<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>பொருளாதாரம் - தேசிய முரசு - Desiya Murasu</title>
	<atom:link href="https://desiyamurasu.com/category/news-economics/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://desiyamurasu.com/category/news-economics/</link>
	<description>DesiyaMurasu – Daily Opinions &#38; Analysis on Latest News  &#124; Tamil News</description>
	<lastBuildDate>Wed, 16 Sep 2020 11:38:17 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.8.3</generator>

<image>
	<url>https://desiyamurasu.com/wp-content/uploads/2020/07/cropped-FAV-copy-1-32x32.png</url>
	<title>பொருளாதாரம் - தேசிய முரசு - Desiya Murasu</title>
	<link>https://desiyamurasu.com/category/news-economics/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>கோமா நிலையில் இந்திய பொருளாதாரம்: காப்பாற்ற எந்த கடவுளை அழைப்பது?</title>
		<link>https://desiyamurasu.com/news-economics/india-economy-into-coma-stage-due-to-lockdown/</link>
					<comments>https://desiyamurasu.com/news-economics/india-economy-into-coma-stage-due-to-lockdown/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[ஆ. கோபண்ணா]]></dc:creator>
		<pubDate>Wed, 16 Sep 2020 11:38:15 +0000</pubDate>
				<category><![CDATA[பொருளாதாரம்]]></category>
		<category><![CDATA[India Economy]]></category>
		<guid isPermaLink="false">https://desiyamurasu.com/?p=2306</guid>

					<description><![CDATA[<p>கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதி அன்று இந்திய அரசின் புள்ளி விவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளின் படி, உண்மையான காலாண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி 2019 ஆம் ஆண்டு ஏப்ரல்-ஜுன் மற்றும் 2020 ஆம் ஆண்டு ஏப்ரல்- ஜுன் இடையில் 23.9 சதவீதமாக குறைந்துவிட்டது. 1996 ஆம் ஆண்டில் காலாண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மதிப்பீடுகளை வெளியிடத் தொடங்கியதிலிருந்து, உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது. [&#8230;]</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-economics/india-economy-into-coma-stage-due-to-lockdown/">கோமா நிலையில் இந்திய பொருளாதாரம்: காப்பாற்ற எந்த கடவுளை அழைப்பது?</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதி அன்று இந்திய அரசின் புள்ளி விவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளின் படி, உண்மையான காலாண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி 2019 ஆம் ஆண்டு ஏப்ரல்-ஜுன் மற்றும் 2020 ஆம் ஆண்டு ஏப்ரல்- ஜுன் இடையில் 23.9 சதவீதமாக குறைந்துவிட்டது.</p>



<p>1996 ஆம் ஆண்டில் காலாண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மதிப்பீடுகளை வெளியிடத் தொடங்கியதிலிருந்து, உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது. இது ஒரு பொருளாதார பேரழிவு என்பதில் சந்தேகமில்லை. பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி அமைப்பு வெளியிட்ட தரவுகளின்படி, இந்த பொருளாதார வீழ்ச்சி, உலகில் உள்ள பெரிய அளவிலான பொருளாதாரத்தைக் கொண்ட 13 நாடுகளைவிட பெரிய அளவில் உள்ளது தெரியவந்துள்ளது.</p>



<p>அந்த குறிப்பிட்ட காலக்கட்டத்தில் சீனா மட்டுமே 3.2 சதவீதம் அளவுக்கு பொருளாதார வளர்ச்சி பெற்றுள்ளது. எனினும், பொளாதார வீழ்ச்சி புள்ளிவிவரத் தகவல்களை தவிர்ப்பதற்காகவும், நயவஞ்சக நோக்கத்துடனும் குறைத்து மதிப்பிடப்படுகிறது.</p>



<p>அமைப்புசாரா துறை இந்திய பொருளாதாரத்தில் முக்கிய பங்காற்றுகிறது. சில மதிப்பீடுகளின்படி, இது உற்பத்தியில் 45 சதவீதம் மற்றும் உழைக்கும் மக்களின் 93 சதவீத வேலை வாய்ப்பைக் கொண்டுள்ளது. தரவு சேகரிப்பு முறைகள் காலப்போக்குக்கு தக்கவாறு சந்தேகத்துக்கு இடமின்றி மேம்பட்டுள்ளன என்றாலும், அமைப்புசாரா துறையை பொறுத்தவரை, அரசின் மதிப்பீட்டில் நம்பகத்தன்மை இல்லை என்றே தெரிகிறது.</p>



<p>பண மதிப்பிழப்பு நடவடிக்கையில் இருந்து மீள்வதற்குள், அமைப்புசாரா துறையை பொது முடக்கம் பெரிதும் பாதித்துள்ளது. கடைசி காலாண்டில் வேலை வாய்ப்பு அதிகரித்து இருப்பதாக நமக்கு சொல்லப்படுகிறது. ஆனால், இது சுயதொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் மதிப்பீடு. கொரோனா தளர்வுகளுக்குப் பிறகு இவர்கள் தொழிலுக்கு மீண்டும் திரும்பினாலும், மக்களிடம் வாங்கும் திறன் இல்லாததால் குறைந்த அளவிலான வருவாயை மட்டுமே இவர்கள் ஈட்டுகிறார்கள்.</p>



<p>நல்ல மழைக்காலம் என்பதால், விவசாயத்துறை மட்டுமே பாதிப்படையவில்லை. 2019 ஆம் ஆண்டு ஏப்ரல்-ஜுன் மற்றும் 2020 ஆம் ஆண்டு ஏப்ரல்-ஜுன் மாதத்துக்கு இடைப்பட்ட காலத்தில் விவசாயத்துறையின் வளர்ச்சி 3.4 சதவீதம் உயர்ந்துள்ளது. எனினும், இந்த காலக்கட்டத்தில் பொருளாதாரத்தை மீட்டெடுக்க விவசாயத்துறையின் வளர்ச்சி &nbsp;உதவாது.</p>



<p>இந்தியாவில் பொருளாதார வீழ்ச்சி கொரோனா பரவலுக்குப் பிறகு ஏற்பட்டதல்ல. கடந்த சில ஆண்டுகளாகவே பொருளாதார மந்தநிலை தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் பொருளாதாரத்துக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி மாறிவரும் நிலையில், 2017 காலாண்டிலிருந்தே மொத்த உள்நாட்டு உற்பத்தியின் உண்மையான காலாண்டு விகிதம் குறைந்து வருகிறது. 2017 ஆம் ஆண்டு நான்காவது காலாண்டில் 7.6 சதவீதமாக இருந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி, 2020 ஆம் ஆண்டில் முதல் காலாண்டில் 3.3 சதவீதமாக குறைந்துவிட்டது.</p>



<p>மோசமான நடவடிக்கைகளால் மத்திய அரசே பொருளாதாரத்தை பாதிப்படையச் செய்துள்ளது. பணமதிப்பு நடவடிக்கை முதல் அதிர்ச்சியைக் கொடுத்தது. &nbsp;இரண்டாவதாக, 2017 ஆண்டு ஜிஎஸ்டி அமல்படுத்தியது இரண்டாவது அதிர்ச்சி. &nbsp;முதல் அதிர்ச்சியில் இருந்து பொருளாதாரம் இன்னும் மீளவில்லை. இப்படியே தொடர்ந்து கொண்டு போன பொருளாதார நிலை, கொரோனா பரவலுக்கு பிந்தைய பொது முடக்கத்தால் கோமா நிலையை அடைந்துவிட்டது.</p>



<p>எதிர்காலத்தில் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியுமா? எதார்த்தத்தில் முடியும். ஆனால் நடைமுறையில் சாத்தியம் இல்லை. காரணம் என்னவென்றால், ஏழைகளின் பொருளாதார பாதிப்பு குறித்து மத்திய அரசு கவலைப்படவில்லை. ஆனால், ஆட்சியாளர்களின் நெருக்கமான தொழிலதிபர்கள் பொருளாதாரத்தில் நன்கு வளர்ச்சி பெற்றுள்ளனர். முகேஷ் அம்பானி உலகிலேயே 4 ஆவது பணக்காரராக உயர்ந்திருக்கிறார். அம்பானிகளும் அதானிகளும் மட்டுமே உயர்ந்து கொண்டே போகிறார்கள்.</p>



<p>பொது முடக்கத்துக்குப் பின் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்லும்போது விபத்திலும் இயற்கையாகவும் மரணம் அடைந்த புலம்பெயர் தொழிலாளர்களின் விவரங்கள் இல்லாததால், இழப்பீடு வழங்க முடியாது என நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துவிட்டது.</p>



<p>ஏழைகள் என்ன செய்வது? மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதைப் போல், &#8221;எல்லாம் கடவுள் செயல்&#8221; என்று கூறிவிட்டு அடுத்த தேர்தலில் பார்த்துக் கொள்ள வேண்டியதுதான்.</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-economics/india-economy-into-coma-stage-due-to-lockdown/">கோமா நிலையில் இந்திய பொருளாதாரம்: காப்பாற்ற எந்த கடவுளை அழைப்பது?</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://desiyamurasu.com/news-economics/india-economy-into-coma-stage-due-to-lockdown/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>சீர்திருத்த செம்மல் சிதம்பரம் &#8211; 75</title>
		<link>https://desiyamurasu.com/news-economics/p-chidambaram-75-a-man-of-reforms/</link>
					<comments>https://desiyamurasu.com/news-economics/p-chidambaram-75-a-man-of-reforms/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[ஆ. கோபண்ணா]]></dc:creator>
		<pubDate>Wed, 16 Sep 2020 10:40:28 +0000</pubDate>
				<category><![CDATA[பொருளாதாரம்]]></category>
		<category><![CDATA[P Chidambaram]]></category>
		<guid isPermaLink="false">https://desiyamurasu.com/?p=2290</guid>

					<description><![CDATA[<p>தேசிய முரசு மாதம் இரு முறை இதழில் 2013, மார்ச்சில் வெளிவந்த கட்டுரையை திரு ப.சிதம்பரம் அவர்களின் 75வது பிறந்த நாளை முன்னிட்டு மீண்டும் வெளியிடுகிறோம் . &#8211; ஆ. கோபண்ணா மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்துடன் இணைந்து பணியாற்றியவர்கள், அல்லது அவரது பணிகளைக் கூர்ந்து கவனித்து வருபவர்களுக்கு, அவர் செயல்பாடு சார்ந்த மனிதர்; புதிய சிந்தனைகளை ஏற்றுக்கொள்ளத் தயங்காதவர்; கூர்மையான சிந்தனை கொண்ட சிந்தனையாளர். இந்தியாவின் நிதி அமைச்சர் என்ற வகையில் இந்தியாவுக்காக அவர் தாக்கல் [&#8230;]</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-economics/p-chidambaram-75-a-man-of-reforms/">சீர்திருத்த செம்மல் சிதம்பரம் &#8211; 75</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p><em><strong><span class="has-inline-color has-vivid-red-color">தேசிய முரசு மாதம் இரு முறை இதழில் 2013, மார்ச்சில் வெளிவந்த கட்டுரையை திரு ப.சிதம்பரம் அவர்களின் 75வது பிறந்த நாளை முன்னிட்டு மீண்டும் வெளியிடுகிறோம் .</span></strong></em></p>



<p class="has-text-align-right"><em><strong>                    &#8211; ஆ. கோபண்ணா</strong></em></p>



<p>மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்துடன் இணைந்து பணியாற்றியவர்கள், அல்லது அவரது பணிகளைக் கூர்ந்து கவனித்து வருபவர்களுக்கு, அவர் செயல்பாடு சார்ந்த மனிதர்; புதிய சிந்தனைகளை ஏற்றுக்கொள்ளத் தயங்காதவர்; கூர்மையான சிந்தனை கொண்ட சிந்தனையாளர். இந்தியாவின் நிதி அமைச்சர் என்ற வகையில் இந்தியாவுக்காக அவர் தாக்கல் செய்த பட்ஜெட்களைப் படித்தவர்கள், அதில் இடம்பெற்றுள்ள அவரது கருத்து செழுமையை உணர்வார்கள் என்பதில் சந்தேகமில்லை. எட்டாவது முறையாக அவர் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்துள்ள நிலையில் , ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு சார்பில் இதற்கு முன்பு அவர் தாக்கல் செய்த 5 நிதிநிலை அறிக்கைகளில் இடம்பெற்றிருந்த கருத்து செழுமைகளை தேசிய முரசு வாசகர்களுக்காக முன்வைப்பதே இந்தக் கட்டுரையின் நோக்கம் ஆகும்.</p>



<h4 class="wp-block-heading"><strong>மாற்றத்தை ஏற்படுத்தும் சிந்தனை</strong></h4>



<p>நிதிநிலை அறிக்கை என்பது இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற வரைமுறையைத் தகர்த்தது, 1991ஆம் ஆண்டு அப்போதைய நிதி அமைச்சர் மன்மோகன் சிங் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கைதான். ஆனால், அதன்பின் நிதிநிலை அறிக்கைகளைத் தாக்கல் செய்த ப.சிதம்பரம் ஒவ்வொரு நிதிநிலை அறிக்கை யிலும் தமது தனி முத்திரையைப் பதித்து வந்திருக்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது. அவரது மிகவும் துணிச்சலான நிதிநிலை அறிக்கை, பத்து மாதங்களே நீடித்த தேவகவுடா தலைமையிலான ஐக்கிய முன்னணி ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்டதாகும்.</p>



<p>&#8216;கனவு பட்ஜெட்&#8217; என்று போற்றப்பட்ட அந்த நிதிநிலை அறிக்கையில், தனி நபர்கள் மற்றும் கம்பெனிகளுக்கான அதிகபட்ச வருமான வரி விகிதத்தை 40 விழுக்காட்டிலிருந்து முறையே தனிநபர்களுக்கு 30 விழுக்காடாகவும், கம்பெனிகளுக்கு 35 விழுக்காடாகவும் குறைத்தார். இதன்மூலம் இந்தியாவின் அதிகபட்ச வருமான வரி உலகின் பல வளரும் நாடுகளின் வரி அளவை விடவும், வரி சீர்திருத்தக் குழு பரிந்துரைத்த 40 விழுக்காடு என்ற அளவை விடவும் மிகவும் குறைந்த அளவுக்கு வந்தது.</p>



