<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>தேசிய முரசு &#8211; Desiya Murasu</title>
	<atom:link href="https://desiyamurasu.com/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://desiyamurasu.com/</link>
	<description>DesiyaMurasu – Daily Opinions &#38; Analysis on Latest News  &#124; Tamil News</description>
	<lastBuildDate>Mon, 17 Jan 2022 10:10:34 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.8.3</generator>

<image>
	<url>https://desiyamurasu.com/wp-content/uploads/2020/07/cropped-FAV-copy-1-32x32.png</url>
	<title>தேசிய முரசு &#8211; Desiya Murasu</title>
	<link>https://desiyamurasu.com/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? &#8211; ஆ.கோபண்ணா</title>
		<link>https://desiyamurasu.com/news-tamilnadu/why-saidai-duraisamy-criticising-congress-when-praising-mgr/</link>
					<comments>https://desiyamurasu.com/news-tamilnadu/why-saidai-duraisamy-criticising-congress-when-praising-mgr/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Admin]]></dc:creator>
		<pubDate>Mon, 17 Jan 2022 10:10:32 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழக அரசியல்]]></category>
		<category><![CDATA[congress]]></category>
		<category><![CDATA[indira gandhi]]></category>
		<category><![CDATA[MGR]]></category>
		<category><![CDATA[rajiv gandhi]]></category>
		<guid isPermaLink="false">https://desiyamurasu.com/?p=4588</guid>

					<description><![CDATA[<p>தமிழகத்தில் 13 ஆண்டுகாலம் தொடர்ந்து முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். அவர்களின் பிறந்தநாள் இன்று. எம்.ஜி.ஆர். அவர்கள் அ.தி.மு.க. தொடங்குவதற்கும், ஆட்சியில் செயல்படுவதற்கும் உறுதுணையாக இருந்தவர்கள் பிரதமர்களாக இருந்த இந்திரா காந்தியும், ராஜிவ்காந்தி அவர்களும் என்பதை அனைவரும் அறிவார்கள். இவை அன்றைய அரசியலில் உருவான திருப்புமுனைகளால் ஏற்பட்டது. எம்.ஜி.ஆர். புகழைப் பரப்புகிற முயற்சியில் சைதை துரைசாமி அவர்கள் ஈடுபடுவதில் எந்த தவறும் இல்லை. அவரோடு அரசியலில் பயணித்தவருக்கு அத்தகைய உரிமை உண்டு. ஆனால், இன்று தினத்தந்தியில் அவர் எழுதி [&#8230;]</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-tamilnadu/why-saidai-duraisamy-criticising-congress-when-praising-mgr/">எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? &#8211; ஆ.கோபண்ணா</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>தமிழகத்தில் 13 ஆண்டுகாலம் தொடர்ந்து முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். அவர்களின் பிறந்தநாள் இன்று. எம்.ஜி.ஆர். அவர்கள் அ.தி.மு.க. தொடங்குவதற்கும், ஆட்சியில் செயல்படுவதற்கும் உறுதுணையாக இருந்தவர்கள் பிரதமர்களாக இருந்த இந்திரா காந்தியும், ராஜிவ்காந்தி அவர்களும் என்பதை அனைவரும் அறிவார்கள். இவை அன்றைய அரசியலில் உருவான திருப்புமுனைகளால் ஏற்பட்டது. எம்.ஜி.ஆர். புகழைப் பரப்புகிற முயற்சியில் சைதை துரைசாமி அவர்கள் ஈடுபடுவதில் எந்த தவறும் இல்லை. அவரோடு அரசியலில் பயணித்தவருக்கு அத்தகைய உரிமை உண்டு. ஆனால், இன்று தினத்தந்தியில் அவர் எழுதி வெளிவந்துள்ள கட்டுரையில் &#8216;திருப்பூர் குமரன் மனைவி இராமாயி அம்மாள் வறுமையில் வாடிய போது காங்கிரஸ் கட்சி உதவி செய்ய முன்வராமல் அவரை மறந்துவிட்டதாக&#8217; குற்றம்சாட்டி எழுதியிருக்கிறார். முதலமைச்சர் எம்.ஜி.ஆர்., திருப்பூர் குமரன் மனைவிக்கு நிதியுதவி செய்ததைப் பற்றிக் குறிப்பிடும் போது, தேவையில்லாமல் காங்கிரஸ் கட்சியை ஏன் சீண்டிப் பார்க்கிறார் என்று தெரியவில்லை. 1967இல் ஆட்சியை காங்கிரஸ் கட்சி இழந்த பிறகு முதலமைச்சர்களாக இருந்த கலைஞரும், எம்.ஜி.ஆரும் இதுபோன்ற உதவிகளை நிறையச் செய்திருக்கிறார்கள். அதைப் பற்றிக் குறிப்பிடும் போது காங்கிரஸ் கட்சியைப் பற்றி விமர்சிக்க வேண்டிய அவசியம் இல்லை.</p>



<p>மறைந்த எம்.ஜி.ஆருக்கு அன்றைய பிரதமர் இந்திரா காந்தி செய்த உதவிகளைக் கணக்கிடுகிற போது, எம்.ஜி.ஆர். செய்த இத்தகைய உதவிகள் பொருட்படுத்தக்கூடியது அல்ல. எம்.ஜி.ஆர். உடல்நலக்குறைவு ஏற்பட்டு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, அவரைப் பார்க்க பிரதமர் இந்திரா காந்தி தனி விமானத்தில் அவசர அவசரமாக சென்னை வந்தார். மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து அப்போலோ மருத்துவமனைக்கு இந்திரா காந்தி பயணித்த காரின் பின்னே அ.தி.மு.க. அமைச்சர்கள் சோகமே உருவாய் அவர்களது கார்களில் அணிவகுத்து வந்ததை நானே நேரில் பார்த்திருக்கிறேன். அப்போலோவில் எம்.ஜி.ஆரின் உடல்நலம் குறித்து மருத்துவர்களிடம் விசாரித்து விட்டு அவருக்கு உரிய சிகிச்சைகளை செய்வதோடு, தேவைப்பட்டால் வெளிநாட்டில் சிகிச்சை செய்யவும் ஏற்பாடு செய்வதாகக் கூறினார். பிறகு, எம்.ஜி.ஆருக்கு வெளிநாட்டுச் சிகிச்சை தேவைப்பட்டதால் விமானத்தையே மருத்துவமனையாக்கி, அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி அவரை அமெரிக்காவுக்கு பாதுகாப்பாகப் பயணிக்க வைத்து, மருத்துவமனையில் அனுமதித்து உரிய சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தவர் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி.</p>



<p>அதைப்போலவே இந்திரா காந்தி படுகொலைக்குப் பிறகு நடைபெற்ற 1984 தேர்தலில் அமெரிக்க மருத்துவமனையிலிருந்தே வேட்புமனு தாக்கலில் கையொப்பமிட்டுத் தேர்தலில் நிற்பதற்கு அனைத்து வசதிகளையும் செய்தவர் பிரதமராக இருந்த ராஜிவ்காந்தி. அத்தகைய நன்றிப் பெருக்கை வெளிப்படுத்துகிற வகையில் தான் சென்னை கத்திப்பாரா சந்திப்பில் பண்டித ஜவஹர்லால் நேரு சிலை திறப்பு விழாவில் அன்றைய பிரதமர் ராஜிவ்காந்தியை முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் கட்டித் தழுவி கண்ணீர் மல்க உரையாற்றியதை சைதை துரைசாமி மறந்திருக்க முடியாது. தமது உயிரைக் காப்பாற்றிய இந்திரா படுகொலை செய்யப்பட்டது மருத்துவமனையில் இருந்த போது எம்.ஜி.ஆருக்கு தெரிவிக்கப்படவில்லை. உடல்நலம் தேறிய சூழலில் ராஜிவ்காந்தி பிரதமராகப் பொறுப்பேற்று முதல் முறையாக சந்திக்கிற போது, எம்.ஜி.ஆர். எந்தளவிற்கு உணர்ச்சிப் பெருக்கோடு இருந்தார் என்பதை எல்லோரும் அறிவார்கள். தமது உயிரைக் காப்பாற்றிய இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்ட பிறகு, பிரதமராகப் பொறுப்பேற்ற ராஜிவ்காந்தியுடன் எம்.ஜி.ஆர். சந்தித்த காட்சி அங்கு கூட்டத்தில் திரண்ட மக்களின் நெஞ்சை உலுக்குவதாக இருந்தது. அத்தகைய நன்றி உணர்ச்சிமிக்க உறவுகளை வைத்திருந்ததை எல்லாம் மறந்துவிட்டு திருப்பூர் குமரன் மனைவிக்கு செய்த நிதியுதவியை குறிப்பிட்டு காங்கிரஸ் கட்சியை சிறுமைப்படுத்துவது எந்தவகையில் நியாயம் என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை.</p>



<p>அன்னை இந்திரா காந்தி, அமரர் ராஜிவ்காந்தி ஆகியோரின் ஆதரவு இல்லையென்றால் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் அரசியலில் பெற்ற வெற்றிகள் எந்தளவிற்கு சாத்தியமாகியிருக்கும் என்பதை மனசாட்சி உள்ளவர்கள் சிந்திக்க வேண்டும்.</p>



<p>எம்.ஜி.ஆர். புகழைப் பாடுங்கள். அதற்காக காங்கிரசை இழிவுபடுத்தாதீர்கள். அதைச் செய்வதற்கு உங்களுக்கு உரிமை இல்லை.</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-tamilnadu/why-saidai-duraisamy-criticising-congress-when-praising-mgr/">எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? &#8211; ஆ.கோபண்ணா</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://desiyamurasu.com/news-tamilnadu/why-saidai-duraisamy-criticising-congress-when-praising-mgr/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் &#8211; ஆ.கோபண்ணா</title>
		<link>https://desiyamurasu.com/adigopanna-letters/adhiyin-letter-on-remembrance-of-my-father-adhiraghava/</link>
					<comments>https://desiyamurasu.com/adigopanna-letters/adhiyin-letter-on-remembrance-of-my-father-adhiraghava/#comments</comments>
		
		<dc:creator><![CDATA[ஆ. கோபண்ணா]]></dc:creator>
		<pubDate>Thu, 13 Jan 2022 15:14:28 +0000</pubDate>
				<category><![CDATA[ஆதியின் கடிதம்]]></category>
		<guid isPermaLink="false">https://desiyamurasu.com/?p=4570</guid>

					<description><![CDATA[<p>இனிய நண்பர்களே, வணக்கம். கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸ் கட்சியில் முழுநேர ஊழியராக பணியாற்றி அன்னை சோனியா காந்தி, தலைவர் ராகுல்காந்தி ஆகியோரின் வாழ்த்துகளோடு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கே.எஸ். அழகிரி அவர்களது தலைமையில் துணைத் தலைவராக, ஊடகத்துறை தலைவராக உயர் பொறுப்புகளைப் பெற்று பணியாற்றி வருகிறேன். என்னைப் பொறுத்தவரை, தேர்தல் அரசியலில் இருந்து 1989 தேர்தல் முதல் விலகி, தொடர்ந்து நாள்தோறும் கட்சிப் பணியாற்றுவதில் அளவற்ற மகிழ்ச்சி அடைந்து வருகிறேன். காங்கிரஸ் [&#8230;]</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/adigopanna-letters/adhiyin-letter-on-remembrance-of-my-father-adhiraghava/">எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் &#8211; ஆ.கோபண்ணா</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>இனிய நண்பர்களே,</p>



<p>வணக்கம்.</p>



<p>கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸ் கட்சியில் முழுநேர ஊழியராக பணியாற்றி அன்னை சோனியா காந்தி, தலைவர் ராகுல்காந்தி ஆகியோரின் வாழ்த்துகளோடு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கே.எஸ். அழகிரி அவர்களது தலைமையில் துணைத் தலைவராக, ஊடகத்துறை தலைவராக உயர் பொறுப்புகளைப் பெற்று பணியாற்றி வருகிறேன். என்னைப் பொறுத்தவரை, தேர்தல் அரசியலில் இருந்து 1989 தேர்தல் முதல் விலகி, தொடர்ந்து நாள்தோறும் கட்சிப் பணியாற்றுவதில் அளவற்ற மகிழ்ச்சி அடைந்து வருகிறேன்.</p>



<figure class="wp-block-image size-large"><img fetchpriority="high" decoding="async" width="758" height="399" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/ksa.jpg" alt="" class="wp-image-2759" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/ksa.jpg 758w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/ksa-300x158.jpg 300w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/ksa-750x395.jpg 750w" sizes="(max-width: 758px) 100vw, 758px" /><figcaption>ஆ.கோபண்ணா அவர்களின் தந்தை திரு ஆதி ராகவ ரெட்டியார் அவர்களின் 80வது பிறந்தநாளில் (2.8.1998)மக்கள் தலைவர் திரு ஜி.கே.மூப்பனார் நேரில் வந்து வாழ்த்தியபோது எடுத்த படம். திரு எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன், திரு கே.எஸ்.அழகிரி ஆகியோர் உடனிருக்கிறார்கள்.</figcaption></figure>



<p>காங்கிரஸ் கட்சியில் எனக்கு பெரிய எதிர்பார்ப்பு கிடையாது. என்னை பெற்று, வளர்த்து, எம்.ஏ., பி.எல்., வரை படிக்க வைத்து, வழக்கறிஞராக சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியாற்றி கைநிறைய சம்பாதித்து குடும்பத்தை காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையோடு திருமணம் செய்து வைத்து, 91 ஆண்டுகள் முழுமையான வாழ்க்கை வாழ்ந்து, மறைந்த எனது தந்தை ஆதிராகவ ரெட்டியார் அவர்களின் 13 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று. ஆண்டுதோறும் இந்து முறைப்படி செய்ய வேண்டிய கடமைகளை இந்நாளில் செய்து வருகிறேன். ஆனாலும், என் தந்தையின் நினைவுகள் மறக்க முடியாத ஒன்றாகும்.</p>



<figure class="wp-block-image size-large"><img decoding="async" width="751" height="1024" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2022/01/11111-751x1024.jpg" alt="" class="wp-image-4579" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2022/01/11111-751x1024.jpg 751w, https://desiyamurasu.com/wp-content/uploads/2022/01/11111-220x300.jpg 220w, https://desiyamurasu.com/wp-content/uploads/2022/01/11111-768x1047.jpg 768w, https://desiyamurasu.com/wp-content/uploads/2022/01/11111-750x1023.jpg 750w, https://desiyamurasu.com/wp-content/uploads/2022/01/11111.jpg 874w" sizes="(max-width: 751px) 100vw, 751px" /></figure>



<p>அன்றைய செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் தாலுகா, தொழுப்பேட்டில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள புறகால் கிராமம் எனது சொந்த ஊர். எனது தந்தையின் சிறுவயதிலேயே அவரது தந்தை காலமானதால், தாய்மாமன் ஊரான கும்பகோணத்தை அடுத்த மருதாநல்லூரில் வளர்ந்து வந்தார். கும்பகோணத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்தார். 18 வயது நிரம்பிய அவர், தனது சொந்த ஊரான புறகால் கிராமத்திற்கு திரும்பி விட்டார். பிறகு திருமணமும் செய்து கொண்டார்.</p>



<figure class="wp-block-image size-large"><img decoding="async" width="745" height="1024" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2022/01/222-745x1024.jpg" alt="" class="wp-image-4580" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2022/01/222-745x1024.jpg 745w, https://desiyamurasu.com/wp-content/uploads/2022/01/222-218x300.jpg 218w, https://desiyamurasu.com/wp-content/uploads/2022/01/222-768x1056.jpg 768w, https://desiyamurasu.com/wp-content/uploads/2022/01/222-750x1031.jpg 750w, https://desiyamurasu.com/wp-content/uploads/2022/01/222.jpg 868w" sizes="(max-width: 745px) 100vw, 745px" /></figure>



<p>பரம்பரை இசும்பு உரிமையின் அடிப்படையில் மணியக்காரர் பணியில் சேர்ந்தார். பின்னர் எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது, அப்பதவியை பறிக்கிற வரை கீழ்அத்திவாக்கம், களத்தூர் என்ற இரு பெரிய கிராமங்களின் மணியக்காரராக இருந்தார். மன்னராட்சி ஒழிந்தாலும் கிராமங்களில் மணியக்காரர்களின் ஆட்சி நடந்து கொண்டுதான் இருந்தது. மன்னரைப் போல அதிகாரம் செலுத்த முடியாவிட்டாலும் மணியக்காரரான என் தந்தைக்கு அந்த இரண்டு கிராமங்கள் மட்டுமல்லாமல் சுற்றியிருந்த கிராமங்களிலும் மிகுந்த செல்வாக்கு இருந்தது.</p>



<p>இத்தகைய அரசியல் பின்னணியுள்ள என் தந்தை ஒரு முழு விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். தனது திருமணத்திற்கு முன்பு 2 ஏக்கர் நிலம் சொந்தமாக வைத்திருந்த அவர், தமது இறுதி காலத்தில் 80 ஏக்கர் நிலமும், 10 பம்ப் செட்டுகளும் சம்பாதித்தது தான் அவரது &#8216;அபார&#8217; வளர்ச்சி. அவர் வாழ்ந்த பெரும்பகுதியை அரசு மற்றும் வங்கிக் கடனை சமாளிப்பதிலேயே செலவழிக்க வேண்டியிருந்தது. இறுதிகட்டத்தில் குறிப்பிட்ட சில சொத்துகளை விற்று கடனை அடைத்து விடுதலையானார்.</p>



<p>சென்னைக்கு அடிக்கடி செல்கிற பழக்கம் கொண்டிருந்த அவர், சென்னை தியாகராய நகர், சாரி தெருவில் 1950களில் 3 கிரவுண்ட் நிலத்தை 5 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கினார். (தற்போதுள்ள மலபார் கோல்ட் ஹவுசுக்கு அருகில்). அங்கே ஒரு சிறிய வீடு கட்டினார். கிராமப்புறத்தில் வாழ்ந்த என் தந்தை, தமது நான்கு மகன்கள் மற்றும் ஒரு மகள் நன்றாக படிக்க வேண்டும், தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காக தொடக்கத்தில் சென்னை தியாகராய நகர் ராமகிருஷ்ணா பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தார்.</p>



<p>பிறகு ஒருசில ஆண்டுகளில் ஒருவரின் ஆலோசனையை கேட்டு இந்த சாரி தெரு வீட்டை விற்றால் ரூபாய் 20 ஆயிரம் கிடைக்கும். அதை வைத்துக் கொண்டு நமது பக்கத்து கிராமத்தில் 30 ஏக்கர் நிலம் விற்பனைக்கு வருகிறது என்ற ஆசை வார்த்தையைக் கேட்டு சென்னையில் உள்ள வீட்டை விற்றார். (இன்றைய அதன் மதிப்பு ரூபாய் 10 கோடி). அதற்குப் பிறகு, கிராமத்தில் நிலத்தை வாங்கிய அவரால், கடைசி வரை சென்னையில் எந்தவொரு சொத்தையும் வாங்க முடியவில்லை.</p>



<p>அதே நேரத்தில், காங்கிரஸ் கட்சியின் அமைப்புகளில் பொறுப்பு வகிக்காமல் செல்வாக்கோடு இருந்தார். 1957, 1962, 1967, 1971, 1977, 1980 ஆகிய பொதுத் தேர்தல்களில் அரசு மணியக்காரராக இருந்தும் காங்கிரஸ் கொடி கட்டிய காரில் பயணித்து சுற்றியிருந்த 20 கிராமங்களில் மக்கள் செல்வாக்கின் காரணமாக காங்கிரஸ் கட்சிக்கு வாக்கு சேகரிப்பார்.</p>



<p>செங்கல்பட்டு மாவட்டத்தில் அன்றைய முதலமைச்சர் எம். பக்தவச்சலம், மத்திய அமைச்சர் ஓ.வி. அளகேசன், செய்யூர் வி.கே. ராமசாமி முதலியார், தமிழக அமைச்சாக இருந்த பி.ஆர். பரமேஸ்வரன் ஆகியோருடன் மிக நெருக்கமான தொடர்பு கொண்டிருந்தார். அச்சரப்பாக்கம் ஒன்றிய பகுதியில் காங்கிரஸ் தேர்தல் பொறுப்பு என் தந்தையிடம் ஒப்படைக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களெல்லாம் எங்கள் வீட்டிற்கு வருவதும், உணவு அருந்துவதும் அடிக்கடி நடைபெறுகிற நிகழ்வுகளாகும். தேர்தல் நேரங்களில் எண்ணற்ற காங்கிரஸ் கட்சியினருக்கு நேரம், காலம் பாராமல் என் தாயார் உள்ளிட்டவர்கள் </p>



<p>கடுமையாக பணியாற்றி உணவு சமைத்து அனைவருக்கும் பரிமாறுவது அடிக்கடி நடைபெறுவதை பார்த்திருக்கிறேன். இவற்றையெல்லாம் நான்கு சகோதரர்களோடு பிறந்த நான், சிறுவயது முதற்கொண்டு ஈடுபாட்டுடன் கவனித்து வருவேன்.</p>



<p>அச்சரப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தை பொறுத்தவரை, என் தந்தையின் செல்வாக்கில் 12 முதல் 15 பஞ்சாயத்து தலைவர்கள் வெற்றி பெறுகிற நிலை 1980 ஆம் ஆண்டு வரை இருந்தது. அந்த வகையில் அச்சரப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர்களாக வருபவர்கள் என் தந்தையின் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்படுபவர்களாகவே இருந்தார்கள். அதனால், என் கிராமத்தை சுற்றியிருந்த பத்திற்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பல வளர்ச்சிப் பணிகள் என் தந்தையின் மூலமாக நிறைவேற்றப்பட்டது.</p>



<p>சட்டமன்ற உறுப்பினராக இல்லாவிட்டாலும் என் தந்தை சென்னைக்கு வரும் போதெல்லாம் பழைய சட்டமன்ற உறுப்பினர் விடுதியிலும், பிறகு புதிய சட்டமன்ற உறுப்பினர் விடுதியிலும் ஏதாவது ஒரு அறையில் தங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அப்படி அவர் தங்கிய அறை 205 இல் பார்வர்ட் பிளாக் தலைவர் மதுரை திரு. ஏ. அய்யண்ணன் அம்பலம், 210 அறையில் எங்கள் பகுதியை சேர்ந்த மேலவை உறுப்பினர் திரு. வி. வெங்கா மற்றும் 227 அறையில் மேலவை காங்கிரஸ் உறுப்பினரும், மிகச் சிறந்த சிந்தனையாளருமான பூதலுர் திரு. எம். ஆறுமுகசாமி ஆகியோரின் அறைகளில் ஏதாவது ஒன்றில்தான் தங்குவார். எப்பொழுது வந்தாலும் குறைந்தது ஒருவார காலம் தங்கிவிட்டு போவார். அப்படி அறை எண்.227 இல் தங்கும்போது தான் தியாகி திரு. எஸ்.ஏ. ரஹீம், திரு. ஏ.ஆர். மாரிமுத்து, திரு. தஞ்சை ராமமூர்த்தி, திரு. எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன், திரு. கே. ஜெகவீரபாண்டியன் மற்றும் இன்றைய காங்கிரஸ் தலைவர் திரு. கே.எஸ். அழகிரி ஆகியோருடன் 1970களில் என் தந்தைக்கு நெருக்கமான நட்பு ஏற்பட்டது. அவர்கள் எல்லோரும் அந்த அறையில் அமர்ந்து தீவிரமான அரசியல் கொள்கை பறிமாற்றங்களை விவாதங்கள் மூலம் நிகழ்த்துவார்கள். அனைவரும் ஒன்றாக சேர்ந்தே உணவு அருந்துவார்கள். அதையெல்லாம் பல நேரங்களில் கூட இருந்து உன்னிப்பாக கவனித்திருக்கிறேன்.</p>



<p>அதைத் தொடர்ந்து சென்னை மாநில கல்லூரியில் எம்.ஏ., படித்த போதும், சட்டக் கல்லூரியில் படித்தபோதும் வெளியில் அறை எடுத்து தங்கி தான் படித்தேன். அப்போது, பெரும்பாலான நேரங்களில் சோசலிச சிந்தனையாளர், எழுத்தாளர், பத்திரிகையாளர் பூதலூர் திரு. எம். ஆறுமுகசாமி அவர்கள் பேசுவதை மணிக்கணக்கில் கேட்டு அவரோடு உணவருந்தி, நாள் முழுவதையும் கழிப்பது எனது வழக்கமாகவும் இருந்தது. அத்தகைய சந்திப்புகள் தான் இன்றைக்கு என்னை அரசியல் ரீதியாக அறிவுபூர்வமாக வளர்த்திருக்கிறது.</p>



<p>என் தந்தைக்கு எப்பொழுதுமே பிறருக்கு உதவி செய்கிற சேவை மனப்பான்மை உண்டு. அவருக்கு மிக நெருங்கிய நண்பரான கும்பகோணம் தியாகி எஸ்.ஏ. ரஹீம் ஒருமுறை என் தந்தையைப் பற்றி குறிப்பிடும் போது, &#8216;சிபாரிசுகளை ரெட்டியார் வலிய ஏலத்தில் எடுப்பார்&#8217; என்று கிண்டலாக குறிப்பிடுவார். சட்டமன்ற உறுப்பினர் விடுதிக்கு வருகிற அறிமுகமில்லாத ஒருவர் தனக்கு இந்த அதிகாரியிடம் வேலை நடக்க வேண்டுமென்று கூறினால், என் தந்தை உடனே அந்த அதிகாரி எனக்கு மிகவும் வேண்டியவர், நீங்கள் என்னோடு வாருங்கள் என்று சொல்லி, அந்த அதிகாரியிடம் நேரில் அழைத்துச் சென்று அந்த பணியை தனது சொந்த செலவிலேயே முடித்து கொடுக்கிற இயல்பு கொண்டவராக இருந்தார். மணியக்காரராக பணியாற்றியதால் வருவாய்த்துறையில் நிறைய தொடர்பு உள்ளவர். அமைச்சர்களால் முடியாததை அதிகாரிகள் மட்டத்திலேயே முடித்து கொடுக்கிற ஆற்றல் பெற்றவராக இருந்ததால் மிகுந்த செல்வாக்குடன் விளங்கினார்.</p>



