• About Us
  • Privacy Policy
  • Contact Us
தேசிய முரசு - Desiya Murasu
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
தேசிய முரசு - Desiya Murasu
No Result
View All Result
Home விடுதலை வேள்வியில்

தியாகி சின்ன அண்ணாமலை நூற்றாண்டு விழா! புகழ் ஓங்கட்டும்! ஒளிரட்டும்! தலைவர் கே.எஸ்.அழகிரி புகழ்மாலை!

by Admin
09/08/2020
in விடுதலை வேள்வியில்
1
தியாகி சின்ன அண்ணாமலை நூற்றாண்டு விழா! புகழ் ஓங்கட்டும்! ஒளிரட்டும்! தலைவர் கே.எஸ்.அழகிரி புகழ்மாலை!
Share on FacebookShare on TwitterShare on WhatsAppShare On Email

விடுதலைப் போராட்ட வீரரும் பதிப்புலகின் பிதாமகன் எனப் போற்றப்படும் நகைச்சுவை மன்னன் திரு. சின்ன அண்ணாமலை அவர்களின் நூற்றாண்டு விழா, வெள்ளையனே வெளியேறு மற்றும் ஆகஸ்டுப் புரட்சி நடைபெற்ற 9ஆம் தேதி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி இத்துடன் இணைக்கப்பட்டுள்ள அழைப்பிதழின்படி இன்று 9.8.2020 மாலை 5 மணிக்கு காணொளிக் காட்சி மூலம் நூற்றாண்டு விழா சிறப்பாக நடைபெறவுள்ளது.

அன்றைய இராமநாதபுரம் மாவட்டம், காரைக்குடி அருகில் உள்ள உய்யக்கொண்டான் சிறுவயல் என்னும் சிற்றூரில் 1920ஆம் ஆண்டு ஜுன் 18 அன்று, சின்ன அண்ணாமலை அவர்கள் பிறந்தார். பெற்றோர் இவருக்கு முதலில் வைத்த பெயர் நாகப்பன். சுவிகாரம் விடுவது செட்டிநாட்டின் பரம்பரை வழக்கம். அதன்படி இவரது 12ஆவது வயதில் தேவக்கோட்டையில் வசித்து வந்த திரு. நாச்சியப்பன் செட்டியார், -மீனாட்சி ஆச்சி தம்பதியருக்குச் சுவிகாரமாகக் கொடுக்கப்பட்டார். இவர்கள்தான் அண்ணாமலை என்று பெயர் சூட்டினார்கள். இதில் அதிசயம் என்னவென்றால், இவரைப் பெற்றவர்கள் பெயரும் தத்துப்பெற்றவர்கள் பெயரும் ஒன்றே ஆகும்.

1944இல் சென்னை கோகிலே மண்டபத்தில் தேசியக்கவி நாமக்கல் கவிஞர் அவர்களுக்குப் பணம் முடிப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முதறிஞர் இராஜாஜி தலைமையில் நடைபெற்ற அந்த விழாக் குழுவில் பெருந்தலைவர் காமராஜ், எழுத்தாளர் வ.ரா. போன்றவர்கள் உறுப்பினர்களாக இருந்தனர். ரூபாய் 20 ஆயிரம் நிதி திரட்டி தேசியக்கவிக்குப் பொற்கிழி வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில்தான் அண்ணாமலையை சின்ன அண்ணாமலை என்று இராஜாஜி அழைத்தார். அதற்குக் காரணம், திருவண்ணாமலையில் என்.அண்ணாமலைப்பிள்ளை என்றொரு தியாகி இருந்தார். அவர் பிரபலமான காங்கிரஸ் தலைவர். பெயர் குழப்பம் வந்துவிடக்கூடாது என்பதற்காக “சின்ன அண்ணாமலை” என்று இராஜாஜி அழைத்தார். அந்தப் பெயரே இவருக்கு நிரந்தரமாகிவிட்டது.

சின்ன அண்ணாமலை தமது இளமைப்பருவம் முதல் விடுதலைப் போராட்ட இயக்கங்களில் தீவிரமாகப் பங்குகொண்டார். மகாத்மா காந்தி காரைக்குடிக்கு வந்தபோது அவரைத் தரிசித்து அவரிடமிருந்து ஆப்பிள் பழத்தை பெறுகிற வாய்ப்பை பெற்றார். அன்றுமுதல் காந்தி பக்தரானார்.

சின்ன அண்ணாமலை எப்போதும் காவிநிறச் சட்டையைத்தான் அணிவார். தமது இறுதிக்காலம் வரை அதை அவர் மாற்றிக்கொண்டதே இல்லை. காரைக்குடியைச் சேர்ந்தவராக இருந்ததால், தமிழ்மொழி மீது அளவற்ற பற்றுக்கொண்டவராக இருந்தார். அதேபோல் தமிழிசையிலும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். அந்தக் காலகட்டத்தில், முதல் தமிழிசை மாநாடு சிதம்பரத்தில் நடைபெறுவதாகப் பரபரப்பாகச் செய்திகள் வெளிவந்தன. அந்த வகையில், தியாகி டி.ஆர் அருணாசலம் அவர்களுடன் இராஜா சர். அண்ணாமலை செட்டியார் அவர்களைச் சந்தித்து நிதி கேட்டார். இராஜா சர். இவர்களை அன்பாக உபசரித்து ரூபாய் பத்தாயிரம் நிதி கொடுத்தனுப்பினார். அதை வைத்துக்கொண்டு சிதம்பரத்தில் முதல் தமிழிசை மாநாடு நடத்தினார்கள்.

