<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>காமராஜ் சகாப்தம் - தேசிய முரசு - Desiya Murasu</title>
	<atom:link href="https://desiyamurasu.com/category/kamaraj-an-era/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://desiyamurasu.com/category/kamaraj-an-era/</link>
	<description>DesiyaMurasu – Daily Opinions &#38; Analysis on Latest News  &#124; Tamil News</description>
	<lastBuildDate>Wed, 15 Jul 2020 11:07:24 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.8.3</generator>

<image>
	<url>https://desiyamurasu.com/wp-content/uploads/2020/07/cropped-FAV-copy-1-32x32.png</url>
	<title>காமராஜ் சகாப்தம் - தேசிய முரசு - Desiya Murasu</title>
	<link>https://desiyamurasu.com/category/kamaraj-an-era/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>தந்தை பெரியாரின் மரண வாக்குமூலம்!</title>
		<link>https://desiyamurasu.com/kamaraj-an-era/%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%b5%e0%ae%b0%e0%af%88-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%aa/</link>
					<comments>https://desiyamurasu.com/kamaraj-an-era/%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%b5%e0%ae%b0%e0%af%88-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%aa/#comments</comments>
		
		<dc:creator><![CDATA[ஆ. கோபண்ணா]]></dc:creator>
		<pubDate>Tue, 14 Jul 2020 18:50:25 +0000</pubDate>
				<category><![CDATA[காமராஜ் சகாப்தம்]]></category>
		<guid isPermaLink="false">https://desiyamurasu.com/?p=281</guid>

					<description><![CDATA[<p>காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்த தந்தை பெரியார் சுமார் ஒன்பதரையாண்டு காலம் காமராஜர் ஆட்சியை தம் தோள்மீது சுமந்து தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் செய்து ஆதரவு திரட்டினார். 1961 இல் தேவகோட்டையில் பேசும்பொழுது, மரண வாக்குமூலம்போல தமது உள்ளக்கிடக்கையை தந்தை பெரியார் வெளியிட்டார். அதில், “தோழர்களே! எனக்கோ வயது 82 ஆகிறது. நான் எந்த நேரத்திலும் இறந்துவிடலாம். ஆயினும், நீங்கள் இருப்பீர்கள். உங்களைவிட முதிர்ந்த நான், மரண வாக்குமூலம்போன்று ஒன்றைக் கூறுகிறேன். மரண வாக்குமூலம் [&#8230;]</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/kamaraj-an-era/%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%b5%e0%ae%b0%e0%af%88-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%aa/">தந்தை பெரியாரின் மரண வாக்குமூலம்!</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்த தந்தை பெரியார் சுமார் ஒன்பதரையாண்டு காலம் காமராஜர் ஆட்சியை தம் தோள்மீது சுமந்து தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் செய்து ஆதரவு திரட்டினார்.</p>
<p>1961 இல் தேவகோட்டையில் பேசும்பொழுது, மரண வாக்குமூலம்போல தமது உள்ளக்கிடக்கையை தந்தை பெரியார் வெளியிட்டார். அதில்,</p>
<p>“தோழர்களே! எனக்கோ வயது 82 ஆகிறது. நான் எந்த நேரத்திலும் இறந்துவிடலாம். ஆயினும், நீங்கள் இருப்பீர்கள். உங்களைவிட முதிர்ந்த நான், மரண வாக்குமூலம்போன்று ஒன்றைக் கூறுகிறேன். மரண வாக்குமூலம் கூறவேண்டிய நிலையில் உள்ளவன் பொய் சொல்லவேண்டிய அவசியமில்லை. இன்றைய காமராசர் ஆட்சியில் நமது நாடு அடைந்து வரும் முன்னேற்றம் இரண்டாயிரம், மூவாயிரம் ஆண்டுகளில் என்றுமே நடந்ததில்லை. நமது முவேந்தர்கள் ஆட்சி காலத்திலாகட்டும், அடுத்து நாயக்கர் மன்னர்கள், மராட்டிய மன்னர்கள், முஸ்லிம்கள், வெள்ளைக்காரர்கள் இவர்கள் ஆட்சியில் ஆகட்டும், எல்லாம் நமது கல்விக்கு வகைசெய்யவில்லை.”</p>
<p>“தோழர்களே! நீங்கள் என் சொல்லை நம்புங்கள். இந்த நாடு உருப்பட வேண்டுமானால் இன்னும் 10 ஆண்டுகளுக்காவது காமராசரை விட்டுவிடாமல் பிடித்துக்கொள்ளுங்கள். அவரது ஆட்சிமூலம் சுகமடையுங்கள். காமராசரை பயன்படுத்திக்கொள்ள நாம் தவறிவிட்டால், தமிழர்களுக்கு வாழ்வளிக்க வேறு ஆளே சிக்காது.”</p>
<p>பெரியாரின் மரண வாக்குமூலம், வரலாற்றில் கல்வெட்டு சொற்களாக பதிந்துவிட்டன. இதை எவரும் அழித்துவிடமுடியாது. பெரியாரின் பாராட்டுரைகள் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டு இன்று மின்னிக் கொண்டிருக்கின்றன. இன்றைய தமிழகத்திற்கு அடித்தளமே காமராஜரின் ஆட்சிதான் என்பதை எவரேனும் மறுத்துரைக்க முடியுமா?</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/kamaraj-an-era/%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%b5%e0%ae%b0%e0%af%88-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%aa/">தந்தை பெரியாரின் மரண வாக்குமூலம்!</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://desiyamurasu.com/kamaraj-an-era/%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%b5%e0%ae%b0%e0%af%88-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%aa/feed/</wfw:commentRss>
			<slash:comments>1</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>பெருந்தலைவர் காமராஜரின் பொற்கால ஆட்சி சரித்திரம் படைத்த சாதனைகள்!</title>
		<link>https://desiyamurasu.com/kamaraj-an-era/%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9-2/</link>
					<comments>https://desiyamurasu.com/kamaraj-an-era/%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9-2/#comments</comments>
		
		<dc:creator><![CDATA[ஆ. கோபண்ணா]]></dc:creator>
		<pubDate>Tue, 14 Jul 2020 18:36:10 +0000</pubDate>
				<category><![CDATA[காமராஜ் சகாப்தம்]]></category>
		<guid isPermaLink="false">https://desiyamurasu.com/?p=264</guid>

