<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>தேசிய அரசியல் - தேசிய முரசு - Desiya Murasu</title>
	<atom:link href="https://desiyamurasu.com/category/news-india/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://desiyamurasu.com/category/news-india/</link>
	<description>DesiyaMurasu – Daily Opinions &#38; Analysis on Latest News  &#124; Tamil News</description>
	<lastBuildDate>Sun, 31 Oct 2021 18:43:58 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.1</generator>

<image>
	<url>https://desiyamurasu.com/wp-content/uploads/2020/07/cropped-FAV-copy-1-32x32.png</url>
	<title>தேசிய அரசியல் - தேசிய முரசு - Desiya Murasu</title>
	<link>https://desiyamurasu.com/category/news-india/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>பயங்கரவாதத்தால் வீழ்த்தப்பட்ட வீராங்கனை!! அக்டோபர் 31: அன்னை இந்திரா நினைவு நாள் &#8211; ராகுல் அஞ்சலி</title>
		<link>https://desiyamurasu.com/news-india/the-assassination-of-indira-gandhi-2/</link>
					<comments>https://desiyamurasu.com/news-india/the-assassination-of-indira-gandhi-2/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[ஆ. கோபண்ணா]]></dc:creator>
		<pubDate>Sun, 31 Oct 2021 18:43:55 +0000</pubDate>
				<category><![CDATA[தேசிய அரசியல்]]></category>
		<category><![CDATA[Indira Gandhi Assassination]]></category>
		<guid isPermaLink="false">https://desiyamurasu.com/?p=4518</guid>

					<description><![CDATA[<p>அக்டோபர் 31: அன்னை இந்திரா நினைவு நாள் அன்னை இந்திரா காந்தியைப் பற்றி நிறைய ஆங்கில நூல்கள் வெளிவந்துள்ளன. ஆனால், 2009 இல் வெளிவந்த Mother India &#8211; A Political Biography of Indira Gandhi என்ற நூலை Pranay Gupte என்பவர் மிகச் சிறப்பாக எழுதியிருந்தார். இந்நூலில் The Assassination&#160; என்ற தலைப்பில் வெளிவந்த அத்தியாயம் இங்கே தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது: நாடு சுதந்திரம் பெற்றபோது, மதவெறியர்களால் மகாத்மா காந்தியை நாம் இழந்தோம்! அடுத்து [&#8230;]</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/the-assassination-of-indira-gandhi-2/">பயங்கரவாதத்தால் வீழ்த்தப்பட்ட வீராங்கனை!! அக்டோபர் 31: அன்னை இந்திரா நினைவு நாள் &#8211; ராகுல் அஞ்சலி</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p><span class="has-inline-color has-vivid-red-color"><em>அக்டோபர் 31: அன்னை இந்திரா நினைவு நாள்</em></span></p>



<p><em>அன்னை இந்திரா காந்தியைப் பற்றி நிறைய ஆங்கில நூல்கள் வெளிவந்துள்ளன. ஆனால், 2009 இல் வெளிவந்த <strong>Mother India &#8211; A Political Biography of Indira Gandhi </strong>என்ற நூலை <strong>Pranay Gupte</strong> என்பவர் மிகச் சிறப்பாக எழுதியிருந்தார். இந்நூலில் <strong>The Assassination</strong>&nbsp; என்ற தலைப்பில் வெளிவந்த அத்தியாயம் இங்கே தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது:</em></p>



<p><em>நாடு சுதந்திரம் பெற்றபோது, மதவெறியர்களால் மகாத்மா காந்தியை நாம் இழந்தோம்! அடுத்து 1984 இல் அன்னை இந்திரா காந்தியை மதவெறிக்கு மீண்டும் பலிகொடுத்தோம்! தொடர்ந்து 1991 இல் தீவிரவாத, பயங்கரவாத சக்திகளால் ராஜிவ் காந்தியை இழந்தோம்! மதவாத, தீவிரவாத, பயங்கரவாத சக்திகளை எதிர்த்துப் போராடவேண்டிய பொறுப்பும் கடமையும் தேசிய சக்திகளுக்கு இருப்பதை உணர்த்துவதற்காகவே, அக்டோபர் 31 அன்னை இந்திராவின் நினைவுநாளையொட்டி இந்தக் கட்டுரை வெளியிடப்படுகிறது. – ஆசிரியர்</em></p>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img fetchpriority="high" decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/image15_1.jpg" alt="" class="wp-image-2835" width="564" height="454" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/image15_1.jpg 878w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/image15_1-300x242.jpg 300w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/image15_1-768x619.jpg 768w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/image15_1-750x605.jpg 750w" sizes="(max-width: 564px) 100vw, 564px" /></figure></div>



<p><span class="has-inline-color has-vivid-red-color"><strong>1984-ஆம் ஆண்டு அக்டோபர்…31ஆம் தேதி புதன்கிழமை&#8230;.</strong></span></p>



<p>இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி வழக்கம்போலவே காலை 8 மணிக்குத் துயில் எழுந்தார். அவரிடம் நீண்டகாலமாகப் பணியாற்றிவரும் பணியாளரான நாதுராம், வழக்கமான கோப்பையில் சூடான தேநீரை இந்திராவுக்குக் கொண்டு வந்தார். 67வது பிறந்த நாளைக் கொண்டாடுவதற்கு ஒரு மாதமே மீதமிருந்த நிலையில், இந்திரா காந்தி தமது வழக்கமான நடைமுறைப்படி பல ஹிந்தி மற்றும் ஆங்கில நாளிதழ்களைப் படித்தார். பெரும்பாலான நாளிதழ்களில் அதற்கு முந்தைய நாள் ஒரிசாவில் இந்திரா காந்தி மேற்கொண்ட சுற்றுப்பயணம் குறித்த செய்தி முதல் பக்கத்திலேயே வெளியாகி இருந்தது. ஒரிசா சுற்றுப்பயணத்தின்போது பல அரசியல் கூட்டங்களில் இந்திரா உரையாற்றியிருந்தார்.</p>



<figure class="wp-block-embed-twitter wp-block-embed is-type-rich is-provider-twitter"><div class="wp-block-embed__wrapper">
<blockquote class="twitter-tweet" data-width="500" data-dnt="true"><p lang="en" dir="ltr">Shri <a href="https://twitter.com/RahulGandhi?ref_src=twsrc%5Etfw">@RahulGandhi</a> pays his tribute to former PM Smt. Indira Gandhi at Shakti Stal on the 37th anniversary of her martyrdom. <a href="https://t.co/oMEqnuUunm">pic.twitter.com/oMEqnuUunm</a></p>&mdash; Congress (@INCIndia) <a href="https://twitter.com/INCIndia/status/1454646447542980619?ref_src=twsrc%5Etfw">October 31, 2021</a></blockquote><script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
</div></figure>



<p>கோபல்பூர் என்ற இடத்தில் ஏவுகணைகளைச் செலுத்துவது குறித்துப் பயிற்சி அளிப்பதற்கான புதிய ராணுவப் பயிற்சிப் பள்ளிக்கு இந்திரா அடிக்கல் நாட்டியிருந்தார். அதே நாளில் ஒரிசா தலைநகர் புவனேசுவரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் அவர் உரையாற்றினார். அக்கூட்டத்தில் 30 நிமிடங்களுக்கு உரையாற்றிய இந்திரா காந்தி, மதவாதத்தின் ஆபத்துகள் குறித்தும், இந்தியாவின் பாதுகாப்புக்கு வெளியிலிருந்து ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் குறித்தும் குறிப்பிட்டார்.&nbsp;</p>



<p>பின்னர் சில இடங்களில் தமக்கு எதிராக ஏற்பட்டுள்ள அரசியல் பகைமை குறித்தும், பல நேரங்களில் அது எல்லை மீறுவது குறித்தும் இந்திரா நினைவுகூர்ந்தார். அதற்கு முந்தைய நாள்தான் ஒரு பொதுக்கூட்டத்தில் தம்மை நோக்கி கல் வீசப்பட்டதை இந்திரா நினைவுகூர்ந்தார். ஆனால், இதற்கெல்லாம் தாம் அஞ்சவில்லை என்று இந்திரா கூறினார்.</p>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/61a2U8iYHnL._SL1280_-714x1024.jpg" alt="" class="wp-image-2839" width="533" height="763" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/61a2U8iYHnL._SL1280_-714x1024.jpg 714w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/61a2U8iYHnL._SL1280_-209x300.jpg 209w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/61a2U8iYHnL._SL1280_-768x1101.jpg 768w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/61a2U8iYHnL._SL1280_-750x1075.jpg 750w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/61a2U8iYHnL._SL1280_.jpg 893w" sizes="(max-width: 533px) 100vw, 533px" /></figure></div>



<p>&#8221;தேசத்திற்கு சேவையாற்றும்போது, எனது உயிர் போனால் அதை எண்ணி நான் கவலைப்படப் போவதில்லை. ஒருவேளை இன்றே நான் உயிரிழந்தாலும், எனது உடலில் இருந்து செல்லும் ஒவ்வொரு துளி ரத்தமும் இந்தியாவை வலிமைப்படுத்தும். எனது ஒவ்வொரு துளி ரத்தமும் இந்தியா வலிமையான, உறுதியான நாடாக வளர்வதற்குப் பங்களிக்கும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன் என்று இந்திரா உரையாற்றியிருந்தார்.&#8221; ஆனால், அடுத்த நாளே தமக்கு மரணம் நேரிடும் என்பதை அவர் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்.இந்திராவின் படுக்கை அறையில் கடும் குளிர் நிலவியது. இந்திரா காந்தியின் இல்லம் உள்பட தில்லியில் உள்ள ஒரு சில வீடுகளில்தான் மையப்படுத்தப்பட்ட வெப்பமூட்டி வசதி இருந்தது. </p>



<p>இந்திராவின் படுக்கை அறையில் இருந்த, சிறிய அளவிலான மின்சார வெப்பமூட்டி திருப்தியளிக்கும் வகையில் வேலை செய்யவில்லை. படுக்கையிலிருந்து எழுந்த இந்திரா, சில நிமிடங்களுக்கு யோகாசனப் பயிற்சி மேற்கொண்டார். பின்னர் குளித்துவிட்டுப் பிரகாசமான ஆரஞ்சு வண்ண சேலையை உடுத்திக் கொண்ட அவர், தமது பேரக் குழந்தைகளான பிரியங்கா, ராகுல் ஆகியோருடன்&nbsp; காலை உணவுக்காக அமர்ந்தார்.&nbsp;</p>



<p>அடுத்த ஓரிரு நாள்களில் நாடாளுமன்றத் தேர்தலை இந்திரா காந்தி அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில், அவரது புதல்வரான ராஜிவ் காந்தி அப்போது தமது தாயாரின் சார்பில் சில அரசியல் பணிகளை முடிப்பதற்காக மேற்கு வங்கத்திற்குச் சென்றிருந்தார். சில நாள்கள் முன்பாக அக்டோபர் 27ஆம் தேதி எவரும் எதிர்பார்க்காத நிலையில், இந்திரா காந்தி தமது பேரக்குழந்தைகளான பிரியங்காவையும் ராகுல் காந்தியையும் காஷ்மீர் தலைநகரான ஸ்ரீநகருக்குச் சுற்றுலா அழைத்துச் சென்றிருந்தார். அந்தச் சுற்றுலா வெறும் 30 மணி நேரம் மட்டுமே நீடித்தது. அங்கு இந்திரா காந்தியைக் காஷ்மீர் மாநில ஆளுநர் ஜக்மோகனும், அப்போதுதான் புதிதாகப் பதவியேற்றிருந்த குல்சாவும் சந்தித்துப் பேசினர்.</p>



<p>இந்திரா காந்தியும் அவருடன் வந்தவர்களும் அனைவரையும் கவரக்கூடியமாநில விருந்தினர் மாளிகையில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இந்திரா காந்தியின் இந்தப் பயணம் குறித்துப் பின்னர் நினைவுகூர்ந்த ஆளுநர்ஜக்மோகன், &#8220;இந்திரா காந்தி வழக்கத்திற்கு மாறாக நல்ல மனநிலையில் கலகலப்பாகவும், மனதுக்கு நிறைவாக உணவு அருந்தியும் மகிழ்ந்தார்&#8221; என்று குறிப்பிட்டார்.</p>



<p>அக்டோபர் 28 ஆம் தேதி காலையில் &#8220;தால் ஏரி&#8217;க்கு அருகிலுள்ள சங்கராச்சாரியாமலையில் ஏறி, அங்குள்ள லக்ஷ்மண் ஜூ என்ற சுவாமியைச் சந்தித்தார். சிறிது நேரமே நீடித்த இச்சந்திப்பின்போது, தாம் விரைவிலேயே உயிரிழக்கப்போவதாகத் தமது உள்ளுணர்வு உணர்த்துவதாக இந்திரா காந்தி கூறினார் என்று லக்ஷ்மண் ஜூ பின்னர் தெரிவித்தார்.</p>



<p>“இந்திரா காந்தி தமது மரணம் பற்றிப் பேசினார். தமது வாழ்க்கை முடிவடையும் நேரம் வந்துவிட்டதாகவும், சாவு நெருங்கி விட்டதாகவும் இந்திரா கூறினார்” என்று லக்ஷ்மண் ஜூ தெரிவித்தார்.</p>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/EILYND5XUAI73NU.jpg" alt="" class="wp-image-2841" width="568" height="383" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/EILYND5XUAI73NU.jpg 720w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/EILYND5XUAI73NU-300x203.jpg 300w" sizes="(max-width: 568px) 100vw, 568px" /></figure></div>



<p>இந்திரா காந்தி தமது மரணம் குறித்துப் பேசுவார் என்று சுவாமி எதிர்பார்க்கவில்லை. அந்த நேரத்தில் அமைதியாகவும் இயல்பாகவும் இருக்க முயன்ற சுவாமி, அதே வளாகத்தில் கட்டப்பட்டிருந்த சிறிய கட்டடத்தைக் காட்டி, அந்தக் கோயில் நவம்பர் மாதத்தில் திறக்கப்பட இருப்பதாகவும், திறப்பு விழாவிற்கு உங்களால் தலைமையேற்க முடியுமா என்றும் இந்திரா காந்தியிடம் கேட்டார்.</p>



<p>அதைக் கேட்ட இந்திரா, &#8216;அதுவரை உயிருடன் இருந்தால் நான் கண்டிப்பாக வருவேன்‘என்று கூறினார். சுவாமி லக்ஷ்மண் ஜூவின் ஆசிரமத்திலிருந்து விடைபெற்ற இந்திரா, அருகிலுள்ள காஷ்மீர் பிராமணர்களின் கடவுளாகக் கருதப்படும் ஷரீகா கோயிலுக்குச் சென்றார். அங்கிருந்த குருக்கள் இந்திராவுக்காகச் சிறப்பு வழிபாடு நடத்தினார். சிறப்பு வழிபாடு முடிவடைந்த பின்னர், இந்திராவும் அவரது பேரக்குழந்தைகளும் தில்லி திரும்புவதற்காக விமான நிலையம் சென்றனர்.</p>



<p>காஷ்மீரில் அவசர அவசரமாக மேற்கொண்ட பயணத்தின்போதுகூட உள்ளூர் அரசியல் நிலைமை குறித்து இந்திரா காந்தி பேசியதையும், மாநிலத்தின் அன்றாட அரசியல் நிகழ்வுகள் குறித்து விளக்கும்படி கூறியதையும் காஷ்மீர் ஆளுநர் ஜக்மோகன் பின்னர் நினைவுகூர்ந்தார்.</p>



<p>அதற்கு அடுத்த நாளான அக்டோபர் 29 ஆம் தேதி&nbsp; விமானம் மூலம் ஒரிசா சென்று பல்வேறு நிகழ்ச்சிகளில் இந்திரா காந்தி கலந்து கொண்டார். அதன்பின் அக்டோபர் 30ஆம் தேதி மாலைதான்&nbsp; தில்லி திரும்பினார்.</p>



<p>அக்டோபர் 31 ஆம் தேதி காலை உணவாக வாட்டப்பட்ட சில உணவு வகைகள், தானியங்கள், புதிதாகப் பிழிந்தெடுக்கப்பட்ட ஆரஞ்சுச் சாறு, முட்டைகள், தேநீர் ஆகியவற்றை இந்திரா எடுத்துக் கொண்டார். பின்னர் இந்திராவின் பேரக் குழந்தைகள் பள்ளிக்குப் புறப்பட ஆயத்தமாயினர். அப்போது ராகுல் காந்தியையும் பிரியங்காவையும் பார்த்து, எப்படி இருக்கிறீர்கள் என இந்திரா காந்தி கேட்டார். ஏனெனில்,அதற்கு முதல்நாள்தான் அவர்கள் இருவரும் பயணம் செய்த கார், இந்திராவின் சப்தர்ஜங் இல்லத்திற்கு அருகே வந்துகொண்டிருக்கும்போது, சிவப்பு சிக்னலைத் தாண்டி வந்த வேன் ஒன்று கார் மீது மோதியிருந்தது. இந்த விபத்தில் ராகுலுக்கும் பிரியங்காவுக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. இந்த விபத்தின் பின்னணியில் சதித் திட்டம் எதுவும் இல்லை என்று பிரதமரின் பாதுகாவலர்கள் அவரிடம் தெரிவித்திருந்தனர்.</p>



<p>பேரக்குழந்தைகளிடம் இந்திரா காந்தி பேசிக் கொண்டிருந்தபோது, உணவு அருந்தும் அறைக்குள் இந்திராவின் உதவியாளர் ஒருவர் நுழைந்தார். அவரது பெயர் ஆர்.கே.தவான். குள்ளமான, சிரித்த முகம்கொண்ட 47 வயதுமனிதரான தவான், எப்போதும் எண்ணெய் தேய்த்து வாரப்பட்ட தலையுடன் காணப்படுவார். தவான் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திராவிடம் பணியாற்றி வருகிறார். இந்திராவின் மிகுந்த நம்பிக்கைக்குரிய உதவியாளரான அவர், அதிகாரம் மிகுந்தவரும்கூட. இந்திரா காந்தியிடம் தட்டச்சராகச் சேர்ந்து உதவியாளராக மாறிய தவான், காங்கிரஸ் கட்சிக்கு நிர்வாகிகளை நியமிப்பதில் தொடங்கி, வெளியுறவுக் கொள்கையை வகுப்பதுவரை அனைத்து விஷயங்களிலும் இந்திராவுக்கு ஆலோசனை வழங்கி வந்தார்.</p>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large"><img loading="lazy" decoding="async" width="600" height="832" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/indira_gandhi_delhi_2010032.jpg" alt="" class="wp-image-2937" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/indira_gandhi_delhi_2010032.jpg 600w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/indira_gandhi_delhi_2010032-216x300.jpg 216w" sizes="auto, (max-width: 600px) 100vw, 600px" /></figure></div>



<p>இந்திராவை நெருங்கிய தவான் அவரது அன்றைய முதல் நிகழ்ச்சிக்கான நேரம் நெருங்கிவிட்டதாகக் கூறினார். அதைக் கேட்டு தலையாட்டிய இந்திரா, தமது பேரக்குழந்தைகளைக் கட்டித் தழுவி முத்தம் கொடுத்தார். பின்னர் இரு குழந்தைகளும் அங்கிருந்து வெளியேறியபோது வழக்கத்திற்குமாறாக அவர்களை மீண்டும் அழைத்து கட்டித் தழுவி முத்தம் கொடுத்தார். பின்னர் அருகிலுள்ள தமது அலுவலக அறைக்குச் சென்ற இந்திரா காந்தி, அங்கு ஏற்கெனவே ஆர்.கே.தவான் எடுத்து வைத்திருந்த கோப்புகளைப் பார்த்தார். அங்கு இந்திரா காந்தி தமது கைப்பட சில விஷயங்களை எழுதினார். அது ஒரு வகையில் இந்திரா காந்தியின் கடைசி உயில் மற்றும் மரண சாசனத்தைப் போன்றதாகும். இந்திராவின் உதவியாளர்களுள் ஆர்.கே.தவான் மட்டுமே அதைப் பார்த்திருந்தார். தமது உயில் எழுதும் பணியை இந்திரா காந்தி முழுமையாக முடிக்கவில்லை.</p>



<p>அதைப்பற்றி இந்திராவிடம் ஆர்.கே.தவான் ஒருமுறை கேட்டபோதிலும், அதை அவர் கண்டுகொள்ளவில்லை. தமக்கு ஏதேனும் ஆபத்து நிகழும் வாய்ப்பு இருப்பதைப் பற்றி இந்திரா அவ்வப்போது கூறுவதை அவரது நீண்டகால நண்பரும் ஆலோசகருமான நியூயார்க் பல்கலைக்கழகப் பேராசிரியர் ரால்ஃப் புல்ட்ஜென்சும் கேட்டிருக்கிறார். அப்படியெல்லாம் எதுவும் நிகழாது என்று இந்திரா காந்திக்கு உணர்த்த பேராசிரியர் ரால்ஃப் பலமுறை முயன்றபோதிலும், இந்திரா விரக்தியடைந்த நிலையிலேயே காணப்பட்டார்.</p>



