாப்பு உடைகள் தரக் கோரி மருத்துவர்கள் போராடியதையும் பார்த்தோம்.

எந்த நோக்கத்துக்காக பிஎம் கேர்ஸ் நிதி உருவாக்கப்பட்டதோ, அந்த நோக்கம் நிறைவேறவில்லை என்பதையே இத்துனை ஆதாரங்களும் பறைசாற்றுகின்றன. இதன்பிறகும், ‘பிஎம் கேர்ஸ்’  நிதியின் நோக்கத்தையும், அவசியத்தையும் மக்களுக்கு தெரிவிக்காமல் இருந்தால், சந்தேகத்தை மேலும் வலுப்படுத்துவதாகவே அமையும்.

Previous Post

துக்ளக் குருமூர்த்தியின் ஆதாரமற்ற அவதூறுகளை முறியடிப்போம் !

Next Post

தமிழக அரசே! பால் உற்பத்தியாளர்களை பாதுகாத்திடுக! - தலைவர் கே.எஸ். அழகிரி அறிக்கை - 21.07.2020

ஆ. கோபண்ணா

ஆ. கோபண்ணா

Next Post
கொரோனாவை ஒழிக்காமல் 12000 கோடி ரூபாயில் நெடுஞ்சாலை டெண்டரா? தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம்

தமிழக அரசே! பால் உற்பத்தியாளர்களை பாதுகாத்திடுக! - தலைவர் கே.எஸ். அழகிரி அறிக்கை - 21.07.2020

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
பெருந்தலைவர் காமராஜரின் பொற்கால ஆட்சி சரித்திரம் படைத்த சாதனைகள்!

பெருந்தலைவர் காமராஜரின் பொற்கால ஆட்சி சரித்திரம் படைத்த சாதனைகள்!

15/07/2020
நாட்டுப்பற்றையும், மொழிப்பற்றையும் தமது இரு விழிகளாகக் கொண்ட மகாகவி சுப்பிரமணிய பாரதி!

நாட்டுப்பற்றையும், மொழிப்பற்றையும் தமது இரு விழிகளாகக் கொண்ட மகாகவி சுப்பிரமணிய பாரதி!

11/09/2020

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

22/07/2020
காமராஜர் தாலாட்டு!

காமராஜர் தாலாட்டு!

15/07/2020

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

13
ஆதியின் கடிதம்

ஆதியின் கடிதம்

11
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

10
மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

8
எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

21/11/2021
வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

21/11/2021

Recent News

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

21/11/2021
வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

21/11/2021
தேசிய முரசு – Desiya Murasu

Follow Us

  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

Recent News

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
  • About Us
  • Privacy Policy
  • Contact Us

© 2020 DesiyaMurasu.com

No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

© 2020 DesiyaMurasu.com