					<description><![CDATA[<p>பெருந்தலைவர் காமராஜர் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த ஒன்பதரையாண்டு ஆட்சிக் காலத்தில்தான் கல்வியில் புரட்சி நடந்தது. மதிய உணவுத் திட்டம், தொழில் வளர்ச்சி, மின்துறையில் சாதனைகள், பாசனத் திட்டங்கள், நிலச் சீர்திருத்த நடவடிக்கைகள், மக்களுக்கு அதிகாரம் அளிக்கும் பஞ்சாயத்து ராஜ் போன்ற சாதனைப் பட்டியலை அவரால் படைக்க முடிந்தது. அதனால்தான், அவரது ஆட்சிக்காலத்தை “தமிழகத்தின் பொற்காலம்” என்று வரலாற்று ஆசிரியர்கள் பதிவுசெய்து பாராட்டுகிறார்கள். இத்தகைய சாதனைகளை எத்தகைய நிதி ஆதாரத்தைக் கொண்டு காமராஜரால் சாதிக்க முடிந்தது என்பதை அறிந்தால், [&#8230;]</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/kamaraj-an-era/%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9-2/">பெருந்தலைவர் காமராஜரின் பொற்கால ஆட்சி சரித்திரம் படைத்த சாதனைகள்!</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>பெருந்தலைவர் காமராஜர் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த ஒன்பதரையாண்டு ஆட்சிக் காலத்தில்தான் கல்வியில் புரட்சி நடந்தது. மதிய உணவுத் திட்டம், தொழில் வளர்ச்சி, மின்துறையில் சாதனைகள், பாசனத் திட்டங்கள், நிலச் சீர்திருத்த நடவடிக்கைகள், மக்களுக்கு அதிகாரம் அளிக்கும் பஞ்சாயத்து ராஜ் போன்ற சாதனைப் பட்டியலை அவரால் படைக்க முடிந்தது. அதனால்தான், அவரது ஆட்சிக்காலத்தை “தமிழகத்தின் பொற்காலம்” என்று வரலாற்று ஆசிரியர்கள் பதிவுசெய்து பாராட்டுகிறார்கள். இத்தகைய சாதனைகளை எத்தகைய நிதி ஆதாரத்தைக் கொண்டு காமராஜரால் சாதிக்க முடிந்தது என்பதை அறிந்தால், அவரது சாதனை எத்தகையது என்பதைப் புரிந்து எவரும் வியப்படையவே செய்வர்.</p>
<p>காமராஜர் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற 1954 – 1955இல் மொத்த பட்ஜெட் தொகை ரூ.47.18 கோடி! அவர் பதவி விலகியபோது 1962 – 1963இல் மொத்த பட்ஜெட் தொகை ரூ.121.81 கோடி மட்டுமே! ஆனால், தமிழக அரசின் 2014 – 2015ஆம் ஆண்டுக்கான மொத்த பட்ஜெட் தொகை எவ்வளவு தெரியுமா? ரூபாய் 1 லட்சத்து 27 ஆயிரத்து 39 கோடி! இந்தப் பின்னணியில்தான் காமராஜரின் பொற்கால ஆட்சியின் சாதனைகளைக் கணிக்கவேண்டும்.</p>
<p>முதல் திருத்தத்தின் மூலவர்</p>
<p>தமிழகத்தில் நீண்டகாலமாக அமலில் இருந்த பின்தங்கிய சமுதாயத்தினற்கான இடஒதுக்கீட்டை உறுதிசெய்யும் ‘கம்யூனல் ஜி.ஓ’ செல்லாது என சென்னை உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் வழங்கிய தீர்ப்பு கடும் கொந்தளிப்பை உருவாக்கியது.இந்நிலைமையை நன்கு உணர்ந்த காமராஜர், பிரதமர் நேருவிடம் வலியுறுத்தி அரசமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தம் கொண்டுவர வித்திட்டார். அரசமைப்புச் சட்டம் அமலுக்குவந்த சில மாதங்களிலேயே 1951இல் அதில் திருத்தம் கொண்டுவர காரணமாக இருந்து, பின்தங்கிய சமுதாய மாணவர்கள் கல்வி, வேலைவாய்ப்புகளில் பெற்றுவந்த இடஒதுக்கீட்டு உரிமையைப் பெற்றுதந்தவர் காமராஜர். இதனால் அவரை ‘முதல் திருத்தத்தின் மூலவர்’ என்று தமிழகம் போற்றிப் பாராட்டி பெருமிதம் கொண்டது.</p>
<p>சமூக நீதிக்கான ஆட்சி</p>
<p>தமிழகத்தின் முதலமைச்சராக ஏப்ரல் 13, 1954 இல் பொறுப்பேற்ற காமராஜர் அக்டோபர் 2, 1963 வரை ஒன்பதரையாண்டு காலம் ஆட்சி செய்தார். முதலில் எட்டு, பிறகு ஒன்பது அமைச்சர்களோடும் எளிமையான, நேர்மையான சாதனைகளை படைக்கும் ஆட்சியை நடத்தினார். தமது முதல் அமைச்சரவையை உருவாக்கும் போது, அரிஜனத் தலைவரான பி.பரமேசுவரனுக்கு இந்து அறநிலையத்துறையை அளித்து தீண்டாமை ஒழிப்புக்கு வழிகோலினார். அதேபோல, உழைப்பாளர் கட்சி தலைவரான எஸ்.எஸ்.ராமசாமி படையாச்சியை காங்கிரஸில் இணைத்து அமைச்சர் பொறுப்பு வழங்கி, பின்தங்கிய மக்களை முன்னேற்ற பாதையில் பயணம் செய்ய வழிவகுத்தார். 60 ஆண்டுகளுக்கு முன்பே சமூக நீதியை நோக்கமாகக் கொண்டு எந்த ஆரவாரமும், ஆர்ப்பரிப்பும் இல்லாமல் நடவடிக்கை எடுத்தவர் காமராஜர். இதைவிட ஒரு புரட்சிகரமான நடவடிக்கை வேறு என்ன இருக்க முடியும்?</p>
<p>கல்வி புரட்சி</p>
<p>காமராஜர் முதலமைச்சராகப் பொறுப்பேற்றதும் முதல் நடவடிக்கையே குலகல்விமுறை ஒழிப்பு தான். இது குறித்து காமராஜர் கருத்துக் கூறும் போது, “சிலர், பரம்பரை தொழிலையே செய்து வரவேண்டும் என்கிறார்கள். நாம் கீழேயே இருக்கவேண்டுமாம். நம்மை படிக்காதவர்களாக வைத்திருந்து, நாம் ரோடு போடவும், கல் உடைக்கவும், ஏர் ஒட்டவும், சேறு சகதியில் நாற்று நடவும் பயன்படவேண்டுமாம். அவர்கள் மட்டும் நகத்தில் மண் படாமல் வேலை செய்து முன்னேற வேண்டுமாம். எப்படியிருக்கிறது நியாயம்? நாமும் படித்து, நாலு தொழில் செய்து முன்னேற வேண்டாமா?” என்று நறுக்குத் தெறித்தார் போல் கூறினார். காமராஜரின் இந்த சிந்தனைதான் அவரது ஆட்சிக்கு சூத்திரமாக இருந்தது.</p>
<p>எந்த சொத்தும் இல்லாதவர்களுக்கு கல்வி என்ற சொத்தை வழங்கி, வாழக்கையில் முன்னேற்றி விட வேண்டும் என்ற நோக்கத்தில் இலவசக் கல்வியும், மதிய உணவு திட்டமும் கொண்டு வந்தார் காமராஜர். இதனால் 1957 இல் 15,800 ஆக இருந்த தொடக்க பள்ளிகள், 1962 இல் 29,000 ஆக இரண்டு மடங்கு உயர்ந்தன. மாணவர் எண்ணிக்கை 19 லட்சத்தில் இருந்து 40 லட்சமாக விரிவடைந்தது. 637 ஆக இருந்த உயர்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 1995 ஆக 3 மடங்கு பெருகின. உலகம் தோன்றிய காலத்தில் இருந்து ஆயிரமாயிரம் ஆண்டுகாலமாக மறுக்கப்பட்டு வந்த கல்வியை முதல்முறையாக இலவசமாக வழங்கி கல்வியில் புரட்சி செய்த காமராஜரை ‘கல்வி வள்ளல்’ என்று தமிழகமே வாழ்த்தியது. தான் படிக்கவில்லையே தவிர தேசத்தையே படிக்க வைத்தவர் காமராஜர்.</p>
<p>தொழில் வளர்ச்சி</p>
<p>‘நவபாரத சிற்பி’ பிரதமர் ஜவஹர்லால் நேரு ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட முதலாவது, இரண்டாவது ஐந்தாண்டு திட்டங்களின் முழு பலனையும் தமிழகம் பெற்று முன்னேறும் வகையில் கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் பயனாக தமிழகத்தில் தொழில் புரட்சி நடந்தது. தமிழகத்தில் செயல்படுத்தப்பட்ட மத்திய அரசின் திட்டங்களைப் பார்த்தாலே தமிழகத்தின் தொழில் வளர்ச்சியை புரிந்து கொள்ள முடியும்.</p>
<p>1. சென்னை – பெரம்பூரில் ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலை ரூபாய் 7.35கோடி முதலீட்டில் அமைக்கப்பட்டது. இதனைப் பிரதமர் நேரு தொடங்கி வைத்தார். இதில் 7,000 தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது. ஆண்டொன்றுக்கு 620 ரயில் பெட்டிகள் உற்பத்தி செய்யப்பட்டன.</p>
<p>2. சென்னை, கிண்டியில் இந்துஸ்தான் டெலிபிரிண்டர் தொழிற்சாலை தொடங்கப்பட்டது.</p>
<p>3. ஊட்டியில் இந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலை அமைக்கப்பட்டது.</p>
<p>4. திருச்சி, திருவரம்ரில் உயர்அழுத்த கொதிகலன் தொழிற்சாலை (பெல்) அமைய 750 ஏக்கர் பட்டா நிலத்தையும், 2400 ஏக்கர் புறம்போக்கு நிலத்தையும் காமராஜர் ஆட்சியில் வழங்கப்பட்டது. இன்று சர்வதேச அளவில் புகழ்பெற்று, பொதுத்துறை நிறுவனங்களிலேயே அதிக லாபத்தை தருகின்ற ‘மகா நவரத்தினா’ என்ற தகுதியை  பெற்றுள்ளது பெல் நிறுவனம்.</p>
<p>5. பாதுகாப்பு அமைச்சகத்துக்குட்பட்ட ஆவடி டாங்க்பேக்டரி ரூ.15கோடி முதலீட்டில் தொடங்கப்பட்டது.</p>
<p>தொழில் வளர்ச்சியில் அரசுத் துறையோடு, தனியார் துறையும் இணைந்து பல தொழில்கள் தொடங்கப்பட்டன. அதில் சில:</p>
<p>1. மதராஸ் இன்டஸ்டிரியல் இன்வெஸ்ட்மெண்ட் கார்ப்பரேசன்.</p>
<p>2. மதராஸ் சிமெண்ட் லிமிடெட்,  ராஜபாளையம்.</p>
<p>3. ஸ்ரீசேஷசாயி இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட், பள்ளிபாளையம்.</p>
<p>4. மதராஸ் அலுமினியம் லிமிடெட்.</p>
