• About Us
  • Privacy Policy
  • Contact Us
தேசிய முரசு - Desiya Murasu
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
தேசிய முரசு - Desiya Murasu
No Result
View All Result
Home தேசிய அரசியல்

போற்றும் மோடி; தூற்றும் பா.ஜ.க. : முஸ்லீம்கள் விஷயத்தில் இரட்டை வேடம் அம்பலம்

by Admin
30/12/2020
in தேசிய அரசியல்
0
போற்றும் மோடி; தூற்றும் பா.ஜ.க. : முஸ்லீம்கள் விஷயத்தில் இரட்டை வேடம் அம்பலம்
Share on FacebookShare on TwitterShare on WhatsAppShare On Email

”நாம் காணும் பன்முகத்தன்மை அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்துக்கு மட்டும் வலிமை சேர்க்கவில்லை, ஒட்டுமொத்த தேசத்துக்கும் வலிமை சேர்க்கிறது…”

– பிரதமர் நரேந்திர மோடி.

அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக நூற்றாண்டு விழாவில் பிரதமர் மோடி ஆற்றிய உரை:

”இந்த பல்கலைக்கழகத்தில் படித்தவர்கள் இந்தியாவின் மாறுபட்ட கலாச்சாரத்தைக் கொண்டவர்கள். இந்தியாவிலும், உலக அளவிலும் பெரிய நிறுவனங்களில் பணியாற்றுகின்றனர். அலிகார் பல்கலைக்கழகத்துக்குள் ஒரு நகரமே இருக்கிறது. உள்ளே இருக்கும் விடுதிகள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் குட்டி இந்தியாவையே உருவாக்கியிருக்கிறார்கள். இங்கே உருது, இந்தி, அரபி மற்றும் சமஸ்கிருதம் ஆகிய மொழிகள் கற்பிக்கப்படுகின்றன.

இங்கு நாம் காணும் பன்முகத்தன்மை இந்த பல்கலைக்கழகத்துக்கு மட்டும் வலிமை சேர்க்கவில்லை, ஒட்டுமொத்த தேசத்துக்கும் வலிமை சேர்க்கிறது.”

ஆனால்…அவரது பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்கள் அப்படி நினைக்கவில்லை…

  • கடந்த 2019 ஆம் ஆண்டு ஜின்னா படத்தை வளாகத்துக்குள் வைத்ததற்காக, அலிகார் பல்கலைக் கழகத்தில் அலிகார் பாஜக மக்களவை உறுப்பினர் சதீஷ் கவுதம் தாக்குதல் நடத்தினர். இந்த பல்கலைக்கழகத்தைத் தொடங்கியவர்களில் ஜின்னாவும் ஒருவர் என்பதை அவர் அறியவில்லை.
  • கடந்த 2015 ஆம் ஆண்டு, யோகி ஆதித்யநாத் நிறுவிய இந்துத்துவா அமைப்பான இந்து யுவ வாஹினி அமைப்பின் தலைவர் சுனில் சிங், அலிகார் பல்கலைக்கழகத்தை, பயங்கரவாத நர்சரி என்று விமர்சித்தார்.
  • கடந்த 2018 ஆம் ஆண்டு இந்து யுவ வாஹினி அமைப்பினர் அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தைச் சூறையாடினர்.
  • அலிகார் பல்கலைக்கழக விடுதியில் மாட்டுக்கறி பரிமாறப்படுவதாக, கடந்த 2016 ஆம் ஆண்டு அலிகார் முன்னாள் மேயரும், பாஜக தலைவருமான சகுந்தலா பார்தி, பொய்க் குற்றச்சாட்டுக்களைச் சுமத்தினார்.
  • கடந்த 2019 ஆம் ஆண்டு, உள்ளூர் பாஜக தலைவர் முகேஷ் லோடி அளித்த புகாரின் பேரில், அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக மாணவர்கள் 14 பேர் மீது தேசத்துரோக வழக்கு தொடரப்பட்டது. பின்னர், சத்தமே இல்லாமல் அந்த வழக்கை உத்தரப்பிரதேச காவல் துறையினர் திரும்பப் பெற்றனர்.
  • கடந்த 2018 ஆம் ஆண்டு, யோகி ஆதித்யநாத்தும், மத்திய சமூக நீதித்துறை அமைச்சர் தவார் சந்த் கெலாட்டும், அலிகார் பல்கலைக்கழகம் சிறுபான்மை கல்வி நிறுவனம் இல்லை என்ற தவறான தகவலைத் தெரிவித்தனர்.
  • இது பாகிஸ்தான் அல்ல, அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம் விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று பாஜக நாடாளுமன்ற உறுப்பினரும், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினருக்கான தேசிய ஆணையத்தின் தலைவருமான ஆர்எஸ். கத்தேரியா குறிப்பிட்டார்.