<p>என் தந்தை 18 வயதில் கதராடை அணிய ஆரம்பித்தார். 91 வயது வரை கதர் துணியைத் தவிர வேறு ஆடையை அணிந்ததில்லை. சலவை செய்த உடையை அணிவதில் மிகுந்த கவனத்தை செலுத்துவார். மிகுந்த கம்பீர உடைத் தோற்றத்தோடு மிடுக்காக வலம் வந்து கொண்டிருந்த அவர், பரவலாக பலதரப்பட்ட மக்களிடம் நன்மதிப்பையும், மரியாதையையும் பெற்றார். என் வீட்டில் நடைபெற்ற எனது திருமணம் உட்பட 3 திருமணங்கள் சென்னை மவுண்ட் ரோட்டில் அமைந்திருந்த ஆபட்ஸ்பரி(Abbotsbury) திருமண மண்டபத்தில் தான் நடந்தது. சாதாரண விவசாய குடும்பத்தைச் சார்ந்த என் தந்தை சக்தியை மீறி பரந்த அரசியல் நட்பு, தொடர்பு காரணமாக மூவாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் திருமணத்திற்கு வருவார்கள் என்பதால் அந்த காலத்தில் ஆபட்ஸ்பரி திருமண மண்டபத்தில் தான் எங்கள் குடும்ப திருமணங்கள் நடைபெற்றது.</p>



<p>என் தந்தை வாழ்ந்த காலத்தில் அவரால் சென்னையில் சொத்து எதுவும் வாங்க முடியவில்லை. அதற்குரிய வருமானத்தை விவசாயத்தில் சம்பாதிக்க முடியவில்லை. அதைப்போலவே, எம்.ஏ., பி.எல். படித்து வழக்கறிஞராக பணிபுரிந்து சம்பாதிக்க வேண்டிய தொழிலை கைவிட்டு, கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக முழுநேர காங்கிரஸ் ஊழியராக இருக்கிற என்னால் சென்னை நகரத்தில் என் பெயரில் குண்டுமணி சொத்து கூட இல்லை. அதைப் பற்றி நான் கவலைப்படவும் இல்லை. சொத்து சேர்க்க வேண்டுமென்று தீவிர முயற்சி எதையும் செய்ததும் இல்லை. இன்றைக்கு எனக்கு இருக்கிற ஒரே சொத்து காங்கிரஸ் உள்ளிட்ட தமிழக அரசியல் களத்தில் ஒரு எழுத்தாளராக, பத்திரிகையாளராக, தொலைக்காட்சி ஊடக விவாதங்களில் சிறப்பாக பங்கேற்கிறார் என்ற பாராட்டுகளையும், நன்மதிப்பையும் தமிழகம் முழுவதும் பெற்றதையே பெருமையாக கருதுகிறேன். மாற்றுக் கட்சியினரின் நன்மதிப்பையும் நிரம்பவே பெற்றுள்ளேன்.</p>



<p>நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினராக இல்லாவிட்டாலும் தமிழக அரசியலில் நான் வெளியிட்ட ஜவஹர்லால் நேரு, காமராஜர் உள்ளிட்ட பல நூல்கள் என் வாழ்நாளுக்கு பிறகும் எனது பெயரை நிச்சயம் ஒலித்துக் கொண்டிருக்கும். இன்னும் இதைப்போல சாதிக்க வேண்டிய பணிகள் சில உள்ளன. இதுவே எனது வாழ்வின் இலக்கு!</p>



<p>எனவே, என் வாழ்வின் லட்சியம் என்று எதைக் கருதினேனோ அதை நோக்கிய எனது பயணம் 70 வயதிற்குப் பிறகும் இன்னும் வேகமாக பயணித்துக் கொண்டிருப்பேன் என்பதை என் தந்தையின் நினைவுநாளில் உறுதியோடு கூறுகிறேன். காங்கிரஸ் கட்சியில் இறுதி மூச்சு வரை எனது பணிகளை தொடருவேன்.</p>



<blockquote class="wp-block-quote is-layout-flow wp-block-quote-is-layout-flow"><p><strong><span class="has-inline-color has-vivid-red-color">&#8216;போற்றுவோர் போற்றட்டும், தூற்றுவோர் தூற்றட்டும். என் கடன் பணி செய்து கிடப்பதே&#8217;</span></strong> </p></blockquote>



<p>என்று எனக்கு பிடித்த கவிஞர் கண்ணதாசன் வரிகளை நினைவுபடுத்தி என் தந்தையின் நினைவுநாளில் எனது மனம் திறந்த கடிதத்தை நிறைவு செய்கிறேன்.</p>



<p>அனைவருக்கும் புத்தாண்டு &#8211; பொங்கல் வாழ்த்துகள்.</p>



<p class="has-text-align-right"><em>அன்பன்,<br>ஆ. கோபண்ணா</em></p>



<p><strong><em>குறிப்பு :</em></strong> <em>எனது தந்தை திரு. ஆதிராகவ ரெட்டியார் அவர்களின் மேலே உள்ள நிழற்படங்கள் மூலம் அவரது காலச்சுவடுகளை அறிந்து கொள்ளலாம்.</em></p>
<p>The post <a href="https://desiyamurasu.com/adigopanna-letters/adhiyin-letter-on-remembrance-of-my-father-adhiraghava/">எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் &#8211; ஆ.கோபண்ணா</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://desiyamurasu.com/adigopanna-letters/adhiyin-letter-on-remembrance-of-my-father-adhiraghava/feed/</wfw:commentRss>
			<slash:comments>10</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.</title>
		<link>https://desiyamurasu.com/news-tamilnadu/%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%a3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%81-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0/</link>
					<comments>https://desiyamurasu.com/news-tamilnadu/%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%a3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%81-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[ஆ. கோபண்ணா]]></dc:creator>
		<pubDate>Sun, 21 Nov 2021 14:54:12 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழக அரசியல்]]></category>
		<guid isPermaLink="false">https://desiyamurasu.com/?p=4546</guid>

					<description><![CDATA[<p>மக்கள் விரோத பா.ஜ.க. ஆட்சியில் விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் குறித்து நவமவர் 22 முதல் 29 வரை மாபெரும் பிரச்சாரப் பயணம். அன்னை சோனியா காந்தி, தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் ஆலோசனையின்படி தலைவர் கே.எஸ்.அழகிரி வழிகாட்டுதலோடு தமிழகம் முழுவதும் எழுச்சிப்பயணம் நடைபெறுகிறது. விடுதலை போராட்ட காலத்தை நினைவு கூறுகிற வகையில் தமிழகத்தின் மூலைமுடுக்கெல்லாம் காங்கிரஸ் கட்சியினர் கதர் குல்லா அணிந்து, கையில் மூவண்ண ராட்டை கொடியுடன் பொதுமக்களை சந்தித்து மத்திய பாஜக ஆட்சியின் அவலங்களை [&#8230;]</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-tamilnadu/%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%a3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%81-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0/">காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p><strong><em>மக்கள் விரோத பா.ஜ.க. ஆட்சியில் விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் குறித்து நவமவர் 22 முதல் 29 வரை</em></strong> <strong><em>மாபெரும் பிரச்சாரப் பயணம்.</em></strong></p>



<p>அன்னை சோனியா காந்தி, தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் ஆலோசனையின்படி தலைவர் கே.எஸ்.அழகிரி வழிகாட்டுதலோடு தமிழகம் முழுவதும் எழுச்சிப்பயணம் நடைபெறுகிறது. விடுதலை போராட்ட காலத்தை நினைவு கூறுகிற வகையில் தமிழகத்தின் மூலைமுடுக்கெல்லாம் காங்கிரஸ் கட்சியினர் கதர் குல்லா அணிந்து, கையில் மூவண்ண ராட்டை கொடியுடன் பொதுமக்களை சந்தித்து மத்திய பாஜக ஆட்சியின் அவலங்களை பட்டியலிடும் கீழ்கண்ட கருத்துக்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்குவார்கள். பா.ஜ.க. ஆட்சி அகற்றப்படுவதற்கு மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம் முன்னோட்டமாக அமையும்.</p>



<p style="font-size:22px" class="has-text-align-center"><strong><em>அனைவரும் கை கோர்ப்போம்! தேசத்தை காப்போம்!</em></strong></p>



<p style="background-color:#df00ba;color:#fff700" class="has-text-color has-background has-medium-font-size"><strong>கடும் விலைவாசி உயர்வால் தவியாய் தவிக்கும் குடும்பங்கள்</strong>:</p>



<figure class="wp-block-image size-large"><img loading="lazy" decoding="async" width="1024" height="512" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/11/Rally-Board-1-page-001-1-1024x512.jpg" alt="" class="wp-image-4565" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/11/Rally-Board-1-page-001-1-1024x512.jpg 1024w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/11/Rally-Board-1-page-001-1-300x150.jpg 300w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/11/Rally-Board-1-page-001-1-768x384.jpg 768w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/11/Rally-Board-1-page-001-1-1536x768.jpg 1536w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/11/Rally-Board-1-page-001-1-2048x1024.jpg 2048w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/11/Rally-Board-1-page-001-1-360x180.jpg 360w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/11/Rally-Board-1-page-001-1-750x375.jpg 750w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/11/Rally-Board-1-page-001-1-1140x570.jpg 1140w" sizes="auto, (max-width: 1024px) 100vw, 1024px" /></figure>



<ul class="wp-block-list"><li>கடந்த ஓராண்டில் சமையல் எண்ணெய் விலை இரு மடங்கு உயர்வு. சூரியகாந்தி மற்றும் கடுகு எண்ணெய் விலை லிட்டர் ரூ.200-க்கு விற்கப்படுகின்றன.</li></ul>



<ul class="wp-block-list"><li>கடந்த ஓராண்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.300 உயர்ந்துள்ளது.</li></ul>



<ul class="wp-block-list"><li>தொடர்ந்து சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தப்படும் நிலையில், அதற்கான மானியமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.</li></ul>



<ul class="wp-block-list"><li>ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் மானிய விலையில் சமையல் எரிவாயு சிலிண்டர் கிடைத்தது. இன்றைக்கு ஒவ்வொரு மாதமும் விலை ஏற்றப்படுகிறது.</li></ul>



<ul class="wp-block-list"><li>சாதாரண மக்களைப் பற்றி எண்ணிப்பார்க்காமல் ரயில் கட்டணம் உயர்த்தப்படுகிறது. ரயில்வே நடைமேடை டிக்கெட் ரூ. 5 -லிருந்து ரூ. 50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.</li></ul>



<ul class="wp-block-list"><li>2014 ஆம் ஆண்டு ஒரு லிட்டர் ரூ. 71- க்கு விற்கப்பட்ட பெட்ரோல், 2021 இல் 105- க்கு விற்கப்படுகிறது.</li></ul>



<ul class="wp-block-list"><li>2014 ஆம் ஆண்டு ரூ.57- க்கு விற்கப்பட்ட ஒரு லிட்டர் டீசல், 2021 இல் ரூ.96 -க்கு விற்கப்படுகிறது.</li></ul>



<ul class="wp-block-list"><li>2014 ஆம் ஆண்டு ஒரு லிட்டர் ரூ. 60- க்கு விற்கப்பட்ட சோயாபீன் எண்ணெய், 2021 இல் ரூ.225- க்கு விற்கப்படுகிறது.</li></ul>



<ul class="wp-block-list"><li>2014 ஆம் ஆண்டு ரூ.30 -க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ சர்க்கரை, 2021 ஆம் ஆண்டு ரூ. 50- க்கு விற்கப்படுகிறது.</li></ul>



<ul class="wp-block-list"><li>2014 ஆம் ஆண்டு ரூ. 46- க்கு விற்கப்பட்ட ஒரு லிட்டர் பால், 2021 இல் ரூ.57 -க்கு விற்கப்படுகிறது.</li></ul>



<figure class="wp-block-image size-large"><img loading="lazy" decoding="async" width="1024" height="512" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/11/Rally-Board-1-page-002-1024x512.jpg" alt="" class="wp-image-4553" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/11/Rally-Board-1-page-002-1024x512.jpg 1024w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/11/Rally-Board-1-page-002-300x150.jpg 300w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/11/Rally-Board-1-page-002-768x384.jpg 768w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/11/Rally-Board-1-page-002-1536x768.jpg 1536w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/11/Rally-Board-1-page-002-2048x1024.jpg 2048w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/11/Rally-Board-1-page-002-360x180.jpg 360w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/11/Rally-Board-1-page-002-750x375.jpg 750w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/11/Rally-Board-1-page-002-1140x570.jpg 1140w" sizes="auto, (max-width: 1024px) 100vw, 1024px" /></figure>



<ul class="wp-block-list"><li>2014 ஆம் ஆண்டு ரூ. 3- க்கு விற்கப்பட்ட ஒரு முட்டை, 2021 ஆம் ஆண்டு ரூ.8- க்கு விற்கப்படுகிறது.</li></ul>



<ul class="wp-block-list"><li>2014 ஆம் ஆண்டு ரூ. 350- க்கு விற்கப்பட்ட ஒரு லிட்டர் நெய், 2021 இல் ரூ. 650- க்கு விற்கப்படுகிறது.</li></ul>



<ul class="wp-block-list"><li>2014 ஆம் ஆண்டு ரூ.15- க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ மாவு, 2021 ஆம் ஆண்டு ரூ. 30- க்கு விற்கப்படுகிறது.</li></ul>



<ul class="wp-block-list"><li>2014 ஆம் ஆண்டு ரூ.70- க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ தானியங்கள், 2021 ஆம் ஆண்டு ரூ.190- க்கு விற்கப்படுகிறது.</li></ul>



<ul class="wp-block-list"><li>ஒரு சில பெரும் தொழிலதிபர்களுக்கு ஆதரவான மோடி அரசின் போக்கால், பங்குச் சந்தையில் அவர்கள் பல ஆயிரம் கோடிகள் சம்பாதிக்க வழி ஏற்பட்டுள்ளது.</li></ul>



<ul class="wp-block-list"><li>அதே சமயம், மக்களின் வைப்புத் தொகை, சேமிப்புக் கணக்கு, வருங்கால வைப்பு நிதி மற்றும் ஏனைய சேமிப்புகளின் வட்டி குறைக்கப்பட்டுள்ளது. வட்டி விகிதம் 9 சதவிகிதத்திலிருந்து 5 சதவிகிதமாக குறைக்கப்பட்டதால், வைப்புத் தொகை மூலம் வருவாய் ஈட்டும் லட்சக்கணக்கானோர், குறிப்பாக மூத்த குடிமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.</li></ul>



<ul class="wp-block-list"><li>முன்பு 8 ஆண்டுகளில் இரண்டு மடங்காக உயர்ந்த சேமிப்புத் தொகை, தற்போது 14 ஆண்டுகளில் இரண்டு மடங்காக உயரும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.</li></ul>



<ul class="wp-block-list"><li>சாதாரண மக்களிடம் இருந்தும், தொழிலாளர்களிடம் இருந்தும் சேமிப்பைப் பறித்து, ஒரு சில கார்பரேட் நிறுவனங்கள் பயனடைய மத்திய பா.ஜ.க அரசு உதவுகிறது.</li></ul>



<ul class="wp-block-list"><li>மோடி அரசின் தவறான பொருளாதார நிர்வாகம் காரணமாக இந்தியாவின் சாதாரண நிலையில் உள்ள ஆண்களும் பெண்களும் இன்று கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர். வருவாய் இழப்பு ஏற்பட்டு சிறு வணிகங்கள் அழிந்து வருகின்றன.</li></ul>



<ul class="wp-block-list"><li>ஏற்கெனவே வருவாயை இழந்து நிற்கும் மக்கள், விலைவாசி உயர்வு காரணமாக கூடுதல் செலவை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. பா.ஜ.க.வின் பணக்காரர்களுக்கு ஆதரவான போக்கும், மக்கள் விரோதக் கொள்கையுமே விலைவாசி உயர்வில் பிரதிபலிக்கின்றன.</li></ul>



<ul class="wp-block-list"><li>எரிபொருள் விலை உயர்வு காரணமாக லாரி, டாக்சி, ஆட்டோ உள்ளிட்ட போக்குவரத்துத் துறையில் பணியாற்றுவோர் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளனர்.</li></ul>



<ul class="wp-block-list"><li>ஏற்கெனவே மோடி அரசால் பெரும் பாதிப்புக்குள்ளான விவசாயிகளை, எரிபொருள் விலை உயர்வும் மேலும் பாதிப்படையச் செய்துள்ளது.</li></ul>



<ul class="wp-block-list"><li>போக்குவரத்து மற்றும் விவசாயத் துறையில் எரிபொருள் விலையேற்றம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உணவுப் பற்றாக்குறை ஏற்படும் சூழலை ஏற்படுத்தியுள்ளது.</li></ul>



<ul class="wp-block-list"><li>கடந்த ஓராண்டாக காய்கறிகள், பழங்கள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களின் விலை இரு மடங்காக உயர்ந்துள்ளது.</li></ul>



<ul class="wp-block-list"><li>கிராமப் புறங்களில் உணவுப் பஞ்சம் ஏற்பட்டுள்ளதாக அரசு அறிக்கை கூறுகிறது. பட்டினி மற்றும் ஊட்டச் சத்துக்குறைபாடு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.</li></ul>



<ul class="wp-block-list"><li>ஊட்டச்சத்து உணவுகளான பால், தானியங்கள், முட்டைகள் மற்றும் இறைச்சி ஆகியவை, கடும் விலை உயர்வால் குடும்பங்களின் உணவுப் பட்டியலிலிருந்து வெளியேறிவிட்டன.</li></ul>



<ul class="wp-block-list"><li>இந்தியாவில் 20 கோடி பேர் பட்டினி கிடக்கிறார்கள். இது உலக அளவிலான பட்டினியில் நான்கில் ஒரு பங்காகும். 2021 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய பட்டினி பட்டியலில் மொத்தமுள்ள 116 நாடுகளில் இந்தியா 101 ஆவது இடத்தில் உள்ளது. 2014 ஆம் ஆண்டு உலகளாவிய பட்டினி பட்டியலில், இந்தியா 55 ஆவது இடத்தில் தான் இருந்தது. 2016 ஆம் ஆண்டிலிருந்தே அதே இடத்திலேயே இந்தியா தொடர்ந்து கொண்டிருக்கிறது. இது, மிகவும் மோசமான சூழல் என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளது.</li></ul>



<figure class="wp-block-image size-large"><img loading="lazy" decoding="async" width="1024" height="512" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/11/Rally-Board-1-page-003-1-1024x512.jpg" alt="" class="wp-image-4556" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/11/Rally-Board-1-page-003-1-1024x512.jpg 1024w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/11/Rally-Board-1-page-003-1-300x150.jpg 300w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/11/Rally-Board-1-page-003-1-768x384.jpg 768w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/11/Rally-Board-1-page-003-1-1536x768.jpg 1536w" sizes="auto, (max-width: 1024px) 100vw, 1024px" /></figure>



<ul class="wp-block-list"><li>பெட்ரோலியப் பொருட்களுக்காக அதிகம் செலவழிக்க வேண்டிய நிர்ப்பந்தம் இருப்பதால், சுகாதாரம் மற்றும் கல்வி தொடர்பான மற்ற அத்தியாவசிய தேவைகளுக்கு செலவழிக்க முடியாத நிலையில் மக்கள் உள்ளனர்.</li></ul>



<ul class="wp-block-list"><li>எரிபொருள் விலை குறைக்கப்பட்டால், குடும்பத்தினர் கைகளில் அதிகமான அளவு பணம் புரளும். இந்த பணத்தை பல வகைகளில் அவர்கள் செலவழிக்கும் போது தான் பொருளாதாரம் வளர்ச்சியடையும்.</li></ul>



<ul class="wp-block-list"><li>கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் பெட்ரோல் மீதான கலால் வரியை 250 சதவிகிதம் (ஒரு லிட்டருக்கு ரூ.9.48 -லிருந்து ரூ. ரூ.32.98 ஆக உயர்வு) வரை பா.ஜ.க. அரசு உயர்த்தியுள்ளது. டீசல் மீதான கலால் வரி 800 சதவிகிதம் (ஒரு லிட்டருக்கு ரூ.3.65 -லிருந்து ரூ. 31.83 ஆக உயர்வு) உயர்த்தப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இருந்ததைவிட, கடந்த 7 ஆண்டுகளில் பெட்ரோலுக்கான வரி 3 மடங்கு அதிகமாகவும், டீசலுக்கான வரி 9 மடங்கு அதிகமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.</li></ul>



<ul class="wp-block-list"><li>கொரோனா பரவல் காலத்தில் மக்களுக்கு உதவ வேண்டிய மத்திய அரசு, அந்த சமயத்தில் ஒரு லிட்டர் பெட்ரோலை ரூ. 10 -ம், ஒரு லிட்டர் டீசலை ரூ.13- ம் உயர்த்தியது.</li></ul>



<ul class="wp-block-list"><li>இந்த அநியாய வரி உயர்வை மோடி அரசு திரும்பப் பெற்றால், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.22 குறைவாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 28 குறைவாகவும் கிடைக்கும்.</li></ul>



<ul class="wp-block-list"><li>எரிபொருட்கள் விலையை ஏற்றி சாதாரண மக்களை வாட்டி வதைக்கும் மோடி அரசு, இந்தியாவின் பெரும் பணக்காரர்களின் கார்பரேட் நிறுவனங்களுக்கான வரியை 30 சதவிகிதத்திலிருந்து 22 சதவிகிதமாக குறைத்துள்ளது. இதன்மூலம் அரசுக்கு ரூ.1 லட்சத்து 45 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.</li></ul>



<ul class="wp-block-list"><li>கச்சா எண்ணெய்யின் விலை குறைந்தபோதிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஏற்றப்பட்டு வருகிறது.</li></ul>



<ul class="wp-block-list"><li>ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது, சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை பேரலுக்கு ரூ.10 ஆயிரத்து 412 ஆக இருந்தபோதிலும், சாதாரண மக்கள் பாதிக்காத வகையில் விலை நிர்ணயிக்கப்பட்டது.</li></ul>



<ul class="wp-block-list"><li>கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவது பா.ஜ.க.வுக்கு கிடைத்த நல்வாய்ப்பு. இதனைப் பயன்படுத்தி எரிபொருள் விலையைக் குறைத்து, அதன் பலனை மக்கள் அடையச் செய்யலாம். அதற்குப் பதிலாக வரி மற்றும் கலால் வரியை அதிகரித்து சாதாரண மக்களை வாட்டி வதைக்கிறது பா.ஜ.க. அரசு. எரிபொருட்களுக்கு அதிக விலையேற்றி சாதாரண மக்களுக்கு மத்தியில் ஆளும் மோடி அரசு தொடர்ந்து அநீதி இழைத்துக் கொண்டிருக்கிறது.</li></ul>



<p style="font-size:21px" class="has-text-color has-background has-text-align-center has-very-light-gray-color has-vivid-red-background-color"><strong>மக்கள் விரோத பா.ஜ.க. ஆட்சியின் அவலங்களை பாரீர்!</strong></p>



<p style="background-color:#047e06;font-size:21px" class="has-text-color has-background has-text-align-center has-very-light-gray-color"><strong>மத்திய பாஜக ஆட்சியை அகற்ற ஆதரவு தாரீர்!</strong></p>



<p class="has-text-align-center"><br></p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-tamilnadu/%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%a3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%81-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0/">காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://desiyamurasu.com/news-tamilnadu/%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%a3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%81-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!</title>
		<link>https://desiyamurasu.com/news-tamilnadu/%e0%ae%b5%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d/</link>
					<comments>https://desiyamurasu.com/news-tamilnadu/%e0%ae%b5%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[ஆ. கோபண்ணா]]></dc:creator>
		<pubDate>Sun, 21 Nov 2021 13:34:20 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழக அரசியல்]]></category>
		<guid isPermaLink="false">https://desiyamurasu.com/?p=4528</guid>

					<description><![CDATA[<p>1971ஆம் ஆண்டு வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட அன்றைய இந்திய பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் ஆற்றிய பணிகளை நினைவு கூறுகின்ற வகையில் நவம்பர் 2009 தேசிய முரசு இதழில் வெளிவந்த கட்டுரையை மீண்டும் இங்கே வெளியிடுகிறோம். உலக வரலாற்றில் சாதனைகளை புரிந்த வங்கதேச விடுதலை குறித்து 50 வது ஆண்டு பொன்விழா நேரத்தில் அன்னை இந்திரா காந்தி அவர்களை போற்றுகின்ற வகையில் இக்கட்டுரை அமைந்திருக்கிறது. இதனை காங்கிரஸ் நண்பர்கள் பெருமளவில் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். [&#8230;]</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-tamilnadu/%e0%ae%b5%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d/">வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p><em>1971ஆம் ஆண்டு வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட அன்றைய இந்திய பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் ஆற்றிய பணிகளை நினைவு கூறுகின்ற வகையில் நவம்பர் 2009 தேசிய முரசு இதழில் வெளிவந்த கட்டுரையை மீண்டும் இங்கே வெளியிடுகிறோம். உலக வரலாற்றில் சாதனைகளை புரிந்த வங்கதேச விடுதலை குறித்து 50 வது ஆண்டு பொன்விழா நேரத்தில் அன்னை இந்திரா காந்தி அவர்களை போற்றுகின்ற வகையில் இக்கட்டுரை அமைந்திருக்கிறது. இதனை காங்கிரஸ் நண்பர்கள் பெருமளவில் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.</em> <strong>&#8211; ஆ.கோபண்ணா</strong></p>



<p class="has-text-align-right"></p>



<p><strong>லா</strong>ல்பகதூர் சாஸ்திரி பிரதமராக இருந்தபோது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் போர் நடந்தது. இந்தப் போரில் ரஷ்யா தலையிட்டு &#8216;தாஷ்கண்ட் ஒப்பந்த&#8217;த்தின் மூலம் முடிவுக்குக் கொண்டுவந்தது. பாகிஸ்தானுக்கு எதிரான இந்தப் போரில், இந்தியாவின் வெற்றி, பிரதமர் லால்பகதூர் சாஸ்திரிமீது உலகத்தின் கவனத்தை ஈர்த்தது. தாஷ்கண்ட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட சில மணி நேரத்தில் மாரடைப்பால் லால்பகதூர் சாஸ்திரி காலமானார்.</p>



<p>இதையடுத்து இந்தியாவின் பிரதமராக இந்திராகாந்தி பொறுப்பேற்றார். பாகிஸ்தான் ராணுவத்தில், கிழக்குப் பாகிஸ்தானியரின் பங்கு மிகக்குறைவாக இருந்தது. மத்திய அரசு பணிகளில் மேற்குப் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் 84 சதவிகிதத்தினரும் கிழக்குப் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் 16 சதவிகிதத்தினரும் இருந்தனர். அதேபோல, ராணுவத்தில் 90 சதவிகிதத்தினர் மேற்குப் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களாகவே இருந்தனர்.</p>