<p>5. சதர்ன் ஸ்டக்ஸரல்ஸ் லிமிடெட், சென்னை.</p>
<p>6. தரங்கதாரா கெமிக்கல் ஒர்க்ஸ் லிமிடெட், தரங்கதாரா.</p>
<p>7. ரேடியோ எலெக்ட்ரிகல் லிமிடெட், சென்னை.</p>
<p>காமராஜர் ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்ட சில முக்கியமான தொழிற்சாலைகள்:</p>
<p>1. சென்னை, வண்டலூர் ஸ்டேன்டர்ட் மோட்டார்ஸ் தொழிற்சாலை,</p>
<p>2. அசோக் லேலண்ட் தொழிற்சாலை,</p>
<p>3. அம்பத்தூரில் டி.ஐ சைக்கிள் தொழிற்சாலை,</p>
<p>4. சிம்சன், இந்தியா பிஸ்டென்ஸ், டி.வி.எஸ் லுகாஸ் மற்றும் யூனியன் கார்பைடு கம்பெனி, திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை.</p>
<p>1951ஆம் ஆண்டில் மாநிலத்தில் 71 நெசவாலைகள் இருந்தன. 1962ஆம் ஆண்டு முடிவில் 134 நெசவாலைகளாகப் பெருகின. 1962 ஜனவரியில் ‘சௌத் இந்தியா விஸ்கோஸ் லிமிடெட்” என்ற ஆலை கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சிறுமுகையில் தொடங்கப்பட்டது. அதேபோன்று கூட்டுறவுத்துறையில் நூற்பு ஆலைகள் தொடங்கப்பட்டன. சர்க்கரை ஆலைகளின் எண்ணிக்கை மூன்றிலிருந்து 1962இல் எட்டாக உயர்ந்தது. இவற்றின் உற்பத்தி 1 லட்சத்து 27 ஆயிரத்து 500 டன்.</p>
<p>மூன்றாவது ஐந்தாண்டு திட்டத்தின்போது, கூடுதலாக பல சர்க்கரை ஆலைகள் தொடங்க ஆணை பிறப்பிக்கப்பட்டது. அவை:</p>
<p>1. கோத்தாரி சர்க்கரை லிமிடெட்.</p>
<p>2. அருணா சுகர்ஸ், பெண்ணாடம்.</p>
<p>3. சேலம் சுகர்ஸ் மில் லிமிடெட்.</p>
<p>4. சண்பகா சுகர்ஸ் பவுண்டேஷன் லிமிடெட்.</p>
<p>5. நேஷனல் கூட்டுறவு சர்க்கரை ஆலை., கவுந்தபாடி</p>
<p>6. சக்தி சுகர் பேக்டரி.</p>
<p>7. கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலை.</p>
<p>8. சவுத் இந்தியா ஸ்டீல்ஸ் சுகர்ஸ் லிமிடெட்.</p>
<p>1963இல் 20 லட்சம் கேலன் சக்திகொண்ட எரிசாராய ஆலை, திருச்சி மாவட்டத்தில் தொடங்கப்பட்டது. ஆண்டொன்றுக்கு 20 ஆயிரம் டன் காகிதம் உற்பத்தி செய்யக்கூடிய ஆலையை ஈரோடு அருகே பள்ளிபாளையத்தில் சேஷசாயி காகிதம் மற்றும் போர்டுகள் லிமிடெட் நிறுவனம் தொடங்கியது. அதே போன்று, மாநிலத்தில் கூடுதலாக காகிதக்கூழ் மற்றும் சைக்கோல் அட்டைகள் தயாரிக்க எட்டு ஆலைகள் தொடங்குவதற்கு உரிமை வழங்கப்பட்டது.</p>
<p>சென்னை மாகாணத்தில், கோவை மாவட்டத்தில் மதுக்கரை, திருச்சி மாவட்டம் டால்மியாபுரம், ராமநாதபுர மாவட்டம் துலுக்கப்பட்டி, திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து என 4 சிமெண்ட் தயாரிக்கும் ஆலைகள் தொடங்கப்பட்டன.</p>
<p>இரண்டாவது ஐந்தாண்டு திட்டத்தின் போது மெட்ராஸ் சிமெண்ட்ஸ் லிமிடெட் என்ற ஒரு புதிய சிமெண்ட் ஆலையை ராஜபாளையத்தில்  தொடங்கியது. 1962 ஆம் ஆண்டில் சேலம், சங்கரிதுர்க்கம் என்ற இடத்தில் சிமெண்ட் தொழிற்சாலை தொடங்குவதற்கு உரிமம் வழங்கப்பட்டது. கரூரில் மற்றொரு ஆலை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.</p>
<p>காமராஜர் ஆட்சிக்காலத்தில் தொழில் வளர்ச்சிக்காகவும், வேலைவாய்ப்பு வழங்கவும் தொழிற்பேட்டைகள் சென்னை, கிண்டி, விருதுநகரில் தொடங்கப்பட்டன. இதனுடைய பயன்கள் அதிகரித்த காரணத்தால் இத்தகைய தொழிற்பேட்டைகள் கும்பகோணம், விருத்தாசலம், கிருஷ்ணகிரி, தேனி, திண்டுக்கல், கோவில்பட்டி, ராஜபாளையம், நாகர்கோவில், சென்னை அடுத்த அம்பத்தூர் போன்ற இடங்களில் உருவாக்குதவற்காக 4.08 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இவற்றைத் தவிர மதுரை, திருநெல்வேலி, திருச்சி மற்றும் மார்த்தாண்டம் (கன்னியாகுமரி) ஆகிய இடங்களில் தொழிற்பேட்டைகள் தொடங்கப்பட்டன. சென்னை அம்பத்தூரில் தொழிற்பேட்டை தொடங்கி 1200 ஏக்கர் நிலம் வழங்கி இடஒதுக்கீட்டுடன் 400 தொழிற்கூடங்கள் அமைக்கப்பட்டன.</p>
<p>பாசன திட்டங்கள்</p>
<p>மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்ட பிறகு தமிழகம் தனது நீர்வளத்தைப் பெருக்க உரிய பாசன திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக முதலமைச்சர் காமராஜர் தீவிர முயற்சிகளை மேற்கொண்டார். அவற்றின் பயனாக உருவான திட்டங்கள்தான் இவை:</p>
<p>1. கீழ்பவானி திட்டம்: கோயம்புத்தூரில் பவானி நதியின் குறுக்கே நீர்த்தேக்கத்தை ரூபாய் 10 கோடி செலவில் செயல்படுத்தப்பட்டது. இதனால் 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு பாசன வசதிபெற்றது.</p>
<p>2. மணிமுத்தாறு திட்டம்: தாமிரபரணி ஆற்றில் இணையும் கிளைநதியான மணிமுத்தாறு நதியின் குறுக்கே 5.50 கோடி ரூபாய் செலவில் இத்திட்டம் தொடங்கப்பட்டது. இந்த நீர்த்தேக்கத்தினால் திருநெல்வேலி மாவட்டத்தில் கிட்டத்தட்ட 1.03 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பு பாசன வசதி பெற்றது.</p>
<p>3. மேட்டுர் கால்வாய் திட்டம்: மேட்டுர் நீர்த் தேக்கத்திலிருந்து ரூபாய் 2.67 கோடி செலவில் ஒரு வாய்க்கால் தோண்டி கோயம்புத்தூர், சேலம் மாவட்டங்களில் 5.45 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பு நீர்ப்பாசன வசதிபெற்றது.</p>
<p>4. ஆரணியாறு திட்டம்: செங்கற்பட்டு மாவட்டம், திருவள்ளுர் தாலுகா ஆரணியாறு நதியின் குறுக்கே ஒரு நீர்த்தேக்கத்தை ரூ.1.04கோடி செலவில் கட்டப்பட்டது.</p>
<p>5. அமராவதி திட்டம்: கோயம்புத்தூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையிலுள்ள அமராவதி நதியின் குறுக்கே ஒரு நீர்த்தேக்கத்தை ரூ.2.97 கோடி செலவில் கட்டப்பட்டது.</p>
<p>6. வைகை திட்டம்: பெரியார் நீர்த்தேக்கத்திலிருந்து வந்த கூடுதல் நீரைப் பாதுகாத்து, இணைத்து வைகை நதியின் குறுக்கே .3.30 கோடி செலவில் இந்த நீர்த்தேக்கம் கட்டப்பட்டது.</p>
<p>7. சாத்தனூர் திட்டம்: வடஆற்காடு மாவட்டம் சாத்தனூர் அருகில் ஓடும் பெண்ணையாறு நதியின் குறுக்கே ரூ.2.89 கோடி செலவில் இந்த நீர்த்தேக்கம் கட்டப்பட்டது. இதன்மூலம் 40 ஆயிரம் ஏக்கர் பாசன வசதிபெற்றது.</p>
<p>8. கிருஷ்ணகிரி திட்டம்: கிருஷ்ணகிரி தாலுகாவில் தென்பெண்ணையாறு நதியின் குறுக்கே ரூ.2.02 கோடி செலவில் இத்திட்டம் கட்டப்பட்டது. ஏறக்குறைய 9 ஆயிரம் ஏக்கர் இத்திட்டத்தால் பாசன வசதிபெற்றது.</p>
<p>30 லட்ச ரூபாய் மதிப்பிலான காவிரி கழிமுக வடிகால் திட்டம். காமராஜர் ஆட்சியில் நிறைவேற்றப்பட்டது. பல வடிகால்கள் மூலமாகக் காவிரி கழிமுகத்தில் பல நீர்க்கால்வாய்கள் இணைத்து செயல்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.</p>
<p>இவை தவிர, கூடுதலாக ஏழு புதிய திட்டங்களும், இரண்டாவது ஐந்தாண்டு திட்டக்காலத்தில் மேற்கொள்ளப்பட்டது அவை:</p>
<p>1. புள்ளம்பாடி வாய்க்கால் திட்டம்: திருச்சி மாவட்டத்தில் உள்ள புள்ளம்பாடியில் 1.57 கோடி ரூபாய் செலவில் நிறைவேற்றப்பட்டு 15 ஆயிரம் ஏக்கர் நிலம் நீர்பாசன வசதிபெற்ற காவிரியில் இருந்து வெளியேறும் நீரைப் பயன்படுத்துவதற்கான திட்டமாகும்.</p>
<p>2. புதிய கட்டளைத்திட்டம்: திருச்சி மாவட்டத்தில் 1.72 கோடி ரூபாய் செலவில் கூடுதலாக 12 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் நீர்ப்பாசனம் செய்யும் திட்டம்.</p>
<p>3. வீடூர் நீர்த்தேக்கத் திட்டம்: 3200 ஏக்கர் நீர்ப்பாசனம் பெற ரூபாய் 67.49 லட்சம் செலவில் தென் ஆற்காடு மாவட்டத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டம்.</p>
<p>4. கொடையாறு வாய்க்கால் திட்டம்: கன்னியாகுமரி மாவட்டத்தில் 16 லட்சம் ரூபாய் செலவில் 2.9 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பு பாசன வசதிபெற பெரிய ஏரிகளைப் புதுப்பிக்கவும், கால்வாய்களை மறுசீரமைக்கவும் இத்திட்டம் தொடங்கப்பட்டது.</p>
<p>5. நெய்யாறு திட்டம்: கன்னியாகுமரி மாவட்டத்தில் 9200 ஏக்கர் நீர்ப்பாசன பெற ரூபாய் 41 லட்சம் செலவில் தொடங்கப்பட்டதே இத்திட்டம்.</p>
