<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Uncategorized - தேசிய முரசு - Desiya Murasu</title>
	<atom:link href="https://desiyamurasu.com/category/uncategorized/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://desiyamurasu.com/category/uncategorized/</link>
	<description>DesiyaMurasu – Daily Opinions &#38; Analysis on Latest News  &#124; Tamil News</description>
	<lastBuildDate>Thu, 12 Nov 2020 12:25:33 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9</generator>

<image>
	<url>https://desiyamurasu.com/wp-content/uploads/2020/07/cropped-FAV-copy-1-32x32.png</url>
	<title>Uncategorized - தேசிய முரசு - Desiya Murasu</title>
	<link>https://desiyamurasu.com/category/uncategorized/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>பீகார் தேர்தல் – தந்திரத்தால் சாதித்த வெற்றி!</title>
		<link>https://desiyamurasu.com/uncategorized/bjp-won-bihar-election-by-manipulating-the-voters/</link>
					<comments>https://desiyamurasu.com/uncategorized/bjp-won-bihar-election-by-manipulating-the-voters/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[சாவித்திரி கண்ணன்]]></dc:creator>
		<pubDate>Thu, 12 Nov 2020 12:20:32 +0000</pubDate>
				<category><![CDATA[Uncategorized]]></category>
		<category><![CDATA[Bihar Election 2020]]></category>
		<guid isPermaLink="false">https://desiyamurasu.com/?p=3034</guid>

					<description><![CDATA[<p>பீகார் தேர்தலில் பாஜக-ஐக்கிய ஜனதா தளக் கூட்டணி வெற்றிக் கோட்டைத் தொட்டது எப்படி என்று பார்த்தால், பாஜகவின் அரசியல் தந்திரத்திற்கு கிடைத்த வெற்றியாகத் தான் பார்க்கிறேன். தேர்தலுக்கு முந்திய கள ஆய்வில் எல்லோருக்கும் தெரிய வந்தது என்னவென்றால், ’மகாபந்தன்’ எனப்படும் ராஷ்டிரிய ஜனதா தளம் காங்கிரஸ் கூட்டணிக்கு வாய்ப்புள்ளது என்பதே! லாலுவுவின் மகன் தேஜஸ்வி செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் கூட்டம் அலைமோதியது.அவரும் பத்து லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தரப்படும் என்றது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. [&#8230;]</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/uncategorized/bjp-won-bihar-election-by-manipulating-the-voters/">பீகார் தேர்தல் – தந்திரத்தால் சாதித்த வெற்றி!</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>பீகார் தேர்தலில் பாஜக-ஐக்கிய ஜனதா தளக் கூட்டணி வெற்றிக் கோட்டைத் தொட்டது எப்படி என்று பார்த்தால், பாஜகவின் அரசியல் தந்திரத்திற்கு கிடைத்த வெற்றியாகத் தான் பார்க்கிறேன்.</p>



<p>தேர்தலுக்கு முந்திய கள ஆய்வில் எல்லோருக்கும் தெரிய வந்தது என்னவென்றால், ’மகாபந்தன்’ எனப்படும் ராஷ்டிரிய ஜனதா தளம் காங்கிரஸ் கூட்டணிக்கு வாய்ப்புள்ளது என்பதே! லாலுவுவின் மகன் தேஜஸ்வி செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் கூட்டம் அலைமோதியது.அவரும் பத்து லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தரப்படும் என்றது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. மூன்றுமுறை ஆட்சி கட்டிலில் இருந்துவிட்ட நிதீஸ்குமார் மீதான சலிப்பு சற்று பீகார் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது என்றெல்லாம் சொல்லப்பட்டது! அதே சமயம் பாஜக மீது மக்களுக்கு ஒரு ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது என்று எந்த ஒரு செய்தியும் வரவில்லை!</p>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img fetchpriority="high" decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/11/bihar.jpg" alt="" class="wp-image-3040" width="561" height="393" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/11/bihar.jpg 713w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/11/bihar-300x210.jpg 300w" sizes="(max-width: 561px) 100vw, 561px" /></figure></div>



