• About Us
  • Privacy Policy
  • Contact Us
தேசிய முரசு - Desiya Murasu
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
தேசிய முரசு - Desiya Murasu
No Result
View All Result
Home ஏவுகணைகள்

தலைவர் ராகுல் காந்தியை வரவேற்க காங்கிரஸ் கட்சியினர் மதுரைக்கு அணிதிரண்டு வர தலைவர் கே.எஸ்.அழகிரி அழைப்பு!

by Admin
13/01/2021
in ஏவுகணைகள்
0
தலைவர் ராகுல் காந்தியை வரவேற்க காங்கிரஸ் கட்சியினர் மதுரைக்கு அணிதிரண்டு வர தலைவர் கே.எஸ்.அழகிரி அழைப்பு!
Share on FacebookShare on TwitterShare on WhatsAppShare On Email

மத்திய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் 2004 – 2014வரை தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. பா.ஜ.க. ஆட்சி செய்த 2015, 2016இல் ஏன் ஜல்லிக்கட்டு நடத்தப்படவில்லை! தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி!

தமிழர் திருநாளாம் தைத் திருநாளில் பொங்கல் பண்டிகை சமயத்தில் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை நேரில் காண, தலைவர் ராகுல்காந்தி நாளை அவனியாபுரம் வருகை புரிகிறார் என்ற மகிழ்ச்சியான செய்தி தமிழக மக்களிடையே வரலாறு காணாத வரவேற்பையும், உற்சாகத்தையும் பெற்றிருக்கிறது. தமிழர்களின் நாகரீகம், பண்பாட்டை போற்றுகிற வகையில் அவரது வருகை அமைந்திருக்கிறது. இந்தியாவின் பன்முகத்தன்மையையும், கலாச்சாரத்தையும், பெரிதும் மதிக்கிற பாரம்பரியத்தில் வந்த தலைவர் ராகுல்காந்தி, தமிழர்களின் வீர விளையாட்டை நேரில் கண்டு மகிழ்வதற்காகவே வருகை புரிகிறார்.

ஆனால், தலைவர் ராகுல்காந்தி ஜல்லிக்கட்டு நிகழ்வில் பங்கேற்பதைச் சகித்துக் கொள்ளாத பா.ஜ.க. உள்ளிட்ட வகுப்புவாத சக்திகள், ஊடகங்களின் மூலமாக அவதூறு செய்திகளைப் பரப்பி வருகின்றன. ஜல்லிக்கட்டு விளையாட்டிற்குத் தடை விதித்த காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி அதில் பங்கேற்க என்ன உரிமை இருக்கிறது ? என்ற அர்த்தமற்ற கேள்வியை எழுப்பியிருக்கின்றனர்.

மத்தியில் காங்கிரஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி நடைபெற்ற 2004 முதல் 2014 வரை 10 ஆண்டுகள் எந்த தடையும் இல்லாமல் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டதை எவராவது மறுக்க முடியுமா ? மதுரை நீதிமன்றத்தால் 2006 இல் விதிக்கப்பட்ட தடையை மேல்முறையீடு செய்து ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. அதேபோல, தமிழ்நாடு ஜல்லிக்கட்டு ஒழுங்குமுறை சட்டம் 2009 இல் நிறைவேற்றப்பட்டு ஜல்லிக்கட்டு போட்டி தொடர்ந்து நடைபெற அன்றைய தி.மு.க. ஆட்சியில் சட்டப் பாதுகாப்பும் வழங்கப்பட்டது. இதற்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கையும், உச்ச நீதிமன்றத்தில் வாதாடி, வென்று மத்திய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் ஆதரவோடு ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டதை எவரும் மறுத்திட இயலாது.

ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு 11.7.2011 ஆம் ஆண்டு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிக்கை தடையாக இருந்ததாகக் கூறுவது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கிற செயலாகும். அந்த அறிவிக்கைக்குப் பிறகு 2012, 2013, 2014 ஆகிய ஆண்டுகளில் மதுரை உயர்நீதிமன்ற ஆணையின் பேரில் ஜல்லிக்கட்டு போட்டி நடந்ததை பா.ஜ.க.வினர் மூடி மறைத்துப் பேசுவதை எவராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. ஆனால், மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்தவுடன் 2015, 2016 ஆம் ஆண்டுகளில் ஜல்லிக்கட்டு நடத்த முடியாமல் போனதற்குப் பதில் கூறாத பா.ஜ.க., தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும்.

கடந்த 2014 இல் ஜல்லிக்கட்டு நடத்த உச்ச நீதிமன்றம் தடையாணை விதித்த பிறகு, அதை நீக்குவதற்கு மத்திய பா.ஜ.க. அரசு உருப்படியான சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்காத காரணத்தினாலேயே தொடர்ந்து மூன்றாண்டுகளாக ஜல்லிக்கட்டு நடத்த முடியாத அவலநிலை ஏற்பட்டது.

1960 இல் கொண்டு வரப்பட்ட மிருகமாவதைத் தடுப்பு சட்டப் பிரிவுகளின் அடிப்படையிலேயே உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டிற்குத் தடை வழங்கியதை இங்கு நினைவுகூர விரும்புகிறேன். இதைக் கருத்தில் கொண்டு இச்சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்திருந்தால் மட்டுமே உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்கொண்டு 2015, 2016 இல் ஜல்லிக்கட்டு நடத்தியிருக்க முடியும். அதற்கு மாறாக, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் சாதாரண துறை சார்ந்த அறிவிக்கையின் மூலம் எதிர்கொண்டதால் அதை உச்ச நீதிமன்றம் தடை செய்து விட்டது. இது தமிழக பா.ஜ.க.வை திருப்திப்படுத்துவதற்காகவே, அத்தகைய கபட நாடகத்தை அன்று மத்திய பா.ஜ.க. அரசு அரங்கேற்றியது.

உச்ச நீதிமன்றம் தடை விதித்து 32 மாதங்கள் ஆனபிறகும், அதைச் செயலிழக்கச் செய்ய மத்திய பா.ஜ.க. அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டுமென அன்றைய மத்திய பா.ஜ.க. அரசு மனப்பூர்வமாக நினைத்திருந்தால் நாடாளுமன்றத்தில் மிருகமாவதைத் தடுப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்திருக்க முடியும். இல்லையெனில் எதற்கெடுத்தாலும் அவசரச் சட்டம் இயற்றுகிற பா.ஜ.க. அரசு, தமிழக மக்களின் ஒட்டுமொத்த ஆதரவைப் பெற்றுள்ள ஜல்லிக்கட்டு நடத்த அவசரச் சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றியிருக்கலாம். இதை அன்றைய பா.ஜ.க. அரசு ஏன் செய்யவில்லை என்பதற்குக் காங்கிரஸ் கட்சியை இன்று விமர்சனம் செய்கிறவர்கள் பதில் கூற முடியுமா ?

இத்தகைய அவசரச் சட்டம் கொண்டு வந்து ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அன்று நாடாளுமன்றத்தில் 50 உறுப்பினர்களைப் பெற்றிருந்த அ.தி.மு.க., எந்த அழுத்தத்தையும் கொடுக்காதது ஏன் ? இந்த போக்கை எதிர்த்துத் தான் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக 2017 ஜனவரி 8 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை 15 நாட்கள் சென்னை மெரினா கடற்பரப்பில் இரவு-பகலாக 20 லட்சம் மக்கள் தொடர் போராட்டம் நடத்தினார்கள். இதற்கு பிறகும் மத்திய பா.ஜ.க. அரசு ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக அவசரச் சட்டம் கொண்டு வர மறுத்துவிட்டது. மெரினா புரட்சியை எதிர்கொள்ள முடியாத அ.தி.மு.க. அரசு இறுதியாக அவசரச் சட்டம் கொண்டு வந்து ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளித்தது. இதற்காக அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மாபெரும் போராட்டங்கள் நடத்தப்பட்டு, அதன் விளைவாகவே ஜல்லிக்கட்டு போட்டி நடத்துகிற உரிமையை தமிழ் மக்கள் பெற்றார்கள் என்கிற வரலாற்றை எவரும் மறைத்து விட முடியாது.