மோடியின் பாராட்டும், பா.ஜ.க. தலைவர்களின் வெறித்தனமும் :

ஒரு பக்கம் அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தைப் பிரதமர் மோடி பாராட்டுகிறார். மறுபக்கம், அலிகார் பல்கலைக்கழகத்தின் மீது பாஜக தலைவர்கள் சேற்றை வாரி இரைத்துக் கொண்டிருக்கின்றனர். அலிகார் பல்கலைக்கழகத்தை தன் கட்சியினரே விமர்சிப்பதை இதுவரை பிரதமர் மோடி தடுத்து நிறுத்தவில்லை. இப்படி மாறுபட்டு பேசுவதைக் கண்டுகொள்ள வேண்டாம் என்று சொல்கிறாரா?

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், பள்ளிகள் மற்றும் வீடுகளில் கழிப்பறை கட்டிக் கொடுத்ததால், பள்ளிகளிலிருந்து இடையில் நிற்கும் முஸ்லீம் மாணவிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

  • கடுமையான சட்டவிரோத நடவடிக்கை தடுப்புச் சட்டத்தின் கீழ், ஏராளமான இளம் முஸ்லீம் பெண்கள் தற்போது சிறையில் உள்ளனர்.
  • குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து ஷஹீன் பாக்கில் போராடிய முஸ்லீம் பெண்களை, பணத்தைப் பெற்றுப் போராடுபவர்கள் என்றும், தேசத்துரோகிகள் என்றும் பல பாஜக தலைவர்கள் விமர்சித்தது ஏன்?
  • உத்தரப் பிரதேசத்தில் கொண்டு வரப்பட்டுள்ள லவ் ஜிகாத் தடைச் சட்டம் குறித்து பிரதமர் மவுனம் சாதிப்பது ஏன்?. இந்து-முஸ்லீம் திருமணத்தில் மதமாற்றத்தை இந்த சட்டம் தடை செய்கிறது. இந்தியாவின் பன்முகத்தன்மை கலாச்சாரத்துக்கு இத்தகைய சட்டங்கள் எப்படி நன்மை பயக்கும்?

வெறுப்பு கலாச்சாரத்தை நிறுத்த முடியாதது ஏன்?

முகநூல், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என வெறுப்புப் பேச்சுக்கள் எங்கிருந்தாலும், அதனைப் பிரதமரால் ஏன் நிறுத்த முடியவில்லை? அதற்கான பதில் இதுதான்…

  1. அரசியல் லாபம் அடைய வழிவகுக்கிறது.
  2. தடுத்து நிறுத்தினால் உங்களை அவர்கள் வெறுக்க ஆரம்பிக்கலாம்.

வெறுப்பூட்டும் பேச்சுகளை முகநூலில் பஜ்ரங் தள் பகிர்ந்து வருகிறது. வன்முறையைத் தூண்டும் விதமாக இந்த பேச்சு இருக்கிறது. ஆனால், நாடாளுமன்ற குழு முன்பு ஆஜரான முகநூலின் இந்திய தலைமை நிர்வாக அஜித் மோகன், பஜ்ரங் தள் வெளியிட்ட பேச்சு வழிகாட்டு நெறிமுறைகளை மீறியதாக இல்லை என்று கூறினார். பஜ்ரங்தள் அமைப்போ, முகநூலில் தமக்குக் கணக்கே இல்லை என்று கூறியுள்ளது.

”ஒழுங்காக இருக்க வேண்டும். இல்லையேல், போலி என்கவுண்டரைச் சந்திக்க வேண்டி வரும்” என்று முஸ்லீம்களுக்கு எதிரான பஜ்ரங் தள் டிசம்பர் 7 ஆம் தேதி முகநூலில் விடுத்த மிரட்டலை என்ன சொல்வது?

பஜ்ரங் தள் அமைப்பினர் மதச்சார்பற்ற இந்தியாவைத் தெளிவாகவே நிராகரிக்கிறார்கள். தாங்கள் தீவிர இந்துக்களாக இருப்பதையும்,வன்முறையை நோக்கிச் செல்வதையும் விரும்புகிறார்கள் என்பதை அவர்கள் தெளிவாகச் சொல்கிறார்கள்.

சீக்கிய விவசாயிகளை தப்ளிக் ஜமாத்தின் மவுலானா தூண்டிவிடுவதாகவும், இதன் மூலம் இந்து மற்றும் சீக்கியர்களுக்கு இடையே விரோதத்தை ஏற்படுத்துவதாகவும் அகில இதிய பஜ்ரங் தள் அமைப்பு சமூக ஊடகங்களில் பதிவுகளைப் பகிர்ந்துள்ளது. இது முற்றிலும் வெறுக்கத்தக்கப் பொய் செய்தி.