<p>&#8220;இத்தகைய முடிவை எடுப்பதற்குக் குறிப்பிடத்தக்க அளவுக்குத் துணிச்சல் தேவை. .அந்தத் துணிச்சலை அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் திரட்டிக் கொண்டுதான் இத்தகைய முடிவை எடுத்தார்&#8221; என்று பல்வேறு மத்திய அரசு குழுக்களில் பணியாற்றிய நிதி வல்லுநர் ஒருவர் தெரிவித்தார். அவர் தற்போது அரசு பொறுப்பில் இருப்பதாலும், இதுபோன்ற விஷயங்களில் கருத்துக் கூற அவருக்கு அதிகாரம் இல்லை என்பதாலும் தமது பெயரைக் குறிப்பிட மறுத்துவிட்டார்.</p>



<p>&#8220;வரியின் அளவு குறைவாகவும், மக்களின் பொறுப்புடைமை அதிகமாகவும் இருக்கும் பட்சத்தில் பொறுப்புடன் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பது சிதம்பரத்தின் எண்ணமாகும். அது சரியானது என்பதை சிதம்பரம் நிரூபித்தார்&#8221; என்றும் அந்த வல்லுநர் தெரிவித்தார். ப.சிதம்பரத்தால் உச்ச அளவு வரி குறைப்பு செய்யப்பட்டதற்கு, முந்தைய ஆண்டான 1995 -96இல் நிகர வரி வருமானத்தில் தனிநபர் வருமான வரியின் அளவு வெறும் 14 விழுகாடாக இருந்ததுதான். ஆனால், 2011-12ஆம் ஆண்டில் இது 18.5 விழுக்காடாக அதிகரித்தது. அதேபோல் வேளாண் கடன் அளவை அடுத்த மூன்றாண்டுகளில் இருமடங்காக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகக் கடந்த 2004ஆம் ஆண்டில் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அறிவித்தார். ஆனால், அந்த இலக்கு அடுத்த இரண்டே ஆண்டுகளில் சாதிக்கப்பட்டது.</p>



<p>2008ஆம் ஆண்டில் நிதியமைச்சர் பதவியிலிருந்து உள்துறை அமைச்சர் பதவிக்கு சிதம்பரம் மாற்றப்பட்டபோது , இந்தியாவில் சுமார் பாதிபேருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் வேளாண் துறைக்கு வழங்கப்பட்ட கடனின் அளவு, 2004ஆம் ஆண்டின் அளவான ரூ.பாய் 60 ஆயிரம் கோடி என்ற அளவிலிருந்து மூன்று மடங்கிற்கும் மேல் அதிகரித்து ரூபாய் 2 லட்சம் கோடி என்ற அளவை எட்டியிருந்தது. </p>



<p>2009ஆம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட ஆய்வறிக்கையில், `இந்தியாவில் சிறு, குறு விவசாயிகளுக்கு அமைப்பு சார்ந்த கடன் பெரிய அளவில் கிடைப்பதில்லை என்ற போதிலும், வேளாண் கடன் அளவு அதிகரிக்கப்பட்டதன் பயனாக வேளாண் உற்பத்தியில் சாதகமான தாக்கம் ஏற்படிருக்கிறது. அவர் தமது பணியை உண்மையாக எடுத்துக்கொண்டு நிறைவேற்றியிருக்கிறார்&#8217; என்று தில்லியைச் சேர்ந்த பொருளாதார ஆலோசனை மற்றும் ஆராய்ச்சி அமைப்பான Oxus Investments என்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான சுர்ஜித் பல்லா தெரிவித்தார்.</p>



<p>&#8220;தாம் செய்யவேண்டிய பணிகளை முன்கூட்டியே அடையாளம் கண்டு, அதை எட்டுவதற்காகத் திட்டமிட்டு பணியாற்றுவதுதான் சிதம்பரத்தின் வழக்கம். இப்போதைய நிலையில் நிதிநிலையை ஒழுங்குபடுத்துவதுதான் முதன்மைப் பணியாகும். அதைத் தான் நிதிநிலை அறிக்கையில் ப.சிதம்பரம் தெரிவித்திருக்கிறார்&#8221; என்று சுர்ஜித் பல்லா கூறினார்.</p>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large"><img fetchpriority="high" decoding="async" width="432" height="640" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/09/25-Chidambaram-IndiaInk-superJumbo.jpg" alt="" class="wp-image-2302" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/09/25-Chidambaram-IndiaInk-superJumbo.jpg 432w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/09/25-Chidambaram-IndiaInk-superJumbo-203x300.jpg 203w" sizes="(max-width: 432px) 100vw, 432px" /></figure></div>



<h4 class="wp-block-heading"><strong>எப்போதும் சீர்திருத்தவாதி!<br>தேவைப்படும்போது ஜனரஞ்சகவாதி!</strong></h4>



<p>நிதி அமைச்சர் ப.சிதம்பரம் சிறந்த சீர்திருத்தவாதி, சந்தைகளுக்கு ஆதரவானவர் என்றெல்லாம் கூறப்பட்டாலும், தேவைப்படும்போது மக்களைக் கவரும் ஜனரஞ்சக அறிவிப்பை வெளியிடத் தயங்காதவர். அதற்கு எத்தகைய எதிர்ப்பு வந்தாலும் அதற்காகப் பின்வாங்காதவர.</p>



<p>கடந்த மக்களவைத் தேர்தலுக்கு ஓராண்டு முன்பாக 2008ஆம் ஆண்டில் வேளாண் பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்தை சிதம்பரம் அறிவித்தார். இதனால் 3.68 கோடி விவசாயிகள் பயனடைந்தனர். அதேநேரத்தில் அரசுக்கு ரூ.பாய் 65 ஆயிரம் கோடி செலவு ஏற்பட்டது. அதே ஆண்டில் ஆறாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அரசு செயல்படுத்தும் என்று அறிவித்தார். இதனால், மத்திய அரசு ஊழியர்களுக்கு 2006ஆம் ஆண்டிலிருந்து அளிக்கவேண்டிய ஊதிய நிலுவை ரூபாய் 27 ஆயிரம் கோடி உட்பட மொத்தம் ரூ.பாய் 47 ஆயிரம் கோடி கூடுதல் செலவு ஏற்பட்டது.</p>



<p>அதேபோல் 2005 முதல் 2009 வரையிலான காலத்தில், கிராமப்புற ஏழைக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 100 நாள்கள் வேலை வழங்குவதற்கான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை 150 மாவட்டங்களில் இருந்து இந்தியாவின் அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தினார். இத்திட்டத்தின்படி மிகக்குறைந்த பணமே பயனாளிகளைச் சென்றடைகிறது; பெயரளவுக்கே சொத்துக்கள் உருவாக்கப்படுகின்றன என்றெல்லாம் ஆய்வுகளில் தெரிய வந்த போதிலும், அதைப் பொருட்படுத்தாமல் இத்திட்டத்தை சிதம்பரம் விரிவுபடுத்தினார்.</p>



<p>இது பற்றிக் கருத்து தெரிவித்த மூத்த பொருளாதார வல்லுநர் ஒருவர், &#8220;சிதம்பரம் நடைமுறைக்கும் காலச் சூழலுக்கும் ஏற்றவாறு தம்மை மாற்றிக்கொள்ளக் கூடிய யதார்த்தவாதி. ஒரு கொள்கையை விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டிருப்பவர் அல்ல. ஒரு விஷயம் தொடர்பாக முன்வைக்கப்படும் வாதங்கள் ஏற்கத்தக்கவையாக இருக்கும் பட்சத்தில் அவற்றை ஏற்று, தமது முடிவை மாற்றிக்கொள்ள தயாராக இருப்பவர்&#8221; என்று கூறினார். சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்தபோது அவருக்குக்கீழ் பணியாற்றிய இவரும் தமது பெயரைக் குறிப்பிட விரும்பவில்லை.</p>



<p>தில்லியைச் சேர்ந்த பட்ஜெட் மற்றும் நிர்வாகப் பொறுப்புடைமைக்கான மையத்தின் செயல் இயக்குநரான சுப்ரத் தாஸ், &#8220;ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முதல் ஆட்சியில் சிதம்பரம் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கைகள் கூட்டணிக் கட்சிகளிடையே நிலவிய ஒருங்கிணைப்பை எதிரொலிக்கும் வகையில் அமைந்திருந்தன&#8221; என்று மனம் திறந்து பாராட்டினார்.</p>



<p>2004 முதல் 2009 வரையிலான காலத்தில் அரசின் வருவாய் 1.76 மடங்கு மட்டுமே அதிகரித்து, ரூபாய் 5 லட்சத்து 40 ஆயிரம் கோடியாக அதிகரித்திருந்த நிலையில், சமூக சேவை திடங்களுக்கான அரசின் நிதி ஒதுக்கீடு 2.75 மடங்கு அதிகரித்து, ரூபாய் 1 லட்சத்து 10 ஆயிரம் கோடியாக உயர்ந்தது. 2008ஆம் ஆண்டில் மத்திய அரசு செயல்படுத்திய இந்த இரு சலுகைத் திட்டங்கள் குறித்து விளக்கிய , அந்த ஆண்டின் பட்ஜெட் தயாரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரி கருத்து தெரிவிக்கும்போது, &#8220;இந்த நடவடிகைகளால் ஏற்படும் நிதி தாக்கம் குறித்து ஆராய்ந்துதான் சிதம்பரம் இந்த முடிவை எடுத்தார்&#8221; என்று கூறினார். &#8220;அந்த நேரத்தில் இந்தச் செலவைப் பொருளாதார நிபுணர் தாக்குபிடிக்கும் நிலையில் மத்திய அரசு இருந்தது. அந்த நேரத்தில் இந்தியப் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வந்தது. வருவாயும் வளமாக இருந்தது&#8221; என்று பெயர் குறிப்பிட விரும்பாத அந்த அதிகாரி தெரிவித்தார்.</p>



<p>அப்போது இருந்தது வேறு உலகம் என்று கூறியதன் மூலம் அந்தக் கருத்தை சுர்ஜித் பல்லாவும் வழி மொழிந்தார். &#8220;அந்த நேரத்தில் உலக அளவில் பொருளாதார நெருக்கடி நிலவி வந்ததால், விரிவாக்க நிதிக் கொள்கைகளைச் செயல்படுத்தும்படி உலகம் முழுவதும் உள்ள நாடுகளுக்கு அறிவுறுத்தப்பட்டு வந்தது. ஆனால், இப்போது நிலைமை மாறிவிட்டது. தற்போதைய சூழலில் நிதி ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துதல், கடன் தரக் குறியீடு குறைக்கப்படுவதைத் தடுத்தல் ஆகிய இரு முக்கிய பணிகள் தம்முன் இருப்பதை சிதம்பரம் உணர்ந்திருக்கிறார்&#8221; என்று பல்லா கூறினார்.</p>



<p>சிதம்பரத்துடன் இணைந்து பட்ஜெட் தயாரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த அந்த அதிகாரி, 2008ஆம் ஆண்டில் செயல்படுத்தப்பட்ட சலுகைத் திட்டங்கள் குறித்து மேலும் விளக்கியபோது, &#8220;2008ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட ஜனரஞ்சகத் திட்டங்களால் நினைத்துப் பார்க்காத சாதகமான விளைவுகள் ஏற்பட்டன. உலகம் முழுவதும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் இந்தியப் பொருளாதாரமும் முடங்கவிருந்த நிலையில், 45 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் தங்களுக்குக் கிடைத்த ஊதிய நிலுவைத் தொகையை கார் வாங்கவும், வீட்டு உபயோகப் பொருள்களை வாங்கவும் செலவிட்டதால், இந்தியப் பொருளாதாரம் ஊக்கம் பெற்றது. வேளாண் கடன் தள்ளுபடியும் பொருளாதார வளர்ச்சிக்கு ஒருவகையில் உதவியது. கடன் தள்ளுபடியால் வங்கிகளுக்கு ஏற்பட்ட இழப்பை ஈடுகட்டுவதற்காக மத்திய அரசு பனம் வழங்கியது. வராத கடன்களுக்குப் பதிலாக மத்திய அரசு பணம் வழங்கியதால், அதைக் கொண்டு வங்கிகளால் கூடுதலாகக் கடன் வழங்க முடிந்தது&#8221; என்று கூறினார். அந்த வகையில் ஜனரஞ்சகத்தைக் கூட சீர்திருத்தமாக மாற்றுவதில் வல்லவர் ப.சிதம்பரம் தான்!</p>



<h4 class="wp-block-heading"><strong>வலிக்காமல் வரி விதிப்பு!</strong></h4>



<p>மத்திய நிதி அமைச்சரான ப.சிதம்பரம் வரி வளையத்திற்குள் ஒவ்வொரு ஆண்டும் அதிக எண்ணிக்கையிலானவர்களை அழைத்துக்கொண்டு வருகிறார். இதை வரி செலுத்துவோருக்குத் தெரியாமலும், வலிக்காமலும் செய்து வருகிறார் என்பதுதான் இங்கு குறிப்பிடத்தக்கது. சிதம்பரத்தின் இந்த முயற்சி கடந்த 1997ஆம் ஆண்டில் தொடங்கியது. அந்த ஆண்டில் தான் ஆறில் இரண்டு திட்டத்தை அவர் அறிமுகம் செய்தார். அதன்படி மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட ஆறு பொருள்களில் ஏதேனும் இரண்டு பொருள்களை எவரேனும் வைத்திருந்தால், அவர்கள் கண்டிப்பாக வரி செலுத்தியாக வேண்டும் என்று அறிவித்தார். அதுமட்டுமன்றி மேலும் பல வழிகளில் வரி வருவாயை அதிகரிக்கவேண்டும் என்று சிதம்பரம் கருதினார். இதற்காக 2004ஆம் ஆண்டில் மத்திய நிதி அமைச்சராகப் பதவி ஏற்கும்போது 58 பொருள்களுக்கு மட்டுமே விதிக்கப்பட்டு வந்த சேவை வரியை 2009ஆம் ஆண்டு அந்த பதவியிலிருந்து விலகும்போது 110ஆக அதிகரித்திருந்தார்.</p>



