• About Us
  • Privacy Policy
  • Contact Us
தேசிய முரசு - Desiya Murasu
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
தேசிய முரசு - Desiya Murasu
No Result
View All Result
Home விடுதலை வேள்வியில்

மகாத்மா காந்தி, கோட்சேவின் மரபுரிமை கோரும் ஆர்.எஸ்.எஸ்: உச்சகட்ட கேலிக்கூத்து

by ஆ. கோபண்ணா
12/08/2020
in விடுதலை வேள்வியில்
2
மகாத்மா காந்தி, கோட்சேவின்  மரபுரிமை கோரும் ஆர்.எஸ்.எஸ்: உச்சகட்ட கேலிக்கூத்து
Share on FacebookShare on TwitterShare on WhatsAppShare On Email

மகாத்மா காந்தி மற்றும் அவரை படுகொலை செய்தவனின் மரபுரிமையை ஆர்.எஸ்.எஸ். கோருவது வேடிக்கையாகவும், மூர்க்கத்தனமாகவும் உள்ளது.

ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான ஆர்கனைஷரில் எழுதப்பட்ட தலையங்கத்தில், மகாத்மா காந்தியை தங்கள் மரபுரிமையாக காங்கிரஸ் கட்சி கோர முடியாது என்றும், சங்பரிவாருக்கு மட்டுமே அந்த உரிமை உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் எழுதியுள்ள கட்டுரையில், மகாத்மா காந்திக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

இதைப்  படிக்கும் அப்பாவி வாசகர்ளுக்கு மகாத்மா காந்தி மீது மதிப்பும் பக்தியும் ஏற்படும். அதேசமயம், மகாத்மா
காந்தியை நாதுராம் கோட்ஸே படுகொலை செய்ததை நியாயப்படுத்திய பா.ஜ.க. மக்களவை உறுப்பினர் சாத்வி பிரக்யாவை கட்சியிலிருந்து வெளியேற்ற என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என, ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.கவை அப்பாவி வாசகர்கள் கேட்க வேண்டும்.

ஆர்.எஸ்.எஸ். தலைவரும், பிரதமரும் மகாத்மா காந்தியை புகழ்ந்து எழுதுகிறார்கள். ஆனால், சாத்வி பிரக்யா மீது மட்டும் நடவடிக்கை எடுக்கமாட்டார்கள். இப்படி இருக்கும் போது, மகாத்மா காந்தியையும், அவரை படுகொலை செய்த நாதுரான் கோட்சேவையும் நீங்கள் எப்படி மரபுரிமை கோர முடியும். ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு இரண்டு நாக்குகள் இருப்பது தெரியும். இப்போது 3 ஆவது நாக்கு முளைத்துள்ளதா?

ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்துக்கு மகாத்மா காந்தி வந்ததாகவும், ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை வாழ்த்தியதாகவும் பா.ஜ.கவும் ஆர்.எஸ்.எஸ் இயக்கமும்  அடிக்கடி சொல்வது வழக்கமாகியிருக்கிறது. மகாத்மா காந்தியுடன் இணைந்து பணியாற்றியதற்கான ஆதாரத்தை இவர்களால் வெளியிட முடியுமா?

1925 ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ் இயக்கம் உருவானது.  1925 ஆம் ஆண்டு முதல் 1947 ஆம் ஆண்டு வரை, இரு மாபெரும் போராட்டத்தை காந்தி நடத்தினார். 1930 முதல் 1932 வரை நடந்த ஒத்துழையாமை இயக்கம் மற்றும் 1942 ல் நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் பங்கேற்றது உண்டா? அப்போது தலைவராக இருந்த ஹெட்கேவார் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்கவும் இல்லை, சிறைக்குச் செல்லவும் இல்லை என்பதுதான் வரலாறு. சுதந்திரப் போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் ஏன் கலந்து கொள்ளவில்லை என்பதற்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை.