1942 ஆகஸ்டு மாதம் முதல் தேதியிலிருந்தே நாட்டின் விடுதலைக்கான செயல் திட்டங்களை காந்தியடிகள் வகுத்தார். ஆகஸ்டு 9ஆம் தேதி மும்பையில் காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது. ஆனால், 8ஆம் தேதியே காந்தியடிகள் கைது செய்யப்பட்டார். இந்தச் செய்தி காட்டுத் தீபோல் பரவியது. அதனால் ”வெள்ளையனே வெளியேறு” என்னும் முழக்கம் நாடெங்கும் ஒலிக்கத் தொடங்கியது.

இதில் சின்ன அண்ணாமலை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த செய்தி தீயாக பரவியதும் தேவகோட்டையைச் சேர்ந்த 20 ஆயிரம் பேர் சின்ன அண்ணாமலையை அடைத்து வைத்திருந்த திருவாடனை சிறையை உடைத்து விடுதலை செய்து அவரை தூளில் தூக்கி அமர்த்திக் கொண்டு வெள்ளையனே வெளியேறு முழக்கங்களுடன் தேவகோட்டையில் ஊர்வலமாக சென்றதை எவரும் மறந்திட இயலாது. இதைத்தான் ‘தேவகோட்டைப் புரட்சி’ என்று வரலாற்றில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. பெருந்தலைவர் காமராஜர், மூதறிஞர் ராஜாஜி, ம.பொ.சி., நடிகர் திலகம் சிவாஜி ஆகியோரிடம் நெருங்கிய நட்பு கொண்டிருந்தவர்.

சென்னை, தியாகராய நகர் பகுதியில் சின்ன அண்ணாமலையின் தமிழ் பண்ணை பதிப்பகம் இலக்கியவாதிகளின் புகலிடமாக விளங்கியது. அது தமிழ் எழுத்தாளர்களின் வேடந்தாங்கலாக மாற்றம் பெற்றது. ராஜாஜி, சத்தியமூர்த்தி, டி.கே.சி., கல்கி, வ.ரா, டி.எஸ்.சொக்கலிங்கம், நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை, கண்ணதாசன், நாடோடி போன்ற மாபெரும் தமிழ் எழுத்துலக வேந்தர்களின் புத்தகங்களை வெளியிட்ட பெருமை தமிழ் பண்ணைக்கு உண்டு. தமிழகப் பதிப்புலகிற்கு முன்னோடியாக விளங்கியவர் சின்ன அண்ணாமலை.

திரைப்படத்துறையில் நிறைய  படங்களுக்கு கதை, வசனம் எழுதி தயாரித்து வெளியிட்டவர். தேசிய செல்வராகவும், தியாகச் செம்மலாகவும், தமிழ் தொண்டராகவும், தமிழ் பதிப்பகத்தின் பிதாமகராகவும் விளங்கி பல அரிய சாதனைகளை படைத்த தியாகி சின்ன அண்ணாமலை அவர்களின் நூற்றாண்டு விழாவை, தேசிய எழுச்சி விழாவாக கொண்டாடுவது காங்கிரஸ் கட்சி தமது கடமையாக கருதுகிறது.

அகில இந்திய சிவாஜி ரசிகர் மன்ற தலைவராகப் பொறுப்பேற்று, தமது நகைச்சுவையான பேச்சாற்றல் மூலம் பெருந்தலைவர் காமராஜர் தலைமையில் ஆயிரக்கணக்கான இளைஞர்களை காங்கிரஸில் சேர்த்த பெருமை தியாகி சின்ன அண்ணாமலைக்கு உண்டு. எனவே, தேசியம் வளர்த்த தியாகி சின்ன அண்ணாமலைக்கு பெருமையும், புகழும் சேர்க்கிற வகையில் தமிழகம் முழுவதும் நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

Previous Post

பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை உலுக்கிய ஆகஸ்ட் புரட்சி - 1942!

Next Post

சிவாஜி ரசிகர் மன்றத்தை நிறுவிய சின்ன அண்ணாமலை

Admin

Admin

Next Post
சின்ன அண்ணாமலை நூற்றாண்டு நிறைவு 100: ஒரு தேச பக்தரின் திரைப் பயணம்!

சிவாஜி ரசிகர் மன்றத்தை நிறுவிய சின்ன அண்ணாமலை

Comments 1

  1. George melkiure says:
    5 years ago

    ஐயா காங்கிரஸ் மேடை பேச்சாளர் பெயர்கள் பட்டியல் கிடைக்குமா

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
பெருந்தலைவர் காமராஜரின் பொற்கால ஆட்சி சரித்திரம் படைத்த சாதனைகள்!

பெருந்தலைவர் காமராஜரின் பொற்கால ஆட்சி சரித்திரம் படைத்த சாதனைகள்!

15/07/2020
நாட்டுப்பற்றையும், மொழிப்பற்றையும் தமது இரு விழிகளாகக் கொண்ட மகாகவி சுப்பிரமணிய பாரதி!

நாட்டுப்பற்றையும், மொழிப்பற்றையும் தமது இரு விழிகளாகக் கொண்ட மகாகவி சுப்பிரமணிய பாரதி!

11/09/2020

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

22/07/2020
காமராஜர் தாலாட்டு!

காமராஜர் தாலாட்டு!

15/07/2020

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

13
ஆதியின் கடிதம்

ஆதியின் கடிதம்

11
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

10
மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

8
எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

21/11/2021
வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

21/11/2021

Recent News

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

21/11/2021
வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

21/11/2021
தேசிய முரசு – Desiya Murasu

Follow Us

  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

Recent News

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
  • About Us
  • Privacy Policy
  • Contact Us

© 2020 DesiyaMurasu.com

No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

© 2020 DesiyaMurasu.com