• About Us
  • Privacy Policy
  • Contact Us
தேசிய முரசு - Desiya Murasu
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
தேசிய முரசு - Desiya Murasu
No Result
View All Result
Home காமராஜ் சகாப்தம்

பெருந்தலைவர் புகழ்பாடிய கவியரசர்!

by ஆ. கோபண்ணா
15/07/2020
in காமராஜ் சகாப்தம்
1
பெருந்தலைவர் புகழ்பாடிய கவியரசர்!
Share on FacebookShare on TwitterShare on WhatsAppShare On Email

இப்படியோர் நல்ல மகன் எங்கு பிறந்தான் – நம்
இந்தியத் தாய் செய்த தவம் இங்கு பிறந்தான்!

கண்ணீரில் பிறந்தவன் என்று கூறுங்கள் தோழியரே – நாட்டைக்
கண்ணீரால் காத்தவன் என்று சொல்லுங்கள் தோழியரே!

தாய்ப்பாலில் தேசபக்தி உண்டவன் அவனடியோ – அன்னை
தாலாட்டில் விடுதலை வேகம் கொண்டவன் அவனடியோ!

போராடி விடுதலை தந்த புத்தன் அவனடியோ –
நாட்டைப் பொன்னாக மாற்றியமைக்கும் சித்தன் அவனடியோ!

ஒருவீடும் சொந்தமென்று வாங்கியதில்லையடி – இந்தத்
திருநாடே சொந்தமென்று தங்கிய மன்னனடி!

வாராத பதவிகள் எல்லாம் வாசலில் நின்றதடி – எட்டிப்
பாராமல் சேவை புரிந்தான் பாரத வீரனடி!

சந்நியாசி கோலம் கொண்ட சமரச ஞானியடி – அவன்
சந்தோஷம் பிள்ளைகளுக்கு நல்கும் கல்வியடி!

பாசமகன் சிறையில் இருந்தான் பன்னிரெண்டாண்டு – ஒரு
பத்தாண்டு வாழவைத்தான் மண்ணினை ஆண்டு!

ஆசையுடன் தமிழருக்கு அறிவினைத் தந்தான் – ஜாதி
அத்தனையும் ஒன்று என்னும் உயர்வினைத் தந்தான் !

அல்லும் பகலும் சிந்தனை செய்தான் அவனம்மா – இவன்
ஆக்கிய அளவில் ஆக்கிய தலைவன் எவனம்மா!

காலம் பார்க்க அவனுக்கில்லை கைக்கடிகாரம் – நல்ல
காலத்தைத்தான் நிர்ணயிக்கும் அவன் அதிகாரம் !

சத்தியமாய் நாட்டினையே பார்த்த கண்ணாடி – அந்தத்
தலைவனுக்கே பூஜை செய்யத் தயக்கம் என்னடி?

மண்ணாசை பொன்னாசை மன்னனுக்கு இல்லையடி – ஒரு
மகராசி கைப்பிடிக்கும் எண்ணமும் இல்லையடி!

கல்விக்கூடம் அத்தனையும் அவன்பேர் சொல்லும் – அவன்
கள்ளம் கபடம் இல்லாதவன் என ஊர் சொல்லும்!

கண்ணாரக் கண்டதடி ! கற்பனைகள் இல்லையடி! – அந்நாளில்
பெருந்தலைவர் ஆட்சி சொன்ன சேதியடி!

எத்தனையோ கோடிகளைக் கொடுத்த கையடி – அது
தனக்கு என்று ஒருபொழுதும் எடுத்த தில்லையடி!

எவ்வளவோ ஆனந்தமாக இருக்கவேண்டிய நீ
நாட்டுக்காகவே அனைத்தையும் துறந்தாய்!

அவன் இல்லையேல் ஏழைக்கு வாழ்வில்லை!
அவன் இல்லையேல் தேசத்திற்கு எதுவுமே இல்லை!

பாழ்பட்டுக் கிடந்தது பாரததேசம் , வாழ்விக்க வந்தார் காந்தி!
அந்த வாழ்வை வகைப்படுத்த வந்தவன் நீ!

நாம் காமராஜ் என்னும் தெய்வத்தின் குழந்தைகள் !
அந்தக் கருணை முனிவனின் சீட கோடிகள்!

போர் வந்த போது பாரத சேனை போகின்ற வழியை ஆக்கிய வீரன்!
நேருவின் பின்னால் யார் என நாடு ஏங்கியவேளை தாங்கிய மன்னன் !

அவரை நான் தாயாகப் பார்த்தேன் ; தந்தையாகப் பார்த்தேன்;
தெய்வமாகப் பார்த்தேன்; அதன்பிறகுதான் தலைவராகப் பார்த்தேன்!

அவனை வழிபடுவோம்! அவன் புகழ் பாடுவோம்!
வாருங்கள்! வாருங்கள் !
– கவிதை வரிகள் : கவியரசர் கண்ணதாசன்

Previous Post

காமராஜரின் ஆட்சிமுறை

Next Post

காமராஜர் தாலாட்டு!

ஆ. கோபண்ணா

ஆ. கோபண்ணா

Next Post
காமராஜர் தாலாட்டு!

காமராஜர் தாலாட்டு!

Comments 1

  1. அ. மணிகண்டன் says:
    5 years ago

    அருமையான அற்புதமான வரிகள் வாழ்த்துக்கள் ஐயா அ. மணிகண்டன் தலைவர் செட்டியார்பட்டி நகர காங்கிரஸ் கமிட்டி

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
பெருந்தலைவர் காமராஜரின் பொற்கால ஆட்சி சரித்திரம் படைத்த சாதனைகள்!

பெருந்தலைவர் காமராஜரின் பொற்கால ஆட்சி சரித்திரம் படைத்த சாதனைகள்!

15/07/2020
நாட்டுப்பற்றையும், மொழிப்பற்றையும் தமது இரு விழிகளாகக் கொண்ட மகாகவி சுப்பிரமணிய பாரதி!

நாட்டுப்பற்றையும், மொழிப்பற்றையும் தமது இரு விழிகளாகக் கொண்ட மகாகவி சுப்பிரமணிய பாரதி!

11/09/2020

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

22/07/2020
காமராஜர் தாலாட்டு!

காமராஜர் தாலாட்டு!

15/07/2020

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

13
ஆதியின் கடிதம்

ஆதியின் கடிதம்

11
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

10
மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

8
எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

21/11/2021
வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

21/11/2021

Recent News

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

21/11/2021
வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

21/11/2021
தேசிய முரசு – Desiya Murasu

Follow Us

  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

Recent News

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
  • About Us
  • Privacy Policy
  • Contact Us

© 2020 DesiyaMurasu.com

No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

© 2020 DesiyaMurasu.com