<p>நிதீஸ்குமார் மீது அதிருப்தி என்றால்,அது அவரை மட்டும் பாதிக்குமாம்! அவரோடு சேர்ந்து ஆட்சி புரிந்த பாஜகவை அது கொஞ்சம் கூட பாதிக்காதாம்! பீகாரில் மூன்றாவது இடத்தில் இருந்த பாஜக தன் கூட்டாளியை மட்டும் பலவீனப்படுத்திவிட்டு தான் முதல் இடத்திற்கு வந்துவிட்டது. முதல் இடத்தில் இருந்த நிதீஸின் ஐக்கிய ஜனதா தளம் இந்த முறை மூன்றாவது இடத்திற்கு பாஜகவால் தள்ளப்பட்டுவிடும் என்று நான் அறம் இணைய இதழில் <span class="has-inline-color has-very-dark-gray-color">அனுகூல சத்ருவாக நிதீஸை அழித்து வளரும் பாஜக என்று</span> எழுதி இருந்தேன்!</p>



<p>நிதீஸ்குமாரின் கீழ் துணை முதல்வராக பா.ஜ.கவின் சுசில் குமார்மோடியை இது நாள் வரை பயிற்சி பெற வைத்ததன் மூலம்&nbsp; அவரையே தற்போது முதல்வராக்கி விட்டு நிதீஸ்குமாரின் முக்கியத்துவத்தை பா.ஜ.க குறைத்துவிட வாய்ப்புள்ளது.</p>



<p>கடந்த பத்தாண்டுகளில் பாஜகவுடன் ஏற்படுத்திக் கொண்ட கூட்டணி நிதீஸை தேய்பிறையாக்கி, பாஜகவை வளர்பிறையாக்கிய வரலாறு என்பது மக்கள் நம்பிக்கையை கூடுதலாக வென்றெடுத்து பாஜக பெற்றதல்ல, அது முழுக்க,முழுக்க தந்திரத்தால் கட்டமைக்கப்பட்டது! இதற்கு தனி நபர் யாரும் உரிமை கொண்டாடமுடியாது! அது பாஜகவின் பின்பு இயங்கும் ஆர்.எஸ்.எஸ் வகுத்து கொடுத்த செயல்திட்டம்!</p>



<h4 class="wp-block-heading"><strong>வெற்றிக்கு வித்திட்ட இரண்டு சூழ்ச்சிகள்</strong></h4>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/11/2.jpg" alt="" class="wp-image-3037" width="500" height="283" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/11/2.jpg 304w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/11/2-300x170.jpg 300w" sizes="(max-width: 500px) 100vw, 500px" /></figure></div>



<ul class="wp-block-list"><li>பீகாரில் முஸ்லீம் வாக்குகள் அதிகம். லாலு கட்சிக்கு முஸ்லீம் வாக்கு வங்கி மிகப் பெரிய பலம்.ஆகவே அதை உடைக்க வேண்டும். எனவே செல்வாக்கான AIMIM தலைவர் ஓவைசியை மிரட்டி, ஆர்.ஜே.டியுடன் சேரவிடாமல் தனித்து நிற்கச் செய்தனர்! இதன் மூலம் 24 இடங்களில் ஆர்.ஜே.டீக்கு வர வேண்டிய இஸ்லாமிய வாக்குகள் அப்படியே பிரிந்து ஓவைசிக்குப் போனது! இதன் மூலம் இஸ்லாமியர்கள் அதிகமுள்ள சீமாஞ்சல் என்ற மிகப் பெரிய பகுதியிலேயே பாஜக வெற்றி பெற முடிந்தது! அங்கே மகாபந்தனுக்கு வெற்றி பிரகாசமாயிருந்த முஸ்லீம்கள் அதிகமான தொகுதியிலேயே அது தோல்வியை தழுவியது!</li></ul>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/11/3.jpg" alt="" class="wp-image-3038" width="509" height="288" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/11/3.jpg 304w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/11/3-300x170.jpg 300w" sizes="(max-width: 509px) 100vw, 509px" /></figure></div>