<p>6. பரம்பிக்குளம்; – ஆழியாறு திட்டம்: இரண்டாவது ஐந்தாண்டுதிட்ட காலத்தின்போது, மேற்கொள்ளப்பட்ட மிக முக்கியத் திட்டம். இது கிட்டத்தட்ட 30 கோடி ரூபாய் செலவில் நீர்ப்பாசனத்தோடு மின்சாரம் வழங்கும் பலநோக்கு திட்டமாகும். கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2.4 லட்சம் ஏக்கர் நில பரப்பிற்கும் நீர்ப்பாசன வசதி வழங்குவதோடு, 1.80 லட்சம் கிலோவாட் திறன்கொண்ட மின் உற்பத்தி செய்யும் திட்டங்களை அடிப்படையாகக் கொண்டதே இத்திட்டம். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி, உடுமலைப் பேட்டை, தாராபுரம், பல்லடம் ஆகிய பகுதிகளுக்கு இத்திட்டம் நீர்ப்பாசன வசதி செய்கிறது. அண்டை மாநிலங்களோடு நல்லுறவு இருந்தால் இத்தகைய நதிநீர்ப் பகிர்வு திட்டங்கள் வெற்றிகரமாகச் செயல்படுத்தமுடியும் என்பதற்கு இத்திட்டம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.</p>
<p>மின் உற்பத்தி</p>
<p>காமராஜர் ஆட்சிகாலத்தில் மின் உற்பத்தியில் வியக்கத்தக்க சாதனைகள் நிகழ்த்தப்பட்டன. மின் உற்பத்தியிலும், அதனைப் பயன்படுத்துவதிலும் சென்னை மாகாணம் இந்தியாவில் மூன்றாவது இடத்தை வகித்தது. காமராஜர் ஆட்சியில்தான் பெரியார் நீர்மின் உற்பத்தித் திட்டம், குந்தா நீர்மின் உற்பத்தித் திட்டம் தொடங்கப்பட்டது.</p>
<p>நெய்வேலி பழுப்பு நிலக்கரித் திட்டம் 86 கோடி ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்டது. இதன்மூலம் மின் உற்பத்தியில் மகத்தான சாதனைகள் நிகழ்ந்தன. இன்று 1,500 கோடிக்கும்மேல் லாபம் ஈட்டித்தரும் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமாக ஓங்கி வளர்ந்துள்ளது. அத்தகைய நெய்வேலி நிலக்கரித் திட்டத்திற்கு அன்று வித்திட்டவர் காமராஜர் என்பதைத் தமிழக மக்கள் மறக்கமாட்டார்கள்.</p>
<p>சென்னை மாகாணத்தின் மின்பற்றாக்குறையைச் சமாளிப்பதற்காக 5 லட்சம் கிலோவாட் மின் உற்பத்தி திறன்கொண்ட அணுமின் நிலையத்தை கல்பாக்கத்தில் அமைக்க முயற்சிகள் மேற்கொண்டவர் காமராஜர். இதற்காக இந்திய அரசின் அணுமின் உற்பத்தித்துறையை அணுகி, இத்திட்டத்தைப் பெறுவதில் வெற்றிகண்டவர் காமராஜர். அதன் பயன்களைத் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள் இன்று அனுபவித்து வருகின்றன.</p>
<p>நிலச்சீர்திருத்தம்</p>
<p>காமராஜர் ஆட்சி பொறுப்பேற்ற உடனேயே நிலச்சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. குத்தகைத்தாரர்களின் பாதுகாப்பிற்காக, “குத்தகைதாரர் பாதுகாப்புச் சட்டம் – 1955” காமராஜர் ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. நிலச்சீர்திருத்தத்தை மேன்மைப்படுத்தும் நடவடிக்கையாக 30 ஸ்டாண்டர்டு ஏக்கர் நிலத்திற்கும்மேல் வைத்திருந்தால் அவற்றை அரசுடமையாக்கும் நில உச்சவரம்பு சட்டம் 1962இல் கொண்டு வரப்பட்டது.</p>
<p>பஞ்சாய்த்து ராஜ்</p>
<p>காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் கிராமப்புற மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக, பஞ்சாயத்து ஆட்சி மிகச்சிறப்பாக செயல்படுத்தப்பட்டது. ராஜஸ்தான் மாநிலத்தில் பஞ்சாயத்து ராஜ் அமைப்பை பிரதமர் நேரு தொடங்கியதையொட்டி தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டம் 1958இல் காமராஜர் ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் காமராஜர் ஆட்சியில் 373 பஞ்சாய்த்து யூனியன்களும், 12 ஆயிரம் பஞ்சாயத்துக்களும் மிக வேகமாக துவங்கப்பட்டு செயல்பட ஆரம்பித்தன. ‘கடையனுக்கும் கதி மோட்சம்” கிடைக்கச் செய்வதே காந்தியடிகளின் லட்சியம். அதை தேசிய அளவில் பிரதமர் நேருவும், தமிழக அளவில் முதலமைச்சர் காமராஜரும் நிறைவேற்றி சாதனை படைத்தார்கள். கிராம வளர்ச்சியை லட்சியமாகக்கொண்ட காமராஜர் ஆட்சி நிறைவேற்றிய பல்வேறு திட்டங்களை இன்றும் நினைத்து பார்த்தால் எவரும் மெய்சிலிர்க்காமல் இருக்கமுடியாது. இத்திட்டங்கள் கிராமப்புற பொருளாதாரத்தையே மாற்றியமைத்தது.</p>
<p>தமிழ் வளர்ச்சி</p>
<p>1953இல் மொழிவாரி மாநிலத்தைக் காங்கிரஸ் ஆட்சி அமைத்தாலும், சுதந்திரம் பெறும்முன்பே, மொழி அடிப்படையில் 1922லேயே மாகாணக் காங்கிரஸ் அமைப்புகளை உருவாக்கியது காங்கிரஸ் கட்சிதான். அன்று சென்னை ராஜதானி என்று ஒரே அரசாக இருந்தபோதும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி, ஆந்திர காங்கிரஸ் கமிட்டி, கர்நாடகா காங்கிரஸ் கமிட்டி, கேரள காங்கிரஸ் கமிட்டி எனப் பிரித்து, மொழி உணர்வுக்கு முதலிடம் கொடுத்து, மாகாண அமைப்புகளை உருவாக்கிய பெருமை மகோன்னதமான காங்கிரஸ் மகாசபைக்கு மட்டுமே உண்டு. சென்னை மாகாணத்தின் பட்ஜெட்டை 1957-58இல் தமிழில் சமர்ப்பித்து, புதிய சாதனையை படைத்ததும் காமராஜர் ஆட்சியே. “எங்கும் தமிழ், எதிலும் தமிழ்” என்று முழங்கவேண்டும் என்பதற்காக, தமிழ் அன்னையை அரியாசனத்தில் அமர்த்த 1956இல் தமிழ் ஆட்சி மொழிச்சட்டம் கொண்டுவந்ததும் காமராஜர் ஆட்சியே.</p>
<p>1959 ஜனவரியில், தமிழ் அறிஞர்களை உறுப்பினர்களாகக் கொண்ட ‘தமிழ் வளர்ச்சி ஆராய்ச்சி மன்றம்” என்ற அமைப்பு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பில் கல்வி அமைச்சர் தலைவராக நியமிக்கப்பட்டார். கல்லூரி பாடங்களை கற்பிக்கும் மொழியாக தமிழைக் கொண்டுவரவும் மலிவான விலையில் உயர்கல்விக்கான பாடநூல்களை தமிழில் வெளியிடவும் இந்த அமைப்பு செயல்பட்டது. இத்துடன் ‘தமிழ்நூல் வெளியீட்டு கழகம்” தோற்றுவிக்கப்பட்டது. தமிழை பயிற்று மொழியாகக் கொண்டு படிப்பவர்களுக்கு மாத ஊக்கத்தொகையும், அரசு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமையும் வழங்கப்பட்டன. பாடங்கள் தொடர்பான ஆங்கில நூல்கள் தமிழில் மொழிபெயர்த்து தரமாக வெளியிடப்பட்டன.</p>
<p>காமராஜர் ஆட்சிக்காலத்தில்தான் கலைச்சொல் அகராதி 1960இல் வெளியிடப்பட்டன. 1956இல் மொழிவாரி மாநிலம் அமைக்கப்பட்டவுடன் ‘மெட்ராஸ் ஸ்டேட”; என்பதை ‘தமிழ்நாடு” என்று மாற்றி அமைக்கவேண்டும் என்ற கோலீரிக்கை எழுந்தது. இது குறித்து சட்டமன்றத்தில் 24.2.1961இல் நடந்த விவாதத்தில் உரையாற்றிய சி.சுப்பிரமணியம், ‘மெட்ராஸ் ஸ்டேட் என்று குறிப்பிடுகிற இடத்தில் சென்னை ராஜ்யம் என்று எழுதுவதற்கு பதில் ச்தமிழ்நாடுஞ் என்று எழுதலாம் என பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்தார். இதை அறிவித்தபோது சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பெரும் ஆரவாரம் செய்து வரவேற்றனர். ஆகவே, சென்னை மாகாணத்தை தமிழ்நாடு என்று அழைப்பதில் காங்கிரஸ் கட்சி மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்ததை எவரும் மறுக்கமுடியாது.</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/kamaraj-an-era/%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9-2/">பெருந்தலைவர் காமராஜரின் பொற்கால ஆட்சி சரித்திரம் படைத்த சாதனைகள்!</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://desiyamurasu.com/kamaraj-an-era/%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9-2/feed/</wfw:commentRss>
			<slash:comments>1</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>பெருந்தலைவர் காமராஜர்  117 வது பிறந்தநாள் விழா சிறப்பிதழ்</title>
		<link>https://desiyamurasu.com/kamaraj-an-era/%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%b0%e0%af%8d-117-%e0%ae%b5/</link>
					<comments>https://desiyamurasu.com/kamaraj-an-era/%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%b0%e0%af%8d-117-%e0%ae%b5/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[ஆ. கோபண்ணா]]></dc:creator>
		<pubDate>Tue, 14 Jul 2020 17:54:13 +0000</pubDate>
				<category><![CDATA[காமராஜ் சகாப்தம்]]></category>
		<guid isPermaLink="false">https://desiyamurasu.com/?p=245</guid>

