• About Us
  • Privacy Policy
  • Contact Us
தேசிய முரசு - Desiya Murasu
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
தேசிய முரசு - Desiya Murasu
No Result
View All Result
Home தேசிய அரசியல்

2021 ஆம் ஆண்டும் இந்திய பணக்காரர்கள் வரிசையில் முதல் மற்றும் 2 ஆம் இடத்தைப் பிடித்த அம்பானி, அதானி

by Admin
13/04/2021
in தேசிய அரசியல்
0
2021 ஆம் ஆண்டும் இந்திய பணக்காரர்கள் வரிசையில் முதல் மற்றும் 2 ஆம் இடத்தைப் பிடித்த அம்பானி, அதானி
Share on FacebookShare on TwitterShare on WhatsAppShare On Email

கடந்த ஓராண்டாக கொரோனாவின் கோரப் பிடியில் சிக்கி ஏழை, எளிய, நடுத்தர மக்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். மீண்டும் கொரோனா வந்து அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.

இந்த சூழலில், கொரோனாவை விட கொடுமையான செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. 2021 ஆம் ஆண்டில் புதிதாக 38 கோடீசுவரர்கள் உருவாகியிருக்கிறார்கள். வழக்கம்போல் பிரதமர் மோடியின் உயிர் தோழர்களான அம்பானியும் அதானியும் இந்தியாவில் முதல் மற்றும் இரண்டாவது இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளனர்.

2021 ஆம் ஆண்டுக்கான உலக பணக்காரர்கள் பட்டியலை ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ளது. அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக 140 கோடீசுவரர்களைப் பெற்று இந்தியா மூன்றாவது இடத்தை வகிக்கிறது.

கடந்த ஆண்டு 102 ஆக இருந்த கோடீசுவரர்களின் எண்ணிக்கை, இந்த ஆண்டு 140 ஆக உயர்ந்துள்ளது. அதாவது, கொரோனா காலத்தில் நாடே முடக்கப்பட்ட நிலையிலும், 38 கோடீசுவரர்கள் உருவாகியுள்ளனர்.

இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்த கோடீசுவரர்களின் சொத்து மதிப்பு 596 பில்லியன் அமெரிக்க டாலராகும். உலக அளவில் பணக்காரர்களின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பில் இந்தியா மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த ஆண்டு ஒட்டுமொத்த பணக்காரர்களின் சொத்து மதிப்பு 313 பில்லியன் டாலராக இருந்தது. தற்போது இரு மடங்கு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஃபோர்ப்ஸ் இந்திய பணக்காரர்கள் பட்டியலின்படி, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் தலைவர் முகேஷ் அம்பானிக்கும் அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி மற்றும் ஹெச்சிஎல் டெக்னாலஜீஸ் முன்னாள் தலைவர் சிவ்நாடாருக்கும் இடையே 100 பில்லியன் டாலர் அளவுக்கு சொத்து மதிப்பு இடைவெளி உள்ளது.

உலக அளவில் கோடீசுவரர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. ஃபோர்ப்ஸ் ஊடகம் வெளியிட்டுள்ள உலக அளவிலான 2,755 கோடீசுவரர்களில் 660 பேர் புதிய கோடீசுவரர்கள். அமெரிக்காவில் 724 புதிய கோடீசுவரர்களும், சீனாவில் 698 புதிய கோடீசுவரர்களும் உருவாகியிருக்கிறார்கள்.

அமேஜான் நிறுவனர் ஜெஃப் பெஜோஸ் நான்காவது முறையாக உலகின் முதல் பணக்காரராக நீடித்து வருகிறார். இவரது சொத்து மதிப்ப 177 பில்லியன் டாலர் ஆகும். இவரைத் தொடர்ந்து எலோன் மஸ்க் 151 பில்லியன் டாலர் அளவுக்கு சொத்துகளைப் பெற்று உலக அளவில் இரண்டாம் இடம் வகிக்கிறார். கடந்த ஆண்டு 24.6 பில்லியன் டாலர் சொத்துகளைப் பெற்று 31 ஆவது இடத்திலிருந்த மஸ்க், தற்போது இரண்டாம் இடத்துக்கு முன்னேறியிருப்பதாக ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது. லூயிஸ் உய்ட்டன் எஸ் இ நிறுவனத்தின் தலைமை நிர்வாகியான பெர்னார்டு அர்னால்ட், 150 பில்லியன் டாலர் சொத்துகளுடன் 3 ஆவது உலக பணக்காரராக இருக்கிறார்.