<figure class="wp-block-image size-large"><img loading="lazy" decoding="async" width="870" height="470" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/11/1463648153_kvY7Jg_indira-gandhi-870.jpg" alt="" class="wp-image-4532" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/11/1463648153_kvY7Jg_indira-gandhi-870.jpg 870w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/11/1463648153_kvY7Jg_indira-gandhi-870-300x162.jpg 300w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/11/1463648153_kvY7Jg_indira-gandhi-870-768x415.jpg 768w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/11/1463648153_kvY7Jg_indira-gandhi-870-750x405.jpg 750w" sizes="auto, (max-width: 870px) 100vw, 870px" /></figure>



<p>பாகிஸ்தானின் மொத்த ஏற்றுமதியில், கிழக்குப் பாகிஸ்தானில் விளைந்த சனல் மூலமாக 70 சதவிகித் வருமானம் கிடைத்து வந்தது. 1950இல் கிழக்குப் பாகிஸ்தானில் தனிநபர் வருமானம் ரூ.288 ஆகவும் மேற்குப் பாகிஸ்தானில் தனிநபர் வருமானம் ரூ.357 ஆகவும் இருந்தது. ஆனால், 1970இல் கிழக்குப் பாகிஸ்தானில் தனிநபர் வருமாளம் ரூ. 331 அளவுக்குத் தான் உயர்ந்தது. ஆனால் மேற்குப் பாகிஸ்தான் மக்களின் தனிநபர் வருமானம் அதிகமாக உயர்ந்திருந்தது. இந்த வகையில், கிழக்குப் பாகிஸ்தான் மக்களைச் சுரண்டுவதன் மூலமாக, ராணுவ அரசுதான் மேற்குப் பாகிஸ்தான் மக்களைக் காப்பாற்றி வந்தது.</p>



<p>இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில் ஆயுப்கானின் ஆட்சி மிகப்பெரிய நெருக்கடிக்கு உள்ளாகியிருந்தது. தாஷ்கண்ட் ஒப்பந்தத்தை, அந்த நாட்டுக்கு இழைக்கப்பட்ட அநீதியாகவே அந்த நாட்டுமக்கள் கருதினர். இந்தத் தோல்விக்குக் காரணம் ஆயுப்கான் தான் என்று நம்பினர். அங்கு ஏற்பட்ட விலைவாசி ஏற்றம், வேலையில்லாத் திண்டாட்டம், வறுமை போன்றன மக்களை வாட்டிவதைத்தன ராணுவ ஆட்சியில் அதிருப்தியடைந்த மக்கள், கொந்தளிப்பான மனநிலையில் இருந்தனர், &#8216;பாகிஸ்தான் மீண்டும் ஜனநாயகப் பாதைக்குத் திரும்பவேண்டும்&#8217; என்ற உணர்வு மேலோங்கி இருந்தது. இத்தகைய உணர்வு மேற்குப் பாகிஸ்தானில் மிக அதிகமாகக் காணப்பட்டது. பாகிஸ்தான் முழுவதும் மாணவர்கள் தெருக்களில் இறங்கிப் போராட்டம் நடத்த ஆரம்பித்தார்கள். பாகிஸ்தான் முழுவதும் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் வெகுண்டெழுந்தனர். </p>



<p>பாகிஸ்தான் பிரிவினையை மகாத்மா காந்தி உள்ளிட்ட அளைத்துத் தலைவர்களும் கடுமையாக எதிர்த்தனர். ஆனால், அதையெல்லாம் மீறி ஆட்சி செய்வதற்கு நடைமுறைச் சாத்தியமில்லாத பூகோள நிலப்பரப்பைப் பிரிவினையின் மூலம் அந்த நாடு பெற்றது. இந்தியாவிற்கு மேற்கில் ஒரு பகுதியும். கிழக்கில் ஒரு பகுதியும் என 1500 மைல்கள் இடைவெளியில் அந்த நாடு உருவானது. பாகிஸ்தானின் மொத்த மக்கள் தொகையில் 60 சதவிகிதம் பேர் கிழக்குப் பாகிஸ்தானிலும், 40 சதவிகிதம் பேர் மேற்குப் பாகிஸ்தானிலும் வாழ்ந்து வந்தார்கள். ஆனால், அரசு நிர்வாகத்திலும் ராணுவத்திலும் 90 சதவிகிதத்திற்கும் மேற்பட்டோர் மேற்குப் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களாகவே இருந்தார்கள். மக்கள் தொகை விகிதாச்சாரத்தைமீறி அரசு நிர்வாகத்திலும் ராணுவத்திலும் மேற்குப் பாகிஸ்தானியர் ஆதிக்கம் செலுத்தியதை வங்காள முஸ்லிம்களான கிழக்குப் பாகிஸ்தானியர் ஏற்றுக்கொள்ளவில்லை. முஸ்லிம்களாக இருந்தாலும், இவர்கள் தாய்மொழி வங்காளமாகும். மேற்குப் பாகிஸ்தானியரின் தாய்மொழியான உருதுமொழியை ஆட்சி மொழியாகக் கிழக்குப் பாகிஸ்தானியர் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. இந்தப் பின்னணியில், 17.1.1971இல் நடைபெற்ற பொதுத் தேர்தலைக் கிழக்குப் பாகிஸ்தானியர் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தச் சரியான வாய்ப்பாகக் கருதினர். ஷேக் முஜிபூர் ரஹ்மான் தலைமையில் கிழக்குப் பாகிஸ்தானில் போட்டியிட்ட அவாமி லீக் கட்சி, அனைத்து இடங்களையும் கைப்பற்றியது.</p>



<figure class="wp-block-image size-large"><img loading="lazy" decoding="async" width="672" height="496" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/11/image-2.png" alt="" class="wp-image-4533" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/11/image-2.png 672w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/11/image-2-300x221.png 300w" sizes="auto, (max-width: 672px) 100vw, 672px" /></figure>



<p>அதேபோல தேசிய பார்விமெண்ட் தேர்தலில், மொத்தம் இருந்த 313 இடங்களில், 167 இடங்களில் அவாமி லீக் வெற்றி பெற்றது. மேற்குப் பாகிஸ்தானில் பூட்டோவின் கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சி 122 இடங்களில் போட்டியிட்டு 82 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. மற்ற அரசியல் கட்சிகள் 58 இடங்களில் வெற்றி பெற்றன. தேர்தல் முடிவுகளைப் பார்த்தால், முஜிபூர் ரஹ்மானே அதிக இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவுடன் ஆட்சி அமைத்துப் பிரதமராகும் வாய்ப்பைப் பெற்றிருந்தார். இதைப் பூட்டோவும் ராணுவ ஆட்சியும் ஏற்க விரும்பவில்லை. அதேபோல, கிழக்குப் பாகிஸ்தான் மாகாண சட்டசபைத் தேர்தலில் ஷேக் முஜிபூர் ரஹ்மான் தலைமையிலான அவாமி லீக் மொத்த இடங்களான 310 தொகுதிகளில் போட்டியிட்டு, 298 இடங்களில் வெற்றி பெற்றது. அங்கு முதலமைச்சராகும் வாய்ப்பு அவாமி லீக் கட்சிக்குத்தான் இருந்தது.</p>



<p>பாகிஸ்தான் மக்களில் பெரும்பாலானவர்களின் ஆதரவைப் பெற்றிருந்த முஜிபூர் ரஹ்மான், ஆட்சி அமைப்பதைத் தடுக்கும் முயற்சிகளை எதிர்த்துக் கிழக்குப் பாகிஸ்தானில் கடுமையான கலவரம் வெடித்தது. இதை அடக்குவதற்குப் பாகிஸ்தான் ராணுவம் பெருமளவில் கிழக்குப் பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்டது. முஜிபூர் ரஹ்மான் கைது செய்யப்பட்டார். பிறகு, மேற்குப் பாகிஸ்தானுக்குக் கொண்டு செல்லப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்குப் பிறகு, கிழக்குப் பாகிஸ்தானில் ராணுவத்தின் பயங்கரமான அடக்குமுறை கட்டவிழ்த்துவிடப்பட்டது.</p>



<figure class="wp-block-image size-large"><img loading="lazy" decoding="async" width="734" height="552" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/11/image-3.png" alt="" class="wp-image-4534" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/11/image-3.png 734w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/11/image-3-300x226.png 300w" sizes="auto, (max-width: 734px) 100vw, 734px" /></figure>



<p>அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதை எதிர்த்துக் கிழக்கு வங்க இளைஞர்கள், ஆயுதமேந்தி &#8216;முக்தி பாஹிணி&#8217; என்ற அமைப்பினை உருவாக்கிப் போர்புரியத் தொடங்கினர். எனவே, கிழக்குப் பாகிஸ்தாளில் பயங்கரமான உள்நாட்டுப் போர் ஆரம்பமானது. இந்த உள்நாட்டுப் போரில் இந்தியாவின் ஆதரவும் அனுதாபமும் முஜிபூர் ரஹ்மானுக்கே இருந்தது. தேர்தலில் பெரும்பான்மையான பலத்துடன் வெற்றிபெற்ற கட்சியை ஆட்சி அமைக்கவிடாமல், அடக்கி ஒடுக்கும் ஜனநாயக விரோதச் செயலை இந்தியா கடுமையாகக் கண்டித்தது. </p>



<p>கிழக்குப் பாகிஸ்தானில் ராணுவத்தின் கடுமையான தாக்குதலுக்கு ஆளான அப்பாவி மக்கள், அகதிகளாக ஆயிரக்கணக்கில் நாள்தோறும் இந்தியாவுக்கு வரத்தொடங்கினர். இவர்களை மனிதாபிமானத்துடன் பாதுகாத்துப் பராமரிக்க வேண்டிய பொறுப்பு இந்தியாவுக்கு ஏற்பட்டது. இப்படி அகதியாக வந்தவர்கள் ஒருகோடி பேருக்கும் அதிகமாக இருந்ததால், இந்தியா இந்தப் பிரச்சினையில் தலையிட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது கிழக்குப் பாகிஸ்தானில் ஆயுதமேந்திப் போராடிய முக்தி பாஹிணி படையினர், கிழக்குப் பாகிஸ்தானைச் &#8216;சுதந்திரமான பங்களாதேஷ்&#8217; நாடாகப் பிரகடனம் செய்தனர். கிழக்குப் பாகிஸ்தானில் ஜனநாயக ஆட்சி அமைக்கப் போராடுகிறவர்களுக்கு ஆதரவாக இந்தியா தன்னுடைய ராணுவத்தை அனுப்ப வேண்டும் என்று அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருமித்துக் குரல் கொடுத்தன. ஆனால் இது, வேறு நாட்டின் உள்நாட்டுப் பிரச்சினை என்பதால், பல மாதங்கள்வரை பிரதமர் இந்திராகாந்தி பொறுமையைக் கடைப்பிடித்து வந்தார். ஆனால் அதே நேரத்தில், ஒருகோடி அகதிகளைப் பராமரிக்க வேண்டிய பெருஞ் சுமை இந்தியாவிற்கு இருப்பதையும் இந்திரா காந்தி உணர்ந்திருந்தார்.</p>



<figure class="wp-block-image size-large"><img loading="lazy" decoding="async" width="694" height="446" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/11/image-4.png" alt="" class="wp-image-4535" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/11/image-4.png 694w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/11/image-4-300x193.png 300w" sizes="auto, (max-width: 694px) 100vw, 694px" /></figure>



<p>&#8216;கிழக்குப் பாகிஸ்தானில் நடைபெறுகிற மனிதப் படுகொலைகளைப் பார்த்துக் கொண்டு உலகம் சும்மா இருக்கக்கூடாது&#8217; என்றும் விடுதலைப் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக அபிப்பிராயத்தைத் திரட்டுவதற்காக இந்திராகாந்தி 20 நாட்கள் உலகநாடுகளில் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார். இந்தியாவின் பாதுகாப்பை அச்சுறுத்தும் வகையில் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிற சர்வாதிகார ஆட்சியின் நடைமுறைகளை எதிர்கொள்வதற்குத் தொலைநோக்குப் பார்வையுடன் சோவியத் யூனியனுக்குச் சென்று அமைதி, நட்புறவு ஒப்பந்தத்தில் இந்திராகாந்தி கையெழுத்திட்டார். இது, இந்திராகாந்தியின் மிகப்பெரிய சாதனைகளில் ஒன்றாகும். அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளின் படையெடுப்பு நடைபெறாமல் தடுக்கும் மிகப்பெரிய பாதுகாப்பை இந்த ஒப்பந்தத்தின் மூலமாக இந்தியா பெற்றது.</p>



<p>பாகிஸ்தானின் ராணுவத் தளவாடத் தேவையின் பெரும் பகுதியை அமெரிக்காவும் கணிசமான பகுதியைச் சீனாவும் வழங்கிப் பூர்த்திசெய்தன என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே, பாகிஸ்தான் விவகாரத்தில் இந்தியா ராணுவத் தலையீடு செய்தால், அமெரிக்காவும் சீனாவும் அதன் உதவிக்கு வரக்கூடும். இதையெல்லாம் எதிர்பார்த்தே இந்திராகாந்தி சோவியத் யூனியனோடு நட்புறவு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். வங்க தேசப் பிரச்சினையில் உலகத்தின் ஆதரவைத் திரட்டுவதற்காகப் பிரதமர் இந்திராகாந்தி மத்திய அமைச்சர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பினார். குறிப்பாக, சர்தார் ஸ்வரன் சிங், கே.சி.பந்த், ஒய்.பி.சவான், ஜெகஜீவன்ராம் ஆகியோர் பல்வேறு நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆதரவு திரட்டினர். அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சரான கிஸ்ஸிங்கர் இந்தியாவிற்குப் பறந்து வந்தார். &#8216;முஜிபுர் ரஹ்மானை விடுதலை செய்வதும், கிழக்குப் பாகிஸ்தான் பிரச்சினைக்கு உடனடியாக அரசியல் தீர்வு காண்பதுமே நிலைமையைக் கட்டுப்படுத்தும் என்று கிஸ்ஸிங்கரிடம் இந்திரா காந்தி எடுத்துச் சொன்னார். கிழக்கு வங்க மக்கள் தங்களுடைய அரசியல் எதிர்காலத்தைத் தாங்களே முடிவு செய்யும் நிலை உருவாகுமென்றும் இந்திராகாந்தி வாதிட்டார். அதேசமயம், எந்த நேரத்திலும் கிழக்குப் பாகிஸ்தானுக்குள் நுழைவதற்கு இந்தியப் படைகள் தயார் நிலையில் இருக்க வேண்டுமெனவும் இந்திராகாந்தி ரகசிய உத்தரவு பிறப்பித்திருந்தார்.</p>



<p>1971ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பாகிஸ்தான் ராணுவ விமானங்கள் திடீரென்று இந்திய விமானத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தின. அந்தச் சமயம் இந்திராகாந்தி கல்கத்தாவில் பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிக்கொண்டிருந்தார். செய்தி கிடைத்தவுடன் பேச்சை முடித்துக் கொண்டு டெல்லிக்கு இந்திய ராணுவ விமானத்தில் பயணமானார். போர் விமானங்கள் பாதுகாப்பளிக்க விமானத்தில் டெல்லிக்கு வந்து சேர்ந்தார். அமைச்சரவைக் கூட்டம் அவசரமாகக் கூட்டப்பட்டு, பாகிஸ்தான்மீது போர் தொடுப்பது என்று முடிவு செய்யப்பட்டது. இந்திய ராணுவம் கிழக்குப் பாகிஸ்தானுக்குள் புகுந்தது.</p>



<p>இந்தியாவின் கவனத்தை மேற்குப் பக்கம் திருப்ப, பாகிஸ்தான் ராணுவம் காஷ்மீர் எல்லையைத் தாக்கியது. அந்தத் தாக்குதல் இந்தியப் படைகளால் முறியடிக்கப்பட்டது. இந்தியப் படை, கிளர்ச்சிக்காரர்களின் உதவியுடன் கிழக்குப் பாகிஸ்தானின் தலைநகரான டாக்காவை நோக்கி முன்னேறியது. அமெரிக்கா &#8211; இந்தியாவிற்குக் கொடுத்துவந்த பொருளாதார ராணுவ உதவி அனைத்தையும் நிறுத்திக்கொண்டது. அமெரிக்காவின் பிரசித்தி பெற்ற ஏழாவது கடற்படை (7th Fleet), இந்தியப் படையின் முன்னேற்றத்தைத் தடுக்கும் நோக்கத்துடன் சிட்டகாங் அருகே வங்காள விரிகுடாவில் முகாமிட்டது. அமெரிக்கா ஏழாவது கடற்படையின் அச்சுறுத்தலை அலட்சியப்படுத்தி, டாக்கா நகர் நோக்கி முன்னேறும்படி இந்திய ராணுவத்திற்கு உத்தரவு கொடுக்கப்பட்டது. சோவியத் யூனியனின் கடற்படை இந்தியாவிற்கு உதவியளிப்பதற்காக வங்காள விரிகுடாவிற்கு விரைந்தது. சோவியத் அமைச்சர் ஒருவர், டெல்லிக்குப் பறந்து வந்து இந்தியாவின் ராணுவ நடவடிக்கைக்கு ஆலோசனை வழங்கி உறுதுணையாக இருந்தார். சீன &#8211; அமெரிக்க ஆக்கிரமிப்பிலிருந்து இந்தியாவிற்குப் பாதுகாப்பளிக்கும் வாக்குறுதியைச் சோவியத் யூனியன் பகிரங்கமாக அறிவித்தது.</p>



<p>பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய ராணுவ நடவடிக்கைக்கு மேஜர் ஜெனரல் மேனக்ஷா தலைமை தாங்கினார். பிரதமர் இந்திராவும், மேனக்ஷவும் அடிக்கடி சந்தித்து போர் வியூகங்களை நடத்தினர். 13 நாளே நடந்த இந்த போரில் பாக்கிஸ்தான் படைகள் சுற்றிவளைக்கப்பட்டன.  சரணாகதி அடைவதற்கு அவர்களுக்கு மூன்று நாள் அவகாசம் கொடுக்கப்பட்டது. 1971ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16ஆம் நாள் பாகிஸ்தான் வீரர்கள் இந்திய ராணுவத்திடம் சரணாகதி அடைந்தார்கள். பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளும் போர் வீரர்களும் பல்லாயிரக்கணக்கில் போர்க் கைதிகளாக இந்தியாவிற்கு அனுப்பிவைக்கப்பட்டார்கள். இந்திராகாந்தியின் ராஜதந்திரத்தாலும் ராணுவ நடவடிக்கையாலும் பங்காளதேஷ் {வங்கதேசம்) என்கிற புதிய நாடு உதயமாயிற்று| அதிபர் யாஹியாகான் ராஜினாமா செய்தார். எஞ்சியிருந்த மேற்குப் பாகிஸ்தானின் நிர்வாகப் பொறுப்பைப் பூட்டோ ஏற்றுக்கொண்டார்.</p>



<p>இந்தியாவின் உதவியுடன் கிழக்குப் பாகிஸ்தான், &#8216;பங்காளதேஷ்&#8217; என்கிற &#8216;சுதந்திர தேசமாக உருப்பெற்றது.&#8221; உணர்ச்சி மட்டும் ஒரு தேசத்தை உருவாக்கப்  போதுமானதன்று என்கிற உண்மை மீண்டும் ஒருமுறை வரலாற்றில் நிருபிக்கப்பட்டது மதவெறியால் உருவான நாடு ஒன்று வன்முறைக்குப் பலியாகி, சுதந்திரம் பெற்ற 24 ஆண்டுகளில் இரண்டு தேசங்களாகப் பிளவுபட்டது! ஜின்னாவின் ராஜதந்திர படுதோல்விக்குப் பங்களாதேஷின் உதயம் ஒரு சரியான எடுத்துக்காட்டாகும்.</p>



<figure class="wp-block-image size-large"><img loading="lazy" decoding="async" width="692" height="614" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/11/image-5.png" alt="" class="wp-image-4536" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/11/image-5.png 692w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/11/image-5-300x266.png 300w" sizes="auto, (max-width: 692px) 100vw, 692px" /></figure>



<p>இந்திராகாந்தியைப் பொருத்தவரையில் இந்தச் சாதனையை ஒரு மகத்தான சாதனையாகத்தான் கருதவேண்டும் பங்களாதேஷை உருவாக்கியதன்மூலம் பாகிஸ்தானின் பலத்தை அவர் கணிசமாகக் குறைத்தார் என்பது மிகையன்று. அமெரிக்கா, சீனா போன்ற வல்லரசுகளின் அச்சுறுத்தலுக்கு இந்தியா பணியாது என்பதையும் உலகுக்கு நிருபித்துக் காட்டினார் அவர்! பங்களாதேஷ் விடுதலைப் போருக்குப் பிறகு, சர்வதேச அரங்கில் இந்திராவின் மரியாதை கணிசமாக உயர்ந்தது என்பதில் சந்தேக மில்லை &#8220;இந்தியப் பிரதமர் இந்திராகாந்தியை அலட்சியப்படுத்திவிட்டு, தெற்கு ஆசியாவில் எதுவும் செய்வது சாத்தியமில்லை&#8221; என்கிற கருத்தைக் கிஸ்ஸிங்கர் பகிரங்கமாகவே வெளியிட்டார்.</p>



<p>&#8220;பங்களாதேஷ் போருக்குப் பிறகு இந்தியா ஒரு ராணுவ வல்லரசாக உருவாகிவிட்டது என அமெரிக்க நிபுணர்கள் அங்கீகாரம் அளித்தார்கள். அதேசமயம், இந்திய ராணுவம் மகத்தான வெற்றிகளைக் குவிக்கின்ற நிலையிலும் நிதானத்துடன் முழுமையாகக் கட்டுப்பட்டுச் செயல்படக் கூடியது என்பது நிருபணமாயிற்று. இந்திய ராணுவம் விரும்பியிருந்தால், லாகூரைக் கைப்பற்றியிருக்க முடியும். ஆனால், அரசியல் ரீதியாக இந்திய அரசு இந்தப் பிரச்சினையினை அணுகியதால், லாகூரைக் கைப்பற்றும் நோக்கத்தை விட்டுவிடும்படி பிரதமர் சொன்ன ஆலோசளையை, இந்திய ராணுவத் தளபதிகள் தங்களின் விருப்பத்துக்கு மாறாக ஏற்றுக்கொண்டார்கள். இந்தியாவின் வேண்டுகோளுக்கிணங்க முஜிபுர் ரஹ்மான் விடுதலை செய்யப்பட்டு பங்களாதேஷின் பிரதமராளார்; விடுதலையான முஜிபுர் ரஹ்மானுக்கு டெல்லியில் மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது. 1972ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26ஆம் நாளன்று இந்தியக் குடியரசு தினம் புதிய உற்சாகத்தோடு கொண்டாடப்பட்டது. இந்திராகாந்தி, டாக்காவிற்குச் சென்றபோது, ஒரு வீராங்கனைக்குரிய வரவேற்பு அவருக்கு அளிக்கப்பட்டது. இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே, பாகிஸ்தானிய யுத்தக் கைதிகளை விடுவிப்பது ஒரு பிரச்சினையாக இருந்தது. இந்திராகாந்தியும் பாகிஸ்தான் பிரதமர் பூட்டோவும் சிம்லாவில் இதுபற்றி விவாதித்து ஒரு முடிவுக்கு வந்தார்கள்.</p>



<p>சிம்லா மாநாடு முடிந்த சில மாதங்களுக்குள்ளாகவே பங்களாதேஷை ஒரு சுதந்திர நாடாகப் பாகிஸ்தான் அங்கீகரித்தது. பங்களாதேஷ் வெற்றி, இந்திராவின் அரசியல் வரலாற்றில் ஒரு புகழ்மிக்க அத்தியாயத்தைச் சேர்த்திருந்தாலும் பாகிஸ்தானோடு ஏற்பட்ட யுத்தத்தினாலும் 90 லட்சத்திற்கு மேற்பட்ட பங்களாதேஷ் அகதிகள் இந்தியாவிற்கு வந்ததாலும் அது இந்தியப் பொருளாதாரத்தைப் பெருமளவிற்குப் பாதித்தது. </p>



<p>வங்கதேச வெற்றிக்கு பிறகு அன்றைய எதிர்கட்சித் தலைவர் வாஜ்பாய் அவர்களால் அன்னை இந்திரா காந்தி &#8220;துர்கா தேவி&#8221; என்று அழைக்கப்பட்டார். இந்திய மக்கள் இந்திரா காந்தியை மிகச்சிறந்த வீராங்கனையாக போற்றினர். இதன் மூலம் இந்தியாவின் வலிமையை உலகிற்கு உணர்த்தியவர் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி. வங்கதேச வெற்றியின் 50 ஆவது ஆண்டு பொன்விழாவில் அன்னை இந்திராவின் புகழ் பாடுவோம்.</p>



<p></p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-tamilnadu/%e0%ae%b5%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d/">வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://desiyamurasu.com/news-tamilnadu/%e0%ae%b5%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>பயங்கரவாதத்தால் வீழ்த்தப்பட்ட வீராங்கனை!! அக்டோபர் 31: அன்னை இந்திரா நினைவு நாள் &#8211; ராகுல் அஞ்சலி</title>
		<link>https://desiyamurasu.com/news-india/the-assassination-of-indira-gandhi-2/</link>
					<comments>https://desiyamurasu.com/news-india/the-assassination-of-indira-gandhi-2/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[ஆ. கோபண்ணா]]></dc:creator>
		<pubDate>Sun, 31 Oct 2021 18:43:55 +0000</pubDate>
				<category><![CDATA[தேசிய அரசியல்]]></category>
		<category><![CDATA[Indira Gandhi Assassination]]></category>
		<guid isPermaLink="false">https://desiyamurasu.com/?p=4518</guid>

					<description><![CDATA[<p>அக்டோபர் 31: அன்னை இந்திரா நினைவு நாள் அன்னை இந்திரா காந்தியைப் பற்றி நிறைய ஆங்கில நூல்கள் வெளிவந்துள்ளன. ஆனால், 2009 இல் வெளிவந்த Mother India &#8211; A Political Biography of Indira Gandhi என்ற நூலை Pranay Gupte என்பவர் மிகச் சிறப்பாக எழுதியிருந்தார். இந்நூலில் The Assassination&#160; என்ற தலைப்பில் வெளிவந்த அத்தியாயம் இங்கே தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது: நாடு சுதந்திரம் பெற்றபோது, மதவெறியர்களால் மகாத்மா காந்தியை நாம் இழந்தோம்! அடுத்து [&#8230;]</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/the-assassination-of-indira-gandhi-2/">பயங்கரவாதத்தால் வீழ்த்தப்பட்ட வீராங்கனை!! அக்டோபர் 31: அன்னை இந்திரா நினைவு நாள் &#8211; ராகுல் அஞ்சலி</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p><span class="has-inline-color has-vivid-red-color"><em>அக்டோபர் 31: அன்னை இந்திரா நினைவு நாள்</em></span></p>



