• About Us
  • Privacy Policy
  • Contact Us
தேசிய முரசு - Desiya Murasu
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
தேசிய முரசு - Desiya Murasu
No Result
View All Result
Home தேசிய அரசியல்

நரேந்திர தபோல்கர் படுகொலை வழக்கு; முடிச்சுகளை அவிழ்க்காத சிபிஐ-க்கு விருது

by ஆ. கோபண்ணா
24/08/2020
in தேசிய அரசியல்
0
நரேந்திர தபோல்கர் படுகொலை வழக்கு; முடிச்சுகளை அவிழ்க்காத சிபிஐ-க்கு விருது
Share on FacebookShare on TwitterShare on WhatsAppShare On Email

மருத்துவரும் பகுத்தறிவாளருமான மகாராஷ்ட்ராவைச் சேர்ந்த நரேந்திர தபோல்கர் தீவிர இந்து அமைப்புகளால் சுட்டுக் கொல்லப்பட்டு 7 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. 5 புலனாய்வு அமைப்புகள் விசாரணை, பல்வேறு கைது நடவடிக்கை என ஆரம்பத்தில் குதிரை வேகமெடுத்த விசாரணை,  இப்போது ஆமை வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது.

மகாராஷ்ட்ரா மாநிலத்தில் இந்து ராஜ்யம் என்ற கோஷத்துடன் திரிந்த கும்பலுக்கு எதிராக பிரச்சாரம் செய்த நரேந்திர தபோல்கர், அவர்களுக்கு சிம்ம சொப்பனமாகவும் திகழ்ந்தார். இந்நிலையில், கடந்த 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20 ஆம் தேதி மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த தபோல்கரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு தப்பியோடினர்.

இந்த படுகொலையை செய்தது, தீவிர இந்துமத அமைப்புகள் என குற்றம் சாட்டப்பட்டது. சில கைது நடவடிக்கைக்குப் பின்னர், இந்த வழக்கில் சிறு முன்னேற்றம் கூட இல்லை. தபோல்கரின் குடும்பத்தாரும் அவர்களது நண்பர்களும் நீதிக்காக காத்திருக்கிறார்கள்.  

தபோல்கரின் மகன் ஹாமித் கூறும்போது, “சிபிஐ போன்ற பெரும் புலனாய்வு அமைப்புகூட, என் தந்தை கொலை வழக்கை முடிக்க முடியாதது வலியை ஏற்படுத்துகிறது” என்றார். தபோல்கரின் மகள் முக்தா கூறும்போது, “என் தந்தை படுகொலைக்குப் பிறகு  2015 ஆம் ஆண்டு நிகழ்ந்த கம்யூனிஸ்ட் தலைவர் கோவிந்த் பன்சாரே மற்றும் கன்னட அறிஞர் கல்புர்கி படுகொலை மற்றும் 2017 ஆம் ஆண்டு நிகழ்ந்த பெங்களூரு பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் போன்றோர் படுகொலைகள் எதற்காக நிகழ்ந்தது என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. எங்கள் தந்தை படுகொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கிடைக்கும் போதுதான் நாங்கள் மகிழ்ச்சியும் அமைதியும் அடைவோம். ‘சனாதன் சன்ஸ்தா’ என்ற இந்து அமைப்பு தான் என் தந்தையின் படுகொலைக்கு பின்னணியில் இருந்ததாகக் கூறி, அந்த அமைப்பைச் சேர்ந்த சிலரை கைது செய்தனர். ஆனால், அதற்குப் பிறகு வழக்கு விசாரணை என்ன ஆனது என்றே தெரியவில்லை” என்றார்.

தபோல்கர் கொலை வழக்கை கடந்த 2014 ஆம் ஆண்டு   சிபிஐ-க்கு மாற்றி மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அப்போது, சிபிஐ-யும் மகாராஷ்ட்ரா அரசும் இணைந்து தபோல்கர் கொலையில் துப்புக்  கொடுத்தால் ரூபாய் 10 லட்சம் வெகுமதி தரப்படும் என்றும் அறிவித்தன. மகாராஷ்ட்ரா சிஐடி, ஏடிஎஸ் மற்றும் மத்திய புலனாய்வு அமைப்புகளான என்ஐஏ, சிபிஐ உள்ளிட்ட 5 அமைப்புகள் விசாரித்துவிட்டன. 

கடந்த 2016 ஆம் ஆண்டு இந்த வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு எடுத்துக் கொண்டதும்,’சனாதன் சன்ஸ்தா’ என்ற இந்து தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த முக்கிய புள்ளியான மருத்துவர் வீரேந்திரசின் தாவ்டே உட்பட சிலர் கைது செய்யப்பட்டனர். தபோல்கர் படுகொலையை நிகழ்த்த தாவ்டே மூளையாக செயல்பட்டதாக அப்போது சி.பி.ஐ கூறியது. அதேசமயம், கம்யூனிஸ்ட் தலைவர் கோவிந்த் பன்சாரே கொலை வழக்கிலும் தாவ்டேவை மும்பை காவல் துறையினர் கைது செய்தனர்.