<ul class="wp-block-list"><li>பீகாரில் தலித் வாக்கு வங்கி என்பது வெற்றி,தோல்வியை நிர்ணயிக்கும் அளவு முக்கியத்துவம் வாய்ந்தது. அந்த தலித்து கட்சிகளை மகாபந்தன் கூட்டணிக்குள் செல்லவிடாமல் தடுத்தது. மாயாவதியின் கட்சியான பகுஜன் சமாஜ் உள்ளிட்ட தலித் கட்சிகள் தனியே களம் கண்டன! அத்துடன் தேசிய ஜனநாயக கூட்டணியின் நெருங்கிய கூட்டாளியான ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தியை கூட்டணியில் இருந்து வெளியேற்றி தனியே நிற்க செய்தனர் – அதுவும் நிதீஸ் கட்சி நிற்கும் இடங்களில் மட்டும் நின்று அவர்கள் நிதீஸை தோற்கடிப்பார்களாம்! பாஜக நிற்கும் தொகுதியில் பாஜகவை ஆதரிப்பார்களாம்! இந்த மோசடிக்கு தன்னையே பலிகடாவாக்கிக் கொண்டு பாஜகவை வெற்றி பெற வைத்துள்ளார் சிராஜ்பாஸ்வான். இவரை கூட்டணிக்குள் வைத்திருந்தால் லோக் ஜனசக்திக்கும் கணிசமான தொகுதிகள் கிடைத்திருக்கும்.ஐக்கிய ஜனதாதளமும் நல்ல வெற்றியை ஈட்டியிருக்கும்! ஆனால், ஒரு தலித் கட்சியை அரவணைத்து அழிக்க வேண்டும் என்பது தானே பாஜகவின் திட்டம்! ஒரே ஓரு இடத்தில் மட்டும் வெற்றி பெற்று, தன்னையும் அழித்துக் கொண்டு, 30 இடங்களில் நிதீஸின் ஐக்கிய ஜனதா தளத்தின் தோல்விக்கு காரணமாயிற்று, இந்தக் கட்சி!</li></ul>



<p>ஆக, முதல் திட்டத்தின் மூலம் முஸ்லீம் வாக்குவங்கியை பிரித்து மகாபந்தனுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளிலேயே அவர்களை மண்ணைக் கவ்வ வைத்தார்கள்!</p>



<p>இரண்டாவது திட்டத்தின் மூலம் கூடவே தங்களுக்கு நெருக்கமாக உள்ள நீதிஸை பலமிழக்க வைத்துவிட்டு தாங்கள் முன்னுக்கு வந்து விட்டனர்!</p>



<p>இத்துடன் முகேஷ் சஹினிஸ் என்ற சினிமா பிரபலத்தின் புதிய கட்சிக்கு வாய்ப்பளித்து வாக்கு வங்கியை அதிகரித்துக் கொண்டனர்!</p>



<p>இந்த தேர்தலில் எதிர்பாராத ஒரு நிகழ்வு என்னவென்றால், பீகாரில் இடதுசாரிகளுக்கு ஒரு வலுவான தளம் ஏற்பட்டுள்ளது. சி.பி.எம்,சி.பிஐ, சி.பி.எம் மார்க்சிஸ்ட்,லெனிஸ்ட் கட்சிகள் 29 தொகுதிகளில் நின்று கணிசமான இடங்களை வென்றுள்ளனர்.</p>



<p><strong>காங்கிரஸின்</strong><strong> </strong><strong>பலவீனம்</strong><strong> </strong><strong>என்ன</strong><strong>?</strong></p>



<p>காங்கிரஸ் எதிர்கட்சிகளை ஒன்றிணைக்க தவறியது. இதற்கு பீகார் காங்கிரஸ் தலைமையும் முயற்சிக்கவில்லை. தேசிய காங்கிரஸ் தலைமையும் முயற்சிக்கவில்லை. மாகாபந்தன் கூட்டணியில் தனக்கு 70 சீட்டுகளை உறுதிபடுத்திக் கொண்ட காங்கிரஸ் அதில் மூன்றில் ஒரு பங்கு இடத்தில் கூட வெற்றி பெறாமல் போனது. கூட்டணிக்குள் ஏதாவது வலுவான இஸ்லாமிய மற்றும் தலித் கட்சியை உள்ளுக்கு இழுத்து நிற்க வைத்து தன் தொகுதிகளில் கொஞ்சம் விட்டுத் தந்திருந்தால் சுமார் 45 இடங்களில் அது வெற்றி உறுதியாக வெற்றி பெற்று இருக்கும்! காங்கிரஸின் செய்ல்பாடில்லாத தேக்க நிலைக்கு மாறக பாஜக இமைப்பொழுதும் சோராமல் இயங்கி வருவது குறிப்பிட தக்கதாகும்!</p>