இந்திய கோடீசுவரர்கள் பட்டியல்:

உலக அளவில் 10 ஆவது பணக்காரராக அம்பானி இருக்கிறார். 84.5 பில்லியன் டாலர் அளவுக்கு சொத்துகளுடன் ஆசியாவிலேயே முதல் பணக்காரராக வலம் வருகிறார். கடந்த ஆண்டு இவரது சொத்து மதிப்பு 36.8 பில்லியன் டாலராக இருந்தது. கொரோனாவால் நாடே முடங்கிய ஒரே ஆண்டில் கிட்டத்தட்ட 60 சதவிகிதம் சொத்து மதிப்பு குறிப்பிடத்தக்கது.

2020 செப்டம்பர் மாதம் மும்பை விமானநிலையத்தில் 74 சதவிகித பங்குதாரரானார் கவுதம் அதானி. இவர், 50.5 பில்லியன் டாலர் மதிப்பு சொத்துகளைப் பெற்று உலக அளவில் 24 ஆவது பணக்காரராக இருக்கிறார்.

ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனர் சிவ் நாடார் இந்தியாவின் மூன்றாவது பணக்காரராக உள்ளார். 23.5 பில்லியன் டாலர் சொத்துகளைப் பெற்று உலக அளவில் 71 ஆவது பணக்காரராக இருக்கிறார்.

டிமார்ட் நிறுவனர் ராதாகிஷன் தமணி 16.5 பில்லியன் டாலர் சொத்துகளைப் பெற்று இந்தியாவின் நான்காவது பணக்காரராக இருக்கிறார். இவரைத் தொடர்ந்து இந்தியாவின் பணக்கார வங்கியாளரும் கோடக் மஹிந்த்ரா வங்கியின் நிர்வாக இயக்குநருமான உதய் கோடக் இந்தியாவின் 5 ஆவது பணக்காரராக உள்ளார். இவரது சொத்து மதிப்பு 15.9 பில்லியன் டாலர் ஆகும்.

ஏர்செலர்மிட்டல் எஃகு ஆலையின் நிர்வாகத் தலைவராக இருக்கும் லக்சுமி மிட்டல், 14.9 பில்லியன் டாலர் சொத்துகளுடன் இந்தியாவின் 6 ஆவது பணக்காரராக உள்ளார்.

சிரம் இன்ஸ்ட்யூட் ஆஃப் இந்தியாவின் தலைவர் சைரஸ் பூனாவாலா 12.7 பில்லியன் டாலர் சொத்துகளைப் பெற்று இந்தியாவின் 7 ஆவது பணக்காரராகவும், சன் பார்மசூட்டிகல்ஸ் நிறுவனர் திலீப் சங்வி 10.9 பில்லியன் டாலர் சொத்துகளுடன் 8 ஆவது பணக்காரராகவும், பார்தி ஏர்டெல்லின் சுனில் மிட்டல் 10.5 பில்லியன் டாலர் சொத்துகளுடன் இந்தியாவின் 9 ஆவது பணக்காரராக இருப்பதாகவும் ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய கோடீசுவரர்கள்:

1 பில்லியன் டாலர் சொத்துகளுடன் இந்த ஆண்டு இந்தியாவில் புதிய பணக்காரர்கள் அடி எடுத்து வைத்துள்ளார்கள். இதில் மெட்ரோ பிராண்டின் தலைவர் ரஃபிக் மாலிக், கஜாரியா செராமிக்ஸ் நிர்வாக இயக்குனர் அசோக் கஜாரியா மற்றும் கல்யாண் ஜுவல்லர்ஸின் டி.எஸ். கல்யாணராமன் ஆகியோர் அடங்குவர். மேலும், ரெலாக்சோ ஃபுட்வியர்ஸில் பெருமளவு பங்குகளை பெற்றதன் மூலம் முகுந்த்லால் துவா மற்றும் அவரது இளைய சகோதரர் ரமேஷ் குமார் துவா ஆகியோரும் கோடீசுவரர்கள் பட்டியலில் இணைந்துள்ளனர்.