சுதந்திரப் போராட்டதின்போது, பிரிட்டிஷ் அரசுக்கு ஆதரவான நிலையையே இந்து மகா சபை தலைவர் வி.டி. சாவர்கர் எடுத்தார். இதனைப் பின்பற்றி சுதந்திரப் போராட்டத்தில் இருந்து விலகி நிற்குமாறு தன் தொண்டர்களை கேட்டுக் கொண்டதற்கான ஆவணங்கள் உள்ளன.  இந்துக்களை பிரிட்டிஷ் ராணுவத்தில் சேருமாறும், சிந்து மாகாணத்தில் முஸ்லீம் லீக்குடன் சேர்ந்து கூட்டணி அரசு அமைக்குமாறும் சாவர்கர் கேட்டுக் கொண்டதற்கான ஆதாரங்களும் உள்ளன.

அந்த சமயத்தில் மகாத்மா காந்தி, சர்தார் பட்டேல், நேரு, மவுலானா ஆஜாத் மற்றும் காங்கிரஸ் தலைவர்களும் தொண்டர்களும் சிறையில் இருந்தனர். இப்போது மரபுரிமை கோரும் ஆர்.எஸ்.எஸ், மகாத்மா காந்தி சிறையில் அடைக்கப்பட்டதை எதிர்த்து ஒரு போராட்டமாவது நடத்தியிருக்குமா?

ஆர்.எஸ்.எஸ். குறித்து மகாத்மா காந்தி  தெரிவித்த கருத்துகளை வசதியாக மறந்துவிடுகிறார்கள், அல்லது மறைத்துவிடுகிறார்கள்.

டெல்லி காங்கிரஸ் கமிட்டி தலைவர் மகாத்மா காந்திக்கு அனுப்பிய புகாரில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் லத்தி பயிற்சியில் ஈடுபட்டதாகவும், இந்தியா இந்துக்களுக்கே சொந்தம் என்று கோஷமிட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்த பயிற்சி முகாமில் பேசியவர்கள், ”முதலில் ஆங்கிலேயர்கள் வெளியேறட்டும், அதன்பின்னர் முஸ்லீம்களை அடிபணிய வைப்போம். நாம் சொல்வதை அவர்கள் கேட்காவிட்டால், அவர்களை கொல்லுவோம்” என்று சூளுரைத்தனர். இதனையும் காந்தியடிகள் பார்வைக்கு டெல்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் கொண்டு சென்றார்.

இது குறித்து தமது ஹரிஜன் பத்திரிகையில் எழுதிய மகாத்மா காந்தி, ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கோஷங்கள் தவறானவை. இந்த அமைப்பின் பொறுப்பாளர்கள் இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகின்றேன். இந்தியாவில் பிறந்த எல்லோருக்கும் இந்த நாடு சொந்தமானதே.  சுதந்திர இந்தியாவில் இந்து ராஜ்யத்துக்கு வாய்ப்பு இல்லை. மதம் என்பது தனிப்பட்ட விவகாரம். இதனை அரசியல் ஆக்கக் கூடாது என்று குறிப்பிட்டிருந்தார்.

“இந்த முழக்கங்கள் தவறானதும் அபத்தமானதும் ஆகும். இங்கு பிறந்து வளர்ந்த அனைவருக்கும் இந்தியா  சொந்தமானது. அவர்களைப் பார்த்துக்கொள்ள வேறு எந்த நாடும் இல்லை. எனவே, பார்சிகள், இந்திய கிறிஸ்தவர்களாக மாறிய பெனி இஸ்ரேலியர்கள், முஸ்லீம்கள் மற்றும் மற்ற இந்து மதத்தை சாராத அனைவரும் இந்துக்களைப் போன்றவர்கள் தான்.  சுதந்திர இந்தியா இந்து ராஜ்யமாக இருக்காது. அது, பெரும்பான்மை கொண்ட எந்த மதத்தின் பிரிவாகவோ, சமூகத்தின் அடிப்படையிலோ இல்லாமல் இந்திய ராஜ்யமாக இருக்கும். ஆனால்,  அனைத்து மக்களின் பிரதிநிதிகள் மத வேறுபாடு இல்லாதவர்களாக இருப்பர்… மதம் என்பது தனிப்பட்ட விவகாரம். அதற்கு அரசியலில் இடம் இல்லை.”

எனவே, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் உண்மை முகத்தை மகாத்மா காந்தி  நன்கு அறிந்திருந்தார். 1946 ஆம் ஆண்டு நடந்த வகுப்புவாத கலவரம் குறித்து மகாத்மா காந்தியின்  சிஷ்யர் ஒருவர் கூறும்போது, “ஹிட்லர் தலைமையின் கீழ் பணியாற்றிய  நாஜிக்களாகவும், முசோலினி தலைமையின் கீழ் பணியாற்றிய பாசிசவாதிகள் போல  ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் மாறுவார்கள்” என்றார்.
 
