கொரோனா பரவலையடுத்து போடப்படும் தடுப்பூசிகள் குறித்து உண்மை நிலையை வெளிப்படுத்தும் உயிரோட்டமுள்ள கார்ட்டூன்கள்:
1.(ஜனநாயக திருவிழா)
மருத்துவனைத் தொடர்பானவற்றையும் இணைத்து வாக்குப்பதிவு இயந்திரத்தை கார்ட்டூனாக வரைந்துள்ளார் சதீஷ் ஆச்சார்யா. கொரோனா ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் போது, பல மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடத்துவதை தம் கார்ட்டூனில் இப்படி சுட்டிக்காட்டியுள்ளார்.
2.(நீங்கள் எதிர்மறையாக எண்ணும்போது மருத்துவம் நேர்மறையான செய்தியை தரும்)

ஆர்எஸ்எஸ் தலைவர் தத்தாத்ரேயா ஹோஸாபலே சமீபத்தில் அளித்த பேட்டியில், தேச விரோத சக்திகள் கொரோனா சூழலை நம்பகமற்ற மற்றும் எதிர்மறையாக மாற்றுகின்றன. இதனை ஊடகங்களில் நேர்மறையான விஷயம் என்று கூறுகிறார்கள் என குறிப்பிட்டிருந்தார். இதனைக் கேலி செய்யும் வகையில் இ.பி. உன்னி இந்த கார்ட்டூனை வரைந்துள்ளார்.
3.(தடுப்பூசி / தடுப்பூசி தயாரிப்பு நிறுவனம்)

சீரம் மருந்து தயாரிப்பு நிறுவனம் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி விலையை தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ. 600 ஆகவும், மாநில அரசுகளுக்கு ரூ.400 ஆகவும் உயர்த்தியதை நேர்த்தியான காட்டூன் மூலம் வெளிப்படுத்தியுள்ளார் பி.மஹ்மூத்.
4.(சார், உங்களைப் பற்றி ஆஸ்திரேலிய கார்ட்டூனிஸ்ட் கார்ட்டூன் வரைந்துள்ளார்…!ஹலோ அக்சய் குமார் ஜி…நீங்கள் கார்ட்டூனும் வரைவீர்களா?)

‘இறந்த யானையின் மீது சவாரி’ என மோடி பற்றி ஆஸ்திரேலிய நிதி மதிப்பீட்டை அடிப்படையாகக் கொண்டு, அலோக் நிரந்தர் வரைந்த கார்ட்டூன்.
5.(ஒவ்வொரு ஓட்டும் எண்ணப்படும்/ வாக்காளர்கள் அல்ல)

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தில் மோடி தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதை விமர்சித்து சுஹாயில் நக்ஸ்பந்தி வரைந்த கார்ட்டூன்.