					<description><![CDATA[<p>காமராஜர் மறைந்தவுடனே&#8230; அவர் வகித்த வீட்டை, வீட்டின் சொந்தக்காரர் எடுத்துக்கொண்டார். அவர் பயன்படுத்தி வந்த காரைக் காங்கிரஸ் கட்சி எடுத்துக்கொண்டது. அவர் உடலை அக்னி எடுத்துக்கொண்டது. அவரது பெயரை மட்டும் வரலாறு எடுத்துக்கொண்டது.</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/kamaraj-an-era/%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%b0%e0%af%8d-117-%e0%ae%b5/">பெருந்தலைவர் காமராஜர்  117 வது பிறந்தநாள் விழா சிறப்பிதழ்</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p><strong>காமராஜர் மறைந்தவுடனே</strong><strong>&#8230;</strong></p>



<p><strong>அவர் வகித்த வீட்டை</strong><strong>, </strong><strong>வீட்டின் சொந்தக்காரர் எடுத்துக்கொண்டார்</strong><strong>.</strong></p>



<p><strong>அவர் பயன்படுத்தி வந்த காரைக் காங்கிரஸ் கட்சி எடுத்துக்கொண்டது</strong><strong>.</strong><strong></strong></p>



<p><strong>அவர் உடலை அக்னி எடுத்துக்கொண்டது</strong><strong>.</strong><strong></strong></p>



<p><strong>அவரது பெயரை மட்டும் வரலாறு எடுத்துக்கொண்டது</strong><strong>.</strong><strong></strong></p>
<p>The post <a href="https://desiyamurasu.com/kamaraj-an-era/%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%b0%e0%af%8d-117-%e0%ae%b5/">பெருந்தலைவர் காமராஜர்  117 வது பிறந்தநாள் விழா சிறப்பிதழ்</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://desiyamurasu.com/kamaraj-an-era/%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%b0%e0%af%8d-117-%e0%ae%b5/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>காமராஜர் தாலாட்டு!</title>
		<link>https://desiyamurasu.com/kamaraj-an-era/%e0%ae%95%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81/</link>
					<comments>https://desiyamurasu.com/kamaraj-an-era/%e0%ae%95%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[ஆ. கோபண்ணா]]></dc:creator>
		<pubDate>Tue, 14 Jul 2020 17:54:06 +0000</pubDate>
				<category><![CDATA[காமராஜ் சகாப்தம்]]></category>
		<guid isPermaLink="false">https://desiyamurasu.com/?p=244</guid>

					<description><![CDATA[<p>தங்கமணி மாளிகையில் தனிவயிரப் பந்தலிட்டு மங்கையர்கள் சுற்றிவந்து மங்கலமாய்க் கோலமிட்டு திங்களென்றும் சிங்கமென்றும் சீராட்டிப் பேருரைத்து திருநாள் அலங்காரச் சிலைபோ லலங்கரித்து வாழ்த்தொலிக்கப் பெற்றெடுக்கும் மகனாக வந்ததில்லை! வண்ணமலர்த் தொட்டிலிலே வடிவம் அசைந்ததில்லை! வாழையடி வாழையென வந்த தமிழ்ப் பெருமரபில் ஏழைமகன் ஏழையென இன்னமுதே நீ பிறந்தாய்! நிமிர்ந்தால் தலையிடிக்கும், நிற்பதற்கே இடமிருக்கும் அமைவான ஓர் குடிலில் ஐயா நீ வந்துதித்தாய்! &#8220;தங்கமே&#8230;.! தண்பொதிகைச் சாரலே&#8230;..! தண்ணிலவே&#8230;.! சிங்கமே&#8230;!&#8221; என்றழைத்துச் சீராட்டுந் தாய்தவிரச் சொந்தமென்று ஏதுமில்லை! துணையிருக்க [&#8230;]</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/kamaraj-an-era/%e0%ae%95%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81/">காமராஜர் தாலாட்டு!</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>தங்கமணி மாளிகையில் தனிவயிரப் பந்தலிட்டு</p>



