• About Us
  • Privacy Policy
  • Contact Us
தேசிய முரசு - Desiya Murasu
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
தேசிய முரசு - Desiya Murasu
No Result
View All Result
Home தேசிய அரசியல்

2017-18 ஆம் ஆண்டில் 95 சதவீத தேர்தல் பத்திரம் மூலம் பாஜகவுக்கு நன்கொடை : ரூ. 1 கோடி பத்திரங்கள் அதிக அளவில் விற்பனை

by Admin
30/12/2020
in தேசிய அரசியல்
0
2017-18 ஆம் ஆண்டில் 95 சதவீத தேர்தல் பத்திரம் மூலம் பாஜகவுக்கு நன்கொடை : ரூ. 1 கோடி பத்திரங்கள் அதிக அளவில் விற்பனை
Share on FacebookShare on TwitterShare on WhatsAppShare On Email

இதுவரை 6 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு தேர்தல் நன்கொடைப் பத்திரங்கள் விற்பனையாகியுள்ளன. இதில், கடந்த 2019-20 ஆம் ஆண்டில் மட்டும் 55 சதவீத தேர்தல் பத்திரங்கள் விற்பனையாகியுள்ளன.

அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் நன்கொடையாக பத்திரங்கள் மூலம் நன்கொடை அளிக்கும் திட்டத்தை கடந்த 2018 ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் தேதி மத்திய அரசு கொண்டு வந்தது. இதன்படி, அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிப்போர் பெயர்கள் வெளியிடப்பட்டாது. இதன்பின்னர், 2017-18 பட்ஜெட்டிலும் இது குறித்து அறிவிக்கப்பட்டது.

அரசியல் கட்சிகளிடம் புழங்கும் கருப்புப் பணத்தைக் கட்டுப்படுத்தவும், வெளிப்படையான நிதி நிலையை மேம்படுத்தவும் தேர்தல் நன்கொடை பத்திர முறை கொண்டு வரப்பட்டதாகக் கூறப்பட்டது.

தேர்தல் பத்திர முறையை அறிமுகப்படுத்தி 2 ஆண்டுகள் ஆகிவிட்டன. தற்போது, தேர்தல் பத்திரங்களின் வெளிப்படைத்தன்மை மற்றும் தவறாகப் பயன்படுத்துவது குறித்து பல விவாதங்கள் நடைபெற்றுள்ளன.

2019 ஆம் ஆண்டு மார்ச் 1 ஆம் தேதி முதல் தேர்தல் பத்திரங்கள் பாரத ஸ்டேட் வங்கியில் 12 முறை விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த 2019 மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் மட்டும் 20 நாட்கள் தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 2019 ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 20 வரை (9 ஆவது கட்டம்) அதிகபட்சமாக ரூ.2,256.4 கோடி மதிப்புள்ள தேர்தல் பத்திரங்கள் விற்பனையாகியுள்ளன. 2019 மார்ச் 1 முதல் மார்ச் 15 வரை( 8 ஆவது கட்டம்) ரூ.1,365.7 கோடி மதிப்புள்ள் தேர்தல் பத்திரங்கள் விற்பனையாகியுள்ளன.

2019 ஆம் ஆண்டு மே 6 ஆம் தேதி முதல் மே 10 ம் தேதி வரை (10 ஆவது கட்டம்) ரூ.822.25 கோடி அளவுக்கு தேர்தல் பத்திரங்கள் விற்றுள்ளன.

இந்த 3 கட்ட தேர்தல் பத்திரங்கள் விற்பனை 2019 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை ஒட்டியே நடைபெற்றுள்ளது கவனிக்கத்தக்கது. பொதுத்தேர்தலின் போது, 3 கட்ட விற்பனையிலும் ரூ.4,444.32 கோடி அளவுக்கு தேர்தல் பத்திரங்கள் விற்பனையாகியுள்ளன. இந்த 3 கட்டங்களில் 73 சதவீத தேர்தல் பத்திரங்கள் விற்றுள்ளன.