<p><em>அன்னை இந்திரா காந்தியைப் பற்றி நிறைய ஆங்கில நூல்கள் வெளிவந்துள்ளன. ஆனால், 2009 இல் வெளிவந்த <strong>Mother India &#8211; A Political Biography of Indira Gandhi </strong>என்ற நூலை <strong>Pranay Gupte</strong> என்பவர் மிகச் சிறப்பாக எழுதியிருந்தார். இந்நூலில் <strong>The Assassination</strong>&nbsp; என்ற தலைப்பில் வெளிவந்த அத்தியாயம் இங்கே தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது:</em></p>



<p><em>நாடு சுதந்திரம் பெற்றபோது, மதவெறியர்களால் மகாத்மா காந்தியை நாம் இழந்தோம்! அடுத்து 1984 இல் அன்னை இந்திரா காந்தியை மதவெறிக்கு மீண்டும் பலிகொடுத்தோம்! தொடர்ந்து 1991 இல் தீவிரவாத, பயங்கரவாத சக்திகளால் ராஜிவ் காந்தியை இழந்தோம்! மதவாத, தீவிரவாத, பயங்கரவாத சக்திகளை எதிர்த்துப் போராடவேண்டிய பொறுப்பும் கடமையும் தேசிய சக்திகளுக்கு இருப்பதை உணர்த்துவதற்காகவே, அக்டோபர் 31 அன்னை இந்திராவின் நினைவுநாளையொட்டி இந்தக் கட்டுரை வெளியிடப்படுகிறது. – ஆசிரியர்</em></p>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img loading="lazy" decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/image15_1.jpg" alt="" class="wp-image-2835" width="564" height="454" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/image15_1.jpg 878w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/image15_1-300x242.jpg 300w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/image15_1-768x619.jpg 768w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/image15_1-750x605.jpg 750w" sizes="auto, (max-width: 564px) 100vw, 564px" /></figure></div>



<p><span class="has-inline-color has-vivid-red-color"><strong>1984-ஆம் ஆண்டு அக்டோபர்…31ஆம் தேதி புதன்கிழமை&#8230;.</strong></span></p>



<p>இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி வழக்கம்போலவே காலை 8 மணிக்குத் துயில் எழுந்தார். அவரிடம் நீண்டகாலமாகப் பணியாற்றிவரும் பணியாளரான நாதுராம், வழக்கமான கோப்பையில் சூடான தேநீரை இந்திராவுக்குக் கொண்டு வந்தார். 67வது பிறந்த நாளைக் கொண்டாடுவதற்கு ஒரு மாதமே மீதமிருந்த நிலையில், இந்திரா காந்தி தமது வழக்கமான நடைமுறைப்படி பல ஹிந்தி மற்றும் ஆங்கில நாளிதழ்களைப் படித்தார். பெரும்பாலான நாளிதழ்களில் அதற்கு முந்தைய நாள் ஒரிசாவில் இந்திரா காந்தி மேற்கொண்ட சுற்றுப்பயணம் குறித்த செய்தி முதல் பக்கத்திலேயே வெளியாகி இருந்தது. ஒரிசா சுற்றுப்பயணத்தின்போது பல அரசியல் கூட்டங்களில் இந்திரா உரையாற்றியிருந்தார்.</p>



<figure class="wp-block-embed-twitter wp-block-embed is-type-rich is-provider-twitter"><div class="wp-block-embed__wrapper">
<blockquote class="twitter-tweet" data-width="500" data-dnt="true"><p lang="en" dir="ltr">Shri <a href="https://twitter.com/RahulGandhi?ref_src=twsrc%5Etfw">@RahulGandhi</a> pays his tribute to former PM Smt. Indira Gandhi at Shakti Stal on the 37th anniversary of her martyrdom. <a href="https://t.co/oMEqnuUunm">pic.twitter.com/oMEqnuUunm</a></p>&mdash; Congress (@INCIndia) <a href="https://twitter.com/INCIndia/status/1454646447542980619?ref_src=twsrc%5Etfw">October 31, 2021</a></blockquote><script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
</div></figure>



<p>கோபல்பூர் என்ற இடத்தில் ஏவுகணைகளைச் செலுத்துவது குறித்துப் பயிற்சி அளிப்பதற்கான புதிய ராணுவப் பயிற்சிப் பள்ளிக்கு இந்திரா அடிக்கல் நாட்டியிருந்தார். அதே நாளில் ஒரிசா தலைநகர் புவனேசுவரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் அவர் உரையாற்றினார். அக்கூட்டத்தில் 30 நிமிடங்களுக்கு உரையாற்றிய இந்திரா காந்தி, மதவாதத்தின் ஆபத்துகள் குறித்தும், இந்தியாவின் பாதுகாப்புக்கு வெளியிலிருந்து ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் குறித்தும் குறிப்பிட்டார்.&nbsp;</p>



<p>பின்னர் சில இடங்களில் தமக்கு எதிராக ஏற்பட்டுள்ள அரசியல் பகைமை குறித்தும், பல நேரங்களில் அது எல்லை மீறுவது குறித்தும் இந்திரா நினைவுகூர்ந்தார். அதற்கு முந்தைய நாள்தான் ஒரு பொதுக்கூட்டத்தில் தம்மை நோக்கி கல் வீசப்பட்டதை இந்திரா நினைவுகூர்ந்தார். ஆனால், இதற்கெல்லாம் தாம் அஞ்சவில்லை என்று இந்திரா கூறினார்.</p>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img loading="lazy" decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/61a2U8iYHnL._SL1280_-714x1024.jpg" alt="" class="wp-image-2839" width="533" height="763" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/61a2U8iYHnL._SL1280_-714x1024.jpg 714w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/61a2U8iYHnL._SL1280_-209x300.jpg 209w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/61a2U8iYHnL._SL1280_-768x1101.jpg 768w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/61a2U8iYHnL._SL1280_-750x1075.jpg 750w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/61a2U8iYHnL._SL1280_.jpg 893w" sizes="auto, (max-width: 533px) 100vw, 533px" /></figure></div>



<p>&#8221;தேசத்திற்கு சேவையாற்றும்போது, எனது உயிர் போனால் அதை எண்ணி நான் கவலைப்படப் போவதில்லை. ஒருவேளை இன்றே நான் உயிரிழந்தாலும், எனது உடலில் இருந்து செல்லும் ஒவ்வொரு துளி ரத்தமும் இந்தியாவை வலிமைப்படுத்தும். எனது ஒவ்வொரு துளி ரத்தமும் இந்தியா வலிமையான, உறுதியான நாடாக வளர்வதற்குப் பங்களிக்கும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன் என்று இந்திரா உரையாற்றியிருந்தார்.&#8221; ஆனால், அடுத்த நாளே தமக்கு மரணம் நேரிடும் என்பதை அவர் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்.இந்திராவின் படுக்கை அறையில் கடும் குளிர் நிலவியது. இந்திரா காந்தியின் இல்லம் உள்பட தில்லியில் உள்ள ஒரு சில வீடுகளில்தான் மையப்படுத்தப்பட்ட வெப்பமூட்டி வசதி இருந்தது. </p>



<p>இந்திராவின் படுக்கை அறையில் இருந்த, சிறிய அளவிலான மின்சார வெப்பமூட்டி திருப்தியளிக்கும் வகையில் வேலை செய்யவில்லை. படுக்கையிலிருந்து எழுந்த இந்திரா, சில நிமிடங்களுக்கு யோகாசனப் பயிற்சி மேற்கொண்டார். பின்னர் குளித்துவிட்டுப் பிரகாசமான ஆரஞ்சு வண்ண சேலையை உடுத்திக் கொண்ட அவர், தமது பேரக் குழந்தைகளான பிரியங்கா, ராகுல் ஆகியோருடன்&nbsp; காலை உணவுக்காக அமர்ந்தார்.&nbsp;</p>



<p>அடுத்த ஓரிரு நாள்களில் நாடாளுமன்றத் தேர்தலை இந்திரா காந்தி அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில், அவரது புதல்வரான ராஜிவ் காந்தி அப்போது தமது தாயாரின் சார்பில் சில அரசியல் பணிகளை முடிப்பதற்காக மேற்கு வங்கத்திற்குச் சென்றிருந்தார். சில நாள்கள் முன்பாக அக்டோபர் 27ஆம் தேதி எவரும் எதிர்பார்க்காத நிலையில், இந்திரா காந்தி தமது பேரக்குழந்தைகளான பிரியங்காவையும் ராகுல் காந்தியையும் காஷ்மீர் தலைநகரான ஸ்ரீநகருக்குச் சுற்றுலா அழைத்துச் சென்றிருந்தார். அந்தச் சுற்றுலா வெறும் 30 மணி நேரம் மட்டுமே நீடித்தது. அங்கு இந்திரா காந்தியைக் காஷ்மீர் மாநில ஆளுநர் ஜக்மோகனும், அப்போதுதான் புதிதாகப் பதவியேற்றிருந்த குல்சாவும் சந்தித்துப் பேசினர்.</p>



<p>இந்திரா காந்தியும் அவருடன் வந்தவர்களும் அனைவரையும் கவரக்கூடியமாநில விருந்தினர் மாளிகையில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இந்திரா காந்தியின் இந்தப் பயணம் குறித்துப் பின்னர் நினைவுகூர்ந்த ஆளுநர்ஜக்மோகன், &#8220;இந்திரா காந்தி வழக்கத்திற்கு மாறாக நல்ல மனநிலையில் கலகலப்பாகவும், மனதுக்கு நிறைவாக உணவு அருந்தியும் மகிழ்ந்தார்&#8221; என்று குறிப்பிட்டார்.</p>



<p>அக்டோபர் 28 ஆம் தேதி காலையில் &#8220;தால் ஏரி&#8217;க்கு அருகிலுள்ள சங்கராச்சாரியாமலையில் ஏறி, அங்குள்ள லக்ஷ்மண் ஜூ என்ற சுவாமியைச் சந்தித்தார். சிறிது நேரமே நீடித்த இச்சந்திப்பின்போது, தாம் விரைவிலேயே உயிரிழக்கப்போவதாகத் தமது உள்ளுணர்வு உணர்த்துவதாக இந்திரா காந்தி கூறினார் என்று லக்ஷ்மண் ஜூ பின்னர் தெரிவித்தார்.</p>



<p>“இந்திரா காந்தி தமது மரணம் பற்றிப் பேசினார். தமது வாழ்க்கை முடிவடையும் நேரம் வந்துவிட்டதாகவும், சாவு நெருங்கி விட்டதாகவும் இந்திரா கூறினார்” என்று லக்ஷ்மண் ஜூ தெரிவித்தார்.</p>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img loading="lazy" decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/EILYND5XUAI73NU.jpg" alt="" class="wp-image-2841" width="568" height="383" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/EILYND5XUAI73NU.jpg 720w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/EILYND5XUAI73NU-300x203.jpg 300w" sizes="auto, (max-width: 568px) 100vw, 568px" /></figure></div>



<p>இந்திரா காந்தி தமது மரணம் குறித்துப் பேசுவார் என்று சுவாமி எதிர்பார்க்கவில்லை. அந்த நேரத்தில் அமைதியாகவும் இயல்பாகவும் இருக்க முயன்ற சுவாமி, அதே வளாகத்தில் கட்டப்பட்டிருந்த சிறிய கட்டடத்தைக் காட்டி, அந்தக் கோயில் நவம்பர் மாதத்தில் திறக்கப்பட இருப்பதாகவும், திறப்பு விழாவிற்கு உங்களால் தலைமையேற்க முடியுமா என்றும் இந்திரா காந்தியிடம் கேட்டார்.</p>



<p>அதைக் கேட்ட இந்திரா, &#8216;அதுவரை உயிருடன் இருந்தால் நான் கண்டிப்பாக வருவேன்‘என்று கூறினார். சுவாமி லக்ஷ்மண் ஜூவின் ஆசிரமத்திலிருந்து விடைபெற்ற இந்திரா, அருகிலுள்ள காஷ்மீர் பிராமணர்களின் கடவுளாகக் கருதப்படும் ஷரீகா கோயிலுக்குச் சென்றார். அங்கிருந்த குருக்கள் இந்திராவுக்காகச் சிறப்பு வழிபாடு நடத்தினார். சிறப்பு வழிபாடு முடிவடைந்த பின்னர், இந்திராவும் அவரது பேரக்குழந்தைகளும் தில்லி திரும்புவதற்காக விமான நிலையம் சென்றனர்.</p>



<p>காஷ்மீரில் அவசர அவசரமாக மேற்கொண்ட பயணத்தின்போதுகூட உள்ளூர் அரசியல் நிலைமை குறித்து இந்திரா காந்தி பேசியதையும், மாநிலத்தின் அன்றாட அரசியல் நிகழ்வுகள் குறித்து விளக்கும்படி கூறியதையும் காஷ்மீர் ஆளுநர் ஜக்மோகன் பின்னர் நினைவுகூர்ந்தார்.</p>



<p>அதற்கு அடுத்த நாளான அக்டோபர் 29 ஆம் தேதி&nbsp; விமானம் மூலம் ஒரிசா சென்று பல்வேறு நிகழ்ச்சிகளில் இந்திரா காந்தி கலந்து கொண்டார். அதன்பின் அக்டோபர் 30ஆம் தேதி மாலைதான்&nbsp; தில்லி திரும்பினார்.</p>



<p>அக்டோபர் 31 ஆம் தேதி காலை உணவாக வாட்டப்பட்ட சில உணவு வகைகள், தானியங்கள், புதிதாகப் பிழிந்தெடுக்கப்பட்ட ஆரஞ்சுச் சாறு, முட்டைகள், தேநீர் ஆகியவற்றை இந்திரா எடுத்துக் கொண்டார். பின்னர் இந்திராவின் பேரக் குழந்தைகள் பள்ளிக்குப் புறப்பட ஆயத்தமாயினர். அப்போது ராகுல் காந்தியையும் பிரியங்காவையும் பார்த்து, எப்படி இருக்கிறீர்கள் என இந்திரா காந்தி கேட்டார். ஏனெனில்,அதற்கு முதல்நாள்தான் அவர்கள் இருவரும் பயணம் செய்த கார், இந்திராவின் சப்தர்ஜங் இல்லத்திற்கு அருகே வந்துகொண்டிருக்கும்போது, சிவப்பு சிக்னலைத் தாண்டி வந்த வேன் ஒன்று கார் மீது மோதியிருந்தது. இந்த விபத்தில் ராகுலுக்கும் பிரியங்காவுக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. இந்த விபத்தின் பின்னணியில் சதித் திட்டம் எதுவும் இல்லை என்று பிரதமரின் பாதுகாவலர்கள் அவரிடம் தெரிவித்திருந்தனர்.</p>



<p>பேரக்குழந்தைகளிடம் இந்திரா காந்தி பேசிக் கொண்டிருந்தபோது, உணவு அருந்தும் அறைக்குள் இந்திராவின் உதவியாளர் ஒருவர் நுழைந்தார். அவரது பெயர் ஆர்.கே.தவான். குள்ளமான, சிரித்த முகம்கொண்ட 47 வயதுமனிதரான தவான், எப்போதும் எண்ணெய் தேய்த்து வாரப்பட்ட தலையுடன் காணப்படுவார். தவான் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திராவிடம் பணியாற்றி வருகிறார். இந்திராவின் மிகுந்த நம்பிக்கைக்குரிய உதவியாளரான அவர், அதிகாரம் மிகுந்தவரும்கூட. இந்திரா காந்தியிடம் தட்டச்சராகச் சேர்ந்து உதவியாளராக மாறிய தவான், காங்கிரஸ் கட்சிக்கு நிர்வாகிகளை நியமிப்பதில் தொடங்கி, வெளியுறவுக் கொள்கையை வகுப்பதுவரை அனைத்து விஷயங்களிலும் இந்திராவுக்கு ஆலோசனை வழங்கி வந்தார்.</p>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large"><img loading="lazy" decoding="async" width="600" height="832" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/indira_gandhi_delhi_2010032.jpg" alt="" class="wp-image-2937" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/indira_gandhi_delhi_2010032.jpg 600w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/indira_gandhi_delhi_2010032-216x300.jpg 216w" sizes="auto, (max-width: 600px) 100vw, 600px" /></figure></div>



<p>இந்திராவை நெருங்கிய தவான் அவரது அன்றைய முதல் நிகழ்ச்சிக்கான நேரம் நெருங்கிவிட்டதாகக் கூறினார். அதைக் கேட்டு தலையாட்டிய இந்திரா, தமது பேரக்குழந்தைகளைக் கட்டித் தழுவி முத்தம் கொடுத்தார். பின்னர் இரு குழந்தைகளும் அங்கிருந்து வெளியேறியபோது வழக்கத்திற்குமாறாக அவர்களை மீண்டும் அழைத்து கட்டித் தழுவி முத்தம் கொடுத்தார். பின்னர் அருகிலுள்ள தமது அலுவலக அறைக்குச் சென்ற இந்திரா காந்தி, அங்கு ஏற்கெனவே ஆர்.கே.தவான் எடுத்து வைத்திருந்த கோப்புகளைப் பார்த்தார். அங்கு இந்திரா காந்தி தமது கைப்பட சில விஷயங்களை எழுதினார். அது ஒரு வகையில் இந்திரா காந்தியின் கடைசி உயில் மற்றும் மரண சாசனத்தைப் போன்றதாகும். இந்திராவின் உதவியாளர்களுள் ஆர்.கே.தவான் மட்டுமே அதைப் பார்த்திருந்தார். தமது உயில் எழுதும் பணியை இந்திரா காந்தி முழுமையாக முடிக்கவில்லை.</p>



<p>அதைப்பற்றி இந்திராவிடம் ஆர்.கே.தவான் ஒருமுறை கேட்டபோதிலும், அதை அவர் கண்டுகொள்ளவில்லை. தமக்கு ஏதேனும் ஆபத்து நிகழும் வாய்ப்பு இருப்பதைப் பற்றி இந்திரா அவ்வப்போது கூறுவதை அவரது நீண்டகால நண்பரும் ஆலோசகருமான நியூயார்க் பல்கலைக்கழகப் பேராசிரியர் ரால்ஃப் புல்ட்ஜென்சும் கேட்டிருக்கிறார். அப்படியெல்லாம் எதுவும் நிகழாது என்று இந்திரா காந்திக்கு உணர்த்த பேராசிரியர் ரால்ஃப் பலமுறை முயன்றபோதிலும், இந்திரா விரக்தியடைந்த நிலையிலேயே காணப்பட்டார்.</p>



<p>1978 ஆம் ஆண்டு இந்திரா காந்தி ஆட்சிப் பொறுப்பில் இல்லாதபோது, தாம் வன்முறையான சூழலில் கொல்லப்பட்டால், பொதுமக்களுக்குச் சில விஷயங்களைத் தெரிவிப்பதற்காகத் தயாரித்து வைத்திருந்த வரைவு அறிக்கை ஒன்றை அந்தப் பேராசிரியரிடம் இந்திரா காந்தி காட்டியிருந்தார்.</p>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large"><img loading="lazy" decoding="async" width="875" height="604" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/Indira-Gandhi-and-her-son-Rajiv.jpg" alt="" class="wp-image-2938" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/Indira-Gandhi-and-her-son-Rajiv.jpg 875w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/Indira-Gandhi-and-her-son-Rajiv-300x207.jpg 300w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/Indira-Gandhi-and-her-son-Rajiv-768x530.jpg 768w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/Indira-Gandhi-and-her-son-Rajiv-750x518.jpg 750w" sizes="auto, (max-width: 875px) 100vw, 875px" /></figure></div>



<p>இந்திரா காந்தியின் விரக்தியான மனநிலையை எண்ணி ஆர்.கே.தவானும், பேராசிரியர் ரால்ஃப்பும் கவலையடைந்தனர். 1984 ஆம் ஆண்டு அமிர்தசரஸ் நகரிலுள்ள பொற்கோயில்மீது ராணுவ நடவடிக்கை எடுக்க இந்திரா காந்தி ஆணையிட்டதிலிருந்து அவரது பாதுகாப்புக் குறித்து இருவரும் கவலைப்பட்டு வந்தனர்.</p>



<p>1984ஆம் ஆண்டில் பொற்கோயிலில் பதுங்கியிருந்த சீக்கிய தீவிரவாதிகளை&#8217;ஆபரேஷன் புளூஸ்டார்’ என்ற நடவடிக்கை மூலம் இந்திய ராணுவம் வெளியற்றியது. அதற்கு முன்பாகவே ராணுவத்திற்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் நடந்த சண்டையில் சிக்கி, புனிதப் பயணம் வந்த ஆயிரத்திற்கும்மேற்பட்ட ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் உயிரிழந்தனர். இந்தியாவின் உணவுக் களஞ்சியமான பஞ்சாப் மாநிலத்தைப் பிரித்து, தனிநாடு அமைத்துத் தரவேண்டும் என்ற சீக்கிய தீவிரவாதிகளின் கோரிக்கையைஏற்பதில்லை என்பதில் இந்திரா காந்தி மிகவும் உறுதியாக இருந்தார்.</p>



<p>இந்தியாவில் உள்ள 1 கோடியே 40 லட்சம் சீக்கியர்களின் பெரும்பான்மையானோர் தனிநாடு கோரும் தீவிரவாதிகளை ஆதரிக்கவில்லை என்றபோதிலும், அவர்களை ஒடுக்குவதற்காக இந்திரா காந்தி மேற்கொண்ட ஆபரேஷன் புளூஸ்டார், சீக்கியர்களால் கடுமையாகக் கண்டிக்கப்பட்டது. பொற்கோயில் தாக்குதலில் ஏராளமானோர் கொல்லப்பட்டதை எண்ணியும், பொற்கோயிலுக்குப் பெரும் பாதிப்பு ஏற்பட்டதை எண்ணியும் அவர்கள் அதிர்ச்சியடைந்திருந்தனர். பொற்கோயில் தாக்குதலுக்குப் பிறகு பெரும்பாலான இந்தியர்கள் எண்ணியதைப் போலவே இந்திரா காந்தியின் உதவியாளர்களும், இந்திரா காந்தி மீது சீக்கியர்கள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று நம்பினார்கள். இந்தப் பழிவாங்கும் நடவடிக்கையில் இந்திரா காந்தி கொல்லப்படக்கூடும் என்றும் அவர்கள் அஞ்சினார்கள்.</p>



<p>தமக்கு விரைவில் மரணம் ஏற்படும் என்று இந்திரா காந்தி அஞ்சினாரா? இதற்கு விடையளிக்க இந்திரா காந்தியால் ஏற்கெனவே எழுதப்பட்ட குறிப்பு ஒன்றை அவரது உதவியாளர் ஆர்.கே.தவான் வெளியிட்டார்.</p>



<p>“உயிரிழப்பதைப் பற்றி நான் ஒருபோதும் கவலைப்படவில்லை. இந்தப் பொறுமையும், மன அமைதியும்தான் என்னை இத்தகைய உயிலை எழுதத் தூண்டியது. சிலர் அஞ்சுவதைப் போலவும், வேறு சிலர் திட்டமிடுவதைப் போலவும் நான் வன்முறையான வழியில் கொல்லப்பட்டால், எனது நாட்டின் மீதும், மக்களின் மீதும் நான் கொண்டிருக்கும் அன்பை எந்த வெறுப்பும் மறைக்கமுடியாது. இந்தியாவை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லவேண்டும் என்ற உறுதியான நோக்கத்திலிருந்து எந்தச் சக்தியும் என்னை திசை திருப்ப முடியாது.</p>



<p>“ஒரு கவிஞன் அவனது அன்பு பற்றிப் பாடல் எழுதினான். என்னுடன் சொத்துக்களாகிய நீங்கள் இருக்கும்போது, என்னால் எப்படித் தாழ்மையாக உணரமுடியும் என்று அந்தக் கவிஞன் குறிப்பிட்டிருந்தான். அந்த வார்த்தைகள் இந்தியாவுக்கும் பொருந்தும் என்று நான் கூறுவேன். இந்தியாவின் பலம் எல்லையில்லாத பாரம்பரியம், மக்களின் கம்பீர உணர்வு, தங்களது நம்பிக்கையிலுள்ள உறுதிப்பாடு, வறுமை மற்றும் நெருக்கடியிலும் வெளிப்படும் தன்னியல்பு ஆகியவற்றை எண்ணி எந்தவொரு இந்தியனும் பெருமைப்படாமல் இருப்பானா என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை” என்று அந்தக் குறிப்பில் இந்திரா கூறியிருந்தார்.</p>



<p>இந்திரா காந்தியிடம் அன்றைய நாளின் அவரது முதல் சந்திப்பு குறித்து ஆர்.கே.தவான் நினைவூட்டினார். அன்று இந்திராவை முதலில் சந்திக்க இருந்தவர், இங்கிலாந்தைச் சேர்ந்த நடிகரான பீட்டர் உஸ்டினாவ் ஆவார். இந்திரா காந்தி குறித்து ஆவணப்படம் ஒன்றைத் தயாரிக்க உஸ்டினாவ் திட்டமிட்டிருந்தார். இதற்காக அவர் இந்திரா காந்தி மேற்கொண்ட பல பயணத்தின் போது உடன் சென்றிருந்தார். உஸ்டினாவின் “மனிதர்கள்” என்ற உத்தேச தலைப்பின்கீழ் அவர் தயாரிக்க இருந்த தொடரின் ஒரு கட்டமாகவே இந்திரா காந்தி குறித்த ஆவணப்படம் அமைந்திருந்தது.</p>



<p>இந்திராவுடன் பல நேர்காணலை நடத்தியிருந்த உஸ்டினாவ், அன்று கடைசி அத்தியாயத்தைப் படம்பிடிக்க இருந்தார். இதற்காக அவர் தமது படப்பிடிப்புக் குழுவினருடன் இந்திரா காந்தியின் சப்தர்ஜங் சாலை இல்லத்தில் நன்றாகச் செதுக்கப்பட்ட புல்வெளிக்குப் பின்புறத்தில் காத்திருந்தார். கலைத்துறையைச் சேர்ந்தவர்களிடம் இந்திரா காந்தி தனிப்பாசம் கொண்டிருந்தார். அவர் பாசம் வைத்திருந்தவர்களுள் உஸ்டினாவும் ஒருவர்.</p>



