• About Us
  • Privacy Policy
  • Contact Us
தேசிய முரசு - Desiya Murasu
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
தேசிய முரசு - Desiya Murasu
No Result
View All Result
Home தேசிய அரசியல்

ரபேலால் விளம்பர வருவாயை இழந்தாலும், வளைந்து கொடுக்க மாட்டேன்: ‘தி இந்து’ என்.ராம் உறுதி

by ஆ. கோபண்ணா
02/08/2020
in தேசிய அரசியல்
5
ரபேலால் விளம்பர வருவாயை இழந்தாலும், வளைந்து கொடுக்க மாட்டேன்:  ‘தி இந்து’  என்.ராம் உறுதி
Share on FacebookShare on TwitterShare on WhatsAppShare On Email

”ரபேல் விமான முறைகேட்டை அம்பலப்படுத்தியதால், ‘தி இந்து’ நாளிதழ் பெருமளவு விளம்பர வருவாயை இழந்தது என்றும், அதற்காக ஒருபோதும் வளைந்து கொடுக்கமாட்டேன்” என ‘தி இந்து’ இயக்குனர் என்.ராம் தெரிவித்துள்ளார்.

கடும் விமர்சனத்துக்கிடையே முதல்கட்டமாக 5 பிரெஞ்ச் ரபேல் போர் விமானங்கள் ஹரியானாவின் அம்பாலாவை வந்தடைந்தன. இந்த விமானங்களை அதிக விலை கொடுத்து வாங்கியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இதனை புலனாய்வு செய்து வெளிப்படுத்தியதால், செய்தி நிறுவனங்கள் பெரும் சவால்களை சந்தித்து வருகின்றன. குறிப்பாக, ‘தி இந்து’ நாளேடு மத்திய அரசின் நேரிடை தாக்குதலுக்கு ஆளாகியுள்ளது.

இந்நிலையில், ‘வயர்’ இணைய இதழில் செய்தியாளர் மிட்டல் முகர்ஜியுடன், ‘தி இந்து’ என்.ராம் நடத்திய உரையாடலின் விவரம்:

ரபேல் விவகாரத்தை புலனாய்வு செய்து வெளியிட்டதற்காக, எங்களுக்கு பெரிய அளவில் விளம்பர இழப்பு ஏற்பட்டது. இருந்தாலும், இந்த சவால்களை எல்லாம் மீறி பத்திரிக்கையை தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறோம். நான் ஒருபோதும் வளைந்து கொடுக்கமாட்டேன்.

பிரான்ஸ் டஸால்ட் விமான தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து 36 விமானங்களை 7.8 பில்லியன் டாலருக்கு இந்திய பாதுகாப்புத் துறை வாங்கியது தொடர்பாக தி இந்துவில் தொடர்ந்து புலனாய்வு அறிக்கைகளை வெளியிட்டோம். இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ள பத்திரிகைகளுக்கு இது கடினமான நேரமாகும்.

சுதந்திரமாக செயல்படுவதா? அல்லது ஏற்கனவே இருப்பதை வைத்து காலம் தள்ளுவதா? என்பதை பத்திரிக்கைகள் முடிவு செய்யும் நேரம் இது. அரசு விளம்பரங்களை நிறுத்தி, தங்களுக்கு எதிரான செய்திகளை வெளியிடும் பத்திரிக்கைள் மீது கடுமையான அழுத்தத்தை ஏற்படுத்துகிறார்கள்.

சமீபத்தில் நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியில் மூத்த ஆசிரியராக இருந்த குணசேகரனை, டெல்லியில் இருந்து வந்த அழுத்தம் காரணமாக ராஜினாமா செய்யச் சொல்லி வற்புறுத்தியதையும், ஆசிரியர் குழுவில் முடிவு எடுக்கும் அதிகாரத்தை அவரிடம் இருந்து பறித்ததையும் உதாரணமாக கொள்ளலாம்.

இந்தியாவின் அரசியல் சாசன நிறுவனங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன. உச்சநீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட சில முக்கிய தீர்ப்புகள் வருத்தத்தை ஏற்படுத்தின. அதேபோல், வரவிருக்கும் பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில், 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தபால் வாக்கு முறையை செயல்படுத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.   செல்வாக்கைப் பயன்படுத்தி இந்த வாக்குகளை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஆளுநர் மத்திய அரசின் ஏஜெண்டாக  பயன்படுத்தப்படுவதற்கு மற்றொரு உதாரணம் ராஜஸ்தான். இவர்களிடம் உள்ள அதிகப் பெரும்பான்மை, எமர்ஜென்ஸி போல் மாறும் என்று நான் நம்புகின்றேன்.