இந்து ராஜ்யம் என்ற கோஷத்துடன் தொடங்கப்பட்ட ‘சனாதன் சன்ஸ்தா’ என்ற அமைப்பின் மீது, 2008 ஆம் ஆண்டு மகாராஷ்ட்ரா மாநிலம் தானே, பன்வேல் குண்டுவெடிப்புகள், 2009 ஆண்டு கோவாவில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், தபோல்கர், கோவிந்த் பன்சாரே மற்றும் எம்.எம். கல்புர்கி ஆகியோர் படுகொலையில் ‘சனாதன் சன்ஸ்தா’ அமைப்புக்கு நேரடி தொடர்பு உள்ளதும் விசாரணையில் உறுதியாகியுள்ளது. எனினும், தபோல்கர் படுகொலை வழக்கு விசாரணையில் ,எந்த முன்னேற்றமும் இல்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தவண்ணம் உள்ளன. இது குறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் கூறும்போது, ”இந்தி நடிகர் சுஷாந்த் தற்கொலை வழக்கையும் சி.பி,ஐ. விசாரணைக்கு எடுத்துள்ளது. இதுவும் நரேந்திர தபோல்கர் கொலை வழக்கைப் போல் தான் தீர்வு காணப்படாமல் முடியும்” என்று கோடிட்டுக் காட்டியுள்ளார். 

இந்நிலையில், தபோல்கர் கொலை வழக்கில் சிறப்பாக செயல்படுவதாகக் கூறி, கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு பதக்கங்களை வழங்கி கவுரவித்தது மத்திய உள்துறை அமைச்சகம் என்பதையும் இந்த நேரத்தில் நினைவுகூர்வது அவசியம்.

Tags: CBIGauri LankeshNarendra Dabholkar
Previous Post

எஸ்.பி.பி உடல் நிலை சம்பந்தப்பட்ட விவகாரத்தில் தமிழக அரசின் அணுகுமுறைகள் கவலையளிக்கிறது.

Next Post

கொரோனாவை கண்டு கடுகளவும் கவலை கொள்ளாமல் தேர்தல் பணியைத் தொடங்கி வைத்த தலைவர் கே.எஸ்.அழகிரி! அரசியல் கட்சிகளின் முன்மாதிரியாக திகழும் தமிழ்நாடு காங்கிரஸ்!

ஆ. கோபண்ணா

ஆ. கோபண்ணா

Next Post
கொரோனாவை கண்டு கடுகளவும் கவலை கொள்ளாமல் தேர்தல் பணியைத்  தொடங்கி வைத்த தலைவர் கே.எஸ்.அழகிரி! அரசியல் கட்சிகளின் முன்மாதிரியாக திகழும் தமிழ்நாடு காங்கிரஸ்!

கொரோனாவை கண்டு கடுகளவும் கவலை கொள்ளாமல் தேர்தல் பணியைத் தொடங்கி வைத்த தலைவர் கே.எஸ்.அழகிரி! அரசியல் கட்சிகளின் முன்மாதிரியாக திகழும் தமிழ்நாடு காங்கிரஸ்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

22/07/2020
ஃபேஸ்புக் ஆதரவுடன் பா.ஜ.க. தேர்தல் தில்லுமுல்லு: அம்பலப்படுத்திய அமெரிக்க பத்திரிகை

ஃபேஸ்புக் ஆதரவுடன் பா.ஜ.க. தேர்தல் தில்லுமுல்லு: அம்பலப்படுத்திய அமெரிக்க பத்திரிகை

18/08/2020
ராஜஸ்தான் நகராட்சித் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி : 3 -வது இடத்துக்கு தள்ளப்பட்ட பா.ஜ.க.

ராஜஸ்தான் நகராட்சித் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி : 3 -வது இடத்துக்கு தள்ளப்பட்ட பா.ஜ.க.

16/12/2020
ரூ.150 கோடி மதிப்பு ஓட்டலை அடிமாட்டு விலைக்கு வாஜ்பாய் அரசு விற்ற வழக்கு: சிபிஐ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

ரூ.150 கோடி மதிப்பு ஓட்டலை அடிமாட்டு விலைக்கு வாஜ்பாய் அரசு விற்ற வழக்கு: சிபிஐ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

19/09/2020

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

13
ஆதியின் கடிதம்

ஆதியின் கடிதம்

11
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

10
மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

8
எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

21/11/2021
வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

21/11/2021

Recent News

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

21/11/2021
வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

21/11/2021
தேசிய முரசு – Desiya Murasu

Follow Us

  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

Recent News

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
  • About Us
  • Privacy Policy
  • Contact Us

© 2020 DesiyaMurasu.com

No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

© 2020 DesiyaMurasu.com

  • facebook
  • twitter
  • whatsapp