<p>புதிய வரியாளரைச் சேர்க்க முடியாவிட்டாலும் , ஏற்கெனவே இருப்பவர் மீது கூடுதல் வரி விதிப்பதும் அவரது வழக்கம் ஆகும். அந்த வகையில் தான் 2004ஆம் ஆண்டில் பங்குச் சந்தையின் அனைத்து பரிமாற்றங்களுக்கும் 0.15 சதவிகித பங்கு பரிமாற்ற வரியை சிதம்பரம் விதித்தார். இந்த வரி அறிமுகம் செய்யப்பட்டபோது , ஏற்கெனவே நடைமுறையில் இருந்த நீண்டகால முதலீட்டு லாப வரி ரத்து செய்யப்பட்டதுடன், குறுகியகால முதலீட்டு லாப வரி 20 சதவிகிதத்திலிருந்து பாதியாகக் குறைக்கப்பட்டது. இது சிறப்பான முறையில் வரி வசூலிப்பதற்கான தத்துவம் என்று அப்போதே பலரும் பாராட்டினார்கள். `இது வருவாய் ஆதாரத்திலேயே வரி விதிக்கும் திட்டம்&#8217; என்று பலரும் கூறினார்கள்.</p>



<p>இது பற்றி விளக்கிய மூத்த வரித் துறை அதிகாரி, &#8220;பங்குச் சந்தையில் முதலீடு செய்வோரில் பலர் வரி செலுத்த மாட்டார்கள். ஆனால், பங்கு பரிமாற்ற வரியை மிகவும் எளிதாக வசூலித்துவிட முடியும். இந்த வகையான வரியைப் பிற சந்தைகளுக்கும் விதிக்கலாம்&#8221; என்று கூறினார். அதேபோல் வரி தகவல் வலையமைப்பு, வரி ஏய்போரைக் கண்டுபிடிப்பதற்காக முந்தைய வாஜ்பாய் அரசால் கொண்டுவரப்பட்டது என்ற போதிலும், அதை சிதம்பரம் தான் வலுப்படுத்தினார். &#8220;வரி தகவல் வலையமைப்பை வலுப்படுத்த முடிவு செய்த சிதம்பரம், ஒவ்வொரு நகரமாக அதைக் கட்டி எழுப்பினார்.அதன்மூலம் ஏராளமான தகவல்கள் சேகரிக்கப்பட்டன. பொருள்கள்மற்றும் சேவை வரி நடைமுறைக்கு வரும்போது, இந்த வலையமைப்பு முழுமையானதாகிவிடும் அதன் பின்னர், கூடுதலாக வருமானம் ஈட்டும் எவரும் தங்களின் வருவாயைக் குறைத்துக்காட்ட முடியாது&#8221; என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.</p>



<h4 class="wp-block-heading"><strong>மகிழ்ச்சியான</strong><strong> </strong><strong>முதலீட்டாளர்கள்</strong><strong><br></strong><strong>பங்குச்</strong><strong> </strong><strong>சந்தைதாரர்கள்</strong><strong>!</strong><strong></strong></h4>



<p>ப.சிதம்பரத்தைத் தொடர்ந்து 2009ஆம் ஆண்டில் மத்திய நிதி அமைச்சராகப் பதவி ஏற்ற பிரணாப் முகர்ஜி தமது நிதிநிலை அறிக்கையை எவ்வாறு மதிப்பிடுவார் என்றால் , ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் நிரந்தர தொல்லையாகத் திகழ்ந்த மம்தா பாணர்ஜி, நிதிநிலை அறிக்கை குறித்து என்ன நினைக்கிறார் என்பதை தெரிந்துகொண்டு, அவர் மகிழ்ச்சியடைந்து விட்டால், நல்ல பட்ஜெட் என்று நினைத்துக் கொள்வார். சிதம்பரத்தைப் பொருத்தவரை தொலைக்காட்சித் திரைகளின் அடிப்பகுதியில் ஓடும் பங்கு ச் சந்தை நிலவரம் குறித்த பச்சை , சிவப்பு குறியீடுகள் தான் பட்ஜெட் பற்றிய மதிப்பீடு ஆகும். தமது பட்ஜெட் அறிவிப்புக்குப் பிறகு பங்குச் சந்தை குறியீட்டு எண் உயர்ந்தால் தமது பட்ஜெட், சிறந்த பட்ஜெட் என்பது சிதம்பரத்தின் மதிப்பீடு ஆகும். &#8220;இந்தியப் பொருளாதாரம் வலிமையாகத் திகழ ஆரோக்கியமான நிதித்துறை அவசியம் என்பதை சிதம்பரம் நன்றாக உணர்ந்தவர். அவர் தாக்கல் செய்த பெரும்பாலான நிதி நிலை அறிக்கைகளில் பங்குச் சந்தையின் வளர்ச்சிக்கென ஏதாவது ஒரு அறிவிப்பு இருக்கும்&#8221; என்று மூத்த பொருளாதார வல்லுநர் ஒருவர் தெரிவித்தார். உதாரணமாக கடந்த 2004ஆம் ஆண்டில் பங்குச் சந்தை முதலீடுகளைக் கவர்ச்சிகரமானதாக மாற்றும் நோக்குடன் முதலீட்டாளர்களின் லாபம் மீதான வரிகளைக் குறைத்தார். ஏற்கெனவே நடைமுறையில் இருந்த நீண்டகால முதலீட்டு லாப வரி ரத்து செய்யப்பட்டதுடன், குறுகியகால முதலீட்டு லாப வரி 20 சதவிகிதத்திலிருந்து பாதியாக, அதாவது 10 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டது.</p>



<p>வணிகப் பற்றாக்குறையைக் குறைக்கவும், உள்ளூர் சந்தைகளில் நம்பிக்கையை ஏற்படுத்தவும் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்களின் முதலீடு மிகவும் அவசியம் என்பதை அவர் அறிந்திருந்தார். தாம் தாக்கல் செய்த பல்வேறு பட்ஜெட்களின் மூலம் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்களின் செயல்பாடுகளை மிகவும் எளிதாக்கினார். வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் பதிவு செய்வதற்கான நடைமுறைகளை எளிதாக்கியதுடன், அவர்கள் பங்குகளை னநசiஎயவநளஇல் வணிகம் செய்யவும், அரசு பத்திரங்களில் முதலீடு செய்யவும் வசதியாக சில வரையறை மாற்றங்களைச் செய்தார்.</p>



<p>சிதம்பரம் இயல்பாகவே தமக்கென நல்ல அணியை ஏற்படுத்திக் கொள்பவர் அல்ல என்ற போதிலும், தமது அமைச்சகத்தில் வலிமையான மூலதனச் சந்தை அணியை ஏற்படுத்தினார். சிதம்பரம் எப்போதுமே நல்ல அதிகாரிகளைத்தான் தேடுவாரே தவிர, திறமையான அதிகாரியைக் கொண்டுவர வேண்டும் என்பதற்காகப் போராட மாட்டார். 2008ஆம் ஆண்டில் நிதி அமைச்சராக இருந்தபோது அவருடன் இருந்தவர்களுள் இருவர் மட்டுமே தற்போது சிதம்பரத்துடன் இருக்கிறார்கள் என்ற போதிலும், மிகச்சிறப்பான பட்ஜெட்டைத் தாக்கல் செய்திருக்கிறார்&#8221; என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.<strong></strong></p>



<h4 class="wp-block-heading"><strong>வரியும்</strong><strong>, </strong><strong>கூடுதல்</strong><strong> </strong><strong>கட்டணமும்</strong></h4>



<p>மத்திய நிதி அமைச்சர் என்ற வகையில் வருமான வரி விகிதத்தை சிதம்பரம் குறைத்தபோதிலும், அதை நம்பி தொடங்கப்பட்ட திட்டங்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக வரிகள் மீது வரி விதிக்கும் நடைமுறையை சிதம்பரம் கடைப்பிடித்து வந்தார். 2004ஆம் ஆண்டில் அனைத்து வரிகள் மீதும் 2 சதவிகித வரி விதித்த சிதம்பரம், அதன்மூலம் கிடைத்த வருவாயைக் கல்வித் திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக ஒதுக்கினார். வரி, கூடுதல் கட்டணம் ஆகியவை நுகர்வு சம்பந்தப்பட்டவைஆகும். இதனால் சிறிய அளவில் வரி செலுத்துபவர்களுக்குப் பெரிய அளவில் சுமை ஏற்படாது. ஆனால், இதன்மூலம் கிடைக்கும் வருவாய் மிகப்பெரியதாகும்.2011-12ஆம் ஆண்டில் கல்விக்காக வரிகள் மீது விதிக்கப்படும் வரி மூலமாக ரூபாய் 23 ஆயிரம் கோடி வருமானம் கிடைத்தது. அதேபோல் பெரு நிறுவன வரி மீதான கூடுதல் கட்டணம் மூலம் ரூபாய் 13 ஆயிரத்து 658 கோடி வருமானம் கிடைத்தது. பெரும் பணக்காரர்களுக்கு அதிக வருமான வரி விதிக்கப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தபோதிலும் , அத்தகைய வரி எதையும் அவர் விதிக்கவில்லை. இதற்கான காரணம் குறித்து விளக்கிய பொருளாதார வல்லுநர் சுர்ஜித் பல்லா, &#8220;இதுபோன்ற தவறுகளை சிதம்பரம் ஒருபோதும் செய்ய மாட்டார். ஏனெனில் அவர் ஒரு துடிப்பான வழக்கறிஞர்&#8221; என்றார்.</p>



<p class="has-text-align-right"><strong><em>( நன்றி: எகனாமிக்ஸ் டைம்ஸ், 17 ஜனவரி 2013)</em></strong></p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-economics/p-chidambaram-75-a-man-of-reforms/">சீர்திருத்த செம்மல் சிதம்பரம் &#8211; 75</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://desiyamurasu.com/news-economics/p-chidambaram-75-a-man-of-reforms/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>பொருளாதாரத்தை மீட்டெடுக்க என்ன வழி ? 5 ஆலோசனைகள் வழங்கிய ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன்</title>
		<link>https://desiyamurasu.com/news-economics/five-suggestions-by-ex-rbi-governor-raghuram-rajan-to-revive-the-economy/</link>
					<comments>https://desiyamurasu.com/news-economics/five-suggestions-by-ex-rbi-governor-raghuram-rajan-to-revive-the-economy/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Admin]]></dc:creator>
		<pubDate>Sat, 12 Sep 2020 13:27:43 +0000</pubDate>
				<category><![CDATA[பொருளாதாரம்]]></category>
		<guid isPermaLink="false">https://desiyamurasu.com/?p=2235</guid>

					<description><![CDATA[<p>பொருளாதாரத்தை மீட்டெடுக்க ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் 5 ஆலோசனைகளை வழங்கியுள்ளார். மேலும், தற்போதைய மோசமான சந்தை நிலவரம், ஏற்கனவே தவறவிட்ட வாய்ப்பாக தெரிகிறது என எச்சரித்துள்ளார். ஜிடிபி (உள்நாட்டு மொத்த உற்பத்தி) தரவுகள் நமக்கு எல்லாம் எச்சரிக்கை மணி அடித்துக் கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 23.9 சதவிகிதமாக வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரம், அமைப்பு சாரா துறையின் தரவுகள் வரும்போது இன்னும் மோசமாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ள ராஜன், கொரோனாவில் பாதிக்கப்பட்ட அமெரிக்கா மற்றும் இத்தாலியை [&#8230;]</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-economics/five-suggestions-by-ex-rbi-governor-raghuram-rajan-to-revive-the-economy/">பொருளாதாரத்தை மீட்டெடுக்க என்ன வழி ? 5 ஆலோசனைகள் வழங்கிய ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன்</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>பொருளாதாரத்தை மீட்டெடுக்க ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் 5 ஆலோசனைகளை வழங்கியுள்ளார். மேலும், தற்போதைய மோசமான சந்தை நிலவரம், ஏற்கனவே தவறவிட்ட வாய்ப்பாக தெரிகிறது என எச்சரித்துள்ளார். ஜிடிபி (உள்நாட்டு மொத்த உற்பத்தி) தரவுகள் நமக்கு எல்லாம் எச்சரிக்கை மணி அடித்துக் கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p>



<p>23.9 சதவிகிதமாக வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரம், அமைப்பு சாரா துறையின் தரவுகள் வரும்போது இன்னும் மோசமாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ள ராஜன், கொரோனாவில் பாதிக்கப்பட்ட அமெரிக்கா மற்றும் இத்தாலியை விட இந்திய பொருளாதாரம் மோசமாக உள்ளதாக தெரிவித்தார். வைரஸ் இருக்கும் வரை இந்தியாவில் விருப்ப செலவு பலவீனமாக இருக்கும் என்றும் மேலும் தெரிவித்தார்.</p>



<p>அரசால் வழங்கப்படும் நிவாரணம் மிக முக்கியமானது என்று தெரிவித்த ரகுராம் ராஜன், தற்போதைய சந்தை நிலவரத்தை நாம் ஏற்கனவே தவறவிட்டுள்ளோம் என்றார்.</p>



<p>பொருளாதாரத்தை மீட்டெடுக்க பின்வரும் ஆலோசனைகளை ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.</p>



<ul class="wp-block-list"><li>மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உத்தரவாதச் சட்டத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும்.</li><li>ஏழைக் குடும்பத்தினருக்கு  அவர்கள் வங்கிக் கணக்கில் மேலும் பணம் செலுத்த வேண்டும். குறிப்பாக, நகர்ப்புறங்களில் இதனை செய்ய வேண்டும்.</li><li>இவ்வாறு பண உதவியை  அரசும் பொதுத்துறை நிறுவனங்களும் விரைவில் செய்ய வேண்டும்.</li><li>கார்பரேட் வருமான வரி மற்றும் சிறு நிறுவனங்கள் செலுத்தும் ஜிஎஸ்டி வரியை தள்ளுபடி செய்யலாம்.</li><li>பொதுத்துறை வங்கிகளை மறு மூலதனமாக்க வளங்களை ஒதுக்க வேண்டும்.</li></ul>