<p>மங்கையர்கள் சுற்றிவந்து மங்கலமாய்க் கோலமிட்டு</p>



<p>திங்களென்றும் சிங்கமென்றும் சீராட்டிப் பேருரைத்து</p>



<p>திருநாள் அலங்காரச் சிலைபோ லலங்கரித்து</p>



<p>வாழ்த்தொலிக்கப் பெற்றெடுக்கும் மகனாக வந்ததில்லை!</p>



<p>வண்ணமலர்த் தொட்டிலிலே வடிவம் அசைந்ததில்லை!</p>



<p>வாழையடி வாழையென வந்த தமிழ்ப் பெருமரபில்</p>



<p>ஏழைமகன் ஏழையென இன்னமுதே நீ பிறந்தாய்!</p>



<p>நிமிர்ந்தால் தலையிடிக்கும், நிற்பதற்கே இடமிருக்கும்</p>



<p>அமைவான ஓர் குடிலில் ஐயா நீ வந்துதித்தாய்!</p>



<p>&#8220;தங்கமே&#8230;.! தண்பொதிகைச் சாரலே&#8230;..! தண்ணிலவே&#8230;.!</p>



<p>சிங்கமே&#8230;!&#8221; என்றழைத்துச் சீராட்டுந் தாய்தவிரச்</p>



<p>சொந்தமென்று ஏதுமில்லை! துணையிருக்க மங்கையில்லை!</p>



<p>தூயமணி மண்டபங்கள், தோட்டங்கள் ஏதுமில்லை!</p>



<p>ஆண்டிகையில் ஓடிருக்கும் அதுவும் உனக்கில்லையே!</p>



<p>நாட்டுக்குப் பாடுபட நாடிவந்த வீரர்பலர்</p>



<p>வீட்டுக்கே பாடுபட்டார்! வீணுக்கே கோஷமிட்டார்!</p>



<p>அந்திபகல் நாடு, அரசாங்கம், பொதுப்பணிகள்</p>



<p>என்றுலவ நீயும் இந்நாட்டில் வந்துதித்தாய்!</p>



<p>&#8211; <strong>கவியரசர்</strong><strong> கண்ணதாசன்</strong></p>
<p>The post <a href="https://desiyamurasu.com/kamaraj-an-era/%e0%ae%95%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81/">காமராஜர் தாலாட்டு!</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://desiyamurasu.com/kamaraj-an-era/%e0%ae%95%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>பெருந்தலைவர் புகழ்பாடிய கவியரசர்!</title>
		<link>https://desiyamurasu.com/kamaraj-an-era/%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%ae%b4%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af/</link>
					<comments>https://desiyamurasu.com/kamaraj-an-era/%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%ae%b4%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af/#comments</comments>
		
		<dc:creator><![CDATA[ஆ. கோபண்ணா]]></dc:creator>
		<pubDate>Tue, 14 Jul 2020 17:54:00 +0000</pubDate>
				<category><![CDATA[காமராஜ் சகாப்தம்]]></category>
		<guid isPermaLink="false">https://desiyamurasu.com/?p=243</guid>

					<description><![CDATA[<p>இப்படியோர் நல்ல மகன் எங்கு பிறந்தான் &#8211; நம்இந்தியத் தாய் செய்த தவம் இங்கு பிறந்தான்! கண்ணீரில் பிறந்தவன் என்று கூறுங்கள் தோழியரே &#8211; நாட்டைக்கண்ணீரால் காத்தவன் என்று சொல்லுங்கள் தோழியரே! தாய்ப்பாலில் தேசபக்தி உண்டவன் அவனடியோ &#8211; அன்னைதாலாட்டில் விடுதலை வேகம் கொண்டவன் அவனடியோ! போராடி விடுதலை தந்த புத்தன் அவனடியோ &#8211;நாட்டைப் பொன்னாக மாற்றியமைக்கும் சித்தன் அவனடியோ! ஒருவீடும் சொந்தமென்று வாங்கியதில்லையடி &#8211; இந்தத்திருநாடே சொந்தமென்று தங்கிய மன்னனடி! வாராத பதவிகள் எல்லாம் வாசலில் [&#8230;]</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/kamaraj-an-era/%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%ae%b4%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af/">பெருந்தலைவர் புகழ்பாடிய கவியரசர்!</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>இப்படியோர் நல்ல மகன் எங்கு பிறந்தான் &#8211; நம்<br>இந்தியத் தாய் செய்த தவம் இங்கு பிறந்தான்!</p>



<p>கண்ணீரில் பிறந்தவன் என்று கூறுங்கள் தோழியரே &#8211; நாட்டைக்<br>கண்ணீரால் காத்தவன் என்று சொல்லுங்கள் தோழியரே!</p>



<p>தாய்ப்பாலில் தேசபக்தி உண்டவன் அவனடியோ &#8211; அன்னை<br>தாலாட்டில் விடுதலை வேகம் கொண்டவன் அவனடியோ!</p>



<p>போராடி விடுதலை தந்த புத்தன் அவனடியோ &#8211;<br>நாட்டைப் பொன்னாக மாற்றியமைக்கும் சித்தன் அவனடியோ!</p>



<p>ஒருவீடும் சொந்தமென்று வாங்கியதில்லையடி &#8211; இந்தத்<br>திருநாடே சொந்தமென்று தங்கிய மன்னனடி!</p>



<p>வாராத பதவிகள் எல்லாம் வாசலில் நின்றதடி &#8211; எட்டிப்<br>பாராமல் சேவை புரிந்தான் பாரத வீரனடி!</p>



<p>சந்நியாசி கோலம் கொண்ட சமரச ஞானியடி &#8211; அவன்<br>சந்தோஷம் பிள்ளைகளுக்கு நல்கும் கல்வியடி!</p>



<p>பாசமகன் சிறையில் இருந்தான் பன்னிரெண்டாண்டு &#8211; ஒரு<br>பத்தாண்டு வாழவைத்தான் மண்ணினை ஆண்டு!</p>



<p>ஆசையுடன் தமிழருக்கு அறிவினைத் தந்தான் &#8211; ஜாதி<br>அத்தனையும் ஒன்று என்னும் உயர்வினைத் தந்தான் !</p>



<p>அல்லும் பகலும் சிந்தனை செய்தான் அவனம்மா &#8211; இவன்<br>ஆக்கிய அளவில் ஆக்கிய தலைவன் எவனம்மா!</p>



<p>காலம் பார்க்க அவனுக்கில்லை கைக்கடிகாரம் &#8211; நல்ல<br>காலத்தைத்தான் நிர்ணயிக்கும் அவன் அதிகாரம் !</p>



<p>சத்தியமாய் நாட்டினையே பார்த்த கண்ணாடி &#8211; அந்தத்<br>தலைவனுக்கே பூஜை செய்யத் தயக்கம் என்னடி?</p>



<p>மண்ணாசை பொன்னாசை மன்னனுக்கு இல்லையடி &#8211; ஒரு<br>மகராசி கைப்பிடிக்கும் எண்ணமும் இல்லையடி!</p>



<p>கல்விக்கூடம் அத்தனையும் அவன்பேர் சொல்லும் &#8211; அவன்<br>கள்ளம் கபடம் இல்லாதவன் என ஊர் சொல்லும்!</p>



<p>கண்ணாரக் கண்டதடி ! கற்பனைகள் இல்லையடி! &#8211; அந்நாளில்<br>பெருந்தலைவர் ஆட்சி சொன்ன சேதியடி!</p>



<p>எத்தனையோ கோடிகளைக் கொடுத்த கையடி &#8211; அது<br>தனக்கு என்று ஒருபொழுதும் எடுத்த தில்லையடி!</p>



<p>எவ்வளவோ ஆனந்தமாக இருக்கவேண்டிய நீ<br>நாட்டுக்காகவே அனைத்தையும் துறந்தாய்!</p>



<p>அவன் இல்லையேல் ஏழைக்கு வாழ்வில்லை!<br>அவன் இல்லையேல் தேசத்திற்கு எதுவுமே இல்லை!</p>



<p>பாழ்பட்டுக் கிடந்தது பாரததேசம் , வாழ்விக்க வந்தார் காந்தி!<br>அந்த வாழ்வை வகைப்படுத்த வந்தவன் நீ!</p>



<p>நாம் காமராஜ் என்னும் தெய்வத்தின் குழந்தைகள் !<br>அந்தக் கருணை முனிவனின் சீட கோடிகள்!</p>



<p>போர் வந்த போது பாரத சேனை போகின்ற வழியை ஆக்கிய வீரன்!<br>நேருவின் பின்னால் யார் என நாடு ஏங்கியவேளை தாங்கிய மன்னன் !</p>



<p>அவரை நான் தாயாகப் பார்த்தேன் ; தந்தையாகப் பார்த்தேன்;<br>தெய்வமாகப் பார்த்தேன்; அதன்பிறகுதான் தலைவராகப் பார்த்தேன்!</p>



<p>அவனை வழிபடுவோம்! அவன் புகழ் பாடுவோம்!<br>வாருங்கள்! வாருங்கள் !<br>&#8211; கவிதை வரிகள் : கவியரசர் கண்ணதாசன்</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/kamaraj-an-era/%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%ae%b4%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af/">பெருந்தலைவர் புகழ்பாடிய கவியரசர்!</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://desiyamurasu.com/kamaraj-an-era/%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%ae%b4%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af/feed/</wfw:commentRss>
			<slash:comments>1</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>காமராஜரின் ஆட்சிமுறை</title>
		<link>https://desiyamurasu.com/kamaraj-an-era/%e0%ae%95%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88/</link>
					<comments>https://desiyamurasu.com/kamaraj-an-era/%e0%ae%95%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[ஆ. கோபண்ணா]]></dc:creator>
		<pubDate>Tue, 14 Jul 2020 17:53:56 +0000</pubDate>
				<category><![CDATA[காமராஜ் சகாப்தம்]]></category>
		<guid isPermaLink="false">https://desiyamurasu.com/?p=254</guid>