<p>1978 ஆம் ஆண்டு இந்திரா காந்தி ஆட்சிப் பொறுப்பில் இல்லாதபோது, தாம் வன்முறையான சூழலில் கொல்லப்பட்டால், பொதுமக்களுக்குச் சில விஷயங்களைத் தெரிவிப்பதற்காகத் தயாரித்து வைத்திருந்த வரைவு அறிக்கை ஒன்றை அந்தப் பேராசிரியரிடம் இந்திரா காந்தி காட்டியிருந்தார்.</p>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large"><img loading="lazy" decoding="async" width="875" height="604" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/Indira-Gandhi-and-her-son-Rajiv.jpg" alt="" class="wp-image-2938" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/Indira-Gandhi-and-her-son-Rajiv.jpg 875w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/Indira-Gandhi-and-her-son-Rajiv-300x207.jpg 300w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/Indira-Gandhi-and-her-son-Rajiv-768x530.jpg 768w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/Indira-Gandhi-and-her-son-Rajiv-750x518.jpg 750w" sizes="auto, (max-width: 875px) 100vw, 875px" /></figure></div>



<p>இந்திரா காந்தியின் விரக்தியான மனநிலையை எண்ணி ஆர்.கே.தவானும், பேராசிரியர் ரால்ஃப்பும் கவலையடைந்தனர். 1984 ஆம் ஆண்டு அமிர்தசரஸ் நகரிலுள்ள பொற்கோயில்மீது ராணுவ நடவடிக்கை எடுக்க இந்திரா காந்தி ஆணையிட்டதிலிருந்து அவரது பாதுகாப்புக் குறித்து இருவரும் கவலைப்பட்டு வந்தனர்.</p>



<p>1984ஆம் ஆண்டில் பொற்கோயிலில் பதுங்கியிருந்த சீக்கிய தீவிரவாதிகளை&#8217;ஆபரேஷன் புளூஸ்டார்’ என்ற நடவடிக்கை மூலம் இந்திய ராணுவம் வெளியற்றியது. அதற்கு முன்பாகவே ராணுவத்திற்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் நடந்த சண்டையில் சிக்கி, புனிதப் பயணம் வந்த ஆயிரத்திற்கும்மேற்பட்ட ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் உயிரிழந்தனர். இந்தியாவின் உணவுக் களஞ்சியமான பஞ்சாப் மாநிலத்தைப் பிரித்து, தனிநாடு அமைத்துத் தரவேண்டும் என்ற சீக்கிய தீவிரவாதிகளின் கோரிக்கையைஏற்பதில்லை என்பதில் இந்திரா காந்தி மிகவும் உறுதியாக இருந்தார்.</p>



<p>இந்தியாவில் உள்ள 1 கோடியே 40 லட்சம் சீக்கியர்களின் பெரும்பான்மையானோர் தனிநாடு கோரும் தீவிரவாதிகளை ஆதரிக்கவில்லை என்றபோதிலும், அவர்களை ஒடுக்குவதற்காக இந்திரா காந்தி மேற்கொண்ட ஆபரேஷன் புளூஸ்டார், சீக்கியர்களால் கடுமையாகக் கண்டிக்கப்பட்டது. பொற்கோயில் தாக்குதலில் ஏராளமானோர் கொல்லப்பட்டதை எண்ணியும், பொற்கோயிலுக்குப் பெரும் பாதிப்பு ஏற்பட்டதை எண்ணியும் அவர்கள் அதிர்ச்சியடைந்திருந்தனர். பொற்கோயில் தாக்குதலுக்குப் பிறகு பெரும்பாலான இந்தியர்கள் எண்ணியதைப் போலவே இந்திரா காந்தியின் உதவியாளர்களும், இந்திரா காந்தி மீது சீக்கியர்கள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று நம்பினார்கள். இந்தப் பழிவாங்கும் நடவடிக்கையில் இந்திரா காந்தி கொல்லப்படக்கூடும் என்றும் அவர்கள் அஞ்சினார்கள்.</p>



<p>தமக்கு விரைவில் மரணம் ஏற்படும் என்று இந்திரா காந்தி அஞ்சினாரா? இதற்கு விடையளிக்க இந்திரா காந்தியால் ஏற்கெனவே எழுதப்பட்ட குறிப்பு ஒன்றை அவரது உதவியாளர் ஆர்.கே.தவான் வெளியிட்டார்.</p>



<p>“உயிரிழப்பதைப் பற்றி நான் ஒருபோதும் கவலைப்படவில்லை. இந்தப் பொறுமையும், மன அமைதியும்தான் என்னை இத்தகைய உயிலை எழுதத் தூண்டியது. சிலர் அஞ்சுவதைப் போலவும், வேறு சிலர் திட்டமிடுவதைப் போலவும் நான் வன்முறையான வழியில் கொல்லப்பட்டால், எனது நாட்டின் மீதும், மக்களின் மீதும் நான் கொண்டிருக்கும் அன்பை எந்த வெறுப்பும் மறைக்கமுடியாது. இந்தியாவை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லவேண்டும் என்ற உறுதியான நோக்கத்திலிருந்து எந்தச் சக்தியும் என்னை திசை திருப்ப முடியாது.</p>



<p>“ஒரு கவிஞன் அவனது அன்பு பற்றிப் பாடல் எழுதினான். என்னுடன் சொத்துக்களாகிய நீங்கள் இருக்கும்போது, என்னால் எப்படித் தாழ்மையாக உணரமுடியும் என்று அந்தக் கவிஞன் குறிப்பிட்டிருந்தான். அந்த வார்த்தைகள் இந்தியாவுக்கும் பொருந்தும் என்று நான் கூறுவேன். இந்தியாவின் பலம் எல்லையில்லாத பாரம்பரியம், மக்களின் கம்பீர உணர்வு, தங்களது நம்பிக்கையிலுள்ள உறுதிப்பாடு, வறுமை மற்றும் நெருக்கடியிலும் வெளிப்படும் தன்னியல்பு ஆகியவற்றை எண்ணி எந்தவொரு இந்தியனும் பெருமைப்படாமல் இருப்பானா என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை” என்று அந்தக் குறிப்பில் இந்திரா கூறியிருந்தார்.</p>



<p>இந்திரா காந்தியிடம் அன்றைய நாளின் அவரது முதல் சந்திப்பு குறித்து ஆர்.கே.தவான் நினைவூட்டினார். அன்று இந்திராவை முதலில் சந்திக்க இருந்தவர், இங்கிலாந்தைச் சேர்ந்த நடிகரான பீட்டர் உஸ்டினாவ் ஆவார். இந்திரா காந்தி குறித்து ஆவணப்படம் ஒன்றைத் தயாரிக்க உஸ்டினாவ் திட்டமிட்டிருந்தார். இதற்காக அவர் இந்திரா காந்தி மேற்கொண்ட பல பயணத்தின் போது உடன் சென்றிருந்தார். உஸ்டினாவின் “மனிதர்கள்” என்ற உத்தேச தலைப்பின்கீழ் அவர் தயாரிக்க இருந்த தொடரின் ஒரு கட்டமாகவே இந்திரா காந்தி குறித்த ஆவணப்படம் அமைந்திருந்தது.</p>



<p>இந்திராவுடன் பல நேர்காணலை நடத்தியிருந்த உஸ்டினாவ், அன்று கடைசி அத்தியாயத்தைப் படம்பிடிக்க இருந்தார். இதற்காக அவர் தமது படப்பிடிப்புக் குழுவினருடன் இந்திரா காந்தியின் சப்தர்ஜங் சாலை இல்லத்தில் நன்றாகச் செதுக்கப்பட்ட புல்வெளிக்குப் பின்புறத்தில் காத்திருந்தார். கலைத்துறையைச் சேர்ந்தவர்களிடம் இந்திரா காந்தி தனிப்பாசம் கொண்டிருந்தார். அவர் பாசம் வைத்திருந்தவர்களுள் உஸ்டினாவும் ஒருவர்.</p>



<p>அதுமட்டுமன்றி, கிறிஸ்துமஸ் தாத்தா சாதாரண உடையில் வந்தால் எப்படி இருப்பாரோ அதைப்போன்ற தோற்றம் கொண்ட உஸ்டினவ்,&nbsp; துன்பப்படும் குழந்தைகளின் நலனுக்காக உதவி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். இன்னும் கேட்டால் உஸ்டினாவ் இரண்டு அடையாளங்களுடன் இந்தியா வந்தார். ஒன்று திரைப்படத் தயாரிப்பாளர். மற்றொன்று ஐ.நா. குழந்தைகள் நிதி அமைப்பான UNICEF-க்கு நிதி திரட்டும் தூதர். கடைசியாக நடத்த இருந்த நேர்காணலின்போது ஜவஹர்லால் நேருவின் ஒரே மகளான இந்திரா காந்தி, சகோதரர்கள் இல்லாத தனிமையை எப்படிச் சமாளித்தார் என்று கேட்கத் திட்டமிட்டிருந்ததாகப் பின்னர் தெரிவித்தார்.</p>



<p>இந்திரா காந்தியுடனான உஸ்டினவ்வின் நேர்காணல் காலை 9.20 மணிக்குத் தொடங்க இருந்தது. இந்திரா காந்தியின் அக்பர் சாலை இல்ல புல்வெளி இயற்கை எழில் கொஞ்சும் வகையில் அமைந்திருந்ததால், அங்கு நேர்காணலை நடத்தலாம் என்று அவர் நினைத்திருந்தார். குளிர் நிறைந்த காலைப் பொழுதில் இந்திரா காந்தியின் தோட்டத்திலிருந்த ரோஜா செடிகள் அனைத்தும் பூத்துக் குலுங்கின. அந்தப் புல்வெளிக்குப் பின்புறத்தில்தான் பிரதமரின் இல்ல அலுவலகம் அமைந்திருந்தது. சவுத் பிளாக் பகுதியிலுள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ அலுவலகத்திற்குச் செல்வதற்கு முன்பாகத் தம்மை பார்க்க வருபவர்களை இந்த இல்ல அலுவலகத்தில்தான் இந்திரா சந்திப்பது வழக்கம். இந்தக் கட்டடமும் அதனை அடுத்திருந்த சுற்றுச்சுவரும்தான் அக்பர் சாலை பகுதியிலிருந்து இந்திராவின் வீட்டைப் பிரித்தன.</p>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large"><img loading="lazy" decoding="async" width="509" height="640" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/portrait-of-prime-minister-indira-gandhi-titit_1.jpg" alt="" class="wp-image-2934" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/portrait-of-prime-minister-indira-gandhi-titit_1.jpg 509w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/portrait-of-prime-minister-indira-gandhi-titit_1-239x300.jpg 239w" sizes="auto, (max-width: 509px) 100vw, 509px" /></figure></div>



<p>காலை 9.15 மணிக்கு இந்திரா காந்தி அவரது வீட்டிலிருந்து வெளியில் வந்தார். அப்போது தயாராக இருந்த அலங்கார வல்லுநர்கள் அவரது முகத்தில் பவுடர் பூசி அழகுபடுத்தினர். உஸ்டினவ்வின் நேர்காணலுக்காக இந்திராவை அவர்கள் தயார்படுத்திக் கொண்டிருந்த நேரத்தில், அவர் தமது மருத்துவரான கே.பி.மாத்தூருடன் உரையாடிக் கொண்டிருந்தார். மாத்தூர் பெரும்பாலான காலை நேரங்களில் இந்திரா காந்தியைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.</p>



<p>மாத்தூருடனான சந்திப்பு முடிந்ததும், தில்லி காவல்துறையைச் சேர்ந்த காவலரான நாராயண் சிங் வெயிலிலிருந்து பாதுகாப்பதற்காகக் குடைப்பிடித்துக் கொண்டிருந்த நிலையில், இந்திரா காந்தி, உஸ்டினவ் இருந்த இடத்தை நோக்கி நடந்தார். அவரை ஆர்.கே.தவான் பின்தொடர்ந்தார். அவருக்குப் பின்னால் தில்லி காவல்துறை உதவி ஆய்வாளர் ராமேஷ்வர் தயாளும், இந்திராவின் பணியாளர் நாதுராமும் வந்தனர்.</p>



<p>இந்திரா காந்தி வழக்கம் போலவே அக்பர் சாலை அலுவலகத்தை நோக்கி விரைவாக நடந்தார். சுற்றுச் சுவரை அவர் நெருங்கியபோது, அங்கு சீக்கிய காவலரான பியாந்த் சிங்கைப் பார்த்தார். பியான் சிங் இந்திராவின் பாதுகாப்புப் படையில் கடந்த 6 ஆண்டுகளாகப் பணியாற்றி வந்தார். 28 வயதான, நெட்டையான, தாடி வைத்த பியாந்த் சிங்கைப் பார்த்து புன்னகைத்தார். பொற்கோயில் தாக்குதலுக்குப் பிறகு சீக்கியர்கள் இந்திரா மீது கோபம் கொண்டிருந்ததால், பியாந்த் சிங்கால் அவருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று அஞ்சிய இந்திராவின் ஆலோசகர்கள், பியாந்த் சிங்கைப் பாதுகாப்புக் குழுவிலிருந்து வெளியேற்றும்படி விடுத்த கோரிக்கைகளை இந்திரா நிராகரித்து விட்டார். சீக்கியர்களைக் கண்டு நாம் அஞ்சுவதற்கு எந்தக் காரணமும் இல்லை&#8221; என்று அவர்களிடம் இந்திரா கூறியிருந்தார்.</p>



<p>இந்திராவை நோக்கி நகர்ந்த பியாந்த் சிங், தம்மிடமிருந்த கைத்துப்பாக்கியை எடுத்துக் குறி பார்த்தார். அதைப் பார்த்த இந்திரா, &#8220;நீ என்ன செய்கிறாய்&#8221; என்று கேட்டார். அவர் கேட்டு முடிப்பதற்குள் அவரது அடி வயிற்றை நோக்கி மூன்றுமுறை பியாந்த் சிங் சுட்டார். அப்போது இந்திராவின் முகம் இறுக்கமாக, அமைதியாக இருந்தது. குண்டு பாய்ந்த வலியில் இந்திராவின் உடல் சரியும் முன்பே அங்கு வந்த இன்னொரு காவலரான 21 வயது சத்வந்த் சிங், தம்மிடமிருந்த தானியங்கித் துப்பாக்கியால் இந்திராவை நோக்கி சரமாரியாகச் சுட்டார். துப்பாக்கிக் குண்டு பாய்ந்த வேகத்தில் இந்திராவின் உடல் பூமியிலிருந்து மேல் எழுந்து, சுழன்று தரையில் விழுந்தது. 20 வினாடி இடைவெளிக்குள் அவரது சிறிய உடலில் 32 குண்டுகள் பாய்ந்தன.</p>



<p>இந்திராவின் உடல் தரையில் விழுவதற்கு முன்பாகவே அவர் உயிரிழந்திருக்க வேண்டும். அப்போது நேரம் சரியாகக் காலை 9.17 மணி. தரையில் விழுந்த இந்திராவின் உடல் சுமார் ஒரு நிமிடம் அப்படியே கிடந்தது. அவரது பாதுகாவலர்கள் தரையில் சாய்ந்திருந்த நிலையில், அவருடன் வந்த மற்றவர்கள் உயிர் பிழைப்பதற்காக ஓடினார்கள். இந்திரா சுட்டுக் கொல்லப்படுவதற்குச் சில காலம் முன்பாகத்தான் அவரது பாதுகாவலரான ஆர்.என்.கோவ், வெளியிலிருந்து குண்டு வீசப்படுவதைத் தடுக்கும் வகையில் இந்திரா வீட்டுத் தோட்டத்தில் சிலமாற்றங்களைச் செய்யும்படி அறிவுறுத்தினார்.</p>



<p>ஆனால், இந்திரா காந்தியோ சிரித்தபடியே அந்த யோசனைகளை நிராகரித்துவிட்டார். “கொலையாளிகள் என்னைக் கொல்லவரும் நேரத்தில் எதுவும் உதவாது. யாரெல்லாம் என்னைக் காக்க வேண்டிய பொறுப்பில் இருக்கிறார்களோ அவர்கள்தான் முதலில் உயிர் பிழைப்பதற்காகத் தப்பி ஓடுவார்கள்’’ என்று அப்போது இந்திரா காந்தி கூறியிருந்தார்.</p>



<p>சத்வந்த் சிங் சுட்டதில் இந்திராவின் பாதுகாப்புக்காக வந்த உதவி ஆய்வாளர் ராமேஷ்வர் தயாளின் தொடையில் குண்டு பாய்ந்திருந்தது. ஆர்.கே.தவானும் மற்றவர்களும் அதிர்ச்சியிலிருந்து மீண்டு எழுந்து பார்த்தபோது, பியாந்த் சிங்கும் சத்வந்த் சிங்கும் கைகளை மேலே உயர்த்தியபடி சரணடைய தயாராக நின்றனர். அவர்கள் துப்பாக்கிகளைக் கீழே போட்டிருந்தனர்.&nbsp;</p>



<p>எங்களுக்குக் கொடுத்த பணியை நாங்கள் செய்து முடித்துவிட்டோம். இப்போது எங்களை நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்களோ அதைச் செய்துகொள்ளுங்கள்’’ என்று பியாந்த் சிங் ஹிந்தியில் கூறினார். அப்போதுகூட கொலையாளிகளைப் பிடிக்க எவரும் முன்வரவில்லை. இந்திரா காந்தியின் உடலைப் பார்த்த அவரது உதவியாளர்கள், தாங்கள் எதையும் செய்யாமல் மற்றவர்களுக்குச் சத்தமாக உத்தரவு போட்டுக் கொண்டிருந்தனர். இந்தச் சத்தத்தைக் கேட்டு அக்பர் சாலை அலுவலகத்திலிருந்து தினேஷ் குமார் பட் என்ற பாதுகாவலர் விரைந்து வந்தார். இந்திராவின் மருத்துவர் மாத்தூரும் ஓடிவந்தார். அவர் இந்திராவின் வாயோடு வாய் வைத்து சுவாசத்தை ஏற்படுத்தச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். இந்திராவின் உடல் அருகே முழங்காலிட்டுச் சாய்ந்திருந்த தவான்அதிர்ச்சியிலிருந்து மீளாதவராகக் காட்சியளித்தார்.</p>



<p>அந்த நேரத்தில் கவுன் அணிந்திருந்த நிலையில் செருப்புக்கூட போடாமல் சோனியா காந்தி அலறியடித்துக்கொண்டு ஓடிவந்தார். அவரது தலைமுடியில் ஷாம்பு போட்ட ஈரம்கூட காய வில்லை. “உடனடியாக ஒரு காரை எடுங்கள்&#8221; என்று சோனியா கூச்சலிட்டார். இந்திராவின் சப்தர் ஜங் சாலையில் அவசரத் தேவைக்காக 24 மணி நேரமும் தயார் நிலையில் அவசர ஊர்தி ஒன்று நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்திரா காந்தி குண்டடிப்பட்டுக் குருதி வழிந்து, எலும்பும் சதையும் தரையில் சிதறி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நிலையில், அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லவேண்டிய அவசர ஊர்தியின் ஒட்டுநரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் தேநீர் குடிக்கச் சென்றிருப்பார் என்று சிலரும், அவர் பணிக்கே வரவில்லை என்று வேறு சிலரும் கூறினார்கள். அவசர ஊர்தியை எந்த நேரமும் இயக்குவதற்கு வசதியாக அதில், எப்போதும் சாவி பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என்று விதிமுறை வகுக்கப்பட்டிருந்த போதிலும், அன்று அந்த ஊர்தியில் சாவி பொருத்தப்பட்டிருக்கவில்லை.</p>



<p>சோனியா காந்தியும், ஆர்.கே.தவானும், நாராயண் சிங், நாதுராம், தினேஷ் பட்ஆகியாரின் உதவியுடன் இந்திராவின் உடலைத் தூக்கினார்கள். அருகில் நிறுத்தப்பட்டிருந்த அம்பாசிடர் காருக்கு அவரது உடலைத் தூக்கி வந்தனர். காரின் பின்புறத்தில் இந்திராவை வைத்த சோனியா, அவரது தலையைத் தமது மடியில் வைத்துக்கொண்டார். தவான், பட், மாத்தூர் ஆகியோருடன் இந்திராவின் உதவியாளரான எம்.எல்.பொத்தேதாரும் காரில் ஏறிக்கொண்டார்.</p>



<p>அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனைக்குக் (AIIMS) காரை இயக்கும்படி ஆர்.கே.தவான் ஓட்டுநருக்கு ஆணையிட்டார். இந்திராவின் வீட்டிற்கு அருகிலேயே ராம் மனோகர் லோகியா மருத்துவமனைபோன்ற மருத்துவ நிலையங்கள் இருந்தன. அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனைக்குச் செல்ல, நெரிசல் இல்லாத நேரத்தில் 20 நிமிடங்கள் ஆகும். எனினும், அங்குதான் இந்திரா காந்தியின் &#8220;ஓ&#8217; நெகட்டிவ்’ குருதியும், அவரதுமருத்துவ ஆவணங்களும் இருந்தன என்பதால், அங்குச் செல்லும்படி தவான் ஆணையிட்டிருந்தார்.</p>