<p>அதுமட்டுமன்றி, கிறிஸ்துமஸ் தாத்தா சாதாரண உடையில் வந்தால் எப்படி இருப்பாரோ அதைப்போன்ற தோற்றம் கொண்ட உஸ்டினவ்,&nbsp; துன்பப்படும் குழந்தைகளின் நலனுக்காக உதவி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். இன்னும் கேட்டால் உஸ்டினாவ் இரண்டு அடையாளங்களுடன் இந்தியா வந்தார். ஒன்று திரைப்படத் தயாரிப்பாளர். மற்றொன்று ஐ.நா. குழந்தைகள் நிதி அமைப்பான UNICEF-க்கு நிதி திரட்டும் தூதர். கடைசியாக நடத்த இருந்த நேர்காணலின்போது ஜவஹர்லால் நேருவின் ஒரே மகளான இந்திரா காந்தி, சகோதரர்கள் இல்லாத தனிமையை எப்படிச் சமாளித்தார் என்று கேட்கத் திட்டமிட்டிருந்ததாகப் பின்னர் தெரிவித்தார்.</p>



<p>இந்திரா காந்தியுடனான உஸ்டினவ்வின் நேர்காணல் காலை 9.20 மணிக்குத் தொடங்க இருந்தது. இந்திரா காந்தியின் அக்பர் சாலை இல்ல புல்வெளி இயற்கை எழில் கொஞ்சும் வகையில் அமைந்திருந்ததால், அங்கு நேர்காணலை நடத்தலாம் என்று அவர் நினைத்திருந்தார். குளிர் நிறைந்த காலைப் பொழுதில் இந்திரா காந்தியின் தோட்டத்திலிருந்த ரோஜா செடிகள் அனைத்தும் பூத்துக் குலுங்கின. அந்தப் புல்வெளிக்குப் பின்புறத்தில்தான் பிரதமரின் இல்ல அலுவலகம் அமைந்திருந்தது. சவுத் பிளாக் பகுதியிலுள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ அலுவலகத்திற்குச் செல்வதற்கு முன்பாகத் தம்மை பார்க்க வருபவர்களை இந்த இல்ல அலுவலகத்தில்தான் இந்திரா சந்திப்பது வழக்கம். இந்தக் கட்டடமும் அதனை அடுத்திருந்த சுற்றுச்சுவரும்தான் அக்பர் சாலை பகுதியிலிருந்து இந்திராவின் வீட்டைப் பிரித்தன.</p>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large"><img loading="lazy" decoding="async" width="509" height="640" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/portrait-of-prime-minister-indira-gandhi-titit_1.jpg" alt="" class="wp-image-2934" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/portrait-of-prime-minister-indira-gandhi-titit_1.jpg 509w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/portrait-of-prime-minister-indira-gandhi-titit_1-239x300.jpg 239w" sizes="auto, (max-width: 509px) 100vw, 509px" /></figure></div>



<p>காலை 9.15 மணிக்கு இந்திரா காந்தி அவரது வீட்டிலிருந்து வெளியில் வந்தார். அப்போது தயாராக இருந்த அலங்கார வல்லுநர்கள் அவரது முகத்தில் பவுடர் பூசி அழகுபடுத்தினர். உஸ்டினவ்வின் நேர்காணலுக்காக இந்திராவை அவர்கள் தயார்படுத்திக் கொண்டிருந்த நேரத்தில், அவர் தமது மருத்துவரான கே.பி.மாத்தூருடன் உரையாடிக் கொண்டிருந்தார். மாத்தூர் பெரும்பாலான காலை நேரங்களில் இந்திரா காந்தியைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.</p>



<p>மாத்தூருடனான சந்திப்பு முடிந்ததும், தில்லி காவல்துறையைச் சேர்ந்த காவலரான நாராயண் சிங் வெயிலிலிருந்து பாதுகாப்பதற்காகக் குடைப்பிடித்துக் கொண்டிருந்த நிலையில், இந்திரா காந்தி, உஸ்டினவ் இருந்த இடத்தை நோக்கி நடந்தார். அவரை ஆர்.கே.தவான் பின்தொடர்ந்தார். அவருக்குப் பின்னால் தில்லி காவல்துறை உதவி ஆய்வாளர் ராமேஷ்வர் தயாளும், இந்திராவின் பணியாளர் நாதுராமும் வந்தனர்.</p>



<p>இந்திரா காந்தி வழக்கம் போலவே அக்பர் சாலை அலுவலகத்தை நோக்கி விரைவாக நடந்தார். சுற்றுச் சுவரை அவர் நெருங்கியபோது, அங்கு சீக்கிய காவலரான பியாந்த் சிங்கைப் பார்த்தார். பியான் சிங் இந்திராவின் பாதுகாப்புப் படையில் கடந்த 6 ஆண்டுகளாகப் பணியாற்றி வந்தார். 28 வயதான, நெட்டையான, தாடி வைத்த பியாந்த் சிங்கைப் பார்த்து புன்னகைத்தார். பொற்கோயில் தாக்குதலுக்குப் பிறகு சீக்கியர்கள் இந்திரா மீது கோபம் கொண்டிருந்ததால், பியாந்த் சிங்கால் அவருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று அஞ்சிய இந்திராவின் ஆலோசகர்கள், பியாந்த் சிங்கைப் பாதுகாப்புக் குழுவிலிருந்து வெளியேற்றும்படி விடுத்த கோரிக்கைகளை இந்திரா நிராகரித்து விட்டார். சீக்கியர்களைக் கண்டு நாம் அஞ்சுவதற்கு எந்தக் காரணமும் இல்லை&#8221; என்று அவர்களிடம் இந்திரா கூறியிருந்தார்.</p>



<p>இந்திராவை நோக்கி நகர்ந்த பியாந்த் சிங், தம்மிடமிருந்த கைத்துப்பாக்கியை எடுத்துக் குறி பார்த்தார். அதைப் பார்த்த இந்திரா, &#8220;நீ என்ன செய்கிறாய்&#8221; என்று கேட்டார். அவர் கேட்டு முடிப்பதற்குள் அவரது அடி வயிற்றை நோக்கி மூன்றுமுறை பியாந்த் சிங் சுட்டார். அப்போது இந்திராவின் முகம் இறுக்கமாக, அமைதியாக இருந்தது. குண்டு பாய்ந்த வலியில் இந்திராவின் உடல் சரியும் முன்பே அங்கு வந்த இன்னொரு காவலரான 21 வயது சத்வந்த் சிங், தம்மிடமிருந்த தானியங்கித் துப்பாக்கியால் இந்திராவை நோக்கி சரமாரியாகச் சுட்டார். துப்பாக்கிக் குண்டு பாய்ந்த வேகத்தில் இந்திராவின் உடல் பூமியிலிருந்து மேல் எழுந்து, சுழன்று தரையில் விழுந்தது. 20 வினாடி இடைவெளிக்குள் அவரது சிறிய உடலில் 32 குண்டுகள் பாய்ந்தன.</p>



<p>இந்திராவின் உடல் தரையில் விழுவதற்கு முன்பாகவே அவர் உயிரிழந்திருக்க வேண்டும். அப்போது நேரம் சரியாகக் காலை 9.17 மணி. தரையில் விழுந்த இந்திராவின் உடல் சுமார் ஒரு நிமிடம் அப்படியே கிடந்தது. அவரது பாதுகாவலர்கள் தரையில் சாய்ந்திருந்த நிலையில், அவருடன் வந்த மற்றவர்கள் உயிர் பிழைப்பதற்காக ஓடினார்கள். இந்திரா சுட்டுக் கொல்லப்படுவதற்குச் சில காலம் முன்பாகத்தான் அவரது பாதுகாவலரான ஆர்.என்.கோவ், வெளியிலிருந்து குண்டு வீசப்படுவதைத் தடுக்கும் வகையில் இந்திரா வீட்டுத் தோட்டத்தில் சிலமாற்றங்களைச் செய்யும்படி அறிவுறுத்தினார்.</p>



<p>ஆனால், இந்திரா காந்தியோ சிரித்தபடியே அந்த யோசனைகளை நிராகரித்துவிட்டார். “கொலையாளிகள் என்னைக் கொல்லவரும் நேரத்தில் எதுவும் உதவாது. யாரெல்லாம் என்னைக் காக்க வேண்டிய பொறுப்பில் இருக்கிறார்களோ அவர்கள்தான் முதலில் உயிர் பிழைப்பதற்காகத் தப்பி ஓடுவார்கள்’’ என்று அப்போது இந்திரா காந்தி கூறியிருந்தார்.</p>



<p>சத்வந்த் சிங் சுட்டதில் இந்திராவின் பாதுகாப்புக்காக வந்த உதவி ஆய்வாளர் ராமேஷ்வர் தயாளின் தொடையில் குண்டு பாய்ந்திருந்தது. ஆர்.கே.தவானும் மற்றவர்களும் அதிர்ச்சியிலிருந்து மீண்டு எழுந்து பார்த்தபோது, பியாந்த் சிங்கும் சத்வந்த் சிங்கும் கைகளை மேலே உயர்த்தியபடி சரணடைய தயாராக நின்றனர். அவர்கள் துப்பாக்கிகளைக் கீழே போட்டிருந்தனர்.&nbsp;</p>



<p>எங்களுக்குக் கொடுத்த பணியை நாங்கள் செய்து முடித்துவிட்டோம். இப்போது எங்களை நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்களோ அதைச் செய்துகொள்ளுங்கள்’’ என்று பியாந்த் சிங் ஹிந்தியில் கூறினார். அப்போதுகூட கொலையாளிகளைப் பிடிக்க எவரும் முன்வரவில்லை. இந்திரா காந்தியின் உடலைப் பார்த்த அவரது உதவியாளர்கள், தாங்கள் எதையும் செய்யாமல் மற்றவர்களுக்குச் சத்தமாக உத்தரவு போட்டுக் கொண்டிருந்தனர். இந்தச் சத்தத்தைக் கேட்டு அக்பர் சாலை அலுவலகத்திலிருந்து தினேஷ் குமார் பட் என்ற பாதுகாவலர் விரைந்து வந்தார். இந்திராவின் மருத்துவர் மாத்தூரும் ஓடிவந்தார். அவர் இந்திராவின் வாயோடு வாய் வைத்து சுவாசத்தை ஏற்படுத்தச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். இந்திராவின் உடல் அருகே முழங்காலிட்டுச் சாய்ந்திருந்த தவான்அதிர்ச்சியிலிருந்து மீளாதவராகக் காட்சியளித்தார்.</p>



<p>அந்த நேரத்தில் கவுன் அணிந்திருந்த நிலையில் செருப்புக்கூட போடாமல் சோனியா காந்தி அலறியடித்துக்கொண்டு ஓடிவந்தார். அவரது தலைமுடியில் ஷாம்பு போட்ட ஈரம்கூட காய வில்லை. “உடனடியாக ஒரு காரை எடுங்கள்&#8221; என்று சோனியா கூச்சலிட்டார். இந்திராவின் சப்தர் ஜங் சாலையில் அவசரத் தேவைக்காக 24 மணி நேரமும் தயார் நிலையில் அவசர ஊர்தி ஒன்று நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்திரா காந்தி குண்டடிப்பட்டுக் குருதி வழிந்து, எலும்பும் சதையும் தரையில் சிதறி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நிலையில், அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லவேண்டிய அவசர ஊர்தியின் ஒட்டுநரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் தேநீர் குடிக்கச் சென்றிருப்பார் என்று சிலரும், அவர் பணிக்கே வரவில்லை என்று வேறு சிலரும் கூறினார்கள். அவசர ஊர்தியை எந்த நேரமும் இயக்குவதற்கு வசதியாக அதில், எப்போதும் சாவி பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என்று விதிமுறை வகுக்கப்பட்டிருந்த போதிலும், அன்று அந்த ஊர்தியில் சாவி பொருத்தப்பட்டிருக்கவில்லை.</p>



<p>சோனியா காந்தியும், ஆர்.கே.தவானும், நாராயண் சிங், நாதுராம், தினேஷ் பட்ஆகியாரின் உதவியுடன் இந்திராவின் உடலைத் தூக்கினார்கள். அருகில் நிறுத்தப்பட்டிருந்த அம்பாசிடர் காருக்கு அவரது உடலைத் தூக்கி வந்தனர். காரின் பின்புறத்தில் இந்திராவை வைத்த சோனியா, அவரது தலையைத் தமது மடியில் வைத்துக்கொண்டார். தவான், பட், மாத்தூர் ஆகியோருடன் இந்திராவின் உதவியாளரான எம்.எல்.பொத்தேதாரும் காரில் ஏறிக்கொண்டார்.</p>



<p>அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனைக்குக் (AIIMS) காரை இயக்கும்படி ஆர்.கே.தவான் ஓட்டுநருக்கு ஆணையிட்டார். இந்திராவின் வீட்டிற்கு அருகிலேயே ராம் மனோகர் லோகியா மருத்துவமனைபோன்ற மருத்துவ நிலையங்கள் இருந்தன. அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனைக்குச் செல்ல, நெரிசல் இல்லாத நேரத்தில் 20 நிமிடங்கள் ஆகும். எனினும், அங்குதான் இந்திரா காந்தியின் &#8220;ஓ&#8217; நெகட்டிவ்’ குருதியும், அவரதுமருத்துவ ஆவணங்களும் இருந்தன என்பதால், அங்குச் செல்லும்படி தவான் ஆணையிட்டிருந்தார்.</p>



<p>அதன்படி அம்பாசிடர் கார், அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனையை நோக்கி விரைந்தது. அன்று வழக்கத்தைவிட அதிகமாக நெரிசல் காணப்பட்டது. பிரதமரின் வீட்டிலிருந்து 4 கி.மீ. தொலைவிலுள்ள அந்த மருத்துவமனைக்கு இந்திரா கொண்டு செல்லப்பட்டபோது 10 மணி ஆகியிருந்தது. காரில் செல்லும்போதே இந்திராவுக்குச் செயற்கை சுவாசம் அளிக்க மாத்தூர் முயன்றார். ஆனால், இந்திரா உயிருடன் இருப்பதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படாததை அவர் உணர்ந்துகொண்டார்.</p>



<p>இந்திரா குண்டடிப்பட்ட நிலையில் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படுவதை மருத்துவமனை அதிகாரிகளுக்கு எவரும் தெரிவிக்கவில்லை. இந்திராவின் இல்லத்தில் பியாந்த் சிங்கும் சத்வந்த் சிங்கும் தங்களிடமிருந்த துப்பாக்கிகளைக் கீழே போட்ட நிலையில், தொடர்ந்து நின்று கொண்டிருந்தனர். அங்கு வந்த பாதுகாப்பு அதிகாரிகள் அப்பகுதியை அலசி ஆராய்ந்தனர். அப்போதுதான் யாரோ சிலர் அவர்கள் இருவரையும் கைது செய்யும்படி யோசனை தெரிவித்தனர். உடனடியாக அவர்களை இந்தோ- திபெத் எல்லை காவல் படைக் காவலர்கள் கைது செய்து அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அடுத்த 20 நிமிடத்தில் அங்கு துப்பாக்கிச் சுடும் ஓசை கேட்டது. பியாந்த் சிங், சத்வந்த் சிங் ஆகிய இருவரையும் அவர்களின் காவலுக்காக நிறுத்தப்பட்டிருந்த காவலர்கள் சரமாரியாகச் சுட்டனர். இதில், பியாந்த் சிங் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். சத்வந்த் சிங்கிற்கு முதுகுத் தண்டிலும், சிறுநீரகத்திலும் கடுமையான காயங்கள் ஏற்பட்டன. அந்த இருவரும் அங்கு காவலுக்கு நிறுத்தப்பட்டிருந்த காவலர்களின் துப்பாக்கியைப் பறித்துக்கொண்டு தப்பிஓட முயன்றதாகவும், அதனால்தான் அவர்களைச் சுட நேரிட்டதாகவும் அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால், நடந்த நிகழ்வுகளை நேரில் பார்த்த 3 பாதுகாப்பு அதிகாரிகள் பின்னர் இதுபற்றி விளக்கும்போது, பியாந்த் சிங்கையும் சத்வந்த் சிங்கையும் இந்தோ &#8211; திபெத் எல்லை காவல் படையினர் கடுமையாகத் திட்டியதாகவும், அதன்பின் அவர்களைச் சுட்டதாகவும் தெரிவித்தனர்.</p>



<p>இதற்கிடையே, இங்கிலாந்து நடிகர் பீட்டர் உஸ்டினவ்வும், அவரது படப்பிடிப்புக் குழுவினரும் இந்திரா கொல்லப்பட்ட இடத்திலிருந்து 70 மீட்டர் தொலைவில் தொடர்ந்து காக்க வைக்கப்பட்டிருந்தனர். இதுபற்றிப் பின்னர் விளக்கம் அளித்த உஸ்டினவ், &#8220;நாங்கள் மைக் மற்றும் கேமராவுடன் தயார் நிலையில் இருந்தோம். இந்திராவை அழைத்து வருவதற்காக ஒரு செயலாளர் சென்றார். அதன்பிறகுதான் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. மூன்றுமுறை துப்பாக்கியால் சுடப்படும் சத்தத்தை நான் கேட்டேன். இதனால் நாங்கள் எச்சரிக்கை அடைந்தோம். ஆனால், பிரதமர் அலுவலகத்தில் இருந்தவர்களோ, அது பட்டாசு வெடிக்கும் சத்தமாக இருக்கும் என்று எங்களிடம் கூறினர். பின்னர் தானியங்கித் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது. இந்திரா கொல்லப்படுவதை உறுதிசெய்யவேண்டும் என்பதற்காகக் கொலையாளிகள் அப்படிச் சுட்டிருக்கலாம். அதன்பிறகு இந்திரா உயிர் பிழைக்க வாய்ப்பு இருப்பதாக நான் கருதவில்லை. அங்கு பாதுகாவலர்கள் ஓடுவதை நாங்கள் பார்த்தோம்&#8221; என்று தெரிவித்தார்.</p>



<p>அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் அவசர நுழைவு வாயிலுக்கு இந்திராவை அழைத்து வந்த கார் வந்தபோது, அதை உள்ளே அனுமதிக்க அங்கு எவரும் இல்லை. அவசர சிகிச்சை பிரிவுக்குச் செல்லும் பாதையின் நுழைவு வாயிலைக் காவலர்கள் வந்து திறப்பதற்கு 3 நிமிடங்கள் ஆயின. உயிருக்கு ஆபத்தான நிலையில் ஒரு முக்கிய பிரமுகர் அழைத்து வரப்படுகிறார் என்பதை அங்கிருந்த காவலர்களுக்கு எவரும் சொல்லாததுதான் இதற்குக் காரணமாகும்.</p>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large"><img loading="lazy" decoding="async" width="448" height="640" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/Rajiv-8_1.jpg" alt="" class="wp-image-2843" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/Rajiv-8_1.jpg 448w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/Rajiv-8_1-210x300.jpg 210w" sizes="auto, (max-width: 448px) 100vw, 448px" /></figure></div>



<p>அவசர சிகிச்சை பிரிவு வந்ததும் ஆர்.கே.தவானும் பொத்தேதாரும் காரிலிருந்துகுதித்து ஓடி, இந்திரா காந்தி படுகாயம் அடைந்த நிலையில் காரில் கொண்டு வரப்பட்டிருக்கிறார் என்று அங்கிருந்த மருத்துவர்களிடம் கூறினார்கள். ஆனால், இந்திராவின் உடலைக் கொண்டு வருவதற்கு அங்கு ஸ்ட்ரெச்சர்கள் எதுவும் இல்லை. மருத்துவமனையில் இருந்த பலகை ஒன்றைச் சிலர் தூக்கி வந்தனர். அப்பலகைமீது இந்திராவின் உடல் வைக்கப்பட்டிருந்தபோது, அவசர சிகிச்சை பிரிவுக்குப் பொறுப்பேற்றிருந்த இளம் மருத்துவர் ஒருவர் உணர்ச்சிவயப்பட்டு கத்தினார். ‘மேடம்&#8230; மேடம்’ என்று கதறிய அவர், உருக்குலைந்து குருதி வழிந்து கொண்டிருந்த இந்திராவின் உடல்மீது மயங்கி விழும் நிலையில் இருந்தார்.</p>



<p>அந்த அறையிலிருந்த இன்னொரு மருத்துவரோ, &#8220;இது இந்திரா காந்தியாக இருக்கமுடியாது. அவர் சலவை துணியில் சுற்றப்பட்ட குழந்தையைப்போல காட்சியளித்தார். இந்தியாவின் பிரதமரா இப்படி இருக்கிறார்&#8221; என்று தமக்குத் தாமே கூறிக்கொண்டார். அந்த மருத்துவர் வேகமாக ஓடிச்சென்று அங்கிருந்த தொலைபேசிமூலம் மருத்துவமனையின் மூத்த இதயநோய் வல்லுநர்களை அழைத்தார். அடுத்த 5 நிமிடங்களில் மூத்த மருத்துவ பேராசிரியர் ஜே.எஸ்.குலேரியா, மூத்த இதய அறுவை மருத்தவர் எஸ்.பலராம், எம்.எம்.கபூர் உள்ளிட்ட 12க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் இந்திராவின் இதயத்திற்கு மசாஜ் செய்ய முயன்றனர். அதற்குள் இந்திராவுக்குச் செய்யப்பட்ட எலெக்ட்ரோ கார்டியோ கிராம் (ஈ.சி.ஜி.) ஆய்வில் இந்திராவின் இதயத் துடிப்பு மிகமிகக் குறைவாக இருப்பது தெரிய வந்தது.</p>



<p>அந்த நேரத்தில் இந்திராவின் கண் இமைகள் விரிந்துவிட்டன. எனவே, அவரது மூளை ஏற்கெனவே செயலிழந்திருக்கலாம் என்று நாங்கள் தெரிந்து கொண்டோம். அந்த நேரத்தில் நாங்கள் மருத்துவ சிகிக்சைமூலம் அவரை உயிர் பிழைக்க வைத்திருந்தால்கூட, அவரது மூளை நிரந்தர பாதிப்புக்குள்ளாகி இருந்திருக்கும்’என்று ஒரு மருத்துவர் பின்னர் தெரிவித்தார்.</p>



<p>இந்திராவுக்கு நாடித்துடிப்பு சுத்தமாக இல்லை. இந்திரா காந்தியின் மூளையைத் துடிப்புடன் வைத்திருப்பதற்காக அவரது நுரையீரலுக்கு ஆக்சிஜனைச் செலுத்தும் நோக்குடன் ஒரு மருத்துவ உதவியாளர் வாய் வழியாக ரப்பர் குழாயைச் சொருகினார். இந்திராவிற்குக் குருதி செலுத்துவதற்காக இரண்டு குழாய்கள் பொருத்தப்பட்டன. அந்த நேரத்தில் இந்திராவை எட்டாவது மாடியிலுள்ள அறுவை சிகிச்சை அரங்கிற்குக் கொண்டு செல்ல முடிவெடுக்கப்பட்டது. அங்குள்ள இரண்டாவது எண் கொண்ட அரங்கில் மருத்துவர்கள் அரும்பாடுபட்டு அவரது உடலில் இருந்த குண்டுகளை அகற்றப் போராடினர். வழக்கமாக ஒருவரின் உடலில் இருக்கும் ரத்தத்தின் அளவைவிட நான்கு அல்லது ஐந்து மடங்கு அதிகளவுள்ள ரத்தம் இந்திராவிற்குச் செலுத்தப்பட்டிருந்தது.</p>



<p>இந்திராவின் உடலை இதயம் மற்றும் நுரையீரலின் பணியைச் செய்யும் எந்திரத்துடன் மருத்துவர்கள் இணைத்தனர். அந்த எந்திரம் ரத்தத்தைத் தூய்மைப்படுத்தி அனுப்பும் பணியைச் செய்தது. அந்த நேரத்தில் இந்திரா உடலின் வளர்சிதை (Metabolism) மாற்ற அளவு குறைவதையும், அதன்மூலம் அவரது ரத்த அழுத்தம் குறைவதையும் உறுதிசெய்ய விரும்பினர். இதயம், நுரையீரலின் பணியை செய்யும் எந்திரத்தின் உதவியுடன் இந்தப் பணி மேற்கொள்ளப்பட்டது. இதனால், இந்திரா உடலிலிருந்த ரத்தத்தின் வெப்பநிலை வழக்கமான 37 டிகிரி செல்சியசிலிருந்து 31 டிகிரி செல்சியசாகக் குறைக்கப்பட்டது.&nbsp;</p>



<p>இந்தியாவில் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சியின் அடையாளமாகத் திகழ்ந்த அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனையின் இரண்டாம் எண் கொண்ட அறுவை சிகிச்சை அரங்கில் அம்மருத்துவமனையின் தலைசிறந்த மருத்துவர்களும், அறுவை சிகிச்சை வல்லுநர்களும் இருந்தனர். பியாந்த் சிங்கும் சத்வந்த் சிங்கும் சுட்ட குண்டுகள் இந்திராவின் உடலில் பாய்ந்து அவரது கல்லீரலின் வலதுபுற அடிப்பகுதியில் சிதைத்துவிட்டதைக் கண்டுபிடித்தனர். அவரது பெருங்குடலில் குறைந்தது 12 துளைகள் ஏற்பட்டிருந்தன. சிறு குடலுக்கும் பெரும் சேதம் ஏற்பட்டிருந்தது. இந்திராவின் இதயம் காயமின்றி உறுதியாக இருந்தபோதிலும், அவரது ஒருபக்க நுரையீரலில் குண்டு பாய்ந்திருந்தது. ரத்த நாளங்கள், தமணி, நரம்பு ஆகியவை வெடித்துவிட்டன. எலும்புகளும், முதுகெலும்புகளும் சிதறிவிட்டன. முதுகுத்தண்டு துண்டாகிவிட்டது.</p>



<p>இத்தகைய சூழலில் இந்திரா காந்திக்கு உயிர் கொடுக்க மருத்துவர்களால் எதையும் செய்ய முடியவில்லை. &#8221; மருத்துவமனைக்குக் கொண்டு வரப்படுவதற்கு முன்பாகவே இந்திரா காந்தி உயிரிழந்துவிட்டார். உண்மையில் இந்திரா காந்தி சுடப்பட்ட சப்தஜங் சாலையிலுள்ள தமது இல்லத்தின் தோட்டத்தில் தரையில் விழுந்தபோது அவரது உயிர் பிரிந்திருக்கக்கூடும்&#8221; என்று ஒரு மருத்துவர் பின்னர் தெரிவித்தார்.</p>