ஆர்.எஸ்.எஸ். பத்திரிகையான ஆர்கனைஷர் தலையங்கத்தில், சுதந்திரத்துக்குப் பிறகு காங்கிரஸை கலைத்துவிட மகாத்மா காந்தி விரும்பினார் என்று குறிப்பிட்டுள்ளனர். இதை வைத்துத்தான் காந்தியடிகளின் மரபுரிமையை ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் கோருகிறார்கள்.

‘கடைசி விருப்பமும் ஏற்பாடும்’ என்ற தலைப்பில் மகாத்மா காந்தி எழுதிய கட்டுரை, 1948 ஆம் ஆண்டு பிப்ரவரி 2 ம் தேதி, அதாவது அவர் படுகொலை செய்யப்படுவதற்கு 3 நாட்களுக்கு முன் ஹரிஜன் பத்திரிகையில் வெளியானது. இதில், சுதந்திரத்துக்குப் பின்னர் காங்கிரஸ் கட்சியை மகாத்மா காந்தி கலைக்கச் சொன்னாரா? என்பதற்கு விடை உள்ளது.

இறக்கப் போகிறோம் என்று தெரியாமலேயே 1949 ஆம் ஆண்டு ஜனவரி 29 ஆம் தேதி எழுதிய தமது கட்டுரைக்கு ‘கடைசி விருப்பமும் ஏற்பாடும்’ என மகாத்மா காந்தி தலைப்பு வைத்திருக்கிறார். சுதந்திரத்துக்குப் பின் காங்கிரஸ் கட்சியை கலைத்துவிடலாமா என்ற கருத்து, 1946 இல் காங்கிரஸ் கட்சியால் தொடங்கப்பட்ட, சுதந்திர இந்தியாவில் காங்கிரஸின் பங்கு என்ற விவாதத்தின் ஒரு பகுதியாகும். பல தலைவர்கள் தங்கள் பங்களிப்பை அளித்தார்கள். மகாத்மா காந்தியும் அந்த விவாதத்தில் தன் பங்களிப்பை அளித்தார்.

இந்த விவாதத்தில் தெரிவித்த கருத்துகளைத்தான் பிப்ரவரி 2, 1948 ஆம் ஆண்டு தமது ஹரிஜன் பத்திரிகையில் இந்த கட்டுரை மூலம் தெளிவுபடுத்தியுள்ளார். இது மகாத்மா காந்தியின் மற்றொரு பிரகடனமாக இருந்தது. அதில் அவர் கூறும்போது:

” இந்திய தேசிய காங்கிரஸ் பழமையான அரசியல் அமைப்பு. உயிரிழப்புகள் இல்லாமல் வன்முறை இல்லாத பல போராட்டங்களை விடுதலைக்காக நடத்திய காங்கிரஸ் கட்சி மரிப்பதை அனுமதிக்க முடியாது. இந்த கட்சி தேசத்தோடு மட்டுமே மரிக்கும்.”

‘செய் அல்லது செத்து மடி’ என்ற முழக்கத்துடன் பிரிட்டிஷாருக்கு எதிராக போராடியபோது மகாத்மா காந்தி இந்திய மக்களுக்கு அளித்த இந்த வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டு, பாஜகவும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் அவரது மரபுரிமை கோரட்டும்.
இதோ அந்த வாக்குறுதி:

”இந்தியாவில் பிறந்து வளர்ந்த எல்லோருக்கும் இந்தியா சொந்தமானது. அவர்களைப் பார்த்துக்கொள்ள வேறு நாடு இல்லை.. சுதந்திர இந்தியாவில் இந்து ராஜ்யம் இருக்காது…”

இந்த வாக்குறுதியை பா.ஜ.கவும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் நிறைவேற்றுவார்களா?

தேசிய குடியுரிமை பதிவேடு மற்றும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை செயல்படுத்தப்போவதாக ஒட்டுமொத்த நாட்டையே மிரட்டவில்லையா? இதுதான் மகாத்மா காந்தியின் உண்மையான வாக்குறுதியா?  இதயத்தில் கை வைத்து பா.ஜ.கவும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் இதற்கு பதில் தரட்டும்.