<p>அதன்படி அம்பாசிடர் கார், அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனையை நோக்கி விரைந்தது. அன்று வழக்கத்தைவிட அதிகமாக நெரிசல் காணப்பட்டது. பிரதமரின் வீட்டிலிருந்து 4 கி.மீ. தொலைவிலுள்ள அந்த மருத்துவமனைக்கு இந்திரா கொண்டு செல்லப்பட்டபோது 10 மணி ஆகியிருந்தது. காரில் செல்லும்போதே இந்திராவுக்குச் செயற்கை சுவாசம் அளிக்க மாத்தூர் முயன்றார். ஆனால், இந்திரா உயிருடன் இருப்பதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படாததை அவர் உணர்ந்துகொண்டார்.</p>



<p>இந்திரா குண்டடிப்பட்ட நிலையில் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படுவதை மருத்துவமனை அதிகாரிகளுக்கு எவரும் தெரிவிக்கவில்லை. இந்திராவின் இல்லத்தில் பியாந்த் சிங்கும் சத்வந்த் சிங்கும் தங்களிடமிருந்த துப்பாக்கிகளைக் கீழே போட்ட நிலையில், தொடர்ந்து நின்று கொண்டிருந்தனர். அங்கு வந்த பாதுகாப்பு அதிகாரிகள் அப்பகுதியை அலசி ஆராய்ந்தனர். அப்போதுதான் யாரோ சிலர் அவர்கள் இருவரையும் கைது செய்யும்படி யோசனை தெரிவித்தனர். உடனடியாக அவர்களை இந்தோ- திபெத் எல்லை காவல் படைக் காவலர்கள் கைது செய்து அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அடுத்த 20 நிமிடத்தில் அங்கு துப்பாக்கிச் சுடும் ஓசை கேட்டது. பியாந்த் சிங், சத்வந்த் சிங் ஆகிய இருவரையும் அவர்களின் காவலுக்காக நிறுத்தப்பட்டிருந்த காவலர்கள் சரமாரியாகச் சுட்டனர். இதில், பியாந்த் சிங் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். சத்வந்த் சிங்கிற்கு முதுகுத் தண்டிலும், சிறுநீரகத்திலும் கடுமையான காயங்கள் ஏற்பட்டன. அந்த இருவரும் அங்கு காவலுக்கு நிறுத்தப்பட்டிருந்த காவலர்களின் துப்பாக்கியைப் பறித்துக்கொண்டு தப்பிஓட முயன்றதாகவும், அதனால்தான் அவர்களைச் சுட நேரிட்டதாகவும் அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால், நடந்த நிகழ்வுகளை நேரில் பார்த்த 3 பாதுகாப்பு அதிகாரிகள் பின்னர் இதுபற்றி விளக்கும்போது, பியாந்த் சிங்கையும் சத்வந்த் சிங்கையும் இந்தோ &#8211; திபெத் எல்லை காவல் படையினர் கடுமையாகத் திட்டியதாகவும், அதன்பின் அவர்களைச் சுட்டதாகவும் தெரிவித்தனர்.</p>



<p>இதற்கிடையே, இங்கிலாந்து நடிகர் பீட்டர் உஸ்டினவ்வும், அவரது படப்பிடிப்புக் குழுவினரும் இந்திரா கொல்லப்பட்ட இடத்திலிருந்து 70 மீட்டர் தொலைவில் தொடர்ந்து காக்க வைக்கப்பட்டிருந்தனர். இதுபற்றிப் பின்னர் விளக்கம் அளித்த உஸ்டினவ், &#8220;நாங்கள் மைக் மற்றும் கேமராவுடன் தயார் நிலையில் இருந்தோம். இந்திராவை அழைத்து வருவதற்காக ஒரு செயலாளர் சென்றார். அதன்பிறகுதான் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. மூன்றுமுறை துப்பாக்கியால் சுடப்படும் சத்தத்தை நான் கேட்டேன். இதனால் நாங்கள் எச்சரிக்கை அடைந்தோம். ஆனால், பிரதமர் அலுவலகத்தில் இருந்தவர்களோ, அது பட்டாசு வெடிக்கும் சத்தமாக இருக்கும் என்று எங்களிடம் கூறினர். பின்னர் தானியங்கித் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது. இந்திரா கொல்லப்படுவதை உறுதிசெய்யவேண்டும் என்பதற்காகக் கொலையாளிகள் அப்படிச் சுட்டிருக்கலாம். அதன்பிறகு இந்திரா உயிர் பிழைக்க வாய்ப்பு இருப்பதாக நான் கருதவில்லை. அங்கு பாதுகாவலர்கள் ஓடுவதை நாங்கள் பார்த்தோம்&#8221; என்று தெரிவித்தார்.</p>



<p>அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் அவசர நுழைவு வாயிலுக்கு இந்திராவை அழைத்து வந்த கார் வந்தபோது, அதை உள்ளே அனுமதிக்க அங்கு எவரும் இல்லை. அவசர சிகிச்சை பிரிவுக்குச் செல்லும் பாதையின் நுழைவு வாயிலைக் காவலர்கள் வந்து திறப்பதற்கு 3 நிமிடங்கள் ஆயின. உயிருக்கு ஆபத்தான நிலையில் ஒரு முக்கிய பிரமுகர் அழைத்து வரப்படுகிறார் என்பதை அங்கிருந்த காவலர்களுக்கு எவரும் சொல்லாததுதான் இதற்குக் காரணமாகும்.</p>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large"><img loading="lazy" decoding="async" width="448" height="640" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/Rajiv-8_1.jpg" alt="" class="wp-image-2843" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/Rajiv-8_1.jpg 448w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/Rajiv-8_1-210x300.jpg 210w" sizes="auto, (max-width: 448px) 100vw, 448px" /></figure></div>



<p>அவசர சிகிச்சை பிரிவு வந்ததும் ஆர்.கே.தவானும் பொத்தேதாரும் காரிலிருந்துகுதித்து ஓடி, இந்திரா காந்தி படுகாயம் அடைந்த நிலையில் காரில் கொண்டு வரப்பட்டிருக்கிறார் என்று அங்கிருந்த மருத்துவர்களிடம் கூறினார்கள். ஆனால், இந்திராவின் உடலைக் கொண்டு வருவதற்கு அங்கு ஸ்ட்ரெச்சர்கள் எதுவும் இல்லை. மருத்துவமனையில் இருந்த பலகை ஒன்றைச் சிலர் தூக்கி வந்தனர். அப்பலகைமீது இந்திராவின் உடல் வைக்கப்பட்டிருந்தபோது, அவசர சிகிச்சை பிரிவுக்குப் பொறுப்பேற்றிருந்த இளம் மருத்துவர் ஒருவர் உணர்ச்சிவயப்பட்டு கத்தினார். ‘மேடம்&#8230; மேடம்’ என்று கதறிய அவர், உருக்குலைந்து குருதி வழிந்து கொண்டிருந்த இந்திராவின் உடல்மீது மயங்கி விழும் நிலையில் இருந்தார்.</p>



<p>அந்த அறையிலிருந்த இன்னொரு மருத்துவரோ, &#8220;இது இந்திரா காந்தியாக இருக்கமுடியாது. அவர் சலவை துணியில் சுற்றப்பட்ட குழந்தையைப்போல காட்சியளித்தார். இந்தியாவின் பிரதமரா இப்படி இருக்கிறார்&#8221; என்று தமக்குத் தாமே கூறிக்கொண்டார். அந்த மருத்துவர் வேகமாக ஓடிச்சென்று அங்கிருந்த தொலைபேசிமூலம் மருத்துவமனையின் மூத்த இதயநோய் வல்லுநர்களை அழைத்தார். அடுத்த 5 நிமிடங்களில் மூத்த மருத்துவ பேராசிரியர் ஜே.எஸ்.குலேரியா, மூத்த இதய அறுவை மருத்தவர் எஸ்.பலராம், எம்.எம்.கபூர் உள்ளிட்ட 12க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் இந்திராவின் இதயத்திற்கு மசாஜ் செய்ய முயன்றனர். அதற்குள் இந்திராவுக்குச் செய்யப்பட்ட எலெக்ட்ரோ கார்டியோ கிராம் (ஈ.சி.ஜி.) ஆய்வில் இந்திராவின் இதயத் துடிப்பு மிகமிகக் குறைவாக இருப்பது தெரிய வந்தது.</p>



<p>அந்த நேரத்தில் இந்திராவின் கண் இமைகள் விரிந்துவிட்டன. எனவே, அவரது மூளை ஏற்கெனவே செயலிழந்திருக்கலாம் என்று நாங்கள் தெரிந்து கொண்டோம். அந்த நேரத்தில் நாங்கள் மருத்துவ சிகிக்சைமூலம் அவரை உயிர் பிழைக்க வைத்திருந்தால்கூட, அவரது மூளை நிரந்தர பாதிப்புக்குள்ளாகி இருந்திருக்கும்’என்று ஒரு மருத்துவர் பின்னர் தெரிவித்தார்.</p>



<p>இந்திராவுக்கு நாடித்துடிப்பு சுத்தமாக இல்லை. இந்திரா காந்தியின் மூளையைத் துடிப்புடன் வைத்திருப்பதற்காக அவரது நுரையீரலுக்கு ஆக்சிஜனைச் செலுத்தும் நோக்குடன் ஒரு மருத்துவ உதவியாளர் வாய் வழியாக ரப்பர் குழாயைச் சொருகினார். இந்திராவிற்குக் குருதி செலுத்துவதற்காக இரண்டு குழாய்கள் பொருத்தப்பட்டன. அந்த நேரத்தில் இந்திராவை எட்டாவது மாடியிலுள்ள அறுவை சிகிச்சை அரங்கிற்குக் கொண்டு செல்ல முடிவெடுக்கப்பட்டது. அங்குள்ள இரண்டாவது எண் கொண்ட அரங்கில் மருத்துவர்கள் அரும்பாடுபட்டு அவரது உடலில் இருந்த குண்டுகளை அகற்றப் போராடினர். வழக்கமாக ஒருவரின் உடலில் இருக்கும் ரத்தத்தின் அளவைவிட நான்கு அல்லது ஐந்து மடங்கு அதிகளவுள்ள ரத்தம் இந்திராவிற்குச் செலுத்தப்பட்டிருந்தது.</p>



<p>இந்திராவின் உடலை இதயம் மற்றும் நுரையீரலின் பணியைச் செய்யும் எந்திரத்துடன் மருத்துவர்கள் இணைத்தனர். அந்த எந்திரம் ரத்தத்தைத் தூய்மைப்படுத்தி அனுப்பும் பணியைச் செய்தது. அந்த நேரத்தில் இந்திரா உடலின் வளர்சிதை (Metabolism) மாற்ற அளவு குறைவதையும், அதன்மூலம் அவரது ரத்த அழுத்தம் குறைவதையும் உறுதிசெய்ய விரும்பினர். இதயம், நுரையீரலின் பணியை செய்யும் எந்திரத்தின் உதவியுடன் இந்தப் பணி மேற்கொள்ளப்பட்டது. இதனால், இந்திரா உடலிலிருந்த ரத்தத்தின் வெப்பநிலை வழக்கமான 37 டிகிரி செல்சியசிலிருந்து 31 டிகிரி செல்சியசாகக் குறைக்கப்பட்டது.&nbsp;</p>



<p>இந்தியாவில் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சியின் அடையாளமாகத் திகழ்ந்த அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனையின் இரண்டாம் எண் கொண்ட அறுவை சிகிச்சை அரங்கில் அம்மருத்துவமனையின் தலைசிறந்த மருத்துவர்களும், அறுவை சிகிச்சை வல்லுநர்களும் இருந்தனர். பியாந்த் சிங்கும் சத்வந்த் சிங்கும் சுட்ட குண்டுகள் இந்திராவின் உடலில் பாய்ந்து அவரது கல்லீரலின் வலதுபுற அடிப்பகுதியில் சிதைத்துவிட்டதைக் கண்டுபிடித்தனர். அவரது பெருங்குடலில் குறைந்தது 12 துளைகள் ஏற்பட்டிருந்தன. சிறு குடலுக்கும் பெரும் சேதம் ஏற்பட்டிருந்தது. இந்திராவின் இதயம் காயமின்றி உறுதியாக இருந்தபோதிலும், அவரது ஒருபக்க நுரையீரலில் குண்டு பாய்ந்திருந்தது. ரத்த நாளங்கள், தமணி, நரம்பு ஆகியவை வெடித்துவிட்டன. எலும்புகளும், முதுகெலும்புகளும் சிதறிவிட்டன. முதுகுத்தண்டு துண்டாகிவிட்டது.</p>



<p>இத்தகைய சூழலில் இந்திரா காந்திக்கு உயிர் கொடுக்க மருத்துவர்களால் எதையும் செய்ய முடியவில்லை. &#8221; மருத்துவமனைக்குக் கொண்டு வரப்படுவதற்கு முன்பாகவே இந்திரா காந்தி உயிரிழந்துவிட்டார். உண்மையில் இந்திரா காந்தி சுடப்பட்ட சப்தஜங் சாலையிலுள்ள தமது இல்லத்தின் தோட்டத்தில் தரையில் விழுந்தபோது அவரது உயிர் பிரிந்திருக்கக்கூடும்&#8221; என்று ஒரு மருத்துவர் பின்னர் தெரிவித்தார்.</p>



<p>பியாந்த் சிங், சத்வந்த் சிங் ஆகியோரால் சுடப்பட்டு 5 மணி நேரத்திற்குப் பிறகு பிற்பகல் 2 மணிக்கு இந்திரா காந்தி உயிரிழந்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்தியாவின் நவீனகால வரலாற்றில் பரந்து விரிந்திருந்த ஒரு மிகப்பெரிய சகாப்தம், 1984 ஆம் ஆண்டின் அக்டோபர் கடைசி நாளில் முடிவுக்கு வந்தது.</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/the-assassination-of-indira-gandhi-2/">பயங்கரவாதத்தால் வீழ்த்தப்பட்ட வீராங்கனை!! அக்டோபர் 31: அன்னை இந்திரா நினைவு நாள் &#8211; ராகுல் அஞ்சலி</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://desiyamurasu.com/news-india/the-assassination-of-indira-gandhi-2/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>அன்னை இந்திராவின் காலச்சுவடுகள்! &#8211; அரிய புகைப்படங்களின் தொகுப்பு</title>
		<link>https://desiyamurasu.com/news-india/rare-photos-of-indira-gandhi-2/</link>
					<comments>https://desiyamurasu.com/news-india/rare-photos-of-indira-gandhi-2/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[ஆ. கோபண்ணா]]></dc:creator>
		<pubDate>Sun, 31 Oct 2021 18:10:29 +0000</pubDate>
				<category><![CDATA[தேசிய அரசியல்]]></category>
		<category><![CDATA[indira gandhi]]></category>
		<guid isPermaLink="false">https://desiyamurasu.com/?p=4513</guid>