<p>இவ்வாறு &nbsp;ரகுராம் ராஜன் ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-economics/five-suggestions-by-ex-rbi-governor-raghuram-rajan-to-revive-the-economy/">பொருளாதாரத்தை மீட்டெடுக்க என்ன வழி ? 5 ஆலோசனைகள் வழங்கிய ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன்</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://desiyamurasu.com/news-economics/five-suggestions-by-ex-rbi-governor-raghuram-rajan-to-revive-the-economy/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>ரோம் தீப்பிடித்தபோது நீரோ மன்னன் பிடில் வாசித்த கதையாக மோடி அரசு: காங். செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா</title>
		<link>https://desiyamurasu.com/news-economics/modi-is-busy-feeding-peacocks-when-economy-is-affected-by-corona/</link>
					<comments>https://desiyamurasu.com/news-economics/modi-is-busy-feeding-peacocks-when-economy-is-affected-by-corona/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Admin]]></dc:creator>
		<pubDate>Wed, 09 Sep 2020 11:19:55 +0000</pubDate>
				<category><![CDATA[பொருளாதாரம்]]></category>
		<category><![CDATA[BJP Govt.]]></category>
		<category><![CDATA[Economy Collapse]]></category>
		<category><![CDATA[Randeep Singh Surjewala]]></category>
		<guid isPermaLink="false">https://desiyamurasu.com/?p=2166</guid>

					<description><![CDATA[<p>ரோம் நகர் தீப்பற்றி எரிந்த போது, நீரோ மன்னன் பிடில் வாசித்த கதையாக, கொரோனாவில் இந்தியா சிக்கித் தவிக்கும்போது மயில்களுக்கு உணவு அளித்துக் கொண்டிருக்கிறார் பிரதமர் மோடி என, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைமை செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா குற்றம் சாட்டியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த மார்ச் 24 ஆம் தேதி பிரதமர் மோடி வெளியிட்ட பொது முடக்க அறிவிப்பின் போது, மகாபாரத போர் 18 நாட்கள் நடந்தது. கொரோனாவுக்கு [&#8230;]</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-economics/modi-is-busy-feeding-peacocks-when-economy-is-affected-by-corona/">ரோம் தீப்பிடித்தபோது நீரோ மன்னன் பிடில் வாசித்த கதையாக மோடி அரசு: காங். செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>ரோம் நகர் தீப்பற்றி எரிந்த போது, நீரோ மன்னன் பிடில் வாசித்த கதையாக, கொரோனாவில் இந்தியா சிக்கித் தவிக்கும்போது மயில்களுக்கு உணவு அளித்துக் கொண்டிருக்கிறார் பிரதமர் மோடி என, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைமை செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா குற்றம் சாட்டியுள்ளார்.<br><br>அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:<br><br>கடந்த மார்ச் 24 ஆம் தேதி பிரதமர் மோடி வெளியிட்ட பொது முடக்க அறிவிப்பின் போது, மகாபாரத போர் 18 நாட்கள் நடந்தது. கொரோனாவுக்கு எதிரான போரில் 21 நாட்களில் வெற்றி பெறுவோம் என குறிப்பிட்டார். 166 நாட்களுக்குப் பிறகு, ஒட்டுமொத்த நாடும் கொரோனாவுக்கு எதிராக மகாபாரத போரை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். கொரோனாவால் மக்கள் உயிரிழந்து கொண்டிருக்கும் நிலையில், மயில்களுக்கு உணவு கொடுப்பது போல புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்துக் கொண்டிருக்கிறார் பிரதமர் மோடி.<br><br>கொரோனாவுடன் போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால், நடவடிக்கைதான் காணாமல் போய்விட்டது. கொரோனாவை தோற்கடிக்கும் போராட்டத்தில், செயலிழந்து விட்டதையும், முற்றிலும் திறமையற்ற அரசு என்பதையும் மோடி அரசு நிரூபித்துள்ளது. மிக மோசமான தொற்றுப் பரவலுக்கு மத்தியில், மக்களைக் காக்கவும், அவர்களை தற்காத்துக் கொள்ள அனுமதிக்கவும் பாஜக அரசு தவறிவிட்டது.<br><br>உலக அளவில் கொரோனாவின் தலைநகரமாக இந்தியா தற்போது மாறியுள்ளது.  உலகிலேயே கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 90 ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், அமெரிக்கா மற்றும் பிரேசிலில் இதில் பாதி எண்ணிக்கையில் கூட யாரும் பாதிக்கப்படவில்லை. மற்ற நாடுகளில் கடந்த 24 மணி நேரத்தில் 10 ஆயிரம் பேருக்கு மேல் பாதிக்கப்படவில்லை.</p>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large"><img decoding="async" width="760" height="428" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/09/Randeep_singh_surjewala.jpg" alt="" class="wp-image-2167" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/09/Randeep_singh_surjewala.jpg 760w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/09/Randeep_singh_surjewala-300x169.jpg 300w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/09/Randeep_singh_surjewala-750x422.jpg 750w" sizes="(max-width: 760px) 100vw, 760px" /></figure></div>



<p><strong>இந்தியாவில் கொரோனா தொற்று பரவியதற்கான 6 உண்மைகளை ஆராய்வோம்:</strong><br><br>1. தினமும் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் &#8211; உலகிலேயே இந்தியா முதலிடம்(90,802)<br><br>2. தினசரி கொரோனா உயிரிழப்புகள் &#8211; உலகிலேயே இந்தியா முதலிடம் (தினமும் 1,016 பேர் உயிரிழப்பு)<br><br>3. கொரோனா பாதிப்பு இரட்டிப்பு-உலகிலேயே இந்தியா முதலிடம் (29 நாட்கள்)<br><br>4. மொத்த கொரோனா பாதிப்புகள்-உலகிலேயே இந்தியா இரண்டாவது இடம் (42 லட்சத்து 4 ஆயிரத்து 614 பேர் பாதிப்பு)<br><br>5. மொத்தமாக கொரோனாவால் தீவிர பாதிப்பு &#8211; உலகிலேயே இந்தியா இரண்டாவது இடம் &#8211; (8 லட்சத்து 82 ஆயிரத்து 542)<br><br>6. மொத்த கொரோனா உயிரிழப்பு &#8211; உலகிலேயே இந்தியா 3 ஆவது  இடம் (71 ஆயிரத்து 642 பேர்)<br><br><strong>கொரோனா பாதிப்பில் அப்பட்டமான உண்மை:</strong></p>



<ul class="wp-block-list"><li> 0 முதல் 1 லட்சம் கொரோனா பாதிப்பு = 110 நாட்களில்.</li><li>1 முதல் 10 லட்சம் கொரோனா பாதிப்பு = 59 நாட்களில்.</li><li>10 முதல் 20 லட்சம் கொரோனா பாதிப்பு = 21 நாட்களில்.</li><li>20 முதல் 30 லட்சம் கொரோனா பாதிப்புகள் = 16 நாட்களில்.</li><li>30 முதல் 40 லட்சம் கொரோனா பாதிப்பு = 13 நாட்களில்</li></ul>



<p><br>29 நாட்களில் கொரோனா பாதிப்பு இரட்டிப்பாகியுள்ளது &#8211; 20 லட்சத்திலிருந்து 40 லட்சம் ஆக உயர்வு.<br><br>கொரோனா பரவல் குறித்து நிபுணர்களின் அபாய எச்சரிக்கை:</p>



<ol class="wp-block-list"><li>கொரோனா பரவல் தொடர்ந்து அதே வேகத்தில் அதிகரிக்கும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.</li><li>நவம்பர் 30 ஆம் தேதிக்குள் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 கோடியை தாண்டும்.</li><li>டிசம்பர் 30 ஆம் தேதிக்குள் மொத்த கொரோனா பாதிப்பு 1 கோடியே 40 லட்சத்தை எட்டும்.</li></ol>



<p>உயிரிழப்புகள் 1 லட்சத்து 75 ஆயிரத்தை எட்டும் என்று அஞ்சப்படுகிறது.</p>



<p><strong>கொரோனா தடுப்புகளில் மொத்த இயலாமை மற்றும் மோசமான தோல்வி:</strong><br><br>கடந்த பிப்ரவரி 12 ஆம் தேதியிலிருந்தே, காங்கிரஸ் கட்சியும் ராகுல் காந்தி அவர்களும் கொரோனா பாதிப்பு குறித்து அரசை எச்சரித்து வந்துள்ளனர். ஆனால், மோடி அரசு இதனை கேலி செய்ததோடு, கண்டுகொள்ளாமலும் விட்டுவிட்டது.<br><br><strong>கொரோனா கால வரிசையில் 8 அம்சங்களை ஆராய்வோம்:</strong></p>



<ol class="wp-block-list"><li>2020 பிப்ரவரி 12 =  கவலைப்படும் அளவுக்கு நம் நாட்டில் கொரோனா பாதிப்பு இல்லை என்று மோடி அரசு கூறியது. ராகுல் காந்தியின் எச்சரிக்கையை அரசு ஒட்டுமொத்தமாக புறக்கணித்தது.</li><li>2020 பிப்ரவரி 24 = 1 லட்சம் பேரை திரட்டி அகமதாபாத்தில் &#8216;நமஸ்தே ட்ரம்ப்&#8217; நிகழ்ச்சி நடத்தப்பட்டது.</li><li>2020 பிப்ரவரி 2 முதல் 5 ஆம் தேதி வரை = ராகுல் காந்தி தொடர்ந்து எச்சரித்ததை, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் நிராகரித்தார். கொரோனா குறித்து கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்தார்.</li><li>2020 மார்ச் 24 = தேசிய அளவில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டபோது, மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்க்கப்பட்டது.</li><li>2020 ஏப்ரல் 25 = நிதி ஆயோக் உறுப்பினர் மற்றும் அரசின் கொரோனா நிர்வாகக் குழுவின் தலைவர் டாக்டர் வி.கே. பவுல் அளித்த அறிக்கையில், 2020 மே 15 ஆம் தேதியில் புதிதாக கொரோனா பாதிப்புகள் இல்லை என்று தெரிவித்திருந்தார்.</li><li>2020 மே 4 = கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இனி அதிகரிக்காது என்றும்  சுகாதாரத்துறை செய்தி தொடர்பாளரும் இணைச் செயலாளருமான லாவ் அகர்வால் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.</li><li>2020 ஜுன் 27 = நாட்டு மக்கள் மத்திய உரையாற்றிய பிரதமர் மோடி, கொரோனா பரவல் குறித்த எச்சரிக்கையில் உண்மை இல்லை என்றும், மற்ற நாடுகளை விட இந்தியா நல்ல நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.</li><li>2020 செப்டம்பர் 6 = கொரோனா பாதிப்பில் உலகிலேயே இரண்டாவது இடத்தைப் பிடித்தது இந்தியா. தினமும் கொரோனா பாதிப்பு ஏற்படுவதிலும், கொரோனா உயிரிழப்பிலும் உலக அளவில் இந்தியா முதலிடத்தைப் பிடித்தது.</li></ol>



<p><br>பொது முடக்கம் அறிவித்து தோல்வி கண்ட மோடி தலைமையும் துக்ளக் ராஜ்யமும்:<br><br>திட்டமிடாமலும், ஆலோசிக்காமலும் 3 மணி நேரத்துக்கு முன்பு பிரதமர் அறிவித்த பொது முடக்கத்தால், கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தோல்வியே ஏற்பட்டுள்ளது. அதோடு, நாட்டின் பொருளாதாரமும் அழிந்துபோனது. மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டது. இந்திய வரலாற்றில் இதுபோன்று துக்ளக் ஆட்சி நடத்தியது யாருமில்லை என்ற அளவுக்கு, மோடி தலைமை தோல்வியடைந்துள்ளது.<br><br><br>பொதுமுடக்கத்தாலும், துக்ளக் ராஜ்யத்தாலும் ஏற்பட்ட ஒரு டஜன் பாதிப்புகள்</p>