<p>மிகப் பெரும்பாலோர் ஓட்டுமெஷினில் ஏதாவது சூட்சுமம் செய்து வெற்றி பெற்று இருப்பார்களோ என்ற கோணத்தில் சந்தேகத்தை எழுப்பி உள்ளனர். அதற்கு வாய்ப்பு இல்லாமலில்லை! ஆயினும் அதற்கான வாய்ப்பு மிகக் குறைவு என்று தான் தோன்றுகிறது. எனினும், அது குறித்தும் தீவிரமாக கவனத்தில் கொள்ள வேண்டும்.</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/uncategorized/bjp-won-bihar-election-by-manipulating-the-voters/">பீகார் தேர்தல் – தந்திரத்தால் சாதித்த வெற்றி!</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://desiyamurasu.com/uncategorized/bjp-won-bihar-election-by-manipulating-the-voters/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>உத்தரப்பிரதேசத்தில் வீதியில் இறங்கிப் போராடும் இளைஞர்கள்:   வேலை உத்தரவாதம் அளிக்க தலித் அமைப்புகள் கோரிக்கை</title>
		<link>https://desiyamurasu.com/uncategorized/up-dalits-protest-for-jobs/</link>
					<comments>https://desiyamurasu.com/uncategorized/up-dalits-protest-for-jobs/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[எம்.மலைமோகன்]]></dc:creator>
		<pubDate>Sat, 12 Sep 2020 13:19:47 +0000</pubDate>
				<category><![CDATA[Uncategorized]]></category>
		<guid isPermaLink="false">https://desiyamurasu.com/?p=2230</guid>

					<description><![CDATA[<p>கெரோனா காலத்தில் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால் வேலை இழந்தோருக்கு, வேலை உத்தரவாதம் மற்றும் கல்வித் தகுதிக்கேற்ப &#160;இழப்பீடு வழங்க நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றுமாறு தலித் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. பொது முடக்கத்தின்போது, நாடு முழுவதும் லட்சக்கணக்கானோர் வேலை இழந்தனர். &#160; இதனையடுத்து, தலித் மற்றும் பழங்குடியின அமைப்புகள் மேற்கண்ட கோரிக்கையை கையில் எடுத்துள்ளன. இதுவரை தங்கள் சமுதாயத்தவர்களுக்காக குரல் கொடுத்து வந்த இந்த அமைப்புகள், தற்போது அனைத்து படித்த இளைஞர்களுக்கும் வேலை உத்தரவாதம் மற்றும் கல்வித் தகுதிக்கேற்ப [&#8230;]</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/uncategorized/up-dalits-protest-for-jobs/">உத்தரப்பிரதேசத்தில் வீதியில் இறங்கிப் போராடும் இளைஞர்கள்:   வேலை உத்தரவாதம் அளிக்க தலித் அமைப்புகள் கோரிக்கை</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>கெரோனா காலத்தில் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால் வேலை இழந்தோருக்கு, வேலை உத்தரவாதம் மற்றும் கல்வித் தகுதிக்கேற்ப &nbsp;இழப்பீடு வழங்க நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றுமாறு தலித் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.</p>



<p>பொது முடக்கத்தின்போது, நாடு முழுவதும் லட்சக்கணக்கானோர் வேலை இழந்தனர். &nbsp; இதனையடுத்து, தலித் மற்றும் பழங்குடியின அமைப்புகள் மேற்கண்ட கோரிக்கையை கையில் எடுத்துள்ளன. இதுவரை தங்கள் சமுதாயத்தவர்களுக்காக குரல் கொடுத்து வந்த இந்த அமைப்புகள், தற்போது அனைத்து படித்த இளைஞர்களுக்கும் வேலை உத்தரவாதம் மற்றும் கல்வித் தகுதிக்கேற்ப இழப்பீடு வழங்குவது குறித்த சட்டத்தை இயற்ற கோரிக்கை வைத்திருப்பது மாறுபட்டதாக இருக்கிறது.</p>