					<description><![CDATA[<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/rare-photos-of-indira-gandhi-2/">அன்னை இந்திராவின் காலச்சுவடுகள்! &#8211; அரிய புகைப்படங்களின் தொகுப்பு</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img loading="lazy" decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/INDIRA-3.jpg" alt="" class="wp-image-2877" width="552" height="735" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/INDIRA-3.jpg 525w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/INDIRA-3-225x300.jpg 225w" sizes="auto, (max-width: 552px) 100vw, 552px" /><figcaption><strong>Born on November 19, 1917, Indira Gandhi is till date the only woman Prime Minister of India. She was elected as the PM of India in January 1966 and served till March 1977.</strong></figcaption></figure></div>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img loading="lazy" decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/10/nationalherald_2016-11_723fafe5-bb4d-49ae-836d-5144bacb8cc5_Young-Indira-Nehru-Gandhi-Anand-Bhawan-Allahabad-Congress.jpg" alt="" class="wp-image-4515" width="554" height="784" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/10/nationalherald_2016-11_723fafe5-bb4d-49ae-836d-5144bacb8cc5_Young-Indira-Nehru-Gandhi-Anand-Bhawan-Allahabad-Congress.jpg 700w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/10/nationalherald_2016-11_723fafe5-bb4d-49ae-836d-5144bacb8cc5_Young-Indira-Nehru-Gandhi-Anand-Bhawan-Allahabad-Congress-212x300.jpg 212w" sizes="auto, (max-width: 554px) 100vw, 554px" /><figcaption><strong>Indira Nehru, a very young Congress activist, at Anand Bhawan, Allahabad, in the early 1920s</strong></figcaption></figure></div>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img loading="lazy" decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/indira_young.jpg" alt="" class="wp-image-2914" width="549" height="677" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/indira_young.jpg 520w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/indira_young-244x300.jpg 244w" sizes="auto, (max-width: 549px) 100vw, 549px" /><figcaption>It was during her interview at Shantiniketan that Rabindra Nath Tagore named her Priyadarshini. Since then she has been known as Indira Priyadarshini Nehru or Indira Priyadarshini Gandhi.</figcaption></figure></div>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img loading="lazy" decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/Indira-Gandhi-riding-on-Yak-on-way-to-Bhutan..jpg" alt="" class="wp-image-2952" width="562" height="554" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/Indira-Gandhi-riding-on-Yak-on-way-to-Bhutan..jpg 602w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/Indira-Gandhi-riding-on-Yak-on-way-to-Bhutan.-300x296.jpg 300w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/Indira-Gandhi-riding-on-Yak-on-way-to-Bhutan.-75x75.jpg 75w" sizes="auto, (max-width: 562px) 100vw, 562px" /><figcaption><strong>Indira Gandhi riding on Yak on way to Bhutan.</strong></figcaption></figure></div>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img loading="lazy" decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/indira5_1.jpg" alt="" class="wp-image-2881" width="562" height="799" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/indira5_1.jpg 450w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/indira5_1-211x300.jpg 211w" sizes="auto, (max-width: 562px) 100vw, 562px" /></figure></div>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img loading="lazy" decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/i1.jpg" alt="" class="wp-image-2882" width="574" height="524" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/i1.jpg 540w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/i1-300x274.jpg 300w" sizes="auto, (max-width: 574px) 100vw, 574px" /><figcaption><strong>Mrs. Indira Gandhi photographed at Palam Aerodrome on Oct. 3, 1949 before her departure for London, from where she is expected to join the Hon&#8217;ble Pandit Jawaharlal Nehru Prime Minister in U.S.A. during his forth coming tour to that country.</strong></figcaption></figure></div>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img loading="lazy" decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/dsgsdgs.jpg" alt="" class="wp-image-2954" width="577" height="499" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/dsgsdgs.jpg 634w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/dsgsdgs-300x259.jpg 300w" sizes="auto, (max-width: 577px) 100vw, 577px" /></figure></div>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img loading="lazy" decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/ba5dfcfcebf3c8fa5ffec03a4ae81fcd.jpg" alt="" class="wp-image-2884" width="578" height="625" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/ba5dfcfcebf3c8fa5ffec03a4ae81fcd.jpg 564w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/ba5dfcfcebf3c8fa5ffec03a4ae81fcd-277x300.jpg 277w" sizes="auto, (max-width: 578px) 100vw, 578px" /></figure></div>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img loading="lazy" decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/Indira-Gandhi-Nehru_1.jpg" alt="" class="wp-image-2899" width="576" height="859" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/Indira-Gandhi-Nehru_1.jpg 429w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/Indira-Gandhi-Nehru_1-201x300.jpg 201w" sizes="auto, (max-width: 576px) 100vw, 576px" /><figcaption><strong>A picture of Indira Gandhi taken during her visit to an Indian store in Zurich, Switzerland.</strong></figcaption></figure></div>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img loading="lazy" decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/image-7.jpg" alt="" class="wp-image-2921" width="575" height="473" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/image-7.jpg 700w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/image-7-300x247.jpg 300w" sizes="auto, (max-width: 575px) 100vw, 575px" /></figure></div>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img loading="lazy" decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/indira.jpg" alt="" class="wp-image-2908" width="574" height="729" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/indira.jpg 403w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/indira-236x300.jpg 236w" sizes="auto, (max-width: 574px) 100vw, 574px" /><figcaption><strong>Indira Gandhi with her sons, Rajiv and Sanjay.</strong></figcaption></figure></div>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img loading="lazy" decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/indira4.jpg" alt="" class="wp-image-2892" width="577" height="720" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/indira4.jpg 651w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/indira4-240x300.jpg 240w" sizes="auto, (max-width: 577px) 100vw, 577px" /></figure></div>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img loading="lazy" decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/image-4.jpg" alt="" class="wp-image-2897" width="575" height="692" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/image-4.jpg 532w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/image-4-249x300.jpg 249w" sizes="auto, (max-width: 575px) 100vw, 575px" /></figure></div>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img loading="lazy" decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/indira2.jpg" alt="" class="wp-image-2895" width="574" height="424" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/indira2.jpg 993w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/indira2-300x222.jpg 300w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/indira2-768x568.jpg 768w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/indira2-750x555.jpg 750w" sizes="auto, (max-width: 574px) 100vw, 574px" /></figure></div>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img loading="lazy" decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/IMG_20190128_113430-871x1024.jpg" alt="" class="wp-image-2896" width="576" height="675"/></figure></div>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img loading="lazy" decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/Kamaraj-1024x639.jpg" alt="" class="wp-image-2893" width="575" height="358" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/Kamaraj-1024x639.jpg 1024w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/Kamaraj-300x187.jpg 300w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/Kamaraj-768x479.jpg 768w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/Kamaraj-750x468.jpg 750w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/Kamaraj-1140x712.jpg 1140w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/Kamaraj.jpg 1200w" sizes="auto, (max-width: 575px) 100vw, 575px" /><figcaption><strong>Indira Gandhi and K. Kamaraj greeting each other at the Congress Parliamentary Party meeting in New Delhi.</strong></figcaption></figure></div>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img loading="lazy" decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/Mother-Teresa-with-Indira-Gandhi.jpg" alt="" class="wp-image-2894" width="575" height="378" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/Mother-Teresa-with-Indira-Gandhi.jpg 875w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/Mother-Teresa-with-Indira-Gandhi-300x197.jpg 300w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/Mother-Teresa-with-Indira-Gandhi-768x505.jpg 768w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/Mother-Teresa-with-Indira-Gandhi-750x493.jpg 750w" sizes="auto, (max-width: 575px) 100vw, 575px" /><figcaption><strong>India&#8217;s Prime Minister Indira Gandhi with Roman Catholic nun Mother Teresa in New Delhi.</strong></figcaption></figure></div>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img loading="lazy" decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/DsVHH_JX4AAfWnP_1542621000__rend_4_3.jpg" alt="" class="wp-image-2923" width="577" height="433" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/DsVHH_JX4AAfWnP_1542621000__rend_4_3.jpg 600w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/DsVHH_JX4AAfWnP_1542621000__rend_4_3-300x225.jpg 300w" sizes="auto, (max-width: 577px) 100vw, 577px" /></figure></div>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img loading="lazy" decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/image9.jpg" alt="" class="wp-image-2906" width="577" height="1146" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/image9.jpg 420w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/image9-151x300.jpg 151w" sizes="auto, (max-width: 577px) 100vw, 577px" /></figure></div>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img loading="lazy" decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/Indira-Gandhi-Dr.-Albert-Einstein-Jawaharlal-Nehru-and-Vijaya-Lakshmi-Pandit_1.jpg" alt="" class="wp-image-2909" width="576" height="449" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/Indira-Gandhi-Dr.-Albert-Einstein-Jawaharlal-Nehru-and-Vijaya-Lakshmi-Pandit_1.jpg 621w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/Indira-Gandhi-Dr.-Albert-Einstein-Jawaharlal-Nehru-and-Vijaya-Lakshmi-Pandit_1-300x234.jpg 300w" sizes="auto, (max-width: 576px) 100vw, 576px" /><figcaption><strong>Indira Gandhi, Dr. Albert Einstein, Jawaharlal Nehru and Vijaya Lakshmi Pandit. </strong></figcaption></figure></div>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img loading="lazy" decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/image8_1.jpg" alt="" class="wp-image-2901" width="580" height="478" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/image8_1.jpg 576w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/image8_1-300x247.jpg 300w" sizes="auto, (max-width: 580px) 100vw, 580px" /></figure></div>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img loading="lazy" decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/19-Indira-over-looks-the-Tungabhadra-Dam_1-1.jpg" alt="" class="wp-image-2903" width="580" height="460" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/19-Indira-over-looks-the-Tungabhadra-Dam_1-1.jpg 960w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/19-Indira-over-looks-the-Tungabhadra-Dam_1-1-300x238.jpg 300w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/19-Indira-over-looks-the-Tungabhadra-Dam_1-1-768x610.jpg 768w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/19-Indira-over-looks-the-Tungabhadra-Dam_1-1-750x595.jpg 750w" sizes="auto, (max-width: 580px) 100vw, 580px" /><figcaption><strong>Indira Gandhi over looks the Tungabhadra Dam</strong></figcaption></figure></div>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img loading="lazy" decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/DsVZRmuWoAIpqJU_@DKShivakumar_1542621107__rend_16_9-1.jpg" alt="" class="wp-image-2905" width="573" height="321" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/DsVZRmuWoAIpqJU_@DKShivakumar_1542621107__rend_16_9-1.jpg 600w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/DsVZRmuWoAIpqJU_@DKShivakumar_1542621107__rend_16_9-1-300x169.jpg 300w" sizes="auto, (max-width: 573px) 100vw, 573px" /><figcaption><strong>Indira Gandhi went to war with Pakistan to liberate East Pakistan. India won the war and Bangladesh was created.</strong></figcaption></figure></div>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img loading="lazy" decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/EILYOt-X0AA5jN9.jpg" alt="" class="wp-image-2904" width="582" height="709" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/EILYOt-X0AA5jN9.jpg 623w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/EILYOt-X0AA5jN9-246x300.jpg 246w" sizes="auto, (max-width: 582px) 100vw, 582px" /></figure></div>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img loading="lazy" decoding="async" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/Indira-Gandhi-smiles.jpg" alt="" class="wp-image-2898" width="581" height="823" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/Indira-Gandhi-smiles.jpg 452w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/Indira-Gandhi-smiles-212x300.jpg 212w" sizes="auto, (max-width: 581px) 100vw, 581px" /><figcaption><strong>Indira Gandhi is all smiles post her re-election as Prime Minister of India in 1971.</strong></figcaption></figure></div>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/rare-photos-of-indira-gandhi-2/">அன்னை இந்திராவின் காலச்சுவடுகள்! &#8211; அரிய புகைப்படங்களின் தொகுப்பு</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://desiyamurasu.com/news-india/rare-photos-of-indira-gandhi-2/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>ஊடகங்களை கபளீகரம் செய்யும் மோடியின் வலையில் மாலினி:  ஆ. கோபண்ணா கண்டனம்</title>
		<link>https://desiyamurasu.com/news-india/agopanna-condems-thehindu-editor-malini-parthasarathy/</link>
					<comments>https://desiyamurasu.com/news-india/agopanna-condems-thehindu-editor-malini-parthasarathy/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[ஆ. கோபண்ணா]]></dc:creator>
		<pubDate>Tue, 27 Jul 2021 09:41:04 +0000</pubDate>
				<category><![CDATA[தேசிய அரசியல்]]></category>
		<guid isPermaLink="false">https://desiyamurasu.com/?p=4465</guid>

					<description><![CDATA[<p>முக்கிய அம்சங்கள்: இந்து நாளேட்டுக்கு இருக்கிற வரலாற்றுப் பின்னணியும் செய்திகள் மீது வாசகர்களுக்கு இருக்கிற நம்பகத்தன்மையைப் போல எந்த நாளேட்டுக்கும் இருந்ததில்லை. அத்தகைய நம்பகத்தன்மைமிக்க &#8216;இந்து&#8217; நாளேட்டிற்கு சோதனை ஏற்பட்டுள்ளது. சமீபத்தில், பிரதமர் மோடியை தி இந்து குழுமத் தலைவர் மாலினி பார்த்தசாரதி&#160; சந்தித்தது குறித்து கருத்து கூறிய இந்து குழும இயக்குநர் என். ராம், &#8221; தி இந்து ஏடு கடுமையாகப் போராடிப் பெற்ற மரபு பறிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டிருக்கிறார். பிரதமர் மோடியை மாலினி பார்த்தசாரதி சந்தித்ததில் [&#8230;]</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/agopanna-condems-thehindu-editor-malini-parthasarathy/">ஊடகங்களை கபளீகரம் செய்யும் மோடியின் வலையில் மாலினி:  ஆ. கோபண்ணா கண்டனம்</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p><strong><u>முக்கிய அம்சங்கள்:</u></strong></p>



<ul class="wp-block-list" type="1"><li>இந்து நாளேட்டுக்கு இருக்கிற வரலாற்றுப் பின்னணியும் செய்திகள் மீது வாசகர்களுக்கு இருக்கிற நம்பகத்தன்மையைப் போல எந்த நாளேட்டுக்கும் இருந்ததில்லை. அத்தகைய நம்பகத்தன்மைமிக்க &#8216;இந்து&#8217; நாளேட்டிற்கு சோதனை ஏற்பட்டுள்ளது.</li></ul>



<ul class="wp-block-list"><li>சமீபத்தில், பிரதமர் மோடியை தி இந்து குழுமத் தலைவர் மாலினி பார்த்தசாரதி&nbsp; சந்தித்தது குறித்து கருத்து கூறிய இந்து குழும இயக்குநர் என். ராம், &#8221; தி இந்து ஏடு கடுமையாகப் போராடிப் பெற்ற மரபு பறிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டிருக்கிறார்.</li></ul>



<ul class="wp-block-list"><li>பிரதமர் மோடியை மாலினி பார்த்தசாரதி சந்தித்ததில் எந்த தவறும் இல்லை. அந்த சந்திப்பின் மூலம் 142 ஆண்டு காலமாகக் கட்டிக்காக்கப்பட்டு இந்தியாவின் கருத்தியலுக்காகவும், ஊழல், சமூக அநீதிகளுக்கு எதிராகவும் குரல் கொடுத்து வருகிற இந்து குழுமத்தின் அடிப்படை கொள்கைகளை அடகு வைத்துவிடக் கூடாது.</li></ul>



<ul class="wp-block-list"><li>மோடி ஆட்சியில் ஏறத்தாழ 55 பத்திரிக்கையாளர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, அவர்கள் மீது கடுமையான தாக்குதல், அச்சுறுத்தல்கள், அடக்குமுறைகள் ஏவப்பட்டுள்ளன.&nbsp; கொரோனா தொற்றினால் பாதிப்பு, இறப்பு, தடுப்பூசி தட்டுப்பாடு குறித்த செய்தி வெளியிட்டதற்காக வழக்குத் தொடுக்கப்பட்டு இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</li></ul>



<ul class="wp-block-list"><li>இந்து நாளேட்டின் கொள்கை வழிப் பாதையை நிர்ணயிப்பதில் திரு. என்.ராம் அவர்களின் பங்களிப்பு மகத்தானது, ஈடு இணையற்றது. உலகத்தின் எந்த சக்தியாலும் &#8216;தி இந்து&#8217; நாளேட்டையும் திரு. என்.ராம் அவர்களையும் பிரிக்க முடியாது</li></ul>



<figure class="wp-block-image size-large"><img loading="lazy" decoding="async" width="609" height="433" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/07/Malini-Parthasarthy-meeting-Modi.jpg" alt="" class="wp-image-4469" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/07/Malini-Parthasarthy-meeting-Modi.jpg 609w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/07/Malini-Parthasarthy-meeting-Modi-300x213.jpg 300w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/07/Malini-Parthasarthy-meeting-Modi-120x86.jpg 120w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/07/Malini-Parthasarthy-meeting-Modi-350x250.jpg 350w" sizes="auto, (max-width: 609px) 100vw, 609px" /></figure>



<figure class="wp-block-image size-large"><img loading="lazy" decoding="async" width="599" height="311" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/07/NRam.jpg" alt="" class="wp-image-4467" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/07/NRam.jpg 599w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/07/NRam-300x156.jpg 300w" sizes="auto, (max-width: 599px) 100vw, 599px" /></figure>



<figure class="wp-block-image size-large"><img loading="lazy" decoding="async" width="599" height="378" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/07/Mailini-NRam.jpg" alt="" class="wp-image-4468" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/07/Mailini-NRam.jpg 599w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/07/Mailini-NRam-300x189.jpg 300w" sizes="auto, (max-width: 599px) 100vw, 599px" /></figure>



<p>பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து விடுதலைப் போராட்டத்தின் குரலாக ஒலிக்க 1889 இல் இந்து ஆங்கில நாளேடு தொடங்கப்பட்டது. இன்று 11 மாநிலங்களில் 21 நகரங்களில் வெளியிடப்பட்டு 15 லட்சத்துக்கும் மேற்பட்ட வாசகர்களைப் பெற்று பீடு நடை போட்டு வருகிறது. இந்தியாவில் எத்தனையோ நாளேடுகள் வெளிவருகின்றன. இந்து நாளேட்டுக்கு இருக்கிற வரலாற்றுப் பின்னணியும் செய்திகள் மீது வாசகர்களுக்கு இருக்கிற நம்பகத்தன்மையைப் போல எந்த நாளேட்டுக்கும் இருந்ததில்லை.&nbsp; எந்த நாளேட்டில் எந்த செய்தி வந்தாலும், இந்து நாளேட்டில் வருவதைத்தான் வாசகர்கள் உறுதியாக நம்புவார்கள். அத்தகைய நம்பகத்தன்மைமிக்க இந்து நாளேட்டிற்கு சோதனை ஏற்பட்டுள்ளது.</p>



<p>சமீபத்தில், பிரதமர் மோடியை தி இந்து குழுமத் தலைவர் மாலினி பார்த்தசாரதி&nbsp; சந்தித்து,&nbsp; அதன் புகைப்படத்தை டிவிட்டரில் வெளியிட்டு கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். அதில், தங்களது உரையாடல் ஆக்கப்பூர்வமானதாக இருந்ததாகவும், தற்போதைய மக்கள் பிரச்சினைகளைப் பகிர்ந்து கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.</p>



<p>இது குறித்து கருத்து கூறிய இந்து குழும இயக்குநர் என். ராம், &#8220;தி இந்து ஏடு கடுமையாகப் போராடிப் பெற்ற மரபு பறிக்கப்படுவதாகக்&#8221; குறிப்பிட்டிருக்கிறார். இதையொட்டி, டிவிட்டர் பயனர் ஒருவரது கேள்விக்குப் பதில் அளித்த என்.ராம், &#8220;இந்த விவகாரத்துக்கும் எனக்கும் சம்பந்தமில்லை. நரேந்திர மோடியுடன் கலந்துரையாடுவதன் மூலம் தி இந்து குழுமத்தின் மரபு மற்றும் நற்பெயரை மாலினி பார்த்தசாரதி பறிக்கிறார் என்ற கருத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன். கடந்த 142 ஆண்டுகளில் தி இந்து ஆங்கில ஏட்டின் கடின உழைப்பில் கிடைத்த நற்பெயர் மற்றும் மரபு பறிபோவதைத் தடுக்க எங்களால் முடிந்த அனைத்தையும் நாங்கள் செய்வோம் என்று உங்களுக்கு நான் உறுதியளிக்கிறேன்&#8221; என்று குறிப்பிட்டுள்ளார்.</p>



<p>ஆனால், இதற்குப் பதில் கூறிய மாலினி பார்த்தசாரதி, &#8220;என்.ராம் நினைப்பதைப் போல் 142 ஆண்டு கால தி இந்து நாளேட்டின் பெருமை அழிந்துவிடாது. உண்மையை எழுதியதால் தான் 142 ஆண்டுகள் கடினமாக உழைத்துப் பெற்ற நற்பெயர் கட்டமைக்கப்பட்டுள்ளது. பாரபட்சமான அல்லது அரசியல்&nbsp; சார்பு நிலையால் கட்டமைக்கப்படவில்லை&#8221; என்றும் குறிப்பிட்டுள்ளார். அதோடு அவர் நிறுத்தியிருந்தால் பரவாயில்லை. ஆனால், எந்த இந்து நாளேட்டை உலக அரங்கில் உயர்த்தி நற்பெயரைப் பெற்றுத் தந்த திரு. என். ராம் அவர்கள் மீது கடுமையான குற்றச்சாட்டைக் கூறியிருக்கிறார்.</p>



<p>மேலும் மாலினி பார்த்தசாரதி தமது பதிலில், &#8220;என்.ராம் தலைமையில் தி இந்து இயங்கியபோது உண்மையிலேயே மோசமடைந்த பாரம்பரியத்தையும் நற்பெயரையும் மீட்டெடுக்க நான் முயன்று வருகிறேன்&#8221; என்று ஆதாரமற்ற அவதூறான கருத்தைக் கூறியிருக்கிறார். இதனால் லட்சக்கணக்கான தி இந்து வாசகர்களின் கோபத்துக்கும் ஆளாகியிருக்கிறார்.</p>



<p>ஏற்கெனவே ரபேல் விவகாரத்தில் முறைகேடு நடக்கவில்லை என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்கவேண்டும் என்றும், ரபேல் விவகாரத்தில் பிரதமர் மோடியின் நேர்மை மறுக்க முடியாததும் கேள்விக்கு அப்பாற்பட்டதும் ஆகும் என்றும் மாலினி பார்த்தசாரதி குறிப்பிட்டதை எவரும் மறந்திட இயலாது. ரபேல் விவகாரத்தில் ஊழல் நடந்ததற்கான ஆதாரங்களின் அடிப்படையில் இன்றைக்கு பிரான்ஸ் அரசாங்கமே விசாரணையை தொடங்கியிருக்கிறது. பிரதமர் மோடியை சந்தித்த மாலினி பார்த்தசாரதி வெளியிட்ட கருத்துக்கள் மூலம் &#8216;பூனைக்குட்டி வெளியே வந்திருக்கிறது&#8217;.</p>



<p>பிரதமர் மோடியை மாலினி பார்த்தசாரதி சந்தித்ததில் எந்த தவறும் இல்லை. அந்த சந்திப்பின் மூலம் 142 ஆண்டு காலமாக கட்டிக்காக்கப்பட்டு இந்தியாவின் கருத்தியலுக்காகவும், ஊழல், சமூக அநீதிகளுக்கு எதிராகவும் குரல் கொடுத்து வருகிற இந்து குழுமத்தின் அடிப்படை கொள்கைகளை அடகு வைத்துவிடக் கூடாது. இந்த சந்திப்பையொட்டி, பிரதமர் மோடியின் வகுப்புவாத கொள்கைகளை ஏற்றுக் கொண்டு தி இந்து பின்பற்றுகிற கொள்கைகளிலிருந்து மாலினி பார்த்தசாரதி தடம் மாறுவாரேயானால், கடுமையான விளைவுகளை&nbsp; சந்திக்க நேரிடும்.</p>



<p>உலகத்திலேயே பத்திரிக்கை சுதந்திரம் பறிக்கப்பட்ட 188 நாடுகளின் வரிசையில் 142 ஆவது இடத்தில் இந்தியா இருக்கிறது. மோடி ஆட்சியில் ஏறத்தாழ 55 பத்திரிக்கையாளர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, அவர்கள் மீது கடுமையான தாக்குதல், அச்சுறுத்தல்கள், அடக்குமுறைகள்<br><br>ஏவப்பட்டுள்ளன.  கொரோனா தொற்றினால் பாதிப்பு, இறப்பு,தடுப்பூசி தட்டுப்பாடு குறித்த செய்தி வெளியிட்டதற்காக வழக்கு தொடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். இத்தகைய அடக்குமுறையால் மூத்த பத்திரிக்கையாளர் சித்தார்த் வரதராஜன் உட்பட பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீது அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, மத்திய புலனாய்வுத்துறை சோதனைகள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.</p>



<p>கடந்த ஜூலை 22 ஆம் தேதி இந்தியாவில் இந்தி, குஜராத்தி, மராத்தி உள்ளிட்ட மொழிகளில் 65 பதிப்புகளை நடத்தி வருகிற டைனிக் பாஸ்கர் குழுமம் வருமான வரி சோதனைக்கு ஆளாக்கப்பட்டுள்ளது. டைனிக் பாஸ்கர், பாரத் சமாச்சார் என்கிற நாளேடுகளை இந்த குழுமம் நடத்துகிறது. மத்தியப் பிரதேசம், குஜராத், உத்தரப்பிரதேச மாநிலங்களில் கொரோனா தொற்று, இறப்பு&nbsp; மூடி மறைக்கப்படுவது குறித்தும், தடுப்பூசி தட்டுப்பாடு பற்றியும்ஆதாரப்பூர்வமாக இந்த குழுமத்தின் பதிப்புகளில் செய்திகள் வெளியிடப்பட்டன. அதேபோல கொரோனா தொற்றில் இறந்தவர்களின் சடலங்கள் கங்கைக் கரையில் எரிக்கப்படுவதாகவும் டைனிக் பாஸ்கர் குழுமம் செய்தி வெளியிட்டது. இதைச் சகித்துக் கொள்ள முடியாத பா.ஜ.க. ஆட்சியாளர்கள் அந்த குழுமத்தின் மீது வருமான வரித்துறையை ஏவி குரல்வளையை நெறிக்க முயற்சி செய்கிறார்கள்.&nbsp; பத்திரிக்கையாளர்கள் மீது தாக்குதல்கள் மற்றும் கருத்துச் சுதந்திரத்தின் மீது அடக்குமுறையை ஏவிவிடுகிற பிரதமர் மோடியுடன்,&nbsp; இந்து குழுமத்தைச் சார்ந்தவர் கொள்கை சமரசம் செய்து கொள்வதைக் கருத்துச் சுதந்திரத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்கள் எவரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். சகித்துக் கொள்ளமாட்டார்கள்.</p>