எனவே, தமிழ் மக்களுக்கும், பண்பாட்டு, கலாச்சாரத்திற்கு எதிராக பா.ஜ.க. செயல்பட்டு ஜல்லிக்கட்டு நடத்த முட்டுக்கட்டை போட்டதை மூடி மறைத்துவிட்டு காங்கிரஸ் மீது பழிபோடுவதை நிறுத்திக் கொள்வது நல்லது. உண்மையை எவராலும் மறைக்க முடியாது. தமிழர்களின் வீர விளையாட்டை நேரில் காண வருகை புரிகிற தலைவர் ராகுல்காந்தியை வரவேற்க நாளை மதுரை விமான நிலையத்தில் பெருந்திரளாக அணி திரள்வோம். தமிழர்களின் பண்பாட்டைப் போற்றுகிற வகையில் அவரது பயணம் அமைந்திருப்பதைப் பெருமைப்படுத்துகிற வகையில் அணி, அணியாக திரண்டு வரும்படி காங்கிரஸ் நண்பர்களை அன்போடு அழைக்கிறேன்.

Tags: congressJallikattuMaduraiPongal Festivalrahul gandhi
Previous Post

தமிழக காங்கிரஸில் புதிய நிர்வாகிகள் நியமனம்! தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் புதிய சகாப்தம் தொடங்கியது!

Next Post

தை பிறந்தால் வழி பிறக்கும். தை பிறந்து விட்டது. வழியும் பிறக்கப் போகிறது! தலைவர் கே.எஸ்.அழகிரி பொங்கல் வாழ்த்து செய்தி!

Admin

Admin

Next Post
தை பிறந்தால் வழி பிறக்கும். தை பிறந்து விட்டது. வழியும் பிறக்கப் போகிறது! தலைவர் கே.எஸ்.அழகிரி பொங்கல் வாழ்த்து செய்தி!

தை பிறந்தால் வழி பிறக்கும். தை பிறந்து விட்டது. வழியும் பிறக்கப் போகிறது! தலைவர் கே.எஸ்.அழகிரி பொங்கல் வாழ்த்து செய்தி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

22/07/2020
ஃபேஸ்புக் ஆதரவுடன் பா.ஜ.க. தேர்தல் தில்லுமுல்லு: அம்பலப்படுத்திய அமெரிக்க பத்திரிகை

ஃபேஸ்புக் ஆதரவுடன் பா.ஜ.க. தேர்தல் தில்லுமுல்லு: அம்பலப்படுத்திய அமெரிக்க பத்திரிகை

18/08/2020
ராஜஸ்தான் நகராட்சித் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி : 3 -வது இடத்துக்கு தள்ளப்பட்ட பா.ஜ.க.

ராஜஸ்தான் நகராட்சித் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி : 3 -வது இடத்துக்கு தள்ளப்பட்ட பா.ஜ.க.

16/12/2020
ரூ.150 கோடி மதிப்பு ஓட்டலை அடிமாட்டு விலைக்கு வாஜ்பாய் அரசு விற்ற வழக்கு: சிபிஐ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

ரூ.150 கோடி மதிப்பு ஓட்டலை அடிமாட்டு விலைக்கு வாஜ்பாய் அரசு விற்ற வழக்கு: சிபிஐ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

19/09/2020

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

13
ஆதியின் கடிதம்

ஆதியின் கடிதம்

11
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

10
மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

8
எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

21/11/2021
வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

21/11/2021

Recent News

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

21/11/2021
வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

21/11/2021
தேசிய முரசு – Desiya Murasu

Follow Us

  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

Recent News

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
  • About Us
  • Privacy Policy
  • Contact Us

© 2020 DesiyaMurasu.com

No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

© 2020 DesiyaMurasu.com