<p>பியாந்த் சிங், சத்வந்த் சிங் ஆகியோரால் சுடப்பட்டு 5 மணி நேரத்திற்குப் பிறகு பிற்பகல் 2 மணிக்கு இந்திரா காந்தி உயிரிழந்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்தியாவின் நவீனகால வரலாற்றில் பரந்து விரிந்திருந்த ஒரு மிகப்பெரிய சகாப்தம், 1984 ஆம் ஆண்டின் அக்டோபர் கடைசி நாளில் முடிவுக்கு வந்தது.</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/the-assassination-of-indira-gandhi-2/">பயங்கரவாதத்தால் வீழ்த்தப்பட்ட வீராங்கனை!! அக்டோபர் 31: அன்னை இந்திரா நினைவு நாள் &#8211; ராகுல் அஞ்சலி</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://desiyamurasu.com/news-india/the-assassination-of-indira-gandhi-2/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>அன்னை இந்திராவின் காலச்சுவடுகள்! &#8211; அரிய புகைப்படங்களின் தொகுப்பு</title>
		<link>https://desiyamurasu.com/news-india/rare-photos-of-indira-gandhi-2/</link>
					<comments>https://desiyamurasu.com/news-india/rare-photos-of-indira-gandhi-2/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[ஆ. கோபண்ணா]]></dc:creator>
		<pubDate>Sun, 31 Oct 2021 18:10:29 +0000</pubDate>
				<category><![CDATA[தேசிய அரசியல்]]></category>
		<category><![CDATA[indira gandhi]]></category>
		<guid isPermaLink="false">https://desiyamurasu.com/?p=4513</guid>

					<description><![CDATA[<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/rare-photos-of-indira-gandhi-2/">அன்னை இந்திராவின் காலச்சுவடுகள்! &#8211; அரிய புகைப்படங்களின் தொகுப்பு</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img loading="lazy" decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/INDIRA-3.jpg" alt="" class="wp-image-2877" width="552" height="735" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/INDIRA-3.jpg 525w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/INDIRA-3-225x300.jpg 225w" sizes="auto, (max-width: 552px) 100vw, 552px" /><figcaption><strong>Born on November 19, 1917, Indira Gandhi is till date the only woman Prime Minister of India. She was elected as the PM of India in January 1966 and served till March 1977.</strong></figcaption></figure></div>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img loading="lazy" decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/10/nationalherald_2016-11_723fafe5-bb4d-49ae-836d-5144bacb8cc5_Young-Indira-Nehru-Gandhi-Anand-Bhawan-Allahabad-Congress.jpg" alt="" class="wp-image-4515" width="554" height="784" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/10/nationalherald_2016-11_723fafe5-bb4d-49ae-836d-5144bacb8cc5_Young-Indira-Nehru-Gandhi-Anand-Bhawan-Allahabad-Congress.jpg 700w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/10/nationalherald_2016-11_723fafe5-bb4d-49ae-836d-5144bacb8cc5_Young-Indira-Nehru-Gandhi-Anand-Bhawan-Allahabad-Congress-212x300.jpg 212w" sizes="auto, (max-width: 554px) 100vw, 554px" /><figcaption><strong>Indira Nehru, a very young Congress activist, at Anand Bhawan, Allahabad, in the early 1920s</strong></figcaption></figure></div>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img loading="lazy" decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/indira_young.jpg" alt="" class="wp-image-2914" width="549" height="677" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/indira_young.jpg 520w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/indira_young-244x300.jpg 244w" sizes="auto, (max-width: 549px) 100vw, 549px" /><figcaption>It was during her interview at Shantiniketan that Rabindra Nath Tagore named her Priyadarshini. Since then she has been known as Indira Priyadarshini Nehru or Indira Priyadarshini Gandhi.</figcaption></figure></div>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img loading="lazy" decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/Indira-Gandhi-riding-on-Yak-on-way-to-Bhutan..jpg" alt="" class="wp-image-2952" width="562" height="554" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/Indira-Gandhi-riding-on-Yak-on-way-to-Bhutan..jpg 602w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/Indira-Gandhi-riding-on-Yak-on-way-to-Bhutan.-300x296.jpg 300w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/Indira-Gandhi-riding-on-Yak-on-way-to-Bhutan.-75x75.jpg 75w" sizes="auto, (max-width: 562px) 100vw, 562px" /><figcaption><strong>Indira Gandhi riding on Yak on way to Bhutan.</strong></figcaption></figure></div>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img loading="lazy" decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/indira5_1.jpg" alt="" class="wp-image-2881" width="562" height="799" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/indira5_1.jpg 450w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/indira5_1-211x300.jpg 211w" sizes="auto, (max-width: 562px) 100vw, 562px" /></figure></div>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img loading="lazy" decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/i1.jpg" alt="" class="wp-image-2882" width="574" height="524" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/i1.jpg 540w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/i1-300x274.jpg 300w" sizes="auto, (max-width: 574px) 100vw, 574px" /><figcaption><strong>Mrs. Indira Gandhi photographed at Palam Aerodrome on Oct. 3, 1949 before her departure for London, from where she is expected to join the Hon&#8217;ble Pandit Jawaharlal Nehru Prime Minister in U.S.A. during his forth coming tour to that country.</strong></figcaption></figure></div>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img loading="lazy" decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/dsgsdgs.jpg" alt="" class="wp-image-2954" width="577" height="499" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/dsgsdgs.jpg 634w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/dsgsdgs-300x259.jpg 300w" sizes="auto, (max-width: 577px) 100vw, 577px" /></figure></div>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img loading="lazy" decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/ba5dfcfcebf3c8fa5ffec03a4ae81fcd.jpg" alt="" class="wp-image-2884" width="578" height="625" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/ba5dfcfcebf3c8fa5ffec03a4ae81fcd.jpg 564w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/ba5dfcfcebf3c8fa5ffec03a4ae81fcd-277x300.jpg 277w" sizes="auto, (max-width: 578px) 100vw, 578px" /></figure></div>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img loading="lazy" decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/Indira-Gandhi-Nehru_1.jpg" alt="" class="wp-image-2899" width="576" height="859" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/Indira-Gandhi-Nehru_1.jpg 429w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/Indira-Gandhi-Nehru_1-201x300.jpg 201w" sizes="auto, (max-width: 576px) 100vw, 576px" /><figcaption><strong>A picture of Indira Gandhi taken during her visit to an Indian store in Zurich, Switzerland.</strong></figcaption></figure></div>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img loading="lazy" decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/image-7.jpg" alt="" class="wp-image-2921" width="575" height="473" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/image-7.jpg 700w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/image-7-300x247.jpg 300w" sizes="auto, (max-width: 575px) 100vw, 575px" /></figure></div>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img loading="lazy" decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/indira.jpg" alt="" class="wp-image-2908" width="574" height="729" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/indira.jpg 403w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/indira-236x300.jpg 236w" sizes="auto, (max-width: 574px) 100vw, 574px" /><figcaption><strong>Indira Gandhi with her sons, Rajiv and Sanjay.</strong></figcaption></figure></div>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img loading="lazy" decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/indira4.jpg" alt="" class="wp-image-2892" width="577" height="720" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/indira4.jpg 651w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/indira4-240x300.jpg 240w" sizes="auto, (max-width: 577px) 100vw, 577px" /></figure></div>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img loading="lazy" decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/image-4.jpg" alt="" class="wp-image-2897" width="575" height="692" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/image-4.jpg 532w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/image-4-249x300.jpg 249w" sizes="auto, (max-width: 575px) 100vw, 575px" /></figure></div>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img loading="lazy" decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/indira2.jpg" alt="" class="wp-image-2895" width="574" height="424" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/indira2.jpg 993w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/indira2-300x222.jpg 300w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/indira2-768x568.jpg 768w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/indira2-750x555.jpg 750w" sizes="auto, (max-width: 574px) 100vw, 574px" /></figure></div>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img loading="lazy" decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/IMG_20190128_113430-871x1024.jpg" alt="" class="wp-image-2896" width="576" height="675"/></figure></div>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img loading="lazy" decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/Kamaraj-1024x639.jpg" alt="" class="wp-image-2893" width="575" height="358" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/Kamaraj-1024x639.jpg 1024w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/Kamaraj-300x187.jpg 300w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/Kamaraj-768x479.jpg 768w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/Kamaraj-750x468.jpg 750w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/Kamaraj-1140x712.jpg 1140w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/Kamaraj.jpg 1200w" sizes="auto, (max-width: 575px) 100vw, 575px" /><figcaption><strong>Indira Gandhi and K. Kamaraj greeting each other at the Congress Parliamentary Party meeting in New Delhi.</strong></figcaption></figure></div>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img loading="lazy" decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/Mother-Teresa-with-Indira-Gandhi.jpg" alt="" class="wp-image-2894" width="575" height="378" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/Mother-Teresa-with-Indira-Gandhi.jpg 875w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/Mother-Teresa-with-Indira-Gandhi-300x197.jpg 300w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/Mother-Teresa-with-Indira-Gandhi-768x505.jpg 768w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/Mother-Teresa-with-Indira-Gandhi-750x493.jpg 750w" sizes="auto, (max-width: 575px) 100vw, 575px" /><figcaption><strong>India&#8217;s Prime Minister Indira Gandhi with Roman Catholic nun Mother Teresa in New Delhi.</strong></figcaption></figure></div>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img loading="lazy" decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/DsVHH_JX4AAfWnP_1542621000__rend_4_3.jpg" alt="" class="wp-image-2923" width="577" height="433" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/DsVHH_JX4AAfWnP_1542621000__rend_4_3.jpg 600w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/DsVHH_JX4AAfWnP_1542621000__rend_4_3-300x225.jpg 300w" sizes="auto, (max-width: 577px) 100vw, 577px" /></figure></div>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img loading="lazy" decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/image9.jpg" alt="" class="wp-image-2906" width="577" height="1146" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/image9.jpg 420w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/image9-151x300.jpg 151w" sizes="auto, (max-width: 577px) 100vw, 577px" /></figure></div>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img loading="lazy" decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/Indira-Gandhi-Dr.-Albert-Einstein-Jawaharlal-Nehru-and-Vijaya-Lakshmi-Pandit_1.jpg" alt="" class="wp-image-2909" width="576" height="449" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/Indira-Gandhi-Dr.-Albert-Einstein-Jawaharlal-Nehru-and-Vijaya-Lakshmi-Pandit_1.jpg 621w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/Indira-Gandhi-Dr.-Albert-Einstein-Jawaharlal-Nehru-and-Vijaya-Lakshmi-Pandit_1-300x234.jpg 300w" sizes="auto, (max-width: 576px) 100vw, 576px" /><figcaption><strong>Indira Gandhi, Dr. Albert Einstein, Jawaharlal Nehru and Vijaya Lakshmi Pandit. </strong></figcaption></figure></div>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img loading="lazy" decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/image8_1.jpg" alt="" class="wp-image-2901" width="580" height="478" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/image8_1.jpg 576w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/image8_1-300x247.jpg 300w" sizes="auto, (max-width: 580px) 100vw, 580px" /></figure></div>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img loading="lazy" decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/19-Indira-over-looks-the-Tungabhadra-Dam_1-1.jpg" alt="" class="wp-image-2903" width="580" height="460" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/19-Indira-over-looks-the-Tungabhadra-Dam_1-1.jpg 960w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/19-Indira-over-looks-the-Tungabhadra-Dam_1-1-300x238.jpg 300w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/19-Indira-over-looks-the-Tungabhadra-Dam_1-1-768x610.jpg 768w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/19-Indira-over-looks-the-Tungabhadra-Dam_1-1-750x595.jpg 750w" sizes="auto, (max-width: 580px) 100vw, 580px" /><figcaption><strong>Indira Gandhi over looks the Tungabhadra Dam</strong></figcaption></figure></div>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img loading="lazy" decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/DsVZRmuWoAIpqJU_@DKShivakumar_1542621107__rend_16_9-1.jpg" alt="" class="wp-image-2905" width="573" height="321" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/DsVZRmuWoAIpqJU_@DKShivakumar_1542621107__rend_16_9-1.jpg 600w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/DsVZRmuWoAIpqJU_@DKShivakumar_1542621107__rend_16_9-1-300x169.jpg 300w" sizes="auto, (max-width: 573px) 100vw, 573px" /><figcaption><strong>Indira Gandhi went to war with Pakistan to liberate East Pakistan. India won the war and Bangladesh was created.</strong></figcaption></figure></div>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img loading="lazy" decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/EILYOt-X0AA5jN9.jpg" alt="" class="wp-image-2904" width="582" height="709" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/EILYOt-X0AA5jN9.jpg 623w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/EILYOt-X0AA5jN9-246x300.jpg 246w" sizes="auto, (max-width: 582px) 100vw, 582px" /></figure></div>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img loading="lazy" decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/Indira-Gandhi-smiles.jpg" alt="" class="wp-image-2898" width="581" height="823" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/Indira-Gandhi-smiles.jpg 452w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/Indira-Gandhi-smiles-212x300.jpg 212w" sizes="auto, (max-width: 581px) 100vw, 581px" /><figcaption><strong>Indira Gandhi is all smiles post her re-election as Prime Minister of India in 1971.</strong></figcaption></figure></div>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/rare-photos-of-indira-gandhi-2/">அன்னை இந்திராவின் காலச்சுவடுகள்! &#8211; அரிய புகைப்படங்களின் தொகுப்பு</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://desiyamurasu.com/news-india/rare-photos-of-indira-gandhi-2/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>சாதனைகள் படைத்த சரித்திர நாயகர்! தலைவர் கே.எஸ்.அழகிரி 70 வது பிறந்த நாள் விழா &#8211; அக்டோபர் 22</title>
		<link>https://desiyamurasu.com/news-tamilnadu/tncc-president-ks-alagiri-70th-birthday/</link>
					<comments>https://desiyamurasu.com/news-tamilnadu/tncc-president-ks-alagiri-70th-birthday/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[ஆ. கோபண்ணா]]></dc:creator>
		<pubDate>Thu, 21 Oct 2021 18:57:56 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழக அரசியல்]]></category>
		<category><![CDATA[congress]]></category>
		<category><![CDATA[TNCC President K S Alagiri]]></category>
		<guid isPermaLink="false">https://desiyamurasu.com/?p=4474</guid>

					<description><![CDATA[<p>அன்னை சோனியா கண்டெடுத்த ஆற்றல்மிகு வீரரே ! தலைவர் ராகுல் காந்தியின் போர்ப்படைத் தளபதியே ! சத்தியமூர்த்தி பவனத்தின் சரித்திர நாயகரே ! தொடர் வெற்றிகளை குவித்திட்ட தொண்டர்களின் திசைகாட்டியே !! எட்டுத்திக்கும் உமது பெயர் எதிரொலிக்க&#8230; எக்காலமும் உமது பணி சிறந்தோங்க&#8230; வாஞ்சையுடன் வாழ்த்துகிறோம்&#8230; பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு வாழ்கவென்று !!! காங்கிரசின் தொண்டராக இளமைப்பருவத்திலேயே தம்மை இணைத்துக் கொண்டு, ஓயாது கட்சி பணியாற்றி, ஊராட்சி ஒன்றிய தலைவர், இருமுறை சட்டமன்ற உறுப்பினர், மக்களவை உறுப்பினர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் என [&#8230;]</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-tamilnadu/tncc-president-ks-alagiri-70th-birthday/">சாதனைகள் படைத்த சரித்திர நாயகர்! தலைவர் கே.எஸ்.அழகிரி 70 வது பிறந்த நாள் விழா &#8211; அக்டோபர் 22</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<blockquote class="wp-block-quote is-layout-flow wp-block-quote-is-layout-flow"><p><span class="has-inline-color has-vivid-red-color">அன்னை சோனியா கண்டெடுத்த</span></p><p><span class="has-inline-color has-vivid-red-color">ஆற்றல்மிகு வீரரே !</span></p><p><span class="has-inline-color has-vivid-red-color">தலைவர் ராகுல் காந்தியின்</span></p><p><span class="has-inline-color has-vivid-red-color">போர்ப்படைத் தளபதியே !</span></p><p><span class="has-inline-color has-vivid-red-color">சத்தியமூர்த்தி பவனத்தின்</span></p><p><span class="has-inline-color has-vivid-red-color">சரித்திர நாயகரே !</span></p><p><span class="has-inline-color has-vivid-red-color">தொடர் வெற்றிகளை குவித்திட்ட</span></p><p><span class="has-inline-color has-vivid-red-color">தொண்டர்களின் திசைகாட்டியே !!</span></p><p><span class="has-inline-color has-vivid-red-color">எட்டுத்திக்கும் உமது பெயர் எதிரொலிக்க&#8230;</span></p><p><span class="has-inline-color has-vivid-red-color">எக்காலமும் உமது பணி சிறந்தோங்க&#8230;</span></p><p><span class="has-inline-color has-vivid-red-color">வாஞ்சையுடன் வாழ்த்துகிறோம்&#8230;</span></p><p><span class="has-inline-color has-vivid-red-color">பல்லாண்டு பல்லாண்டு</span></p><p><span class="has-inline-color has-vivid-red-color">பல்லாண்டு வாழ்கவென்று !!!</span></p></blockquote>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img loading="lazy" decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/10/pdf-document.jpg" alt="" class="wp-image-4507" width="579" height="446" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/10/pdf-document.jpg 831w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/10/pdf-document-300x231.jpg 300w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/10/pdf-document-768x592.jpg 768w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/10/pdf-document-750x579.jpg 750w" sizes="auto, (max-width: 579px) 100vw, 579px" /></figure></div>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img loading="lazy" decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/05/sa29-rahul.jpg" alt="" class="wp-image-4401" width="579" height="480" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/05/sa29-rahul.jpg 650w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/05/sa29-rahul-300x249.jpg 300w" sizes="auto, (max-width: 579px) 100vw, 579px" /></figure></div>



<p>காங்கிரசின் தொண்டராக இளமைப்பருவத்திலேயே தம்மை இணைத்துக் கொண்டு, ஓயாது கட்சி பணியாற்றி, ஊராட்சி ஒன்றிய தலைவர், இருமுறை சட்டமன்ற உறுப்பினர், மக்களவை உறுப்பினர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் என படிப்படியாக தமது கடும் உழைப்பால் களம்பல கண்டு, உயர்நிலைக்கு வந்த தேசியம் தந்த கொள்கை குன்று, தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்களின் சரித்திரம் படைத்த சாதனைகளின் பட்டியலிலிருந்து சிலவற்றை அவரது 70-வது பிறந்தநாளில் மக்களின் பார்வைக்கு இங்கே படைக்கிறோம்&#8230;</p>



<p>அன்னை சோனியா காந்தி, தலைவர் ராகுல் காந்தி ஆகியோரின் வாழ்த்துகளுடன், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக கே.எஸ்.அழகிரி நியமிக்கப்பட்டார். மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சூறாவளி சுற்றுப்பயணம். தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் ஒருங்கிணைந்து பணியாற்றி, நாடாளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சித் தேர்தல்களில் மகத்தான வெற்றி.</p>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large"><img loading="lazy" decoding="async" width="759" height="459" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/03/INC5336.jpg" alt="" class="wp-image-4193" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/03/INC5336.jpg 759w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/03/INC5336-300x181.jpg 300w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/03/INC5336-750x454.jpg 750w" sizes="auto, (max-width: 759px) 100vw, 759px" /></figure></div>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large"><img loading="lazy" decoding="async" width="988" height="983" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/01/137361112_1791500311016297_4064151381348181000_o.jpg" alt="" class="wp-image-3887" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/01/137361112_1791500311016297_4064151381348181000_o.jpg 988w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/01/137361112_1791500311016297_4064151381348181000_o-300x298.jpg 300w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/01/137361112_1791500311016297_4064151381348181000_o-150x150.jpg 150w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/01/137361112_1791500311016297_4064151381348181000_o-768x764.jpg 768w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/01/137361112_1791500311016297_4064151381348181000_o-75x75.jpg 75w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/01/137361112_1791500311016297_4064151381348181000_o-750x746.jpg 750w" sizes="auto, (max-width: 988px) 100vw, 988px" /></figure></div>



<figure class="wp-block-image size-large"><img loading="lazy" decoding="async" width="756" height="567" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/10/163-1.jpg" alt="" class="wp-image-4496" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/10/163-1.jpg 756w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/10/163-1-300x225.jpg 300w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/10/163-1-750x563.jpg 750w" sizes="auto, (max-width: 756px) 100vw, 756px" /></figure>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large"><img loading="lazy" decoding="async" width="1024" height="681" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/10/198-1-1024x681.jpg" alt="" class="wp-image-4502" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/10/198-1-1024x681.jpg 1024w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/10/198-1-300x199.jpg 300w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/10/198-1-768x511.jpg 768w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/10/198-1-750x499.jpg 750w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/10/198-1.jpg 1092w" sizes="auto, (max-width: 1024px) 100vw, 1024px" /></figure></div>



<ul class="wp-block-list"><li>தலைவர் ராகுல்காந்தி அவர்களின் தமிழகச் சுற்றுப்பயணத்தை சிறப்பாக திட்டமிட்டு, ஒருங்கிணைத்து மகத்தான தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்ளுதல்.</li><li>தலைவர் ராகுல் காந்தி அவர்களின் சுற்றுப்பயணத்தில் மாணவர்கள், மகளிர், தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள், நெசவாளர்கள், சிறுகுறு நடுத்தர தொழில்கள் மற்றும் வரலாற்றில் முதல்முறையாக உப்பளத் தொழிலாளர்கள் என அனைத்துதரப்பினரையும் சந்தித்து, பிரச்சனைகளை அறிய கலந்துரையாடல்.</li><li>அகில இந்திய காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி நீடிக்க வேண்டி மாபெரும் பாதயாத்திரை.</li><li>மகாத்மா காந்தி அவர்களின் 150-வது பிறந்தநாள் விழா கோலாகலமாக கொண்டாடப் பட்டது. சத்தியமூர்த்தி பவனில் 150அடி உயர கொடிக்கம்பத்தில் காங்கிரஸ் கொடியை ஏற்றி கின்னஸ் சாதனை படைத்தல்.</li><li>கிராமசபை கூட்டங்களில் பங்கேற்று உள்ளாட்சி அமைப்புகளில் உரிமைக்குரல் எழுப்புதல்.</li><li>ஏரிகளில் தூர்வாரும் திட்டத்தை காங்கிரஸ் சார்பாக தொடங்கி வைத்து புதிய சாதனை படைத்தல்.</li><li>பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள் விழாவில், அவரின் பொற்கால ஆட்சி குறித்து கருத்தரங்கம் நடத்தி பரப்புரை செய்தல்.</li><li>சேலம் உருக்காலை தனியார்மயமாவதைக் கண்டித்து தொழிலாளர்களுடன் உண்ணாவிரத போராட்டம். தொழிலாளர்களின் உரிமைகளை காத்திட மே தின பொதுக்கூட்டங்கள்.</li><li>அரசமைப்பு சட்டத்தில் காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்புரிமையை பறித்த பா.ஜ.க. அரசை கண்டித்து முன்னணி காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்ற மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டங்கள்.</li><li>கன்னியாகுமரியில் பல்கலைக்கழகம் அமைக்க வலியுறுத்தி நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தில் பங்கேற்றல்.</li><li>பா.ஜ.க.வின் தவறான பொருளாதார கொள்கை, குடியுரிமை சட்டத்திருத்தம், விவசாயிகள் விரோத வேளாண் கருப்பு சட்டங்களை கண்டித்து பரப்புரை மேற்கொள்ளல். விவசாயிகளுக்கு விதைநெல், மரக்கன்றுகள் வழங்குதல்.</li><li>வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி புதிய சரித்திரம் படைத்தல்.</li><li>கடந்த ஓராண்டு காலமாக தமிழகம் முழுவதும் கொரோனா நிவாரணப் பணிகளை முழுவீச்சில் மேற்கொள்ளுதல். சத்தியமூர்த்தி பவனில் கொரோனா மருத்துவ உதவி மையம் திறப்பு.</li><li>பொதுத்துறை நிறுவனப் பங்குகளை தனியாருக்கு குத்தகை வழங்கி, தாரை வார்க்கும் பா.ஜ.க.வை கண்டித்து ஆர்ப்பாட்டங்கள்.</li><li>தமிழகத்தில் பத்தாண்டுகாலம் நடைபெற்ற அராஜக அ.தி.மு.க. ஊழல் ஆட்சியை அகற்ற, பலமுனைப் போராட்டங்களை நடத்தி மக்கள் ஆதரவை திரட்டுதல்.</li><li>மத்திய பா.ஜ.க. அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து கருத்தரங்குகள், ஆர்ப்பாட்டங்கள் நடத்துதல்.</li><li>இந்தி, சமஸ்கிருத மொழிகளை பலவழிகளில் திணித்துவரும் பா.ஜ.க. அரசை எதிர்த்து தொடர்ந்து குரல் எழுப்புதல்.</li><li>பா.ஜ.க. ஆட்சியில் தலித் மற்றும் சிறுபான்மை மக்கள் தாக்கப்படுவதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டங்கள்.</li><li>பத்திரிகையாளர் சந்திப்புகள், அறிக்கைகள், தொலைக்காட்சி ஊடகங்கள் வாயிலாக மக்கள் பிரச்சனைகளுக்காக தொடர்ந்து உரிமைக்குரல் எழுப்புதல்.</li><li>நீட் தேர்வை எதிர்த்து தொடர்ந்து குரலெழுப்பி பலமுனை போராட்டங்களை முன்னெடுத்தல்.</li><li>மத்திய பா.ஜ.க. அரசின் ரஃபேல் ஊழல் மற்றும் பெகாசஸ் ஒட்டுக்கேட்பை கண்டித்து ஆர்ப்பாட்டங்கள்.</li></ul>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large"><img loading="lazy" decoding="async" width="1024" height="681" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/11/WhatsApp-Image-2020-11-23-at-3.10.28-PM-1024x681.jpeg" alt="" class="wp-image-3214" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/11/WhatsApp-Image-2020-11-23-at-3.10.28-PM-1024x681.jpeg 1024w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/11/WhatsApp-Image-2020-11-23-at-3.10.28-PM-300x200.jpeg 300w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/11/WhatsApp-Image-2020-11-23-at-3.10.28-PM-768x511.jpeg 768w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/11/WhatsApp-Image-2020-11-23-at-3.10.28-PM-750x499.jpeg 750w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/11/WhatsApp-Image-2020-11-23-at-3.10.28-PM.jpeg 1040w" sizes="auto, (max-width: 1024px) 100vw, 1024px" /></figure></div>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large"><img loading="lazy" decoding="async" width="1024" height="681" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/WhatsApp-Image-2020-10-14-at-15.14.36-3-1024x681.jpeg" alt="" class="wp-image-2656" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/WhatsApp-Image-2020-10-14-at-15.14.36-3-1024x681.jpeg 1024w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/WhatsApp-Image-2020-10-14-at-15.14.36-3-300x200.jpeg 300w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/WhatsApp-Image-2020-10-14-at-15.14.36-3-768x511.jpeg 768w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/WhatsApp-Image-2020-10-14-at-15.14.36-3-750x499.jpeg 750w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/WhatsApp-Image-2020-10-14-at-15.14.36-3.jpeg 1040w" sizes="auto, (max-width: 1024px) 100vw, 1024px" /></figure></div>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large"><img loading="lazy" decoding="async" width="1024" height="681" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/WhatsApp-Image-2020-10-14-at-17.46.13-1024x681.jpeg" alt="" class="wp-image-2659" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/WhatsApp-Image-2020-10-14-at-17.46.13-1024x681.jpeg 1024w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/WhatsApp-Image-2020-10-14-at-17.46.13-300x199.jpeg 300w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/WhatsApp-Image-2020-10-14-at-17.46.13-768x511.jpeg 768w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/WhatsApp-Image-2020-10-14-at-17.46.13-750x499.jpeg 750w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/WhatsApp-Image-2020-10-14-at-17.46.13-1140x758.jpeg 1140w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/WhatsApp-Image-2020-10-14-at-17.46.13.jpeg 1280w" sizes="auto, (max-width: 1024px) 100vw, 1024px" /></figure></div>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large"><img loading="lazy" decoding="async" width="896" height="597" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/10/113-1-1.jpg" alt="" class="wp-image-4494" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/10/113-1-1.jpg 896w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/10/113-1-1-300x200.jpg 300w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/10/113-1-1-768x512.jpg 768w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/10/113-1-1-750x500.jpg 750w" sizes="auto, (max-width: 896px) 100vw, 896px" /></figure></div>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large"><img loading="lazy" decoding="async" width="896" height="597" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/10/111-1.jpg" alt="" class="wp-image-4493" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/10/111-1.jpg 896w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/10/111-1-300x200.jpg 300w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/10/111-1-768x512.jpg 768w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/10/111-1-750x500.jpg 750w" sizes="auto, (max-width: 896px) 100vw, 896px" /></figure></div>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large"><img loading="lazy" decoding="async" width="1024" height="681" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/10/320-1-1024x681.jpg" alt="" class="wp-image-4499" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/10/320-1-1024x681.jpg 1024w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/10/320-1-300x200.jpg 300w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/10/320-1-768x511.jpg 768w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/10/320-1-750x499.jpg 750w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/10/320-1-1140x758.jpg 1140w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/10/320-1.jpg 1433w" sizes="auto, (max-width: 1024px) 100vw, 1024px" /></figure></div>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large"><img loading="lazy" decoding="async" width="896" height="413" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/10/306-1.jpg" alt="" class="wp-image-4498" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/10/306-1.jpg 896w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/10/306-1-300x138.jpg 300w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/10/306-1-768x354.jpg 768w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/10/306-1-750x346.jpg 750w" sizes="auto, (max-width: 896px) 100vw, 896px" /></figure></div>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large"><img loading="lazy" decoding="async" width="1024" height="480" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/10/263-1-1024x480.jpg" alt="" class="wp-image-4501" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/10/263-1-1024x480.jpg 1024w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/10/263-1-300x141.jpg 300w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/10/263-1-768x360.jpg 768w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/10/263-1-1536x720.jpg 1536w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/10/263-1-750x351.jpg 750w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/10/263-1-1140x534.jpg 1140w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/10/263-1.jpg 1575w" sizes="auto, (max-width: 1024px) 100vw, 1024px" /></figure></div>