<p>தி இந்து குழுமம் என்பது பங்குதாரர்களுக்கு மட்டுமே முழு உரிமை கொண்டதல்ல. இதை மக்களின் சொத்தாகவே கருதவேண்டும்.&nbsp; இந்து குழுமத்திலிருந்து வெளிவருகிற நாளேடுகள், இதழ்கள் ஆகியவற்றுக்கு லட்சக்கணக்கான வாசகர்கள் நாடு முழுவதும் இருக்கிறார்கள். ஏன் உலகம் முழுவதும் விரிந்து பரவியிருக்கிறார்கள். எனவே, இந்து குழுமத்தின் கொள்கை வழிப்பாதையை ஒரு தனிப்பட்ட மாலினி பார்த்தசாரதியால் மடைமாற்றிவிட முடியாது. அப்படி மடைமாற்ற அவர் முனைந்தால் இந்து குழுமத்தில் இருக்கிற கருத்துச் சுதந்திர காவலர்களும், அதில் பணியாற்றுகிற ஆயிரக்கணக்கான ஆசிரியர் பிரிவைச் சேர்ந்தவர்களும், ஊழியர்களும், லட்சக்கணக்கான வாசகர்களும் இந்து குழுமத்தின் பாரம்பரிய நற்பெயரைக் காப்பதற்குக் கிளர்ந்தெழுவார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p>



<p>இந்துவின் கொள்கை வழிப் பாதையை நிர்ணயிப்பதில் திரு. என்.ராம் அவர்களின் பங்களிப்பு மகத்தானது, ஈடு இணையற்றது. அதற்கு ஒரு கொள்கை முகத்தை வழங்கிய அவரது பங்கை யாரும் மறுக்க முடியாது. உலகத்தின் எந்த சக்தியாலும் தி இந்து நாளேட்டையும் திரு. என்.ராம் அவர்களையும் பிரிக்க முடியாது.</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/agopanna-condems-thehindu-editor-malini-parthasarathy/">ஊடகங்களை கபளீகரம் செய்யும் மோடியின் வலையில் மாலினி:  ஆ. கோபண்ணா கண்டனம்</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://desiyamurasu.com/news-india/agopanna-condems-thehindu-editor-malini-parthasarathy/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>இந்தியாவின் இளம் பிரதமர் ராஜிவ் காந்தி : பல பிறந்தநாள் கொண்டாட வேண்டிய தலைவனுக்கு கண்ணீர் அஞ்சலிகள்</title>
		<link>https://desiyamurasu.com/news-india/rajiv-gandhi-1944-1991-the-youngest-pm-of-india/</link>
					<comments>https://desiyamurasu.com/news-india/rajiv-gandhi-1944-1991-the-youngest-pm-of-india/#comments</comments>
		
		<dc:creator><![CDATA[Admin]]></dc:creator>
		<pubDate>Thu, 27 May 2021 13:53:47 +0000</pubDate>
				<category><![CDATA[தேசிய அரசியல்]]></category>
		<category><![CDATA[PM Rajiv Gandhi]]></category>
		<guid isPermaLink="false">https://desiyamurasu.com/?p=4424</guid>

					<description><![CDATA[<p>Translated article by Praveen Davar published in National Herald on 21 May 2021. Rajiv Gandhi (1944-1991): The youngest PM of India 40 வயதில் இளம் பிரதமரான ராஜிவ் காந்தி அவர்கள், 30 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் 1991 மே 21 ஆம் தேதி 47 ஆவது வயதில் இன்னுயிர் ஈந்தார்… படுகொலை செய்யப்பட்டபோது, ராஜிவ் காந்தி பிரதமராக இல்லை. எனினும், புதுடெல்லியில் நடந்த அவரது இறுதிச் சடங்கில் [&#8230;]</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/rajiv-gandhi-1944-1991-the-youngest-pm-of-india/">இந்தியாவின் இளம் பிரதமர் ராஜிவ் காந்தி : பல பிறந்தநாள் கொண்டாட வேண்டிய தலைவனுக்கு கண்ணீர் அஞ்சலிகள்</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p><em>Translated article by Praveen Davar published in National Herald on 21 May 2021.</em></p>



<h3 class="wp-block-heading"><strong>Rajiv Gandhi (1944-1991): The youngest PM of India</strong></h3>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large"><img loading="lazy" decoding="async" width="400" height="400" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/05/XcpYwaxw.jpg" alt="" class="wp-image-4431" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/05/XcpYwaxw.jpg 400w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/05/XcpYwaxw-300x300.jpg 300w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/05/XcpYwaxw-150x150.jpg 150w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/05/XcpYwaxw-75x75.jpg 75w" sizes="auto, (max-width: 400px) 100vw, 400px" /><figcaption><em><strong>Praveen Davar</strong></em></figcaption></figure></div>



<p>40 வயதில் இளம் பிரதமரான ராஜிவ் காந்தி அவர்கள், 30 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் 1991 மே 21 ஆம் தேதி 47 ஆவது வயதில் இன்னுயிர் ஈந்தார்…</p>



<p>படுகொலை செய்யப்பட்டபோது, ராஜிவ் காந்தி பிரதமராக இல்லை. எனினும், புதுடெல்லியில் நடந்த அவரது இறுதிச் சடங்கில் உலகம் முழுவதும் இருந்து ஏராளமான தலைவர்கள் கலந்து கொண்டனர்.</p>



<p>அப்போது குடியரசுத் தலைவராக இருந்த ஆர். வெங்கட்ராமன் இது குறித்து எழுதும்போது, &#8221; ராஜிவ் காந்தியின் இறுதிச் சடங்கில் இந்தியாவின் சாதாரண ஆண்கள் மற்றும் பெண்களுடன் சேர்ந்து 63 நாடுகளின் உலகத் தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர். அந்த அளவுக்கு 5 ஆண்டுகள் பிரதமராக இருந்த காலத்தில் உலகத் தலைவராக ராஜிவ் காந்தி உருவெடுத்தார். பிரதமராக இருந்த காலத்தில் நாட்டை ஒன்றுபட்ட பாதையில் கொண்டு செல்லவும், நவீன இந்தியாவை உருவாக்கவும் ராஜிவ் காந்தி பாடுபட்டார்&#8221; என்று குறிப்பிட்டிருந்தார்.</p>



<p>அமெரிக்காவுக்கான முன்னாள் இந்திய தூதுவரும், ராஜிவின் தாய்வழி மாமாவுமான பி.கே.நேரு, தன் இளம் வயதில் பெரும் பகுதியை அலகாபாத்தில் உள்ள மோதிலால் நேருவின் ஆனந்த பவன் இல்லத்தில் செலவிட்டவர். ஜவஹர்லால் நேருவுடன் ஒப்பிட்டு, ராஜிவ் காந்தியை இவ்வாறு எழுதுகிறார்…</p>



<p>&#8221; நேருவையும், ராஜிவையும் அறிந்த எவருக்கும், தன் தாத்தாவையே நினைவுபடுத்துவார். அதே கம்பீரத் தோற்றம், வசீகரம், மரியாதை, கருத்தியல், அருமையான நடத்தை மற்றும் கருணையில் அப்படியே நேரு போலவே ராஜிவ் காந்தியும் இருந்தார். நேருவைப் போலவே இந்தியாவின் அன்புக்குரியவராகவும் ராஜிவ் திகழ்ந்தார்.</p>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large"><img loading="lazy" decoding="async" width="500" height="745" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/05/ch872598-1.jpg" alt="" class="wp-image-4427" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/05/ch872598-1.jpg 500w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/05/ch872598-1-201x300.jpg 201w" sizes="auto, (max-width: 500px) 100vw, 500px" /></figure></div>



<p>இதெல்லாம் வெளித்தோற்றம். ஆனால், நேருவின் மரபணுக்கள் அப்படியே ராஜிவிடம் இருந்தன. நாட்டுப்பற்று, சுயநலமற்ற போக்கு, அர்ப்பணிப்பு மற்றும் அவரது நடத்தை ஆகியவை அப்படியே அவரது தாத்தா நேருவை பிரதிபலித்தன. அவரது தாத்தா எப்படி பூஜிக்கப்பட்டாரோ, அதேபோல் ராஜிவும் பூஜிக்கப்பட்டார்&#8221; என்று குறிப்பிட்டுள்ளார்.</p>



<p>பிரதமராக (1984-89) ராஜிவ் காந்தி பல சாதனைகளைப் படைத்துள்ளார். அந்த சாதனைகள் நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை வலுப்படுத்துவதாக இருந்தன. எல்லைகள் பாதுகாக்கப்பட்டன. லட்சக்கணக்கானோர் வறுமைக் கோட்டிலிருந்து உயர்த்தப்பட்டனர். வலுவான மதச்சார்பற்ற, சகிப்புத்தன்மையுடைய மற்றும் இரக்கமுள்ள மனிதராக ராஜிவ் திகழ்ந்ததால், வெளிநாடுகளில் இந்தியாவின் செல்வாக்கு உயர்ந்தது.</p>



<p>துரதிஷ்டவசமாக, இந்த செல்வாக்கு இன்றைக்கு தகர்க்கப்பட்டுவிட்டது.</p>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large"><img loading="lazy" decoding="async" width="669" height="1024" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/05/RajivGandhi-atSanjaysdeath-669x1024.jpeg" alt="" class="wp-image-4429" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/05/RajivGandhi-atSanjaysdeath-669x1024.jpeg 669w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/05/RajivGandhi-atSanjaysdeath-196x300.jpeg 196w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/05/RajivGandhi-atSanjaysdeath-768x1176.jpeg 768w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/05/RajivGandhi-atSanjaysdeath-750x1148.jpeg 750w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/05/RajivGandhi-atSanjaysdeath.jpeg 1000w" sizes="auto, (max-width: 669px) 100vw, 669px" /></figure></div>



<p>ராஜிவ் காந்திக்குப் பிறகு காங்கிரஸ் தலைவராகவும், அதன்பிறகு பிரதமராகவும் ஆன பி.வி. நரசிம்மராவ், தொலைநோக்கு பார்வை கொண்ட சிறந்த தலைவர் என ராஜிவ் காந்தியை பாராட்டினார். தொடர்ந்து அவர் கூறும்போது, &#8221; புறநிலை மற்றும் தொலைநோக்குப் பார்வை ஆகியவை ராஜிவ் காந்தியின் மிகப் பெரிய குணங்களாக இருக்கலாம் என்று நினைக்கிறேன். எந்தவொரு விஷயத்தையும் உணர்வுப்பூர்வமாகப் பார்க்கும் திறன் அவரிடம் இருந்தது. பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் போது, அவர் கவுரவம் பார்த்தது கிடையாது. அவரைப் பொறுத்தவரை இந்தியா எப்போதும் முதலிடம் பிடித்தது. உலக அமைதிக்கான முன்னணி இயக்கமாக அவர் இந்தியாவை காட்சிப்படுத்தினார். இது, இந்தியாவை தொழில்நுடப் முன்னேற்றத்தை நோக்கி நகர்த்தியது&#8221; என்றார்.</p>



<p>4 பிரதமர்களின் அமைச்சரவையில் அங்கம் வகித்த முதுபெரும் தலைவர் சி.சுப்பிரமணியன் கூறும்போது, &#8221; திறந்தவெளி பொருளாதார போட்டி ஏற்பட்டுள்ள சூழலில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் நவீன முறைகளை ஏற்றால் மட்டுமே இந்தியாவுக்கு எதிர்காலம் உண்டு என்பதில் ராஜிவ் காந்தி நம்பிக்கையாடு இருந்தார். மக்களின் நலன்களுக்காக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கும் சரியான முடிவுகளைப் பெறுவதற்கும் தொடங்கிய தொழில்நுட்ப பணிகள், அவர் மூளையில் உதித்த துணிச்சலான கண்டுபிடிப்புகள். தனது தாத்தா கற்பனை செய்ததைப் போலவே, நாட்டு மக்களின் வாழ்க்கையிலும் விஞ்ஞான அணுகுமுறைகள் இருக்க வேண்டும் என்று அவர் விரும்பினார்.</p>



<p>சுதந்திரப் போராட்ட வீரர் ஜமன்லால் பஜாஜின் பேரன் தொழிலதிபர் ராகுல் பஜாஜ், &#8221; சுதந்திர இந்தியாவில் நவீன இந்தியாவை உருவாக்கிய முதல் நபராக நேரு இருந்தார். இரண்டாவது நபராக ராஜிவ் காந்தி திகழ்ந்தார். 1991 ஜூலை முதல் அடுத்து வந்த காங்கிரஸ் அரசால் செயல்படுத்தப்பட்ட தாராளமயமாக்கல் நடவடிக்கைகள் ராஜிவ் காந்தி விரும்பிய மற்றும் திட்டமிட்டதின் நேரடி விளைவு என்று நான் நம்புகிறேன்&#8221; என்று குறிப்பிட்டிருக்கிறார்.</p>



<p>தொழில்நுட்பம் மற்றும் வறுமை ஒழிப்புக்கு இடையேயான உறவை, பிரதமர் என்ற நிலையில் ராஜிவ் உச்சரித்துக் கொண்டேயிருந்தார். நாடுகளுக்கிடையேயோ அல்லது நாட்டுக்குள்ளேயோ வறுமை இடைவெளி இருந்தால், நிச்சயம் தொழில்நுட்ப இடைவெளி இருக்கும். தொழில்நுட்ப வளர்ச்சி மூலமே நம் மக்களின் வாழ்க்கையிலும், பொருளாதாரத்திலும் இந்தியா வளர்ச்சி கண்டது. வறுமையை ஒழிப்பதே தொழில்நுட்பத்தின் முக்கிய நோக்கமாக இருந்தது.</p>



<p>முன்னாள் ராணுவ தளபதியாகவும், ஜம்மு காஷ்மீர் ஆளுநராகவும் பணியாற்றிய ஜெனரல் கிருஷ்ணா ராவ் கூறும்போது, &#8221; நாட்டின் ஆணிவேராக இருக்கும் பிரச்சினைகளான வறுமை, கல்வியறிவின்மை, வேலையின்மை மற்றும் பின்தங்கிய நிலையை வலுவாக எதிர்கொள்ளாவிட்டால், அமைதியையோ அல்லது வளர்ச்சியையோ காண முடியாது என்பதை ராஜிவ் காந்தி தெளிவாக அறிந்திருந்தார்&#8221; என்கிறார்.</p>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large"><img loading="lazy" decoding="async" width="960" height="640" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/05/18_1.jpg" alt="" class="wp-image-4428" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/05/18_1.jpg 960w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/05/18_1-300x200.jpg 300w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/05/18_1-768x512.jpg 768w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/05/18_1-750x500.jpg 750w" sizes="auto, (max-width: 960px) 100vw, 960px" /></figure></div>



<p>பொருளாதார நிபுணர் ஏ.எம். குஷ்ரோ குறிப்பிடும்போது, &#8221; ராஜிவ் காந்தி ஆட்சிக் காலத்தில் வறுமை ஒழிப்பு திட்டங்களான ஐ.ஆர்.டி.பி, என்.ஆர்.இ.பி மற்றும் நேரு வேலைவாய்ப்புத் திட்டம் உள்ளிட்ட ஆகியவை வலுப்பெற்றிருந்தன என்பதை மறந்துவிடக்கூடாது. அதோடு, கிராம பஞ்சாயத்துக்கு புதிய பொறுப்புகளும் கூடுதல் நிதி ஆதாரத்தையும் ஏற்படுத்தும் வகையில் நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றினார். பஞ்சாயத்து ராஜ் சட்டம் தவிர்த்து, தகவல் தொழில்நுட்பம் மற்றும் கணினி புரட்சியில் ராஜிவ் காந்தி சிறந்து விளங்கினார். இதன்மூலம் உள்நாட்டில் சாதனைகளைப் படைத்தார் &#8221; என்றார்.</p>



<p>ராஜிவ் அமைச்சரவையில் அமைச்சராகவும், பின்னர் மக்களவை சபாநாயகராகவும் இருந்த சிவ்ராஜ் பாட்டீல் எழுதும்போது, &#8221; ஒட்டுமொத்த வளர்ச்சியில் புதிய சகாப்தத்தை உருவாக்கி, கணினி மயமாக்கல் மற்றும் கணினி தொழில்நுட்பத்தில் வளர்ந்த பல நாடுகளை விட இந்தியாவை முன்னிலைக்குக் கொண்டு வந்த ராஜிவ் காந்திக்கு, இன்றைக்கு இந்தியா கடன்பட்டிருக்கிறது. வெளிநாட்டுக் கொள்கை, சர்வதேச உறவுகள் போன்றவற்றில் ராஜிவ் காந்தியின் பங்களிப்பு சிறப்பாக இருந்தது&#8221; என்று குறிப்பிட்டுள்ளார்.</p>



<p>முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் டி.என். கவுல் கூறும்போது, &#8221;வெளியுறவுக் கொள்கையில் ராஜிவ் காந்தியின் பங்களிப்பு மிகவும் சிறப்பாக இருந்தது. ரொனால்டு ரீகன், மிக்கைல் கோர்பச்சேவ், மார்க்ரெட் தாட்சர், ராபர்ட் முகாபே, ஃபிடல் காஸ்ட்ரோ மற்றும் ஆசிய, ஆப்பிரிக்க, லத்தின் அமெரிக்க மற்றும் பல நாடுகளின் தலைவர்களுடன் அவருக்குத் தனிப்பட்ட முறையிலிருந்த நட்பு சிறந்தது என்பதை ஒப்புக்கொண்டே ஆக வேண்டும். சீனா, அமெரிக்கா மற்றும் சோவியத் யூனியனுடனான உறவுகளை மேம்படுத்த அவரால் முடிந்தது. முழுமையான அணு ஆயுதக் குறைப்புக்கான ஐக்கிய நாடுகள் சபையில், ராஜிவ் காந்தியின் உரை முக்கியமானது. அணுசக்தி படுகொலை மூலம் சுய அழிவு அச்சுறுத்தலிலிருந்து உலகம் காப்பாற்றப்பட வேண்டுமானால், நடைமுறை, எதார்த்தமான போக்கு அவசியம் என்று குறிப்பிட்டார்.</p>



<p>பா.ஜ.க. எம்.பி.யாகவும், பின்னர் வாஜ்பாய் அரசில் வெளியுறவுத் துறை அமைச்சராகவும் இருந்த ஜஸ்வந்த் சிங் எழுதும்போது, &#8221; மூன்றாம் உலக நாடுகளிலிருந்து எளிதாகப் பேசக்கூடிய ஒருவரை உலகத் தலைவர்கள் பெற்றிருந்தார்கள். பண்டித ஜவஹர்லால் நேரு மற்றும் இந்திரா காந்தி ஆகியோரின் நினைவுகளும் மரபுகளும் ராஜிவ் காந்தி மூலம் உயிர்ப்புடன் இருந்தன.</p>



<p>ராஜிவ் காந்தி அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த குர்ஷித் ஆலம் கான் தமது இரங்கல் செய்தியில், &#8221; நவீனம், ஜனநாயகம் மற்றும் உண்மையான மதச்சார்பின்மையின் அடையாளமாக ராஜிவ் காந்தி திகழ்ந்தார். ஒருவருடைய தேசப்பற்றை அவர் சார்ந்திருக்கும் மதத்தால் ஒன்றும் செய்ய முடியாது என்று ராஜிவ் நம்பினார். அழிவு சக்திகளும், பிரிவினைவாத மற்றும் வகுப்புவாத சக்திகளும் நாட்டில் தோன்றும் போதெல்லாம், அவர் நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக இருந்தார். தன் கொள்கையில் உறுதியுடன் இருக்க, எந்த தியாகத்தையும் செய்யத் தயாராக இருந்தார். இறுதியில், அவர் தன் வாழ்க்கையையே தியாகம் செய்தார்&#8221; என்று உணர்ச்சி பொங்கக் குறிப்பிடுகிறார். பல விசித்திரங்கள் கடவுளால் அரங்கேறிக் கொண்டிருப்பது உண்மைதான்.</p>



<p>பி.வி.நரசிம்ம ராவின் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.சவாண் தமது இரங்கல் செய்தியில், &#8221;பல பிறந்த நாட்களை கொண்டாட வேண்டிய இதுபோன்ற மனிதனுக்கு இரங்கல் அஞ்சலி செலுத்துவது எங்களுக்கு ஆறுதல் அளிக்கவில்லை&#8221; என, தன் வலியை வரிகளால் வெளிப்படுத்தினார்.</p>



