• About Us
  • Privacy Policy
  • Contact Us
தேசிய முரசு - Desiya Murasu
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
தேசிய முரசு - Desiya Murasu
No Result
View All Result
Home தேசிய அரசியல்

மரியாதைக்குரிய அரசியல்வாதி அகமது படேல் : ஷாஹித் சித்திக் புகழாரம்

by Admin
26/11/2020
in தேசிய அரசியல்
0
மரியாதைக்குரிய அரசியல்வாதி அகமது படேல் : ஷாஹித் சித்திக் புகழாரம்
Share on FacebookShare on TwitterShare on WhatsAppShare On Email

கடந்த 1980 ஆம் ஆண்டு ஒரு பத்திரிக்கையாளராக அகமது படேலை நான் சந்தித்தேன். ஊடக வெளிச்சத்திலிருந்து விலகி இருப்பதையே அவர் விரும்புவார். இருந்தாலும், எனது வார இதழான நய் துனியாவுக்கு பேட்டி அளிக்க அவரை வலியுறுத்திக் கொண்டே இருந்தேன். ஆத்திரமூட்டும் வகையில் அமைந்த பெரும்பாலான கேள்விகளுக்கு அவர் துல்லியமாகப் பதில் அளித்தது என்னை வெகுவாகக் கவர்ந்தது. கடந்த 35 ஆண்டுகளாக அவரை நண்பராகவும் அரசியல்வாதியாகவும் அறிந்திருந்தேன். டெல்லியில் அவர் எவ்வளவு பெரிய அரசியல்வாதியாக இருந்தாலும், காங்கிரஸ் கட்சிக்கும் மட்டுமின்றி, பொது வாழ்க்கையின் அடிப்படை தார்மீக கோட்பாடுகளுக்கும் நேர்மையாளராகவும் அர்ப்பணிப்புக் கொண்டவராகவும் இருந்தார். கட்சியை வைத்துப் பல தலைவர்கள் தங்கள் நலனைப் பாதுகாத்துக் கொள்வார்கள். ஆனால், அகமது படேலோ தனது சொந்த அரசியல் மற்றும் தனிப்பட்ட நலன்களுக்கு மேலாக எல்லாவற்றையும் செய்தார்.

Congress senior leaders Ghulam Nabi Azad (3rd L), Anand Sharma (C), Randeep Surjewala, Ahmed Patel (4th R) and others leave after a meeting with Comptroller and Auditor General (CAG), in New Delhi.

குறிப்பாக, இந்திரா காந்தியால் வளர்க்கப்பட்ட தலைவர்களின் தலைமுறையின் மறைவுக்குப் பிறகு, நவீன காலங்களில் சிறந்த காங்கிரஸ்காரர்களில் ஒருவராக அகமது படேல் விளங்கினார். நரசிம்மராவுக்கு பிந்தைய காலத்தில் காங்கிரஸ் குழப்பத்தில் இருந்தது. தேசிய ஜனநாயகக் கூட்டணி தோன்றியவுடன், காங்கிரசுக்கு எதிர்காலம் இருண்டதாகத் தோன்றியது.

அகமது படேல் மற்றும் சில தலைவர்களின் எதார்த்தமான, அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பால் 2004 ஆம் ஆண்டு மத்தியில் இந்திய தேசிய காங்கிரஸ் தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கத்தை உருவாக்க முடிந்தது. அவரது அரசியல் வியூகத் திறன், தாழ்மையான நடத்தை, அனைவருக்கும் செவிசாய்க்கும் திறன் ஆகியவை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோருக்கு விவேகமான மற்றும் நடைமுறை ஆலோசனைகளை வழங்க உதவியது. அதேசமயம், தேசிய ஜனநாயகக் கூட்டணியை ஒன்றிணைத்து மீண்டும் 2009 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வர உதவியது.