இந்திய பெண் கோடீசுவர்கள் பட்டியல் :

இந்தியாவிலேயே முதல் பெண் கோடீசுவரராக ஜிண்டால் குழுமத்தின் தலைவர் சாவித்ரி ஜிண்டால் உள்ளார். 12.8 பில்லியன் டாலர் சொத்துகளைப் பெற்று, உலக அளவில் இவர் 166 ஆவது கோடீசுவரராக இருக்கிறார்.

பைகான் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனரான கிரன் மஜும்தார் ஷா 4.2 பில்லியன் டாலர் சொத்துகளைப் பெற்று ந்தியாவின் இரண்டாவது பெண் பணக்காரராக இருக்கிறார். உலக அளவில் இவர் 681 ஆவது பணக்காரராக இருக்கிறார். கோத்ரெஜ் கிளான்ஸின் ஸ்மிதா கிரீஷ்ணா கோத்ரெஜ் 2.4 பில்லியன் டாலர் சொத்துகளுடன் இந்தியாவின் 3 ஆவது பெண் பணக்காரராக இருக்கிறார். ஜெகே சிமிண்ட்ஸின் கவிதா சிங்கானியா 4 ஆவது பெண் பணக்காரராக சமீபத்தில் இணைந்துள்ளார். இவர், இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனர் ராம்நாத் கோயங்காவின் பேத்தி ஆவார்.

Tags: AdaniForbesMukesh AmbaniShiv Nadar
Previous Post

ஒவ்வொரு இந்தியரும் இந்துவே; பண்டிதர் ஜவஹர்லால் நேருவின் சாகாவரம் பெற்ற வார்த்தை - மிருதுலா முகர்ஜி

Next Post

இருள் விலகி ஒளி பிறக்க தமிழ் புத்தாண்டை வரவேற்போம் - தலைவர் கே.எஸ்.அழகிரி

Admin

Admin

Next Post
ரஜினியின் அறிவிப்பால் பா.ஜ.க. வின் சதித்திட்டம் தவிடு பொடியானது! பா.ஜ.க. விரித்த வலையில் விழாமல் ரஜினி தப்பித்துக் கொண்டார்: தலைவர் கே.எஸ். அழகிரி அறிக்கை

இருள் விலகி ஒளி பிறக்க தமிழ் புத்தாண்டை வரவேற்போம் - தலைவர் கே.எஸ்.அழகிரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

22/07/2020
ஃபேஸ்புக் ஆதரவுடன் பா.ஜ.க. தேர்தல் தில்லுமுல்லு: அம்பலப்படுத்திய அமெரிக்க பத்திரிகை

ஃபேஸ்புக் ஆதரவுடன் பா.ஜ.க. தேர்தல் தில்லுமுல்லு: அம்பலப்படுத்திய அமெரிக்க பத்திரிகை

18/08/2020
ராஜஸ்தான் நகராட்சித் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி : 3 -வது இடத்துக்கு தள்ளப்பட்ட பா.ஜ.க.

ராஜஸ்தான் நகராட்சித் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி : 3 -வது இடத்துக்கு தள்ளப்பட்ட பா.ஜ.க.

16/12/2020
ரூ.150 கோடி மதிப்பு ஓட்டலை அடிமாட்டு விலைக்கு வாஜ்பாய் அரசு விற்ற வழக்கு: சிபிஐ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

ரூ.150 கோடி மதிப்பு ஓட்டலை அடிமாட்டு விலைக்கு வாஜ்பாய் அரசு விற்ற வழக்கு: சிபிஐ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

19/09/2020

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

13
ஆதியின் கடிதம்

ஆதியின் கடிதம்

11
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

10
மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

8
எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

21/11/2021
வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

21/11/2021

Recent News

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

21/11/2021
வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

21/11/2021
தேசிய முரசு – Desiya Murasu

Follow Us

  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

Recent News

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
  • About Us
  • Privacy Policy
  • Contact Us

© 2020 DesiyaMurasu.com

No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

© 2020 DesiyaMurasu.com

  • facebook
  • twitter
  • whatsapp