<ol class="wp-block-list"><li>திடீர் பொது முடக்கத்தால் கோடிக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பசியோடும், குடிக்க தண்ணீர் இன்றி தாகத்தோடும் சொந்த ஊர்களுக்கு நடந்தே சென்றனர். நடந்து சென்றவர்களில் 150 க்கும் மேற்பட்டவர்கள், விபத்து உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உயிரிழந்தனர்.</li><li>எந்த மாநிலத்திடமும், முதலமைச்சரிடமும் ஆலோசிக்காமல் பொது முடக்கத்தை அமல்படுத்தியதன் மூலம், கூட்டாட்சிக்கு கொள்ளி வைத்துள்ளார் மோடி.</li><li>நிபுணர்களும், காங்கிரஸ் கட்சியும் தொடர்ந்து எச்சரித்தும், கொரோனா பரிசோதனைகள் மற்றும் சிகிச்சை அளித்து கட்டுப்படுத்த மோடி அரசு தவறிவிட்டது. பரிசோதனைகள் அதிகரிக்கப்பட வேண்டிய நேரத்தில், அது குறித்து கண்டுகொள்ளாமல் கிரிமினல் தனத்தோடு செயல்பட்டனர். பொது முடக்கம் இருந்தும், கொரோனா தொடர்புகளை  தேடவும் தவறிவிட்டனர்.</li><li>வெற்றிகரமாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்ட போதும், உலகிலேயே இந்தியா மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த தவறிய நாடாக உள்ளது. பொது முடக்க தளர்வுகளுக்குப் பிறகு, நோய் தொற்றும், உயிரிழப்புகளும் அதிகரித்தன.</li><li>தொலைக்காட்சி விவாதங்கள், கை தட்டுவது, விளக்கு ஏற்றுவது போன்றவற்றில் தான் மோடி அரசு கவனம் செலுத்தியது. ஆனால், கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதிலும், பொருளாதாரத்தை காப்பதிலும் மோடி அரசு எடுத்துள்ள நடவடிக்கை வெறும் பூஜ்யம்தான்.</li><li>கொரோனாவுக்கு எதிராக மாநில அரசுகள் இன்னும் போராடிக் கொண்டிருக்கின்றன. ஜிஎஸ்டி இழப்பீட்டை மத்திய அரசு வழங்காத நிலையிலும், கொரோனா தடுப்புக்கு உதவாத நிலையிலும், மாநில அரசுகள் தனியாக நின்று போராடுகின்றன.</li><li>முதல்முறை பொது முடக்கம் அறிவித்த போதும், அதன்பின்  3 முறை பொது முடக்கத்தை நீட்டித்தபோதும், மாநில அரசுகளுடன் மோடி அரசு கலந்தாலோசிக்கவில்லை. அதன்பிறகு 4 முறை தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போதும், தொற்றைக் கட்டுப்படுத்தவோ, உயிரிழப்புகளைத் தடுக்கவோ, வேலை இழப்பு அல்லது மூழ்கிக் கொண்டிருக்கும் பொருளாதாரத்தை காப்பாற்றவோ, அரசிடம் எந்த கொள்கையும் இல்லை.</li><li>பொருளாதாரத்தை இழந்தும், வியாபாரத்தை இழந்தும், தவணைகளை கட்ட முடியாமலும், வேலை இழந்தும், வாழ்வாதாரத்தை இழந்தும் தவிக்கும் மக்களை கேலி செய்யும் வகையில், இது &#8216;கடவுளின் செயல்&#8217; என்று மோடி அரசு சொல்கிறது.</li><li>மோடி அரசின் அலட்சியப் போக்கால் சிறு நகரங்கள், கிராமங்கள் வரை கொரோனா தொற்று பரவிவிட்டது. எனினும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இந்தியாவில் உள்ள மொத்த மக்கள் தொகையில், 65 சதவிகிதம் பேர் கிராமங்களில் வசிக்கின்றனர். ஆனால், மொத்தமாக 35 சதவிகித படுக்கைகளும் 20 சதவிகித மருத்துவர்களும் மட்டுமே உள்ளனர். இந்த நேரத்தில் தொற்று பரவல் அதிகமானால் பெரும் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்திவிடும்.</li><li>இந்தியாவில் இரண்டாவது கொரோனா தொற்று பரவல் தொடங்கிவிட்டதாக பெரும்பாலான நிபுணர்கள் கணித்துள்ளனர். சமூகப்  பரவல் தொடங்கிவிட்டதாக சில நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதைப் பற்றி எல்லாம் தெரிந்து கொள்ளாமலோ அல்லது தெரிந்தும் நடவடிக்கை எடுக்காமலோ மோடி அரசு தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.</li></ol>



<p><strong>நாட்டுக்கு பிரதமர் மோடி அவசியம் பதில் அளிக்க வேண்டும்:</strong><br><br>தமது தலைமை தோல்வியடைந்துவிட்டதற்கு மோடி பதில் அளிப்பாரா? கொரோனா தொற்றை எப்படி கட்டுப்படுத்தப் போகிறீர்கள்? வேகமாக பரவுவதை எப்படி தடுத்து நிறுத்தப் போகிறீர்கள்? கோடிக்கணக்கான மக்களுக்கு பரவுவதை அரசு எவ்வாறு தடுக்கப் போகிறது? கொரோனாவினால் ஏற்படும் உயிரிழப்புகளை எப்படி தடுக்கப் போகிறீர்கள்? மூழ்கிக் கொண்டிருக்கும் பொருளாதாரத்தை எப்படி கரை சேர்க்கப் போகிறீர்கள்?<br><br>இவற்றுக்கெல்லாம் மோடி அரசிடம் தீர்வு உள்ளதா? அல்லது கடவுள் மீது குற்றம் சாட்டப் போகிறீர்களா?</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-economics/modi-is-busy-feeding-peacocks-when-economy-is-affected-by-corona/">ரோம் தீப்பிடித்தபோது நீரோ மன்னன் பிடில் வாசித்த கதையாக மோடி அரசு: காங். செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://desiyamurasu.com/news-economics/modi-is-busy-feeding-peacocks-when-economy-is-affected-by-corona/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>ஜிஎஸ்டி இழப்பீடு தராமல் மாநிலங்களை ஏமாற்றுவது &#8216;கடவுள் செயலா?&#8217;: கவுன்சில் கூட்டத்தின் பின்னணி</title>
		<link>https://desiyamurasu.com/news-economics/bjp-government-betrays-states-in-compensating-gst-arrears/</link>
					<comments>https://desiyamurasu.com/news-economics/bjp-government-betrays-states-in-compensating-gst-arrears/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Admin]]></dc:creator>
		<pubDate>Mon, 07 Sep 2020 12:10:48 +0000</pubDate>
				<category><![CDATA[பொருளாதாரம்]]></category>
		<category><![CDATA[Economy and Policy]]></category>
		<category><![CDATA[GST Compensation]]></category>
		<category><![CDATA[GST Council]]></category>
		<guid isPermaLink="false">https://desiyamurasu.com/?p=2126</guid>

					<description><![CDATA[<p>இந்த பிரச்சினையில் முட்டுக்கட்டை ஏன்? ஜி.எஸ்.டி நிலுவைத் தொகை தராததால் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையை, வெளியே கடனைப் பெற்று சரி செய்து கொள்ளுமாறு மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. அதற்கான வாய்ப்புகள் என்ன? கடந்த ஆகஸ்ட் 27 ஆம் தேதி 41 ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடந்தது. மாநிலங்களுக்குத்  ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை எவ்வாறு தருவது என்ற கேள்விக்கு தீர்வு காண்பது அந்த கூட்டத்தின் முக்கிய அம்சமாக இருந்தது. கடந்த ஆண்டு பொருளாதார மந்தநிலை [&#8230;]</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-economics/bjp-government-betrays-states-in-compensating-gst-arrears/">ஜிஎஸ்டி இழப்பீடு தராமல் மாநிலங்களை ஏமாற்றுவது &#8216;கடவுள் செயலா?&#8217;: கவுன்சில் கூட்டத்தின் பின்னணி</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>இந்த பிரச்சினையில் முட்டுக்கட்டை ஏன்?</p>



<p>ஜி.எஸ்.டி நிலுவைத் தொகை தராததால் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையை, வெளியே கடனைப் பெற்று சரி செய்து கொள்ளுமாறு மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. அதற்கான வாய்ப்புகள் என்ன?<br><br>கடந்த ஆகஸ்ட் 27 ஆம் தேதி 41 ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடந்தது. மாநிலங்களுக்குத்  ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை எவ்வாறு தருவது என்ற கேள்விக்கு தீர்வு காண்பது அந்த கூட்டத்தின் முக்கிய அம்சமாக இருந்தது. கடந்த ஆண்டு பொருளாதார மந்தநிலை மற்றும் சமீபத்தில் கொரோனா பரவலைத் தொடர்ந்து அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால் ஏற்பட்ட கடும் பொருளாதார பாதிப்பு குறித்து விவாதிப்பதற்காகவே இந்த கூட்டம் நடைபெற்றது.<br><br>இந்த கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசும்போது, நடப்பு நிதியாண்டில் ஏற்பட்ட ரூ.2 லட்சத்து 35 ஆயிரம் வரையிலான ஜிஎஸ்டி இழப்பீட்டை எதிர்கொள்ள, 2 வழிகளில் மாநிலங்கள் கடன் பெற்றுக் கொள்வது குறித்து ஆலோசனை வழங்கினார்.<br><br><strong>ஜிஎஸ்டி என்றால் என்ன?</strong><br><br>அரசியல் சாசனத்தில் 101 ஆவது திருத்தம் தேசிய அளவில் ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரியை விதிக்க சட்ட அங்கீகாரம் அளிக்கிறது. ஜிஎஸ்டியை அமல்படுத்தும்போது, மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பீட்டை மத்திய அரசு வழங்கும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. உள்ளூர் அளவிலான மறைமுக வரிகளை விதிக்க மாநிலங்களுக்கு அதிகாரம் வழங்கியதால், ஜிஎஸ்டியை மாநில அரசுகள் ஏற்றுக் கொள்வது சாத்தியமானது.<br><br>ஜிஎஸ்டி, எஸ்ஜிஎஸ்டி (மாநில ஜிஎஸ்டி) மற்றும் ஐஜிஎஸ்டி (ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி) ஆகியவற்றின் ஒரு பங்கை மாநிலங்கள் பெறும் அதே வேளையில், புதிய நேரடி வரிவிதிப்பில் ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பை, 2022 ஆம் ஆண்டு இறுதி வரை ஜிஎஸ்டி இழப்பீட்டு நிதியிலிருந்து வழங்குவது என்றும் மத்திய அரசு ஒப்புக்கொண்டது. 2020-21 ஆம் நிதியாண்டில் ரூ.3 லட்சம் கோடி அளவுக்கு மாநிலங்களுக்கு  வருவாய் இழப்பு ஏற்படும் என்றும், ரூ. 65 ஆயிரம் கோடி அளவுக்கு மட்டுமே இழப்பீட்டு நிதி கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.<br><br><strong>கடன் வாங்குவதால் சாத்தியமாகுமா?</strong><br><br>ஜிஎஸ்டியில் எந்தவொரு வருவாய் குறைவையும் ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் இல்லை என்றும், இதற்கான ஒரு தீர்வை வகுக்க வேண்டியது ஜிஎஸ்டி கவுன்சில் தான் என்றும் மத்திய அரசு வலியுறுத்தியது. மத்திய நிதி அமைச்சகத்துடன் இணைந்து சிறப்பு சாளர முறையில் மாநிலங்கள் நேரடியாக வெளியில் கடன் பெறுவது குறித்தும் ஜிஎஸ்டி கூட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.<br><br>ரூ. 2 .35 லட்சம் கோடிகள் வருவாய் குறைவு இருக்கும் நிலையில், வெறும் ரூ. 97 ஆயிரம் கோடிகள் மட்டுமே வருவாய் குறைவு என மத்திய அரசு வாதிட்டது. மீதமுள்ள ரூ. 1 கோடியே 38 லட்சம் கோடிகள் வருவாய் குறைவு என்பது கடவுளின் செயலால் (கொரோனா பரவல்) ஏற்பட்டது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.<br><br>முதல் யோசனையாக, மாநிலங்களின் கடன் பத்திரங்களை சந்தையில் விற்பனை செய்வதன் மூலம் ரூ. 97 ஆயிரம் கோடிகள்  திரட்டுவது, இவ்வாறு வாங்கும் கடனுக்கான வட்டியை மத்திய அரசு ஏற்பது, ஒரு பகுதியை மானியம் மூலம் மத்திய அரசு தாங்கிக் கொள்வது போன்ற வாய்ப்புகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மாநிலங்களின் இந்த கூடுதல் கடன் மாநிலத்தின் கடனின் ஒரு பகுதியாக கணக்கிடப்படாது. அசல் மற்றும் வட்டியை ஜிஎஸ்டி இழப்பீட்டு நிதியிலிருந்து 2022 ஆம் ஆண்டுக்குப் பிறகும் செலுத்துவது என்றும் ஆலோசனை வழங்கப்பட்டது.<br><br>இரண்டாவதாக, கடன் பத்திரங்களை மாநில அரசுகளே விற்று, ஒட்டுமொத்த ரூ. 2 .35 லட்சம் கோடிகள் ரூபாயை திரட்டிக் கொள்வது, வட்டியை மாநில அரசுகளே செலுத்துவது, ஜிஎஸ்டி இழப்பீட்டு நிதியிலிருந்து அடிப்படை செலவுகளை மட்டும் தருவது என்று ஆலோசனை வழங்கப்பட்டது.<br><br><strong>இந்த பிரச்சினையில் முட்டுக்கட்டை ஏன்?</strong><br><br>மேற்கு வங்கம், கேரளா, பஞ்சாப் மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்கள் இரண்டாவது ஆலோசனையை நிராகரித்துவிட்டன. ஜிஎஸ்டி இழப்பீட்டை மத்திய அரசே கடன் பெற்று மாநிலங்களுக்கு செலுத்த வேண்டும் என மாநில அரசுகள் உறுதியாக தெரிவித்தன.<br><br>பிரதமருக்கு தமிழக அரசு எழுதியுள்ள கடிதத்தில், ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டால் மாநில அரசுகளுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை மத்திய அரசு அளிக்கும் என்று உத்தரவாதம் அளித்ததால் தான் ஜிஎஸ்டியை ஏற்றோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.<br><br>கொரோனாவினால் மட்டும் பெரும் வருவாய் இழப்பை சந்திக்கவில்லை. நோயை தடுக்கவும் மாநில அரசு போராடி வருகிறது. ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகையை அளித்தால் மட்டுமே பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியும் என்றும் அந்த கடிதத்தில் தமிழக அரசு மேலும் குறிப்பிட்டுள்ளது.<br><br>கூடுதல் கடன் வாங்கினால் பொருளாதாரத்தில் பெரும் விளைவுகளை ஏற்படுத்தும் என்ற மத்திய அரசின் வாதத்தை இந்த மாநில அரசுகள் நிராகரித்துவிட்டன. மேலும், அரசின் பற்றாக்குறை மற்றும் கடன் பெறும் அளவை உலக அளவிலான கடன் மதிப்பீட்டு ஏஜென்ஸிகள் கண்காணிப்பதையும் மாநில அரசுகள் சுட்டிக்காட்டின.</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-economics/bjp-government-betrays-states-in-compensating-gst-arrears/">ஜிஎஸ்டி இழப்பீடு தராமல் மாநிலங்களை ஏமாற்றுவது &#8216;கடவுள் செயலா?&#8217;: கவுன்சில் கூட்டத்தின் பின்னணி</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://desiyamurasu.com/news-economics/bjp-government-betrays-states-in-compensating-gst-arrears/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>தனி நபர் வருமான இழப்பு, பணவீக்கம், 40 கோடி இந்தியர்கள் வறுமை கோட்டிற்கு கீழே தள்ளப்பட்டுள்ளனர்! இதுதான் பா.ஜ.க.வின் சாதனையா?: ரன்தீப் சிங் சுர்ஜேவாலா</title>
		<link>https://desiyamurasu.com/news-economics/economy-destroyed-randeep-singh-surjewala/</link>
					<comments>https://desiyamurasu.com/news-economics/economy-destroyed-randeep-singh-surjewala/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Admin]]></dc:creator>
		<pubDate>Mon, 07 Sep 2020 10:40:16 +0000</pubDate>
				<category><![CDATA[பொருளாதாரம்]]></category>
		<category><![CDATA[BJP Govt.]]></category>
		<category><![CDATA[GDP]]></category>
		<category><![CDATA[Indian Economy]]></category>
		<category><![CDATA[Randeep Singh Surjewala]]></category>
		<guid isPermaLink="false">https://desiyamurasu.com/?p=2122</guid>