<figure class="wp-block-image size-large"><img loading="lazy" decoding="async" width="1024" height="682" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/10/22-1-1024x682.jpg" alt="" class="wp-image-4491" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/10/22-1-1024x682.jpg 1024w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/10/22-1-300x200.jpg 300w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/10/22-1-768x512.jpg 768w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/10/22-1-750x500.jpg 750w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/10/22-1-1140x760.jpg 1140w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/10/22-1.jpg 1433w" sizes="auto, (max-width: 1024px) 100vw, 1024px" /></figure>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large"><img loading="lazy" decoding="async" width="896" height="597" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/10/293-1.jpg" alt="" class="wp-image-4500" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/10/293-1.jpg 896w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/10/293-1-300x200.jpg 300w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/10/293-1-768x512.jpg 768w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/10/293-1-750x500.jpg 750w" sizes="auto, (max-width: 896px) 100vw, 896px" /></figure></div>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large"><img loading="lazy" decoding="async" width="760" height="438" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/01/WhatsApp-Image-2021-01-13-at-7.01.09-PM.jpeg" alt="" class="wp-image-3871" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/01/WhatsApp-Image-2021-01-13-at-7.01.09-PM.jpeg 760w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/01/WhatsApp-Image-2021-01-13-at-7.01.09-PM-300x173.jpeg 300w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/01/WhatsApp-Image-2021-01-13-at-7.01.09-PM-750x432.jpeg 750w" sizes="auto, (max-width: 760px) 100vw, 760px" /></figure></div>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large"><img loading="lazy" decoding="async" width="728" height="484" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/10/342-1.jpg" alt="" class="wp-image-4503" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/10/342-1.jpg 728w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/10/342-1-300x199.jpg 300w" sizes="auto, (max-width: 728px) 100vw, 728px" /></figure></div>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large"><img loading="lazy" decoding="async" width="896" height="597" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/10/62-1.jpg" alt="" class="wp-image-4492" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/10/62-1.jpg 896w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/10/62-1-300x200.jpg 300w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/10/62-1-768x512.jpg 768w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/10/62-1-750x500.jpg 750w" sizes="auto, (max-width: 896px) 100vw, 896px" /></figure></div>



<p>தமிழக காங்கிரசின் தலைமை பொறுப்பேற்று கொள்கை சார்ந்த அரசியலை முன்னெடுத்து இயக்கத்திற்கு வலிமை கூட்டிய தலைவர் கே.எஸ். அழகிரி, சாதனைகளை புரிந்து சரித்திரம் படைத்து வருகிறார். தமிழக காங்கிரஸ் வரலாற்றில் தலைவர் அழகிரி படைத்த சாதனைகள் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டு என்றும் மின்னிக்கொண்டிருக்கும். தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்களின் 70-வது பிறந்தநாளில் சாதனைகள் பல புரிந்து, புதிய சகாப்தம் படைக்க உளமாற வாழ்த்துகிறோம் !</p>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large"><img loading="lazy" decoding="async" width="624" height="416" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/10/207.jpg" alt="" class="wp-image-4486" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/10/207.jpg 624w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/10/207-300x200.jpg 300w" sizes="auto, (max-width: 624px) 100vw, 624px" /></figure></div>



<p></p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-tamilnadu/tncc-president-ks-alagiri-70th-birthday/">சாதனைகள் படைத்த சரித்திர நாயகர்! தலைவர் கே.எஸ்.அழகிரி 70 வது பிறந்த நாள் விழா &#8211; அக்டோபர் 22</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://desiyamurasu.com/news-tamilnadu/tncc-president-ks-alagiri-70th-birthday/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>ஊடகங்களை கபளீகரம் செய்யும் மோடியின் வலையில் மாலினி:  ஆ. கோபண்ணா கண்டனம்</title>
		<link>https://desiyamurasu.com/news-india/agopanna-condems-thehindu-editor-malini-parthasarathy/</link>
					<comments>https://desiyamurasu.com/news-india/agopanna-condems-thehindu-editor-malini-parthasarathy/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[ஆ. கோபண்ணா]]></dc:creator>
		<pubDate>Tue, 27 Jul 2021 09:41:04 +0000</pubDate>
				<category><![CDATA[தேசிய அரசியல்]]></category>
		<guid isPermaLink="false">https://desiyamurasu.com/?p=4465</guid>

					<description><![CDATA[<p>முக்கிய அம்சங்கள்: இந்து நாளேட்டுக்கு இருக்கிற வரலாற்றுப் பின்னணியும் செய்திகள் மீது வாசகர்களுக்கு இருக்கிற நம்பகத்தன்மையைப் போல எந்த நாளேட்டுக்கும் இருந்ததில்லை. அத்தகைய நம்பகத்தன்மைமிக்க &#8216;இந்து&#8217; நாளேட்டிற்கு சோதனை ஏற்பட்டுள்ளது. சமீபத்தில், பிரதமர் மோடியை தி இந்து குழுமத் தலைவர் மாலினி பார்த்தசாரதி&#160; சந்தித்தது குறித்து கருத்து கூறிய இந்து குழும இயக்குநர் என். ராம், &#8221; தி இந்து ஏடு கடுமையாகப் போராடிப் பெற்ற மரபு பறிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டிருக்கிறார். பிரதமர் மோடியை மாலினி பார்த்தசாரதி சந்தித்ததில் [&#8230;]</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/agopanna-condems-thehindu-editor-malini-parthasarathy/">ஊடகங்களை கபளீகரம் செய்யும் மோடியின் வலையில் மாலினி:  ஆ. கோபண்ணா கண்டனம்</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p><strong><u>முக்கிய அம்சங்கள்:</u></strong></p>



<ul class="wp-block-list" type="1"><li>இந்து நாளேட்டுக்கு இருக்கிற வரலாற்றுப் பின்னணியும் செய்திகள் மீது வாசகர்களுக்கு இருக்கிற நம்பகத்தன்மையைப் போல எந்த நாளேட்டுக்கும் இருந்ததில்லை. அத்தகைய நம்பகத்தன்மைமிக்க &#8216;இந்து&#8217; நாளேட்டிற்கு சோதனை ஏற்பட்டுள்ளது.</li></ul>



<ul class="wp-block-list"><li>சமீபத்தில், பிரதமர் மோடியை தி இந்து குழுமத் தலைவர் மாலினி பார்த்தசாரதி&nbsp; சந்தித்தது குறித்து கருத்து கூறிய இந்து குழும இயக்குநர் என். ராம், &#8221; தி இந்து ஏடு கடுமையாகப் போராடிப் பெற்ற மரபு பறிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டிருக்கிறார்.</li></ul>



<ul class="wp-block-list"><li>பிரதமர் மோடியை மாலினி பார்த்தசாரதி சந்தித்ததில் எந்த தவறும் இல்லை. அந்த சந்திப்பின் மூலம் 142 ஆண்டு காலமாகக் கட்டிக்காக்கப்பட்டு இந்தியாவின் கருத்தியலுக்காகவும், ஊழல், சமூக அநீதிகளுக்கு எதிராகவும் குரல் கொடுத்து வருகிற இந்து குழுமத்தின் அடிப்படை கொள்கைகளை அடகு வைத்துவிடக் கூடாது.</li></ul>



<ul class="wp-block-list"><li>மோடி ஆட்சியில் ஏறத்தாழ 55 பத்திரிக்கையாளர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, அவர்கள் மீது கடுமையான தாக்குதல், அச்சுறுத்தல்கள், அடக்குமுறைகள் ஏவப்பட்டுள்ளன.&nbsp; கொரோனா தொற்றினால் பாதிப்பு, இறப்பு, தடுப்பூசி தட்டுப்பாடு குறித்த செய்தி வெளியிட்டதற்காக வழக்குத் தொடுக்கப்பட்டு இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</li></ul>



<ul class="wp-block-list"><li>இந்து நாளேட்டின் கொள்கை வழிப் பாதையை நிர்ணயிப்பதில் திரு. என்.ராம் அவர்களின் பங்களிப்பு மகத்தானது, ஈடு இணையற்றது. உலகத்தின் எந்த சக்தியாலும் &#8216;தி இந்து&#8217; நாளேட்டையும் திரு. என்.ராம் அவர்களையும் பிரிக்க முடியாது</li></ul>



<figure class="wp-block-image size-large"><img loading="lazy" decoding="async" width="609" height="433" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/07/Malini-Parthasarthy-meeting-Modi.jpg" alt="" class="wp-image-4469" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/07/Malini-Parthasarthy-meeting-Modi.jpg 609w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/07/Malini-Parthasarthy-meeting-Modi-300x213.jpg 300w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/07/Malini-Parthasarthy-meeting-Modi-120x86.jpg 120w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/07/Malini-Parthasarthy-meeting-Modi-350x250.jpg 350w" sizes="auto, (max-width: 609px) 100vw, 609px" /></figure>



<figure class="wp-block-image size-large"><img loading="lazy" decoding="async" width="599" height="311" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/07/NRam.jpg" alt="" class="wp-image-4467" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/07/NRam.jpg 599w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/07/NRam-300x156.jpg 300w" sizes="auto, (max-width: 599px) 100vw, 599px" /></figure>



<figure class="wp-block-image size-large"><img loading="lazy" decoding="async" width="599" height="378" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/07/Mailini-NRam.jpg" alt="" class="wp-image-4468" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/07/Mailini-NRam.jpg 599w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/07/Mailini-NRam-300x189.jpg 300w" sizes="auto, (max-width: 599px) 100vw, 599px" /></figure>



<p>பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து விடுதலைப் போராட்டத்தின் குரலாக ஒலிக்க 1889 இல் இந்து ஆங்கில நாளேடு தொடங்கப்பட்டது. இன்று 11 மாநிலங்களில் 21 நகரங்களில் வெளியிடப்பட்டு 15 லட்சத்துக்கும் மேற்பட்ட வாசகர்களைப் பெற்று பீடு நடை போட்டு வருகிறது. இந்தியாவில் எத்தனையோ நாளேடுகள் வெளிவருகின்றன. இந்து நாளேட்டுக்கு இருக்கிற வரலாற்றுப் பின்னணியும் செய்திகள் மீது வாசகர்களுக்கு இருக்கிற நம்பகத்தன்மையைப் போல எந்த நாளேட்டுக்கும் இருந்ததில்லை.&nbsp; எந்த நாளேட்டில் எந்த செய்தி வந்தாலும், இந்து நாளேட்டில் வருவதைத்தான் வாசகர்கள் உறுதியாக நம்புவார்கள். அத்தகைய நம்பகத்தன்மைமிக்க இந்து நாளேட்டிற்கு சோதனை ஏற்பட்டுள்ளது.</p>



<p>சமீபத்தில், பிரதமர் மோடியை தி இந்து குழுமத் தலைவர் மாலினி பார்த்தசாரதி&nbsp; சந்தித்து,&nbsp; அதன் புகைப்படத்தை டிவிட்டரில் வெளியிட்டு கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். அதில், தங்களது உரையாடல் ஆக்கப்பூர்வமானதாக இருந்ததாகவும், தற்போதைய மக்கள் பிரச்சினைகளைப் பகிர்ந்து கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.</p>



<p>இது குறித்து கருத்து கூறிய இந்து குழும இயக்குநர் என். ராம், &#8220;தி இந்து ஏடு கடுமையாகப் போராடிப் பெற்ற மரபு பறிக்கப்படுவதாகக்&#8221; குறிப்பிட்டிருக்கிறார். இதையொட்டி, டிவிட்டர் பயனர் ஒருவரது கேள்விக்குப் பதில் அளித்த என்.ராம், &#8220;இந்த விவகாரத்துக்கும் எனக்கும் சம்பந்தமில்லை. நரேந்திர மோடியுடன் கலந்துரையாடுவதன் மூலம் தி இந்து குழுமத்தின் மரபு மற்றும் நற்பெயரை மாலினி பார்த்தசாரதி பறிக்கிறார் என்ற கருத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன். கடந்த 142 ஆண்டுகளில் தி இந்து ஆங்கில ஏட்டின் கடின உழைப்பில் கிடைத்த நற்பெயர் மற்றும் மரபு பறிபோவதைத் தடுக்க எங்களால் முடிந்த அனைத்தையும் நாங்கள் செய்வோம் என்று உங்களுக்கு நான் உறுதியளிக்கிறேன்&#8221; என்று குறிப்பிட்டுள்ளார்.</p>



<p>ஆனால், இதற்குப் பதில் கூறிய மாலினி பார்த்தசாரதி, &#8220;என்.ராம் நினைப்பதைப் போல் 142 ஆண்டு கால தி இந்து நாளேட்டின் பெருமை அழிந்துவிடாது. உண்மையை எழுதியதால் தான் 142 ஆண்டுகள் கடினமாக உழைத்துப் பெற்ற நற்பெயர் கட்டமைக்கப்பட்டுள்ளது. பாரபட்சமான அல்லது அரசியல்&nbsp; சார்பு நிலையால் கட்டமைக்கப்படவில்லை&#8221; என்றும் குறிப்பிட்டுள்ளார். அதோடு அவர் நிறுத்தியிருந்தால் பரவாயில்லை. ஆனால், எந்த இந்து நாளேட்டை உலக அரங்கில் உயர்த்தி நற்பெயரைப் பெற்றுத் தந்த திரு. என். ராம் அவர்கள் மீது கடுமையான குற்றச்சாட்டைக் கூறியிருக்கிறார்.</p>



<p>மேலும் மாலினி பார்த்தசாரதி தமது பதிலில், &#8220;என்.ராம் தலைமையில் தி இந்து இயங்கியபோது உண்மையிலேயே மோசமடைந்த பாரம்பரியத்தையும் நற்பெயரையும் மீட்டெடுக்க நான் முயன்று வருகிறேன்&#8221; என்று ஆதாரமற்ற அவதூறான கருத்தைக் கூறியிருக்கிறார். இதனால் லட்சக்கணக்கான தி இந்து வாசகர்களின் கோபத்துக்கும் ஆளாகியிருக்கிறார்.</p>



<p>ஏற்கெனவே ரபேல் விவகாரத்தில் முறைகேடு நடக்கவில்லை என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்கவேண்டும் என்றும், ரபேல் விவகாரத்தில் பிரதமர் மோடியின் நேர்மை மறுக்க முடியாததும் கேள்விக்கு அப்பாற்பட்டதும் ஆகும் என்றும் மாலினி பார்த்தசாரதி குறிப்பிட்டதை எவரும் மறந்திட இயலாது. ரபேல் விவகாரத்தில் ஊழல் நடந்ததற்கான ஆதாரங்களின் அடிப்படையில் இன்றைக்கு பிரான்ஸ் அரசாங்கமே விசாரணையை தொடங்கியிருக்கிறது. பிரதமர் மோடியை சந்தித்த மாலினி பார்த்தசாரதி வெளியிட்ட கருத்துக்கள் மூலம் &#8216;பூனைக்குட்டி வெளியே வந்திருக்கிறது&#8217;.</p>



<p>பிரதமர் மோடியை மாலினி பார்த்தசாரதி சந்தித்ததில் எந்த தவறும் இல்லை. அந்த சந்திப்பின் மூலம் 142 ஆண்டு காலமாக கட்டிக்காக்கப்பட்டு இந்தியாவின் கருத்தியலுக்காகவும், ஊழல், சமூக அநீதிகளுக்கு எதிராகவும் குரல் கொடுத்து வருகிற இந்து குழுமத்தின் அடிப்படை கொள்கைகளை அடகு வைத்துவிடக் கூடாது. இந்த சந்திப்பையொட்டி, பிரதமர் மோடியின் வகுப்புவாத கொள்கைகளை ஏற்றுக் கொண்டு தி இந்து பின்பற்றுகிற கொள்கைகளிலிருந்து மாலினி பார்த்தசாரதி தடம் மாறுவாரேயானால், கடுமையான விளைவுகளை&nbsp; சந்திக்க நேரிடும்.</p>



<p>உலகத்திலேயே பத்திரிக்கை சுதந்திரம் பறிக்கப்பட்ட 188 நாடுகளின் வரிசையில் 142 ஆவது இடத்தில் இந்தியா இருக்கிறது. மோடி ஆட்சியில் ஏறத்தாழ 55 பத்திரிக்கையாளர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, அவர்கள் மீது கடுமையான தாக்குதல், அச்சுறுத்தல்கள், அடக்குமுறைகள்<br><br>ஏவப்பட்டுள்ளன.  கொரோனா தொற்றினால் பாதிப்பு, இறப்பு,தடுப்பூசி தட்டுப்பாடு குறித்த செய்தி வெளியிட்டதற்காக வழக்கு தொடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். இத்தகைய அடக்குமுறையால் மூத்த பத்திரிக்கையாளர் சித்தார்த் வரதராஜன் உட்பட பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீது அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, மத்திய புலனாய்வுத்துறை சோதனைகள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.</p>



<p>கடந்த ஜூலை 22 ஆம் தேதி இந்தியாவில் இந்தி, குஜராத்தி, மராத்தி உள்ளிட்ட மொழிகளில் 65 பதிப்புகளை நடத்தி வருகிற டைனிக் பாஸ்கர் குழுமம் வருமான வரி சோதனைக்கு ஆளாக்கப்பட்டுள்ளது. டைனிக் பாஸ்கர், பாரத் சமாச்சார் என்கிற நாளேடுகளை இந்த குழுமம் நடத்துகிறது. மத்தியப் பிரதேசம், குஜராத், உத்தரப்பிரதேச மாநிலங்களில் கொரோனா தொற்று, இறப்பு&nbsp; மூடி மறைக்கப்படுவது குறித்தும், தடுப்பூசி தட்டுப்பாடு பற்றியும்ஆதாரப்பூர்வமாக இந்த குழுமத்தின் பதிப்புகளில் செய்திகள் வெளியிடப்பட்டன. அதேபோல கொரோனா தொற்றில் இறந்தவர்களின் சடலங்கள் கங்கைக் கரையில் எரிக்கப்படுவதாகவும் டைனிக் பாஸ்கர் குழுமம் செய்தி வெளியிட்டது. இதைச் சகித்துக் கொள்ள முடியாத பா.ஜ.க. ஆட்சியாளர்கள் அந்த குழுமத்தின் மீது வருமான வரித்துறையை ஏவி குரல்வளையை நெறிக்க முயற்சி செய்கிறார்கள்.&nbsp; பத்திரிக்கையாளர்கள் மீது தாக்குதல்கள் மற்றும் கருத்துச் சுதந்திரத்தின் மீது அடக்குமுறையை ஏவிவிடுகிற பிரதமர் மோடியுடன்,&nbsp; இந்து குழுமத்தைச் சார்ந்தவர் கொள்கை சமரசம் செய்து கொள்வதைக் கருத்துச் சுதந்திரத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்கள் எவரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். சகித்துக் கொள்ளமாட்டார்கள்.</p>



<p>தி இந்து குழுமம் என்பது பங்குதாரர்களுக்கு மட்டுமே முழு உரிமை கொண்டதல்ல. இதை மக்களின் சொத்தாகவே கருதவேண்டும்.&nbsp; இந்து குழுமத்திலிருந்து வெளிவருகிற நாளேடுகள், இதழ்கள் ஆகியவற்றுக்கு லட்சக்கணக்கான வாசகர்கள் நாடு முழுவதும் இருக்கிறார்கள். ஏன் உலகம் முழுவதும் விரிந்து பரவியிருக்கிறார்கள். எனவே, இந்து குழுமத்தின் கொள்கை வழிப்பாதையை ஒரு தனிப்பட்ட மாலினி பார்த்தசாரதியால் மடைமாற்றிவிட முடியாது. அப்படி மடைமாற்ற அவர் முனைந்தால் இந்து குழுமத்தில் இருக்கிற கருத்துச் சுதந்திர காவலர்களும், அதில் பணியாற்றுகிற ஆயிரக்கணக்கான ஆசிரியர் பிரிவைச் சேர்ந்தவர்களும், ஊழியர்களும், லட்சக்கணக்கான வாசகர்களும் இந்து குழுமத்தின் பாரம்பரிய நற்பெயரைக் காப்பதற்குக் கிளர்ந்தெழுவார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p>



<p>இந்துவின் கொள்கை வழிப் பாதையை நிர்ணயிப்பதில் திரு. என்.ராம் அவர்களின் பங்களிப்பு மகத்தானது, ஈடு இணையற்றது. அதற்கு ஒரு கொள்கை முகத்தை வழங்கிய அவரது பங்கை யாரும் மறுக்க முடியாது. உலகத்தின் எந்த சக்தியாலும் தி இந்து நாளேட்டையும் திரு. என்.ராம் அவர்களையும் பிரிக்க முடியாது.</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/agopanna-condems-thehindu-editor-malini-parthasarathy/">ஊடகங்களை கபளீகரம் செய்யும் மோடியின் வலையில் மாலினி:  ஆ. கோபண்ணா கண்டனம்</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://desiyamurasu.com/news-india/agopanna-condems-thehindu-editor-malini-parthasarathy/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>பெருந்தகையாளர் பேராசிரியர் பா.ரா.!</title>
		<link>https://desiyamurasu.com/news-tamilnadu/centenary-celebration-of-p-ramachandran/</link>
					<comments>https://desiyamurasu.com/news-tamilnadu/centenary-celebration-of-p-ramachandran/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[ஆ. கோபண்ணா]]></dc:creator>
		<pubDate>Sat, 10 Jul 2021 18:07:10 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழக அரசியல்]]></category>
		<category><![CDATA[congress]]></category>
		<category><![CDATA[P Ramachandran]]></category>
		<guid isPermaLink="false">https://desiyamurasu.com/?p=4444</guid>