					<description><![CDATA[<p>தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கை நிலை பற்றிய காமராஜரின் துல்லிய அறிவும், மக்கள் தேவைகளைப் பூர்த்திசெய்வதில் அவருக்கிருந்த ஆர்வமும், துறைச் செயலாளர்களிடத்தில் அவரது மதிப்பையும் மரியாதையையும் பலமடங்கு உயர்த்தின. அலுவலர்கள் அறியாத பல விஷயங்களை, முதலமைச்சராவதற்கு முன்னரும் பின்னரும் அவர் மேற்கொண்ட பயணங்கள் அவருக்குக் கற்றுத் தந்தன. தமிழகத்தின் ஒவ்வொரு மூலை முடுக்கும் அவருக்கு நன்கு தெரியும். ஒவ்வொரு முறையும் சுற்றுப்பயணத்திலிருந்து திரும்பியதும், மக்கள் தேவைகளைக் கண்டறிந்த காமராஜ், பல புதுமைகளைப் புகுத்தி நிர்வாகத்தைச் செம்மைப்படுத்தினார்.எந்த ஒரு விஷயத்திலும் [&#8230;]</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/kamaraj-an-era/%e0%ae%95%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88/">காமராஜரின் ஆட்சிமுறை</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கை நிலை பற்றிய காமராஜரின் துல்லிய அறிவும், மக்கள் தேவைகளைப் பூர்த்திசெய்வதில் அவருக்கிருந்த ஆர்வமும், துறைச் செயலாளர்களிடத்தில் அவரது மதிப்பையும் மரியாதையையும் பலமடங்கு உயர்த்தின. அலுவலர்கள் அறியாத பல விஷயங்களை, முதலமைச்சராவதற்கு முன்னரும் பின்னரும் அவர் மேற்கொண்ட பயணங்கள் அவருக்குக் கற்றுத் தந்தன. தமிழகத்தின் ஒவ்வொரு மூலை முடுக்கும் அவருக்கு நன்கு தெரியும். ஒவ்வொரு முறையும் சுற்றுப்பயணத்திலிருந்து திரும்பியதும், மக்கள் தேவைகளைக் கண்டறிந்த காமராஜ், பல புதுமைகளைப் புகுத்தி நிர்வாகத்தைச் செம்மைப்படுத்தினார்.<br>எந்த ஒரு விஷயத்திலும் அதன் ஆணிவேரை அறிவதில் காமராஜ் பெருங்கவனம் செலுத்துவார். எந்த விஷயத்திலும் அதிகாரிகள் கருத்தை மட்டும் வைத்து முடிவு செய்யாமல், தாமே நேரில் விசாரித்து அறிந்து, ஆய்வு செய்து செயல்பட்டதுதான் அவரது நிர்வாக வெற்றிக்குக் காரணமாக அமைந்தது. காமராஜரைத் தந்திரமான பேச்சுக்களாலோ, முகஸ்துதியாலோ ஏமாற்ற முடியாது. எந்தத் தந்திரத் திட்டத்தையும் எவ்வளவு கெட்டிக்காரத்தனமாகத் தெரிவித்தாலும் புரிந்துகொள்ளுகிற ஆற்றலையும் திறனையும் சிறுவயது முதலே அவர் நிரம்பப் பெற்றிருந்தார்.<br></p>



<p class="has-normal-font-size"><strong>&#8216;ஜி.ஒ.&#8217; என்றால் என்ன ?</strong></p>



<figure class="wp-block-image size-large"><img fetchpriority="high" decoding="async" width="765" height="1024" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/07/car-1-765x1024.jpg" alt="" class="wp-image-304" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/07/car-1-765x1024.jpg 765w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/07/car-1-224x300.jpg 224w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/07/car-1-768x1028.jpg 768w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/07/car-1-750x1004.jpg 750w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/07/car-1.jpg 1126w" sizes="(max-width: 765px) 100vw, 765px" /></figure>



<p>காமராஜர் முதலமைச்சரானபோது, அவரைப் பற்றி சில அதிகாரிகள் தப்புக் கணக்கு போட்டார்கள். ஒரு சமயம், அரசு சார்பாகப் புதிய திட்டம் ஒன்றிற்கு அவர் உத்தரவுபோடச் சொன்னார். சம்பந்தப்பட்ட அதிகாரி, அதற்கு ஜி.ஒ.&#8217; இடம் தராது&#8217; என்றார்.<br>உடனே காமராஜர், &#8221;ஜி.ஒ.னா என்னாணேன்?&#8221; என்று அதிகாரியைப் பார்த்துக் கேட்டார். நாம் சொன்னது காமராஜருக்கு விளங்கவில்லையோ என்று எண்ணிய அதிகாரி , &#8216;கவர்ன்மெண்ட் ஆர்டர்&#8217; என அதன் விரிவாக்கம் சொன்னார்.<br>&#8221;அது சரிணேன்….. கவர்ன்மெண்ட் ஆர்டர் என்றால் என்னாணேன்?&#8221; என மறுபடியும் கேட்டார். காமராஜர் ஏன் இப்படிக் கேட்கிறார் என்று அதிகாரி குழம்பிப் போனார்.<br>உடனே காமராஜர் சொன்னார் : &#8216;நீங்க எழுதி வைத்ததில் நான் கையெழுத்துப் போட்டால், அது கவர்ன்மென்ட் ஆர்டர், அப்படித் தானே? அப்படியென்றால், நான் சொன்னபடி மாத்தி எழுதுங்க, நான் கையெழுத்துப் போடுறேன்.&#8221;<br>சம்பந்தப்பட்ட அந்த அதிகாரி அதிர்ந்து போனார். அவர் மட்டுமல்ல, அதிகாரத்தில் உள்ள அத்தனைபே ரும், தங்களது சாமர்த்தியம் காமராஜரிடம் பலிக்காது என்ற முடிவுக்கு வந்தனர்.</p>



<p class="has-normal-font-size"><strong>துணிச்சல்காரர்!</strong></p>



<figure class="wp-block-image size-large"><img decoding="async" width="563" height="719" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/07/ca2.jpg" alt="" class="wp-image-308" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/07/ca2.jpg 563w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/07/ca2-235x300.jpg 235w" sizes="(max-width: 563px) 100vw, 563px" /></figure>



<p>ஒரு சமயம், முதலமைச்சர் காமராஜர் அதிகாரிகளுடன் காரில் சென்றுகொண்டிருந்தார். வழியெங்கும் சாலையோரம் , ஒருபக்கம் தரிசாகவும், மறுபக்கம் பெரிய, பெரிய ஏரிகளில் நீர்வசதி இருப்பதையும் கவனித்தார்.<br>உடனே காமராஜருக்கு ஒரு சந்தேகம் எழுந்தது. &#8216;நீர்நிலைகள் பெரிசு பெரிசாய் இருந்தும், பரந்த நிலப்பரப்புகள் ஏன் தரிசாய் இருக்கிறது&#8217; என்று தம்முடன் வந்த அதிகாரிகளிடம் கேட்டார்.<br>&#8221;இந்தச் சாலை மத்திய அரசின் பொதுத்துறைக்குச் சொந்தமான சாலை. இதன் வழியாக மதகுகட்டி, நீர்ப் பாய்ச்சுவதற்கு மத்திய அரசின் அனுமதி தேவை. அதைக் கேட்டு எழுதி இரண்டு வருஷம் ஆயிடுச்சு. இன்னும் அனுமதி கிடைக்கல அய்யா&#8221; என்று அவர்கள் சொன்னார்கள்.<br>&#8221;மதகு கட்ட உடனே ஏற்பாடு செய்யுங்கணேன். மத்திய அரசின் அனுமதி வரும்போது வரட்டும். பிரச்சினை வந்தா நா பாத்துக்கிறேன்&#8217; என முதல்வர் காமராஜர் எவ்விதத் தயக்கமுமின்றிச் சொன்னார்.<br>உடனே வேலை ஆரம்பிக்கப்பட்டது. தரிசு நிலங்கள் வயல்களாயின! மத்திய அரசைத் தட்டிக் கேட்கிற துணிச்சலான முதலமைச்சராகக் காமராஜர் இருந்ததால், மாநில முன்னேற்றத்துக்குச் சட்டப் பிரச்சினைகளும், நடைமுறை விதிகளும் குறுக்கே நின்றதில்லை . விஷயம் எதுவானாலும் மத்திய அரசுக்குக் கடிதம் எழுதி, நிலைமையை விளக்கி, உடனே வேலை தொடங்க காமராஜர் ஏற்பாடு செய்துவிடுவார்.</p>



<p class="has-normal-font-size"><strong>உடனடியாக அளிப்பதே நிவாரணம்!</strong></p>



<figure class="wp-block-image size-large"><img decoding="async" width="563" height="727" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/07/ca-3.jpg" alt="" class="wp-image-309" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/07/ca-3.jpg 563w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/07/ca-3-232x300.jpg 232w" sizes="(max-width: 563px) 100vw, 563px" /></figure>



