• About Us
  • Privacy Policy
  • Contact Us
தேசிய முரசு - Desiya Murasu
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
தேசிய முரசு - Desiya Murasu
No Result
View All Result
Home தேசிய அரசியல்

வங்கிகள் தேசியமயம்: சுகமும் சுமையுமான 50 ஆண்டு பயணம்

by Admin
21/07/2020
in தேசிய அரசியல்
0
வங்கிகள்  தேசியமயம்: சுகமும் சுமையுமான 50 ஆண்டு பயணம்

வங்கிகளை தேசிய மயமாக்குவது குறித்து 17 ஜுலை 1969 இல் நடைபெற்ற நாடாளுமன்ற காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் பிரதமர் இந்திரா காந்தி கலந்து கொண்ட போது எடுக்கப்படம்

Share on FacebookShare on TwitterShare on WhatsAppShare On Email

” சமுதாயத்தில் சோசலிச கட்டமைப்புக்கு உட்பட்டு நமது திட்டங்களையும், கொள்கைகளையும் உருவாக்க வேண்டும் என 1954 ஆம் ஆண்டுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் முடிவு எடுக்கப்பட்டது. அந்த வகையில், அதிகார உச்சியில் இருக்கும் பொருளாதாரத்தை கட்டுப்படுத்துவது அவசியம். குறிப்பாக, ஏழை நாட்டின் வளர்ச்சிக்காக பல்வேறு குழுவினர் மற்றும் மண்டலங்களில் நிலவும் சமமற்ற நிலையை குறைக்க வேண்டும்….”

– வங்கிகள் தேசியமயமாக்கல் குறித்து அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி தெரிவித்த கருத்துதான் இது.

கடந்த 1969 ஆம் ஆண்டு 14 வங்கிகளை அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி தேசியமயமாக்கினார். இந்த மாபெரும் சீர்திருத்தம் நடைபெற்று 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.

இந்த 50 ஆண்டுகளில் வங்கிகளின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என்பதை, வங்கி கடன் மோசடிகளும், முறைகேடுகளும் படம் பிடித்துக் காட்டுகின்றன. வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டு 50 ஆண்டுகளில் அரசியல் ரீதியாக பலன் தந்துள்ளதா? இல்லை, பொருளாதார ரீதியில் பலன் தந்துள்ளதா? என்ற விவாதம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

உலக சந்தை முதலாளித்துவமயமான நிலையில், கடந்த 1990 ஆம் ஆண்டு தனியார் வங்கிகள் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டது. ஒரு காலக்கட்டத்தில் பொதுத்துறை வங்கிகளை ஓரம் கட்டிவிட்டு, தனியார் வங்கிகள் லாபம் ஈட்டத் தொடங்கின. இது குறித்தும் பல தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்தன.

1947 – ல் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, வங்கித்துறை திவாலாகிக் கொண்டிருந்தது. அப்போது, இருளில் ஒளிரும் ஒரே ஒரு விளக்கு போல இருந்தது இம்பீரியல் வங்கி. அதுதான் இப்போது இருக்கும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா. இந்த வங்கி 1955 – ல் தேசியமயமாக்கப்பட்டது.

இந்திய ரிசர்வ் வங்கி 1935 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 1948 ஆம் ஆண்டுக்கு முன்பே  சில வங்கிகளோடு சேர்த்து ரிசர்வ் வங்கியும் தேசியமயமாக்கப்பட்டது. வரையறுக்கப்பட்ட பணிகளை மட்டுமே செய்து வந்த ரிசர்வ் வங்கி, இன்று வங்கிகளை மேம்படுத்தவும், பொருளாதாரத்தை வலுப்படுத்தும் அரசு இயந்திரமாகவும் மாறியுள்ளது.

இந்த நிலையில், பொருளாதார வளர்ச்சிக்கு வங்கிகள் பரந்த அளவில் கடன் வழங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. ஆனால் வங்கிகள் அதனை செய்யாததால், 1961 முதல் 1967 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில், 10 லட்சத்து 48 ஆயிரமாக இருந்த வங்கிக் கணக்குகள் 22 ஆயிரமாக குறைந்தன.

இந்த நிலையில் தான், வங்கிகளை தேசியமயமாக்க வேண்டும் என்ற கோரிக்கை நாடாளுமன்றத்துக்குள்ளும், வெளியேயும் எழுந்தது.