					<description><![CDATA[<p>தமிழக காங்கிரஸ் வரலாற்றில் பல தலைவர்கள் பல்வேறு சமயங்களில் முக்கியப் பங்கு வசித்திருக்கிறார்கள். பிற்காலத்தில் பேராசிரியர் பா. ரா என்று அழைக்கப்பட்ட திரு பா.ராமச்சந்திரன் மாணவர் காங்கிரஸ், இளைஞர் காங்கிரஸ் ஆகியவற்றில் இளமைப் பருவத்திலேயேத் தம்மை இணைத்துக் கொண்டவர். இளைஞர் காங்கிரசில் துடிப்புடன் செயல்பட்ட இவர், பெருந்திரளான இளைஞர்களை திரட்டி காங்கிரஸ் இயக்கத்தை வலிமைப்படுத்தியவர். தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவராகவும் பொறுப்பு வகித்தவர். அதன்மூலம் பெருந்தலைவர் காமராஜரால் பெரிதும் ஈர்க்கப்பட்டார். இன்றைய திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தாலுகாவை [&#8230;]</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-tamilnadu/centenary-celebration-of-p-ramachandran/">பெருந்தகையாளர் பேராசிரியர் பா.ரா.!</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>தமிழக காங்கிரஸ் வரலாற்றில் பல தலைவர்கள் பல்வேறு சமயங்களில் முக்கியப் பங்கு வசித்திருக்கிறார்கள். பிற்காலத்தில் பேராசிரியர் பா. ரா என்று அழைக்கப்பட்ட திரு பா.ராமச்சந்திரன் மாணவர் காங்கிரஸ், இளைஞர் காங்கிரஸ் ஆகியவற்றில் இளமைப் பருவத்திலேயேத் தம்மை இணைத்துக் கொண்டவர். இளைஞர் காங்கிரசில் துடிப்புடன் செயல்பட்ட இவர், பெருந்திரளான இளைஞர்களை திரட்டி காங்கிரஸ் இயக்கத்தை வலிமைப்படுத்தியவர். தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவராகவும் பொறுப்பு வகித்தவர். அதன்மூலம் பெருந்தலைவர் காமராஜரால் பெரிதும் ஈர்க்கப்பட்டார்.</p>



<p>இன்றைய திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தாலுகாவை சேர்ந்த கொருக்கை கிராமத்தில் 11 ஜூலை 1921 இல் பிறந்தவர் பா. ராமச்சந்திரன். தமது சகோதரர் திரு துரைசாமி நாயுடு வேலூர் ஜில்லா போர்டில் பணியாற்றிய போது பள்ளிப் படிப்பை அங்கு தொடர்ந்தார். பிறகு, சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பி.ஏ. (ஹானர்ஸ்) படித்து முடித்த பிறகு கோவை பி. எஸ். ஜி. கல்லூரியில் பேராசிரியராகப் பணியில் அமர்ந்தார். அரசியலில் மிகுந்த ஈடுபாடு காரணமாக அந்த பணியை உதறிவிட்டு காங்கிரஸ் இயக்கத்தில் தம்மை முழுமையாக இணைத்துக் கொண்டவர் பா. ராமச்சந்திரன்.</p>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large"><img loading="lazy" decoding="async" width="695" height="490" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/07/2-1.jpg" alt="" class="wp-image-4448" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/07/2-1.jpg 695w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/07/2-1-300x212.jpg 300w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/07/2-1-120x86.jpg 120w" sizes="auto, (max-width: 695px) 100vw, 695px" /></figure></div>



<p>1952 செய்யாறு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த பா. ராமச்சந்திரன், 1957 இல் மீண்டும் போட்டியிட்டு அதே தொகுதியில் வெற்றி பெற்றார்.</p>



<p>1962 இல் பெரணமல்லூர் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சியின் கொறடாவாக 1967 வரை பணியாற்றினார். 1967 இல் பெரணமல்லூர் சட்டமன்றத் தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தாலும், தொடர்ந்து காங்கிரஸ் இயக்கத்தில் ஸ்தாபன பணிகளில் தீவிரமாக ஈடுபட்டார்.</p>



<p>1969 இல் காங்கிரசில் பிளவு ஏற்பட்டபோது, பெருந்தலைவர் காமராஜரோடு தம்மை இணைத்துக் கொண்டார். 1971 திருத்தணி மக்களவை தொகுதியில் போட்டியிட்டுத் வெற்றிவாய்ப்பை இழந்தாலும், 1972 ஜனவரியில் தமிழ்நாடு ஸ்தாபன காங்கிரஸ் தலைவராக பா. ராமச்சந்திரன் தேர்வு செய்யப்பட்டு பெருந்தலைவர் காமராஜர் மறைகிற வரை அந்த பொறுப்பில் செயல்பட்டார்.</p>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large"><img loading="lazy" decoding="async" width="691" height="447" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/07/1.jpg" alt="" class="wp-image-4451" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/07/1.jpg 691w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/07/1-300x194.jpg 300w" sizes="auto, (max-width: 691px) 100vw, 691px" /></figure></div>



<p>பெருந்தலைவர் காமராஜர் வழிகாட்டுதலோடு செயல்பட்ட திரு பா. ராமச்சந்திரன் அவர்களின் அரசியல் செயல்பாட்டிற்கு சிகரம் வைத்தாற்போல் அமைந்தது அக்டோபர் 1973 இல் தமிழகம் முழுவதும் வெற்றிகரமாக நடைபெற்ற அறப்போராட்டமாகும். அன்று நடைபெற்ற மறியலுக்கு அணிவகுத்துச் செல்லும் அறப்போர் வீரர்கள் சுதராடையும், தலையில் காந்த குல்லாவும் அணிந்து காங்கிரஸ் பேட்ஜ்களை அணிந்து கம்பீரமாகப் போராட்டத்தில் கைகளில் காங்கிரஸ் கொடியோடு முழக்கங்களை எழுப்பி கைதான காட்சியை எவரும் மறக்க முடியாது. ஒரு போராட்டம் காந்திய வழியில் எப்படி நடக்க வேண்டுமோ, அப்படிக் கட்டுக்கோப்பாக நடத்திய பெருமை பா. ராமச்சந்திரன் அவர்களுக்கு உண்டு. இதை தினமணி நாளேடு மனதாரப் பாராட்டி செய்தி வெளியிட்டது இங்கு நினைவு கூறத்தக்கது.</p>



<p>1976 இல் இரு காங்கிரஸ் இணைப்பில் சேராமல் பா. ராமச்சந்திரன் தலைமையில் ஸ்தாபன காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் தனித்துச் செயல்பட்டது. இந்திய உணவு கழகத்தின் தலைவராகவும் பணியாற்றினார். 1980 இல் ஜனதா கட்சி மத்தியில் ஆட்சியை இழந்த பிறகு அக்கட்சியில் நீடிக்க பா. ராமச்சந்திரன் விரும்பவில்லை.</p>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large"><img loading="lazy" decoding="async" width="744" height="1024" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/07/240-744x1024.jpg" alt="" class="wp-image-4454" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/07/240-744x1024.jpg 744w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/07/240-218x300.jpg 218w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/07/240-768x1057.jpg 768w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/07/240-750x1032.jpg 750w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/07/240.jpg 959w" sizes="auto, (max-width: 744px) 100vw, 744px" /></figure></div>



<p>இந்நிலையில், தேசிய அளவில் அன்னை இந்திரா காந்தியின் தலைமையை வலிமைப்படுத்த வேண்டுமென்ற நோக்கத்தில் அவரது அழைப்பை ஏற்று மக்கள் தலைவர் ஜி.கே. மூப்பனார் மேற்கொண்ட தீவிர முயற்சியின் காரணமாக 30.9.1980 இல் சென்னை காமராஜர் அரங்கம் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் இந்திரா காந்த கலந்து கொண்டார். அதையொட்டி தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்ட இணைப்பு விழாவில் பேராசிரியர் பா. ராமச்சந்திரன் அவர்கள் காங்கிரஸ் இயக்கத்தில் தம்மை இணைத்துக் கொண்டார்.</p>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large"><img loading="lazy" decoding="async" width="757" height="580" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/07/211.jpg" alt="" class="wp-image-4452" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/07/211.jpg 757w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/07/211-300x230.jpg 300w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/07/211-750x575.jpg 750w" sizes="auto, (max-width: 757px) 100vw, 757px" /></figure></div>



<p>1982 இல் கேரள மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டு, 1988 வரை அந்த பொறுப்பில் இருந்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலராக திரு. பா. ராமச்சந்திரன் அவர்கள் தமது இறுதிக் காலம் வரை செயல்பட்டார்.</p>



<p>1969 இல் காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட பிளவு, தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளையையும் கடுமையாக பாதித்தது. இதையொட்டி சென்னை உயர்ந்த மன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. செப்டம்பர் 1980 இல்.</p>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img loading="lazy" decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/07/scan0056-aa.jpg" alt="" class="wp-image-4453" width="566" height="505" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/07/scan0056-aa.jpg 538w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/07/scan0056-aa-300x268.jpg 300w" sizes="auto, (max-width: 566px) 100vw, 566px" /></figure></div>



<p>பா. ராமச்சந்திரன் அவர்கள் காங்கிரசில் இணைந்த பிறகு அறக்கட்டளை வழக்குகள் முடிவுக்கு வந்து இன்றைக்கு காங்கிரஸ் கட்சியின் முழுக் கட்டுப்பாட்டில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது. இதற்குக் காரணமாக இருந்தவர் தலைவர் பா. ராமச்சந்திரன் அவர்கள் என்பதை நன்றியோடு நினைவு கூற வேண்டியது நமது கடமையாகும்.</p>



<p>காங்கிரஸ் கட்சியை வலிமைப்படுத்துகிற வகையில் பல்வேறு நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருந்த பேராசிரியர் பா. ராமச்சந்திரன் அவர்களுக்கு நன்றி பெருக்கோடு நூற்றாண்டு விழா எடுப்பது காங்கிரஸ் கட்சியினரின் தலையாய கடமையாகும்.</p>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large"><img loading="lazy" decoding="async" width="723" height="545" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/07/scan0114.jpg" alt="" class="wp-image-4450" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/07/scan0114.jpg 723w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/07/scan0114-300x226.jpg 300w" sizes="auto, (max-width: 723px) 100vw, 723px" /></figure></div>



<p>போற்றுதலுக்குரிய பொது வாழ்க்கையை நிகழ்த்தியவர் பேராசிரியர் பா. ரா. அவர் உடுத்துகிற நேர்த்தியான உடையே ஓர் அழகாகும். குறிப்பாக, கஞ்சி போட்டு சலவை செய்யப்பட்ட பொன்னிறமான முழுக்கை சுதர் ஜிப்பா அணிந்து மடிப்பு கலையாமல் அவர் நடந்து வருகிற காட்சியை ரசிக்காதவர்களே இருக்க முடியாது. கதர் ஜிப்பாவோ பொன்னிறம்; அவரது முகமும் பொன்னிறம். பழகுவதற்கு இனிமையானவர். மென்மையானவர். கடுஞ்சொல் கூறாதவர். அடக்கமும், நிதானமும் மிக்க அற்புதத் தலைவராக வாழ்ந்த பேராசிரியர் திரு பா. ராமச்சந்திரன் அவர்கள் தமது 79 ஆவது வயதில் 23, மே 2001 இல் நம்மை விட்டுப் பிரிந்தார்.</p>



<p>87 வயது நிரம்பிய, பேராசிரியர் பா. ராமச்சந்திரன் அவர்களது துணைவியார் திருமதி. வெங்கடலட்சுமி. அவரது மகன் டாக்டர் ரவிராம் ராமச்சந்திரன் இவ்விழாவில் நன்றியுரை ஆற்றுவது மிக மிகப் பொருத்தமானதாகும். அவரது சகோதரிகள் சசிகலா, சித்ரகலா ஆகியோருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். பேராசிரியர் பெருந்தகையைப் போல அவரது குடும்பம் பெரும் புகழுடன் அனைத்து வளங்களையும் பெற்று வாழ வேண்டும் என்பதே ஒவ்வொரு காங்கிரஸ் கட்சியினரின் விருப்பமாகும்.</p>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large"><img loading="lazy" decoding="async" width="760" height="422" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/07/02.jpg" alt="" class="wp-image-4449" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/07/02.jpg 760w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/07/02-300x167.jpg 300w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/07/02-750x416.jpg 750w" sizes="auto, (max-width: 760px) 100vw, 760px" /></figure></div>



<p>தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கே எஸ். அழகிரி அவர்கள் நன்றிப் பெருக்கோடு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவராக இருந்த திரு பா. ராமச்சந்தரன் அவர்களுக்கு நூற்றாண்டு விழா எடுத்திருக்கிறார். இவ்விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர்களும் பங்கேற்கிறார்கள். தமிழக காங்கிரஸ் கட்சியினரால் மறக்க முடியாத, மறக்கக் கூடாத நன்றியோடு நினைவு கூறப்பட வேண்டிய மாமனிதர் பேராசிரியர் பா.ரா. அவர்களை போற்றுகிற வகையில் இந்த நூற்றாண்டு விழா இங்கே சிறப்பாக நடைபெறுவது குறித்து ஒவ்வொரு காங்கிரஸ் கட்சியினரும் பெருமையடைய வேண்டும்.</p>



<p class="has-text-align-right"><em> &#8211; வெளியீடு : தேசிய முரசு</em></p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-tamilnadu/centenary-celebration-of-p-ramachandran/">பெருந்தகையாளர் பேராசிரியர் பா.ரா.!</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://desiyamurasu.com/news-tamilnadu/centenary-celebration-of-p-ramachandran/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>&#8216;என்ஜாய் எஞ்சாமி&#8217; பாடல்: இலங்கை மலையக தமிழர்களின் 200 ஆண்டு வலியை 20 கோடி பேரிடம் சேர்த்த பொக்கிஷம்</title>
		<link>https://desiyamurasu.com/news-tamilnadu/enjoy-enjaami-a-welcome-start-say-sri-lankas-malaiyaha-tamils/</link>
					<comments>https://desiyamurasu.com/news-tamilnadu/enjoy-enjaami-a-welcome-start-say-sri-lankas-malaiyaha-tamils/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Admin]]></dc:creator>
		<pubDate>Thu, 27 May 2021 14:13:07 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழக அரசியல்]]></category>
		<category><![CDATA[Enjoy Enjaami song]]></category>
		<category><![CDATA[Malaiyaha Tamils]]></category>
		<category><![CDATA[Sri Lanka]]></category>
		<guid isPermaLink="false">https://desiyamurasu.com/?p=4440</guid>

					<description><![CDATA[<p>இலங்கை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் போராட்டத்தையும் அவர்களது வலியையும் வெளிப்படுத்தும் வகையில் 2 மாதங்களுக்கு முன்பு யூட்யூப்பில் வெளியான &#8216;எஞ்சாய் எஞ்சாமி&#8217; ஆல்பம் பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த பாடலை எழுதி, பாடிய சென்னையைச் சேர்ந்த இளைஞர் அறிவு இது குறித்து காணொலி விவாதத்தில் பங்கேற்றார். அதில், இலங்கை மலையக சமுதாய இளைஞர்களும், சமூக செயற்பாட்டாளர்களும் பங்கேற்றனர். அந்த காணொலி விவாதத்தில், அனைவரையும் கட்டிப்போட்ட ஒரே நபர், இலங்கை மலையக சமுதாயத்தினரின் வரலாற்றுடன் தொடர்புடைய அறிவுவின் [&#8230;]</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-tamilnadu/enjoy-enjaami-a-welcome-start-say-sri-lankas-malaiyaha-tamils/">&#8216;என்ஜாய் எஞ்சாமி&#8217; பாடல்: இலங்கை மலையக தமிழர்களின் 200 ஆண்டு வலியை 20 கோடி பேரிடம் சேர்த்த பொக்கிஷம்</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>இலங்கை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் போராட்டத்தையும் அவர்களது வலியையும் வெளிப்படுத்தும் வகையில் 2 மாதங்களுக்கு முன்பு யூட்யூப்பில் வெளியான &#8216;எஞ்சாய் எஞ்சாமி&#8217; ஆல்பம் பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.</p>



<p>இந்த பாடலை எழுதி, பாடிய சென்னையைச் சேர்ந்த இளைஞர் அறிவு இது குறித்து காணொலி விவாதத்தில் பங்கேற்றார். அதில், இலங்கை மலையக சமுதாய இளைஞர்களும், சமூக செயற்பாட்டாளர்களும் பங்கேற்றனர். அந்த காணொலி விவாதத்தில், அனைவரையும் கட்டிப்போட்ட ஒரே நபர், இலங்கை மலையக சமுதாயத்தினரின் வரலாற்றுடன் தொடர்புடைய அறிவுவின் பாட்டி வள்ளியம்மா.</p>



<p>வள்ளியம்மா பாட்டியை குறிப்பிட்டு அந்த பாடலில் வரி வரும். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு யூட்யூப்பில் வெளியான இந்த பாடலை உலகம் முழுவதும் இருந்து 20 கோடி பேர் பார்த்ததின் மூலம், வள்ளியம்மா பாட்டியின் கதை 20 கோடி பேரிடம் சென்றடைந்திருக்கிறது.</p>



<p>இலங்கை தேயிலைத் தோட்டங்களில் உழைத்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழர்களில் ஒருவராக வள்ளியம்மா இருந்திருக்கிறார். பல ஆண்டுகள் நெற்றி வியர்வை சிந்த உழைத்த அந்த பெண்மணி, சொந்தமாக நிலம் கூட இல்லாத நிலையில் இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டார். வள்ளியம்மா பாட்டியைப் போன்று ஆயிரக்கணக்கான இந்திய வம்சாவளி தமிழர்கள் இந்தியாவுக்குத் திரும்பி வந்தனர். மீதமிருந்த ஆயிரக்கணக்கானோர், அங்கேயே தங்கியிருந்து தேயிலை பறித்து, அதன் ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரத்தைக் கட்டி எழுப்ப உதவினர்.</p>



<p>இந்த பாடலுக்கு வள்ளியம்மா என்று பெயரிடப்பட்டாலும், மலையக தமிழர்களின் கதையைச் சொல்லத் தொடங்கும் ஒரு தீப்பொறியாக இருக்கக் கூடும் என்று இந்த விவாதத்தில் பங்கேற்ற தோட்ட உரிமைகள் மற்றும் பாலின பிரச்சினைகளுக்குத் தீர்வு காண பணிபுரியும் கண்டியைச் சேர்ந்த ஆர்வலர் சவும்யா விலாஷிணி முத்துலிங்கம் குறிப்பிட்டார். இலங்கை தோட்டத் தொழிலாளர்களைப் பற்றி அறிய தமிழகம் என்றுமே ஆர்வமாக இருந்ததில்லை என்பதை அவர் கவலையுடன் சுட்டிக்காட்டினார்.</p>



<p>இது குறித்து அவர் மேலும் கூறும்போது, &#8221;2008 ஆம் ஆண்டிலிருந்து 3 ஆண்டுகள் பெங்களூருவில் படித்தேன். இலங்கையில் இறுதிக்கட்ட போர் நடந்த போது, இந்தியாவில் உள்ள தமிழர்கள் அதனை ஆர்வமுடன் உற்றுநோக்கிக் கொண்டிருந்தனர். அந்த சமயத்திலும், அதற்குப் பின்னரும் மலையக தமிழர்களை இந்தியத் தமிழர்கள் கண்டுகொள்ளாததைக் கவனித்தேன். அவர்களது கவனம் எல்லாம் யாழ்ப்பாண தமிழர்கள் மீதே இருந்தது.</p>



<p>எனது பார்வையில், இது இலங்கைக்குள் காணப்பட்ட சமூக பாகுபாடு மற்றும் அலட்சியத்தின் மற்றொரு வெளிப்பாடாகும். வடக்கு மற்றும் கிழக்கு இலங்கையில் வாழ்ந்த அந்நாட்டுத் தமிழர்கள், இந்தியத் தமிழர்களை மரியாதைக்குறைவாக நடத்தினார்கள். நில உரிமை மற்றும் வீடுகள் விஷயத்தில் அங்கு குடியேறிய மலையக தமிழர்களை, இலங்கைத் தமிழர்கள் பாகுபாடாக நடத்தினர்.</p>



<p>இலங்கையின் அழகிய மலை நாட்டில் அமைந்துள்ள தேயிலைத் தோட்டங்களில் பணியாற்ற, தமிழக தமிழர்களை இலங்கைக்கு அழைத்துச் சென்றனர் ஆங்கிலேயர்கள். அப்போதிலிருந்து தமிழ் சமூகத்தின் வரலாறு இரண்டு நூற்றாண்டுகளாக ஒடுக்குமுறையைத் துணிச்சலுடன் எதிர்கொண்டு வருகிறது.</p>



<p>மலையகத் தமிழர்கள் நிலையற்றவர்களாக ஆக்கப்பட்டனர். அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டன. இருந்தபோதிலும், ஒன்றரை லட்சத்துக்கு அதிகமான மலையக தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் உழைத்துக் கொண்டே, நியாயமான கூலிக்காகவும் நல்ல வாழ்க்கைக்காகவும் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள்.</p>



<p>இலங்கைத் தீவின் சிறுபான்மை தமிழர்களின் வெவ்வேறு குழுக்களின் சமூகப் பிரச்சினைகள், மலையக தமிழர்களின் பிரச்சினைகளை பின்னுக்குத் தள்ளிவிட்டது. இது ஓர் அரசியல் என்கிறார் சவும்யா விலாஷினி முத்துலிங்கம். இது குறித்து அவர் கூறும்போது, &#8221; இலங்கையிலோ அல்லது தமிழகத்திலோ மக்கள் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான போராட்டம் வீரப் போராட்டமாகக் கருதப்படுவதில்லை. சுயமரியாதையை இழந்த உங்கள் தட்டில் வைக்கப்படும் உணவை முக்கியமானது என்று என்னால் பார்க்க முடியவில்லை&#8221; என்றார்.</p>



<p>இந்த காணொலி விவாதத்தில் பேசிய அறிவு சாதிய அரசியலைச் சுட்டிக்காட்டினார். தி காஸ்ட்லெஸ் கலெக்டிவ் இசைக்குழுவில் அவரது படைப்புகளைப் பற்றிக் குறிப்பிட்டார். இவை தன் குடும்பத்துடன் எவ்வாறு பின்னிப் பிணைந்துள்ளது என்பதையும் விளக்கினார்.</p>



<p>இது குறித்து அவர் கூறும்போது, &#8221; சாதி இல்லை என்று இன்று சொல்பவர் கூட, ஒரு சாதிய நிலையிலிருந்து தான் சொல்ல முடியும். எங்கள் காலடியின் கீழ் கிடக்கும் மண், சாதி அடிப்படையிலான ஒடுக்குமுறையின் வரலாற்றுக்குச் சாட்சியாக இருக்கிறது. சாதிகளுக்கு ஆதரவாக இருக்கப் போகிறோமா? அல்லது சமத்துவத்துடன் வாழப்போகிறோமோ? என்பது தான் தற்போது எழுந்துள்ள கேள்வி.</p>



<p>கூத்துக் கலைஞர்களாகவும் தினக்கூலி தொழிலாளர்களாகவும் எங்கள் குடும்பம் நடத்திய போராட்டத்தை மறக்க முடியாது. நாங்கள் வந்த சமுதாயம் எங்களை சாதிய அடையாளப்படுத்துகிறது. இவை அனைத்தும் அரசியல் காரணிகளால் வடிவமைக்கப்பட்டுள்ளன. வாழ்க்கையிலிருந்து எங்களால் அரசியலை வெளியே தூக்கி எறிந்துவிட முடியாது&#8221; என்றார்.</p>



<p>மலையக தமிழர்களின் நாடாளுமன்ற உறுப்பினரான மயில்வாகனன் திலகராஜா கூறும்போது,&#8221; தமிழர்கள் வாழும் தமிழகம், மலேசியா அல்லது யாழ்ப்பாணத்தை விட, மலையகத்தில் சாதி ரீதியான வன்முறை குறைவாகவே இருந்தது. தோட்டத் தொழிலாளராக இருந்து இந்தியாவுக்குத் திரும்பிய வள்ளியம்மாவை, இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டவர் என்று சாதிய குழுவைப் போலவே முத்திரை குத்தப்பட்டுள்ளது. கே.ஏ. குணசேகரன், ரா.வினோத், தமிழ்மகன் மற்றும் முகமது யூசுப் போன்ற எழுத்தாளர்களும் கவிஞர்களும் மலையகத் தமிழர்கள் பற்றியும் அவர்கள் வாழ்க்கை பற்றியும் எவ்வளவோ எழுதியுள்ளார்கள். எனினும். அறிவு மற்றும் தீ இணைந்து பாடிய &#8216;என்ஜாய் எஞ்சாமி&#8217; பாடல் தான் இன்றைக்குக் கோடிக்கணக்கானோரைச் சென்றடைந்திருக்கிறது.</p>



<p>&#8216;எஞ்சாய் எஞ்சாமி&#8217; பாடல் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. இந்த பாடல் மூலம் முற்போக்கு அரசியலை முன்னெடுக்க அறிவு முயன்றிருக்கிறார். இந்த பாடலில் வள்ளியம்மாவை பற்றிக் குறிப்பிட்டது முக்கியமானது. எனினும், வள்ளியம்மாவை போன்றோரின் கதைகளும், இலங்கையிலேயே வாழ்ந்து கொண்டிருக்கும் மலையக தமிழர்களின் கதைகளும் விரிவாகப் பேசப்பட வேண்டும். அந்த கதாபாத்திரங்கள் பேசக்கூடிய முழுமையான திரைப்படம் நமக்குத் தேவை.</p>



<p>இலங்கைக்குள்ளும், இந்தியாவுக்குத் திரும்பியோர் மத்தியிலும் சாதி எவ்வாறு விளையாடியது என்ற கதை பெரிதாகச் சொல்லப்பட வேண்டும். எங்கள் மக்களில் சிலர் திரும்பி வந்தது, தோட்டங்களைத் தற்காலிகமாக விட்டு வந்ததாக அர்த்தம். அந்த சமயம் சாதி வேறுபாடுகள் உடைத்தெறியப்பட்டன. மேலும், இலங்கையில் உள்ள தோட்டத் தொழிலாளர்கள் வரலாற்று ரீதியாக நில உரிமைகள், வீட்டு வசதி மற்றும் நல்ல சம்பளத்துக்காக அணி திரட்டியிருப்பது, சாதி அடையாளத்தை விட வலுவான வர்க்க அடையாளத்தை உருவாக்கியிருப்பதாக அர்த்தம். எங்கள் மக்களின் கதைகளை நீங்கள் சொல்லும்போது, இதையும் சேர்த்துச் சொல்லுங்கள். மலையகத் தமிழர்கள் பற்றிய நல்ல திரைப்படம் வரும் என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்கிறேன்&#8221; என்றார்.</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-tamilnadu/enjoy-enjaami-a-welcome-start-say-sri-lankas-malaiyaha-tamils/">&#8216;என்ஜாய் எஞ்சாமி&#8217; பாடல்: இலங்கை மலையக தமிழர்களின் 200 ஆண்டு வலியை 20 கோடி பேரிடம் சேர்த்த பொக்கிஷம்</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://desiyamurasu.com/news-tamilnadu/enjoy-enjaami-a-welcome-start-say-sri-lankas-malaiyaha-tamils/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
	</channel>
</rss>