இப்போது, இந்திய பள்ளிகளில் கிறிஸ்துமஸ் ஏன் கொண்டாடப்படுகிறது? என்ற கேள்வியை எழுப்பி, சமூக ஊடகங்களில் பஜ்ரங் தள் அமைப்பின் பஜ்ரங்கி சீட்டி பதிவிட்டுள்ளார்.

முகநூல் நிர்வாகத்தால் நடவடிக்கை எடுக்க முடியாதது ஏன்?

இத்தகைய பதிவை தாங்கள் வெளியிடவில்லை என்று பஜ்ரங் தள் தொடர்ந்து மறுத்து வருகிறது. அவர்கள் வெளியிடவில்லை என்றால், அவர்கள் பெயரில் முகநூலில் போலிக் கணக்கு தொடங்கி வேறு யாராவது வெளியிடுகிறார்களா? அப்படி என்றால், அதை முகநூல் நிர்வாகம் தடை செய்யாதது ஏன்? அல்லது நடவடிக்கை எடுக்காதது ஏன்?

சிறுபான்மை மக்களுக்கு எதிராக, குறிப்பாக முஸ்லீம்களுக்கு எதிராக, பாஜகவும், சங் பரிவார் அமைப்புகளும் வன்முறையைத் தூண்டி வருகின்றன. அவர்களைத் தேசத் துரோகி…தேசத் துரோகி என்று அழைப்பதிலேயே இன்பம் காண்கின்றனர். அலிகார் பல்கலைக்கழகத்தைப் பயங்கரவாதத்தைக் கற்பிக்கும் இடம் என்று சொல்லிக் கொண்டே இருக்கின்றனர்.

– இந்த செய்தியின் ஆரம்ப வரியை மீண்டும் சிரிக்காமல் படியுங்கள்.

Tags: AMUBJP Leaders malign AMUModi at AMU
Previous Post

3 புதிய சட்டங்களையும் ரத்து செய்து விவசாயிகளிடம் மோடி அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் : ரன்தீப் சிங் சுர்ஜேவாலா

Next Post

2017-18 ஆம் ஆண்டில் 95 சதவீத தேர்தல் பத்திரம் மூலம் பாஜகவுக்கு நன்கொடை : ரூ. 1 கோடி பத்திரங்கள் அதிக அளவில் விற்பனை

Admin

Admin

Next Post
2017-18 ஆம் ஆண்டில் 95 சதவீத தேர்தல் பத்திரம் மூலம் பாஜகவுக்கு நன்கொடை : ரூ. 1 கோடி பத்திரங்கள் அதிக அளவில் விற்பனை

2017-18 ஆம் ஆண்டில் 95 சதவீத தேர்தல் பத்திரம் மூலம் பாஜகவுக்கு நன்கொடை : ரூ. 1 கோடி பத்திரங்கள் அதிக அளவில் விற்பனை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

22/07/2020
ஃபேஸ்புக் ஆதரவுடன் பா.ஜ.க. தேர்தல் தில்லுமுல்லு: அம்பலப்படுத்திய அமெரிக்க பத்திரிகை

ஃபேஸ்புக் ஆதரவுடன் பா.ஜ.க. தேர்தல் தில்லுமுல்லு: அம்பலப்படுத்திய அமெரிக்க பத்திரிகை

18/08/2020
ராஜஸ்தான் நகராட்சித் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி : 3 -வது இடத்துக்கு தள்ளப்பட்ட பா.ஜ.க.

ராஜஸ்தான் நகராட்சித் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி : 3 -வது இடத்துக்கு தள்ளப்பட்ட பா.ஜ.க.

16/12/2020
ரூ.150 கோடி மதிப்பு ஓட்டலை அடிமாட்டு விலைக்கு வாஜ்பாய் அரசு விற்ற வழக்கு: சிபிஐ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

ரூ.150 கோடி மதிப்பு ஓட்டலை அடிமாட்டு விலைக்கு வாஜ்பாய் அரசு விற்ற வழக்கு: சிபிஐ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

19/09/2020

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

13
ஆதியின் கடிதம்

ஆதியின் கடிதம்

11
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

10
மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

8
எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

21/11/2021
வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

21/11/2021

Recent News

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

21/11/2021
வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

21/11/2021
தேசிய முரசு – Desiya Murasu

Follow Us

  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

Recent News

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
  • About Us
  • Privacy Policy
  • Contact Us

© 2020 DesiyaMurasu.com

No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

© 2020 DesiyaMurasu.com

  • facebook
  • twitter
  • whatsapp