இவ்வாறு என்.ராம் குறிப்பிட்டார்.

Previous Post

சீர்திருத்த செம்மல்கள்!

Next Post

உச்ச நீதிமன்றத்தில் பொய், நிஜத்தில் பித்தலாட்டம்: சைபுதீன் சோஸ் குற்றச்சாட்டு

ஆ. கோபண்ணா

ஆ. கோபண்ணா

Next Post
உச்ச நீதிமன்றத்தில் பொய், நிஜத்தில் பித்தலாட்டம்: சைபுதீன் சோஸ் குற்றச்சாட்டு

உச்ச நீதிமன்றத்தில் பொய், நிஜத்தில் பித்தலாட்டம்: சைபுதீன் சோஸ் குற்றச்சாட்டு

Comments 5

  1. T.S.Desiyamani says:
    5 years ago

    தங்களின் தேசிய பற்று போராட்டம்
    வெல்லட்டும்
    காங்கிரஸ் ஆட்சி அமையட்டும்
    சதிகார பேர்வழிகள் தீகார் செல்லும்
    நிலை வரும்.

    Reply
    • A. Gopanna says:
      5 years ago

      நன்றி!

      Reply
    • Manishankar Sellappagounder says:
      5 years ago

      போபோர்ஸ் பீரங்கி வாங்கியதில் ஊழல் என்று அநியாயமாக ராஜீவ்காந்திமேல் சேறு வாரி இறைத்ததும் இதே இந்து பேப்பர்தான்! தற்போது உண்மையாக நடந்த ரபேல் ஊழலை கோர்ட் ஒத்துழைப்பு இல்லாததால் நிரூபிக்க முடியவில்லை!

      Reply
  2. R. Balamurugan says:
    5 years ago

    அமீத் மோடி இந்தியாவின் உயர்பதவிக்கு வருவதற்கு பத்திரிக்கைகளும், ஊடகங்களும் தான் காரணம். அமீத் மோடியின் மத்தியரசு ஊடகங்களையும், பத்திரிக்கை நிறுவனங்களையும் தனது கைப்பாவையாக வைத்துள்ளது என்பது நாடறியும். இந்நிலையில் மத்தியரசின் ஊழல்கள், அடக்குமுறைகளை சுட்டிக்காட்டும் பத்திரிக்கைகள் மற்றும் பத்திரிக்கை ஆசிரியர்களின் குரல்வளையை நெறிப்பது தான் தலையாயப் பணியாக கொண்டுள்ளுனர்….
    இச்சூழலில் தங்களின் கட்டுரை மிக மிக அருமை.

    Reply
  3. Krishnamoorthy P says:
    5 years ago

    இந்து என்.ராம் அவர்களுக்கு நன்றி. தலைவர் ப. சிதம்பரம் வழக்கிலும் மத்திய அரசாங்கத்தின் பழிவாங்கும் நடவடிக்கையை கண்டித்தார். ஆனால் பெரும்பாலான பத்திரிக்கைகளும் தொலைக்காட்சி சேனல்களும் தவறெனத் தெரிந்தும இந்த அரசுக்கு ஆதரவாகவே செயல்படுகின்றன. இந்து தமிழ் பத்திரிகை உட்பட.

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
பெருந்தலைவர் காமராஜரின் பொற்கால ஆட்சி சரித்திரம் படைத்த சாதனைகள்!

பெருந்தலைவர் காமராஜரின் பொற்கால ஆட்சி சரித்திரம் படைத்த சாதனைகள்!

15/07/2020
நாட்டுப்பற்றையும், மொழிப்பற்றையும் தமது இரு விழிகளாகக் கொண்ட மகாகவி சுப்பிரமணிய பாரதி!

நாட்டுப்பற்றையும், மொழிப்பற்றையும் தமது இரு விழிகளாகக் கொண்ட மகாகவி சுப்பிரமணிய பாரதி!

11/09/2020

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

22/07/2020
காமராஜர் தாலாட்டு!

காமராஜர் தாலாட்டு!

15/07/2020

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

13
ஆதியின் கடிதம்

ஆதியின் கடிதம்

11
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

10
மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

8
எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

21/11/2021
வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

21/11/2021

Recent News

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

21/11/2021
வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

21/11/2021
தேசிய முரசு – Desiya Murasu

Follow Us

  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

Recent News

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
  • About Us
  • Privacy Policy
  • Contact Us

© 2020 DesiyaMurasu.com

No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

© 2020 DesiyaMurasu.com