2019-20 ஆம் நிதியாண்டில் ரூ. 3,355.93 கோடி அளவுக்கு தேர்தல் பத்திரங்கள் விற்றுள்ளன. கடந்த நிதியாண்டு முழுவதும் விற்கப்பட்ட தேர்தல் பத்திரங்களின் மதிப்பான ரூ.2,550.78 கோடியை விட இது அதிகமாகும். 2017-18 நிதியாண்டில் 2018 மார்ச் மாதத்தில் முதல் கட்ட தேர்தல் பத்திர விற்பனை ரூ.220 கோடியாகும்.

ரூ. 1,000, ரூ. 10,000, ரூ. 1 லட்சம் , ரூ. 10 லட்சம் மற்றும் ரூ. 1 கோடி வரிசையில் பத்திரங்கள் விற்கப்படுகின்றன. கடந்த 2019 ஆம் ஆண்டு அக்டோபர் வரை, பல்வேறு வரிசைகளில் 12,313 தேர்தல் பத்திரங்கள் விற்றுள்ளன. இதில் அதிகபட்சமாக ரூ. 1 கோடி மதிப்பிலான 5,624 தேர்தல் பத்திரங்கள் விற்றுள்ளன. விற்பனையான மொத்த தேர்தல் பத்திரங்களில் இது 45.68 சதவீதமாகும்.

2017-18 ஆம் ஆண்டில் தேர்தல் ஆணையத்திடம் பாஜக சமர்ப்பித்த ஆவணத்தின்படி, பாரத ஸ்டேட் வங்கி மூலம் விற்பனையான தேர்தல் பத்திரங்களில். 95 சதவீத தேர்தல் பத்திரங்கள் பாஜகவுக்கு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: EconomyPolitical EconomyPoliticsRights
Previous Post

போற்றும் மோடி; தூற்றும் பா.ஜ.க. : முஸ்லீம்கள் விஷயத்தில் இரட்டை வேடம் அம்பலம்

Next Post

60 நாள் பொது முடக்கம் இந்திய மக்களுக்கு எதிரான குற்றம் : பிரதமர் மீது ஹர்ஸ் மந்தர் கடும் குற்றச்சாட்டு

Admin

Admin

Next Post
60 நாள் பொது முடக்கம் இந்திய மக்களுக்கு எதிரான குற்றம் : பிரதமர் மீது ஹர்ஸ் மந்தர் கடும் குற்றச்சாட்டு

60 நாள் பொது முடக்கம் இந்திய மக்களுக்கு எதிரான குற்றம் : பிரதமர் மீது ஹர்ஸ் மந்தர் கடும் குற்றச்சாட்டு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
பெருந்தலைவர் காமராஜரின் பொற்கால ஆட்சி சரித்திரம் படைத்த சாதனைகள்!

பெருந்தலைவர் காமராஜரின் பொற்கால ஆட்சி சரித்திரம் படைத்த சாதனைகள்!

15/07/2020
நாட்டுப்பற்றையும், மொழிப்பற்றையும் தமது இரு விழிகளாகக் கொண்ட மகாகவி சுப்பிரமணிய பாரதி!

நாட்டுப்பற்றையும், மொழிப்பற்றையும் தமது இரு விழிகளாகக் கொண்ட மகாகவி சுப்பிரமணிய பாரதி!

11/09/2020

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

22/07/2020
காமராஜர் தாலாட்டு!

காமராஜர் தாலாட்டு!

15/07/2020

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

13
ஆதியின் கடிதம்

ஆதியின் கடிதம்

11
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

10
மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

8
எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

21/11/2021
வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

21/11/2021

Recent News

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

21/11/2021
வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

21/11/2021
தேசிய முரசு – Desiya Murasu

Follow Us

  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

Recent News

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
  • About Us
  • Privacy Policy
  • Contact Us

© 2020 DesiyaMurasu.com

No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

© 2020 DesiyaMurasu.com

  • facebook
  • twitter
  • whatsapp