<p><em>கட்டுரையாளர்: பிரவீன் தபார். ( முன்னாள் ராணுவ அதிகாரியாக இருந்தவர். தற்போது அரசியல் விமர்சகராகவும் கட்டுரையாளராகவும் இருக்கிறார்.)</em></p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/rajiv-gandhi-1944-1991-the-youngest-pm-of-india/">இந்தியாவின் இளம் பிரதமர் ராஜிவ் காந்தி : பல பிறந்தநாள் கொண்டாட வேண்டிய தலைவனுக்கு கண்ணீர் அஞ்சலிகள்</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://desiyamurasu.com/news-india/rajiv-gandhi-1944-1991-the-youngest-pm-of-india/feed/</wfw:commentRss>
			<slash:comments>1</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>ராஜீவ் சதவ் : மோடி ஆட்சியின் வீழச்சியை காணாமலேயே மறைந்த காங்கிரஸின் நம்பிக்கை நட்சத்திரம்</title>
		<link>https://desiyamurasu.com/news-india/satavs-unfulfilled-dream-bjps-defeat-in-gujarat/</link>
					<comments>https://desiyamurasu.com/news-india/satavs-unfulfilled-dream-bjps-defeat-in-gujarat/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[A. Gopanna]]></dc:creator>
		<pubDate>Thu, 20 May 2021 16:56:14 +0000</pubDate>
				<category><![CDATA[தேசிய அரசியல்]]></category>
		<guid isPermaLink="false">https://desiyamurasu.com/?p=4405</guid>

					<description><![CDATA[<p>( Economic Times இல் Satav’s unfulfilled dream: BJP’s defeat in Gujarat என்ற தலைப்பில் கனிஷ்கா சிங். எழுதி வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கம் ) ராஜீவ் சதவ் எளிமையான அடிமட்ட தொண்டர். ஒரு தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கும், ஒரு தொண்டர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கும் உதாரணமாகிப் போனவர். கட்சிக்காக அல்லும் பகலும் உழைத்த அவர், மத்திய மோடி ஆட்சியின் வீழ்ச்சி குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியிலிருந்து தொடங்கும் என்றும் நம்பிக்கையுடன் [&#8230;]</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/satavs-unfulfilled-dream-bjps-defeat-in-gujarat/">ராஜீவ் சதவ் : மோடி ஆட்சியின் வீழச்சியை காணாமலேயே மறைந்த காங்கிரஸின் நம்பிக்கை நட்சத்திரம்</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p><span class="has-inline-color has-vivid-red-color"><em>( Economic Times இல் Satav’s unfulfilled dream: BJP’s defeat in Gujarat என்ற தலைப்பில் கனிஷ்கா சிங். எழுதி வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கம் ) </em></span></p>



<p>ராஜீவ் சதவ் எளிமையான அடிமட்ட தொண்டர். ஒரு தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கும், ஒரு தொண்டர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கும் உதாரணமாகிப் போனவர். கட்சிக்காக அல்லும் பகலும் உழைத்த அவர், மத்திய மோடி ஆட்சியின் வீழ்ச்சி குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியிலிருந்து தொடங்கும் என்றும் நம்பிக்கையுடன் இருந்தார். அதற்கான களப்பணியிலும் அவர் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். இந்த சூழ்நிலையில், கொரோனோ தொற்று ஏற்பட்டு, 23 நாட்களாக புனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்திருக்கிறார்.</p>



<p>டெல்லியிலிருந்தோ அல்லது குஜராத்திலிருந்தோ புறப்படும்போது, மகாராஷ்ட்டிராவில் உள்ள தன் சொந்த கிராமமான கலம்னுரிக்கு சென்று தங்குவதை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவார். எங்கே இருக்கிறீர்கள் என்று கேட்டால், &#8216;நான் என் கிராமத்தில் இருக்கிறேன்…&#8217; என்று குதூகலத்துடன் கூறுவார்.</p>



<p>ராஜீவ் சதவ் உண்மையான காங்கிரஸ்காரர். காங்கிரஸ் கட்சியில் பணியாற்றிய சிறந்த மனிதர். மகாராஷ்ட்டிரா இளைஞர் காங்கிரஸில் நிர்வாகியாக இருந்தவர். அதன்பின்னர் காங்கிரஸ் காரிய கமிட்டியில் 12 ஆண்டுகள் உறுப்பினராக பணியாற்றினார். அந்த காலகட்டத்தில் இளைஞர் காங்கிரஸின் தலைவராகும் அளவுக்கு உயர்ந்தார்.</p>



<p>2009 ஆம் செப்டம்பர் 21 ஆம் தேதி 35 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடியபோது, மகாராஷ்ட்டிரா பிரதேச இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்தார். &#8221;நான் இளைஞருக்கான வயதைக் கடந்துவிட்டதால் இளைஞர் காங்கிரஸ் பதவியிலிருந்து விலகுகிறேன்…&#8221; என்று குறிப்பிட்டு, கட்சித் தலைமைக்கு மின்னஞ்சலில் ராஜினாமா கடிதத்தை அனுப்பியவர். இளைஞர் காங்கிரஸ் தலைவராக 5 ஆண்டுகள் திறம்பட பணியாற்றியவர்.</p>



<p>ஜனநாயகத்தின் மூன்றடுக்குகளிலும் மக்கள் பிரதிநிதியாக இருந்தவர். பேரூராட்சி, மாவட்ட பஞ்சாயத்து மற்றும் சட்டப்பேரவை உறுப்பினராக, நாடாளுமன்ற மாநிலங்களவை மற்றும் மக்களவை உறுப்பினராகப் பதவி வகித்துள்ளார்.</p>



<p>சட்டம் படித்திருந்தாலும், நீதிமன்றத்தில் வழக்காடியதில்லை. எனினும், சட்டத்தை இயற்றும் இடத்தில் எப்போதும் இருந்திருக்கிறார். அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ்ந்த ஒரு மனிதர். புத்திக்கூர்மையுடையவர். காங்கிரஸில் படிப்படியாக வளர்ந்து நட்சத்திரமாக ஜொலித்தவர்.</p>



<p>&#8216;உங்கள் கிராமத்தில் கேஸ் ஏஜென்ஸி நடத்துவதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில், மாநிலங்களவை பதவியை ஏன் தகுதி நீக்கம் செய்யக் கூடாது&#8217; என ராஜீவுக்கு குடியரசுத் தலைவர் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இதனையடுத்து, எத்தனை நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயரில் கேஸ் ஏஜென்ஸி, பெட்ரோல் பங்குகள் இருக்கின்றன என்ற பட்டிலை சேகரித்தார். அந்த பட்டியலில் பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர்களும் இருந்தனர். இதன்படி பார்த்தால், அரசியல் உள்நோக்கத்தோடு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை தகுதி நீக்கம் செய்ய முயற்சிப்பது சட்டவிரோதம் என்று குற்றம் சாட்டினார்.</p>



<p>காங்கிரஸ் கட்சி மீதான ராஜீவ் சதவின் விசுவாசமும் அர்ப்பணிப்பும் முழுமையானது. கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் முதல்முறையாக அவர் போட்டியிட்டபோது, எம்.எல்.ஏவாக இருந்தார். தான் ராஜினாமா செய்த எம்.எல்.ஏ. தொகுதியில் நடந்த தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரின் வெற்றிக்காக உழைத்தார். எம்.எல்.ஏ. தேர்தலில் தான் பெற்ற வாக்குகளை, தனக்குப் பிறகு அதே தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் பெறுவதற்கு முக்கிய பங்காற்றினார்.</p>



<p>2022 ஆம் ஆண்டு குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க. தோல்வியடைய வேண்டும் என்பது தான் ராஜீவ் சதவின் கனவு. அந்த கனவு நிறைவேறாமலேயே கொரோனா எனும் கொடிய நோய்க்குப் பலியாகிவிட்டார். &#8221;குஜராத்தில் பா.ஜ.க. தோற்றால், இந்திய அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும்&#8221; என்று அவர் நம்பினார்.</p>



<p>கொரோனாவின் இரண்டாவது அலையின் நிறைவில், ராஜீவின் கனவு நிறைவேறும் வகையில் திருப்பம் ஏற்படும். ராஜீவ் சதவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், அந்தக் கனவை காங்கிரஸ் கட்சி நிறைவேற்றும்.</p>



<p><em>கட்டுரையாளர் : கனிஷ்கா சிங். (காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். மறைந்த ராஜீவ் சதவுடன் இணைந்து பணியாற்றியவர்.)</em></p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/satavs-unfulfilled-dream-bjps-defeat-in-gujarat/">ராஜீவ் சதவ் : மோடி ஆட்சியின் வீழச்சியை காணாமலேயே மறைந்த காங்கிரஸின் நம்பிக்கை நட்சத்திரம்</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://desiyamurasu.com/news-india/satavs-unfulfilled-dream-bjps-defeat-in-gujarat/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>கொரோனாவினால் 2 லட்சம் பேர் பலியானதிற்கு பொறுப்பேற்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்தன் உடனடியாக பதவி விலக வேண்டும்! தலைவர் கே.எஸ்.அழகிரி கோரிக்கை</title>
		<link>https://desiyamurasu.com/news-india/doctor-harsha-vardhan-should-resign-for-taking-responsibility-of-corona-deaths-ks-alagiri-demand/</link>
					<comments>https://desiyamurasu.com/news-india/doctor-harsha-vardhan-should-resign-for-taking-responsibility-of-corona-deaths-ks-alagiri-demand/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Admin]]></dc:creator>
		<pubDate>Sat, 01 May 2021 12:01:51 +0000</pubDate>
				<category><![CDATA[தேசிய அரசியல்]]></category>
		<category><![CDATA[bjp]]></category>
		<category><![CDATA[Covid-19]]></category>
		<category><![CDATA[Harsh Vardhan]]></category>
		<guid isPermaLink="false">https://desiyamurasu.com/?p=4393</guid>

					<description><![CDATA[<p>கொரோனா தொற்றின் இரண்டாவது அலையை முன்கூட்டியே கணிக்காமல் தவறான அணுகுமுறையை மேற்கொண்டதால் ஆயிரக்கணக்கான மனித உயிர்கள் பலியானதற்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்தன் உடனடியாக பதவி விலக இதோ காரணங்கள் : கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மே 1 ஆம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுக் கொள்ள மத்திய அரசின் கோவின் இணைய தளத்தில் முன்பதிவு செய்யுமாறு அறிவிக்கப்பட்டது. முதல் நாளிலேயே 1.33 கோடி பேர் பதிவு செய்துள்ளனர். பதிவு செய்துள்ளவர்களுக்குத் [&#8230;]</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/doctor-harsha-vardhan-should-resign-for-taking-responsibility-of-corona-deaths-ks-alagiri-demand/">கொரோனாவினால் 2 லட்சம் பேர் பலியானதிற்கு பொறுப்பேற்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்தன் உடனடியாக பதவி விலக வேண்டும்! தலைவர் கே.எஸ்.அழகிரி கோரிக்கை</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>கொரோனா தொற்றின் இரண்டாவது அலையை முன்கூட்டியே கணிக்காமல் தவறான அணுகுமுறையை மேற்கொண்டதால் ஆயிரக்கணக்கான மனித உயிர்கள் பலியானதற்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்தன் உடனடியாக பதவி விலக இதோ காரணங்கள் :</p>



<ol class="wp-block-list"><li>கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மே 1 ஆம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுக் கொள்ள மத்திய அரசின் கோவின் இணைய தளத்தில் முன்பதிவு செய்யுமாறு அறிவிக்கப்பட்டது. முதல் நாளிலேயே 1.33 கோடி பேர் பதிவு செய்துள்ளனர்.</li><li>பதிவு செய்துள்ளவர்களுக்குத் தடுப்பூசியை இலவசமாக மத்திய அரசு போடுமா ? மாநில அரசு போடுமா ? 45 வயதிற்கு மேற்பட்டோருக்குத் தான் மத்திய அரசு இலவசமாகத் தடுப்பூசி போடும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் மத்திய அரசு ஏன் முன்பதிவு செய்கிறது ?</li><li>முன்பதிவை மத்திய அரசு செய்தால் மாநில அரசு எந்த வகையில் தடுப்பூசி போட முடியும் ? கொரோனாவை எதிர்கொள்வதில் மத்திய அரசு குழப்பத்திற்கு மேல் குழப்பம் செய்து கொண்டிருக்கிறது. இதற்கு எப்போது விடிவு ஏற்படப் போகிறது ?</li><li>கொரோனா தொற்றின் ஒருநாள் எண்ணிக்கை 3.8 லட்சம். ஒருநாள் இறப்பு மூன்றாவது நாளாகத் தொடர்ந்து 3 ஆயிரத்தைக் கடந்திருக்கிறது. உலகத்தில் கொரோனாவினால் இறப்பவர்களில் நான்கில் ஒருவர் இந்தியர். உலக நாடுகளில் இந்தியா கொரோனா இறப்பில் முதன்மை இடத்தைப் பெற்றிருக்கிறது.</li><li>கொரோனாவிலிருந்து மக்கள் உயிரைக் காக்க பேராயுதமாக விளங்குவது தடுப்பூசி மட்டுமே. இந்தியாவில் 18 வயதிற்கு மேற்பட்ட 93 கோடி மக்களுக்குத் தடுப்பூசி போட 186 கோடி டோஸ்கள் தேவை.</li><li>தற்போது இரண்டு தனியார் நிறுவனங்கள் உற்பத்தி செய்வதோ மாதத்திற்கு 1.20 கோடி டோஸ்கள் மட்டுமே. 45 வயதிற்கு மேற்பட்டவர்களில் 35 கோடி மக்களுக்கு இன்னும் தடுப்பூசி போட வேண்டும். இதற்கு 70 கோடி தடுப்பூசிகள் தேவை.</li><li>தற்போது இந்தியாவில் 15 கோடி மக்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் 1 டோஸ் போட்டவர்கள் 12.12 கோடி. இரண்டு டோஸ் போட்டவர்கள் 2.36 கோடி மட்டுமே.</li><li>18 வயதிற்கு மேற்பட்ட 93 கோடி மக்களுக்கு இரண்டு டோஸ் போட தேவைப்படுகிற 186 கோடி தடுப்பூசிகளை மத்திய பா.ஜ.க. அரசு எப்போது கொள்முதல் செய்யப்போகிறது ? எப்போது போடப் போகிறது ? மக்களின் உயிரைக் காக்க ஒரே பாதுகாப்பு கவசமாக இருக்கிற தடுப்பூசி போடுவதற்கு இரண்டு தனியார் நிறுவனங்கள் அல்லாமல் வேறு திறமைமிக்க தனியார் நிறுவனங்களுக்கு ஏன் அனுமதி அளிக்கவில்லை ?</li><li>மக்கள் உயிருக்காகப் போராடுகிற நேரத்தில் இரண்டு தனியார் நிறுவனங்களுக்கு மட்டும் தடுப்பூசி தயாரிக்கிற ஏகபோக உரிமையை அனுமதித்தது ஏன் ? இந்திய மக்களின் மீது பிரதமர் மோடிக்கு அக்கறை இருந்தால் தடுப்பூசி உற்பத்தியைக் கடந்தகால அரசுகள் பொதுத்துறை நிறுவனங்களுக்கு வழங்கி அம்மை, போலியோ, காலரா ஆகியவற்றை ஒழித்ததைப் போல இப்போதும் தடுப்பூசி உற்பத்தியை வழங்கி கொரோனாவை ஒழிப்பதில் ஏன் அக்கறை செலுத்தவில்லை ?</li><li>இந்திய மக்கள் அனைத்து சுகங்களையும் துறந்து, வாழ்வாதாரத்தை இழந்து, எதிர்காலத்தைப் பற்றி கற்பனை கூட செய்ய முடியாமல், என்றைக்கு நமக்கு கொரோனா தொற்று வருமோ, எப்போது நமது உயிர் பறிக்கப்படுமோ? என்ற அச்சத்திலும், பீதியிலும் வாழ்ந்து வருகின்றனர்.</li><li>136 கோடி மக்களையும் ஒருசேர மரணப் பயத்தில் ஆழ்த்தியதற்குப் பிரதமர் மோடி பொறுப்பேற்றுக் கொண்டு குறைந்தபட்சம் மத்திய பா.ஜ.க. அரசின் சுகாதாரத்துறை அமைச்சர் உடனடியாக பதவி விலக இதைவிட வேறு என்ன காரணங்கள் வேண்டும் ?</li></ol>



<p></p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/doctor-harsha-vardhan-should-resign-for-taking-responsibility-of-corona-deaths-ks-alagiri-demand/">கொரோனாவினால் 2 லட்சம் பேர் பலியானதிற்கு பொறுப்பேற்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்தன் உடனடியாக பதவி விலக வேண்டும்! தலைவர் கே.எஸ்.அழகிரி கோரிக்கை</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://desiyamurasu.com/news-india/doctor-harsha-vardhan-should-resign-for-taking-responsibility-of-corona-deaths-ks-alagiri-demand/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>இந்தியாவின் ஜனநாயக திருவிழாவும் மருந்து நிறுவனங்களின் லாபமும் : கோடுகளில் தெறிக்கவிட்ட கார்ட்டூனிஸ்ட்கள்</title>
		<link>https://desiyamurasu.com/news-india/indias-festival-of-democracy-and-vaccine-companies-profit-making/</link>
					<comments>https://desiyamurasu.com/news-india/indias-festival-of-democracy-and-vaccine-companies-profit-making/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Admin]]></dc:creator>
		<pubDate>Tue, 27 Apr 2021 17:43:05 +0000</pubDate>
				<category><![CDATA[தேசிய அரசியல்]]></category>
		<guid isPermaLink="false">https://desiyamurasu.com/?p=4379</guid>

					<description><![CDATA[<p>கொரோனா பரவலையடுத்து போடப்படும் தடுப்பூசிகள் குறித்து உண்மை நிலையை வெளிப்படுத்தும் உயிரோட்டமுள்ள கார்ட்டூன்கள்: 1.(ஜனநாயக திருவிழா) மருத்துவனைத் தொடர்பானவற்றையும் இணைத்து வாக்குப்பதிவு இயந்திரத்தை கார்ட்டூனாக வரைந்துள்ளார் சதீஷ் ஆச்சார்யா. கொரோனா ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் போது, பல மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடத்துவதை தம் கார்ட்டூனில் இப்படி சுட்டிக்காட்டியுள்ளார். 2.(நீங்கள் எதிர்மறையாக எண்ணும்போது மருத்துவம் நேர்மறையான செய்தியை தரும்) ஆர்எஸ்எஸ் தலைவர் தத்தாத்ரேயா ஹோஸாபலே சமீபத்தில் அளித்த பேட்டியில், தேச விரோத சக்திகள் கொரோனா சூழலை நம்பகமற்ற [&#8230;]</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/indias-festival-of-democracy-and-vaccine-companies-profit-making/">இந்தியாவின் ஜனநாயக திருவிழாவும் மருந்து நிறுவனங்களின் லாபமும் : கோடுகளில் தெறிக்கவிட்ட கார்ட்டூனிஸ்ட்கள்</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>கொரோனா பரவலையடுத்து போடப்படும் தடுப்பூசிகள் குறித்து உண்மை நிலையை வெளிப்படுத்தும் உயிரோட்டமுள்ள கார்ட்டூன்கள்:</p>



<h4 class="wp-block-heading"><strong><span class="has-inline-color has-vivid-red-color">1.(ஜனநாயக திருவிழா)</span> </strong></h4>



<p>மருத்துவனைத் தொடர்பானவற்றையும் இணைத்து வாக்குப்பதிவு இயந்திரத்தை கார்ட்டூனாக வரைந்துள்ளார் சதீஷ் ஆச்சார்யா. கொரோனா ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் போது, பல மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடத்துவதை தம் கார்ட்டூனில் இப்படி சுட்டிக்காட்டியுள்ளார்.</p>



<h4 class="wp-block-heading"><strong><span class="has-inline-color has-vivid-red-color">2.(நீங்கள் எதிர்மறையாக எண்ணும்போது மருத்துவம் நேர்மறையான செய்தியை தரும்)</span></strong></h4>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large"><img loading="lazy" decoding="async" width="630" height="655" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/04/700-103.jpg" alt="" class="wp-image-4382" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/04/700-103.jpg 630w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/04/700-103-289x300.jpg 289w" sizes="auto, (max-width: 630px) 100vw, 630px" /></figure></div>



<p>ஆர்எஸ்எஸ் தலைவர் தத்தாத்ரேயா ஹோஸாபலே சமீபத்தில் அளித்த பேட்டியில், தேச விரோத சக்திகள் கொரோனா சூழலை நம்பகமற்ற மற்றும் எதிர்மறையாக மாற்றுகின்றன. இதனை ஊடகங்களில் நேர்மறையான விஷயம் என்று கூறுகிறார்கள் என குறிப்பிட்டிருந்தார். இதனைக் கேலி செய்யும் வகையில் இ.பி. உன்னி இந்த கார்ட்டூனை வரைந்துள்ளார்.</p>