<p>தேசிய தலித் மற்றும் ஆதிவாசி அமைப்புகளின் கூட்டமைப்பு சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், &#8221;ஏற்கனவே, பெரும் வேலையில்லாத திண்டாட்டத்தை நாடு சந்தித்துக் கொண்டிருந்தது. கொரோனா பாதிப்புக்குப் பிறகு, இது பன்மடங்கு அதிகமாகிவிட்டது. இதனால் நாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் விரக்தியிலும், மன அழுத்தத்திலும் உள்ளனர். இதனைக் கருத்தில் கொண்டு, வரும் மழைக்காலக் கூட்டத் தொடரின்போது, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உத்தரவாதம், தகுந்த வேலை கிடைக்காவிட்டால் அதற்கான இழப்பீடு தருவது தொடர்பாக சட்டம் இயற்றவேண்டும்&#8221; என்று கூறியிருந்தனர்.</p>



<p>இது குறித்து, இந்த கூட்டமைப்பின் செயற்பாட்டாளர் அசோக் பார்தி கூறும்போது, &#8221;2005 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உத்தரவாத சட்டத்தின்படி, படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க உத்தரவாதம் அளிக்க வழிவகை செய்யும் சட்ட நகலை மத்திய அரசுக்கும் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும் அனுப்பியுள்ளோம். இது குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கும் கடிதம் எழுதவுள்ளோம்.&#8221; என்றார்.</p>



<p>அரசு வேலை வாய்ப்பு மற்றும் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டை மட்டுமே இதுவரை இந்த அமைப்புகள் கோரி வந்தன. இட ஒதுக்கீட்டிலிருந்து அனைவருக்கும் வேலை உத்தரவாதம் என்ற கோரிக்கைக்கு எத்தனை தலித் அமைப்புகள் உடன்பட்டிருக்கிறார்கள் என்ற கேள்விக்கு பதில் அளித்த பார்தி, &#8221;இட ஒதுக்கீட்டுக்கு எதிரான எங்கள் போராட்டமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. &nbsp;வேலையே இல்லை என்றால், இட ஒதுக்கீடும் இல்லாமல் போய்விடும். &nbsp;இட ஒதுக்கீடு என்ற காரணத்தை வைத்துக் கொண்டு, நீண்ட காலமாக புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை.</p>



<p>அனைவருக்கும் வேலை வாய்ப்பு என்பதை உயர் சாதி அதிகாரிகள் ஏற்க மறுக்கிறார்கள். எங்கள் கோரிக்கையில் எஸ்.சி., எஸ்.டி.யினரும் அடங்குவர். &nbsp;கொரோனாவினால் 14 கோடிக்கும் மேற்பட்டோர் வேலை இழந்துள்ளனர். பெரிய அளவிலான வேலை இழப்பு அமைப்பு சாரா நிறுவனங்களில் தான் ஏற்பட்டுள்ளது. இவர்கள் தினக்கூலிகளாக உள்ளனர். தங்கள் அன்றாட வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர்.</p>



<p>மாதச் சம்பளம் பெறும் படித்தவர்கள் வேலை இழந்தபின் மாற்று வேலை கிடைக்கவில்லை. அந்த வகையில் 2 கோடியே 10 லட்சம் பேர் வேலையிழந்துள்ளனர். &nbsp;2020 மார்ச் மாதம் வரை 8 கோடியே 60 லட்சம் மாதச் சம்பளம் பெறும் ஊழியர்கள் இருந்தனர். கடந்த ஆகஸ்ட் மாதத்தில், இந்த எண்ணிக்கை 6 கோடியே 50 லட்சமாக குறைந்துள்ளது. &nbsp;மத்திய அரசின் தரவுகளின்படி, ஏற்கனவே 11 கோடி பேர் வேலையில்லாமல் உள்ளனர். தற்போது இந்த எண்ணிக்கை பல மடங்காக உயர்ந்து விட்டது&#8221; என்றார்.</p>



<p>&#8221; கொரோனா பொது முடக்கத்தால் வேலை இழந்த புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு நடந்தே சென்ற சோகச் சம்பமும் நடந்தேறியது. அவர்கள் படும் துயரம் சொல்லிமாளாது. கொரோனா நோய் சாதி, மத பேதமின்றி அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தையும் பறித்துவிட்டது. இந்த சூழ்நிலையில் தான் அனைத்து இளைஞர்களுக்கும் வேலை உத்தரவாதம் அவசியமாகிறது. பொதுமுடக்கமும், அதனால் ஏற்பட்ட பொருளாதார இழப்பும் தனிப்பட்ட நபரின் வாழ்வாதாரத்தை பெரும் பாதித்துள்ளதாக,&#8221; ஏஐஏஎம் அமைப்பின் நிர்வாக தலைவர் ராகேஷ் பஹதூர் கூறுகிறார்.</p>