					<description><![CDATA[<p>அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைமை செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, காணொலி காட்சி வாயிலாக நடத்திய&#160; செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது: கடந்த 73 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. பொருளாதாரம் அழிக்கப்பட்டுள்ளது. சாதாரண மனிதனின் வாழ்க்கை நிலைகுலைந்து போயிருக்கிறது. பொருளாதார சீரழிவு நிலையை நோக்கி இந்தியாவை பிரதமர் மோடி நகர்த்திக் கொண்டிருக்கிறார். பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி, பொதுமுடக்கம் ஆகியவை பெரிய அடி மட்டுமல்ல, பேரழிவு தாக்குதலும் கூட. பொருளாதார இருள் நம்மை சூழ்ந்துள்ளது. வாழ்க்கை [&#8230;]</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-economics/economy-destroyed-randeep-singh-surjewala/">தனி நபர் வருமான இழப்பு, பணவீக்கம், 40 கோடி இந்தியர்கள் வறுமை கோட்டிற்கு கீழே தள்ளப்பட்டுள்ளனர்! இதுதான் பா.ஜ.க.வின் சாதனையா?: ரன்தீப் சிங் சுர்ஜேவாலா</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைமை செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, காணொலி காட்சி வாயிலாக நடத்திய&nbsp; செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது:</p>



<p>கடந்த 73 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. பொருளாதாரம் அழிக்கப்பட்டுள்ளது. சாதாரண மனிதனின் வாழ்க்கை நிலைகுலைந்து போயிருக்கிறது. பொருளாதார சீரழிவு நிலையை நோக்கி இந்தியாவை பிரதமர் மோடி நகர்த்திக் கொண்டிருக்கிறார். பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி, பொதுமுடக்கம் ஆகியவை பெரிய அடி மட்டுமல்ல, பேரழிவு தாக்குதலும் கூட.</p>



<p>பொருளாதார இருள் நம்மை சூழ்ந்துள்ளது. வாழ்க்கை நிலை மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவை முற்றிலும் அழிக்கப்பட்டு விட்டன. வியாபாரம், சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் பாழாகிவிட்டன. பொருளாதாரத்தை ஜி.டி.பி அழித்துவிட்டது. கடந்த 6 ஆண்டுகளாக ஏமாற்று வேலைகளை செய்துவிட்டு நிதி அவசர நெருக்கடி நிலைக்கு நாட்டை தள்ளிவிட்டு, தற்போது கடவுளின் செயல் என்கிறார்கள். கடந்த 73 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, தாங்கள் செய்த மோசடிகளை மறைக்க கடவுள் மீது பழியைப் போடுகிறார்கள்.</p>



<h4 class="wp-block-heading"><strong>ஜி.டி.பி.யால் ஏற்பட்ட பாதிப்பு:</strong></h4>



<p>2021 ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் ஜி.டி.பி எனப்படும் உள்நாட்டு மொத்த உற்பத்தி குறையக்கூடும் என்பதால் ( சுதந்திரத்துக்குப் பிறகு முதல்முறையாக) ஒவ்வொரு இந்தியரின் சராசரி வருமானத்தில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தும். கடந்த 2019-20 ஆம் நிதியாண்டில் தனிநபர் வருமானம் ரூ. 1 லட்சத்து 35 ஆயிரத்து 50 ஆக இருந்தது. 2020-21 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில்  மொத்த உள்நாட்டு உற்பத்தி 24 சதவிகிதம் வீழ்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டாவது காலாண்டும் மிக மோசமாக இருக்கும். 2020-21 ஆம் ஆண்டு முழுவதும் ஜி.டி.பி. 11 சதவிகிதமாக குறைந்தால், ஒவ்வொரு இந்தியரின் வருமானத்தில் ரூ. 14 ஆயிரத்து 900 வரை இழப்பை ஏற்படுத்தும். ஒரு பக்கம் பணவீக்கம் சாதாரண மனிதனை பெரும் பாதிப்படையச் செய்துள்ளது. மற்றொரு பக்கம் வரிகளும் பொருளாதார வீழ்ச்சியும் சுமையை தாங்க முடியாமல் மக்களின் முதுகெலும்பை ஒடிக்கின்றன.</p>



<h4 class="wp-block-heading"><strong>நம்பிக்கையான பற்றாக்குறை அல்லது அரசு மீதான நம்பிக்கை இழப்பு:</strong></h4>



<p>மோடி அரசின் நம்பிக்கை பற்றாக்குறையால் இந்தியா பாதிக்கப்பட்டுள்ளது. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை கேட்டுப் பாருங்கள். நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதைப் போல், வங்கிக் கடனோ அல்லது மற்ற நிதியுதவியோ கிடைக்கவில்லை என்று சொல்வார்கள். வங்கிகளுக்கு அரசின் மீது நம்பிக்கை இல்லை. அரசுக்கோ ரிசர்வ் வங்கி மீது நம்பிக்கை இல்லை. மாநில அரசுகளுக்கு மத்திய அரசின் மீது நம்பிக்கை இல்லை. மத்திய அரசின் ரூ. 20 லட்சம் கோடி தொகுப்பு நிதியுதவித் திட்டம் பொய் என உறுதியாகியுள்ளது. இது நம்பிக்கையின் பற்றாக்குறை மட்டுமல்ல. ஒட்டுமொத்த நம்பிக்கை தகர்ந்துபோனதையும் காட்டுகிறது.</p>



<h4 class="wp-block-heading"><strong>பொருளாதார அழிவின் சுனாமி:</strong></h4>



<p>உண்மையை எதிர்கொள்ள மறுத்து, பொய்யை&nbsp; விளம்பரப்படுத்திக் கொள்வதை&nbsp; அரசு வழக்கமாகக் கொண்டுள்ளது. பொருளாதார சீரழிவால்&nbsp; 40 கோடிக்கும் மேற்பட்ட இந்தியர்கள் வறுமைக் கோட்டுக்கு கீழே தள்ளப்பட்டுள்ளார்கள். பொருளாதாரம் தேய்ந்து போனதால், வருங்கால வைப்பு நிதியிலிருந்து 80 லட்சம் மக்கள் தங்கள் பணமான ரூ. 30 ஆயிரம் கோடியை எடுத்துவிட்டனர். 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் ஜுலை மாதம் வரை மாதச் சம்பளம் பெறும் 2 கோடி பேர் வேலையிழந்துள்ளனர். பொதுமுடக்கம் காரணமாக, அமைப்புச்சாரா துறையில் 10 கோடி பேர் வேலையிழந்துள்ளனர். நாட்டில் உள்ள 6 கோடியே 30 லட்சம் குறு,சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில், நான்கில் ஒரு பங்கு நிறுவனங்கள் மட்டுமே, 50 சதவிகிதம் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன. இதில், பெரும்பாலான நிறுவனங்கள் நிரந்தரமாக மூடப்பட்டுள்ளன. கட்டுமானத் துறையில் 2020-21 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் ஜி.டி.பி. மைனஸ் 50.3 சதவிகிதமும், வர்த்தகம், ஓட்டல், போக்குவரத்து துறைகளில் மைனஸ் 26 சதவிகிதமும் குறைந்துள்ளது. உற்பத்தித் துறையில் ஜி.டி.பி. மைனஸ் 39.3 சதவிகிதமும், சேவைத்துறைகளில் மைனஸ் 26 சதவிகிதமும் குறைந்துள்ளது. பல கோடி பேர் வேலை இழந்துள்ளனர் என்பதே இதற்கு அர்த்தம். ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் அறிக்கையின்படி, 2020 செப்டம்பரில் ஜி.டி.பி மைனஸ் 10.9 சதவிகிதமாக குறையும் என தெரிவித்துள்ளது.</p>



<h4 class="wp-block-heading"><strong>மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி நிலுவை:</strong></h4>



<p>மாநில அரசுகளுக்கான ஜி.எஸ்.டியை குறைத்தது கூட்டாட்சி தத்துவத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலாகும். மாநில அரசுகளுக்கு தர வேண்டி ஜி.எஸ்.டி பங்கை, தரும் நிலையில் மத்திய அரசு இல்லை என, நிதித்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு முன்பு மத்திய நிதித்துறை செயலாளர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.&nbsp; மாநிலங்களுக்கு ரூ. 3 லட்சம் கோடி வரை ஜி.எஸ்.டி. வருவாய் இழப்பு ஏற்படும் என்று ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது. தங்கள் செலவினங்களை மாநில அரசுகள் எப்படி சந்திக்கும்? இது பொருளாதார அராஜகம் அல்லவா?</p>



<h4 class="wp-block-heading">விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் நடுத்தர வர்க்கம் மீது தாக்குதல்:</h4>



<p>மாதச் சம்பளம் பெறுவோர் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு, வங்கித் தவணைகளை கட்டுவதற்கு ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குப் பிறகு கால அவகாசம் நீட்டிக்கப்படாது என, உச்ச நீதிமன்றத்தில் மோடி அரசு மனு தாக்கல் செய்துள்ளது. அவர்களுக்கு வட்டியை தள்ளுபடி செய்யவும் மோடி அரசு மறுத்துவிட்டது. நடுத்தர வர்க்கத்தினர் நம்பிக்கையை இழந்துவிட்டனர். விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் பொருளாதாரச் சூழலால் தற்கொலை செய்து கொள்வதின் பின்னணியில் மத்திய அரசு உள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு மட்டும், 42 ஆயிரத்து 480 விவசாயிகள் மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக என்சிஆர்பி அறிக்கை தெரிவிக்கிறது. அதாவது, தினமும் 116 விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். வேலை இழப்பும் தற்கொலைக்கு தூண்டியுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு மட்டும் வேலை இழப்பால் 14 ஆயிரத்து 19 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதாவது, தினசரி 38 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.</p>



<p>இந்தியாவின் பொருளாதாரத்தை அழிக்க வேண்டும் என்ற அதிகார போதை தலைக்கேறி ஆணவத்துடன் செயல்படும் ஓர் அரசு, விவசாயிகளின் உழைப்பு மற்றும் இளைஞர்களின் எதிர்பார்ப்பை கவனிக்கத் தவறிவிட்டது.</p>



<p>மயில்களுக்கு உணவு அளிப்பது, புகைப்படங்கள் எடுத்துக் கொள்வது,&nbsp; உடைகளை அணிவது, தொலைக்காட்சியை ஆக்கிரமித்துக் கொள்வது மட்டுமே பிரதமரின் பணியாக இருக்கிறது.</p>



<p>அழிவுப்பாதையில் நாட்டை அழைத்துச் செல்லும் மோடி அரசிடம் இருந்தும் நாட்டை மீட்டு, இந்தியாவின் விருப்பங்கள் மற்றும் எதிர்பார்ப்பை செயல்படுத்தும் நேரம் வந்துவிட்டது.</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-economics/economy-destroyed-randeep-singh-surjewala/">தனி நபர் வருமான இழப்பு, பணவீக்கம், 40 கோடி இந்தியர்கள் வறுமை கோட்டிற்கு கீழே தள்ளப்பட்டுள்ளனர்! இதுதான் பா.ஜ.க.வின் சாதனையா?: ரன்தீப் சிங் சுர்ஜேவாலா</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://desiyamurasu.com/news-economics/economy-destroyed-randeep-singh-surjewala/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>முடங்கிப்போன பொருளாதாரத்தை மீட்க என்ன வழி? புதிய வேலை வழங்க பா.ஜ.க. அரசிடம் என்ன திட்டம் உள்ளது?: பேராசிரியர் கவுரவ் வல்லப் கேள்வி</title>
		<link>https://desiyamurasu.com/news-economics/unfulfilled-job-promises-of-bjp-government/</link>
					<comments>https://desiyamurasu.com/news-economics/unfulfilled-job-promises-of-bjp-government/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Admin]]></dc:creator>
		<pubDate>Mon, 07 Sep 2020 10:09:13 +0000</pubDate>
				<category><![CDATA[பொருளாதாரம்]]></category>
		<category><![CDATA[BJP Govt.]]></category>
		<category><![CDATA[congress]]></category>
		<category><![CDATA[Gourav Vallabh]]></category>
		<category><![CDATA[unemployment]]></category>
		<guid isPermaLink="false">https://desiyamurasu.com/?p=2118</guid>

					<description><![CDATA[<p>அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செய்தி தொடர்பாளர் பேராசிரியர் கவுரவ் வல்லப் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஒவ்வொரு ஆண்டும் பல கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம் என்ற, அதே பழைய புராணத்தை பாடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், நடந்தபாடில்லை. காலாண்டில் ஜி.டி.பி. எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி 23.9 சதவிகிதமாக சுருங்கியதையடுத்து, இந்திய பொருளாதாரம் இருண்டு காணப்படுகிறது. ஜி.டி.பியில் அமைப்பு சார்ந்த துறைகள் உட்படுத்தப்படவில்லை என்பதை உங்கள் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன். அமைப்பு சார்ந்த துறையையும் இணைத்தால், எண்ணிக்கை [&#8230;]</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-economics/unfulfilled-job-promises-of-bjp-government/">முடங்கிப்போன பொருளாதாரத்தை மீட்க என்ன வழி? புதிய வேலை வழங்க பா.ஜ.க. அரசிடம் என்ன திட்டம் உள்ளது?: பேராசிரியர் கவுரவ் வல்லப் கேள்வி</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செய்தி தொடர்பாளர் பேராசிரியர் கவுரவ் வல்லப் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:</p>