<h4 class="wp-block-heading"><strong><span class="has-inline-color has-vivid-red-color">3.(தடுப்பூசி / தடுப்பூசி தயாரிப்பு நிறுவனம்)</span></strong></h4>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large"><img loading="lazy" decoding="async" width="709" height="504" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/04/Ez4f8vFVkAQMnqw.jpeg" alt="" class="wp-image-4384" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/04/Ez4f8vFVkAQMnqw.jpeg 709w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/04/Ez4f8vFVkAQMnqw-300x213.jpeg 300w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/04/Ez4f8vFVkAQMnqw-120x86.jpeg 120w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/04/Ez4f8vFVkAQMnqw-350x250.jpeg 350w" sizes="auto, (max-width: 709px) 100vw, 709px" /></figure></div>



<p>சீரம் மருந்து தயாரிப்பு நிறுவனம் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி விலையை தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ. 600 ஆகவும், மாநில அரசுகளுக்கு ரூ.400 ஆகவும் உயர்த்தியதை நேர்த்தியான காட்டூன் மூலம் வெளிப்படுத்தியுள்ளார் பி.மஹ்மூத்.</p>



<h4 class="wp-block-heading"><strong><span class="has-inline-color has-vivid-red-color">4.(சார், உங்களைப் பற்றி ஆஸ்திரேலிய கார்ட்டூனிஸ்ட் கார்ட்டூன் வரைந்துள்ளார்…!ஹலோ அக்சய் குமார் ஜி…நீங்கள் கார்ட்டூனும் வரைவீர்களா?)</span></strong></h4>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large"><img loading="lazy" decoding="async" width="760" height="536" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/04/Ez4LDdUUUAAZOFd.jpg" alt="" class="wp-image-4385" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/04/Ez4LDdUUUAAZOFd.jpg 760w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/04/Ez4LDdUUUAAZOFd-300x212.jpg 300w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/04/Ez4LDdUUUAAZOFd-120x86.jpg 120w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/04/Ez4LDdUUUAAZOFd-750x529.jpg 750w" sizes="auto, (max-width: 760px) 100vw, 760px" /></figure></div>



<p>&#8216;இறந்த யானையின் மீது சவாரி&#8217; என மோடி பற்றி ஆஸ்திரேலிய நிதி மதிப்பீட்டை அடிப்படையாகக் கொண்டு, அலோக் நிரந்தர் வரைந்த கார்ட்டூன்.</p>



<h4 class="wp-block-heading"><strong><span class="has-inline-color has-vivid-red-color">5.(ஒவ்வொரு ஓட்டும் எண்ணப்படும்/ வாக்காளர்கள் அல்ல)</span></strong></h4>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large"><img loading="lazy" decoding="async" width="1024" height="1024" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/04/Ez0Tj13VIAEPGBG-1024x1024.jpeg" alt="" class="wp-image-4383" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/04/Ez0Tj13VIAEPGBG.jpeg 1024w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/04/Ez0Tj13VIAEPGBG-300x300.jpeg 300w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/04/Ez0Tj13VIAEPGBG-150x150.jpeg 150w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/04/Ez0Tj13VIAEPGBG-768x768.jpeg 768w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/04/Ez0Tj13VIAEPGBG-75x75.jpeg 75w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/04/Ez0Tj13VIAEPGBG-750x750.jpeg 750w" sizes="auto, (max-width: 1024px) 100vw, 1024px" /></figure></div>



<p>நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தில் மோடி தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதை விமர்சித்து சுஹாயில் நக்ஸ்பந்தி வரைந்த கார்ட்டூன்.</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/indias-festival-of-democracy-and-vaccine-companies-profit-making/">இந்தியாவின் ஜனநாயக திருவிழாவும் மருந்து நிறுவனங்களின் லாபமும் : கோடுகளில் தெறிக்கவிட்ட கார்ட்டூனிஸ்ட்கள்</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://desiyamurasu.com/news-india/indias-festival-of-democracy-and-vaccine-companies-profit-making/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>கொரோனாவை விட கொடிய வைரஸ் பா.ஜ.க.: மக்கள் உயிரோடு விளையாடும் கொடுமை!</title>
		<link>https://desiyamurasu.com/news-india/bjp-leaders-covid-19-pandemic-remarks/</link>
					<comments>https://desiyamurasu.com/news-india/bjp-leaders-covid-19-pandemic-remarks/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Admin]]></dc:creator>
		<pubDate>Mon, 26 Apr 2021 12:16:25 +0000</pubDate>
				<category><![CDATA[தேசிய அரசியல்]]></category>
		<guid isPermaLink="false">https://desiyamurasu.com/?p=4372</guid>

					<description><![CDATA[<p>கொரோனா பரவல் குறித்த அறிவிப்பை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டு 414 நாட்கள் ஆகிவிட்டன. &#8217;21 நாட்கள் பொது முடக்கம் கொரோனாவுக்கு எதிரான போரை எதிர்கொள்வதற்கு அவசியம்&#8217; என்று பிரதமர் மோடி அறிவித்து 389 நாட்கள் ஆகிவிட்டன. இதற்கு இடைப்பட்ட காலத்தில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்தது. பின்னர் குறைந்து மீண்டும் தற்போது இரண்டாவது அலையில் நாடு முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் தற்போது 1 கோடியே 93 லட்சம் பேர் கொரோனா [&#8230;]</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/bjp-leaders-covid-19-pandemic-remarks/">கொரோனாவை விட கொடிய வைரஸ் பா.ஜ.க.: மக்கள் உயிரோடு விளையாடும் கொடுமை!</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>கொரோனா பரவல் குறித்த அறிவிப்பை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டு 414 நாட்கள் ஆகிவிட்டன. &#8217;21 நாட்கள் பொது முடக்கம் கொரோனாவுக்கு எதிரான போரை எதிர்கொள்வதற்கு அவசியம்&#8217; என்று பிரதமர் மோடி அறிவித்து 389 நாட்கள் ஆகிவிட்டன. இதற்கு இடைப்பட்ட காலத்தில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்தது. பின்னர் குறைந்து மீண்டும் தற்போது இரண்டாவது அலையில் நாடு முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.</p>



<p>இந்தியாவில் தற்போது 1 கோடியே 93 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா முதலில் உருவான கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தை விட, தற்போதைய பாதிப்பு இது இருமடங்கு அதிகரித்துள்ளது.</p>



<p>இவ்வளவு நாட்களைக் கடந்து வந்தும், கொரோனா வைரஸ் எவ்வாறு பரவுகிறது? இதனைத் தடுக்க விஞ்ஞான ரீதியாக பலன் தரும் வகையில் என்ன நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்? ஏற்கெனவே நாம் பெற்ற அனுபவம் அல்லது பொது விஷயங்களின் அடிப்படையில் எவ்வாறு அணுக வேண்டும் என்பது குறித்து மத்திய பா.ஜ.க. ஆட்சியாளர்களுக்குப் புரிதல் இல்லை. வெளிப்படையான ஆபத்தான கருத்துக்களைக் கூறும் பா.ஜ.க.வினர், ஒரு தொற்று நோய் பரவும் சூழலில், என்ன சொல்லக் கூடாது என்பதை எல்லாம் பற்றிக் கவலைப்படவில்லை.</p>



<p>கடந்த 2 மாதங்களாக பா.ஜ.க.வினர் பேசிவரும் 9 விஷயங்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன:</p>



<ol class="wp-block-list"><li><strong>தொற்று நோயின் இறுதிக் கட்டத்தில் இருக்கிறோம்: மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன்.</strong></li></ol>



<p>கடந்த மார்ச் 7 ஆம் தேதி முதல் இந்தியா முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு மெதுவாக உயர்ந்து கொண்டிருந்தபோது, கொரோனா தொற்றிலிருந்து நாம் பாதுகாப்பாக இருக்கிறோம் என்று மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தவிர யாரும் கூறவில்லை.</p>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large"><img loading="lazy" decoding="async" width="600" height="314" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/04/123.jpg" alt="" class="wp-image-4374" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/04/123.jpg 600w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/04/123-300x157.jpg 300w" sizes="auto, (max-width: 600px) 100vw, 600px" /><figcaption><strong>Union health minister Harsh Vardhan standing to attention while speaking to Prime Minister Modi in this file photo from 2014</strong></figcaption></figure></div>



<p>இது தொடர்பாக ஹர்ஷ் வர்தன் கூறும்போது, &#8221; கொரோனாவை முடிவுக்குக் கொண்டு வரும் இறுதி ஆட்டத்தில் இருக்கிறோம். இந்த நிலையைக் கடக்க நாம் 3 வழிகளைப் பின்பற்றுவது அவசியம்: கொரோனா தடுப்பூசி விஷயத்தில் அரசியல் செய்யாமல், தடுப்பூசிகளின் பின்னால் இருக்கும் விஞ்ஞானத்தின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். சரியான நேரத்துக்கு நமது அன்புக்குரியவர்களையும் சுற்றத்தாரையும் கொரோனா தடுப்பூசி போட வைக்க வேண்டும்&#8221; என்றார்.</p>



<p>கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கையில் வெற்றி பெற்றுவிட்டதாக ஆரம்பக் கட்டத்திலேயே சுகாதாரத்துறை அமைச்சர் அறிவித்து விட்டார். இதன்படி பார்க்கும் போது, கொரோனா வைரசின் உருமாற்றம் எதிர்வரும் வாரங்களில் அழிவை ஏற்படுத்தும் என்பதை அவர் அறிந்திருக்கவில்லை என்பதையே இந்த அறிவிப்பு வெளிப்படுத்துகிறது. கொரோனா முதல் அலையால் கடந்த 2020 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் பெருமளவு தொற்று அதிகரித்ததை எதிர்கொண்ட அனுபவம் ஒவ்வொரு நாட்டுக்கும் உள்ளது. ஆனால், கொரோனாவின் இரண்டாவது அலையை எதிர்கொள்ள போதுமான தடுப்பூசி மருந்துகள் இந்தியாவில் இல்லை என்பது தான் உண்மை. ஆனால், பொருந்தாத தடுப்பூசி இலக்கை வைத்துக் கொண்டு இரண்டாவது அலையைச் சமாளித்துவிடலாம் என்று நினைத்துத் தான், ஹரித்துவாரில் கும்பமேளா மற்றும் ஏப்ரல் மாதம் வரை தேர்தல் பிரச்சாரத்தையும் அரசு முன்னெடுத்துச் சென்றது.</p>



<p>தற்போது போடப்படும் தடுப்பூசி இலக்கின்படி, 2021 ஆம் ஆண்டின் இறுதியில் மொத்த இலக்கில் 70 சதவிகிதத்தை மட்டுமே எட்ட முடியும். தேவை மற்றும் வினியோகத்தில் எந்த மாற்றமும் இல்லையென்றால், இதுவரை கொரோனாவுக்கு எதிரான ஆட்டம் முடியவில்லை என்பதை மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் புரிந்து கொள்ள வேண்டும்.</p>



<ol class="wp-block-list" start="2"><li><strong>ஆக்சிஜன் தேவை கட்டுக்குள் உள்ளது: மத்திய அமைச்சர் ப்யூஸ் கோயல்</strong></li></ol>



<p>நாடு முழுவதும் ஆக்சிஜன் பற்றாக்குறை மற்றும் வினியோகத்தின் மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளதையடுத்து, மாநில அரசுகள் கட்டுப்படுத்த தவறியதே ஆக்சிஜன் பற்றாக்குறைக்குக் காரணம் என்று குற்றம் சாட்டுகிறார் ப்யூஸ் கோயல்.</p>



<p>இது குறித்து அவர் கூறும்போது, &#8221; மருத்துவ ஆக்சிஜன் தேவையை மாநில அரசுகள் தான் பூர்த்தி செய்ய வேண்டும். வினியோக நிர்வாகத்தைப் போல், தேவை குறித்த நிர்வாகமும் முக்கியம். கொரோனா பரவலுக்கு மாநில அரசுகளே காரணம். அவர்கள் தங்கள் பொறுப்பைச் சரியாக நிறைவேற்ற வேண்டும். தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்தால், நாட்டின் சுகாதார கட்டமைப்புக்கு பெரும் சவாலாக இருக்கும். நாங்கள் மாநில அரசுகளுக்கு ஆதரவாக இருக்கிறோம். அவர்கள் தான் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிப்பதையும் கொரோனா தொற்று பரவாமல் தடுப்பதையும் அவசியம் கவனத்தில் கொள்ள வேண்டும். பல இடங்களில் ஆக்சிஜன் அதிக அளவில் பயன்படுத்துவதோடு வீணாக்கப்படுகிறது&#8221; என்றார்.</p>



<p>ப்யூஸ் கோயலின் இந்த கருத்துக்கு சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. #TooMuchOxygen என்ற ஹேஸ்டேக்குடன் ட்விட்டரில் பலரும் கண்டனங்களை எழுப்பி வருகின்றனர்.</p>



<p>கொரோனா தொற்றுக்கு ஆளாவோருக்கு, நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்து நுரையீரல் செயல்பாடும் பாதிக்கும். அந்த நேரத்தில் நுரையீரல் செயல்பாட்டின் சுமையைக் குறைக்கக் காற்றிலிருந்து வாயுவை வடிகட்டி செலுத்த வேண்டும். இவ்வாறு பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு ஒரு நிமிடத்துக்கு 130 லிட்டர் வரை ஆக்சிஜன் தேவை.</p>



<p>இதனைக் கருத்தில் கொண்டு, கடந்த 8 மாதங்களுக்கு முன்பு 162 ஆக்சிஜன் உற்பத்திப் பிரிவுகளைத் தொடங்கப்போவதாக மத்திய அரசு அறிவித்தது. ஆனால், இதுவரை 11 ஆக்சிஜன் உற்பத்தி பிரிவுகள் மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன. இதில், 5 பிரிவுகள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளன.</p>



<p>2020 மே மாதம் பியூஸ் கோயல் கூறும்போது, &#8221; 130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியா தான், கொரோனாவிலிருந்து மீண்ட முதல் நாடாக இருக்கும்&#8221; என்று பெருமைப் பட்டுக் கொண்டார்.</p>



<ol class="wp-block-list" start="3"><li><strong>இவ்வளவு கூட்டத்தைப் பார்த்ததில்லை: பிரதமர் மோடி</strong></li></ol>



<p>மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி, தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் இது போன்ற கூட்டத்தை நான் பார்த்ததில்லை என்று குறிப்பிட்டார். கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில், இவ்வாறு கூட்டம் கூடுவது மோசமானது என்பது பிரதமருக்குத் தெரியவேண்டாமா? மக்கள் மீது நாட்டின் பிரதமருக்கு அக்கறை வேண்டாமா?</p>



<p>இந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அவர் பேசும்போது,&#8221; கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை மக்கள் கூட்டத்தைத் தான் பார்க்கிறேன்&#8221; என்றார். அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பெரும்பாலானவர்கள் முகக்கவசம் அணியாமல் இருந்ததைப் பற்றி அவர் ஒரு வார்த்தைகூட சொல்லவில்லை.</p>



<p>கடந்த சில வாரங்களாக, தொடர்ந்து தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசி வருகிறார். அதே பிரதமர் தான், நாட்டில் பரவும் கொரோனா சூழ்நிலை குறித்தும் ஆய்வு நடத்தி வருகிறார். கூட்டத்தைக் கூட்டி கொரோனா பரவலுக்குக் காரணமாக இருந்துவிட்டு, பின்னர் கொரோனாவை தடுப்பது குறித்து ஆய்வு செய்வது முரண் இல்லையா?</p>



<ol class="wp-block-list" start="4"><li><strong>கொரோனா முடிந்துவிட்டதால் முகக்கவசம் தேவையில்லை: ஹிமந்தா பிஸ்வா ஷர்மா</strong></li></ol>



<p>கொரோனா முடிந்துவிட்டதால் முகக்கவசங்களை இனி அணியத் தேவையில்லை என்று அசாம் சுகாதாரத்துறை அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா ஷர்மா முடிவு செய்கிறார். இப்போது தான் கொரோனா தொற்று அதிகரித்து வருவதை அவர் கவனத்தில் கொள்ளவில்லை.</p>



<p>&#8221;அசாமில் கொரோனா கிடையாது. அதனால் முகக்கவசம் அணியவேண்டிய அவசியம் இல்லை. தேவைப்பட்டால் நான் மக்களுக்கு தெரிவிக்கிறேன்&#8221; என்கிறார் ஷர்மா. இதற்கு கடும் கண்டனங்கள் வந்தபிறகும், தன் நிலையிலிருந்து அவர் பின்வாங்கவில்லை. அசாமில் கொரோனாவை முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டதால், நீண்ட காலத்துக்கு முகக்கவசம் அவசியம் இல்லை என்று மீண்டும் சொல்கிறார். அசாமில் தற்போது 5 ஆயிரத்து 268 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p>



<ol class="wp-block-list" start="5"><li><strong>அன்னை கங்கையின் ஆசியால் கொரோனா இருக்காது : தீரத் சிங் ராவத்</strong></li></ol>



<p>கொரோனா வைரசின் அச்சுறுத்தலைத் தொடர்ந்து மறுத்துக் கொண்டிருப்பவர் பா.ஜ.க.வைச் சேர்ந்த உத்தராகாண்ட் முதலமைச்சர் தீரத் சிங் ராவத். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கும்பமேளாவில் மக்கள் பங்கேற்ற ஆக வேண்டும் என்பதால் தான், கொரோனா அச்சுறுத்தலை அவர் பொருட்படுத்தாமல் பேசி வருகிறார்.</p>



<p>கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில் கும்பமேளா நடத்துவது குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்தன. அப்போதும், கும்பமேளாவை ரத்து செய்ய மாட்டோம் என திட்டவட்டமாக அறிவித்தார். அதற்கான காரணத்தைக் கூறும்போது, &#8221;அன்னை கங்கை பாயும் இங்கு கொரோனா இருக்காது&#8221; என்றார்.</p>



<p>இந்நிலையில், கும்பமேளாவில் கலந்து கொண்ட ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். கும்பமேளாவில் கலந்து கொண்டுவிட்டு, அகமதாபாத்துக்குத் திரும்பிய 34 பேரில் 13 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். பிரதமர் நரேந்திர மோடியே கும்பமேளாவில் கலந்து கொண்டிருந்தாலும், அன்னை கங்கை நிச்சயம் காப்பாற்றியிருக்க மாட்டாள் என்பது தான் உண்மை. கும்பமேளா நடைபெறுவதற்கு ஒரு மாதத்துக்கு முன்பு, எல்லோரும் கும்பமேளாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று விளம்பரங்கள் மூலம் அழைப்பு விடுத்த பிரதமர் மோடி, கும்பமேளாவில் கூட்டம் சேர்க்க வேண்டாம் என்று இப்போது கூறுகிறார்.</p>



<ol class="wp-block-list" start="6"><li><strong>கடுமையாக உழைக்கும் பா.ஜ.க. தொண்டர்களை கொரோனா தாக்காது : கோவிந்த் படேல்</strong></li></ol>



<p>குஜராத்தின் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப அமைச்சராக இருக்கும் கோவிந்த் படேல், கடுமையாக உழைக்கும் தொழிலாளர்களை கொரோனா தாக்காது, அதனால் தான் பா.ஜ.க. தொண்டர்கள் கொரோனா பாதிக்காமல் பத்திரமாக இருக்கிறார்கள் என்கிறார்.</p>



<p>இப்படிச் சொன்ன கோவிந்த் படேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சில மாதங்களுக்கு முன்பு தான் குணமடைந்து வீடு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.</p>



<ol class="wp-block-list" start="7"><li><strong>கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் போர் உலகத்தை ஈர்த்துள்ளது: மோடி</strong></li></ol>



<p>மற்றொரு வெற்றிக் கொண்டாட்டத்துக்குத் தயாராக இருக்க வேண்டும். இந்த முறை மோடியைத் தவிர யாரும் நடனம் ஆடி வெற்றியைக் கொண்டாடப் போவதில்லை.</p>



<p>கடந்த பிப்ரவரி மாதம் பேசிய மோடி, &#8221;கொரோனா பரவல் தொடங்கியபோது, இந்தியாவின் நிலையைப் பார்த்து உலகமே கவலைப்பட்டது. இன்றைக்கு கொரோனாவுக்கு எதிரான போரைப் பார்த்து உலகமே வியந்துள்ளது. உலகளாவிய நன்மைகளை மேம்படுத்துவதில் இந்தியா மனித மைய அணுகுமுறையைப் பின்பற்றுகிறது&#8221; என்றார்.</p>



<p>இரண்டே மாதத்தில் உலகிலேயே கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையில் முதல் இடத்தில் இந்தியா உள்ளது.</p>



<ol class="wp-block-list" start="8"><li><strong>கொரோனா தடுப்பு மருந்தாக &#8216;கொரோனில்&#8217;: ஹர்ஷ் வர்தனும் நிதின் கட்கரியும் ஆதரவு</strong></li></ol>