<p>உத்தரப்பிரதேச மாநிலத்தில் வேலை இல்லாத இளைஞர்கள் பலர், சாதி, மதம் கடந்து வீதிகளில் இறங்கிப் போராடத் தொடங்கி விட்டார்கள். இந்த சூழ்நிலையில் தான், நாட்டில் உள்ள அனைத்து இளைஞர்களுக்கும் வேலை வாய்ப்பு உத்தரவாதம் மற்றும் கல்வித் தகுதிக்கேற்ப இழப்பீட்டு உத்தரவாதம் அளிக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்ற கோரிக்கை வைத்ததன் மூலம், பூனைக்கு மணி கட்டியிருக்கிறார்கள் &nbsp;இந்த அமைப்புகள்.</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/uncategorized/up-dalits-protest-for-jobs/">உத்தரப்பிரதேசத்தில் வீதியில் இறங்கிப் போராடும் இளைஞர்கள்:   வேலை உத்தரவாதம் அளிக்க தலித் அமைப்புகள் கோரிக்கை</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://desiyamurasu.com/uncategorized/up-dalits-protest-for-jobs/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>பூனைக்கு யார் மணி கட்டுவது?: தே.பா.ச-வுக்கு எதிராக குவியும் எதிர்ப்புகள்</title>
		<link>https://desiyamurasu.com/uncategorized/nsa-highly-misused-law-need-to-act-against-errant-officers-who-invoke-it-experts-on-kafeel-khan-case/</link>
					<comments>https://desiyamurasu.com/uncategorized/nsa-highly-misused-law-need-to-act-against-errant-officers-who-invoke-it-experts-on-kafeel-khan-case/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[ஆ. கோபண்ணா]]></dc:creator>
		<pubDate>Sat, 05 Sep 2020 10:36:42 +0000</pubDate>
				<category><![CDATA[Uncategorized]]></category>
		<category><![CDATA[மதச்சார்பின்மை]]></category>
		<category><![CDATA[Kafeel Khan]]></category>
		<category><![CDATA[National Security Act]]></category>
		<guid isPermaLink="false">https://desiyamurasu.com/?p=2104</guid>