தண்ணீரைப் போன்ற வாழ்க்கையில் எதையும் கலந்துவிடக் கூடாது என்று கூறியவர் மகாத்மா காந்தி. ஆனால், ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு அரசியல் சாசனத்தில் அளிக்கப்பட்டிருந்த வாக்குறுதிகளை மீறுவது, அம்மாநில மக்களின் சிவில் உரிமைகளை மறுப்பது போன்ற செயல்கள் மகாத்மா காந்தியின் மரபுரிமையுடன் ஒத்துப் போகிறதா?

தேசிய குடியுரிமை பதிவேடு மற்றும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்துவோம் என்று மிரட்டுவது, மகாத்மா காந்தியின் வாக்குறுதிக்கு எதிரானது அல்லவா?

”வாழ்க்கை தண்ணீர் போன்றது. அதில் எதையும் கலந்துவிடக் கூடாது”  என்று காந்தியடிகள் சொன்னார். ஆனால் ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு வழங்கப்பட்ட அடிப்படை உரிமைகளை பறிப்பது மகாத்மா காந்தியின் வாக்குறுதியை மீறுவது ஆகாதா?

மகாத்மா காந்தியின் அனைத்து வாக்குறுதிகளையும் மீறிவிட்டு,   அவரின் மரபுரிமையை கோர ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு என்ன தகுதி இருக்கிறது?

Tags: mahatma gandhirss
Previous Post

சுற்றுச்சூழலை அழிக்கும் பா.ஜ.க. அரசின் புதிய வரைவு அறிக்கை! தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம்!

Next Post

ராஜஸ்தானில் பா.ஜ.க.வின் ஆட்சி கவிழ்ப்பு முயற்சியை முறியடித்த தலைவர் ராகுல், பிரியங்கா!

ஆ. கோபண்ணா

ஆ. கோபண்ணா

Next Post
ராஜஸ்தானில் பா.ஜ.க.வின் ஆட்சி கவிழ்ப்பு முயற்சியை முறியடித்த தலைவர் ராகுல், பிரியங்கா!

ராஜஸ்தானில் பா.ஜ.க.வின் ஆட்சி கவிழ்ப்பு முயற்சியை முறியடித்த தலைவர் ராகுல், பிரியங்கா!

Comments 2

  1. Abbas Naushad says:
    2 years ago

    Well written and articulated. Can I translate this in English and post it in my Facebook Page?

    Reply
    • A. Gopanna says:
      2 years ago

      Thanks, Go ahead!

      Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

22/07/2020
ஃபேஸ்புக் ஆதரவுடன் பா.ஜ.க. தேர்தல் தில்லுமுல்லு: அம்பலப்படுத்திய அமெரிக்க பத்திரிகை

ஃபேஸ்புக் ஆதரவுடன் பா.ஜ.க. தேர்தல் தில்லுமுல்லு: அம்பலப்படுத்திய அமெரிக்க பத்திரிகை

18/08/2020
ராஜஸ்தான் நகராட்சித் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி : 3 -வது இடத்துக்கு தள்ளப்பட்ட பா.ஜ.க.

ராஜஸ்தான் நகராட்சித் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி : 3 -வது இடத்துக்கு தள்ளப்பட்ட பா.ஜ.க.

16/12/2020
ரூ.150 கோடி மதிப்பு ஓட்டலை அடிமாட்டு விலைக்கு வாஜ்பாய் அரசு விற்ற வழக்கு: சிபிஐ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

ரூ.150 கோடி மதிப்பு ஓட்டலை அடிமாட்டு விலைக்கு வாஜ்பாய் அரசு விற்ற வழக்கு: சிபிஐ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

19/09/2020

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

13
ஆதியின் கடிதம்

ஆதியின் கடிதம்

11
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

10
மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

8
எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

21/11/2021
வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

21/11/2021

Recent News

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

21/11/2021
வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

21/11/2021
தேசிய முரசு – Desiya Murasu

Follow Us

  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

Recent News

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
  • About Us
  • Privacy Policy
  • Contact Us

© 2020 DesiyaMurasu.com

No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

© 2020 DesiyaMurasu.com