<p>ஆயுர்வேத வியாபாரியும் யோகா குருவுமான ராம்தேவ் கடந்த பிப்ரவரி மாதம் &#8216;கொரோனில்&#8217; என்ற ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்திருந்தார். மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தனும், நிதின் கட்கரியும் இது தொடர்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, கொரோனில் மருந்துக்கு ஆதரவாகப் பேசினர்.</p>



<p>தமது பதாஞ்சலி நிறுவனத்தில் தயாராகும் ஆயுர்வேத மருந்தான கொரோனில் கொரோனாவை குணப்படுத்தும் என நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளதாகவும் ராம்தேவ் கூறினார். இதனை உடனே மறுத்த உலக சுகாதார அமைப்பு, &#8216;ராம்தேவ் சொல்வது பொய்&#8217; என்று கூறி அவரது முகத்திரையைக் கிழித்தது.</p>



<p>கொரோனில் மருந்து விற்பனை தொடக்க விழாவில் பேசிய ஹர்ஷ் வர்தன், &#8216;ஆயுர்வேத தயாரிப்புகள் அதிகரிப்பதைப் பார்க்கும் போது, ஆயுர்வேதத்தை மக்கள் ஏற்றுக் கொண்டதையே காட்டுகிறது&#8217; என்றார்.</p>



<p>கொரோனில் ஆயுர்வேத மருந்துக்குப் பின்னால், விஞ்ஞானம் இருக்க வேண்டும். இரண்டு அமைச்சர்களை வைத்துக் கொண்டு வெளியிடப்பட்ட ஆய்வுக் கட்டுரை சிக்கல் நிறைந்தது. இது போன்ற மருத்துகளுக்கு அரசு ஆதரவைத் தெரிவிப்பது ஆபத்தானது.</p>



<ol class="wp-block-list" start="9"><li><strong>வயதானவர்கள் சாகட்டும்: பிரேம் சிங் படேல்</strong></li></ol>



<p>மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பா.ஜ.க. அமைச்சர் பிரேம் சிங் படேல் கூறும்போது, &#8221;இந்தியாவில் தொற்றால் நிகழும் இறப்புகளுக்கு உதவ முடியாது. ஏதாவது ஒரு வகையில் தினமும் மக்கள் செத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். கொரோனாவிலிருந்து பாதுகாப்பதைப் பற்றி எல்லோரும் பேசுகிறார்கள். வயதானவர்கள் எப்படியும் இறக்கத்தான் போகிறார்கள்&#8221; என்ற மனிதநேயமற்ற கருத்தைத் தெரிவித்துள்ளார்.</p>



<p>கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி மக்கள் தவித்துக் கொண்டிருக்கும் போது எவ்வளவு ஆபத்தான கருத்துகளை பா.ஜ.கவினர் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.</p>



<p>கொரோனாவை விட இவர்கள் மிகவும் கொடியவர்கள்!</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/bjp-leaders-covid-19-pandemic-remarks/">கொரோனாவை விட கொடிய வைரஸ் பா.ஜ.க.: மக்கள் உயிரோடு விளையாடும் கொடுமை!</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://desiyamurasu.com/news-india/bjp-leaders-covid-19-pandemic-remarks/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>1,000 பதவியிடங்களுக்கு போட்டியிடும் 5 லட்சம் பேர்: திணறும் மோடி அரசின் &#8216;எம்எஸ்எம்இ சம்பர்க்&#8217; வேலைவாய்ப்பு தளம்</title>
		<link>https://desiyamurasu.com/news-india/msme-skil-1000-vacancies-for-nearly-5-lakh-jobseekers-modi-govts-msme-job-portal-seems-struggling-to-take-off/</link>
					<comments>https://desiyamurasu.com/news-india/msme-skil-1000-vacancies-for-nearly-5-lakh-jobseekers-modi-govts-msme-job-portal-seems-struggling-to-take-off/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Admin]]></dc:creator>
		<pubDate>Sat, 24 Apr 2021 13:26:07 +0000</pubDate>
				<category><![CDATA[தேசிய அரசியல்]]></category>
		<category><![CDATA[MSME]]></category>
		<guid isPermaLink="false">https://desiyamurasu.com/?p=4362</guid>

					<description><![CDATA[<p>எம்எஸ்எம்இ எனப்படும் சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் திறமையான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில், குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு &#8216;எம்எஸ்எம்இ சம்பர்க்&#8217; என்ற வேலைவாய்ப்பு தளத்தை தொடங்கினார். வேலை வேண்டி இந்த தளத்தில் பதிவு செய்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க இந்த தளம் தவறிவிட்டது. அரசு தரவுகளின்படி, 131 பதவிகளுக்கான 936 காலிப்பணியிடங்களுக்கு 4 லட்சத்து 71 ஆயிரத்து 596 பேர் பதிவு செய்தனர். வேலைவாய்ப்பு [&#8230;]</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/msme-skil-1000-vacancies-for-nearly-5-lakh-jobseekers-modi-govts-msme-job-portal-seems-struggling-to-take-off/">1,000 பதவியிடங்களுக்கு போட்டியிடும் 5 லட்சம் பேர்: திணறும் மோடி அரசின் &#8216;எம்எஸ்எம்இ சம்பர்க்&#8217; வேலைவாய்ப்பு தளம்</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>எம்எஸ்எம்இ எனப்படும் சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் திறமையான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில், குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு &#8216;எம்எஸ்எம்இ சம்பர்க்&#8217; என்ற வேலைவாய்ப்பு தளத்தை தொடங்கினார்.</p>



<p>வேலை வேண்டி இந்த தளத்தில் பதிவு செய்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க இந்த தளம் தவறிவிட்டது. அரசு தரவுகளின்படி, 131 பதவிகளுக்கான 936 காலிப்பணியிடங்களுக்கு 4 லட்சத்து 71 ஆயிரத்து 596 பேர் பதிவு செய்தனர். வேலைவாய்ப்பு தளத்தை தொடங்கியதிலிருந்து கடந்த ஏப்ரல் மாதம் வரை, 6 ஆயிரத்து 80 உள்நாட்டு மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் தகுதியான ஆட்கள் வேண்டி இந்த தளத்தில் பதிவு செய்திருந்தன. இந்த நிலையில், வேலைவாய்ப்பு தளம் தொடங்கியதிலிருந்து கடந்த ஏப்ரல் வரை, பதிவு செய்தவர்களில் 28 ஆயிரத்து 746 பேருக்கு மட்டுமே வேலை கிடைத்தது. அதாவது மாதம் ஒன்றுக்கு 845 பேருக்கு என்ற விகிதத்தில் இந்த வேலைவாய்ப்பு தளம் மூலம் வேலை கிடைத்துள்ளது. &#8216;எம்எஸ்எம்இ சம்பர்க்&#8217; வேலைவாய்ப்பு தளத்தில் 31 ஆயிரத்து 941 பேர் வேலை கேட்டும், 1913 நிறுவனங்கள் தகுதியான ஆட்கள் கேட்டும் பதிவு செய்துள்ளனர்.</p>



<p>பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு, எம்எஸ்எம்இ சம்பர்க் வேலைவாய்ப்பு தளம் தொடங்கப்பட்டது. ஏற்கெனவே எம்எஸ்எம்இ துறையில் 30 சதவிகிதம் பேர் வேலை இழந்தும், பல நிறுவனங்கள் மூடப்பட்ட நிலையில், சரியான நபர்களை நிறுவனங்களுக்குக் கண்டுபிடித்துத் தருவதற்காக இந்த எம்எஸ்எம்இ சம்பர்க் தளம் தொடங்கப்பட்டது. இதன்மூலம் அரசால் எப்படி வேலை வாய்ப்பை உருவாக்க முடியும் என்ற கேள்வி எழுந்தது. இப்போது சில மாநிலங்களில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதால் வேலைவாய்ப்பை உருவாக்குவதில் மேலும் பாதிப்பு ஏற்படும்.</p>



<p>எம்எஸ்எம்இ தொழில்நுட்ப மையங்களிலிருநது பயிற்சி பெற்று வரும் மாணவர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு அளிப்பதை இந்த எம்எஸ்எம்இ சம்பர்க் தளத்தின் முக்கிய நோக்கமாக இருக்கிறது. ஆட்கள் தேவைப்படுவோரும் தங்களுக்குத் தேவையானவர்களை பணிக்கு அமர்த்த பதிவு செய்யலாம்.</p>



<p>எம்எஸ்எம்இ சம்பர்க் தரவுகளின்படி, இந்தியாவில் உள்ள 18 எம்எஸ்எம்இ தொழில்நுட்ப மையங்கள் மூலம் ஆண்டுதோறும் 1 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு பயிற்சி அளிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>



<p>எம்எஸ்எம்இ அமைச்சகத்தின் வருடாந்திர அறிக்கையின்படி, 2019 டிசம்பர் 31 ஆம் தேதி வரை, 53 ஆயிரத்து 295 பேர் வேலை கேட்டு பதிவு செய்திருந்தனர். 5,397 நிறுவனங்கள் ஆட்கள் கேட்டு பதிவு செய்திருந்தனர். 2021 ஜனவரி 20 ஆம் தேதி வரை, 4 லட்சத்து 68 ஆயிரத்து 804 பேர் வேலை கேட்டு எம்எஸ்எம்இ சம்பர்க் தளத்தில் பதிவு செய்திருந்தனர். அதேசமயம், ஆட்கள் கேட்டு 5 ஆயிரத்து 951 நிறுவனங்கள் பதிவு செய்திருந்தன. அனிமேஷன், அடோப் ஃபோட்டோஷாப், சின்சி மில்லிங், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், வெல்டிங், சோஷியல் மீடியா மார்க்கெட்டிங், பாதணிகள் வடிவமைப்பு, ரோபோடிக்ஸ் போன்றவற்றிலிருந்து தங்களுக்குப் பொருந்தக்கூடிய பணிகளை வேலை கேட்டுப் பதிவு செய்வோர் தேர்வு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.</p>



<p>வேலைவாய்ப்பை உருவாக்க மாறுபட்ட இரண்டு கொள்கைகள் இருப்பது நல்லது தான். ஆனால், அதிகபட்ச பயனுள்ளதாக அவை இருக்கவில்லை. வகுக்கப்படும் கொள்கை பிரச்சினைகளுக்குப் பதில் அளிப்பதாக இருக்க வேண்டும். அடுத்த 6 மாதங்களில் அதிகப்படியான வேலை வாய்ப்புகளை ஒருவர் எதிர்பார்க்க முடியாது. அதிகபட்ச வேலைவாய்ப்பு கிடைக்க, நிறுவனங்கள் தான் வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும். அவ்வாறு வேலை வாய்ப்பை உருவாக்கும் சூழலை உருவாக்க, எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கு மத்திய அரசு நிதியுதவி செய்ய வேண்டும். அவ்வாறு நிதியுதவி செய்யும் போது, அந்த நிறுவனங்கள் வியாபார வாய்ப்புகளை அதிகரித்து வேலைவாய்ப்பை தாங்களாகவே அதிகரிப்பார்கள். அப்போது தான் வேலைவாய்ப்பு தளத்தில் பதவிகள் குறித்த விவரத்தைப் பட்டியலிட முடியும்.</p>



<p>முக்கியமாக, &#8216;எம்எஸ்எம்இ சம்பர்க்&#8217; தளத்தின் வழியே 28 ஆயிரத்து 746 பேருக்கு மட்டுமே வேலை கிடைத்துள்ளது. இதுவரை எம்எஸ்எம்இ துறையில் 11 கோடி வேலைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில், 0.026 சதவிகிதத்தினருக்கு மட்டுமே வேலை வழங்கப்பட்டுள்ளது. எம்எஸ்எம்இ எனப்படும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தான் நம் நாட்டின் முதுகெலும்பு.</p>



<p>ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 இல் ஒரு பங்களிப்பாகவும், ஏற்றுமதியின் பாதி அளவாகவும் 11 கோடி வேலைவாய்ப்புகளை எம்எஸ்எம்இ துறை உருவாக்கியுள்ளதாக, அமேசானின் வருடாந்திர விழாவில் பேசிய எம்எஸ்எம்இ துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/msme-skil-1000-vacancies-for-nearly-5-lakh-jobseekers-modi-govts-msme-job-portal-seems-struggling-to-take-off/">1,000 பதவியிடங்களுக்கு போட்டியிடும் 5 லட்சம் பேர்: திணறும் மோடி அரசின் &#8216;எம்எஸ்எம்இ சம்பர்க்&#8217; வேலைவாய்ப்பு தளம்</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://desiyamurasu.com/news-india/msme-skil-1000-vacancies-for-nearly-5-lakh-jobseekers-modi-govts-msme-job-portal-seems-struggling-to-take-off/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>மன்மோகன் சிங் ஆலோசனையை ஏற்று செயல்படுங்கள் : பிரதமர் மோடிக்கு பிரியங்கா காந்தி வேண்டுகோள்</title>
		<link>https://desiyamurasu.com/news-india/congresss-priyanka-gandhi-says-when-manmohan-singh-gives-advice-during-crises-listen/</link>
					<comments>https://desiyamurasu.com/news-india/congresss-priyanka-gandhi-says-when-manmohan-singh-gives-advice-during-crises-listen/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Admin]]></dc:creator>
		<pubDate>Fri, 23 Apr 2021 16:40:50 +0000</pubDate>
				<category><![CDATA[தேசிய அரசியல்]]></category>
		<category><![CDATA[Corona Vaccine]]></category>
		<category><![CDATA[Dr Manmohan Singh]]></category>
		<category><![CDATA[Priyanka Gandhi]]></category>
		<guid isPermaLink="false">https://desiyamurasu.com/?p=4358</guid>

					<description><![CDATA[<p>&#8221;முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆலோசனை கூறும்போது, அதனை ஏற்று செயல்படுங்கள்&#8221; என பிரதமர் மோடியை காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், &#8221; கொரோனா போன்ற முன் எப்போதும் இல்லாத சுகாதாரப் பிரச்சினையை நாடு எதிர்கொள்ளும் போது, எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையைப் பெற மோடி அரசு தவறிவிட்டது. இந்த பிரச்சினையை எதிர்கொள்ள ஒட்டுமொத்த நாடே ஓரணியில் நின்றபோது, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறிய [&#8230;]</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/congresss-priyanka-gandhi-says-when-manmohan-singh-gives-advice-during-crises-listen/">மன்மோகன் சிங் ஆலோசனையை ஏற்று செயல்படுங்கள் : பிரதமர் மோடிக்கு பிரியங்கா காந்தி வேண்டுகோள்</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>&#8221;முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆலோசனை கூறும்போது, அதனை ஏற்று செயல்படுங்கள்&#8221; என பிரதமர் மோடியை காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி கேட்டுக் கொண்டுள்ளார்.</p>



<p>இது குறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், &#8221; கொரோனா போன்ற முன் எப்போதும் இல்லாத சுகாதாரப் பிரச்சினையை நாடு எதிர்கொள்ளும் போது, எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையைப் பெற மோடி அரசு தவறிவிட்டது.</p>



<p>இந்த பிரச்சினையை எதிர்கொள்ள ஒட்டுமொத்த நாடே ஓரணியில் நின்றபோது, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறிய ஆலோசனைகளை பிரதமர் மோடி ஏளனம் செய்தார்.</p>



<p>இனிமேலாவது மக்கள் பிரச்சினையில் சோதித்துப் பார்ப்பதை நிறுத்திவிட்டு, மக்களோடும் எதிர்கட்சிகளோடும் அவர் இணைந்து செயல்படவேண்டும். பாகிஸ்தானின் உளவுத்துறையினருடன் கூட மத்திய பா.ஜ.க. அரசு பேச தயாராக இருக்கிறது. ஆனால், எதிர்க்கட்சிகளுடன் பேச அவர்கள் தயாராக இல்லை.</p>



<p>இன்றைக்கு எந்த எதிர்க்கட்சித் தலைவரும் நேர்மறையான, வலுவான ஆலோசனை தரமாட்டார் என்பதை நான் நம்பவில்லை. நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் என்று அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருமித்த குரலில் கூறுகின்றன.</p>



<p>மன்மோகன் சிங் 10 ஆண்டுகள் பிரதமராக இருந்தார். அவர் எந்த அளவுக்கு கண்ணியமான மனிதராக இருந்தார் என்பதை நாம் அறிவோம். அப்போது ஆலோசனைகளைக் கேட்டுப் பெற்ற அவர், அதே கண்ணியத்துடன் அவற்றைக் கருத்தில் கொண்டு செயல்பட்டார்.</p>



<p>முன்னாள் பிரதமர் எழுதும் கடிதத்துக்கு அமைச்சர் மூலம் பதில் அளிக்கச் செய்து, சிறுபிள்ளைத் தனமாக நடந்து கொண்டு நேரத்தை மத்திய அரசு வீணடிக்கிறது.</p>



<p>பிரதமருக்கு மன்மோகன் சிங் எழுதிய கடிதத்தில், &#8221;கொரோனா தடுப்பூசி போடுவதில் ஏற்படும் பதற்றத்தைத் தடுத்து, மக்கள் தொகைக்கு ஏற்ப தடுப்பூசிகளைப் போடுங்கள்&#8221; என்று குறிப்பிட்டிருந்தார்.</p>



<p>இந்த விஷயத்தில் முழு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில், சில ஆலோசனைகளையும் மன்மோகன் சிங் தெரிவித்திருந்தார். இதற்குப் பதில் அளித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன், &#8221;அவர் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியினர் மன்மோகன் சிங்கின் ஆலோசனை கேட்டாலே அது வரலாறு&#8221; என்று குறிப்பிட்டிருந்தார்.</p>



<p>இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை பரவுவது குறித்துத் தான், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அந்த கடிதத்தை எழுதியிருந்தார். கடந்த ஆண்டு கொரோனா பரவலின் போது ஏற்பட்ட பாதிப்பை விட தற்போது அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் கிட்டத்தட்ட 3 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.</p>



<p>2021 ஜனவரி முதல் மார்ச் வரை 6 கோடி கொரோனா தடுப்பூசி மருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது, மக்களுக்கு இழைத்த துரோகம். அதே காலகட்டத்தில், இந்திய மக்களுக்கு 3 முதல் 4 கோடி வரை தடுப்பூசிகள் மட்டுமே போடப்பட்டன.</p>



<p>இந்தியர்களுக்கு மத்திய அரசு ஏன் முன்னுரிமை அளிக்கவில்லை? இந்த நாட்டைப் பயன்படுத்தி பிரதமர் மோடி சுயவிளம்பரம் தேடுவது ஏன்? 22 கோடி மக்கள் தொகை கொண்ட உத்தரப்பிரதேசத்தில், ஒரு கோடி தடுப்பூசிகள் மட்டுமே அனுப்பப்பட்டுள்ளன. இன்றைக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறைக்கு மாநில அரசுகளே காரணம் என, பிரதமர் மோடியும் மத்திய அமைச்சர்களும் குற்றம் சாட்டிக் கொண்டிருக்கிறார்கள். மருந்துகள் தேவை மற்றும் வினியோக விஷயத்தில், அவர்கள் மனித உயிர்களுடன் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். தொடர்ந்து அரசியல் பேரணியை நடத்திக் கொண்டிருக்கும் ஒரு பிரதமரிடம் ஒருவர் எதை எதிர்பார்க்க முடியும். கொரோனா பரவலைத் தடுப்பதில் ஆர்வம் காட்டுவதை விட, மேற்கு வங்க தேர்தல் பிரச்சாரத்தில் தான் ஆளும் பா.ஜ.கவினர் ஆர்வம் காட்டினார்கள்.</p>



<p>இன்றைக்கும் அவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் கதறுகிறார்கள். உதவி கேட்டு அழுகிறார்கள். ஆக்ஸிஜன், படுக்கைகள், மருந்துகள் கேட்கிறார்கள். நீங்களோ, பெரிய பேரணிகளை நடத்திக் கொண்டு சிரித்துக் கொண்டிருக்கிறீர்கள். எப்படி உங்களால் முடிகிறது?</p>



<p>இந்த விஷயத்தில் நான் அரசியல் செய்வதாக பா.ஜ.க. கூறுகிறது. இந்த விஷயத்தை நாங்கள் அரசியலாக்க விரும்பவில்லை. கொரோனாவின் இரண்டாவது அலையோடு நாடு போராடிக் கொண்டிருக்கிறது. ஆனால், பிரதமரோ மக்கள் மீது அக்கறை இல்லாமல் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். இதைச் சுட்டிக்காட்டினால் அரசியலா?&#8221; என்றார்.</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-india/congresss-priyanka-gandhi-says-when-manmohan-singh-gives-advice-during-crises-listen/">மன்மோகன் சிங் ஆலோசனையை ஏற்று செயல்படுங்கள் : பிரதமர் மோடிக்கு பிரியங்கா காந்தி வேண்டுகோள்</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://desiyamurasu.com/news-india/congresss-priyanka-gandhi-says-when-manmohan-singh-gives-advice-during-crises-listen/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
	</channel>
</rss>
