• About Us
  • Privacy Policy
  • Contact Us
தேசிய முரசு - Desiya Murasu
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
தேசிய முரசு - Desiya Murasu
No Result
View All Result
Home தேசிய அரசியல்

படேலுடன் கைகோத்த நேரு : ஆ. கோபண்ணா

by ஆ. கோபண்ணா
14/11/2020
in தேசிய அரசியல்
1
படேலுடன் கைகோத்த நேரு : ஆ. கோபண்ணா
Share on FacebookShare on TwitterShare on WhatsAppShare On Email

நவம்பர் 14 : பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் 132வது பிறந்த நாள்

பண்டித நேருவுடன் சர்தார் வல்லபாய் படேலுக்கு இருந்த உறவு எல்லோரும் நன்கறிந்த ஒன்றாகும். பிரிட்டிஷாரால் சிதைத்து சின்னாபின்னமாக்கப்பட்ட இந்தியா என்ற தேசத்தை இருவரும் கைகோத்து ஒரு தேசமாக உருவாக்கவேண்டும் என்பது அவர்கள் இருவருக்கும் விதிக்கப்பட்ட வரலாற்றுக் கடமையாக இருந்தது. இந்திய கலாச்சாரத்திலும், அதன் பல அடையாளங்களிலும் படேல் ஆழ்ந்த ஞானம் உள்ளவர். நேரு குறுகிய எல்லைகளுக்குள் தம்மை அடைத்துக்கொள்ளாமல் உலக நோக்கத்துடன் செயல்படும் ஒரு தீர்க்கதரிசி.

இதனால், இயல்பாகவே இருவருடைய கருத்துகளும் அடிக்கடி மோதல் ஏற்பட்டது. மாறுபட்டது உண்டு. பல விவகாரங்களில் அவர்களிடம் கருத்து மாறுபாடு இருந்தது. ஆனால், தேச நலனுக்காக அவர்கள் இணைந்து ஒருவரையொருவர் மதித்துக் கடைசி வரை செயலாற்றினார்கள். இந்தியாவின் மீது அவர்கள் கொண்ட அன்பும், மகாத்மா காந்தியிடம் அவர்கள் கொண்ட மரியாதையும் இருவரையும் ஒருங்கிணைத்தன.

மகாத்மா கொல்லப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னால் அவர் சர்தார் படேலுக்கு அறிவுரை கூறிக்கொண்டிருந்தார் என்ற செய்தி பலருக்கு வியப்பு அளிக்கும். ‘நேருவிடம் கருத்து வேறுபாடு கொண்டு, அமைச்சரவையிலிருந்து ராஜினாமா செய்யவேண்டாம். அவருடன் இணைந்து பணியாற்றுங்கள்’ என்பதுதான் அந்த அறிவுரை.

நேருவுக்கும் தமக்கும் இடையில் பிளவு ஏற்படுத்த சிலர் முயற்சி செய்வார்கள் என்று எதிர்பார்த்த படேல், தாம் இறப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு 1950 அக்டோபர் 2ஆம் நாள் இந்தூரில் இப்படித் தெரிவித்தார்: “பண்டித ஜவஹர்லால் நேரு நம்முடைய தலைவர். நேருவை தமது வாரிசாக காந்தியடிகள் நியமித்தார். இந்த ஆணையை ஏற்றுக்கொள்ள வேண்டியது அவரது தொண்டர்களின் கடமை. இதனை மனப்பூர்வமாக ஏற்கத் தயங்குபவர்கள், கடவுளின் முன்பு பாவம் செய்தவர்களாவர். விசுவாசமற்ற சிப்பாய் அல்ல நான். எந்த இடம் கிடைக்கும் என்பது எனக்கு முக்கியமல்ல. காந்தியடிகள் எந்த இடத்தில் நிற்கச் சொன்னாரோ அந்த இடத்தில் நிற்கிறேன் என்பதை மட்டுமே நான் அறிந்திருக்கிறேன்.(பியாரிலால், பூர்ணஹுதி, சதுர்த் கந்த், நவ்ஜீவன் பிரகாஷன் − அகமதாபாத், பக்கம் 465)

1950ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்15ஆம் நாள் படேல் இறந்தபோது, நாடாளுமன்றத்தில் நேரு கூறினார்: “படேல் நம்முடைய விடுதலை இயக்கப்படையின் தளகர்த்தராகச் சோதனைக் காலத்தில் பயனுள்ள அறிவுரைகளைக் கொடுத்தார். வெற்றிபெற்ற நிலையில் நண்பராகவும், உற்ற தோழராகவும் நம்பிக்கையுடன் ஏற்றுக்கொள்ளத் தக்கவராகவும் இருந்தார். அவருடைய தலைமையும், அவர் காட்டும் வழிமுறைகளும் நெருக்கடி காலத்தில் பலவீனப்பட்ட மனிதர்களுக்கு உறுதியான துணையாக இருக்கும்.”

இரு தலைவர்களின் மகத்தான சாதனைகளையும் ஆக்கபூர்வமான நல்லுறவையும் நமது ஒருதலைபட்சமான அணுகுமுறை காரணமாக விமர்சிப்பது, வெட்கக்கேடான செயலாகும்.

Tags: jawaharlal nehruSardar Patel
Previous Post

பிரதமர் நேருவின் வாழ்க்கையில் ஒரு நாள் : ஆ. கோபண்ணா

Next Post

1962 சீன ஊடுருவல் : திரிக்கப்பட்ட நேருவின் வானொலி பேச்சும், கோயபல்ஸ் கும்பலின் தொடர் பிரச்சாரமும்

ஆ. கோபண்ணா

ஆ. கோபண்ணா

Next Post
1962 சீன ஊடுருவல் : திரிக்கப்பட்ட நேருவின் வானொலி பேச்சும், கோயபல்ஸ் கும்பலின் தொடர் பிரச்சாரமும்

1962 சீன ஊடுருவல் : திரிக்கப்பட்ட நேருவின் வானொலி பேச்சும், கோயபல்ஸ் கும்பலின் தொடர் பிரச்சாரமும்

Comments 1

  1. R.senthamilselvan says:
    5 years ago

    சிறப்பான கட்டுரை வாழ்த்துகள் அண்ணா

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
பெருந்தலைவர் காமராஜரின் பொற்கால ஆட்சி சரித்திரம் படைத்த சாதனைகள்!

பெருந்தலைவர் காமராஜரின் பொற்கால ஆட்சி சரித்திரம் படைத்த சாதனைகள்!

15/07/2020
நாட்டுப்பற்றையும், மொழிப்பற்றையும் தமது இரு விழிகளாகக் கொண்ட மகாகவி சுப்பிரமணிய பாரதி!

நாட்டுப்பற்றையும், மொழிப்பற்றையும் தமது இரு விழிகளாகக் கொண்ட மகாகவி சுப்பிரமணிய பாரதி!

11/09/2020

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

22/07/2020
காமராஜர் தாலாட்டு!

காமராஜர் தாலாட்டு!

15/07/2020

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

13
ஆதியின் கடிதம்

ஆதியின் கடிதம்

11
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

10
மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

8
எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

21/11/2021
வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

21/11/2021

Recent News

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

21/11/2021
வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

21/11/2021
தேசிய முரசு – Desiya Murasu

Follow Us

  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

Recent News

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
  • About Us
  • Privacy Policy
  • Contact Us

© 2020 DesiyaMurasu.com

No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

© 2020 DesiyaMurasu.com