சுதந்திரத்துக்குப் பிறகு, இந்திய அரசின் சோசலிச லட்சியத்தை அடைவதற்காகவே, வங்கிகளை தேசியமயமாக்க அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி முடிவு செய்தார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் அறிக்கையின் அடிப்படையிலேயே இந்த வரலாற்று சிறப்புமிக்க முடிவை இந்திரா காந்தி எடுத்தார்.

எல்ஐசி எனப்படும் இந்திய ஆயுள் காப்பீட்டுக்கழகத்தை 1956 ஆம் ஆண்டு உருவாக்கியபோதே, காப்பீட்டுத்துறை தேசியமயாக்கப்பட்டுவிட்டது. ஏற்கனவே தேசியமயமாக்கப்பட்ட ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா தவிர, மற்ற வங்கிகள் அனைத்தும் 1969 ஆம் ஆண்டு தேசியமயமாக்கப்பட்டன.

வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டதன் பயனாக, விவசாயம், மற்றும் சிறு தொழில் ஆகிவயற்றுக்கான கடனுதவியை இரட்டிப்பாக்க தேசிய கடன் வழங்கும் கவுன்சில் முடிவு செய்தது. இதற்கு முன்பு இந்த இரு துறைகளும் கடனுதவி பெற முடியாத நிலையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

14 வங்கிகளை தேசியமயமாக்க, 1969 ஆம் ஆண்டு வங்கி முறை சட்டத்தின் படி நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. இதில் முக்கியமான நிபந்தனையாக, தேசிய கொள்கை மற்றும் அதன் இலக்கை அடைய பொருளாதாரத்தை சிறந்த முறையில் மேம்படுத்துவது அவசியம் என்று கூறப்பட்டிருந்தது.

வங்கிகள் தேசியமயமாக்கலில் இன்றுவரை பல்வேறு விமர்சனங்கள் எழுந்தாலும், விவசாயம் மற்றும் சிறு தொழில் வளர்ச்சிக்கு அது பேருதவியாக இருந்திருக்கிறது. இன்றும் இருந்து கொண்டிருக்கிறது.

இதன்மூலம், தேசிய மயமாக்கலின் பின்னணியில் இருந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் லட்சியம் நிறைவேறியிருப்பதையும் மறுக்க இயலாது.

Previous Post

மோசமான பொருளாதாரத்தால் 5 கோடி பேர் வேலை இழப்பர்: புரோனாப் சென்

Next Post

சீனாவின் சதுரங்க ஆட்டம் : இந்தியாவுக்கு 'செக்' ?

Admin

Admin

Next Post
சீனாவின் சதுரங்க  ஆட்டம் :         இந்தியாவுக்கு  ‘செக்’ ?

சீனாவின் சதுரங்க ஆட்டம் : இந்தியாவுக்கு 'செக்' ?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

22/07/2020
ஃபேஸ்புக் ஆதரவுடன் பா.ஜ.க. தேர்தல் தில்லுமுல்லு: அம்பலப்படுத்திய அமெரிக்க பத்திரிகை

ஃபேஸ்புக் ஆதரவுடன் பா.ஜ.க. தேர்தல் தில்லுமுல்லு: அம்பலப்படுத்திய அமெரிக்க பத்திரிகை

18/08/2020
ராஜஸ்தான் நகராட்சித் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி : 3 -வது இடத்துக்கு தள்ளப்பட்ட பா.ஜ.க.

ராஜஸ்தான் நகராட்சித் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி : 3 -வது இடத்துக்கு தள்ளப்பட்ட பா.ஜ.க.

16/12/2020
ரூ.150 கோடி மதிப்பு ஓட்டலை அடிமாட்டு விலைக்கு வாஜ்பாய் அரசு விற்ற வழக்கு: சிபிஐ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

ரூ.150 கோடி மதிப்பு ஓட்டலை அடிமாட்டு விலைக்கு வாஜ்பாய் அரசு விற்ற வழக்கு: சிபிஐ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

19/09/2020

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

13
ஆதியின் கடிதம்

ஆதியின் கடிதம்

11
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

10
மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

8
எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

21/11/2021
வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

21/11/2021

Recent News

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

21/11/2021
வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

21/11/2021
தேசிய முரசு – Desiya Murasu

Follow Us

  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

Recent News

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
  • About Us
  • Privacy Policy
  • Contact Us

© 2020 DesiyaMurasu.com

No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

© 2020 DesiyaMurasu.com

  • facebook
  • twitter
  • whatsapp