கூட்டணியிலிருந்த 24 – க்கும் மேற்பட்ட கட்சிகளின் பல முறை பிரிந்து செல்லும் நிலை ஏற்பட்டபோது, அவர்களைச் சமாதானப்படுத்தி, கூட்டணியில் தொடரச் செய்தவர் அகமது படேல். ‘சோனியாவின் பிரச்சினைகளைத் தீர்ப்பவர்’ என அரசியல் விமர்சகர்கள் அகமது படேலை அழைத்தனர். என்னைப் பொருத்தவரை, அவர் காங்கிரஸ் கட்சியின் தீயணைப்பு வீரர்.

1992 ஆம் ஆண்டு, டிசம்பர் 7 ம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்ட மறுநாள், காங்கிரஸ் கட்சியிலிருந்து விலக ராஜினாமா கடிதம் கொடுத்தேன். அப்போது நான் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராகவும், பிரணாப் முகர்ஜி, மன்மோகன் சிங் மற்றும் கே.ஆர்.நாராயணன் ஆகியோரைக் கொண்ட கட்சி விவகாரக் குழுவில் நானும் இடம் பெற்றிருந்தேன்.

Congress Vice President, Rahul Gandhi with party leader Ahmed Patel arrive to attend the 132nd foundation day of Indian National Congress at AICC in New Delhi.

இதனை அறிந்து என் வீட்டுக்கு விரைந்து வந்த அகமது படேல், நீங்கள் கட்சியிலிருந்து விலகினால் நானும் விலகுவேன். காங்கிரஸ் கட்சியிலிருந்து நம்மைப் போன்ற முஸ்லிம்கள் பெருவாரியாக விலகினால், மதச்சார்பின்மைக்கு ஆபத்து ஏற்படாதா? என்று கேட்டார்.

அதேசமயம், என் அரசியல் குரு ஹர்கிஷன் சிங் சுர்ஜித் என்னை ஆசுவாசப்படுத்தி, ராஜினாமாவைத் திரும்பப் பெற வலியுறுத்தினார்.

ஹர்கிஷன் சிங் சுர்ஜித்திடம் சொல்லி, காங்கிரஸ் கட்சியிலிருந்து நான் விலகுவதைத் தடுத்து நிறுத்துமாறு அகமது படேல் கேட்டுக் கொண்ட விசயம் பிறகுதான் எனக்குத் தெரிந்தது.

அகமது படேலின் இரவு நேர அரசியல் பிரசித்தி பெற்றது. நண்பர்களையும், எதிர்முகாமில் இருப்பவர்களையும் அழைத்து அறிவுரை மற்றும் தகவல்களை வழங்குவார்.

திடீரென ஒரு நாள் இரவு எனக்கு போன் செய்து, கபாப் உணவு எடுத்து வருகிறேன் தயாராக இருங்கள் என்று சொன்னார். சொன்னபடி வீட்டுக்கு கபாப் எடுத்து வந்தார். இருவரும் மகிழ்வுடன் சாப்பிட்டோம். அரசியலில் அவர் மிருகத்தனமாக செயல்பட்டார். 24 மணி நேரமும் காங்கிரஸ் அரசியலை அவர் சுவாசித்தார். ஆனால், அவரது மோசமான எதிர்ப்பாளர்களுக்குக் கூட அவர் தீங்கு செய்ய முயலவில்லை.

சோனியா காந்தி தலைவராக இருந்த இக்கட்டான காலகட்டத்தில், அகமது படேலின் காதுகளும் கண்களும் சோனியாஜியை நோக்கியே இருந்தன. காங்கிரஸ் கட்சியை தமது திறமையால் சோனியா காந்தி தூக்கி நிறுத்தினார். இதில் அகமது படேலின் பங்கும் குறைந்ததல்ல. சோனியா காந்திக்கு ஆலோசனை கூறிய போதெல்லாம், கட்சியின் நலனுக்காக அவரது நண்பர்களை எல்லாம் தியாகம் செய்ய அவர் தயங்கியதில்லை. நூற்றுக்கணக்கான விமர்சனங்கள் மற்றும் எதிர்ப்புகள் இருந்தாலும், அவருக்கு எதிரிகள் இருந்ததில்லை. அவர் ஒருபோதும் கட்சியைக் காட்டிக் கொடுத்ததில்லை என்பதை, காங்கிரஸ் கட்சியிலிருந்த அவரது எதிர்ப்பாளர்கள்கூட நம்பிக்கையுடன் சொல்ல முடியும்.