<p>ஒவ்வொரு ஆண்டும் பல கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம் என்ற, அதே பழைய புராணத்தை பாடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், நடந்தபாடில்லை. காலாண்டில் ஜி.டி.பி. எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி 23.9 சதவிகிதமாக சுருங்கியதையடுத்து, இந்திய பொருளாதாரம் இருண்டு காணப்படுகிறது. ஜி.டி.பியில் அமைப்பு சார்ந்த துறைகள் உட்படுத்தப்படவில்லை என்பதை உங்கள் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன். அமைப்பு சார்ந்த துறையையும் இணைத்தால், எண்ணிக்கை பயமுறுத்தும். முடங்கிப் போன இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்க பின்வரும் 3 வழிகளை பின்பற்றி நடவடிக்கை எடுக்குமாறு, அரசுக்கு கோரிக்கை வைத்தோம்.:</p>



<ul class="wp-block-list"><li>குடும்பம் மற்றும் தனியார் செலவு மற்றும் தேவையை அதிகரிக்க வேண்டும். இந்த இரண்டின் வழியாகத்தான் கிட்டத்தட்ட 76 சதவிகித முதலீடு நடக்கிறது.</li><li>தொழிற்துறையை ஊக்குவிக்க அடிப்படை செலவினங்களை அதிகரித்தால், தொழிற்துறை நடவடிக்கைகள் வேகமாக நடைபெறுவதுடன் வேலை வாய்ப்புகளும் உருவாகும்.</li><li>கிராமம் மற்றும் நகர்ப் புறங்களில் நிலையான வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும்.</li></ul>



<p>நாட்டில் 42 கோடியே 80 லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர். வேலை இன்றி 3 கோடியே 60 லட்சம் பேர் உள்ளனர். இந்த நேரத்தில் வேலைவாய்ப்பை அதிகரிப்பது அரசின் முதன்மை நடவடிக்கையாக இருக்க வேண்டும். இந்திய பொருளாதாரத்தில், கிராமப் பொருளாதாரம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கிராமப் புறங்களிலும் வேலை இழப்பு அதிகரித்துள்ளது. பிரச்சினை இரண்டு விதமாக உள்ளது. நகர்ப்புறம் மற்றும் கிராமப் புறங்களில் வேலைவாய்ப்பை உருவாக்கும் திறனற்ற அரசாக மோடி அரசு உள்ளது. அடுத்ததாக, காலிப் பணியிடங்களை நிரப்புவதில் அரசு காட்டும் அக்கறையின்மை மிகவும் வினோதமாக உள்ளது.</p>



<p>21 துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் குறித்த அறிவிக்கையை ரயில்வே தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. அதோடு தேர்வு விதிமுறைகள் குறித்தும் வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது.</p>



<p>காலியாக உள்ள 2 லட்சத்து 14 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப 2 கோடியே 88 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. இந்த விண்ணப்பங்கள் மூலம் தேர்வு கட்டணமாக ரூ. 1,025 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.</p>



<p>இந்த கணக்கு, ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல்தான். அரசின் இயலாமையால் ஏற்படும் சுமையை இளைஞர்களின் தோள்களில் ஏற்றக்கூடாது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிப்போர் வசதிபடைத்த குடும்ப பின்னணியில் இருந்து வருவதில்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். 2 லட்சத்து 15 ஆயிரம் பணியிடங்களை நிரப்பாததால், 2 லட்சத்து 15 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.</p>



<p>அரசிடம் நான் கேட்கும் 3 முக்கிய கேள்விகள்:</p>



<ol class="wp-block-list"><li>காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான பெரும்பாலான அறிவிக்கை, தேர்தலுக்கு 3 மாதங்களுக்கு முன்பு வெளியிடப்படுவது ஏன்? உண்மையிலேயே பணியிடங்கள் காலியாக உள்ளனவா? இல்லை, ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் ரூ. 15 ஆயிரம் போடுவோம் என்று சொன்னது போன்ற, வெறும் அரசியல் வித்தையா?</li><li>பொருளாதாரத்தின் தேவை அதிகரிக்கும் போது, லட்சக்கணக்கான வேலைகளை உருவாக்கி அதனை பொருளாதாரத்துடன் இணைத்திருக்க வேண்டும் என்பதில் உங்கள் கவனம் இருந்திருக்க வேண்டும். குறிப்பிட்ட காலத்துக்குள் இத்தகைய நடவடிக்கையை ஏன் எடுக்கவில்லை?. எதுவும் செய்யாமல் இருந்தது, தவறான நோக்கம் கொண்டதா? அல்லது தவறான செயல்பாடா?</li><li>இந்திய ரயில்வேயில் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான காலம் நீண்டுகொண்டு இருக்கும்போது, மற்ற துறைகளில் பணியிடங்கள் நிரப்ப எவ்வளவு காலம் ஆகும்? காலிப் பணியிடங்களை நிரப்புவதில் காலம் தாழ்த்த மாட்டோம் என மத்திய அரசு உறுதி தருமா?</li></ol>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-economics/unfulfilled-job-promises-of-bjp-government/">முடங்கிப்போன பொருளாதாரத்தை மீட்க என்ன வழி? புதிய வேலை வழங்க பா.ஜ.க. அரசிடம் என்ன திட்டம் உள்ளது?: பேராசிரியர் கவுரவ் வல்லப் கேள்வி</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://desiyamurasu.com/news-economics/unfulfilled-job-promises-of-bjp-government/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>&#8216;காணாமல் போன வளர்ச்சி&#8217; : களைகட்டும் காங்கிரஸின் சமூக ஊடகப் பிரச்சாரம்</title>
		<link>https://desiyamurasu.com/news-economics/congress-keeps-up-attack-on-govt-over-job-losses/</link>
					<comments>https://desiyamurasu.com/news-economics/congress-keeps-up-attack-on-govt-over-job-losses/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Admin]]></dc:creator>
		<pubDate>Sat, 05 Sep 2020 10:15:48 +0000</pubDate>
				<category><![CDATA[பொருளாதாரம்]]></category>
		<category><![CDATA[bjp]]></category>
		<category><![CDATA[congress]]></category>
		<category><![CDATA[jobloss]]></category>
		<category><![CDATA[unemployment]]></category>
		<guid isPermaLink="false">https://desiyamurasu.com/?p=2099</guid>

					<description><![CDATA[<p>வேலைவாய்ப்பு இழப்பு, வளர்ச்சி உள்ளிட்ட பல விசயங்களில் மோடி அரசு தோல்வி அடைந்துவிட்டதாக, சமூக ஊடகம் மூலம் காங்கிரஸ் கட்சி பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடகப் பிரிவின் &#160;&#8221;காணாமல் போன வளர்ச்சி&#8221; என்ற பிரச்சாரத்தில் இணைந்துள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தமது ட்விட்டர் பதிவில் மோடி அரசை கடுமையாக சாடியுள்ளார். ஆகஸ்ட் மாதத்தில் &#160;கிராமப்புறங்களில் &#160;வேலை இழப்பு அதிகரித்துள்ளதை ட்விட்டர் பதிவில் சுட்டிக் காட்டியுள்ள ராகுல் காந்தி, &#8221;12 கோடி வேலை [&#8230;]</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-economics/congress-keeps-up-attack-on-govt-over-job-losses/">&#8216;காணாமல் போன வளர்ச்சி&#8217; : களைகட்டும் காங்கிரஸின் சமூக ஊடகப் பிரச்சாரம்</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>வேலைவாய்ப்பு இழப்பு, வளர்ச்சி உள்ளிட்ட பல விசயங்களில் மோடி அரசு தோல்வி அடைந்துவிட்டதாக, சமூக ஊடகம் மூலம் காங்கிரஸ் கட்சி பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளது.<br><br>காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடகப் பிரிவின் &nbsp;&#8221;காணாமல் போன வளர்ச்சி&#8221; என்ற பிரச்சாரத்தில் இணைந்துள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தமது ட்விட்டர் பதிவில் மோடி அரசை கடுமையாக சாடியுள்ளார்.<br><br>ஆகஸ்ட் மாதத்தில் &nbsp;கிராமப்புறங்களில் &nbsp;வேலை இழப்பு அதிகரித்துள்ளதை ட்விட்டர் பதிவில் சுட்டிக் காட்டியுள்ள ராகுல் காந்தி, &#8221;12 கோடி வேலை வாய்ப்புகள் பறிபோயுள்ளன. 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் காணாமல் போய்விட்டது. நாட்டின் பாதுகாப்பும் எதிர்காலமும் காணாமல் போய்விட்டன. நீங்கள் கேள்வி கேட்டால், அதற்கு பதிலும் காணாமல் போகிறது&#8221; என்று குறிப்பிட்டுள்ளார்.<br><br>மற்றொரு ட்வீட்டில், வேலைவாய்ப்பு வழங்குமாறும், நாட்டில் உள்ள இளைஞர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறும், மோடி அரசுக்கு ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.<br><br>காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வதேரா தமது ட்விட்டர் பதிவில், &#8221;வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், அரசின் பொதுத் துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவதற்கும் அவர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். &nbsp;கடந்த சில ஆண்டுகளாக பட்டப்படிப்பு படித்தவர்களுக்காக அரசு வேலை வாய்ப்பை உருவாக்கும் ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் தேர்வுகள் முடங்கியுள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.<br>2017 ஆம் ஆண்டுக்கான ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் நியமனம் செய்யப்படவில்லை. 2018 ஆம் ஆண்டு தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை. 2019 ஆம் ஆண்டு தேர்வு நடத்தவில்லை. 2020 ஆம் ஆண்டுக்கான காலிப் பணியிடங்கள் குறித்த அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை. காலிப் பணியிடங்கள் இருந்தால், தேர்வு கிடையாது. தேர்வு நடந்தால் முடிவுகள் வெளியிடுவதில்லை. முடிவுகள் வெளியிடப்பட்டால், தேர்வு கிடையாது&#8221; என்று பிரியங்கா இந்தியில் ட்வீட் செய்துள்ளார்.<br><br>தொடர்ந்து அவர் குறிப்பிடும்போது, &#8221;தனியார் துறையில் வேலை இழப்பு, அரசுப் பணிக்கான தேர்வு நிறுத்தம் ஆகியவற்றால் இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. &nbsp;ஆனால், உண்மை நிலையை மறைத்துவிட்டு, விளம்பரங்கள் மூலம் மோடி அரசு பொய் சொல்லிக் கொண்டிருக்கிறது&#8221; என்று சாடியுள்ளார்.<br><br>காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் கவுரவ் வல்லப் செய்தியாளர்களிடம் பேசும்போது, &#8221;ரயில்வே மற்றும் ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் மூலம் 2 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டியுள்ளது&#8221; என்றார். &nbsp;தொடர்ந்து பேசிய அவர், ஒரு விண்ணப்பத்துக்கு தேர்வு கட்டணமாக 2 கோடியே 50 லட்சம் விண்ணப்பதாரரிடம் இருந்து ரூ.1,000 கோடி வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டினார்.<br><br>இதற்கிடையே, மோடி அரசை &nbsp;காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா கடுமையாக சாடியுள்ளார். &#8221;இந்தியாவில் வறுமை அதிகரித்துள்ளதாக ஐ.நா. அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், 40 கோடி இந்தியர்கள் வறுமைக்கோட்டுக்கு கீழே சென்றுள்ளதாக, சர்வதேச தொழிலாளர் அமைப்பு கூறியுள்ளதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-economics/congress-keeps-up-attack-on-govt-over-job-losses/">&#8216;காணாமல் போன வளர்ச்சி&#8217; : களைகட்டும் காங்கிரஸின் சமூக ஊடகப் பிரச்சாரம்</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://desiyamurasu.com/news-economics/congress-keeps-up-attack-on-govt-over-job-losses/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>பொது முடக்கத்தை சிந்திக்காமல் அறிவித்தார் பிரதமர் மோடி: பொருளாதார வல்லுனர்கள் குற்றச்சாட்டு</title>
		<link>https://desiyamurasu.com/news-economics/indias-gdp-shrinks-more-than-other-major-economies-decline-set-in-before-pandemic/</link>
					<comments>https://desiyamurasu.com/news-economics/indias-gdp-shrinks-more-than-other-major-economies-decline-set-in-before-pandemic/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[ஆ. கோபண்ணா]]></dc:creator>
		<pubDate>Fri, 04 Sep 2020 12:24:10 +0000</pubDate>
				<category><![CDATA[பொருளாதாரம்]]></category>
		<category><![CDATA[Covid-19]]></category>
		<category><![CDATA[Economy]]></category>
		<category><![CDATA[GDP]]></category>
		<guid isPermaLink="false">https://desiyamurasu.com/?p=2086</guid>

					<description><![CDATA[<p>மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை அமைச்சகம் கடந்த திங்கள்கிழமை வெளியிட்ட தரவுகளில், கடந்த ஏப்ரல் முதல் ஜுன் வரையிலான இந்தியாவின் &#160;மொத்த உள்நாட்டு உற்பத்தி 23.9 சதவிகிதமாக இருந்தது. ஒட்டுமொத்த கூடுதல் மதிப்பீட்டின் அடிப்படையில், பொருளாதாரம் 22.8 சதவிகிதமாக இருந்தது. இது இந்திய பொருளாதாரத்தின் மந்தநிலையையே வெளிப்படுத்துகிறது. தரவுகளின் உண்மை நிலவரம் இறுதியாக வெளியாகும்போது, நிலைமை இன்னும் மோசமாகும் என்று தெரிகிறது. இந்திய வரலாற்றில் பொருளாதார சூழல் இதுபோல் மோசமான நிலையில் இருந்ததில்லை. இதுபோன்று பொருளாதாரம் [&#8230;]</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-economics/indias-gdp-shrinks-more-than-other-major-economies-decline-set-in-before-pandemic/">பொது முடக்கத்தை சிந்திக்காமல் அறிவித்தார் பிரதமர் மோடி: பொருளாதார வல்லுனர்கள் குற்றச்சாட்டு</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை அமைச்சகம் கடந்த திங்கள்கிழமை வெளியிட்ட தரவுகளில், கடந்த ஏப்ரல் முதல் ஜுன் வரையிலான இந்தியாவின் &nbsp;மொத்த உள்நாட்டு உற்பத்தி 23.9 சதவிகிதமாக இருந்தது. ஒட்டுமொத்த கூடுதல் மதிப்பீட்டின் அடிப்படையில், பொருளாதாரம் 22.8 சதவிகிதமாக இருந்தது. இது இந்திய பொருளாதாரத்தின் மந்தநிலையையே வெளிப்படுத்துகிறது.</p>