					<description><![CDATA[<p>2017 ஆம் ஆண்டு கோரக்பூர் அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் சிலிண்டர் பற்றாக்குறை காரணமாக 63 குழந்தைகள் உயிரிழந்தன. இது தொடர்பாக டாக்டர் கபீல் கான் மீது உத்தரப்பிரதேச அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த இறப்புகளுக்கு கான் மீது குற்றம் சாட்டடிய உத்தரப்பிரதேச அரசு, இது குறித்து விசாரிக்க குழு ஒன்றை அமைத்தது. இக்குழு தாக்கல் செய்த விசாரணை அறிக்கையில், டாக்டர் கான் மீது தவறில்லை என்றும், அவர் சொந்த பணத்தைப் போட்டு ஆக்ஸிஜன் சிலிண்டர் வாங்கியதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. [&#8230;]</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/uncategorized/nsa-highly-misused-law-need-to-act-against-errant-officers-who-invoke-it-experts-on-kafeel-khan-case/">பூனைக்கு யார் மணி கட்டுவது?: தே.பா.ச-வுக்கு எதிராக குவியும் எதிர்ப்புகள்</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>2017 ஆம் ஆண்டு கோரக்பூர் அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் சிலிண்டர் பற்றாக்குறை காரணமாக 63 குழந்தைகள் உயிரிழந்தன. இது தொடர்பாக டாக்டர் கபீல் கான் மீது உத்தரப்பிரதேச அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த இறப்புகளுக்கு கான் மீது குற்றம் சாட்டடிய உத்தரப்பிரதேச அரசு, இது குறித்து விசாரிக்க குழு ஒன்றை அமைத்தது.<br><br>இக்குழு தாக்கல் செய்த விசாரணை அறிக்கையில், டாக்டர் கான் மீது தவறில்லை என்றும், அவர் சொந்த பணத்தைப் போட்டு ஆக்ஸிஜன் சிலிண்டர் வாங்கியதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.<br><br>எனினும், டாக்டர் கான் மீது அலட்சியம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைது செய்த உத்தரப்பிரதேச அரசு, அவரை 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் விடுதலை செய்தது.<br><br>இதனையடுத்து, கடந்த ஜனவரி மாதம் அலிகார் பல்கலைக்கழகத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்துப் பேசியதற்காக, டாக்டர் கான் மீது அலிகார் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இதனையடுத்து, ஜனவரி 29 ஆம் தேதி மும்பையில் வைத்து உத்தரப்பிரதேச காவல்துறையினர் கானை கைது செய்தனர்.<br><br>பிப்ரவரி 10 ஆம் தேதி அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை உத்தரப்பிரதேச அரசு கடுமையாக எதிர்த்தது. இதனையடுத்து, கபீர் கானை &nbsp;நீதிமன்றம் ஜாமீனில் விடுதலை செய்தது. இதனையடுத்து, அவரை பிப்ரவரி 13 ஆம் தேதி தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் உத்தரப்பிரதேச அரசு கைது செய்து மதுரா சிறையில் அடைத்தது.<br><br>இதனையடுத்து, தொடர்ந்து 7 மாதங்கள் சிறையில் இருந்த அவரை, அலகாபாத் உயர் நீதிமன்றம் கடந்த ஒன்றாம் தேதி விடுதலை செய்தது. பழிவாங்கும் நோக்கில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தை உத்தரப்பிரேதச அரசு பயன்படுத்தியிருப்பது உயர் நீதிமன்ற தீர்ப்பின் மூலம் வெட்டவெளிச்சமாகியுள்ளது.<br><br>பசுக்களை இறைச்சிக்காக வெட்டியவர்கள் மீது சமீபத்தில் தேசிய பாதுகாப்புச் சட்டம் பாய்ந்தது. பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத்தையும் எந்த விசாரணையும் இன்றி, தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து உத்தரப்பிரதேச அரசு சிறையில் அடைத்தது.<br><br>கைது செய்யப்பட்டவர்களின் உரிமைகளை மறுத்து, நீண்ட நாள் அவர்களை சிறையில் வைக்க தேசிய பாதுகாப்புச் சட்டத்தை காவல் துறையினர் பயன்படுத்துகின்றனர்.<br><br>தேசிய பாதுகாப்புச் சட்டத்தை எதிர்க்கட்சிகளுக்கு எதிராக பயன்படுத்துவது சமீபகாலமாக அதிகரித்துள்ளது. இதுபோன்று பழிவாங்கும் நடவடிக்கைக்காக நீதிமன்றத்தை அணுகினால், நீதி கிடைப்பதற்கு தாமதமாகிறது. 9 மாதங்கள் கழித்துத்தான், தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் டாக்டர் கான் கைது செய்யப்பட்டதை ரத்து செய்து அலகாபாத் உயர் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. இதுபோன்ற வழக்குகளை அவசர வழக்குகளாக நீதிமன்றங்கள் விசாரிக்க வேண்டும் என்றும் தற்போது கோரிக்கை எழுந்துள்ளது.<br><br>இதுபோன்ற பழிவாங்கும் நடவடிக்கைக்காக தேசிய பாதுகாப்புச் சட்டத்தைப் பயன்படுத்தும் அதிகாரிகளுக்கு நீதிமன்றங்கள் தண்டனை வழங்கினால் தான், இதுபோன்ற தவறுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்று சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.<br><br>கபீல் கானை தன்னிச்சையாக தடுப்புக் காவலில் கைது செய்ததன் மூலம், தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் அதிகாரத்தை ஏன் குறைக்கக் கூடாது? என்ற கேள்வி எழுந்துள்ளது.<br><br>இந்த பூனைக்கு யாராவது மணி கட்டித்தானே ஆகவேண்டும்.</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/uncategorized/nsa-highly-misused-law-need-to-act-against-errant-officers-who-invoke-it-experts-on-kafeel-khan-case/">பூனைக்கு யார் மணி கட்டுவது?: தே.பா.ச-வுக்கு எதிராக குவியும் எதிர்ப்புகள்</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://desiyamurasu.com/uncategorized/nsa-highly-misused-law-need-to-act-against-errant-officers-who-invoke-it-experts-on-kafeel-khan-case/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
	</channel>
</rss>