<p>தஞ்சை மாவட்டத்தில் கடுமையான புயல் தாக்கியிருந்த சமயம் அது. ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து, வெள்ளத்தில் சிக்கித் தவித்தனர். பாதிப்புக்குள்ளான பகுதிகளைப் பார்வையிட்டு, நிவாரணம் அளிப்பதற்காக முதலமைச்சர் காமராஜர் நேரில் சென்றார். பாதிக்கப்பட்ட மக்கள் கண்ணீரும் கம்பலையுமாய்த் தங்களுடைய கஷ்டங்களை அவரிடம் முறையிட்டார்கள். குறிப்பாக, குடிசைகள், தட்டுமுட்டுச் சாமான்களையும் இழந்தவர்கள், பரிதாபமாய் இருந்தார்கள்.<br>அவர்களைப் பார்த்த முதல்வர் காமராஜர், &#8220;குடிசை போட ஒவ்வொருவருக்கும் எவ்வளவு செலவாகும்&#8221; என்று கேட்டார்.<br>கூடியிருந்த ஒவ்வொருவரும் ஒரு தொகையைச் சொன்னார்கள். திருப்தியடையாத காமராஜர், ஒதுங்கி நின்றிருந்த ஒரு முதியவரை அழைத்து, &#8221; பெரியவரே, நீங்கள் சொல்லுங்க&#8221; என்றார்.<br>பெரியவர் சொன்ன தொகை அவருக்கு நியாயமான தாகப்பட்டது. உடனே, தம்முடன் வந்திருந்த அதிகாரிகளிடம் நிவாரணத் தொகை எவ்வளவு தேவைப்படுமெனக் கணக்கிடச் சொல்லி, உடனடியாக அவர்களுக்கு வழங்கவேண்டுமென உத்தரவிட்டார். உடனே, ஒரு மூத்த அதிகாரி, &#8216;ரெவின்யூ போர்டுக்கு ப்ரபோசலை&#8217; அனுப்பி , பரங்ஷன்&#8217; வாங்க ஏற்பாடு செய்துடுறேன்&#8221; என்றார்.<br>காமராஜருக்கு உடனே கோபம் வந்தது. &#8220;என்னய்யா… சொல்றீங்க? எப்போ பாங்ஷன் வாங்கி, எப்போ கொடுப்பீங்க ? அதுவரைக்கும் இவங்க நிலைம் ? உள்ளூர் கஜானா பணத்தை எடுத்து உடனடியாகக் கொடுக்க ஏற்பாடு செய்யுங்க. கொடுத்த பின்னாடி U£ரங்ஷன் வாங்கிக்கலாம். வீடு வாசல் இழந்தவர்களுக்கு உடனடியாகக் கொடுப்பது தானே நிவாரணம்?&#8221; எனச் சொன்னதுடன், உடனடியாக அவர்களுக்கு நிவாரண உதவி கிடைக்க ஏற்பாடு செய்தார்.<br>அரசின் நடைமுறை சம்பிரதாயங்களை அப்படியே கடைப்பிடித்தால், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவார ண உதவி கிடைப்பதற்கு எவ்வளவு காலதாமதம் ஆகுமென்று காமராஜருக்குத் தெரியும். நெருக்கடியான சந்தர்ப்பங்களில், நடைமுறைகளை ஒதுக்கி வைப்பதற்கு அவர் எப்போதும் தயக்கம் காட்டியதே இல்லை.</p>



<p class="has-normal-font-size"><strong>நேர்மை தவறாத முதல்வர்!</strong></p>



<figure class="wp-block-image size-large"><img loading="lazy" decoding="async" width="563" height="769" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/07/ca-4.jpg" alt="" class="wp-image-311" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/07/ca-4.jpg 563w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/07/ca-4-220x300.jpg 220w" sizes="auto, (max-width: 563px) 100vw, 563px" /></figure>



<pre class="wp-block-code"><code> நிர்வாகத்தை எப்படி நடத்திச்செல்லவேண்டும் என்பதற்கு முதல்வர் காமராஜர் ஒரு முன்னுதாரணமாக விளங்கினார்.</code></pre>



<p>காமராஜர் ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டையே உலுக்கிய சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. நூறு ரூபாய் கள்ள நோட்டுக்கள் தமிழகத்தில் பெருமளவு புழக்கத்தில் விடப்பட்டு, தமிழகப் பொருளாதாரத்தையே ஸ்தம்பிக்க வைத்துவிடுமோ என்கிற நிலை தோன்றி இருந்த நேரமது.<br>அதை விசாரித்துக் கண்டுபிடிக்கத் தம்முடைய நேரடி மேற்பார்வையிலேயே ஒரு தலைமை போலிஸ் அதிகாரியை நியமித்திருந்தார். இதுபோன்ற கள்ளநோட்டு வழக்கில் உண்மைக் குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பது எவ்வளவு கஷ்டமென்று முதல்வர் காமராஜருக்குத் தெரியும்.<br>எனவே அந்த அதிகாரியிடம், &#8220;இதோ பாருங்க….. விசாரணையின்போது, தயவுதாட்சண்யமே காட்டவேண்டாம்! கதர்ச்சட்டை போட்டிருந்தால், அதற்காக யோசிக்காதீங்க! சந்தேகப்பட்டால் கைது செய்து விசாரியுங்கள். எனக்குச் சொந்தக்காரனென்று சொல்வான், அதை லட்சியம் பண்ணாதீங்க! இதுபோன்ற &#8216;கேஸ்&#8217;களில் பெரிய புள்ளிகள் தான் சம்பந்தப்பட முடியும். அதற்காக யோசிக்காதீங்க! உங்கள் கடமையைச் செய்வதில் எந்த அரசியல் குறுக்கீடும் இருக்காது. அப்படித் தலையீடு இருந்தாலும், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் உங்கள் வேலையைச் செய்யுங்க. என்னுடைய முழுமையான ஒத்துழைப்பு உங்களுக்கு உண்டு&#8221; எனச் சொன்னார்.<br>இவ்வாறு உற்சாகப்படுத்தித்தான் அந்தப் போலிஸ் அதிகாரியிடம் முதல்வர் காமராஜர் பணியை ஒப்படைத்தார். அந்த அதிகாரியும் நேர்மையாக உழைத்து, கள்ளநோட்டுத் தயாரிப்பில் ஈடுபட்டிருந்த கோவையின் பெரிய மில் முதலாளி ஒருவரையும், அவருடைய சகாக்களையும் கண்டுபிடித்து கைது செய்தார். வழக்கு நடைபெற்றது ; அவர்களுக்குத் தண்டனையும் கிடைத்தது. கள்ளநோட்டுத் தயாரிப்பாளர்கள் தண்டனை பெற்ற அபூர்வ வழக்குகளில் இதுவும் ஒன்றாகும்.<br>காமராஜர் ஆட்சி, &#8216;பொற்கால ஆட்சி&#8217; என்று அழைக்கப்படுவதற்கு மக்கள் நலனில் அவர் காட்டிய அக்கறையும், நிர்வாகத்தில் அவர் கடைப்பிடித்த நேர்மையுமே காரணமாகும்.<br>காமராஜர் முதலமைச்சராக ஒன்பதரை ஆண்டுகாலம் ஆட்சிப் பொறுப்பிலிருந்து, தமிழகத்தின் சரித்திரத்தையே மாற்றிச் சாதனையாளராகத் திகழ்ந்தார். அதனால்தான் தந்தை பெரியார், &#8221;கடந்த 2000 ஆண்டுகளாக நிகழாத, சேர சோழ பாண்டியராகிய மூவேந்தர் ஆட்சிக் காலத்தில் கூட நடைபெறாத அதிசயத்தைக் காமராஜர் முதலமைச்சராக இருந்து, தமது ஆட்சிக் காலத்தில் நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்&#8221; என்று மனம் திறந்து பாராட்டிய ஆட்சி, காமராஜர் ஆட்சி!<br>கடவுள் நம்பிக்கை இல்லாத பெரியார் தம் பிரச்சாரத்தின்போது, காமராஜரை ரட்சகர்&#8217; என்று மக்களிடம் அறிமுகப்படுத்தினார் ! &#8216;பச்சைத் தமிழர்&#8217; என்று பாராட்டினார்! &#8216;கல்வி வள்ளல்&#8217; என்று புகழாரம் சூட்டினார்! காமராஜர் ஆட்சிக்குப் பெரியார் கொடுத்த நற்சான்றைப் புராண பாஷையில் சொல்வதானால், &#8216;வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம் பெற்றதைப்போல அமைந்தது&#8217; எனலாம்.<br>ஜனநாயகத்தில் மக்களாலே தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு , எத்தகைய ஆட்சி முறையைப் பின்பற்றவேண்டும் என்பதற்குக் காமராஜரின் ஆட்சி மிகச்சிறந்த உதாரணமாகும். இன்றைய நிலையில் அத்தகைய ஆட்சிமுறையை நாம் பெறவேண்டும் என்று எதிர்பார்ப்பதுதான் ஆரோக்கியமான அரசியலுக்கு வழிவகுக்கும்.</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/kamaraj-an-era/%e0%ae%95%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88/">காமராஜரின் ஆட்சிமுறை</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://desiyamurasu.com/kamaraj-an-era/%e0%ae%95%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
	</channel>
</rss>