இந்த இக்கட்டான காலகட்டத்தில் அகமது படேல் அவசியம் தேவைப்பட்டார். காங்கிரஸில் அவருக்கு மாற்று யாரும் இல்லை. இந்திய ஜனநாயகத்துக்கும் மதச்சார்பின்மைக்கும் அவர் ஆற்றிய பங்கு மகத்தானது. சாமானியர்களின் பார்வையில் அரசியல்வாதிகள் மரியாதை இழந்து கொண்டிருக்கும் ஒரு நேரத்தில், அமைதியான, உணர்ச்சிவசப்படாத, நேர்மறை அணுகுமுறை கொண்ட அகமது படேலை நாம் இழந்துள்ளோம்.

கட்டுரையாளர் : ஷாஹித் சித்திக். (காங்கிரஸின் சிறுபான்மைப் பிரிவின் தலைவராக இருந்தவர். மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தவர். நய் துனியா என்ற இந்தி இதழின் ஆசிரியராகவும் இருக்கிறார்.)

Tags: Ahmed PatelcongressCovid-19
Previous Post

அகமது படேல் மறைவு: காங்கிரசின் தூண் சாய்ந்துவிட்டது! ஈடு செய்ய முடியாத பேரிழப்பு! தலைவர் கே.எஸ்.அழகிரி இரங்கல்

Next Post

ஜெயலலிதா ஆட்சியில் 2015இல் வெள்ளப்பெருக்கு: தமிழக அரசு பாடம் கற்றதா? சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்!

Admin

Admin

Next Post
ஜெயலலிதா ஆட்சியில் 2015இல் வெள்ளப்பெருக்கு: தமிழக அரசு பாடம் கற்றதா? சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்!

ஜெயலலிதா ஆட்சியில் 2015இல் வெள்ளப்பெருக்கு: தமிழக அரசு பாடம் கற்றதா? சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

22/07/2020
ஃபேஸ்புக் ஆதரவுடன் பா.ஜ.க. தேர்தல் தில்லுமுல்லு: அம்பலப்படுத்திய அமெரிக்க பத்திரிகை

ஃபேஸ்புக் ஆதரவுடன் பா.ஜ.க. தேர்தல் தில்லுமுல்லு: அம்பலப்படுத்திய அமெரிக்க பத்திரிகை

18/08/2020
ராஜஸ்தான் நகராட்சித் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி : 3 -வது இடத்துக்கு தள்ளப்பட்ட பா.ஜ.க.

ராஜஸ்தான் நகராட்சித் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி : 3 -வது இடத்துக்கு தள்ளப்பட்ட பா.ஜ.க.

16/12/2020
ரூ.150 கோடி மதிப்பு ஓட்டலை அடிமாட்டு விலைக்கு வாஜ்பாய் அரசு விற்ற வழக்கு: சிபிஐ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

ரூ.150 கோடி மதிப்பு ஓட்டலை அடிமாட்டு விலைக்கு வாஜ்பாய் அரசு விற்ற வழக்கு: சிபிஐ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

19/09/2020

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

13
ஆதியின் கடிதம்

ஆதியின் கடிதம்

11
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

10
மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

8
எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

21/11/2021
வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

21/11/2021

Recent News

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

21/11/2021
வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

21/11/2021
தேசிய முரசு – Desiya Murasu

Follow Us

  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

Recent News

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
  • About Us
  • Privacy Policy
  • Contact Us

© 2020 DesiyaMurasu.com

No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

© 2020 DesiyaMurasu.com