<p>தரவுகளின் உண்மை நிலவரம் இறுதியாக வெளியாகும்போது, நிலைமை இன்னும் மோசமாகும் என்று தெரிகிறது. இந்திய வரலாற்றில் பொருளாதார சூழல் இதுபோல் மோசமான நிலையில் இருந்ததில்லை.</p>



<p>இதுபோன்று பொருளாதாரம் சுருங்கியதை கடந்த 40 ஆண்டுகளில் இந்தியா சந்தித்ததில்லை. கடந்த 1996 ஆம் ஆண்டு முதல் காலாண்டுக்கான ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தித் தரவுகளை வெளியிட்டு வரும் நிலையில், மோசமான வீழ்ச்சி ஏற்படுவது இதுதான் முதல்முறை.</p>



<p>ஆனால், இது ஒன்றரை நூற்றாண்டுக்கு ஒருமுறை நிகழும் அசாதாரணமான சூழல் என்று அரசு கூறுகிறது. ஆனால், அரசின் தலைமை பொருளாதார ஆலோசகரோ, கொரோனா மற்றும் அதனைத் தொடர்ந்து அமல்படுத்தப்பட்ட பொது முடக்கமே இதற்கு காரணம் என்கிறார்.</p>



<p>முன்னதாக, இந்தியாவில் இதுவரை இல்லாத பொருளாதார வீழ்ச்சியை, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் &#8216;கடவுளின் செயல்&#8217; என்று குற்றம் சாட்டியிருந்தார். வைரஸ் அனைத்து நாடுகளிலும் குறைந்துவிட்டது என்பதும், இந்தியாவின் பொருளாதார மந்தநிலையால் ஆபத்து இல்லை என்பது மத்திய அரசின் கருத்தாக உள்ளது.</p>



<p>ஆனால், சமூக ஊடகங்களில் இயங்கும் பா.ஜ.க.வினரோ, ஒரு படி மேலே போய், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளைவிட, இந்தியாவின் பொருளாதார மந்தநிலை குறைவாக இருப்பதாகவும், இது குறித்து போலி செய்திகள் பரப்பப்படுவதாகவும் பதிவிடுகின்றனர். &nbsp;உலகின் பல நாடுகளிலும் கொரோனா பரவல் குறைந்துவிட்டது உண்மைதான். ஆனால், சுருங்கிப் போன பொருளாதாரத்தை ஒப்பிடும் போது, மற்ற நாடுகளை விட இந்தியா மோசமான நிலையிலேயே உள்ளது.</p>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large"><img decoding="async" width="618" height="484" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/09/graph_3.png" alt="" class="wp-image-2092" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/09/graph_3.png 618w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/09/graph_3-300x235.png 300w" sizes="(max-width: 618px) 100vw, 618px" /></figure></div>



<p>இது குறித்து பொருளாதாரம் மற்றும் நிதி தொடர்பான கட்டுரையாளர் விவேக் கவுல் கூறும்போது, &#8221;பெரிய நாடு, சிறிய நாடு என்ற பாகுபாடு இன்றி, கொரோனா வைரஸ் பரவியுள்ளது. இந்தியாவில் அமல்படுத்தப்படும் பொது முடக்கம் உலகிலேயே மிகக் கடுமையானது. இது பொருளாதார நடவடிக்கைகளை முடக்கிவிட்டது. விளைவுகளைப் பற்றி சிந்திக்காமல் பிரதமர் நரேந்திர மோடி பொது முடக்கத்தை அறிவித்துவிட்டார்&#8221; என்றார்.</p>



<p>&#8221;பொருளாதார வீழ்ச்சிக்கு கொரோனா பரவல் முக்கிய காரணம் என்பதை மறுக்கவில்லை. ஆனால், அதற்கு முன்பே, பொருளாதார சரிவு இருந்தது என்று மத்திய அரசின் தரவுகளே தெரிவிக்கின்றன. இதன் தாக்கம் அனைத்துத் துறைகளிலும் பரவியது&#8221; என்று பொருளாதார நிபுணர்கள் குமார் தாஸ் மற்றும் ஜாய்தீப் பருவா ஆகியோர் சுட்டிக்காட்டுகின்றனர்.</p>



<p>ஜாய்தீப் பருவா கூறும்போது, &#8221;கொரோனா தாக்குதலுக்கு முன்பு, இந்திய பொருளாதாரம் தொடர்ச்சியாக 2 ஆண்டுகள் மந்தநிலையில் இருந்தது. பொருளாதாரம் ஏற்கனவே தோல்வியுற்ற நிலையில், கொரோனாவினால் ஏற்பட்ட கூடுதல் தாக்குதலை தாங்க முடியவில்லை&#8221; என்றார்.</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-economics/indias-gdp-shrinks-more-than-other-major-economies-decline-set-in-before-pandemic/">பொது முடக்கத்தை சிந்திக்காமல் அறிவித்தார் பிரதமர் மோடி: பொருளாதார வல்லுனர்கள் குற்றச்சாட்டு</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://desiyamurasu.com/news-economics/indias-gdp-shrinks-more-than-other-major-economies-decline-set-in-before-pandemic/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>பெரும் நுகர்வுச் சந்தைக்கு பொருளாதாரத்தை மாற்றியமைக்க வேண்டும்: நிபுணர்கள் ஆலோசனை</title>
		<link>https://desiyamurasu.com/news-economics/why-modi-govt-must-reorient-economy-to-a-mass-consumption-market/</link>
					<comments>https://desiyamurasu.com/news-economics/why-modi-govt-must-reorient-economy-to-a-mass-consumption-market/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Admin]]></dc:creator>
		<pubDate>Wed, 26 Aug 2020 10:57:16 +0000</pubDate>
				<category><![CDATA[பொருளாதாரம்]]></category>
		<category><![CDATA[CMIE]]></category>
		<category><![CDATA[Consumer Market]]></category>
		<guid isPermaLink="false">https://desiyamurasu.com/?p=1826</guid>

					<description><![CDATA[<p>&#8221;எனக்கு ஒரு நண்பர் இருந்தார். மிகவும் இனியவர். பல கண்ணாடிகளை சிதறடிக்கும் வகையில் அவரது முகம் கோரமாக இருந்தது. இருந்தாலும், அழகு ராணியை மட்டுமே திருமணம் செய்ய அவர் விரும்பினார். அவருக்குள்ள குறைபாட்டைச் சொல்ல குடும்பத்தாரும் நண்பர்களும் முயன்றனர். அதை ஏற்க மறுத்த அவர், தன் அழகு தேவதையை தேடத் தொடங்கினார். அவரது நலன் விரும்பிகள் எதிர்பார்த்ததைப் போல், 40 வயது பிரம்மச்சாரியான அவருக்கு தலையில் வழுக்கை விழ ஆரம்பித்தது. நிலைமை இப்படி ஆனபிறகும், தன் எதிர்பார்ப்புகளை [&#8230;]</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-economics/why-modi-govt-must-reorient-economy-to-a-mass-consumption-market/">பெரும் நுகர்வுச் சந்தைக்கு பொருளாதாரத்தை மாற்றியமைக்க வேண்டும்: நிபுணர்கள் ஆலோசனை</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>&#8221;எனக்கு ஒரு நண்பர் இருந்தார். மிகவும் இனியவர். பல கண்ணாடிகளை சிதறடிக்கும் வகையில் அவரது முகம் கோரமாக இருந்தது. இருந்தாலும், அழகு ராணியை மட்டுமே திருமணம் செய்ய அவர் விரும்பினார். அவருக்குள்ள குறைபாட்டைச் சொல்ல குடும்பத்தாரும் நண்பர்களும் முயன்றனர். அதை ஏற்க மறுத்த அவர், தன் அழகு தேவதையை தேடத் தொடங்கினார். அவரது நலன் விரும்பிகள் எதிர்பார்த்ததைப் போல், 40 வயது பிரம்மச்சாரியான அவருக்கு தலையில் வழுக்கை விழ ஆரம்பித்தது. நிலைமை இப்படி ஆனபிறகும், தன் எதிர்பார்ப்புகளை அவர் குறைத்துக் கொள்ளவில்லை&#8230;&#8221;</p>



<p>இந்த கதைக்கு அப்படியே நேர்மாறாக ஜீ என்டர்டைன்மென்ட் நிறுவனத்துக்கு முதலாவது கால் நிதியாண்டில் ஏற்பட்டது. கடந்த 2019 ஆம் ஆண்டை ஒப்பிடும்போது, இந்த நிறுவனத்தில் லாபம் 94 சதவிகிதம் சரிந்தது. அதே நாளன்று, இந்த நிறுவனத்தின் பங்குச் சந்தை 13 சதவிகிதம் ஆனது. பொது முடக்கத்தின்போது, இந்த நிறுவனம் எவ்வளவு லாபம் ஈட்டும் என்பதில், முதலீட்டாளர்கள் ஏற்கனவே குறைவான எதிர்பார்ப்பில் இருந்தனர்.<br><br>இந்த நிலையில், ஜி நிறுவனத்தின் வருவாய் 50 சதவிகிதம் குறையும் என்று கருதப்பட்டது. ஆனால், அதன் வருவாய் 35 சதவிகிதம் மட்டுமே சரிந்தது. எனவே, ஜி நிறுவனத்துக்கு இந்த முதல் காலாண்டு மோசமானதாக இருந்தாலும், தலால் தெருவின் எதிர்பார்ப்பை வென்றது.</p>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large"><img loading="lazy" decoding="async" width="350" height="350" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/08/CMIE_1.jpg" alt="" class="wp-image-1833" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/08/CMIE_1.jpg 350w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/08/CMIE_1-300x300.jpg 300w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/08/CMIE_1-150x150.jpg 150w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/08/CMIE_1-75x75.jpg 75w" sizes="auto, (max-width: 350px) 100vw, 350px" /></figure></div>



<p>50 நிறுவனங்களில் 48 நிறுவனங்கள் பெரும் லாபம் ஈட்டின. மேலும் தங்களை அதிகபட்ச வருவாய் ஈட்டுவோராக அறிவித்துக் கொண்டன. இதில் 33 நிறுவனங்கள் நிபுணர்களின் கணிப்பை முறியடித்துள்ளன. இருந்தாலும், கடந்த 2019 வரையிலான ஒட்டுமொத்த வருவாயை ஒப்பிடும்போது, 40 சதவிகிதத்துக்கு அதிகமாக வருவாய் குறைந்துள்ளது.<br><br>&#8216;சிஎம்ஐஇ&#8217; எனப்படும் இந்திய பொருளாதாரக் கண்காணிப்பு மையத்தின் தொகுப்பின் முடிவைப் பார்த்தால், 2019-20 ஆம் ஆண்டின் கடைசி காலாண்டில் பட்டியலிடப்பட்ட 4 ஆயிரத்து 120 நிறுவனங்களின் மொத்த வருவாய், முந்தைய ஆண்டைவிட 46 சதவிகிதம் குறைந்துள்ளது.<br><br>பொது முடக்கத்தால் ஏற்கனவே சரி செய்துகொண்டிருந்த அனைத்து தரகர்களின் வருவாய் மதிப்பீட்டை குறைக்கத் தூண்டியுள்ளது. சிஎல்எஸ்ஏ என்ற பெரும் தரகு நிறுவனம், லாபம் ஈட்டும் நிறுவனங்களின் காலாண்டு மதிப்பீட்டை கடந்த 22 காலாண்டுகளாக தொடர்ந்து குறைத்து வருகிறது. தங்கள் விற்பனையில் பெரும் அடி என்று அவர்களுக்குத் தெரியும். அதனால் தான் அவர்கள் தங்கள் செலவுகளை வழக்கத்தைவிட அதிகமாக குறைக்கிறார்கள்.<br><br>&#8216;சிஎம்ஐஇ&#8217; தொகுப்பு முடிவின்படி, பட்டியலிடப்பட்ட 1,786 நிறுவனங்கள் லாபம் ஈட்டுவதாக அறிவித்துக் கொண்டாலும், அவர்களது வருவாய் 25 சதவிகிதம் குறைந்துள்ளது. அதேசமயம், செலவுகளும் 26 சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளன.<br><br>&#8216;சிஎம்ஐஇ&#8217; தலைவர் மகேஷ் வியாஸ் கூறும்போது, &#8221;1,560 நிறுவனங்களில் ஊதிய உயர்வு 3 சதவிகிதத்துக்கு குறைவாக உள்ளது. கடந்த 18 ஆண்டுகளில் இது குறைவான ஊதிய உயர்வாகும். இத்தகைய குறைவான ஊதிய உயர்வால், ஊதிய விகிதம் அதிகரிப்பதற்கு பதில் பெரும்பாலான நிறுவனங்களில் குறைந்துள்ளது&#8221; என்றார்.<br><br>உண்மையிலேயே எதுவாக இருந்தாலும், பொது முடக்கத்தின் போது இந்தியாவால் சமாளிக்க முடியும் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது.  எனவே, பெரும் நுகர்வு சந்தைக்கு இந்திய பொருளாதாரத்தை மோடி அரசு மாற்றியமைக்க வேண்டும் என்பதே பொருளாதார நிபுணர்களின் ஆலோசனையாக உள்ளது.<br><br>கட்டுரையாளர்: ஆனின்ட்யோ சக்கரவர்த்தி</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-economics/why-modi-govt-must-reorient-economy-to-a-mass-consumption-market/">பெரும் நுகர்வுச் சந்தைக்கு பொருளாதாரத்தை மாற்றியமைக்க வேண்டும்: நிபுணர்கள் ஆலோசனை</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://desiyamurasu.com/news-economics/why-modi-govt-must-reorient-economy-to-a-mass-consumption-market/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
	</channel>
</rss>
